New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமதி ஸ்ரீவைகுண்டம் குமரகுரு பள்ளி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருமதி ஸ்ரீவைகுண்டம் குமரகுரு பள்ளி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்
Permalink  
 


திருமதி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்

 

 

New Doc 2017-11-16 (2)_1திருமதி செந்தூர்கனி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுரு பள்ளித் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பில் செயல்பட்ட திரு நரசிம்மன் அவர்கள் ஊழல்கள் செய்ததால் அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திருமதி செந்தூர்கனி அவர்களை அன்னாருடைய இடத்தில் அரசு நியமித்தது. ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அடியோடு புதைத்து விட்டார் இவர். அடிப்படையில் இவருக்கு அனுபவமும் ஆற்றலும் கிடையாது. மாவட்ட கல்வி அலுவலராக செயலாற்ற எந்த தகுதியும் இவருக்கு கிடையாது. இப்படிப்பட்ட ஆள்தான் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தேவை போலும். கையெழுத்து மட்டுமே போட்டுக் கொண்டிருந்தார். தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அடிமை ஆனார். குறிப்பாக தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ் மற்றும் இசக்கி ஆகியவர்களின் அடிமையாக செயல்பட்டார். இவர்களின் நிர்வாகம் ஊழல் மட்டுமே நிறைந்தது. இவர்கள் நடத்தும் 19 பள்ளிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்டது. இப்பள்ளிகள் மைனாரிட்டி பள்ளிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து தங்களை மைனாரிட்டி பள்ளிகள் என்று கூறிக்கொண்டு ஊழல் இராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் ரிட் மனு 11252/2016ல் 28.06.2016 அன்று பிறப்பித்த ஆணையில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகையில் பிஷப் இவான் அம்புடோஸின் நிர்வாகத்தில் செய்ல்படும் 19 பள்ளிகளை ஆய்வு செய்து இப்பள்ளிகளில் நிலம், விளையாட்டிடம் மற்றும் மைனாரிட்டி உரிமைக்கான ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்து உரிய சட்டப்படியான ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. Court order in WP 11252 of 2016 dated 28.06.2016 உடனே மாறுவேடத்தில் செயல்படும் இசக்கி என்ற இவானின் எடுபிடி நேரடியாகவும் நெருக்கமானவர்கள் மூலமாகவும் திருமதி செந்தூர்கனி அவர்களை சரிக்கட்டி அலுவலகத்தில் பணிபுரியிம் சம்மந்தப்பட்ட உதவியாளர்களை உரிய முறையில் கவனித்து எடுத்துக் கூறி பள்ளிகளில் எல்லா ஆவணங்களும் சரியாகத்தான் உள்ளது என்று 31.01.2017ல் ஆர்டர் போடவைத்தார் Na.Ka.No.3930 -B4-2016 dated 31.01.2017. பள்ளிகளை  23.11.2016 முதல் 28.12.2016 முடிய உள்ள நாட்களில் பார்வையிட்டதாக அப்பட்டமான பொய்யையும் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி எழுதினார். அந்த அளவுக்கு அவர் கனமாக கவனிக்கப்பட்டிருக்கிறார். மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். உடனே நீதி வழுவாத இந்த மாவட்ட கல்வி அலுவலர் திருமதி செந்தூர்கனி மனுதாரரையும் சம்மந்தப்பட்டவர்களையும் விசாரணை செய்ததுபோல பாசாங்கு செய்து படம் காண்பித்து 24.02.2017 நாளிட்ட கடிதத்தை எழுதி இசக்கியின் நிர்வாகத்திற்கு சாதகமான ஆர்டர் பிறப்பித்து தப்பித்து விட்டார். Na.Ka.No.3930 -B4-2016 dated 24.02.2017

19 பள்ளிகளையும் நேரில் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் நேரில் ஆய்வு செய்யவில்லை.

The Tuticorin Diocesan Association மற்றும் The Roman Catholic Diocese of Tuticorin இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறு என்ற உண்மை தெரியாமல் உளறிக் கொட்டியிருக்கிறார்.

ரிட் மனு 570/75ஐ மேற்கண்ட இரண்டு NGO-க்களும் தாக்கல் செய்யவில்லை. ஆனால் The Roman Catholic Diocese of Tuticorin என்ற NGO தாக்கல் செய்ததாகவும் அது மைனாரிட்டி உரிமை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

R.C.No.24541/G3/76 dated 20.11.1976 என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக மைனாரிட்டி உரிமை அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இணை இயக்குநர் இப்படி ஒரு செயல்முறைகள் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார். ஆனால் திருமதி செந்தூர்கனி அவர்களோ இச்செயல்முறைகளின்படி மைனாரிட்டி உரிமை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எப்பள்ளிக்கும் முறையான நில ஆவணம் கிடையாது. இவர் இருக்கிறது என்கிறார். இப்படி பல உளறல்கள். கொடுமை என்னவென்றால் இவை எல்லாம் பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தெரியும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரியும். அவர்கள் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்?

இப்போ விஷயம் சீரியஸ் ஆகி விட்டது. மனுதாரர் பிரச்னையை விருகிறார்போல இல்லை. மறுபடியும் ரிட் மனு 6851/2017ஐ தாக்கல் செய்து மேற்படி மாவட்ட கல்வி அலுவலரின் ஆணை தவறானது எனக் கூறி நிவாரணம் வேண்டியுள்ளார். உடனே, மேற்படி விஷயத்தில் உதவி செய்த dominicமாவட்டக் கல்வி அலுவலரின் நிலமையை யோசிக்காமல், imagesபிஷப் இவானும் கண்காணிப்பாளர் இசக்கியும் தங்களது நிர்வாகத்தின் பெயரை மாற்றி மேற்படி பள்ளிகளை The Tuticorin Diocesan Association என்ற நிறுவனம்தான் நடத்துகிறது என்று கூறியுள்ளார்கள். மேலும் இவான் தனது பதவியை கார்பரேட் மேனேஜர் என்று மாற்றிக்கொண்டார்.  இவானுக்கு 75 வயதுக்கு மேல் ஆகிறது. ரிட்டைர்டு ஆகிவிட்டார். ஞாபக மறதி அதிமாகிவிட்டதால் முன்னுக்குப் பின் முரணான கையெழுத்துக்களை போட்டு வருகிறார். வேடிக்கையான மனிதராகிவிட்டார். இசக்கிக்கு இது நன்றாகத் தெரியும். இவானின் தற்போதய நிலமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பணவிஷயத்திலும் வேறு பல விஷயங்களிலும் சக்கை போடு போடுகிறார். தங்களது நிர்வாகத்தின் பெயரையே (Educational Agency) மாற்றியுள்ளார்கள் என்றால் பாருங்களேன். இதற்கு ஆதாரங்களை கீழே காணலாம். மேலும் பிஷப் இவானும் இசக்கியும் நிர்வாக மாற்றத்தையோ அல்லது தங்களது பதவி மாற்றத்தையோ கல்வித்துறையின் அனுமதியுடன் செய்யவில்லை. அவர்களாகவே முடிவெடுத்து அவர்களாகவே மாற்றியுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ அல்லது மாவட்ட கல்வி அலுவலரோ அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பணத்தை விரயமாக்குகிறார்கள்.

இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் இசக்கிதான். இசக்கி எந்த வேலைக்கு லாயக்குன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் பிஷப் இவான் இசக்கிகிட்ட முக்கியமான பொறுப்பை கொடுத்து பள்ளி நிர்வாகத்தையே சீரழித்துவிட்டார் என்று பலரும் பேசுகிறார்கள்.

Corporate Manager

 Promotion orderEsacki letter

 

 

 

 

சீராய்வு மனு 139/2007ல் மனுதாரார் The Roman Catholic Diocese of Tuticorin. இப்படி ஒரு பதிவு பெற்ற சங்கம் இல்லாத போதே பிஷப் இவான் அம்புரோஸின் தூண்டுதலின் பேரில் கற்பனையான பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் ஏமாற்றப்பட்டுள்ளது. Review Petition No.139 of 2007 decided by full bench on 12.11.2007

Marys

ரிட் மனுக்கள் 7587/2012 மற்றும் 11437/2017ல் மனுதாரர் The Tuticorin Diocesan Association. பாதிரியார் ஜெபநாதனும் பாதிரியார் சகாய ஜோசப்பும் இவைகளில் மனுதாரர்கள். இவர்கள் மேற்கண்ட 19 பள்ளிகள் உட்பட 261 பள்ளிகளை இந்த சொசைட்டி நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதை புரியாத மாவட்ட கல்வி அலுவலர் The Roman Catholic Diocese of Tuticorin தான் பள்ளிகளை நடத்துகிறது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இசக்கி கொடுத்துள்ள மைனாரிட்டி விளம்புகை சான்றில் ரோமன் கத்தோலிக் டய்சிஸ் ஆஃப் தூத்துக்குடி தான் பள்ளியை நடத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு NGO-க்களும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டவை. அவைகளின் பதிவுச் சான்றுகளை கீழே உள்ள இணைப்புகளை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Registration Certificate of the Tuticorin Diocesan Association S1 of 37-38 dated 14.04.1937

Registration Certificate of Roman Catholic Diocese of Tuticorin Reg.No.48/2016 dated 04.07.2016

தெளிவான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும் நிர்வாகம் செய்த/செய்யும் சட்டவிரோதங்களுக்கு  உறுதுணையாக இருந்த கல்வி அதிகாரி திருமதி செந்தூர்கனி மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவருக்கு கொடுத்த சம்பளத்தை திரும்ப பெறவேண்டும்.  தவறாக பிறப்பித்த ஆணைகள் மூலம் செய்த சட்டவிரோதங்களை களையும் வரை ஓய்வூதிய பலன்கள் கொடுக்காதிருந்தால் மற்ற அதிகாரிகள் தங்கள் பணியை கவனமாக செய்வார்கள்.

நூற்றுக் கணக்கான ஆவணங்களும் ஆதாரங்களும் ஆவே மரியாவிடம் உள்ளன. அனைத்தையும் பிரசுரிக்க முடியாததால் ஒரு சில ஆவணங்களை மட்டும் பிரசுரித்துள்ளோம். தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard