New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Continuing Christian Conversion Tactics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Continuing Christian Conversion Frauds.
Permalink  
 


23129609.JPG orphnages



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111206a_007101012.jpg church statue broken



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111206a_006101009.jpg kuzantahi kadathal



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_12_2011_001_019.jpg monalisa davinci decode



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22151406.JPG kudankulam



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_12_2011_001_053.jpg god a sub atomic particale discovered



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை சாதிக்கிறித்துவர்களே!

நண்பர் அசோக் தமிழனின் தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கான கால விரயத்தை தவிர்க்கிறேன். தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கானபோராட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எத்தனையோ வழக்குகள், எத்தனையோ கமிஷன்கள், ஆயிரக்கண‌க்கான வாய்தாக்கள், கோடிக்கணக்கான பண விரயம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் ஒன்றிலும் காரியம் ஆகவில்லை. கடந்த 60 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான, பெண்களுக்கான, இசுலாமியர்களுக்கான, சீக்கியர்களுக்கான ஏன்? பவுத்தர்களுக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் பல பயனுள்ள வெற்றிகள் கிடைத்திருக்கும்போது தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் கிடைப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என தோழருக்கு அறிவுறுத்டுகிறேன்.

தலித்துகள் கிறித்துவர்களாகி விட்டால் இந்து தலித்துகள் எல்லாம் கிறித்துவர்களாகி விடுவார்கள் என்கிற பயம் இந்திய அரசுக்கு துளியும் இருப்பாதாகத் தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால் புரட்சியாளர் அம்பேத்கரால் கலகமிடப்பட்ட பவுத்தத்துக்கு கண் எதிரில் தலித் இட ஒதுக்கீடு கிடைத்ததைக் கண்டு இந்து தலித்துகள் எல்லாம் பவுத்தத்தை நோக்கி ஒடி வந்திருக்க வேண்டும். அப்படி ஒன்று ந‌டக்கவே இல்லை. பவுத்தத்தை விட இந்திய கிறித்துவம் அப்படி ஒன்றும் அறிவியல் பூர்வமான மதம் இல்லை. சொல்லப்போனால் வருண தர்ம, சாதிய படிநிலைகளில் நாரிப்போன ஒருவகையான செமி இந்து மதம் தான் இந்திய கிறித்துவம். இயேசுவும் புத்தரைப் போன்ற அல்லது கிறித்துவமும் பவுத்தத்தைப் போன்ற இந்து மதம் தான் என‌வே இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கெஞ்சிப்பார்த்தாலும் இட ஒதுக்கீடு கிடைக்கப்போவதில்லை. காரணம் தலித்துகள் எல்லாம் கிறித்துவர்களாகி விடுவார்கள் என்கிற பயம் இதில் இல்லை. கிறித்துவர் எதிர் இந்து எதிர்ப்பு பார்வையிலிருந்து கொஞ்சம் விலகி கூடவே குந்தியிருக்கின்ற சகக்கூட்டாளியை சாதிக் கிறித்துவர்களை சந்தேகப்பட்டு பாருங்கள் விடை கிடைக்கும்.

கூடங்குளம் பிரச்சனைக்கு அமெரிக்காவும், கிறித்துவர்களும் தான் காரணம் என கட்டவிழ்த்துவிடப்படும் கதையை கேட்டு இந்தியாவே சற்று அச்சப்படும்போது 60 ஆண்டு காலம் கிடப்பில் கிடக்கிற தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீடு அகில உலக கிறித்துவத்துடன் தொடர்புடைய பிரச்சனையா, இல்லையா! அப்படி ஒரு பிரச்சனையை அகில உலக ஆதரவு திரட்டி கிளப்பிப் பாருங்களேன், பார்ப்போம். அப்படி ஒரு நிலை உருவாகுமேயானால் இந்தியாவில் உள்ள இந்துக்களும், சங்கரமடங்களும் அச்சப்படுகிறதோ இல்லையோ! முதலில் அச்சப்படுபவர்கள் கிறித்துவத்தில் மிகச்சிறுபாண்மையினராக குந்தியிருக்கின்ற சாதிக் கிறித்துவர்களுக்குத்தான் வயிற்றில் புளியைக் கரைக்கும். அவர்களுடைய த‌லைமை பீடமும், வேலை வாய்ப்பும், ஏகாதிபத்திய ஆண்டை அதிகாரமும் ஆட்டம் கண்டுவிடும். எந்த மதத்தில் சாதிக்காரர்கள் மிகச்சிறுபாண்மையினராகக் குந்திக்கொண்டு பெரும்பாண்மை தலித்துகளை ஆட்டு மந்தைகளாக மேய்க்க முடியும். இந்திய சாதிக்கிறித்துவத்தில் தான் அது சாத்தியம். இப்போது புரியும் என நினைக்கிறேன். தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்கு யார் தடையாக, குறுக்கீடாக, முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்று.

நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். ஒருவேளை இந்த இந்திய அரசு சமூக, பொறுளாதார கட்டமைப்புகளில் முற்றிலும் பலவீனமாகி முடங்கும் நிலை ஏற்பட்டால் உடனே அதை தூக்கி நிறுத்தும் வல்லமை இந்தியாவின் இரண்டாவது பணக்காரனான கிறித்துவ திருச்சபை நிறுவனங்களுக்கு உண்டு என மார்தட்டும்போது, கேவலம் ஒரு 60 ஆண்டுகால‌ தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை இந்திய கிறித்துவ திருச்சபைகளால் சாதிக்க முடியாதா? சிரோன்மனி பிரபிந்துவாராவைவிட பலவீனமானதா இந்திய கிறித்துவ திருச்சபை. யார் காதில் புண்ணாக்கு கிடிப்பது?

இத்தகைய இட ஒதுக்கீட்டு விவகாரத்தை இந்து தலித்துகளுக்கும், கிறித்துவ தலித்துகளுக்கும் இடையே மோதவிட்டு சாதிக்கிறித்துவ பார்ப்பனியர்கள் எவ்வாறு வேடிக்கைப் பார்க்கின்றார்கள் என்பதைக்கூடவா புரிந்து கொள்ள முடியாது. இதற்கு இந்தியாவின் இந்தோலிக்க (இந்து+கத்தோலிக்க) சாதிக்கிறித்துவர்கள் எந்த அளவுக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதை டெல்லியில் கேட்டுப்பாருங்கள். இதற்கு சர்வ தேச கத்தோலிக்கம் எப்படி துணையாக இருக்கிறது என்பதும் மிக வெளிப்படையாக விளங்கும். ஆனால் தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்கு இந்தோலிக்கர்கள் (இந்து+கத்தோலிக்க) தான் அழுது வடிகிறார்கள் என்பது போன்ற மாயை தோன்றும். அது சுத்த கபடதாரி தலித் வேடம். அப்படியிருந்தால் இன்றைக்கு சிறுபாண்மையினர் என்று ஏகபோக நலன்களாக சிறுபாண்மையினர் ஆணையம், இன்னபிற அரசு கூடாரங்களில் சிறுபாண்மையினர் நலனை அனுபவித்து வரும் மைனாரிட்டி கத்தோலிக்க சாதிக் கிறித்துவர்கள் இதற்காக என்ன புடிங்கி கிழித்தார்கள்? தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டுக்காக வெறும் 24 மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்யச்சொல்லுங்கள் பார்ப்போம். அல்லது 72% பெறும்பாண்மையாக இருக்கிற தலித் கிறுத்துவர்களின் தலைமையில் ஒருவாரம் என்ன! ஒரு வருடத்துக்கு அனைத்து கிறித்துவ ஆலயங்களையும் இழுத்து மூடுங்கள் பார்ப்போம். தலித் கிறித்துவர்களுக்கு ஒன்னும் குடி முழுகிடாது. முடியுமா? நிச்சயம் அப்படி ஒரு பிரளயம் தலித் கிறித்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்காக திருச்சபைக்குள் நடக்க ஒருபோதும் சாதிக் கிறித்துவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். இதற்கு துருப்புச்சீட்டாக உள்ளுக்குள் குந்தியிருக்கின்ற சூடோ தலித் கிறித்துவர்களையே ஏரோதுகளாக்குவார்கள். அப்படி இருக்கும்போது கிறித்துவ ஓநாய்களின் தலித் கிறித்துவ இட ஒதுக்கீட்டு அழுகை ஒரு வேட்டிப்பேச்சு?

வாரத்தில் ஒரேஒரு நாள், ஞாயிற்றுக் கிழமையில், மூன்றாவது மணி ஒலித்ததும் ஆலயத்தின் உள்ளே நுழைந்து 2 மணி நேரத்தில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியேறுகிற உழைக்கும் தலித் கிறித்துவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் நீங்கள் என்ன? நான் என்ன? எவராலும் தடுக்க முடியாது. இரட்டை வாக்குரிமையே கிடைத்துவிடும். இந்திய கிறித்துவமே சாதிமயமாகிக் கிடக்கும்போது பாவம் தலித்துக‌ள் கிறித்துவ மதத்திற்குள் வந்து, இங்குள்ள சூடோ தலித்துகளிடமும், சாதிக்கிறித்துவர்களிடமும் மாட்டி என்ன சாதிக்கப்போகிறார்கள்?

இந்தோலிக்க (இந்து+கத்தோலிக்கம்) மதமும் ச‌ற்றேறக்குறைய சங்கரமடத்தின் சாபக்கேடு தான். புராட்டஸ்டன்ட் என்கிற எதிர்ப்புக் கிறித்துவர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். குளிர்ச்சியான நீரில் போடப்பட்ட ஆமைக்கு கீழிருந்து நெருப்பு மூட்டினால் அது என்ன வகையான சாவுச் சுகம் காணுமோ அதுபோல புராட்டஸ்டன்ட் என்கிற எதிர்ப்புக் கிறித்துவம் சோரம் போய்க்கொண்டிருக்கின்றது.

வெட்கத்தோடு, கோபத்தோடு, ஆதங்கத்தோடு, அழுகையோடு சொல்கிறேன். இந்த கழிசடை கிறித்துவ சாதித்திருச்சபைகளால் தலித்துகளுக்கு விடுதலை எனில் அதற்கு பவுத்தமும் அல்ல‌து எந்த மதமும் இல்லாமல் சிதறிக்கிடக்கிற (இந்து) தலித்தாக இருப்பதே எவவளவோ மேல். கிறித்துவத்தை மதமாற்றத்துக்கான குறியீடாக பாவிக்காத புரட்சியாளர் அம்பேத்கர் இன்று உயிரோடிருந்து இந்திய கிறித்துவர்களின் சாதியச் சேட்டைகளை உற்றுக்கவனித்திருப்பாரேயானால் இந்த முடிவுக்குத்தான் வந்திருப்பார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111216a_008101011.jpg poli jathi



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_12_2011_001_024.jpg chritoper hitchenes

17_12_2011_008_037.jpg hitxchens



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_12_2011_012_004.jpg kudan threat20111218a_004101006.jpg threat to kudan supporters



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111218a_001101004.jpg kufsnkusl



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_12_2011_009_056.jpg Philipines



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111219a_004101012.jpg xmus



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_12_2011_011_012.jpg Govt School teacher bible



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_12_2011_002_008.jpg EB pOLI



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_007_010-uma.jpg?w=140&h=300



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25716390.JPG usa cancer



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111229a_012101006.jpg russia23446625.JPG Gita



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_12_2011_003_005.jpg Hindu run Jerusalem



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_12_2011_014_009.jpg bg



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

01_01_2012_011_004.jpg BBC Apologise minister



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

Consumerism of Christianity and New Year -1

02_01_2012_007_048.jpg New Year Molest02_01_2012_001_010.jpg U s citizen kissed women

20120102a_008101010.jpg Andra hooch kills 14

02_01_2012_003_011.jpg Tuticorin20120102a_009101010.jpg Tuticorin bothai



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

03_01_2012_016_027.jpg Minur



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

24846109.JPG us temple attacked



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

04_01_2012_003_004.jpg American Huggers



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

05_01_2012_003_006.jpg sunami ngos



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

05_01_2012_014_010.jpg Newyork bomber



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

05_01_2012_002_002.jpg Padmanabasamy



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22| யாழ்ப்பாணம்]

 
nm.jpg
யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற வெளி நாட்டுப் பிரதிநிதிகள், கத்தோலிக்க மதம் சார்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந்து கொள்வர். 
ஆனால், அவர்கள் எவரும் இந்து மதத் தலைமைகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இந்து சமயத்தில் இருக்கக்கூடிய மதத் தலைமைகள் சிந்திப்பதும் இல்லை.

வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து என்ன பயன்? ஆகையால் நாங்கள் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று யாரேனும் கூறிக்கொள்ளலாம் . ஆனால் அதனை ஒரு தக்க பதிலாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று முன்தினம்கூட பிரித்தானியத் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து பேச்சு நடத்தியி ருந்தனர். யாழ்.ஆயரும் நிலைமைகளை தெளிவாக அவர்களிடம் எடுத்துக் கூறியிருந்தார்.நல்ல விடயம்.

எனினும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரித்தானிய தூது வர்கள் இந்து சமயத் தலைமைகளை சந்திக்கவில்லை. சிலவேளை களில் இன்னும் பத்து பன்னிரண்டு வருடங்களில் இலங்கையில் இந்து சமயம் என்பதை கத்தோலிக்கமாக மாற்றி விடுவோம். ஆகை யால் இந்து சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் விட்டு விட லாம் என்ற நினைப்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் அங்ஙனம் நடந்து கொண்டனரா? அல்லது யாழ்ப்பாண அரச அதிபர் இந்து சமயத் தலை மைகள் பற்றி தெரியாமல் அல்லது நினைப்பில் கொள்ளாமல் விட்டு விட்டாரா? என்ற கேள்வி இந்துக்களிடையே எழுந்துள்ளது.

தென் பகுதிக்கு விஜயம் செய்யும் வெளி நாட்டுக் குழுக்கள் மரியா தைக்கேனும் பெளத்த பீடாதிபதிகளை சந்திக்கின்றனர். அவ்வாறு அவர்களை சந்திக்க தவறினா லும் கூட இந்த நாட்டின் ஆட்சி அதி காரம் பெளத்த பீடங்களின் காலடிகளில் கட்டுண்டு இருப்பதால் அதுபற்றி அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை.

நிலைமை இதுவாக இருக்க, வட பகுதிக்கு வருகின்ற வெளிநாட்டுக் குழுக்கள் வடக்கின் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து சமயத் தலைமைகளை சந்திக்காமல் தனித்து கத்தோலிக்க தலைமையை மட்டும் சந்தித்து விட்டுச் செல்கின்றன.எப்படி இருக்கிறது நிலைமை? இந்து சமயம், மக்கள், அதன் சமகால நிலை மைகள்; அதுபற்றி எல்லாம் கதைக்கவும் பேச வும் யார் உள்ளனர்? இதை இவ்விடத்தில் கூறும்போது சிலர் விவாதித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல முடியும்.

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல் லுங்கள். கத்தோலிக்க மதத் தலைமையைச் சந்தித்தால் இந்து மதத் தலைமைகளைச் சந் திக்கக் கூடாதா? முதலில் இங்குள்ள சமயவாதத்தை நீக்கிக் கொள் வோம். அதன் பின்னர் இனவாதத்தை கண்டிப்போம். அப்போதுதான் இறைவனும் எமக்கு உதவுவான்.
editor@valampurii.com


__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

 பைபிள் கூறும் உண்மைகள்

பாவத்தைப் போக்க வந்த பரமபிதா

- ஆய்வாளன்

jesus-christ-0206_03.jpg

லகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான். அப்படிப்பட்ட பாவம் உலகத்தில் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? அதை விரட்டுவது எப்படி என்ற விவரங்கள் உலகின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த விவரங்கள் பைபிளிலேயே இருக்கின்றது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், எல்லோருமே தெரிந்து கொள்ளும்படிச் செய்வது அவசியமாகின்றது. முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவன் உலகத்தைப் படைத்த ஆதிகாலத்திலிருந்தே வரவேண்டும்.

(பேதுரு 3:5) பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின.

இறைவனாகிய தேவன் ஆதிநாளிலே பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நீரையும், காற்றையும் படைத்தார். பூமியில் வாழ்வதற்கு ஆதாம், ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஆண், பெண் இருவரையும் படைத்தார். பூமியிலே அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக கார்டன் ஆப் ஈடன் (Garden of Eden) என்ற தோட்டத்தையும் உருவாக்கி அதில் அவர்களை ஆனந்தமாக வாழும்படிச் செய்தார் சில நிபந்தனைகளுடன்.

ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் விதித்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். அவர்கள் இருவரும் தோட்டத்திலோ, உலகின் மற்ற பகுதிக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், இறைவனால் அமைக்கப்பட்ட கார்டன் ஆப் ஈடன் என்ற தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது. மேலும், அந்தக் கனி இருக்கும் மரத்தின் அருகில்கூட போகக் கூடாது என்று நிபந்தனையாக மட்டுமல்லாது கட்டளையாகவும் கூறியிருந்தார்.

ஆண்டவனின் ஆணைப்படியே நடந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் தேவனால் படைக்கப்படாத சாத்தானைக் காணும் வரை.

reading-bible_2316_1024x805_02.jpgசாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.

பாவம் என்றால் என்ன? அது எப்போது எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு விடை இப்பொழுது எல்லோருக்கும் நன்றாக, தெளிவாக விளங்கியிருக்கும். உலகில் இப்படித் தோன்றிய பாவத்தைப் போக்கவே இயேசு பூமிக்கு வந்தார்.

1. மத்தேயு (1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். அவர்களில் பிரதான பாவி நான்.

இப்படியாக உலகில் தோன்றிய பாவத்தினால் ஜனங்கள் பாவியாகி விட்டதால், அந்தப் பாவிகளைக் காப்பாற்றவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதனைப் பைபிள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றோம். ஆதாமையும், ஏவாளையும் அவர்களால் உண்டான உலக மக்கள் அனைவரையும் பாவியாக்கியது அவர்கள் சாப்பிட்ட பழத்தினால் அல்லவா. அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட பழத்தில் என்னதான் மகிமை இருக்கின்றது. இதனுடைய மகத்துவம்தான் என்ன? மர்மம்தான் என்ன என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்ட பழத்தின் பெயர் ஆங்கிலத்தில் புரூட் ஆப் நாலெட்ஜ் (Fruit of knowledge), தமிழில் அறிவுக் கனி என்பதாகும்.

அதாவது, உலகத்தைப் படைத்த தேவன் ஆதாம், ஏவாள் இருவரையும் படைக்கும் பொழுது அவர்கள் இருவரது அறிவையும் எடுத்து, அதைப் பழமாக்கி தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலே வைத்துவிட்டு ஆதாம், ஏவாள் இருவரையும் முட்டாள்களாக உலாவ விட்டிருந்தார். அவர்கள் இருவரும் சாத்தானின் பேச்சைக் கேட்டு அறிவுக்கனியைச் சாப்பிட்டதால் அறிவாளி ஆகிவிடுகிறார்கள்.

adam-eve.jpgஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.

மத்தேயு (3:11) மனந்திரும்புத லுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து மக்களிடமுள்ள பாவத்தைப் போக்குவதாகக் கூறி ஜனங்களிடையே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பாவத்தைப் போக்கக்கூடிய ஞானஸ்நானம் என்றால் என்ன? ஜலத்தைக் கொண்டு ஞானஸ்நானம் செய்வது என்பது எப்படி என்ற கேள்வி எழக்கூடும்.

ஞானம் என்றால் அறிவு. ஸ்நானம் என்றால் கழுவுதல், குளிப்பாட்டுதல் என்று பொருள். ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்க அதாவது அவனுடைய அறிவைப் போக்க, அவனுடைய அறிவை ஜலத்தினாலே கழுவி, குளிப்பாட்டி ஞானத்தை ஸ்நானம் செய்து முட்டாளாக்குவதுதான் இயேசு தேர்ந்தெடுத்த வழி. இதே முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவோ முயன்றும் இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே சீடர்களாக ஆக்கி முழு முட்டாள்களாக மாற்ற முடிந்தது. பதிமூன்றாவது நபரான யூதாசை இயேசுவால் பாதிதான் முட்டாளாக மாற்ற முடிந்தது. பாதி அறிவாளியாக இருந்தான். பாதி அறிவாளியாக இருந்த யூதாஸ் இயேசுவின் செயலை பிலாத்து மன்னனிடம் காட்டிக் கொடுத்தான்.

மாற்கு (15:15) அப்பொழுது பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

மாற்கு (15.24) அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

மாற்கு (15:37) இயேசு மகா சப்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

பூமிக்கு வந்த நோக்கம் முழுமையாக முடிவடையாமல் இறக்க நேரிட்டதால், ஆவி வடிவமெடுத்து இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களைச் சந்தித்து, தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுவதற்காக அவர்களிடம் வந்து கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறார்.

மத்தேயு (28:18) இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி,

மத்தேயு (28:19) நீங்கள் புறப்பட்டுப் பேய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

மத்தேயு (28:20) நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேஷம் பண்ணுங்கள்.

அவர்களுடைய ஞானத்தை ஸ்நானம் செய்து அவர்களுடைய பாவத்தை, அதாவது அறிவைப் போக்கி, புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றுங்கள். முட்டாள்களாக மாறிவிட்டார்களா? என்பதைக் கண்டுகொள்வதற்குச் சில வழிமுறைகளையும் கூறினார்.

மாற்கு (16:16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.

மாற்கு (16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்க ளாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.

மாற்கு (16:18) சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.

மனிதர்களுக்கு அறிவை உண்டாக்கிய சாத்தானாகிய பிசாசுவை விரட்டியடிப்பார்கள். பாம்புகளைக் கையிலே பிடிக்கச் சொன்னாலும் பிடிப்பார்கள். சாவைத் தரக்கூடிய விஷத்தைக் குடித்தாலும் சாகமாட்டார்கள் என்று சொன்னாலும் நம்புவார்கள். இதில் எதையேனும் நம்ப மறுத்தால் அவர்களுடைய ஞானம் சரியாக ஸ்நானம் செய்யப்படவில்லை. அவர்கள் புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாறவில்லை என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று இயேசு எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்பின்,

லூக்கா (24:51) அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

மாற்கு (16:20) அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கொர்த்தியர் (1:23) நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.

ரோமர் (6:6) நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு

ரோமர் (6:12) சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக மாற்கு (1:4) யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.

மாற்கு (1:8) நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பிரசங்கித்தான்.

இவ்வாறாக உலக முழுவதும் பல இடங்களையும் சுற்றி பல்வேறு விதமாகப் பிரசங்கம் செய்து அனைத்து ஜாதியிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் செய்து புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றினார்கள். தன் வாழ்நாளிலேயே இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே பாவத்தைப் போக்கிப் புனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆனால், இயேசுவால் புனிதர்களாக மாற்றப்பட்ட பன்னிரெண்டு சீடர்களும் உலக முழுவதும் பெரும்பான்மையான மக்களைப் புனிதர்களாக, அதாவது முட்டாள்களாக மாற்றி இயேசுவுக்குள் பலப்படுத்தினார்கள். ஒருவன் ஸ்நானம் பெற்று முழுமையான இயேசுவின் விசுவாசியாக அதாவது கிறித்தவனாக மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் ஒரு முழு முட்டாளாக மாறிவிட்டான் என்றே அர்த்தம்.

ரோமர் (5:14) ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ் செய்தவர்களையும் ஆட்கொண்டது.

1. யோவான் (3:8) பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாகிறான். ஏனெனில், பிசாசானவன் ஆதி முதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். ரோமர் (16:20) சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.

ஆதியிலேயே சாத்தானுடைய செயல்பாடு களால் பூமியில் பாவம் உண்டாயிற்று. அந்தப் பாவத்தைப் போக்கவே இயேசு பிறந்து வர வேண்டியதாயிற்று. சாத்தானால் உண்டான ஞானத்தை, ஸ்நானம் செய்து ஒவ்வொருவருடைய பாவத்தை அதாவது அறிவைப் போக்கி அவர்களை இயேசுவுக்குள் பலப்படுத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாவியாகவே அதாவது அறிவாளியாகவே பிறக்க ஆரம்பித்து, இதனால் ஞானஸ்நானம் பெற்று கிறித்துவின் விசுவாசியாக மாறிய ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை சர்ச்சுக்குக் கொண்டு சென்று அந்தக் குழந்தையின் ஞானத்தை ஸ்நானம் செய்து அதனுடைய பாவத்தை - அறிவைப் போக்கி இயேசுவின் விசுவாசியாக்கி, கிறித்தவனாக மாற்றி வீட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடந்து வருகின்றது என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை உண்மையென்று பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. அப்படியானால், பாவத்தை - அறிவை நிரந்தரமாகப் போக்கும் வழிதான் என்ன? அறிவை உண்டாக்கிய சாத்தானை நசுக்கி அழிப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு. அப்படியானால் சாத்தானை அழிப்பதற்கு இயேசு மறுபடியும் பிறந்து வரவேண்டுமே.  அதுவும் சீக்கிரமாய் வரவேண்டுமே.

(வெளி 22:20) இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

சாத்தானை நிரந்தரமாக அழித்து, பூமியின் மேலுள்ளோரின் பாவத்தை அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாக மாற்றி இரட்சிக்க பரம பிதாவாகிய இயேசு மீண்டும் சீக்கிரமாய் பிறந்து வர தயார் ஆகிவிட்டார். பாவத்தை, அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

கிறித்தவர்களும், கிறித்தவ மதபோதகர்களும் மற்றவர்களைப் பாவிகளே என்று அழைப்பதற்கான காரணமும், இயேசு விரைவில் வருகிறார் என்று கூறுவதன் காரணமும் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

2012 டிசம்பர் 21 : உலகம் அழியப் போகிறதா?

- கி.அழகரசன்

unmai-,28jan-1-15,29-pages-33_03.jpg.pagespeed.ce.7xewkBEagA.jpg

நாம் வசித்துவரும் உலகம் என்னும் பூமி வருகின்ற 2012 டிசம்பர் 21 அன்றுடன் அழிந்துவிடப்போவதாக மதவாதிகளைப் பின்பற்றும் சில புவிவான் (புவியியல் மற்றும் வானியல்) விஞ்ஞானியினர் பத்திரிகைச் செய்திகளின் மூலமாகவும், தொலைக்காட்சிச் செய்திகளின் மூலமாகவும் செய்திகளை வெளியிட்டு உலக மக்கள் அனைவரையும் தற்போது அச்சம் அடையச்செய்து வருகின்றனர்.

 

இது அவ்வப்போது நடைபெற்றுவரும் அச்சுறுத்தல் நிகழ்வுகளின் தொடர்போல் தொடர்ந்து வருகின்ற செய்தி என்றாலும் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதித் தொடக்கம் 1990, 1994, 1998, 2000, 2004, 2008 ஆண்டுகளின் போதும் அதற்குப் பின்பும் சில புவிவான் விஞ்ஞானியினர் உலகம் அழிந்துவிடும் என்று மக்களை அச்சுறுத்தி வந்ததுடன் அவர்களின் எண்ணங்களில் தோன்றிய அதற்கான விளக்கங்களையும் வெளியிட்டு வந்திருக்கின்றனர்.

அவர்களின் அறிவிப்பினைப் போன்று விபரீதம் ஏதும் நடைபெறவில்லை என்பதை உலக மக்களும் புரிந்து தெளிவுகொண்டிருக்கும் நிலையில்,

மீண்டும் 2012 டிசம்பர் 21இல் உலகம் அழிந்துவிடப் போவதாக சில புவிவான் விஞ்ஞானியினர் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் சொல்லி வரும் விளக்கங்களில் உலக மக்கள் நம்பும்படியான உறுதியான நம்பகத்தன்மை இல்லை என்பதால் அவர்களின் அச்சுறுத்தலுக்குத் துணை சேர்க்கும் விதமாக பண்டைய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன என, மாயன் பழங்குடி இனத்தவர்களின் காலண்டர் அன்றுடன் முடிகிறது என்றும், மேலும் உலகில் தோன்றியுள்ள பல மதங்க ளின் நூல்களிலும், உலகத்தின் அழிவு நெருங்கிவிட் டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில மேற்கோள்களைக் காட்டியும் உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட புவிவான் விஞ்ஞானியினர் தாங்களே அனைத்தையும் அறிந்திட்ட அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே மிகைப்படுத் திக் கொள்ளும் விதமாக உண்மை நிலைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது என்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அவர்கள் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு என்ற நிலையினதாக இருக்க, இயற்கையின் படைப்பான புவியியல் மற்றும் வானியல் அமைப்பில் இதுநாள் வரை புவிவான் விஞ்ஞானியினர் அறிந்திடாத, அதாவது அவர்களால் கண்டறியப்படாத மிக முக்கிய நிகழ்வுகள் என்னென்ன என்பனவற்றை முதலில் காண்போம்.

1. வான் பொருட்களான சூரியன், சந்திரன், பூமி போன்றவற்றின் இயக்கங்களுக்கு அவைகளின் ஈர்ப்பு விசைகளே காரணம் என்பது சர் அய்சக் நியூட்டனின் ஈர்ப்புவிசை கண்டுபிடிப்பிற்குப் பின்பே உலக மக்கள் அனைவரும் அறிந்திடப் பெற்றனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், நியூட்டனின் காலம் தொட்டு இதுநாள் வரை ஈர்ப்பு விசையின் மூலம் அதாவது எங்கிருந்து எப்படித் தோன்றுகிறது? என புவிவான் விஞ்ஞானியினரால் கண்டறியப்படவில்லை.

2. ஈர்ப்பு விசையின் இயக்கத்தில் அண்டம் பிரபஞ்சம் என்று சொல்லப்படும் யுனிவர்ஸின் (Universe) மய்யத்திற்கும் நூக்லியஸ் (Nucleus) சூரியன் போன்ற நட்சத்திரங்கள் பூமி போன்ற கோள்கள் சந்திரன் போன்ற துணைக் கோள்களுக்கும் உள்ள பிடிப்பு என்னும் தொடர்புகளுடன் அண்டம் முழுவதும் உள்ள அனைத்து வான் பொருட்களின் ஒட்டுமொத்த சுற்றுச் சுழற்சிக்கான காரணத்தை முறையாகத் தொடர்புப்படுத்தும் தி கிராண்ட் யூனிஃபைடு தியரி (The Grand Unified Theory) அதாவது ஈர்ப்பு விசை என்னும் காந்தவிசைத் தொடர்புகளை முறையாகத் தொடர்புப்படுத்து வதாகும். இதுவும் புவி வான் விஞ்ஞானியினரால் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை. அதாவது முழுமைப்படுத்தப்படவில்லை.

3. சூரியக் குடும்பத்துக் கோள்களின் சுழற்சித் தளம் என்பது எலிப்ஸ் (Ellipse) என்ற முட்டை வடிவ அமைப்பினைக் கொண்டது என்றும் கோள்கள் அனைத்தும் முட்டை வடிவப் பாதையில் சுற்றி வந்தாலும் சமன்பாடு என்ற நிலையைத்தானே அடைகின்றன என்றே புவிவான் விஞ்ஞானியினர் வரையறை செய்திருக் கின்றனர். இதில் உயிரற்ற சடப்பொருட்களான கோள்கள் தானே சமன்பாடு அடைகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே! இதற்கான தீர்வும் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.

Warhammer-Mark-Of-Chaos-628.jpg4. பூமியானது பருவ நிலைகளின் மாற்றத்தின்போது ஏற்ற மற்றும் வற்ற என்ற இருவித விசைகளை வெளியிடுகின்றன என்றும், குறிப்பாக மழைக்காலத்தின்போது ஒருவித விசையும், பனிக்காலத்தின்போது ஒருவித விசையும், கோடைக் காலத்தின்போது ஒருவித விசையும் என பருவ காலத்திற்கு ஏற்ற விசைகளைப் பரப்புவதாக புவிவான் விஞ்ஞானியினர் வரையறுத்திருக்கின்றனர்.

உயிரற்ற சடப்பொருளான பூமியானது தன் பருவநிலை மாற்றங்களின் காலம் அறிந்து செயல்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையே! வான் பொருட்களின் இயக்கங்களுக்கு ஈர்ப்புவிசை என்ற ஒன்றைத் தவிர வேறு விசை என்பது இல்லாதபோது, ஏற்ற, வற்ற அதாவது தேவைப்படும்போது கூட்டியும் குறைத்தும் விசையைப் பரப்புகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே! அதற்கான சரியான காரணம் கண்டறிந்து இன்றளவும் விளக்கப்படவில்லை.

5. பொருள் ஒன்று தற்சுழற்சி சுற்று சுற்றிட அதற்கு அச்சு என்ற ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் வான் பொருட்களான நட்சத்திரங்களும், கோள்களும் அச்சு என்ற ஒன்று இல்லாது அந்தரத்தில் மிதந்தபடி தற்சுழற்றி பெற்று இயங்குகின்றபோது, அவைகள் தற்சுழற்சி பெறுவதும், அந்தரத்தில் மிதப்பதும் எப்படி என்பதற்கான காரணங்கள் இதுநாள் வரை கண்டறிந்து விளக்கப்படவில்லை.

6. கண்ணிற்கும் தொலைநோக்கிகளுக்கும் புலப்படாத ஒரு மர்ம சக்தி, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் அண்ட வெளியிலிருந்து வந்து பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கும் இதர உயிர்களுக்கும் நன்மை தரக்கூடிய பலதரப்பட்ட அடிப்படைத் துகள்களுடன் காமா கதிர்வீச்சைக் கொண்டதாகவும் இருக்கிறது என்று வரையறுத்திருக்கும் புவிவான் விஞ்ஞானியினர் அக்கதிர்வீச்சு எங்கிருந்து? எப்படி? உருவாகி வருகின்றது என்பதற்கான சரியான விளக்கங்களும் கொடுக்கவில்லை.

7. இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா வகையான உயிருள்ள, உயிரற்ற திண்ம, திரவ, வளிம நிலைகளில் இருக்கும் நிறமுள்ள நிறமற்ற பொருட்களின் தோற்றத்திற்கும் கட்டமைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று சொல்லப்படும் அணு பற்றிய வரையறையில்,

அணுவின் மய்யத்தில் நேர் மின்றேற்றம் கொண்ட புரோட்டான் இருக்க, அப்புரோட்டானுடன் இணைந்த நியூட்ரானையும் சேர்த்து எதிர் மின்னோட்டம் கொண்ட எலக்ட்ரான் சுற்றிவருகிறது என்றே விஞ்ஞானியினர் வரையறுத்திருக்கின்றனர் என்பதெல்லாம் சரியே. ஆனால்,

அதில் எலக்ட்ரான் என்பது எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதைப் பற்றியும் ஈர்ப்பு விசைக்கான அடிப்படைக் காரணம் எது? என்பதைப் பற்றியும் புவிவான் விஞ்ஞானியினரால் விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.

ஆக, மேற்கண்ட 7 மிக முக்கிய தீர்வுகளுக்கு புவிவான் விஞ்ஞானியினரால் விடை கண்டறியப்படாத நிலையில் வருகின்ற 2012 டிசம்பர் 21இல் உலகம் அழிந்துவிடப் போவதைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்புகள் செய்து வருவது நகைப்பிற்கு உரியதாகும். எனினும் அப்புவிவான் விஞ்ஞானியினர் எடுத்துரைக்கும் விளக்கங்களையும் அதற்கான மறுப்பின் தெளிவையும் அடுத்தடுத்துக் காண்போம்.

எடுத்துக்காட்டு விளக்கங்களும் மறுப்புகளும்:

1. மாயன் காலண்டரின் முடிவு

காலம் என்ற நேரத்தை நொடிகளாகவும் நிமிடங்களாகவும் பிரித்து நாட்களையும் வருடங்களையும தொகுத்து உலகின் முதல் காலண்டர் என்ற ஒன்றை உருவாக்கியவர்கள் மாயன் பழங்குடி இனத்தவர் ஆவர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ள மாயன் காலண்டரின் காலங்கள் வரும் 2012 டிசம்பர் 21 முடிவடைகின்றது. எனவே அன்றுடன் பூமி அழிந்துவிடும் என அச்சுறுத்தி வருகின்றனர்.

unmai-%28jan-1-15%29-pages-31_01.jpgதெளிவு: கோடானுகோடி ஆண்டுகளாய் சூரியனைச் சுற்றிவரும் பூமி வானியல் மற்றும் புவியியல் பாதிப்புகளால் அவ்வப்போது மாற்றங்கள் அடைந்து வந்திருப்பினும் சூரியனின் வாழ்நாள் முடியும்வரை பூமியும் நிலைத்திருக்கும் என நாம் நம்பலாம்.

தொலைநோக்கிகள் பல வகை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இதுநாள் வரை எந்த ஒரு நட்சத்திரமும் எரிந்து முடிந்து ஒளியிழந்துவிட்டதாக பதிவு செய்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக சமீபத்திய பதிவுகள் எதுவும் இல்லை என்பதால் நாம் அச்சம் அடைந்திடத் தேவையில்லை.

மேலும், மாயன் பழங்குடி இனத்தவரின் காலத்தின் கணக்கீடு பூமியை மய்யமாகக் கொண்டு சூரியன் மற்றும் இதர கோள்கள் சுற்றிவருகின்ற பொய்த் தோற்ற அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதால், அவர்களின் கணக்கு நிச்சயம் தவறாகவே இருக்கும். அதனால் இந்த அச்சுறுத்தலைத் தவிர்த்திடலாம்.

2. சூரியப் புயல்களின் தாக்கம்:

1s_03.jpgசூரியனிடமிருந்து வெளியேறிவரும் காந்தப் புலன்களுடன் கூடிய வெப்ப ஆற்றல்கள் புயல்களாக அன்றைய தினத்தில் பூமியைத் தாக்கும். அதன் கடுமையால் உலகைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் செயலிழந்து போவதுடன் உலகில் உள்ள அனைத்து மின்சக்தி கேந்திரங்கள் (Power Grids) செயலிழந்து போகும். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் பருவநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உலகம் முழுவதும் உறைநிலைக்குப் போய் உயிர்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என அச்சுறுத்தியிருக்கின்றனர்.

தெளிவு: உருவத்தில் பூமியைவிட பன்மடங்கு பெரியதாய் இருக்கும் சூரியனின் ஈர்ப்புவிசை பூமியைப் போன்று 28 மடங்கே ஆகும். மேலும், தன்னைத்தானே 25லு மணி நேரத்தில் கிழக்கிலிருந்து மேற்காக தற்சுழற்சி பெற்றிடும் சூரியனின் சுழற்சி வேகத்தில் சூரியனிலிருந்து புறப்படும் எந்தக் காந்தப் புயல்களும் நேரே 90 டிகிரியில் வந்து பூமியைத் தாக்கப்போவதில்லை.
அப்படி 90 டிகிரியில் (ஓர் இடத்திலிருந்து புறப்பட்ட காந்தப்புயலானது சூரியனின் தற்சுழற்றி வேகத்தின் விளைவால் 120 டிகிரி கோணத்தையே சென்றடைந்திடும் என்பதால், காந்தப்புயலின் வலிமை என்பது குறைந்து மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், சூரியனை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் அதன் கோள்களும் துணைக்கோள்களும் கிடைமட்டம் (படுக்கை வாட்டில்) என்று சொல்லப்படும் 180 டிகிரியில் சுற்றி வரவில்லை.

அவை கிடைமட்டத்திற்கு சற்றே சாய்வான அதாவது தென்புறத்தில் உயர்வு, வடபுறத்தில் தாழ்வு என்ற நிலையில்தான் சுற்றுச்சுழற்சி பெறுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு விளக்கங்களைக் காண்போம்.

பூமிக்கோளின் காந்த துருவங்கள் பூமி உருண்டையின் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடவில்லை. அவை பூமியின் சாய்வுக்கோணமான 23.5 டிகிரிக்கு நேரே அமைந்திடாமல், அதன் வடபுறத்தில் சற்றே மேற்காகவும், அதன் தென்புறத்தில் சற்று கிழக்காகவும், 17 டிகிரி இடைவெளி என்ற அளவில் பூமிக்கோளின் சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு நேர்க்குத்தாக அமைந்திருப்பதும் கண்டறியப்பட்டு புவியியல் விஞ்ஞானியினரால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

பூமியின் நிலையினைப் போன்றே சுக்கிரன் மற்றும் புதன் கோள்களின் காந்த துருவங்கள், அந்தந்தக் கோள்களின் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடாமல் பூமியின் சாய்வுக் கோணத்தைவிட சற்றே குறைவான இடைவெளியில் அதனதன் சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு நேர்க்குத்தாக அமைந்திருக்கும்.

அடுத்து சூரியனுக்கும் பூமிக்கும் வெளிப்புறக் கோள்களான செவ்வாய், வியாழன், சனி மற்றும் இதர கோள்களின் காந்த துருவங்கள் அதனதன் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடாமல், அதிக டிகிரி இடைவெளியில் அதனதன் அதிகத் தொலைவிலான சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு ஏற்ப நேர்க்குத்தாக அமைந்திருப்பதைக் கொண்டு அறிந்திடப் பெறலாம் என்பதை எந்தப் புவிவான் விஞ்ஞானியினரும் மறுத்திட முடியாது.

இதன் அடிப்படையில் 23.5 டிகிரி சாய்வுக் கோணத்திலான சூரிய மண்டலக் கோள்களின் சுற்றுச்சுழற்சித் தளத்தில் வருகின்ற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21அன்று பூமிக்கோளின் இருப்பிட நிலையைக் கவனிக்குமிடத்து, மய்யத்தில் நின்றிருக்கும் சூரியனின் நிலையை 180 டிகிரி கிடைமட்ட அளவினதாகக் கொண்டால், பூமியானது சூரியனுக்கு உயரே சாய்வான தளத்தில் அதன் இருப்பிட எல்லையில் நின்றிருக்கும் என்பதால், சூரியனின் வெப்ப ஆற்றலுடன் கூடிய காந்தப் புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியாது.
மேலும், கூடுதல் விவரமாக ஒவ்வொரு டிசம்பர் 21ஆம் தேதியின்போதும் பூமியின் வடக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து நாடுகளில் அப்போது கடும் மழை மற்றும் பனிக்காலமாக இருந்திடும் நிலையென்பதால், வளி மண்டலத்தில் நிலவிடும் அதிகப்படியான ஈரப்பதத்தால் சூரியப் புயல்களின் வெப்பம் குறைக்கப்படும் என்பதால், பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்த முடியாது. எனவே, அச்சம் அடைந்திடத் தேவையில்லை.

3. மதவாதிகளின் நம்பிக்கைகள்:

கிறித்துவர்களின் புனித நூலான பைபிளை ஆராய்ந்த மத ஆராய்ச்சியாளர்கள், கடவுளுக்கும் சைத்தானுக்கும் நடக்கும் இறுதிப்போர் (Armageddon) அன்றைய தினத்தில் நடைபெறும் என்கிறார்கள். இதே கருத்தை, பவுத்தர்களின் புனித நூலான அய்.சிங்.லும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்து மதத்தின் புனித நூல்களும் கலிகாலத்தின் உச்சம் நெருங்கிவிட்டதாகவும், உலகம் அழிவை நெருங்கிவிட்டதாக மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

தெளிவு: கிறித்துவ மதம் என்பது ஆங்கிலேயர் வாழ் பகுதியிலும், இஸ்லாம் மதம் என்பது அரேபியர் வாழ் பகுதியிலும், இந்து மதமும் பவுத்த மதமும் இந்தியாவில் தோன்றி பரவி வந்திருப்பினும் அந்தந்த மத நூல்கள் அந்தந்த இறைவனால் அருளப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்க, வான் பொருட்களான சூரியன், சந்திரன், பூமியைப் படைத்து, பூமியில் மட்டும் பல உயிர்கள் உயிர் வாழ்ந்திடத்தக்க வழி வகைகளைப் படைத்து, ஆறறிவு பெற்ற மனிதர்களைப் படைத்து அனைத்தையும் இயக்கிக் காத்துவரும் தெய்வங்களில் எந்த தெய்வமும் அவைகளின் சரியான இயக்கங்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கவில்லை.

குறிப்பாக, மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீதிநெறிகளையும் நற்போதனைகளுடன் மனிதர்களால் எளிதில் உணர்ந்திட முடியாத ஆன்மா என்றால் என்ன? அது என்னில் ஓர் அங்கமே என மொழிந்திருப்பதைப் போல் சூரியனை மய்யமாகக் கொண்டு பூமிதான் சுற்றி வருகிறது என்பதைப் பற்றியோ, பூமியின் தற்சுழற்சித் திசையான மேற்கிலிருந்து கிழக்கான சுழற்சியின் கவர்ச்சி விசையால், சந்திரன் இடப்பக்கச் சுற்றாக எதிர்மறையாக பூமியைச் சுற்றிவரும் உண்மை நிலைகள் பற்றிய குறிப்புகளோடு கொடுக்கவில்லை என்பதால் இந்த அச்சுறுத்தலையும் தவிர்த்திடலாம்.

4. மஞ்சள் கல் எரிமலைகள் வெடிப்பு

மஞ்சள் கல் (Yellow Stone) எரிமலைகள் வெடிக்கும்போது எரியும் நெருப்புக் குழம்புகளுடன் வான் வெளியில் வீசியடிக்கப்படும் சாம்பலின் அளவு பூமி முழுவதும் சூழ்ந்துநின்று சுமார் 15,000 ஆண்டுகள் சூரியனை மறைத்திடும். அதனால் பூமியானது வெப்பத்தை இழந்து உறை நிலைக்குப்போய் அழிந்துவிடும் என்றும் ஒவ்வொரு 6,50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும் திறன் கொண்டது. மீண்டும் வெடிக்கப்போவது அந்த 2012 டிசம்பர் 21 அன்றுதான் என புவியியல் விஞ்ஞானியினர் அச்சுறுத்தி வருகின்றனர்.

தெளிவு: தற்போது உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் எரிபொருளான கச்சா எண்ணெயின் தேவைகளை உணர்ந்து அங்கங்கே பூமியில் துளைகளை இட்டு உறிஞ்சி எடுத்து வருகின்றன. உலக அளவில் எரிபொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்திருக்கும் நிலையில் தற்போது அங்கங்கே வெடித்துவரும் எரிமலைகளின் சீற்றங்கள் குறைந்த அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்தியிருக்கும் நிலையினைக் கவனிக்குமிடத்து மஞ்சள் கல் எரிமலைகள் வெடித்து அதனால் வெளியேறும் சாம்பல்கள் பூமி முழுவதும் சூழ்ந்துநின்று 15,000 ஆண்டுகள் சூரியனை மறைத்திடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே?

ஆனால், இயற்கையின் நிகழ்வாக அச்சாம்பல்கள் வெகுவிரையில் பூமியில் படிந்து பாதிப்புகள் நீங்கிவிடும் என்பதற்கான விளக்கங்களைக் காண்போம்.

பூமியின் மீதுள்ள பொருட்களைக் கவர்ந்திழுப்பது என்பது பூமியின் ஈர்ப்பு விசையினைக் குறிக்க. பூமிக்கு வெளிப்புறத்தில் வான்வெளியில் சுழன்றுவரும் செயற்கைக் கோள்களையும் துணைக்கோளான சந்திரனையும் கவர்ந்திழுப்பது என்பது பூமியின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கவர்ச்சி விசையினைக் குறிக்கும்.

காந்தத்தால் கவர்ந்திழுக்க முடியாத ஒரு பிளாஸ்டிக் பந்தை வானத்தில் வீசி எறிந்தால், அது பூமியில் வந்து விழுவதற்கு பூமியின் கவர்ச்சி விசையே காரணம் என்று புவிவான் விஞ்ஞானியினர் தவறாக வரையறுத்து எழுதி வைத்திட, அந்தத் தவறான வரையறையினைப் படித்து வந்த இன்றைய புவிவான் விஞ்ஞானியினர் அவர்களின் மனதினில் தோன்றியபடி செய்திகள் வெளியிடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

பிளாஸ்டிக் பந்து மற்றும் இறகினை வானத்தில் வீசியெறிந்திடும்போது பிளாஸ்டிக் பந்தானது அதன் எடையின் காரணமாக காற்றை விலக்கிக் கொண்டு முதலில் பூமியில் விழுவதும், இறகானது குறைந்த அளவிலான எடையின் காரணமாக காற்றால் தாங்கப்பட்டு மெதுவாக கீழே விழுகின்ற செயலுக்கு அவற்றின் எடைகளின் வித்தியாசமே காரணம் ஆகும்.

காற்று இல்லாத இடத்தில் சந்திரனில் நின்று கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் செய்துகாட்டிய செய்முறை விளக்கம் ஒன்றினை இங்கே நினைவுகூர்வோம். இரும்புத்துண்டு, இறகு இரண்டையும் ஒரே நேரத்தில் கீழே விழுந்திடும்படி செய்திட்டபோது அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையில் வீழ்ந்ததைக் கொண்டு அவற்றின் எடைகளே அதற்குக் காரணம் என்பதை அறிந்திடப் பெறலாம். கூடுதல் விவரமாக, பூமியின் ஈர்ப்பு விசை அளவில் 1/6 பங்கு அளவிலான ஈர்ப்பு விசை சந்திரனில் உண்டு என்பதையும் நினைவிற்கொள்க!
ஆனால் பூமியைப் பொறுத்தமட்டில் வானத்தில் வீசி எறியப்படும் பொருட்கள் கீழே வந்து விழுவதற்கு பூமியின் மீதுள்ள வளிமண்டலத்தின் அழுத்தம் என்பது ஒரு கூடுதல் காரணம் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன்படி, அதாவது வளிமண்டலத்தின் அழுத்தம் இருப்பதைக் கருத்தில் கொண்டு கவனிக்குமிடத்து, மஞ்சள் கல் எரிமலைகள் வெடிப்பால் பூமியின் மீது பரப்பி விடப்படும் சாம்பல்கள், காற்றில் உள்ள ஈரப்பதத்தால், குளிர்ந்து, ஈரத்தன்மைக்கு உள்ளாகும் ஒவ்வொரு சாம்பல் துகள்களும் நுண்ணிய எடைக்கு உள்ளாகி, ஒன்றுடன் ஒன்று படிந்து எடை என்பது ஏற ஏற சாம்பலின் படிமங்கள் விரைந்து பூமியில் படிந்திடத் தொடங்கி குறைந்தது 15 நாட்களில் வானம் தெளிந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

5. பூமியின் மீது பயங்கர விபத்து

பெர்க்லி பல்கலைக்கழகத்து புவிவான் விஞ்ஞானியினரின் கணித ஆய்வுகளின்படி பூமிக்குப் பெரிய அளவிலான பயங்கர விபத்து நிகழும் காலம் நெருங்கிவிட்டது என்று அச்சுறுத்தியிருக்கின்றனர்.

தெளிவு: பெர்க்லி பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகளின் விளக்கங்கள் ஏதும் தரப்படாத யூகங்கள் மாயன் பழங்குடி இனத்து தடைப்பட்ட காலண்டர் கணக்கினைப் போன்று தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே!

6. துருவ காந்த சக்திகளின் இடமாற்றம்:

பூமியானது வடக்கு, தெற்கு என இரண்டு காந்த துருவங்களைக் கொண்டது. பூமியைச் சுற்றிலும் சூழ்ந்துள்ள காந்தப் புலன்களே, சூரிய ஒளியின் ஊடாக பூமிக்கு வந்திடும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து அனைத்து உயிர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. பூமியானது தன் துருவங்களை 75,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்துகொள்ளும் தன்மை உடையது. மேலும், அந்தக்காலம் முடிந்து 30,000 ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டது. தற்போது பூமியின் துருவ இருப்பிட எல்லைகள் 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நகர்ந்து போகின்றன என்றும்,

இப்படி துருவங்கள் இடம் மாறிடும்போது ஏற்படும் காந்தப் புலன்களின் சமச்சீர் இன்மையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதுடன், சூரியனின் அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் பூமியைத் தாக்கி உலகில் உள்ள அனைத்துவகை உயிரிகளையும், பொருட்களையும் எரித்து அழித்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறப் போவதும் அந்த நாளில்தான் என அச்சுறுத்தி வருகின்றனர்.

தெளிவு: பூமியின் வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் தன்னைத் தானே இடம் மாற்றித் திரும்பிட வாய்ப்பே இல்லை. தி கிராண்டு யூனிஃபைடு தியரியைப் பூர்த்தி செய்திடாத புவிவான் விஞ்ஞானியினரின் தவறான அறிக்கைக்கு இதுவே சான்றாகும்.

அப்படி பூமியானது தன் துருவங்களை மாற்றித் திரும்பினால் நம் யுனிவர்ஸின் கட்டமைப்புடன் அதன் இயக்கங்கள் நிலைகுலைந்து, யுனிவர்ஸின் ஒட்டுமொத்த அழிவாகவே அது இருக்கமுடியும். தற்போது அப்படி நடைபெற வாய்ப்பில்லை.

அடுத்து, உயிரற்ற சடப்பொருளான பூமி 75,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் துருவங்களைத் தானே இடம் மாற்றிக்கொள்ளும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையே. இதில் 30,000 ஆண்டுகள் கடந்துவிட்டதாம். இதுவும், தி கிராண்ட் யூனிஃபைடு தியரிக்குப் பொருந்தாத வரையறையாக இருப்பதால், தவறான யூகங்களை நாம் நம்ப வேண்டாம்.

மேலும் பூமியின் துருவ எல்லைகள் ஓர் இடத்திலிருந்து 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நகர்ந்து போகின்றன என குறிப்பிட்டிருக்கின்றனர். இதுபோல் துருவங்கள் சற்றே நகர்ந்து செல்கின்றன என்பது உண்மையே! ஆனால், அப்படி நகர்ந்து செல்லும் துருவ எல்லைகள் மீண்டும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய நிலைகளை அடைந்து கோள்கள் சமன்பாடு அடைகின்றன என்ற நிகழ்வைக் கண்டறிந்திடாது விட்டுவிட்டனர். இயற்கையின் நிகழ்வாக காலம் காலமாய் நடைபெற்றுவரும் அந்நிகழ்வுகளைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.

இறுதியாக புவிவான் விஞ்ஞானியினர் உலக மக்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலில் அவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு முக்கிய அச்சுறுத்தல் நிகழ்வு என்ன என்பதைக் காண்க.

பூமியானது தன் துருவங்களைத் தானே இடம் மாற்றிக்கொள்ளும். அப்போது காந்த துருவங்களின் சமச்சீர் இன்மையால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தாக்கி பூமியில் உள்ள அனைத்து உயிரிகளும், பொருட்களும் எரிந்து அழிந்துவிடும் என்பதெல்லாம் சரி. ஆனால்,

பூமியின் வட துருவம் தென்துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் திரும்பிடும்போது பெரிய அளவிலான பூகம்பத்துடன் பூமியின் நான்கு பங்கில் மூன்று பங்கு அளவு கொண்ட கடல்நீர் பொங்கி பெரிய அளவிலான சுனாமி புரண்டு அடித்து அனைத்தையும் முதலில் அழித்திடாதோ! பின்னர்,

என்ன அறிக்கை வெளியிடுகின்றனர். எந்தவித அச்சுறுத்தலும் முழுமையான விளக்கங்களுடன் சரியான காரணங்களுடனும் கொடுக்கப்படவில்லையே! மேலும், குறிப்பாக புவிவான் விஞ்ஞானியினரால் இன்றளவும் கண்டறியப்படாத, முதல் கொடுக்கப்பட்டுள்ள 7 முக்கிய விவரங்களைக் கண்டறிந்து விளக்கிட முடியாத விஞ்ஞானியினரின் கூற்றை இனியும் எப்படி நம்ப முடியும்.

ஆக, நடப்பு 21ஆம் நூற்றாண்டையும் தாண்டி நம் பூமியானது நூற்றாண்டில் அடுத்த செஞ்சுரியும் அடித்திடும் என நாம் நம்புவோம்.

குறிப்பு:

உலக புவிவான் விஞ்ஞானியினரால் இன்றளவும் கண்டறிந்து விளக்கங்கள் கொடுக்கப்படாத அனைத்துப் புதிர்களுக்கும் அவர்களால் மறுத்திட முடியாத தெளிவு வரையறைத் தொகுப்புகளைக் கொண்ட வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்தகத்தின் வரையறைகளை அடிப்படையாகக் கொண்டே மறுப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

10_01_2012_001_004.jpg udayakumar



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

13_01_2012_010_059.jpg us soldier pizz



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

சடலங்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க படையினர் இனங்காணப்பட்டனர்

 

 
us2a%282%29.jpgஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்கப் படையினர் நால்வரும் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படையினர் நால்வரில் இருவர் அதிகாரிகளால் நேர்காணப்பட்டுள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்படவில்லை எனினும் அவர்கள் படையினருக்கு இழுக்கை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்குவதாகவும்
அமெரிக்காவின் சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. 
இவர்கள் அமெரிக்க கடற்படையின் 'மரைன்ஸ்' எனும் பிரிவை சேர்ந்தவர்களாவர்.
இப்படையினர் நால்வரும் வடகரோலினா மாநிலத்தின் கேம்ப் லெஜுவன் எனும் மரைன்ஸ் முகாமை தளமாகக் கொண்ட இரண்டாவது மரைன்ஸ் ரெஜிமென்டின் 3 ஆவது பெற்றாலியனில் இருந்தவர்கள் என  சி.என்.என். தெரிவித்துள்ளது. எனினும் இவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை
இம்முகாமில் சுமார் 40,000 படையினர் இருப்பதாகவும் 2 ஆவது மரைன்ஸ் படையணியின் 3 ஆவது பெற்றாலியனில் சுமார் 800 பேர் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் சட்ட அமுலாக்கல் பிரிவு, இச்சம்பவம்  தொடர்பான பிரதான விசாரணையை நடத்துகிறது. அமெரிக்க படை சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் சர்வதேச போர்விதிகளை மீறியமை தொடர்பான ஆதாரங்களை அப்பிரிவு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை மரைன்ஸ் படைப்பிரிவும் தனியான விசாரணையை நடத்துகிறது.
'இந்த வீடியோ வெளிவந்த விதம் அதன் உண்மைத் தன்மையை நாம் உறுதிப்படுத்தாத போதிலும், அதில் வெளிப்படுத்தப்பட்டுள் காட்சிகள் எமது எமது ஆழமான பெறுமானங்களுக்கு இசைந்தவையாக இல்லை. அவை மரைன்ஸ் படையினரின் பாத்திரத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை' என மரைன்ஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்கிரிமினல் விசாரணைகளின் மூலம், மேற்படி படையினர் போர்ச் சட்டங்களை மீறியுள்ளனரா என ஆராயப்படு வாய்ப்புள்ளது என அமெரிக்க படைத்தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் மீது சிறுநீர் கழித்த நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய், அமெரிக்க ராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டா, முன்னாள் உப ஜனாதிபதி ஜோன் மெய்கெய்ன் உட்பட அமெரிக்க, ஆப்கானிஸ்தான் பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

மது பழக்கத்தை ஊக்குவிக்கும் பேஸ்புக், டுவிட்டர் !

 

images?q=tbn:ANd9GcQWNRvg5pfLYXNf0amTWUXDCtBYxhj-SZJAYnXw-_YDw-2UoXqs5wபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையத்தளங்கள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் மனிதர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் குறித்து நியூசிலாந்தின் மாசே பல்கலைகழக பேராசிரியர் அன்டோனியா லயன்ஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல் பற்றி லயன்ஸ் கூறியதாவது: சமூக இணையதளங்கள் மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகின்றன.

மது பழக்கம் மிக மிக சாதாரணமானது தான். பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள்கூட குடிக்கிறார்கள் என்ற மனநிலையை இளைஞர்கள் மத்தியில் இந்த இணையத்தளங்கள் ஏற்படுத்துகின்றன. மது அருந்தும் ஒளிப்படங்களை பிரபலப்படுத்துகின்றன.
இளைஞர்கள் அதுபோன்ற ஒளிப்படங்களை பகிர்ந்துகொள்ளவும் வலியுறுத்துகின்றன. இந்த இணையத்தளங்கள் மூலமான சமூக இணைப்பு, மது பழக்கம் ஆகியவை புது அந்தஸ்து, அனுபவம், மகிழ்ச்சியை தருவதாக பரப்பப்படுகிறது. இதனால் தவறான பாதை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
சமூக இணையதளங்களை பார்க்க ஆரம்பித்த பிறகுதான் மது பழக்கத்தை ஆரம்பித்ததாக 18- 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் தெரிவிக்கின்றனர். ஒருவர் விரும்புகிற இசையையும் அவருக்கு ஏற்ற மது பானத்தையும் “டிரிங்க்கிஃபை” என்ற இணையத்தளம் ஒப்பிட்டு மது வகையை பரிந்துரைக்கிறது.
மது பாட்டில்களை திறக்கும் ஓபனர் வசதியும் ஆப்பிள் ஐபோனில் இருக்கிறது. ஒவ்வொரு முறை பாட்டிலை திறக்கும் போது பாட்டு சத்தம் கேட்குமாம்.
எத்தனை முறை பாட்டில் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஓபனர் அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. இதுவும் ஒரு வகையில் மது ஊக்குவிப்பு போலவே தெரிகிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

15_01_2012_007_049.jpg Jehovah witness



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

17_01_2012_011_026.jpg pONGAL School



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

18_01_2012_010_002.jpg Badukar

படுகர் இனத்தவருக்கு பழங்குடியினர் அந்தஸ்து: தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=387582

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இனத்தவர்கள், தங்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே இவர்களது கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், படுகர் இனத்தவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது.

 

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் படுகர் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள், 3.5 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், ஊட்டியில் ஒன்றரை லட்சம் பேரும், கூடலூரில் ஒரு லட்சம் பேரும், குன்னூரில் ஒரு லட்சம் பேரும் வசித்து வருகின்றனர். தங்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை அளித்திட கோரிக்கை வைத்து வருகின்றனர். 1991ம் ஆண்டு தான், மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வந்தது. இதுதொடர்பாக, தமிழகத்தில் அப்போது இருந்த அ.தி.மு.க., அரசாங்கம், மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதம், மத்திய அரசின் ரிஜிஸ்டிரார் ஜெனரலின் பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர், இந்த கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி, மத்திய அரசு நிராகரித்து விட்டது.

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியன்று, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அமைச்சர் கி÷ஷார் சந்திரதேவுக்கும் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழகத்தில் நீலகிரியை சுற்றி வசிக்கும் படுகர் இன மக்களின் கோரிக்கை குறித்து, ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, படுகர் இனத்தவர்கள் முழு தகுதி படைத்தவர்கள். பழங்கால கலாசாரம் அவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் தான் வசிக்கின்றனர். இவர்களுக்கென்றே, படகு என்ற மொழியும் கூட உள்ளது. 1931ம் ஆண்டு, அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியினர் எடுத்த கணக்கெடுப்பிலும் கூட, பழங்குடியின பட்டியலில் தான் படுகர் இன மக்களை வைத்திருந்தனர். நீலகிரி மாவட்டத்தில், 1817ம் ஆண்டில் தோடர், கோட்டா, குரும்பர், படுகர் ஆகிய இனத்தவர்கள் மட்டுமே இருந்தனர். இவர்கள் சோளம், பார்லி போன்ற பிரத்யேக தானிய வகைகளை பயிரிடுபவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, இவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த கடிதத்தை, மத்திய அரசின் ரிஜிஸ்டிரார் ஜெனரல் அதிகாரிகள், தங்களது பரிசீலனைக்கு மீண்டும் எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பாக ஆய்வு செய்து பார்த்து விட்டு, தங்களது அறிக்கையை மத்திய பழங்குடியின அமைச்சகத்திடம் வழங்கினர். அந்த அறிக்கையில், பழங்குடியின பட்டியலில் ஒரு இனத்தவர்களைச் சேர்க்க வேண்டுமெனில், விசேஷமாக சில தகுதிகளை அந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தனிப்பட்ட பழக்க வழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தவிர, அவர்களது வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாக வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில், படுகர் இனத்தவர்களது பழக்க வழக்கங்கள் இல்லை. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, படுகர் இனத்தவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க இயலாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் கி÷ஷார் சந்திர தேவ், கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது. இதுதொடர்பாக, மாநில ஆதிதிராவிடர் நலத் துறைக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.



-- Edited by Admin on Wednesday 18th of January 2012 07:58:13 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

18_01_2012_001_008.jpg rAID ON NGOs

 

கூடங்குளம் அணு உலைக்கு எதிரானவர்களுடன் தொடர்புடைய, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது, டெல்லியிலிருந்து வந்துள்ள, மத்திய அரசு அதிகாரிகள் கணக்குக் கேட்டு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள், நேற்று ரெய்டு நடத்தினர். டெல்லியிலிருந்து ரகசியமாக வந்துள்ள சிறப்புப் படையினர், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவன நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரிகள் கூறியதாவது:புதுடில்லியிருந்து, மத்திய அரசில் பணியாற்றும் துணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள, ஜோகிந்தர் பிரசாத் மற்றும் கணக்குப்பிரிவு அதிகாரி, சுக்கிந்தர் சிங் ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர், தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களிடம் ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.
அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் அலுவலக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இரவு வரை, தொண்டு நிறுவன ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த பணம், அதற்கான முறையான செலவுக்கணக்கு மற்றும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த திடீர் ரெய்டில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.



-- Edited by Admin on Wednesday 18th of January 2012 08:23:41 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து 54 கோடி ரூபாய் நன்கொடை வந்ததை, மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு கட்டுப்பாடு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அணு உலை எதிர்ப்பாளர்கள், நான்கு மாதங்களாக எந்த வேலைக்கும், தொழிலுக்கும் செல்லாமல், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது குறித்து, மத்திய உள்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பணம் வந்தது உண்மையா?
 இதுகுறித்து, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் கூறியதாவது:அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் வந்துள்ளது. இந்த பணத்திற்கு கணக்கு கேட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய உள்துறையினரும், உள்ளூர், "கியூ' போலீசாரும் விசாரணைக்கு சென்றனர்.இதை முன்பே
 
தெரிந்துகொண்ட அணு உலை எதிர்ப்புக் குழு, விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகளிடம் பேரம் பேசியது. ஆனால், மத்திய அரசு சமயோசிதமாக, அதிகாரிகள் குழுவை கடைசி நேரத்தில் மாற்றி அனுப்பியது. அந்த குழுவினர், தொண்டு நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கம்ப்யூட்டர், "ஹார்டு டிஸ்க்'கை மாற்ற, அங்கிருந்த சிலர் முயற்சித்தனர். ஆனாலும், தேவையான தகவல்களை, அதிகாரிகள் சேகரித்து விட்டனர். இவ்வாறு சத்தியசீலன் கூறினார். 

வழக்கு பதியணும்:
 மேலும் அவர் கூறியதாவது: தொண்டு நிறுவனத்திற்கு வந்த பணத்தில் தான், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்களின் நலனுக்கு செலவு செய்வதாக, சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள்,வெளிநாட்டு நிதியை கணக்கு காட்டுகின்றன.இது தொடர்பான ஆவணங்களை, மத்திய அரசு கேட்டுள்ளது. ஆவணம் தராவிட்டால், மத்திய வெளிநாட்டு நிதி பங்களிப்பு முறைப்படுத்துதல் (எப்.சி.ஆர்.ஏ.,) சட்டத்தில், 
சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்.இவ்வாறு சத்தியசீலன் கூறினார். 
வெளிநாட்டு நிதிக்கு தடை:இதுகுறித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி, "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என, பல முறை விளக்கம் அளித்து விட்டோம். ஆனாலும், அணுமின் நிலையத்தை தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் முதலில் பங்கெடுத்தார். அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில், மத்திய அரசுடன் பேச்சு நடத்தும் தமிழக குழுவிலும் இடம் பெற்றார். ஆனால், இதிலிருந்து திடீரென விலகி விட்டார்.இவரது நேரடி கட்டுப்பாட்டில், தூத்துக்குடி மல்டி பர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.,) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதன் கீழ், மக்கள் கரங்கள், கடலோர மக்கள் கூட்டமைப்பு, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு நிறுவனத்திற்கு, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

Church in Coimbatore seeks police protection 

Coimbatore: A newly opened prayer hall of The Pentecostal Mission on the outskirts of Coimbatore city was vandalized by activists of a local outfit on Sunday.The issue came to light on Wednesday when church in-charge Banchamin Sarang and his assistant Santhan Ruben approached district collector T N Hariharan and rural police superintendent E S Uma seeking police protection for the prayer hall.
According to police,the attack was carried out by about 20 members of the Hindu Makkal Katchi.The payer hall has been attacked for three continuous days since Friday.The activists also barged into the main hall and damaged furniture and many valuables including prayer books.
According to watchmen at the hall,the attack was carried out by a gang led by Hindu Makkal Katchi leader G Ramesh.
Hindu Makkal Katchi founder chairman Arjun Sambath said the attack may have been committed by local workers when provoked by conversion activities of the church.The outfit has no role in the attack.Attacking another community is not in our agenda.But the Pentecostal group is known for large scale conversions and we will not remain mute spectators if they continue to carry out the conversions, he said.They are luring in dalits and tribal people of the area by offering them money, he said.TNN


__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

http://expressbuzz.com/nation/shortage-of-hands-unites-catholic-congregations/354288.html

 18 Jan 2012 09:32:38 AM ISTShortage of hands unites Catholic congregations


NEW DELHI: They may not be the best of friends. But the Catholic Church in West Bengal, just like its traditional foe the CPM, is facing a similar predicament - number crunch.

 

If the CPM is facing the crunch as it is losing its cadre to both the TMC and the Maoists, the Church is facing the same problem as there are fewer hands to join the congregations. Now faced with the crunch, the Conference of Religious India (CRI), a Catholic body of religious nuns, priests and brothers, have decided to join together and share mission works.

 

“We are going through a severe shortage of hands.

 

Though the shortage may be a larger phenomenon, it is affecting us particularly as the CRI has taken up a large number of projects in West Bengal after Mamata Banerjee has taken over,” said a priest affiliated with the CRI.

 

He said the Mamata Government has asked the Church to start educational and health institutions in rural Bengal, especially in Maoists zones. The CRI is also planning to open schools for poor tribal people living in tea estates.

 

“The new government, unlike the previous Left Government, is quite sympathetic to the Church and is extending all possible support.

 

So we also want to reciprocate.

 

But with the shortage of hands, we are quite worried,” he said.

 

West Bengal has more than 1,500 religious spread across 45 women’s and 20 men’s congregations.

 

According to him, as none have sufficient numbers to undertake new work alone, the congregations are being forced to join together and work in various projects.

 

When asked about the similarity in number crunch that the Left parties and the Church is facing, the priest said that it was correct if one goes by numbers. “Yes, we are facing shortage of hands.

 

But the reasons are different.

 

If they lost their cadre because of their misrule, we are short of hands because we have more work in hand and lesser people are joining the congregation,”he said.



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

?ui=2&ik=a5021c860f&view=att&th=134f64aec54236c9&attid=0.1&disp=safe&realattid=f_gxlusttd0&zw



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

HOSANNA-Rahman faces protest

Rahman faces protest

"Hosanna...." the catchy number from Gautham Vasudev Menon's 'Ek Deewana Tha' (Hindi version of Kollywood blockbuster 'Vinnaithandi Varuavaya'), has run into trouble.

The Catholic-Christian Secular Forum (CSF) is irked with the use of word Hosanna in the song. The forum has shot off letters to authorities concerned, including music composer A R Rahman, demanding that the song be withdrawn.

"We would like to point out that "Hosanna" is a prayer in the Bible and sacred to both Jews and Christians, referring to God or Jesus Christ, with strong reverential and religious connotations. How can it be used in a film," asked CSF general secretary Joseph Dias.

CSF has written to Rahman, Fox Star Studio and Sony Music, demanding an apology.

If the forum didn't receive any response from the filmmaker and others within two days, it would approach the police and court. CSF also plans to launch a public agitation if no action is taken against the song.

Source: Filmy south



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

Christians & Jews find AR Rahman’s Hosanna song objectionable. The CSF protests…

January 16, 2012 by admin   
Filed under newsletter-lead

 

HosannaInternational, January 16: A R Rahman’s “Hosanna” Song in Hindi Film “Ekk Deewana Tha” to be released on 17 February, 2012. The Catholic-Christian Secular Forum (CSF), takes strong exception to an A R Rahman’s song “Hosanna” in the Hindi movie, “Ekk Deewana Tha” to be released on 17 February, 2012 and has taken up the issue with the authorities concerned to have the song withdrawn. The CSF will launch a public agitation if the same is not heeded. In a complaint to the music director, besides others concerned like Fox Star Studio, Sony Music and all those responsible for the same. The CSF demands an apology for the same and urged the authorities to act, as it has hurt not only Christian, but also Jewish religious sentiments, Hosanna being a prayer for both communities.

According to Joseph Dias, The CSF general secretary, ” We are not going into the lyrics or vulgar picturisation of the song, which is also objectionable. But, would like to point out that internationally Hosanna is a prayer in the Bible and used by both Jews and Christians, referring to God or Jesus Christ, with strong reverential and religious connotations. The CSF points out that in both these religions, Hosanna is used as follows:
 
Judaism

“Hoshana” is a Hebrew word meaning please save or save now. In Jewish liturgy, the word is applied specifically to the Hoshana Service, a cycle of prayers from which a selection is sung each morning during Sukkot, the Feast of Booths or Tabernacles. The complete cycle is sung on the seventh day of the festival, which is called Hoshana Rabbah “Great Hosanna”.

Christianity

“Hosanna” in Greek is the cry of praise or adoration of God, shouted in recognition of the Messiahship of Jesus on his entry into Jerusalem – Hosanna! Blessed is the one who comes in the name of the Lord! It is used in the same way in Christian praise. Overall, it seems that “Hosanna” is a cry for salvation – God who saves; while at the same time is a declaration of praise of God and is used with great reverence to Him.

The CSF general Secretary adds ” Hence, to use it in a movie where the boy, falls in love with a girl – who belongs to an orthodox Malayali Christian family where watching movies, partying or falling in love are completely taboo  – is mocking and ridiculing the faith of the person. This has hurt religious sentiments and insulted Christian and Jewish beliefs “. Joseph Dias further questions angrily – ” If you would not use Islamic, Hindu or prayers from any other religion in pop secular music, then why do you use Hosanna in a carnal love song of a movie. It trivialises a word that is sacred and uttered with respect by followers of both Christian and Jewish faiths and hence needs to be stopped immediately.

It may be recalled that The CSF and other community groups had only last month complained against those responsible for the movie poster “Who’s There – Kaun Hai Waha” and the director, producer and others concerned had to spend days in custody in Mumbai following police action. Gautham Menon, the noted south Indian film director is responsible for the film “Ekk Deewana Tha”, which is produced by Reshma Ghatala, Venkat Somasundaram and Javed Akhtar being the lyricist.

Those involved with the Hosanna song, as part of the movie are lead actors – Prateik Babbar and Amy Jackson; singers – Leon D’Souza, Suzanne D’Mello and Blaaze, with additional vocals by Vivek Agarwal, Dr. Narayan, V. V. Prasanna, Haricharan Sesh… Photon Kathaas Production and R.S. Infotainment, besides others are also involved and will be legally acted against.

Joseph Dias, MA (Eco) +919769 55 56 57 csfpost@gmail.com www.thecsf.org
General Secretary, The Catholic-Christian Secular Forum (CSF)

- csf



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

19_01_2012_005_005.jpg deviations



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

20_01_2012_014_027.jpg Udayakumar



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

Oneindia » News » India
 

Help us in Naxal areas but no religious mobilisation: Ramesh

New Delhi, Jan 20: Union Minister Jairam Ramesh on Friday made a strong pitch for roping in organisations like those run by Catholic Church to bring development in Maoist-hit areas but asked them to respect the Lakshman Rekha and not engage in religious mobilisation.

"I expect Caritas to respect the sentiment of not getting involved in religious mobilisation. That is not the objective," Ramesh said inaugurating the golden jubilee celebrations of Caritas India, a Catholic organisation.

"The objective is to use the powers of the organisation like yours to help us breakdown the deficit of trust between the Government and the tribal communities. That is our objective," he said.

Addressing a packed audience of Catholic priests including Archbishops and bishops, the Minister said he does not talk about Caritas as a Catholic organisation but as a social organisation run by Catholics.

Focusing on the issue of Maoist influence, Ramesh said the challenge is "how we deal with the whole issue of Maoist violence which is spreading across large parts of tribal areas.

"Orissa, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Maharashtra, Andhra Pradesh. All central Indian tribal belt today is in the grip of what our Prime Minister has described as the most serious internal security challenge of our country."

The Minister said that people in these areas are unable to carry out their very existence in peace, normalcy and harmony because of the growing incidents of an ideology that is dedicated to the overthrowing all democratic institutions.

He said that organisations like Caritas and Ramkrishna Mission have a very important role to play in such areas, "provided social organisations respect certain 'Lakshman Rekha'."

Foreseeing a possible opposition from BJP-ruled Jharkhand for involving Caritas India in Maoist-hit areas, Ramesh said "you must be prepared for this" and said "the ultimate objective of course is to create an environment in which peace returns."

"I would make an offer to Caritas. Let us look at some of the areas that you can work. I have seen Caritas working in watershed development, I have seen your work in water supply, I have seen your work in housing, rehabilitation and natural disasters," Ramesh said.

Citing the example of range of development works being done by Ramakrishna Mission in Chhattisgarh's Maoist-affected Narayanpur district, the Minister said, the Rural Development Ministry could forge such a partnership on a "long-term basis" with Caritas India in implementing programmes in Jharkhand, Chattisgarh and in Orissa.

"In some of these areas that I have mentioned, the ultimate objective of course is to create an environment in which peace returns. So let us work towards a partnership. And just like Ramakrishna Mission has taken up Narayanpur district for its range of development activities," he said.

"...I think (you) have a very important role to play provided social organisations respect certain Lakshman Rekha and I am sure you will respect Lakshman Rekha," he added.

Stating that the tribal is caught between "the power of the state and the gun of the Naxalites," Ramesh said, "what we need to do is provide space for the tribal communities to participate in their daily activities without the fear of the gun."

He said "historical injustices have been perpetrated" against tribals. "There is no doubt in it. Large number of people have been displaced in course of development pressures in tribal areas."

Stating that the State has not demonstrated the degree of sensitivity that it should have towards the concerns of the tribal communities, Ramesh said 20 million people have been displaced in central India in the name of development.

"I, myself, have seen tribal communities being displaced not once... but twice and thrice... and resettlement and rehabilitation has not taken place. So it is true that if you look back in the last 50 years, it has been a saga of unfulfilled promises," he said.

"A tribal who goes into the forest is considered a criminal. There are a large number of cases. Forest administration has contributed immensely in this trust deficit between the tribals and the government," he said.

"When I was the forest minister, one of my main challenges was to reform forest administration and forest bureaucracy," Ramesh said.



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

Jairam cautions on conversions



__________________


Guru

Status: Offline
Posts: 24615
Date:
Permalink  
 

21_01_2012_006_014.jpg Jesus voice



__________________
«First  <  18 9 10 11 1214  >  Last»  | Page of 14  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard