New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Continuing Christian Conversion Tactics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Continuing Christian Conversion Frauds.
Permalink  
 


தம்புள்ள விடுதியில் தங்கியிருந்த கிறிஸ்தவ குரு உட்பட ஐவர் கைது

jailதம்புள்ள நிருபர் : தம்புள்ளயில் உள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரையும் மேலும் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அரச விரோதச் செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து அரசுக்கு விரோதமான சில பிரசுரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிகமான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் சில நாட்களாக இங்கு தங்கியிருந்ததாகவும்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நாம் கிறிஸ்துவை அறியாதவர்களை உலகபிரகாரமானவர்கள் என்றும் நம்மை ஆவிக்குரியவர்கள் என்றும் சொல்லுகிறோம். நாம் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களா? என்று ஆராய்ந்து பார்த்த போது மனதில் எழுந்த பல நெருடலான கேள்விகளுள் பத்தை மட்டும் இப்போது உங்கள் முன் வைக்கிறேன்:

கேள்வி #1
பிற மதத்தவர் ஆசீர்வாதத்தைத் தேடி புண்ணிய யாத்திரை செல்லுவதை விமர்சிக்கும் விசுவாசிகள் தாங்கள் ஆசீர்வாதத்தைத் தேடி ஆவிக்குரிய கூட்டங்களுக்கு ஓடுவது ஏன்? இயேசுவின் சீஷராக அவரை பின்பற்றும்படி அழைக்கப்பட்ட நாம் அவர் எப்படி பிதாவின் சித்தம் செய்வதே தமக்கு உணவு என்று வாழ்ந்தாரோ அதையே பின்பற்ற வேண்டுமில்லையா? இயேசு அப்படிச் செய்தபோது அவர் தேவைகள் எல்லாம் பிதாவால் சந்திக்கப்பட்டதே! அவர் எதிலும் குறைவுபட்டதாக வேதத்தில் இல்லையே! நாமும் பிச்சைக்காரராய் வாழ்வது அவரது சித்தமல்ல “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.(மத் 6:33) என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

கேள்வி #2
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களை விமர்சிக்கும் விசுவாசிகளாகிய நாம் ஊழியக்காரர்களை விக்கிரகமாக்கி வைத்திருப்பது ஏன்? கடவுளுக்கும் நமக்கும் கன்னிமரியாள் மத்தியஸ்தரல்ல என்று சொல்லும் நாம் பாஸ்டர்களை இன்று மத்தியஸ்தர்களாக்கி விட்டதேன்? அவர்கள் மட்டுமே சீஷர்களென்றால் புதிய ஏற்பாட்டின்படி நாமெல்லாம் யார்?

கேள்வி #3
பிறமதத் தலைவர் ஒருவர் மேடையில் வித்தைகள் செய்யும் போது அதற்க்கு என்ன தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று ஆராயும் நாம், நமது ஊழியர்கள் மேடையில் பெயர் சொல்லி அழைக்கும் வித்தை, மல்லாக்க சாய்க்கும் வித்தைகளையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது ஏன்? இயேசுவும் அப்போஸ்தலரும் செய்யாததை என்ன ஆதாரத்தோடு அல்லது நோக்கத்தோடு செய்கிறார்கள் என்று நாம் ஆராய வேண்டாமா?

கேள்வி #4
புதுவருஷத்துக்கு ராசிபலன் பார்ப்பவர்களைக் கிண்டலடிக்கும் நாம் ”வாக்குத்தத்தம்” என்ற பெயரில் புத்தாண்டு ஆராதனைகளில் தரப்படும் குலுக்கல் பரிசை நம்புவது ஏன்? “இந்த வருஷம் உனக்கு சொல்லப்பட்ட ராசிபலன் பலிச்சிருச்சா? என்று உன் நண்பனைக் கிண்டல் செய்யும் விசுவாசியே! இந்த வருடம் உனக்கு குலுக்கல் முறையில் தரப்பட்ட வாக்குத்தத்தம் பலித்து விட்டதா? உனக்கு என்ன வாக்குத்தத்தம் வந்தது என்பதையாகிலும் நினைவில் வைத்திருக்கிறாயா? ஏன் இந்த மாய்மாலம்????

கேள்வி #5
“நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்” என்று முழங்கும் நாம் நமது சொந்தத் தேவைகளுக்காக மாத்திரமே ஜெபிப்பது ஏன்? சொந்தக்கவலைகள் நம்மை அழுத்துவதால்தானே? நாமே அனுபவிக்காத ஒன்றை பிரசங்கிப்பது ஏன்? அதற்காக இயேசு நிம்மதி தரமாட்டார் என்று சொல்லவில்லை. சுயத்தை சிலுவையில் அறையாமல் அந்த அனுபவத்துக்குள் கடந்து வரமுடியாது என்பதே உண்மை.

கேள்வி #6
விக்கிரகங்களின் பெயரைக்கூட உச்சரிக்கக் கூடாது என்று வைராக்கியம் பாராட்டுகிறோம் ஆனால் நமது வாழ்வில் விக்கிரக ஆராதனை இல்லையா? இயேசு தன்னை எந்த மாற்று மதத்தின் கடவுளோடும் ஒப்பிடவில்லை மாறாக தனது எதிரி “உலகப் பொருளே” என்று லூக்கா 16:13–இல் குறிப்பிடுகிறார். தேவைகளுக்காக ஜெபிப்பது தவறல்ல, ஆனால் உலகப் பொருளுக்காக, உலக ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே இயேசுவைத் தேடினால் அது விக்கிரக ஆராதனை ஆகாதா?

கேள்வி #7
சினிமா, டிவி போன்ற கேளிக்கைகளை சாத்தானுக்குரியது என்று சொல்லிவிட்டு அவற்றை ஒதுக்கித்தள்ளும் விசுவாசியே! அதே கேளிக்கைகள் இயேசுவின் பெயரைத் தரித்துக் கொண்டு திருச்சபைக்குள் வந்தால் அது ஆவிக்குரியதாகிவிடுமா? இன்று வெளிவரும் பல கிறிஸ்தவ இசை ஆல்பங்களையும், கிறிஸ்தவ தொலைக்காட்சிகளில் வரும் “பிரமாண்டமான குரல் தேடல்களையும்”, “நீங்கள் விரும்பும் பாடலையும்” யாரிடமிருந்து பெற்றீர்கள்?

கேள்வி #8
பிரமாண்டமான அரங்கமைத்து லேசர் ஒளிக்கற்றைகள் மத்தியில் பல பெண்கள் பின்புறத்தின் நடனமாடிக்கொண்டிருக்க மைக்கேல் ஜாக்சன் பாடினால் அது உலகப்பிரகாரமானது. அதே மேடையில் அதே லேசர் ஒளிக்கற்றைகள் மத்தியில் அதே விதமாக பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்க பளபளக்கும் உடையணிந்து ஒரு ஊழியக்காரர் கிறிஸ்தவப்பாடல் பாடினால் அது ஆவிக்குரியதாகிவிடுமா? நமது மிஷனரி சகோதரர்கள் பலர் பசித்த வயிறோடு ஊழியம் செய்து கொண்டிருக்க, அவர்தம் பிள்ளைகள் உணவின்றி படிப்பின்றி அல்லாட இதற்காக செலவிடப்பட்ட இலட்சகணக்கான பணத்துக்கு கணக்கு என்ன? இளைஞர்களை ஆதாயம்பண்ண இப்படிச் செய்கிறோமென்றால், பவுலும், பேதுருவும், பர்னபாவும் யாக்கோபும் யோவானும் இப்படித்தான் இளைஞர்களை ஆதாயம் பண்ணினார்களா?

கேள்வி #9
எந்தக் குதிரையில் பணம் கட்டினால் ஜாக்பாட் அடிக்கும் என்று நம்பி பணம்கட்டுவது சூதாட்டமென்றால். எந்த ஊழியத்தில் விதைத்தால் நல்ல பொருளாதார அறுவடை வரும் என்று பார்த்து விதைப்பது(!) ஆவிக்குரியதாகுமா? ஆண்டவர் தரித்திரரான விசுவாசிகளுக்கு அவர்களது குறைவில் உதவி செய்யுங்கள் என்றல்லவா நமக்கு சொல்லியிருக்கிறார்! அதை அன்புடன் செய்வதா ஆதாயம் எதிர்பார்த்து செய்வதா?

கேள்வி #10
பிற மதத்தலைவர்கள் செய்த தவறுகள் வெளிப்படும்போது அவற்றைக் குறித்து எல்லொரிடமும் பேசி பரிகசிக்கும் நாம், நமது அபிமான ஊழியக்காரர்கள் தவறு செய்யும்போது அதை மூடி மறைக்க


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“இயேசு யார்” என்று கேட்டு மத பிரசாரம் பொதுமக்கள் வேதனை

jesus.jpgஇயேசு யார் என்று கேட்டு சென்னையில் செய்யப்படும் புதுமையான கிறிஸ்தவ மத பிரசாரத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது தீவிர கிறிஸ்தவ மத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏராளமான குழுக்கள் பல்வேறு பகுதிகளில் இயங்குகின்றன. ஒவ்வொரு குழுவினரும், ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஒவ்வொருவரும் ஒரு முறையை தேர்ந்தெடுத்து, அந்த முறையில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மதபிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளை தேர்ந்தெடுக்கின்றனர். வீடு, வீடாக சென்று கிறிஸ்தவ மதம் சம்பந்தமான கேள்விகளை பொதுமக்கள் எழுப்பியும், கடிதம் மூலமாகவும், துண்டு பிரசுரம் மூலமாகவும் இந்த பிரசாரம் செய்யப்படுகிறது. நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே இந்த பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழுவினர் “இயேசு யார்’ என்று தலைப்பிட்ட 12 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வீடு, வீடாக வினியோகித்து வருகின்றனர். இந்த புத்தகத்தில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் “இயேசுவை நம்புகிறவர்கள் நல்ல கதி அடைவார்கள் என்றும், நம்பாதவர்கள் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசுவை ஏற்றுக் கொள்கிறவர்கள் கீழ் கண்ட எளிய ஜபம் செய்யவும் என்று கேட்டு ஜபத்தின் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவை ஏற்காதவர்களுக்கு ” பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காவும் ஆயத்தம் பண்ணப்பட்ட அக்னிக்கடலில் தள்ளப்படுவாய்’ என்ற சாபமும்விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்கள், கூலித் தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுனர்கள் என ஒவ்வொரு பிரிவினராக தேர்ந்தெடுத்தும் கிறிஸ்தவ மத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்யப்படும் மதப்பிரசாரம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற மத பிரசாரங்களை மேற்கொள்வோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

http://www.nitharsanam.net/?p=13377&sess=bb89f3409765d8c4e4e88f1b1b2be435



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நாடார் இனமக்களைக் கேவலாமாகக் கூறிய கால்டுவெல் பாதிரிக்கு விழா


கால்டுவெல் நினைவு இல்லம்
t.gif
காணொளித் தொடர்பில் கால்டுவெல் நினைவில்லம் திறக்கப்பட்டது
காணொளித் தொடர்பில் கால்டுவெல் நினைவில்லம் திறக்கப்பட்டது
புகழ்பெற்ற தமிழறிஞர் மறைந்த பிஷப் கால்டுவெல்லின் நினைவு இல்லம், அவர் வாழ்ந்த நெல்லை மாவட்டம் இடையன்குடியி்ல் தமிழக முதல்வர் கருணாநிதியால் இன்று காணொளித் தொடர்பு மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல், கிறித்தவ மதத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தவர், இடையன்குடியி்ல் தங்கி இருந்தபோது, தமிழை நன்கு கற்றுத் தெளிந்தார். தமிழின் மீது பற்று கொண்டார். தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்தவை எனக்கூறி, அவற்றை திராவிட மொழிகள் என்று அழைத்தவரும் கால்டுவெல் தான்.

கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். 

 

கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.

பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

From

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன்

இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக ஆக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி அந்த வீ்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.18 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

புதிதாக திறக்கப்பட்ட நினைவில்லத்தில் கால்டுவெல்லின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்றும் இப்போது நிறுவப்பட்டுள்ளது,

‘தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ என்று நினைவு இல்ல திறப்பு நிகழ்வின் போது முதல்வர் கூறினார்.

பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887ஆம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856ஆம் ஆண்டில் அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே அகற்றிவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்’ என்பதை நிலைநாட்டினார் என்றும் முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டினார்.

1968ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் கால்டுவெல்லின் சிலை நிறுவப்பட்டமையையும் கருணாநிதி நினைவுகூர்ந்தார்




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கால்டுவெல்லை வைத்துக் கொண்டு, தமிழர்களை இழிவு படுத்தும் செயல்கள்

கால்டுவெல் தமிழுக்கு என்ன செய்தார், என்று தமிழர்கள் சரித்திரத்தைப் படித்து அறிய வேண்டும்[1]. கால்டுவெல்லைப் பற்றிய இணைத்தளத்திலேயே, அவரது உண்மையான சுயரூபம் பதிவிடப் பட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்த்து சில விஷயங்களை ஏற்கெனவே, நான் பதிவு செய்துள்ளேன்[2]. ஏனெனில், இப்பொழுது அண்மைக்கால சரித்திரத்தையே மறைத்து பொய்-புளுகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். அதிலும், தேவையில்லாத அளவிற்கு, கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், உள்நோக்கத்தோடு, கால்டுவெல்லைப் பற்றி புளுகியிருக்கிறார். தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகள் என்று பேசவே, முதலில் இவர்கள் வெட்கப்படவேண்டும். அப்படியென்றால், உள்ள தமிழர்களுக்கு சூடு, சொரணை, வெல்கம், மானம் ……..முதலியவை இல்லையா என்ன?

கிருத்துவர்கள் இந்தியர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே, இந்திய மொழிகளைக் கற்றுக் கொண்டனர். தமிழை மட்டும் ஒன்றும்  தனியாகக் கற்றுக் கொண்டுவிடவில்லை. குறிப்பாக, கிருத்துவ மததைப் பரப்பவே அவர்கள் தமிழைக் கற்றுக் கொண்டார்கள். ஆகவே, “தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிருஸ்துவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணி அளவிட முடியாதது”, என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில், உண்மை இல்லை.

ரூ. 19 லட்சம் செலவித்ததே விரயம் தான்: நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லம் ரூ. 19 லட்சம் செலவில் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் பணத்தை இவ்வாறு செலவிட்டிருப்பது, தேவையற்றச் செயலாகும். இந்த சாக்கில், யாரோ கான்டிராக்டர்கள், வழக்கம் போல, நன்றாக சம்பாதித்திருப்பார்கள் அவ்வளவே.

தமிழால் கால்டுவெல் கவரப்பட்டார் என்பது அப்பட்டமான பொய்: இந்த இல்லத்தை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்[3]. அப்போது அவர் பேசுகையில், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து-மறைந்த நெல்லை மாவட்டம் இடையன்குடியில் உள்ள இல்லத்தை நினைவில்லமாக மேம்படுத்தி, அதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்[4]. தமிழ் மொழியின் தொன்மையும், தூய்மையும்,வலிமையும், வனப்பும், கற்றோர் அனைவரையும் கவர்ந்திழுத்து,உயிருக்கும் மேலென உணர வைத்திடும் தகுதி மிக்கது. அப்படி தமிழால் கவரப்பட்ட வெளிநாட்டவர் மிகப்பலர். அவர்களில் தலையா அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்,சிறப்புக்கும் கிருஸ்துவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை,இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிருஸ்துவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும்”.
அகராதிகளின் முன்னுரையைப் படித்திருந்தால், சேதுபிள்ளை அவ்வாறு உளறி இருக்க மாட்டார்: கருணாநிதி தொடர்கிறார், “தமிழ்நாட்டுக் கலைச்செல்வத்தை மேலைநாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளை பாட்டாலும், உரையாலும் விளக்கியவர்கள் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதியை தொகுத்து உதவினர் சிலர். தெல்லிய தமிழ் வசன நடையில் அறிவுநூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர் என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்”.

