கடந்த 2006ம் ஆண்டு, சிவசங்கரன் வசமிருந்த ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் தலைமையிலான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனை தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.அனந்த கிருஷ்ணனுடன், சிவசங்கரன் பேச்சு நடத்திய போது, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள, ஏர்செல் நிறுவனத்திற்கான லைசென்ஸ்களை பெறுவது மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவது போன்ற விவகாரங்களை எல்லாம் தாங்களே பார்த்துக் கொள்வதாக, சிவசங்கரனிடம் அனந்த கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், மலேசியாவைச் சேர்ந்த தங்கள் நிறுவனம் இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்புதலையும், மத்திய அரசிடம் தாங்களே பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக, அனந்த கிருஷ்ணன் சார்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரால்ப் மார்சல், 2005ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி, சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஒப்புதலை பெறுவது எங்கள் பொறுப்பு. அதே நேரத்தில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து ஏர்செல் நிறுவனம் பெற முடியாத லைசென்ஸ்களை பெறுவது, இரு நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பு' என்று கூறியுள்ளார்.
இந்த இ - மெயில் அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் ஷாந்திகிராம், ஏர்செல் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிலும், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் லைசென்ஸ் விண்ணப்பங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறுவது மேக்சிஸ் மற்றும் ஏர்செல் நிறுவனத்தின் கூட்டுப் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ - மெயிலின் நகல், ரால்ப் மார்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்க, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிதான் நிதியுதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கும் போது, நிலுவையில் உள்ள லைசென்ஸ்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெற, தாங்களும் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த ஒரு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்காது.ஆனால், மேக்சிஸ் நிறுவனம் இந்த விஷயத்தில், சிவசங்கரனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதிலிருந்தே, தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது என, நிபுணர்கள் கூறுகின்றனர்."நிலுவையில் உள்ள லைசென்ஸ்களை தாங்களே பெற்றுக் கொள்வதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுக் கொள்வதாகவும், முதலீட்டிற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்வதாகவும் பொறுப்பேற்று, ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கியது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை, இதுவரை நான் பார்த்ததில்லை.
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் தான் இது நடந்துள்ளது' என, பிரபல சட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேக்சிஸ் நிறுவனம் இப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னரே, 2006ம் ஆண்டு மார்ச் மாதம், ஏர்செல் நிறுவனம் சிவசங்கரனிடமிருந்து 4,813 கோடி ரூபாய்க்கு, மேக்சிஸ் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம், "மேக்சிஸ்'க்கு கைமாறிய ஏழு மாதத்தில், அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் இருந்த லைசென்ஸ்களை எல்லாம் பெற்றுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை, அன்னிய முதலீட்டு அபிவிருத்தி வாரியத்திடமிருந்து இரண்டு மாதங்களுக்குள் பெற்றுள்ளது.
ஆனால், சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, விண்ணப்பித்து 20 மாதங்களுக்கும் மேலாக, அந்த நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு சேவை துவக்க லைசென்ஸ்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிவசங்கரன், அனந்த கிருஷ்ணன், பிரகலாத் சாந்திகிராம் இடையே நடந்த இ - மெயில்கள் தொடர்பாக, பத்திரிகை நிறுவனம் ஒன்று தயாநிதியிடமும் மற்றவர்களிடமும் கருத்து கேட்ட போது, அவர்கள் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி கதை என்ன?* சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனம், ஏழு வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவையை துவக்க அனுமதி கேட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்த போதும், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார் தயாநிதி* பின்னர் தான், ஏர்செல் நிறுவனம், தயாநிதியின் நண்பரான, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, தயாநிதி தன்னை கட்டாயப்படுத்தினார் என, சிவசங்கரன் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்தார்.* மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ, தயாநிதி குடும்பத்தின் சன் டைரக்ட் "டிவி'யின், 20 சதவீத பங்குகளை மிக அதிக விலையான 675 கோடி ரூபாய்க்கு வாங்க, நான்கு மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.* மேக்சிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் வந்த பின்னரே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையை தயாநிதி கொண்டு வந்தார்.* ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரனிடமிருந்து மேக்சிஸ் வாங்கியதும், அதற்கு நிறுவனத்திற்குத் தேவையான லைசென்ஸ்களை எல்லாம் தயாநிதி வழங்கினார். தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே இவற்றை வழங்கினார்.* சிவசங்கரனிடமிருந்து ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்காமல் இருப்பதற்காக கொண்டு வந்த விதிமுறைகளை எல்லாம் தயாநிதி ரத்து செய்தார்.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தயாநிதி நிர்பந்தம் செய்தார் என, கடந்த ஜூலை 6ம் தேதி, சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.* ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் வசம் வந்த பின், அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவும், லைசென்ஸ்கள் வழங்கவும், சட்ட விரோதமாக தயாநிதி சலுகை காட்டினார் என்றும், சி.பி.ஐ., குற்றம் சுமத்தியது. தங்கள் குடும்ப நிறுவன சன் டைரக்ட் "டிவி'யில் மேக்சிஸ் நிறுவனம் கணிசமான அளவில் முதலீடு செய்யவே இதைச் செய்தார் என்றும் கூறியது.










ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதன் அம்பலமும் அது தொடர்பான விசாரணையும் ஒரு சாதாரண ஊழல் விவகாரம் சார்ந்தது அல்ல என்ற எளிய உண்மையை விளக்கிப் புரிய வைக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான முரண்நகைதான். கிளப்பிவிட்ட சூத்ரதாரிகளான மாறன் சகோதரர்களுக்கு எதிராகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரும்பும் சமயம் இது. பாட்டிலில் அடைக்க முடியாத ஒரு பூதத்தை திறந்துவிட்டிருக்கிறோம் என்று 'கேடி பிரதர்ஸ்' என செல்லமாக அறியப்படும் கார்ப்பரேட் - அரசியல் அதிபர்கள் காலம் கெட்ட பிறகு வருந்தக்கூடும். பிசினஸ் போட்டியில் தொடங்கி, அரசியல் அரங்கிற்கு மாறிய இது வரையிலான கார்ப்பரேட் மோதல்களுக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 21ஆம் நூற்றாண்டிற்கே உரிய வகையில் ஒவ்வொரு அங்கத்திலும் அரசியலும் கார்ப்பரேட் மோதலும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறது. தங்களின் குடும்பத் தொழில் செழிக்க உதவிய தொலைதொடர்புத் துறை தங்கள் பிடியிலிருந்து பறி போனதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் மாறன்கள் இந்த ஊழலை அம்பலமாக்கினார்களா? டாடாவின் டி.டி.ஹெச். நிறுவனத்தில் பங்குகள் கேட்டு மாறன்கள் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஒதுக்கீட்டின் முறைகேடுகள் குறித்த சமீபத்திய அம்பலங்களின் பின்னணியில் டாடாக்கள் இருக் கிறார்களா?
ஸ்பெக்ட்ரம் விசாரணை எதுவரை பாயும், எது வரை பாயாது என்பது முற்றிலும் சட்டத்திற்குட்பட்டது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆ.ராசாவின் 2ஜி அலைவரிசை ஊழலில் நேரடி தொடர்பு இருந்தாலும் ரத்தன் டாடாவும் அனில் அம்பானியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் கடுமை காட்டி வரும் நீதித்துறை ரத்தன் டாடாவையும் அனில் அம்பானியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர்கள் அளவுக்குப் பெரிய தொழிலதிபர் அல்லாத ஷாகித் பல்வா மட்டும் கம்பிகளின் பின்னால் ஜாமீன் இல்லாமல் தொடர்கிறார். அதனால் கலா நிதி மாறனின் உயரம் விசாரணைக்கு உட்படுத்தும் அளவில் இருக்குமா, இல்லையா என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் தங்களின் அகந்தையாலும் அடாவடித்தனங்களினாலும் மாறன் குடும்பத்தினர் சம்பாதித்திருக்கும் எதிரிகளின் எண்ணிக்கை தராசை அவர்களுக்கு எதிராகத் திருப்பக்கூடும்.
கனிமொழி சிறை சென்ற பிறகே மாறன்கள் வலையில் சிக்குகிறார்கள் என்பதால் இதில் சி.ஐ.டி. காலனி சக்திகளின் பங்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. சிவசங்கரன் சி.ஐ.டி. காலனிக்கு நெருக்க மானவராகவே அறியப்படுகிறார். ஒரு காலத்தில் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த அவரையே மாறனின் புதல் வர்கள் பதம் பார்த்தார்கள். சிவசங்கரனை ஒரு வழக்கில் சிக்க வைத்து, சிறையில் தள்ள 'கேடி பிரதர்ஸ்' முயன்றதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் நாட்டை விட்டு ஓடி தப்பித்த நிலையில், அவரின் வயதான பெற்றோரைக் கம்பிக்குப் பின்னால் நிறுத்தி பிளாக்மெயில் செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தால் உந்தித் தள்ளப்படும் சிவசங்கரன் மட்டுமே மாறன் சகோதரர்களை சிறையில் தள்ளப் போதுமானது அல்ல. நுஸ்லி வாடியா தனது தந்தையுடனான சண்டையில் வெற்றி பெற ஜே.ஆர்.டி. டாடாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். அதே போல மாறன் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட ரத்தன் டாடா, ஸீ டி.வி. குழுமத்தின் சதீஸ் சந்திரா முதலிய சக்திகள் தங்களின் செல்வாக்கையெல்லாம் சி.ஐ.டி. காலனியின் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒன்று திரட்டினால்தான் ஜெகஜ்ஜால கில்லாடிகளான கேடி சகோதரர்கள் வசமாக சிக்குவார்கள். தி.மு.க.வும் அதன் தொண்டர்களும்கூட மாறன்களுக்கு எதிராகத் திரும்புவதால் சிவசங்கரனைத் தங்களின் பிரம்மாஸ்திரமாக சி.ஐ.டி. காலனி பயன்படுத்துகிறது. தங்களின் சிறைவாசத்திற்கு முழு காரணம் என சி.ஐ.டி. காலனி நம்பும் மாறன்களையும் தங்கள் வரிசையில் திகாரில் அடைக்கும்வரை அவர்கள் ஓயப் போவதில்லை. எனினும் எஸ் டெல் என்ற நிறுவனம் மூலம் மறைமுகமாக 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சிவ சங்கரனுக்கு எதிராகவும் ஸ்பெக்ட் ரம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரின் வாக்குமூலம் மட்டுமே மாறன்களை வீழ்த்தப் போவதில்லை. மாறாக, மாறன்களுக்கு எதிரான சாட்சியங்களாக ராசா ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைதொடர்பு அதி காரிகள்தான் கேடி பிரதர்ஸின் கதையை முடிக்கும் கடைசி ஆணி களாக இருக்கப் போகிறார்கள்.
மோசடிகளின் மீது கட்டமைக்கப்படும் அம்பானிகளின் சாம்ராஜ்ஜியம் ஒரு நாள் ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கப் போகிறது என்ற நுஸ்லி வாடியாவின் எச்சரிக்கையை 1980களில் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. டாடா, பிர்லாவைப்போல அம்பானிகள் வளர்வார்கள் என அன்றைய தலைமுறை கார்ப்பரேட்கள் நம்பாததால் வாடியா உளறுகிறார் என நினைத்தார்கள். இன்று அதே வர்ணனை மாறன்களுக்குப் பொருந்தும். தங்கள் பிசினஸ் வெற்றிக்காக அத்தனை வஞ்சகங்களிலும் ஈடுபடக்கூடிய 21ஆம் நூற்றாண்டின் அம்பானிகளாகத் திகழும் மாறன்கள் தென்னிந்திய டி.வி. சந்தையை ஏற்கனவே தங்கள் மூர்க்கமான பிடியில் வைத்திருக்கிறார்கள். மலிவு விலை விமான சேவைத் தொழிலைக் கைப் பற்றும் அவர்களின் முயற்சிக்கு தற்காலிக தடை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. 1980களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜவுளித் தொழிலை வியாபித்தபோது, பிற்பாடு பல்வேறு துறைகளையும் அவர்கள் வளைத்துப் போடுவார்கள் என யாரும் கற்பனை செய்யவில்லை.
சேனல் ஒளிபரப்பு செய்ய பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான உபகரணங்கள் வழங்காமல் மோசடி செய்த சன் குழுமத்தின் மீது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேபிள் ஆபரேட்டர் புகார் கொடுத்துள்ளார்.
றிவிட்டுவிட்டதாம். நிறுவனம் மீது இருந்த வழக்குகளை எல்லாம் சமாதானம் பேசி, வாபஸ் செய்ய வைத்து விட்டார்கள். ஆனால், சக்சேனா மீதான தனிப்பட்ட வழக்குகளில் எந்த வகையிலும் உதவி செய்யவில் லையாம். அதனால்தான் அவர் வெளியே வர முடியவில்லையாம். சக்சேனா இடத்துக்கு தினசரி நாளிதழில் கோவை பதிப்பில் பணியாற்றிய மூத்த படத் தயாரிப்பாளரின் மகனை தலைவராக நியமித்துவிட்டார்கள். அவரும் சுறுசுறுப்பாகப் பணியாற்ற ஆரம்பித்துவிட்டாராம். அவரும் படத் தயாரிப்பாளர்களுடன் தினமும் பேசி, நிறுவனத்தின் நிலையை எடுத்துச் சொல்லி வருகிறாராம். இதையடுத்து, பல புதிய படங்களின் ரைட்ஸை நிறுவனம் வாங்க ஆரம்பித்து இருக்கிறதாம். 

















தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருந்தபோது தொலைத் தொடர்புத்துறையில் வெளிநாட்டுக் கம்பெனிகள் மூலம் அன்னிய மூலதனம் 74% வரை உள்ளே வர அனு மதிக்கப்பட்டது. இந்த அனுமதியளிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதில்தான் விவகாரம் ஆரம்பிக்கிறது. அதுவரை, தமிழ்நாட்டில் மட்டும் சேவை அளித்து வந்த தொழிலதிபர் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை, தயாநிதிமாறன் அனுமதித்த வெளிநாட்டு மூலதன அனுமதி கொள்கையின் அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் என்கிற கம்பெனி 74% ஏர்செல் பங்குகளை வாங்கியது. இந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன். மேக்சிஸ் என்கிற வெளிநாட்டுக் கம்பெனியின் கைக்கு ஏர்செல் போனதும் அதுவரை இரண்டு வருடங்களாக தமிழகத்தில் இயங்குவதைப்போல இந்தியா முழுவதுமுள்ள 14 பகுதிகளில் சேவைகளை நடத்த ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் திடீரென ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றிற்கான லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன.
மேக்சிஸ் நிறுவனத்தின் ஆஸ்ட்ரோ என்ற துணை நிறுவனம் மூலமாக சன் குழுமத்திற்கு சொந்தமான சவுத் ஏசியா எஃப்.எம் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு 111.28 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆக, அனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் சென்றதும் அதற்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட, அதன் தொடர்ச்சியாக மேக்சிஸ் நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களின் சன் குழுமத்திற்கு வந்த முதலீடு 710 கோடி ரூபாயாகும். 

சொந்தமான கேபிளில் தனது ஒளிபரப்பை நடத்தி வருகிறது’ என்று ‘கல்’ கேபிள் லிமிடெட் சார்பில் அதன் பொது மேலாளர் ராஜேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் படி ஏறி இருக்கிறார்.
மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோயில், குமரன் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில், நொய்யல் போன்ற இடங்களில் எங்கள் கேபிள்களை, அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து, அதில் தனது இணைப்பைக் கொடுத்துள்ளது. இதுபோல, கோவை, ஈரோடு எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் உதவியுடன் அரசு கேபிள் அத்துமீறல் நடத்தி வருகிறது.

செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, ‘இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.



பெருமை காங்கிரஸுக்கு எதற்குப் போகவேண்டும்? ஒருவேளை தோல்வியைத் தழுவினால்..தனியாக நின்றது தி.மு.க. அதனால் தோற்றது.’ என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறாராம் கருணாநிதி. அதனால்தான், இப்படி ஒரு முடிவு என்று சொல்கிறது காங்கிரஸ் தரப்பு. டெல்லி காங்கிரஸ் தலைமை மீதான கோபமே இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் தி.மு.க-வில்…”

கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தை 2ஜி ஊழல் வழக்கைக் கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகளிடம் பேசினார். ‘பத்திரிகைகளில் தயாநிதி மாறனுக்கு கிளீன் சிட் கொடுக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. நாங்கள் யாருக்கும் கிளீன் சிட் கொடுக்கவில்லை. இது விசாரணையில் இருக்கிறது. மேக்சிஸ் இயக்குநரான ரால்ஃப் மார்ஷல், ஏர்செல் கைமாறுவதற்கு முன்பே, அமைச்சராக இருந்த தயாநிதி மாறனோடு மொரீஷியஸில் தொடர்புகொண்டார். இந்தத் தொடர்புகளுக்குப் பின்னர்தான் ஏர்செல்லுக்கு உரிமங்கள் கொடுக்கப் பட்டன. சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தபோது உரிமங்கள் கொடுப்பதில் தாமதம் செய்தனர்…’ என்று சி.பி.ஐ. தரப்பில் கூறிவிட்டு, ‘ஆனால் அமைச் சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை கட்டாயப்படுத்தி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்கவைத்த விவகாரத்தை சி.பி.ஐ-யால் நிரூபிக்க முடியவில்லை!’ என்றார்.







