New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈவெராமசாமியும், மலமும்....


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஈவெராமசாமியும், மலமும்....
Permalink  
 


ஈவெராமசாமியும், மலமும்....

ஈவெராமசாமியின் பேச்சோடு எப்போதும் மலம் பின்னி பினைந்திருக்கும். எவ்வளவு இழிவான புத்தி கொண்ட சாமானியன் கூட சக மனிதனிலிருந்து எதனையும் மலத்தோடு ஒப்பிட மாட்டான். ஆனால் ஈவெராமசாமி அப்படி அல்ல. அவர் சாமானியர் அல்லவே. பெரியார் ஆயிற்றே. அதனால் தனக்கு பிடிக்காதவர்களை, தனக்கு பிடிக்காத விஷயத்தை 'மலம்' என சொல்ல ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பிறரை மலம் என சொல்லலாமா, அது எவ்வளவு அயோக்கியதனமாது என ஒரு போதும் நினைத்து பார்க்காமல், எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல், 'மலம்' என்கிற வார்த்தை - ஈவெராமசாமியின் வாயில் சர்வ சாதாரணமாய் நுழையும். ஈவெராமசாமி, தம் எதிரிகளை மலத்தோடு ஒப்பிட்டு பேசியதை புத்தகங்களில் வாசிக்கையில், ஆண்டைகள் 'ஒடுக்கப்பட்டோரின் வாயில் மலத்தை திணித்த செய்தி தான் வந்து போகும்.

ஏன் இப்போது, ஈவெராமசாமி மலம் குறித்து பேசியதை பேசுகிறோம் என்றால், ஈவெராமசாமி "திருக்குறளை மலம் என்று சொன்னார்' ஏன துக்ளக் ஏடு சொல்ல, "அப்படி எங்கே சொன்னாராம்" என எதிர் கேள்வி கேட்கிறது விடுதலை. ஈவெராமசாமி 'திருக்குறளை மலம் என்று சொன்னாரா என பார்ப்பதோடு, ஈவெராமசாமி வேறு எதனையெல்லாம் மலத்தோடு ஒப்பிட்டார் என பார்ப்போம். அப்போது தானே "ஈவெராமசாமிக்கும் மலத்துக்குமான உறவு பிடிபடும். துக்ளக் இதழுக்கு, அதிக முறை விடுதலை பத்திரிகை, "ஈவெராமசாமி - திருக்குறளை மலம் என சொல்லவில்லை என சொல்லி கொண்டே இருக்கிறது. எதற்கு திரும்ப திரும்ப பதில் தர வேண்டும். "ஈவெராமசாமி சொல்லாத ஒன்றை சொன்னார்' என திரிக்கிறது என துக்ளக் மீது வழக்கு போட வேண்டியது தானே. அதற்கு ஏன் திராணி இல்லை.

ஏற்கனவே ரங்கராஜ் பாண்டேவுடன் கி.வீரமணியின் நேர்காணலுக்கு பிறகு, ரங்கராஜ் பாண்டே மீது ஒரு தி.க. தொண்டர் வழக்கு தொடர்ந்தார். அவரிடம் வழக்கை வாபஸ் வாங்க சொன்ன தி.க., அவர் வழக்கை வாபஸ் வாங்க மறுக்கவே, வழக்கு தொடர்ந்தவரையே கழகத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். அதன் விபரத்தை பார்ப்போம்.
கி.வீரமணியை தந்தி தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டே நேர்காணல் செய்தபோது, ஈவெராமசாமி, "பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி" என்று சொன்னாரே என்று கேட்டதற்கு, அது உண்மை அல்ல, ஈவெராமசாமி அப்படி சொல்லவே இல்லை என கி.வீரமணி மறுத்தார். ஆனால் ஈவெராமசாமி அப்படி சொல்லி இருக்கிறார். ஈவெராமசாமியை காப்பாற்ற, கி.வீரமணி அப்படியொரு பொய்யை கூறினார். இது தெரியாத ஒரு திராவிட அரைவேக்காடு - ரங்கராஜ் பாண்டே மீது வழக்கு போட்டது.

திருப்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குமரவேல் என்பவர், "பாம்பையும்
பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி" என ஈவெராமசாமி கூறாத ஒன்றை கூறினார். இதற்கான ஆதாரம் பாண்டேவிடம் இருந்தால் தரவேண்டும்; அப்படியில்லை என்றால் இப்படியான மேற்கோளை ஊடகத்தில் சொன்னதற்காக வருத்தம்
தெரிவிக்க வேண்டும்" என வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மனுதாரர் குமரவேல் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பாண்டியனை இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழகம் வலியுறுத்தியதாகவும் அவர் வழக்கை திரும்பப் பெறாததால் அமைப்பை விட்டு நீக்கப்பட்டதாகவும்
கூறப்படுகிறது. விடுதலை நாளிதழில் கழகக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் சட்டத்துறை துணை செயலாளர் ஆ. பாண்டியன் கழகத்தைவிட்டு நீக்கம் செய்வதாகவும் துணைத்தலைவர்
கலி.பூங்குன்றன் அறிவித்திருந்தார்.

ஏன் நீக்கினார்கள் - ஈவெராமசாமி சொன்னதை கி.வீரமணி சொல்லவில்லை என மறுத்தார். அதை நம்பி ஒருவர் வழக்கு போட, அதற்கு திராவிடர் கழக வழக்கறிஞர் பாண்டியன் ஆஜராகிறார். "இதென்னடா - நாம் சொன்ன பொய்க்கு வந்த சோதனை" என்று திராவிடர் கழக தலைமை வழக்கை வாபஸ் பெற சொல்லி
இருக்கிறது. பாண்டியன் மறுக்க கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
ஈவெராமசாமிக்கும், அறிவுநாணயத்துக்கும் வந்த சோதனையை பார்த்தீர்களா. சரி, ஈவெராமசாமி பாம்போடு பார்ப்பனர்களை ஒப்பிட்டாரா. ஒப்பிட்டார். கீற்று இணையதளத்தில், கி.வீரமணி எழுதிய ஒரு கட்டுரையிலேயே ஒப்பு கொள்ளப்பட்டிருக்கிறது அது, "பெரியாரைஉலக மயமாக்குவோம்" என்ற கட்டுரையிலிருந்து. "பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பைவிட்டுவிடு;
பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் பெரியார். அதனுடைய தத்துவம் என்ன? பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது."
இவ்வளவு தெளிவாக கி.வீரமணி எழுதியதை அடிப்படையாக கொண்டு தான் ரங்கராஜ் பாண்டே, அந்த கேள்வியை எழுப்பினார். கி.வீரமணிக்கு தெரியாதா - தாம் எழுதிய கட்டுரையை பற்றி.
அன்றைக்கு தொலைக்காட்சியில், தங்களால் எழுதப்பட்டதையே மறைத்தவர்கள், ஈவெராமசாமி "திருக்குறளை மலம் என சொன்னதையா ஒப்புக் கொள்ளபோகிறார்கள். "வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன். - ஈவெராமசாமி, விடுதலை (1.6.50)

‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்கிற கேள்வியில் திருக்குறளும் அடங்குகிறது. "இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று ஈவெராமசாமி கூறுவதிலும் திருக்குறள் அடங்குகிறது. ஆனால் பதிலுக்கு தி.க.க. கும்பல் என்ன சொல்லும் என்றால், "கம்பராமாயணத்தை சொன்னார்" என தப்பிக்க பார்க்கும். இன்னும் தெளிவாக தி.க. மரமண்டைகளுக்கு புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், ஈவெராமசாமிக்கு குறள் மீது இருந்த வன்மத்தை கீழ்க்கண்ட இந்த பேச்சின் மூலம் அறியலாம். ஈவெராமசாமி சொன்னது "நாம் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம் பாரதிதாசன் படத்தை வைத்திருப்பார்கள்; வைக்க வேண்டும். -'விடுதலை' 22.4.1970.

வள்ளுவர் படத்தை குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என்று சொல்லக்கூடிய யோக்கியதையை கொண்ட ஈவெராமசாமிக்கு, "திருக்குறளை மலம்" என பழிப்பதா கஷ்டமான காரியம். ஒருவர் படத்தை வைத்து கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதற்கும், அவர் படத்தை தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என்று சொல்வதற்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. ஈவெராமசாமி, திருவள்ளுவர் படத்தை குப்பை தொட்டியில் எறிய வேண்டும் என கூறியதை உச்சப்பட்ச வன்மம், வள்ளுவரையே அவமானப்படுத்தும் செயல் என்றே சொல்ல வேண்டும். அறிவற்றவனின் பேச்சு எனவும் சொல்லலாம். இனி ஈவெராமசாமி, வேறு எதனை எல்லாம் 'மலம்' என செப்பினார் என பார்ப்போம். கி.வீரமணியால் இரட்டைகுழல் துப்பாக்கியில் ஒன்று என சொல்லப்படும் தி.மு.க.வை தான் தான், ஈவெராமசாமி, "மலம் என விமர்சிக்கிறார் இப்படி.

"மதராஸ் கார்ப்பரேஷன் ஊழலாக உள்ளது என்று அதிருப்தி அடைந்து இந்தக் 'கண்ணீர்த்துளி' [திமுக] களுக்கு ஒட்டுப் போட்டீர்களே, பலன் என்ன? 'சாணியிலே கால் வைத்து விட்டோமே என்று அஞ்சி எட்டிக் குதிக்கப் போய் மலத்தில் அல்லவா கால் வைத்து விட்டீர்கள்.' இதற்கும் கி.வீரமணி கும்பல் "தி.மு.க.வை மலம் என ஈவெராமசாமி எங்கே விமர்சித்தார் என சப்பைக்கட்டு கட்ட வரும். அத்தகைய அறிவிலிகளுக்காக.... ஈவெராமசாமி, சாணி என்றது காங்கிரஸை... மலம் என்றது தி.மு.க.வை. சாணிக்கு பயந்து மலத்தில் கால் வைத்து விட்டீர்கள் என்கிறார், காங்கிரஸ்க்கு பயந்து தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதை. ஆனால் இதே ஈவெராமசாமி பின்னாளில் எந்த தி.மு.க.வை மலம் என்றாரோ, அந்த தி.மு.க.வை சந்தனம் என்றார். முகர்ந்து பார்த்திருப்பார் போலும். இது தான் ஈவெராமசாமியின் யோக்கியதை. இதே போல் பிரசித்த பெற்ற ஈவெராமசாமியின் மலம் பற்றிய பேச்சு,

"பார்ப்பானுக்குப்பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. - விடுதலை, தலையங்கம், 06.03.1962" இந்த இடத்தில் தி.க.காரன் எவ்விதத்திலும் பூசி மெழுக முடியாத அளவுக்கு, "சாணி என்றது யாரை... மலம் என்றது யாரை..." என்பதை தெள்ளத்தெளிவாக கூறி இருக்கிறார். எவன் ஒருவன், "சக மனிதனையோ, சக அமைப்பையோ மலம் என சொல்லி விமர்சிக்கிறானோ - அவன் மலத்தை விட நாற்றம் பிடித்தவன் என தானே சொல்ல வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெரியாரின் பிறந்தநாள் இன்று. பெரியாரைக் குறித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் புளுகுகளைப் பற்றிய என் பதிவு:
பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்
Posted on February 24, 2018 by P A Krishnan
1. பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது.

இது அண்டப் புளுகு. தமிழ்நாடு கடந்த இருநூறு ஆண்டுகளாக கல்வியில் மற்றைய மாநிலங்களை விட முன்னால் இருந்தது. இது அனில் ஸீல் தனது “The Emergence of Indian Nationalism புத்தகத்தில் சொல்வது:

Despite its reputation as the ‘benighted’ Presidency, Madras possessed a level of literacy higher than any other province. By 1886 it had five more English colleges than Bengal, and it had as many arts students. With twenty-three more colleges, and three times as many students, it was far ahead of Bombay.

1961ல் அது பெரிய மாநிலங்களில் கேரளாவிற்கும் மகராஷ்டிராவிற்கும் அடுத்தபடியாக இருந்தது. இன்றும் அதே நிலைமைதான். இது நிச்சயமாக பெரியாரால் நிகழ்ந்தது அல்ல. அவர் கல்வியைப் பற்றி அதிகம் பேசியதேயில்லை. அழி, ஒழி எரி என்று பேசிக் கொண்டிருந்தவருக்குக் கல்வியைப் பற்றிப் பேச நேரமில்லாத்தில் வியப்பே இல்லை.

2. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் போராடினார்.

இது ஆகாசப் புளுகு. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை. ஆனால் அவர் கடைசிவரை சாதி ஒழிப்பிற்காக எந்தப் போராட்டமும் நட்த்தவில்லை. அவரது ஈரோட்டுப் பாதை திட்டத்தில் சாதியை ஒழிப்பதற்கான எந்த வழிமுறையும் சொல்லப்படவில்லை. இன்று வரை அவரது சீடர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சாதியற்ற திருமணங்களின் வீதம் மிகவும் அடிமட்டத்தில் இருக்கிறது. செயற்திட்டம் ஏதும் இல்லாமல் சவடால் விட்டுக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னோடி பெரியார்.

3. பெரியார் இல்லாவிட்டால் பெண்விடுதலை நிகழ்ந்திருக்காது.

இது கோட்டைப் புளுகு. தமிழகத்தில் பெண்விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் 19ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொன்டிருக்கிறார்கள். இந்துவின் ஆசிரியரான ஜி சுப்ரமணிய ஐயர் 1889 தனது விதவை மகளுக்கு மறுதிருமணம் செய்வித்தார். பாரதி தொடர்ந்து பாடியும் எழுதியும் வந்தான். காங்கிரஸ் இயக்கம் காந்தியின் தலைமையின் கீழ் வந்த பின்பு பெண்கள் பொது இயக்கங்களில் பெருவாரியாகப் பங்கு கொள்ளத் துவங்கினார்கள். இவர் தடலாடியாகப் பேசினார். ஆனால் தேவடியாள், விபச்சாரி, குச்சுக்காரி, போன்ற அலங்காரச் சொற்கள் இல்லாமல் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியதே இல்லை என்று சொல்லலாம். எனக்குத் தெரிந்து வேலைக்கு செல்லும் பிராமணப் பெண்களை கீழ்த்தரமாகக் கேலி செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். இவர்களின் பெண் விடுதலை என்பது ஆகப் போலித்தனமானது.

சுதந்திர இந்தியாவில் பெண் விடுதலையின் அடித்தளம் இடப்பட்டது இந்துச் சட்டங்கள் திருத்தப்பட்ட போதுதான். பெண் விடுதலைக்கு மற்றையக் காரணங்கள் கருத்தடைச் சாதனங்கள், நகரங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரித்தமை. இவற்றிற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.

4. பெரியார் இல்லாவிட்டால் இடஒதுக்கீடு வந்திருக்காது.

இது சமுத்திரப் புளுகு. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை. ஆனால் முதன்முதலில் இட ஒதுக்கீடு வந்த போது அவர் நீதிக் கட்சியில் இல்லை. 1947ல் இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தியது மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர் அப்போது சுதந்திரம் அடைந்ததற்காகத் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தார். 1951ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்த்து மத்தியில் இருந்த நேரு அரசு. அந்தக் காலகட்டத்தில் பெரியாரை கண்டு கொள்ளக்கூட யாரும் இல்லை. காங்கிரசுக்கு அவர் எதிரி. திமுக அவருக்குக் கண்ணீர்துளிகளாகத் தெரிந்தார்கள். மாறாக தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்கரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் பெரியர்.

5. பெரியாரால்தான் தமிழனுக்குத் தன்மானம் வந்தது.

இது புளுகுகளுக்கெல்லாம் பெரிய புளுகு. தமிழனை அவமானம் செய்யும் புளுகு. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் தமிழருக்குத் தன்மானத்தைக் கொடுத்தார் என்று வெட்கமே இல்லாதவர்கள்தாம் சொல்வார்கள்.

தமிழனுக்கு தமிழைப் பற்றிய பெருமிதம் என்றும் இருந்தது.

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ்” என்று பெரியார் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிஞன் ஒருவன் பாடி விட்டான்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் உண்மையாக களத்தில் இறங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். சர்வோதயத் தொண்டர்கள்.

பெரியார் உண்மையாக தமிழகத்திற்கு அளித்தது என்ன?

இவர் தமிழகத்திற்குக் கொடுத்தது நாசி இனவெறி. இன்று வரை நாசி இயக்கம் உயிரோடு இருக்கும் மிகச் சில இடங்களில் தமிழ்நாடு ஒன்று. அதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வன்முறைகள் ஏறத்தாழ இல்லாத நாசி இயக்கமாக இருப்பதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்ப்டைப் புரிதல் அவரிடம் இல்லை. தடாலடித் தீர்வுகளை அவிழ்த்து விடுவது எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம் என்ற ஞானம் அவரிடம் இல்லவே இல்லை. நாசி இனவெறி என்ற பூதம் வேறு அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

பெரியாரின் சீடர்கள் பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை. நாசி இனவெறி மட்டும் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 Palani Chinnasamy பெரியாரியம் என்பது கொச்சை பொருள்முதல்வாதம் மட்டுமல்ல ஏகாதிபத்திய ஆதரவு சீர்திருதவாதமும் கூட . மேலும் எந்தவகையிலும் பெரியாரியம் மத மூடநம்பிக்கைகளுக்கும உற்பத்தி நிலைமைகளுக்கும் இடையேயான தொடர்புகளை விளக்குவதில்லை. இந்து மதத்தையும் , பார்பனர்களையும் மட்டுமே காரணம் என்று சொல்கிறது . இதற்கு காரணம் பெரியாரின் வர்க்க தன்மையும் கொச்சை பொருள்முதல்வாதமும். மேலும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் காலத்திலும் கூட பாயர்பாக் போன்ற இயக்கவியளற்ற பொருள்முதல்வாதிகள் இருந்துள்ளனர். பாயர்பாக் போன்றவர்களின் கொச்சை போருல்முதல்வாதத்துடன் ஹெகலின் இயக்கவியலையும் இணைத்து தான் மார்க்சியம் பிறந்தது . எனவே பெரியாரியத்தை இணைப்பது என்பது மார்க்சியத்திலிருந்து மீண்டும் பாயர்பாக்கிடம் செல்வது போன்றது தான் .
பெரியாரின் நாத்திக பிரச்சாரம் கூட நிலையானது அல்ல. இந்துமதத்தை விட மற்ற மதங்கள் முற்போக்கானது என்று பார்த்தார். இஸ்லாம் மதத்தை தழுவவதைப் பற்றிக்கூட அவர் கூறியிருக்கிறார். அவருடைய நாத்திகம் என்பது மூடநம்பிக்கையை எதிர்ப்பதோடும், பார்ப்பனர்களை எதிர்ப்பதோடும் முடிந்துவிட்டது. அவர் எவ்வகையிலும் அனைத்துக் கடவுளையும் சாடும் நிலைக்குகூட செல்லவில்லை. அது ஏகாதிபத்திய எதிர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு மாற்றான வழிமுறையாக தேர்ந்தெடுத்தாரே தவிர அதையே ஒரு அனுபவ அல்லது அறிவின் முடிவாகக் கூட அவர் வரவில்லை.
“இந்து மத எதிர்ப்பு என்பது, பார்ப்பன எதிர்ப்போடு நின்றுவிடுவதில்லை. மதத்தின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. தந்தை பெரியார், மத நடவடிக்கையின் வர்க்கத் தன்மையை வலியுறுத்தாமல் போனதால், அவரது மத எதிர்ப்பென்பது பார்ப்பன எதிர்ப்போடு நின்றுவிடுகிறது. பார்ப்பனர்கள் சுரண்டும் வர்க்கத்திற்கான அறிவுத்துறைப் பணியினைச் செய்தவர்கள். வர்க்கச் சார்பான அறிவை எதிர்ப்பதோடு, சுரண்டும் வர்க்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.” ( தோழர் அ.கா.ஈஸ்வரனின் மதம் குறித்த மார்க்சியம் நூலில் பக்கம் 92)
“சமூக முரணிற்கு காரணமான இந்த சமூக பொருளாதார அமைப்பை அறிந்து கொண்டு, அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடாமல், அதற்குத் துணைபுரியும் மதம், அரசாங்கம் போன்றவற்றை மட்டுமே குறிவைக்கும்போது, நடைமுறையில் காணப்படும் சமூக அமைப்பைத் தக்கவைக்கத் துணைபுரிவது போலாகிவிடுகிறது.” (தோழர் அ.கா.ஈஸ்வரனின் மதம் குறித்த மார்க்சியம் நூலில் பக்கம் 93)

“பகுத்தறிவுவாதத்தின் பொதுவான குறைபாடு என்னவென்றால், மதத்தையும் கடவுள் சிந்தனையையும் உடனடியாகச் சித்தாந்தப் போராட்டத்தால் தூக்கி எறிய முயல்வதாகும். மத உணர்விற்கான வேர்கள் புறநிலையாக இருக்கும்போது அதனைப் பிடுங்கி எறிவதென்பது நடவாத காரியம். மத இருப்பிற்கான காரணங்கள் இருக்கும் வரையில் மதம் சமூகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்பதை பகுத்தறிவுவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.” (தோழர் அ.கா.ஈஸ்வரனின் மதம் குறித்த மார்க்சியம் நூலில் பக்கம் 98)

பெரியாரது பார்வை, பார்ப்பனருக்கு கிடைத்த சலுகைகள் பற்றிய எண்ணத்தின் அடிப்படையில் தான் உருவானது. அதற்கு மேல் அவர் செல்லவில்லை என்பதே உண்மை.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

BJP+Congress.jpg

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையைத் தனது வழிகாட்டும் சிந்தாந்தமாக கொள்கிறது. மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். முற்றிலும் நாத்திகவாதமும், எல்லா மதங்களுக்கும் நேர்படித்தான முறையில் பகைமையானதுமாகும்.

எல்லா மதங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவும் அல்ல; இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலகச் சக்திகள் இயல்பிற்கும் மேற்பட்ட (Super Natural) வடிவத்தை மேற்கொள்கின்றன என்பதுதான் மதத்தின் சாரம் என்று மார்க்சியம் கூறுகிறது.

மதம் பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி நின்று அதற்கு மிகவும் அயலானதாகத் தோன்றுகிறது. ஆயினும், மதக் கருத்துக்கள் தம் சொந்த விதிகளின்படி வளர்ந்தாலும், இவ்வளர்ச்சியின் போக்கும் சாரமும் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார வாழ்க்கையின் மாற்றங்களுடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையவை என்று மார்க்சியம் சுட்டிக்காட்டுகிறது.

சமுதாய வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் எதிர் எதிராக நின்று போராடும் வர்க்கங்களின் பொருளாதார் உறவுகள் மற்றும் நலன்களால் கோட்பாடு ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகின்றன என்ற உண்மை மதத்துறைக்கும் பொருந்தும்.

சுரண்டப்படும் மக்களை சுரண்டல்காரர்கள் தமது அடிமைகளாக நீடித்து வைத்திருப்பதற்கு பொருளாதார ஒடுக்குமுறையுடன் கூட அரசியல், ஆன்மீக ஒடுக்கு முறைகள் தேவைப்படுகின்றன. ஆன்மீக ஒடுக்குமுறைகளின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும்.

காட்டுமிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும், சைத்தான்களிலும், அவதாரங்களிலும், அற்புதங்களிலும், பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறதோ, அதுபோல சுரண்டப்படும் வர்க்கங்கள், சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவலநிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கை உண்டாக்குகிறது.

 

பிறர் உழைப்பில் உண்டு வாழ்வோர் சுகபோகமாக வாழ்வது ஏன்? ஒருவன் மேல் சாதிகாரனாகப் பிறப்பது ஏன்? அது அவன் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என மதம் காரணம் கூறுகிறது. உழைத்து உழைத்து உருக்குலைந்து போன சுரண்டப்படுவோர் இல்லாமையால் துன்புறுவது ஏன்? ஒருவர் தாழ்ந்த சாதிக்காரராக பிறப்பது ஏன்? அது அவர் செய்த பாவம் என மதம் காரணம் கூறுகிறது. இவ்வாறு ஆண்டான் அடிமை முறைக்கு மதம் நியாயம் கற்பிக்கிறது. சுரண்டப்பட்டு அடிமைப்பட்டிருப்போர் இந்தப் பிறவியில் தமது எஜமானர்களுக்கு பயன் கருதாமல் உழைத்தால் அவர்களுக்கு செத்தபின் சிவலோக பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, இந்த வாழ்வில் அவர்களை மன ஆறுதல் கொள்ளச் செய்கிறது மதம். இந்த வாழ்வில் தமது அவல நிலையைப் போக்கவும், ஓரளவேனும் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான கோரிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க விடாமல் இருக்கும் படி அவர்களை ஆன்மீக போதையில் மதம் மூழ்கடித்து விடுகிறது. இதனால்தான் மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் சொன்னார். “மதம் மக்களின் அபின்” என்ற மார்க்சியத்தின் ஆய்வுரைதான் மதம் பற்றிய மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் அச்சாணியாகும்-அடிப்படையாகும் (Corner Stone).

மதமும் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயம் தோன்றும்போது மதமும் ஒழிந்துப்போகும் என்றும் மார்க்சியம் கூறுகிறது.

இயற்கை மற்றும் சமுதாய வளர்ச்சியை ஆளுமை புரியும் புறநிலை விதிகளின் அடிப்படையில் மார்க்சியம் மதத்தின் தோற்றம், அதன் சாரம், மற்றும் வர்க்க சமுதாயத்தில் அது ஆற்றும் பாத்திரம் ஆகியவற்றைக் குறித்து தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவப் புரட்சிகர சகாப்தத்தில், மதத்தை எதிர்த்து புரட்சிகர முதலாளிகள் நிறைவேற்றிய ஜனநாயக பணிகளிலிருந்தும், அதற்குப் பின்னர் அங்கே முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் போராட்ட அனுபவத்திலிருந்தும், மார்க்சியம் மதம் குறித்த கோட்பாட்டு ரீதியான முடிவுகளைக் கண்டது.

மேற்கு ஐரோப்பாவில் மத்திய காலம் இறையியலுடன் மற்றெல்லா சித்தாந்த வடிவங்களும் - தத்துவஞானம், அரசியல், சட்டவியல் ஆகியவற்றை ஒட்டவைத்து அவற்றை இறையியலின் துணைப் பிரிவுகளாக ஆக்கிவிட்டது. நிலப்பிரபுத்துவத்தை கத்தோலிக்க மதச்சபை பாதுகாத்து வந்தது. நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை இச்சபை தெய்வீகப் பண்புடையதாக்கிப் புனிதம் பெறச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தை மாதிரியாகக் கொண்டு இது தனது படிநிலை அமைப்பை வகுத்திருந்தது. இந்த மதச்சபை கத்தோலிக்க உலகின் நிலங்களில் மூன்றில் ஒரு பகுதிக்குத் தானே உடமையாளனாக இருந்தது. மிக, மிகச் சக்திவாய்ந்த நிலவேந்தனாகச் செயல்பட்டது. லௌகீக நிலப்பிரபுத்துவத்தின் மீது ஒவ்வொரு நாட்டிலும் விவரமான அடிப்படையில் வெற்றிகரத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு அதன் புனித மத்திய நிறுவனமாகிய இந்த மதச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது. திருச்சபை நிலப்பிரபுத்துவ நிலவுடமையுடன் பல நாடுகளுக்கிடையில் உண்மையான இணைப்புச் சங்கிலியாக இருந்தது. நிலப்பிரபுத்துவ திருச்சபை நிறுவனம் நிலப்பிரபுத்துவ அரசு அமைப்புக்கு ஒரு மத ரீதியான புனிதத்தன்மையை வழங்கியது.

மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த முதலாளித்துவ புரட்சி சகாப்தத்தில் மதத்தை எதிர்த்துப் போராடும் பணி புரட்சிகர முதலாளித்துவத்தின் பணியாக இருந்தது. மதத்தை எதிர்த்த பணி பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தினால் நிறைவேற்றப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் நடத்திய நீண்ட நெடும் போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சநிலை வந்தடைந்தது.

1. ஜெர்மனியில் நடைபெற்ற புரோட்டஸ்டண்டு மதச் சீர்திருத்தப் போக்கு எனப்படுவது முதலாவதாகும்.

2. இங்கிலாந்தில் நடந்த கால்வினிச முதலாளித்துவ எழுச்சி இரண்டாவது பெரும் போராகும்.

3. மாபெரும் பிரஞ்சு புரட்சி மூன்றாவது பெரும் போராகும்.

மேற்கூறப்பட்ட மூன்று போர்களில் முதல் இரண்டு போர்கள் மத முகமூடியணிந்து நடத்தப்பட்டவையாகும். மூன்றாவது போரான மாபெரும் பிரஞ்சுப் புரட்சி மட்டும்தான் முதலாளித்துவ வர்க்கம் மத முகமூடியை உதறித் தள்ளிவிட்டு ஒளிவுமறைவின்றி அரசியல் வழிகளில் முடிவுகட்டிய எழுச்சியாக அமைந்தது. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த இந்த முதலாளித்துவப் புரட்சியின் சகாப்தத்தில் மேற்கு நாடுகளில் பின்வரும் பணிகள் பெருமளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தால் நிறைவேற்றப்பட்டன.

மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட்டன. மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட்டன. (இதற்குப் பின்னர் இக்கோரிக்கைகள் ஜனநாயகப் புரட்சியின் கோரிக்கைகளாகிவிட்டன.) எனினும் பிரான்சு முதலாளித்துவப் புரட்சிக்குப் பிறகு, குறிப்பாக ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தத்தில் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்திற்காகவும், மதச் சார்பின்மைக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் பணியை கைவிட்டுவிட்டது. ருசிய ஜனநாயகப் புரட்சி குறித்து லெனின் பின்வருமாறு சொன்னார்.

“ருசியாவில் நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக இந்த பணியும்கூட ஏறக்குறைய முற்றிலும் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களின் மேல் விழுகிறது”. மேலும் அவர் சொன்னார்; “ருசியாவில் நிலைமைகள் முற்றிலும் வேறானது. நமது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் தலைமை பாட்டாளிவர்க்கமே ஆகும். அதிகார பூர்வமான மதத்தை உள்ளிட்டு இடைக்காலத்திற்குரிய எல்லாப் பண்புகளுக்கும் (attributes) அதைப் புதுப்பிப்பதற்கோ அல்லது ஒரு புதியதை உருவாக்குவதற்கோ செய்யப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான போராட்டத்திற்குப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி சித்தாந்த தலைவனாக இருக்கவேண்டும்”.

எனவே ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில், ஜனநாயகத்திற்கும் மதச் சார்பின்மைக்கான போராட்டத்தில் பின்வருவன மார்க்சிய லெனினியத்தினதும், பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினதும் கோரிக்கைகள் ஆகிவிட்டன.

அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது. மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல், நாத்திகராய் இருக்கவும் - பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.

குடிமக்களின் மத நம்பிக்கைகள் காரணமாக அவர்களிடையே எவ்விதமான பாகுபாடுகளுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கம் மதச்சபைக்கு மானியங்கள் வழங்கப்படலாகாது. மதச்சபை, சமயக்கழகங்களுக்கு அரசாங்க உதவித்தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவையாவும் அரசை சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும். ஒத்தமனத்தோராகிய குடிமக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும்.

அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்க கூறுகளில் ஒன்றாய் ஜனநாயகப் புரட்சி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், 1891ஆம் ஆண்டு எர்பர்ட் திட்டத்தில், “மதம் தனிநபரது சொந்த விவகாரமாகும்” என்ற அம்சம் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தின் அரசியல் செயல்தந்திரத்தை வகுத்தளித்தது.

மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாக இருப்பினும், பாட்டாளிவர்க்கம் புரட்சிகர கட்சியின் வேலைத் திட்டத்தில் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது. அவ்வாறு கூறுவதற்குக் காரணங்கள் என்ன?

கட்சியின் வேலைத்திட்டம் முற்றிலும் விஞ்ஞான வழிபட்ட முறையிலும் முற்றிலும் பொருள் முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் அடிபடையிலும்தான் வகுக்கப் படுகின்றது. ஆகையால் அந்த வேலைத் திட்டத்திற்கு விளக்கம் தருவதில் மதத்தினால் ஏற்படும் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளின் மெய்யான வரலாறு மற்றும் அதன் பொருளாதார வேர்கள் பற்றிய விளக்கம் இன்றியமையாதபடி அடங்கியிருக்கிறது. எனவே வேலைத்திட்டத்தைப் பற்றிய பிரச்சாரம் ஒரு நாத்திகப் பிரச்சாரமாகவும், வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி செயல்படுத்துவதாகவும் அமைக்கிறது. இதனால் பாட்டாளி வர்க்கக் கட்சி நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றது எனக் கொள்ளக் கூடாது. நாத்திகப் பிரச்சாரம் செய்வது இன்றியமையாததாகும். எனினும் முதலாளித்துவவாதிகள் நாத்திகத்தைப் பற்றியும், மதத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் முறையிலிருந்து பாட்டாளி வர்க்கம் அதைப் பிரச்சாரம் செய்யும் முறை மாறுபட்டிருக்கிறது. அவர்கள் செய்வதுபோல், மதம் பற்றிய பிரச்சினையை ஒரு அரூபமான, கருத்து முதல்வாத பாணியிலும், வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தம் இல்லாத ஒரு “அறிவுத்துறை” பிரச்சினையாகவும், முன்வைப்பது ஒரு தவறான பாதையாகும் என மார்க்சியம் கருதுகிறது. மேலும், உழைக்கும் மக்களை ஒடுக்கப்படுவதை அடிபடையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வெறும் பிரச்சார முறைகளைக் கொண்டே மத மூட நம்பிக்கைகளை அகற்றிவிட முடியாது.

 

மக்களிடம் மத நம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்புமாகும். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிற்போக்குச் சக்திகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தாமே போராடுவதின் மூலம் அவர்கள் அறிவொளி பெறாதவரை, எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. ஆகையால், விண்ணுலகச் சொர்க்கம் குறித்து, உழைக்கும் மக்களிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும், மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். வர்க்கங்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மத நம்பிகைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. ஆகையால்தான் தமது தப்பெண்ணங்களை இன்னமும் முற்றாக விட்டொழிக்காமல் வைத்திருக்கும் மக்களை பாட்டாளி வர்க்கக் கட்சி முன்வைக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் திரட்டுவதற்கும், அதன் மூலம் அவர்கள் அறிவொளி பெற்று மத மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கச் செய்யும் பொருட்டும் கட்சித் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக் கூடாது என மார்க்சியம் கூறுகிறது.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதை அதன் அடிப்படையான பணிக்கு - அதாவது சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டப்படும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உட்படுத்தியே செய்யவேண்டும். இதற்கு மாறாக ஒரு பிரச்சினை எழுப்பப்படலாம்.

சிந்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்தவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்குமான எதிரியை எதிர்த்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தை எவ்வாறு வர்க்கப் போராட்டத்துக்கு உட்படுத்த முடியும்? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்துக்கு உட்படுத்த முடியும் என்று கேட்கக்கூடும். இவ்வாறு கேட்பது மார்க்சிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதலின்மையினாலேயாகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யும் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும். அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல.நாத்திகப் பிரச்சாரத்துக்கும் - அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கிடையில் உள்ள மத நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவது இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறாநிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடய, ஒப்புநோக்கு ரீதியலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை) அழிக்க முடியாத முற்றான ஒரு எல்லைக்கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவது ஆகும். இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் ஒன்றை பலவந்தமாகப் பிரிப்பதாகும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திக்கப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்றுவிடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டதின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப் படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச் செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாதத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு - அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுகிறோம்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தினராகிய நாம் மதம் குறித்த பின்வரும் மார்க்சிய கோட்பாட்டு ரீதியான முடிவுகளை, நமது வழிகாட்டும் கோட்பாடுகளாகக் கொள்கிறோம்.

1. மதம் மக்களின் அபின்.

2. மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வு என்றும், சுரண்டலும், வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற ஒரு புதிய சமுதாயம் தோன்றும் போது மதமும் ஒழிந்துபோகும்.

3. (அரசைப் பொருத்தமட்டில்) மதம் தனிநபரின் சொந்த விவகாரமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். மத நிறுவனங்கள் அரசாங்கத்துடன் எந்தச் சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது.

ஒவ்வொருவரும் விருப்பம்போல் எந்த மதத்தையும் கடைப்பிடித்து ஒழுகவும் எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது ஒவ்வொரு சோசலிஸ்டும் இருந்து வருவதுபோல் நாத்திகராய் இருக்கவும் பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும்.

4. அரசியல் சுதந்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்கக் கூறுகளில் ஒன்றாக ஜனநாயகப் புரட்சி இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

5. இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சியின் நிலைமைகளின் காரணமாக, மதத்தை எதிர்த்தப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி சித்தாந்தத் தலைவனாக இருக்க வேண்டும்.

6. சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. அதன் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள் முதல்வாதமேயாகும். எனினும் ஒருவர் மதத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பினும் அவர் கட்சியின் திட்டத்தை ஏற்று அதை அமல்படுத்தும் தகுதியுடையவராக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் ஆவார்.

7. இயக்கவியல் பொருள்முதல்வாதமே கட்சியின் உலகக் கண்ணோட்டமாக இருப்பினும், கட்சியின் திட்டம் நாம் நாத்திகர்கள் என அறிவிக்கக்கூடாது.

8. நாத்திகப் பிரச்சாரம் செய்வது கட்சியின் பணியாகும்.

9. நாத்திகப் பிரச்சாரத்தை கட்சியின் அடிப்படைப் பணிக்கு அதாவது வர்க்கப் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யும் பணிக்கு - உட்படுத்தியே செய்யவேண்டும்.

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறை மற்றும் அரசியல் செயல்தந்திரத்தை சாதி முறைக்குப் பொருத்தக்கூடாது:

இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமுதாயத்திற்குள் (ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள்) மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். கத்தோலிக்க மதச் சபையின் வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்க வந்த கத்தோலிக்க மதச் சபை, ஒரு நீண்ட நெடிய போரட்டத்துக்குப் பிறகு நிலப்பிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்டதும், அது முதலாளித்துவ ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு, மீண்டும் புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களுமான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் ஒரு ஆன்மீக ஒடுக்குமுறைக் கருவியாக மாறிவிட்டது.

இந்துமதம் இப்போது சாதி மற்றும் தீண்டாமையைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு தரகு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. இதிலிருந்தே மேற்கூறப்பட்ட சாத்தியப்பாட்டை அறியலாம். ஆனால் சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு அவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும். ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. இவ்வாறு, மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை என்பதைக் காணலாம்.

மதம் சுரண்டலின் விளைவாகத் தோன்றும் ஒரு சமூக நிகழ்வாகும். சுரண்டலும். வர்க்க சமுதாயமும் ஒழிக்கப்பட்டு ஒரு சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம் மதத்தை ஒழிக்க முடியும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்கிடையில், மத ஒடுக்குமுறையிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும் பொருட்டே மதநிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக்கூடாது என்ற ஒரு தீர்வும், வர்க்க முரண்பாடுகள் நிலவும் சமுதாயத்தில் மக்கள் மதநம்பிக்கை கொள்வதற்கான சமூக வேர்கள் இருப்பதால் மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் பொருட்டும் அதே சமயம் மத மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உரிமை என்ற முறையில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதற்கும், நாத்திகனாக இருப்பதற்கான உரிமையும் இருக்க வேண்டுமென்பதற்காகவும் மதம் தனிநபரது சொந்த விவகாரமாக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு தீர்வும் வைக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும் நிலைத்திருக்கக் கூடிய மதத்திற்கு எதிராக வைக்கப்படும் தீர்வுகள், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படுவதோடு ஒழிந்துவிடக் கூடிய சாதி மற்றும் தீண்டாமைக்கும் பொருந்தாது. ஆகையால் மதத்திற்கு எதிராக வைக்கப்படும் மேற்கூறப்பட்ட இரண்டு தீர்வுகள் சாதி ஒழிப்பதற்கு உகந்ததல்ல.

வேறுவிதமாகச் சொன்னால், சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத் தொழிற் பிரிவினையும், அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும், இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதும் ஆகும். ஆகையால் மதத்துறையில் ஜனநாயகத்திற்காக வைக்கப்படும் தீர்வுகளான அரசுத் தலையிடாக் கொள்கையும், தனிநபர் சொந்த விவகாரமாக ஆக்கப்படுவதும் சாதி மற்றும் தீண்டாமைக்கு பொருந்தாது. மேலும் சாதி மற்றும் தீண்டாமையும் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒழிக்கப்படக் கூடியதாகும். ஆகையால் இத்தீர்வுகள் சாதிமுறைக்குப் பொருந்தாது.

அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் தரகுப் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவத்திற்கு ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.

மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.

உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும், சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராகவும், பார்ப்பனிய உயர்சாதி ஆதிக்க முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகவும், பாடுபடுத்தி, உண்மையான முதலாளிய, ஜனநாயக் சீர்திருத்தங்கள் அரசு செய்யக்கோருவது ஒரு முதலாளிய ஜனநாயகக் கோரிக்கை ஆகும்.

இப்பிரச்சினைகளில் அரசு தலையிடக் கூடாது என்பதோ சாதி மற்றும் தீண்டாமை தனிநபரது விவகாரமாக ஆக்கி விடுவதோ எதுவாயினும் சாதி மற்றும் தீண்டாமை தொடர்வதற்கே பயன்படும். ஆகவே இவ்விரண்டு தீர்வுகளும் சாதி மற்றும் தீண்டாமைக்குப் பொருந்தாது. மேற்கூறப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் அவை உண்மையாகவே முதலாளிய ஜனநாயக சீர்திருத்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் நீங்கலாக, பிற சாதிகள் குறிப்பாக பிற்பட்ட சாதிகளிலே கூட வர்க்க முரண்பாடுகள் தோன்றி ஜனநாயகத்திற்கு எதிரான நலன்கள் கொண்ட பிரிவுகள் இருப்பதையும் கணக்கில் கொண்டு, சாதி மற்றும் தீண்டாமைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற வகையில் அவை கோட்பாடு ரீதியில் ஆதரிக்கத் தகுந்தவை ஆகும்.

குறிப்பு: மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

- “காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்”,

-ம.ஜ.இ.க வெளியீடு, மார்ச் 1993



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

(06-03-1962- இல் “விடுதலை” நாளிதழில் பெரியார் ஈ.வெ. ரா. தலையங்கம்.)

இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்ட
ிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பர்தாவின் அநியாயம்
கோஷாவினால் நம் முஸ்லீம்கள் அடைவது என்ன?
என்ன அநியாயம்! என்ன கொடுமை! ஒரு புதல்வனுக்கு ஒரு புதல்வியை மணம் செய்யவேண்டுமானா ல் பாவம் அந்த கல்யாணம் செய்து கொள்ளும் புதல்வன் அந்த புதல்வியை கண்ணால் பார்த்து மணம் செய்து கொள்ள விதிபின்றி வேறு ஸ்திரிகளை அந்த புதல்வியை பார்த்துக்கொண்ட ு வரும் படி அனுப்புவது வழக்கம். அவர்கள் சென்று பார்த்து, குணத்திலும் ரூபத்திலும் எவ்வளவு கோரமாய் இருந்தாலும் ரூபலாவண்யத்தைக் குறித்தும், குணத்தைக் குறித்தும் புகழ்ந்து அவர்களின் மாய வலையில் சிக்கும்படி செய்து விடுகிறார்கள்.

மெய்தான் என்று நம்பிக்கொண்டிரு ந்த மாப்பிள்ளை அப்பெண்ணை விவாஹம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், அவள் சைத்தானின் பாட்டியாகத் தான் இருப்பாள்.பிறகு அந்த மாப்பிளையின் கெதி என்ன? ஐயோ பாவம்! அவன் தலை மீதில் துணியைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்ப வேண்டியதுதான்.
..................................................................................................................................................................................
.........................................................................................
ஐயோ! நாம் ஏன் எல்லோரு சேர்ந்து மார்கத்தின் பேரால் கோஷா என்ற சிறையில் வைத்து அவர்களை கெடுக்க வேண்டும், ஏன் அந்தப் பாவத்தை தலை மீது போட்டுக்கோள்கிற ீர்.அந்த கொடிய வழக்கத்தை ஒழித்து அந்த மாயவலையில் சிக்காமல் சுகமாய் காலம் கழிக்கும் வழியை தேடுங்கள்.

- 4.11.28- குடி அரசு

ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.யொஉடுபெ.சொம்/நட்ச்?வ்=ந்36ஆளோப்ந்ஜ்னா

நாட்டு இலட்சணப்படி, எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால்- அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்குக் கேடாகவே முடியும்.

இந்த நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியோர்களுக்கு அன்னிய ஆட்சியாலும், காங்கிரஸாலும்- மற்றும் இவர்களுக்கு நிதி, அல்லது தனிச்சலுகைகளை ஈன்றுள்ள ஆட்சியும் காட்டிவந்துள்ள காரணத்தினாலும், மேலும் இவர்களது செல்வாக்குக்குக ் காரணமாய்’புத்தி சாலித்தனமான’ ‘திறமையான’’தகுத ியுள்ள’ சமுதாயம் என்று கருதி ஆதிக்கத்திர்க்க ும் இடம் கொடுத்ததினாலும் , நாடு வளர்ச்சியடையாமல ும், மெஜாரிட்டி,( நாட்டின் இயர்க்கையான பெருவாரி) மக்கள் மநிதத்தன்மை பெறாமலுமே போய்விட்டார்கள்.

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரனம் என்று வலியுறித்திக் கூறுகிறேன்.
.....................................................................

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 46)

100 க்கும் 6 வீதமுள்ள முஸ்லீம்கள், ஒரு கூலி உடல் உழைப்பு வேலையும் செய்யாமல், அவர்கள் பெண்கள் நம் மநிதர்கள் ’கண்ணுக்கே தென்படக்கூடாது’ என்கின்ற நிலையிலும், பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உட்பட ’கோஷா’ முறையில்- உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கின்றார ்கள். அதே நேரத்தில் நம் ஆண்களும் பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளாக இருக்கிறார்கள்.
.......................................................
மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் ’துரோகம்- பச்சை துரோகம்’ என்கின்ற குழந்தைகளைத்தான ் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கையான பண்பு( அல்லது விதி).

அதனாலேயே, நம் நாட்டில் உள்ள யோக்கியப் பொருப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின் பலத்தை பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள்.

இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொருப்பற்ற சமூகத் துரோகிகளுக்கு பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள்
....................................................
பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.
.....................................................................

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 47)

இவ்வளவு எழுதப்பட்டதின் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டுவைப்பதும் , அவர்களது தனிச்சலுகைகளுக் கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு- நாட்டு பெருவாரி மக்கள் சமுதாயத்திற்கு கேடு என்பதை விளக்கவேயாகும்.

.....................................................................

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 46)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

1. இவரின் உண்மையான தந்தை
பெயர் என்ன ???
.
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது???
.
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
.
4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
.
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய,பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
.
6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
.
7.காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார்?
.
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
.
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
.
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதற்காக?
.
11. 72 வயதில்,26 வயதான வளர்பு மகளை மணந்து புரட்சி பண்ணினார்.எதற்காக?
.
12. 1950 ,1960கலில் டீமுக தலைவர்கள் ராமசாமியை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
.
13 .சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே.ஏன் பதிவு செயவில்லை?
.
14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் வைத்த்ய நாத அய்யர் )
.
15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
.
16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார்.
.
ஏன் ஒரு கன்னடனை தலைவனாக ஏற்றுக்கொண்ட தமிழ் நாட்டு மக்களின் மேல் ஈவேராவுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் தன் சொத்துக்களை அரசுடமை ஆக்கியிருக்கலாமே? இந்த களவாணி வேலை தேவையா?
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் பல போர்கள் நடை பெற்றன
.
அதற்கு பலரும் தன் சொத்துக்களை அள்ளி கொடுத்தனர். சாவித்திரி ஒரு நடிகை. அவர் தன்னிடம் இருந்த நகைகளை, தன் குழந்தையையின் நகைகள் உட்பட அள்ளிக் கொடுத்தார். ஆனால் ஈவேரா என்ன கொடுத்தார்?
.
சொரியான் வாழ்கனு சொல்ற யாராவது பதில் சொல்லுங்க
வந்த செய்தி



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard