மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்?
சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. இந்த தலைப்பில் ஏற்கெனவே விவரமாக ஒரு இடுகையில் விவரித்துள்ளேன்[1]. சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. ஓட்டகளில்
……………………சென்னை விபச்சாரத்தில்பிரபலமாகிறது[2] – மேனாட்டுகலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமாமோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு! |
இது இப்பொழுது, பல்வேறு பெயர்களில் நாகரிகமாக நடந்து வருகிறது. பணம் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், அனுபவுக்கலாம் என்ற முறையில் வளர்த்துவிட்ட நவீனக் காமக்கலைதான், பாடி மஸாஜ். 1979-1980களில் இது சென்னையில் அத்தகைய மோசமான நிலைக்குச் சென்றபோது, தடை செய்யப்பட்டது. அப்பொழுது வீட்டுக்கு வீடு மசாஜ் சென்டர், மசாஜ் பார்லர் என்ற பெயரில் ஆரம்பித்து பிறகு விபச்சாரமாக மாறியது. அப்பொழுதே, சபலமுள்ள பள்ளி-கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று வந்தபோது, பிரச்சினை பெரியதாகி தடை செய்யப்பட்டது. குறிப்பாக, அரசியல்வாதிகள் சிலர் அதில் சம்பந்தப்பட்டதால், விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது.
பாடி மஸாஜ் பல ரூபங்களில்: இப்பொழுது, பப்புகள் பெயரில், ஸ்பா, ஹெல்த் கிளப், அரோமா தெராபி, அக்யூபிரஸ்ஸர் சென்டர், ஆயுர்வேதிக் சென்டர், என்று பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. குறைந்த சம்பளம் கொடுப்பது,
……………………கற்ப்பைப் பற்றி கேவலமான கருத்துகளைச் சொல்லும்[3] போது, விபச்சாரம் பெருகத்தானே செய்யும்? தார்மீகம் எங்கு இருக்கும்? இருப்பினும் “நடிகைகளின் கற்ப்பைப்” பற்றி பேசினால், நடிகைகளுக்கு கோபம் வருகிறது[4]. |
மறைமுகமாக தொல்லைக் கொடுப்பது, பாஸ்போர்ட்டைப் பிடுங்கி வைத்துக் கொள்வது, கஸ்டமர்களை அளவிற்கு அதிகமாக தொல்லைக் கொடுக்க செய்வது, அவ்வாறு செய்தாலும் பொறுத்துப் போக சொல்வது, அவ்வாறு செய்யும் காட்சிகளை படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, முதலியன அவர்களுடைய வழக்கமான வேலைகள். இதே முறைகள் தாம் இப்பொழுதும் பின்பற்றியது தெரிகிறது. ஆக, வருடங்கள் மாறினாலும், குற்றவாளிகளின் புத்தி மாறவில்லை என்பது தெரிகிறது. மேலும், சில பெண்களுக்கும் இந்த வியாதி பிடித்துக் கொண்டது. ஆமாம், ஆண்கள் பெண்களுக்கு பாடி மஸாஜ் செய்கிறேன் என்று கிளம்பி விபரீததில் முடிந்து விட்டது. இப்பொழுது வெளிவந்துள்ளது வெறும் துளிதான், இன்னும் பெரிதாக இருக்கிறது, என்று கூறியிருந்தேன்.