New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியர் தமிழ் மரபு தொன்ம வரலாறு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தொல்காப்பியர் தமிழ் மரபு தொன்ம வரலாறு
Permalink  
 


தொல்காப்பியர் தமிழ் மரபு தொன்ம வரலாறு

 
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் வெளியீடு  -தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை -சி.கணேசையர்
தொல்காப்பியர் வரலாறு 
தொல்காப்பிய  மென்னும் இப்பேரிலக்கண  நூலைச்  செய்த தொல்காப்பியர்,  சமதக்கினி முனிவர்  புதல்வர்  என்பதும், இவர் யற்பெயர் திரணதூமாக்கினியார்   என்பதும்       இந்      நூற்பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று   அவர்   மகனார்   திரணதூமாக்கினியாரை
வாங்கிக்கொண்டு,"      என்று      நச்சினார்க்கினியர்     கூறுதலானே அறியக்கிடக்கின்றன. 
   இன்னும்,    அப்பாயிரத்துள்   'தொல்காப்பியன்' என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று பெயராயிற்று'  என்று  கூறுதலானே  காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி   புதல்வ   ரென்பதனானே   அந்தண  குலத்தவ  ரென்பதும்
அறியத்தக்கன.                                                   
ஜமதக்னி என்பவர் இராமாயணத்தில் வரும்   பரசுராமர்  தந்தை பெயர் என்பதைக் கொண்டும், தொன்மக் கதையான முச்சங்க கதைகள் வரலாற்றில் இல்லை என ஆய்வாளர்களால் நிராகரிக்கப் பட்டது. 
தொல்காப்பியர் காலம் பொ.ஆ.7ம் நூற்றாண்டு பிற்பகுதி என்பதில் பன்னாட்டு பல்கலைக் கழக ஆய்வாளர் இடையே தற்போது கருத்தொற்றுமை உண்டு.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு  பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70


தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39
tholl.jpg


எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு

கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 

பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம் பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்  பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
5%2BTholkaappiyar.png
5%2BTholkaappiyar1.png
http://www.tamilvu.org/ta/library-l0121-html-l0121ind-117120 

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை -சி.கணேசையர்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு

 
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை. அருகே மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில
Valluvar.jpg Mylap.jpg
 
 திருவள்ளுவர் பழைய படங்கள் தமிழர் மரபில்
vals.jpg
இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப் வெளியிட படம் கொடுக்க வெளிவந்தது
8TH%2BWORLD%2BTAMIL%2BCONFERENCE%2B%2528
இதில் திருவள்ளுவர் நெற்றித் திலகம் நீக்கப் பட்டது. பூனூலை மறைக்க மேல் துண்டு (அங்கவஸ்திரம்) இதற்கு படம் வரைந்த போது சிலபல அறிஞர்கள் வள்ளுவர் அந்தணர் - பூனூல் வரைய வேணும் என்ற போது, மேல் துண்டு வரைந்து மறைக்கப் பட்டது என தமிழ முதல்வர் மு.கருணாநிதி 2011 திருவள்ளுவர் நாள் விழாவில் சொன்னர்.
1512902173342_fdc.jpg
கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. // பைபிளில் இருந்து காப்பியடித்து திருக்குறள் எழுதினார் என உள்ளதை கிறிஸ்துவ   மதவெறியர் தேவநேயப் பாவாணர் கண்டிக்கவே இல்லை
pav.jpgpava.jpg 
 
Valu%2Bxta.png
 
 
1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு - 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி. 
9%2BPavanar1.png
தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்?  பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.
 
Thoma%2BGuna.jpg
 
தொல்காப்பியர் அந்தணர் - திரண தூமக்னி என்பது அவர் இயற் பெயர் என்பது வரலாறு.
தமிழர் மரபில் தொல்காப்பியர் படங்கள் என அறிஞர் நூல் அட்டையில்
Tholkappiyar.jpg 4_9473.jpg

tholkappiyarsilai_01.jpg

tholkappiyarsilai_visayarakavan07-e14698
 
 
ஆனால் தொல்காப்பியர் சிலை என கன்யாகுமரியில் வைத்து தமிழர் பண்பாட்டை இழிவு செய்துள்ளனர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard