காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக் மற்றும் அஸ்வதி!
அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு: நேற்று இரவு (05-11-2010) வழக்கம் போல ஒரு டிவி செனலில் பீ. ஜைனுல் ஆபிதின், முஸ்லீம்களுக்கு வளைக்குடா நாடுகளினின்று சுமார் ரூ.8,000/- தான் மாதம் வந்து கொண்டிருக்கிறது, இருந்தாலும், அவர்கள் வீட்டில் வேண்டிய பொருட்கள் டிவி, மிக்ஸி என்று எல்லாமே இருக்கும். பெண்கள் கைகளில் எல்லாம் நகைகள் போட்டிருப்பார்கள். மற்றவர்கள் வேண்டுமனால் ஏதோ அவர்களுக்கு நிறைய பணம் வருகிறது என்று நினைக்கலாம், ஆனால் உண்மையில் அல்லாதான் அப்படி மகத்துவம் / அதிசயத்தை செய்கிறார். அதாவது, சுமார் ரூ.8,000/- தான் மாதம் பணம் வந்தாலும் அல்லாவின் மகத்துவதினால் அத்தகைய அதிசயம் நிகழ்கிறது. அப்பொழுது “மோமின்” என்ற வார்த்தையையும் குறிப்பிட்டு, அவர்களுக்குத்தான் அது ஏற்படும் என்றார். அதாவது “காஃபிர்களுக்கு” ஏற்படாது என்று பொருட்பதிந்த மாதிரி கூறியபோது, நிச்சாயமாக தமது நம்பிக்கையைத் தாண்டி அடுத்தவருடைய நம்பிக்கையில் தலையிடுவதாகிறது. உடனே அதே நாளில் (05-11-2010) இப்படியும் செய்தி வருகிறது!
500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி நெல்லையில்கைது[1]: நெல்லையில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கேரள மாநில தம்பதி கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த உஸ்மான் ராவுத்தர் மகன் அப்துல்ராபிக் (47). இவரது துணைவி அஸ்வதி (45). முதல் கணவரை பிரிந்த அஸ்வதி தற்போது அப்துல் ராபிக்குடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார். இருவரும் நெல்லை -தென்காசி ரோட்டில் அபிசேகபட்டியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர்.