கிருத்துவர்கள் தங்களுக்குள் தாக்கி எழுதிக் கொண்ட தமிழ் புத்தகங்களும் முதலில் தோன்றியது தமிழகத்தில் தான்: கருணாநிதி தொடர்கிறார், “இந்திய மொழிகளில் முதன்முதல் அச்சுப் புத்தகம் உண்டானது தமிழ் மொழியிலேதான். கிருஸ்துவ மதத்தைப் பரவச் செய்வதற்காகப் பெருந்தொண்டாற்றி வந்த ஏசு சபை பாதிரிமார்கள், முதன்முதலில் தமிழில் அச்சுப் புத்தகம் உண்டாக்கினர். பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்தான் தமிழில் முதன்முதலில் உரைநடை நூல் இயற்றியவர்[5]. முதன்முதலில் தமிழில் அகராதி எழுதியவரும் வீரமாமுனிவரே ஆவார்”. இப்படி பெஸ்கியைப் பற்றி பொய் சொல்வதில், கருணாநிதி மாபெரும் துரோகத்தை செய்கிறார். ஏனெனில், இந்த பெஸ்கி தான், சிவபிரகாசரின் நூல்களை எரித்து அழித்தவர். அப்படிப் பட்ட, தமிழ் துரோகியை பாராட்டிப் பேசுவது வேடிக்கையே. அதுமட்டுமல்லாது, ஜீஜன்பால்கு மற்றும் இந்த பெஸ்கிற்கும் நடந்த சணை கொஞ்ச நஞ்சம் அல்ல. “நச்சுப்பாம்பின்விஷக்கடிக்குமருந்து” என்று ஒரு புத்தகத்தை தமிழில் எழுதி பெஸ்கியைச் சாடியுள்ளார். அப்படி தமிழிலேயே தாக்கிக் கொண்ட மர்மத்தை கருணாநிதி விளக்குவாரா?

ஜி.யு. போப்பின்மாய்மாலவேலைகள்: கருணாநிதி தொடர்கிறார்,
திருக்குறள் போன்ற தலைசிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றின் சிறப்புகள் உலகமெங்கும் பரவிட காரணமாக இருந்தவர் ஜி.யு.போப். தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நன்கொடையைக் கொண்டு, தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என்றும், தனது கல்லறையில் தன்னை தமிழ் மாணவன் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்றும் விரும்பியவர் போப். இறையியல் ரீதியில், சித்தாந்தத்தை குழப்புவதற்காக, போப் வேலை செய்தார்.

கருணாநிதி தொடர்கிறார், “தமிழ்-ஆங்கில அகராதியை தயாரித்த ராட்லர், யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டு புரிந்த டாக்டர் வின்ஸ்லோ ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நம் நாட்டுக் கிருஸ்துவர்களின் தமிழ்த் தொண்டும் சாமானியமானதல்ல.ரட்சண்ய யாத்திரிகம்என்னும் காவியத்தைப் படைத்த கிருஷ்ணபிள்ளை, ‘குறவஞ்சிநாடகம் எழுதிய இன்பகவி, ‘பிரதாப முதலியார் சரித்திரம்எழுதிய வேதநாயகம் பிள்ளை, ‘தொல்காப்பிய நன்னூல்எழுதிய சாமுவேல் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்”.

திருட்டுத்தனமாக அகழ்வாய்வு செய்து ஆதாரங்களை மறைத்ததை-அழித்ததை[6] பாராட்டுவதும் வேடிக்கைத்தான்: கருணாநிதி தொடர்கிறார், “அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல், 1838ம் ஆண்டில், தமது 24வது வயதில் மதபோதகராக, சென்னை மாநகர் வந்தடைந்தவர், பின்னர் நெல்லை பேராயராக பொறுப்பேற்று,பன்னூறு ஓலைச்சு வடிகளையும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களையும் பயின்றவர், புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்தவர், நெல்லை வரலாற்றை ஆய்வு செய்து, தமது ஆய்வுகளின் அடிப்படையில், ‘திருநெல்வேலி சரித்திரம்எனும் பெயரில், நெல்லை வரலாற்றை நூலாக எழுதியவர்”.

சாணார்களை இழிவு படுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைப்பதும் கருணாநிதியின் கயமைத்தனம் தான்: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார். பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கல் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார்.

 

தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான்: கருணாநிதி தொடர்கிறார், “தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்றவர், திராவிட மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆய்வு செய்தவர், அதன் பயனாக `திராவிட மொழிகள்என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர், அத்துடன் தமிழ் மொழி, ‘செம்மொழிஎன முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால், தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான்.பரிதிமாற்கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30ஆண்டுகளுக்கு முன்பே, 1856ஆண்டில் அறிஞர் கால்டுவெல் தாம் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், “திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே அகற்றிவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையையும் நிலைநாட்டியவர். அதன்மூலம் செம்மொழித் தமிழின் மேன்மையையும் உலகறியச் செய்தவர்”, என்றார் கருணாநிதி[7].

வேதபிரகாஷ்

18-02-2011



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_02_2011_008_010-400-dead-christ-churhc.jpg?w=361&h=591

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_02_2011_013_004-hods.jpg?w=538&h=482

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_02_2011_006_018-siirkali-paathiriyaar-thadai.jpg?w=347&h=393

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு: கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

மதுரை:""இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் முதல் 50 லட்சம் வரை குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்,'' என மதுரையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நண்பன், மேம்பாட்டிற்கான இதழியல் மற்றும் குழந்தைகள் நலக் குழுமம் சார்பில் "குழந்தை கடத்தல் தடுப்பில் சமூகத்தின் பங்கு' என்னும் தலைப்பில் குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் செல்வகோமதி, இதழியல் மேம்பாட்டிற்கான முதன்மை உறுப்பினர் ராஜாராமன், நண்பன் இயக்குனர் ஜேம்ஸ் பேசியதாவது:இந்தியாவில் குழந்தைகள் கடத்தலை தடுக்க தேவையான சட்டங்கள் இல்லை. சில சட்டங்களின் உட்பிரிவுகளின் கீழ் தான் கடத்தல் சம்பவங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 35 லட்சம் முதல் 50 லட்சம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அமெரிக்காவில் 3 லட்சம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் பெற்றோரிடம் சண்டையிட்டு தப்பி வந்த குழந்தைகளை புரோக்கர்கள் பிடித்து, பாலியல் தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும் மாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.
சிறு காரணங்களுக்காக தாய், தந்தையரை பதறவைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், வெளியில் பேராபத்து காத்திருக்கிறது என தெரியாமல் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.வீட்டு வேலை, விவசாய வேலை, பிச்சை எடுத்தல், திருடுதல், உடல் உறுப்புகளை விற்பனை செய்ய, சர்க்கஸ் மற்றும் பொழுது போக்கு தொழில்களில் ஈடுபடுத்தவும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக, ஒப்புதல் இன்றி, சில நேரங்களில் பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களின் இயல்பான குடும்ப பின்னணியிலிருந்து பிரித்து, வேறு இடங்களுக்கு ஒரு பொருளை போல கொண்டு செல்வதும், இதன் வாயிலாக பொருளாதார லாபத்தை பெறுதலும் கடத்தல். பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.

தினமல

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சுயாதீன திருச்சபைகளின் மாமன்றம் அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனை

சென்னை : ""தமிழகத்தில் 'சர்ச்'கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே, எங்களது 50 லட்சம் ஓட்டுக்கள் போடப்படும், '' என, இந்திய சுயாதீன திருச்சபைகளின் மாமன்ற தலைமை பேராயர் பிரகாஷ் கூறினார்.இந்திய சுயாதீன பெந்தேகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு, தலித், இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டமைப்புகளின் சார்பில், நேற்று சென்னையில் வரும் சட்டசபைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்திய சுயாதீன திருச்சபைகளின் மாமன்ற தலைமை பேராயர் பிரகாஷ் கூறியதாவது:தமிழகத்தில் 25 ஆயிரம் "சர்ச்'கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை, எங்களது அமைப்புகளை சார்ந்த 70 லட்சம் பேர் வசிக்கிறோம். அதில் 50 லட்சம் பேர் ஓட்டுரிமையுடன் உள்ளோம். இருந்தும், ஆண்டுக் கணக்கில் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.கிறிஸ்தவர்களின் கல்லறைக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ ஆலயங்கள் அமைப்பதற்கு சட்ட பூர்வமாக அனுமதி வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.சொந்த இடம், பட்டா ஆகியவை இருந்தும் "சர்ச்'கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆகையால் தமிழகத்தில் "சர்ச்'கள் கட்டுவதற்கு சட்டப் பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களது 50 லட்சம் ஓட்டுகள் போடப்படும். முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.இவ்வாறு பிரகாஷ் கூறினார்.நிகழ்ச்சியில் செயலர் லெஸ்ஸி, ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் மாமன்ற துணை பிரதம பேராயர் சத்தியகுமார், இந்திய அப்போஸ்தல திருச்சபைகளின் மாமன்ற பிரதம பேராயர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை
பிப்ரவரி 25,2011,00:00 IST

25_02_2011_101_002-mount.jpg?w=640&h=508எஸ்.உமாபதி
சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.
புனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.
புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வள்ளிநாயகம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-26 11:59:16 IST
இது நிரூபிக்கப்படவில்லை. ரோம் நகரம் கூட மறுத்து இருக்கிறது கிபி 52 இல் தாமஸ் இந்திய வந்தார் என்று ....


-- Edited by devapriyaji on Monday 28th of February 2011 11:58:22 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போப் வாயாலேயே பொய்த்துப் போன

புனித தோமா-தோமோ-தோமையார் -யார் 

புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்

http://devapriyaji.wordpress.com/saint-thomas/



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_03_2011_002_012-theresa.jpg?w=640&h=253

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_03_2011_104_022-church-land.jpg?w=640&h=249

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_03_2011_018_002-usa-saamiyar.jpg?w=353&h=430

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தாமஸ் நியமனம் ரத்து:
வாடிகனால் வந்த வினை?

Suresh2.jpg

 


இதை சாட்டையடி என்பதா? சவுக்கடி என்பதா? இல்லை நெத்தியடி என்பதா? ‘மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி.) தலைவராக ஏன் பி.ஜி.தாமஸை நியமனம் செய்தீர்கள்? அவரது பயோடேட்டாவை மட்டும் பார்த்துள்ளீர்கள். அதற்கு மேலும் நீங்கள் போய் இருக்க வேண்டும். அவரது நியமனம் செல்லாது. சட்டவிரோதமானதும் கூட’ என்று மத்திய அரசை சுப்ரீம்கோர்ட் விளாசித் தள்ளிவிட்டது.

Suresh%201.jpgநீதிமன்றங்கள் இது-போன்ற தீர்ப்புகளை அளிக்கும்போது ஆஹா..அற்புதம்..அபாரம்.. என்றெல்லாம் உடனே வாய் திறந்து பாராட்டவும் மகிழ்ச்சி கொள்ளவும்தான் தோன்றுகிறது. ஆனால் இந்தியா என்ற நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி-களால் ஆளப்படும் ஜனநாயக நாடு. இங்கு நாடாளுமன்றம்தான் சரியாக செயல்பட வேண்டும். இறுதி முடிவுகள் இங்கேயே இறுதியாகிவிட வேண்டும். இதைத் தாண்டி கோர்ட்டுக்களுக்கு போகிறது என்றால் கோளாறுகளுடன் கூடிய நாடாளுமன்றத்தை இந்த நாடு பெற்றுள்ளதாக அர்த்தம்.

அரசியல்வாதிகளை யார்தான் தட்டிக் கேட்பது என்று மக்கள் கேட்கலாம். கோர்ட்டுகளாவது கேட்கிறதே அதையும் தவறு என்று கூறலாமா என்றும்கூட கேட்கலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த அளவுக்கு கோர்ட்டுகள் தங்கள் கைகளில் எல்லாவற்றையுமே எடுத்துக் கொண்டு தாட் பூட் என்று போவது சரியா என்ற கேள்வி முக்கியம். ஸ்பெக்ட்ரமாகட்டும், காமன்வெல்த் போட்டி முறைகேடுகளாகட்டும், ஆதர்ஷ் ஊழல் ஆகட்டும் இந்த ஊழல் கண்காணிப்பு ஆணைய நியமனம் ஆகட்டும்... மன்மோகன்சிங் அரசின் தலையில் கோர்ட்டுகள் குட்டி குட்டி அதன் மண்டையே வீங்கிப்போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் கோர்ட்டுகளே முடிவு செய்யும் என்றால், நாடாளுமன்றமோ, பிரதமரோ, அரசு நிர்வாகமோ இந்த நாட்டுக்குத் தேவையே இல்லையே... அதிலும் நீதிபதிகள் அடிக்கும் கமென்ட்டுகளுக்கு அளவே இல்லை. டி.வி. மீடியாக்களும் அதையே காட்டி காட்டி நாள் முழுவதையும் ஓட்டுகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும். தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்பது. டெலிகாம் செக்ரட்ரியாக தாமஸ் நியமிக்கப்பட்ட போதே பிரச்னை வெடித்தது. அடிக்கடி சீஸரின் மனைவியை மேற்கோள் காட்டும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தாமஸ் மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக தெரிந்துள்ளது விந்தையான விஷயமாக படுகிறது. பத்திரிகைககள் படிக்கும் பழக்கம் பிரதமரிடம் இல்லாமல் இருந்தாலுமே கூட, அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் கிளப்பிய எதிர்ப்பின்போதாவது தாமஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மெனக்கெட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல்போனதன் விளைவு, சுப்ரீம் கோர்ட்டில் பல மாதங்களாக வழக்கு நடைபெற்று நீதிபதிகள் காரசாரமாக திட்டித் தீர்த்த பிறகு தெரிந்துள்ளது, தாமஸ் நியமனம் தவறு என்பது!

தாமஸ் ஒன்றும் தங்கமல்ல. ஆனாலும் அவர் சொக்கத் தங்கத்தின் ஆள் என்றே கூறப்படுகிறது. தாமஸ் நியமனத்தின் ரகசியத்தை தோண்ட ஆரம்பித்தால் கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் இந்த நாட்டின் பல்வேறு அதிகார மட்டங்களில் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கின்றன என்ற கிசுகிசுக்களும் உடன்சேர்ந்து வருகின்றன. இந்த தாமஸ் நியமனம் என்பதே கூட வாடிகனில் இருந்தே வந்த சிபாரிசு என்பதும், மும்பையில் உள்ள சக்திவாய்ந்த கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் முக்கிய நிர்வாகி மூலமாக இது நடந்தது என்பதும் வட இந்திய மீடியாக்களின் உள்வட்டாரங்களில் உலாவரும் தகவல்.

Suresh%205.jpgஅதுமட்டுமல்ல, கேரளாவில் தற்போது சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கப்போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அங்கு கிடைத்த கிறிஸ்தவர்களின் அபரிமித ஆதரவை இம்முறை சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டுமென்ற கட்டாயம். தாமஸ் நியமனத்தை மாற்றுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்களும் கால நேரங்களும் இருந்தபோதிலும் அது நடைபெறாமல் போனதற்கும், கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்த போதிலும் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பிடிவாதமாக தாமஸ் தைரியம் காட்டியதற்கும் இவை-யெல்லாம்தான் பின்னணி என்பது திரைமறைவு தகவல்-களாகவே இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை படிக்கிறார். ‘‘தாமஸ் நியமன விஷயத்தில் ணிக்ஷீக்ஷீஷீக்ஷீ ஷீயீ யிuபீரீமீனீமீஸீt நிகழ்ந்துவிட்டது. இதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்’’ என்று. ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக கேள்வி எழுந்தபோது, ராஜா மீண்டும் அமைச்சர் ஆனதற்கு தான் பொறுப்பல்ல, ராஜா பெயரை பரிந்துரைத்தது கலைஞர்தான். கூட்டணி தர்மத்திற்காக அவரை அமைச்சராக ஏற்றுக் கொண்டேன் என்றார். இவ்விஷயத்தில் பழியை தூக்கி பிறர் மீது போட முடியாது என நினைத்த பிரதமர் முதல்நாள் ‘‘நானே பொறுப்பேற்கிறேன்’’ என்றார். தாமஸ் தேர்வு என்பது முழுக்க முழுக்க அவரது நேரடி கண்காணிப்பில் நடந்த நியமனம் என்பதால் பழியை சுமத்த இன்னொரு கலைஞர் அவருக்கு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் இருப்பதால்தான் பொறுப்பேற்கிறார் என்று பார்த்தால், அடுத்தநாளே பழியை பிறர் மீது போட்டுவிட்டார். எப்படி?

Suresh%203.jpg‘‘தாமஸ் மீது குற்றச்சாட்டு உள்ளது என்பது எனக்கு தெரியவே தெரியாது. அவரது பெயரை என்னிடம் அளித்தது பணியாளர் நலத்துறை அமைச்சகம்தான்’’ என்று கதையை திருப்பினார்.

தப்பான ஆளான தாமஸை மன்மோகனுக்கு கை காட்டிவிட்டு தற்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வீற்றிருக்கிறார் பிரீத்திவ் ராஜ் சவாண். மன்மோகன் தன்னை மாட்டிவிட பார்க்கிறார் என்று தெரிந்தவுடன், ‘‘தாமஸ் கேரளாவின் தலைமைச் செயலாளராக எல்லாம் பணிபுரிந்துள்ளார். பிறகு மத்திய அரசு பணிக்கு வந்தும் பணியாற்றியுள்ளார். எனவே அவரை நம்பினோம்’’, என்று தன்பங்கிற்கு தட்டிக் கழித்து பழியை தூக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது போட்டுள்ளார். இனி காம்ரேடுகள் என்ன கதை விடுவார்களோ தெரியாது.

ஒன்று மட்டும் உண்மை. சுதந்திரத்திற்கு பிறகு பல பிரதமர்கள் பல நியமனங்களைச் செய்துள்ளனர். ஆனால் முதன்-முறையாக ஒரு பிரதமர் போட்ட நேரடி நியமனம் ரத்து செய்யப்பட்டதும்; சட்டவிரோதம் என்று கூறப்பட்டதும் இதுதான் முதன்முறை. இந்த பெருமையை பெற்றுள்ளார் மன்மோகன்சிங். இவரிடம் ‘பொறுப்பேற்கிறேன்’ என்ற வசனத்தை மட்டுமே நாட்டு மக்கள் பெற முடியும். நடந்த, செய்த குற்றத்திற்கு என்ன பரிகாரம் என்று யாரும் கேட்க கூடாது. காரணம் மன்மோகன்சிங் ஒன்றும் லால்பகதூர் சாஸ்திரி அல்ல!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110317c_014101003-loyala-university.jpg?w=640&h=563

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110318a_004101006-minority.jpg?w=640&h=819

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_03_2011_015_012-church-to-admk.jpg?w=362&h=589

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 Subject :இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

இஸ்லாமிய சமயம்
3. வாழ்பவரும், தாமாக இருப்பவரும், இரக்கமும் வல்லமையும் மிக்கவரும், விண்ணையும் மண்ணையும் படைத்தவரும்,5 மக்களிடத்தில் பேசியவருமான ஒரே கடவுளைத் தொழுகின்ற இஸ்லாமிய மக்களுக்குத் திருச்சபை சிறந்த மதிப்: அளிக்கிறது. இஸ்லாமிய சமயம் தன்னைத்தானே ஆபிரகாமுடன் விருப்போடு இணைத்துக் கொள்கிறது. அவர் கடவுளுக்கு அடிபணிந்ததுபோல இஸ்லாமியர்களும் கடவுளது மறைவான திட்டங்களுக்கு முழு உள்ளத்தோடு அடிபணிந்திட முயற்சி எடுக்கிறார்கள். இயேசுவை அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்கூட, அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்று வணக்கம் செலுத்துகிறார்கள். அவருடைய கன்னித்தாயாகிய மரியாவையும் பெருமைப்படுத்துகிறார்கள். சிலவேளைகளிலே அவர்கள் பக்தியோடு அவரிடம் வேண்டவும் செய்கிறார்கள். இன்னும், உயிர்ப்பிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கடவுள் அவர்களுக்குரிய பயனை அளிக்கும் தீர்ப்பு நாளை இஸ்லாமியர் எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் ஒழுக்க வாழ்வை மதிப்பதோடு சிறப்பாக இறைவேண்டல், ஈகை, நொப்பு ஆகியவற்றின் வழியாகக் கடவுளை வழிபடுகிறார்கள்.

காலப்போக்கிலே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பற்பல கருத்து வேறுபாடுகளும் பகைமைகளும் ஏற்பட்டது உண்மையே. இருப்பினும், கடந்தவற்றை மறந்து, இருதிறத்தாரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக நேர்மையுடன் ஈடுபடவும், எல்லா மனிதருடையவும் நன்மைக்காகச் சமூக நீதி, ஒழுக்க நலன்கள், அமைதி, சுதந்திரம் ஆகியவற்றைப் பேணிக் காத்து மேம்படுத்துவதில் ஒத்துழைக்கவும் திருச்சங்கம் எல்லாருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.


யூத சமயம்
4. திருச்சபையின் மறைபொருளை இத்திருச்சங்கம் ஆயும்போது, புது உடன்படிக்கையைச் சார்ந்த மக்களையும் ஆபிரகாமின் வழிவந்தோரையும் ஞான முறையில் இணைக்கும் பிணைப்பை அது நினைவுக்குக் கொண்டுவருகிறது.

கடவுளின் நிறைவாழ்வுத் திட்டப்படி, தனது நம்பிக்கை, தேர்வு ஆகியவற்றின் தொடக்கம் ஏற்கெனவே குலமுதுவர், மோசே, இறைவாக்கினர் என்போரிடத்தில் காணப்படுகிறது என்பதைக் கிறிஸ்துவின் திருச்சபை ஒப்புக்கொள்கிறது. கிறிஸ்தவர்கள் யாவரும் நம்பிக்கையின்படி ஆபிரகாமின் மக்களாவர்6 என்றும், இவர்கள் அதே குலமுதுவரின் அழைத்தலிலே உள்ளிணைந்திருக்கிறார்கள் எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினம் தான் அடிமையாயிருந்த நாட்டிலிருந்து விடுதலையடைந்த நிகழ்ச்சியில் திருச்சபையின் மீட்பு அறிவுக்கெட்டா விதத்தில் முன்காட்டப்பட்டிருக்கிறதென்றும் திருச்சபை அறிக்கையிடுகின்றது. எனவே, சொற்கடந்த தமது இரக்கத்தினால் கடவுள் பழைய உடன்படிக்கையை எந்த மக்களோடு செய்யத் திருவுளம் கொண்டாரோ, அந்த மக்களிடமிருந்துதான் பழைய ஏற்பாட்டு இறைவெளிப்பாட்டைத் தான் பெறுகிறது என்பதைத் திருச்சபை மறக்கமுடியாது; அதுபோலவே, பிற இனத்தார் என்ற காட்டு ஒலிவ மரக்கிளைகள் நல்ல ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டுள்ளன என்பதையும் இம்மரத்தின் வேரிலிருந்துதான் அவை தமது உ ணவை எடுத்துக்கொள்கின்றன என்பதையும்,7 திருச்சபை மறக்க முடியாது. உண்மையில் நமக்கு அமைதி அருளும் கிறிஸ்து தமது சிலுவையின் வழியாக யூதருக்கும் பிற இனத்தாருக்கும் இடையே மீண்டும் உறவை ஏற்டுத்தியபோது தம்முள் இவ்விரு இனத்தாரையும் ஒன்றாக்கினார்8 எனத் திருச்சபை நம்புகிறது.

திருத்தூதர் பவுல் தன் இனத்தாரைப் பற்றிக் கூறுகின்ற கீழ்வரும் வார்த்தைகளைத் திருச்சபை என்றுமே கண்முன் கொண்டுள்ளது. ''அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதலுவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார்'' (உரோ 9:4-5): இந்தக் கிறிஸ்துவே கன்னிமரியாவின் மகன். திருச்சபையின் அடித்தளமும் அதன் தூண்டுகளுமான திருத்தூதர்களும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகுக்கு அறிவித்த எண்ணிறந்த முதல் சீடர்களும் யூத மக்களிடமிருந்துதான் தோன்றினார்கள் என்பதையும்திருச்சபை நினைவுர்கிறது.

விவிலியத்தின் சான்றுப்படி, எருசலேம் தன்னைக் கடவுள் தேடி வந்த காலத்தை அறிந்துகொள்ளவில்லை.9 மேலும் யூதருள் பலர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை; பலர் அது பரவுவதைத் தடுக்கவும் செய்தனர்.10 இருப்பினும் திருத்தூதரின் கூற்றுப்படி தம் முன்னோரை முன்னிட்டு யூதர்கள் இன்னும் கடவுளின் பேரன்பிற்கு உரியவர்களாய் இருக்கிறார்ள்.11 ஏனெனில் தாம் அவர்களுக்குக் கொடுத்த அருள் கொடைகளையும் அவர்களுக்கு விடுத்த அழைப்பையும் கடவுள் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. ஒருநாள் மக்கள் யாவரும் ஒரே குரலாய் ஆண்டவரைக் கூவி அழைத்து, ''ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்'' (செப் 3:9); கடவுள் ஒருவருக்கே தெரிந்த அந்த நாளைத்தான் இறைவாக்கினரோடும், மேற்கூறிய திருத்தூதரோடும் சேர்ந்து திருச்சபை எதிர்பார்த்திருக்கிறது.12

கிறிஸ்தவருக்கும் யூதருக்கும் பொதுவான அருள்வாழ்வு சார்ந்த மரபுச் செல்வம் நிறைய இருக்கிறது. எனவே, சிறப்பாக விலியம் மற்றும் இறையியல் ஆராய்ச்சி, சகோதர உரையாடல்கள், ஆகியவற்றின் வழியாக இவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து மதிப்பதை இத்திருச்சங்கம் ஆதரித்துப் பரிந்துரைக்க விரும்புகிறது.

யூத மக்களின் ஆட்சியாளர்கள் தங்களைப் பின்பற்றியவரோடு சேர்ந்து கிறிஸ்துவைக் கொல்லத் தூண்டினர்,13 என்பது உண்மைதான் எனினும், கிறிஸ்துவினுடைய துன்பங்களின்போது செய்யப்பட்டவைக்காக அன்று வாழ்ந்த யூதர்கள் யாவரையும் வேறுபாடின்றியோ, இன்றுள்ள யூதர்களையோ நாம் குற்றம் சாட்டக்கூடாது. திருச்சபை கடவுளின் புதிய மக்கள் குலமாயுள்ளதெனினும் யூதர்கள் ;கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றோ சபிக்கப்பட்டவர்கள் என்றோ விவிலியம் உரைப்பதாக நாம் கூறக்கூடாது. எனவே மறைக்கல்வியிலோ, இறைவார்த்தையின் போதனையிலோ நற்செய்தியில் காணும் உண்மைக்கும் கிறிஸ்துவின் உளத்திற்கும் பொருந்தாத யாதொன்றையும் யாரும் கற்றுக்கொடுக்கா வண்ணம் அனைவரும் கவனமாயிருத்தல் வேண்டும்.

இது மட்டுமல்ல, எந்த ஒரு மனிதருக்கும் எதிராக இழைக்கப்படுகின்ற எவ்வித அடக்குமுறையையும் கண்டிக்கிற திருச்சபை, யூதர்களோடு தான் கொண்டுள்ள பொது மரபுச் செல்வத்தைக் கருத்தில் கொண்டு, யூதர்கள் மட்டில் காண்பிக்கப்பட்ட வெறுப்புக்காகவும் அடக்குமுறைக்காகவும் செமித்தியர் இனத்தாருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்துத் தீங்குகளுக்காகவும் - இவை எக்காலத்தில் நிகழ்ந்தவையாயினும் சரி, யாரால் செய்யப்படடவையாயினும் சரி - மிகவும் வருந்துகிறது. எவ்வித அரசியல் நோக்கங்களுக்காகவுமின்றி, நற்செய்தியின் பரிவு நிறை அன்பை முன்னிட்டே திருச்சபை இவ்வாறு வருந்துகிறது.

இது மட்டுமன்று, யாவரும் நிறைவாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் அனைவரின் பாவங்களின் பொருட்டுக் கிறிஸ்து தமது அளவில்லா அன்பால் தாமாகவெ தம்மைத் துன்பங்களுக்கும் சாவுக்கும் உட்படுத்தினார். இதைத் திருச்சபை எப்போதும் படிப்பித்து வந்துள்ளது; இப்பொழுதும் பழப்பித்து வருகிறது. எனவே கிறிஸ்துவின் சிலுவை யாவரையும் அரவணைக்கும் அன்பின் அடையாளமாகவும், அருள் வழங்கும் ஊற்றாகவும் உ;ளளது என்பதை எடுத்துரைக்கவேண்டியது போதிக்கும் திருச்சபையின் கடமையாகும்.

source: http://www.bibleintamil.com/churchdoc/06other-religion.htm


-- Edited by devapriyaji on Wednesday 23rd of March 2011 01:00:36 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்திய கிறிஸ்தவ மக்கள் கழகம் - புதிய அரசியல் கட்சி உதயம்

Indian Christian People's Party launched
A.M. Chinnappa, Archbishop of Madras-Mylapore, on Sunday announced the launch of Indian Christian People's Party (ICPP) and unveiled its flag and website. The ICPP would function as the sole political organ of the Indian Christian Church, said A. Anthony Fernandez in his introductory remarks.
Manifesto

Archbishop Chinnappa said that the ICPP was not a threat to any political party and its election manifesto would be released in a week's time. The members also passed resolutions demanding that the State government withdraw cases filed against Christian educational institutions, steps to contain inflation and increase job opportunities and to prevent attack on fishermen.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிறிஸ்தவர்களின் கல்லறையில் தீண்டாமை
 
வேர் ஹவுஸ்  கல்லறைத் தோட்டம்
வேர் ஹவுஸ் கல்லறைத் தோட்டம்
திருச்சியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர் ஹவுஸ் கல்லறைத் தோட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களும், அந்த நகரில் கணிசமாக வாழும் பிள்ளை சமூகத்து கிறிஸ்தவர்களும் இரு வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றனர்.

இதை உறுதிப் படுத்தும் வகையில் கல்லறையின் நடுவே ஒரு குறுக்கு சுவர் கட்டுப்பட்டுள்ளது.

இந்த பாகுபாட்டை அகற்ற பெரியார் 1950களிலேயே கோரிக்கை விடுத்தும் இந்த சுவர் இன்னமும் அகற்றப்படவில்லை என்று சுட்டிக் காட்டும் பெரியார் திரவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், இதை தடுக்கத் தவறிய காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவினரைக் கண்டித்து போராடப் போவதாக கூறுகிறார்.

தலித் கிறிஸ்தவர்கள் புறந்தள்ளப்படுவதாகக் கூறி சமீப காலங்களில் தேவாலயத்துக்குள்ளேயே கலகக் குரல்கள் எழுந்துள்ளன. அனைவரும் சமம் என்பது தான் தேவாலயத்தின் அதிகாரபூர்வ நிலையாக உள்ளது.

சாதிப் பிரிவினையை கிறிஸ்தவம் ஏற்கவில்லை

சாதி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சுவரை தேவாலயம் ஏற்கவில்லை என்று தமிழோசையிடம் தெரிவித்த கத்தோலிக்கப் பாதிரியாரும் தமிழக அரசின் சிறுபான்மையினர் நல வாரியத்தின் தலைவருமான அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை, இந்தியாவில் உள்ள சில சமூக சூழல்களை புறம்தள்ள முடியாமல் கிறிஸ்தவம் இருப்பதாகக் கூறினார்.

திருச்சியில் உள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது என்றும் அதனால்தான் அந்த சுவரை அகற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். அதே சமயம் இந்த கல்லறையில் ‘கல்லறைத் திருநாள் விழா’ ஆயரால் நடத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கல்லறையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. ஆயர்களுக்கு கீழ் வரக்கூடிய பிற குருக்கள் இந்த மரணச் சடங்குகளில் கலந்து கொள்கிறார்கள் என்பதை அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை ஒத்துக் கொள்கிறார்.

தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு திருச்சபையில் நீதி கிடைக்கவில்லை என்கிறார் கத்தோலிக பாதிரியாரும், தலித் கிறிஸ்தவ செயற்பாட்டாளருமான யேசு மரியான்.

சம்மந்தப்பட்ட நிலம் தனியாருடையதாக இருந்தாலும், அந்த நிலம் ஆயரால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு அதை நிர்வகிக்கும் பொறுப்பு திருச்சபையுடையது என்று கூறும் யேசு மரியான், கிறிஸ்தவ நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு சமீப காலங்களாக இடங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிற்பாடுதான் மதமாற்றம்: உமா சங்கர்
 
உமா சங்கர்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர்
கிறிஸ்தவராக இருந்தும் தான் இந்து தலித் என்று சான்றிதழ் கொடுத்து இந்திய அரசுப் பணி வேலைக்கு சேர்ந்ததாக தமிழக அரசால் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர், தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதும் போது இந்து தலித்தாக இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய பிறகு, மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்.

1991-1996 ஆம் ஆண்டுகால ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால் பிரபலமடைந்த உமா சங்கர், அதன் பிறகு திமுக ஆட்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக செயல்பட்டார். அப்போது அவர் மின்னணு ஆளுமை குறித்து முன்மாதிரித் திட்டங்களை செயல்படுத்தியதற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் தலைவராக தான் இருந்தபோது 700 கோடி ரூபாய் மதிப்பிலான உப நிறுவனம் காணமல் போனதை கண்டுபிடிக்க தான் முயன்றதாகவும் அந்த நிலையில் தான் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டதாகவும் உமா சங்கர் தமிழோசையிம் தெரிவித்தார்.

பதவி மாற்றம் செய்யப்பட்ட வேளையில் கடும் மன உளைச்சலில் தான் இருந்தபோதே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும், சமீபதித்தில் தான் தொடர்ந்திருந்த வழக்கில் கூட தான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தன் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் அவர் அறவே மறுத்தா



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கிறிஸ்தவ மாற்றம்
 
ஊரே மாற்றம்
ஊரே மாற்றம்

இங்கிலாந்தின் தென்பகுதியில் உள்ள ஒரு ஊருடைய ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சமூகம் மொத்தமும் போப்பாண்டவர் வழங்கிய திருச்சபை மாற்ற யோசனையை ஏற்று ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுகின்றனர்.

ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்கள் ஆயர்களாக வருவதை அனுமதிப்பதென்கிற திருச்சபை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஃபோக்க்ஸ்டோன் நகரில் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த புனித பீட்டர்ஸ் தேவாலயத்து பக்தர்கள் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுவதை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

ஆங்கிலிக்கன் திருச்சபையில் 1994ஆம் ஆண்டு முதல்பெண்கள் மதகுருக்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தற்போது பேராயர்கள் கூட ஆகலாம் என்று அத்திருச்சபையின் மேலிடம் முடிவுசெய்துள்ளது.

பெண்களை ஆயர்களாக நியமிப்பது என்ற ஆங்கிலிக்கன் திருச்சபையின் இந்த முடிவோடு உடன்பட முடியாத அத்திருச்சபையின் பக்தர்கள், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறிவருவார்களானால், அவர்கள் ரோமன் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தபடியே ஆங்கிலிக்கன் திருச்சபை வழக்கங்களில் சிலவற்றை அவர்கள் தொடர இடமளிக்கப்படும் என்ற ஒரு விசேட அனுமதியை போப்பாண்டவர் பெனடிக்ட் சென்ற வருடம் வழங்கியிருந்தார்.

போப்பாண்டவர் இப்படி கூறியது சர்ச்சையை உருவாக்கியது. ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து பெருமளவானோர் மாறுவதற்கு இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த ஒரு தேவாலயத்தின் பக்தர்கள் மொத்தமும் ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து விலகி ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறுவதென்பது இப்போது ஃபோக்ஸ்டோனில்தான் முதல் முதலாக நடக்கிறது.

ஃபோக்ஸ்டோனில் உள்ள புனித பீட்டர் தேவாலயம் கேட்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸுடைய மறைமாவட்டத்தின் கீழ் வருகிறது.

பக்தர்கள் ஒட்டுமொத்தமாக மாறுகிறார்கள் என்றாலும் அவர்கள் தங்களுடைய தேவாலயத்தை ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு கொண்டுசெல்ல முடியாது என்றே தெரிகிறது.

இதனிடையே ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்கள் ஆயராக்கப்படுவதை ஏற்காத டிரடிஷனலிஸ்ட் பிரிவைச் சேர்ந்த லண்டன் ஆயர் ஒருவர் தானும் அங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாற எண்ணம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆங்கிலிக்கன் திருச்சபை மேலிடமானது பெண் ஆயர்களை டிரடிஷனலிஸ்ட்டுகள் மீது திணிக்கப்பார்க்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் நிர்வாகக் குழுவுக்கு அண்மையில் நடந்த தேர்தலில் டிரடிஸனலிஸ்ட் பிரிவினர் அதிகம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் ஆயர்கள் ஆவதை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை தம்மால் தடுத்து நிறூத்திவிட முடியும் என்று டிரடிஷனலிஸ்ட்டுகள் கூறுகின்றனர். ஆனால் பெண் ஆயர்கள் வருவதை ஆதரிப்பவர்களோ இக்கூற்றை மறுக்கின்றனர்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_03_2011_006_039-sci-asir-scam.jpg?w=529&h=503



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_03_2011_412_006-europe-no-religion.jpg?w=640&h=228



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110327a_002101001-matham.jpg?w=448&h=1328



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_03_2011_007_009-pediophioles.jpg?w=544&h=441



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

31_03_2011_010_011-ouz-temple-attacked.jpg?w=535&h=371



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110407a_008101010-aasir-csi.jpg?w=464&h=682



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kerala churchs silence puzzling 

Ananthakrishnan G | TNN 

Thiruvananthapuram: There is something amiss in Kerala this election.The Catholic Church has not issued its pastoral letter.
The church raked up a controversy last year when it issued a clutch of such letters ahead of the local body polls telling the laity how to vote.This time,it is unusually silent.The clergy says its because there is hardly anything new to convey.Not everyone buys this line.
Whatever needed to be conveyed has already been said.There are no new instructions.Nobody wants a pastoral letter to give the impression that the church interferes in politics, Paul Thelakkat,spokesman of the Syro-Malabar Church said.The Churchs stand is value-based.It doesnt want to appear as a party.This does not mean that all controversial issues are settled or there is change in perspective, he adds.
Jesmi,a former nun who left the Congregation of Mother of Carmel attributes the silence to the adverse publicity following earlier letters and to a petition pending before Kerala high court. 
The writ petition refers to alleged instances of political interference by religious and caste groups.It urges the court to declare these as bad in law and initiate action against those for whom such canvassing is done.
Critic Joseph Pulikkunnel said this should not be seen as a change in the churchs political stand.A pastoral letter ahead of the local polls set off a storm as it said it would be dangerous to elect Independents put up by parties that are atheist or against communal harmony.The Independent post was a trap to woo those respected in public life,said the circular.The letter was interpreted as the churchs attempt to take on the Left.Recently,church-backed bodies like the Thrissur Archdiocese Jagrata Samiti and the Malankara Association demanded that members be represented in the candidate list.
 






__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 


FRIDAY, APRIL 8, 2011

BISHOP AND HIS MEN PLEDGE SUPPORT TO BOTH MK, JAYA

 
THE NEW INDIAN EXPRESS 7-4-2011 PAGE 3




IT is evident that the Madurai-Ramnad Diocese has an axe to grind as the Bishop and his men have gone out of their way to meet both Karunanidhi and Jayalalitha pledging their unequivocal support to both the rival parties.

It is ironical that CSI Bishop for Madurai-Ramnad Christopher Asir paid a visit to Chief Minister M. Karunanidhi who arrived here on Wednesday, while just two days ago his men (about 25 church Pastors under his ‘control’) and his son Joel Sam Asir (a CSI school teacher – how can the school allow him to join a political party?), met J.Jayalalitha pledging their support to AIADMK (in that meeting bishop’s son Joel told the AIADMK chief J.J that he along with 3000 youths belonging to youth christian movement are joining her party). 

According to the reports published in the vernacular dailies, the Diocesan office-bearers and Joel visited Jayalalitha and expressed their solidarity with the leader. 

According to sources, on Tuesday, there was a diocese meeting which was presided by its youth wing president Joel Sam Asir (bishop’s son) . In the meeting, it was debated that though they had supported the DMK regime for the last 7 years not much was done (to them by the DMK government), including resolving the American College issue in their favour.

As Jayalalitha had promised to look into their demands, they have decided to work for the AIADMK in all the 16 districts coming under Madurai-Ramnad diocese.
 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110411c_015101007-church.jpg?w=640&h=588



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_04_2011_007_013-dindukal-liyoni.jpg?w=546&h=476



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110411c_015101008-cementry-non-xans.jpg?w=442&h=693



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2263437-rc-church-circulat.jpg?w=640&h=917



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tamil churches in Blore urge to vote for tolerance 

Daniel P George | TNN 


Tamil churches in Bangalore have jumped onto to the poll wagon,urging their congregations to vote for political parties with religious tolerance and elect those who protect the rights of the minorities.
Bangalore with a sizeable Tamil Christian population has nearly 200 Tamil churches,including Catholic and Protestant churches with over 60,000 members.Most of the members have roots in Thanjavur,Madurai,Tiruchi,Mayiladuthurai,Cuddalore,Chengelpet,Dindigul,Usilampatti,Tirunelveli and Chennai.
The Sunday service saw priests appeal to the congregations to return to Tamil Nadu to exercise their franchise.Professor Rev J Chellappa Packiaraj of Pavanasar Lutheran Church in his sermon said,I urge each one of you to pray for the ensuing polls in Tamil Nadu and enable us to select the right candidates.Vote for those with religious tolerance and do not waste your voting rights back in Tamil Nadu. 
Sources in both the Christian and Catholic diocese of Karnataka said it was not a collective decision but the churches were free to appeal to the Tamil voters.A section of the priests who spoke to TOI in private said they were rooting for the ruling DMK,while some were in favour of the AIADMK.The Congress only took third place among the clergy.
Peter Aruldass who works with an IT major in Bangalore and is attached to St Marks Cathedral is originally from Tambaram in Chennai.I moved to Bangalore a year ago and I have a voter ID in Chennai, he said.I will be there on April 13 to cast my vote. 
Moses Dharmaraj,a priest in rural Bangalore,said,There have been mixed reactions about priests urging voters to go back to Tamil Nadu and cast their ballot.I did not specify any party but appealed to my parish to exercise their franchise.

Pc0071100.jpg 
PARISH CALL: Churches on Sunday told the congregation to go back to TN to exercise their franchise 
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

animalsevolution_lg.jpeg?w=468&h=661

darwins-finchs-e1302641779213-darwin.jpg?w=468&h=363



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

3359281-minority-students.jpg?w=546&h=1341



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 20110419a_007101004-no-to-sonia-religion.jpg?w=640&h=628



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110420c_014101010-kounkaiyur-church.jpg?w=640&h=540

20110420c_014101009-kodunkayur-church.jpg?w=640&h=848



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_04_2011_013_024-church-break-stayed.jpg?w=547&h=623



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_04_2011_016_002-john-david.jpg?w=640&h=315



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110424a_014101009-john-david.jpg?w=464&h=951



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110425a_003101004-john-david.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110423a_007101008-conversion.jpg?w=211&h=1130



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23340421-gandhi-mandapam.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110425a_007101003-ceaserian.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Satanic past of church-going John David haunts neighbours 

Karthikeyan Hemalatha | TNN 

Chennai: Residents of III Main Road in Bhakthavatchalam Nagar,Adyar are shocked that John Marimuthu,who lived in their neighbourhood,is actually John David,convicted for murdering his junior,Navarasu,at Rajah Muthiah Medical College in 1996.John Davids family moved into the apartment complex on III Main Road in 2001,according to some residents.
On Sunday,a resident of the apartment complex that John Marimuthu stayed in preferred to stay indoors after she read the newspaper.No comments, she said shutting the door.
Many others were surprised that the quiet man they saw every day was a murderer.Weve been neighbours for around ten years.Never once did I imagine he could be a brutal murderer, said Raju,a neighbour.Asked if there was a fear in the neighbourhood now,he said,He is a young educated man who committed a horrendous mistake on impulse.I dont think there is anything to fear.I would have been scared if he was a professional killer. 
A few remembered him as one who didnt have much of a life apart from work and home.I never saw him come home with friends or relatives.Every Sunday he went to church with his mother.Once in a while,I would see him smoking in a tea stall two km away, said Manohar,a cab driver.
John Davids mother Esther was the president of the residents welfare association of the apartment complex.Any communication that she had to send to other residents was sent through me.She never socialised much, said the watchman at the complex.
Johns lawyer Padmanabhan,however,said his client is innocent.All the evidence used in court is circumstantial.There is no direct evidence to prove he is the murderer.His confession came 12 hours after being in police custody, he said.
The case has been a stepping stone for anti-ragging laws in operation now.Tamil Nadu was one of the first to bring out an anti-ragging act.The Prohibition of Ragging Act was passed the same year as Navarasus murder,1996.
In May 2007,the Raghavan Committee suggested to the Supreme Court to include ragging as a separate section in the Indian Penal Code (IPC).A Supreme Court order makes it mandatory for all educational institutions to file a FIR if any incident of ragging is reported.

Pc0031500.jpg 
BEHIND THE BARS: The house of John David at Bhakthavatchalam Nagar in Adyar.He was sentenced to double life imprisonment by the Supreme Court in the Navarasu murder case 
 

20110421a_010101002-johndavid.jpg?w=640&h=620



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110427a_012101006-money-for-royal-marriage.jpg?w=464&h=728



__________________
«First  <  14 5 6 7 814  >  Last»  | Page of 14  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard