New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் மெய்யியல்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழர் மெய்யியல்
Permalink  
 


குறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று

 

(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)



பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்

5
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.
 
- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். 



பார்ப்பன மகனே! செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும் விரதவுணவையுமுடைய வேதத்தையறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய பரிகாரமும் இருக்கின்றதோ? இங்ஙனம் நீ கழறுதல் மயக்கத்தால் வந்ததாகும்.

முடிபு: பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.      

கருத்து: நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஐங்குறுநூறு பாடல் எண். 202
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்
பார்ப்பன குறு_மக போல தாமும்
குடுமி தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே
<r1b# 7="" கிழத்தி="" கூற்றுப்பத்து<="" r1b="" style="box-sizing: border-box;">202
அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
பார்ப்பனச் சிறுவர்களைப் போன்று, தாமும்
குடுமி பொருந்திய தலையினையுடையதாய் இருக்கின்றதே!
நெடுமலை நாட்டவனான தலைவன் ஓட்டி வந்த குதிரை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5.பரிபாடல் 
5 செவ்வேள் - பாடியவர் : கடுவன் இளவெயினனார்
பண் அமைத்தவர் : கண்ணாகனார்	பண் : பண்ணுப்பாலையாழ்

பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய			5
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல்
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை				10
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள்
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவ என பேஎ விழவினுள்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே					15
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின்
சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை
சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும்					20
ஏனோர் நின் வலத்தினதே
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில் ஆக
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய			25
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்
அமையா புணர்ச்சி அமைய நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு				30
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள				35
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க என அவர் அவி				40
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில்
வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர்				45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை_வயின் வழாஅது நின் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை
பயந்தோர் என்ப பதுமத்து பாயல்
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே				50
அரிது அமர் சிறப்பின் அமரர்_செல்வன்
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என
அறு வேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய				55
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன்				60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும்
பொறி வரி சாபமும் மரனும் வாளும்				65
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும்
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன்
பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்			70
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும்
சேரா அறத்து சீர் இலோரும்
அழி தவ படிவத்து அயரியோரும்					75
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்
நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்				80
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே

5 செவ்வேள்


பரந்த பெரிய குளிர்ந்த கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து,
மிகவும் உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து,
நெருப்பின் கொழுந்து போல் ஆரவாரிக்குபடி உன் வேலைச் சுழற்றி விட்டெறிந்து,
பிறரைத் துன்புறுத்தும் இயல்பினையுடைய அசைந்தாடும் சூரபத்மனாகிய மா மரத்தைனை அடியோடு சாய்த்து
வெற்றியையுடைய புண்ணிய மக்கள், பாவ மக்கள் என்ற பெயர்களுள் புண்ணிய மக்கள் என்ற பெயரைப் பெற்ற
பிற உயிர்களைக் கொன்று உண்பதற்கு அஞ்சாத கொடிய செயல்களையுடைய கொல்லக்கூடிய தகுதிபடைத்த
மாயம் செய்வதில் வல்ல அவுணரின் குலம் அழியும்படியாகக் கெடுத்த வேலினால்,
இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள
கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து
அந்தமலையினில் வழிகளை அமைத்த ஆறு மெல்லிய தலைகளை உடையவனே!
ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும்,
ஞாயிறு எழுகின்ற போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட, தாமரையின் மேல் பிறப்பினை உடைய, பெருமானே!
உலகத்தை அழிக்கும் கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே!
சான்றாண்மையுடையவனே! தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில்
வேலன் புகழ்ந்துபாடும் வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன;
அவை உண்மையானவையும் அல்ல; பொய்யானவையும் அல்ல;
உன்னையே வரம்பாகக் கொண்டது இந்த உலகம், எனவே
சிறந்து விளங்குபவனே! இப் பண்புகள் உன் உண்மைப் புகழுக்குக் குறைவுள்ளதாதலால் அந்தச் சிறப்பினின்றும் நீ நீங்கிவிடுவாய்!
சிறப்புகளில் உயர்ந்தவர் ஆகுவதும்,
பிறப்பினில் இழிந்த நிலை அடைதலும் உடைய
உன்னை அல்லாத பிற உயிர்கள் உன் ஆணைக்குட்பட்டவை;
பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,
வாசுகி என்ற பாம்பினை நாணாகக் கொண்டு, மேரு மலையே வில்லாக,
பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால் வேகும்படியும்,
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின்
அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
உமாதேவியோடு புணர்ந்த காமநுகர்ச்சிக்கான திருமண நாளில்
கைவிட முடியாத புணர்ச்சியை அடைய, நெற்றியில்
இமைக்காத கண்ணையுடைய சிவபெருமானிடம், இந்திரன் ஒரு வரத்தைப் பெற்று
'உன் புணர்ச்சியால் உண்டான கருவை அழிப்பாயாக' என்று வேண்ட, அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான
விரிந்த கதிர்களையுடைய மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு, தான் கொடுத்த வரம்
செய்வதற்கு அரியது என்று எண்ணி அதனை மாற்றாதவனாய், அவன் வாய்மையைப் போற்றுபவனாதலால்
நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தைப்
பல கண்டங்களாகச் சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக,
இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
எதிர்காலத்தை உணரும் ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து,
பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்
அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, 'தீயே அவற்றைத் தாங்குவதாக' என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக்
குண்டங்களில் எழுந்த முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை,
வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
தம் கற்பில் குறைவுபடாது உன்னைக் கருக்கொண்டனர்;
உயர்ந்து ஓங்கிய இமயத்திலுள்ள நீலப்பூக்களைக் கொண்ட பசிய சரவணம் என்ற சுனையில்
உன்னைப் பெற்றெடுத்தனர் என்பர், தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரிய புகழினை உடைய முருகனே! உன்னை இவ்வாறு பெற்ற பொழுதே
கிட்டுவதற்கு அரிய, பிறரும் விரும்பும் சிறப்பினை உடைய தேவர் கோமான்
தீயை உமிழும் வச்சிரப்படையைக் கொண்டு, பகைமை கொண்டு வந்து வெட்டினானாக,
முன்னர் ஆறு வேறு துண்டுகளும் ஆறு வடிவம் ஆகி,
பின்னர் ஒரே உருவம் உடையவனானாய்! ஓங்குகின்ற வெற்றியை உடைய குமாரதெய்வமே!
வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப்
போரில் உன்னுடைய வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட,
துன்பமில்லாத தீக்கடவுள் தன் உடலிலிருந்து பிரித்து
வளப்பமான கோழிச் சேவலைக் கொடியாகக் கொடுத்தான், வானுலகத்தில்
வளம் பொருந்திய செல்வத்தையுடைய இந்திரன் தன் உடலிலிருந்து பிரித்து
ஒளிதிகழும் புள்ளிகளையுடைய தோகையால் அழகு பெற்ற மயிலாகக் கொடுத்தான்,
திருந்திய செங்கோலையுடைய இயமன் தன் உடம்பிலிருந்து பிரித்து
கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;
அவ்வாறு, அவர்களும், பிறரும் மகிழ்ந்து உனக்குப் படைகளாக அளித்த,
வெள்ளாட்டுக் குட்டியும், மயிலும், கோழிச் சேவலும்,
இலச்சினையிடப்பட்ட வரிகளையுடைய வில்லும், தோமரமும், வாளும்,
செறிவான இலையைக் கொண்ட ஈட்டியும், கோடரியும், குந்தாலியும்
சுடுகின்ற கதிர்களையுடைய மழுப்படையும், மாலையும், மணிகளும்,
வேறுவேறு உருவினையுடைய இந்தப் பன்னிரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு
குற்றமற்ற வானுலகில் வாழும் தேவர் கோமானாகிய இந்திரனின் -
தாமரைப் பூவின் புள்ளிகளையுடைய பொகுட்டுடனான இளம்பருவத்திலேயே - புகழின் எல்லையைக் கடந்தவனே!
உன் குணமாகிய அருளைத் தம்மிடம் ஏற்றிருப்பாராய், உன் அறத்தைத் தாமும் மேற்கொண்டோராய் இல்லாதவரும்
நிலைபெற்ற நல்ல குணங்களையுடையோராய், பெரும் தவத்தினை மேற்கொண்டோராய், உன்னை வணங்குபவராய் இல்லாதவரும்
கொல்லுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும்,
அறநெறியில் சேராத சீர்மைகெட்டோரும்,
அழிந்துபோன தவ வடிவோடு உன்னை மறந்துபோனவர்களும்,
மறுபிறப்பு என்பது இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்;
உன் திருவடி நிழலை மேற்கூறியவரை அன்றி பிறர்
சேர்வாராதலால், நாம் வேண்டிக்கேட்டுக்கொள்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல, உன்னிடம்
அருளும், அன்பும் அறனும் ஆகிய மூன்றனையுமே!
உருளாகப் பூக்கும் கொத்துக்களையுடைய கடம்பின் செழுமையான மாலையை அணிந்தவனே!
					மேல்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருமுருகாற்றுப்படை

தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்	175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை	180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து		185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து	
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்	190

குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள்					175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,	180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,						185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன்,குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள்					175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,	180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,						185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன்,


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரும்பாணாற்றுப்படை

கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி			290
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர்		295
பெருநாள் அமையத்து பிணையினிர் கழிமின்
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும்		300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம்		305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர்		310

கடவுள் (விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல் தவிர்த்து,		290
துளி சொரிதலை ஒழிந்த, ஓங்கி உயர்ந்த பரந்த இடத்தையுடைத்தாகிய,
அகன்ற பெரிய வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப
சாதிலிங்கம் (போன்ற)இதழையுடைய குவளைப் பூவோடே நீலப்பூவும் வளர்ந்து
(ஒன்றற்கொன்று நிறம்)மாறுபடும் (ஏனைப்)பூக்களும் மிக்க, நீண்டநாள் நீர்(இருக்கும்) பொய்கைகளில்,
பூப்பறிப்பார் உங்களுக்கிட்ட குவிதல் நெகிழ்ந்த பல பூக்களையும்,					295
விழாக்கோலம் (கொண்டாற் போல)சூடியவராய்ப் போவீராக -
கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தலினையும்,
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
மனைகளில் தங்கும் கோழிகளுடன் நாயும் அருகே வராமல்(இருக்கும்),
வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும்				300
வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின் -
பெரிய நல்ல விசும்பில் வடதிசைக்கண் நின்று விளங்கும்
சிறிய விண்மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறிய நுதலினையும்,
வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி இடமறிந்து ஆக்கிய
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,	305
சிவலைப் பசுவின் நறிய மோரில், வெண்ணெயில் (வெந்த)மாதுளையின்
வெம்மையுற்ற பசிய காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து,
கறிவேப்பிலை மரத்தின் நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு, பசிய கொத்துக்களையுடைய
நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர் -


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 


# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
# 156 குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருமுருகாற்றுப்படை

பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை		150
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்		155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை	
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய		160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி		
நான்முக ஒருவர் சுட்டி காண்வர		165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு		
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை	170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்	175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை	180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து		185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து	
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்	190
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்	
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்		195
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய		150
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,
இறைவி பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் -
நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல			155
வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய்,
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் -
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள			160
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக,			165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து
காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே				170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள்					175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,	180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,						185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன்,			190
அழகினையுடைய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard