New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேளாங்கண்ணி மாதா


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வேளாங்கண்ணி மாதா
Permalink  
 


கிறுத்துவம் இந்து மதத்தை பார்த்து காப்பி
அடிப்பதை என்ன நாகரீயமாக , அதாவது 
பட்டும் படாமலும்
விடுதலை சிறுத்தை கட்சியின் 
ரவிக்குமார் எழுதுகிறார் ..

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஒரு குறிப்பு
- ரவிக்குமார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஓரிருமுறை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவுக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் 
இப்படி வெளி ஊர்களிலிருந்து நடந்துவரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். கேரளாவிலிருந்து நிறையபேர் வருவார்கள். அப்படியிருந்தும் செப்டம்பர் 8 ஆம் தேதி திருவிழாவின்போது 
சப்பரத்தைச் சுற்றி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு சுழல்வது மனிதக் கடல் பொங்கி வருவதுபோல் காட்சியளிக்கும்.

பாண்டிச்சேரியில் இருக்கும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் வேளங்கண்ணி திருவிழா குறித்து ஒரு சிறு நூலை வெளியிட்டிருக்கிறது. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த நூல் இந்தத் திருவிழாவின் வரலாற்றையும் அது நடைபெறும் முறைகளையும் அதில் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் விவரிக்கிறது.

Image may contain: text

வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதோ ஒரு நிறத்தில் உடையணிந்துகொள்ளவேண்டும். அவர்கள் நாற்பது நாட்கள் விரதமிருக்கவேண்டும். நடந்துவரும்போது செருப்பு அணியக்கூடாது. மது அருந்தவோ புகை பிடிக்கவோ கூடாது. அசைவ உணவையும் தாம்பத்ய உறவையும் தவிர்க்கவேண்டும்.வேளாங்கண்ணியை நெருங்கியதும் குளித்து புத்தாடை உடுத்தி அதன்பிறகே தேவாலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். 
இந்த நடைமுறைகள் இந்து மத வழக்கங்களைப்போல இருப்பதால் இதற்கு 18 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படியான வழக்கங்களை மட்டுமின்றி இந்து மதத்தின் சாதிய படிமுறையையும் மதுரை மிஷன் என அழைக்கப்பட்ட ஏசுசபை பாதிரிமார்கள் பின்பற்றினர். மதமாற்றம் தடையின்றி நடக்கவேண்டுமென்றால் இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் நினைத்தனர். அதை பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் கடுமையாக எதிர்த்தனர். கிறித்தவ வரலாற்றில் ‘ Querelle des Rites Malabar’ எனக் குறிக்கப்படும் அந்த சர்ச்சை இந்தியா முழுவதும் பரவியது. கடைசியில் போப்பாண்டவர் தலையிட்டு அதில் சமரசம் செய்துவைக்கும் நிலை ஏற்பட்டது.

“ இந்து மதத்தில் கோயிலுக்குப் போவதற்குமுன் குளித்து சுத்தம் செய்துகொள்வது வெறுமனே உடல் தூய்மை தொடர்பானதல்ல. அது , தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து விடுபடுவது. இதை மூட நம்பிக்கையாகக் கருதிய பாதிரியார்கள் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் நீராடுவதைத் தடுப்பதற்கு மாதா குளத்தை சிமெண்ட் பலகைகளால் மூடிப்பார்த்தனர். ஆனால் மக்களோ கடலில் நீராடிவிட்டு வர ஆரம்பித்துவிட்டனர்” என குறிப்பிடுகிறார் ப்ரிஜிட்.

இந்துக் கோயில்களில் நடக்கும் மண்டகப்படிகளைப்போலவே இங்கும் நடக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி துவங்கும் மண்டகப்படி செப்டம்பர் 10 வரை நடக்கிறது.

மண்டகப்படி பின்வரும் முறைப்படி நடப்பதாக ப்ரிஜிட் கூறுகிறார் ( பக்கம் 32-33) :

ஆகஸ்ட் 29 - ஆர்ய நாட்டு செட்டியார்
ஆகஸ்ட் 30 - அகமுடையார், தேவர்
ஆகஸ்ட் 31- பனைமர நாடார் 
செப்டம்பர் 1- தென்னைமர நாடார்
செப்டம்பர் 2- கருங்கண்ணி திருச்சபை
செப்டம்பர் 3- உடையார்
செப்டம்பர் 4- ஆங்கிலோ இந்திய குடும்பம்
செப்டம்பர் 5- திருச்சி எஸ்.எம்.அந்தோணி குடும்பம்
செப்டம்பர் 6- வேளாங்கண்ணி ஆர்ய நாட்டு செட்டியார் 
செப்டம்பர் 7- நாகை ஆர்ய நாட்டு செட்டியார் 
செப்டம்பர் 8,9,10- இரவு ஊர்வலம்- மரியஜோசப் குடும்பம், ஆசாரி, தச்சர் உள்ளிட்டோர்

ப்ரிஜிட்டின் நூலைப் படிக்கும்போதும், கிழக்குக் கடற்கரை சாலை நெடுகிலும் அணி அணியாக நடந்துபோகும் பக்தர்களைப் பார்க்கும்போதும் தமிழ்நாட்டில் ஆரோக்கிய மாதா வழிபாட்டை பரவச் செய்வதில்
உள்ளூர் வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் கலந்து புனையப்பட்ட நடைமுறைக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிகிறது. கூடவே, இந்து மதத்தின் சடங்குகளை உள்வாங்கியதோடு நின்றிருந்தால் சிக்கலில்லை, சாதிய படிநிலையையும் உள்வாங்கியதுதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பெருமளவில் கிறித்தவத்தைத் தழுவாமல் இருப்பதற்குக் காரணமோ என்ற ஐயமும் எழுகிறது.

புயலில் சிக்கித் தவித்த போர்த்துகீசிய மாலுமிகளைக் கரை சேர்த்த ஆரோக்கிய அன்னை, 
சாதியெனும் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களை கரை சேர்க்கக்கூடாதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கிறித்துவத்தில் சாதி இல்லை என யாராவது உங்களிடம் சொன்னால்..

பெந்தகொஸ்தே, சி.எஸ்.ஐ, ரோமன் கத்தோலிக் மற்றும் புரட்டஸ்டண்ட்..... இவையெல்லாம் என்னவென்று கேளுங்கள்....

இவர்கள் ஒருவருக்கொருவர் பொண்ணு கொடுத்துப் பொண்ணு எடுத்துக்கொள்வார்களா என்று கேளுங்கள்...

இவர்களுக்குக் கடவுள் ஜீஜஸ்ஸா இல்லை மேரிமாதா வான்னு கேளுங்க...

கிறித்தவத்திற்க்கு மாறிய பின் நாடார் சர்ச், வெள்ளாளர் சர்ச், தலீத் சர்ச் என்று ஏன் இருக்கிறது என்று கேளுங்கள்..

தேவாலயங்களில் ஏன் இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள் என்று கேளுங்கள்..

தேவாலயங்களிலும் ஜெபக் கூட்டங்களிலும் ஏன் இந்துக்களை விமர்சிக்கிறார்கள் என்று கேளுங்கள்..

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஏன் கிறித்தவர்களுக்கு முன்னுரிமை என்று கேளுங்கள்..

250 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய வெள்ளைக்காரர்களின் மதங்களை ஏன் பின்பற்றுகிறீர்கள் என்று கேளுங்கள்...

இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய யாரவது ஒரு கிருத்துவரைக் காட்ட சொல்லுங்கள்..

அவர்களை கிறித்தவர்களாகப் படைத்த ஜீஜஸ் நம்மையும் ஏன் கிறித்தவர்களாகப் படைக்கவில்லை என்று கேளுங்கள்....

அவர்கள் சாத்தான் சாத்தான் என்கிறார்களே அந்த சாத்தான் யார் என்று கேளுங்கள்..

ஏன் மசூதிகளுக்குச் சென்று அல்லது இஸ்லாமியர்களின் தெருவுக்குள் சென்று மத நோட்டிஸ் கொடுப்பதில்லை என்று கேளுங்கள்..

இப்படி நீங்கள் கேட்டால் கடைசியாக உங்களுக்கு ஒரு பெயர் வைப்பான்..

இந்து மதவாதி..



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

ஆவா பாவடை கிறிஸ்தவமே ஏமாற்றாதே பதில் கூறு*****
1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம்.இதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள்.மீதமுள்ள ஐந்து லட்சம் மக்கள் வன்னி,மன்னார் மற்றும் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தார்கள்.அந்த ஐந்து லட்சம் மக்களை வைத்துக்கொண்டு எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்?

1948 இல் பிரசாவுரிமை சட்டத்தை எதிர்த்து அதற்கு காங்கிரஸ் ஆதரவளித்த காரணத்துக்காக கிறிஸ்தவ செல்வநாயகம், அக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை.இன்றுவரை அதே தொடர்கதை .

எந்த மலையக மக்களை காரணமாக காட்டி கிறிஸ்தவ செல்வநாயகம் வெளியேறினாரோ அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ செல்வநாயகமோ கிறிஸ்தவ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் கிறிஸ்தவ மேலான்மைக்காக தேவைப்பட்டது.அவ்வளவுதான்.

தமிழ்த் தேசியம் சிங்கள இனவாதம் என தமிழ்மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய தமிழரசுக்கட்சி சைவதமிழர்களையும் ,சிங்களபெளத்த மக்களை பகைவார்களாக்கி மோதவிட்டதுடன் இந்த தமிழ்தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தது? தமிழ்தேசி அடையாளக்கூறுகளை ஏற்காத இவர்கள் தமிழுக்காக என்ன செய்தார்கள்?தமிழ் தேசியத்தை வலுப்படுத்த என்ன செய்தார்கள்?என் திட்டங்கள் இருந்தன?யாழ்ப்பாணத்தில் மேடைபோட்டு இனவாதம் பேசி சைவ இஞைஞ்ஞர்களை யுத்த களத்திற்கு அனுப்பி பலியிட்டதை தவிர என்ன செய்தார்கள்.?

பெரும்பான்மைத் தமிழர்கள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்தனர்.அந்த தமிழர்கள் தொடர்பாக என்றாவது தமுழரசுக்கட்சி சிந்திக்கவில்லை.வடக்கு கிழக்குக்கு வெளியே புத்தளம் மாவட்டம் இருந்தது.இங்கே தமிழர்களே புத்தளம்,சிலாபம் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.இவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்தார்களா?

அம்பாறை கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர்,பிரிவுக் காரியாதிகாரி,மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது.இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன.அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்தார்கள்.இதனால் இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை.இங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை.இன்னமும் அம்பாறை திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை.இன்றளவும் இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லை.தவறுகள் யாருடையது?

அன்றைய கல்லோயா கந்தளாய் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள்.அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் காணிகள் இல்லை.வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள்.இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும்.

1977 இலிலேயே ஐந்து லட்சம் வன்னி மற்றும் கிழக்கில் வாழந்தார்கள் என்றால் 1948-50 களில் தமிழர் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்.

தமிழத் தேசியம்,சிங்கள பேரினவாதம் என்று சொல்லியே தமிழ் அரசியல்வாதிகள் காலத்தைக் கடத்துகிறார்கள்.இதுவரைக்கும் தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தார்கள்.பழியை இலகுவாக அரசாங்கத்தின் மேல் போட்டுவிட்டு தப்பி ஓடுகிறார்கள்.

இன்று இஸ்லாமிய வெறுப்பும் வளர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மை இஸ்லாமியர்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள் என்பது உண்மை.அவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கில் வாழந்தபோதும் தென்னிலங்கையில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களைக் கைவிடவில்லை.சொந்த மொழி தமிழைக் கைவிடவில்லை.எத்தனையோ இடர்களை கண்டபோதும் இஸ்லாமிய ஒருமைப்பாட்டை கைவிடவில்லை.ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்.தெற்கே இஸ்லாமிய மக்களால்,மலையக மக்களால் தமிழ் காக்கப்பட்டது.மேற்கே புத்தளத்தில் தமிழ் அழிந்தது.எங்கே போனார்கள்?

1972 வரை யாழ் குடாநாட்டுக்கு வெளியே தமிழர்களுக்கு நல்ல பாடசாலைகள் இல்லை.நல்ல ஆசிரியர்கள் இல்லை.நல்ல கல்விபெற யாழ்ப்பாணமே வரவேண்டி இருந்தது.இதற்காக தமிழ் அரசியல்தலைவர்கள் செய்தது என்ன?நல்ல வைத்தியர்,வைத்தியசாலை கூட இல்லை.இதற்கெல்லாம் இனவாதமா காரணம்? அரசாங்கமா பொறுப்பு?

வடக்கே குடாநாட்டில் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை வளர்த்து சைவத்தமிழர்களை பலியிட்டு கிறிஸ்தவம் வளர்ந்தது, இழந்தார்கள் .தமிழத் தேசியம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? அன்றைய கிறிஸ்தவ செல்வநாயகம் தொடங்கி இன்றைய கிறிஸ்தவ ஆதிக்க வெறியர்கள் ஒரே நாடகங்களையே அரங்கேற்றுகிறார்கள். அவார்களை கவணியுங்கள்நிறுத்துங்கள்.ஏமாற்றியது போதும்.

அன்றில் இருந்து இன்றுவரை இதுவே தமிழர்களின் அரசியல்.கொள்கை இல்லை. செயற் திட்டங்கள் இல்லை.இனவாதம்,கிறிஸ்தவ மத வாதம் என்ற நெம்புகோலை வைத்து சைவத்தமிழர்களின் அரசியலை பந்தாக உருட்டி விளையாடுகிறார்கள்.இந்த இனவாதம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு அரசியலுக்கு தீனி போடுகிறது.கிறிஸ்தவமதவாதம் கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் தீனி போடுகின்றது

வடகிழக்கில் நிலங்கள் பறிபோவதற்கும் சைவதமிழர்களின் கலை ,கலாச்சார பண்பாடுகள் அரசாங்கம் காரணமல்ல . கிறிஸ்த தமிழ் அரசாங்க அதிகாரிகளும் ,கிறிஸ்தவ தமிழ் அரசியல்வாதிகளுமே காரணம்.எந்தவித திட்டங்கள்,செயற்திறன்கள் உங்களிடம் இல்லை.வெறுமனே அரசாங்கம்,சிங்கள இனத்தின் மேல் பழிபோடுவது கிறிஸ்தவ தமிழ் அரசியல்வாதிகள்தான் கிறிஸ்தவ செல்வநாயகம் முதல் ஆபிரகாம் சுமத்திரன் ஈறாக மக்களை சைவ
மக்களைஏமாற்ற வேண்டாம்.இவர்களின் இன ,மதவெறி வெறிகளை நம்பி சைவதமிழ் மக்களும் ஏமாறவேண்டாம்.கிறிஸ்தவ கூடாரங்களுக்கு முடிவு கட்டுங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=952479084941173&id=100005372708652

Image may contain: 5 people, text
Image may contain: 1 person, sunglasses and closeup
Image may contain: 1 person, smiling
Image may contain: one or more people and crowd
Image may contain: one or more people and people standing
+4
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard