New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுருகாற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருமுருகாற்றுப்படை
Permalink  
 


திருமுருகாற்றுப்படை

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு	      
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு          
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி       
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்         
செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை		    5
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் பட பொதுளிய பராரை மராஅத்து           10
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன்
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள்
கோபத்து அன்ன தோயா பூ துகில்                 15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி              20
செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி
தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து                25
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு
உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி	
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணை தக       30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்		
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர்       35
வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி	
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
சீர் திகழ் சிலம்பகம் சிலம்ப பாடி                  40
சூர் அரமகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து	
சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்		
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு           45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு  50
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா    55
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து           60
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு	
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப            65
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி
வரி புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து               70
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின்
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்         75
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை         80
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப          85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை
சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தா இல் கொள்கை தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே          90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ                  95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம்	100
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே
ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு	105
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை		110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை
மார்பொடு விளங்க ஒரு கை
தாரொடு பொலிய ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை		115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை
வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கு அ பன்னிரு கையும் பால் பட இயற்றி
அந்தர பல் இயம் கறங்க திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல	120
உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று	125
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின்	
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல்	130
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை		135
யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனி இல் காட்சி முனிவர் முன் புக
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை		
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்		140
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை		145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை		150
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்		155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை	
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய		160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி		
நான்முக ஒருவர் சுட்டி காண்வர		165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு		
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை	170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்	175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை	180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து		185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து	
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்	190
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்	
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்		195
குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக சிறுபறை குரவை அயர
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்		200
முடித்த குல்லை இலை உடை நறும் பூ
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு	205
செய்யன் சிவந்த ஆடையன் செ அரை
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்	
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்	210
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி		215
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று
சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும்		220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின் பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறு பல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்		225
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்
மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து	
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ	230
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி	
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ
சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து	235
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை
துணையுற அறுத்து தூங்க நாற்றி		
நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க	240
உருவ பல் பூ தூஉய் வெருவர
குருதி செம் தினை பரப்பி குறமகள்	
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடுகளம் சிலம்ப பாடி பல உடன்		245
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி	
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக		250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி
கை தொழூஉ பரவி கால் உற வணங்கி	
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ		255
ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை	
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி	
வானோர் வணங்கு வில் தானை தலைவ	260
மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ	265
குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ	
பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக	
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள		270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்	
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி	275
போர் மிகு பொருந குருசில் என பல
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லா புலமையோய் என		280
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி
அளியன்தானே முது வாய் இரவலன்	
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என	285
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி	290
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பல உடன்	295
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழு முதல் உருட்டி வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல	300
ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர யூகமொடு
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ தத்துற்று	305
நல் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா
வாழை முழு முதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி
கறி கொடி கரும் துணர் சாய பொறி புற
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ		310
கோழி வய பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று		315
இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து திரிதலைச் செய்யும்
பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று,
ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய,
தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,
தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,  	      5
குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன் ஆகியவனும் -
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,
மின்னலாகியவாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி,
முதல்மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில்,
இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்					10
தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும் -
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
சிறு சதங்கை சூழ்ந்த ஒளிரும் சிவந்த சிறிய அடியினையும்,
திரட்சியையுடைய காலினையும், வளைந்து நுடங்கிய இடையினையும், பெருமையுடைய தோளினையும்,
தம்பலப்பூச்சியின் செந்நிறத்தை ஒத்த, சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த கிலினையும்,	15
பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்,
கையால் ஒப்பனை செய்து தோற்றுவிக்கப்படாத அழகினைப் பெற்ற வனப்பையும்,
நாவலின் பெயர்பெற்ற சாம்பூந்தமென்னும்பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும்,
தொலைதூரத்தையும் கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் உடைய சூரர மகளிர் -
தோழியர் ஆராய்ந்த இணைந்து நெய் பூசி ஈரமான மயிரில்					20
சிவந்த காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாகஇட்டு,
பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு,
தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து,				25
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, கரிய புறவிதழினையும்
உள்ளே துய்யினையும் உடைய பூக்களையுடைய மருதின் ஒளிரும் பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு,
கிளையில் அழகுற்று வளரும் நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக்
கட்டுதலுற்ற மாலையை வளைய வைத்து, தம்மில்ஒத்தற்குப் பொருந்த,				30
வளவிய காதில் இட்டுநிறைந்த பிண்டியின் ஒளிரும் தளிர்
நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வயிரத்தையுடைய
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,
மணம் நாறுகின்ற மருதம் பூவை அப்பினால்ஒப்பக், கோங்கின்
குவிந்த அரும்பு ஒத்தஇளமுலையில் அப்பி, விரிந்த மலரினையுடைய				35
வேங்கைப் பூவின் நுண்ணிய தாதையும் அதன்மேல் அப்பி, மேலும்அழகுண்டாக,
விளவின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு,
‘கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி
வாழ்வதாக, நெடுங்காலம்', என்று வாழ்த்திப், பலருடன்
சீர்மை விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலிக்கப் பாடி - 					40
கொடுமையுடைய தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய,
மந்திகளும் ஏறிஅறியாத மரம் நெருங்கின பக்கமலையில்,
வண்டுகளும் மொய்க்காத நெருப்புப் போலும் பூவினையுடைய செங்காந்தளின்
பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவனும் -
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று,			45
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் -
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,		50
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
குருதியை அளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலால்
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி, அச்சந்தோன்ற
வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து,			55
நிணத்தைத் தின்கின்ற வாயையுடையளாய், துணங்கைக்கூத்து ஆட -
இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய பெரிய உடல்,
அற்று வேறாகும் வகையால் அச்சம் தோன்ற மிக்குச் சென்று,
அவுணரின் நல்ல வெற்றி இல்லையாகும்படி, கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்,				60
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் -
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நன்மைகளையே செய்யும் மேற்கோளுடன், (இருக்கும்)இடத்தை விட்டு (வேறிடத்தில்) தங்கும்
பயணத்தை நீ விரும்பியவனாய் இருந்தால், (கழிந்த)பற்பல பிறப்புகளிலும்,
நல்ல நெஞ்சத்தில் கிடந்த இனிய (வீடுபேற்றின்கண்)விருப்பம் நிறைவேறும்படி,			65
இப்பொழுதே பெறுவாய், நீ கருதிய வினையின் பயனை;
போரை விரும்பி எடுத்துக்கொண்ட, தொலை நாட்டில் உயர்ந்த, நெடிய கொடிக்கு அருகே
(நூலால்)வரிந்து புனையப்பட்ட பந்துடன் பாவையும் தூங்கிக்கிடப்ப,
பொருவாரை இல்லையாக்கிய போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும்,
திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்,					70
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் -
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே,
தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வீழ
கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,					75
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் -
திருப்பரங்குன்றத்தில் நெஞ்சமர்ந்து இருத்தலும் உரியன், அதோடன்றி,
கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,			80
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி -
ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும்,				85
ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை
தொலை தூரத்திற்கும் ஒளிரும் இயல்பினையுடைய ஒளியை உடைய திங்களைச் சூழ்ந்து
நீங்காத மீன்கள் போல விளங்குவனவாய் மின்ன,
குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய
நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்;		90
பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க
பல ஒளிக்கீற்றுகளையும் பரப்பியது ஒரு முகம்; ஒரு முகம்
(தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து,
(அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது; ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத							95
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து,
திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் பொலிவுறுத்தி நிற்கும்; ஒரு முகம்
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து,
வெகுளி கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்; ஒரு முகம்			100
குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும்
மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;
அவ்வாறாக, அந்த ஆறு முகங்களும் (தத்தம்)முறைமைகளைப் பயின்று நடத்தலால் -
ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற
சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து,				105
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்,
விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது
ஒரு கை; இடுப்பில் வைக்கப்பட்டது மற்றொரு கை;
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை;
தோட்டியைச் செலுத்தி நிற்ப ஒரு கை; இரண்டு கைகள்						110
அழகிய பெரிய கேடகத்தோடு வேற்படையையும் வலமாகச் சுற்றிநிற்ப; ஒரு கை
மார்போடே விளங்கிநிற்க; ஒரு கை
மாலையோடு அழகு பெற; ஒரு கை
கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல; ஒரு கை
ஓசை இனிதாக ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண; ஒரு கை			115
நீல நிறத்தையுடைய முகிலால் மிக்க மழையைப் பெய்விக்க; ஒரு கை
தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட; 
அப்படியே, அந்தப் பன்னிரண்டு கையும் (ஆறு முகங்களின்)பகுதியில் பொருந்தத் தொழில்செய்து -
விசும்பின் பல இசைக்கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரத்தையுடைய
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,						120
வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன்
பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ,
வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு,
உலகமக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய
அலைவாய் என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே, அவ்வூரல்லாமலும், 125
மரவுரியை உடையாகச் செய்த உடையவரும், அழகோடு
வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,
அழுக்கு அற மின்னும் உருவினரும், மானின்
தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின்
எலும்புகள் தோன்றி உலவும் உடம்பினையுடையவரும், நல்ல பகற்பொழுதுகள்			130
பலவும் சேரக்கழிந்த உணவினையுடையவரும், மாறுபாட்டுடன்
கோபத்தை(யும்) நீக்கிய மனத்தினரும், பலவற்றையும்
கற்றோரும் அறியாத அறிவினையுடையவரும், கற்றோர்க்கும்
தாம் எல்லையாகிய தலைமையை உடையவரும், அவாவோடு
கடிய சினத்தை(யும்) விலக்கிய காண்பதற்கினியரும், மனவருத்தம்					135
ஒருசிறிதும் அறியாத இயல்பினரும், பொருந்துதல் வரும்படி
வெறுப்பு அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர், முன்னே செல்ல,
புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்,
மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட),
செவியால் இசையை அளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய		140
நல்ல யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால்
மெல்லிய மொழி பேசுதல் பொருந்தியோர் (ஆகிய கந்தருவர்), இனிய யாழ் நரம்பை இயக்க -
நோய் இல்லையாக இயன்ற உடம்பினையும், மாவின்
ஒளிரும் தளிரை ஒக்கும் நிறத்தினையுடையவரும், ஒளிர்தோறும்
பொன்னுரை (விளங்கினால்)போல (விளங்கும்)தேமலையுடையவரும் ஆகிய, இனிய ஒளியினையுடைய	145
மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்,
குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க;
நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும்,
நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய,
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய		150
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,
இறைவி பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் -
நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல			155
வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய்,
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் -
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள			160
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக,			165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து
காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே				170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள்					175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,	180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,						185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன்,			190
அழகினையுடைய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை				195
மலையிடத்தேயுள்ள சிறிய ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து
தொண்டகமாகிய சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட,
விரலின் அலைப்பால் மலர்ந்தமையால் வேறுபடுகின்ற நறிய மணத்தையுடைய
ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,				200
தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,
செவ்விய காலினையும் உடைய மரத்திலுள்ள வெண்மையான கொத்துக்களை நடுவே வைத்துச்
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை
திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி,
மயிலைக் கண்டாற் போன்ற மடப்பம் பொருந்திய நடையையுடைய மகளிரோடும்,		205
சிவந்த மேனியன், சிவந்த ஆடையை உடையவன், சிவந்த அரையினையுடைய
அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்,
கச்சைக் கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன், வெட்சிமாலை சூடியவன்,
குழலை ஊதுபவன், கொம்பைக் குறிப்பவன், சிறிய இசைக்கருவிகளை இசைப்பவன்,
கிடாயையும், மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக்					210
கொடியை உடையவன், நெடுக வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன்,
நரம்பு ஆரவாரித்ததைப் போன்ற இனிய மிடற்றையுடைய மகளிர் கூட்டத்தோடு,
ஒட்டியாணத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,
முழவுக்கு மாற்றான பெருமையுடைய கைகளில் பொருந்தத் தாங்கி,				215
மெல்லிய தோளையுடைய பல மான்போல் மகளிரைத் தழுவி, (அவர்க்கு)இருக்கை தந்து,
மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் தனக்கு நிலைநின்ற குணமாம் - அவ்விடமன்றியும்,
சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை அறுத்து,
கோழிக்கொடியோடு (தான்)அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி,
ஊர்கள்தோறும் எடுத்துக்கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும்,			220
(தன்பால்)அன்புடையார் (தன்னை வழிபட்டு)ஏத்துதலால், தன் மனம் பொருந்துதல் வந்த இடத்திலும்,
வேலன் இழைத்த வெறியாடு களத்திலும்,
காட்டிலும், பொழிலிலும், அழகிய ஆற்றிடைக் குறையிலும்,
ஆறுகளிலும், குளங்களிலும், (முற்கூறப்பட்ட ஊர்களன்றி)வேறு பல ஊர்களிலும்,
நாற்சந்தியிலும், முச்சந்தியிலும், புதிய பூக்களையுடைய கடப்ப மரத்தினும்,			225
ஊர்ப்பொது மரத்தடியிலும், அம்பலத்திலும், திருவருள்குறியாக நடப்பட்ட தறியிடத்திலும்,
மாட்சிமைப்பட்ட தலைமையினையுடைய கொடியோடு பொருந்துதல் வரச்செய்து,
நெய்யோடு வெண்சிறுகடுகையும் அப்பி, மெல்லிதாக (மந்திரத்தை)உரைத்து,
மெய் வளைத்துக் கைகூப்பி, அழகிய மலர்களைச் சிதறி,
(தம்மில்)மாறுபட்ட வடிவினையுடைய இரண்டு அறுவையை உடுத்து,				230
சிவந்த நூலைக் காப்புகட்டி, வெண்மையான பொரியைச் சிதறி,
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை
சிறு பலியாக இட்டு, பல குறுணிப் படையல்களையும் வைத்து,
சிறிய பசுமஞ்சளோடு மணமுள்ள சந்தனம் முதலியவற்றையும் தெளித்து,			235
பெரிய குளிர்ந்த செவ்வலரிமாலையினையும், (ஒழிந்த)நறிய குளிர்ந்த மாலைகளையும்
(தம்மில்)இணையொக்க அறுத்து அசையும்படி தொங்கவிட்டு,
செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களை வாழ்த்தி,
நறிய மணப்புகை கொடுத்து, குறிஞ்சிப்பண்ணைப் பாடி,
முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடு இனிய இசைக்கருவிகளும் ஒலிக்க,		240
சிவந்த நிறத்தையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் வரும்படி
குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள்
முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே -
வெறியாடுகளம் ஆரவாரிப்பப் பாடி, பல சேர்ந்த							245
கொம்புகளை ஊதி, வளைவுடைய மணியை ஒலிப்பித்து,
பின்வாங்காத கொள்கையை மேற்கோளாகவுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி,
வேண்டினோர் விரும்பினபடியே பெற்றாராய் வழிபாடுசெய்ய,
அவ்வவ்விடங்களில் தங்குதலும் உரியன், யான் அறிந்தபடியே,
அங்கேயும், வேறெங்கேயும் ஆக, காணும் தகுதி பெற						250
நின் முன் அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி,
கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி,
‘நெடிய பெரிய உச்சியில் கரும் பச்சை (நிறச்)சுனையில்,
ஐவருள் ஒருவனாகிய தீ தன் அங்கையில் ஏற்ப,
அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே,					255
ஆலமரத்தின் கீழிருந்த கடவுளுடைய மகனே, பெருமையையுடைய மலையிலுள்ள
மலைமகளின் மகனே, பகைவருக்குக் கூற்றுவனே,
வெற்றியையுடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே,
பூண் அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே,
தேவர்கள் வணங்குகின்ற விற்படைத் தலைவனே,							260
மாலையணிந்த மார்பையுடையவனே, நூல்களை அறிந்த புலவனே,
போர்த்தொழிலில் ஒருவனாகி நிற்போய், பொருகின்ற வெற்றியையுடைய இளைஞனே,
அந்தணரின் செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே,
மகளிர்க்குக் கணவனே, மறவருள் அரியேறு போன்றவனே,
வேல் பொருந்தின பெருமையையுடைய கையமைந்த பெரிய செல்வனே,				265
மலையைப் பிளந்த குறையாத வெற்றியையுடைய,
விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே,
பலரும் புகழ்ந்து சொல்லும் நன்றாகிய சொற்களையுடைய புலவர்களுக்கு அரியேறு போன்றவனே,
அரிதில் பெறும் முறைமையினையுடைய பெரிய பொருளையுடைய முருகனே,
நச்சிவந்தோர்க்கு அதனை அளித்து நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல் உடையோனே,	270
இடுக்கண்பட்டோர்க்கு அருள்பண்ணும், பொன்னால் செய்த அணிகலன்களையுடைய சேயோனே,
மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே,
இரந்து வந்தோரைத் தழுவி (வேண்டுவன கொடுத்து)ப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடிய வேளே,
பெரியோர் ஏத்துகின்ற பெரிய திருப்பெயரையுடைய இறைவனே,
சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,275
போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே', என்று பலவற்றையும்
நான் அறிந்த அளவாலே புகழ்ந்து, அமையாதே,
‘உன் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல் உயிர்க்கும் அரிதாகையால்,
உன் திருவடியை நினைத்து வந்தேன், உன்னோடு
ஒப்பாரில்லாத மெய்யறிவுடையோனே', என								280
சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே - அதைக்குறித்து அப்பொழுதே	,
வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்,
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,
‘அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன்,
வந்துளன் பெருமானே, உன்னுடைய வளவிய புகழினை விரும்பி', என				285
இனியனவும் நல்லனவும் ஆகிய மிக்க பலவற்றை வாழ்த்தி,
தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் வடிவினையும்,
வானைத் தீண்டும் வளர்ச்சியினையும் உடைய தான் (உனக்கு)முன்னர் எழுந்தருளி,
வருத்தமமைந்த உயர்ந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு, முன்பு உண்டாகிய தனது
மணம் கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டி அருளி,		290
‘அஞ்சுவதை விடுக, அறிவேன் நின் வரவை' என
அன்புடைய நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, கேடு இன்றாக
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
ஒருவனாகிய நீயே (யாண்டுமாகித்)தோன்றுமாறு, சீரிய
பெறுதற்கரிய பரிசில்(ஆன வீடுபேற்றினைத்) தந்தருளுவான் - பலவும் ஒருங்கே இயைந்த	295
வேறு வேறாகிய பல துகில் கொடிகளைப் போன்று அசைந்து, அகிலைச் சுமந்துகொண்டு,
சந்தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி, சிறுமூங்கிலின்
பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து,
விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட, நல்ல பல					300
ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்
சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புகரை அணிந்த மத்தகத்தையுடைய
பெரிய பிடியானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின்
முத்தை உடைய வெண்மையான கொம்புகளை உள்ளடக்கி, தத்துதல் அடைந்து			305
நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து, பொடியான பொன்னைத் தெள்ளி,
வாழையின் பெரிய முதல் துணியத், தெங்கின்
இளநீரையுடைய சீரிய குலை உதிர, (அவ்விரண்டையும்)மோதி,
மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பொறியையுடைய புறத்தினையும்
மடப்பத்தினையுடைய நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சிக்,		310
கோழியின் வலிமையுடைய பேடைகள் கெட்டோட, ஆண் பன்றியுடன்
கரிய பனையின் - (உள்ளே)வெளிற்றினையுடைய - புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரிய கல் வெடித்த முழைஞ்சிலே சேர, கரிய கொம்பினையுடைய
ஆமாவினுடைய நல்ல ஏறுகள் முழங்க, உயரத்தினின்றும் 						315
இழும் என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய
பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருமுருகாற்றுப்படை

   திருமுருகாற்றுப்படை – Thirumurukātruppadai 

Translation by Vaidehi Herbert

Copyright © All Rights Reserved

பாடியவர்                  –     மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்     –      முருகப்பெருமான்
திணை             –       பாடாண்
துறை              –       ஆற்றுப்படை
பாவகை           –       ஆசிரியப்பா
மொத்த அடிகள்    –       317

தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.

This song has 317 lines in the Āsiriyappā/Akaval meter, and was written by the poet Nakkeerar for Murukan.  The six holy Murukan sites of Thirupparankundram, Thirucheer Alaivāy, Thiruvāvinankudi, Thiruvērakam, Kundruthoru ādal and Palamuthir Chōlai are described. Unlike the other ātruppadai songs which guide artists to donors, this song guides seekers to Murukan.  It has been included in the Eleventh Thirumurai of the Saivite Canon and it is recited by many Tamils as part of their daily worship.

 

1. திருப்பரங்குன்றம்


குமரவேளின் பெருமை

 

தெய்வயானையின் கணவன்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை

மறு இல் கற்பின் வாணுதற் கணவன் (1 – 6)

1. Thirupparankundram

 

Splendor of Murukan

 

Husband to Theivayānai

He shines splendidly with a glow at a distance,

like the sun that rises with strength from the ocean

on the right side, glittering without a break,

causing those in the world to be happy,

the god with powerful, strong feet, large, mighty

hands, who ruined his enemies and protects those

who suffer, husband to a woman with bright

forehead and faultless chastity.

Notes:  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.

Meanings:   உலகம் உவப்ப – for those in the world to be happy, வலன் ஏர்பு திரிதரு – rising on the right side and moving, rising with strength and moving, பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு – like seeing the sun that many praise that rises from the ocean, ஓவற இமைக்கும் – glittering without a break, சேண் விளங்கு – shining afar, greatly splendid, அவிர் ஒளி – bright light, உறுநர்த் தாங்கிய – protecting those who are suffering, மதன் உடை நோன் தாள் – powerful strong feet, செறுநர்த் தேய்த்த – ruined enemies, செல்உறழ் – thunder-like, தடக்கை – large hands, மறு இல் கற்பின் வாணுதற் கணவன்  – husband of a woman with faultless chastity/virtue and a bright forehead

கடப்ப மாலை புரளும் மார்பினன்

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10

உருள் பூந்தண் தார் புரளும் மார்பினன் (7 – 11)

Kadampam Garland on his Chest

His chest is adorned with a cool garland

woven with round kadampam flowers

resembling the wheels of chariots, that bloom

on thriving, thick-trunked, densely growing

trees, causing darkness in the cool, fragrant

forest where the heavy, first rain fell from dark,

full rainclouds that had absorbed water, from

the from the sky where darkness is dispelled by

the sun and the moon.

Notes:  கமம் – நிறைவு.  கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).

Meanings:   கார்கோள் முகந்த – clouds absorbed from the ocean, கமஞ்சூல் மா மழை – full dark clouds, pregnant dark clouds, வாள் போழ் விசும்பில் – in the sky where darkness is split (by the sun and moon), வள் உறை சிதறி – scattered down heavy drops of rain, தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து – in the cool fragrant forest where the first rains fall, இருள் பட – causing darkness, பொதுளிய – thriving, பராரை மராஅத்து – of the kadampam tree with thick trunk, உருள் – chariot wheel, rounded, பூந்தண் தார் புரளும் மார்பினன் – he is one with a cool garland moving on his chest

சூரர மகளிர்  

 

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் . . . .20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு
உள் ஐப்பூ மருதின் ஒள் இணர் அட்டி
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணைத்தக . . . .30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறற்கொடி
வாழிய பெரி என்று ஏத்தி பலர் உடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி ….40

சூரர மகளிர் ஆடும் சோலை (12 – 41)

Nature of Celestial Women

Celestial women sing loudly, their music

echoing in the mountains, and dance in a grove

on the lofty mountain with tall bamboo.  They wear

anklets on their bright, red, small feet.  They have

rounded legs, curved waists, bamboo-like arms, clothing

that is in natural color, lovely like pattupoochis, and gold

ornaments with few strands on their waists, their great

beauty not created by hand.  They wear bright jewels that

shine from afar, made with gold from the place with the

name nāval.

 

Their bodies are faultless and their hair, admired by

their friends, oiled, is adorned with vetchi flowers with

small stems, amidst which are placed petals of kuvalai

flowers with green stems.  Jewels called seedevi are

placed on their right-whorled hair knots that look like

conch shells.  Ornaments shaped like the open mouths of

sharks adorn their foreheads with pottu.  Huge blossoms

of chenpakam are placed on their faultless hair knots.

They also adorn their hair with honey-flowing marutham

flowers with soft insides and dark petals, and strands

that are woven with red buds which have grown under

water.  Tender, bright pindi sprouts hang from their

ears, touching their breasts decorated with ornaments.

 

Their breasts that resemble pointed kōngam buds

have beautiful sandal paste smeared on them like

smearing the fragrant flower paste of marutham flowers,

along with vēngai flower pollen.  They pluck and disperse

tender leaves of woodapple trees and sing praising

his lovely, victorious rooster banner, their songs echoing

in the great mountains.

Notes:  கோங்க முகைப்போன்ற முலை:  அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை.  நாவலொடு பெயரிய பொலம்புனை (18) –  போ. வே சோமசுந்தரனார் உரை – சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர் (வடமொழி).  நாவற் கனிச்சாறு பாயும் சம்பு நதியின்கண் தோன்றும் பொன் என்னும் கொள்கைப் பற்றி நால்வகைப் பொன்னுள் வைத்து ஒன்றனைச் சம்பூநதம் என்ப.  பொலம் (18) – பொன்.  பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 355).  மண்ணுறுத்து (25) – போ. வே சோமசுந்தரனார் உரை – தங்கச் செய்து,   நச்சினார்க்கினியர் உரை – ‘ஆவுதி மண்ணி’ என்றாற்போல கொள்க.  இனி ‘கழுவி’ என்றுமாம்.  நறுங்குறடு (33) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டை.  ஈண்டுக் குறிப்பாற் சந்தனக் கட்டையை உணர்த்திற்று.

Meanings:  மால் வரை – tall bamboo (வரை என்பது ஆகுபெயராய் மூங்கிலைக் குறிக்கும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை), நிவந்த சேண் உயர் வெற்பில் – in the distant tall mountain, கிண்கிணி கவைஇய – surrounded by anklets (கவைஇய – சொல்லிசை அளபெடை), ஒண் செஞ் சீறடி – bright red small feet, கணைக்கால் – thick legs, rounded legs, வாங்கிய நுசுப்பின் – with curved waists, பணைத்தோள் – bamboo arms, கோபத்து அன்ன – like pattupoochi, trombidium grandissimum (கோபத்து – கோபம், அத்து சாரியை), தோயாப் பூந்துகில் – delicate/beautiful cloth that is not dyed, delicate/beautiful cloth of natural color, பல் காசு நிரைத்த – with rows of gold coins, சில்காழ் அல்குல் – few strands, waist/loins, கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் – with great beauty that was not created by hand, நாவலொடு பெயரிய பொலம் புனை – made with gold from the place with the name naval (see notes above), அவிர் இழை – bright jewels, சேண் இகந்து விளங்கும் – shines from afar, செயிர் தீர் மேனி – faultless bodies, துணையோர் ஆய்ந்த – analyzed by friends, admired by friends, இணை – alike ones, ஈர் ஓதி – wet hair, oiled hair, செங்கால் வெட்சி – vetchi flowers with small stems, சீறிதழ் இடை இடுபு – placed tiny petals in between (இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), பைந்தாட் குவளை – blue waterlilies with green stems, தூவிதழ் – pure petals, கிள்ளி – tore off, தெய்வ உத்தியொடு – ornament called Seedevi, வலம்புரி வயின் வைத்து – placed on the hair knot looking like right-whorled conch shells, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – fragrant beautiful foreheads with pottu (தைஇய – சொல்லிசை அளபெடை, தேம் – தேன் என்றதன் திரிபு), மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து – placed/washed ornaments that are in the shape of open mouths of sharks, துவர முடித்த – tied totally, துகள் அறும் முச்சி – faultless hair knots, பெருந்தண் சண்பகம் செரீஇ – placed huge cool Chenbakam flowers (செரீஇ – சொல்லிசை அளபெடை), கருந்தகட்டு – black petals, உள் ஐப்பூ மருதின் – of marutham tree flowers with delicate insides, ஒள் இணர் – bright clusters of flowers (இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), அட்டி – placed, கிளைக் கவின்று எழுதரு – rising beautifully from the branches, கீழ் நீர்ச் செவ்வரும்பு – red buds under the water (கீழ் நீர்= நீர்க்கீழ்), இணைப்புறு பிணையல் – woven flower garlands, வளைஇ – around, துணைத்தக  – together, வண் காது நிறைந்த – big ears full, பிண்டி ஒண் தளிர் – asoka tree’s bright sprouts, Saraca indica, நுண் பூண் – fine jewels, ஆகம் திளைப்ப – touching the chest, திண் காழ் – hard-wood sandal, நறுங்குறடு – fragrant wood, உரிஞ்சிய – peeled, பூங்கேழ் – lovely color, lovely and bright, தேய்வை – rubbed and reduced, தேம் கமழ் மருது இணர் கடுப்ப – like the honey-fragrant clusters of marutham tree flowers, Terminalia arjuna (தேம் தேன் என்றதன் திரிபு, கடுப்ப – உவம உருபு, இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), கோங்கின் குவி முகிழ் – like the pointed buds of kōngam, இள முலைக் கொட்டி – smeared on their breasts, விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி – rubbed with fine pollen of open vēngai flowers, காண்வர – beautiful to look,  வெள்ளில் – woodapple trees,  குறுமுறி – tender leaves, கிள்ளுபு தெறியா- plucked and threw, கோழி – rooster, ****, ஓங்கிய – tall, flourishing, வென்று – victorious, அடு – attacking, விறற் கொடி – victorious flag, beautiful flag, வாழிய பெரி என்று ஏத்தி – praise that you live for long, பலர் உடன் – with many, சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி – sing loudly in the great mountains causing echoes, சூரர மகளிர் ஆடும் சோலை – grove where goddesses dance, where celestial maidens dance



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காந்தள் கண்ணி சூடிய சென்னியன்

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தட்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் (42 – 44)

Murukan wearing Kānthal flowers

Murukan wears on his head a strand of huge, cool,

flame-like kānthal blossoms that are not swarmed

be bees, that grow in the mountain range dense with

trees, where even female monkeys do not know the way.

Notes:  அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.

Meanings:   மந்தியும் அறியா – even the female monkeys do not know, மரன் பயில் அடுக்கத்து – mountain ranges dense with trees, சுரும்பும் மூசா – not swarmed by bees, சுடர்ப் பூங்காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் – his head is adorned with a strand of huge cool flame-like glory lilies

முருகன் சூரனைக் கொல்லுதல்

பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்கு

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் (45 – 46)

Murukan killed Sooran

He killed Sooran with his long spear with

bright blade, entering the ocean with huge

rocks and muddying it.

Meanings:  பார் முதிர் – filled with huge rocks, பனிக் கடல் கலங்க – muddying the cold ocean, உள் புக்கு – entered inside, சூர்முதல் தடிந்த – chopped up Sooran, killed Sooran, சுடர் இலை நெடுவேல் – long spear with bright blade

பேய்மகளின் துணங்கை

உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்
சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு . . .50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல்
கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறற் களம் பாடி தோள் பெயரா

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க (47 – 56)

Thunangai performed by a Female Ghoul

A fierce female ghoul with dry hair, crooked teeth,

big mouth, harsh looks with green colored eyes that

whirl, dangling earrings of dangerous snakes and owls

with whirling eyes that hit her breasts, coarse stomach,

fierce walk, played with blood, dug her curved fingers

with sharp nails into eyes and ate them, held the huge,

stinking, black head on her big hands with bright

bangles, sang causing fear in the murderous battlefield,

her mouth with fatty flesh, she performed thunangai

dance, moving her arms.

Meanings:  உலறிய கதுப்பின் – with dried hair, பிறழ் பல் – disorderly teeth,  பேழ்வாய் – big mouth, gaping mouth, சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் – fierce looks with green eyes that whirl, கழல் கண் கூகையொடு – with owl with whirling eyes, கடும் பாம்பு தூங்க – dangling dangerous snakes, பெரு முலை – large breasts, அலைக்கும் – moving, காதின் – on her ears, பிணர் மோட்டு – coarse stomach, உருகெழு செலவின் – fierce walk, அஞ்சுவரு பேய்மகள் – fierce female ghoul, குருதி ஆடிய – played in blood, கூர் உகிர்க் கொடு விரல் – sharp nails and curved fingers, கண் தொட்டு உண்ட – dug up and ate eyes, கழிமுடைக் கருந்தலை – greatly stinking black head, ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி – holding in big hands with bright bangles,  வெருவர causing fear, வென்று  அடு விறற் களம் பாடி – sang in the murderous victorious field, தோள் பெயரா – moving her arms/shoulders, நிணம் தின் வாயள் – she has a mouth that eats fatty flesh, துணங்கை தூங்க – she performs thunangai dance

முருகன் மாமரத்தை வெட்டுதல்

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து . . . .60

எய்யா நல் இசை செவ்வேற் சேஎய் (57 – 61)

Chopped a Mango Tree

Murukan, bearing a fine spear, with great fame that

is unattainable, chopped the trunk of a mango tree

heavy with bent fruit clusters, to control the Asurars.

He cut the body of Sooran with man and beast form

and challenged him to fight with all his six forms

combined as one.

Meanings:  இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – one body with two different forms – man and beast, அறு வேறு வகையின் – with six different forms, அஞ்சுவர மண்டி – went rapidly causing fear, அவுணர் நல்வலம் அடங்க – to control the victory of Asurars, கவிழ் இணர் – bent clusters, மா முதல் தடிந்த – chopped the trunk of a mango tree, மறு இல் கொற்றத்து – with faultless victory, எய்யா நல் இசை – great fame that is unattainable, செவ்வேற் சேஎய் – Murukan with fine spear

 

ஆற்றுப்படுத்தல்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே (62 – 66)

Offering Guidance

If you go with a mind of surrendering to his fine feet

with the principle of doing good, moving away from

bodily desires and desiring eternal bliss with a good

heart through many births, good fame will occur, and

you will get the benefits of your past actions.

Meanings:  சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – with a great mind of going toward his fine/red feet, நலம்புரி கொள்கை – principle of doing good, புலம் பிரிந்து உறையும் – moving away from bodily desires, செலவு நீ நயந்தனை ஆயின் – if you desire to go, பல உடன் – many births, நன்னர் நெஞ்சத்து – with a good heart, இன் நசை வாய்ப்ப – good fame to occur, இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – now you will get the benefit of your past considerations



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்

 

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து . . . .70
மாடம் மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாட் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி எல் படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று (67 – 77)

Murukan is seated in Thirupparankundram

He resides in Thirupparankundram, where tall

victory flags raised with desire fly high at the

entrance, along with striped balls and hanging

dolls.  Enemies were ruined at the gate where

battles are rare.  The mountain is on the west of

Koodal city with streets filled with mansions and

faultless markets where wealth resides.  There are

wide fields with dark mud where lotus flowers with

thorny stems flourish.  Bees sleep on them at night

and buzz on neythal flowers with honey in the

morning.  At sunset the sounds of bees with beautiful

wings hovering over pretty pond flowers are heard.

He is not just there.

Notes:  வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.

Meanings:  செருப் புகன்று எடுத்த – entered battles with desire and raised, சேண் உயர் – far and high, நெடுங்கொடி – tall flags, வரிப்புனை பந்தொடு – along with ball with designs/stripes,  பாவை தூங்க – doll hanging/resting, பொருநர்த் தேய்த்த – ruined enemies, போர் அரு வாயில் – rare/protected gate, திரு வீற்றிருந்த – where wealth/Lakshmi resides, தீது தீர் நியமத்து – with markets without fault, மாடம் மலி மறுகின் – with streets filled with mansions, கூடற் குடவயின் – on the west side of Koodal/Mathurai, இருஞ்சேற்று அகல்வயல் – wide fields with dark mud,  விரிந்து வாய் அவிழ்ந்த – open fully and blossomed, முள் தாட் தாமரைத் துஞ்சி – sleep in the lotus flowers with thorny stems, வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி – swarm on honey-fragrant waterlilies in the early mornings, எல் படக் கண் போல் மலர்ந்த – blossomed like eyes when the sun arrived, காமரு சுனை மலர் – beautiful pond flowers, அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் – the humming sounds of bees with beautiful wings are heard, குன்று அமர்ந்து உறைதலும் உரியன் – the one who resides in the mountains, அதாஅன்று – not only there

2.

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

ஆறுமுகன் யானையின் மேல் ஏறி வருதல்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடு நடை . . . .80
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு (78 – 82)

2.  Thirucheeralaivāy (Thiruchendur)

 

Murukan riding an elephant

He rides on an elephant with swift gait

as fast as the wind, with great strength that

cannot be stopped, like Kootruvan of rapid walk,

with jingling bells hanging on both sides, ōdai

ornaments that do not fade, and face lines with

deep scars caused by weapons with sharp tips.

Meanings:  வைந்நுதி – sharp tips, பொருத – attacked, வடுஆழ் வரி நுதல் – face with lines and deep scars, வாடா மாலை ஓடையொடு – with ōdai ornaments that do not fade, துயல்வர படுமணி இரட்டும் மருங்கின் – on the sides where the hanging bells sway and jingle, கடு நடை – rapid walk, கூற்றத்து அன்ன – like Kootruvan who is the god of death (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), மாற்று அரு மொய்ம்பின் – with great strength that cannot be stopped, கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு – climbing on an elephant as rapid as the rising wind



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆறுமுகங்களின் இயல்புகள்

 

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே . . . .90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் . .100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அம்மூ இரு முகனும் முறை நவின்று ஒழுகலின் (83 – 103)

Nature of the Six Faces

The lovely crown on his splendid head bears five

different shapes and it is bright with many kinds of

gems that glitter like lightning flashes.  The gold

earrings on his ears display excellent craftsmanship

and they sway, dazzling like the permanent stars that

surround the bright moon that gleams even at a

distance.

The radiant faces of Murukan shine brilliantly in

the hearts of those with faultless principles.  One

face spreads many beams of light to make the huge,

dark earth glow and flourish without faults.  One

face showers boons with love on devotees who praise

him.  One face protects Brahmins who follow ancient

tradition and chant Vedas.  One face brightens

directions like the moon, examining the contents of

the scriptures.  One face destroys enemies in battles

with rage and performs rituals in the battlefield.

One face is blissful in the company of the

daughter of a mountain dweller, Valli with vine-like

waist.  Thus the six faces perform their duties.

Notes:  களவேள்வி-திருமுருகாற்றுப்படை 100 – கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – ஒளவை துரைசாமி உரை – இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம்.  புறநானூறு 26 – அடு போர் வேட்ட வடுபோர்ச் செழிய, புறநானூறு 372 – புலவுக் களம் பொலிய வேட்டோய், அகநானூறு 36-22, கொன்று களம் வேட்ட ஞான்றை, மதுரைக்காஞ்சி 128-130 – களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 – களம் வேட்டன்றே ஒரு முகம். களம் வேட்டன்றே (100) – ஒளவை துரைசாமி உரை புறநானூறு பாடல் 372 – இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம்.

Meanings:  ஐவேறு உருவின் – in five different shapes, செய்வினை முற்றிய முடியொடு – with a crown with perfection in work, விளங்கிய முரண் மிகு திருமணி –  bright differing beautiful gems, மின் உறழ் இமைப்பின் – glitter like lightning, சென்னிப் பொற்ப – head is splendid, நகை தாழ்பு  துயல்வரூஉம் வகை – bright hanging variety of jewels, அமை பொலங்குழை – perfect golden earrings, சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – surrounding the bright moon which shines even at a distance, அகலா மீனின் அவிர்வன இமைப்ப – they glitter like stars which do not go away, தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் – those who finish their faultless business, மனன் நேர்பு எழுதரு – that appears in their hearts, வாள் நிற முகனே – one with a bright face, மா இருள் ஞாலம் – the huge dark world,  மறு இன்றி விளங்க – to flourish without fault, பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் – one face spreads many beams of light, ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே – one face as devotees praise gives them happily boons with love, ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – one face protects Brahmins who follow tradition and chant Vedas in a faultless manner, ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி திங்கள் போலத் திசை விளக்கும்மே – one face brightens directions like the moon examining the contents of the scriptures with happiness,  ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே – one face ruins enemies in victorious battles with rage and performs rituals in the battlefield, ஒரு முகம் குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – one face is blissful in the company of Valli with a vine-like waist who is the daughter of a mountain dweller, ஆங்கு அம்மூ இரு முகனும் – there the six faces, முறை நவின்று ஒழுகலின் – since they perform their duties

பன்னிரு கைகளின் தொழில்கள்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
அங்குசம் கடாவ ஒரு  கை இரு கை . . . .110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை

மார்பொடு விளங்க ஒரு கை
தாரொடு பொலிய ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒரு கை
பாடுஇன் படுமணி இரட்ட ஒருகை
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட

ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி (104 – 118)

Nature of his Twelve Arms

His handsome chest adorned with gold garlands

has three red lines that reach his curved, straight,

ray-emitting arms of great fame that split the

bodies of enemies.

One lifted arm is protecting great men who have the

tradition of going to the upper world.  One arm rests

on his waist.  One arm rests on his thigh with fine

clothes.  One arm carries an elephant goad.  One arm

holds a lovely, dark shield and the other one whirls

a spear.  One arm placed on his chest glows.  One arm

shines amidst his garlands.  One arm whirls with his

bracelets that move down.  One arm rings a sweet

sounding bell.  One arm causes heavy rains to fall

from the blue sky.  One arm places marriage

garland on the celestial woman Theivayānai.  Thus

the twelve arms perform their duties

corresponding to the faces.

Notes:  The phrase ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட has been interpreted differently by various commentators and translators.  Some have interpreted it as ‘one hand placing wedding garlands on celestial women’.  Some have interpreted it as just ‘one hand placing a wedding garland on a celestial woman’, which would be his consort Theivayānai.

Meanings:  ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – on the splendid chest with gold garlands/pearl strands/sandal garland hanging, செம்பொறி வாங்கிய – have the three lines/signs, மொய்ம்பின் – with great strength, சுடர் விடுபு – emits rays, வண் புகழ் நிறைந்து – with great fame, வசிந்து – split (bodies of enemies) வாங்கு நிமிர் தோள் – curved erect arms, curved erect shoulders, விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை – one lifted hand is protecting great men who go to the upper world, உக்கம் சேர்த்தியது ஒரு கை – one hand is placed on the waist,  நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – one hand is on the thigh with fine clothes, அங்குசம் கடாவ ஒரு கை – one hand carries the elephant goad, இரு கை ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப – of the two hands – one holds a lovely dark shield and the other one whirls a spear, ஒரு கை மார்பொடு விளங்க  – one hand glows on his chest, ஒரு கை தாரொடு பொலிய – one hand shines with his garlands, one hand is beautiful with his garlands, ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப – one hand has whirling low hanging bracelets on it (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட – one hand rings a sweet sounding bell, ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய – one hand causes heavy rains to fall from the blue heavens, ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட – one hand places marriage garlands on a elestial woman – Theyvayānai, ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி – thus the 12 hands did their work corresponding to the faces

அலைவாயில் ஆறுமுகன்

அந்தரப் பல்லியம் கறங்க திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல . . . .120
உரந்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று (119 – 125)

Murukan in Alaivāy

Many musical instruments are played inside.

Solid wood vayir horns blow, white conch shells

blare, drums roar like thunderbolts, and pea****s

with many spots screech from his victory banners.

Through the sky as his path, Murukan makes his

journey to Alaivāy of great fame.  That is his

established nature.  He is not just there.

Meanings:  அந்தரப் பல் இயம் கறங்க – many musical instruments are played inside, திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப – solid wood vayir horns are blown, வால் வளை ஞரல – white conch shells blare,  உரந்தலைக் கொண்ட உரும் இடி முரசமொடு – along with drums with the loud sounds of powerful thunder, பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – pea****s with many spots screech from victory banners, விசும்பு ஆறு ஆக – through the sky as a path, விரை செலல் முன்னி – considering to go fast, உலகம் புகழ்ந்த – praised by the world, ஓங்கு உயர் விழுச்சீர் – with lofty great fame, அலைவாய்ச் சேறலும் – to reach Alaivāy, நிலைஇய பண்பே – that is his established nature, அதாஅன்று – not only there

3.  திருவாவினன்குடி (பழனி)

முன் செல்லும் முனிவர்கள்

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் . . .130
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்

துனி இல் காட்சி முனிவர் முற்புக (126 – 137)

3.  Thiruvāvinankudi (Palani)

 

Sages

The sages who wear tree bark clothing march

in front, their hair beautiful and white like

right-whorled conch shells, bodies shining in

purity covered with deer hide, flesh reduced

with ribs sticking out, they fast during the day.

Their minds not clouded with hatred,

they know even what the well-learned do not

know.  Their leadership is the limit for the learned.

They have removed great rage and desire from

their minds and they do not know pain.

Meanings:  சீரை தைஇய உடுக்கையர் – those wearing tree bark clothing,  சீரொடு – beautifully, வலம்புரி புரையும் – like the right-whorled conch shells, வால் நரை முடியினர் – those with white hair, மாசு அற இமைக்கும் உருவினர் – those who shine with purity, மானின் உரிவை தைஇய – clothed in deer hide, ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் – those with bodies with ruined flesh with ribs rising up on their chests, நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் – those who do not eat during the daytime,  இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் – those with anger removed from them, those with hatred removed from them, யாவதும் கற்றோர் அறியா அறிவினர் – intelligent people who know even what the well learned do not know, கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் – those whose leadership is the limit for the learned, காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் – those who have removed great rage along with desire, இடும்பை யாவதும் அறியா இயல்பினர் – those who do not know even a little bit of pain, மேவரத் துனி இல் காட்சி – perfect nature without hatred, முனிவர் முற்புக  – with sages leading in the front

மேவலர்

புகை முகந்தன்ன மாசு இல் தூஉடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .140

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர (138-142)

Celestials

Celestials follow them, in their faultless

pure clothing that appear like they had

absorbed smoke, their noble chests donning garlands

with newly opened blossoms, their hearts kind, and

their words delicate because of the music of lutes they

play whose strings have been tuned listening to their

tones with sharp ears.

Meanings:  புகை முகந்தன்ன – like they had absorbed smoke, மாசு இல் தூஉடை – faultless pure clothing, முகை வாய் அவிழ்ந்த – buds opened their petal tips and blossomed, தகை சூழ் ஆகத்து – with beautiful chests with garlands, with esteemed chests with garlands, செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல் யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் – with kind hearts used to playing fine lutes with tied frets and listening to them with their sharp ears, மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர – celestials with delicate/kind words because of the music of the lute

பாடும் மகளிர்

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க (143 – 147)

Female Musicians

They are followed by their faultless women

wearing waist ornaments,

who shine with skins like bright mango

sprouts, bodies like touchstones on which

gold is rubbed, and loins that are lowered

and raised to perfection.

Notes:  பணிந்து ஏந்து அல்குல் (146) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழ வேண்டியவிடம் தாழ்ந்து உயர வேண்டியவிடம் உயர்ந்த அல்குல்.

Meanings:  நோய் இன்று இயன்ற யாக்கையர் – those with bodies without diseases, மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் – those with bodies like the bright sprouts of mango trees, அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் – bright like touchstones rubbed, திதலையர் – women with bodies with pallor, இன்நகைப் பருமம் தாங்கிய – bearing beautiful waist ornaments, பணிந்து – lowered, ஏந்து – raised, அல்குல் – loins, மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – shine with their women with no fault



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருமால்சிவன்இந்திரன்

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150
புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு
வலம்வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ எயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை

எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் (148 – 159)

Thirumāl, Sivan and Indiran

They are followed by Thirumal with his long

banner with the emblem of the bird garudan,

with many stripes on his curved wings, who

attacks and kills fierce snakes hissing like flame

that hide poison in their hollow, white fangs.

He is followed by powerful Sivan with three

unwinking eyes, destroyer of three fortresses,

who holds on his sturdy right arm praised by

many, a flag with white bull emblem.  He shines

with his consort Umai.

He is followed by prosperous Indiran who has

a thousand eyes, who has won victories over

enemies he vanquished by offering a hundred

sacrifices, who rides on the neck of his tall

elephant Airavatham with four raised tusks,

low hanging huge trunk and beautiful gait.

Meanings:  கடுவொடு – with poison, ஒடுங்கிய – hiding, தூம்புடை வால் எயிற்று – with hollow white teeth, அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் – attacks and kills the fierce snakes that hiss like flame, பல்வரிக் கொடுஞ்சிறைப் புள் – bird (Garudan) with many stripes and curved wings, அணி நீள் கொடிச் செல்வனும் – Thirumal with beautiful, long flag, வெள் ஏறு வலம் வயின் உயரிய – holds on his right the white bull (flag), பலர் புகழ் திணி தோள் – sturdy arms praised by all, உமை அமர்ந்து விளங்கும் – he shines with Umai with him, இமையா முக்கண் – three eyes that do not close, மூ எயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் – greatly powerful Sivan who ruined the three fortresses, நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து – has thousand eyes he looks through, நூறு பல் வேள்வி முற்றிய – attained by hundreds of rituals (horse sacrifices), வென்று அடு கொற்றத்து – woth victories in murderous battles, ஈர் இரண்டு ஏந்திய மருப்பின் – with four lifted tusks, எழில் நடை – beautiful walk, தாழ் பெருந்தடக்கை – low hanging huge trunk, உயர்த்த யானை எருத்தம் ஏறிய – seated on the neck of his tall elephant Airavatham, திருக்கிளர் செல்வனும்  – prosperous Indiran

 நான்கு தெய்வங்களும் தேவர்களும்

நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய . . .160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் (160 – 168)

Four Gods and Celestials

Among the four Gods desiring the same

Principle of protecting the stable earth with

fine cities, only three praised by many have

appeared in this world. They pray to elevate

him to his high place, the faultless, four-faced

Brahman who rose from the navel lotus.

They are followed by thirty-three celestials of

four different categories, who do not differ in

their wisdom even though they appear to be

different since they are separated, and eighteen

deities presiding over the elements who attained

greatness.

Notes:  ஒன்பதிற்று இரட்டி (வரி 168) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்பதிற்று இரட்டி என்றது பதினெண்கணங்களை.

Meanings:  நாற்பெருந் தெய்வத்து – of the four great Gods, நல் நகர் நிலைஇய உலகம் காக்கும்  – protect the stable world with fine cities, ஒன்று புரி – desiring the one matter (protection), கொள்கை – principle, பலர் புகழ் – praised by many, மூவரும் – the three Gods, தலைவர் ஆக – as leaders, ஏமுறு ஞாலம் தன்னில் – in this world they protect, தோன்றி – appeared, தாமரை பயந்த – yielded by a lotus flower, தா இல் – faultless, perfect, ஊழி நான்முக ஒருவற் சுட்டி – to elevate the four-faced one/Brahman to his position, காண்வர பகலில் தோன்றும் – appearing to be different when separated, இகல் இல் – not differing, காட்சி – intelligence, நால் வேறு இயற்கை – 4 different categories, பதினொரு மூவரொடு – with 33 celestials, ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – the 18 deities who preside over the elements who attained greatness

மீன் பூத்தன்ன தோன்றலர் மீன் சேர்பு

வளி கிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத் . . .170
தீ எழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும் இடித்தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்

அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண (169 – 174)

They resemble emerging stars seen together,

their swiftness like that of the wind, their voices

like the roars of thunder with lightning flashes,

and their might like fire that appears with winds.

They have come down from their celestial abode

to regain their former status through the graces

of lord Murukan, when they are distressed.

Meanings:   மீன் பூத்தன்ன தோன்றலர் – they resemble the stars that appear, மீன் சேர்பு – stars together, வளி கிளர்ந்தன்ன – like winds that rise, செலவினர் – those who go, வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் – those with strength like the fire that rises with winds, தீப்பட உரும் இடித்தன்ன குரலினர் – those with voices like thunder that roars when there is fire, விழுமிய – with sorrow, உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார் –   to request and regain their former status (from Murukan), அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண – those who roam in the sky come and stand to be seen together

முருகன் மடந்தையோடு

தா இல் கொள்கை மடந்தையொடு சில நாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று (175 – 176)

Murukan with his consort

He is in Tiruvāvinankudi, with a woman

with faultless principles.  He is not just there.

Meanings:    தா இல் கொள்கை மடந்தையொடு – with the woman with faultless principles, சில நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் – he is in Tiruvāvinankudi, அதாஅன்று – not only there

4. திருவேரகம் (சுவாமிமலை) 
இரு பிறப்பாளர்

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை . . .180
மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல (177 – 182)

4. Thiru Ērakam (Swamimalai)

 

The Twice Born

The twice-born, who perform the six duties

without fail, respected, born to ancient, traditional

families on both sides, who spend forty eight years of

their young age on the righteous path with

principles of uttering truths, who tend three

sacred fires which is their wealth, chant.

 

Meanings:    இரு மூன்று எய்திய – perform the 6 duties, இயல்பினின் வழாஅது – not faulting, இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – born to ancient traditional families on both sides and respected, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – spend 48 years and their youth on the path, அறன் நவில் கொள்கை – principle of uttering virtue/truth, மூன்று வகைக் குறித்த – three kinds indicated, முத்தீச் செல்வத்து – wealth is tending three fires, இரு பிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – the twice-born know the time and chant

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரை உறு நறுமலர் ஏற்றி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று (183 – 189)

They wear three strands with three fine threads

in each and wet clothing that dry when

worn.  They worship holding their palms above,

praising him, uttering the six-syllabled secret

name, and scatter fragrant flowers happily to the

one who resides in Ērakam.  He is not just there.

Meanings:  ஒன்பது கொண்ட – having nine, மூன்று புரி நுண் ஞாண் – three strands with three fine threads twisted together, புலராக் காழகம் – not dried clothing,  புலர உடீஇ – wear it to dry, உச்சிக் கூப்பிய கையினர் – those worshipping with their hands above,  தற்புகழ்ந்து – praising him, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – Vedic rituals with six letters, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – sing with their tongues learning well, விரைஉறு நறுமலர் ஏற்றி – throw many kinds of fragrant flowers, பெரிது உவந்து – greatly happy, ஏரகத்து உறைதலும் உரியன் – the one who resides in Ērakam, அதாஅன்று – not only there



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 5. குன்றுதோறாடல் (திருத்தணி)

 

குரவைக் கூத்து

 

பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் . . .190
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக்கண் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர (190 – 197)

5.  Kundruthorādal (Thiruthani)

 

Kuravai Dance

vēlan adorns himself with green vines

with fragrant nutmeg woven in between, and a

garland strung with tailed pepper, kulavi and

white koothalam flowers.  His bright chest is

adorned with fragrant sandal paste.  The forest

dwellers with strong bows, who are capable of

killing animals, drink sweet liquor aged in long

bamboo pipes, and perform kuravai dances

with their relatives in the small mountain village,

to the beats of small thondakam drums.

Notes:  மூங்கிலில் விளைந்த கள்:  நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.

Meanings:    பைங்கொடி நறைக்காய் இடை இடுபு வேலன் – the velan adorns himself with green creepers with fragrant nutmeg woven in between, அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – he also wears a garland strung with tailed pepper, piper cubeba (வால் மிளகு), kulavi and white koothalam flowers, நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் – with a bright chest adorned with fragrant sandal paste, கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் – forest dwellers with strong bows who perform harsh killing, நீடு அமை விளைந்த தேக்கண் தேறல் – sweet liquor aged in long bamboo, குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர – perform kuravai dance to the beats of the small thondakam drums, with their relatives in the small mountain community

 குன்றுதோறாடலில் முருகன்

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் . . . .200
முடித்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் . . . .210
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே அதாஅன்று (198 – 217)

Murukan in Kundruthorādal 

The young mountain women with delicate

walks, like pea****s, wear garlands strung with

many fragrant flowers plucked from deep

springs, opened by their fingers touching them,

which are swarmed by bees.  Their tied hair is

adorned with kullai flowers with leaves

and white clusters of red-trunked kadampam

flowers which are swarmed by bees.

Their loins with gem strands are covered with large,

cool, dark leaves that move.

Murukan wears red clothing, cool asoka sprouts

sway from his ears, and tight clothing covers his body.

He wears warrior anklets and a vetchi flower garland.

He plays the flute, musical horns and many small

instruments.  He has a goat and a pea****.

His beautiful flag has a faultless ****.  The garment

wrapped around his waist drapes down.

He is surrounded by mountain girls whose voices

are as sweet as lutes that sound like swarms of

humming bees.  Lifting his large arms resembling

mulavu drums, he embraces delicately many

women.  Such is the nature of dances in the mountains.

He is not just there.

Meanings:    விரல் உளர்ப்பு அவிழ்ந்த – opened by fingers shaking/moving them, வேறுபடு நறுங்கான் – various fragrances, குண்டு சுனை பூத்த – bloomed in the deep springs, வண்டுபடு கண்ணி – flower strands attacked by bees, இணைத்த கோதை – woven garland, அணைத்த கூந்தல் – tied hair, முடித்த குல்லை – tied kullai flowers, basil, இலையுடை நறும் பூ –fragrant flowers with leaves, செங்கால் – red-trunked trees or red-stemmed flowers,  மராஅத்த – of kadampam trees (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), வால் இணர் – white clusters, இடை இடுபு – in between, சுரும்பு உண – bees swarming, bees to eat (உண உண்ண என்பதன் விகாரம்), தொடுத்த – strung, பெருந்தண் மாத்தழை – huge, cool dark leaves, திருந்து காழ் அல்குல் – waist with perfect gem strands,  திளைப்ப – moving, உடீஇ – wearing (உடீஇ – சொல்லிசை அளபெடை), மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு – with women whose walks are like those of pea****s, செய்யன் சிவந்த ஆடையன் – the red one with red clothing, Murukan, செவ்வரைச் செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் – he is one with cool asoka sprouts from the fine/red mountain swaying from his ears, Saraca indica, கச்சினன் – he is one wearing a cloth around his body, கழலினன் – he is wearing warrior anklets, செச்சைக் கண்ணியன் – he is wearing vetchi flower garland, குழலன் – he is playing the flute, கோட்டன் – he is with musical horns, குறும் பல்லியத்தன் – he is one who plays many small instruments, தகரன் – he is one with a male goat, மஞ்ஞையன் – he is one who is on the pea****,  புகர் இல் சேவல் அம் கொடியன் – he is one with a beautiful flag with spotless/faultless rooster, நெடியன் – he is the tall one, தொடி அணி தோளன் –he is one with bracelets on his arms,  நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு – with sweet-sounding bees swarming with lute sounds, குறும் பொறிக் கொண்ட –  having small sign, நறுந்தண் சாயல் – cool fragrant nature, மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – he is one with clothes wrapped around his waist draping to the ground (நிலன் – நிலம் என்பதன் போலி), முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி – lifting on his mulavu drum-like huge hands (உறழ் – உவம உருபு), மென் தோள் பல் பிணை தழீஇ – embracing many women with delicate arms (தழீஇ – சொல்லிசை அளபெடை), தலைத்தந்து – give them space fittingly, great in dancing, குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே – the nature of dancing in all the mountains, அதாஅன்று – not just there (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, இசைநிறை அளபெடை)

6. பழமுதிர்சோலை

 

முருகன் இருப்பிடங்கள்

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் . . . .220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப் பூங்கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் (218 – 226)

6.  Palmuthir Chōlai

 

Murukan’s Places

He is in the veriyāttam grounds created

by the vēlan, where

tiny millet is mixed with flowers, young

goats are killed, and rooster flags are flown.

In all the splendid festivals in all the towns,

those who worship, praise him.

He is in the lovely islands, forests, groves,

rivers and in ponds.

He is in various different towns, in the

common grounds, and in the street junctions.

He is in the kadampam trees with flowers and

In the common grounds.  He is also on columns.

 

Meanings:  சிறுதினை மலரொடு விரைஇ – mixing tiny millet with flowers, மறி அறுத்து – killing young goats, வாரணக் கொடியொடு – with rooster flags, வயிற்பட – to stay there, நிறீஇ – placed there, ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – in the splendid festivals in all the towns, ஆர்வலர் ஏத்த – worshippers praise, மேவரு நிலையினும் – acceptable to the mind, வேலன் தைஇய வெறி அயர் களனும் – veriyāttam grounds created by the vēlan, காடும் காவும் – in the forests and groves, கவின் பெறு துருத்தியும் – and in the beautiful islands, யாறும் குளனும் – and in the rivers and ponds, வேறு பல் வைப்பும் – and in the various different towns, சதுக்கமும் – and the town’s common grounds, சந்தியும் – and the junctions where four and five streets meet, புதுப் பூங்கடம்பும் மன்றமும் – and in the kadampam trees with new flowers and in the common grounds, பொதியிலும் கந்துடை நிலையினும் – and in the common areas and in the poles



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 குறமகளின் வெறியாட்டு

 

 

ஆண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ . . .230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ
சிறுபசு மஞ்சளொடு நறு விரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க . . .240
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க

முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியல் நகர் (227 – 244)

Veriyāttam Ritual

To invite Murukan, a mountain woman

planted a flag with a man’s head and a bird’s

body, applied ghee and tiny mustard seed paste,

chanted softly, worshipped strewing big flowers,

wore clothing of two different shapes, tied red

thread, scattered puffed rice, mixed the blood

of a fat male goat with great strength and huge legs,

gave many offerings, offered fragrant water and

small, fresh turmeric, hung cool, red oleander

garlands together,

spread fragrant smoke, sang kurinji melodies,

played musical instruments that sounded along

with roaring waterfalls, threw as offerings many

flowers with various shapes, spread fear-causing

blood with red millet, and played instruments to

please him, that caused fear in non-believers in

the fierce, huge temple of Murukan.

Notes:  ஆண்தலை (227) – மாண்தலை என்றும் பாடம் உண்டு.    நச்சினார்க்கினியர் உரை – ஆண்தலைக் கொடி என்பது பாடமாயின் தலை ஆண்மகனின் தலையாகவும் உடல் புள்ளின் உடலாகவும் எழுதின கொடி என்க.  உரு (244) – அச்சம்.  உரு உட்காகும் புரை உயர்வாகும். (தொல்காப்பியம், உரியியல் 4).

Meanings:  ஆண்தலைக் கொடியொடு – with flag with a head of man and body of a bird, மண்ணி அமைவர – to clean, நெய்யோடு ஐயவி அப்பி –  rubbed ghee and white mustard paste, ஐது உரைத்து – chanted delicately, chanted beautifully, குடந்தம்பட்டு – worshipped, கொழு மலர் சிதறி – strew big flowers, முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – wore with two different shaped clothing (உடீஇ – சொல்லிசை அளபெடை), செந்நூல் யாத்து – tied red thread, வெண்பொரி சிதறி – scattered white puffed rice, மதவலி நிலைஇய மாத்தாட் கொழு விடைக் குருதியொடு விரைஇய – mix with blood of fat male goat with great strength and huge legs (மதவலி – ஒருபொருட் பன்மொழி, நிலைஇய – சொல்லிசை அளபெடை, விரைஇய – சொல்லிசை அளபெடை), தூ வெள் அரிசி சில் பலிச் செய்து – offered a little pure white rice, பல் பிரப்பு இரீஇ – gave many offerings (இரீஇ – சொல்லிசை அளபெடை), சிறு பசு மஞ்சளொடு – along with small fresh turmeric, நறு விரை தெளித்து – scattered fragrant water, பெருந்தண் கணவீர – huge cool red oleander, நறுந்தண் மாலை – fragrant cool garlands, துணையுற – together, அறுத்துத் தூங்க நாற்றி – cut and hung, நளி மலைச் சிலம்பில் – on the dense mountains,  நல் நகர் வாழ்த்தி – praise the fine houses,  நறும் புகை எடுத்து – spread fragrant smoke, குறிஞ்சி பாடி – sang in kurinji melody, இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – played sweet music along with sweet music roaring waterfalls, உருவப் பல் பூத் தூஉய் – throw as offerings many flowers with different shapes (தூஉய் – இன்னிசை அளபெடை), வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி – spread blood with red/fine millet causing fear, குறமகள் முருகு இயம் நிறுத்து – the mountain woman playing instruments that please Murukan, முரணினர் உட்க – causing fear to those not agreeable, முருகு ஆற்றுப்படுத்த – causing Murukan to come, உருகெழு வியல் நகர் – fierce huge temple

 

ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்
கோடு வாய் வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே (245 -249)

Singing loudly in the veriyāttam ground with
frenzied dances where many horns were blown,
curved bells rang, she praised the brave elephant
Pinimukam that does not back off.
Murukan lives there forever for those who worship,
as I am aware.

Notes:  பலவுடன் கோடு வாய் வைத்து (245-246) – கோடு பலவுடன் வாய் வைத்து என்று படிக்கவும்.  பிணிமுகம் (247) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிணிமுகம் என்ற பட்டதையுடைய யானை.  பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர்.  பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.

Meanings:  ஆடு களம் சிலம்பப் பாடி – singing loudly in the veriyāttam ground, பலவுடன் கோடு வாய்வைத்து – many horns were blown, கொடு மணி இயக்கி – curved bells rang, ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி – she praised the brave elephant named Pinimukam that does not back off, வேண்டுநர் – those who desire, வேண்டியாங்கு எய்தினர் வழிபட – for those to worship as they desire, ஆண்டு ஆண்டு உறைதலும் – lives there forever, அறிந்தவாறே – as I know

முருகனைக் கண்டு துதித்தல்

ஆண்டுஆண்டு ஆயினும் ஆக காண்தக . . . .250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி
கை தொழூஉப் பரவி கால் உற வணங்கி
நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ
ஆல் கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானைத் தலைவ . . .260
மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள . . . .270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குரிசில் எனப்பல

யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது (250 – 277)

Worshipping Murukan

When you see him in front of you, the one who

exists for eons, praise him, lift your hands and

pray to him.  Worship prostrating so that your

head can touch his feet.

 

Tell him, “O Lord who was received by fire, one of

the five elements, on its beautiful hands, born to six

in six forms in a fresh mountain spring rich in

kuvalai blossoms, O son of Sivan under a banyan tree,

O son of Parvathi, the daughter of a mountain king,

O lord who is death to enemies, O son of Kotravai

who is victorious in battles, O child of the ancient forest

goddess with splendid jewels, O lord of an army with

curved bows worshipped by celestials, O Lord donning

flower garlands on your chest, O lord with knowledge of

books, O brave warrior of battles, O wealth of Brahmins,

O words of the wise, O husband of women, O lion among

warriors,

O Great, noble Lord with a large hand that carries a spear,

O Lord who broke a mountain, O Lord of the mountains

that touch the skies, O Lord who is like a lion to poets

with fine words and great fame, O Murukan with great

name and precious tradition, O famed Lord who gives

boons to those who seek you, O Red Lord with gold jewels

who gives to those who are suffering, O fierce Lord whose

victorious chest helps those who come to you in need,

O Great God who is praised by the wise! O Lord with great

strength who fought battles and killed Sooran and his clan.”

Praise him in this manner.  This is what I know.

Notes:   Perumpānātruppadai lines 456-458 refer to Kotravai being the mother of Murukan கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்வி.  She is also mentioned in Akanānūru 245-4 as கான் அமர் செல்வி.  பழையோள் (259) – நச்சினார்க்கினியர் உரை – காடு கிழாள்.

Meanings:  ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக – one who is there for eons and eons, காண்தக – worthy to see, முந்து நீ கண்டுழி – when you see him in front of you, முகன் அமர்ந்து ஏத்தி – look at him with your face and praise him, கைதொழூஉப் பரவி – lift your hands and worship him, கால் உற வணங்கி – fall down and worship him for your head to touch his feet, நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை – in a fresh spring with blue waterlilies on a huge mountain summit, in a fresh spring with tharuppai grass, ஐவருள் ஒருவன் – one among five – sky, wind, fire, water, land, அங்கை ஏற்ப – hold on his beautiful hands, அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – O lord with six forms who came into being because of six, ஆல் கெழு கடவுட் புதல்வ – O son of Sivan under a banyan tree, மால்வரை மலைமகள் மகனே – O son of Parvathi (Umai) who is the daughter of the lord of the high mountains, மாற்றோர் கூற்றே – O Death to enemies, வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ – O son of Kotravai who is victorious in battles, இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – O child of the ancient goddess of the forest wearing splendid jewels, வானோர் வணங்கு வில் தானைத் தலைவ – O lord of the army with curved bows worshipped by celestials, மாலை மார்ப – O lord with flower garlands on your chest,  நூல் அறி புலவ – O wise man/poet who knows books, செருவில் ஒருவ – O lord who stands alone in battles, பொரு விறல் மள்ள – O brave warrior of battles, அந்தணர் வெறுக்கை  – you are the wealth of Brahmins, அறிந்தோர் சொல்மலை – O words of the wise,  மங்கையர் கணவ – O husband of women, மைந்தர் ஏறே  – O lion among warriors, வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ – O greatly noble lord with large hands that carry a spear, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து – O great lord who broke a mountain victoriously, விண் பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ – O lord of the tall mountains that touch the sky, பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே – O lord who is like a lion to poets with fine words and great fame, அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – O Murukan with great name of precious tradition, நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள  – O famed lord who gives boons to those who come with desire, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் – O Murukan with gold jewels who gives to those who are suffering, மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் – O fierce lord whose victorious-in-close wars chest protects those who come to you in need (நெடுவேஎள் – இன்னிசை அளபெடை), பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – O great God who is praised by the wise, சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் – O lord with great strength who fought battles and killed Sooran and his relatives (மதவலி – ஒருபொருட் பன்மொழி), எனப்பல  யான் அறி அளவையின் – this is what I know, ஏத்தி  ஆன-   praise in this manner

 

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் . . . .280

குறித்தது மொழியா அளவையின் (278 -281)

Even before you request like this,

“To measure you and know you is impossible

for lives on earth.  I came here thinking about

surrendering to your feet, O Lord of spiritual

wealth with no equal,”

Meanings:    நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – to measure you and know you is impossible for lives on earth, நின் அடி உள்ளி வந்தனென் – I came thinking about surrendering to your feet, நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் – O lord of spiritual wealth with nobody to match you, எனக் குறித்தது மொழியா அளவையின் – even before you request what you consider

 

… … … .. …. குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும்பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து என

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி (281 – 286)

his devotees will appear in various forms in

an arena where festivals are celebrated with

great splendor, and plead for you in one voice

sweetly and nicely,

“This seeker is pitiful, O lord.  He is a wise man

with needs who desires you with great fame”.

Meanings:    குறித்து உடன் – appeal together, வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – workers/devotees in various forms, சாறு அயர் களத்து – in an arena where festivals are celebrated, வீறு பெறத் தோன்றி – appearing splendidly, அளியன் – he is a pitiable man, தானே முதுவாய் இரவலன் – a wise man with needs, வந்தோன் – the man who has come, பெரும – O lord, நின் வண் புகழ் நயந்து – desiring you with great fame, என இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – thus they praise greatly sweetly and nicely

முருகன் அருள் புரிதல்

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டைத்தன்
மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி . . . .290
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்புடை நல்மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய

பெறல் அரும் பரிசில் நல்குமதி (287 – 295)

Murukan’s Kindness

At this time Murukan will appear in an afflicting,

splendid, divine form, touching the earth and

the sky, show his ancient, youthful form with sweet

fragrance and tell you kindly, “Do not fear!  I am

aware of your visit,” and he will give you great,

difficult-to-attain gifts, appearing to you in this

world surrounded by dark, deep waters.

Notes:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

Meanings:    தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – in the bright divine form, in the splendid divine form, வான்தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – appearing in a form that is high and touching the skies, அணங்கு சால் உயர் நிலை தழீஇ – with afflicting divine nature (afflicting since his attributes cannot be comprehended by people), பண்டைத்தன் மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – he will show his ancient youthful form with sweet fragrance, அஞ்சல் ஓம்புமதி – do not fear, அறிவல் நின் வரவு – I am aware of your visit, என அன்புடை நல்மொழி அளைஇ – thus he will utter kind words to you, விளிவு இன்று – without ruin, இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – in the world surrounded by dark deep waters, ஒரு நீ ஆகித் தோன்ற – appearing to you, விழுமிய – great, பெறல் அரும் – difficult to attain, பரிசில் நல்குமதி – he will give you gifts

முருகனின் மலையின் வளம்

 

…. … … …. பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழு முதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன்பல . . . .300
ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்ப பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசி பெருங் களிற்று
முத்துடை வான் கோடு தழீஇ தத்துற்று
நன்பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா
வாழை முழு முதல் துமிய தாழை
இளநீர் விழுக்குலை உதிர தாக்கி
கறிக்கொடிக் கருந்துணர் சாய பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ . . . .310
கோழி வயப்பெடை இரிய கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கைக் குடாஅடி உளியம்
பெருங்கல் விடர் அளைச் செறிய கருங்கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப சேண் நின்று
இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே (295 – 317)

The Beauty of His Mountain

He is the lord of the mountain with groves with

abundant fruits.  From his mountain, waterfalls

cascade down like many swaying flags, carrying

akil wood, uprooting sandal trees, hurting the

stalks of bamboo with flowers by tearing their

roots, breaking sun-shaped honeycombs with cool

fragrance, mixing mature segments of breadfruits

in their water, dropping fragrant nākam flowers,

causing ookam monkeys to shiver along with

black-faced monkeys, making cow elephants tremble

in the cold, carrying white, pearl-filled tusks of bull

elephants, exposing gems and gold, dropping banana

trees with trunks, making tender coconuts from fine

clusters to drop, causing pepper vines with black

clusters to break, causing pea****s with spots and

delicate walk to fear, making female birds and pigs

to move away, causing bears with curved legs and

body fur as dark as the fiber of palmyra trees with

pith to crowd in caves,

and causing fine bulls with dark horns to bellow.

Notes:  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.

Meanings:   பலவுடன் வேறு பல் துகிலின் நுடங்கி – swaying like various different flags, அகில் சுமந்து – carrying akil wood, ஆர முழு முதல் உருட்டி – uprooting thick sandal tree trunks, வேரற் பூவுடை அலங்கு சினை புலம்ப – hurting the branches of bamboo with flowers, வேர் கீண்டு- tearing roots, splitting roots,   விண் பொரு நெடுவரை – sky touching tall mountains,  பரிதியின் – like the sun, தொடுத்த – attached (to the mountains), தண் கமழ் அலர் இறால் சிதைய – breaking honeycombs with cool fragrance, நன்பல ஆசினி முதுசுளை கலாவ – mature segments of breadfruits get mixed, மீமிசை நாக நறுமலர் உதிர – fragrant nākam flowers drop from above, surapunnai trees (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), long-leaved two-sepalled gamboge trees, or punnai trees, Laurel Tree, Mast wood Trees, Calophyllum inophyllum  according to the University of Madras Lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam, யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்ப – causing yookam monkeys to tremble along with dark-faced old monkeys, langur monkey, Semnopithecus priamus, பூ நுதல் – beautiful forehead, forehead with patterns, இரும்பிடி குளிர்ப்ப வீசி – making dark cow elephants to tremble in the cold blowing wind, பெருங் களிற்று முத்துடை வான்கோடு தழீஇ – carrying white tusks with pearls of huge bull elephants, தத்துற்று – flowing down, நன்பொன் மணி நிறம் கிளர – exposing fine gold and gems with color,  பொன் கொழியா – gold dust is washed up, வாழை முழு முதல் துமிய – breaking banana trees with thick trunks, தாழை இளநீர் விழுக்குலை உதிர – fine bunches of tender coconuts fall down, தாக்கி – attacks, கறிக் கொடிக் கருந்துணர் – pepper vines with black bunches, சாய – lean, fall down, are ruined, பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ – many pea****s with delicate walk and spots on their backs fear, கோழி வயப்பெடை இரிய – strong hens move away, கேழலொடு – along with boars, இரும்பனை – dark palmyra palm trees, வெளிற்றின் – with pith, புன்சாய் அன்ன குரூஉமயிர் – hair the color of thin palm fiber, யாக்கை – body, குடா அடி உளியம் – bears with curved feet, பெருங்கல் விடர் அளைச் செறிய – crowd the mountain caves, கருங்கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப – fine wild bulls with dark horns bellow,  சேண் நின்று இழுமென இழிதரும் அருவி – from far/high waterfalls that roar down, பழம் முதிர் சோலை மலை கிழவோனே – the lord of the mountain with ancient groves with fruits



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard