New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர்
Permalink  
 


http://www.jeyamohan.in/?p=5492

'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..

 

கண்ணீரும் குருதியும் சொற்களும்..

கிறித்தவர்கள் சூழ்ந்த கிராமத்தில் பிறந்து வளார்ந்தவன் நான். மிகச்சிறு வயதிலேயே கிறித்தவ தேவாலயங்களுக்குச் செல்லவும் கிறித்தவ பிரார்த்தனைகளில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்க்கையின் மிக ஆதாரமான பாதிப்புகளில் ஒன்று பைபிள். நான் வாசிக்க ஆரம்பித்த ஆரம்பகால நூல்களில் அது ஒன்று. எங்கள் வீட்டில் இருந்த கரிய தோலட்டை போட்ட , பக்கவாட்டுத்தாள் மட்கிச்சுருண்ட பைபிளை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதில் ஓடிய பூச்சித்துளைகள் பழுப்புநிறக் கறைகள் என் அம்மா அடிக்கோடிட்ட வரிகள்.

என் வாழ்க்கையின் துயரம் நிறைந்த நாட்களில் கிறிஸ்துவின் சொற்களை அந்தரங்கத்தில் உணர்ந்திருக்கிறேன். கருணையை மட்டுமே செய்தியாகக் கொண்ட மாபெரும் ஞானகுருவாகவே நான் கிறிஸ்துவைக் காண்கிறேன். இந்த உணர்ச்சி மதங்களைக் கடந்த ஒன்று. என்னுடைய கிறிஸ்து மதங்களால் எனக்கு அளிக்கப்பட்டவர் அல்ல. மனம் கருணையால் நிறைந்திருக்கும் மிக இளம் வயதில் நேரடியாக சொற்களில் இருந்து இறங்கி என்னருகே வந்தவர். நான் தொட்டு அறிந்தவர்.

சிலவருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சொன்னார். ‘கிறிஸ்துவை விட்டாலொழிய இந்துவாக இருக்க இயலாது என்று சொல்லப்பட்டால் என்ன செய்வாய்?’ என. நான் தயங்காமல் சொன்னேன் ‘இந்துமதத்தை விட்டு விடுவேன்’ என. அவர் அதிர்ச்சி அடைந்தார். நான் நம்பும் இந்துமதம் உலகின் மெய்ஞானத்தை எல்லாம் தன்னுள்ளே வாங்கி நிறைத்துக்கொள்ளும் ஒரு கடல்போன்றது. கிறிஸ்துவை விலக்க ஆணையிடும் இந்துமதம் இந்துமதமாக இருக்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர்
Permalink  
 


இன்று நாம் அறியும் கிறிஸ்து ஒருவரல்ல. குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர். வரலாற்றுக் கிறிஸ்து யூதர்களின் வரலாற்று நூல்களில் இருந்து நமக்குத்தெரியவருபவர். ஆன்மீகக்கிறிஸ்து கிறிஸ்துவின் சொற்கள் வழியாக கடந்த இருபது நூற்றாண்டுகளில் மாபெரும் மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிக்கொண்ட ஓர் ஆளுமை. மதக்கிறிஸ்து கிறித்தவ திருச்சபையாலும் மதவாதிகளாலும் முன்வைக்கப்படுபவர்.

இந்த மூன்று கிறிஸ்துக்களையும் பிரித்தறியும் ஒருவரே சமநிலை கொண்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். கிறிஸ்துவை உணரவும் முடியும். நான் கண்டுவரும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஓர் இறைவடிவமாக மட்டுமே பார்ப்பவர்கள். லௌகீகமான தேவைகளை கோரினால் அளிக்கக்கூடிய கண்ணுக்குத்தெரியாத ஓர் இருப்பு மட்டும்தான் கிறிஸ்து அவர்களுக்கு. பைபிளின் வாசகங்கள் எல்லாமே அவர்களுக்கு வழிபாட்டு மந்திரங்கள் மட்டுமே.

பல்லாயிரம் முறை நான் தேவாலய வாசல்களில் நின்று ஜெபங்களை கேட்டிருக்கிறேன். எப்போதுமே அன்றாடவாழ்க்கையின் எளிய லாபங்களுக்கான மன்றாட்டு மட்டுமே. எனக்கு வேலையைக்கொடும் ஆண்டவரே, நோயைக் குணப்படுத்தும் ஆண்டவரே, பதவி உயர்வு வேண்டும் ஏசுவே… ஒருநாள் கூட ஆன்மீகமான ஒரு பிரார்த்தனை என் காதில் விழுந்ததில்லை. அவர்கள் உணரும் ஏசுவுக்கும் நான் சொல்லிக்கொண்டிருக்கும் ஏசுவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இந்த அமைப்பு மனிதர்கள் தங்களுக்கு தங்கள் அமைப்பு இடும் கட்டளையை ஏற்று இரவுபகலாக பிற மதங்கள் மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களைச் சந்தித்ததுமே உங்களை மதமாற்றம் செய்ய முயலாத தீவிரக் கிறிஸ்தவர்களை பார்ப்பது அரிது. ஒருபோதும் தன்னுடைய ஆன்மீகப்பயணம் குறித்து அவர் ஐயப்படுவதில்லை. அதில் அவர் செல்லவேண்டிய தூரம் ஏதுமில்லை. அவர் நம்பி விட்டார், இனி அந்நம்பிக்கையை பிறருக்கு கொடுப்பதே அவரது ஆன்மீகம்.

நான் நம்பும் கிறிஸ்து அவரல்ல என்றால் அவர்கள் என்னை கிறிஸ்துவை தூஷிப்பவன் என்றே பொருள்கொள்வார்கள். அப்படி என்னிடம் சொன்னவர்கள் பலநூறுபேர் உண்டு. நான் நம்பும் கிறிஸ்து ஒரு மாபெரும் ஆன்மீக ஞானி. மண்ணில் மனிதனுக்குச் சாத்தியமான முழுமையை அடைந்தவர். அதை தன் பெருங்கருணையால் மனுக்குலத்துக்குச் சொல்லிவிட்டுச் சென்றவர். அவரது சொற்களில் இருந்து உருவான சபைகளுக்கு அவர் பொறுப்பல்ல. அவரது சொற்கள் ஆன்மீகமான தேடல் கொண்டவர்களுக்கு அவர்களின் அகத்தில் ஒளிரும் விளக்குகளாக என்றும் துணைவரக்கூடியவை.

நான் அந்த கிறிஸ்துவை தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி வழியாகவே என் ஆத்மாவில் கண்டுகொண்டேன். பின்னர் நித்ய சைதன்ய யதி வழியாக மீண்டும் கண்டுகொண்டேன். பின்னர் காந்தி வழியாக கண்டு கொண்டேன். உலகமெங்கும் ஆதிக்கத்தின் அடையாளமாக சென்றடைந்த கிறிஸ்துவிலேயே அந்த மீட்பின் கிறிஸ்துவும் உள்ளடங்கியிருக்கிறார் என்று படுகிறது. மெய்மையை தேடும் ஒருவன் தன் ஆன்மாவின் இயல்பாலேயே அவரை தனித்து எடுத்துவிட முடியும்.

இந்தக் கட்டுரைகள் கிறிஸ்துவைப் பற்றியும் கிறிஸ்தவம் பற்றியும் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் எதிர்வினைகளின் தொகுப்பு. இவை கிறிஸ்துவ மெய்யியலிலோ அல்லது வரலாற்றிலோ முறையான வாசிப்பு இல்லாத ஆனால் ஆர்வத்தால் எப்போதும் அறிந்துகொண்டிருக்கிற ஒரு வாசகனின் பதிவுகள் மட்டுமே

கேரளத்தில் கிறிஸ்துவின் ஆன்மீகத்தை மட்டுமே வாழ்நாள் முழுக்க முன்வைத்தவர் ·பாதர் ஜோச·ப் புலிக்குந்நேல். அவரது சொற்கள் எண்பதுகளில் எனக்கு கிறிஸ்துவை மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டியிருக்கின்றன. இந்நூல் அவருக்குச் சமர்ப்பணம்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்

Most Rev A.M.Chinnappa
Archbishop of Madras

Archbishops House
41,Santhome House
Chennai 600004

17-09-2010

திருமிகு ஐயா,

தங்களது ‘சிலுவையின்பெயரால்’ என்ற நூலை வாசித்து வியப்படைந்ததோடு மகிழ்ந்தேன். தங்களை மனமார வாழ்த்திப்பாராட்டுகிறேன்.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கண்ணோட்டத்தோடு உங்களது சிந்தனையை

அள்ளித்தந்துள்ளீர். தங்களது இந்நூல் பலராலும் படிக்கத்தக்கது. கிறிஸ்து இயேசுவை ஆழ்ந்த ஆன்மீகத்தின் கண்ணோட்டத்தில் காண்கிறீர்கள். மற்ற வெளிப்புற அணுகுமுறைகளை வெறுக்கிறீர்கள். மிகச்சரியான பார்வை.

2008 ஆகஸ்டு 14-17 தேதிகளில் நாங்கள் நடத்திய ஆய்வரங்கம் ஒரு கருத்து ஆய்வு. ஆன்மீகப்பார்வைகளில் மட்டுமே நாம் கவனம்செலுத்தவேண்டும். முனைவர் தெய்வநாயகம் , முனைவர் தேவகலா உள்ளிட்ட பலரது கட்டுரைகளில் கருத்துக்களில் நூற்றுக்குநூறு உண்மைதான் என்று எவரும் வாதாடக்கூடாது. அவற்றுள் பல உண்மைகள் உள்ளன. சிலவற்றுள் சிலருக்கு ஏற்பு இல்லை. எதையும் திணித்துவிடும் முயற்சி அறவே கூடாது என்றுதான் நான் தொடக்கமுதலே கூறிவந்துள்ளேன். இந்த ஆய்வரங்கத்தில் சமய நல்லிணக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் , பொதுமையான கண்ணோட்டங்கள் கட்டாயம் உருவாகவேண்டுமென்றும் வலியுறுத்தினோம். சில முடிவுகளை போப்பாண்டவரின் அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளோம். எந்த மதத்தையும் சாடுவதையோ கரடுமுரடாக வாதிப்பதையோ நான் கடைசிவரை எதிர்த்தேன்.

ஆன்மீக கருவூலங்கள் காட்டும் வழிகள் அளப்பரியன. மதங்கள் என்று வைத்துக் கொண்டால் பல நிலைகளில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவைகளும் ஏற்கவோ மறுக்கவோ சில அம்சங்களும் கட்டாயம் இருக்கத்தான் செயும். இவ்வாறாக தாங்கள் கிறிஸ்துவின் முகத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. தோமையரைப் பற்றியும் பலசெய்திகளைக் கூறியிருக்கிறீர்கள். படம் எடுக்க முயல்கிறோம். ஆனால் 100 கோடி என்பது கற்பனை பல்லக்குதான். இன்னும் சிறுதொகைகூட எங்களால் திரட்ட முடியவில்லை. தங்களை மனமார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். சென்னைக்குவந்தால் தாங்கள் எங்கள் விருந்தினராக இருக்க வேண்டி அழைக்கிறேன்

அன்புள்ள

மேதகு டாக்டர் ஏ.எம்.சின்னப்பா ச.ச
சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வணக்கத்திற்குரிய பேராயர் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் ஒரு குருவருள் என்றே கருதுகிறேன். இந்த தருணத்தில் அத்தகைய ஒன்றுக்கு நான் பாத்திரமானது குறித்து பெருமிதமடைகிறேன். தங்கள் முன் பணிவுடன் வணங்கி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெடுங்காலமாகவே மதங்கள் குறித்தும் ஆன்மீகம் குறித்தும் ஆழ்ந்த தேடல் எனக்குண்டு. அது என் துயரம் நிறைந்த வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் வழியாக நான் செல்ல நேர்ந்த பாதை. நான் வளர்ந்த சூழல் காரணமாக இருக்கலாம் என்னுடன் எப்போதுமே கிருஷ்ணனும் கிறிஸ்துவும் இருக்கிறார்கள். ஞானம் பெருங்கருணையுடன் இணைகையிலேயே முழுமை கொள்கிறது என நினைக்கிறேன். கிறிஸ்துவை அந்த கருணையின் வடிவமாகவே கண்டு கொண்டிருக்கிறேன். மிக ஆழத்தில், மிக அண்மையில். கிறிஸ்துவைப் பற்றி நான் எழுதுவதெல்லாம் அந்த தரிசனத்தில் நின்று கொண்டே.

மதங்கள் காட்டும் கிருஷ்ணனையும் கிறிஸ்துவையும் இன்னும் அண்மையாகச் சென்று இன்னும் நேரடியாக அறிய முடியுமா என்று முயல்கிறேன். மதங்கள் நம்பிக்கைகளை நோக்கி இட்டுச்செல்கின்றன. ஆன்மீகம் என்பது நம்பிக்கை மற்றும் அடையாளம் சார்ந்த ஒன்றல்ல என்பது என் எண்ணம். அதற்கு எல்லைகள் இல்லை. எல்லைசார்ந்த மனவிலகல்களும் கசப்புகளுக்கும் அங்கே இடமில்லை.

மதநம்பிக்கை மதத்தை வரலாற்று நோக்கில் அணுகுவதற்கு பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. நம்பிக்கை அடிப்படையில் செய்யப் படும் வரலாற்றாய்வுகள் பலசமயம் மூர்க்கமான வரலாற்றுத் திரிபுகளாக ஆகிவிடுகின்றன. வரலாற்று உண்மைகள் எப்போதுமே புறவயமான ஆதாரங்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் நடுநிலையான விவாதங்கள் மூலமே முன்வைக்கப்பட வேண்டும். மாறாக மதநம்பிக்கை சார்ந்த முன்முடிவுகளுடன் அவை பிறர்மேல் திணிக்கப் படுமென்றால் அவை கசப்புகளை உருவாக்கி காலப்போக்கில் சமூக மோதல்களுக்கே வழிவகுக்கும்.

கருத்துக்களை எவரும் முன்வைக்கலாம், ஆனால் வரலாறு சார்ந்த கருத்துவிவாதங்களுக்கு அவற்றுக்கேயான பொதுவிதிகளும் பொதுவரைமுறைகளும் உண்டு என்றே நினைக்கிறேன். முனைவர் தெய்வநாயகம் அவர்களின் கருத்துக்களில் அந்த புரிதலும் தெளிவும் இல்லை என்பதே என் எண்ணம்.

உலகுதழுவிய பார்வையும் பெரும் அமைப்பும் கொண்டுள்ள திருச்சபை இத்தகைய ஆய்வுகளில் உகந்த நிதானத்தையே கடைப்பிடிக்கும் என உங்கள் சொற்கள் நம்பிக்கை தருகின்றன. இந்தியாவின் தொன்மையும் மகத்துவமும் கொண்ட ஞானத்தேடலின் மரபில் நிகரற்ற தியாகத்தினாலான ஒளிமிக்க ஓர் ஏடாகவே திருச்சபையும் அமையும் என்று நான் எண்ணுகிறேன். கிறிஸ்துவின் பேரருளுக்கு என்றென்னும் இந்நாடும் பாத்திரமாகட்டும்.

தங்கள் அழைப்பை எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகவே கருதுகிறேன். விரைவில் ஒரு தருணத்தில் தங்களைச் சந்தித்து தங்கள் ஆசிகளை எனக்கும் என் குடும்பத்திற்கும் பெற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்

பணிவுடன்

ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=5492 சிலுவையின் பெயரால்
http://www.jeyamohan.in/?p=6250 இரண்டு காதலியர்
http://www.jeyamohan.in/?p=4502 கிறித்துவம், இந்து மரபு
http://www.jeyamohan.in/?p=810 தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்
http://www.jeyamohan.in/?p=665 தாமஸ் குமரிமைந்தன் கடிதம்
http://www.jeyamohan.in/?p=615 தாமஸ்:ஓர் இணையதளம்
http://www.jeyamohan.in/?p=600தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர்
Permalink  
 


Vatican nativity does away with the manger

Vatican nativity does away with the manger
The Pope at the Vatican scene last year 

For 25 years, the Christmas Nativity scene in front of St Peter's Basilica has shown the infant Jesus in a manger in Bethlehem.

This year, however, the Vatican has decided to radically change the scene, shifting it to Nazareth, and placing Jesus in his father's carpentry shop.

news-graphics-2007-_653952a.jpg

When Pope Benedict XVI inaugurates the life-size Nativity scene on Christmas eve, the sheep and hay will be gone.

In their place will be a model of three rooms.

Jesus will lie in Joseph's shop, complete with "the typical work tools of a carpenter". 

On one side, the shop will be flanked with a "covered patio", while on the other there will be the "inside of a pub, with its hearth".

The news came in an official statement from the State Department of the Vatican, which organises and builds the giant presepe, or Nativity scene.

The new setting was inspired by two verses in St Matthew's gospel, Chapter 1:24 and 1:25, the Vatican said, which state: "When Joseph woke up, he did as the Angel of God ordered and took Mary into his house. Without them knowing each other, a child was born and he called his name Jesus".

The gospel goes on to mention Jesus' birthplace as Bethlehem, but a spokesman for the Vatican said a decision had been made to place the scene in Nazareth regardless.

"It was time for a change," said the spokesman "and a return to St Matthew's gospel".

The traditional depiction of Jesus in a manger comes from St Luke's gospel, which said there was "no room at the inn".

But it is Matthew's gospel which forms the basis for the Angelus prayer, and the view of Jesus in a carpenter's workshop matches the Franciscan tradition.

None of the three Vatican departments which organises the Nativity scene could comment on who had taken the decision to shift the location, or for what reason.

However, sources close to the Vatican said there was a desire to crack down on the various "fanciful Nativity scenes" that have sprung up in recent years.

In Naples, a number of Nativity scenes include notorious figures from today, such as Elvis Presley or Silvio Berlusconi, standing amongst the crowd adoring the infant Jesus.

The Nativity scene at St Peter's was started by Pope John Paul II in 1982.

In addition, a giant, fully-adorned Christmas tree has been erected in St Peter's Square.

Meanwhile, the Catholic Church has said that it was its "right and duty" to spread the word of Christ to non-believers.

A new document from the Vatican's doctrinal department rejected accusations that the Church aggressively converts its members.

The Russian Orthodox Church has accused Rome of trying to poach souls in the former Soviet Union. However, the Vatican said evangelisation was its "inalienable right and duty".

"The incorporation of new members into the Church is not the expansion of a power group, but rather entrance into the network of friendship with Christ which connects heaven and earth, different continents and age.

"It is entrance into the gift of communion with Christ," the document said.

http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html

http://cyrilalex.com/?p=591

பசுந்தமிழன் சொல்கிறார்: உங்கள் மறுமொழி மட்டுறத்தலுக்காக காத்திருக்கிறது. 

கதை என்கையில் சரி ஆனால் உள்ளதின் விஷயம் தவறு.
//மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே
மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள்

சூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார்.
ஆடு மேய்ப்பர் தலைவன் சற்று தயக்கத்துடன் ‘ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.’ என்றார்.

லுக்கா கதையில் ஏலியின் மகன் சூசை நாசரேத்துக்காரன், அவனை பெத்லகேமுக்கு வரவைக்க கி.பி. 8ல் நடந்த சென்சஸ் கதையைச் சொல்லி உள்ளார்.

ஆனால் மத்தேயூபடி பெரிய ஏரோதுவின் மரணத்திற்கு(கி.மு.4) இரண்டு வருடம் முன் பொ.மு.6இல் யாக்கோபு மகன் சூசை பெத்லகேமிலேயே வாழ்பவர் தான். எனவே மாட்டுத்தொழுவம் கதை மத்தேயுவில் கிடையாதே//

வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூவின்படி என மாட்டுத்தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard