New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Continuing Christian Conversion Tactics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Continuing Christian Conversion Frauds.
Permalink  
 


Congress flays Katrina's remark on Rahul - India News Headlines in Tamil

ராகுல் பற்றி கத்ரினா கைப் விமர்சனம்: காங்கிரஸ் கண்டனம்


புதுடெல்லி, ஜூலை. 20-

ராகுல் காந்தி பற்றி நடிகை கத்ரினா கைப் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தி நடிகை கத்ரினா கைப், பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். சிலர் என்னை பாதி இந்தியர் என்றும், பாதி பிரிட்டிஷ்காரர் என்றும் விமர்ச்சிக்கிறார்கள். எனது தந்தை ஒரு இந்தியர், தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதற்காக இப்படி விமர்ச்சிக்கின்றனர். இதற்காக நான் வெட்கப் படவில்லை. எதற்காக வெட்கப்பட வேண்டும்? ராகுல்காந்தியை எடுத்துக்கொண்டால், அவர் பாதி இந்தியராகவும், பாதி இத்தாலிக்காரராகவும் உள்ளார். இது போன்று இந்தியாவில் நிறையப்பேர் உள்ளனர். நான் பாதி இந்தியன் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
 
ராகுல்காந்தி குறித்து கத்ரினா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி அளித்த பேட்டியில், அவர் யார்? எனக்கு அவரை தெரியாது. இந்த நாட்டின் அரசியலுக்காக அவர் (கத்ரினா) என்ன செய்துள்ளார்? பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்து, தேவையில்லாத பிரச்னையை யாரும் கிளப்ப வேண்டாம். ராகுல் காந்தி குறித்த விமர்சனங்களுக்கு நாளை விரிவாக பதில் சொல்கிறேன் என்று கூறினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலி ஆவணங்கள் தயாரித்து நிலமோசடி: தா. பாண்டியன் மகன் போலீசில் புகார்

உசிலம்பட்டி: தனது சித்தப்பா குடும்பத்தினர் போலி ஆவணம் தாயாரித்து, நிலமோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என, இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் மகன் டேவிட் ஜவகர், மதுரை மாவட்டம், உத்தப்ப நாயக்கனூர் போலீசில், புகார் தெரிவித்துள்ளார். தா.பாண்டியன் குடும்பத்தினருக்குச் சொந்தமான, 22 ஏக்கர், "டேவிட் பண்ணை,' உசிலம்பட்டி அருகே, உத்தப்பநாயக்கனூரில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக தா. பாண்டியன் குடும்பத்திற்கும், அவர் தம்பி ராஜன் குடும்பத்திற்கும் இடையே, சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்து, கோர்ட்டில் வழக்கும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டேவிட் பண்ணைக்கு, தா.பாண்டியன் மகன் டேவிட் ஜவகர், விவசாய பணிகள் செய்ய, வேலையாட்களுடன் சென்றார். அவரை ராஜன், அவரது மனைவி ரூபி, மகன்கள் பிரேம்ஆனந்த், பிரேம்சந்தர், ஜெபராஜ் தடுத்தனர். டேவிட் ஜவகர், உத்தப்பநாயக்கனூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், "2000ல், டேவிட் பண்ணை சொத்துக்களை எனது தந்தையின் சகோதர, சகோதரிகளிடம் இருந்து அவர்களுக்கான பங்கு நிலங்களுக்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளோம். இதில் ராஜன் தரப்பினர், இந்த நிலம் தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து எங்களை மோசடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எங்களை தாக்கவும் முற்படுகின்றனர்' என, கூறியுள்ளார்.ராஜன், ரூபி, பிரேம்ஆனந்த், பிரேம்சந்தர், ஜெபராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_07_2011_011_003-humans-walk.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25644515-churches.jpg?w=640&h=448



-- Edited by devapriyaji on Thursday 21st of July 2011 07:20:23 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110721a_007103009-kodai.jpg?w=640&h=545

20110721a_007103010-kodai-church-hundi.jpg?w=640&h=569



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_07_2011_007_007-priest-fast-kidney-donation.jpg?w=539&h=489



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_07_2011_154_029-loan-for-minority.jpg?w=546&h=535



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110724a_002101014-dalit-xas.jpg?w=464&h=695



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நடிகர்களுக்கு போதை மருந்து பொருளை சப்ளை செய்த இளைஞர் கைது
[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 07:08.49 AM GMT +05:30 ]
arrested_05.jpgஆந்திர மாநிலம் ஐதராபாத் லாங்கர் ஹவுஸ் பகுதியில் நடிகர்களுக்கு கோகைன் போதைப் பொருள் சப்ளை செய்யும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிசார் அந்த பகுதியில் மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நைஜீரியா வாலிபர் அங்கு வந்தார்.

பின்னர் அவர் ஒரு வாலிபரை சந்தித்து போதை பொருள் கொடுத்தார். அப்போது நைஜீரிய வாலிபரை பொலிசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜேம்ஸ் பெடரிக் என்பதும், பெங்களூரில் கிரிமினலாஜி படித்து வருவதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து போதை பொருளை வாங்கியவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூர் இருதயாலயா மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர் சித்தார்த் என்பது தெரிய வந்தது.

ஜேம்ஸ் பெடரிக் பொலிசாரிடம் கூறும் போது, ஐதராபாத்தை சேர்ந்த நடிகர்கள் வருண் சந்தேஷ், அபிஷேக், இயக்குநர் உப்பலபாடி ரமேஷ் ஆகியோர் எனது வாடிக்கையாளர்கள். நான் நைஜீரியாவிற்கு அடிக்கடி சென்று கோகைன் போதைப் பொருளை கடத்தி வருவேன். அதை மருத்துவர் சித்தார்த் மூலம் நடிகர்களுக்கு சப்ளை செய்து வந்தேன்" என்றார்.

கைதான இருவரிடமும் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அவர்களுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 பாப் பாடகி மர்ம மரணம்


இங்கிலாந்து பிரபல பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27). இவர் வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி யிருந்தார். 
 
இந்த நிலையில் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது பிணத்தை கைப்பற்றினார்கள்.   
 
அவர் இறந்தது எப்படி என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

24_07_2011_010_038-singer-amy.jpg?w=181&h=1171எமி ஒயின் ஹவுஸ் பேக்டூ பிளாக், ஹூஸ் பிளண்டு ஆப் ஜாஷ், சோல் உள்ளிட்ட பாப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்றார்.   

 
கடந்த 1983-ம் ஆண்டு டாக்சி டிரைவரின் மகளாக பிறந்த அவர் வடக்கு லண்டனின் புறநகர் பகுதியில் வளர்ந்தார். 10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் இசை பயின்று புகழ் பெற்றார். இவரது பேக்டூ பிளாக் என்ற இசை ஆல்பம் கடந்த 2006-ம் ஆண்டு 5 கிரம்மி விருதுகளை பெற்றது. 
 
சமீபத்தில் இஸ்தான்புல் மற்றும் ஏதென்ஸ் நகரங்களில் எமியின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவரது நடவடிக்கைகளால் பின்னர் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்து செர்பியா நிகழ்ச்சியில் இருந்தும் இவர் நீக்கப்பட்டார் 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_07_2011_006_046-nager-koil-mary-jewels.jpg?w=169&h=544



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Oslo killer waging a Christian war 

Says Acted Alone For Atrocious But Necessary Attacks To Fight Spread Of Islam In Europe 

Oslo: The man blamed for attacks on Norways government headquarters and a youth retreat that left at least 92 dead said he was motivated by a desire to bring about a revolution in Norwegian society,his lawyer said on Sunday.A manifesto that he is believed to have written ranted against Muslim immigration to Europe,calling for a Christian war to defend Europe against the threat of Muslim domination.
Although lawyer for the 32-year-old Norwegian suspect,Anders Behring Breivik,said his client acted alone,police conducted raids on a garage and sheds in an industrial neighborhood of eastern Oslo.
In his first comment via his lawyer since his arrest,Breivik called his attacks atrocious,but necessary to defeat liberal immigration policies and the spread of Islam.
Survivors of the mass shooting on Utoya island that killed at least 85 young people reported seeing two assailants,and police have said they were looking into those accounts and had not ruled out a second suspect.Another seven people were killed in Fridays bombing in an Oslo government building.
In all,92 people were killed and 97 wounded.There are still people missing at both scenes.Six hearses pulled up at the shore of the lake surrounding the island on Sunday,as rescuers on boats continued to search for bodies in the water.Body parts remain inside the Oslo building,which housed the prime ministers office.
A manifesto published online,which police are poring over and said was posted the day of the attack,ranted that the European elite,multiculturalists and enablers of Islamization would be punished for their treasonous acts.Police have not confirmed that Breivik wrote the document,but his lawyer referred to it and said Breivik had been working on it for years.
The treatise ends with a detailed description of the plot,ending with a note dated 12:51 pm on July 22,I believe this will be my last entry. 
Police and his lawyer have said that Breivik confessed to the twin attacks,but denied criminal responsibility for a day that shook peaceful Norway to its core and was the deadliest ever in peacetime.He has been charged with terrorism and will be arraigned on Monday.
Police Chief Sveinung Sponheim said a forensics expert from Interpol would join the investigation.Other offers of international assistance have been turned down.AFP

Pc0131100.jpg

Pc0131200.jpg 
KILLER INSTINCT: (Top) Online images show Anders Behring Breivik in various garbs.A 1,500-page tract written by him says he was preparing for the attack since 2009.(Above) Relatives mourn for the victims 
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

300diana_1.jpg

searchick.pngயானா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை _

  இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பெரீஸ் நகரில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த விபத்தில் சதி ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக பெரீஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 

இந்த விசாரணையில் மரணம் இயற்கையானது தான் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டு போலீஸ் அதிகாரிகள் 2 பேர் தாங்கள் டயானா மரணம் குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்ற விசாரணையில் இருந்து மறைத்துவிட்டோம் என ஒரு பத்திரிகை நேர்காணலில் தெரிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விசாரணை பெரீஸ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. 

பிரான்ஸ் நீதிபதி ஜெரார்டு கட்டியோ ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் முன்னாள் தலைவர் லார்டு கான்டோன், முன்னாள் உதவி கமிஷனர் சர் டேவிட் வெனீஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து ஏன் முக்கிய ஆவணங்களை கோர்ட்டு விசாரணையில் இருந்து மறைத்தீர்கள் என்று விசாரிக்க இருக்கிறார்.

பிரான்சு நாட்டு சட்டப்படி சாட்சியங்களை மறைப்பது குற்றம் ஆகும். அந்த குற்றத்துக்கு 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை 'பாட்டிகளிடையே' திருமணம்

நயாகரா: ஓரினைச் சேர்க்கை திருமணத்திற்கு நியூயார்க் மாநில அரசு அனுமதி அளித்த கையோடு முதல் தம்பதிகளாக 2 மூதாட்டிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கிட்டி லம்பார்ட்(54). ஆர்ட் கேலரி மேலாளர். செரிலி ரூத் (53). உணவு பதப்படுத்தும் நிறுவன ஊழியை. ஒத்தக் கருத்துடைய இந்த இருவரும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பு கொண்டு கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகளும் எடுத்துவிட்டனர். 

இந்நிலையில் நேற்று நியூயார்க் மாநில அரசு ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளித்தது. அனுமதி அளித்தது தான் தாமதம் இத்தனை நாட்களாக காத்திருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 659 பேருக்கு திருமணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதல் தம்பதிகளாக லம்பார்டும், ரூத்தும் திருமணம் செய்து கொண்டனர்.

அமெரிக்கா- கனடா எல்லைப்பகுதியில் உள்ள ஸ்டேட்பார்க் தீவில் நடந்த திருமணத்தில் 100.-க்கும் மேற்பட்ட குடும்ப நண்பர்கள் கலந்துக் கொண்டனர். திருமண முடிவில், இருவரும் முத்தங்களை பறிமாறிக் கொண்டனர்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நன்றித் தெரிவித்த லம்பார்ட், நான் இப்பொழுது தான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்., என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22618875-swamy.jpg?w=640&h=427



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_07_2011_001_058-us-univarsity.jpg?w=530&h=494



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_08_2011_007_002-marriage-conversion.jpg?w=173&h=617



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_08_2011_010_041-australia-radio.jpg?w=640&h=339



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_08_2011_007_008-jesus-in-kashmir.jpg?w=352&h=505



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
திருவட்டார்: தனது முதல் மனைவியும், 2வது மனைவியும் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறியதால் கணவர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுகுறித்துப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஷியாம் ராஜ். இவருக்கு வயது 33 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண், ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஷியாமுடன் குடும்பம் நடத்த மனம் இல்லாமல், கல்யாணமாகி 10 நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இதனால் மனம் உடைந்த ஷியாம் ராஜ், மனதை தேற்றிக் கொண்டு தனது ஊரைச் சேர்ந்த ஜெனீபா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். ஆனால் ஷியாம் ராஜின் நேரமோ என்னவோ இந்தப் பெண்ணும் தனது உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

அந்த வாலிபர் வெளிநாடு போயிருந்த சமயம் பார்த்து ஜெனீபாவின் குடும்பத்தினர், ஷியாமுக்கு மணம் முடித்து வைத்து விட்டனர்.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து திரும்பினார் ஜெனீபாவின் காதலர். அதன் பின்னர் ஜெனீபா வீட்டை விட்டு வெளியேறி அந்த வாலிபருடன் போய் விட்டார். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் ஜெனீபா வீட்டை விட்டு ஓடி விட்டார்.

இப்படி அடுத்தடுத்து தனது 2 மனைவிகளும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார் ஷியாம் ராஜ்.

தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் ஷியாம் ராஜ். அதில், ஜெனீபா வீட்டை விட்டு ஓடியது மட்டுமல்லாமல் எனது தங்கையின் வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு போயுள்ளார். அவற்றை மீட்டுத் தர வேண்டும். அதேபோல ஜெனீபாவையும் மீட்டுத் தர வேண்டும். அவரை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷியாம் ராஜ்.


நன்றி தற்ஸ்தமிழ். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

A 'SUPER POWER' man with 39 wives in one home:

                                                                                                                   This is the biggest family in the world. This family is living at 'Bhahathvaank' village in 'Mishoraam' city in India. This village is surrounded by mountains. Total members of this family are 181.  

 

Photo File

 

 

The head of this family Mr.Liyona, who has 39 wives, 94 children, 14 daughter in-law and 33 grand children.

 

Photo File

 

 

All of the family members are living in an appartment , which has four floors. It has 100 rooms. Family members sleep not only in the rooms but also in the hallways.  

 

Photo File

 

 

Mr.Liyona who is 67 years old. He follow a religion call 'chchana' himself. There is no restriction to marry so many.  

 

Photo File

 

 

Mr.Liyona said " this much of family members are living with me is a great fortune for me. and I'm proud of myself to be a husband for 39 wives and a head of this family". One more thing he said that he is the special person ,who chose by god.  

 

The special thing is, in this family no one get social welfare from government.  All the boys in this family are carpenters. Mr.Liyona used to get married 10 girls each year. He was seventeen years old when he got first marriage. Last marriage was happened last year. His first wife is 69 years old and her name is 'sathiyanki'. His room only fashionable among all rooms. He allows only one wife in his room who he calls each day. Other wives share other rooms to sleep. all wives don't show hate to do anything for him eventhough he likes to have young wives with him everyday.  

 

This family have a own school for them self and a field and other necessary things for own. the women of this family take a long time to prepare foods for them. They want 220 kg rice for one day. The villagers call this home like 'New generation home'.  

 

I think the villagers are right. this is such a new generation home. :) What do you think???



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆஸ்திரேலிய சிட்னி நகரில் டுடே எப்.எம். ரேடியோ செயல்படுகிறது. இதன் பொறுப்பாளர் கைலே சேண்டிலேண்ட்ஸ், இந்தியாவை பற்றியும் கங்கை நதியை பற்றியும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பினார். அதில், குப்பை கூளம் கங்கை நதி என்று விமர்சனம் செய்யப்பட்டது. இந்தியர்கள் புனிதமாக கருதும் கங்கை நதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைலே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய - ஆஸ்திரேலியர்கள் கவுன்சில் தலைவர் யாது சிங் நேற்று கூறியதாவது: கங்கை நதியை விமர்சனம் செய்ததற்காக, எப்.எம் பொறுப்பாளர் கைலே மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கங்கை நதியை பார்த்த போது மிகவும் அசுத்தமாக இருந்தது. அதனால் குப்பை கூளம் என்று கூறினேன். அந்த நதியை இந்தியர்கள் புனிதமாக கருதுவது எனக்கு தெரியாது. 

தவறாக கூறியதற்கு ஒவ்வொரு இந்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தியர்களை நான் மிகவும் விரும்புகிறேன்Õ என்று கூறியுள்ளார்.
மேலும், தனது மன்னிப்பு பற்றி எப்.எம் ரேடியோவிலும் ஒலிபரப்பினார். எனவே, தவறுக்கு மனப்பூர்வமாகவும் பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டதால், இந்தியர்கள் திருப்திப்படும் வகையில் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விட்டது. இவ்வாறு யாது சிங் கூறினார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஐ.எம்.எஃப் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு. பதவி பறிபோகும் ஆபத்து.

பிரான்சின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே(55) தற்போது சர்வதேச நிதியத்தின் தலைவராக உள்ளார்.

சர்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற முதல் பெண் கிறிஸ்டியானே லாகர்டே என்ற பெருமை உண்டு. கடந்த 2008ஆம் ஆண்டு லாகர்டே பிரான்சின் நிதியமைச்சராக இருந்த போது அத்து மீறி அரசு நிதியை தொழிலதிபர் தாபேவுக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தாபே பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் நண்பர் ஆவார். அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு உள்ள கிறிஸ்டியானே லாகர்டே மீது விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்த விசாரணையால் லாகர்டேவின் பதவிக்கு பாதிப்பு வராது என சட்டத்தரணிகள் கூறி உள்ளனர்.

மீடியா அதிபர் பெர்னார்டு தாபேவுக்கும் முன்னாள் அரசு வங்கியான கிரடிட் லயோனிஸ் இடையே பிரச்சனை இருந்தது. 2008ஆம் ஆண்டு பிரான்ஸ் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே 28 கோடியே 50 லட்சம் யூரோ அளிக்க உத்தரவிட்டார்.

ஆலோசகர்களின் எதிர்ப்பு ஏற்பட்ட போதும் தாபேவுக்கு இந்த அரசு நிதியை அளிக்க லாகர்டே கூறினார். லாகர்டேவின் வழக்கை குடியரசு நீதிக்கான கோர்ட் விசாரணை செய்கிறது. லாகர்டே மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நயன்தாராவை மதம் மாற்றியது குற்றச் செயல்! - கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்

 

டயானா மரியம் குரியன் என்ற நயன்தாராவை கிறிஸ்தவ மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ள பிரபு தேவா குடும்பத்தினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது கிறிஸ்தவ அமைப்பு. 

சினிமாவில் நடிப்பதற்காக நயன்தாரா என்ற பெயருடன் வந்தவர் டயானா மரியத்துக்கும், ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் மனைவியுடன் வசித்து வந்த இந்துவான பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. 

நயன்தாராவுக்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார். 

பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜம் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 

நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன் ஜான் கண்டித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. 

அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. 

ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர். 

உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. 

பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவாவும் குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்," என்று தெரிவித்துள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரஷ்யாவில் செக்ஸ் பொம்மைப் படகுச் சவாரிப் போட்டி.

 

ரஷியா நாட்டில் இடம்பெற்று முடிந்து உள்ளது செக்ஸ் பொம்மைப் படகுச் சவாரிப் போட்டி. Bubble Baba Challenge என்பது இப்போட்டியின் பெயர். பாபா என்கிற வார்த்தை ரஷிய மொழியில் கமக்காரி என்கிற அர்த்தத்தை சாதாரணமாக கொண்டு உள்ளது. அதே நேரம் காமம், செக்ஸ் போன்ற வார்த்தைகளுடன் தொடர்புபட்ட அர்த்தத்தையும் உடையது.

இப்போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். காற்று நிரப்பட்ட செக்ஸ் பொம்மை மீது அமர்ந்து வேகமாக பயணிக்க வேண்டும். Vuoksa ஆற்றில் கடந்த வாரம் இப்போட்டி இடம்பெற்றது. 

ஒன்பதாவது வருடமாக இடம்பெற்று உள்ள இப்போட்டியில் 600 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_08_2011_006_003.jpg%2Bus.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

தமிழர்கள் கறுப்பானவர்கள்,அழுக்கானவர்கள் என்று கூறிய அமெரிக்க தூதர் மன்னிப்பு கேட்க ஜெயலலிதா வலியுறுத்தல்.

இந்தியாவில், ஒரு முறை நீண்ட தூரம் ரயில் பயணம் செய்ததில், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி,கறுத்துப் போனது,'' என, அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாயோ, கடுமையாக விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நேற்று முன்தினம் நடந்த ஒரு விழாவில், அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் கலந்து கொண்டு பேசியதாவது:இருபது ஆண்டுகளுக்கு முன், நானும் உங்களைப்போல் ஒரு மாணவராக இருந்தேன். வெளிநாட்டில் செமஸ்டர் படிப்பு மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அதற்காக நான் இந்தியாவை தேர்வு செய்தேன். இந்தியாவின் கலாசாரமும், மதகோட்பாடுகளும் என்னை ஈர்த்திருந்தன.


 

நான் பல கிராமங்களை கடந்து பயணித்தபோது, இந்தியாவின் கலாசாரத்தை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.மக்களின் அன்பு உள்ளத்தையும், பாசத்தையும், அவர்கள் நட்பாக பழகும் விதத்தையும் கண்டு வியந்தேன்.ஒரு முறை, நான் டில்லியிருந்து, ஒரிசாவுக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டேன். அந்த ரயில், 24 மணி நேரத்தில், ஒரிசாவை சென்றடைந்திருக்க வேண்டும்.


 

ஆனால், 72 மணி நேரம் கடந்த பிறகும், ரயில் ஒரிசாவை சென்றடையவில்லை. இந்த நீண்ட தூர பயணத்தால், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி, கறுத்துப் போனது.
இவ்வாறு மவுரீன் பேசியதும், மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்திருந்தபோது, "இந்தியாவின் நட்பை, அமெரிக்கா முக்கியமானதாககருதுகிறது. இந்தியா - அமெரிக்கா உறவானது, ஜனநாயகம்,கலாசார ரீதியிலானது' என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க துணைத் தூதர், தமிழர்களைப் பற்றி இழிவாக விமர்சனம் செய்து பேசியிருப்பது,அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது:மவுரீன் சாயோ பேசும்போது பொருத்தமற்ற சில வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவரது பேச்சு, யாருடைய மனதையாவது துரதிருஷ்டவசமாக புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்துவது அவரது நோக்கமல்ல.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

மன்னிப்புக் கேட்க ஜெ., வலியுறுத்தல்:இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ""அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த மவுரீன் சாயோ தெரிவித்துள்ள கருத்து, மிகவும் கண்டிக்கத்தக்கது. அனைத்துத் தமிழர்களையும் அவமதிப்பது போன்றது. எனவே, மவுரீன் சாயோ தன் கருத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழர்கள் பற்றி, இப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்,'' எனக் கூறியுள்ளார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்க புதிய கொள்கைகள்:டேவிட் கேமரூன்!

சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும், ஒழுக்கம் உள்ள சமுதாயமாக ஆக்கவும் இன்னும் சில வாரங்களில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்' என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில் உருவான கலவரம் நான்கே நாட்களில் நாடு முழுவதும் பரவியது. இச்சம்பவங்களில் இதுவரை இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவங்களில் நடந்த திருட்டுகள், கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதேநேரம், ஏழை பணக்காரர் வித்தியாசமே இந்த கலவரங்களுக்குக் காரணம் என வலியுறுத்தும் சமூக நிபுணர்கள், கைது செய்யப்பட்டோருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் பட்சத்தில் அவர்கள் சமூகத்துக்கு மேலும் கேடு செய்வோராக மாறவே வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரித்துள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேமரூன் இந்தக் கலவரங்கள் பிரிட்டனுக்கு ஓர் எச்சரிக்கை மணி. பிரிட்டனின் தற்போதைய இளைய சமுதாயம், சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ளது.
 
நடந்து முடிந்த கலவரங்கள் பணத்திற்காக நடக்கவில்லை. கலவரக்காரர்களில் பெரும்பான்மையோர் தகப்பன் இல்லாத சூழலில் வளர்ந்தவர்கள். அல்லது முன்னுதாரணமான ஆண் ஆளுமையைத் தெரிவு செய்து வளராதவர்கள்.
 
ஏன் இவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டனர்? அவர்களை வீட்டில் கவனிக்க ஆள் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம்.
 
இந்த மோசமான குணங்களில் இருந்து அவர்களை மீட்டு, ஒழுக்கம் உள்ளவர்களாக ஆக்க சில நடவடிக்கைகள் தேவை. அமைச்சரவையின் இரு மூத்த அமைச்சர்கள் இன்னும் சில வாரங்களில் இளைய சமுதாயத்தின் ஒழுக்க நெறிகளுக்கான புதிய கொள்கைகளை வகுப்பர். அவற்றில், 16 வயதில் உள்ள அனைவருக்கும் தேசிய மக்கள் சேவை பயிற்சி அளிக்கப்படும்.
 
இதன் மூலம் அவர்களுக்குப் போதுமான உடற்பயிற்சியும், சமூகத்தில் கலந்து பழகுவதற்கான பயிற்சியும், மக்களுக்கு உதவிகள் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.
 
இது மட்டுமின்றி, கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் 1,20,000 குடும்பங்களின் குறைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் அக்குடும்பங்களின் இளைய தலைமுறையினர் கல்வியில் நாட்டம் செலுத்த வழி வகுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 13_08_2011_007_037-reservastion-to-oc.jpg?w=533&h=435



-- Edited by devapriyaji on Wednesday 17th of August 2011 07:45:18 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2335390.JPG%2Bminority.JPG



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழர்கள் அழுக்கானவர்கள் என்ற அமெரிக்க துணை தூதர்

`கலாசார உறவுகள்' தொடர்பான பாடம் கற்கிறார்

 

 

சென்னை, ஆக.19-

 

தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள் என்று வர்ணித்த சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் `கலாசார உறவுகள்' தொடர்பான படிப்பில் தானாகவே முன்வந்து சேர்ந்தார்.

தமிழர்கள் அழுக்கானவர்கள்

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றுபவர் மவுரின் சாவ். இவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் பேசும்போது, டெல்லியில் இருந்து ஒரிசாவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 72 மணி நேரம் ரெயிலில் பயணம் செய்ததால் தனது தோல், தமிழர்களை போல அழுக்காகவும், கறுப்பாகவும் அப்போது மாறியது என்று கூறினார்.

தமிழர்களை அழுக்கானவர்கள் என்று வர்ணித்த ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியை எதிர்த்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை தவிர, வேறு யாரும் கண்டன அறிக்கைகளோ, அல்லது எதிர்ப்போ காட்டாதது, பொதுவாக தமிழர்கள் மத்தியில் ஒரு மனக்குறைவாக இருக்கிறது. தமிழர்கள், தமிழ் சமுதாயம் என்று அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர, தமிழர்களை ஒரு அமெரிக்க தூதரக அதிகாரி இழிவாக பேசியது கண்டு யாருடைய உணர்ச்சிகளும் கொதித்து எழவில்லையே என்ற மனக்குறைபாடு மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

கலாசார தொடர்புகள் படிப்பு

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வார்த்தைகளை பேசிய அந்த துணை தூதர் மவுரின் சாவ், தனது வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தானாகவே முன்வந்து வித்தியாசமான `கலாசார தொடர்புகள்' மற்றும் `புரிதல்' தொடர்பான ஒரு வகுப்பில் படிப்பதற்காக தன்னை சேர்த்துக்கொண்டுள்ளார். இந்த வகுப்பு அவருக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது என்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசாங்க செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் அங்கு நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று நாங்கள் கருதுகிறோம். உடனடியாக மவுரின் சாவ் மன்னிப்பு கேட்டது உங்களுக்கு தெரியும். அவர் கூறிய கருத்துக்கள் அமெரிக்க பண்புகளுக்கு ஏற்றதாகவும், ஒத்துக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அமெரிக்க பண்புகளான பல்வேறு மாறுபாடுகளிலும், வேற்றுமைகளிலும் சகிப்புத்தன்மை என்பதனை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் விக்டோரியா நுலண்ட் தெரிவித்தார். அமெரிக்க துணை தூதர் சேர்ந்திருக்கும் படிப்பு ஆன்-லைன் மூலம் படிக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரவேற்கத்தக்கது

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோரை தவிர, வேறு எந்த அரசியல் கட்சிகளோ, தமிழ் அமைப்புகளோ, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அமெரிக்க அரசாங்கம் உடனடியாக இந்த பேச்சை கண்டித்திருப்பதும், துணை தூதர் வருத்தம் தெரிவித்து `கலாசார உறவுகளை' மேம்படுத்தும் படிப்பில் சேர்ந்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் தமிழ் எழுத்தாளர் ஒருவர் கூறினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பைபிள் கர்த்தர் சட்டங்களை இழிவு படுத்தும் திருமாவளவன்
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற
காட்டுமிராண்டித்தனம் : திருமாவளவன் ஆவேசம்

Posted Image



பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்த கருணை மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. 
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் அவர்கள் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து தூக்கிலிடப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ளது. 
20 ஆண்டுகள் என்பது ஆயுட்காலத் தண்டனையைவிடக் கூடுதலான தண்டனையாகும். மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் என்கிற முடிவானது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்கிற நிலையாக உள்ளது. இதுவே சட்டவிரோதமாகும்.

உலகளவில் மரண தண்டனையே கூடாது என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்தியாவில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுவது வியப்பாக உள்ளது. 


பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட சுமார் 44 பேருக்கான மரண தண்டனையை விலக்கிக் கொள்வதற்கான கருணை மனு குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

மேலும் கருணை மனு விண்ணப்பிக்காமல் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 286 பேர் காத்திருப்பதாகவும் தெரிகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியா முழுவதும் சுமார் 330 பேர் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை உள்ளது.

ஒரு ஜனநாயக நாடு இவ்வளவு பேரையும் தூக்கிலிட்டுக் கொல்லப் போகிறதா என்கிற கேள்வி எழுகிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித் தனமான தண்டனைக் கொள்கையிலிருந்து விலகி குற்றவாளிகளைத் திருத்துவது என்கிற தண்டனைக் கொள்கையை ஏற்றுச் செயல்படுவதற்கு உலகில் எண்ணற்ற நாடுகள் முன்வந்துள்ளன. 

இன்னும் இந்தியா தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாதது பழமை வாதங்களின் பிடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்திய அரசு தமது தண்டனைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

கொலைக் குற்றத்திற்கு தண்டனை வேண்டும்! ஆனால் கொலையே தண்டனை என்பது காட்டுமிராண்டித் தனமாகும். ஆகவே மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும்.

அத்துடன் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதே காரணங்களுக்காக சாந்தன், முருகன் என்கிற ஈழத் தமிழ் இளைஞர்களையும், ஒரு ‘பேட்டரி’ வாங்குவதற்கு உதவி செய்த குற்றத்திற்காக பேரறிவாளன் என்கிற தமிழ்நாட்டு இளைஞரையும் தூக்கிலிடுவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும். 

எனவே இந்திய அரசு இம்மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக்கொள்ளவும், 20 ஆண்டு காலச் சிறைவாழ்வை தண்டனைக் காலமாகக் கருதி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 19-8-2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் சென்னையில் எனது (தொல். திருமாவளவன்) தலைமையிலும், 22-8-2011 அன்று பிற மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
http://www.nakkheera...ws.aspx?N=59537
 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

சிதம்பரம்: நள்ளிரவில் போதையில் அரைகுறை உடையுடன் நடனம் ஆடிய வெளிநாட்டு மாணவர்கள்.

சிதம்பரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் நள்ளிரவில் அரை, குறை ஆடையுடன் வெளிநாட்டு மாணவர்கள் ஆபாச நடனம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ருவாண்டா, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டடோர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் சிதம்பரம் புறநகர் பகுதிகளில் உள்ள நகர்களில் வீடு எடுத்தும், விடுதிகளிலும் தங்கியும் படித்து வருகின்றனர். 

நேற்று முன்தினம் நள்ளிரவில் சிதம்பரம் முக்கிய வீதியான தெற்கு வீதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூச்சல், ஆட்டம், பாட்டம் என அப்பகுதியே களைகட்டியது. இரவு காட்சி சினிமா முடிந்து திரும்பிய சிலர் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ருவாண்டா, கென்யா மாணவ, மாணவிகள் ஒன்று கூடி காக்டைல் பார்ட்டி நடத்தி உள்ளனர். மாணவ, மாணவிகள் அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாகவும் ஆடியுள்ளனர். திருமண மண்டபத்திலிருந்து பாட்டு மற்றும் கூச்சல், விசில் சத்தம் அதிகரிக்கவே சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சென்று பார்த்து அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். 

22_08_2011_010_028.jpg%2Bstudent%2Bdance.jpgஅப்போது சீருடையில் இல்லாத போலீசாருக்கும், போதையில் இருந்த மாணவர்களுக்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டு சிலர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார், வெளிநாட்டு மாணவர்களை விரட்டியடித்தனர். மாணவ, மாணவிகள் தாங்கள் வந்த வாகனங்களில் வெளியேறினர். 

மதுபானம் எடுத்து வந்த சிலரையும், திருமண மண்டபத்தை சேர்ந்த சிலரையும் விசாரணைக்காக நகர காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். வெளிநாட்டு மாணவர்கள், சிதம்பரம் மற்றும் புதுவையில் உள்ள மாணவர்கள் மாதந்தோறும் பிரேயர் என்ற பெயரில் சிதம்பரத்தில் சில இடங்களில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 என கொடுத்து இதுபோல் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். திருமண மண்டபத்துக்கு புதுவையிலிருந்து காரில் மதுபானம் எடுத்து வந்த ஹரிசங்கர்(23), நிசான்அகமது(24) ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் எடுத்துவந்த மதுபானங்கள் சுமார் 40 பாட்டில்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளோம். இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவதை கட்டுப்படுத்த சிதம்பரம் நகரில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிறித்தவப் பள்ளிகள் பற்றி பாரதியார்

 

எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் பாரதி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல் 

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது. 

சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று வற்புறுத்திப் பேசினோம். மிஷனரிகளின் சம்பந்தமில்லாத சுத்த ஹிந்துப்பாடசாலைகளில் கூட மேற்கண்டவிதமான கல்வி அளிக்கப்படாமலிருத்தல் மிகவும் விசனகரமான விஷயமே. ஆனால் மேற்படி ஹிந்துப் பாடசாலைகளிலே நமது மஹான் களைப் பற்றி வேண்டுமென்று தூஷணை புரிந்து வாலிபர்களின் மனதை மாசு படுத்துவதில்லை என்ற ஒரு நலம் இருக்கிறது. 

வியாஸர், வசிஷ்டர், யாக்ஞவல்கியர், சங்கரர் என்ற பெயர்களைப் பற்றி ஹிந்துப் பாடசாலை மாணாக்கர்கள் ஏதுமறியாமலிருக்கிறார்களென்பது மெய்யேயாயினும் மேற்படிப் பெரியோர்களைத் திட்டும்படிக்கு ஹிந்துப்பாடசாலை உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுப்பது கிடையாது. இது சாதாரணத் தீமை என்பதாக லேசாய் எவரும் நினைத்துவிடக் கூடாது.
புராதன சரித்திரமற்ற தேசத்துக்கு மென்மேலும் அபிவிருத்தி ஏற்படுதல் கஷ்டம். புகழ்பெற்ற புராதன சரித்திரமிருந்தும், அதனை மறந்திருக்கும் ஜாதியார் அழிந்தே போய்விடுவார்கள். புகழ் பெற்ற பூர்வகாலச் சரித்திரமிருக்க, அதனை இகழ்ந்து அதன் பொருட்டு லஜ்ஜையுறத் தலைப்படும் தேசத்தாரின் கதியை எழுதவும் வேண்டுமா ? 


எனவே கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பிச் சிவாஜியைக் கொலையாளி யென்றும், வியாசரை அறிவிலி யென்றும், ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ் விளைஞர்கள் கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திரத் துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாகி, தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் முன்னோர்களிலிருந்து யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்க முதலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள். 

கிறிஸ்து மார்க்கத்திலே நாம் அனாவசியமாக விரோதம் கொண்டிருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். உலகத்திற் பிறந்த மஹோபகாரிகளிலும், மஹா ஞானிகளிலும் கிறிஸ்து ஒருவரென்று நாம் நம்புகிறோம். 'நானும் எனது தந்தையும் ஒன்றே ' என்று கிறிஸ்துநாதர் கூறியதற்குக் கிறிஸ்தவர்கள் என்ன பொருள் கூறிய போதிலும் 'சிவோஹம் ' என்னும் அத்வைதக் கோட்பாட்டையே கிறிஸ்து மேற்கண்டவாறு சொன்னாரென்று விவேகாநந்தர் போன்று பெரிய ஹிந்து தேசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால், நாம் கிறிஸ்து மார்க்கத்தை விரோதிக்கவில்லை. கிறிஸ்தவப் பாடசாலைகளிலே கல்வி கற்பிக்கப்படும் மாதிரியையே விரோதிக்கிறோம். இதற்குப் பாதிரிமார்களைக் குறை கூறுவதால் சிறிதேனும் பயனில்லை. அவர்கள் நம்மையும் நமது பூர்வகால மஹான்களையும் அறியாமையாலும், தாம் வாங்கும் சம்பளத்தின் பொருட்டாகவும் தூஷணை புரிகிறார்கள். 

ஆரியத் தன்மையைப் பெரும்பாலும் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் சேறுகளிலே அழுந்திக் கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரகித்துக் கொள்கிறார்கள். 

bharathi.jpg


ஸ்ரீமத் ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அன்னியர்கள் அழுதி வைத்திருக்கும் பொய்ச் சரித்திரங்களைச் சுழற்றி யெறிந்து விட்டு நமது நாட்டின் தேசபக்தியும் நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்படவேண்டும். அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற சுதேசீய காலேஜ்களையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி, பாதிரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக வேண்டும். 

நமது பாடசாலைகளில் உபாத்தியாயர்கள் ரஸமில்லாமலும், சம்பளம் அதிகமாகவும் இருக்குமானால் இவற்றை மாணாக்கர்கள் எட்டிப் பார்க்கவே மாட்டார்கள். இதையெல்லாம் செல்வர்கள் கவனிக்க வேண்டும். தேசத்தை நாளுக்குநாள் கீழே அழிய விட்டு விடுவோமானால், பிறகு எந்த உபாயத்தாலும் உயர்த்த முடியாமல் போய்விடக்கூடிய ஒருநாள் வந்து விடும். தெய்வக் கிருபையால் அந்த ஒருநாள் இன்னும் வந்து விடாமலே யிருக்கின்றது. அது வருமுன்பாக நானாவிதத்தாலும் முயற்சி புரிந்து நமது நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளவேண்டும். 

'விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே!

* * *

பாரதியின் இந்தக் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் முன் நின்றவை, முன் நிற்பவை இந்து இயக்கங்கள் தாம். பா.ஜ.க தலைமையில் ஆன தேசிய முன்னணி ஆட்சியின்போது தான் அப்போதைய கல்வி அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் பொய்களை சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இவை தேசதுரோக இடதுசாரிகளாலும், போலி மதச்சார்பின்மை வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டன.

பாரதி சொன்னதை செய்ததற்காக பாரதீய ஜனதா கண்டிப்பாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மண்டைக்காட்டு கலவர குருசடி

 

 
மண்டைக்காடு கலவரத்தைக் குறித்து இப்படி பொய்கள் பரப்பப்படுவதில் மா.சி ஒரு சிறிய கருவிதான். உதாரணமாக 2006 இல் திண்ணை பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் ஒரு நபர் எழுதினார்: "...அவர்கள் புதன்கிழமை தோறும் நடத்தும் பூசை வேளையில் சர்ச்சை நோக்கி ஒலிபெருக்கி ஒன்று திருப்பப்பட்டு இரைச்சல் அதிகமாய்ப் பாடல் ஒலித்தது இந்துத் தரப்பிலிருந்து. சத்தத்தைக் குறக்கச் சொல்லும் வேண்டுகோளை வல்லாந்திரமாய் மறுத்த தரப்பு கலவர விதையை ஊன்றியது."

 

le02240610a-1.gif

கலவரத்துக்கு தூண்டுகோலாக பகவதி அம்மன் ஆராட்டு பாதையில் அரசு ஆணையை மீறி அமைக்கப்பட்ட குருசடி

இதுதான் முழுப்பொய் என்பது. உண்மையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து கணிசமான தூரம் தள்ளி இருக்கிறது புதூர் சர்ச். ஆனால் வேண்டுமென்றே இந்துக்கள் ஆராட்டுக்கு வரும் பாதையில் 1971 இல் கட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் குருசடி இது. இந்த குருசடி தவிர, ஊருக்குள் தள்ளி புதூர் சர்ச் இருக்கிறது. இந்த குருசடி ஏற்கனவே கூறியது போல அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகும். எனவே இந்த குருசடியை வழிபாட்டு தலம் எனக் கூறுவது மிசிநரி தொண்டரடிபொடிகளால் மட்டுமே இயலக்கூடிய விசமத்தனமன்றி வேறில்லை. 1982 இல் இது மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்பீக்கர் கட்டப்பட்டு கிறிஸ்தவ பிரச்சாரம் ஒலிப்பரப்பப்பட்டது. மண்டைக்காட்டு அம்மன் கோவில் வரும் பக்தர்களிடம் கிறிஸ்தவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இது சச்சரவை ஏற்படுத்தியது. இறுதியில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்ட போது மோதல் வெடித்தது.மணவாளக்குறிச்சி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கூறிய வாக்குமூலம் விசயத்தை தெளிவாக்குகிறது:
'மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். நேர் எதிர்த்தாற் போல் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமம் இருக்கிறது. வரும் பக்தர்கள் முதலில் கடலில் குளித்துவிட்டு பின்னர் ஏவிஎம் கால்வாயிலும் குளிப்பது வழக்கம். கொஞ்சநாளாவே இந்து கிறிஸ்தவர் தகராறு இருந்துகிட்டுருக்குது. இந்துக்கள் கடலில் குளிப்பது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு விருப்பம் இல்லை. சம்பவம் நடந்த ராத்திரி 8 மணி இருக்கும். மண்டைக்காடு புதூர் கிராமத்திலிருந்து சுமார் 3000 பேர் கூட்டமாக வந்து கோயிலுக்கு வந்த பக்தர்களை தாக்கினாங்க. கடைகளை சூறையாடினாங்க. காவலுக்கு நின்னுட்டிருந்த போலிஸ்காரங்க, நானு, ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 23 பேர் காயமடைஞ்சோம். நிலைமை சமாளிக்கமுடியாமல் போகவே துப்பாக்கி பிரயோகம் நடந்தது. 6 பேர் செத்து போனாங்க. 15 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரில அனுமதிக்கப்பட்டிருக்காங்க.'

மேலும் புதூர் கத்தோலிக்க பங்கின் பூசாரி செபாஸ்டியன் பெர்னாண்டோகாவல்துறை அதிகாரி தன்னிடம் ஸ்பீக்கர் சத்தத்தைக் குறைக்கக் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார். மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நீராட போகும் பாதையில் குருசடி கட்டுவார்களாம். சரியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள குருசடியில் திருவிழா நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு 'பூசை ' நடத்துவார்களாம். இத்தனையும் பதிவான பிறகு ஒரு இருபது வருடத்தில் ஒரு மிசிநரி தொண்டரடிபொடியும் இதர மதச்சார்பற்றதுகளுமாக இதனை அப்படியே 'உல்டா ' பண்ணி பிரச்சாரமும் பண்ணுவார்களாம். எப்படி இருக்கிறது மதச்சார்பின்மையின் உண்மை லட்சணம்! 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வெடித்தது மண்டைக்காட்டு கலவரம்

 

 
துப்பாக்கி சூட்டினைத் தொடர்ந்து மிகவும் மோசமான முறையில் இந்துக்களை விமர்சிக்கும் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் கன்னியாகுமரி மாவட்டமெங்கும் 
விநியோகிக்கப்பட்டன. கடற்கரையோர கிராமங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். ஆங்காங்கே இந்துக்கள் பிடிக்கப்பட்டு கிறிஸ்தவ வெறியூட்டப்பட்ட மீனவர்களால் கடலில் 
கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். முதல் சுற்று தாக்குதலில் இந்துக்கள் பல கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டு தென்னந்தோப்புகள், அரசு பள்ளிகள் போன்றவற்றில் 
அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் வாழ்ந்தனர். 
hindu_house.gif

ஈத்தாமொழியில் கிறிஸ்தவர்களால் சூறையாடப்பட்ட இந்து வீடு

refugees1.gif

இறையுமன்துறை கிராமத்திலிருந்து வீடு வாசல்கள் கிறிஸ்தவர்களால் சூறையாடப்பட்டு துரத்தப்பட்ட இந்துக்கள் தென்னந்தோப்பில் அகதிகளாக வாழ்ந்த 
காட்சி

victim.gif

திரு,தங்கையா நாடார்

கிறிஸ்தவர்களால் கடலில் எறியப்பட்டு காவல்துறையால் மீட்கப்பட்ட 70 (1982 இல்) வயது முதியவர் ஈசந்தங்கு கிராமத்தை சார்ந்த தங்கையா நாடார். 19-3-1982 அன்று இவரை 
மீட்டவர் துணை போலிஸ் கண்காணிப்பாளர் திரு.சங்கரநாராயணன். 
refugees2.jpg

பைங்குளம் கிராமம் அரசு பள்ளிக்கூடத்தில் அகதிகளாக அடித்துவிரட்டப்பட்ட இந்துக்கள் (இங்கு 800 இந்துக்கள் அகதிகளாக வாழ்ந்தனர்)

pamphlet.gif

கிறிஸ்தவர்களால் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் ஒன்று. வேணுகோபால் கமிசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது:
நடுவூர்கன்னக்குறிச்சி, ஈசாந்தெங்கு , ஈத்தாமொழி, நைனாபுதூர்,மணவாளபுரம் ஆகிய பல ஊர்களில் இந்துக்கள் தாக்கப்பட்டு சொந்த ஊரையும் வீட்டையும் விட்டு உயிரைக்காப்பாற்ற 
விரட்டப்பட்டனர். பொதுவாக தாக்குதல்கள் இரவில் செய்யப்பட்டன. இந்துக்கள் இரவில் வாய்க்கால்கள், சாக்கடைகளில் கூட குடும்பத்துடன் பதுங்கி விடியற்காலைகளில் 
இந்துக்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு அகதிகளாக சென்றனர். அன்றைய தேதியில் இந்துக்களுக்கு என்று கேட்க நாதியில்லை என்பதுதான் யதார்த்த நிலை. தவத்திரு 
குன்றக்குடி அடிகளார் பாதிக்கப்பட்ட இந்து கிராமங்களை பார்வையிடாமல் நேராக மண்டைக்காட்டுக்கு சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கிறிஸ்தவ பிசப் ஆரோக்கியசாமியுடன் இணைந்து கூறினார்: "இந்துக்கள் தாராளமாக கடலில் குளிக்கலாம் என இதோ ஆரோக்கியசாமி அனுமதி வழங்குகிறார்." ஆரோக்கியசாமி யார் 
கடலில் குளிக்க இந்துக்களுக்கு அனுமதி வழங்க? என பொருமியவாறு ஒரு இந்து "என்றால் ஆதினம் அவர்களே குளித்து ஆரம்பித்து வைக்கலாமே" என்றார். தவத்திரு அடிகளார் 
புன்னகைத்தபடியே "என்னிடம் டவலும் மாற்று உடுப்புகளும் இல்லை அதனால் பிறகு பார்க்கலாம்" என்றபடி நழுவினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரிய சைவக்குடும்பத்தினர் பலர் மனம் நொந்து தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு கண்டன கடிதங்கள் எழுதினர். 
victim_wife.gif

உயிரோடு கணவனை பறிகொடுத்த கோவில்விளை அய்யப்பன் நாடார் அவர்களின் மனைவி

ஈத்தாமொழியில் அந்த காலகட்டத்தில் இந்து இயக்கங்கள் ஏதும் பெரிய அளவில் கிடையாது. கிராம முன்னேற்றத்துக்காக மகரிஷி மகேஷ் யோகி அமைப்பின் தையல் வகுப்பு பள்ளி 
இருந்தது. கிறிஸ்தவர்களால் இது அடித்து நொறுக்கப்பட்டது. தையல் மிஷின்கள் எரிக்கப்பட்டன. விவசாய குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்டபோது மூன்று பசுக்கள் உட்பட முழு வீடும் அடியோடு தரைமட்டமானது. கீரிவிளை ராமகிருஷ்ணன் நாடார், ஈத்தாமொழி சுந்தரம் , மணவாளபுரம் செல்லத்துரை நாடார், தேரிவிளை பால்நாடார் பனவிளை சுயம்பு நாடார் சாமாதானபுரம் தேரடி மாடன், கோவில்விளை அய்யப்பன் ஆகியோர் கிறிஸ்தவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள். இதில் பால்நாடார், சுயம்பு நாடார் ஆகியோர் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர் என்பதனை விசாரிக்க சென்ற காவல்துறை கண்காணிப்பாளரை மீனவ கிராமத்துக்குள்ளேயே விடாமல் அடித்து துரத்தினர். இந்நிலையில் இந்துக்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை நகருக்குள் கொண்டு வருவதென்பது முடியாமல் போனது. பள்ளம் எனும் மீனவர் கிராமத்தில் இந்துக்கள் இதுவரை கண்டிராத வேகத்துடன் பதிலடி கொடுத்தனர். மண்டைக்காட்டு கலவரத்தின் முற்றுப்புள்ளியாக அதுவே அமைந்தது. இந்துக்களினை எதிர்க்க வன்முறை சரியான ஆயுதம் ஆகும் காலம் இன்னமும் வரவில்லை என கிறிஸ்தவ பாதிரிகள் முடிவு செய்தார்கள். இந்துக்களிடம் சமாதான பேச்சு 
வார்த்தைக்கு முன்வந்தார்கள். விரைவில் சமாதானமும் ஏற்பட்டது. ஆனால் இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஆங்காங்கே தொடர்ந்த படிதான் இருந்தன. ஆனால் குமரி 
மாவட்ட இந்துக்கள் ஒரு நல்ல பாடத்தை படித்தனர் அன்றைக்கு. வலிமையே வாழ்வு. 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையில்லாத கிருஷ்ணன்

 

 
வன்முறை தாக்குதல்கள் தற்காலிகமாக நின்று போனாலும் கூட இந்துக்கள் மீதான பிறவித தாக்குதல்கள் தொடர்ந்த படியே இருந்தன. அவ்வப்போது ஒதுக்குப்புறமான கிராமங்களில் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன. கொல்லங்கோடு குமரி மாவட்டத்தின் மேற்கில் இருக்கும் ஒரு சிற்றூர். அந்த இடம் அடுத்த கலவரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கும் கடலோரத்தில் அம்மன் கோவில் அமைந்திருந்தது. அங்குள்ள ஜீஸஸ் ஆர்ட்ஸ் எனும் நிறுவனம் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. ஊரைச் சுற்றியிருக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து அனுப்புவது இந்த நிறுவனத்தின் வழக்கம். இந்து தெய்வங்களின் படங்களே அனுப்பப்படும். ஆனால் என்ன அதில் தெய்வத்தின் தலை மட்டும் வெட்டப்பட்டு ஒரு விவிலிய வசனமும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக உள்ளூர் கோவில் பூசாரிகளுக்கு இந்த படங்கள் அனுப்பப்படும். மனது புண்படும் இந்துக்களுக்கு பேசத்தான் ஏதும் நாதி கிடையாதே. அவமானத்தை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். நாராயணசாமி கோவில் பூசாரி மாதவன் பணிக்கருக்கு இதே போல தலைவெட்டப்பட்ட ஒரு கிருஷ்ணன் படத்தை அனுப்பியது ஜீஸஸ் ஆர்ட்ஸ். மலையாளத்தில் 'புருஷோத்தமனின் தலை இயேசு கிறிஸ்து' (கொரிந்தியர் 11:3) என்று எழுதியிருக்கிறார், உண்மையில் அந்த வசனம்: ஒவ்வொரு புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் என்று வரும். சாதாரண இந்துக்களிடம் அவர்களுடைய வேதங்களை குறித்த அறிவின்மையை பயன்படுத்திக்கொண்டும் தங்கள் மறைநூலை பிரச்சாரத்துக்கு தகுந்தபடி பேசிக்கொண்டும் நடக்கும் கிறிஸ்தவ பிரச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு இது. இந்த வாழ்த்து அட்டையின் மறுபுறம் "ஏசுவால் அன்றி வேறொருவராலும் இரட்ச்சிப்பு இல்லை" என எழுதப்பட்டிருந்தது. சுருக்கமாக கொல்லங்கோட்டில் வெறுப்பியல் பிரச்சாரம் களைகட்டியது. விரைவில் நடக்கப்போகும் வெறியாட்டத்துக்கு அது கட்டியம் கூறியது. 
krishna-1.gif

கிருஷ்ணன் கோவில் பூசாரிக்கு வாழ்த்து அட்டை: ஜீஸஸ் ஆர்ட்ஸின் மத நல்லிணக்க முயற்சி



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தலையில்லாத கிருஷ்ணன்

 

 
வன்முறை தாக்குதல்கள் தற்காலிகமாக நின்று போனாலும் கூட இந்துக்கள் மீதான பிறவித தாக்குதல்கள் தொடர்ந்த படியே இருந்தன. அவ்வப்போது ஒதுக்குப்புறமான கிராமங்களில் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன. கொல்லங்கோடு குமரி மாவட்டத்தின் மேற்கில் இருக்கும் ஒரு சிற்றூர். அந்த இடம் அடுத்த கலவரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கும் கடலோரத்தில் அம்மன் கோவில் அமைந்திருந்தது. அங்குள்ள ஜீஸஸ் ஆர்ட்ஸ் எனும் நிறுவனம் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. ஊரைச் சுற்றியிருக்கும் இந்துக்களுக்கு வாழ்த்து அனுப்புவது இந்த நிறுவனத்தின் வழக்கம். இந்து தெய்வங்களின் படங்களே அனுப்பப்படும். ஆனால் என்ன அதில் தெய்வத்தின் தலை மட்டும் வெட்டப்பட்டு ஒரு விவிலிய வசனமும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக உள்ளூர் கோவில் பூசாரிகளுக்கு இந்த படங்கள் அனுப்பப்படும். மனது புண்படும் இந்துக்களுக்கு பேசத்தான் ஏதும் நாதி கிடையாதே. அவமானத்தை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். நாராயணசாமி கோவில் பூசாரி மாதவன் பணிக்கருக்கு இதே போல தலைவெட்டப்பட்ட ஒரு கிருஷ்ணன் படத்தை அனுப்பியது ஜீஸஸ் ஆர்ட்ஸ். மலையாளத்தில் 'புருஷோத்தமனின் தலை இயேசு கிறிஸ்து' (கொரிந்தியர் 11:3) என்று எழுதியிருக்கிறார், உண்மையில் அந்த வசனம்: ஒவ்வொரு புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் என்று வரும். சாதாரண இந்துக்களிடம் அவர்களுடைய வேதங்களை குறித்த அறிவின்மையை பயன்படுத்திக்கொண்டும் தங்கள் மறைநூலை பிரச்சாரத்துக்கு தகுந்தபடி பேசிக்கொண்டும் நடக்கும் கிறிஸ்தவ பிரச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு இது. இந்த வாழ்த்து அட்டையின் மறுபுறம் "ஏசுவால் அன்றி வேறொருவராலும் இரட்ச்சிப்பு இல்லை" என எழுதப்பட்டிருந்தது. சுருக்கமாக கொல்லங்கோட்டில் வெறுப்பியல் பிரச்சாரம் களைகட்டியது. விரைவில் நடக்கப்போகும் வெறியாட்டத்துக்கு அது கட்டியம் கூறியது. 
krishna-1.gif

கிருஷ்ணன் கோவில் பூசாரிக்கு வாழ்த்து அட்டை: ஜீஸஸ் ஆர்ட்ஸின் மத நல்லிணக்க முயற்சி



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோவா தொடங்கி தொடரும் புனித விசாரணைகள்:1

 

 
வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான்
இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான்
எனினும் முனங்கினான். ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான்
எத்தனை கொலைகள் கொடுமைகள் அவன் பெயர் நடத்திட்டது 
எத்தனை கொலைகள் அவனால் என் நாட்டில். நான் கூச்சலிட்டேன்
இளக்காரமாக "போ போ போய் விடு!" 
-ஷெல்லியின் கிறிஸ்து எனும் கவிதை-


கோவாவில் கிறிஸ்தவம் செய்த வன்முறையின் உண்மையான இயற்கை என்ன என்பதனை காட்டவும், இவ்வன்முறையின் பின்னாலிருக்கும் இறையியல் இன்றைக்கும் கிறிஸ்தவத்தில் 
தொடர்வதையும் காட்டுவதே இத்தொடரின் நோக்கம். 


சவேரியாரின் கோவா லீலைகள்:
இன்று கத்தோலிக்க சர்ச் அவருக்கு 'கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்' என்று பெயர் வைத்துள்ளது. சர்ச் இவரை புனிதர் என்று கூறுகிறது. அப்பாவி இந்துக்களும் 
நாகர்கோவிலில் கோட்டாரில் உள்ள இவரது சர்ச்சில் நடைபெறும் 'தேரோட்டம்' என்கிற (இந்துக்களை பார்த்து காப்பியடித்து அப்பாவி இந்துக்களுக்கு பொறியாக நடத்தப்படும்) 
திருவிழாவுக்கு செல்கின்றனர். ஆனால் யார் இந்த சவேரியார்? இவர் உண்மையில் செய்த வேலை எப்படி பட்டது? இந்தியர்களைக் குறித்து என்ன கூறியிருக்கிறார் இந்த கோட்டார் 
சவேரியார் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் சவேரியார் செய்த வேலைகள் இன்றைக்கும் இந்தியாவில் தொடர்ந்து செய்யப்படுகின்றன.


குறிப்பாக கோவாவில் நிறுவப்பட்ட புனித விசாரணை எனும் இன்க்விசிசன் மற்றும் அதில் 'புனிதராக' கத்தோலிக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவியரின் பங்கும் அவரது கருத்தாக்க 
தாக்கமும் என்ன என்பதனையும் சிறிது காணலாம். 


கோவா இன்க்விசிசன் என்கிற புனித விசாரணை கிபி 1560 இல் கோவாவில் நிறுவப்பட்டது. பின்னர் கிபி 1774 இல் அது நீக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 1778 
இல் அது கிறிஸ்தவப் பிடிப்புள்ள போர்த்துகீசிய அரசி மூன்றாம் மரியாவால் மீண்டும் கோவாவில் நிறுவப்பட்டது. இறுதியாக 1812 இல் ஆங்கிலேய அழுத்தத்தால் (ஐரோப்பிய 
புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் சிலரும் இதனால் பாதிக்கப்பட்டது ஆங்கிலேய அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்) இதனை அவர்கள் கைவிட வேண்டி வந்தது. ஆக, 252 ஆண்டுகள் இந்த 'புனித விசாரணை' நிறுவனம் இந்தியாவில் நீடித்தது.

 

00920.jpg

ஏசு சபையின் நிறுவனர் லயாலோவுடன் பிரான்ஸிஸ் சேவியர். ஏசு சபை இனத்'தூய்மை'யை வலியுறுத்துவதில் ஹிட்லரின் முன்னோடியாக திகழ்ந்தது. நாசி அமைப்புகளில் சேர ஒருவன் தனது மூன்று தலைமுறைகளுக்கு யூதக்கலப்பில்லை என நிரூபிக்க வேண்டும். ஏசு சபையிலோ ஒருவன் தனக்கு யூத கலப்பில்லை என்பதனை ஐந்து தலைமுறைகளுக்கு நிரூபிக்க வேண்டும். இந்த ஏசுசபை சட்டம் நாசிகளால் தம் நிலைப்பாட்டை நியாயப்படுத்த சுட்டிக்காட்டப்பட்டது. இது 1940களில்தான் நீக்கப்பட்டது.

1543 முதல் 1549 வரை பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்கும் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மன்னனுக்கும் தமது 
தலைவரான லயோலாவுக்கும், ஏசுசபையினருக்கும் எழுதிய கடிதங்களில் கோவாவில் இன்க்விசிசனை நிறுவ வேண்டிய அவசியத்தை, தாம் மதம் மாற்றியவர்கள் மீண்டும் நழுவிவிடாமல் இருக்க போர்த்துகீசிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 

"சிறுகுழந்தைகளை மதமாற்றுவதிலும் அவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்வதிலும் உள்ள நன்மை அபாரமானது. இந்த குழந்தைகள் மீது, அவர்கள் அவர்களது அப்பன்களை விட 
நல்லவர்களாக வருவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு புனித சட்டத்தின் மீது அதீத அன்பு உள்ளது. நமது புனித மதத்தினை ஏற்று அதனை பரப்புவதில் அதீத ஆர்வம் உள்ளது. விக்கிர ஆராதனையின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு அற்புதமானது. அவிசுவாசிகளிடம் அவர்கள் இது குறித்து சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் விக்கிர ஆராதனை செய்தால் உடனே என்னிடம் வந்து அதனைத் தெரிவிப்பார்கள். விக்கிர ஆராதனை நடக்கிறதைத் தெரிந்து கொண்டவுடன் நான் உடனே அங்கே இந்த சிறுவர்களை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அங்கு சென்று அந்த ஆராதனை செய்யப்படும் பிசாசினை, அங்கு நடத்தப்படும் ஆராதனையைக் காட்டிலும் அதிகமாக, அக்குழந்தைகளின் பெற்றோர் சுற்றத்தாரிடமிருந்து அந்த பிசாசுக்கு கிடைத்த ஆராதனைகள் அனைத்தையும் விட அதிகமாக, அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் திட்டுவோம். சிறுவர்கள் அந்த விக்கிரகத்திடம் ஓடிச்செல்வார்கள் அதனை கீழே தட்டி விழவைப்பார்கள். அதன் மீது துப்பி தூசியில் புரட்டுவார்கள். அதனை மிதிப்பார்கள். அதன் மீது அனைத்துவித அத்துமீறல்களையும் செய்வார்கள்....இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தமது நிறமே உயர்ந்ததென நினைக்கின்றனர். அத்துடன் தமது கடவுளரும் கறுப்பாக இருப்பதாக நம்புகின்றனர். இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன." (St. Francis Xavier's Letter from India, to the Society of Jesus at Rome, 1543)

decembre98.jpg

"..இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன."-'புனித' சேவியர்


பிரான்ஸிஸ் சேவியர் இக்கடிதத்தில் முழு கிராமங்களையே மதமாற்றினேன். ஞானஸ்நானம் கொடுத்து எனக்கு கையெல்லாம் வலிக்கிறது என்றெல்லாம் (1543 இல்) எழுதினாலும் 
பின்னாளில் அவரது கடிதங்கள் தமது மதமாற்ற முயற்சிகளில் அவர் விரக்தி அடைந்த நிலையை பிரதிபலிக்கிறது.1545 இல் போர்த்துகீசிய அரசன் மூன்றாம் ஜானுக்கு எழுதிய 
கடிதத்தில் அவர் புனித விசாரணை எனும் இன்க்விசிஷனை கோவாவில் நிறுவக்கோரினார். 1549 இல் அவர் ஏசுசபை நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில் 
அவரது தொனி முழுமையாக மாறிவிட்டது:

saint.jpg


"முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான 
விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ 
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது.பெரும்பாலான இந்தியர்கள் மோசமான நாட்டத்தைக் கொண்டவர்கள் என்பதுடன் 
நல்லவற்றில் வெறுப்பு உடையவர்கள். அவர்கள் ஸ்திரத்தன்மை, மென்மை மற்றும் மனதிடம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான்.
 இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது....இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)

indian_culture.gif

"இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான 
விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ 
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது."--'புனித' சேவியர்


1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள்தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், னால் அவர்களுக்கு என்று ஒரு 
இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும் 
அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க
தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட "Modern Asia and Africa, Readings in World History" பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971. அந்தணர்களைக் குறித்து சேவியர் கூறியதற்கு ஒப்ப மத்திய கால ஐரோப்பாவில் யூதர்கள் குறித்தும் கட்டுக்கதைகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது உண்மையில் யூதர்கள் ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என அறிவார்கள் என்றும் ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவதாகவும் கூறப்பட்டுவந்தது,)

 

31900.jpg

கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே 
ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிட்டது. "குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து இந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள் 
உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. இந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. இந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து 
துரத்தப்பட்டனர்." என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing 
House,Bombay,1988.) 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முறியடிக்கப்பட்ட கீழ்த்தர கிறிஸ்தவ மதமாற்ற மோசடி

 

 
camp2.gif

கோவை மாவட்டம்:
பல்லடம் அருகே செஞ்சேரி மலைப்பகுதி 
"சேவாபாரத் அமைப்பினை சேர்ந்தவர்கள் நாங்கள். பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்ய - விடுமுறை கால வகுப்புக்கள் நடத்த வந்திருக்கிறோம்." என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். நல்லதுதான் செய்கிறார்கள் என நம்பிய 
பெற்றோர்களும் குழந்தைகளை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிஸ்கெட்களும் கூல் டிரிங்க்ஸ்களும் புத்தகங்களும் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழ்ந்தைகள் மனதில் கிறிஸ்தவ விஷத்தை செலுத்தியிருக்கிறார்கள் அந்த சமூகசேவை தோல் 
போர்த்திய போதக ஓநாய்கள். மெல்ல மெல்ல விஷம் கசிந்தது. பிஞ்சு குழந்தைகள் தங்கள் பெற்றோர் வைத்த பெயர்கள் மேல் வெறுப்புடன் கிறிஸ்தவ பெயர்களை அறிவித்திருக்கிறார்கள். "அப்பா இனிமேல் என் பெயர் இசக்கி இல்லை இலியாஸ்" என்ற போது அதிர்ந்த தந்தை சந்தேகம் அடைந்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஊர் திருவிழா வந்த போது குழந்தைகள் "ஏசுதான் ஒரே சாமி இது சாமி இல்லை இதை கும்பிடக்கூடாது" 
என சொன்ன போதுதான் ஊர் மக்களுக்கு விசயம் தெரிந்து சேவாபாரத் அமைப்பினை விரட்டி அடித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு கோடைக்கால வகுப்புகளில் அளிக்கப்பட்ட நூல்களை பார்த்த போது அனைத்துமே ஏசு குறித்த நூல்களாக இருந்தது தெரியவந்துள்ளது. விதம் 
விதமாக கிறிஸ்தவபோதனைகள் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள், டெலிபோனை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்றெல்லாம் சொல்லிவிட்டு இவுங்க பேரையெல்லாம் பாருங்க..இவங்க கிறிஸ்தவங்க ஏசு 
சாமியை கும்பிட்டவங்க அதனாலதான் இவங்களால இதையெல்லாம் கண்டுபிடிக்க முடிஞ்சது. நீங்களும் பேரை மாத்திகிட்டு ஏசுவை கும்பிட்டா அவங்களை போல சாதிக்கலாம்"
camp1.gif
என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கிராமத்தவர்கள் கோபம் அடைந்துவிட்டார்கள் என தெரிந்ததும் இதனை நடத்திய சாமுவேல் ஓடிப்போய்விட்டார். அந்த இடத்தில் ஆசிரியர் கையேடுகள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இப்படிப்பட்ட மோசடி கோடைக்கால மதமாற்ற மூளைச்சலவை நிலையங்கள் நடத்துகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியான ராஜேந்திரன் இதனை கேட்டு "இப்படியெல்லாமா நடக்கிறது!" என அதிர்ந்திருக்கிறார். "காமநாயக்கன்பாளையம் போலீஸாரை சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறேன். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என விசாரிக்க சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் புளியமரத்துபாளையம் என்ற இடத்திலும் இதைப்போன்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பாபு என்கிற மோசடி மதமாற்ற ஆசாமி "நான் செய்தது தப்புதான். இனிமேல் இதுபோல மதமாற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன். இந்த ஊர் பக்கமே வரமாட்டேன்." என எழுதி கொடுத்திருக்கிறார். இந்த விசயங்களை எல்லாம் மக்கள் புகாராக எழுதி போலிஸில் பாபுவை ஒப்படைத்திருக்கின்றனர். போலீஸ் பாபுவை எச்சரித்து அனுப்பியிருக்கிறது. சேவாபாரதி என்பது உண்மையான சமூக சேவை தொண்டு நிறுவனம். சுனாமியின் போது இந்த அமைப்பு கடலூர் பகுதிகளில் செய்த சேவை மூலம் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ள அமைப்பாகும். எனவே அதே அமைப்பின் பெயரை போல மோசடியாக தமது அமைப்பின் பெயரை 'சேவாபாரத்' என தந்திரமாக வைத்துக்கொண்டு இந்த மோசடி வேலையில் கிறிஸ்தவ மதமாற்றிகள் ஈடுபட்டுள்ளனர். சரியான விதத்தில் எச்சரிக்கையாக செயல்பட்டு மதமாற்றத்தை தடுத்த ஊர் மக்களும் இந்த மோசடியை தைரியமாக வெளியே கொண்டு வந்திருக்கும் ஜூனியர் விகடனுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். 
நன்றி: ஜீனியர் விகடன், 'பிஞ்சுக்களை மதமாற்றியதா சமூக அமைப்புகள்?' ரிப்போர்ட் by R.லோகநாதன், 23-5-2007


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சைத்தானின் தொன்ம மாற்றம்-1: ஏசு வரலாற்றடிப்படையும் அப்பாலும்:

 

 
யோபு: அதிகாரம்:1
7.ஆண்டவர் சாத்தானிடம், எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான். 
8. ஆண்டவர் சாத்தானிடம், என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார். 
9. மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? 
10. அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? 
11.ஆனால், உமது கையை நீட்டும்: அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான் என்றான். 
12. ஆண்டவர் சாத்தானிடம், இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே:அவன்மீது மட்டும் கை வைக்காதே என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான். 
...
16. இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.


யூத விவிலியத்தில் நாம் பார்ப்பது சைத்தான் யஹீவா தேவனின் ஊழியனாக இருக்கிறான். இன்னும் கூறினால் யஹீவா தேவனின் நெருப்பு சைத்தானின் வழியாகவே செயல்படுகிறது. உலக நடப்பை யஹீவா தேவனுக்கு சொல்பவனாகவும் இருக்கிறான். இருவரிடத்திலும் எதிரி மனோபாவம் இல்லை. அவன் மானுடரைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் இது மாறுகிறது. இந்த தொன்ம மாற்றத்தின் பலகாரணிகளும் இதன் வரலாற்று விளைவுகளும் கிறிஸ்தவத்திற்கு உரியவை - கிறிஸ்தவத்திற்கு மட்டுமே உரியவை. 
கிறிஸ்தவத்தில் சைத்தான் ஒரு விசித்திரமான கருத்தாக்கம் ஆகும். அக்கருத்தாக்கத்தை பிற்கால யூதத்தில் காணமுடியும் என்றாலும் அதன் வேர்களை யூத பண்பாட்டின் மீதான பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் தாக்கத்திலிருந்தே அடையாளப்படுத்துகின்றனர் அறிஞர்கள். மானுடத்தை யஹீவா தேவன் முன்னால் குற்றம்சாட்டுபவனாக சைத்தான் யூத தொன்மத்தில் அறியப்படுகிறான். ஆனால் முழுமையான சாத்தானிய விவரணங்கள் கிறிஸ்தவ விவிலிய கதைகளிலேயே காணப்படுகின்றன. இதற்கான காரணிகள் பல. கொம்ரான் சுருளோலைகளில் காணப்படும் மத கருத்தாக்கங்களில் ஜராதுஷ்டிர இரு-தன்மை (dualist) சமயக்கண்ணோட்டம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காணலாம். ஜராதுஷ்டிர சமயத்தில் அக்ரிமான் எனப்படும் இருட்சக்தி தலைவனின் தன்மைகள் மெதுவாக சாத்தானின் மீது படர்வதை காணமுடிகிறது. ஏசுவின் காலம் என கருதப்படுவதில் யூத பிரதேசத்தில் பல மறைஞான குழுக்கள் (mystic cults) இயங்கிவந்தன. இவை பெரும்பாலும் யூத மதத்துடன் பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் சில கவர்ச்சிகரமான கோட்பாடுகளை உள்ளடக்கியவையாக இருந்தன. இறுதிநாட்கள் உலக அழிவு குறித்த விவரணங்கள், சுவர்க்கம்-நரகம் குறித்த அதீதமான விவரணங்கள், ஒளிக்கடவுளுக்கு இருட்கண தலைவனுக்குமான போராட்டமாக தனி வாழ்க்கையையும் வரலாற்றையும் நோக்குதல் ஆகியவை யஹீவா வழிபாட்டுக்குழுவுடன் இணைக்கப்பட்டு இவற்றை மையம் கொண்ட இந்த குழுக்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தின் வலிமைக்கு அடிபணிந்ததாக இவர்கள் கருதிய யூத ஆச்சாரியர்களை கடுமையாக விமர்சித்தனர். தூய யூதத்தை ரோம வழிபாட்டு முறைகளால் களங்கப்படுத்தியதாகவும் இவர்கள் கருதினர். (ஆனால் இவர்களது 'தூய யூதமே' பாரசீகக் கலப்புடையது என்பது வேறு விசயம்) ஈஸீன்கள் எனப்படும் ஒரு குழுவினைக் குறித்து இதில் நமக்கு அதிகமான தரவுகள் கிடைத்துள்ளன. பலர் ஏசு இந்த மறைஞானக் குழுவினைச் சேர்ந்தவர் எனக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த குழு வேதாந்த தன்மைகொண்டதாக படித்த விவரம் தெரிந்த இந்துக்கள் கூட கருதுகின்றனர். ஆனால் வேதாந்தத்திற்கும் இந்த ஈஸீன் குழு கொண்டிருந்த கோட்பாட்டிற்கும் எட்டாம் பொருத்தம் என்பது பொதுவாக வெளியே தெரியாத விஷயம். ஆனால் கிறிஸ்தவத்தில் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டு பின்னர் குரானிலும் உருவாகியிருக்கும் கருத்தாக்கமான சாத்தான் (ஷையித்தான்) அதன் பாரசீக -ஜராதுஷ்டிர தன்மை மாறாமல் ஈஸீன் கோட்பாடுகளில் 'சாவுக்கடல் சுருளேடுகள்' (Dead sea scrolls) - அதாவது அவை தெரிவிப்பது ஈஸீன்களின் கோட்பாடு என்பது உண்மையானால்- மூலம் தெரியவருகிறது. இடியாப்பக் குழப்பமாக சாத்தியகூறுகளாகவே இந்த விஷயங்களை கூறுவதற்கு மன்னிக்கவேண்டும். ஏனெனில் இவை அனைத்துமே இன்னமும் முழுமையடையாதவை. ஆனால் எதுவாயினும் சில விஷயங்களை நிச்சயமாக கூறமுடியும். ஈஸீன்களோ வேறெவரோ யூத மறை ஞானக்குழுக்கள் பொதுவான யூதசமுதாயத்திலிருந்து விலகி வாழ்ந்தன. அந்த குழுக்கள் பாரசீக-ஜராதுஷ்டிர சமயத்தின் கோட்பாடுகளை தன்னுள் வாங்கி அவற்றினை யூத இறையியலுடன் இணைத்து சில கற்பிதங்களை உருவாக்கியிருந்தன. அதில் சைத்தான் எனும் கருத்தாக்கத்தினை நாம் காணமுடிகிறது. யூத விவிலியத்தில் முழுமையான இறை-எதிரியாக முக்கிய பங்கு வகிக்காத சைத்தான் கிறிஸ்தவ விவிலியத்தில் முழுமையாக உருவாக்கி வருவதிலான இடைநிலை கண்ணியாக இதனை நாம் காணமுடியும். யூத விவிலியத்தில் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து யோபுவினை சோதனை செய்பவனாக சைத்தான் வருகிறான்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MONDAY, AUGUST 13, 2007

பெந்தகோஸ்தே ஜெபக்கூடமும் கத்தோலிக்கர்களும்

 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இந்து கோவில்கள் அனைத்தின் அருகிலும் கத்தோலிக்கர்கள் சர்ச் கட்டுவதை ஒரு பழக்கமாகவே கையாண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் இதனை செய்கின்றனர். உவரி, கன்னியாகுமரி, மண்டைக்காடு முதல் மேல்மருவத்தூர் வரை இந்த ஆக்கிரமிப்பு நடக்கிறது. நாகர்கோவிலுக்குள்ளேயே கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் அம்மன் கோவில் சுவரையொட்டிய தெருவில் தங்கள் வழிபாட்டு தலத்துக்கு விளம்பர பலகை செய்து வைத்துள்ளார்கள் கத்தோலிக்கர்கள். இப்படி பிற மத தலங்களில் வெட்கமில்லாமல் ஆக்கிரமிக்கும் கத்தோலிக்கர்கள் தங்கள் வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அதே கிறிஸ்தவத்தை சேர்ந்த மற்றொரு பிரிவு வரும்போது எப்படி நடக்கிறார்கள்? இதனை கண்கூடாக நேற்று காணமுடிந்தது. மண்டைக்காட்டை அடுத்த பிலாவிளை புனித ஜார்ஜியார் சர்ச்சின் அருகே கெத்சமனே ஜெபமாளிகை என்கிற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார் பாஸ்டர் ஜெயகுமார் என்பவர். உடனேயே அந்த பகுதி கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்ததோடு அதற்கு எதிராக வருவாய்துறையினருக்கு மனு அளித்தனர்.இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) ஜெபக்கூடத்திற்கு வந்தவர்களுடன் உள்ளூர் கத்தோலிக்கர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பதட்டமும் ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் கணேசன் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். இதனனயடுத்து பெந்தகோஸ்தே ஜெபக்கூடத்துக்கு கத்தோலிக்கர் தரப்பில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அது ஏற்கப்பட்டது:
1. ஜெபக்கூடத்துக்கு வர வெளியூர்காரர்களுக்கு அனுமதி கிடையாது.
2. உள்ளூர் காரர்களும் உரிய அனுமதி பெற்றே நடத்தவேண்டும்.
3. டிரம்ஸ் செட் வைக்க கூடாது
4. ஸ்பீக்கர் வைக்கக் கூடாது.
இதனை ஏற்றுக்கொண்ட பின் வெளியூர்காரர்களை போலிஸ் அனுப்பி வைத்தது. இந்துக்களை மதம் மாற்ற எவ்வித ஆக்கிரமிப்பையும் செய்ய தயங்காத கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்துக்கு பிரச்சனை வரும் போது கிறிஸ்தவனேயானாலும் வேற்று பிரிவுக்காரனை நடத்துவதை பார்த்தாவது இந்துக்கள் கிறிஸ்தவ பிரச்சாரகும்பல்களையும் மிசிநரிகளையும் எப்படி நடத்தவேண்டும் என்பதனை படிக்க வேண்டும். (நன்றி: தினகரன் 13.8.2007, மாவட்டசெய்தி: குமரி பதிப்பு)
catholic_protest.gif
 

Labels: Catholic ChurchconversionPentecostal

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திராவிடர்கள் முறை தவறிய பரம்பரையா?

 

 
'ஆம்' என்கிறது அண்மையில் வெளியான கிறிஸ்தவ பிரச்சார நூல் ஒன்று. 'India is a Christian Nation' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கிறிஸ்தவ பிரச்சார நூலில் எவ்வித வெட்கமும் மானுடத்துவமும் கிஞ்சித்தும் இல்லாமல் 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவ இறையியலாளர்களிடமும் மிசிநரிகளிடமும் மிகவும் பரவலாக இருந்த இனவாதக் கோட்பாட்டினை தமிழர்களுக்கு பயன்படுத்தி ஒரு பிரச்சார நூலை வெளியிட்டு அதனை கிறிஸ்தவ டயோஸீஸன்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.


கிறிஸ்தவ தொன்மக்கதையில் பிரளயத்திலிருந்து (கிறிஸ்தவ நம்பிக்கையின் படி ஏசுவின் தகப்பனான) யஹீவா தேவனால் நோவா என்பான் காப்பாற்றப்படுகிறான். ஏனெனில் அவனே யஹீவா தேவனுக்கு விசுவாசமானவனாம் ஆனால் அவன் அதீதமாக திராட்சை மது அருந்தி வெறியில் ஆடை நழுவக் கிடக்கிறான். இனி பைபிள்:

அப்போது கானானுக்கு தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேதும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் தோள் மீது போட்டுவித்து பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் எதிர்முகமாய் போகாதபடியினால் தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை காணவில்லை. நோவா திராட்சை ரசத்தின் வெறி தெளிந்து விழித்த போது தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேதை தேவன் விர்த்தியாக்குவார் ; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான் கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். (ஆதி 9: 22-27)

nazi_jesus4.gif

இந்த பைபிள் வாசகங்கள்தான் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தவும் அவர்கள் மீது எண்ணற்ற கொடுமைகளை செய்ததுமான வரலாற்று நிகழ்வுகளை நியாயப்படுத்த கிறிஸ்தவ மிசிநரிகளாலும் போதகர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் எப்போதுமே இனவாதத்தை எதிர்த்ததில்லை என்பது மட்டுமல்ல எப்போதெல்லாம் இனவாத வெறுப்பியல் எழுந்துள்ளதோ அப்போதெல்லாம் அங்கே இனவாத வெறுப்பியலை தனது மத மேலாதிக்கத்துக்காக ஆதரித்துள்ளது. அது அமெரிக்க தோட்டங்களில் வதைக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களை கொடுமை செய்த வெள்ளையராகட்டும், ஹிட்லராகட்டும், ருவாண்டா இனப்படுகொலைகளாகட்டும் அல்லது ஈவெராவாகட்டும் அல்லது மு.கருணாநிதி ஆகட்டும். வெள்ளை மிசிநரி 'ஆராய்ச்சியாளர்கள்' அவர்கள் சென்ற பிரதேசங்களில் வாழ்ந்த வேற்று இன மக்களை ஹாமின் சந்ததிகளாக காட்டும் 'ஆராய்ச்சிகளில்' ஈடுபடுவர். இதன் மூலம் அவர்கள் முறை தவறியவர்கள் நாகரிகத்தில் வெள்ளையர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அதே போல ஆன்மிக புலத்திலும் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் கீழே இருப்பவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் என்பதாகக் காட்டுவார்கள். கறுப்பின மக்கள் மீது கிறிஸ்தவம் அவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறையையும் இனப்படுகொலைகளையும் நியாயப்படுத்த இந்த விவிலிய இனவாத போலி ஆராய்ச்சி பயன்படுத்தப்பட்டதை ஸ்டீபன் ஆர் கெய்ன்ஸ் எனும் வரலாற்று பேராசிரியர் அவர் எழுதிய 'நோவாவின் சாபம்: அமெரிக்க அடிமை முறைக்கு விவிலிய அடிப்படையில் ஆதரவு' (Noah's curse: Biblical support for American slavery) எனும் நூலில் விவரித்துள்ளார். அதிலுள்ள சில விசயங்களை பார்த்தால் இந்த மிசிநரி கும்பலின் விவிலிய அடிப்படையிலான இன ஆராய்ச்சியின் பின்னால் இருக்கும் இரத்தம் பருகும் விசமத்தனம் விளங்கும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்நூல் கூறும் தரவுகளை நோக்கிய பிறகு இந்தியாவில் இந்த இனவாத மத மேலாதிக்கவாதிகள் ஈடுபட்டுள்ள விசமத்தனங்களை காணலாம்.

 

nazi_jesus6.gif

"அமெரிக்காவில் அடிமை அமைப்புக்கு எதிர்ப்பு அதிகமாக அதிகமாக அடிமை அமைப்பு ஆதரவாளர்கள் 'நோவாவின் சாபம்' என்பதை தங்கள் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். அவர்களது பிரசுரங்களில் அடிமை அமைப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களில் விவிலிய-ஆதியாகமத்தின் 9 ஆவது அத்தியாயம் முக்கியமான இடத்தைப் பெற்றது."

nazi_jesus7.gif

அமெரிக்காவில் உள்நாட்டு யுத்த காலகட்ட அடிமை-அமைப்பு ஆதரவு அறிவுசீவிகள் வட்டாரத்தில் ஹாமின் ஆப்பிரிக்க தொடர்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியமாகிவிட்டது. அமெரிக்க அடிமை அமைப்பின் உச்சநிலை காலகட்டத்தில் ஹாமினை ஆப்பிரிக்க கறுப்பின மக்களுடன் தொடர்பு படுத்துவதற்கு எவ்வித சான்றும் கூட தேவையில்லாமல் அது உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாகிவிட்டது.

nazi_jesus8.gif

nazi_jesus9.gif

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக விவிலியத்தை வாசிப்பவர்கள் ஹாமையும் அவன் சந்ததிகளையும் அடிமை அமைப்பினை நியாயப்படுத்தவும் பாலியல் வக்கிரங்கள் பாலியல் ஒழுக்கமின்மை என்பவற்றுக்கு காரணமாகவும் காட்டி வந்துள்ளார்கள். விக்கிர வழிபாட்டு மதங்கள் உருவாக அவர்களே காரணம் என கூறினர். கொடுமை, திருட்டு, கலகங்கள் , தெய்வ நிந்தனை போர் இறைக்கொலை ஆகிய அனைத்துக்கும் அவர்களே காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமந்தார்கள்.


ஆக, ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் உண்மை வரலாறு மற்றும் அவர்களது சொந்த தொன்மங்கள் பாரம்பரியங்கள் ஆகியவை மறக்கடிக்கப்பட்டு கிறிஸ்தவ புனைகதை ஒன்று அவர்களின் வரலாறாக அவர்கள் மீது சுமத்தப்பட்டு அந்த புனனகதையின் அடிப்படையில் அவர்கள் மீதான கொடுமைகள் நியாயப்படுத்தப்பட்டன.

nazi_jesus3.gif
nazi_jesus5.gif
indus.gif

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தவும் மதமாற்றவும் கிறிஸ்தவ மிசிநரிகள் செய்த இதே 'ஆராய்ச்சி' விசமத்தனம் இன்றைக்கு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது - அதுவும் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் முழு முயற்சியுடன் என்பது அதிசயமாக இருக்கிறதா?

இதோ கிறிஸ்தவ டயஸீஸ்களில் விற்கப்படும் 'India is a christian nation' எனும் நூலில் காணப்படும் விசமத்தனமான இனவாத பிரச்சாரம்.

nazi_christ.gif
தமிழர்கள் மீது எத்தகைய ஆன்மிக அடிமைத்தளையை விரிக்க எப்படி ஒரு கீழ்த்தர இனவாத புனைவினை இந்த நவீன யுகத்திலும் எவ்வித வெட்கமும் இல்லாமல் முன் வைக்கிறார்கள் பாருங்கள். இத்தனைக்கும் இந்த ஆரிய-திராவிட இனவாதத்துக்கும் சரி நோவாவின் பிள்ளைகளால் உலகில் மக்கள் பரவினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கு நேர் எதிராக உண்மை இருப்பது மரபணு ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள போதும் இந்த மிசிநரிகளின் போலி 'ஆராய்ச்சிகள்' மூலம் மதப்பிரச்சாரம் நடப்பதையும் அத்துடன் தமிழர்களும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதையும் கவனியுங்கள். இந்த இனவெறி திமிர் படைத்த நூலினை சென்னை கத்தோலிக்க பிஷப் லாரன்ஸ் பயஸ் 'உண்மையைத் தேடுபவர்களுக்கு சிபாரிசு செய்வதில்' மகிழ்ச்சி அடைகிறார். எஸ்ரா சற்குணம் "இந்த அபூர்வ நூலுக்கு ஆசிர்வாதங்கள்" அளிக்கிறார். 'Institute of Asian Studies' என்கிற பெயரில் இந்து பாரம்பரிய அமைப்புகள் குறித்த குழப்பத்தை உண்டுசெய்ய மிகவும் தந்திரமாக அரசு உதவியுடன் இயங்கும் ஜான் சாமுவேலின் முகத்திரையும் கிழிந்துள்ளது. இந்த ஆசாமி கூறுகிறார்: "இந்த நூல் பைபிள் சொல்லும் சிறுவிதை போன்றது. இதைப் போல மேலும் பலர் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும்." ஆக தமிழர்களும் திராவிடர்களும் ஹாம் என்கிற தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து சபிக்கப்பட்ட சந்ததிகள் என்று சொல்கிற நூலுக்கு ('தன் தந்தையின் நிர்வாணத்தை பார்த்து' இந்த விவிலிய வார்த்தைக்கு தாயை புணர்ந்தவன் என்றும் பொருள் உண்டு. பார்க்க: லேவி. 20:11 மற்றும் லேவி 18:7-8)
babasaheb-48d66l48p.gif

இந்நிலையில் இந்த மிசிநரி கோட்பாட்டினைக் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறியதை இங்கே பார்க்க வேண்டும்.

"ஆரியப்படையெடுப்புக் கோட்பாடு என்பது ஒரு புனைவு ஆகும். அது ஒரு வக்கிரம் பிடித்த ஆராய்ச்சியின் விளைவாகும். அது தரவுகளின் அடிப்படையில் உருவானதல்ல. "
என பாபா சாகேப் அம்பேத்கர் கருதினார். அவர் தெள்ளத்தெளிவாக கூறினார்:
"சாதியை குறித்து 'ஆராய்ச்சி' செய்யும் ஐரோப்பியர்கள் ஏற்கனவே நிறம் குறித்த முன்முடிவுகள் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவே அதனையே இந்திய சாதி குறித்த பிரச்சனைக்கும் அடித்தளமாக்கினார்கள். ஆனால் உண்மையிலிருந்து இது போல விலகிய விசயம் வேறெதுவும் இல்லை. டாக்டர்.கேட்கர் 'அனைத்து அரசரும் திராவிட-இனம் என கருதப்பட்டாலும் ஆரிய-இனம் என (இன்றைய ஆராய்ச்சியாளரால் -அநீ) ஆரியரே' எனக்கூறுவது முற்றிலும் சரியான முடிவாகும். எந்த ஒரு சமுதாயமும் ஆரிய இனமா திராவிட இனமா என்பதெல்லாம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு கேள்வியே இல்லை ஐரோப்பிய 'ஆராய்ச்சியாளர்கள்' அத்தகைய பிரிவினையயக் கொண்டு வரும் வரை."
மேலும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்:
"அந்தணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. அந்தணர்கள் திராவிடரெனில் தலித்துகளும் திராவிடரே. அந்தணர்கள் நாகர்களெனில் தலித்துகளும் நாகர்களே. அந்தணர்களும் தலித்துகளும் வெவ்வேறு இனத்தவர் எனும் ஐரோப்பிய கோட்பாடு உண்மைத் தரவுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவு ஆகும்."
அண்ணல் அம்பேத்கர் வேதங்களையும் இதிகாசங்களையும் சமுதாய யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்து ஆராய்ந்து கூறிய இந்த முடிவினை அறிவியலும் உண்மை என ஒத்துக்கொண்டு உள்ளது.

அண்மையில் PNAS வெளியிட்ட ஆய்வு ஒன்று 'A prehistory of Indian Y chromosomes: Evaluating demic diffusion scenarios' (January 24, 2006 | vol. 103 | no. 4 | 843-848) 
அதன் முடிவினை பின்வருமாறு கூறுகிறது:

"Y க்ரோமோஸோம் தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆரரய்ச்சி முடிவுகள் இந்தியாவிற்குள் பெரும் படையெடுப்போ புலப்பெயர்வோ நடந்தது எனும் கோட்பாட்டுக்கு எதிராகவே அமைந்துள்ளன."
ஆனால் இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மக்களின் அறியாமையை பயன்படுத்தி மதம் வளர்க்க போலி இனவெறி கோட்பாடுகளை பரப்பும் கிறிஸ்தவ மிசிநரிகளை என்னவென்பது. அல்லது தங்களை கீழ்மைப்படுத்தும் இனவாதக் கோட்பாடுகளை மிசிநரிகள் கூற அதனை ஏற்று அதற்கு 'ஆமாம் சாமி' போடும் நம்மூர் 'தமிழின காவலாளிகளை' என்னவென்பது?

அது போலவே நோவாவின் சந்ததிகள் உலகில் சென்று அங்குள்ள இனங்களானார்கள் என்கிற பிற இனத்தவர், மதத்தவர் மீது மிசிநரிகள் திணித்த கிறிஸ்தவ புனைகதையும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்தே மானுட இனம் பரிணமித்து பரவியது மரபணு ஆராய்ச்சியால் தெளிவாக்கப்பட்டுள்ளது.

truth-48d686l9g.gif
மேலும் ஸ்டீபன் ஓபன்ஹைமர் போன்ற மரபணுவியலாளர்கள் இன்றைக்கு 85000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து பாரதம் வந்த மானுடக்குழுமமே இன்றைய ஆப்பிரிக்கரல்லாத அனைத்து மக்களினங்களின் முன்னோடிகள் என்கிறார். அதாவது ஹாமின் சாபம், நோவாவின் சந்ததிகள் போன்ற புனைகதைகள் மூலம் உருவாக்கப்பட்ட போலி இனவாத ஆய்வுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

எனில் ஏன் இன்றைக்கும் இத்தகைய பொய்யான இனவாதங்களை 'ஆராய்ச்சி' என்ற பெயரில் மிசிநரிகள் பரப்ப வேண்டும்? இதுதான் மிசிநரி கருத்தாக்கங்களின் இரட்டை நிலை. கீழே உள்ள ஓவியத்தையும் புகைப்படத்தையும் பாருங்கள். இவற்றுக்கான தொடர்பு என்னவோ அதுதான் அன்பை போதிப்பதாக கூறும் கிறிஸ்தவத்துக்கும் அது தன் மேலாதிக்கத்துக்காக பரப்பும் இனவாத வெறுப்பியலுக்குமான தொடர்பு.

nazimary-48d6b2lb9.gif
ஆம் அந்த மேரி-குழந்தை ஏசு ஓவியத்தை வரைந்த ஹிட்லர்தான் யூத தாயையும் குழந்தையையும் சுட்டுக்கொல்லும் நாசி வெறியர்களையும் உருவாக்கினான். அப்போது கிறிஸ்தவ அதிகார பீடங்கள் அவன் புகழ் பாடின.
nazi_christ1.gif
மேலே: ஹிட்லர் புகழ் பாடும் லுத்தரன் சர்ச் இதழ்; ஹிட்லருடன் கத்தோலிக்க பெருந்தலை, நாசி மேடையில் கத்தோலிக்க பெருந்தகை, கிறிஸ்தவ ரசிகைக்கு ஆட்டோகிராப் வழங்கும் ஹிட்லர்

கிறிஸ்தவ இறையியல் இல்லாமல் நாசி வெறுப்பியல் இல்லை. மற்ற இனவாத வெறுப்பியல் கோட்பாடுகளான ஹட்டூ-டட்ஸி, திராவிட-ஆரிய இனவாதம் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

உலகையே பாழ்படுத்தும் இந்த வியாதி அழிய மருந்தொன்றிருக்குது. அதுதான் பாரதத்தின் இந்து தருமம்.

onefamily-48d657v77.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அல்லேலுயா விகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம்

 

 
மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் அசிரியருக்கு,

அண்மையில் ஆனந்தவிகடனை படிக்க நேர்ந்தது. சரசுவதி என்கிற 'எழுத்தாளர்' எழுதுகிற மல்லி என்கிற தொடர்கதை. நான் படிக்க நேர்ந்த அந்த தொடரில் துரைசாமி என்கிற கல்லூரி அட்டெண்டர் குடும்பத்துடன் கிறிஸ்தவராகிவிட்டார் என்பதுடன் ஆரம்பிக்கிறது. மதமாற்றத்தை எதிர்க்கும் கருணாகரன் என்பவனை மல்லி என்கிற பெண் (அவள்தான் கதாநாய்) சாடி கடுமையாக மதமாற்றத்தை ஆதரிக்கிறாள். கதையை இந்த இடத்திலிருந்து சிறிதே மாற்றி அமைத்துள்ளேன். தாங்கள் வெளியிட்டுள்ள தொடர்கதை வெறும் கதை என்ற நிலையைத் தாண்டி இரு மதங்களை ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததெனவும், இந்து மதம் நோய் பிடித்து இருப்பதாக காட்டுவதாலும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட இந்த மறு-வாசிப்பை பத்திரிகை சுதந்திரத்தை கருதி பிரசுரிப்பீர்களென நம்புகிறேன். (ஹி ஹி மூடநம்பிக்கை என்று எனக்கு தெரியும் என்றாலும்.)

 

"ரொம்ப சிலுப்பிக்காதீங்க கருணா! பணத்துக்காக மதம் மாறுறவங்கன்னு அங்கொருத்தர் இங்கொருத்தர் இருக்கலாம். நான் மறுக்கலை. தங்களுடைய சமூக அந்தஸ்து மாறணுங்கிறதுக்காக மதம் மாற விரும்புறவங்கதான் கருணா இங்கே அதிகம். காலங்காலமா ஒடுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களா ஆக்கப்பட்டவங்க, மானுட சமத்துவம் மறுக்கப்பட்டவங்கன்னு இங்கே கோடிக்கணக்கான பேர் இருக்காங்க. அவங்களுடைய காயமும் வலியும் உன்களுக்கு புரியாது. யாரு அவங்களைச் சக மனுசனா மதிச்சு சமமா நடத்துறாங்களோ அவங்க பக்கம் போறதுல என்ன தப்பு? எல்லாரும் பெரியாரா இருக்க முடியுமா? 'நான் உள்ளே இருந்துகிட்டே சமத்துவத்துக்கான போராட்டத்தை நடத்துவேன்ற துணிச்சல் அவருக்கு இருந்தது. முதல்ல, நீங்க தயவு செய்து உளையல் பாடத்தையாவது கொஞ்சம் கவனிச்சுப் படியுங்க!" வேண்டுகோளோடு நிறுத்தினாள். "அப்ப இந்து மதத்தைவிட மத்த மதங்கள் உசத்திங்கிறியா?" வாயே திறக்காத லலிதா உதடுகள் துடிக்கக் கேள்வியை எழுப்பினாள். "லலிதா இந்து மதத்தைப் பிடிச்சிருக்கிற நோய் ரெண்டு. சாதியமும் தீண்டாமையும். சாதி ரீதியா மனுசங்களைப் பிரிச்சுச் கூறுபோட்டு உயர்வு தாழ்வு கற்பிக்கிறது கொடுமையிலும் கொடுமை. சக மனிதர்களைத் தீண்டத்தகாதவங்கன்னு சொல்லிப் பிரிச்சு வெச்சுக் கேவலப்படுத்துவது கொடூரம். மார்வினைக் கேளுங்க....அவங்க நாட்டுல 'சாதியும் தீண்டாமையும் இருக்கா?'ன்னு..." வெடித்துச் சீறினாள் மல்லி.

மேலே இருப்பது ஏப்ரல் 2 2008 ஆனந்தவிகடன் இதழில் வெளியான மல்லி தொடரில் வரும் வரிகள். கீழே இருப்பவை எனது 'மறுவாசிப்பு'(!) 

மார்வின் சிறிது தொண்டையை கனைத்துக் கொண்டான். சிறிது தயங்கித்தான் ஆரம்பித்தான். 
"எனக்கு தமிழ் புரிஞ்சாலும் சரளமா தமிழ்ல பேசமுடியாததால ஆங்கிலத்துல பேசுறதுக்கு மன்னிச்சிடுங்க. மல்லி நீங்க மேம்போக்கா உணர்ச்சி படுற அளவுக்கு உருப்படியா உலக சரித்திரத்தையோ அல்லது கிறிஸ்தவத்துடைய வரலாற்றையோ ஒழுங்கா படிச்சதில்லைன்னு நினைக்கிறேன். எங்க நாட்டுலயும் தீண்டாமை இருந்துச்சு. சாதி அமைப்பு கூட இங்க விட மோசமாவே இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். அதனை எந்த கிறிஸ்தவ சபையும் எதிர்க்கலை. இன்னும் சொன்னா இன்னைக்கு மிகப்பெரிய மனிசங்களா பேசப்படற கிறிஸ்தவ இறையியலாளர்களெல்லாம் அந்த சாதி முறையை ஆதரிச்சுருக்காங்க." மல்லியின் முகம் சிவந்தது. "சும்மா உன் இந்து நண்பர்கள் உன்னை பாராட்டணும் அப்படீங்கிறதுக்காக கதை விடாதே மார்வின். இன்னைக்கு அப்ப தீண்டாமை இல்லாத சாதி வேறுபாடு இல்லாத சமுதாயமா உங்க மேற்கத்திய நாடுகள் இருக்கே அதெல்லாம் நாங்க கண் கூடா பார்க்கிறோமே அதெல்லாம் இல்லைங்கிறியா?" மீண்டும் படபடத்தாள். மார்வின் அவளது ஆத்திரத்தை புன்னகையுடன் எதிர்கொண்டான், " மல்லி இன்னைக்கு நீங்க பார்க்கிற ஐரோப்பிய சமுதாய சமத்துவத்துக்கு நாங்க நன்றி சொல்ல வேண்டியது உங்க கிட்டதான்." 
அங்கிருந்த அனைவருமே சிறிது அதிர்ந்து நிமிர்ந்தனர். 
மார்வின் தொடர்ந்தான், "உங்க கிட்டன்னா....ஐரோப்பா காலனைஸ் செய்த ஆசிய, ஆப்பிரிக்க கண்ட மக்கள். மேலும் நிலத்தை பிடுங்கி கொன்னு குவிச்ச அமெரிக்க ஆஸ்திரேலிய பூர்விக வாசிகள்."


"மார்வின் உன்கிட்டேருந்து ரொம்ப தெரிஞ்சுக்கணும்னு தோணுது. கொஞ்சம் விவரமா சொல்றியா" என்றாள் லலிதா. 
மல்லியின் முகமோ சுருங்கி இருளடைந்திருந்தது. கையிலிருந்து பொம்மை பறிக்கப்பட்ட குழந்தை போல முகம் வாடியிருந்தது. மார்வினும் சேர்ந்து 'ஆமாஞ்சாமி' போட்டிருந்தால் அவள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பாள். ஆனால் இப்படி கதை போகும் என்று தெரிந்திருந்தால் மார்வினை இழுத்திருக்கவே மாட்டாள். சே.


மார்வின் நிதானத்துடன் தொடர்ந்தான். "செயிண்ட் அகஸ்டைனை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தின் முக்கியமான இறையியலாளர். அவர் பாணர்களுக்கு ஞான ஸ்நானமே கொடுக்க கூடாது என்று சொன்னார். அதே நேரத்தில் உங்கள் ஞான சம்பந்தர் திருநீலகண்ட யாழ்பாணரை வேள்வி சாலைக்குள்ளேயே மனைவியுடன் படுக்க வைத்தார் இல்லையா? உங்கள் வரலாறு முழுக்க சமுதாய கட்டுமானத்துக்கு எதிரான குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய குரல்கள் எங்கள் சமுதாய வரலாற்றில் சுவடில்லாமல் எரிக்கப்பட்டுவிட்டன. தலையாரிகள், தோல் வேலைகள் செய்பவர்கள், மாயனத்தில் குழி தோண்டுபவர்கள், நாவிதர்கள், சுகாதார தொழிலாளர்கள் இவர்களெல்லாம் தீண்டாமை கொடுமைக்கு ஐரோப்பாவில் ஆளாக்கப்பட்டதும் அதற்கு மத்தியகால கிறிஸ்தவ சட்டங்கள் துணை போனதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ட்டின் லூதர் போன்றவர்கள் கூட இத்தகைய சட்டங்களை எதிர்க்கவில்லை. உங்களுக்காவது வர்ணாஸ்ரமத்துல நாலு பிரிவுன்னா எங்களுக்கு ஏழு அடுக்குகள் இருந்துச்சு. கிறிஸ்தவ மதகுருக்கள் இதனை வானத்துல ஏழடுக்கு சுவர்க்கம் இருப்பது போல பூமியிலும் மனுசங்க ஏழு அடுக்குகளா அமைக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்பை நியாயப்படுத்தினர்."

மல்லி சிறிதும் தன் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. "இவ்வளவு பேசுறியே மார்ட்டின் ...ஆனா இன்னைக்கு இந்த அமைப்போட சுவடு கூட காணுமே...அதெல்லாம் கிறிஸ்தவத்தால தானே." மார்வின் அவளது சினந்த முகத்தை பார்த்து அன்புடன் புன்னகைத்தான். "மல்லி யு ஹாவ் அ ஒன் டிராக் மைண்ட். ஒரு நல்ல சமுதாய சேவகராக நீங்க போக விரும்பினீங்கன்னா நீங்க இதை மாத்திக்கணும். குறைந்த பட்சம் மத்தவங்களுக்கும் சிந்திக்க தெரியும். அவுங்களும் சமுதாய பொறுப்பு உள்ளவங்கதான் அப்படீன்னு கருதவாவது கத்துக்கணும். இல்லாம போனா ...இப்படிப்பட்ட கண்மூடித்தனமான சித்தாந்தங்கள்தான் இரண்டால் உலகப்போரின் போது அப்படிப்பட்ட அழிவை எங்க சமுதாயத்தின் மீது திணிச்சது மல்லி. அதனால ஒரு அக்கறையிலே சொல்றேன்." மல்லி சீறினாள்: "உன் அறிவுரைக்கு ரொம்ப நன்றி மார்வின், ஆனா அது எனக்கு தேவையில்லை." வேகமாக அங்கிருந்து வெளியேறிய மல்லியுடன் அவள் ஒரு உண்மையான சமுதாய அக்கறை கொண்ட பகுத்தறிவுவாதி என்கிற அவளை குறித்த பிம்பமும் சேர்ந்து தங்கள் மனங்களிலிருந்து வெளியேறியதை அனைவருமே சோகமான கனத்துடன் உணர்ந்தனர்.

ஆனால் அவ சொன்னதுலயும் உண்மை இருக்கிறமாதிரி இல்லை? கால்டுவெல் இங்குள்ள தலித்துகளுக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்னு 
ஜெயமோகன் கூட சொல்லியிருக்கிறாரே என்றாள் லலிதா. 
"ஜெயமோகனா யார் வரலாற்றாசிரியரா? "என்றான் மார்வின். 
கருணா கொஞ்சம் புன்னகைத்து "அவர் பெரிய போஸ்ட்மார்டன் எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர். அவர் மட்டும் இங்கிலீஷுல எழுதியிருந்தா நோபெல் பரிசு கிடைச்சுருக்கும்." என்றான். லலிதா "தொடங்கிட்டியா உன் ஜெமோ புராணத்தை' என்று இடித்தாள். மார்வின் பொத்தாம் பொதுவாக "ஆனா ஒன்ணு வளரும் நாடுகளின் மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மேற்கத்திய உலகம் தரவேண்டிய மரியாதையை தந்ததே இல்லை." என்றான். "நாங்க மட்டும்...." என்ற கருணா "ஆனா என்ன ஜெமோவுக்கு இதுவரை வசைதான் விழுந்திருக்கு யாரும் ஆட்டோ அனுப்புனதில்லை. அம்மட்டில் ஆள் அதிர்ஷ்ட சாலிதான்" என கூறி பெரிதாக சிரித்தான். லலிதா ரசிக்காமல் முகம் சுளிக்க மார்வின் புரியாமல் பேந்த பேந்த முழித்து "சரி அவரு கால்டுவெல் பத்தி என்ன சொல்லியிருக்காரு?" என்றான்.


"அவர்தான் தலித்துகளின் எழுச்சிக்காக முதன் முதலில் பாடுபட்டவர் என்று" எனக் கூறினாள் மல்லி. 
மார்வின் சிந்தனையில் ஆழ்ந்தான். 
பிறகு லலிதாவிடம் 'கால்டுவெல் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கு தெரியுமா?' என்றான். 
"தெரியுமே! அவர் புராட்டஸ்டெண்டு துறவி" என்றாள் லலிதா. 
"துறவி இல்லை லலிதா மிஷினரி" என்றான் மார்வின். 
"இரண்டும் ஒன்றுதானே?" என்றான் கருணா. 
இல்லை பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு புரோட்டஸ்டண்டு இங்கிலாந்தில் மிஷினரிகள் என்பது ஒரு தொழில். இன்னும் சொன்னால் நீங்கள் சேருகிற அமைப்பைப் பொறுத்து ஆதாயமான தொழில்" என்றான் மார்வின், 
"கருணா அன்னைக்கு நாம் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரை பார்க்க போனோமே ஞாபகம் இருக்கா?" 
"ஆமா கல்வெட்டு இராமச்சந்திரன்" என்றான் கருணா. 
"ஆமா அவ்ருகிட்ட நான் பிறகு பலதடவை பேசியிருக்கேன். அவரு ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சு சொன்னாரு என்ன தெரியுமா?"
"என்ன?"
"கால்டுவெல் ரப்பர் எஸ்டேட்டெல்லாம் கூட கன்னியாகுமரி மாவட்டத்துல வாங்கியிருக்காராம்."
"அட அப்படியா?" என்றான் கருணா. 
"ஆனா அதைவிட முக்கியம் அவரு எந்த அமைப்பை சேர்ந்திருந்தாரு அப்படீங்கிறதுதான்."
"எந்த அமைப்பு?" இது லலிதா.
"ஸொசைட்டி ஃபார் த பிராபகேஷன் ஆஃப் கோஸ்பல்-எஸ்பிஜி (Society for the Propagation of Gospel- SPG) இந்த அமைப்போட முக்கியத்துவம் என்ன தெரியுமா? இதுதான் பெரிய அளவில அடிமைகளை வைச்சிருந்த அமைப்பு. எஸ்பிஜி அமைப்போட தோட்டங்களில் வேலை செஞ்ச அடிமைகளோட நெஞ்சில் 'எஸ்' அப்படீங்கிற எழுத்தை சூடு வைக்கிறது வழக்கம். 1833 இல் பிரிட்டிஷ் அரசு அடிமை முறையை ஒழிச்சுது." 
லலிதா மெதுவாக "மார்வின் இந்த அடிமை அமைப்பு ஒழிப்புல நிச்சயம் சர்ச்சும் ஒரு பங்கு வகிச்சுருக்கணும் இல்லையா?"என்றாள். 
மார்வின் கனமான குரலில் சொன்னான், "அப்படி இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் லலிதா. ஆனால் உண்மை என்னவென்றால் சர்ச் குறிப்பாக எஸ்பிஜி, அடிமை முறையை ஆதரித்தது. சர்ச் தான் வைத்திருக்கிற அடிமைகளுக்காக நஷ்ட ஈடு கேட்டது." 
லலிதா பிரகாசமானாள். "மார்வின் தன்னிடம் அடிமைகளாக வேலை செஞ்சவங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கி கொடுக்கிற அளவுக்கு சர்ச்சுக்கு தார்மீக மனிதாபிமான எண்ணம் இருந்திருக்குல்ல அப்ப" என்றாள். 
மார்வின் திகைப்பான ஆச்சரியத்துடன், "நீ தப்பா புரிஞ்சிட்டே. சர்ச் தனக்கு அடிமைகளை விடுவிக்கிறதால ஏற்படுற நஷ்டத்துக்குதான் நஷ்ட ஈடு கேட்டுச்சே தவிர அடிமைகளுக்கு கொடுக்க அல்ல. ஒரு பிஷப்புக்கு மட்டும் அந்த காலத்துல 13000 பவுண்டுகள் கொடுத்தாங்கன்னா பார்த்துக்கயேன்." என்றான். 


அன்றைக்கு மதியம் விடுமுறை என்கிற செய்தியுடன் உள்ளே நுழைந்தாள் மல்லி. இப்போது பழைய சினம் எல்லாம் தீர்ந்து புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள். "ஏன் மதியம் நாம சிதம்பரம் கோவிலுக்கு போக கூடாது?" என்றாள் மல்லி. எல்லோரும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தனர். 
"அக்கா உங்களுக்குதான் சாமி நம்பிக்கையே கிடையாதே. 'சிதம்பரம் நடராஜன் ஆயிரம் வருசமா காலை தூக்கிக்கிட்டு நின்னாலும் கால் அவருக்கு வலிக்கலை. ஆனா மூணு நிமிசம் காலை அப்படி தூக்கிட்டு நின்னா உனக்கு வலிக்குது ஏன் தெரியுமா ஏன்னா நடராஜர் வெறும் கல்லு' அப்படீன்னு சொல்லுவ. உனக்கு ஏங்க்கா சிதம்பரம் போக ஆசை?. மாறிட்டியா நீ?" என்று பாதி ஆச்சரியம் பாதி சந்தோஷத்துடன் கேட்டாள் லலிதா. 
மல்லியின் முகத்தில் ஒரு நானோ விநாடிக்கு ஒரு பழிவாங்கும் ஆத்திரம் தோன்றி அது மறைந்து ஒரு விஷமப் புன்னகை இழைந்தோடியது. "இல்லை நடராஜ தத்துவம் அணுவின் இயக்கம் முதல் பிரபஞ்ச இயக்கம் வரை காட்டுற அழகான ஆன்மிக வெளிப்பாடுன்னு மாஞ்சு மாஞ்சு இந்து வெறியையும் மூடநம்பிக்கையும் டிஃபெண்ட் செய்து பேசுற மார்வினுக்கு கோவிலை போய் பார்த்தா சந்தோஷமா இருக்குமேன்னுட்டுதான் இந்த ஐடியா போட்டேன்." என்றாள் மல்லி. 
"எது எப்படியோ நல்ல ஐடியாக்கா!:" என மல்லியின் கழுத்தை கட்டி கிறீச்சிட்டாள் லலிதா. 
"ஆமா நாம கிளம்பலாம். மார்வின் நீயும் புறப்படு" என்றான் கருணா. மார்வினின் நெற்றியில் ஒரு சுருக்கக் கோடு தோன்றி மறைந்தது. தன் கண்களை கூர்மையாக மல்லியின் கண்களில் நிலைக்க விட்டு "ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் கேம் ப்ளான்" என்றான் மார்வின்.


அந்த நால்வர் குழு கோவிலை அடைந்ததது. கோவில் வாசலிலிருந்த கடையில் அர்ச்சனை தட்டு வாங்கிய மார்வின் அதனை லலிதாவிடம் கொடுத்து நீங்க போய் அர்ச்சனை செஞ்சிட்டு வாங்க நான் இங்கேயே நின்று கொள்கிறேன் எனக்கு கோபுர தரிசனம் போதும். என்றான். 
"ஏன்?" என்றாள் லலிதா. 
மல்லி "ஏன்னா இதுதான்" என லலிதாவின் கையை பிடித்து இழுத்து அவளைத் திருப்பி அங்கே தொங்கிக் கொண்டிருந்த போர்டின் முன் நிறுத்தினாள். "இந்துக்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை:" என்றது அந்த சாயம் வெளிறிய போர்டு. 
"இதைதான் நான் சொன்னேன் மார்வின்." என்றாள் வெற்றி புன்னகையுடன் மல்லி. ."எந்த சர்ச்லயாவது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாதுன்னு சொல்றாங்களா? எந்த மசூதியிலாவது முஸ்லீம்கள் மட்டும்தான் நுழைய முடியும் என தடை இருக்குதா? இங்க மட்டும் ஏன் இப்படி மதத்தின் பெயரால் மனுஷங்களை அவமானப்படுத்துறாங்க?" வார்த்தைகளில் ஒரு நியாயப்போராளியின் சீற்றமும் கண்களில் ஒரு ஏளனத்தையும் காட்டிச் சீறினாள் மல்லி.


மார்வின் நிதானமாக "உங்க சித்தாந்தத்தை நிரூபிக்க ஒரு பிரச்சனையை உருவாக்க என்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துறீங்கன்னு தெரியும், மல்லி. ஆனா நீங்க சொல்றதுல தவறு இருக்கு." என்றான் "உதாரணமா எந்த மசூதியிலாவது அப்படீன்னு சொன்னீங்களே...மெக்காவுக்குள்ள மாற்று மதத்தவங்க போறதுக்கு அனுமதி இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா மல்லி? ஏன் இலண்டன்ல உள்ள செயிண்ட் பால் சர்ச்சில பிற மதத்தவர் போய் வேடிக்கை பார்க்கணும்னா அதற்கு பவுண்ட்ல டிக்கட் வாங்கிட்டுத்தான் போக முடியும் தெரியுமா? இந்தியாவில உள்ள மசூதி சர்ச்சுக்கு போக உங்களுக்கு தடை இல்லைனா அவை பாரம்பரிய வழிபாட்டு தலங்கள் அப்படீங்கிறதை விட மத பிரச்சார கேந்திரங்களாகவும் செயல்படுது. ஆனா அங்க கூட பிறமதத்தவர் அனுமதிக்கப்படாத கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாட்டு வேலிகள் உண்டு. உதாரணமா ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல ஏசுவோட உடம்பையும் இரத்ததையும் சடங்கு ரீதியா மக்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. ஏசுதான் உலகத்துக்கே பொதுவானவராச்சே, எந்த கிறிஸ்தவனைக் காட்டிலும் ஏசுவை நான் நல்லா படிச்சு அவரை நேசிக்கிறேன் அப்படீன்னுட்டு நீங்க அதை முழங்கால்போட்டு கால்கடுக்க வரிசையில நின்னு வாங்கி புசிக்க முடியாது. அதுக்கு நீங்க ஞானஸ்நானம் வாங்கி அந்த சர்ச்சுல உறுப்பினராகணும். ஏன் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவன் கூட ரோமன் கத்தோலிக்க சர்ச்சுல கொடுக்குற ஏசுவோட சதையையும் இரத்ததையும் வாங்கி சாப்பிட முடியாது. இதை இன்னைக்கு வரை மேற்கில யாரும் கேள்விக்குள்ளாக்குனதில்லை. ஏன்னா இதெல்லாம் பாரம்பரிய மரபு வேலிகள் அப்படீங்கிற புரிதல் மேற்கில் இருக்கு. ஆனா இங்கே உள்ள சர்ச்சையும் மசூதியையும் நீங்க ஒப்பிடணும்னா அவை உருவான காலத்தோட ஒட்டி இந்தியாவில் உருவான இராமகிருஷ்ண இயக்க ஆலயங்கள் முதல் இஸ்கான் ஆலயங்கள், அக்ஷர்தாம் ஆலயங்கள் வரை பலதை காணலாம். ஏன் பாரம்பரியமான உங்க திருப்பதி ஆலயத்தில் கூட அன்னிய மதத்தவங்களை அனுமதிக்கிறாங்க இல்லையா? குருவாயூரில் ஏசுதாஸை அனுமதிக்காதப்ப நீங்க இந்து வெறியர்கள் அப்படீன்னு சொல்ற அமைப்புகள் கூட அதை எதிர்த்தாங்க இல்லையா? சரி அண்மையில தீண்டாமை கொடுமையிலிருந்து மீள முடியாத கிறிஸ்தவர்கள் இந்துக்களாக முன்வந்தப்ப அந்த சடங்குகளை இந்து கோவிலில் வைத்து நடத்த பகுத்தறிவுவாதிகள் அப்படீன்னு தங்களை சொல்லிக்கொள்கிறவங்க கட்டுப்பாட்டில இருக்கிற அறநிலையத்துறையே அனுமதி மறுத்திருக்கு. ஆனா இவ்வளவு பேசுற உங்ககிட்ட இருந்து இன்னைக்கு வரை இதுக்கு ஒரு முனகல் கூட ஏற்பட்டதில்லை. இதில் இன்னொரு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்கணும் இதோ இங்கே நிக்கிற இந்த ஆலயம் அன்னிய மத தாக்குதல்களுக்கு ஆளாயிருக்கு. கோவிலுக்குள்ள அதன் சிலைகளை காக்க சித்திரவதைகளையும் படுகொலைகளையும் அந்த தீட்சிதர்கள் தாங்கியிருக்காங்க. இன்னைக்கு தமிழருடைய ஒரு முக்கிய கலாச்சார ஆன்மிக அடையாளமா உலகமெங்கும் பேசப்படுற உலோக வார்ப்பு சோழகால நடராஜ சிலைகள் நமக்கு கிடைச்சுருக்குன்னா அதுக்கு பின்னாடி அவுங்க சிந்தின இரத்தமும் செய்த தியாகமும் இருக்கு, நான் ஒண்ணும் உங்க நாட்டு புரோகித அமைப்பு சுத்தமானது அப்படீன்னு சொல்லலை. அதுலயும் திருத்தப்பட வேண்டிய குறைகள் ரொம்ப இருக்கு. ஆனா அதை திருத்த முடியும். இப்படி தேவையில்லாத தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒப்பீடுகள், திட்டமிட்ட நாடகபாணி பிரச்சனைகள், ஒட்டுமொத்தமாக இவுங்களை வில்லனாக காட்டுற வெறுப்பியல் இனவாதக் கோட்பாடுகள் இதெல்லாம் இல்லாமலே அதனை செய்ய முடியும்."


"இவ்வளவு சொல்ற மார்வின் இப்ப உனக்கு நடராஜர் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா? இதோ நம்பிக்கை இல்லாத என்னால உள்ளே போகமுடியும் ஆனா நம்பிக்கை உள்ள உன்னால உள்ளே போக முடியாது. இதுக்கு என்ன சொல்ற நீ?" 


"மல்லி. எனக்கு இந்து தருமம் எவ்வளவோ பிடிச்சுருக்கு. ஆனாலும் நான் இன்னும் கிறிஸ்தவன் தான். நான் இந்துவா மாறினா அந்த சான்றிதழைக் காட்டி நிச்சயமா கோவிலுக்குள்ளே போவேன். ஆனா வெள்ளைத் தோல் கொண்ட ஒருத்தன் இந்துவாக மாறினா நான் எங்க நாட்டில திரும்பி போகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." 


கருணா அதிர்ந்து போய் கேட்டான், " என்ன சொல்ற மார்வின், மேற்கில் மத சுதந்திரம் ரொம்ப இருக்கே நீ போய் இப்படி சொல்றியே" 


"கருணா நான் இந்துவாக மாறி இந்து பெயரோட அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ போன பொதுவாக என்னை எல்லோரும் தீண்டத்தகாதவன் போலத்தான் பார்ப்பாங்க. அதனை சமாளிக்கிற தைரியம் எனக்கு இருக்கான்னு தெரியல்லை. ஏன் இந்து சடங்குகளில் பங்கு பெற்றதுக்காக அரசாங்க வேலையை விட்டுக் கூட ஒரு வெள்ளைக்காரரை அரசாங்கம் நீக்கியிருக்கு தெரியுமா?"


"நிஜமாகவா?"


"ஆமா கார்ல் பெலே அப்படீங்கிற ஆஸ்திரேலிய வெளிநாட்டு இலாகா அதிகாரி தைப்பூசம் மாதிரி இந்து திருவிழாக்களில் பங்கு பெற்றதுக்காக அவரை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. இன்னைக்கு அவர் தன் பேரை வடிவேலான்னு மாத்திருக்காரு அவருட சுயசரிதை கூட வெளியாயிருக்கு. இது ஒரு சின்ன அதிர்வை கூட மேற்கத்திய ஊடகங்களில் ஏற்படுத்தலை. தனியாளா மதம் மாறுறது அதுவும் குறிப்பா இந்து தருமத்துக்கு மாறுறது மாறிட்டு மேற்கில ஜீவிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒண்ணு நான் ஏதாவது இஸ்கான் மாதிரி குழுவில் இணையணும். அதுலயும் கூட பிரச்சனை இருக்கு. மேற்கத்திய ஊடகங்களில் திரும்ப திரும்ப சின்ன குழந்தைங்களோட காமிக்ஸ் முதல் இப்படிப்பட்ட அமைப்புகளை வில்லத்தனமா சித்தரிக்குறாங்க. இல்லைனா ஸ்டாம்ப் கலெக்ஷன் மாதிரி இதை ஒரு ஹாபியா என்னைக்குன்னாலும் தூக்கி போடுற மாதிரி வைச்சுக்கணும். எனக்கு அதுக்கு மனசும் வரலை. மதம் மாறுற அளவு துணிவும் இல்லை. அப்படி துணிச்சலா நான் இந்து அப்படீன்னு என்னால சொல்ல முடியாத வரை எனக்கு இந்த கோவிலுக்குள்ள - அன்னிய மத படையெடுப்புகளிலிருந்து இவ்வளவு உயிர் தியாகம் செஞ்சு காப்பாத்துன கோவிலுக்குள்ள- ஒரு அன்னிய மதத்தினா நுழைய எனக்கு அருகதையோ உரிமையோ இல்லை அப்படீன்னுதான் நான் நினைக்கிறேன். அதுனால நீங்க உள்ளே போய் கும்பிட்டுட்டு வாங்க. நான் இங்க நின்னே அடுத்த முறையாவது தன்னுடைய எதிரிகளுக்காக கூட வாதாடுற இந்த பண்பாட்டுல ஒரு இந்துவா பிறக்க ஒரு வாய்ப்பை கொடூன்னு இங்க நின்னே கோபுரத்தை பார்த்து வேண்டிக்கிறேன். எனக்கு கோபுர தரிசனமே போதும்." என்றான் மார்வின். 


மார்வின் வெளியே கோவிலைப் பார்த்தபடி நிற்க மல்லியைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குள் சென்றனர். மல்லி வெளியே நின்று கொண்டிருந்தாள். அவளின் இயக்க தோழர்கள் சிலர் அங்கே வந்து அவளோடு சேர்ந்து கொண்டனர். லேசாக மல்லியின் முகம் மார்வின் பக்கம் திரும்பியதையும் அதைத் தொடர்ந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் அடிக்கடி அவனை திரும்பி பார்ப்பதையும் மார்வின் கண்டான். அவர்களின் முகங்களில் ஒரு வித வெறுப்பு துல்லியமாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் கோவிலுக்குள்ளிருந்து லலிதாவும் கருணாவும் வந்தார்கள். 


அவர்களிடமிருந்து பிரசாதத்தை பயபக்தியுடன் பெற்றுக்கொண்ட மார்வினிடம் கருணா மெதுவாக 'ஆமா காமிக்ஸ¤ல ஏதோ இந்து மதம் பத்தி மோசமாக போட்டிருக்குன்னு சொன்னியே அதென்ன?" என்றான். 


கருணா ஒரு காமிக்ஸ் பைத்தியம். பழைய இந்திரஜால் காமிக்ஸ்கள் முதல் இன்றைய முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் வரை வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்திருக்கிறான். "உனக்கு தெரியாம இதெல்லாம் ஒருநாள் விலைக்கு போடத்தான் போறேன் என அவனுடைய அம்மா 
கருவுவதும் "அப்படி நடந்தா நான் வீட்டைவிட்டே போயிடுவேன்" என அவன் உறுமுவதும் மாதாந்திர சடங்காக வீட்டில் மாறிவிட்டிருந்தது. 


மார்வின் அவனிடம் "நீ ·பேண்டம் காமிக்ஸ் படிச்சிருக்கியா?" எனக் கேட்டான். 
"படிச்சென்ன கட்டுகட்டா அடுக்கியே வைச்சுருக்கேன்." 
" அப்போ உனக்கு ·பேண்டமோட புகழ் விளிகளெல்லாம் தெரிஞ்சுருக்குமே" இது மார்வின்.
"ஆமா" 
"சொல்லேன்" 
"ம்ம்ம் மாயாத்மா, அப்புறம் ஆங்... கீழ்திசை இருளின் காவலன்...அப்புறம்" கருணா கொஞ்சம் யோசித்தான்.
"ரைட் அதுதான் கீழ்திசை இருள் அப்படீங்கிறது இந்து மதத்தைதான் குறிக்குது. மட்டுமல்ல இஸ்கானை வில்லனா சித்தரிச்சு கூட ·பேண்டம் 
காமிக்ஸ் வந்திருக்கு. தெரியுமா?"
"அப்படியா?" 
"ஆமா நாமம் போட்ட கழுகுகள் அப்படீன்னு ஒரு கூட்டம் கொள்ளையடிக்கும். அவுங்களை ·பேண்டம் வேட்டையாடுவான்.அவுங்க எல்லாமே மொட்டையடிச்சு நாமம் போட்டிருப்பாங்க. இஸ்கான் மாதிரியே." 
அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வந்த லலிதா அதிர்ந்து "அடக்கடவுளே இது இலக்கியத்திலும் படங்களிலும் யூதர்களை தொடர்ந்து வில்லன்களாக காட்டிட்டு வந்த மாதிரியில்ல இருக்கு" என்றாள் 
"ரொம்ப சரியா சொன்னே லலிதா. இது எங்க மேற்கத்திய உலகின் மத நிறுவனங்களுக்கு கை வந்த கலை. ஒரு மக்கள் கூட்டத்தை முழுக்க வில்லன்களாக காட்டுறது. அன்னைக்கு யூதர்கள். இன்னைக்கு மேற்கத்திய சமுதாயத்தில் இந்துக்கள் மற்றும் இதர விக்கிரக ஆராதனையாளர்கள். இந்தியாவில் குறிப்பா தமிழ்நாட்டில் பிராம்மணர்கள். ஏன் இராமகிருஷ்ண மிஷன் பெண்குழந்தைகளை விபச்சாரத்துக்கு விற்பதா பட்டும் படாமலும் அவமதிப்பு கேஸ் போட முடியாத மாதிரி ஆனா யாரை சொல்றாங்க அப்படீன்னு தெரியுற மாதிரி எழுதியிருக்கிறாரு கத்தோலிக்க அடிப்படைவாதியான டாமினிக் லாப்·பயர். இப்படி ஒரு அமைப்பை பத்தி அபாண்டமா பழி சொல்றவங்களை அதுவும் அன்னியரா இருந்தா அழுகின தக்காளியால அடிப்பாங்க வெளிநாட்டில. ஆனா உங்க நாட்டில அந்த லா·ப்பயர் கிட்டத்தான் உங்க நாட்டை பத்தி கட்டுரை எழுதி வாங்கி பிரசுரிக்கிறாங்க உங்க முன்னணி ஆங்கில பத்திரிகைகள்." 
"அதாவது நாசிகளின் யூத வெறுப்புக்கும் திராவிட இயக்கங்களின் பிராம்மண வெறுப்புக்கும் அடிப்படையில் ஒருவித இனவெறுப்பு பிரச்சாரம் இருப்பதாகவா சொல்ற மார்வின்" என்றான் கருணா. 
அதற்கிடையில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட மல்லி "சமூக நீதிக்கான போராட்டத்தை இனவெறுப்பு அப்படீன்னு சொல்றவங்க அறியாமையால பேசுறாங்களா அல்லது இது திட்டமிட்ட மேல் சாதி நயவஞ்சகமா அப்படீங்கிறதுக்கு காலம் பதில் சொல்லும்" என்றாள்.


அவர்கள் வேறு சர்ச்சைக்கிடமில்லாத விஷயங்களைப் பேசியபடி விடுதியை அடைந்தனர். பிறகு சோம்பலான மதியம் முடிந்து மாலையில் காண்டீனில் மீண்டும் சேர்ந்தனர். அப்போதுதான் பரணி அங்கே நுழைந்து ஹாஸ்டல் டே கொண்டாட வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டினாள். பாட்டு நடனம் இத்யாதிக்கு பிறகு ஒரு நாடகத்தையும் அதில் போடலாம் என முடிவாயிற்று.


மல்லியின் முகம் பிரகாசமானது. கண்கள் குறுகுறுத்தன. அதைப் பார்த்த வசந்தி "மல்லி அக்கா உங்களுக்கு ஏதோ செம ஐடியா வந்திருச்சுன்னு தோணுது. சொல்லுங்கக்கா நாங்க டெவலப் செஞ்சு போடுறோம்." என்றாள். மார்வின் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். மல்லி சொன்னாள். "சூப்பர்க்கா! பின்னிட்டீங்க" என்றாள். மார்வின் அமைதியாக "அபத்தமாக இருக்கு" என்றான். மல்லி பட்டென மார்வின் பக்கம் திரும்பினாள். 
"என்ன அபத்தத்தை கண்டிட்ட மார்வின்? சரிதான் நீ ஹிந்து வெறியங்களோட சேர்ந்து பழமைவாதியா மட்டும்தான் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா ஆணாதிக்க வாதியாகவும் ஆயிட்ட போல."
மார்வின் புன்முறுவலுடன் வசந்தியைப் பார்த்து "வசந்தி ஒரு சின்ன சந்தேகம். மல்லியோட அந்த நாடக ஐடியாவில உங்களுக்கு என்னது அவ்வளவு சிறப்பா பட்டுது?" என்றான்.
"என்ன மார்வின் இப்படி கேட்டிட்ட....ராமனும் தானே சீதையை விட்டுட்டு தனியா அத்தனை வருஷம் இருந்தான். அப்ப அவனும்தானே தீக்குளிக்கணும். இதை சீதை வாயாலயே கேட்க வைக்கிறது ஒரு பெண்ணிய புரட்சி பார்வை இல்லையா?" என்றாள்.
"மறுவாசிப்பு - குறிப்பா இந்த நாட்டில ஆணாதிக்கத்தை ஏற்படுத்துற இராமாயணம் மாதிரி நூல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியேயாகணும். சீதை தீக்குளிச்சதாலதான் இன்னைக்கும் இந்த நாட்டில பெண்கள் தீக்குளிக்கவைக்கப்படுறாங்க." என்றாள் மல்லி.
மார்வின் மல்லியை முழுமையாக புறக்கணித்து வசந்தியைப் பார்த்து கேட்டான், "அப்படீன்னா சீதை ஒரு ஆணுக்கு அடங்கி நடக்கிற ஒரு பாத்திரமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள் அப்படீங்கறீங்க இல்லையா?"
"அதிலென்ன சந்தேகம் மார்வின். நிச்சயம் அப்படித்தான்."
"ம்ம்ம்...நீங்க இராமாயணத்தை படிச்சிருக்கீங்களா வசந்தி?..."
"முழுசா படிச்சாத்தான் அது முன்வைக்கிற மாரலை குறிச்சு பேசணும்னு இல்லை வசந்தி" என்றாள் மல்லி.


மார்வின் மீண்டும் மல்லி பேசியது காதிலேயே விழாதமாதிரி தொடர்ந்தான், "தொடக்கத்திலிருந்தே சீதை தன் முடிவுகளின் படி சுதந்திரமா நடக்கிற பெண்ணாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் இராமன் வனவாசத்துக்கு தன்னை கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னதும் ரொம்ப கடுமையாக இராமனைத் திட்டி தன்னை கூட அழைத்து போக செல்கிறாள். அப்புறம் மாயமானை தேடி இராமன் சென்ற பின்னர் தனக்கு காவலாக நின்ற இலட்சுமணனை மிக மோசமாக திட்டுகிறாள். இங்கேதான் முதன் முதலாக தான் தீக்குளித்துவிடுவதாக இலட்சுமணனை அவள் மிரட்டி இராமனை தேடி அனுப்பி வைக்கிறாள். இதிலெல்லாம் அவளுடைய சுய தீர்மானத்தின் உறுதியும் தன் காதல் கணவனான இராமன் மீது அவள் வைத்திருக்கும் முரட்டுத்தனமான அன்பும் வெளிப்படுகிறதேயல்லாமல் அவளுடைய அடங்கி போகிற தன்மை தெரியவில்லை. பிறகு இராமனின் கடுமையான சொற்களைக் கேட்டு அவள் தானாகவே இலட்சுமணனிடம் நெருப்பு மூட்ட சொல்கிறாள். எந்த இலட்சுமணனை தான் தீக்குளித்துவிடுவதாக சொல்லி வசை பாடினாளோ அதே இலட்சுமணனிடம் தனக்காக நெருப்பு மூட்ட சொல்கிறாள். இந்த தருணத்தில் இராமன் தீக்குளிக்க சொல்லவில்லை மாறாக அமைதியாக இருந்துவிடுகிறான். பின்னர் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதற்காக சீதையிடம் தசரதனே வந்து மன்னிப்பு கேட்பதாக இராமாயணம் சொல்கிறது. அதற்கு பிறகு இராமன் அயோத்தியில் தன் இரு குழந்தைகளுக்கும் தாயான சீதையிடம் தீ குளிக்க சொல்லும் பொழுது சீதை அந்த கோரிக்கையை மறுத்துவிடுவதுடன் இராமனை விட்டு முழுமையாக பிரிந்துவிடுகிறாள். ஆக, எந்த இடத்திலும் இராமாயணம் சீதையை அடங்கி நடப்பவளாக காட்டவில்லை என்பதுடன் பெண்ணிய நோக்கில் கூட மிக ஆதர்சமான ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அத்துடன் தீக்குளிக்க சொல்லும் இராமன் வால்மீகி முதல் அனைவராலும் கண்டிக்கப்படுவதாகவே காட்டுகிறது. இறை அவதாரமான ஸ்ரீ இராமன் கூட இந்த மண்ணின் புதல்வியான சீதையை தன்னிச்சைப்படி நடத்திவிட முடியாது என்பதனை நீங்கள் மறுவாசிப்பெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி வாசித்தே உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் மல்லி சீதாயணம் அப்படீன்னு சொன்னதுக்கு அவ்வளவு பரவசம் அடைஞ்சீங்களே...வான்மீகி முனிவரே இராமயணத்தை என்னன்னு சொல்றாரு தெரியுமா?"

"என்ன சொல்றாரு?"

"காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மகத்' அப்படீன்னுதான் குறிப்பிடுறாரு."


"அப்படீன்னா?"


"அதாவது இராமயண காவியம் அப்படீங்கிறதே சீதையின் மகத்தான சரித்திரம்தான் என்பது வான்மீகியின் வாக்கு"


வசந்தி அசந்து போனாள், "மார்வின் நாங்க படிச்சு தெரிஞ்சிருக்க வேண்டியதை நீ சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியதா இருக்குது. ஏன்க்கா...மார்வின் சொன்ன மாதிரி இராமாயணத்தை அப்படியே போட்டிடலாமே அதிலேயே நாம சொல்ல நினைக்கிற விஷயங்களெல்லாம் நாம சொல்ல நினைச்ச விதத்தை விட ஆழமா அழுத்தமா அழகா இருக்கே...:" என்றவள் மல்லியின் சூடான பார்வையை தாங்க முடியாமல், "அது இல்லக்கா.. அதாவது அப்படியே செஞ்சா எதுவும் பிரச்சனை வராதில்லன்னு நினைச்சேன்..." என்று இழுத்தாள்.
மார்வின் சிரித்தபடியே, "சரி நீங்கதான் மதச்சார்பின்மைக்காக பேசுறவங்களாச்சே...ஏன் இராமயணத்தோட நிக்கணும்...கிறிஸ்தவ இலக்கியங்களை கூட மறுவாசிப்பு செய்யலாமே...கன்னி மேரி கூட சந்தனமேரி அப்படீன்னு உங்க பண்பாட்டில ஒன்றி ஒண்ணா சேர்ந்துக்க ஆசைப்படுற சூழ்நிலையில, ஏன் இப்படி ஒரு மறுவாசிப்பு செய்யக் கூடாது?" என்றான்.
வசந்தி "சொல்லுங்க மார்வின் முயற்சி பண்றோம்..." என்றாள்.
மார்வின் சொன்னான். "அட இது கூட நல்லாத்தானே இருக்கு" என்றாள் வசந்தி. மல்லி ஏதோ ஒப்புக்கு "ஆமா ஆமா" என்றாள். ஆனால் ஏனோ அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பதனை அவள் இருண்ட முகம் காட்டியது.


ஹாஸ்டல் டே.
"பேரிலக்கியங்களில் பெண்ணிய மறுவாசிப்புக்கள்" என தலைப்பிட்டு நடந்த அந்த நாடகத்தின் முதல் காட்சியில் சீதை இராமரை தீக்குளிக்க சொன்னாள். மாணவியர் கூட்டம் உற்சாகத்தில் கிறீச்சிட்டது. எங்கோ பின்னாலிருந்து ஒரு ஆட்சேபக்குரலும் ஒரே ஒரு துண்டு செங்கல்லும் வந்து விழுந்தது. "இந்திய அரசியல் நிர்ணய சட்டம் எங்களுக்கு தந்துள்ள சுதந்திரத்தை ஒரு துண்டு செங்கல்லால் ஒன்றும் செய்துவிட முடியாது" என வீர வசனம் பேசினாள் மல்லி. 


அப்போது கூட்டத்திலிருந்து நழுவியவன் முன்பு மல்லியுடன் சிதம்பரம் கோவிலின் முன்னால் பேசிய அவளது தோழர்களில் ஒருவன் என்பதனை மார்வின் கவனித்தான்.
அதேநேரம் அந்த நாடகத்திலேயே அடுத்த காட்சி அரங்கேற திரை மூடி பின் விலகியது. அங்கே ஒரு இளம் பெண் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். 
அவளின் சிவந்த முகத்தின் மீது ஒரு நிழல் படர்ந்தது.
அவள் நிமிர்ந்து நோக்கினாள்.
"இதோ உம் அடிமை உம் சித்தப்படியாகவே ஆகட்டும் என கூறுவேன் என்று எதிர்பார்க்கிறாயா கபிரியேல். போ. போய் உன் யஹீவா தேவனிடம் சொல்லு. என்னுள் ஒரு குமாரத்தியை அன்றி குமாரனை அளிக்க பரிசுத்த ஆவி என்மேல் படர வேண்டாம் என சொல்லு. ஏன் காபிரியேல் ஆதி தோட்டத்திலிருந்து மனிதனை வெளியேற்ற காரணமானாள் என்று சொல்லியல்லவா ஆதிப்பெண் முதல் இன்றுவரை பெண்களை அடிமையாக ஆக்கிவைத்திருக்கிறது யஹீவாவின் மதம். ஆனால் இன்றைக்கு உலகை ஆளுகிற வேட்கை கொண்ட ஒரு மதத்தை உருவாக்க ஒரு குமாரனை அனுப்ப மட்டும் யஹீவாவுக்கு ஒரு கன்னியின் கர்ப்பப்பை தேவை படுகிறதா காபிரியேல். ஒரு ஆண் கடவுள் அளிக்கப் போகிற ஆண் வாரிசினை கர்ப்பப்பைக்குள் ஏற்றெடுக்க ஒரு ஆண் தூதனிடம் மண்டியிட்டு 'ஆண்டவரே இதோ உம் அடிமை ' என கூறுகிறவளல்ல இந்த மரியாள் என்று சொல்லு போ' என்றாள் அந்தப் பெண்.


மாணவிகள் தாங்கமுடியாத உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். சில விசில் சத்தங்கள் கூட கேட்டன. 


அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தடாலடியாக போலிஸ் உள்ளே நுழைந்தது.
ஏதோ பெரிய கலவரத்தை அடக்க வந்திருப்பது போல ஆயுதபாணிகளாக காவலர்கள் உள்ளே நுழைந்து சுற்றி வளைத்து நின்றனர். 
"மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக இப்படி நாடகம் நடத்த அனுமதிக்க முடியாது" என மாணவிகளின் உற்சாக கூச்சலுக்கும் மேலாக போலிஸ் அதிகாரியின் அதிகார குரல் கேட்டது. "இந்த நாடக நடிகர்கள் மற்றும் இதனைப் போட்டவர்களை உடனே கைது செய்யணும் யார் அவுங்க?"
வசந்தி விரைத்துப் போய் நின்றாள். மரியாளுக்கும் காபிரியேலுக்கும் கால்கள் வெடுவெடு என நடுங்கின.
மார்வின் முன்னால் போய் அந்த காவல்துறை அதிகாரியிடம் "சார் நான் தான் போட்டேன். நான் தான் வசனம் எழுதினேன். முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த மாணவ-மாணவிகளை ஒன்றும் செய்ய வேண்டாம். என்னை மட்டும் அரெஸ்ட் செய்யுங்கள்." என்றவன், :"அதற்கு முன்னதாக நான் மைக்கில் மாணவர்களை அமைதி காக்க சொல்லிவிட்டு வந்துவிடுகிறேனே." என்றான்.


சரி என தலையாட்டினார் அதிகாரி. மனதுக்குள் இந்த வெள்ளைக்காரனை அரெஸ்ட் செய்தால் நாளைக்கு ஏதாவது தூதரக பிரச்சனைகள் வந்துவிடக்கூடாதே என்கிற கவலை லேசாக தலை தூக்கியது.


மார்வின் மைக்கை பிடித்தான், "மாணவ மாணவிகளே இப்போது இங்கு நடந்த நாடகம் முழுக்க முழுக்க என்னுடைய விவிலிய மறுவாசிப்புத்தான் என்றாலும், மல்லி இங்கே தீக்கு இரையாகும் பெண்களுக்கு காரணம் சீதை தீக்குளித்தது தான் என்று சொன்ன மாதிரி நான் மேற்கத்திய உலகில் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகளும் டீனேஜ் பெண்கள் கர்ப்பமாவது அதிகமாக இருப்பதற்கும் காரணம் கன்னி மேரி என்கிற கதாபாத்திரம் வழிபடப்படுவதுதான் என சொல்ல மாட்டேன். நன்றி" என்றான்.


கரகோஷம் அந்த அரங்கை பிளந்தது.


மார்வின் அமைதியாக காவல்துறை அதிகாரியுடன் சென்று ஜீப்பில் ஏறினான்.


-----------------------------------------------------------


படித்து முடித்த ஆசிரியர் அந்த தாள்களை பொறுமையாக ஒவ்வொன்றாகக் கிழித்து அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். எதிரில் நின்ற உதவி ஆசிரியர் பதறினார், "என்ன சார், ஏதோ லாங்குவேஜ் அப்படி ஓகோன்னு இல்லாட்டாலும் நம்ம மாகஸீன்ல வந்த அந்த தொடர்கதையை ஓரளவு சரியாகத்தானே கவுண்டர் பண்ணி எழுதியிருந்தான் சார், போடலாம்னு நினைச்சேனே." 
உதவி ஆசிரியரை ஊடுருவிப் பார்த்தார் ஆசிரியர், "தேவையில்லாத வம்பு இது. இந்து மதத்தை பத்தி என்னா வேணும்னாலும் எழுதலாம். ஆனா வேற சில விஷயங்கள்ல தேவையில்லாம கை வைச்சோம்...பத்திரிகை ஆபிஸ் நொறுங்கிடும். சிஎம் முதல் பி.எம் பிரஸிடண்ட் வரை நாம் பதில் சொல்ல வேண்டி வரும். இந்த பத்திரிகையையே சீல் வச்சுருவாங்க. இதோ பாருங்க தம்பி இந்த நிறுவனத்துல நாம புதுசா தொடங்கப்போற அடுத்த பிராஜக்ட்டுக்கு உங்களை ஹெட்டா போடாலாம்னு இருக்கோம். போங்க போய் வேலையை பாருங்க. தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வராதீங்க. அடுத்த தடவை இப்படி படைப்புகள் வந்தா நீங்களே கிழிச்சு 
குப்பைத்தொட்டில போட்டுருங்க. என்னோட டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க. போங்க." 
உதவி ஆசிரியர் அமைதியாக தலைகுனிந்து அந்த ஏஸி அறையிலிருந்து வெளியே சென்றார். சுவரில் மொட்டைத்தலையின் மேல் ஒற்றைக்கொம்பு மேலே எழ பத்திரிகையின் சின்னமாக விளங்கிய முகம் விகாரமாக இளித்தது. ஆசிரியர் தன் குஷன் சீட்டில் சிறிதே நெட்டு விட்டு நெளிந்தார்.


அவருக்கு முதுகில் ஏதோ உறுத்தியது. கையால் முதுகில் தடவ ஏதோ ஒன்றை அங்கே அசௌகரியமாக உணர்ந்தார்.


முள்ளாகக் குத்தி சுமையாக உறுத்தியது அவரின் முதுகெலும்பு! 


பணிவன்புடன்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஏசுவின் உருவப்பட நெற்றியிலிருந்து எண்ணை வடிவதாக பரபரப்பு
 

ஏசுவின் உருவப்பட நெற்றியிலிருந்து எண்ணை வடிவதாக பரபரப்பு
வால்பாறை, மே. 19-
 
வால்பாறையை அடுத்துள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் லலிதா. இவரது வீட்டில் 12 ஆண்டுகளுக்கு முன் வில்லோனி எஸ்டேட் பகுதியை சேர்ந்த வின்சென்ட் வரைந்து கொடுத்த ஏசுவின் திரு உருவப்படம் வைத்துள்ளார்.
 
இந்த ஏசுவின் படத்தில் ஏசுவின் நெற்றியில் இருந்து எண்ணை வடிவதாக பரபரப்பு கிளம்பியது. இதனை லலிதாவின் மகன் கர்க்கின் பிரதாப் பார்த்து தொட்டு வணங்கினார். அப்போது தாரை, தாரையாக எண்ணை வடிந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த தகவல் அக்கம் பக்கத்தினரிடம் பரவியது. அவர்கள் விரைந்து வந்து அதிசயமாக பார்த்து செல்கிறார்கள். சோலை யார் அணை புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஜஸ்டினும் வந்து பார்த்தார். ஏசுவின் பட நெற்றியில் இருந்து வடியும் எண்ணையை சிறு கண்ணாடி டம்ளரில் சேகரித்து வைத்து இருப்பதாகவும், அதில் இருந்து நறுமணம் வருவதாகவும் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் ஷேக்கல் முடி, சோலையார் அணை, உருளிக்கல், கல்யாணப் பந்தல், மற்றும் வால்பாறை வட்டாரப் பகுதிகளிலும், கேரள மாநிலம் மளுக்கப் பாறை பகுதியிலும் பொது மக்களிடம் அதிசயமாக பேசப்பட்டு வருகிறது
.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2011_003_059_002.jpg?w=365&h=486

01_09_2011_003_048-vijay-siva.jpg?w=356&h=441



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22459968-pondy-church-rc.jpg?w=640&h=905



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Breaking India

Western Interventions in Dravidian and Dalit Faultlines

Publisher: Amaryllis. Pages: 640. Price: 695 INR/$20.00 US

India’s integrity is being undermined by three global networks that have well-established operating bases inside India: (i) Islamic radicalism linked with Pakistan, (ii) Maoists and Marxist radicals supported by China via intermediaries such as Nepal, and (iii) Dravidian and Dalit identity separatism being fostered by the West in the name of human rights. This book focuses on the third: the role of U.S. and European churches, academics, think-tanks, foundations, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest of India. The book is the result of five years of research, and uses information obtained in the West about foreign funding of these Indian-based activities. The research tracked the money trails that start out claiming to be for “education,” “human rights,” “empowerment training,” and “leadership training,” but end up in programs designed to produce angry youths who feel disenfranchised from Indian identity.

The book reveals how outdated racial theories continue to provide academic frameworks and fuel the rhetoric that can trigger civil wars and genocides in developing countries. The Dravidian movement’s 200-year history has such origins. Its latest manifestation is the “Dravidian Christianity” movement that fabricates a political and cultural history to exploit old faultlines. The book explicitly names individuals and institutions, including prominent Western ones and their Indian affiliates. Its goal is to spark an honest debate on the extent to which human rights and other “empowerment” projects are cover-ups for these nefarious activities.


Authors

Rajiv Malhotra

Rajiv Malhotra is a public intellectual on current affairs, world religions and cross-cultural encounters between East and West. His career has spanned the corporate world as a senior executive, strategic consultant and successful entrepreneur in the information technology and media industries. His Infinity Foundation, seeks to foster a better global understanding of Indian civilization. Rajiv’s work argues that the dharma offers a complex and open framework for a genuine dialogue among diverse peoples, rather then a zero sum game. He shows the limitations of globalization when it is a parochial imposition of Western paradigms. He is well known as a speaker and writer for a wide audience and is frequently interviewed and invited to deliver keynote addresses. He serves on the Board of Governors of the India Studies program at the University of Massachusetts, and served as a Chairman for the Asian Studies Education Committee of the State of New Jersey.

Aravindan Neelakandan

Aravindan Neelakandan has worked for the past decade with an NGO in Tamil Nadu serving marginalized rural communities in sustainable agriculture. He was awarded a junior research fellowship in cultural economics by the India’s Ministry of Tourism to research the economic potentials of the neglected ruins in Kanyakumari district, in southern Tamil Nadu. These experiences provided him with in-depth knowledge of the history and sociology of Tamil people. He is also a popular science writer in Tamil and a columnist with UPI-Asia, a leading news portal. He is part of the editorial team of highly popular Tamil web portal www.tamilhindu.com.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Deceptive conversions through Christian charity organizations – need for government investigations

Conversations with foreign-funded charity

Sun, Oct 12 02:58 AM

http://in.news.yahoo.com/48/20081012/1241/top-conversations-with-foreign-funded-ch.html

Has the time come for the Government to set up a National Commission to investigate religious conversions in India? Certainly. Let the Nation know how many conversions have taken place from-and into-Hinduism, Islam, Christianity, Sikhism and other faiths since 1947. Let the commission throw light on the districts where, and how, significant changes in religious demography have taken place, and whether conversions have created resentment and social disharmony in their wake.

An unbiased commission would reveal three irrefutable facts: (1) Christianity accounts for the largest number of
converts; (2) Christian organisations conduct service activities-schools, hospitals, poverty-alleviation programmes, relief during calamities, etc.-with exemplary dedication and professionalism. However, some of them, though not all, make the conversion agenda a part of their seva agenda; (3) Foreign funds supporting these charitable activities have greatly aided conversions.

Take, for example, the following information, pertaining to the Foreign Contribution (Regulation) Act (FCRA), available on the website of the Union Home Ministry. During 2005-06, Rs 7,877 crore was received by way of foreign donations to various NGOs, up from Rs 5,105 crore in 2003-04. Tamil Nadu (Rs 1,610 crore) and Andhra Pradesh (Rs 1,011 crore) were among the highest recipients. The highest foreign donors were Gospel Fellowship Trust USA (Rs 229 crore), Gospel for Asia (Rs 137 crore), Foundation Vincent E Ferrer, Spain (Rs 104.23 crores) and Christian Aid, UK (Rs 80.16 crores). The largest recipients were World Vision (Rs 256 crore), Caritas India (Rs 193 crore), Rural Development Trust Andhra Pradesh (Rs 127 crore), Churches Auxiliary for Social Action (Rs. 95.88 crores) and Gospel For Asia (Rs. 58.29 crore). The funds received by some of these organisations have trebled or quadrupled in just three years since the formation of the UPA Government.

If the official Christian population in India is barely 3 per cent, why do Christian NGOs receive the largest share of foreign funds? From Christian organisations that are known to support evangelism in many Asian countries?

In my travels in Karnataka, my home state, I have seen significant conversions to Christianity having taken place in recent years wherever World Vision and other foreign-funded NGOs started their charitable activities. Kannada newspapers in the past few weeks have carried graphic accounts of how proselytisation is packaged with charity, especially targeting vulnerable sections of society. There is resentment in Assam against World Vision’s flood-relief operations in Majuli, a large island in the Brahmaputra and a sacred seat of the Vaishnava monastery of Sankara Deva, the great reformist saint.

Tripura is one of the Indian states where, as the CPI(M) Chief Minister Manik Sarkar has himself acknowledged, the foreign-funded Baptist church supports subversive activities, including the conversion of tribals. The church-backed separatist outfit, National Liberation Front of Tripura (NLFT), gunned down 16 Hindus at a marketplace in West Tripura district on January 13, 2002, on the eve of Makar Sankranti, an incident that went largely uncommented by the national media.

The Internet has many reports about Buddhist resentment against World Vision and other evangelical bodies operating in Mongolia, Bhutan, Sri Lanka, Thailand, Myanmar and even Tibet, “using unethical methods, under the guise of being charitable organisations, to buy converts in Asia”. The Australian, a leading newspaper of Australia, reported on December 24, 2005: “Tensions between Muslims and Western aid workers have begun to erupt in Aceh as the tsunami-devastated Indonesian province (where 170,000 people died) slowly recovers. Islamic activists have claimed that aid workers are secretly attempting to convert Muslims to Christianity, pointing particularly to World Vision, the International Catholic Mission and Church World Service.”

Lt Col A.S. Amarasekera, a Sri Lankan Buddhist activist, has expressed the following fear: “While everyone is focusing their minds on the LTTE problem, we Sinhalese Buddhists are pitted against another force as dangerous: the dangers that the Sinhalese Buddhist way of life will have to face due to conversions in the near future. What happened in South Korea, where the 80 per cent Buddhist population was reduced to 18 per cent in five decades, will be repeated here¿ It (is) proved beyond reasonable doubt that World Vision, an American-funded Christian evangelical organisation, was surreptitiously trying to convert Sinhalese Buddhists into Christianity.”

The recent attacks on churches in Orissa and elsewhere have been justifiably condemned by all patriotic individuals. However, as I stated in my column last week, a distinction must be made between a violent campaign against our Christian brethren and a non-violent, democratic campaign against organised conversions using foreign funds. I happened to participate in a remarkable inter-religion conference on conversions organised by the Vatican in collaboration with the World Council of Churches, Geneva, a Protestant body, in Lariano (Italy) in May 2006. Let me mention here some of the recommendations in a report unanimously adopted by the conference.

• “While everyone has a right to invite others to an understanding of their faith, it should not be exercised by violating other’s rights and religious sensibilities. At the same time, all should heal themselves from the obsession of converting others.”

• “Freedom of religion enjoins upon all of us the equally non-negotiable responsibility to respect faiths other than our own, and never to denigrate, vilify or misrepresent them for the purpose of affirming superiority of our faith.”

• “Errors have been perpetrated and injustice committed by the adherents of every faith. Therefore, it is incumbent on every community to conduct honest self-critical examination of its historical conduct as well as its doctrinal/theological precepts. Such self-criticism and repentance should lead to necessary reforms inter alia on the issue of conversion.”

• “A particular reform that we would commend to practitioners and establishments of all faiths is to ensure that conversion by ‘unethical’ means are discouraged and rejected by one and all. There should be transparency in the practice of inviting others to one’s faith.”

• “While deeply appreciating humanitarian work by faith communities, we feel that it should be conducted without any ulterior motives. In the area of humanitarian service in times of need, what we can do together, we should not do separately.”

• “No faith organisation should take advantage of vulnerable sections of society, such as children and the disabled.”

• “We see the need for and usefulness of a continuing exercise to collectively evolve a ‘code of conduct’ on conversion, which all faiths should follow.”

Why shouldn’t there be a sustained and sincere all-religion debate in India on an anti-conversion law in the spirit of the above recommendations?

Write to: sudheenkulkarni@gmail.com



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Paul KristJuly 21, 2010 at 12:01 pm

Christian evangelism is worse than Islamist terrorism since the former cannot be easily identified in its grotesque combination with charity and good deeds which are used as a mask, while appearing to be legal. All religious conversions must be banned by United Nations declaring that religious conversion is NOT any fundamental right and is NOT included in religious freedom, and that the economic ulift of under privileged or suffering people everywhere shall be the committed responsibility of only Non-governmental organisations NGOs) which explicitly respect the truth that all faiths are equally (or equally untue)leading to the same goal, whatever that may be, which depends only on one’s expectation, called so but rooted in ignorance-cum-faith. Mass movements all over the world must be started to drive out evangelical armies who have made religious propaganda and denigration of target groups’ professed religiouns. It is certainly due to the Christian church that the science and technology came to be misused for the over-comfort and over-ease resulting in the final analysis, in criminalisation of society and governments of the West which use wars as a pretext for aggression to grab resources in other countries on its own terms. Christianity, industrialistion and modernisation have come to be used as synonymous due to the distortionist propaganda of the church. The evangelical armies must be driven out to “re-convert” the West and save it from excessive materialism and spiritual degeneration after they themselves set an example that they are free from vices which every religion in original form preaches against. The trillions, or quadrillions, of dollars worth of properties clandestinely bought by these armies of evil — bringing mountains of dollars of Western money illegally and through donations for fake charities which are used for Chritian conversion) – must be confiscated by the respective nations.

In South Korea, these vile forces destroyed virtually all its original culture based on indigenous beliefs and Buddhism, and made that country a colony of the West for geoplitical purposes. In Sri Lanka, all the echelons of power have been grabbed by the church through conversion, making it appear that that country’s original culture based on Buddhism represents primitivity, ignorance and atheism. In India, millions of the mercenaries — that is how you spell missionaries — trade religion for material succour which has nothing to do with spirituality which transcends all religions and binds all humanity together and binds it to ecology. There the vile church forces of numerous denominations and masquerading as charities, relief organistions, and the like, exploit the poverty and sufferings of people to exchange it for token relief with world’s most intolerant and primitive religion.



__________________
«First  <  16 7 8 9 1014  >  Last»  | Page of 14  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard