New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு

 
 
தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் 
சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காண முடிகிறது
தமிழ் எழுத்துரு அதாவது உயிர் 12; மெய் 18 என தனித் தனியாய் உள்ளது 8ம் நூற்றாண்டில் தான், அதாவது தொல்காப்பியர் காலம் ஆகும்

Tamil%2Bezuththu.jpg

Tamil%2Bezuththus.jpg

Tamil%2Bezuththuss.jpg
Tamil%2B.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


தொல்காப்பியர் காலம்

 

tholkaappiyaree.png

தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான இலக்கண நூல். இதன் மொழி நடை இது சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுக்கு பிற்பட்டது என மொழியியல் தெளிவாய் காட்டுகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு  பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70

தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39

எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 
முச்சங்க தொன்மக் கதை
 
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
 
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
 
53.png
 
 
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
பன்னாட்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஏற்பது என்ன
 
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
 
ஜப்பானின் ஒசாக்கா பன்னாட்டு புத்த மத பல்கலைக் கழக இந்தியவியல் பேராசிரியரும், திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த டகனொபுடகஹஷி   இன்றைய வடிவு 5- 6ம் நூற்றாண்டினது
 
 பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம்   பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்   பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
  அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
53a.png
தொல்காப்பியம் சொல் இலக்கணம் மட்டும் இல்லை, எழுத்து இலக்கணமும் சொல்கிறது. அதாவது
 உயிர் எழுத்து 12 அ - ஔ ;  மற்றும்
 மெய் எழுத்து 18 க் - ன்
இவற்றின் கலப்பே உயிர்மெய் எழுத்து
கல்வெட்டுகளில் 30 எழுத்துகளும் தனி உரு பெறுவது 5ம் பொ.ஆ. 5ம் நூற்றாண்டில் தான். அதாவது  தமிழில்  "ற" "ன" போன்றவை இரண்டு, ஆனால் வடமொழியில் ஒன்று தான்.
உதாரணமாக ராகம் என எழுத்கையில் எழுதும் போது அறம் என எழுதும் போதும்  மாறு படும் ஆனால் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டுகளில் இரண்டு ஒரே உரு தான், மொழி இடையில் வந்தால் படிப்பவர் மாற்றி  மாற்றி படித்து பொருள் சொல்கின்றனர். 
புள்ளி மயங்கியல்
 
புள்ளி வைத்து எழுதுதல், பின் புள்ளி மயங்கியல் என மெய் எழுத்து சேறும் முறை பற்றியும் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி - அதாவது பிராமியில் தொடங்கி அது வட்டெழுத்தாய் மாற்றம் பெற்றதினை தமிழ் எனப் படித்து வெளிப் படுத்திய பேராசிரியர் கே.வி.ராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் தெளிவாய் தொல்காப்பிய எழுத்து இலக்கணத்தோடு அதை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் இயற்றப் பட்ட காலம் குறிக்க வேண்டும் எனத் தெளிவாய் கூறுகின்றனர். அதன்படி தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டிலானாது.
 
 
  தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் ளா, ற, ஜ்ன உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டு இறுதி; திருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் சாட்சி

 
 தமிழ் இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியம் தான் மிகப் பழமையானது, காலம் 7ம் நூற்றாண்டு என்பதில் கருத்து ஒற்றுமை நடுநிலையாளரிடம் உண்டு. 
53a.png
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
 
 தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்
 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் தன்னை ஒரு தமிழ் பற்றாளர் என வேடம் போட்டு ஏமாற்றி தமிழரை ஆரியர் - திராவிடர் என பிரிக்கும் கிறிஸ்த்வ நச்சுப் பொய்யை பராப்பும் ஏஜன்டாய் செயல்பட்டவர்.
தன் பொய்யான மதம் பரப்ப நச்சுக் கருத்தைப் பரப்புவோரை நம்பினால் வள்ளுவரும்  தெளிவாய் சொன்ன்னார்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.                   குறள் 508: 
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர்  தொல்காப்பியத்தில் உள்ள பல மொழியியலைவிட குறளின் உள்ள வளர்ச்சியை  காரணம்  காட்டி திருக்குறள் தொல்காப்பியத்திற்கு 500 ஆண்டு பிற்பட்டது  என்கிறார். 
 
Pavanar%2BValvar%2Bdate-.jpg
பேராசிரியர் வையாபுரி பிள்ளை மற்றும் ஐராவதம் மஹாதேவன் போன்றோர் தவிர மற்ற முறையான ஆய்வின்றி தன்னிச்சையாய் காலம் குறிப்போரை பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்பது இல்லை.
 பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியம் மொழிநிலை சங்கத் தொகை நூல்களுக்கு பல நூற்றாண்டு பிற்பட்டது என்பதை திரு.வையாபுரி பிள்ளை காட்டி உள்ளார், இவற்றை  லண்டன் பல்கலை கழக பகுதி நேர ஆசிரியரான திரு.சுவாமிநாதன்  தன் வலையில் என ஐந்து  பாகங்களாய் எழுதியுள்ளார். விளக்கி உள்ளார்.

தொல்காப்பியர் காலம் தவறு  இரண்டு மூன்று நான்கு  ஐந்து

 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் கூற்றுபடியே காப்பியத்திற்கும் - குறளிற்கும் இடையே மொழி நிலை மாற்றம் 5 நூற்றாண்டு என்பது தவறன ஆய்வு; 
சங்க இலக்கியத்திலேயே கலித்தொகை, பரிபாடல் நூல்களுள் தமிழின் நெகிழ்ச்சி காணப் படுகிறது, பெரும்பாலான சங்கத் தொகை நூல்கள் பொ.மு 200 - பொ.ஆ.500 இடையிலானது; கலித்தொகை & பரிபாடல் 5- 6m  நூற்றாண்டை ஒட்டியது, இவற்றில் தான் ஆசிரியப்பாவை விட்டு  நெகிழ்ந்து பரிபாடல், கலிப்பா, வெண்பாவில் பாடல் இயற்றப் படுகிறது. தொல்காப்பியம் இவற்றை கூறுகிறது. 
வட மொழியில் காயத்ரி மற்றும் உஷ்னிக் என்பவர் ஈரடி வெண்பா வகை, இவற்றை வைத்து காப்பியர்  (குறு வெண்பாட்டின் அளவு எழு சீரே - பொருள். செய்யு:158/2)குறு வெண்பா என ஒரு சிறு குறிப்பு மட்டும் தருகிறார். திருக்குறள் என்பது குறு வெண்பா மிகவும் நெகிழ்ச்சி பெற்றபின் உருவானது, 9ம் நூற்றாண்டின் முதற் பாதியைச் சேர்ந்தது.

தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டு இறுதி; திருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் சாட்சி

 
 தமிழ் இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியம் தான் மிகப் பழமையானது, காலம் 7ம் நூற்றாண்டு என்பதில் கருத்து ஒற்றுமை நடுநிலையாளரிடம் உண்டு. 
53a.png
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
 
 தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்
 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் தன்னை ஒரு தமிழ் பற்றாளர் என வேடம் போட்டு ஏமாற்றி தமிழரை ஆரியர் - திராவிடர் என பிரிக்கும் கிறிஸ்த்வ நச்சுப் பொய்யை பராப்பும் ஏஜன்டாய் செயல்பட்டவர்.
தன் பொய்யான மதம் பரப்ப நச்சுக் கருத்தைப் பரப்புவோரை நம்பினால் வள்ளுவரும்  தெளிவாய் சொன்ன்னார்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.                   குறள் 508: 
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர்  தொல்காப்பியத்தில் உள்ள பல மொழியியலைவிட குறளின் உள்ள வளர்ச்சியை  காரணம்  காட்டி திருக்குறள் தொல்காப்பியத்திற்கு 500 ஆண்டு பிற்பட்டது  என்கிறார். 
 
Pavanar%2BValvar%2Bdate-.jpg
பேராசிரியர் வையாபுரி பிள்ளை மற்றும் ஐராவதம் மஹாதேவன் போன்றோர் தவிர மற்ற முறையான ஆய்வின்றி தன்னிச்சையாய் காலம் குறிப்போரை பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்பது இல்லை.
 பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியம் மொழிநிலை சங்கத் தொகை நூல்களுக்கு பல நூற்றாண்டு பிற்பட்டது என்பதை திரு.வையாபுரி பிள்ளை காட்டி உள்ளார், இவற்றை  லண்டன் பல்கலை கழக பகுதி நேர ஆசிரியரான திரு.சுவாமிநாதன்  தன் வலையில் என ஐந்து  பாகங்களாய் எழுதியுள்ளார். விளக்கி உள்ளார்.

தொல்காப்பியர் காலம் தவறு  இரண்டு மூன்று நான்கு  ஐந்து

 
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் கூற்றுபடியே காப்பியத்திற்கும் - குறளிற்கும் இடையே மொழி நிலை மாற்றம் 5 நூற்றாண்டு என்பது தவறன ஆய்வு; 
சங்க இலக்கியத்திலேயே கலித்தொகை, பரிபாடல் நூல்களுள் தமிழின் நெகிழ்ச்சி காணப் படுகிறது, பெரும்பாலான சங்கத் தொகை நூல்கள் பொ.மு 200 - பொ.ஆ.500 இடையிலானது; கலித்தொகை & பரிபாடல் 5- 6m  நூற்றாண்டை ஒட்டியது, இவற்றில் தான் ஆசிரியப்பாவை விட்டு  நெகிழ்ந்து பரிபாடல், கலிப்பா, வெண்பாவில் பாடல் இயற்றப் படுகிறது. தொல்காப்பியம் இவற்றை கூறுகிறது. 
வட மொழியில் காயத்ரி மற்றும் உஷ்னிக் என்பவர் ஈரடி வெண்பா வகை, இவற்றை வைத்து காப்பியர்  (குறு வெண்பாட்டின் அளவு எழு சீரே - பொருள். செய்யு:158/2)குறு வெண்பா என ஒரு சிறு குறிப்பு மட்டும் தருகிறார். திருக்குறள் என்பது குறு வெண்பா மிகவும் நெகிழ்ச்சி பெற்றபின் உருவானது, 9ம் நூற்றாண்டின் முதற் பாதியைச் சேர்ந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 தொல்காப்பியமும் தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்

 

தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்
9780674059924.jpg53a.png
 


தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர் என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
ezuthu%2B-.jpg
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)
 

Permalink
 Reply Quote 
More 
 

Here I Give the details on developments of Tamil Writings and how Brahmi was dechiphered,and
 all this are the views of Iravatham Mahadevan.

//* 1906
ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா
 என்பவர்மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில்
 எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில்
 திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறதுஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924
இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள்
பிராக்ரித் ஆக இருக்க முடியாதுஏனெனில் இவற்றில் '', '', '', 'போன்ற எழுத்துக்கள்
 காணக்கிடைக்கின்றனநாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது
 '', 'க்கள் (झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே
 நேரத்தில் 'தந்தைஎன்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

பின்னர்பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில்
 மெய் எழுத்துகள்அகரஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள்
 பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம்ஆனால்
அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G. 
கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு
புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள்
 கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம்.
 இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும்மற்றொரு பக்கத்தில் தமிழ்
 (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள்
வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப்
 பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்ததமிழில் இல்லாத வரிவடிவங்கள்
விலக்கப்பட்டுபிராக்ரித்தில் இல்லாத '', '', '', 'ஆகிய எழுத்துகளுக்கான புது
வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும்,
ஏற்கனவே இருக்கும் '', '', 'ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்துஅவற்றினை நீட்டித்தது
போல் உள்ளது. //
//- 
அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம்
 உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சமண முனிவர்கள்மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில்
 செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச்
 சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன.
 இந்தக் கல்வெட்டுகளுக்கும்காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில்
 காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட
வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவேதேவநாகரியாக மாறியுள்ளது.

அசோகன் பிராமிதக்காணப் பிராமியாக மாறிஅதிலிருந்து கன்னடதெலுங்கு
 வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

தமிழ் பிராமிகிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம்
 அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில்இரும்பு எழுத்தாணி கொண்டு
 எழுதப்பட்டது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது,
 கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள்,
 பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த
வழித் தமிழெழுத்துவட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது.
அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி
வருகிறது.

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துமலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

வரிவடிவங்கள் மாறினாலும்மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு
 உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால்
 புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25%
சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுபிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை
அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும்இராசர்/ராஜன்
 என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும்புத்தர்கள்,
ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்துஅலெக்சாண்டிரியா போன்ற இடங்களில்
(அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும்
 அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும்அதில் காணப்படும் எழுத்துகள்
 தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்)தமிழ் எழுத்துகள்
 12+18=30 என்று சொல்லப்படுவதாலும்இது பல காலமாக இருக்கிறது என்று
அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று
 தான் கருதுவதாகச் சொன்னார்.

இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும்ஆனால்
 தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும்இதுவரை
 கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
என்றும்அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை
 என்றும்அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில்
எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக
 இருந்திருக்கலாம்ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...)அழிந்துபோயிருக்கலாம்
 என்றும் சொன்னார்.

கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "
சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர்தகடூர் அரசர்,
நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில்
சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள்
 இருந்ததாகவும்அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -சத்திய புத்திரன் ->
 சத்திய மகன் -அதிய மான்] என்றும் சொன்னார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் -வையாபுரிபிள்ளை கட்டுரை

 
Vai%2B0.png

Vai%2B1.png

Vai%2B1a.png

Vai%2B1ab.png

Vai%2B1ac.png


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் தவறு-1


tolkappian+katturai.jpg
 
 
ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் ஒரே ஆசிரியரே அவரை கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கி.மு.ஆயிரம் ஆண்டு என்றும் எழுதிக் குழம்புவதையும், மற்றோரைக் குழப்புவதையும் காணலாம். மற்றும் பலர் மொழி இயலின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 20,000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று பிதற்றுவதையும் பார்க்கலாம். தமிழின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், தொல்காப்பியன் காலம் எதுவானாலும் சரி—அவர் பாணிணிக்கு முந்தியவர் என்று சொன்னால் போதும் என்று வட மொழி வெறுப்பில் தவிப்பதையும் காணலாம்.
 
உலகமே வியக்கும் வண்ணம் முதல் இலக்கண நூலை எழுதிய பாணினியைக் குருவாகக் கொண்டே தொல்காப்பியர் நூலை எழுதினார் என்பதை இரு மொழியும் அறிந்தவர்கள் அறிவர். பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை போன்றோருக்கு இது புரியும். தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கருதுவோருக்கு இது விளங்கும். ஒல்காப் புகழ் தொல்காப்பியனுக்கும் இது தெரிந்தே உளது என்பதை கட்டுரையில் போகப் போகக் காண்பீர்கள்.
 
அதனால்தான் தொல்காப்பியரின் புகழைப் பாட மறந்த பாரதியும் கூட பாணினியின் புகழைப் பாட மறக்கவில்லை:
“ நம்பருந்திறலோடு ஒரு பாணினி
ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்” என்று பாடினான்.
 
வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்.
 
1610= தொல்காப்பிய சூத்திரங்கள் 1610
3999= மொத்த அடிகள் 5630
5630= சொல் வடிவங்கள் 5630
13708= தொடை விகற்பம் 13,708
பிரிவுகள் 3: எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள்
என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம்.
 
பெரிய பெரிய புதிர்
 
தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று கூறினார்?
 
தொல்காப்பியர் சிவன், கணபதி போன்ற தெய்வங்களைக் குறிப்பிடாதது ஏன்?
 
வள்ளுவர், இளங்கோ போலவே அதிகாரம் என்ற சொல்லை நூலில் புகுத்தியது ஏன்?
 
வள்ளுவர் போலவே அறம், பொருள், இன்பம், (வீடு) (தர்ம அர்த்த காம (மோட்ச) என்ற வேத வழி முறையை வலியுறுத்துவது ஏன்?
 
பலராமனின் கொடியான பனைக் கொடியைக் குறிப்பிடுவது ஏன்?
 
தொல்காப்பியர் நான்மறை முற்றிய பிராமணன் அதங்கோட்டு ஆசார்யார் (ஆசான்) தலைமையில் நூலை நிறவேற்றியது ஏன்?
 
த்ருண தூமாக்கினி என்பதே இவருடைய ‘ஒரிஜினல்’ பெயர் என்றும் பாணினி ‘ஸ்டைலில்’ பாணினீயம் என்று பெயர் வைத்தது போலவே தொன்மையான காப்பியக் குடியில் வந்தவர் தொல்காப்பியர் என்றும் அதன் மூலம் நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் நச்சினார்க்கினியர் முதலியோர் கூறுவது ஏன்?
 
சங்க கால இலக்கியத்துக்குப் பின்னர் வந்த சொற்களை மூன்று அதிகாரங்களிலும் பயன்படுத்துவது ஏன்?
 
இதுவரை எந்த தமிழ் அறிஞரும் இந்த சொற் பிறப்பியல் விஷயத்தை அலசாமல் மறைத்தது ஏன்?
 
மொழியியலில் எல்லோரும் ஒத்துக் கொண்ட கொள்கைகளை தொல்.ஐ மதிப்பிடும்போது மட்டும் “அறிஞர்கள்” கண்டு கொள்ளாதது ஏன்?
 
தொல். ஆய்த எழுத்து  ( ஃ ) பற்றிப் பேசுவதால் முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வைக்க முடியாது என்று பல அறிஞர்கள் வாதிடுவது ஏன்?
ஏதேனும் சிறிது இசகு பிசகு வந்தால், இது எல்லாம் இடைச் செருகல் என்று சொல்லி சில “தமிழ் அறிஞர்கள்” தப்பிக்க முயல்வது ஏன்?
பொருள் அதிகாரம் பிற்காலச் சேர்க்கை என்று வெளி நாட்டு அறிஞர் பலரும் கூறுவது ஏன்?
 
இதற்கெல்லாம் விடை காண்போம். சுருக்கமான விடை:- தொல். உடைய காலம் நாலாவது அல்லது ஐந்தாவது நூற்றண்டுதான். ஆனால் அவர் கூறும் விதிகளோ அவருக்கு 1000 ஆண்டுக்கு முந்திய தமிழ் மொழியின் பழைய விதிகள்.
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விதிகளை அவர் தொகுத்தளித்தமைக்கு தமிழ் கூறு நல் உலகம் அவருக்கு என்றும் கடப்பாடு உடையதே.
 
தொல்காப்பியரை ஐந்தாம் நூற்றாண்டில் வைக்க அவருடைய சொற்களே சாட்சி. இதோ ஒவ்வொன்றாகப் படியுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 2


tamil+grammar+image.jpg
 
 
(முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்: லண்டன் சுவாமி)
 
1.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. இதை அடுத்து வந்த குறள், சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்தோ கடவுள் வாழ்த்தோ உண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் சிதறிக்கிடந்த பாடல்களை எல்லாம்-- வியாச மாமுனிவன் வேதத்தைத் தொகுத்தது போல ---பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியோர் தொகுத்தபோது அதில் கடவுள் வாழ்த்தை இணைத்தனர். தொல்காப்பியர் அதற்கு ஒரு நூற்றாண்டு முந்தியவராக இருக்கலாம்.
 
2.இந்த நூலை ஒட்டி வளர்ந்த சொற்களான சூத்திரம், காப்பியம், அதிகாரம் ஆகியன வட மொழிச் சொற்கள். சங்க இலக்கியத்தில் 27,000+ வரிகளில் காண முடியாதவை. புலவர் பெயரில் மட்டும் ‘காப்பிய’ உண்டு. ஏனெனில் அவர்கள் காப்பிய (உஷனஸ் மஹா கவியின் காவ்ய கோத்திரம்) கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்.
 
3.ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட பேரறிஞரைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பும் இல்லாதது ஏன்? இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் தமிழாக இருக்கிறதே! மொழி இயல் ரீதியில் இவர்களை மிகவும் முன் போட முடியாதே. மேலும் முதல், இடைச் சங்க புலவர் பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இருக்கின்றன. அவைகளின் நடையைப் பார்க்கையில் மூன்று தமிச் சங்கங்களும் 200  அல்லது 300 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.
 
(எனது ‘ 3 தமிழ் சங்கங்கள் உண்மையா கட்டுக் கதையா?’ Three Tamil Sangams: Myth and Reality என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க)
 
4. தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனார் பாட்டிலும் ஆதிரையாரின் சிறப்புப் பாயிரத்திலும் வடமொழி சொற்களும் (அவையம், உலகம்), பிற்காலக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் கூறும் நல் உலகம் வேங்கட மலைக்குள் சுருங்கி விட்டதை மாமுலனார் போன்ற புலவர்களும் வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாடுகளை ‘மொழி பெயர் தேசம்’ என்று குறிப்பிடுவர். ஆகையால் ஏறத் தாழ ஒரே காலத்தைப் பற்றி அல்லது மாமுலனாருக்குப் பிந்திய காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கிறது.
 
5. தொல்காப்பியர் 68 இடங்களில் பயன்படுத்தும் “என்மனார்” முதலிய சொற்கள் சங்கச் சொல்லடைவில் இல்லை என்பதோடு ‘ஆர்’ விகுதி பிற்கால விகுதியாகும். வினைச் சொற்கள் ஆன், ஆய், ஆர் என்று நெடிலில் முடிவது கலித்தொகை, பரிபாடலில் அதிகம் வரும். இவை பரிபாடல், கலித்தொகை காலத்தைச் சேர்ந்தவை. இந்த இரு நூல்கள் பற்றிய குறிப்பும் தொல். இல் உண்டு. இதற்கு முந்திய பரிபாடல், கலித்தொகை பற்றிய சான்றுகள் இழந்த நூற்பட்டியலிலும் இல்லை.
 
6. தொல். பயன்படுத்தும் இலக்கணம் ,வணிகன், காரணம் போன்ற வடமொழிச் சொற்கள் சங்க கால நூல்களில் இல்லை.
 
7. தொல்காப்பியர் காலப் பாண்டியனை வழுதி, மாறன், செழியன் என்று சொல்லாமல் பாண்டியன் என்று மட்டும் அழைப்பதையும் கருத்திற் கொள்க. அகம், புறம் முதலிய பாடல்களில் இச் சொல் உண்டு என்றாலும் அவைகளின் காலம் சங்க கால இறுதிக் கட்டமா என்பதை ஆராய வேண்டும்.
 
8.தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது.
 
9.பரைத்தமை: பரத்தையிற் பிரிவு என்பது தலைவனின் ஒழுக்கக் கேட்டிற்கு அடையாளம். சங்க நூல்கள் இவைகளை அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியாகப் பேசும். ஆனால் திருக்குறள் காலத்திலிருந்து இதைக் கண்டனப் பார்வையில் காண்கின்றனர். தொல்காப்பியர் இதை ஒரு பிரிவாக இலக்கணத்திற் சொல்ல மனமில்லாமல் ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அதாவது காலத்தின் தாக்கம். பிற்கால இறையனார் களவியல் இதை ஒரு சூத்திரமாக வைத்து நூல் செய்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக பலர் சந்தேகிக்கும் சிலப்பதிகாரத்தில் பரத்தையர் வாழும் வீதியை இளங்கோ அடிகள் 22 வரிகளில் வருணிக்கிறார்.
 
10.எதுகை:- குறளைப் போல, அதிகம் காணப்படுகிறது. ஆய்த எழுத்துப் பிரயோகமும் சங்க நூல்களை விட அதிகம்.
 
11.ஒட்டகம்: தொல்காப்பியர் ஒட்டகம், குதிரை முதலிய சொற்களைப் பயன்படுத்துவதும் இவரது காலத்தைக் காடுகிறது. சங்க காலத்தின் இறுதிகட்டத்தில் வந்த சிறுபாணாற்றுபடையிலும் அகம் 245லும் மட்டுமே ஒட்டகம் வருகிறது.
 
12.தொல்காப்பியர் 287 இடங்களில் தனக்கு முந்தி இருந்தவர்கள் கூறியது என்று பல விதிகளைக் கூறுகிறார். அவருக்கு முந்திய அத்தனை பேரின் நூல்களில் ஒரு சில கிடைத்திருந்தாலும் கூட, இந்தக் கட்டுரைக்குத் தேவையே எழுந்திராது. ஆக அவர் கூறுவது நாமறிந்த சங்க காலப் புலவர்கள் என்றே கருதவேண்டும்.
 
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
 
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம், பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.
 
சில சொற்கள் மீண்டும் வந்த போதும் திருப்பிக் கொடுத்தமைக்குக் காரணம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரே காலத்தில் இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை எனபதைக் காட்டவே.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 2


tamil+grammar+image.jpg
 
 
(முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்: லண்டன் சுவாமி)
 
1.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. இதை அடுத்து வந்த குறள், சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்தோ கடவுள் வாழ்த்தோ உண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் சிதறிக்கிடந்த பாடல்களை எல்லாம்-- வியாச மாமுனிவன் வேதத்தைத் தொகுத்தது போல ---பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியோர் தொகுத்தபோது அதில் கடவுள் வாழ்த்தை இணைத்தனர். தொல்காப்பியர் அதற்கு ஒரு நூற்றாண்டு முந்தியவராக இருக்கலாம்.
 
2.இந்த நூலை ஒட்டி வளர்ந்த சொற்களான சூத்திரம், காப்பியம், அதிகாரம் ஆகியன வட மொழிச் சொற்கள். சங்க இலக்கியத்தில் 27,000+ வரிகளில் காண முடியாதவை. புலவர் பெயரில் மட்டும் ‘காப்பிய’ உண்டு. ஏனெனில் அவர்கள் காப்பிய (உஷனஸ் மஹா கவியின் காவ்ய கோத்திரம்) கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்.
 
3.ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட பேரறிஞரைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பும் இல்லாதது ஏன்? இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் தமிழாக இருக்கிறதே! மொழி இயல் ரீதியில் இவர்களை மிகவும் முன் போட முடியாதே. மேலும் முதல், இடைச் சங்க புலவர் பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இருக்கின்றன. அவைகளின் நடையைப் பார்க்கையில் மூன்று தமிச் சங்கங்களும் 200  அல்லது 300 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.
 
(எனது ‘ 3 தமிழ் சங்கங்கள் உண்மையா கட்டுக் கதையா?’ Three Tamil Sangams: Myth and Reality என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க)
 
4. தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனார் பாட்டிலும் ஆதிரையாரின் சிறப்புப் பாயிரத்திலும் வடமொழி சொற்களும் (அவையம், உலகம்), பிற்காலக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் கூறும் நல் உலகம் வேங்கட மலைக்குள் சுருங்கி விட்டதை மாமுலனார் போன்ற புலவர்களும் வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாடுகளை ‘மொழி பெயர் தேசம்’ என்று குறிப்பிடுவர். ஆகையால் ஏறத் தாழ ஒரே காலத்தைப் பற்றி அல்லது மாமுலனாருக்குப் பிந்திய காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கிறது.
 
5. தொல்காப்பியர் 68 இடங்களில் பயன்படுத்தும் “என்மனார்” முதலிய சொற்கள் சங்கச் சொல்லடைவில் இல்லை என்பதோடு ‘ஆர்’ விகுதி பிற்கால விகுதியாகும். வினைச் சொற்கள் ஆன், ஆய், ஆர் என்று நெடிலில் முடிவது கலித்தொகை, பரிபாடலில் அதிகம் வரும். இவை பரிபாடல், கலித்தொகை காலத்தைச் சேர்ந்தவை. இந்த இரு நூல்கள் பற்றிய குறிப்பும் தொல். இல் உண்டு. இதற்கு முந்திய பரிபாடல், கலித்தொகை பற்றிய சான்றுகள் இழந்த நூற்பட்டியலிலும் இல்லை.
 
6. தொல். பயன்படுத்தும் இலக்கணம் ,வணிகன், காரணம் போன்ற வடமொழிச் சொற்கள் சங்க கால நூல்களில் இல்லை.
 
7. தொல்காப்பியர் காலப் பாண்டியனை வழுதி, மாறன், செழியன் என்று சொல்லாமல் பாண்டியன் என்று மட்டும் அழைப்பதையும் கருத்திற் கொள்க. அகம், புறம் முதலிய பாடல்களில் இச் சொல் உண்டு என்றாலும் அவைகளின் காலம் சங்க கால இறுதிக் கட்டமா என்பதை ஆராய வேண்டும்.
 
8.தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது.
 
9.பரைத்தமை: பரத்தையிற் பிரிவு என்பது தலைவனின் ஒழுக்கக் கேட்டிற்கு அடையாளம். சங்க நூல்கள் இவைகளை அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியாகப் பேசும். ஆனால் திருக்குறள் காலத்திலிருந்து இதைக் கண்டனப் பார்வையில் காண்கின்றனர். தொல்காப்பியர் இதை ஒரு பிரிவாக இலக்கணத்திற் சொல்ல மனமில்லாமல் ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அதாவது காலத்தின் தாக்கம். பிற்கால இறையனார் களவியல் இதை ஒரு சூத்திரமாக வைத்து நூல் செய்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக பலர் சந்தேகிக்கும் சிலப்பதிகாரத்தில் பரத்தையர் வாழும் வீதியை இளங்கோ அடிகள் 22 வரிகளில் வருணிக்கிறார்.
 
10.எதுகை:- குறளைப் போல, அதிகம் காணப்படுகிறது. ஆய்த எழுத்துப் பிரயோகமும் சங்க நூல்களை விட அதிகம்.
 
11.ஒட்டகம்: தொல்காப்பியர் ஒட்டகம், குதிரை முதலிய சொற்களைப் பயன்படுத்துவதும் இவரது காலத்தைக் காடுகிறது. சங்க காலத்தின் இறுதிகட்டத்தில் வந்த சிறுபாணாற்றுபடையிலும் அகம் 245லும் மட்டுமே ஒட்டகம் வருகிறது.
 
12.தொல்காப்பியர் 287 இடங்களில் தனக்கு முந்தி இருந்தவர்கள் கூறியது என்று பல விதிகளைக் கூறுகிறார். அவருக்கு முந்திய அத்தனை பேரின் நூல்களில் ஒரு சில கிடைத்திருந்தாலும் கூட, இந்தக் கட்டுரைக்குத் தேவையே எழுந்திராது. ஆக அவர் கூறுவது நாமறிந்த சங்க காலப் புலவர்கள் என்றே கருதவேண்டும்.
 
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
 
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம், பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.
 
சில சொற்கள் மீண்டும் வந்த போதும் திருப்பிக் கொடுத்தமைக்குக் காரணம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரே காலத்தில் இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை எனபதைக் காட்டவே.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3

 

Picture shows Kannaki’s cooking for Kovalan

தொல்காப்பியத்தின் துவக்க வரியே நெருடலாக இருக்கிறது. “எழுத்தெனப்படுவது” என்று செயப்பாட்டு (வினை) பொருளில் –Pseudo Passive voice–துவக்குகிறார். இதை பொருளதிகாரத்திலும் காண்கிறோம்.உலகத்தில் எந்த நூலும் இப்படி துவங்குவது இல்லை.

சொல்லப்/ பட்டன/ படும்/ பட்ட (3-564-1, 651-1; 3-63-22, 68-8, 253-2,). இது போல மணிமேகலை-24,30. திருக்குறளிலும் ‘கொல்லப்படு’ என்ற சொல் வருகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் காலத்தைக் காட்டுவதோடு மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை என்பதையும் காட்டும். புரிதல், புரிந்தோள் என்பன தொல்காப்பியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலையில் மட்டூமே வரும்.

ஆகும்: இந்தச் சொல் மூன்று அதிக்கரங்களிலும் நிறைய இடங்களில் வரும். மேலும் சம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஆசிரியர் மூன்று அதிகரங்களையும் எழுதாவிடில் இப்படி இருக்கமுடியாது. புறநானூற்றில் மூன்றே இடங்களில் மட்டுமே வருகிறது.

எண்ணுங்காலும்: இது தொல். இல் 2-47-1 ல் உள்ளது. இதைத் தவிர திணைமாலை ஐம்பதில் (150-2) மட்டுமே வருகிறது. இப்படிக் ‘கால்’ விகுதியுடன் வருவது சங்க காலத்தில் மிகமிகக் குறைவு. கலி., குறள் போன்ற நூல்களில்தான் அதிகம்.

எப்பொருள்: இது சொல் அதிகாரத்துக்குப் பின்னர் குறள் முதலான பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளது. மேலும் ‘எப்’ துவக்கத்துடன் சங்க இலக்கியத்தில் சொற்களே இல்லை.

என்ப: தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த இச்சொல் மூன்று அதிகாரங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் ஒரே ஆசிரியர், ஒரே காலத்தில் எழுதியதே என்பதைக் காட்டும்.

என்மனார்: முன்னர் குறிப்பிட்டது போல 60–க்கும் மேலான இடத்தில் வரும் இச்சொல்லும் 3 அதிகாரங்களிலும் காணப்படுகிறது. இது தவிர கலித்தொகை, குறுந்தொகையில் இரண்டே இடங்களில்தான் வருகிறது.

என்றா: இந்தச் சொல்லும் 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை.

ஏனை, ஏனவை: ஏனவை என்ற சொல்லை 1, 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஏனை, என்ற சொல் குறிஞ்சிப்பாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வரும். தொல். இல் எல்லா அதிகாரங்களிலும் காணப்படுகிறது.

எண்கள்: ஐந்து, எட்டு, ஐம்பது, ஐயீர் ஆயிரம் போன்ற எண்களை 3 அதிகாரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார். உயிர் எழுத்துக்களில் துவங்கும் சொற்களில் இருந்து மட்டுமே எடுத்துகாட்டுகளைக் கொடுத்தேன். ஏணையவற்றைக் கொடுத்தால் கட்டுரை நீளும்.

எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது— குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.

‘இன்’– னில் முடியும் சொற்கள் ஒன்றின், நுவலின், நீங்கின், மறுப்பின், மறைப்பின் முதலியன தொல். தவிர குறள், சிலம்பு முதலிய சங்கம் மருவிய கால நூல்களிலேயே காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு

Picture shows the greatest of the Choza Kings: Karikalan

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு

Picture shows the greatest of the Choza Kings: Karikalan

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 பகுதி 5–தொல்காப்பியர் காலம் தவறு

 

Picture shows Yaalpaanan (Musician with Yaaz)

தொல்காப்பியர் பயன்படுத்திய மேலும் பல சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை சங்க இலக்கிய நூல்களைவிட பிற்கால நூல்களிலேயே அதிகம் வருகின்றன. சங்க இலக்கியச் சொல்லடைவு, தொல்காப்பியச் சொல்லடைவு, பதினெண்கீxக்கணக்கு நூல்களின் சொல்லடைவு ஆகியவற்றைக் கொண்டு ஒப்பிட்டால் நான் சொல்லுவது நன்கு விளங்கும் ஒரு சில சொற்களை வைத்து மட்டும் இப்படி முடிவு செய்யவில்லை. நூற்றுக் கணக்கான சொற்களை ஆராய்ந்தே இந்த முடிவுக்கு வந்தேன்.

முதல் நாலு பகுதிகளையும் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்.

அரில்தப (குற்றமற) : அரிஷ்ட என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இதைப் பாயிரத்திலும், நூலிலும் காணலாம்

உயிர்த்தல்: இச் சொல் தொல்.(1-33, 3-104-3, 14) தவிர, கலி.யில் (54-11) மட்டுமே வரும்.

என்பதனால்: இது தொல். (3-145-23), கலி.(39-5) மற்றும் நாலடியார், ஐந்திணை எழுபது போன்ற பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளன.

‘வை’ யில் முடியும் சொற்கள்: அனையவை, என்றவை, மறைந்தவை போன்ற சொற்கள் பிற்கால நூல்களில் மட்டுமே அதிகம் உள்ளன.

நூறாயிரம், நுனி, நுவலுக்காலை,புணருங்காலை,நீட்டம், நீட்டல் ஆகியனவும் பிற்கால வழக்கில் அதிகம்.

மை—இல் முடியும் சொற்கள்: இவ்வகைச் சொற்கள் குறளில் பரவலாக உள்ளன. புறநானூற்றில் ஓரிடத்தை தவிர தொல். (3-138-1) மற்றும் பிற்கால வழக்கில் அதிகம்.

முதலில், முடிவினது, முடிவு, முடிபு ஆகியனவும் இப்படிபட்டவை.

மானம்: இது தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளது. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

மறுதலை, விழைவு, கொற்றவை நிலை, பல்லவை, பல்முறை, பல்வகை, புரிதல், புல்லா, புல்லாது, பெருநெறி, பாங்கன், மடிமை, மடன்மா, வரைதல், கொள்ப ஆகிய சொற்களையும் காண்க.

 

குறிலும் நெடிலும்

சங்க இலக்கியத்தில் குறில் ஒலியுடன் வரும் சொற்கள் நமது காலத்தில் நெடில் ஒலியுடன் வழக்கத்தில் உள்ளன. பழங்காலத்தில் வந்தனன், வந்தனர், வந்தனள் என்றால் இப்பொழுது நாம் வந்தான், வந்தார்கள், வந்தாள் என்று நீட்டு முழங்குவோம். அதாவது ஆன், ஆர், ஆள் விகுதி பிற்காலத்தில் அதிகம். இதை தொல். இல் நிறைய காணலாம்.

விழிப்ப, பொச்சாப்பு, பெருமிதம், மூவகை இவைகளும் தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளன. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

சிவண: இந்த ஒலி தொல்காப்பியரின் முத்திரை. சிவணல், சிவணிய, சிவணி, சிவணாது, சிவணும் போன்று 20க்கும் மேலாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் 27000 வரிகளில் மூன்று இடத்தில் மட்டுமே காணலாம். ஆக மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரு கைப்பட எழுதியவை என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

இதே போல காரணம், கருமம், வெறுப்பு, கல்வி போன்ற சொல் வழக்குகளும் குறளிலும் பிற்பட்ட நூல்களில்ம் மட்டுமே உள்ளதால் தொல்காப்பியரையும் அவர்களோடு வைத்தே காணவேண்டும்.

தொல். கூறும் ஔ, ஃ முதலியன சங்க இலக்கியத்திலும் பழைய கல்வெட்டிலும் இல்லை அல்லது குறைவு. இதுவும் அவரது காலத்தை கணக்கிட உதவும். தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?

சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இடைச்செருகல்கள் செய்துள்ளதாகவும் அவற்றை நீக்கி, புதிய உரையெழுத அறிஞர்கள் முன்வரவேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத மரபுகள், நான்கு வகைச் சாதியமைப்பு, மனு வர்ணாஸ்ரம முறைகள் தொல்காப்பிய உரைகளில் இடைச்செருகல்களாகப் புகுந்துள்ளன என்று சிலர் சொல்வது சரியா?

இவற்றைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் புகுத்தியதாகச் சொன்னால் அது அறியாமை; தொல்காப்பியத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டது என்றால் அது உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை; இதற்கும் அப்பால் தொல்காப்பியன் என்ற பிராம்மணன் தங்களுடைய நால் வர்ண முறையை தமிழர்களிடத்தில் புகுத்த முயற்சிசெய்து தோல்வியுற்றதாக ’தமிழக வரலாற்றை’ முதன்முதலில் எழுதிய கனகசபைப் பிள்ளை கூறியிருக்கிறார். இம்மூன்று கருத்துகளுமே விஷமத்தனமான, வேறோர் உள்நோக்கத்துடன் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்பாகும்.

இம்மூன்று கருத்துகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது ஓர் அபத்தம்; அதனால் இதை விடுத்துவிடுவோம்.

தொல்காப்பியத்தில் இவை இடைச்செருகல்கள் என்போர் மரபியல் என்ற அதிகாரமே இடைச்செருகல்தான் என்கிறார்கள். ஏனெனில், மரபியலில்தான் அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற வர்ண அமைப்பு வரிசை இடம்பெறுகிறது. அதில் வைசியன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற நூற்பா “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்பதாகும். மரபியல் முழுவதுமே இடைச்செருகல் என்று சொல்பவர்கள், குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்ற திணையடிப்படையிலான சமூக அமைப்புதான் தமிழர்களுக்குரியது என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதை ஒப்பிட்டு மரபியல் முழுவதுமே செயற்கையான ஒரு பிரிவினையைக் குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வகைப்பாடு மட்டுமே தமிழகத்தில் நிலவிற்றா? வேறு வகைப்பாடுகள் ஏதும் இருந்ததில்லையா? தன்மை அடிப்படையில் வெவ்வேறு விதமாக மக்கள் தொகுதியை வகைப்படுத்த முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைக்கும் வருவாய்த் துறையினர் ஊர்களை வகைப்படுத்துவது ஓர் அணுகுமுறை; அதாவது ஒரு வருவாய்க் கிராமம் என்பது விளை நிலங்கள் சார்ந்து ஆயக்கட்டை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ள வகைப்பாடாகும். உள்ளாட்சித் துறை வகைப்பாடு என்பது வேறு அணுகுமுறை; காவல்துறை தனது சரகங்களைப் பிரித்து வகைப்படுத்துவது என்பது வேறோர் அணுகுமுறை. இவற்றுக்கெல்லாம் வெவ்வேறு அளவுகோல்கள் உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களையே எடுத்துக்கொள்வோம். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள் கொண்டது; ஆனால், திருக்குறளோ அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளைச் சொல்கிறது. இதற்குக் காரணம் அவற்றின் பாடுபொருள் வேறுபாடுகள். இத்தகைய பாடுபொருள் வேறுபாட்டையொட்டியே வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பாடுபொருளுக்காகவே வகைப்பாடேயன்றி வகைப்பாட்டுக்காகப் பாடுபொருள் அல்ல. தொல்காப்பிய அகத்திணையியல் புறத்திணையியல் ஆகியவற்றில் காதலும் வீரமும் சொல்லப்படுகின்றன. மற்ற பல விவரங்களுக்கு விளக்கமளிக்க வேறு வகை அளவுகோல்கள் தேவை; அதன் அடிப்படையில் அவை வேறுவிதத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, போர் நடக்கும்போது அரசர்களுக்கிடையே ஒரு தூதுவன் சமாதானம் பேசச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அவனை அகத்திணையியலிலோ அல்லது புறத்திணையியலிலோ சொல்லப்படும் வகைப்பாட்டுக்குள் அடக்கி, அவனை ஆயனாகவோ, குறவனாகவோ, களமனாகவோ, நுளையனாகவோ, எயினனாகவோ சித்திரித்துவிட முடியுமா? அவனை ஒரு தூதுவனாகத்தான் சித்திரிக்க வேண்டும். ஏன், ஒரு அமைச்சரைப் பாடுபொருளாகக் கொண்டு விவரிக்க நேர்கையில் அகத்திணையியலோ அல்லது புறத்திணையியலோ நமக்குப் பயன்படாது. அதை விளங்கிக் கொள்ள நமக்கு மரபியல்தான் தேவை.

அகநானூற்றில் ஒரு பாடலைப் பாருங்கள்:

இவனே நெடுங்கொடி நுடங்கும் நியமமூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
யானே மீனெறி பரதவர் மகளே

- இந்த வர்ணனையில் இடம் பெருகிற தலைவனை அகத்திணையியல் புறத்திணையியல் வகைப்பாடுகளுக்குள் அடக்கி திணை சார்ந்த மக்கள் தொகுப்பின் பெயரைக்கொண்டு மட்டும் அடையாளங்காண இயலுமா? மரபியலில் தேரைப் பயன்படுத்துகிற உரிமை அரசர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாகச் சொல்லப்பட்டிருப்பதனால் இத்தலைவனை அரசன் என நாம் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு; அதேநேரம் நியமமூதூர் என்று இருப்பதனால் அத்தலைவன் ஒரு வைசியனாகவும் இருக்கமுடியும். மரபியலிலேயே தேர், ‘மன்பெருமரபின்’ ஏனோர்க்குமுரிய என்று சொல்லப்பட்டுள்ளதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். எனவே, ஒரு வைசியனும் தேரில் செல்லமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு மரபியலே பயன்படும். இப்படியான பயன்பாடுடைய மரபியலை இடைச்செருகல் என்று கூறுவது அபத்தமான ஒரு கருத்தாகும்.

அகத்திணையியலில்

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

புறத்திணையியலில்

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

கற்பியலில்

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே
’ என்றும்

பொருளியலில்

பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் இளம்பூரணர் தொடங்கி பழைய உரையாசிரியர்கள் அனைவரும் சரியான முறையில் விளக்கமளித்துள்ளனர். அவர்களெல்லாம் நம் காலத்திற்குச் சற்றொப்ப 700 ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்தவர்கள். இப்போது இருப்பதைவிட தமிழ்ச் சமூகம் அப்போது பழைய இலக்கியங்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளது. எனவே நாம் தற்கால சமூக நிலைமையைக் கருத்தில் கொண்டு இவற்றை இடைச்செருகல் என்பது அவ்வுரையாசிரியர்களின் புலமையைக் கேள்விக்குள்ளாக்குகிற செயலாகும்.

மரபியல் இடைச்செருகல் என்றால் இவற்றுக்கெல்லாம் விளக்கமளிக்க முடியாமல் போய்விடும். எனவேதான் கனகசபைப் பிள்ளை, பின்வருமாறு கூறுகிறார்: “நான் விவரித்துக்கொண்டிருக்கும் காலத்திற்கு, குறைந்தது ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்குள் குடியேறத்தொடங்கிய பார்ப்பனர்கள், தங்களின் சாதி முறையை தமிழர்களின் தலையில் கட்ட முற்பட்டனர். தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பார்ப்பனரால் கி. மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தற்போதும் வழக்கில் உள்ள முற்பட்ட தமிழ் இலக்கண நூலில், அறிவர் அல்லது ‘துறவி’கள் பற்றி அடிக்கடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து அவர் விவரிக்கின்ற அத்தியாயத்தில், நூலாசிரியர் அறிவர் பற்றி எதுவும் குறிப்பிடுவதை விட்டுவிட்டு, புனித நூல் (பூணூல்) அணிந்த பார்ப்பனரை முதல் சாதியாக வைக்கிறார். வீரர்கள் என்னாது, ஏதோ சேர, சோழ பாண்டியன் என்று மூன்றே அரசர்கள் ஒரு சாதியாகிவிட முடியும் என்பது போல, மிகுந்த எச்சரிக்கையுடன், அரசர்கள் எனப் புனித சாதியாகச் சொல்கிறார்; வணிகத்தைக் கொண்டு வாழ்ந்த அனைவரையும் மூன்றாவது சாதியாகச் சொல்கிறார். அரசர்களோ அல்லது வணிகர்களோ புனித நூல் அணிந்திருந்தார்களா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளர்களை மட்டும் தனிமைப்படுத்தி, நிலத்தை உழுவது தவிர அவர்களுக்கு ஒரு தொழிலுமில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களை சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களை சூத்திரர்களாகக் கருதவேண்டும் என்றும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கெளரவிக்கவேண்டும் என்றும் மறைமுகமாக, உட்கிடக்கையாகச் சுட்டுகிறார். இதுதான் தங்களின் சாதி அமைப்புக்குள் தமிழர்களைக் கொண்டுவர பார்ப்பனர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களது முயற்சி வெற்றிபெற சாத்தியமில்லாது போயிற்று. மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ, இன்றைக்கு வரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்.” (The Tamils, Eighteen Hundred Years Ago, V.Kanakasabhai, Pub: The South India Saiva Siddhanta Works Publishing Society, Tinnevelly, Ltd. 2nd edn. Sep., 1956, p.116.)

தொல்காப்பியர் ஒரு காவ்ய கோத்ர பிராம்மணர் என்று சொல்லக்கூடிய ஒரு மரபு உண்டு. காப்பியத் தொல்குடி [வரந்தரு காதை, வஞ்சிக் காண்டம் 82] என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியர் ஒரு பிராம்மணர் என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் தமிழ் மக்களிடத்தில் “பார்ப்பான் தமிழும் வேளாளன் க்ரந்தமும் விழ விழலே” [ரெவரண்ட் ஜெ.பி. ராட்லர் தமிழ் இங்லிஷ் அகராதி] என்றொரு பழமொழி வழங்கியுள்ளது. இதன் பொருளாக ராட்லர் குறிப்பிடுவது ”தொல்காப்பியன் என்ற பிராம்மணன் செய்த தமிழிலக்கணமும் அமரசிம்மன் என்ற சூத்திரன் செய்த நாமலிங்கானுசாசனம் என்கிற சம்ஸ்கிருத நிகண்டும் இல்லையெனில் தமிழ் மொழியும் வட மொழியுமே விழலுக்கிறைத்த நீராகப் போயிருக்கும்” என்பதாகும். அதே நேரத்தில் தொல்காப்பியர் சமணராக இருக்கலாம் என்பது வையாபுரிப் பிளளை போன்ற அறிஞர்களின் கருத்து. தொல்காப்பியர் சமணரோ பிராம்மணரோ, அவர் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கை முறைகளையும் வரையறைகளையும் இலக்கணமாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

தொல்காப்பியர் காலத்தில் இத்தகைய அமைப்பு இருந்ததற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லாதைப்போல சில ‘அறிஞர்கள்’ திரித்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் மரபியல் இடைச்செருகல் என்று கொண்டு அகத்திணையியலும் புறத்திணையியலும்தான் தமிழர் வாழ்வெனில், சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகச் சித்திரம் இவற்றுடன் முரண்படுவதாயிருக்கும்.

மதுரைக் காஞ்சியில்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்
’ [489-92] என்றும்,  அதேபோல,

நன்றும் தீதும் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீ இயுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
’ [497-499] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடலிலுள்ள அறங்கூறு அவைய உறுப்பினர்களும் காவிதி மாக்களும் அரசமைப்பு என்ற நிறுவனத்தையொட்டி உருவாகி வளர்ந்த வர்க்கத்தவர்கள். இவர்கள் திணை மக்களிடத்திலிருந்தே வந்தவர்கள்தான் என்றாலும் அவர்களின் திணைப் பெயரைத்தான் சொல்லவேண்டுமெனில் அவர்களின் பதவியை நாம் புரிந்துகொள்ள இயலாமல் போகும். எனவே அரசதிகாரம் சார்ந்து நாம் அவர்களை அறங்கூறு அவையத்தார் என்றும் காவிதி மாக்கள் என்றும்தான் அடையாளம் காட்ட முடியும். இதுபோன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள மரபியல்தான் நமக்கு உதவுகிறது.

புறநானூறு குறிப்பிடும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்பவர்கள் முல்லைத் திணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கொண்டு அவர்களை முல்லைக்குரியவர்களாக மட்டுமே கொண்டால், மருத நிலத்தில் நாம் காண்கிற பாணர்களை எப்படி விளக்கமுடியும். இவர்கள் தலை மககளுக்குப் பணி மக்களாக பணிபுரிந்த நிலையையும் நாம் பார்க்கமுடிகிறது. அப்படியானால் இந்த ஏற்றத்தாழ்வு தமிழ்ச் சமூக வளர்நிலையையொட்டி உருவாயிற்றா அல்லது வர்ணாஸ்ரம அமைப்பால் புகுத்தப்பட்டதா? புகுத்தப்பட்டது என்று சொன்னால், தமிழ்ச் சமூக அமைப்பே வர்ணாஸ்ரம அமைப்பால் உருவாயிற்று என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். சங்க இலக்கியத் தலைமக்களெல்லாம் வர்ணாஸ்ரமத்தினால் உருவானவர்கள் என்றாகிவிடும்.

தொல்காப்பிய அகத்திணையியலில் அன்பின் ஐந்திணை என்பது தலைமக்களுக்கு மட்டுமே உரியது என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. அடியோர், வினைவலர் ஆகிய பிரிவினர்களின் காதலை கைக்கிளை, பெருந்திணையில்தான் பாட வேண்டும் என்று தொல்காப்பியர் தெளிவாகக் கூறியுள்ளார். “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்.” மௌரியர்கள் ஆட்சியில் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை தாச, ப்ருத்ய என்ற இரு வகை அடிமைகளாகப் பணியமர்த்தினர் என்று தெரியவருகிறது. தாசர் என்பவர்கள் முழுமையான அடிமைகள். ப்ருத்யர் என்போர் நிபுணத்துவம் மிக்க பணியாளர்களாவர். அவர்களும் அடிமைகள் தானெனினும் அடிமைகளைவிடச் சற்றே மேம்பட்டவர்கள். அடியோர், வினைவலர் என்ற தொல்காப்பிய வகைப்பாடும் அத்தகையதே. சங்க கால அரசர்களிடையே போர்களே நடந்ததில்லை; போர்களில் யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை; அவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டோர் அடியோர்களாகவோ வினை வலர்களாகவோ பணியமர்த்தப்படவில்லை; அடியோர்களும் வினைவலர்களும் உருவாகவும் போர்கள் நிகழவும் காரணம் வர்ணாஸ்ரமமே என்று கொண்டால்தான் தொல்காப்பிய நூற்பாவுக்கு வேறுவிதமாக விளக்கம் கூறமுடியும்.

சோழர்கள் சூரிய குலம் என்றும் பாண்டியர்களும் சேரர்களும் சந்திர குலம் என்றும் உரிமை கொண்டாடும் மரபு மிகப் பழமையானது. சூரிய குலத்தவர்களும் சந்திர குலத்தவர்களும்தாம் க்ஷத்ரியர்கள். சந்திர குலத்தின் கிளைக் குலமாகிய யது குலத்தவர்களே வேளிர்கள். “நீயே வடபான் முனிவன் தடவினுட் டோன்றி” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல் [201] இதற்குச் சான்று. பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் மாண்ட வீரர்கள் தன் முன்னோரென்பதால் பெருஞ்சோற்றுப் பிண்டம் படைத்தான் என்பது புறநானூறு குறிப்பிடுகிற ஒரு செய்தியாகும். பாண்டவர் கௌரவர்களோடு தன்னை இணைத்து இனம் காட்டிக்கொள்வதற்காக ஆரிய பிராம்மணர் சொல்லிக்கொடுத்த பொய்யை ஏற்றுப் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இச்சடங்கைச் செய்தான் என்று சொல்வது நம்மை நாமே இகழ்ந்து கொள்ளும் முயற்சியாகும்.

இந்திய நாடு முழுவதும் அரச குலத்தவரிடையே மணவுறவு இருந்துள்ளது. இது ஒரு யதார்த்தம். மொழியியல் அடிப்படையில் வடமொழியை இந்தோ ஐரோப்பிய மொழியென்றும் தமிழை திராவிட மொழியென்றும் சொல்வதனாலேயே இவ்விரு மொழி பேசிய மக்கள் தொகுதிக்கும் பரஸ்பர உறவு இருந்ததில்லை; ஒன்று மற்றதன் மீது தனது பண்பாட்டைத் திணித்தது என்று கொள்வதெல்லாம் மிகப்பெரிய அபத்தம் என்பதை ரொமிலா தாப்பர் போன்ற  வரலாற்றாசிரியர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். உதாரணமாக, நாம் மேலே சொன்ன ‘காவிதி’ என்ற சொல்லாட்சி இலங்கைக் கல்வெட்டுகளில் கபதி (அ) கபிதி என்றும், பாலி மொழியில் கஹபதி என்றும், வடமொழியில் கிரகபதி என்றும் வழங்கி வந்துள்ளது. இப்படிப் பல சொற்கள் இந்திய அளவிலான பின்புலத்தைக் கொண்டவை. இவை குறித்து மொழியியல் அறிஞர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.

சங்கப் புலவரான கபிலர் ஓர் அந்தணர். அவர் பாரிவேள் என்ற சிற்றரசனைப் பாடி பரிசில் பெற்றுள்ளார். ஆனால் எந்த வேளிரும் வேந்தரும் பிறரைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்றதாக ஒரு சான்றுமில்லை. இது தொல்காப்பியர் கூறும் மரபுடன் எங்ஙனம் பொருந்துகிறது என்று பார்ப்போம்.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்

- என்ற தொல்காப்பிய வரிகளுக்கு இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள், அறுதொழில் செய்யும் அந்தணர்கள் என்றும் ஐந்தொழில் புரியும் அரசர்கள் என்றும் உரை கூறுகின்றனர். திருவள்ளுவரும்கூட அந்தணர்களை அறுதொழிலோர் என்கிறார். அறுதொழில்களாவன, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன. அரசர்களின் ஐந்தொழில்களாவன ‘ஏற்றல்’ என்பது தவிர்த்த மேற்படி ஐந்துமாகும். இது மேற்குறித்த தொல்காப்பிய மரபுடன் பொருந்தியிருப்பதை நாம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களுடைய கோட்பாடுகளுக்கு இசைவாக இல்லாதவற்றை இடைச்செருகல் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவினருமே தங்களுக்கு உடன்பாடாக இல்லாதவற்றை நீக்கவேண்டும் என்று கூறத் தொடங்கினால் ஒட்டுமொத்தமுமே இடைச்செருகல் என்றாகிவிடும்.

முக்கியமான ஒரு செய்தி. தொல்காப்பியர் தனது இலக்கண நூலை யாருடைய அங்கீகரத்திற்காகச் சமர்ப்பித்தார் என்பது பனம்பரனாரின் பாயிரத்தில் பதிவாகியுள்ளது. ஆசான் மரபினராகிய அதங்கோட்டு ஆசான் என்பவர்தான் தொல்காப்பியரைக் கேள்விகள்மூலம் சோதித்து இறுதியில் ஒப்புதல் வழங்கிய பெருமகனாவார். குமரி மாவட்ட அதங்கோட்டில் உள்ள சான்றோர் குலத்தவருள் ஒரு பிரிவினர் தங்களின் முன்னோரான அதங்கோட்டு ஆசானுக்கு இப்போதும் ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர். அவர்கள் மண்ணின் மரபுகளை அறியாதவர்கள் என்றோ, வர்ணாஸ்ரம மாயையில் சிக்கி இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றோ சொல்வது தமிழக வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிற ஒரு செயலாகும்.

கடைசியாக ஒரு வினா. ரசிகமணி டி.கே.சி. கம்ப ராமாயணத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பாடல்களை, அவற்றில் கம்பருடைய முத்திரை இல்லை என்று சொல்லி நீக்கிப் பதிப்பிக்க முயன்றபோது திராவிட இயக்கப் பகுத்தறிவு முகாமைச் சேர்ந்த பாவேந்தர் பாரதிதாசன் ”கம்பனில் கைவைக்க இந்தக் கொம்பன் யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதுபோலத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் என்றும், அதை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும் என்றும் சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களின் தகுதி என்ன? தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழாய்வில் என்னவும் செய்ய நினைப்பது ஓர் அராஜகம்.

http://solvanam.com/?p=5574

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Gopinath R

நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன் நற்றிணையில் இருந்து ஒரு பாடல் 367வது பாடல் காகம் கரைந்தால் விருந்தாளி வருவார் என்கிற நம்பிக்கையும் காகத்திற்கு சோறு வைப்பது முன்னோருக்கு வைத்ததாக கருதப்படும் என்கிற நம்பிக்கையும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்களிடம் நிலவி வந்தது அதற்கு எப்படியும் 2000 வயது இருக்கலாம் என்று அதே அர்த்தத்தில் இன்னொரு பாடல் இருக்கிறது குறுந்தொகையில் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எழுதியது.

"திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே."

திண்மையான தேரையுடைய நள்ளியின் கானகத்தில் மேய்க்கப்படும் பசுக்களின் பாலில் இருந்து எடுத்த நெய்யை சேரர்களின் தொண்டி என்னும் நகரத்தில் விளைந்த வெண்ணெல் அரிசி சோற்றுடன் கலந்து ஏழு பாத்திரத்தில் வைத்து படைத்தாலும் சிறியது தான் என் தோழியின் பருத்த தோள்கள் இளைக்குமாறு சென்ற தலைவர் மீண்டும் வருகிறார் என்று கரைந்த காக்கையே உனக்கான இந்த படையல்... இந்த பாடல் எழுதப்பட்டே குறைந்தது 1800 வருடங்கள் இருக்கும் நான் மீண்டும் மீண்டும் சொல்வது தான் நம் நம்பிக்கைகள், வழிபாடுகள், புராணங்கள், கற்பனைகள் எதுவும் திடீரென்று தோன்றியவை அல்ல காலம் காலமாக இந்த மண்ணில் முளைத்து கிளைத்தவையே..



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இன்னொரு இடம் ஒலி பற்றிய பகுதியில்

"சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே"



உந்திமுதலாத் தோன்றி உறழ்ந்தெழும் எழுத்துக்களுள் மந்திர

நூலோர் கொள்ளும் மாத்திரை மரபு வேறு உண்டு. அஃது
ஈண்டைக்கு வேண்டாமையான் செவிப்புலனாகப் பொருள்
உணர்த்தும் எழுத்துக்களுக்கே ஈண்டு அளபு கூறப்பட்ட
தென்கின்றது.

பொருள்:

சொல்லிய பள்ளி வளியின் எழுதரும் எல்லா எழுத்தும் =

மூவகையாய இடங்களினிடமாக நின்று ஓசைக் காற்றினான் எழும்
எனப்பெற்ற எல்லா எழுத்துக்களையும்
கிளந்து, பிறப்பொடு விடுவழி=

ஐவகை
உறுப்புக்களினிடமாகக் கிளந்து அவ்வவற்றின் பிறப்பியல்புகளோடு
செவிப்புலனாக வெளிப்படுத்துமிடத்து, 

அகத்தெழு வளியிசை உறழ்ச்சி
வாரத்து=

உந்தியினிடமாக அகத்தெழும் வளியிசை ஒன்றற் கொன்று
முரண்பட்டு வருதலை,

அரில்தபநாடி=

குற்றமற ஆராய்ந்து, 

அளபிற்கோடல்
அந்தணர் மறைத்தே = 

மாத்திரையான் அளவிட்டு மேற்கோடல்
நிறைமொழி மாந்தராகிய அந்தணரது மந்திரநூலின் கண்ணதாகும். 

அஃது
இவண் நுவலாது =

அம்மாத்திரையளவினை (இயற்றமிழ் எழுத்துக்களுக்கு
இலக்கணங் கூறும்) இந்நூலகத்துக்கூறாமல், 

எழுந்து புறத்திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே =

புறத்தே செவிப்புலனாக
எழுந்து தன் உருவந்தோன்ற இசைக்கும் எழுத்தோசைகளின்
அளவைகளையே யான் கூறியுள்ளேன்.

அதனை அந்தணர் மறைத்தே என்று கூறுகின்றார். வாக்குக்கு நான்கு நிலைகள் உள்ளன, 1 பரா 2 பச்யந்தி 3 மத்யமா 4 வைகரி. இந்த நான்காவதற்குத்தான் தான் இலக்கணம் வகுப்பதாகக் கூறுகின்றார்,வாக்கின் நான்கு நிலைகளை ரிக் வேதம் 
चुत्वारि वाक्परिमिता पदानि तानि विदुर्ब्राह्
मणा ये मनीषिणः।
गुहा त्रीणि निहिं नेङ्गयन्ति तुरीयं वचो मनुष्या वदन्ति ॥ ४५ ॥ 1-154-45
Four are the constituent parts of speech which the wise men of learning know. Three of them are hidden in the cave of the mind, they are neither analysed, nor defined, nor understood by ordinary speakers, only the fourth part of speech, or parole, they use in communication.
(The four constituents of the structure of speech are: Nama or substantive, noun, Akhyata or roots of verbs, Upasarga or affixes, and Nipata or irregular accepted forms. These four are the subjects for grammarians and linguists. For the ordinary person, speech is the whole language, just what it is, and accepted without the understanding of structure and grammar. Ata higher level, language is analysed in four layers of existence and consciousness: Para or transcendent language which is beyond thought and understanding. It may be regarded as the languagecorrespondence of the omniscience of God. The second Is Pashyanti, one step close to us from Para. This may be understood to be the language existing in the unconscious layers of the mind. The third is Madhyama, another step closer to our consciousness. Let us say it exists in our sub-conscious mind. And the fourth is Vaikhari, existing at our conscious level of the mind. This is the language in use. Further, this language is analysed into four constituents: Nama, Akhata, Upasarga and Nipata. And of this language too the ordinary speaker uses the accepted form without knowing the structure and grammar. For the ordinary speaker, the language in use is only behaviour purely at the natural and social level. And in yet another way, language may be understood in the way of the Veda: Ila, the language of omniscience, Sarasvati, the language of Veda and learning, Mahi, the spoken language at the level of the earth, nation, region, family and the mother. Another name for this speech is Bharati. And one thing more at the end of this note: This analysis and study is for the learned and for the seekers of learning. It has no value for the ordinary speaker. He or she speaks what is spoken for the only reason that he or she speaks thus, and what is spoken is understood.)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 தமிழ் எழுத்து தோன்றிய காலம்.


மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்-றிய மொழி தமிழ். இன்றைய மொழிக் குடும்பங்களில் தலைசிறந்த எட்டுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். உலக மொழிகள் அனைத்-துமே தமிழ் மொழியிலி-ருந்துதான் தோன்றின என்பது மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் கருத்து.

இந்நிலையில் தமிழ் மொழி எழுத்து கி.பி. 6_7ஆம் நூற்றாண்டுகளில் தோன்-றியது என்றும் அது செம்மையுற்றது சோழர்காலத்தில் என்றும் அண்மையில் மய்ய சாகித்ய அகாதெமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற பேரா. எஸ். செத்தார் என்ற கன்னட அறிஞர் கூறி-யது இந்து ஆங்கில நாளேட்டில் (8.05.2009) வெளி வந்துள்ளது. ஒரு மொழி அறிஞர் பிறமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் அறியாத பேராசிரியராக உள்ளது வியப்பாக உள்ளது. அதுவும் ‘சங்கம் தமிழகம்’ என்ற சங்கத்தமிழ் பற்றிக் கன்னட மொழி-யில் எழுதிய நூலுக்காக விருது பெற்றபின் இவ்வாறு கூறியிருப்பது விந்தையாக உள்ளது.

ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவரைக்கேட்டால் நம் ஊர் வையா-புரிப் பிள்ளையைத்தான் காட்டுவார். ‘தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்-டில் வாழ்ந்தவர் என்று அழுத்தம் திருத்தமாகக் (தமிழ்ச்சுடர் மணிகள், பக். 38) கூறியுள்ளார். ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்றுரைத்தான் ஒரு பேதை; (பாரதியார்) இந்தப் பேதையோ தொல்காப்பியர் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறியுள்ளார்.

மேல் நாட்டுத் தமிழறிஞரான டாக்டர். கமில் சுவலபில் கூட வையா-புரியாரின் வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டுதான் ‘தமிழ் எழுத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகிறார். இருப்பினும் பல்வேறு அறிஞர்களின் கருத்துகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் தீவிரமாக ஆராய்ந்து கி.மு. 100_க்கும் கி.பி. 250_க்கும் இடையில் தோன்றியது சங்க இலக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)” “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)” 

தமிழ்எழுத்து வரிவடிவத்தைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார். பழந்தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (கி.மு. 3_ 1ஆம் நூ) தொல்- காப்பியம் (கி.மு. 2_1 ஆம் நூ) சங்க இலக்-கியம் (கி.மு. _ 1 ஆம் நூ) அரிக்கமேடு (கி.பி. 1_ 2 ஆம் நூ) பிற்காலத் தமிழ் பிராமி கல்-வெட்டுகள் (கி.பி. 3 _ 4 ஆம் நூ) இவ்வளவு காலகட்டங்களை ஆய்வு செய்யும் சுவலெபில் மொத்தத்தில் சங்க இலக்கிய நூல்களின் காலம் (கி.மு. 1_கி.பி. 4 ஆம் நூ) என்ற முடிவுக்கு வருகிறார்.

சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி (இயக்-குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்துவெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஏகாதிபத்தியம் (2008) நூலில் சிந்து-வெளி முத்திரைகளைப்பற்றிய தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

“காட்டுமிராண்டிகளான ஆரியர் வருகைக்கு முன்னரே, இந்தியாவில் ஒரு தலை சிறந்த நகர நாகரிகத்தை உருவாக்-கியவர்கள் தமிழர்கள் என்பதும், அந்நாக-ரிகம் நிலவிய காலத்தே வழங்கப்பட்ட மொழி, எழுத்து பழந்தமிழ்க் குடும்-பத்தைச் சார்ந்தது என்பதும் அய்யத்-திற்கப்பாற்பட்ட உண்மைகளாகும். குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும்.

பேரா. செத்தார் அசோகர் கண்டு-பிடித்த பிராமி எழுத்துகளுக்கு முன் தென்னிந்தியாவில் எந்த மொழிக்கும் எழுத்து கிடையாது என்கிறார். அசோகரின் பிராமியை முதலில் கன்னடமும் தெலுங்கும் ஏற்றுக் கொண்-டன. கி.பி. 6ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் மொழி பிராமி வரிவடிவத்தை ஏற்றுக்கொண்டது என்கிறார் செத்தார். (The Tamil Script emerged during the pallava period) 6-7 Century and attained maturity under the cholas 

பிராமி வடிவத்தைப்பற்றி முனைவர் வாவூசி குறிப்பிடுவது வருமாறு:

ஆரம்ப நிலையில் பிராமி எழுத்து வடிவானது பழந்தமிழ் மொழிகளில் மிகப் பழைமையான தமிழ் மொழிக்காக உருவாக்கப்பட்டது. இவ்வரிவடிவின் ஆரம்ப நிலையே ஹரப்பா நாகரிக மக்கள் தங்களுக்குள் எழுதி வந்த எழுத்து வடிவமாகும். இத்தகு பிராமி வடிவத்தைப் பிற்காலத்தில் ஆரியமல்லா மொழியான பிராகிருதம் பயன்படுத்திக் கொண்டதால், தமிழ் மொழி தனக்-கென, வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டது. பிராமி வரிவடிவமானது சிந்து நாகரிக எழுத்து வடிவத்திலிருந்து வளர்ந்ததைப் பேரா. வேங்கடன் தெளிவு-படுத்துகிறார். எனவே பழந்தமிழ் மொழிக்-காக உருவாக்கப்பட்ட பிராமியின் ஆரம்பகால வடிவங்கள்தான், ஹரப்பா நாகரிக முத்திரைகளில் காணப்படு-கின்றன என்பது மிகச் சரியானதாகும்.

அஸ்கோ பர்போலா போலந்து, சோவியத் ஆய்வாளர்கள், திரு அய்ரா-வதம் மகாதேவன், ஹீராஸ் பாதிரியார், போன்றோர் “ஹரப்பா நாகரிக எழுத்து வடிவங்கள் பழந்தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் முனைவர் வாவூசி.

உண்மை இவ்வாறிருக்க பேரா. செத்தார் தமிழ் மொழி பிராமி வடி-வத்தைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில்-தான் முதல் முதல் பெற்றது என்று கூறி-யிருப்பது அவர் தம் மொழியறிவின்-மையைப் புலப்படுத்துகின்றது. இது- வேத-னைக்குரியதாகும்.

செத்தாரைப் போன்ற வேறு சில அறிஞர்கள் சிந்துவெளியில் காணப்-படும் முத்திரைகள் எழுத்து வடிவம் இல்லையென்ற கொள்கையைப் பரப்பி வருகின்றனர். ஃபார்மர் (கலிஃபோர்-னியா) விட்ஸெல் (யார்வேட் பல்கலைக்-கழகம்) என்பார் இக்கருத்தை வெளியிட, இதை மறுத்து அஸ்கோ பர்போலா (போலந்து) மெஸ்ஸிகோ விடேல் போன்ற அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

இவர்கள் அனைவருடைய கருத்து-களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘சிந்து-வெளி வரிவடிவங்கள் படிக்கக்கூடிய எழுத்துகளே என்றும், பெரும்பாலும் அவை திராவிட மொழியைச் சார்ந்-தவையே’என்றும் பேரா. முனைவர் அய்ராவதம் மகாதேவன் இந்து நாளிதழில் (மே 3, 2009) மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ஆணித்தரமான சில கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.

சிந்து வெளி முத்திரைகளிலுள்ளவை படிக்கக் கூடிய எழுத்துகளே. அவை பெரும்பாலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே.

அவை சிந்து சம வெளியில் பழக்கத்திலிருந்த திராவிட மொழியான பிராகுவி மொழியைச் சார்ந்தவையே.

ரிக்வேதத்தில் திராவிட மொழிச் சொற்கள் கடன் பெற்று சேர்க்கப்-பட்டுள்ளன.

பிராகிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளின் தொகுப்-புகள் (ஹன்டர், பர்லோ, மகாதேவன்) சிந்துவெளி முத்திரைகளில் காணப்-படும் மொழி திராவிட மொழி குடும்-பத்தைச் சார்ந்தவையே.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை யூரி வெலன்டினோவிச் (ரஷ்யா) வால்டர் ஃபேர் சர்விஸ் (அமெரிக்கா) போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு உலகளாவிய அளவில் தமிழ்மொழி சார்ந்த திராவிட மொழி எழுத்து வடிவத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற சூழ்நிலையில் கன்னடக் கிணற்றுத் தவளை தவறான கருத்தைத் தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியம் ‘வடுகர்’ என்று குறிப்பிடுவது (Vadugars are the inhabitants of present day Karnataka) கன்ன-டர்களையே என்று செத்தார் குறிப்பிட்-டுள்ளார். அதே சங்க இலக்கியம் வடுகரை ‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம் _ களிற்றியானை. பாடல் 107) (கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் என்று குறிப்பிடுகிறது. சங்ககால வடுகர்தான் ‘கல்லா நீண் மொழியினர்’ என்றால் 21 ஆம் நூற்றாண்டு வடுகரும் கல்லா நீண்மொழியர் தானோ-? அய்யத்திற்குரியதாக்கிவிட்டது செத்தாரின் கூற்று.

நன்றி: செந்தமிழ்செல்வி



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

திராவிடர்கள் யார்?

 
எழுதியவர்: சந்தானம் (லண்டன்) சுவாமிநாதன்brahmins 2
‘’ அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.                                                                                     இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு                                                                                     யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)
 ‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.                                                                                                               திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!
திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!
ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு”என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?
 சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!
நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!
Rahul_Dravid
கிரிக்கெட் ஆடும் திராவிடன்
கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிரமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.
 இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.
 உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.
 இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்டுள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்! உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.
veda[atasala
திராவிடாசாரியா
அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:
பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு  சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.
(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன் கர்நாடக என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)
அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:
திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.
 திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.
திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்
திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.
நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.
தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.
தென் இந்தியாவில் இருந்து வடகே போன எல்லோரையும் மதறாசி ( மட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.
3_veddahs
Picture of Veddahs (classified as Dravidas)
தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!
இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
 நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
 தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!
தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.
 திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிகும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லாவே இல்லை என்று சொல்லவே இவ்வ்வளவும் எழுதினேன்.
irula_snake_catching_thehindu_6-9-2009
 Picture of Irulas (classified as Dravidas)
வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லி குழப்புகின்றனர். தமிழர்களோ நாங்கள் குமரிக்கண்டவாசிகள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர். இவை சரியில்லை என்பதையும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு என்றும் என்னுடைய 575 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். சில கட்டுரைகளின் பெயர்களை மட்டும் கீழே காண்க:
விரிவஞ்சி இப்போதைக்கு இத்தோடு முடிக்கிறேன்.
 சந்தானம் சுவாமிநாதனின் முந்தைய கட்டுரைகள்:
1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு 11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature 21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 550 கட்டுரைகள்.
Pictures are taken from various websites;thanks.
swami_48@yahoo.com


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

திருவள்ளுவர் காலம் - தமிழக அரசு கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல்

 
தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம்
திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்
tn%2Bkural.png

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூலில்

//திருக்குறளும் பிறப்புகளும் ஆத்மாவும் என ஒரு 2000 ஆண்டுக்கு முன்பு; 3000 ஆண்டுக்கு முன்பு எனக் கூறுவது தான் வள்ளுவருக்கு பெருமை எனச் சிலர் எண்ணுகின்றனர்// 
அன்றைய நிலையில் புலவர் திருக்குறளை 600 வாக்கில் என்பதை ஏற்று எழுதியது, ஆனால் இன்று நடுநிலையாளர் ஏற்பது பொ.ஆ.800 வாக்கில் தான் திருக்குறள் இயற்றப் பட்ட காலம்.
tn%2Bkural1.png

tn%2Bkural1a.png

 

9780674059924.jpg
 
 (சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)
IMG_20180413_152041.jpg

IMG_20180413_152045.jpg

IMG_20180413_152048.jpg

IMG_20180413_152052.jpg

IMG_20180413_152057.jpg

IMG_20180413_152100.jpg

IMG_20180413_152104.jpg

IMG_20180413_152107.jpg

IMG_20180413_152111.jpg

IMG_20180413_152114.jpg

IMG_20180413_152118.jpg
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் 

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/kharoshthi.htm         முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர் 
கல்வெட்டியல் துறை

(தமிழி அல்லது தமிழ் பிராமி)
(பொ.ஆ.மு.5 - பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு)

சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன.

tamil_letters.png

சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிற பெயர்கள்:

இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ் பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு: வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. “தமிழி” யில் வர்க்க எழுத்துக்கள் இல்லை. கூட்டெழுத்து முறைகளும் உரசொலி எழுத்துக்களும் இல்லை. அதுபோல் தமிழ் எழுத்துக்களில் உள்ள ழ, ள, ற, ன வடிவங்கள் வட இந்திய பிராமியில் இல்லை. இந்தியாவில் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துகள் பிராகிருத மொழியில் (புத்த தர்மத்தை போதிப்பனவாக) இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்களை வட இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு இவை தமிழ் பிராமி அல்லது தமிழி என்று அழைக்கப்படுகிறது. இதை நாம் சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் என்றே அழைக்கலாம். அந்த எழுத்துக்களே இங்கு காட்டப்பட்டுள்ளன.

பெயர்க்காரணம்:

இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களில் பெரும்பாலும் பிராகிருத மொழி இடம்பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெறுகிறது. சில பிராகிருத வரிவடிவங்கள் (ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (த4 ம்மம் ஸாலகன்) மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத் தன்மைகள் காரணமாக சங்க காலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோக பிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்துமுகமாக வழங்கப்பெற்ற பெயரே “தமிழி” அல்லது “தமிழ் பிராமி” என்பதாகும். தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்திற்கு “தமிழ் பிராமி” என்று பெயரிட்டவர் ஐராவதம் மகாதேவனாவார். அதுபோல் “தமிழி” என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை “தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்” என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

சமண சமயத்தின் ரிஷபதேவருக்கு (முதல் தீர்த்தங்காரர்) இரு மகள்கள் என்றும் அவற்றுள் ஒருத்தி பெயர் “சுந்தரி” என்றும், இன்னொரு மகளின் பெயர் “பிராம்மி” என்றும் கூறி, சுந்தரி என்பது மொழியையும், பிராமி என்பது எழுத்தையும் குறிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இக்கருத்து பாகவதம் 5இல் விளக்கப்பட்டுள்ளதாகவும் கணேசன் கூறுகின்றார்.
இவ்வெழுத்துக்களின் தன்மை (Nature of Inscriptions)

nature_of_inscriptions.png
  • பழந்தமிழ் எழுத்துகள் சமணர்கள் வாழ்ந்த குகைகளிலேயே பெரும்பாலும் காணக்கிடைகின்றன.
  • பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.)
  • பொ.ஆ.மு.-பொது ஆண்டு (கி.பி.க்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது).
  • சமண குகைகளில் காணப்பட்டாலும் சமண சமயத்தைப் பற்றியோ அதன் கொள்கைகள் பற்றியோ குறிப்பிடவில்லை.
  • இவர்களுக்கு அமைத்துக் கொடுத்த இருக்கையும் அதனை அமைத்துக் கொடுத்தவர் பெயர் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் குறித்தே கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
  • அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன. ஸ, த3 போன்ற ஒரு சில பிராகிருத சொற்கள் இடம் பெறுகின்றன.
  • பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.
  • புலிமான் கோம்பை, தாதப்பட்டி, திண்டுக்கல், (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், பொற்பனைக்கோட்டை (புதுவை)) ஆகிய மூன்று இடங்களில் கிடைத்த 5 கல்வெட்டுகள் மட்டுமே நடுகற்களாகவுள்ளன. இவையே இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டதாக உள்ளன.
  • இதுவரை 32 இடங்களிலிருந்து 95 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.

 

சங்கத் தமிழ் எழுத்துப் பொறிப்பு பெற்ற கல்வெட்டுக்கள் கிடைக்கும் இடங்கள்

வ.எண்
அமைவிடம்
தாலுகா
மாவட்டம்
1
அய்யர்மலைகுளித்தலைகரூர்
2
அழகர்மலைமேலூர்மதுரை
3
அம்மன்கோயில் பட்டிஓமலூர்சேலம்
4
ஆனைமலைஎதுரைமதுரை
5
அரச்சலூர்ஈரோடுஈரோடு
6
அரிட்டாப்பட்டிமேலூர்மதுரை
7
எடக்கல்*வயநாடுவயநாடு (கேரளா)
8
ஜம்பைதிருக்கோயிலூர்விழுப்புரம்
9
கருங்காலக்குடிமேலூர்மதுரை
10
கீழவலவுமேலூர்மதுரை
11
கொங்கர்புளியங்குளம்திருமங்கலம்மதுரை
12
குடுமியாமலைஇழுப்பூர்புதுக்கோட்டை
13
குன்னக்குடிதிருப்பூர்சிவகங்கை
15
மாமண்டூர்செய்யாறுதிருவண்ணாமலை
15
மாங்குளம்எதுரைமதுரை
16
மன்னார்கோயில்அம்பாசமுத்திரம்திருநெல்வேலி
17
மருகால்தலைதிருநெல்வேலிதிருநெல்வேலி
18
மேட்டுப்பட்டிநிலக்கோட்டைதிருநெல்வேலி
19
முதலைக்குளம்உசிலம்பட்டிமதுரை
20
முத்துப்பட்டிமதுரைமதுரை
21
நெகனூர்பட்டிசெஞ்சிவிழுப்புரம்
22
புகலூர்கரூர்கரூர்
23
புலிமான்கேம்பைஆண்டிப்பட்டிதேனி
24
சித்தன்னவாசல்இழுப்பூர்புதுக்கோட்டை
25
தாதப்பட்டிஆண்டிப்பட்டிதேனி
26
திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளி
27
திருமலைசிவகங்கைசிவகங்கை
28
திருவாதவூர்மேலூர்மதுரை
29
தொண்டூர்செஞ்சிவிழுப்புரம்
30
வரிச்சியூர்மதுரைமதுரை
31
விக்கிரமங்கலம்உசிலம்பட்டிமதுரை
32
பொற்பனைக்கோட்டைபுதுக்கோட்டைபுதுக்கோட்டை

* தற்பொழுது இவ்விடம் கேரளாவில் உள்ளது. இது தொன்மைப் தமிழகப் பகுதியாகும்.
எடக்கல் கேரளாவில் (பழைய தமிழகத்தில்) உள்ளது. அதனால் சேர்க்கப் பெற்றுள்ளது.

காலம்: தோராயமாக (பொ.ஆ.மு. 500 - பொ.ஆ. 400)

பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டு (பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓட்டின் அடிப்படையில் இதன் மேலெல்லை பொ.ஆ.மு. 5ஆம் நூற்றாண்டெனத் தொல்லியலாளர் கா.ராஜன் (பேராசிரியர், வரலாற்றுத்துறை, பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி) அண்மைக் காலத்தில் காலத்தை குறித்துள்ளார். பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு வரை இவ்வெழுத்துக்கள் வழக்கிலிருந்துள்ளன. பிறகு இவ்வெழுத்துக்களே மாற்றம் பெற்று வட்டெழுத்துக்களாக வளர்ச்சியடைந்துள்ளன. அதற்கான தொடர்ச்சியான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனவே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் பொ.ஆ.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.4 ஆம் நூற்றாண்டு வரை என்று காலம் கணிக்கப் பெறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெயர்க்காரணம்:

பொதுவாக இந்தியாவில் முந்தைய காலங்களில் “பிராமி”, “கரோஷ்டி” என்ற இரு வகை எழுத்துக்கள் வழக்கத்திலிருந்துள்ளன என்பது 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில் “பிராமி” எழுத்துக்களே இந்தியா முழுவதும் நன்கு வழக்கத்திலிருந்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே பின்னர் வந்த பிராந்திய வரிவடிவங்கள் எழுச்சி பெற்று வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன என்பது பெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ள கருத்தாகும். “கரோஷ்டி” எழுத்துக்கள் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டுமே வழக்கத்திலிருந்துள்ளன. ‘பிராமி’ வடிவம் துவக்க காலத்தில் “லத்” அல்லது “லாட்” (lath or lat) என்றும், அசோக பிராமி என்றும், மௌரிய பிராமி என்றும், “இந்தியன் பாலி” என்றும், ‘தம்மலிபி’ என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. இப்பெயர் தூண் என்பதற்கு வழங்கப்படும் சொல்லின் அடிப்படையிலும், அரசர் பெயர் அடிப்படையிலும், அரச மரபு அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும், தர்மத்தை எடுத்துரைத்ததின் அடிப்படையிலும் அறியப்பட்டது. ஜேம்ஸ் பிரின்ஸெப் என்ற ஆங்கிலேயே அறிஞரே இவ்வெழுத்துக்களை முதன் முதல் (1837) படித்தறிந்ததோடு கிரேக்கம் போன்ற பிற மொழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு அந்தந்த எழுத்துக்களுக்கான ஒலிகளை நிச்சயித்த பெருமை பிரின்ஸப் அவர்களையே சாரும். வட இந்திய பிராமி கல்வெட்டுக்களை பட்டிபுரோலு கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு இவ்வெழுத்துக்களுக்கான ஒலிகளை பியூலரும் கணித்துள்ளார். இந்தியாவில் இருந்த புத்த, சமண சமய இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் இதற்கு “பிராமி” (1886) என்று பெயரிட்டவர் டெர்ரியன் -டி- லாக்கோப்பெரி என்ற பிரெஞ்சு அறிஞரே ஆவார். இப்பிராமி எழுத்து அவற்றை பயன்படுத்திய அரசுகளுக்கேற்ப “அசோக பிராமி”, “மௌரிய பிராமி”, “குப்த பிராமி”, “குஷான பிராமி”, “சாதவாகன பிராமி” எனப் பலவாறாக அழைக்கப் பெற்றுள்ளன. பிரம்மனிலிருந்து தோன்றியதால் “பிராமி” எனப் பெயர் பெற்றுள்ளது என்ற கருத்தும் உள்ளது, ஆனால் இன்று வரை “பிராமி” என்று பெயர் விவாதிக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது.

இவ்வெழுத்துக்களே தமிழ் மொழிக்கும் பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதற்கொண்டே (1903, 1906, 1924) அறியப்பட்டது. இவையே தமிழகத்தின் துவக்க எழுத்துக்கள் என்பதும் பல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழி:

இந்தியாவின் வடபகுதியில் அசோகன் கல்வெட்டுக்கள் அனைத்திலும் இருவிதமான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுவாக “தம்மலிபி” என்று பெயர் கூறப்படுகிறது. இருப்பினும் இவை பிராமி மற்றும் கரோஷ்டி வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இடமிருந்து வலமாக எழுதும் எழுத்து முறை பிராமி என்றும், வலமிருந்து இடமாக எழுதும் எழுத்து முறை கரோஷ்டி என்றும் சமாவயங்க சுத்த, பண்ணவாந சுத்த போன்ற சமண நூல்களும், லலிதவிஸ்தரா (64) என்ற பௌத்த நூலும் தெரிவிக்கின்றன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது சமண நூலே ஆகும். இது பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவைகள் குறிப்பிடும் எழுத்து வகைகளுள் பிராமி, கரோஷ்டி போன்றவை இடம்பெறுவது போல் “தாமிலி” என்பதும் குறிப்பிடப்பெற்றுள்ளது. தமிழ் மொழியின் “ழ”கரத்தின் சரியான உச்சரிப்பினை வடமொழியினர் அறிந்திலர். எனவே தமிழி என்பதற்குப் பதிலாக “தாமிலி” என உச்சரித்திருக்கலாம். அசோகரது கல்வெட்டுக்களிலும் கூட “சோழர்” என்பது “சோடா” என்றே குறிக்கப்பட்டுள்ளது. எனவே பிராமி என்ற பெயர் வழங்கப் பெற்ற அதே கால கட்டத்திலேயே “தமிழி” என்ற பெயரும் வழக்கில் இருந்துள்ளது இங்குச் சுட்டத்தக்கது. கரோஷ்டியும், பிராம்மியும் வேறு இரு எழுத்துக்களாகும். அசோகர் காலத்திற்கு முற்பட்டதாகக் கருதத்தக்க அளவில் பட்டிபுரோலுவில் (ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டம்) கிடைத்த எழுத்திற்கும் தமிழகத்தில் உள்ள எழுத்திற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும் அவைகளுக்கிடையில் பலவகையில் ஒற்றுமைகள் உள்ளன. ஆதலால் “பிராமி” என்ற எழுத்துக்களைத் தமிழில் “பிராமி” என்று அழைப்பது சரியா? என்று சிந்தனை செய்யவேண்டும். சமண நூலில் காணப்படுவது போல “தமிழி” என்ற பெயர் தான் சரியானது என நாகசாமி குறிப்பிடுகின்றார். தமிழகத்தைச் சேராதவர்கள் அவர்களின் மொழி மரபிற்கு ஏற்றவாறு “தாமிழி” என்று கூறியிருக்கலாம் எனினும் சிலர் இவை குகைகளில் மட்டும் இருப்பதால் இவற்றை “லேனா” எழுத்துக்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

திராவிடி:

சுமார் 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் லலிதவிஸ்தரம் என்ற நூலில் 64 வகையான எழுத்துக்களுள் ஒன்றாக “திராவிடி” குறிப்பிடப் பெறுகிறது. திராவிடி என்னும் பிற்காலப் பெயர் பண்டைய தமிழ் எழுத்தான தமிழுக்குப் பொருந்தாது. இவை பொ.ஆ. 5-6ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த தெலுங்கு, கன்னடம், கிரந்தம் ஆகிய எழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என நாகசாமி கருதுகின்றார். 

திராவிட தேசத்தில் வழங்கிய எழுத்து என்ற பொருளில் “திராமிளி” என்று பெயர் பெற்றது எனக் கருதலாம். அதனையே சிலர் “திராவிடி” என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு இந்நான்கு மொழிகளையுமே திராவிட மொழிகள் என இன்று அழைக்கின்றோம். இவை நான்கும் ஒன்றாய் இருந்த காலத்தில் வழங்கிய எழுத்துக்களையே “திராவிடி” என்று குறித்திருப்பதாகக் கருதலாம். இவற்றால் நாம் அறியும் உண்மை, பொது ஆண்டிற்கு முன்பும் (BCE), பின்பும் (CE) சுமார் 300 ஆண்டுகள் வரையிலும், இந்தியாவில் வழங்கிய மொழிகள் இரண்டே, ஒன்று பிராகிருதம், மற்றொன்று தமிழ். இவை வடமொழி, தென்மொழி என்று பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்தியா மிகப்பரந்த நிலப்பகுதியைக் கொண்டுள்ளதால் “பிராகிருதம்’ அவ்வப்பகுதிகளுக்கேற்ப பாஞ்சாலி, மாகதி, சூரசேனி, மைதிலி, அவந்தி, மகாராஷ்ட்ரீ போன்ற பல பெயர்களுடன் சிற்சில வேற்றுமைகளுடன் தொடங்கி காலப்போக்கில் பல மொழிகளாகப் பிரிந்து வளர்ந்தது. தமிழ் நாட்டில் தமிழ் சிறந்து விளங்கிற்று. தமிழ் நாட்டிற்கு வடக்கே வாழ்ந்தவர்கள் தமிழ் மொழியைத் “தாமிழம்” என்றே வழங்கினர். பிராகிருத மொழியில் “ழ” இல்லாததால் அதனை “திரமிலம்” என்றே குறித்துள்ளனர். இதனேயே சிலர் திராமிலம், “திராவிடம்” என்றெல்லாம் குறிப்பார்கள். தொடக்க காலத்தில் நிலவிய இரு பெரும் நாகரிகங்கள், பிராகிருத நாகரிகமும் தமிழ் நாகரிகமுமே ஆகும். எனவே தமிழ் மொழியைத் “தாமிழி” என்று வட மொழியினர் அழைப்பது நியாயமே. தாமிழியை மிகச் சரியாக கூறவேண்டுமானால் “தமிழ்” என்றே கூறலாம்.

தென் பிராமி:

அசோகர் காலத்திற்குப் பின்னர் தமிழகத்தையும் ஆந்திர மாநில பட்டிபுரோலுவையும் தவிர்த்த தக்காணப் பகுதியில் வழங்கிய பிராமியே “தென் பிராமி” என அழைக்கப்பட்டது என ஐராவதம் மகாதேவன் கூறுகின்றார். தென்னகத்தில் குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருக்கும் பட்டிபுரோலு என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் வரி வடிவத்தில் அசோகர் கல்வெட்டுக்களில் கிடைத்த வரிவடித்திலிருந்து சில மாற்று வடிவங்களைப் பெற்றுத் திகழ்வதின் அடிப்படையில் இவை “தென் பிராமி” என்றும் வட இந்தியாவில் கிடைப்பவை “வட பிராமி” என்றும் அழைக்கப்படுகிறது என கா.ராஜன் குறிப்பிடுகின்றார்.

சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300):

மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரிவடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப் பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரி வடிவங்களாக கருதப் பெற்றது. ஒரு மொழிக்கு இரு வேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. வட இந்தியாவில் அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு படித்துணரப்பட்ட “பிராமி” வரிவடிவத்திலிருந்தே தமிழ் வரிவடிவமும், வட்டெழுத்து வரிவடிவமும் தோன்றின என்பதை ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் டி.ஏ.கோபிநாதராவ் தி.நா.சுப்பிரமணியன் போன்றோர் நிறுவியபோதிலும் தமிழகத்தில் கிடைத்த சங்க காலக் (தமிழி) கல்வெட்டுக்களின் தனித்தன்மையினை அக்காலத்தில் அறிய இயலாது போயிற்று.

பிராமியின் தோற்றம் குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள்:

  • ஐராவதம் மகாதேவன் இவ்வெழுத்துகள் வட இந்திய அசோக பிராமியிலிருந்தே தோன்றியது என்கிறார். சமயங்களின் சமண, புத்த மதத் தாக்கத்தின் விளைவாகத் தமிழகத்திற்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். மேலும், இதன் மேலெல்லைக் காலம் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டு என்பது இவரது காலக்கணிப்பு.
  • மகாதேவன் அவர்களது காலக்கணிப்பைக் குறித்து அவரது நூலை மதிப்புரை செய்த பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களது கருத்து இங்குச் சுட்டத்தக்கது.

     

  • முதலில் குறிப்பிட வேண்டிய சிறப்பு ஆசிரியரின் காலக்கணிப்பு. தமிழ் பிராமி எழுத்துக்களின் மாற்றங்களை விரிவாகப் பகுப்பாய்வு செய்து அவற்றுடன் அகழாய்வுகளில் கிடைத்த எழுத்துக்கள் இந்தியாவில் பிற இடங்களிலும் இலங்கையிலும் கிடைத்த பிற பிராமி எழுத்துக்கள் ஆகியவற்றுடன் ஒப்பீட்டாய்வு செய்து எல்லாக் கல்வெட்டுகளுக்கும் காலத்தைக் கணித்து வரிசைப்படுத்தியுள்ளார். இந்தக் காலப் பாகுபாடு அறிவியல் கன்ணோட்டத்துடன் இக்கல்வெட்டுகளை அணுகுபவர்கள் யாவரும் பெரும்பாலும் ஏற்கத்தக்கதாகவுள்ளது. எனவே எ.சுப்பராயலு அவர்களும் இக்காலக் கணிப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பது தெளிவு. 
  • இவ்வரிவடிவம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் இரா.நாகசாமி, நடன காசிநாதன், கே.வி.ரமேஷ், எம்.டி.சம்பத், கா.இராஜன், சு.இராசவேலு போன்ற அறிஞர்கள் மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையில் கல்வெட்டு எழுத்தமைதி மற்றும் சமூக பண்பாட்டுச் சூழலின் அடிப்படையில் பழந்தமிழ் எழுத்துக்கள் அசோக பிராமிக்கு முற்பட்டது என்று உரைக்கின்றனர்.

     


    கே.வி.ரமேஷ் இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள முஸ்லீம்கள் அல்லாத நாடுகளிலும் வழங்கிய எழுத்துக்கள் “பிராமி” என்ற எழுத்துக்களிலிருந்தே தருவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராமியானது எவ்வித கலப்புமில்லாத ஆரம்ப நிலையில் உள்ளது (rudimentary & primitive). இதிலிருந்தே தமது பகுதி மொழிக்கேற்ப எழுத்து நடைகளை மாற்றி அவ்வப்பகுதியிலுள்ள மொழி வல்லுநர்கள் அசோக பிராமி அல்லது மௌரிய பிராமி, குஷான பிராமி, சாதவாகன பிராமி, தமிழ் பிராமி எனப் பலவாறாகப் பகுத்துள்ளனர் என்று குறிப்பிடுவதுடன் தமிழ் நாட்டுக் குகைகளிலுள்ள முற்கால பிராமி (early Brahmi) எழுத்துப்பொறிப்புக்கள் கி.மு 4ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது என உரைக்கிறார். மேலும் இவர் அசோகர் காலத்து (மௌரியர் காலம்)மக்கள் நன்கு எழுத்தறிவைப் பெற்றிருந்தனர் என்றும் கூறுகின்றார்.

    எம்.டி.சம்பத் : கி.மு 5-4ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தோ ஆரியர்களின் புலப்பெயர்ச்சியின் காரணமாக இலங்கையில் வரிவடிவம் உருவானது. இலங்கை பிராமி வடிவம் தொடக்க நிலை அடிப்படைக் கூறுகளைக் கொண்டு விளங்குகிறது எனக் கருத்துரைத்துள்ளார்.

    கா.ராஜன்: தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பாக மண்ணடுக்காய்வின் அடிப்படையில் தமிழ் பிராமியின் காலத்தை அசோகர் காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்கிறார்.

    சு.இராசவேலு: அசோகர் காலத்தில் இந்தியாவில் மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ, அர்ரியன் போன்ற அயல்நாட்டார் குறிப்பின் அடிப்படையில் கூறுகின்றார். “அசோக பிராமி” எழுத்துக்கள் ஒழுங்கான அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. முழுமை பெற்ற அமைப்புடையனவாக விளங்குகின்றன. மேலும், ஓர் எழுத்தே பல்வேறு வகையில் எழுதப்பட்டுள்ளது. எனவே அசோகர் காலத்திற்கு முற்பட்டே இந்தியாவில் எழுத்துக்கள் இருந்துள்ளது என்று கூறுகின்றார். அசோகர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் அரசரின் ஆணைகளாகவே உள்ளன என்று உரைப்பதுடன் அசோகர் காலத்திற்கு முன்பே (கி.மு.400) தமிழகத்தில் பொதுமக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அழகன் குளம் மற்றும் பிற அகழாய்வுகளில் கிடைத்த மட்கலங்கள் மூலம் விளக்குகின்றார்.

    சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் அசோகர் பிராமிக்கு முற்பட்டது என்பது இவர்களது பொதுவான கருத்தாகும். ஆயினும் இதன் தோற்றம் குறித்து இவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். எம்.டி.சம்பத், கே.வி.ரமேஷ் ஆகிய இருவரும் ‘பிராமி’ என்ற வரிவடிவத்திலிருந்து இலங்கை எழுத்துக்களும் இந்திய எழுத்துக்களும் தருவிக்கப்பட்டன என்பதை ஏற்கின்றனர். நடன காசிநாதன் மற்றும் சு.இராஜவேலு ஆகியோர் தொன்மைத் தமிழ் எழுத்துக்களிலிருந்தே (தமிழி) பிற வட இந்திய, இலங்கை எழுத்துக்கள் தோற்றம் பெற்றிருக்கும் எனக் கூறுகின்றனர். கா.இராஜன் இதன் தோற்றம் குறித்து அதிகம் பேசவில்லை.

    அண்மையில் நடந்து வரும் ஆய்வுகளின் மூலம் சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடே என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிந்துவெளி காலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்கள் பகுதி சித்திர எழுத்துக்களாகவும் பகுதி ஒலி எழுத்துக்களாகவும் இருக்கக்கூடும் என்பது தொல்லெழுத்து வல்லுநர்களின் கருத்து. சிந்துவெளி எழுத்திலிருந்துதான் “பிராமி எழுத்துக்கள்” தோன்றின என்று கன்னிங்ஹாம் போன்ற சில அறிஞர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி எழுத்துக்களின் தன்மையைக் நோக்கினால் அவற்றிலிருந்து உயிர்மெய் வகையைச் சார்ந்த (voweled consonant) பிராமி எழுத்துக்கள் தோன்றி இருக்க முடியாது என்றும் பிராமி எழுத்துக்கள் வடசெமிடிக் (அராபிய) எழுத்துக்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டன என்றும் இது பொ.ஆ.மு. 700இல் தோன்றியிருக்கக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலில் பிராமி எழுத்துக்களும் வலமிருந்து இடமாகவே எழுதப்பெற்றுள்ளது. “ஏரான்” என்ற இடத்தில் கிடைத்த ஒரு காசில் “தம்பலஸ” என்று எழுதப்பெற்றுள்ளது. இதுவே நமக்குக் கிடைத்துள்ள பிராமி எழுத்துக்களில் மிகவும் தொன்மையானதாகும். இது வலமிருந்து இடமாக எழுதப்பெற்று பின் இடமிருந்து வலமாக எழுதப்பெற்றுள்ளது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அராபிய எழுத்துக்களிலிருந்து பிராமி தோன்றியது என்றால் அராபிய எழுத்துக்களே பிராமியாக மாறிவிட்டன என்று பொருள் அல்ல. சில எழுத்து ஒற்றுமையைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு ஏற்ப அராபிய எழுத்துக்களை அறிந்தவர்கள் இவ்வெழுத்துக்களைத் தோற்றுவித்தனர் என்பதே பொருள். “பிராமி” தோன்றிய பொழுதே தமிழி எழுத்துக்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இங்கும் அராபிய எழுத்துக்களுக்கான கருத்துக்களை ஏற்றுத் தமிழ் மொழிக்கு ஏற்ப ழ, ள, ற, ன என்ற சிறப்பு ஒலிகளுடன் தமிழ் மொழி வல்லுநர்கள் தோற்றுவித்தனர் என்று கொள்வதும் பொருந்தும். இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் இடமிருந்து வலமாகவே எழுதப்பெற்றுள்ளன. ஆதலின் இவை பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையதாகக் கொள்வதில் தவறில்லை என கா.ராஜன் கூறுகின்றார். 

    எழுத்து வகை (உயிர் மெய் வரை):

    புள்ளியில்லா உருவே அகரமோடு கூடி, அதே உருவாகவும் ஏனைய உயிரோடு சேரும்போது உருபு திரிந்தும் தமிழ் எழுத்துக்கள் வழங்குகின்றன என்பதைத் தொல்காப்பியத்திலிருந்து அறியலாம். ஆதலின் இதை உயிர்மெய் வகை (voweled consonant) என்று அழைத்தல் வேண்டும்.





__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  • ஆய்வறிஞர்களின் மொழி பற்றிய கருத்துகள்:

    தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வழங்கிய மொழி பிராகிருதம் என்று தொடக்கக்காலக் கல்வெட்டியல் அறிஞர்களான வெங்கையா, கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர் கருதினர். முதன் முதல் இக்கருத்தை மாற்றி அதைத் தமிழ் என்று உணர்த்தியவர் கே.வி.சுப்ரமணிய அய்யர் ஆவார். இக்கருத்தை ஐராவதம் மகாதேவன் தமது நூல் வாயிலாக மேலும் உறுதி செய்துள்ளார். இன்று தமிழகத்தில் கிடைத்துள்ள தமிழ் பிராமி (பழந்தமிழ்) கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இக்கல்வெட்டுக்களில் 25% பிராகிருதச் சொற்கள் கலந்துள்ளன. இப்பிராகிருத சொற்கள் வட இந்தியாவில் அக்காலத்தில் பொதுவாக கல்வெட்டுகளில் வழங்கிய பிராகிருத மொழியோடு தொடர்புடையது என்பது சுப்ரமணியன் அவர்களின் இன்னொரு கண்டுபிடிப்பு ஆகும். அசோகர் கல்வெட்டுக்களில் வழங்குவது போல் தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் கிழக்கிந்திய பிராகிருதத்தின் தாக்கம் அதிகம் இல்லை. இவை சமணச் சார்புடையனவாக இருந்தமை இதற்கு காரணமாகலாம் என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்தும் முக்கியமானது.

    கண்டுபிடிப்புக்கள்:

    “தமிழி” எழுத்துக்களை 1903இல் திரு.வெங்கோபராவ் முதன் முதல் கீழவளவு என்ற இடத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார். 1906இல் மறுகால்தலை என்ற இடத்தில் எல்.எ.கெமைடு (L.A.Cammiade) அவர்கள் ஒரு கல்வெட்டையும் அதே ஆண்டில் பிரான்சிஸ் (W.Francis) மற்றொரு கல்வெட்டையும் கண்டுபிடித்தார். அதன் பிறகு ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல் முதலிய இடங்களில் சில கல்வெட்டுக்களை ச.கிருஷ்ண சாஸ்திரியும், கே.வி.சுப்பிரமணிய அய்யரும் கண்டுபிடித்தனர். அதன் பின்பு திருச்சி, மாமண்டூர் முதலிய இடங்களிலும் சில கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அறச்சலூரில் (அறச்சாலையூர்) ஒரு கல்வெட்டை மயிலை சீனி வேங்கடசாமி, செ.இராசு ஆகியோர் கண்டுபிடித்தனர் (1960). 1966இல் ஐராவதம் மகாதேவன் திருவாதவூரில் மற்றொரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பல அறிஞர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இன்று இதன் எண்ணிக்கை 94 ஆகும்.

    இது போன்று பல இடங்களிலும் தமிழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் இவ்வெழுத்துக்களை முறையாகக் படிக்கும் முயற்சி 1910ஆம் ஆண்டிற்குப் பின்னரே தொடங்கியது எனலாம். 1906இல் கண்டுபிடிக்கப்பட்ட மறுகால்தலை கல்வெட்டு 1910ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையிலேயே (ARE), வெளிவந்துள்ளது.

    வட இந்திய பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் கிடைத்ததை அறிந்த அறிஞர்கள் அதைப் படிப்பதில் ஆர்வம் கொண்டனர். இதைத் தொடர்ந்து கே.வி.சுப்ரமணிய அய்யர், எச்.கிருஷ்ண சாஸ்திரி, வெங்கோப ராவ், வெங்கையா போன்றோர் இதில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாக புதிதாகக் கண்டுபிடிக்கப் பெறும் தமிழி கல்வெட்டுக்கள் ஆண்டுதோறும் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவர ஆரம்பித்தன. 1924ஆம் ஆண்டிற்குள் 12 இடங்களிலிலிருந்து 32 கல்வெட்டுக்கள் வெளிவந்தன. இதனைக் கொண்டே கே.வி. சுப்ரமணிய அய்யர் 1924இல் இவ்வெழுத்துக்கள் தமிழ் மொழியைச் சார்ந்ததே என உறுதிப்படுத்தினார். 1882இல் இராபர்ட் சீவலாலும், 1906இல் டபிள்யு.ஃபிரான்ஸிஸாலும் கண்டுபிடிக்கப்பட்ட மாங்குளம் கல்வெட்டு 1965இல் தான் முழுமையாகப் படித்துணரப்பட்டது. இதில் பாண்டிய அரசர் நெடுஞ்செழியன் பெயர் உள்ளதை முதன் முதலில் கண்டறிந்த பெருமை ஐராவதம் மகாதேவனையே சாரும். அண்மைக் காலத்தில் (2006) இக்கல்வெட்டுக்கள் நடுகற்களிலும் நெடுநிலைக்கற்களிலும் இருப்பதைப் புலிமான் கோம்பை மற்றும் தாதப்பாட்டியில் கிடைத்த கல்வெட்டுக்கள் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முனைவர் பட்ட மாணவர்கள் வி.பி.யதீஸ்குமார் மற்றும் எஸ்.செல்வக்குமார் ஆகியோர் கண்டறிந்தனர். இக்கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு செய்த கா.ராஜன் தமது கருத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார். கல்வெட்டுக்களில் மட்டுமின்றி பானை ஓடுகளிலும் காசுகள், முத்திரைகள் மற்றும் மோதிரங்களில் இருக்கும் எழுத்துக்களையும் கண்டறிந்தனர். இவ்வகையில் பானை ஓடுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப்பொறிப்புகள் முதன் முதலில் மார்டிமர் வீலர் நிகழ்த்திய அரிக்கமேடு அகழாய்வின் மூலம் அறியப் பெற்றுள்ளன. அதுபோல் காசுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகளை முதன் முதலில் 1985இல் காசுகளில் கண்டு வெளியிட்டவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆவார். இவர் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய பாண்டிய மன்னர் பெருவழுதியின் காசுகளைக் கண்டுபிடித்து படித்து தமிழக எழுத்தியல் வரலாற்றுடன் நாணய வரலாற்றிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து 1987இல் சேர மன்னர் கொல்லிப் புறை காசுகளைக் கண்டுபிடித்து சேர வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர் ஆர்.நாகசாமியாவார். இவ்வெழுத்துக்கள் முத்திரைகளில் இருப்பதை 1981இல் “கோவேத” என்று தமிழ் பிராமியில் எழுதப்பட்ட ஆனைகொடை (இலங்கை) முத்திரைக் கொண்டு இந்திரபாலாவும் பொ.ஆ. 2000இல் “தீயன்” என்ற தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பை மோதிரத்தில் சங்கரன் ராமனும் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இவ்வெழுத்துக்களைக் கண்டறிந்து படித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அனைத்து அறிஞர்களின் செயல்களும் மிகவும் போற்றுதற்குரியதாகும். அவற்றுள் மிகவும் முக்கியமான பங்களிப்புகள் பின்வருமாறு.

    சங்ககாலத் கல்வெட்டுக்களைப் படித்ததில் அறிஞர்களின் பங்களிப்பு

    வெங்கையா

    அசோகர் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி வரிவடிவத்துடன் ஒப்புநோக்கி இவை பிராமி வரிவடிவத்தை ஒத்துள்ளன என்ற கருத்தை வெளியிட்டவர்.

  • 1906இல் மறுகால்தலைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து அதைப் படிக்க முயற்சித்தார்.
  • கல்வெட்டு மொழி பாலியாக இருக்க வேண்டும் எனக் கருதினார்.

    கே.வி.சுப்ரமணிய ஐயர்

  • 12 இடங்களில் கிடைத்த 30 கல்வெட்டுக்களைக் கொண்டு தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பு எழுத்துக்களான “ழ” “ற” “ன” போன்றவற்றை தமிழ் எழுத்துக்கள் தான் எனச் சரியாக ஊகித்தார்.

     

  • 1924இல் சென்னையில் நடந்த மொழியியல் மாநாட்டில் முதன் முதலாக இவை தமிழ் மொழியைச் சேர்ந்தவையே என ஆணித்தரமாக உரைத்தார்.

     

  • இதனால் இவர் “தமிழ் பிராமியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.

     

    எச்.கிருஷ்ண சாஸ்திரி

  • தமிழின் சிறப்பு எழுத்தான “ள”வை சரியாக ஊகித்தது.
  • பழந்தமிழை (தமிழ் பிராமி) இலங்கை பிராமியுடன் ஒப்பிட்டு இப்பிராமி தென்னந்திய சாயல் ஒத்திருப்பதாகத் தெரிவித்தது.

    தி.நா.சுப்பிரமணியன்

  • 1938இல் பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற நூலை வெளியிட்டார்.
  • பட்டிபுரோலு பிராமி வரிவடிவத்திற்கும் பிராமி வரிவடிவத்திற்குமிடையே காணப்பெற்ற ஒற்றுமையை முதன் முதலில் கண்டுபிடித்து வெளியிட்டார்.

    ஐராவதம் மகாதேவன்

  • தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படும் இடங்களுக்கு நேரில் சென்று 1965இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுக் கருத்தரங்கில் படித்த கட்டுரைகளைத் தொகுத்து 1966இல் Corpus of Tamil Brahmi Inscriptions என்ற நூலை வெளியிட்டார்.
  • 1906இல் கண்டறியப்பட்ட மாங்குளம் கல்வெட்டை 1966இல் முழுமையாகப் படித்துப் பொருள் கூறினார்.
  • மாங்குளம் கல்வெட்டில் நெடுஞ்செழியன் மற்றும் “வழுதி” என்ற சங்க காலப் பாண்டிய மன்னரின் பெயரைக் கண்டறிந்தார்.
  • புகளூர் தமிழ் பிராமி கல்வெட்டைப் படித்து அவற்றில் சேர மரபைச் சார்ந்த ஆதன், இரும்பொறை ஆகிய மன்னர்களின் பெயர்கள் இடம்பெறுவதை முதலில் கண்டறிந்தார்.
  • எடக்கல் கல்வெட்டிலுள்ள கடுமிபுதச் சேர என்ற எழுத்தை 1995இல் சரியாகப் படித்தார். இதுவே கேரளம் உள்ளிட்ட பண்டைத் தமிழகத்தில் ‘சேர’ என்ற குலப்பெயரைச் சுட்டும் ஒரே சங்க காலத் தமிழ் கல்வெட்டாகும்.
  • கல் எழுத்துப் பொறிப்புகளுடன் பானை ஓடுகள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவை அனைத்திலும் உள்ள எழுத்துக்களைத் தெளிவுற ஆராய்ந்து அவற்றில் எழுத்து முறை, வரிவடிவம், மொழியியல் அமைப்பு, சமூகக் கட்டமைப்பு போன்றவற்றைத் திறம்பட ஆராய்ந்ததுடன் பழந்தமிழ் எழுத்துகளின் பெட்டகமாக “Early Tamil Epigraphy From The Earliest Times to The 6th Century A.D” என்ற நூலை 2003இல் வெளியிட்டார். இந்நூல் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தின் பதிப்பாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
  • இவர் தொல்லெழுத்துத் துறையில் ஆற்றிய சீரிய பணியைப் பாராட்டும் முகமாய் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    ஆர்.பன்னீர்ச்செல்வம்

  • புகளூர் கல்வெட்டில் இடம்பெறும் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ போன்ற சேர மரபினரைப் பதிற்றுப்பத்துடன் ஒப்புநோக்கி அவர்களை முறையே 7, 8, 9ஆம் பத்திற்குரிய பாட்டுடைத் தலைவர்களாகக் கூறியுள்ளார்.

    ஆர்.நாகசாமி

  • 1981இல் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் ஜம்பை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருக்கும் “ஸதியபுதோ” மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டுத் தகடூரை எறிந்த தலைவன் கடையெழு வள்ளல்களுல் ஒருவரான அதியமானே எனச் சந்தேகத்திற்கிடமின்றி நிறுவினார். அதுவரை “ஸதியபுதோ” யார்? என்பது தமிழக வரலாற்றில் புதிராகவே இருந்தது.

    கா.ராஜன்

    மண்ணடுக்கு ஆய்வுகளின் அடிப்படையில் பண்பாட்டாய்வின் அடிப்படையிலும் குறியீடுகள், சிந்துவெளி பண்பாடு தொட்டு சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து சங்க காலத்திலும் வழங்கியுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

  • தமிழ் பிராமி வரிவடிவம் இக்குறியீடுகளிலிருந்தே வளர்ச்சிப் பெற்றுள்ளது எனக் கூறுகின்றார்.
  • இது நாள் வரை சங்கக் காலத் தமிழி கல்வெட்டுகள் சமணர் இருக்கைகளில் மட்டுமே கிடைத்து வந்தன. இதனால் இவ்வெழுத்துக்கள் சமணரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருத்துகள் நிலவின. இந்தியாவிலேயே மிகப் பழமையான தமிழிக் கல்வெட்டு புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டே எனப் பறை சாற்றினார். மேலும், புலிமான் கோம்பை நடுகற்கள் கொண்டு தமிழிக் கல்வெட்டுக்கள் சமணருக்கு மட்டுமே உரித்தானவையல்ல. பாமர தமிழனும் எழுத்தறிவு பண்பாட்டைப் பெற்றுள்ளான் என்பதை விளக்கினார். தொல்காப்பியத்தில் இடம்பெறும் “ஆகோள்” என்ற சொல்லாட்சி இக்கல்வெட்டிலும் இடம்பெறுவதைக் கொண்டு தமிழ் இலக்கியத்தின் காலத்தை மேல் நோக்கிக் கொண்டுச் சென்றுள்ளார்.
  • தாதப்பட்டி கல்வெட்டே எழுத்துப் பொறித்து அறியப்பட்ட முதல் நெடுநிலைக்கல் (menhir) என்பதை வெளிப்படுத்தினார்.

    தமிழ் எழுத்தின் வளர்ச்சி நிலை:

    இந்தச் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் இது நாள் வரை சுமார் 32 இடங்களிலிருந்து 94 குகைக் கல்வெட்டுகளும் ஏறக்குறைய 25 தொல்லியல் வாழ்விடப் பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட பானை கீறல்களும் (graffiti) கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. இவை தவிர முத்திரைகளிலும், மோதிரங்களிலும், காசுகளிலும் இவ்வெழுத்துக்கள் கிடைத்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்துக்களும் பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்களும் தோற்றம் பெற்றுள்ளன.

    சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு - கொடுமணல்

    kotumanal.png

    ashes_broad.png
    படம் : கூல் அந்தை சாம்பான் அகல்

    அயல் நாட்டில் கிடைத்த பானை ஓடுகள்


    turao.png
    துறஒ ( தாய்லாந்து )

    catan.png
    சாதன் (எகிப்து)



    சங்க்க் கால எழுத்துக்கள் பொறித்த மோதிரங்கள், முத்திரை காசுகள்

    மோதிரங்கள்

    upa.png
    உபா அன்

     

    veli_ash.png
    வெளிஈ சாம்பான்

     

    முத்திரைகள்

    kuravan.png
    குறவன்
    peruvaluti.png
    பெருவழுதி
    kollirumpurai.png
    கொல்லிரும்புறை்
    macao.png
    மாக்கோதை்
    kuttuvan_kothai.png
    குட்டுவன் கோதை்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


  •  

    கிரந்த எழுத்துமுறை

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
     
     
    Jump to navigationJump to search
    கிரந்தம்
    வகைஅபுகிடா
    மொழிகள்சமஸ்கிருதம்மணிப்பிரவாளம்
    காலக்கட்டம்கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நுற்றாண்டு வரை[1]
    மூல முறைகள்பிராமி
     → தென் பிராமி
      → பல்லவர்
       → கிரந்தம்
    தோற்றுவித்த முறைகள்மலையாள எழுத்துமுறைதுளு எழுத்துமுறை
    நெருக்கமான முறைகள்வட்டெழுத்து
    ஐஎஸ்ஓ 15924Gran
    Grantha Consonants.svg
    கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்.('க', 'ங', 'ச'... வரிசை)

    கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில்பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும்[2] (லிபி). இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியது ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.[3]பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.

    கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.

    தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

    கிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நாகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் தமிழ் எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( மணிப்பிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை வட்டெழுத்திலும் வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான் [1] கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி[2], முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி தேவநாகரியில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.

    கிரந்த எழுத்து வடிவங்கள்[தொகு]

    உயிர் எழுத்துக்கள்[தொகு]

    Grantha Vowels.svg

    மெய்யெழுத்துக்கள்[தொகு]

    Grantha Consonants.svg

    தமிழில் உள்ள புள்ளியை போன்று கிரந்தத்தில் ஹலந்த் பயன்படுத்தப்படுகிறது

    Grantha Halant.svg

    கிரந்த 'க' வரிசை உயிர்மெய் எழுத்துக்கள்

    Grantha Matras.gif

    கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்

    Grantha VowelLig.gif

    கிரந்த ஈற்றுமெய்யெழுத்துக்கள்

    Grantha FinCons.gif

    கிரந்த கூட்டெழுத்துக்கள்[தொகு]

    கிரந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் இணைந்து கூட்டெழுத்துக்களை உருவாக்குகின்றன. இக்கூட்டெழுத்துக்கள் வேகமாக எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டன

    Grantha ConsLig.gif

    Grantha Script Southern Style Consonant Ligatures.svg

    சிறப்பு வடிவங்கள்:

    Grantha Ya.svg ‹ய› and Grantha r.gif ‹ர› வும் பின் கூட்டெழுத்தாக இணையும் போது கீழ்க்கண்ட சிறப்பு வடிவங்களை பெறுகிறது Grantha yvat.svg and Grantha rvat.gif

    Grantha Ya Ra Ligatures.svg

    Grantha r.gif ‹ர›கர மெய் முன்னெழுத்தாக வரும் போது ரகர மெய் ரெஃப் ஆக மாறுகிறது. Grantha reph.svg

    Grantha RephLig.gif

    கிரந்த எண்கள்[தொகு]

     



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

உரை மாதிரி[தொகு]

மாதிரி 1: காளிதாசரின் குமாரசம்வபத்தில் இருந்து

Grantha Text1.gif

अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः।

पूर्वापरौ तोयनिधी वगाह्य स्थितः पृथिव्या इव मानदण्डः॥

கிரந்த எழுத்துக்களும் பிற எழுத்துமுறைகளும்[தொகு]

உயிரெழுத்துக்கள்[தொகு]

Grantha VowelComp.gif

மெய்யெழுத்துக்கள்[தொகு]

Grantha ConsComp.gif

இன்றைய நிலை[தொகு]

இன்றைய நவீன காலகட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொருத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், '', '', 'க்ஷ', '' ,'ஸ்ரீ', '' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோடு குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது[3].

தமிழில் கிரந்த எழுத்துகள்[தொகு]

மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

காண்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1.  http://www.ancientscripts/grantha.html
  2.  கிரந்தம் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  3.  [http://www.tamilnation.co/heritage/deivanayagam.htm

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழில் பரவலாக பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்கள்
ஜ்ஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
ஷ்ஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
ஸ்ஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
ஹ்ஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ
க்ஷ்க்ஷக்ஷாக்ஷிக்ஷீக்ஷுக்ஷூக்ஷெக்ஷேக்ஷைக்ஷொக்ஷோக்ஷெள
ஸ்ரீ
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி

zha_tamil_correctஇந்தியாவின் பண்டைய இலக்கிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. திராவிட மொழிகளிலேயே மிக முந்தைய இலக்கிய படைப்புகள் நிகழந்தது தமிழில் தான். பண்டைக்காலத்தில் வடபுலத்து சமஸ்கிருத பிராகிருத மொழிகளுக்கு இணையாக இலக்கியம் சமைக்கப்பெற்றதும் தமிழ் மொழியில் தான். தமிழ் இவ்வாறு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் முக்கிய பங்கு அதன் எழுத்தும் வகித்தது.

ஒரு மொழியை நிலைநிறுத்த எழுத்து என்பது என்றுமே மிகவும் அத்தியாவசியமானது. எழுத்தில்லாத மொழி நிலைப்பது கடினம். மொழியினை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்லக்கூடியது எழுத்து மட்டுமே. எழுத்தற்ற மொழி மிக விரைவிலேயே சிதைவுக்கு உள்ளாகி உருத்தெரியாமல் போய் விடும். இலக்கணம் சமைக்கவும் இலக்கியம் படைக்கவும் எழுத்து முக்கியம். இன்று எழுத்துமுறை இல்லாது இருக்கும் மொழிகள் அனைத்தும் இலக்கியமற்ற திருத்தம்பெறாத மொழி

எழுத்துமுறைகள் பலவாறாக வகைப்படுத்தப்படுகிறது. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என எழுத்துக்களை வகுக்கும் எழுத்துமுறை “அபுகிடா” என்று அழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் சிங்கள, தாய், கம்போடிய, லாவோ முதலிய தெற்காசிய-தென்கிழக்காசிய எழுத்துமுறைகள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வரும். தமிழ் எழுத்துமுறையும் “அபுகிடா” வகையை சார்ந்ததே.

 

சிந்து சமவெளி எழுத்துக்கள்

இந்தியாவில் மிகவும் பழமையாக கிட்டக்கூடிய எழுத்துக்கள் சிந்துசமவெளி எழுத்துக்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி எழுத்துகளின் மொழி இந்தோ-ஆரியம் என்றும், பழந்தமிழ் என்றும், முண்டா மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்றும் இஷ்டத்திற்கும் கருத்துக்கள் விரவி கிடக்கின்றன. பார்க்கப்போனால், சிந்து சமவெளி எழுத்துக்கள் உண்மையான எழுத்துமுறையா அல்லது வெறும் குறியீடுகளா என்பது கூட இன்னும் முழுமையான ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிறுவப்படவில்லை.

பிராமி

சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி  என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது.

Brahmi_asoka_article

அசோகரின் அலஹாபாத் ஸ்தூபி கல்வெட்டு

 

brahmi_grantha_transcription

தே³வாநம்ʼ பியே பியத³ஸீ லாஜா ஹேவம்ʼ ஆஹா

அம்ʼநத அகா³ய த⁴ம்ʼம காமதாய அகா³ய பல […]

சங்க காலத்திலேயே ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்டன. இவ்விரு மதங்களுள் தமிழகத்தில் முதலில் ஸ்தாபனம் செய்யப்பட்ட்து ஜைன மதமாகத்தான் இருக்க வேண்டும். (சமண [ < சிரமண ] என்பது பௌத்த-ஜைன மதங்களை ஒன்றுசேர குறிக்கூடிய சொல், தமிழகத்தில் ஜைன சமயத்தை மட்டும் குறிப்பதில் இருந்தே, சிரமண சமயங்களில், முதலில் நுழைந்த்து ஜைன சமயம் என்று யூகிக்கலாம்).

அவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. ஜைனர்களும் பௌத்தர்களும் பொதுவாகவே மக்கள் மொழியில் போதிப்பவர்கள். எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆரம்ப கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் ஜைன முனிவர்களின் குகைகளில் காணப்படுவது இக்கருத்துக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.

தமிழ் பிராமி

அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துமுறை தமிழுக்குரியதாக இல்லை. பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) .  எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.

பிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன.  டகரத்தை உருமாற்றி றகரமும் (அக்காலத்தில் றகரம் டகரம் போல் உச்சரிக்கப்பட்டது), நகரத்திலிருந்து னகரமும், லகரத்திலிருந்து ளகரமும், ட³(d)கரத்தில் இருந்து ழகரமும் உருவாக்கப்படடன. எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.

தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்த்து. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. அனால், ஒரு எழுத்து மெய்யா, அல்லது அகர உயிர்மெய்யா என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் (மற்றும் எகர ஒகரங்களையும்) குறிக்க புள்ளி உருவாக்கப்பட்ட்து

அதாவது, ”நிகழ்காலம்” என்ற சொல் பின்வாறாக எழுதப்பட்டிருக்கும்:

முற்கால முறை : நிகாழகாலாம

இடைக்கால முறை : நிகழகாலம

பிற்கால முறை : நிகழ்காலம்

300 – 400 CE வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது,

தொல்காப்பியம் புள்ளியை எகர ஒகரங்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதில் இருந்து, தொல்காப்பிய காலத்தில் புள்ளி வழக்கில் வந்திருக்க வேண்டும்.

pugalur_tamil_brahmi_inscription

 

 


-- Edited by Admin on Friday 2nd of August 2019 03:56:01 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


2ஆம் நூற்றாண்டு CE – புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு

 

உள்ள உரை:

கொஆதன செலலிருமபொறை மகன  

பெருஙகடுஙகொன மகன ளங 

கடுஙகொ ளஙகொ ஆக அறுததகல  

புள்ளியோ, எகர ஏகார, ஒகர ஓகார வேறுபாடோ கல்வெட்டில் இல்லாததை கவனிக்கவும். இகரமும் விடுபட்டுள்ளது

திருந்திய உரை:

கோஆதன் செல்லிரும்பொறை மகன் 

பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்

கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்

முசிறி – தமிழ் பிராமி  எழுத்துக்கள் – 2ஆம் நூற்றாண்டு பொது.சகாப்தம் 

 brami-amana 

”அமண” (< சமண) என்று பானையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள். ( அதற்கு அடுத்து இருக்கும் இரண்டு வடிவங்கள்- சித்திரக்குறியீடுகள்). பழந்தமிழ் துறைமுகமான முசிறியில் [இன்றைய கேரளாவின் எர்ணாகுளத்தில் “பட்டணம்”] இது கிடைத்துள்ளது. 2ஆம் நூற்றாண்டளவிலேயே ஜைன மதம் சேர நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்

வட்டெழுத்து

பிறகு ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு வசதியாக தமிழ் பிராமி வட்ட வடிவமாக உருமாற துவங்கியது. இந்த காரணத்தினால் இக்காலக்கட்டத்து தமிழ் எழுத்து வட்டெழுத்து என அழைக்கப்படுகிறது. வட்டெழுத்து உருவான அதே கால கட்டத்தில், வடமொழி எழுதுவதற்காக பிராமியில் இருந்து பல்லவ கிரந்தம் என்ற எழுத்து பல்லவர் காலத்தில் தோன்றியது. வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.

ஐந்தாம் நூறாண்டில் இருந்து 11ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுத வட்டெழுத்து பயன்பட்டது. 7ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து மட்டுமே, தமிழை எழுத பயன்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு படிப்படியாக குறைந்து. பிறகு நவீன தமிழ் எழுத்துக்களின், மூலமான பல்லவ-தமிழ் எழுத்துக்களால் முழுமையாக தமிழ் எழுதப்பட துவங்கியது. 11ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே தமிழ் எழுத பயன்பட்டாலும், 19ஆம் நூற்றாண்டு வரை கேரள தேசத்தில் மலையாள மொழியினை எழுத பயன்பாட்டில் இருந்தது. வட்டெழுத்தின் இன்னொரு வடிவமான கோலெழுத்து முறையும் மலையாளத்தை எழுத நீண்ட காலம் வழக்கில் இருந்தது.

வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடு நிச்சயமாக காணப்படும். அதனால், எகர ஒகரங்களும் தெளிவாக குறிக்கப்பெறும். ஒரே விஷயம் ப’கர வ’கர வேறுபாடுகள் அவ்வளவு தெளிவாக இருக்காது, இரண்டும் மிகவும் ஒத்த வடிவங்களை பெற்றிருக்கும்.

vatteluttu_inscription_corrected

மஹேந்திர பல்லவர் காலத்து நடுகல்லில் வட்டெழுத்து 

கோவிசைய மயேந்திர 

பருமற்கு முப்பத்திரண்டா 

வது பொன்மோதனார் சே 

வகன் வின்றண்[வ]டுகன்

புலி குத்திப் பட்டான் 

கல்

பல்லவ தமிழ்

பல்லவ கிரந்தத்தை பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா ? பல்லவ கிரந்தத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த பல்லவ-தமிழ் எழுத்துக்களும் அதே 7ஆம் நூற்றாண்டளவில் தமிழை எழுத பிரயோகிக்கப்பட ஆரம்பித்த்து. பல்லவ கிரந்தத்தில் இல்லாத ற,ழ,ன போன்றவை வட்டெழுத்தில் இருந்து கடன்பெற்று எழுதப்பட்டன. மகரமும் லகரமும் கூட வட்டெழுத்தை அடிப்படையாக கொண்ட வடிவத்தை பெற்றிருந்தன.

இந்த காலக்கட்டங்களில், அதாவது 7ஆம் நூற்றாண்டில் இருந்து, தமிழ் இரண்டு எழுத்துமுறைகளில் எழுதப்பெற்றது. பல்லவ-சோழ ராஜ்யமாக இருந்த வட தமிழகத்தில் பல்லவ எழுத்துக்களிலும் பாண்டிய ராஜ்யமாக இருந்த தென் தமிழகத்தில் வட்டெழுத்திலும் எழுதப்பட்டன.

11 ஆம் நூற்றாண்டளவில் வட்டெழுத்துமுறை முழுமையாக கைவிடப்பட்டு, தமிழ் முற்றிலும் பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட ஆரம்பித்த்து.

நம்முடைய தற்கால தமிழ் எழுத்துக்கள் இந்த பல்லவ எழுத்துமுறையில் இருந்து தோன்றியதே.

பல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காண இயலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால், எகர ஏகார ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.

”கொள” என்ற சொல் கொள், கோள், கெரள், கெர்ள், கேர்ள், கேரள், கேரள என்று என்னவாகவும் இருக்கலாம். இடத்திற்கு ஏற்றார்போல் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

pallava_tamil_inscription

1005 CE சேர்ந்த ராஜ ராஜனின் செப்பேடு பல்லவ தமிழில்

வீரமாமுனிவருக்கு முற்பட்ட தமிழ்

சுமார் 15ஆம் நூற்றாண்டளவிலேயே தற்கால தமிழுக்கு மிகவும் நெருங்கிய வடிவினை தமிழ் எழுத்துக்கள் பெற ஆரம்பித்தன.  அதே நேரத்தில், பல்லவ தமிழின் குறைபாடுகள் அவ்வாறே தொடர்ந்த வண்னம் இருந்தன.

tamil_15th_century

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் கிறிஸ்தவ நூல்.

ரகத்திற்கும் காலிற்கும் வித்தியாசம் இல்லாத்த்தை கவனிக்கவும். அதே போல புள்ளி இருக்காது. எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. செசுவகையிலுளபடடபாதிரிமாா (< சேசுவகையிலுளபட்டபாதிரிமார்), முகவுரை போன்ற சொற்களை காண்க.

வீரமாமுனிவரின் தமிழ்

வீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கிறிஸ்தவ மிஷினரி கொன்ஸ்டன்ஸோ பெஸ்கி பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக, தமிழ் மொழியை அவர் கற்றுக்கொள்ள நேர்ந்த்து. தமிழ் எழுத்துமுறையினில் பல குறைகள் அவரை உறுத்தியது.

வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் தமிழை கற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்ய இவை தடையாக இருப்பதாக கருதினார், எனவே பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் எழுத்துமுறையில் புகுத்தினார்.

ஏற்கனவே கூறியது போல், தமிழில் புள்ளி ஏட்டளவில் இலக்கண நூல்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில், அதன் பயன்பாடு மிகவும் அருகிக்காணப்பட்டது. அச்சின் மூலம் புள்ளியின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார்.

அதே போல, எ, ஒ முதலிய குறில்களும் (இலக்கணரீதியாக) புள்ளி பெற வேண்டி இருந்தது. புள்ளி பெறாதது நெடில்களாக கருதப்பட்டன.

புள்ளியினை மீண்டும் பிரபலப்படுத்தினாலும், அதே எகர ஒகரங்களுக்கான புள்ளியை அவர் பிரபலப்படுத்தவில்லை. உயிர் எழுத்துக்கள் புள்ளி பெறுவதை அவர் விரும்பாத காரணத்தினால் எ, ஒ ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களை செய்து ஏ , ஓ என புது நெடில் உருவங்களை படைத்தார். அதே போல, ஒற்றைக்கொம்பை மாற்றி நெடில்களுக்கு இரட்டை கொம்பை (ே) உருவாக்கினார். ஈகார உயிர்மெய்கள் ஒரு சுழி பெறுவது போல, கொம்பும் இன்னொரு சுழி பெருமாறு வடிவம் உருவாக்கப்பட்டது. புள்ளி பெறாத பழைய நெடில்கள், வீரமாமுனிவரின் தமிழில் குறில்களை குறித்தன.

அவர் எண்ணிய இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும் என்பது [ஈகாரக்குறி போல], ஆனால், இப்போதைய நடைமுறையில் அது மேலிருந்து கீழாகத்தான் எழுதப்படுகிறது. இவ்வாறு தான் காலப்போக்கில் எழுத்துக்கள் மாறுபாடுகளை அடைகின்றன !

அதே போல, கால்’ போல இருந்த ரகரத்துக்கு கீழே இன்னொரு சாய்வுக்கோடு இட்டது, யாரோ ஒரு பெயர் தெரியாத அச்சுத்தொழிலாளி மாற்றியதாக அறியப்படுகிறது.

பெரியார் தமிழ்

பெரியாருக்கு முற்பட்ட தமிழில் ஐகாரத்திற்கு இருவேறு குறிகள் இருந்தன. ல,ள,ன,ண முதலியவை ஒரு குறியையும், பிற எழுத்துக்கள் வேறு குறியையும் பெற்றன. அதே போல், ற,ன,ண ஆகியவையின் ஆகார உயிர்மெய்கள் சிறப்பு வடிவம் பெற்று திகழ்ந்தன.

இவைகளை ஒழுங்கற்றவைகளை பெரியார் கருதியதால், அவை அனைத்தும் எம்.ஜி.ஆர்’ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்தும் மெய்களும் ஒரே சீராக ஐகாரக்குறியையும், காலையும் பெற்றன.

tamil_periyar_reform

தமிழ்-பிராமியில் இருந்து துவங்கி வட்டெழுத்து, பல்லவர் எழுத்து என பல்வேறு வடிவங்களை பெற்று,  வீராமாமுனிவரின் சீர்த்திருத்தத்தில் துவங்கி, பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பெற்ற எழுத்துக்களிலேயே இன்று தமிழ் எழுதப்பட்டு வருகிறது.

இவ்வாறாக, பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தாலும், கடந்த 2000 வருடங்களாக, தமிழ் பல்வேறு எழுத்துமுறைகளில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பிற்சேர்க்கை

தமிழ்-பிராமி, வட்டெழுத்தாகவும் பல்லவ-தமிழ் எழுத்தாகவும் சமகாலத்தில் உருமாற்றம் பெற்ற விதம். நடுவில் தமிழி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது “தமிழ்-பிராமி”.
 
tamil_brahmi_vatteluttu
 
தமிழ் இணைய பல்கலைக்கழகம்: http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm
 

மேற்கோள்கள்

    1. Early Tamil EpigraphyAiravatam Mahadevan
    2. Elements of South Indian PaleographyA.C. Burnell
    3. Indian EpigraphyRichard Salamon
    4. Slides of Dr. S Swaminathan, Tamil Heritage Foundation 

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=311&Itemid=398

 

http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பழந்தமிழ்க் கல்வெட்டுகள் 
மா. இலாவண்யா
 

தமிழ் எழுத்து எப்பொழுது தொடங்கி எவ்வாறு வளர்ந்தது? 2006ம் ஆண்டில் கிடைத்த கி.மு. பதினைந்திலிருந்து கி.மு இருபதாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய கற்கோடாரியில், சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட 'Indus' எழுத்துருவில் சில வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலிரு வடிவங்கள் முருகன் என்ற பொருளைக் கொடுப்பதாக திரு. ஐராவதம் மகாதேவன் கூறுகிறார், மேலும் Indus எழுத்துரு தமிழ்தான் என்றும் கருதுகிறார். இவர் கருத்தை ஆதரித்து இந்தியா முழுமைக்கும் எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்று பல அறிஞர்களும் கருதுகின்றனர். இந்த 'Indus' எழுத்துரு உண்மையிலேயே தமிழாக இருந்தால், காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து இதுவேயாகும்.

இந்த Indus எழுத்துருவைத் தவிர்த்து நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளின் படி தமிழ் எழுத்துகளிலேயே மிகவும் தொன்மையானது 'தமிழ் பிராமி'யேயாகும். தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகளில் உள்ள எழுத்துக் கீறல்கள் இவற்றின் காலத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்ததில், இவ்வெழுத்துமுறை கி.மு 4ம் அல்லது 3ம் நூற்றாண்டிலுருந்து (அ.கு.1) கி.பி. 4ம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பின், இவ்வெழுத்துமுறை மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், பிறகு நாம் இப்பொழுது பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியான எழுத்துமுறையாகவும் வளர்ச்சியடைந்தது. தமிழ் பிராமி எழுத்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கண்டுபிடிப்பு

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் சில புரிந்துகொள்ள முடியாத கல்வெட்டுகள் கிடைத்தன. இவற்றைப் பல அறிஞர்கள் ஆய்வு செய்தனர். அவ்வறிஞர்களுள் வெங்கய்யா என்பவரே இவை அசோகச் சக்கரவர்த்தி கால பிராமிக் கல்வெட்டுகளை ஒத்திருப்பதை உணர்ந்து, இவை பிராமிக் கல்வெட்டுகள் என்று கண்டுபிடித்தார். ஆனாலும் இவரும் இன்னும் பிற அறிஞர்களும் இவை வடமொழி அல்லது பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் என்றே நினைத்தனர். தமிழ் மொழிக்கே உரித்தான ழ, ள, ற, ன முதலிய எழுத்துகள் இக்கல்வெட்டுகளில் இருப்பதை கே. வி. சுப்பிரமணிய அய்யர் எனும் அறிஞரே முதன்முதலில் கண்ணுற்றார். மேலும் அவர் வடமொழி எழுத்துக்கள் சில இக்கல்வெட்டுகளில் இடம்பெறாமல் இருப்பதையும் உணர்ந்து, இவை தமிழ் மொழிக் கல்வெட்டுகளாகலாம் என்று மொழிந்தார். பின்னாளில் பல அறிஞர்கள் இக்கல்வெட்டுகளை படிக்க முயன்று பாடங்களை வெளியிட்டனர். ஆயினும் அக்கல்வெட்டுகளின் தெளிவில்லாத புகைப்படங்கள் மற்றும் மசிப்படிகளை மட்டுமே கொண்டு படித்த காரணத்தால் அப்பாடங்களில் பல தவறுகள் நேர்ந்தன. சில வருடங்களுக்கு முன்பு ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மிகவும் முனைந்து, இக்கல்வெட்டுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் பார்வையிட்டு, மேலும் மசிப்படியில்லாமல் புதிதாக 'Tracing' முறை கொண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்து இக்கல்வெட்டுகள் அனைத்தும் ஒரு சில பிராகிருத சொற்கள் தவிர முழுதும் தமிழ் மொழியிலேயே இருப்பதை ஐயமின்றி நிரூபித்துள்ளார். தமிழ் பிராமியைப் பற்றி இதுவரை தெரிந்த எல்லா விவரங்களையும், இவர் புதிதாகக் கண்டுபிடித்த விவரங்களையும் "Early Tamil Epigraphy" என்ற புத்தகத்தில் விரிவாகக் கொடுத்துள்ளார். மேலும் அப்புத்தகத்தை வெளியிட்ட தேதிவரை கிடைத்த அனைத்துத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் படங்கள் மற்றும் கல்வெட்டுப் பாடங்களையும் இப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். 

தோற்றம்

தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 அல்லது 3ம் நூற்றாண்டின் நடுகற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது. கீழே தமிழ் பிராமி எழுத்துக்களின் அட்டவணை (கையெழுத்துப்பிரதி) கொடுக்கப்பட்டுள்ளது. 

Brahmi.jpg


எழுத்துக்கள்

தமிழ் பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ இவற்றை குறிக்க 6 எழுத்துக்களும், எ மற்றும் ஏ இவ்விரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும், ஒ, ஓ இவையிரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும் ஆக மொத்தம் 8 உயிரெழுத்துக்கள் இருந்தன. ஔ இடம்பெறவில்லை. 18 மெய்யெழுத்துக்களையும் சேர்ந்து 26 எழுத்துக்களே இருந்தன. க், ம் முதலிய எழுத்துக்களைக் குறிக்க முற்காலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் புள்ளிகள் காணப்படவில்லை. ஒருசில பிற்கால தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அரிதாக புள்ளி காணப்படுகிறது. முற்கால வட்டெழுத்துக்கல்வெட்டுகளில் இப்புள்ளிகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன.

வளர்ச்சி

தமிழ்-பிராமி கி.பி 4ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தாலும், எழுத்துக்கள் சில காலத்திற்கேற்ப மாற்றமடைந்தன. திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள், தமிழ் பிராமி தோன்றியது 3ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2ம் நூற்றாண்டு என்ற கருத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1ம் நூற்றாண்டு வரை இருந்தது முற்கால தமிழ் பிராமி எனவும், கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து 4ம் நூற்றாண்டுவரை இருந்தது பிற்கால தமிழ் பிராமி எனவும் பகுத்துள்ளார். இப்பகுப்பில் கி.மு 2ம் நூற்றாண்டு என்பதை திருத்தம் செய்து கி.மு. 4ம் அல்லது 3ம் நூற்றாண்டு எனப் படிப்பது சரியாக இருக்கும். தமிழ்-பிராமி எழுத்து கி.பி 5-6ம் நூற்றாண்டில் முற்கால வட்டெழுத்தாக மாற்றமடைந்தது. 

கல்வெட்டுகள்

மாங்குளம், அரிட்டாபட்டி, அரச்சலூர், எடக்கல், அழகர்மலை, சித்தன்னவாசல், திருமலை, ஜம்பை முதலிய பல இடங்களில் முற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், ஆனைமலை, புகளூர், குன்னக்குடி, குடுமியான்மலை முதலிய பல இடங்களில் பிற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன. 

இக்கல்வெட்டுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. உதாரணத்திற்கு, புகளூரிலுள்ள ஒரே செய்தியைத் தரும், ஒரு சில வித்தியாசங்கள் தவிர மற்றபடி ஒன்று போலவே இருக்கும் இரு கல்வெட்டுகள் கோ ஆதன் செல்லிரும்பொறை, அவர் மகன் பெருங்கடுங்கோன் மற்றும் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கங்கோ ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. இப்பெயர்கள், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்களாக முறையே செல்வக்கடுங்கோ வாழிய ஆதன் எனவும், அவரை அடுத்து அரசாண்டவர்களாக பெருஞ்சேரல் இருப்பொறை மற்றும் இளங்சேரல் இரும்பொறை ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. பதிற்றுப்பத்தில் வரும் அரசர்கள் தாம் கல்வெட்டிலும் இடம்பெற்றவர்கள் என்று கருதக்கூடியதாக இருக்கின்றது. 

முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் 
பெருங்கடுங்கோன் மகன் [இ*]ளங்
கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்


இதுமட்டுமல்லாது புறநானூறு மற்றும் அகநானூறுப் பாடல்கள் காட்டும் குதிரைமலையின் அரசரான சேரப்படையின் தளபதி பிடன் மற்றும் அவரின் மகன் பிடன்கொற்றன் இவர்களை அதே புகளூரில் உள்ள மேலும் சில கல்வெட்டுகளில் முறையே பிடன் அல்லது பிடந்தை என்றும் மகனை கொற்றந்தை எனவும் குறிப்பிடுவதாகக் கருதமுடிகிறது. இதிலுள்ள மற்றுமொரு கல்வெட்டு பிடனின் மகளாகக் கொற்றி என்பவரைக் காட்டுகிறது.

மேலும் பாண்டிய நெடுங்செழியன் மற்றும் சங்க இலக்கியம் காட்டும் அதியமான் நெடுமானஞ்சி ஆகியோரின் பெயர்களெனக் கருதத்தக்க வகையில் மாங்குளம் மற்றும் ஜம்பையிலுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் இவ்வரசர்கள் இருந்ததற்கான மேலுமொரு சான்றாக இக்கல்வெட்டுகள் இருக்கின்றன. 

பின்வரும் கல்வெட்டுப் படத்தைப் பாருங்கள்:

Tamiluniv_Nadukal.jpg


கல்வெட்டுப் பாடம்:

முதல் வரி - அ ன் ஊ ர் அ த ன்

இரண்டாம் வரி - ன் அ ன் க ல்


செய்தி

இக்கல்வெட்டு தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுகாவில் புளியம்கொம்பை என்ற ஊரில் கிடைத்துள்ள மூன்று நடுகற்களுள் ஒன்று. அ த ன் என்பதை ஆதன் என்று படித்து (பல கல்வெட்டுகளில் குறில் நெடில் எழுத்துகள் வித்தியாசம் இல்லாமல் ஒன்று போலவே குறிக்கப்பட்டுள்ளது). ஆதன் என்ற ஒருவரின் நினைவாக நட்ட கல் என்று பொருள் கொள்ளலாம். கல்வெட்டு முழுவதும் கிடைக்காததால் ஆதனின் முழுப்பெயர், ஊர் மற்றும் முழு செய்தியும் தெரியவில்லை. 

மண்பானைக் கீறல்கள், காசுகள், மற்ற பொருள்கள்
உறையூர், அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் மற்றும் பல இடங்களிலும் 2005ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரிலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறித்த மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை தவிரத் தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பல காசுகளும், மோதிரங்களும் அகழாய்வுகளில் முக்கியமாகக் கரூர் அமராவதி நதிப்படுகையில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திராவில் சாலிகுண்டம் பகுதியிலும் மற்றும் இலங்கையிலும் பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் எகிப்து நாட்டில் சிவப்புக் கடற்கரையிலுள்ள ரோம் நாட்டினர் குடியிருந்த பகுதிகளின் அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த ஒரு பானை ஓடு கிடைத்திருக்கின்றது. அதுபோல தாய்லாந்து நாட்டில் தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பொற்கொல்லர் உபயோகித்த உறைகல் ஒன்று கிடைத்திருக்கிறது. 

பின்வரும் ஹிந்து நாளிதழ் செய்தியில் வெளியிடப்பட்டிருக்கும் பானைக்கீறல் படத்தினைப் பாருங்கள்.

http://www.hindu.com/2008/05/13/stories/2008051355252000.htm

பானைக்கீறல் பாடம்

முதல் எழுத்து உ போல் உள்ளது ஆயினும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் பிராமியில் உ மற்றும் ந எழுத்துகள் இரண்டுமே 'L' வடிவில் இருக்கும், 'ந' எழுத்தில் கீழுள்ள கோடு இடது பக்கமும் நீண்டிருக்கும். பிற்கால பிராமி கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த நீளல் காணப்படவில்லை. இவ்வெழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ந' என்று படித்துள்ளார். அடுத்து வரும் எழுத்து 'க', 

மூன்றாம் எழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ன' என்று படித்துள்ளார். கீழே உள்ள படத்தில் 'ன' எழுத்து முற்கால மற்றும் பிற்கால தமிழ் பிராமியில் எப்படி இருந்தது என்பதும். பானைக்கீறலில் உள்ள எழுத்து எப்படி இருக்கிறது என்பதும் காட்டப்பட்டுள்ளது. 'ன' எழுத்தை தவறாக அப்படிப் பானையில் கீறியிருக்கலாம். 

na_letter.jpg


நான்காம் எழுத்து படத்தில் பார்ப்பதற்கு 'ந' போல் இருந்தாலும் உற்றுப் பார்த்தால் அது 'உ' தான் என்பது புலப்படும். இடது பக்கம் நீண்டிருப்பதாகத் தோன்றும் கோடு உண்மையில் 'original' பானைக்கீறல் இல்லை. அடுத்து வரும் எழுத்துக்கள் 5) ற 6) ல.

சேர்த்துப்படித்தால்: ந க ன உ ற ல, 

செய்தி

இதை திரு ஐராவதம் மகாதேவன் 'நாகன் ஊறல்' என்று படித்து, இப்பானை நாகன் என்பவரின் ஊறல் பானை அதாவது பனையில் பாளையைக் கீறி அதிலிருந்து ஊறும் நீரை சேமித்து இறக்கப் பயன்பட்ட பானை என்று கருதுகிறார். நாகன் என்பவர் பனையிலிருந்து பதநீர் இறக்கும் தொழிலாளியாக இருந்திருக்கலாம்.

கிடைக்கும் செய்திகள்

மேலே குறிப்பிட்டுள்ள படி அரசர்களின் பெயர்களும், அக்காலத்து ஊர் மற்றும் ஊர்சபையின் பெயர்கள், பொற்கொல்லர் போன்று பலவித தொழில் செய்வோரின் பெயர்கள், ஜைனத்துறவிகள் மற்றும் பள்ளிகளின் பெயர்கள், இளயன், குறவன், நாகன் போன்ற இனப்பெயர்கள், பல சொந்தப் பெயர்கள், வேளாண்மை பற்றிய விவரங்கள் போன்று சமயம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல விவரங்களை இக்கல்வெட்டுகள் மற்றும் பானைக்கீறல்களை ஆராய்ந்து அறிய முடிகிறது. 

எகிப்து, தாய்லாந்து முதலிய இடங்களில் கிடைக்கும் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானையோடு மற்றும் உறைகல் இவை அந்நாளில் தமிழ்நாட்டினர் மற்றைய நாடுகளுடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பிற்குச் சான்றாக உள்ளது.

தமிழ்நாட்டில் காணப்படும் இக்கல்வெட்டுகள் தமிழ் தெரியாத புத்த, ஜைனத் துறவிகளால் வடமொழியில் எழுதப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது. இப்பொழுது இக்கல்வெட்டுகள் தமிழ்மொழிக் கல்வெட்டுகள்தாம் என்று ஐயமுற நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானைக்கீறல்களில் பொதுமக்களின் பெயர்களும் அவர்கள் தம் பெயரால் பொறித்துக்கொண்டதாக உள்ள தமிழ் எழுத்துகளும், மிகப்பழமையான காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் எழுத்தறிவு மேல்தட்டு மக்களிடம் மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களிடமும் பரவலாக இருந்தது என்று கருத இடமளிக்கிறது. மேலும் சங்க இலக்கியங்களைப் பாடியோர் மற்றும் தொகுத்தோரில் சமுதாயத்தின் பலதரப்பட்ட தளங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இருப்பதையும் சான்றாகக் கொண்டு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப்பரவலாக நடைபெற்றது என்று திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கருதுகிறார்கள். 

அடிக்குறிப்பு

1) தேனியில் கிடைத்த நடுகற்கள் கி.மு. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஒரு சாராரும், கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலரும் கருதுகின்றனர். 

பார்வை நூல்கள்

1) Early Tamil Epigraphy - Iravatham Mahadevan
2) சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - திரு. ஐராவதம் மகாதேவன், வரலாறு ஆய்விதழ் 6.
3) தன்னிகரில்லாத தமிழ் - ச. கமலக்கண்ணன் & தமிழ்சசி, வரலாறு.காம் இதழ் 23
4) "Discovery of a century" in Tamil Nadu - T.S. Subramanian, The Hindu dated May 01, 2006.
5) "The tale of a broken pot" Iravatham Mahadevan and S. Rajagopal, The Hindu dated May 13, 2008.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


இலங்கையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்தனவா? அவை இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ளதா?

 
 

ஓம் (ஆம்) இலங்கையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பயன்பாட்டில் உள்ளன. அதற்கு முன்னர் இலங்கையில் கிடைக்கப்பெற்ற சில தமிழ் பிராமி எழுத்துக்களை வரலாற்று சான்றுகளுடன் நிறுவுகிறேன்.

இந்தியத்தமிழர்கள் பலர் ஈழத்து தமிழர்கள் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என எண்ணுகிறார்கள். இது தவறு. இலங்கையிலும் இந்திய தமிழருக்கு நிகரான வரலாற்று சான்றுகள் உள்ளன. இவற்றை நான் வெவ்வேறு கேள்விக்கு விடை எழுதும் போது தகுந்த சான்றுகளுடன்நிறுவுகிறேன்.

  • கீழ் உள்ள அனைத்து தகவல்களும் [இலங்கைத்தமிழர் — ஒரு சுருக்க வரலாறு — என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை.
  • இதை எழுதியவர் பேராசிரியர் : ப. புஷ்பரட்ணம்

நூலின் முகப்பு.

main-qimg-d577c68367b989dd8e0a6a805b5755

இப்பொழுது கேள்விக்குரிய விடையை பார்ப்போம்.

கீழ் உள்ள படங்களில் உள்ள எழுத்துக்கள்அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களில் கணக்கு கிடைத்த தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் ஆகும்.

main-qimg-bf343c316cbc904ff67f879777536d
  • இவை அனைத்தும் சங்ககாலத்துக்கு முற்பட்டதாகஅறியப்படுகின்றன.

கீழ் உள்ள படம். [திஸமாறஹமவில்] கண்டுபிடிக்கப்பட்ட [2200] ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் முறி [சாசனம்].

main-qimg-bef99ad6b260a03a5fd3e9973623fe

கீழ் உள்ள படம் [தென்னிலங்கையில்] கிடைத்த தமிழ் நாணயங்கள்.

main-qimg-335e9b59ee3774e9f5197effa6a950
  • இந்நாணயங்கள் கி.மு 2 - 1 ஆம் நூற்றாண்டளவில் வெளியிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நான் பிறந்த வவுனியா மாவட்டத்தில் பல வரலாற்று சான்று மிக்க தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கிடைத்தன. இவை சிலவற்றை நான் கீழே தந்துள்ளேன்.

main-qimg-6b503883e6a7e82cc4f51ab88626f1

கீழ் உள்ள படத்தில் உள்ள எழுத்துக்கள் நாகச் சிற்றரசுகள் பற்றிய கல்வெட்டுகள் ஆகும்.

main-qimg-c2064a423e099adfef77cbc41c93cb
  • இவை 2200 ஆண்டுக்கு முற்பட்டவை
main-qimg-c2971ca5d449793a37beb9552b4227
  • அநுராதபுரத்திற்கு வடக்கே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு.1 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிச்சாசனம் ஒன்று இங்கிருந்த [நாகநகர்] பற்றிக் கூறுகிறது. இது நாகர்கள் வாழ்ந்த நகரம் என்ற பொருளில் உள்ளது இக்கல்வெட்டு.
  • மேலே உள்ள அனைத்துப்படங்களில் உள்ள தமிழ்ப்பிராமி எழுத்துகள் 2200 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டவை.

கீழே உள்ள படம் வல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட பொற்சானம் ஆகும்.

main-qimg-5bbfd5ee3d74d5abe0782ddd6060c8
  • இது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே ஒரு பொற்சாசனமாகும்.
  • கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சாசனத்தில் [நகதிவ] என்ற இடத்தில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை பற்றிக்கூறும் கல்வெட்டாகும்.

இவ்வாறாக கிமு 4ஆம் நூற்றங்களிக்கு மேல் உள்ள கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் படங்களாக என் கையில் இல்லை. கிடைக்கும் போது தருகிறேன்.

கீழ் உள்ள படம் இலங்கை தமிழ் மக்கள் இப்பொழுதும் பயன்படுத்தும் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் ஆகும்.

main-qimg-a5d3af3fbc6b0a16f030859a90c68c
  • இவை இன்றளவும் தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன


-- Edited by Admin on Friday 2nd of August 2019 04:00:14 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


 ல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.
இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.
மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.
நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
http://www.vallamai.com/?p=625

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 DAVID SHULMAN - Autobiagraphy of Tamil

"Beginnings”, Shulman looks at wide-ranging linguistic and historical evidence to conclude that speakers of the Dravidian language were well established in southern India by the first millennium BC, and there was interaction between them and the speakers of Vedic Sanskrit, as well as with peoples in other parts of the known world. He is sceptical of the claim that the dating of the Dravidian language can be stretched back to Indus Valley times or that Tamil existed in some pure state at some point in time isolated from Sanskrit or north Indian influence."

 

"In a book like this, conclusions are open to argument, but the data points are fascinating in themselves. For instance, Sanskrit loan words in Tamil are common, as every speaker of Tamil knows, but here are some Dravidian lexemes and loan words in Vedic Sanskrit (controversial as they may be): mayūra (from mayil), phala (from palam), muktā (from muttu), candana (from cāntu). There is then the open question of retroflexion, a common feature of Indic languages, which is likely to have come into Sanskrit from Dravidian where it is pervasive. More interesting are the Dravidian words in other languages of the world, such as in the Hebrew bible."

அதாவது ஹீப்ரு மொழியில் அமைந்திருக்கும் ஆதி விவிலியம் (பழைய ஏற்பாடு) நூலில் மயிலைக் குறிக்க வரும் "துக்கி" எனும் சொல் தமிழின் "தோகை" எனும் சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டுமென விளக்குகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கி பி 10 ம் நூற்றாண்டில் தான் தெலுங்கு மொழியே உருவானது என்று சீமான் பேசியிருக்கிறார்.

ஒரு அடிப்படை அறிவு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை ஆனால் அடிப்படை நாகரீகம் மனிதனுக்கு வேண்டும்.ஒன்றை வாழ்த்தி பேச வரலாறு தெரிய வேண்டுமோ? இல்லையோ ஆனால் குறைத்துப் பேச நிச்சயம் அதைப்பற்றி புரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நேர்மையாவது வேண்டும்.

தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்த்து வாங்க அதன் பழமையை நிரூபிக்க ரேணாட்டின் எரிகல் முத்துராஜா கல்வெட்டினை ஒரு சான்றாக காட்டினார்கள்.அதன் காலம் 5 அல்லது 6 நூற்றாண்டு என்று வரையறுத்தார்கள்.

இதைத்தாண்டி தமிழ் இலக்கியங்களில் மிக தெளிவாக வேங்கடத்திற்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்டது.அந்த பகுதியை வடுகம் என்றே அழைத்திருக்கிறார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
பன்மலை இறந்தே (அகம். 31)

அதாவது மூவேந்தர்கள் காக்கிற தமிழ் தேசத்தை தாண்டி வேறு மொழி பேசுகிற தேசத்தை பற்றி இந்த பாடல் குறிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் (அகம்.211)

வேங்கடத்தை தாண்டிச் சேன்றால் தமிழ் அல்லாத வேற்றுமொழி பேசப்படும் நிலம்.

உன்னைப் பிரிந்து சென்றவர் வேற்றுமொழி பேசும் இடத்துக்குச் சென்றிருந்தாலும் விரைவில் திரும்பி வந்து உனக்கு நன்மை செய்வார் என்பதாக பிரிவை குறிக்கும் மாமூலனாரின் பாடல் இது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் (குறு.11)

கட்டி என்னும் அரசன் ஆளும் வடுகர் வேற்றுமொழி பேசும் நாடாயினும் செல்வோம் என்று மாமூலமானர் பழைய கேரளத்தை உள்ளடக்கிய தமிழகத்தின் ஆந்திர எல்லைப்புறத்தை வைத்துப் பேசுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
பிழி ஆர் மகிழர், கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ - (அகம் 295)

ஆள் நடமாட்டம் இல்லாத அங்குள்ள காட்டில் வடுகர் வில்லும் கையுமாகத் திரிவர். பழத்தில் இருந்து பிழிந்த கள்ளினை உட்கொண்டு,களித்து ஆரவாரம் செய்வர்.அதனைத் தாண்டினால் வேறு மொழி வழங்கும் தேசம் வரும்.அங்கு அவர் சென்றிருந்தாலும் பழி இல்லாமல் வாடிக்கிடக்கும் உன் உடல்நலத்தை அவர் வந்து மீட்டுத்தருவார்.

என்று இந்த மாமூலனார் பாடலும் தெளிவாகவே வேங்கடத்துக்கு அப்பால் வடுகர் வேறு மொழி பேசுகிறார்கள் என்று துல்லியமாக பதிய வைக்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்போது அவசியமானது மாமூலனாரின் காலம்தான்.பொதுவாகவே தமிழ் ஆய்வாளர்கள் மாமூலனார் காலத்தை மிக தொன்மையாக பொயுமுவிற்கு கொண்டு செல்வார்கள்.அந்த அளவுகோலிலே பார்த்தாலும் பொது யுகத்திற்கு முன்பே வேங்கடத்துக்கு அப்பால் வேறு மொழி என்றாகிவிட்ட பிறகு 10 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு உருவானது என்று பேசுவதெல்லாம் அபத்தம்.

தமிழ் மிகப்பெரிய இலக்கிய வளம் உள்ள மொழி ஆனால் அதன் காலம் நேர்மையாக வரையறுக்கப்படவில்லை என்பதே பல விஷயங்களில் நினைக்க வைக்கிறது.

காரணம் அதனுடைய பழைய பாடல்கள் எல்லாமே புராண,வட இந்திய குறிப்புகளை கொடுத்துக் கொண்டே வருகிறது.அப்படியானால் இதை விட அவை பழையது என்ற கேள்வியை யாருமே இங்கு முன் வைக்க மறுப்பதன் காரணமென்ன?

மேலே உள்ள பாடல்களில் தேசம் என்ற வடமொழி சொல்லே தேயம் என்று மாறியிருக்கிறது.இன்று பல விஷயங்களை ஒப்பு நோக்கினால் வையாப்புரிப்பிள்ளை வாதங்கள் பொய்யாக தோன்றவில்லை.சங்காலத்தை பற்றிய மறுபரிசீலிக்க தக்க ஆய்வுகள் தேவை.

எனவே மொழியின் தொன்மையை கண்டறிவது ஆய்வாளர்களின் வேலை.இதை என்னைப் போன்ற அரைவேக்காடுகள் பேசுவதே அபத்தம்.எதையுமே வாசிக்காமல் அறிந்து கொள்கிற ஆர்வமில்லாதவர்கள் மனம் போனபடி மொழி பற்றி பேசுவதெல்லாம் அசிங்கம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


 i கீழடி முதல் இன்று வரை கிடைக்துள்ள அனைத்து கல்வெட்டுகளையும் தொகுத்து எழுத்துக்களை ஆராய்ந்தால் தமிழ்ன் உயிர் எழுத்தி 12ம் முழுமை பெற்றது 8ம் நூற்றாண்டில் தான், அப்போது தான் தொல்காப்பியம் எழுதியிருக்க முடியும்



-- Edited by Admin on Sunday 6th of October 2019 04:53:16 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு
Permalink  
 


வேதம் வேதபிரகாஷ் கீழடி ஆய்வுகள் பற்றி அடிப்படை விவரங்கள் தெரியாமல், அறிக்கைகள் படிக்காமல், வாத-விவாதங்கள் புரிவது ஏன்?

அதிகாரம், பணம், ஆள்பலம் எல்லாமே இருக்கிறதே, கீழடி பற்றி இந்துத்தவ வாதிகள் மாநாடு நடத்தலாமே? தைரியம் உண்டா?


அனுப்பட்ட மாதிரிகள் [samples] என்ன, எத்தனை அனுப்பினார்கள், அவற்றின் தேதி அறிக்கை எங்கே, என்றெல்லாம் தெரியாமல் பேசும்கூட்டத்தை என்ன சொல்வது?

டைனாசோர் முட்டை எல்லாம் கண்டு பிடித்தேன் என்கிற, இந்த்துவ வாதி, இதில் கவனத்தை செல்லுத்தலாமே? மாநாடு நடத்தலாமே?

ஆரிய-திராவிட சித்தாந்தங்களில் பிஸ்தாக்களாக உள்ளவர் ஏதாவது செய்யலாமே? சிகாகோவுக்கு எந்த காவியும் ஏன் போகவில்லை?

மாஃபா பாண்டியன் இவர்களது நண்பர் தானே, சைனாவுக்குச் சென்றது போல சிகாகோவிற்கு சென்று முழங்கி இருக்கலாமே?

சமூகவலை மாநாடு, கருத்தரங்கம், பட்டறை நடத்துபவர்களுக்கு, இதெல்லாம் ஜுஜுபி தானே? செய்யலாமே, செல்லம், கண்ணா, ராசா?

பாவம் அமர்நாத், எவர்சில்வர் பாத்திரங்களில் பெயர் பொறிப்பதே தமிழனின் சிறப்பு என்ற அளவுக்கு வந்து விட்டார்! இனி காவி என்ன சொல்லுமோ?

தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும், நற்றிணை, நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை எல்லாம் தேவையில்லை!

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து-தேவையில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"Inscriptions in what is now generally agreed to be an early form of Tamil date from approximately the last centuries before and/or the first centuries after the beginning of the Christian era. There are also a few Tamil inscriptions datable on paleographic grounds to the second through sixth centuries but Tamil's emergence as a full-fledged epigraphic language actually began during the reign of the Pallavas, some of whose copper plate inscriptions from the seventh century onward were bilingual in Tamil and Sanskrit."
This is Solomon the foremost authority on Indian epigraphy.
He says paleographic dating is notoriously unreliable and should be used as a last resort when no other method is available.
This is what he says: In the cases—all too frequent, especially among earlier inscriptions—where a record has no explicit date, or only a date whose absolute value cannot be definitely ascertained, epigraphists must resort to estimating the date on the basis of paleographic analysis by comparing the script of the undated record with specimens of similar scripts from other dated or datable inscriptions. Because this method is inherently imprecise, paleographic dating should in general be treated as a last resort. Other dating techniques, such as historical analysis based on references to persons or events of known date, or chronological analysis based on linguistic or archaeological data, may supersede or be used in conjunction with paleographic estimates. But
the fact remains that since so many inscriptions are undated or inadequately dated, paleographic dating, imperfect as it may be, must be employed in a great many cases.
எனவே தமிழ் நாட்டு பிராமி கல்வெட்டுகள் பானை ஓடுகளின் காலம் போன்றவை ஒரு குத்துமதிப்பாகத்தான் கணிக்கப் படுகின்றன என்பது வெளிப்படை. இதை வைத்துக் கொண்டுதான் நம் அறிஞர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் இந்த நிலைமைதான் என்பது உண்மை. ஆனால் நம்மைப்போல எல்லாம் இங்குதான் தோன்றியது என்று பிதற்றுவர்கள் மற்றைய பகுதிகளில் அதிகம் இல்லை. மேலும் கால ஆராய்ச்சி எங்கும் அரசியலின் ஓர் அங்கமாக இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த வெட்கக்கேடு. தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் குறுங்குழு நாஜி இனவாதம் பேசிக் கொண்டு திரியும் அவலமும் இங்கு மட்டும்தான்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard