New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கிருத்துவ தொண்டு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கிருத்துவ தொண்டு
Permalink  
 


  1. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:47 pm

    திரு.அரவிந்தன் நீலகண்டன்,
    மல்கோத்ராவுடன் நீங்கள் இணைந்து எழுதிய “Breaking India” நூலை வாங்கிப் படித்து சென்ற ஆண்டின் தொடக்கத்திலேயே சில மடலாடற்குழுக்களில் இதன் வழு நிறைந்த போக்கைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தேன்.
    சூன் 2011 வரை தமிழகத்தில் பல அறிஞர்களுக்கு இந் நூல் பற்றித் தெரியாது.இந் நூலில் என்னையும் அறிஞர் சார்சு கார்ட்டு குறித்தும் கூறியுள்ள கருத்துகளையும் மின்னஞ்சல் வழிப் பகிர்ந்திருந்தேன்.எனினும் தாங்கள் கூறியுள்ள தவறான கருத்துகளை மறுத்துத் தங்களுக்கே எழுதவேண்டும் என அப்போது கருதவில்லை.அதற்குக் காரணம்,நீங்கள் கூறிய தவறான கருத்துகளை மறுத்து கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்கள் எழுதிவிட்டமையும் எழுத்தாளர் செயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் திரு.குமார் குமரப்பன் உண்மைகளைத் தெளிவுபடுத்தியமையுமே ஆகும்.
    ஆனால் இருவரின் மறுப்புகளையும் பொருட்படுத்தாது மீண்டும் பழைய பொய்களையே தமிழ்ப்பதிப்பிலும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பது வருந்தத்தக்கது.
    ஒரு பொய்யையே ஒன்பது முறை திருப்பிக் கூறினால் உண்மை என மக்களை நம்பவைத்துவிடலாம் எனும் கோயபல்சு வழியைப் பின்பற்றிய இட்லர்நெறியையே உங்கள் நெறியாகக் கொண்டுள்ளீர்கள்.

     
  2. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:48 pm

    என்னைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் அதற்கான என் மறுப்பையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.என்னிடம் ஆங்கில மூலம் கணினியில் உள்ளதால் அதனையே இங்குக் காட்டுகிறேன்.

    In 1996, the University of California at Berkeley launched a Tamil Chair, calling it ‘the first of its kind – – in an American University’. The person hired for the Chair was not a native Tamil speaker, but Professor George L. Hart, whose pro-Dravidian politics were mentioned above. One of the major campaigners and fund raisers for the Berkeley Chair was the Federation of Tamil Sangams of North America (FeTNA), whose links with Tamil nationalist movements are explained later in this Chapter. The first visiting Professor invited to Berkeley as part of the work done by the Chair was Professor Ilakkuvanar Maraimalai from Chennai. Ilakkuvanar had previously visited the U.S.A. in 1987 to attend a linguistic conference. At that conference, he expressed his delight to have learned ‘many things about the Mormon religion and the Church of the Latter Day Saints’. The Mormon Bible reminded him ‘of a prominent religious literature in Tamil, TIRUVACHAGAM’. Like a true Dravidianist, Ilakkunavar believes that the Government of India discriminates against its Tamil citizens and that ‘India remains North’, and that present-day India is a ‘torture camp for religious minorities’. His writings feature topics like ‘sexual assault on Christian nuns’ in India, and, ‘I love America’. He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkunavar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India. Hart used the Berkeley Tamil Studies Chair to boost those scholars who emphasise the separateness of Tamil from Indian traditions. He accomplishes this by organizing forums where such scholars come together to reinforce Dravidian separatist identity politics in India. For instance, he organized a meeting of Western Tamil educators featuring Thomas Malten, whose Tamil Studies department at Cologne University was closely associated with Germany’s Lutheran Church (whose activities in India are discussed in Chapter 17 and also Appendix H). Another guest was Norman Cutler of the University of Chicago, who studied Tamil under an American National Defence Foreign Language fellowship and whose work is considered to have opened up for U.S. policymakers ‘an India that does not speak Hindi and looks back to nearly 2,000 years of tradition outside of Sanskrit’. Tamil conferences organized by the Berkeley Tamil Chair often feature papers that deconstruct traditional Tamil images of devotion, in the same manner as is found in modern Dravidian politics. For example, a paper by Hart interprets RAMAYANA as ‘a strange work’ filled with contradictions between ‘Brahminical thought’ and ‘martial valour’. He sees RAMAYANA primarily and yet ‘subtly’ as a way to oppress the Dravidians. Hart claims that this was later reflected in the way that the ‘great military and imperial power of the Cholas was leavened by the Brahminical system that they supported’. This nuanced anti-Brahminism is camouflaged in academic language. Hart stresses that his interpretation ‘brings to mind some modern political themes’. In this manner, India’s classics are DECONSTRUCTED as a method to tease out the oppression inherent in Indian civilization.
    அறிஞர் சார்சு கார்ட்டு அவர்கள் பற்றியும் என்னைப் பற்றியும் நீங்கள் கூறியுள்ள “குற்றச்சாட்டுகளின்”மையப் பகுதி என இதனைக் கருதலாம்.உங்கள் ஆங்கில நூலின் பத்தாவது இயலில் (பக்.167-169) இப் பகுதி இடம் பெற்றுள்ளது.

     
  3. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:50 pm

    1997-1998 கல்வி ஆண்டில் நான் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினேன்.ஆனால் என்னைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நீங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள தரவுகள் 2008-இலும் அதன்பின்னும் வலைப்பூக்களில் அமைந்த என் பதிவுகளேயாகும்.
    பிரிகாம்யங் பல்கலைக் கழக மாநாட்டில் மார்மன் சமயம் பற்றி நான் பேசியதாக உங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படையிலேயே இந்தக் கருத்து பிழையானது.நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள என் வலைப்பதிவில் தெளிவாக
    “My paper” Government Administrative terms -A Morphological study” got approved by the conference committee.”
    என்று கூறியுள்ளமையைக் கவனிக்காமல் நான் ஏதோ சமயப்பரப்புரை நிகழ்த்தியதாக எழுதியுள்ளீர்கள்.
    Deseret Language and Linguistic society, எனும் ஆராய்ச்சிநிறுவனம் பிரிகாம்யங் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்திய மொழியியல் மாநாட்டில் கலந்துகொண்ட போது என் பயண அனுபவங்களை 14/6/2008-இல் நான் பதிவு செய்துள்ளேன்.அந்தப் பதிவில் ஊட்டா மாநிலத்தில் பெண்கள் முழங்கால் தெரிய உடையணியக் கூடாது எனவும் மதுவகைகள்,காப்பி,தேநீர் போன்றவை அங்குப் பருகப்படுவதில்லை எனவும் நிலவிய சூழல் கண்டு வியந்து அதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் மார்மன் சமயமே எனவும் அறிந்தேன்.அவர்கள் பெண்மையைப் போற்றும் திறத்தினைப் பாராட்டியதுடன் மார்மன் விவிலியத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதால் காதலாகிக் கசியும் நம் நெறியை அந்த மறையில் காணநேரிட்டதையும் மாணிக்கவாசகர் நெஞ்சை முன்னிலைப்படுத்திப் பாடிய திருவாசகப் பாடல்களில் இறைவன் ‘தேன்’என உருவகப்படுத்தப்பட்டுள்ளமை போல் மார்மன் திருமறையிலும் குறிப்பிடப்பட்டுள்ள தற்செயலான் ஒப்புமைகள் குறித்தும் என் பதிவை வலைப்பூவில் (14/6/2008) பதிந்திருந்தேன்.இக் கருத்தை நான் அங்குப் பேசவும் இல்லை;அதற்குரிய அமைப்புகளும் அங்கில்லை.தாயகம் வந்தபின் மார்மன் விவிலியத்தைப் படித்து அதன்பின் எழுந்த என்
    கருத்துகளையே பதிவு செய்திருந்தேன்.நீங்கள் மாநாட்டில் அவ்வாறு நான் பேசியதாக உங்கள் நூலில் பதிவுசெய்துள்ளமை அடிப்படைப் பிழை.
    என் கருத்து ’ஒப்பீடு’ என்னும்வகையில் பதிவுசெய்வத்ற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது.நீங்கள் குறிப்பிடும் ‘சாமி’கள் பற்றி எனக்குத் தெரியாது.ஒப்பீடு வேறு;ஒப்பாய்வு வேறு.இப்போதும் என் கருத்தில் -ஒப்பீட்டில்- எப் பிழை இருபதாகவும் கருதவில்லை.மார்மன் சமய வரலாறு கூறி அச் சமயத்தை இழிவுபடுத்த முயன்றுள்ளீர்கள்.
    அப்பரும் சம்பந்தரும் இயற்றிய பாட்லகளை மேற்கோள் காட்டுகிறோம்;அப்போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறிய ஓலக்குரலை யாராவ்து பொருட்படுத்துகிறோமா?இதனைச் சொல்லப்போனால் உடனே உங்களுக்குச் சீற்றம் பிறக்கலாம்.எந்தச் சமயவரலாறும் குருதிக்கறை தோய்ந்ததாக் உள்ளமையே உலகவரலாறு.இதில் மார்மன் சமயம் பற்றிய பழிப்புரை எதற்கு?அதனைச் சொல்லி என்னையும் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்களையும் ப்ழிக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை.
    அப்படிப் பழிப்புரை கூறுவதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமேயாயின் நாங்கள் இருவருமே அதற்குக் குறுக்கே நிற்கப்போவதில்லை.
    இந்தியா என்றாலே சமற்கிருதம் மட்டுமே வழங்கும் மொழி என்னும் எண்ணம் பிழையானது என்பதை அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நான் குறியதாக என் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளமையே உங்கள் சீற்றத்திற்குக் காரணம்.

     
  4. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:51 pm

    என் வலைப்பதிவுக்கு வழங்கப்பட்ட கருத்துரைகளில்
    Thank you for this showing of your love for my country. I have been to most of the places you mention, and they are truly beautiful. I’d like to someday visit all the beautiful places of your country. By the way, I have a Master’s degree in linguistics, and while I haven’t studied the languages of India, I am well aware that there are more than Sanskrit, and that Sanskrit is not used in everyday speech! i’m glad you could educate some American students; I hope they will pass your teachings on. I’m not a believer in the Mormon faith either, but I do applaud their emphasis on family ties. Thanks again for this wonderful piece; I’m looking forward to the next part!
    என்னும் கருத்து உங்களுக்குக் கசப்பாக இருந்திருகலாம்.ஆனால் இந்தக் கருத்தாடல் அனைத்தும் நான் கலிபோர்னியாவிலிருந்து வந்ததன்பின் -பதினோராண்டுகளின் பின்-இணையத்தில் நிகழ்ந்தவை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
    “The Rape of a Christian Nun-A National Shame“
    என்னும் என் கவிதை வலைப்பதிவில் வெளிவந்துள்ளமை உங்களுக்கு ஆறாச் சினததை அளித்துள்ளது.
    A Horrible crime,
    A dastardly act,
    About which
    The whole of India is ashamed;
    எனத் தொடங்கும் என் கவிதை சமயவெறியினால் நிகழ்ந்த வன்கொலை குறித்த என் மனத்துய்ரைப் பதிவுசெய்யும் முயற்சியே.அக்தோபர் 7,2008-இல் வெளிவந்த இந்த வலைப்பதிவை அறிஞர் சார்சு கார்ட்டு பார்த்திருக்க வாய்ப்பில்லை.அங்குப் பணியாற்றிவிட்டு வந்து பதினோராண்டுகளின் பின் நான் அவரை மகிழ்விப்பதற்காக இப்படி எழுதியதாக நீங்கள் கருதுவது பொருந்துமா?
    இப் பதிவுக்கு அமெரிக்க இளைஞர்கள் அளித்துள்ள கருத்தீடுகள் தங்களையே தாக்குவதாகக் கருதிவிட்டீர்களா?
    “This is so typical of fanatical religious terrorists, and it won’t stop unless all decent Indians stand up in protest against the violence, the religious intolerance, and the passiveness of the government. The people of India are in my prayers.”
    என்னும் Lisa Renee அவர்களின் கருத்தும். (10/8/2008 நாளிட்டது)
    “don’t know if one should leave this ‘change’ and ‘weeding out’ to the next generation…although hopefully they are as appalled as are you and i…so much evil done in the name of religion is really done out of greed and a thirst for power…sometimes merely xenophobic meanness!
    i hadn’t heard of this before your piece…thanks for spreading the word.”
    என்னும் Oonah merriwether அவர்களின் கருத்தும் (10/8/2008 நாளிட்டது) உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் கசப்பாகத் தான் உள்ளது.காரணங்கள்தான் வெவ்வேறு.

     
  5. Maraimalai Ilakkuvanar on January 11, 2012 at 4:51 pm

    தாங்கள் அமெரிக்கமண்ணில் பரப்பவிரும்பும் கருத்துகளுக்கு நேரெதிராக என் வலைப்பதிவுகள் பணியாற்றியமை தங்களுக்கு வெறுப்பை வழங்கியுள்ளதில் வியப்பில்லை.
    ஆனால் 2008-இல் நிகழ்ந்த இந்தக் கருத்தாடலுக்கும் 1997-இல் நிகழ்ந்த என் பணிநியமனத்திற்கும் நீங்கள் முடிச்சுப் போடுவதுதான் உங்கள் வாதத்தின் பொய்ம்மையையும் பொருந்தாமையையும் படம்பிடித்துக்காட்டுகிறது.
    He praised the ‘nobility and greatness of George Hart’, and in turn, Hart wrote to the Government of India, supporting Ilakkuvanar’s Dravidianist positions, including his opinions on the status of Tamil studies in India.
    என நீங்கள் எழுதியுள்ளமை முற்றிலும் பிழையான கூற்று.
    19/6/2008-இல் ”George L.Hart III- a Pride of the Nation” என வலைப்பதிவு வெளிவரப் போகிறது என எதிர்பார்த்தா ஏப்ரல் 11-2000 அன்று தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய தம் வலைப்பதிவை அறிஞர் சார்சு கார்ட்டு வெளியிட்டிருப்பார் எனக் கருதுகிறீர்கள்?
    ஏறக்குறைய இரண்டு கோடிப்பேர் உலகெங்கும் இந்த வலைப்பதிவைப் படித்துத் தமிழின் செம்மொழித் தகுதிப்பேற்றை அறிந்துகொண்டதும் இந்திய அரசுஅறிஞர் சார்சு கார்ட்டு அவர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு வழங்கியமையும் தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளமை புலனாகின்றது. சமற்கிருதத்திற்குப் போட்டியாகத் தமிழையும்-நீச பாசையாகிய தமிழையும்-செம்மொழி என்றால் பாவம் உங்களால் தாங்கிக் கொள்ள இயலாதுதான்.
    தமிழ் செம்மொழித் தகுதிப்பேற்றை அடைந்தமைக்கு சார்சு ஆற்றிய பணியும் பங்களிப்பும் அவரைப் பழிதூற்றவும் “திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு” உறுதுணை பெரிந்ததாகக் குற்றம் சாட்டவும் உங்களைத் தூண்டியுள்ளது.இதற்காக இன்னும் மால்டன்,நார்மன் கட்லர் ஆகியோரையும் காரணமின்றிக் குறைகூறியுள்ளீர்கள்.
    ஆய்வுத்திறமும் கல்விப்பெருமிதமும் வாய்ந்த அறிஞர்களை உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப முத்திரை குத்துவது எவ்வகையில் முறையானது?
    இந்துசமயத்தைக் காப்பதாகக் காட்டிக்கொண்டு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும்பொருள் திரட்டிவரும் உங்கள் முயற்சிக்கு நான் குறுக்கே நிற்கப்போவதில்லை.ஆதாரமின்றியும் காரணமின்றியும் அவதூறுகளை அள்ளிவீசினால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கிருத்துவ தொண்டு
Permalink  
 


பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

அந்த மாநாட்டுக்கு நீங்கள் சென்ற போதுதான் மார்மான்களை குறித்து அறிந்தீர்கள் என நீங்களே கூறியுள்ளீர்கள். “The next three days the conference went on in a fine manner.I learnt many things about the Mormon religion and the Church of the Latter day saints.” (” அடுத்த மூன்று நாட்களும் மாநாட்டில் நல்ல முறையில் கழிந்தது. நான் மார்மான் மதம் குறித்தும் பின்னாளைய புனிதர்கள் சபை குறித்தும் தெரிந்து கொண்டேன்”) இதற்கு பொருள் என்ன? மாநாட்டில் நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்பதுதானே… இதனைத்தான் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

சரி //இக் கருத்தை நான் அங்குப் பேசவும் இல்லை;அதற்குரிய அமைப்புகளும் அங்கில்லை.தாயகம் வந்தபின் மார்மன் விவிலியத்தைப் படித்து அதன்பின் எழுந்த என் கருத்துகளையே பதிவு செய்திருந்தேன்// என சொல்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் எழுதியிருப்பது அவ்வாறல்ல, //The next three days the conference went on in a fine manner.I learnt many things about the Mormon religion and the Church of the Latter day saints.The Mormon Bible reminded me of a prominent religious literature in Tamil,Thiruvachagam. The redundancy of the words Heart and Honey in Thiruvachagam, can be found easily by any reader of it. Likewise the Mormon Bible uses Heart and Honey many times.A comparative study of these two works may be of an immense benefit to scholars in theology. The Mormon religion and its ways attracted me very much.The motto”Family for ever” and the respect given to the Lady of the Family i.e.wife are wonderful.The priest in Mormon church told:God felt that he should accompany us all the times and hence he created the relation called Wife. .//

ஆக இந்த எண்ணங்கள் அங்கே எழுந்ததாகவும் இவ்விசயங்களை அங்கே மார்மான் பாதிரியாரிடம் பேசி கேட்டறிந்ததாகவுமே கூறியுள்ளீர்கள். ஆனால் இப்போது அதற்கான அமைப்புகள் அங்கு இல்லை என கூறியுள்ளீர்கள். இந்த முரணை சற்று ஆராய்ந்த போது மற்றொரு விசயம் தெரிந்தது.

உங்கள் கட்டுரையில் //Brigham Young university is one of the prominent univertsities in US// என்று சொல்லியுள்ளீர்கள் இந்த பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பிரசித்தமான பல்கலைக்கழகங்களில் ஒன்று என்று மட்டும் சொல்லியுள்ள நீங்கள் அது ஒரு மத சார்பு -பிரச்சார கல்வி நிறுவனம் என்பதை ஏனோ சொல்லவில்லை.

ஆனால் அந்த பல்கலைக்கழகம் அதன் ‘மிஷன் ஸ்டேட்மென்டில்’ தெளிவாகவே சொல்கிறது: “, the goal of Brigham Young University has been to offer “a new kind of education” for Zion, one based on precepts “revealed by the Lord,” as Karl G. Maeser once remarked. Today, BYU is widely recognized for its deep commitments to inspired religious values and rigorous intellectual learning” (http://aims.byu.edu/)

ஆக இந்த மதச்சார்புடைய பல்கலைக்கழகம் உருவாக்கிய அமைப்பில் நீங்கள் பேசினீர்கள். உங்கள் குறிப்பிட்ட ஆய்வுத்தாள் மதச்சார்பற்ற விசயமாக இருந்தது என்பது உண்மைதான். அது ஒரு மொழியியல் கருத்தரங்கு என்பதை நாங்களும் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் போன இடத்தில் உங்கள் பார்வை எப்படி இருந்தது என்பதையே கூறியுள்ளோம்.

அடுத்தது: 2008 இல் நீங்கள் எழுதப் போவதை நினைத்தா 2000 இல் ஜியார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார் என வினவியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் எழுதியுள்ளதை பாருங்கள் :

//George Hart suggested my name for the nomination as the First Visiting Professor there. I found no words to describe the nobility and greatness of George Hart in remembering me and recommending me for a great job which is certainly a golden opportunity for any Professor in India. I determined to work to the fullest satisfaction of George Hart, Kausalya Hart, the University authorities and the Tamil community there at California// ஜார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) என்னை முதல் வருகை பேராசிரியராக முன்வைத்தார். சியார்ச்சு கார்ட் என்னை நினைவில் வைத்து என்னை இந்த பெரிய வேலைக்கு பரிந்துரை செய்த -அது நிச்சயமாக ஒரு இந்திய பேராசியருக்கு பொன்னான வாய்ப்பேதான் -சியார்ச்சு கார்ட்டின் அந்த பெருமையையும் பிரபுத்தன்மையையும் – கூற வார்த்தைகளே எனக்கு இல்லை.//

இதை நீங்கள் கடந்த காலமாக அதாவது 1997 இல் அவர் உங்கள் பெயரை சிபாரிசு செய்த போது அவரது பிரபுத்துவத்தையும் மாட்சியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லாத அளவுக்கு உணர்ந்து அதன் காரணமாக சியார்ச்சு கார்ட்டுக்கும் கவுசலியா கார்ட்டுக்கும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் கலிபோர்னிய தமிழ் மக்களுக்கும் திருப்தி அளிக்கும் படி வேலை செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளீர்கள். இந்த 1997 செயலுக்கு பிரதியுபகாரமாக சியார்ச்சு கார்ட்டு இக்கடிதத்தை எழுதியதாக நாங்கள் கூறியுள்ளோம். உங்கள் வார்த்தைகளை அப்படியே போட்டால் அது தாங்கள் ஏதோ அவரது பரிந்துரைக்காக புளகாங்கிதம் அடைந்து அவரை பாரட்டுவதாக காட்டும் என கருதியே தங்கள் அவ்வாசகங்கள் மேலே சொன்ன விதத்தில் சுருக்கப்பட்டன. அடுத்த பதிப்பில் மேலே உள்ள தங்கள் மேற்கோளை -அதாவது 1997 இல் நீங்கள் அடைந்த உணர்வை – அப்படியே உங்கள் வார்த்தைகளிலேயே போட்டுவிடுகிறோம். சுட்டியமைக்கு நன்றி.

அப்படியே நீங்கள் அமெரிக்காவில் உரையாற்றியது ஒரு மதச்சார்பற்ற கல்வி அளிக்கும் பல்கலைக்கழகத்தில் அல்ல, மாறாக மதச்சார்புடைய மார்மான் கல்வி அமைப்பு ஒன்றில் என்பதையும் மறக்காமல் சேர்த்துவிடுகிறோம். தாங்கள் சிரமமெடுத்து இவற்றை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

இத்தரவுகள் விட்டுப் போனதால் தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமெனில் அதற்கு மன்னிப்பும் கோரிக் கொள்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. ந.உமாசங்கர் on January 12, 2012 at 11:27 am

    பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    திருவாசகத்தைத் தமது கிறித்துவ மதமாற்ற முயற்சிகளுக்குக் கிறித்துவப் பாதிரியார்கள் பயன்படுத்த முயன்று வந்தது வரலாறு. அதன் தொடர்ச்சியாகவே நீங்கள் இந்த Brigham Young university நடத்திய மாநாட்டில் பங்கேற்று வந்திருக்கிறீர்கள் என்றும், அதன் தொடர்ச்சியாகவே பின்னாளில் தங்களை முதல் வருகை பேராசிரியராக ஜார்ஜ் ஹார்ட் (சியார்ச்சு கார்ட்டு) முன்வைத்தார் என்றும் தற்போது ஐயம் கொள்ளத் தகுந்த முகாந்திரங்களை இங்கே நீங்களாகவே பதிவு செய்திருக்கிறீர்கள். அவ்வாறு கிறித்துவ மதமாற்றத்துக்கு ஒரு கருவியாக நீங்கள் மறைமுகமாகச் செயல்பட முன்வரவில்லை என்று நிறுவும் கடமை உங்களுக்கு இருக்கிறது.

    உங்களை இதே தளத்தின் கீழ்க்காணும் கட்டுரையைகளையும் படித்துப் பார்க்குமாறு கோருகிறேன். நீங்கள் பயணிக்கும் பாதை ஜி.யு.போப் அவர்கள் வகுத்தது என்பதை உணர்வீர்கள்.

    http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

    http://www.tamilhindu.com/2009/10/lament-of-christ-a-hindu-view/

     
  2. ந.உமாசங்கர் on January 12, 2012 at 11:35 am

    பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

    தெய்வத் தமிழ் என்றென்றும் செம்மொழியே. அரசியலாரோ அல்லது அரசுகளோ அறிவிப்பதனால் னொரு மொழி செம்மொழி ஆவதில்லை.

    செம்மை என்பது சிவபெருமானைக் குறிக்கும் சொல். செம்மை எனபது தொன்மை, அழகு உள்ளிட்ட பொருள்களையும் குறிக்கும். சிவனின் மொழியான தமிழ் என்றென்றும் செம்மை + மொழி செம்மொழியே. இதனை எந்த மனிதப் பிறவியும் செம்மொழியாக ஆக்கமுடியாது, ஆக்கவும் தேவையில்லை.

    தமிழையும் சமஸ்கிருதத்தையும் பிரித்துப் பேசும் சதிவலையை எந்தனை நாள்தான் நம்புவீர்களோ ?

    உங்களை இதே தளத்தின் கீழ்க்காணும் கட்டுரைகளைப் படிக்கக் கோருகிறேன்.

    http://www.tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-1/
    http://www.tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-2/
    http://www.tamilhindu.com/2009/06/veda-tamil-shaivam-3/
    http://www.tamilhindu.com/2009/07/veda-tamil-shaivam-4/

     
  3. M.Sadasivan on January 12, 2012 at 2:59 pm

    ஐயா இலக்குவனார் அவர்களுக்கு வணக்கம்! நான் ஒன்றும்ம் அறிவு கொழுந்து இல்லை, தத்தக்க பித்தக்க என்று தமிழ் பேசும் அளவுக்கு, தமிழ் வலைத்தளம் பார்த்து படிக்கும் அளவுக்கு உண்டான கல்வி திறமையே உண்டு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தும் ஆங்கிலம் வரவில்லை, ஆதலால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர் என்றே புரிந்து கொள்ள முடிய வில்லை, ஆனால் நீர் சொல்லியுள்ள “ஆதாரமின்றியும் காரணமின்றியும் அவதூறுகளை அள்ளிவீசினால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படலாம்” இந்த வரிகள் புரிகிறது, அது மிரட்டல் தொனியில் உள்ளது. அதிலும் “தேவையில்லாத சிக்கல்கள்” இது வன்முறையை, பழி வாங்கலை பொதிந்து வரும் வார்த்தைகள் அல்லவா?

    கடுந்தமிழ் பிரயோகிக்கறேன் என்று எழுதி ரொம்ப சிரம படுத்துகிறீர், நீர் பேசும்போது இப்படித்தான் பேசுகிறீரா? கன்னியாஸ்திரி கற்பழிப்பு என்று தான் கண்ட கனவை சொன்னான், அதை கேட்டு கவிதையும் வடித்தீர், அது உண்மையில்லை என்று முடிவான பின்பு அந்த பொய்யர்களின் முகத்திரையை கிழித்து உலகுக்கு உண்மையை காட்டினீரா? இந்த உலகில் அன்பை போதிக்கும் மதம் என்று சொல்லியே சிலுவை போர் மூலம் அதிக எண்ணிக்கையில் படுகொலை நடத்தினார்களே! அதை கண்டித்து ஏதாவது எழுதினீரா? எங்காவது பேசினீரா? அதுமாதிரி இந்து மதத்தின் பெயரிலோ வர்ணாசிரம பெயரிலோ இந்தியாவிலோ, இந்துக்களின் பெயரில் வெளிநாடுகளிலோ வன்முறைகள் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதா?

    ஜாதி முறையை சில பிழைப்பு வாதிகள் பயன்படுத்தினால் அதற்கு வர்ண முறை என்ன செய்யும்? ஓய்! பத்து வருடத்திற்கு முன் ஒரு வீட்டில் போய் பொங்கலுக்கு புது பானை வாங்கி வந்தீர், இப்போது இந்தியா வந்ததால் பொங்கல் வைக்க பானை வேண்டி வந்ததால் அந்த நபருடைய நேர்மை, அன்பு, திறமை முதலியவற்றில் நம்பிக்கை வைத்த நீர் அதே வீட்டிற்கு பானை வாங்க போவீரா? இல்லையா? போன இடத்தில் அவர் நெடு நாளைக்கு முன்பே தவறி விட்டார், அவர் மகன் அல்லது மகள் மருத்துவ பணி செய்கிறார், அல்லது அந்த தொழிலை சரியாக அல்லது சிறப்பாக செய்ய தெரியாததால் வேறு தொழில் செய்கிறார்கள், அதகாக நீர் வருத்தபடுவீரா? வர்ணாசிரம முறை இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டுமென்றோ, சரியாக தெரியாவிட்டாலும் பாரம்பரிய தொழிலைத்தான் செய்ய வேண்டுமென்றோ சொல்லியிருக்கிறதா?

    மார்மன் மதம் மட்டும்தான் உடுக்க சொல்கிறதோ? இந்து மதம் அவிழ்த்து இட்டு கொண்டு திரியவா சொல்கிறது? உம் வீட்டில் ஒரு பிரச்சினை, உமது மகன் அல்லது மகள் உம்மை மதிக்க வில்லை, அல்லது சரியாக உடுக்க வில்லை, பேச்சு நாகரீகம் இல்லை, அப்போது என்ன செய்வீர்? சரிப்படுத்த முயல்வீரா? இல்லை வீட்டை துறந்து ஓடுவீரா? ஓய்! குடும்ப விசயத்தில் சரிப்படுத்த முயலும் நீர் தேசம் அல்லது மதம் என்று வரும் போது மட்டும் அடுத்த நாட்டு சின்காரிகளை எதற்கு அழைத்து ஆதரவு காட்டுகிறீர் என்பதோடு மட்டுமில்லாமல், நம் கூட உள்ளவர்களின் மன வலிமையை கூட நம் நாட்டில், மதத்தில் ஒன்றுமில்லை, மனித வெறுப்புதான் நம் மதத்தில் உள்ளது என்பது போல் பேசி அவர்களையும் அந்நிய மதத்துக்கு மாறும் அடித்தழ வேலைகளை எதற்காக செய்து திரிகிறீர்? உம் பிள்ளைகள் சரி இல்லை என்றால் அடுத்த நாட்டுக்காரனுக்கு உம் வீட்டை எழுதி வைப்பீரா? நம்மிடம் தவறு உண்டு, அதை களைய அடுத்த நாட்டு காரனின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை.

    தயானந்த சரஸ்வதி, ராம கிருஷ்ணர், காந்தி, முத்துக்குட்டி சாமியார், நாராயண குரு, ராஜாராம் மோகன் ராய்,…….. இவர்கள் எல்லோரும் நாம்மிடம் இருந்த குறைகளை கழைய போராடி ஜெயிக்க வில்லையா? அதுபோல் ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்ய ஆர்வம் கொள்ளும் ஓய்! மாறாக தேசத்தை கூறு போடும் வேலையை செய்யாதும். இந்து தர்மத்தையும், இந்துமக்களையும், எப்படி காப்பது, நம் குறைகளை எப்படி கழைவது என்று யோசித்து அதற்கான வழிமுறைகளை கண்டு பிடித்து மக்களிடம் ஆன்மீக அன்பு மனித விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்! மாறாக ஜாதி துவேசம், இந்து எதிர்ப்பு என்ற பிரச்சனைகளை வளர்க்காதேயும்! நம் நாடாவது கொஞ்சம் அமைதியாக இருந்து விட்டு போகட்டும் ஓய்! உமக்கு புண்ணியமாக போகும், இந்த நாட்டு அமைதியை குலைக்க விரும்பும் முல்லா கூட்டத்துக்கும் போப் கூட்டத்துக்கும் உதவாது இருந்தால்,……. அந்த அம்மை அப்பன் உமக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1.  Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:32 pm

    தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என வாதிட்டால் அதற்கு மாற்றுவாதம் கிடையாது.2008-இல் என் பயண நினைவுகளைக் குறித்திருந்தேன்.அதனை அந்த மொழியியல் மாநாட்டில் நான் பேசியதாகத் திரித்துக் கூறிய தாங்கள் அந்த வாதத்தை மீண்டும் நிறுவ முயல்வது எப்படிப் பொருந்தும்?நீங்கள் இப்படித்தான் பழிப்புரைகளை அடுக்கிக் கூறுவது என முடிவு செய்துவிட்டு அதற்குரிய தரவுகளைக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோத்தளிப்பது உங்களுக்கு உவப்பாக இருக்கலாம்.ஆனால் கால ஓட்டத்தில் உண்மை நிற்கும்.

    1. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:41 pm

      கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
      திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
      திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
      இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?
      மொட்டைத் தலைக்கும் முழங்காலுகும் முடிச்சுப் போடுவது போல் என் பயணக்குறிப்புகளுக்கும் தரவுகளுக்கும் இணைப்பு கற்பித்துள்ளீர்கள்.
      அமெரிக்கா முழுமையும் பயணம் செய்யும் வாய்ப்பையும் வார விடுமுறை நாள்களில் பொழிவாற்றும் வாய்ப்பையும் பெற்ற நான் எங்குமே திராவிட இயக்கச் சார்பைக் காட்டும் வகையில் பேசியதில்லை.தொல்காப்பியம் முதல் பாரதியார்,பாரதிதாசன் வரை தமிழின் அனைத்து இலக்கியங்களையும் பற்றியே என் பொழிவுகளை அமைத்துக்கொண்டேன்.திருவாசகம்,திவ்வியப்ப்பிரபந்தம்,திருமுருகாற்றுப்படை குறித்த என் பொழிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

       
    2. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:42 pm

      நடுநிலை பிறழா ஒரு பேராசிரியனைத் தவறாகச் சித்திரிப்பதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன?

       
    3. Maraimalai Ilakkuvanar on January 12, 2012 at 9:44 pm

      உங்கள் நூல் முழுமைக்கும் விரிவான விடையைப் பின்னர் வழங்குவேன்.தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நோக்கம் இல்லையெனின் கூறிவிடுங்கள்.நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ந. உமாசங்கர் on January 13, 2012 at 9:39 am

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு,

///கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?///

உங்கள் உளம் அறிய நீங்கள் கிறிஸ்தவ மத ஆதரவாளராகவோ, ஹிந்து மத எதிர்ப்பாளராகவோ இல்லை என்றால் எமக்கு மன நிறைவே.

ஆனால், திருவாசகத்தை ஜி.யு. போப் தனது மத மாற்ற முயற்சிகளுக்குப் பயன் படுத்தியது போல நாச்சியார் திருமொழியும் திருமுருகாற்றுப் படையும் பயன்படுத்தப் பட உதவும் வகையில் (மறைமுகமாகக் கூட ) மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒப்பீடுகள் இருக்குமே ஆனால் அது குறித்துச் சுட்டிக் காட்டுவது ஏனைய ஹிந்துக்களின் கடமை ஆகிறது.

இந்த நோக்கில்தான் உங்கள் திருவாசக- மோர்மன் விவிலிய ஒப்பீடும் கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு உதவும் வண்ணம் அமையுமா இல்லையா என்பதனை, நான் சுட்டிய கட்டுரைகளைப் படித்து நீங்களே சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் உள்பட யார் மனைத்தையும் நோகடிப்பதில் எனக்கு விருப்பம் ஏதும் இல்லை.

பிரித்தாளும் சதிசெய்த ஐரோப்பியர்கள் நமது தெய்வத் தமிழ் இறை நூல்களையும் (சம்ஸ்கிருத) வேதம் உள்ளிட்ட இறைநூலகளையும் திரித்தாளும் சூழ்ச்சிகளை இப்போது வலுப்படுத்தி வருகிறார்கள் என்பதனைத் தாங்களே ஆய்வு செய்து கண்டு கொள்ளலாம்.

Sarang on January 13, 2012 at 2:45 pm

//கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் என் மேற்பார்வையில் இரு மாணாக்கர்கள் எந்த நூல்களை மொழிபெயர்த்தார்கள் தெரியுமா?
திருமதி.அர்ச்சனா வெங்கடேசன் -நாச்சியார் திருமொழி
திரு.லேன் லிட்டில்-திருமுருகாற்றுப்படை
இவ்விரு நூல்களையும் பயிற்றிய நான்கிறித்துவ மத ஆதரவாளனா?
//

பிரான்சிஸ் க்ளூனி என்றொரு அமெரிக்கர்

தான் வைணவத்தில் பெரிதும் ஈர்கப்பட்டடாகவும் சொக்கிப்போனடாகவும் சொன்னார். திருவாய்மொழி பற்றி ஸ்லாகித்து ஸ்லாகித்து புத்தகம் எழுதினார். நம்மூர் வைணவவ சிகாமநிகளுக்கேல்லாம் ஒரே சந்தோசம். அடிக்கடி இந்தியா வந்து இவர்களுடன் கலந்துரையாடி வைணவத்தில் உள்ள பிரபத்தி மார்கத்தை ஸ்லாகித்து ஸ்லாகித்து மயிர் கூச கூச கற்றுத் தெளிந்தார். மறுபடியும் நம்மூர் வைணவர்கள் அடைந்த சந்தோசத்தை சொல்லவா வேண்டும். கடைசியில் இவர்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய நாமத்தை போட்டார் . பிரபத்தி கான்சப்ட்டை சுட்டு இது முழுக்க முழுக்க விவில்ய வேதாகம கூறு. இது ஏசுவின் வழி. இயேசு பரமபிதாவை இப்படித்தான் ச்லாகித்தார் என்றெல்லாம் சொல்லி ப்ரப்பத்தி என்பதை வைணவர்கள் இயேசு காஸ்மீர் வந்து ஊழியம் செய்த போது திருடிக்கொண்டது போல ஒரு சித்திரம் ஏற்படுத்தி விட்டார் <IMG SRC=" style="height:auto;" /> . கஜேந்திர மோக்ஷத்தையும், இயேசுவின் சிலுவை ஏற்றத்தின் முன் வரும் புலம்பல்களையும் சமன்வயம் செய்யவில்லை அவ்வளவு தான். அதுவும் அடுத்த பத்திப்பில் செய்யலாம்

நீங்கள் நல்லவராகவே உங்களது பார்வையில் இருந்து விட்டுப் போங்கள். ஹிந்துக்கள் இன்றைக்கு இருக்கும் நிலைமையில் முதலில் எல்லோரையும் சந்தேகப்பட்டு நன்கு தெளிந்த பிறகு நம்புவதே நன்று



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மதிப்பிற்குரிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார்,

வணக்கம். உங்களை கிறிஸ்தவ மதச்சார்புடையவர் என நூல் கூறவில்லை. ஆனால் திராவிடவாத சிந்தனையோட்டமும் கருத்தாக்கமும் ஆபிரகாமிய சார்புடையதாக அமைகிறது. அதனை காட்டவே எவ்விதத்திலும் அனுபவ ரீதியிலோ கருத்து ரீதியிலோ இணைக்கவே முடியாத மார்மான் விவிலியத்துடன் திருவாசகத்தை முடிச்சு போடும் மனவோட்டம் காட்டப்படுகிறது. ஒரிஸா கன்னியாஸ்திரிக்காக கவிதை சமைக்கும் தங்களை அதே பாதிரிகள் நடத்தும் கல்விசாலையில் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரணித்த தலித் சிறுமியின் மரணம் ஒரு செய்தியாக கூட தொடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் அந்த கன்னியாஸ்திரியின் புகார் கேள்விக்குரியதாகவே உள்ளது என்பது வேறு விசயம். ஐயா ஜார்ஜ் ஹார்ட் தமிழை செம்மொழியாக்க பரிந்துரை செய்தமையையோ அல்லது தாங்கள் பெர்க்லி தமிழிருக்கை பேராசிரியராக நியமிக்கப்பட்டதையோ தவறு என்றோ தாங்கள் செய்த எதுவுமே தவறு என்றோ நூல் கூறவில்லை. எது குறித்து கவிதை சமைக்கிறீர்கள் என்பது தங்கள் சுதந்திரம். பாடு பொருள் தங்கள் சுதந்திரம். இந்தியா சிறுபான்மையினரின் சித்திரவதை கூடமென்றோ அல்லது இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்றோ கூறுவது தங்கள் சுதந்திரம். அதை தவறு என்று நூல் சொல்லவில்லை. ஆனால் பெர்க்லே தமிழிருக்கையில் நியமிக்கப்பட்ட பேராசிரியரின் எண்ண்வோட்டங்கள் இத்தகையவை என்பதுதான் இந்நூல் சொல்ல வரும் கருத்து. ஒரு சில கருத்தியல் கொண்டவர்களின் வலைப்பின்னலே இங்கு உருவாகிறது என்பதே இந்நூல் சொல்லும் கருத்து. அந்த வலைப்பின்னலை உருவாக்க கட்டமைக்க தங்களுக்கு உரிமை உள்ளது. அதில் தவறேதும் இல்லை. ஆனால் அப்படி கட்டமைக்கப் படுவதை சுட்டிக்காட்ட எமக்கும் உரிமை உள்ளது. அதில் தனிமனித வசைப்பாடல்கள் எதுவும் இல்லை. இதனை புரிந்து கொள்ளும் நுண்ணறிதல் பேராசிரியராக தங்களுக்கு உண்டு என்றே கருதுகிறேன்.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஹார்ட் செய்திருக்கும் கம்ப ராமாயணம் குறித்த ’கட்டுடைப்பு’ ஆதாரத்துடனேயே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தமிழர் பண்பாட்டை பொது இந்திய பண்பாட்டுப்புலத்திலிருந்து வெட்டி எடுப்பவையாகவே உள்ளது. அத்தகைய போக்குகளே ஊக்குவிக்கப்படுகின்றன. உதாரணமாக ஹார்ட் ராமாயணம் குறித்து கூறியதை எடுத்துக் கொள்வோம். ராமாயணம் ஒரு ‘இருட் காவியம்’ என்கிறார் ஹார்ட். ஒருவித எலியட்டிய வீண் பூமி காவியம் என்பது போன்ற அக உணர்வு சித்தரிப்பாக அவர் அதைப் பார்க்கிறாரென விட்டுவிடலாம். ஆனால் அடுத்து அதிலிருக்கும் சுயக்கட்டுப்பாட்டையும் வீரத்தையும் இரு இன/பண்பாட்டு எதிரெதிர் இரட்டை விழுமியங்களாக முன்வைக்கிறார். தமிழரின் மறமும் பிராம்மணீய அறமும். சங்கப் பாடல்களைப் படிப்போருக்கே இது எத்தனை தவறானது என்பது தெரியும். முழுக்க முழுக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு இனக்கோட்பாடுகளே ஒரு பண்பாட்டுக்கு ஒற்றை இனமும் ஒற்றை விழுமியமுமே இருக்க முடியும் என கருதுபவை. ஆனால் ஹார்ட்டின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அதனை நவீன அரசியல் கோட்பாடுகளுடன் இணைப்பதில் தான் உள்ளது: வாசகர்களே ஹார்ட் முன்வைக்கும் ஆய்வுக்கட்டுரை சுருக்கத்தை முழுமையாகப் படித்துப் பார்க்கட்டும்:

The Ramayanam of Kampan is a strange work. It presents a dark view of a world in which nothing is stable, even Rama, who ostensibly represents an absolute, unchanging, and unalterable reality. We find villains suddenly becoming heroes, ugly demonesses turning into women of irresistible beauty, perfect wives becoming shrewish or wicked, and landscapes whose virtue hides menace. On a larger scale, the work finds itself constantly shifting between two views of the world — that of poem, in which the predominant virtue is self-control and the ordered system of Brahmanical thought, and of maram, which is characterized by martial valor, courage, and ultimate power. These two incompatible views not only determine the structure of Kampan’s great work; they also, I would argue, reflect the political realities of his day, in which the great military and imperial power of the Cholas was leavened by the Brahmanical system that they supported. And, in a strange way that brings to mind some modern political themes, they reflect a historical reality, one in which a system from the North came to coexist with a conflicting indigenous system. Kampan had great regard for both world-views, and he knew that they could not be entirely reconciled. He used that fact to endow his work with a creative tension and a constantly shifting perspective that account for its extraordinary power and popularity.

வீரமும் அறமும் incompatible என்பது சரியா? ஏன் அரசதிகாரமும் அறமும் ஒன்று ஒரு சமூகத்தின் தனி விழுமியமாக அடையாளப்படுத்த முடியுமா? மேற்கின் ஆதார ஆதர்ச வாழ்க்கையை (வாஷிங்டனையோ அல்லது ஏசுவையோ) இப்படி கட்டுடைக்கும் ஒரு இந்திய ஆராய்ச்சியாளரை, இந்தியா வாழ் அமெரிக்கர்கள், இந்திய பல்கலைகக்ழகத்தில் தங்கள் பண்பாட்டின் பேராசிரியராக தனி இருக்கை ஏற்படுத்தி கௌரவிப்பார்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கிருத்துவ தொண்டு
Permalink  
 


பேராசிரியர் இலக்குவனார் மோர்மோன் சர்ச் தோத்திரங்களுடன் திருவாசகத்தை ஒப்பிடுகிறார்:
I learned many things about the Mormon religion and the Church of the Latter day saints.The Mormon Bible reminded me of a prominent religious literature in Tamil,Thiruvachagam. The redundancy of the words Heart and Honey in Thiruvachagam, can be found easily by any reader of it.Likewise the Mormon Bible uses Heart and Honey many times.A comparative study of these two works may be of an immense benefit to scholars in theology. (http://www.associatedcontent.com/article/822317/i_love_you_americapart_i_pg2.html?cat=9)

மோர்மோன்களைக் குறித்து எந்த அடிப்படை அறிவுடையவர்களும் திருவாசகத்தை குறித்தும் அடிப்படை அறிவுடைய எவரும் இந்த ஒப்பீட்டின் ஒவ்வாமையை அறிவர். (நிச்சயமாக ஹார்ட்டுக்கு தெரிந்திருக்கும்) மிக மென்மையாக சொன்னால் சுந்தர.ராமசாமியை பி.டி.சாமியுடன் ஒப்பிடுவதை போன்ற மடத்தனம் இது. மேலும் இலக்குவனார் தெளிவாக வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற கோட்பாடு உள்ளவர். திராவிட இனவாதக் கோட்பாட்டு ஆதரவாளர். ஒரிஸாவில் கிறிஸ்தவ மதபோதக பெண் வன்புணர்ச்சிக்கு ஆளானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ”இந்தியாவே மதச்சிறுபான்மையினரின் சித்திரவதை கூடாரமாகிவிட்டதென குறிப்பிடுகிறார்”

http://www.associatedcontent.com/article/1091639/the_rape_of_a_christian_nun.html?cat=9
https://www.facebook.com/permalink.php?story_fbid=1583744648589109&id=100008607670100

 கிறிஸ்தவன் இந்தியனாகவோ தமிழனாகவோ இருக்க முடியாது என்பதற்க்கு இந்த வாடிகன் ஜெருசலேம் அடிமைகள் கூறும் பொய் சிறந்த உதாரணம்.

உமா சங்கர் IAS க்கு அடுத்த அறிவாளி அண்ணன் தான்.

 
 
Image may contain: 5 people , text
M Senthamil Selvan
June 1 · 
 

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?

ஒரு சிறு குறிப்பு.....

இன்றைய இளைஞர்கள் பலருக்கு "ஆர் எஸ் எஸ்
இயக்கம்" என்னவென்று தெரியாது.

அதனால் இந்த சிறு குறிப்பு....

1. ஆர் எஸ் எஸ் என்பது - ராசிடிரிய சுயம் ஷேவக்
சங்கம் - இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.

2. இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன
மதவெறியர்கள் நன்கொடை அளித்து
நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு
இது.

3. இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டு கொன்றது. இன்று
இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம்.

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்
இன்று அரங்கேற காரணம் இந்த
அமைப்பு தான்.

5. இதன் நோக்கம் பார்ப்பனர்கள் தொடர்ந்து
அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்கவேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள்.

6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல்,
நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.

பெரும்பாலும் "பார்ப்பனர்கள்"
அதிகாரத்தில் இருப்பர்.

8. இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி" இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும்
தலித் மக்களுக்கு எதிராகவும், 
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும்
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9. இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர்.

புராணத்தில் சொல்லப்பட்ட கதா
பாத்திரங்களை உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள். ராமன் என்பவன் ஒரு
கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி ,
அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி
உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி
இந்துக்களை
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு
வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை
வித்திட்டனர்.

11. விநாயகர் ஊர்வலம் ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும்
கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை
சிதைத்தனர்.

அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது.

12. இவர்கள் அரை டவுசர் போட்டு,
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....

இவர்களுக்கு, முழு டவுசர் போட்ட "காவல் துறை " முழு பாதுகாப்பு கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள் ,
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்
ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல்,
குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை
கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் (மத்திய -
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
"மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் -
அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.

17. சமஸ்கிருதம், இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.

பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
"மாட்டு கறி உண்பதை தடை" செய்வார்கள்.

18. அதிகமான "அம்மண-சாமியார்கள் -
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி
திரிவார்கள் .. அவர்களை இவர்கள்
"ரிஷிகள் அமைப்பு என " ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்.

19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்க்க்களை எதிர்க்கும் -
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யுனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் ஆகியோர்களை
தாக்கி கலவரம் செய்வர் - பல நேரங்களில்
கொலையும் செய்வர் --இப்படி பல அறிஞர்களை கொலை
செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை
வைத்துள்ளனர்.

அவைகள்:

விஷ்வ ஹிந்து பரிசத்
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக -பாரதிய ஜனதா
பார்டி. BJP.

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் - இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.

22. இவர்களின் தலைமை பீடம் "(RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்ற படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு
-இடஒதுகீட்டு எதிரானது".

24. இவர்களது அமைப்பு சமத்துவத்தை
எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.

25. உரிமை -ஜனநாயகம் அதற்க்கான போராட்டம் - இவற்றை அடிப்படையிலே
மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த
தருணத்தில்-ரத்தகளரி
கொண்டு போராட்டங்களை
ஒடுக்கவேண்டும் என்ற
கொள்கையை கொண்டது - அங்கங்கு உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து
கொண்டு இருக்கிறது.

26. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி
உள்ளது.

26. உயர் சாதி - கிழ் சாதி - தீண்டாமை
என்பவை - மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாக
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ்
நாட்டில்எல்லா சாதி
அமைப்புகளிலும் "
இவர்கள்தான் "தலைமை பொறுப்பை
கைபற்றி கொண்டனர்.

( கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
"யுவராஜ் கூட ஆர்.எஸ். எஸ் அமைப்பினன் என்பது
குறிபிடத்தக்கது..)

படித்த பின் பகிருங்கள்..

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard