2022 தங்கங்களின் ஆண்டு என்று ஆண்டவர் இவனிடம் சொன்னாராம். எப்டிலாம் கதை விடுறானுங்க திருட்டுப்பயல்கள்!
மக்களுடைய தலையில் மசாலா அரைத்து கொள்ளை அடிப்பதற்கு திட்டம்போட்டு தங்களுக்கு துணையாக இயேசுவை உள்ளே இழுத்து மக்களை மயக்கி அவர்களிடம் உள்ள கோமணத்தைக்கூட உருவி விடுவார்கள் இந்த அட்டூழியர்கள்.
இந்த இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளும் பெண்களை சுலபமாக மயக்கி சுகம் காண்பவர்கள். ஆகவே, இவர்களுடைய தேனொழுகும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்!
மக்களே, நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களை, தங்கத்தை கொள்ளையடிக்க ஊழியம்/ஊழியர்கள் என்கிற போர்வையில் நூதன கொள்ளையர்கள் இப்பொழுது தமிழகத்தில் உலா வர ஆரம்பித்துள்ளனர். இப்படிப்பட்ட கொள்ளையர்களுடைய தேனொழுகும் ஆசை இச்சகமான வார்த்தைகளை நம்பி உங்களுடைய உழைப்பின் பலனை இழந்து போகாதீர்கள். இப்படிப்பட்ட அயோக்கியர்கள் உங்களிடம் உள்ள சொத்துக்கள், நகைகள், இடங்களை அபகரித்து அவர்கள் உல்லாசம் அனுபவிக்க திட்டம் போட்டு ஜனங்களை வஞ்சித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இப்படிப்பட்ட நயவஞ்சகர்களுடைய ஆசை இச்சை வலையில் சிக்கிக்கொள்ளாமல் இவர்களை எங்கு கண்டாலும் துரத்தியடியுங்கள்.
கர்த்தருடைய வார்த்தையின் போதனைகள் "தங்கத்தையும், சிறந்த பொன்னையும் விட விரும்பத்தக்கவை" (சங்கீதம் 19:10) என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறார். தங்கத்தை விட ஞானம் சிறந்தது (நீதிமொழிகள் 3:14), அதை தங்கத்தால் வாங்க முடியாது என்பதற்கு சான்றாக யோபு 28:12-15)வாசித்து பாருங்கள். ஆகவே, இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளை நம்பி மோசம்போகாதிருங்கள்.
ஆண்டவர் சொன்னார், 2018-ம் ஆண்டு #கார்களின் ஆண்டு! உடனே போய் ஜாகுவார் காரை வாங்கி வந்தேன். அந்த ஆண்டில் 5 கார்களை ஆண்டவர் கொடுத்தார். எனக்கு கார்களின் ஆண்டு என்று சொல்லி ஆண்டவர் 5 கார்களை கொடுப்பார் என்றால், உங்களுக்கு #பெட்ரோல்_பங்க் என்று சொன்னால், அதை உங்களுக்கு நிச்சயம் கொடுக்க ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்.
இன்று அந்நிய பாஷையை குறித்து வேதத்தில் உள்ள சில வசனங்களை எடுத்துக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து பாஸ்டர்களும் தங்கள் இஷ்டத்துக்கு அந்நிய பாஷை என்ற பெயரில் ஜனங்களை மோசம் போக்கிக் கொண்டு வருகிறது பார்க்கிறோம்.
இந்த வீடியோவிலும் ஜனங்கள் அனைவரையும் நடந்து கொண்டு அந்நிய பாசை பேசி ஜெபிக்கும்படி சொல்லிவிட்டு பாஸ்டர் செய்யும் காரியத்தை பாருங்கள்.
கடவுளோடு ரகசியம் அந்நிய பாஷையில் பேசுவது என்பது இது தானோ?
இவர் பேசும் பாஷை எந்த பாஷையோடாவது ஒத்துப் போகுமா அண்டங் காக்கை கத்துவது போலவும், செல்ப் மோட்டார் வேலை செய்யாத இன்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது வரும் சத்தம் போலவும் இவர் போடும் சத்தம் இருக்கிறது.
இதையும் பேசி இதையும் நம்பி மோசம் போகும் ஜனங்கள் உலகில் நாளுக்கு நாள் பெருத்து கொண்டே வருகிறார்கள் காரணம் இவர்கள் சத்தியத்துக்கு செவி கொடுக்கவும் கீழ்ப்படியவும் விருப்பமில்லை.
பெந்தகோஸ் பாஸ்டர்கள் ஃபயர் ஃபயர், ரிசீவ் ரிசீவ் என்று கத்துவது இதே ஸ்டைல், அடிப்படையில் இருப்பதை கவனியுங்கள்.
எப்படியாவது விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று எண்ணத்தில் இப்படிப்பட்ட மாய்மாலமான போதகங்களை நம்பி வீழ்ச்சி அடைந்து தங்கள் ஆத்மாவை கெடுத்துக் கொள்கிறார்கள்.
எதையும் நிதானித்து பகுத்து ஆராய்ந்து இவைகள் வேதத்துக்கு ஒத்துப் போகுமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.