New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நற்றிணை 0 - 50


Guru

Status: Offline
Posts: 24596
Date:
நற்றிணை 0 - 50
Permalink  
 


நற்றிணை  0 -   50

0 கடவுள் வாழ்த்து 
	
	மா நிலம் சேவடி ஆக தூ நீர்
	வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
	விசும்பு மெய் ஆக திசை கை ஆக
	பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
5	இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
	வேத முதல்வன் என்ப
	தீது அற விளங்கிய திகிரியோனே		
				மேல்
	# 1 குறிஞ்சி
	
	நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
	என்றும் என் தோள் பிரிபு அறியலரே
	தாமரை தண் தாது ஊதி மீமிசை
	சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
5	புரைய மன்ற புரையோர் கேண்மை
	நீர் இன்று அமையா உலகம் போல
	தம் இன்று அமையா நம் நயந்து அருளி
	நறு நுதல் பசத்தல் அஞ்சி
	சிறுமை உறுபவோ செய்பு அறியலரே
				மேல்
	# 2 பாலை
	
	அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து
	ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு
	ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
	செம் மறு தலைய நெய்த்தோர் வாய
5	வல்லிய பெரும் தலை குருளை மாலை
	மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
	வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
	எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்
	காலொடு பட்ட மாரி
10	மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே	
				மேல்
	# 3 பாலை

	ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை
	பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
	கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து
	கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
5	வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர்
	சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
	உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
	வினை முடித்து அன்ன இனியோள்
	மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே
				மேல்
	# 4 நெய்தல்

	கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
	நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ
	தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
	அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
5	அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
	அரிய ஆகும் நமக்கு என கூறின்
	கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர்
	வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
	கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
10	மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
	கரும் கால் வெண்_குருகு வெரூஉம்
	இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே
				மேல்
	# 5 குறிஞ்சி

	நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப
	அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப
	குறவர் கொன்ற குறை கொடி நறை பவர்
	நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
5	பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
	தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
	அரிதே காதலர் பிரிதல் இன்று செல
	இளையர் தரூஉம் வாடையொடு
	மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே
				மேல்
	# 6 குறிஞ்சி

	நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
	நார் உரித்து அன்ன மதன் இல் மாமை
	குவளை அன்ன ஏந்து எழில் மழை கண்
	திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு
5	எய்த சென்று செப்புநர் பெறினே
	இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
	அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
	எறி மட மாற்கு வல்சி ஆகும்
	வல் வில் ஓரி கானம் நாறி
10	இரும் பல் ஒலிவரும் கூந்தல்
	பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே
				மேல்
	# 7 பாலை

	சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
	பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
	கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று
	கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
5	தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
	இன்னே பெய்ய மின்னுமால் தோழி
	வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
	தண் நறும் சிலம்பில் துஞ்சும்
	சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே
				மேல்
	# 8 குறிஞ்சி

	அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
	பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
	திரு மணி புரையும் மேனி மடவோள்
	யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர்
5	துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்
	அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
	தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்
	கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
	திண் தேர் பொறையன் தொண்டி
10	தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே		
				மேல்
	# 9 பாலை

	அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள்
	வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு
	அலமரல் வருத்தம் தீர யாழ நின்
	நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்
5	பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி
	சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி
	நிழல் காண்-தோறும் நெடிய வைகி
	மணல் காண்-தோறும் வண்டல் தைஇ
	வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே
10	மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
	நறும் தண் பொழில கானம்
	குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே
				மேல்
	# 10 பாலை

	அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
	பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
	நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்
	நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர
5	இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர்
	கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
	வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
	பழையன் வேல் வாய்த்து அன்ன நின்
	பிழையா நன் மொழி தேறிய இவட்கே
				மேல்
	# 11 நெய்தல்

	பெய்யாது வைகிய கோதை போல
	மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
	உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
	வாரார் என்னும் புலவி உட்கொளல்
5	ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
	புணரி பொருத பூ மணல் அடைகரை
	ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
	வலவன் வள்பு ஆய்ந்து ஊர
	நிலவு விரிந்தன்றால் கானலானே
			மேல்
	# 12 பாலை

	விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
	பாசம் தின்ற தேய் கால் மத்தம்
	நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
	வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
5	அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண்
	வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
	இவை காண்-தோறும் நோவர் மாதோ
	அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
	நும்மொடு வரவு தான் அயரவும்
10	தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே
				மேல்
	# 13 குறிஞ்சி

	எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
	அழாஅதீமோ நொதுமலர் தலையே
	ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
	பகழி அன்ன சே அரி மழை கண்
5	நல்ல பெரும் தோளோயே கொல்லன்
	எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
	வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி
	மயில் அறிபு அறியா-மன்னோ
	பயில் குரல் கவரும் பைம் புற கிளியே
				மேல்
	# 14 பாலை

	தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
	நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்
	நட்டனர் வாழி தோழி குட்டுவன்
	அகப்பா அழிய நூறி செம்பியன்
5	பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது
	அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
	மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
	இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என
	துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல்
10	நெடு வரை விடர்_அகத்து இயம்பும்
	கடு மான் புல்லிய காடு இறந்தோரே
				மேல்
	# 15 நெய்தல்

	முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
	நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள
	ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
	பூவின் அன்ன நலம் புதிது உண்டு
5	நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே
	நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி
	மாசு இல் கற்பின் மடவோள் குழவி
	பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு
	சேணும் எம்மொடு வந்த
10	நாணும் விட்டேம் அலர்க இ ஊரே
				மேல்
	# 16 பாலை

	புணரின் புணராது பொருளே பொருள்_வயின்
	பிரியின் புணராது புணர்வே ஆயிடை
	செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
	உரியை வாழி என் நெஞ்சே பொருளே
5	வாடா பூவின் பொய்கை நாப்பண்
	ஓடு மீன் வழியின் கெடுவ யானே
	விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
	எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
	கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண்
10	அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
	எனைய ஆகுக வாழிய பொருளே
				மேல்
	# 17 குறிஞ்சி

	நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து
	மால் கடல் திரையின் இழிதரும் அருவி
	அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி
	தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
5	ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை
	எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என
	மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
	உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
	உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
10	காந்தள் ஊதிய மணி நிற தும்பி
	தீம் தொடை நரம்பின் இமிரும்
	வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே
				மேல்
	# 18 பாலை

	பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
	வருவர் வாழி தோழி மூவன்
	முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
	கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
5	தெறல் அரும் தானை பொறையன் பாசறை
	நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர்
	திரை தபு கடலின் இனிது கண்படுப்ப
	கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை
	தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன
10	ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே
				மேல்
	# 19 நெய்தல்
	
	இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
	சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை
	பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
	நன் மான் உழையின் வேறுபட தோன்றி
5	விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப
	இன மணி நெடும் தேர் பாகன் இயக்க
	செலீஇய சேறி ஆயின் இவளே
	வருவை ஆகிய சில் நாள்
	வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே
				மேல்
	# 20 மருதம்

	ஐய குறு_மகள் கண்டிகும் வைகி
	மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்
	தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
	துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர
5	செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில்
	பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
	சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
	சுணங்கு அணிவு_உற்ற விளங்கு பூணள்
	மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை
10	பழம் பிணி வைகிய தோள் இணை
	குழைந்த கோதை கொடி முயங்கலளே
					மேல்
	# 21 முல்லை

	விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
	அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
	வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
	தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
5	ஏ-மதி வலவ தேரே உது காண்
	உருக்கு_உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன
	அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
	காமரு தகைய கான வாரணம்
	பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
10	புலரா ஈர் மணல் மலிர கெண்டி
	நாள்_இரை கவர மாட்டி தன்
	பேடை நோக்கிய பெரும் தகு நிலையே
					மேல்
	# 22 குறிஞ்சி

	கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
	முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
	கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
	அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்
5	திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி
	வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
	கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
	வந்தனன் வாழி தோழி உலகம்
	கயம் கண் அற்ற பைது அறு காலை
10	பீளொடு திரங்கிய நெல்லிற்கு
	நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே
					மேல்
	# 23 குறிஞ்சி

	தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
	வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்
	இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள
	அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
5	காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
	முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை
	சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
	தெண் நீர் மலரின் தொலைந்த
	கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
					மேல்
	# 24 பாலை

	பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு
	உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின்
	ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
	கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம்
5	வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை
	சேறும் நாம் என சொல்ல சே_இழை
	நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே
	செயல்படு மனத்தர் செய்_பொருட்கு
	அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே
					மேல்
	# 25 குறிஞ்சி

	அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன
	செம் வரி இதழ சேண் நாறு பிடவின்
	நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
	பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம்
5	வள மலை நாடன் நெருநல் நம்மொடு
	கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ
	சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
	அல்லல் அன்று அது காதல் அம் தோழி
	தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
10	வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி
	கண்டும் கழல் தொடி வலித்த என்
	பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே
					மேல்
	# 26 பாலை

	நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
	செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
	விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு
	பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
5	சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய்
	முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
	கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
	பொன் பொதிந்து அன்ன சுணங்கின்
	இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே
					மேல்
	# 27 நெய்தல்

	நீயும் யானும் நெருநல் பூவின்
	நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி
	ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை
	கழி சூழ் கானல் ஆடியது அன்றி
5	கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
	பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
	எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு
	இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம்
	கழி சேர் மருங்கின் கணை கால் நீடி
10	கண் போல் பூத்தமை கண்டு நுண் பல
	சிறு பாசடைய நெய்தல்
	குறுமோ சென்று என கூறாதோளே
					மேல்
	# 28 பாலை

	என் கை கொண்டு தன் கண் ஒற்றியும்
	தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும்
	அன்னை போல இனிய கூறியும்
	கள்வர் போல கொடியன் மாதோ
5	மணி என இழிதரும் அருவி பொன் என
	வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
	ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில்
	ஓடு மழை கிழிக்கும் சென்னி
	கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே
					மேல்
	# 29 பாலை

	நின்ற வேனில் உலந்த காந்தள்
	அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது
	ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என
	மான்ற மாலை வழங்குநர் செகீஇய
5	புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி
	யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன்
	வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என
	நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன்
	பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ
10	வெய்ய உயிர்க்கும் சாயல்
	மை ஈர் ஓதி பெரு மட தகையே
					மேல்
	# 30 மருதம்

	கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ
	பாணன் கையது பண்பு உடை சீறியாழ்
	யாணர் வண்டின் இம்மென இமிரும்
	ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
5	மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர்
	கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி
	கால் ஏமுற்ற பைதரு காலை
	கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
	பலர் கொள் பலகை போல
10	வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே
					மேல்
	# 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard