New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: CSI- Church of South India Exposed


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: CSI- Church of South India Frauds
Permalink  
 


CSI சபைகள்
கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதா?
சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டதா?
டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டதா?

கம்பெனி சட்டத்தின்கீழ் CSIயின் அமைப்பு வருமானால் சபை மக்களின் பிரதிநிதிகள் முதலாளிகளாகிறார்கள். பிஷப் மற்றும் குருமார்கள் சபை மக்களின் ஊழியர்களாக மாறுகிறார்கள்!கம்பெனி என்றால் பிஷப்புக்கோ - குருவானவர்களுக்கோ ஆளுமை உரிமை இல்லை. அவர்களின் அதிகாரம் பிடுங்கப்படுகிறது. சமீபத்தில் அறிவித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு வித்தியாசமான விதத்தில் அமைந்துள்ளது. அதை வாசித்துப்பாருங்கள்.

csia.jpg


ORDER (தமிழ் மொழிபெயர்ப்பு)

(இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 226வது ஷரத்தின் கீழ் மனுதாரரின் விண்ணப்பம் மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தில் பேராணை மனு எண்: W.P.13895/10ஐ தாக்கல் செய்துள்ளார்கள். அதில் கம்பெனி பதிவாளரிடம் தான் கொடுத்த மனுமீது உரிய விசாரணை செய்து மனுவை முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டி உள்ளார். அதன்படி இருபக்க வாதங்களையும் கேட்ட நீதியரசர் மனுதாரர், 1ம் எதிர்மனுதாரரான கம்பெனி பதிவாளரிடம் கொடுத்த மனுமீது இறுதி முடிவு எடுக்கவேண்டும். மேலும் எதாவது சந்தர்ப்பத்தில் இரண்டாம் எதிர் மனுதாரரான தென்னிந்திய திருச்சபையானது (CSI) கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கம்பெனி அல்ல என்று முடிவு செய்யப்பட்டால் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை ஒன்றாம் எதிர் மனுதாரர் சட்டப்படியான அதற்கு உரிய மன்றத்தில் பரிகாரம் தேடுமாறு கூறி மனுவை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற வழிகாட்டுதலுடன் இப்பேராணை மனு முடிக்கப்பட்டுள்ளது).

csib.jpg


(இதற்கு பதில் அளிக்க 3 மாதம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கால அவகாசத்தை நீட்டிக்க CSI மாடரேட்டர் அவர்கள் புறப்பட்டு போயிருக்கிறார். இந்த தீர்ப்பின் மூலம் பல மாற்றங்கள் CSIயில் உருவாகலாம். சபைமக்களின் அனுமதியில்லாமல் பிஷப்போ - மாடரேட்டரோஎந்த நிலத்தையும், கட்டிடத்தையும் விற்கவோ - வாங்கவோ முடியாது. நல்லதே நடக்கட்டும்).



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குற்றம் சாட்டப்பட்ட CSI
பிஷப்மார்களுக்கும் - ஆயர்களுக்கும்
சட்டத்தில் தண்டனை உண்டு
CSI பிஷப்- ஆயர்கள் எந்தெந்த காரணங்களுக்காக தண்டிக்கப்படமுடியும்.
CSI சட்டம் (CONSTITUITION) கூறுவது என்ன?
APPENDIX- I : BY - LAWS - பின்னிணைப்பு - I BY - LAWS
CHAPTER XI - அத்தியாயம் - XI
DESCIPLINE OF THE CHURCH
சபை ஒழுங்கு

DEFINITION OF OFFENCES
தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் பட்டியல்:

தென் இந்திய திருச்சபை ஒழுங்கின்படி, கீழ்கண்ட குற்றகோட்பாடுகள் அபிஷேகம் பெற்ற அல்லதுபெறப்படாத ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உள்ளடக்கம்:

1).  தென்னிந்திய திருச்சபையின் போதனை, பிரசங்கம் மற்றும் உபதேச கோட்பாடுகளுக்கு மாறுப்பட்ட அணுமுறைகள்,

2).  சபைகளுக்குள் உரிய அனுமதியின்றி கோஷ்டி உருவாக்குதல், சபை ஐக்கியத்திலிருந்து பிளவுப்படுத்துதல், முன் அனுமதி இன்றி வேறு திருச்சபையில் சேருதல், தென்னிந்திய திருச்சபைக்கு உட்படாத பிற சபைகளில் அங்கம் வகித்தல், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறுப்பட்ட ஆராதனைகளில் ஈடுப்படுத்திக்கொள்ளுதல்,

3).  குற்ற சம்பந்தப்பட்ட, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற, ஒழுங்கற்ற செயல்கள், பழக்க வழக்கங்கள், தீய நடத்தைகள்

4).  தென்னிந்திய திருச்சபையின் சட்ட திட்டங்களுக்கு விரோதமான அத்துமீறல்கள்

5).  திருச்சபையின் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு சொந்தமான நிதி, மற்றும் சொத்துக்களை தவறாக பயன்படுத்தவோ அல்லது கையாடவோ செய்தல்,

6).  திருச்சபைக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை கேட்கப்படும் போது கொடுக்க மறுத்தல்,

7).  அதிகார துஷ்பிரயோகம், அறிந்தும் கீழ்ப்படியாமை மற்றும் நடத்தை சீர்கேடுகள்

8).  மேலே குறிப்பிட்ட குற்றங்கள் அல்லது எதாவது குறிப்பிடாத குற்றங்கள் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டால், மேலே குறிக்கப்பட்ட குற்றங்களில் ஒருவர் பிடிக்கப்பட்டால், தென்னிந்திய திருச்சபை, திருமண்டலம் மற்றும் அதற்குட்பட்ட சட்டதிட்டங்களுக்கு விரோதமான எந்த செயல்களுக்கும் குற்றவாளிகள்மேல் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


அபிஷேகம் பண்ணப்பட்ட போதகர்கள் மற்றும் பேராயர்களின்குறிப்பிட்ட தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியல்:

1).  நடத்தை, பழக்கவழக்கம், உண்மையற்ற வாழ்க்கை முறைகள் இவைகளால் திருச்சபையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்தல்,

2).  தொடர் ஒழுங்கீனம் அல்லது சபை கடமைகளை நிறைவேற்றுவதில் உதாசீனம்,

3).  CSI ஊழியத்திற்கு அப்பாற்ப்பட்ட எவ்விதமான தொழில் அல்லது (வேறு ஸ்தாபன) அலுவல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல்,

4).  பேராயர் தாமாக தலையிட்டு முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் மூப்பர்கள் மற்றும்போதகர்கள் தலையிட்டு அவமரியாதையுடனும், கீழ்படியாமையுடனும் நடந்துக்கொள்ளுதல்.


தண்டனைகள்:

CSI சபையின் நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தண்டனைகள்:

1. எச்சரிக்கை

2. குற்றம் சாட்டி கண்டித்தல்

3. அபராதம் கட்டுதல்

4. இழப்பீடு வழங்குதல்

5. ஊழியம் செய்ய தடைவிதித்தல்

6. சபை சலுகைகளிலிருந்து விலக்குதல்

7. சபை அலுவல்களில் கட்டுபாடு

8. பேராயர்களின் அதிகாரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு திரும்ப எடுத்தல்

9. குறிப்பிட்ட காலத்திற்கு அலுவலக பொறுப்பு வகிக்க தடை

10. வழங்கப்பட்ட சலுகைகள் பறிப்பு

11. பதவி பறிப்பு

12. பரிசுத்த நற்கருணையிலிருந்து குறுகிய காலத்திற்கு தடை

13. சபையிலிருந்து விலக்கிவைத்தல்

14. இனி குற்றம் செய்வதில்லை என்று வாக்குறுதி அளித்தல்.



 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாடரேட்டர் & பிஷப் 
சொத்து விவரம் சமர்ப்பிக்கவேண்டும்

புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் மாடரேட்டர் அல்லது பிஷப் தங்களது சொத்து விவரங்களையும்,அசையும், அசையா சொத்துகளின் விவரங்களையும் அவரவர் டையோசிஸ் பத்திரிக்கைகளில் வெளிப்படையாக சமர்பிக்கவேண்டும். அப்படியே மொத்தம் எத்தனை பேங்க்-களில் பிஷப்மாருக்கு கணக்குகள் உண்டோ அதன் விவரமும், அந்த தேதியில் உள்ள மொத்த பண விவரமும் சமர்பிப்பது நல்லது. சபை மக்களும், டையோசிஸ் மக்களும் அதை அறியவேண்டும்.

இந்த விவரங்களை சினாடுக்கு அல்லது கமிட்டிக்குமட்டும் அறிவித்தால் போதாது, வெளியரங்கமாகஅந்தந்த திருமண்டலத்திலுள்ள எல்லா சபை மக்களும் அறியும் வண்ணம் பகிரங்கமாக திருமண்டலஅதிகாரபூர்வ பத்திரிக்கையில் வெளியிடவேண்டும்.

mp1.jpg
Rt.Rev.DORAI

இது புதிதாக பதவி ஏற்கும்போதுமட்டும் பிஷப் அல்லது மாடரேட்டர் சொத்து கணக்கு வெளியிடுவதுமட்டும் போதாது, இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பிஷப், மாடரேட்டர் அவர்களின் அப்போதைய சொத்து விவரம் சபை மக்கள் அறியும் வகையில் வெளியிடுவது தாங்கள் பண ஆசையில் விழாமல் இருக்க அவர்களுக்கு உதவும்.

star2.gif  கோயமுத்தூர் திருமண்டல முன்னாள் பிஷப் Rt.Rev.துரைஅவர்கள் பிஷப்பாக பதவி ஏற்கும்முன்வரை தான் வாங்கிய சிட்டி &லோன் பணம் அதை அடைக்கமுடியாமல் போனதால் ஜப்தி நோட்டீஸ் அவருக்கு கொடுக்கப்பட்டதாக எல்லாராலும் கூறப்பட்டதையும் தினசரி பத்திரிக்கையில் வெளியானதையும் நாம் அனைவரும் அறிவோம்.

அதன்பின் பிஷப்.துரை அவர்கள் பெயரில் 3 பேங்க்-களிலுள்ள அவர் கணக்கில் கோடிக்கணக்கானபணம் எப்படி சேர்ந்தது? மிக விலை உயர்ந்த கார்களும், பல இடங்களில் தன் மனைவி பெயரிலும்,பினாமி பெயரிலும் வாங்கி உள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள அசையா சொத்துக்கள் எப்படி சேர்ந்தது? பிஷப்.துரை அவர்கள் பாஸ்டராக இருக்கும்போது அவரின் சம்பளம் என்ன?பிஷப்பானவுடன் அவர் சம்பளம் என்ன? ஆஸ்ட்ரோலியாவுக்கு பலமுறை மகளோடு சென்றுவர ஆன செலவு பல லட்சங்கள் எங்கிருந்து வந்தது? இவரது மகன் டாக்டர் படிப்பு படிக்க ஆன செலவு பல லட்சங்கள், மகளின் மிக ஆடம்பரமான திருமண செலவுக்கு பல லட்சங்கள் எங்கிருந்து வந்தது? இவை எல்லாம் எப்படி வந்தது? இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டபோதுதானே, வரவுக்கு மீறின சொத்துக்கள் காரணமாகவும், வேறு பல குற்றச்சாட்டுகள் காரணமாகவும் ஜெயில் வரை போய் வரவேண்டியதானது. இப்போதும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

mp2.jpg
Most Rev.S.VASANTHAKUMAR

star2.gif  இப்போதுள்ள CSI மாடரேட்டர் Most Rev.வசந்தகுமார்அவர்கள் கதையும் அதுதானே! தன் பெயரிலும், தன் மனைவிபெயரிலும் பேங்கில் கணக்கு தொடங்கி திருமண்டலத்திற்கு சேரவேண்டிய பலவித பணவரவுகள் தன் கணக்கில்கோடிக்கணக்கில் சேர்க்க ஏற்பாடு செய்ததால்தானே இப்போது போலீஸ் வளையத்துக்குள் அகப்பட்டு ஒவ்வொரு முறையும் கைது செய்ய கோர்ட் கட்டளையிட்டபோது, பலமுறை ஜாமீன் வாங்கி உலாவிக் கொண்டிருக்கிறார்.

mp3.jpg
Most Rev.SUGANTHAR

இப்படி CSI தலைமையில் உள்ளவர்களே பண ஆசை பிடித்தவர்களாகவும் உள்ளார்கள்.

star2.gif  அதேபோல் முன்னாள் மாடரேட்டர் Most Rev..சுகந்தர் அவர்களும் இதே பண விஷயத்தில் அகப்பட்டு தன்னுடைய வரவுக்கு மீறின சொத்துக்கள், கோடிக்கணக்கில் பணம் சேமிப்பு, இவைகளுக்கு காரணம் காட்டமுடியாமல் உள்ளார். இப்படி ஏராளமான வழக்கில் அகப்பட்டுள்ளார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட மாடரேட்டர்கள், பிஷப்புகள் ஆடிட்டர்கள் காலிலும், பிரபல வக்கீல்களின் காலிலும் விழுந்து கிடக்கிறார்கள். என்ன பரிதாபம்!


சுனாமி பண மோசடி
 
mp4.jpg
Dr.பாலின்

star2.gif  பழைய CSI சினாட் செயலர் Dr.பாலின் அவர்கள் சுனாமி பணம் மோசடி செய்த விவரம் உலகமே அறியும். இவர் தன் மகளை பினாமியாக்கி அவர் பெயரில் ஒரே நாளில் பல கோடிகள் கணக்கில் வரவு வந்ததற்கு காரணம் கூற முடியாமல் குடும்பமே ஜெயில் சென்று வந்ததை அறிவோமே! அந்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருக்கிறதே! எவ்வளவு துணிகரம் பாருங்கள்.

star2.gif  உலக உதவி ஸ்தாபனங்கள் பல CSI திருமண்டல முன்னேற்றத்துக்காகவும், சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உதவ டாலராக - கோடிக்கணக்கில் பண உதவி செய்கிறது. இதுமட்டுமல்லாமல், இன்ஜினிரிங் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள், ஆசிரியைகள், லெக்சரர் சேர்க்கை, பாலிடெக்னிக் ஆசிரியர், ஆசிரியை பயிற்சி பள்ளி, நர்சிங் பயிற்சி கல்லூரி ஆகிய இவைகள் எல்லாம் பிஷப்மார்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் இவர்களுக்கு நிரந்தர வருமானமும் கொடுக்கிறது. இதை தவறாக பயன்படுத்துபவர்கள்தான் வருமானத்துக்கும், தங்கள் சம்பளத்துக்கும் மீறின சொத்துக்களை சேர்ப்பவர்களாவர். ஆகவே இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பிஷப்மார்களின் சொத்து கணக்கைபகிரங்கமாக சமர்பித்தால் பலன் உண்டாகும். இவர்கள் கர்த்தருக்கு முன்பாகவும் குற்ற உணர்ச்சியில்லாமல் நிற்கலாம். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. 1 தீமோ 6:10.

star2.gif  சில பிஷப் அல்லது மாடரேட்டரால் கடந்த காலத்தில் முழு CSIக்கும் ஏற்பட்ட களங்கம், அவமானம் இனி உண்டாகாமல் இருக்க சொத்து விவரம் சமர்பிப்பதை CSIயிலும் & லூத்தரன் சபையிலும் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியம், மிக அவசரமும் ஆகும்.

CSI மீது அக்கறை கொண்ட CSI பாதுகாப்பு சங்கங்கள், CSI LAITY சங்கங்கள், CSI நல விரும்பிகள், பிஷப் - மாடரேட்டர்களுக்கு வருமானத்துக்கு மீறிய சொத்துக்கள் சேர்த்து அதனால் CSI & லூத்தரன் சபைகளுக்கு கெட்ட பெயர் உண்டாகாதிருக்க, இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அவரவர்களின் சொத்து விவரம் சமர்பிக்க சட்டம் இயற்ற வற்புறுத்த வேண்டிக்கொள்கிறேன். சமர்பித்த சொத்துக் கணக்கு விவரம் அனைத்து சபை மக்களும் அறியவேண்டும்.

star2.gif  வேதவசனம் கூறுவதுபோல திருட்டுத் தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும். நீதி 9:17.

star2.gif  அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.நீதி 16:8

star2.gif  தவறான விதத்தில் சொத்து, பணம் சேர்ப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி தன் தவறான செயல்களைக்குறித்து பயம் இருக்காது, இருதயம் கடினப்பட்டு அவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் அவர்களுக்கு சரி என்றுதான் தோன்றும். அது அவர்களுக்கு இன்பத்தை கொடுக்கும் . . . முடிவோ . . . . ? மிகப் பரிதாபம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்

இந்த நோட்டீஸை பார்த்தபின் ஒளிக்கும் - இருளுக்கும் சம்பந்தமேது? அவிசுவாசியுடன் - விசுவாசிக்கு பங்கேது? அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக! 2கொரி 6:14. இந்த குறிப்பிட்ட வசனத்தை பெந்தேகோஸ்தே சபைகளின் வேத புத்தகத்திலிருந்து கிறுக்கிபோடுவது நல்லது.

p01.jpg

மேலே காண்பது திமுக (DMK) கழக தேர்தல் விளம்பரம் அல்ல, பெந்தேகோஸ்தே சபைகளின் கிறிஸ்தவ அடையாளம் ஏதும் இல்லாத மாமன்ற அழைப்பிதழ்


பெந்தேகோஸ்தே சபைகளின் அழைப்பிதழ் நோட்டீஸ்

star2.gif  பரிசுத்தாவியின் அக்கினி அபிஷேகம் பெற்றவர்கள், பரலோக பாஷைகளை பேசுகிறவர்கள் என்று கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் பெந்தேகோஸ்தே சபைகளின் சினாட் துவக்கவிழா நோட்டீஸ்தான் முன்பக்கத்தில் நீங்கள் பார்த்தது, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கு ஆச்சரியமாக இல்லை. காரணம் நான் சில வருடங்களுக்கு முன்பே பெந்தேகோஸ்தே சபைகள் CSI-யாகவும், லூத்தரன் சபைகளாகவும் மாற ஆரம்பித்துவிட்டது. ஆகவே பெந்தேகோஸ்தே சபைகள் மனம்திரும்பவேண்டும் என்று ஒரு தனி கட்டுரையே ஜாமக்காரனில் எழுதினேன். பெந்தேகோஸ்தே சபைகளுக்குள் ஆழமாக நுழைந்து, தெளிந்து, விவரமறிந்தவன் நான்.

star2.gif  முன்பக்கத்தில் கண்ட நோட்டீஸ் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு மாமன்றம் அமைத்து அதை CSI சபைகளின் தலைமைப்போல சினாட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இவர்கள் CSI & லூத்தரன் சபைகளில் ஆவி இல்லை, அவைகள் செத்த சபை என்றும், சபை போதகர்கள் தங்களை ரெவரன்ட் (Reverend) என்று அழைக்கப்படுவது தவறு என்றார்கள். அந்த Rev என்ற பெயருக்கு ஆங்கில அகராதியில் பயங்கரம் என்ற ஒரு அர்த்தம் உண்டு. ஆகவே இவர்கள் யாவரும் பயங்கரமானவர்கள், அவர்கள் உங்களை நரகத்துக்குதான் அழைத்துசெல்வார்கள். ஆகவே ரெவரன்ட் என்ற பெயரில் உள்ள மேய்ப்பர்கள் நடத்தும்CSI & லூத்தரன் சபைகளைவிட்டு வெளியே வா, அப்போதுதான் நீ கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவாய் CSI & லூத்தரன் சபைகளில் உள்ளவர் யாவரும் பாவிகள் என்று கூட்டத்துக்கு கூட்டம் அவர்கள் பாஷையிலும், அந்நியபாஷையிலும் அறிவித்து CSI சபைகளிலிருந்து பெரும்கூட்ட மக்களை பிரித்தவர்கள். ஆனால் இவர்களே இப்போது தங்களை பாஸ்டர்கள் என்று அழைப்பதை அவமானமாக கருதி தங்கள் பெயருக்கு முன்னால் Reverend (ரெவரன்ட்) என்று போட்டுக் கொள்கிறார்கள். REV என்று போட்டுக்கொள்ளாத பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். Reverend பட்டத்தின்மேல் இப்போது அவர்களுக்கு அப்படி ஒரு வெறி. பாஸ்டர் -ரெவரன்டாக மாறியவுடன் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் உடுத்திக்கொண்டிருந்த வெள்ளை ஜிப்பா - வெள்ளை வேஷ்டி ஆகியவை அணிவதுகூட மறைந்துபோய் இப்போது கோட்டு - சூட்டு - சபாரியாகமாறிவிட்டது. மனிதன் வேஷமாகவே திரிகிறான் . . . . என்ற வேதவசனம் எத்தனை உண்மையாகிறது பார்த்தீர்களா? இதைத்தான் இவர்கள் பரிணாம வளர்ச்சி என்றார்களோ? முன்பெல்லாம் மக்கள் மத்தியில் வெள்ளை-ஜிப்பா, வெள்ளை-வேஷ்டி அணிந்துவரும் பாஸ்டர்களை பார்க்கும்போதே ஒரு தனி ஆவிக்குரிய மரியாதை தோன்றும். அதிலே ஒரு தாழ்மை காணப்படும். ஆனால் இப்போதுள்ள பகட்டு உடைகள் அந்தகால ஆவிக்குரிய தன்மையை இழக்க செய்துவிட்டது. அதன்மூலம் இவர்கள் சுபாவங்களில் பெருமை, ஆணவம் அலட்சியம் உண்டாக ஆரம்பித்துவிட்டது.

CSI & லூத்தரன் சபைகளின் டையோசிஸ் அல்லது சினாட் கூட்டங்களில்கூட அரசியல்வாதியோ - மந்திரியோ தலைமை வகித்தது கிடையாது. கேரளாவில் சில டையோசிஸ்களில்மட்டும் புதிய பிஷப் தெரிந்தெடுக்கப்பட்டபின் பிஷப் அவர்களை அந்த சபை மக்களோடு, ஊர்மக்களும் பிஷப் அவர்களை வரவேற்பார்கள். அந்த பொதுகூட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்மட்டும் அந்தப்பகுதி MP அல்லது MLAகலந்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் பிரசங்கம் செய்யமாட்டார்கள். பூரண பெந்தேகோஸ்தே சபைகள் என்று தாங்களாகவே அழைத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்ற (சினாட்)துவக்கவிழா தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படும் ஒரு மாதத்துக்குமுன் சென்னையில் நடைப்பெற்றது. தேர்தலுக்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வாழ்வா - சாவா என்ற ஆவேசத்தில் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடந்துக்கொண்டிருக்கும்போது பெந்தேகோஸ்தே சபை மக்களை உதயசூரியனுக்கு (DMK) ஓட்டுப் போடுங்கள் என்று அவர்களுக்கு ஓட்டு சேகரிப்பதுபோல் இந்த நோட்டீஸ் காணப்படுகிறதல்லவா! அதனால்தானோ என்னவோ நோட்டீஸில் இவர்கள் வெளியிட்ட தலைவர்களின் கட்சி படுதோல்வியை கண்டது. பரிதாபம்! இந்த நோட்டீஸ்சில் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது காணப்படுகிறதா? என்பதை உற்று கவனித்துசொல்லுங்கள்! குறைந்த பட்சம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் என்பதற்காகவாவது வேத புத்தகத்திலிருந்து ஒரே ஒரு வசனமாவது அல்லது இயேசுகிறிஸ்து என்ற பெயராவது எங்காவது காணப்படுகிறதா? இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம்காட்ட நோட்டீஸ்ஸின் எந்த ஒரத்திலாவது சிலுவைபோன்ற எந்த ஒரு அடையாளமாவது காணப்படுகிறதா? என்று பூதக்கண்ணாடியிலாவது பார்த்து சொல்லுங்களேன். என்ன ஒரு வெட்கம் கெட்ட அறிவிப்பு இது!

star2.gif  இப்படி கிறிஸ்துவையும், வேத வசனத்தையும் இருட்டடிப்பு செய்து இந்த பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் என்ன சாதிக்கப்போகிறது? இவர்களால் கிறிஸ்துவுக்கு என்ன பிரயோஜனம்?. இந்த நோட்டீசில் காணப்படும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களின் பெயர்களை வாசித்துப்பாருங்கள். இவர்களில் பலர் பிரபலமான பாஸ்டர்கள், பெரிய பெரிய சபைகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள் ஆகும். இவர்களில் ஒருவருக்காவது கிறிஸ்துவை அல்லது ஜீவனுள்ள வசனத்தை நோட்டீஸில் குறிப்பிடவேண்டும் என்று ஒருவர் புத்தியிலாவது தோன்றவில்லையா? என்ன அநியாயம் இது!

star2.gif  கடையில் ஊறுகாய் தயாரித்து விற்பவர், மசாலாபொடி, இட்லிபொடி இப்படி விற்கும் பேக்கட்டுகளில், பாட்டில்களில் வசனத்தை எழுதிவிற்கும் சில கிறிஸ்தவ வியாபாரிகளின் பொருள்களை இவர்கள் யாரும் பார்த்ததில்லையா? அதை வாங்கும் நபர் ஒரு வசனமாவது வாசிக்கமாட்டாரா? அந்த பாட்டில் டேபிளில் வைக்கப்படும்போது ஒரு புறமதஸ்தராவது அந்த வசனத்தை தினம்தினம் வாசிப்பாரே! என்ற வாஞ்சையிலும், எதிர்பார்ப்பிலும் வசனத்தை அச்சடித்து ஒட்டி விற்கும் அந்த கிறிஸ்தவ வியாபாரிக்குள் ஏற்பட்ட அந்த ஆவிக்குரிய வாஞ்சைகூட, இத்தனை பெரிய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஒருவருக்காவது தோன்றவில்லையே! வசனத்தை பார்த்தால் அல்லது அதில் அச்சடித்துள்ள சிலுவை சின்னத்தை பார்த்தால் மற்ற மதத்தினர் தன் பொருளை வாங்காமல்போய்விட்டால் வியாபாரம் நின்றுவிடும் என்ற பயத்தையும், அதனால் ஏற்படப்போகும் நஷ்டத்தையும் அந்த கிறிஸ்தவ வியாபாரிகள் மனதில் கொள்ளாமல், ஆண்டவரை அந்த விதத்திலாவது மகிமைப்படுத்த துணிந்த அந்த வியாபாரிகளுக்கு இருந்த தைரியம்கூட இந்த பெரிய பாஸ்டர்களுக்கும்,பெந்தேகோஸ்தே மாமன்றத்துக்கும் (சினாடுக்கும்) இல்லாமல்போனது வெட்கத்தை உண்டாக்குகிறது.

star2.gif  மனிதரை திருப்திப்படுத்தவும், அரசியல்வாதிகளின் தயவு தங்களுக்கு வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த மாமன்றம் கூடியதாக தெரிகிறது. அந்த நோட்டீஸையும் அதில் உள்ள அரசியல்வாதிகளின் புகைப்படங்களையும் பார்க்கும்போது மிகத்தெளிவாக விளங்குகிறது.

star2.gif  இவர்களெல்லாம் எப்படி இரத்த சாட்சியாக மரிக்க ஆயத்தப்படுவார்கள். அரசாங்கம் ஆராதனை நடத்தக்கூடாது, இயேசுவை அறிவிக்கக்கூடாது என்றால் இவர்கள் யாவரும் அப்படியே சிரம் தாழ்த்தி கீழ்படிவார்கள் என்பது உறுதி.

star2.gif  மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபே 6:6.

star2.gif  மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோட ஊழியம் செய்யுங்கள். எபே 6:8

star2.gif  மேலே கண்ட நோட்டீஸ்ஸில் குறிப்பிடப்பட்ட பாஸ்டர்கள் யாவரும் மனம்திரும்பவும், கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியத்தோடு ஊழியம் செய்யவும் அவர்களுக்காக ஜெபியுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேரளா A.G சபை பாஸ்டரின் 
நவீன உபதேச வாழ்த்து அட்டை

star2.gif  AG சபை பாஸ்டர்.பாபு ஜார்ஜ் என்பவர் கேரளாவில் பத்தினந்திட்டா (PTA.Dt) மாவட்ட AGசபைகளின் டிஸ்ட்ரிக்ட் செயலாளராவார். இவர் கேரளாவில் ராந்நி (Ranny) என்ற ஊரில் உள்ள AOGசபையின் தலைமை பாஸ்டராகவும் இருக்கிறார். இவர் வருடாவருடம் புறமதஸ்தருக்கு அனுப்புகிற வாழ்த்து அட்டைகள்தான் நீங்கள் இங்கு காண்பது,

ag2.jpg

ag3.jpg

star2.gif  மஹாவீராவை தெய்வமாக வணங்குகிறவர்களுக்கு வருடாவருடம் இந்த AG சபை பாஸ்டர் அனுப்பும் வாழ்த்து அட்டை ஆகும். இதில் எழுதப்பட்ட வார்த்தை கடவுளாகிய மகாவீர் உங்கள் யாவரையும் இவ்வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பராக.

ag1.jpg

star2.gif  கர்நாடகா - ஆந்திரா மாநிலங்களில் வாழும் கொங்கனி பாஷை பேசும் மக்கள் கொண்டாடும் புது வருட பண்டிகை உகாதி ஆகும். அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்.

star2.gif  கேரளா இந்து மலையாளிகள் கொண்டாடும் வருடபிறப்பு பண்டிகை விஷு ஆகும். இவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளில் உகாதி-விஷு கொண்டாடும் உங்களை உங்கள் தெய்வம் இந்த புது வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பாராக.

star2.gif  பெந்தேகோஸ்தே சபைகள் CSI & லூத்தரன் சபைகளாக மாறிகொண்டுவருகிறது என்று அன்றே எழுதினேன். பல ஆண்டுகளுக்குமுன் இதேமாதிரி புறமதஸ்தரின் பண்டிகைகளை கிறிஸ்வர்களும் தங்கள் சபைகளில் கொண்டாடலாம் என்று ஒரு பிஷப் கட்டளையிட்ட விவரம் எழுதினேன். CSI சினாட்கூட்டத்தில் எல்லா இந்து தெய்வங்களையும் இயேசுவோடு ஒப்பிட்டு புகழ்த்தி ஆராதனை நடத்தியதை ஆட்சேபித்து ஜாமக்காரனில் அதை வெளியிட்டதையும் அதை வாசித்த அனைத்து CSI சபைகளும் தங்கள் சபை கமிட்டியில் தீர்மானம் எடுத்து CSI சினாட் அறிமுகப்படுத்திய இந்த உபதேசத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று எழுதி CSI சினாடுக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் அனுப்பி அறிவித்ததையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.

star2.gif  தமிழ்நாட்டில் சில கிறிஸ்தவ ஊழியர்கள்கூட தீபாவளி - பொங்கல் வாழ்த்து அட்டைகள் அச்சடித்து புறமதஸ்தர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட AGசபை பாஸ்டர் பலவருடங்களாக இப்படி வாழ்த்து அட்டைகளை அச்சடித்து புறமதஸ்தருக்கு அனுப்புவதை AG சபைகள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. இது தவறு என்று யாரும் சுட்டிக்காட்டவில்லையே! CSI சபைகளிலுள்ள பெரும்பான்மையோர் ஜாமக்காரனில் குறிப்பிட்ட இந்த நவீன உபதேச விவரம் வெளியிட்டவுடனே, அவர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை காட்டிய அந்த ஆவிக்குரிய வைராக்கியம் கேரளாவில் ராந்நி ஊரிலுள்ள AG சபை மக்களுக்கும், கேரளா AGசபைகளுக்கும் அந்த வைராக்கியம் இல்லாமல் போனதேன்? AG சபை எம்மதமும் சம்மதம் என்ற உபதேசங்களை சம்மதிக்கிறதா? இவர்களுக்காகவும் இனி ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

aog.pngஅசம்பளீஸ் ஆஃப் காட் (AOG)
சபைகளிலும் ஊழல்

star2.gif  டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய எனக்கு எல்லா சபைகளிலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவேதான் பல சபைகளில் நடக்கும் பிரச்சனைக்குறித்து அந்தந்த சபைகளிலுள்ள என் வாசகர்கள் எனக்கு எழுதி ஆலோசனை கேட்கிறார்கள். அந்த வகையில் இம்முறை பெந்தேகோஸ்தே சபைகளைக் குறித்தும், குறிப்பாக அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபைகளில் நடந்துக்கொண்டிருக்கும் பயங்கர பிரச்சனைகளையும், பண ஊழல்களைக் குறித்தும் எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

star2.gif  CSI & லூத்தரன் சபைகளில் உள்ள டையோசிஸ்களில் CSIயின் தலைமையான சினாட்டில் நடந்த கோடிக்கணக்கான பணக்கொள்ளைக்குறித்து சில மாதமாக ஜாமக்காரனில் நான் எழுதிக்கொண்டிருந்ததை வாசித்து சலித்துப்போயிருப்பீர்கள். இப்போது இதேமாதிரி பணக்கொள்ளை பெந்தேகோஸ்தே சபைகளிலும் ஆரம்பித்துவிட்டது. TPM சபைகளுக்கு அடுத்ததாக நான் மதிக்கும் பெந்தேகோஸ்தே சபையான அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபைகளில் சில வருடங்களாக புகைந்துக் கொண்டிருந்த பண ஊழல்கள் இப்போது உலகம் அறிய தொடங்கிவிட்டன. இப்படிப்பட்ட புகார்களைக் குறித்து கேள்வி கேட்டபோது எங்கள் சபையில் குறிப்பிட்ட சிலர் தங்களுக்கு பதவி கிடைக்காததாலும், பணம் கிடைக்காததாலும் பொறாமை காரணமாக சில AOG பாஸ்டர்கள் இப்படி பேசி கொண்டு திரிகிறார்கள் என்று அன்று தலைமை பாஸ்டர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள். யுழுபு சபை ஜனங்களும் அதை நம்பினார்கள். ஆனால் இப்போது AOG சபைகளின் பொதுக்குழு கமிட்டியில் ஜனநாயகம், கிறிஸ்தவ அன்பு செத்துப்போயிற்று என்றும், யாரும் தங்கள் எண்ணங்களை, கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள அங்கு சுதந்திரம் இல்லை என்றும் வெளிப்படையாகவே கூறத்தொடங்கினார்கள். மேலும் பிரபலமில்லாத அல்லது தலைமைக்கு பணிந்து நடக்காத சில AOG பாஸ்டர்கள் பழி வாங்கப்படுகிறதாகவும் அறிகிறோம். அவர்களுக்கு அங்கு ஒரு மதிப்பும் இல்லை. சாதாரண பாஸ்டர்கள் மிக மட்டமாக நடத்தப்படுகிறார்கள். அதுவும் குறைந்த படிப்புள்ள AOG பாஸ்டர்கள் என்றால் AOG தலைமைக்கு தீண்டதகாதவர்கள்போல் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான் AOG சபையின் பல பாஸ்டர்களின் ஆதங்கமாகஎனக்கு அறிவிக்கப்பட்டது.

star2.gif  அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபை உலகளவில் சட்டத்திட்டங்களுடன் கூடிய நல்ல அமைப்பு(Structure) கொண்ட சபையாகும். AOG சபை Trust என்ற அமைப்பில் அல்லாமல், Society என்ற சரியான அமைப்பில்தான் நல்லமுறையில் இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருந்தது. தலைவர்கள் மாற்றமும் - பிரச்சனையும் உருவானது. AOG சபை தமிழ்நாட்டில் செங்கோட்டை பாஸ்டர்.ஜெயராஜ்அவர் உறவினரான பாஸ்டர்.ஆதம் துரை அவர்கள், கேரளாவில் பாஸ்டர்.பி.டி.ஜான்சன்போன்றவர்களால் தொடங்கப்பட்டது. சங்க சட்டங்களின்கீழ் சொசைட்டியாக இந்தியாவில் 1952ல் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. பதிவு எண்: 2701-1951,52. இப்படி அனைத்து இந்தியா AOG என்று செயல்பட தொடங்கியபின் 1997ம் வருடம் அசம்பளீஸ் ஆப் காட் இந்தியா என்ற பெயரில் தமிழ்நாட்டில் முன்பு குறிப்பிட்ட பாஸ்டர்களாலும், வேறு சிலராலும் மறு அரசாங்க பதிவு (559-1997) செய்யப்பட்டது.

star2.gif  பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் தலைவராக பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் சட்டப்படி நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. காலங்கள் மாறமாற பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் காலத்திலேயே சபை விவரங்களையும், கணக்குகளையும் அரசாங்கத்துக்கு ஒழுங்காக தெரிவிக்கப்படாது, கவலையீனமாக அரசாங்க நடபடிகள் விட்டுப்போனது என்று கூறப்படுகிறது. அவருக்குபின் வந்த AOG தலைவர்களும்,AOG கணக்குகளையும், மற்ற விவரங்களையும் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்காமல் விட்டுவிட்ட காரணத்தால் இப்போது AOG சபை சொசைட்டி என்ற அரசாங்க பதிவு அந்தஸ்த்தை இழந்துவிட்டதாகஅரசாங்கமே அறிவித்துவிட்டது.

star2.gif  இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு இந்து அமைப்பு SIAG பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சபைகளின் சொத்துக்களை, SIAG என்ற பதிவு பெயர் தங்களுடையது என்று அதன் சொத்துக்களையும் சேர்த்து உரிமை கோரியதாக தெரிகிறது. AOG சபை செய்ய தவறிய விஷயம் என்னவென்றால் Societies என்ற அரசாங்க பதிவு அந்தஸ்தை காலாகாலங்களில் AOG சபைகளின் காணிக்கை வரவு கணக்குகளை சமர்பித்து புதுப்பித்திருக்கவேண்டும். பதிவை புதுபிக்காத காரணத்தால் பதிவு எண்ணை அறிந்தவர்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்து அந்த பதிவு Register Numberதங்களுக்குவேண்டும் என்று அவர்கள் எழுதி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வழி உண்டாக்கிவிட்டது. இத்தனை பெரிய இமாலய தவறு AOG தலைவர்களின் கவலையீனத்தாலும், பண விஷயத்தில் எங்கோ, யாரோ தவறாக கையாண்டதாலோ! சரியான கணக்கு வைக்கப்படாததாலோ என்னவோ! AOGபொறுப்பாளர்கள் உண்மையான பணவரவை அரசாங்கத்துக்கு சமர்பிக்க தயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

star2.gif  AOG சபைகள் சுதந்திரமாக, தனித்தனியாக இயங்கினாலும், வெளிநாட்டு பணவரவின் பொது கணக்கை சரியானப்படி வரவு-செலவு கணக்கு வைக்காமல், செலவு கணக்கு காட்டாமல் போனதுதான் இப்போதைய பிரச்சனை ஆகும் என்று கூறப்படுகிறது.

star2.gif  பொதுவாக (Independent Pentecostal) சுதந்திர பெந்தேகோஸ்தே சபைகள் என்று வீதிக்கு இரண்டு சபைகள் எல்லா இடத்திலும், எல்லா ஊர்களிலும் காணப்படுமே. இப்படிப்பட்ட சபைகளில்,ஜனங்கள் போடும் காணிக்கை அல்லது தசமபாகம் விவரங்களை யாரிடமும் காட்டுவதில்லை. சபையில் இதுவரை எவ்வளவு காணிக்கை சேர்ந்துள்ளது என்ற விவரம் சபையில் உள்ள யாருக்குமே தெரியாது! யோக்கியர்கள்போல் சபையில் காணிக்கை எண்ணுவதற்கு ஒருவர் அல்லது இருவர் இருப்பார். அவர் காணிக்கைகளை எண்ணி அப்படியே பாஸ்டரிடம் கொடுத்துவிடுவார். அவர் அதை எப்படி செலவு செய்கிறார்! எண்ணத்துக்கு செலவழிக்கிறார் என்பது பெரிய இரகசியம். இவர்களின் அந்த விஷயம் இப்போது இவர்கள் பேசும் அந்நியபாஷை போன்று இடியாப்ப சிக்கலாகவும், விளங்காததுமாகவே காணப்படுகிறது. அதேசமயம் வாரம் தவறாமல் தசமபாக பிரசங்கம் சபையில் உண்டு. மேலும்தசமபாகம் கொடுக்காமல் போனால் சாபம் என்று சபை மக்களை பயமுறுத்தி, பயமுறுத்தியே சில பாஸ்டர்கள் காலம் தள்ளுகிறார்கள்.

star2.gif  ஆனால் TMP, IPC போன்ற சபைகள் அப்படியல்ல, அவர்களுக்கு சில ஒழுங்குகள் உண்டு. கணக்குகள் எழுதும் ஒழுக்கமும் உண்டு. ஆனால் இப்போது AOG சபையில் பணக்கணக்கு விஷயத்தில் பெரிய ஊழல் ஏற்பட்டு கொண்டிருக்கும் விஷயம் பகிரங்கமாக வெளிவர ஆரம்பித்துவிட்டது.

star2.gif  சபை சொசைட்டி சட்டப்படி ஒவ்வொருவருடமும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ சொசைட்டி தலைவர், பொறுப்பாளர்கள் ஆகியவர்களின் கமிட்டி கூடி, கணக்குகள் சமர்பித்து ஒரு ஆடிட்டர் மூலமாக சரிப்பார்க்கப்பட்டு அவருடைய சர்டிபிக்கேட்டுடன் கணக்கு விவரங்களைபதிவாளர் மூலமாக சமர்பித்தாகவேண்டும். அதில் நிர்வாகிகளின் பட்டியல், நிர்வாகிகளின் பெயர், விலாசம் ஆகியவை அடங்கிய பட்டியல் காணப்படவேண்டும். மேலும் கமிட்டி கூடியதின் பதிவு புத்தகம்(Minute Book) அதில் கமிட்டி கூடிய தேதி சர்ச்சை செய்யப்பட்ட விஷயம் யாவும் அதில் பதிவு செய்யபடவேண்டும். இதையெல்லாம் செய்யாததால்தான் அரசாங்க அங்கீகாரத்தை AOG சபை இழந்து நிற்கிறது. இந்த பெரிய நஷ்டத்துக்கான காரணத்தை தலைவர்கள் விவரித்து கூறவேண்டும் என்று விவரம் அறிந்த AOG சபை பாஸ்டர்கள் கேட்கிறார்கள்.

star2.gif  AOG சபை தோன்றிய நாளிலிருந்து சபை தலைமை குறிப்பிட்ட 3 பேர்கள் கையில் அகப்பட்டுள்ளது என்றும், AOG சபைகள் உறவினர்களால் நடத்தப்படும் குடும்ப சபையைப்போல செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் சில வருடங்களாகவே AOG சபையில் எழும்பிக்கொண்டிருக்கிறது.

star2.gif  குறிப்பிட்ட சில பாஸ்டர்களுக்குள்ள பிரசங்க தாலந்து காரணமாக அவர்களுக்கு அடிக்கடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லாத பாஸ்டர்களின் பொறாமையும் இதில் கலந்து இப்போது பிரச்சனை பெரிதாகிவிட்டது.

star2.gif  குறிப்பிட்ட ஒரு சில பாஸ்டர்களின் கையில்மட்டும் பணம் கோடிகளாக புரளுவது, AOG சபையில் சில ஏழை பாஸ்டர்களின் உள்ளத்தில் உண்டான ஏக்கம் ஆகியவைகள் அவர்கள் நேரில் என்னிடம் பேசும்போது வெளிப்பட்டது.

star2.gif  இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், முன்பைவிட அதிகமாக வெளிநாட்டு பணம் கோடிகளாக AOGசபையின் பெயரில் கொட்ட ஆரம்பித்தது. இப்போதுதான் பிசாசு பணம் பெற்றவர்களையும், பணம் பெறாதவர்களையும் பிரிக்க திட்டமிட்டான். அவன் போட்ட திட்டத்துக்கு இணங்கி கொடுத்தவர்கள் மூலமாக சபையின் சாட்சியையும் கெடுக்க ஆரம்பித்தான்.

star2.gif  25,000 சபைகள் உருவாக்கும் கவர்ச்சி திட்டம் AOG சபையில் கொண்டுவரப்பட்டது. அதற்குகோடிகள் அல்ல, மில்லியன் கணக்கில் அமெரிக்காவிலிருந்து பணத்தை AOG பெயரில் அனுப்பப்பட்டது. திட்டம் அருமையான திட்டம்தான், ஆனால் அந்த பணம் எந்த பெயரில் பெறப்பட்டது, எதற்கெல்லாம் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டது, யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது இதையெல்லாம் கமிட்டியில் கேள்வி கேட்கப்பட்டது, அப்போதுதான் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது.

star2.gif  இந்தியாவில் பம்பாய், அந்தேரி, குஜராத் போன்ற மாநிலங்களில் பல்வேறு சமூகப்பணிதிட்டங்கள் சபைகள் உருவாக்கும் திட்டங்களோடு செயல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டு கணக்கில் வரவு வந்த அந்த பணம், தமிழ்நாட்டிலுள்ள கட்டிடம் இல்லாத சபைகளுக்கு, கட்டிடம் கட்ட பணம் இல்லாமல், பல ஆத்துமாக்கள் நிறைந்த, புதிய சபைக்கு நிலம் வாங்க பணம் இல்லாமல், எத்தனையோ இடங்களிலுள்ள AOG சபைமக்கள், பாஸ்டர்கள் தவித்துக்கொண்டிருக்க தமிழ்நாட்டிலுள்ள இவர்களின் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யாமல் வட இந்தியாவில் மட்டும் அமெரிக்கா அனுப்பிய பணத்தை அதுவும் குறிப்பிட்ட சில நபர்களுக்குமட்டும் கொடுத்து செலவழிப்பது என்ன நியாயம்? என்று கேள்வி கேட்ட 6 பாஸ்டர்கள் சஸ்பெண்ட் (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்பட்டுள்ளார்கள்.

aog1.jpg
Pastor.ARUL

star2.gif  சொசைட்டிப்பற்றியும், பணத்தைப்பற்றியும் அமெரிக்காவில் யாரிடமிருந்து அந்த பணத்தை பெற்றீர்கள்? எவ்வளவு பெற்றீர்கள்?. இப்படி பல கேள்விகள் கேட்ட திருச்சி பாஸ்டர்.அருள் அவர்கள் ஆரம்பத்திலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரின் சஸ்பெண்ட் காலம் முடிவு பெறப்போகிறது. இப்போது மறுபடியும் 3 வருடத்துக்கு தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்துAOGயிலிருந்து ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம்.

star2.gif  ஒருவரை இரண்டாம்முறை சஸ்பெண்ட் செய்யவேண்டுமானால் சட்டப்படி முதலில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் ஆர்டரை ரிவோக் செய்யாமல், அதன்பின் நடத்தப்பட வேண்டிய விசாரணை என்ற ஒழுங்கையும் கடைப்பிடிக்காமல், தொடர்ந்தார்போல் 3 வருடம் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் இடமில்லை. கோர்ட்டுக்கு போனால் அவரை சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்றுதான் தீர்ப்பு வரும். ஆனால் பாஸ்டர்.அருள் அவர்கள் கோர்ட்டுக்கு போகவில்லை. பாஸ்டர்.அருள் அவர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பணத்தை வேறுவேறு ஸ்தாபனங்களின் மூலம் ஏராளமாக பெற்று வருகிறார் என்பது வேறு விஷயம். இவரைப்போல பல பாஸ்டர்கள் வெளிநாட்டு ஸ்தாபனங்களில் உதவி பெறுகிறார்கள்.

aog2.jpg
Pastor.RAJAMONI

star2.gif  இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேறு ஒரு AOG பாஸ்டர் கோர்ட்டுக்கு விவரங்களை கொண்டுபோகப்போவதாக பேசப்படுகிறது. அப்படி அவர் கோர்ட்டுக்கு போனால் பிரபல கன்வென்ஷன் பிரசங்கியாரும், AOG சபை பிஷப்பாகவும் இருந்த பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் கோர்ட்டில் நிற்க வேண்டிவரும். காரணம், அரசு அங்கீகாரம் நீக்கப்பட்ட நிலையில், காலாவதியான பழைய அரசாங்க அங்கீகார சர்டிபிக்கேட்டைக் காட்டி பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் காலத்தில் செய்யப்பட்ட பல ஏற்பாடுகள், பல திட்டங்கள் அத்தனைக்கும் Pr.ராஜாமணி அவர்கள் பதில் கூறியாகவேண்டும். அப்படி நடந்தால் கள்ள சர்டிபிக்கேட் சமர்பிக்கப்பட்டு, அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டுபாஸ்டர்.ராஜாமணி அவர்கள்மேல் வரும். அவர் மட்டுமல்ல, பாஸ்டர்.டி.மோகன் அவர்களும் இதில் அகப்படுவார். தன் மகளின் ஆடம்பர திருமணம், மாப்பிள்ளைக்கு கொடுத்த கோடிக்களுக்கான பணத்தின் கணக்கு ஆகியவைகள் விசாரணைக்கு வந்தால் ஊழல்களின் பட்டியல் அனகோண்டா பாம்பைப்போல நீண்டுக்கொண்டு வெளிவருவது நிச்சயம் என்கின்றனர். அதனால் அது முழு AOG சபைகளுக்கும் பெருத்த அவமானத்தை கொண்டுவரும் என்பது உறுதி.

aog6.jpg

star2.gif  இங்கே நீங்கள் காண்பது அரசாங்கத்தை ஏமாற்றியதாக கூறப்பட்ட காலாவதியானபுதுப்பிக்கப்படாத போலியான அரசாங்க சான்றிதழ் ஆகும்.

star2.gif  சொசைட்டி பெயரில் AOG சபை அரசாங்க பதிவு செய்த காலாவதியான பழைய சர்டிபிகேட்டை பயன்படுத்தி பல ஏற்பாடுகளை செய்தது, அது அரசாங்கத்தை ஏமாற்றிய கிரிமினல் குற்றமாகும். அது சம்பந்தமாக விவரம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் நீங்கள் கீழே காண்பது:

aog7.jpg

star2.gif  அரசாங்கத்தில் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டதாகதான் பெரும்பாலான AOG பாஸ்டர்கள் இந்நாள் வரை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

star2.gif  கேரளாவில் புனலூர் என்ற இடத்தில் நடந்த மாநாடுகளில் AOG சபைகளின் அமைப்பு விதிகளை திருத்தம் செய்ததுப்போல, விவாதங்கள் நடத்தப்பட்டது. ஆனால் அவைகள் வெறும் கண்துடைப்பு என்பதை பல வருடங்கள் கழித்துதான் பல பாஸ்டர்கள் அறிந்து வேதனைப்பட்டார்கள்.

star2.gif  கோர்ட் விசாரணை நடந்தால் இதுவரை நடந்த சட்டரீதியான கோர்ட் நடவடிக்கைகளின் விவரங்களைப்பற்றியும், நீதிமன்ற பழைய தீர்ப்புகளைப்பற்றியும் கேள்விகள் நிச்சயம் எழும்! அப்போதுநீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை கொடுத்து தனக்கு சாதகமாக தீர்ப்புகளைப்பெற்ற பிரபல பாஸ்டர்களை போலீஸ் பிடிக்கும். இப்போது சில CSI பிஷப்மார்களை போலீஸ் ஸ்டேஷனிலும், ஜெயிலும் உட்கார வைத்ததுபோல பெந்தேகோஸ்தே சபைகளிலும் சம்பவம் நடந்தால், முழு AOGசபைக்கும் அந்தம சபை மக்களுக்கும் தலைக்குனிவும், அவமானமும் உண்டாகும்.

aog3.jpg
Pastor.D.MOHAN

star2.gif  இந்த தவறுகளில் பாஸ்டர்.D.மோகன் அவர்களின் பங்கு மிக அதிகம் என்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் இப்போது இங்கு வெளியிட இடம் இல்லை. ஆகவே AOG சபை இப்போது புதிய ஏற்பாடு ஒன்றை செய்கிறது. அந்தந்த மாநிலங்களில், மாவட்டங்களில் அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபை பெயரில் தனிப்பட்ட புதிய ஸ்தாபனமாக அரசாங்க பதிவு சீக்கிரம் செய்து முடித்து, பழைய AOG சபைகளையெல்லாம் புதிய சபையாக காட்டி அதற்கான ஆதாரங்களை உருவாக்கி கணக்குகளையும் காட்டி புதிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். அப்படி ஒரு புது அரசாங்க பதிவு ஏற்பாடு செய்தால் AOGசபை கண்ணாடி துண்டுப்போல் சிதறி AOG என்ற ஐக்கியத்திலிருந்து தனித்தனி சபைகளாக உருவாகி, தனித்தனி முகங்களாக காணப்படும். இதை ஜாமக்காரன் வாசகர்களாக உள்ள AOG சபை அங்கத்தினர்களுக்கும், பாஸ்டர்மார்களுக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் அறிவிக்கும் எச்சரிப்பாகும்.

star2.gif  அமெரிக்காவிலிருந்து AOG போன்ற சபைகளுக்கு பண உதவி செய்யும் ஸ்தாபன பொறுப்பாளர்Pastor.DAVID GRAND என்பவரின் வாழ்க்கையின் சாட்சியும் சரியில்லை என்று சிலரால் கூறப்படுகிறது. ஆகையினால்தான் இந்தியாவுக்கு AOG சபைக்காக அனுப்பப்பட்ட மில்லியன் கணக்கான பணம் சரியாக செலவு செய்யப்பட்டதா? என்று அதைப்பற்றி எழும்பும் சந்தேகங்களைக்குறித்து சிலர் அவருக்கு குற்றசாட்டுகளை அனுப்பியும் அதைக்குறித்து அவர் முறைப்படி விசாரிக்காமல் - சந்தேகத்தை எழுப்பியவர்களையும், இதைக்குறித்து புகார் அனுப்பிய AOG பாஸ்டர்களையுமே இவர் கண்டிக்க ஆரம்பித்தாக கூறப்பட்டது. மேலும் புகார் அனுப்பியவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டுக்கொண்டதாக அறிந்தேன்.

star2.gif  அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்லும் AOG பாஸ்டர் ஒருவர் உண்டு. அவர் தமிழ்நாட்டில் பணக்கார பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார்களில் அவரும் ஒருவர் ஆவார். அவருக்கு AOGக்கு சம்பந்தமில்லாத பல வெளிநாட்டு ஸ்தாபனங்களிலிருந்து ஏராளமான பணம் பல வருடங்களாக வந்துக்கொண்டிருக்கிறது. பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதைப்போல், வெளிநாட்டு பணம் பெறும் AOG சபையின் மற்ற பாஸ்டர்களையும் அவர் நன்கு அறிவார். அவர்கள் எங்கிருந்து எவ்வளவு பணம் பெறுகிறார்கள் என்ற விவரங்களையும் அவர் அறிவார். அதனால்தான் AOG சபை தலைமைக்கு, அந்த குறிப்பிட்ட பாஸ்டரைAOG சபையிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து அவரை நீக்கி வைத்து, தங்களை கேள்வி கேட்பாரின்றி - நிம்மதியாக இருக்க முயற்சிக்கிறார்கள். முழுவதுமாக AOGயிலிருந்து அவரை நீக்கிவைக்கும் ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருக்கின்றன. கேள்வி கேட்பவர்களை யாரும், எங்கும் இஷ்டப்படுவதில்லையே!

star2.gif  இயேசுகிறிஸ்துவைவிட பரிசுத்த ஆவியானவருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆவியானவரைபெற்றதற்கு அந்நியபாஷைதான் அடையாளம் என்ற வேதவசனத்துக்கு விரோதமான மிகத்தவறான உபதேசத்தை தங்கள் சபையின் சட்டமாக ஆக்கிக்கொண்டதால், இன்று AOG சபைகளில் போலிகளும், மாய்மாலங்களும் பாஸ்டர்கள் ரூபத்திலும், விசுவாசிகள் ரூபத்திலும் சபைக்குள் சங்கமம் ஆகிவிட்டது. அதனால்தான் CSI சபையில் உள்ள பெரும்பாலானோர் AOG சபைகளுக்கு சென்று பொய்யானஅந்நியபாஷை பேசிக்கொண்டு பாஸ்டரையும் ஏமாற்றி, சபை மக்களையும் ஏமாற்றி, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பெரும்பாலானவர்கள் AOG சபைக்குள் அமர்ந்திருக்கிறார்கள்.

star2.gif  அப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து வந்த ஒருவர், அவர் கடல்கடந்து வந்து AOG சபையில் சேர்ந்தார். அவர்தான் பாஸ்டர்.பால் தங்கையா என்பவர் ஆவார்.

aog4.jpg
Pr.PAUL THANGAIAH

இன்று AOG சபையிலேயே பாஸ்டர்.D.மோகன் அவர்களைவிட, பாஸ்டர்.அருளைவிட பெந்தேகோஸ்தே சபைகளில் பெரிய கோடீஸ்வர பாஸ்டர் என்று பெயர் பெற்றுவிட்டார். இவர் தன் பாடல்களால் தன் பல தவறுகளை மூடி மறைக்க முயன்றார். அதில் ஓரளவு வெற்றி பெற்றாலும் - கடைசியாக தன் மனைவி அவரை விவாகரத்து செய்ததும் - விவாகரத்துக்குமுன் நடந்த சில சாட்சிக்கெட்ட சம்பவங்கள் சிலரால் மொபைல் கேமாராவில் பதிவு செய்யப்பட்டு அதை சகலருக்கும் காண நேர்ந்தது. அந்த சம்பவம் பிரபலமான விவரத்தை ஜாமக்காரனில் கடந்த வருடம் வாசித்திருப்பீர்கள். அப்போது நான் அதை எழுதியபோது பலர் நம்பவில்லை.

star2.gif  இப்போது கோர்ட் மூலமாக பாஸ்டர்.பால் தங்கையாவின் மனைவியின் விவாகரத்து விவரம் பகிரங்கமானதும், இப்போதுதான் பலர் உணர ஆரம்பித்துவிட்டனர். AOG தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இனி அவர் பாஸ்டர் பொறுப்புக்கு தகுதியிழந்துவிட்டார் என்று சபைமக்களே புகார்அறிவித்தார்கள். பணத்தை கொடுத்து பல ஏழை AOG பாஸ்டர்களையும் விலைக்கு வாங்கும் உயரத்துக்கு வளர்ந்துவிட்ட அவர் பண செல்வாக்கு காரணமாக, விவாகரத்து செய்த அவருக்கு, AOG கமிட்டி பதவி உயர்வு கொடுத்து தலைவராக்கியது. AOG சபை பாஸ்டர்களின் இன்றைய ஆவிக்குரிய நிலைஇரட்சிக்கப்படாத அவிசுவாசிகளின் சபைகளைவிட மோசமாகிப்போனதை இதன்மூலம் வெளிப்படையாக தெரிகிறதல்லவா?

star2.gif  அநேகர் புகார் செய்ததின் காரணமாக இப்போது பாஸ்டர்.பால் தங்கையா பதவியிறக்கம் செய்யப்பட்டார். பால் தங்கையாவுக்கு பதில் இப்போது AOG சபைகளின் வட்டார தலைவராக பாஸ்டர்.அப்துல் கரீம் என்பவருக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாஸ்டர்.பால் தங்கையா அவர்கள் பெங்களுர் AOG சபையின் பாஸ்டராக இப்போதும் நீடிக்கிறார். அது பிழையானது.சொந்த குடும்பத்தை சரியாக நடத்தாதவன் சபையை எப்படி நடத்துவான் என்ற வசனம், ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும். 1தீமோ 3ம் அதிகாரம் கூறுகிறபடி பாஸ்டர்.பால் தங்கையா அவர்கள் (மேய்ப்பன்) பாஸ்டர் தகுதியை இழக்கிறார்.

star2.gif  CSI தெற்கு கேரளா டையோசிஸ்ஸில் ஒரு சபை குருவானவர் மனைவி, குருவானவருடன் பிணங்கி தாய் வீட்டுக்கு போய்விட்டார். தொடர்ந்து 6 மாதங்கள் மனைவி திரும்பி வராததால் CSIகுருவானவர் நான் மேய்ப்பன் தகுதியை இழந்துவிட்டேன் என்று அறிவித்து ஊழியத்தை ராஜினாமா செய்துவிட்டார்.

star2.gif  அவிசுவாசிகள் சபை என்று AOG போன்ற பெந்தேகோஸ்தே சபைகளால் வர்ணிக்கப்படும் CSIசபையிலுள்ள பாஸ்டரின் இந்த சாட்சி உன்னதமானதல்லவா! ஆனால் அந்நியபாஷை பேசுகிறோம், பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுகிறோம், நாங்கள்தான் உண்மையான சபை என்று கூறும் பாஸ்டர்.பால் தங்கையா அவர்கள் இன்னும் பாஸ்டராக தொடருவது எந்த விதத்தில் நியாயம்? AOGசபை மக்களுக்குமுன் இவர் சாட்சி கெட்டுப்போனதே. இதுதான் AOG சபையின் இன்றைய நிலை!

star2.gif  ஆகவே AOG தலைமையிலுள்ள பாஸ்டர்.ராஜாமணி, பாஸ்டர்.மோகன், பாஸ்டர்.ஜெயராஜ்ஆகியவர்களின் ஆவிக்குரியநிலை பின்மாற்றத்தில் போனதால்தான் காலாவதியான சொசைட்டி சான்றிதழை வைத்து பல வருடங்கள் இதுபோன்ற பல தவறுகள் நடக்க காரணமானார்கள் என்று கூறப்படுகிறது. நல்ல ஆவிக்குரிய AOG சபை பாதை தவறி அவிசுவாசிகளைவிட மோசமான பாதையை நோக்கி பயணிக்கிறது. சீக்கிரம் தலைமை பாஸ்டர்கள் மனம்திரும்பினால் AOG சபையின் மற்ற பாஸ்டர்களும், சபை மக்களும் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படமுடியும்.

star2.gif  இந்த விவரங்களை பல வருடத்துக்குமுன்பே எனக்கு அறிவித்தவர்கள் சபையை மிகவும் நேசிப்பவர்கள் ஆவர். அதனால் எங்கள் சபை விவகாரங்கள் வெளியே தெரிவிக்கவோ, கோர்ட்டுக்கு கொண்டு செல்லவோ நாங்கள் விரும்பவில்லை, தயவுசெய்து ஜாமக்காரனில் இவைகளை வெளியிட்டுவிடாதீர்கள் என்று பல வருடங்களுக்கு முன்பே என்னை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அப்படி கூறியவர்களே இப்போது எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். காரணம், இன்று வரை AOGசபைகளின் பிரச்சனையுள்ள நிலைமைகள் மாறவில்லை. எங்கள் தலைவர்கள் அவிசுவாசிகளைப்போல் கேள்வி கேட்பவர்களை அறவே ஒழிக்கும் எண்ணத்துடன் எங்களைப் போன்றவர்கள் கமிட்டிக்குள் வந்துவிடாமல் இருக்க, என்னமாய் பல தந்திர உபாயங்களை அவர்கள் மேற்கொண்டார்கள்! என்று அறியும்போது, இதற்கு ஒரு முடிவு உண்டாகவேண்டுமென்ற நல்லெண்ண அடிப்படையில்தான்இம்முறை இதை உங்களிடம் கூறுகிறோம் என்றார்கள். எங்கள் சபையின் பலவீன பகுதிகளை மக்கள் அறிந்தால், அவர்கள் அனைவரும் கேள்விகள் எழுப்பினால் AOG சபையில் நல்லமாற்றம் உண்டாகும் என்ற எதிர்பார்ப்போடுதான் இவைகளை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்றார்கள். இவர்கள் தன் சபை பிரச்சனை வெளி உலகம் அறியக்கூடாது என்று எத்தனை காலம் காத்திருந்தார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களின் நல்ல எண்ணத்தையும், அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். ஜெபியுங்கள்.

star2.gif  இப்போது நான் எழுதியவைகள் தவறான தகவல்கள் என்று AOG சபையிலுள்ளவர்கள் யாராவது கருதினால், AOG தலைமை சார்பில் சரியான விவரம் எனக்கு எழுதினால் அதை மறுப்பு அறிக்கையாக ஜாமக்காரனில் அப்படியே வெளியிட நான் தயார்.

aog5.jpg

star2.gif  சென்னையில் சின்னமலை என்ற இடத்தில் உள்ள AOG சபைக்கு பதிலாக பல ஆயிரம் விசுவாசிகள் எல்லாரும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கூடி ஆராதிக்கதக்கதாக புதிய மிக பிரமாண்டமான கட்டிடம் Pastor.D.மோகன் அவர்களின் பெருமுயற்சியால் கட்டி எழுப்பப்படுகிறது. அதன் மாதிரி வரைப் படத்தைத்தான் இங்கு வெளியிட்டுள்ளேன். மிக விரைவில் இதன் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Press freedom still a distant dream in Kerala

Police block media persons at LMS compound on Thursday - DC
Police block media persons at LMS compound on Thursday - DC


Over the years the state has been witnessing frequent attacks on journalists, the latest being the one in the capital of Kerala on Thursday.

After KSRTC buses, government offices and commercial establishments, it’s journalists who are emerging as soft targets – easy prey of politicians, police and others.

Considering that journalists have been bearing the brunt of attacks from almost all political parties, it is hard to believe whether these parties are genuine when they raise concerns over the ‘freedom of the press’.

The provocations for the attack on the journalists range from exposing the unlawful activities of any section to attempts to destroy visual evidence of violence. In many cases, it’s the cameramen and photographers who invite wrath in their endeavour to capture newsworthy images.

The Thursday attack on the Asianet News crew was allegedly carried out by goons hired by the CSI officials.

It was the telecast of a report on the collection of huge donations for admissions to the medical college under the CSI management that triggered the attack.

The attackers seized the cameraman's tape and destroyed the images so that no evidence would remain. The CSI church authorities returned the tape to the police after the issue snowballed into a major controversy. However, the tape didn't contain the attack scenes.

The CSI church has maintained that the violence on Thursday was sparked off after the Asianet News crew along with certain others entered the bishop house premises without permission.

CSI South Kerala Diocese treasurer, Mr D.Lawrence, said that any officials associated with the church did not have any role in erasing the contents in the tape of the Asianet News.

He said that the Asianet reporter and cameraman entered the bishop house premises even after the security personnel prevented them. He also said that a section of political activists had tried to make undue advantage of the incident. A couple of CSI officials were injured in the scuffle.

The attack on Matrubhumi reporter V.B. Unnithan in Kollam, in the recent past, by a quotation-gang allegedly engaged by a Dy SP has indeed shocked the state.

A series of reports published by Unnithan regarding the unholy nexus of the police officer had provoked the then-Dy SP Santhosh M Nair to engage a quotation-gang to attack him.

Asianet reporter Shajahan was roughed up by a gang led by CPM leader and then MLA P. Jayarajan in March. Certain politically sensitive remarks raised by Shajahan during a talk show for the channel had provoked the attack. Jararajan even rang up Shajahan and threatened him of dire consequences.

During the tenure of the previous UDF government led by Oomen Chandy in 2004, journalists were brutally attacked by IUML workers at the Karippur airport following revelations against P.K.Kunhalikutty on the ice-cream parlour sex case.

It was during the previous LDF government’s term that the police roughed up journalists who were covering a clash between the police and lawyers in the Vanchiyoor court premises here.

CPM leader Kodiyeri Balakrishnan who was then leading the state police, had stated in the Assembly today that during the term of the previous LDF government there were no incidents of attack on journalists!

Politicians may pretend to forget, but, the fact remains that press freedom still remains a distant dream in the most literate state.

Some major incidents

*Three media persons injured in attack by CSI officials and police in Thiruvananthapuram on July 14.

*Matrubhumi reporter B. Unnithan attacked by quotation gang engaged by DySP Santhosh M Nair in Kollam in April.

*Asianet regional bureau chief Shajahan attacked in Kannur by CPM activists led by P.Jayarajan.
w Several cameramen and news photographers beaten up by police for covering police-lawyers clash
at Vanchiyoor court premises in October 2010.

*IUML activists roughed up journalists at Karippur Airport for giving reports against P.K.Kunhalikutty regarding the ice cream parlour case in November 2004.

Lack of stern action from govt cited as prime reason

The government failure in initiating stern action against those who attack journalists is the prime reason why such incidents are on the rise in the state.

In most cases of attacks action is often limited to an immediate suspension of the police officials or slapping of cases against those involved.

However, media members point out that suspension is never a punishment.

“Once a case is filed, government should pursue the case. This unfortunately is not happening,” points out Kerala Union of Working Journalists state president, Mr. K.C. Rajagopal said.

“It's highly unbecoming in a democratic set-up that the fourth estate do not have any protection while the judiciary and legislature get sufficient protection,” he said.

All political parties often take a double stand when journalists get attacked. “While in the Opposition, they'll raise voice for the protection of the journalists. But, they forget all about it when they come to power,” he added.

Public Relations Department Minister K.C. Joseph said the increasing incidents of attack on the media were discussed in the recent editors’ conference convened by the media.

“We’ve decided to revive the media-police liaison committees in all the districts. Utmost restraint from all sections is the only way to prevent it,” he said.

Rajagopal said, though there were proposals to provide special jackets to journalists who report agitations, it may have a reverse impact.

“In most recent incidents including the one on Thursday, journalists were attacked not accidentally but intentionally.

“Hence providing special jackets may help those who intentionally target journalists to identify them easily,” he said.

DGP Jacob Punnoose said, the attacks on cameramen were obvious attempts to tamper with the evidence.

He, however, preffered not to further comment on the issue.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Cash for admissions scandal rocks Church of South India: The Church of England Newspaper, July 22, 2011 p 5. July 24, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption

The Bishop-elect in South Kerala, the Rev. A. Dharmaraj Rasalam

First published in The Church of England Newspaper.

Officials of the Diocese of South Kerala have been accused by an Indian television network of selling admissions to a church-affiliated medical school.  The scandal over the sale of admissions has prompted a walkout of the opposition in the Kerala Assembly and appears to have implicated leaders of the Church of South India (CSI) in another corruption scandal.

Last week the Asianet broadcasting network reported that it obtained a list of 50 students admitted to the church-affiliated Dr Somervell Memorial Medical College located on the grounds of the London Missionary Society (LMS) hospital in Karakonam.  However, the admissions list was drawn up two days before students sat for their entrance exams.

A reporter for Asianet, posing as an official of the Church of South India (CSI), contacted the students on the list and learned that each had made cash payments of up to Rs 50 lakh (£70,000) for a place in the college.  However, the payments were not considered tuition payments and were “off the books.”

Asianet reported that “All those who spoke to us admitted the money was accepted by the CSI management without providing any receipt.”

The funds were collected by “the treasurer of CSI located at the CSI headquarters at LMS in cash. The applicants were clearly told the amount was just a token and annual fees should be paid in extra,” the broadcast said.

After the story was aired, reporters descended upon the LMS compound.  An Asianet reporter and cameraman were allegedly assaulted and had their cameras smashed.  The attack prompted other journalists to visit the hospital, and in the ensuing mêlée police beat a reporter for India Vision TV.

On July 15, the leftist members of the Kerela Assembly walked out in protest.   The Leader of Opposition and former chief minister V.S. Achuthanandan told the state’s Chief Minister, Oommen Chandy, the scandal “should should have been more seriously viewed by you and you failed to come out with any strong measures.

In response to the allegations made in the Asianet broadcast and in the subsequent fracas, Mr. Chandy said his government would investigate the affair.

The cash for admissions scandal comes at a difficult time for the diocese, which is currently without a bishop.  In December, Bishop J.W. Gladstone retired as Bishop in South Kerala and Moderator of the CSI.  The principal of the Kerala United Seminary, the Rev. Dr. G. Sobhanam—who was also vice-chairman of the medical school’s board, was subsequently elected by the diocesan synod and confirmed by the CSI’s general synod as the new bishop.  However, Bishop-elect Sobhanam died on March 26, 2011.

The runner up in the election, the Rev. Dharmaraj Rasalam, was appointed bishop of the diocese last month in place of Dr. Sobhanam, and will be consecrated on July 23.  Anti-corruption activists are hopeful the new bishop will clean up the diocese.

The lay-led anti-corruption group, the CCC stated this latest scandal is “an unprecedented opportunity to clean up the massive corruption in medical admissions and boost the finances of the diocese should he choose to do so. The big question is whether he has both the motivation and the ability to take on such a challenge.”

The CCC stated that “selling seats in educational institutions is a major source of corruption within the CSI. It not only weakens the moral fibre of the church and those who administer it but also deprives the institution of crores of rupees that would have otherwise come to it every year.”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Karakonam- An Investigation.....

 
What has happended to our Church of South India??? education is said to be the development of the next generation....and when we own an educational institution it is not to be treated as a business alone...it is ofcourse a business, you need to develop your infrastructure to deliver your best to those who approach you and money only is required in the place of money,but this is not the way....this is purely robbery, you are stealing the money from common man's pocket by showing the label of CSI...!!!and you are trying to ignore the public voice by attacking the media persons who has investigated the news, attacking everyone with the help of a mad mob, saying that they were tresspassing your property...????man ours is a church not a brothel....to attack a tresspasser.....
what has happended???what has lead our prestigious CSI to such a pathetic state? if it was in our diocese the answer will be Rt Rev Dr KP kuruvilla....!!! obviously...everyone want to remove him from that chair as he is not allowing such rascals to rule and earn usiing the name of CSI.....
we also have educational instituitions, but there are no such issues...apart from the problems created purposefully by the members of our diocese and the teachers of the respective schools.... this is the result of appointing education less, culture less  and characterless persons in the prime post of the diocese and other instituitions, now it has happened in our diocese too, just have a look at the recently elected panel of members....how many are there educated? how many of them has a 'habit' of attending church atleast on sundays???? all are involved in curch politics not in church...and how has the won elections??? by propagating false and fake news through various medias like internet and distributing ugly and character assasinating notices even in churches.....by totally mis leading the laity....why??? why do they want to come to power??? to do good for the laitty???definetly no...they want to use that 4 crores of rupees in the accont of CSI, they want to use that money with out any hindrance...that is why they want to pass a new rule that gives power to treasurer alone to meet the expences of the diocese with out the apooroval from bishop....they want to  keep bishop away from the financial matters of the diocese and to delay the prestigious bishop palace to make sure that KPK  does not reside in it....
we are sure our laity people will definetly realise these facts soon, as they have already started sharing the posts within themselves....


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Scribes thrashed in Kerala
July 14, 2011   10:11:31 PM

VR Jayaraj | Thiruvananthapuram

Miscreants reportedly at the behest of the Church of South India (CSI) and the police beat up mediapersons at the diocesan headquarters in Thiruvananthapuram on Thursday for exposing the illegal admission of students in the Church’s medical college by taking million of rupees as capitation fee even as the Opposition staged a walkout over the illegal admission issue.

At least three mediapersons from two TV channels were admitted to hospital with injuries when the miscreants of the Church and the police unleashed terror on them on the campus of the CSI Bishop’s House. The Government suspended two policemen, including an Assistant Sub-Inspector, for colluding with the miscreants and attacking the newsmen.

The first attack on mediapersons occurred when a news team of Asianet News TV channel reached the diocesan office for follow-up job on its report on the illegal MBBS admissions at the CSI-run Dr Somervell Memorial Medical College at Karakonam near Thiruvananthapuram. The channel had reported that the college had admitted 45 students by taking capitation fee of up to `50 lakh.

The gang of about 25 people who attacked TV channel reporter Sarath Krishnan and cameraman Ayyappan included the security staff, church office employees and a member of the Thiruvananthapuram district Congress committee. The gang also destroyed their camera and stole the tapes that contained the visuals of the gang beating up Sarath.

As the news of the attack spread, scores of mediapersons belonging to the Kerala Union of Working Journalists (KUWJ) converged on the diocesan headquarters demanding action against the assailants and return of the stolen tape. When the mediamen held a demonstration there, the miscreants unleashed more violence on them.

As the situation worsened, the police intervened. Instead of controlling the assailants, some of them attacked the mediamen. Marshal V Sebastian, bureau chief of Indiavision TV channel in Thiruvananthapuram had to be admitted to the General Hospital in Thiruvananthapuram with the serious head injuries he suffered in the attack from a policeman.

Workers of various student and youth outfits rushed to the diocesan headquarters to declare solidarity with the mediamen making the situation more tense. Opposition leader in the State Assembly VS Achuthanandan, Deputy Opposition leader Kodiyeri Balakrishnan, former Health Minister PK Sreemathi and several other leaders reached the spot to protest against the attack.

The media, including The Pioneer, had reported the illegal MBBS admission carried out by the CSI medical college in the management quota even before the Kerala Medical College Management Association, in which the college was a member, had held the entrance examination to find students to fill that quota. The test was held in Kozhikode on Thursday.

The CSI college had given seats to students whose academic records were so bad that the rank levels of some of them were below 47,000 in the Common Entrance Examination held by the Government. The college management had taken between `20 lakh and `50 lakh from 45 students, thus turning the entire admission process into a farce.

The Karakonam medical college was one of the 11 medical institutions that had signed a pact with the Government last week agreeing to fill half of their MBBS seats with students from the Government’s general merit list charging lesser fees.

Meanwhile, the Opposition LDF staged a walkout in protest against the Speaker’s refusal to allow discussions on an adjournment motion on the subject. Replying to the notice for the motion, presented by CPI’s VS Sunilkumar, the Chief Minister said that the Government was viewing the matter seriously.

However, the reply of Health Minister Adoor Prakash (Congress) had the tone of a complaint when he said that the colleges that had signed the agreement should not act against its spirit. His statement that launching an enquiry into the issue of the CSI medical college was impossible as there was no specific complaint.

Ridiculing the Government for its ambiguous stand on the issue, Achuthanandan alleged that the recent incidents proved that the Government’s orders did not have the value of even “a rag sack”. He then announced that the Opposition was staging a walkout in protest against the Government’s refusal to investigate the matter. 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

1. Dr. John S. Dorai - July 24, 2011The legal ownership of this medical college is vested in the Church of South India Trust Association. Church of South India Trust Association sells Power of Attorney agreements to the Bishops and the Officers of the Dioceses and take their share of commission. The Church of South India Trust Association who is overall controller of these institutions files false returns with the Income Tax Authorities and enjoys tax exemptions. The men behind this corruption is the Moderator, Deputy Moderator, Secretary and the Treasurer of the Church of South India Trust Association who are the Directors of this Registered Company and they shall be immediately arrested. The black money pocketed through these easy means i.e. by selling Power of Attorneys to the Bishops and Officers of the Dioceses by these filchers shall be seized. Their houses shall be raided. Income Tax Department simply issues blanket tax exemptions without any proper scrutiny for the past 64 years..The I.T. Department should take note of it and see that the Church of South India Trust Association is not getting tax exemption any more.Dr. John S. DoraiGeneral SecretaryCSITA BENEFICIARIES ASSOCIATIONChennai



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Medical seats-for-cash scam Rocks csi south kerala diocese.-CCC letter.

 
CHRIST Centered Campaign (CCC) Newsletter No 30, July 16, 2011

Special Issue

Medical Seats-For-Cash Scam Rocks South Kerala Diocese

For sometime now it has been one of the worst kept secrets in CSI South Kerala Diocese. Widely rumoured was that crores of rupees were being pocketed by key diocesan officials and their agents every year through selling seats for upto Rs 50 lakh each in the CSI-run Dr Somervell Memorial Medical College in Karakonam outside Thiruvanathapuram. The college established in 2002 (and which gained Medical Council of India recognition in 2009) is attached to an over century-old Mission Hospital that traces its roots to the medical work of the London Missionary Society (LMS) in Karakonam that began in the 1890s.

Rumour turned into scandal when Asianet, which is widely watched in Kerala, broadcast a story earlier this week that it had got hold of the list of some 50 students to be admitted under the CSI medical college’s management quota. This two days before the students were to take the joint entrance exam being conducted by 11 medical colleges in the state to determine admissions under the government and management quotas. The CSI college admits 100 students to its MBBS programme every year of which 50 are government seats, 35 are under the management quota (where the entrance exam marks also count) and 15 are under the NRI quota where the exam is not a consideration.

After it managed to lay its hands on the printed list of 50 students who were to get admission in the CSI medical college even before the exams were held, Asianet dug further. It’s reporter posing as a representative of the CSI called up some of the 50 students and their parents/guardians who unwittingly confessed to having paid church officials anywhere between Rs 20 lakhs to Rs 50 lakhs each in cash and with no receipt for the money paid. The actual video broadcast by Asianet and containing the confessions can be seen here http://www.youtube.com/watch?v=flq57o7oYaw 
According to Asianet “All those who spoke to us admitted the money was accepted by the CSI management without providing any receipt. The students and their guardians confessed only after we made them feel that the call came from the CSI headquarters. According to those who spoke with us the money was collected by the treasurer of CSI located at the CSI headquarters at LMS in cash. The applicants were clearly told the amount was just a token and annual fees should be paid in extra. It is still mysterious, where the big amount is flown into. Investigations by us revealed some agents also worked in between. Nearly 8-9 crores has been collected so far by the Karakonam management, and the entire amount goes unaccounted.” 

What was a local story in Kerala assumed national importance when it was widely reported that two Asianet journalists who accompanied a group of protestors that had gone to meet CSI officials on the scandal were assaulted. The Asianet reporter and cameraman were allegedly beaten up in the church compound and had their equipment damaged. This provoked some other journalists to descend on the LMS compound where police action resulted in head injuries to another reporter of India Vision TV. In Kerala’s super charged political climate it did not take much time for the Left-led opposition to jump into the fray. They staged a walkout of the Kerala Assembly protesting inaction by the Oommen Chandy government on the issue. The Chief Minister in turn announced that cases had been registered against 25 people and promised strong action against the guilty. 

The incident has become a sort of baptism-by-fire for Rev Dharmaraj Rasalam, who was appointed Bishop of South Kerala only three weeks ago. The new bishop, whose consecration at the 105-year-old Mateer Memorial Church in Thiruvanathapuram has been announced for July 23, succeeds Bishop J.W. Gladstone who retired last December. Rasalam’s is a freak case of the runner-up emerging winner after the race had been declared in favour of his opponent. Rev. Dr. G. Sobhanam who had won the election to the Bishopric and was later confirmed by the Synod as the successor to Gladstone died suddenly before he could take charge. The Synod late last month appointed Rasalam, who had secured the second largest number of votes in the bishop elections, to take his place. 

Unlike Sobhanam who as Vice Chairman of the CSI-run medical college hospital was a man in the know, Rasalam is an outsider to the politics and the machinations of the vested interests who control what is potentially the Diocese’s biggest cash cow. By taking donations in hard cash for management seats and not issuing receipts, these CSI officials have been depriving the diocese of crores of rupees that should have come into its coffers. 

Analysts say the latest incident is in a way a God-send for Rasalam as it gives him an unprecedented opportunity to clean up the massive corruption in medical admissions and boost the finances of the diocese should he choose to do so. The big question is whether he has both the motivation and the ability to take on such a challenge. His predecessor Bishop Gladstone as Chairman of the Medical College Hospital did little to contain the rot. Asianet in fact reports that “Bishop JW Gladstone expressed grief over the fact that such an incident has occurred in the college of Bishop Somervell. The Bishop added faults, if any should be corrected.” Empty words from a man who had the authority to do just that but did nothing. 

Interestingly, the Director of the South Kerala Diocese’s Medical College is none other than the Honorary Treasurer of the CSI Synod, Dr Bennet Abraham. Unlike the position of General Secretary of the CSI which is a paid post, the honorary status of the Treasurer’s function enables its occupant to concurrently hold another salaried job elsewhere. Sources close to Dr Abraham say he has serious differences with key CSI officials managing the admission process and had been upset with the manner in which seats were being bought and sold. There are some who believe that Asianet would not have got the list prepared by the diocesan officals but for Dr Abraham’s good offices, though the CCC is not making an allegation to that effect. What the CCC can confirm however is that Dr Abraham was last month actively involved behind the scenes in ensuring that Rasalam -- whose inexperience in relation to the medical college hospital is also an asset for those who want to influence him -- was appointed Bishop. In fact the CCC has reason to believe that Dr Abraham himself may have crossed the line as a conduit for unofficial resources deployed to ensure the outcome in favour of Rasalam. 

The cash-for-seats corruption scandal in not peculiar to the South Kerala Diocese. It exists to different degrees in almost all CSI dioceses, particularly those where there are professional colleges being run by the church. In the Coimbatore Diocese, disgraced Bishop Manickam Dorai has been indicted by several investigations of taking crores from students seeking admission to the Ketti Engineering College. In Bangalore diocesan officials make money hand over fist every year selling seats in prestigious CSI-run schools in the city. Selling seats in educational institutions is a major source of corruption within the CSI. It not only weakens the moral fibre of the church and those who administer it but also deprives the institution of crores of rupees that would have otherwise come to it every year. Another variation of this malaise is taking of crores in cash for making teacher appointments to church-run institutions. This has the effect of the least suitable candidates for the job getting in thereby eroding the quality of the institutions themselves.

The CCC hopes that the new Bishop in South Kerala will use the opportunity afforded by the latest scandal to effect sweeping changes in how admissions are done at the medical college and set an example for the rest of the CSI on how to tackle the problem. Equally, the CCC hopes the somnolent laity of the diocese (it is an irony of sorts that Kerala’s high literacy has little impact on the rank indifference of CSI members regarding church governance) will wake up from their slumber and pressure the new bishop to do just that. For the moment we thank God for the Asianet exposé and recall what the Bible tells us: “For there is nothing hidden that will not be disclosed, and nothing concealed that will not be known or brought out into the open.” (Luke 8:17) By the way, just in case you are wondering, we are fully aware of the applicability of this quotation to the CCC itself. We have no fear of the future for none of this is being done for anybody's personal glorification or someone's villification but only to take back the Church of our Lord and Saviour Jesus Christ from the clutches of the many scoundrels who have debased it.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CSI moderator suspended: The Church of England Newspaper, July 21, 2011. July 22, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
3 comments

Bishop S Vasanthakumar

First printed in The Church of England Newspaper.

A civil court in Madras has suspended Bishop S. Vasanthakumar from exercising the office of moderator of the Church of South India (CSI).

On June 28, Judge Thiru Chandrasekaran suspending the powers of all “office-bearers” of the church elected at the January 17, 2010 general synod, while the City Civil Court in Chennai reviews the legality of the elections.  The court heard an emergency motion from the CSI on July 6 seeking to vacate the order, but Judge Chandrasekaran declined to modify the injunction and has set the matter down for hearing on July 15.

On Jan 17, 2010 the 32nd session of the CSI general synod met in Courtallam in Tamil Nadu and elected a moderator, deputy moderator, general secretary and treasurer.  Before the election was held, however, a court in Karnataka issued an injunction disqualifying Bishop Vasanthakumar from attending the meeting and standing for election.

However, a judge in Madras issued a second order permitting Bishop Vasanthakumar to attend.  The synod Reference Committee agreed to allow him to attend the meeting, but withheld his right to vote.  The bishop contested the election for moderator and was subsequently elected.

Immediately after the election, synod member Albert Jeyaraj brought suit asking the election be voided as it did not conform to the CSI’s constitution.  Mr. Jeyaraj, a lay member of synod from the Diocese of Madras, stated the election was improper as votes for proxy were allowed—though forbidden by the CSI constitution.  He also alleged that those exercising the proxy votes, allegedly on behalf of Bishop Vasanthakumar, were amongst those facing criminal indictment for defrauding the Episcopal Relief and Development Fund of aid money sent to India in the wake of the Indian Ocean Tsunami.

On Feb 25, 2010 the court granted an injunction suspending the election, but the CSI succeeded in overturning the first order.  The second injunction, however, makes voidable all of the CSI senior management’s civil actions.

The church anti-corruption campaign group, the CCC welcomed the decision, noting the “ruling has huge negative implications for the CSI and puts into jeopardy several major policy and administrative decisions including the recent appointment of some bishops.”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tax investigation launched into Indian church finances: The Church of England Newspaper, March 25, 2011 p 8. March 25, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India
add a comment

Former CSI General Secretary Pauline Sathiamurthy: Photo from the World Council of Churches website

First published in The Church of England Newspaper.

An investigation into the misappropriation of Tsunami relief funds by the Church of South India (CSI) has been launched by India’s income tax authority.

On Dec 16, 2010, the Deputy Director of the Income Tax Department in Madras sent a formal notice to Bennett Abraham, the treasurer of the Church of South India Trust Association (CSITA), asking for an accounting of foreign donations, including cash collected for the “Tsunami Relief Fund” managed by the church.

The CSI was also asked to account for the proceeds from the sale of church properties including the American College in Kodaidanal, provide a listing of bank accounts maintained by the synod and dioceses, account for funds donated to the “Gujarat Earthquake Relief Fund”, and account for the proceeds of commercial property rents collected by the Karnataka North Diocese, the Deccan Chronicle reported.

The CSI treasurer’s office was asked to furnish the information within five days.  However, two extensions of time have been granted to the church to gather the requested information.

Corruption has become a major issue within the life of the CSI as fraud and misconduct charges have been leveled against several bishops over the past year, with one bishop, Manickam Doria, under criminal investigation for fraud.  In October 2009, a warrant was issued for the arrest of the former General Secretary of the CSI, Dr. Pauline Sathiamurthy, accusing her of stealing almost £1 million of the tsunami relief funds donated to the CSI by the Episcopal Church.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Contempt citation handed down by court in Indian church corruption trial: The Church of England Newspaper, April 1, 2011 p 8. April 5, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
add a comment

Bishop Vasanthakumar

First published in The Church of England Newspaper.

The Karnataka high court has issued a contempt notice to the Bangalore police after they failed to carry out a judge’s order to investigate fraud and corruption charges leveled against the Moderator of the Church of South India (CSI).

On Dec 9, Justice Mohan Shantanagoudar asked the police to complete their investigations “as soon as possible, but not later than the outer limit of two months” into a criminal compaling filed against the CSI Moderator, Bishop Suputhrappa Vasanthakumar, his wife Nirmala, daughter Aparna, and personal secretary Patricia Job.

On April 30, 2010 Mr. I Sounder Raj, a member of St. Peter’s parish in Kolar Gold Fields filed a complaint in the Bangalore magistrate’s court alleging the bishop and his wife had embezzled diocesan funds.  The thefts had been on-going since April 2002, Mr. Raj said, and involved theft, forgery, fraud, and the sale of admissions to church schools.

Prosecutors told the court last year that the police had investigated similar accusations lodged against Bishop Vasanthakumar and had filed a ‘B’ report—a police form that states a case could not be made against the accused.

The Raj complaint, however, was brought after the B report was filed, attorneys told the court.  Judge Shantanagoudar ordered the police to complete their review of the case and report their findings by the end of February.  The police have so far declined to act on the judge’s order, prompting the contempt notice from the court.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mediapersons attacked for capitation fee expose

smaller fontlarger fontprint this articleemail this article to a friend

Mediapersons attacked for capitation fee expose thumbnailThree mediapersons were injured after a group of people attacked them at the diocesan headquarters of Church of South India (CSI) in Thiruvananthapuram following an expose of huge capitation fee allegedly demanded by a church-run medical college for admissions.

Sarath Krishnan and Ayyappan of Asianet and Marshal Sebastian of India Vision were beaten up on July 14 and cameras with footage of the incident were forcibly taken away.
Police said two security guards posted at the compound and a diocese employee were taken into custody and two policemen were placed under suspension in connection with the incident.

A TV channel had two days back aired a sting operation showing church officials demanding a hefty amount as capital fee for admission in the management quota in Dr Somerwell Medical college at nearby Karakkonam, run by the South Kerala Diocese of CSI.

Since then student outfits affiliated to different parties have been organising demonstrations before the college and the church headquarters. The mediapersons who were attacked had gone there to shoot the demonstration.

The event sparked strong protests from the journalist fraternity across Kerala and political leaders cutting across party lines.

Earlier in the day, CPI-M led LDF Opposition staged a walkout in the assembly, protesting the state government’’s ”reluctance” to take action against the college taking capitation fee.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

 

Kerala government demands cancellation of admissions





Kerala government demands cancellation of admissions thumbnailsmaller font

 

The Kerala government has demanded cancellation of admissions to post graduate seats made by four medical colleges in the state under the inter-Church council.

The state government had written a letter to the Medical Council of India in this regard, alleging that the admissions were irregular.

Meanwhile, it is learnt that the Directorate of Medical Education is planning to cancel the admissions made to the PG medical seats in the self-financing medical colleges.

The counseling was stopped midway on June 28 with the high court temporarily striking down the order of the state government to take over 50 per cent of PG seats in the self-financing medical colleges.

As many as eight students, who were allotted seats in the counseling, got admission.

Students Federation of India (SFI) members had on June 24 clashed with police as they took to the streets to warn the government of any compromise with the Church on self-financing colleges.

The SFI had taken out the protest march alleging a secret deal between the management and government in the self- financing college issue.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bishop denies ‘sweetheart deal’ to defraud diocese: The Church of England Newspaper, April 15, 2011 p 8. April 16, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
14 comments

Bishop Lawrence on the way to inauguration of the 4B St Werbugh CSI Hospital in Nandyal

First published in The Church of England Newspaper.

The Bishop of Nandyal in the Church of South India has denied accusations of misconduct put forward by an anti-corruption watchdog group.  The claims put forward by the Christ Centered Campaign (CCC) that he was defrauding the diocese by “gifting” a church owned hospital to a private company were untrue, Bishop PJ Lawrence tells The Church of England Newspaper.

On March 31, the CCC, a lay led advocacy group that has led the charge against corruption in the Church of South India, released a statement accusing Bishop Lawrence of having “virtually gifted away the CSI-owned St. Werburgh’s “ Hospital “in the heart of Nandyal” to a foreign controlled “private limited company.”

On March 8, 2011 the bishop granted 4B Healthcare a 30 year lease to operate and manage St Werburgh’s Hospital.  Built in 1931 by the Society for the Propagation of the Gospel to serve the city’s poor, the CCC said the hospital’s land, clinics and rental properties have a market value of £8.5 million.

In return for the lease, the Diocese of Nandyal is to receive “15 per cent of net surplus” from the operations or a minimum of Rs 25,000 (£350).  The CCC claims that “no payments to the CSI are likely to  materialize” as 4B Healthcare is given “sole control over accounting” in the contract, and has the right to deduct from its payments “any outstanding liabilities” for the hospital at the time of the takeover.

The CCC notes the contract gives 4B Healthcare the right to “develop the entire property by modifying, demolishing or putting up new buildings, equipment and facilities” and at the end of the lease “should the CSI want to get back the property it will have to first pay 4B for all the developments done on it.”

The anti-corruption watchdog also questioned the credentials of the buyer, noting that it had been formed in January 2010 by an American entrepreneur, who “a mere three days after the deal between 4B and the Nandyal Diocese was inked,” sold a 99 per cent interest in the company to Opportunity International Australia (OIA).

The CCC urged the CSI to “consider legally challenging the transfer of the Nandyal Hospital to a private company on terms that virtually ensure the hospital and its vast land bank are lost to CSI members forever.”

“This deal sets a very unhealthy precedent as it can be used to justify similar ‘virtual sales’ of valuable CSI property elsewhere,” the CCC said, adding that “for the many corrupt bishops who dominate the CSI this novel model shown by 4B could just be the answer they are seeking to circumvent the challenges a vigilant laity is throwing at them” to stop the stripping of the church’s assets.

Asked about the allegations, Bishop Lawrence told CEN he wished the CCC had “checked with me the fact before circulating such information” as “there is no truth in what they are saying.”

The 4B Healthcare deal was “done with the approval of the executive committee of our diocese for the good of the hospital,” the bishop said, and it was unfortunate that “a hand full of disgruntled people” were raising objections.

Bishop Lawrence added that the “so-called CCC is focusing on dissidents in every diocese to malign the bishops.”

The bishop stated that “anyone, including the CCC is welcome” to visit Nandyal “and get the facts.”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Church push for pesticide ban in India: The Church of England Newspaper, May 13, 2011 p 8. May 15, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Environment
add a comment

Bishop Thomas K Oommen of Central Kerala

First printed in The Church of England Newspaper.

Church leaders in India have called upon the government to ban the pesticide Endosulfan, saying its health hazards far outweigh its benefits to farming.

However, India’s agriculture ministry — which manufactures the pesticide via the government-owned Hindustan Insecticides Ltd — claims there is no scientific evidence the chemical agent is harmful to humans, and has so far resisted local and international pressure to stop production.

In a 20April statement Bishop Thomas K Oommen of Central Kerala, the chairman of the Church of South India’s Ecological Concerns Committee, urged the Union Ministry for Environment and Forests to ban Endosulfan.

While the pesticide is still used in India and China, over 80 countries, including the EU, Australia and New Zealand, have banned its manufacture and use in response to concerns over potential for accumulation in the soil its acute toxicity.

In 2001, aerial spraying of Endosulfan was suspected in a rash of birth defects in Kerala. The state government banned the use of the substance, but under pressure from industry the ban was rescinded. In 2006, the state government paid compensation of Rs 50,000 (£700) to the next of kin of 135 people identified as having died from Endosulfan exposure in Kerala. In December 2010 the National Human Rights Commission (NHRC) recommended banning the chemical, but the agriculture ministry declined to act.

However on 29 April, the agriculture ministry expressed its inability to clamp down on the pesticide to the National Human Rights Commission (NHRC) at a high-level meeting. The NHRC had recommended its ban in December 2010.

The Conference of Parties to the Stockholm Convention on Persistent Organic Pollutants agreed to a ban on Endosulfan to take effect by mid 2012. In 2006 India signed the global environmental treaty and is bound by last week’s decision. However, certain uses of the chemical have been granted an exemption for five years, and enforcement of the ban is problematic.

In a letter read out to churches across his diocese on Easter Sunday, Bishop Oommen asked Christians to join him in implementing as 12-point programme of environmental stewardship.

He outlined a plan for rainwater harvesting projects for Church schools and institutions, the planting of vetiver grasses around church properties to control soil erosion and water loss, a ban on plastic cups and bags at all church functions, the encouragement of “eco-clubs” among school children, and encouraging farmers in the diocese to end the use of pesticides and hormones and switch to organic farming.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Criminal indictment handed down against Bishop Dorai: The Church of England Newspaper, June 3, 2011 p 8. June 4, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
add a comment

Bishop Dorai (centre) after his release on bail last year

First published in The Church of England Newspaper.

The Crime Branch-CID of the Tamil Nadu Police has filed a 500 page charge sheet with the Chief Magistrate in Coimbatore, stating the Bishop in Coimbatore of the Church of South India, the Rt. Rev. Manickam Dorai, his two brothers, and four other accomplices with defrauding his diocese of over £500,000.

The May 17 indictment of Bishop Dorai, follows upon an Oct 2010 report by an auditing team led by retired Karnataka High Court Justice Michael Saldhana, former Karnataka Director General of Police A J Anandan and bank auditor C E Sarasam that found substantial evidence of criminal behavior by the bishop.

It said Bishop Dorai had pledged diocesan bank accounts, trust funds and pension funds as collateral for personal loans, sold admissions to diocesan schools, took kickbacks on building contracts and diverted diocesan funds for his personal use.  They found the bishop had authorized the sale of diocesan property to real estate developers at approximately 20 per cent of their market value, in return for what the committee believes were kickbacks from the real estate developers.

“These transactions are not a mere case of mismanagement but point to rank dishonesty and criminality,” the committee said.

At its Nov 30 meeting of the Executive Committee of the CSI Synod declined to take disciplinary action against the Bishop in Coimbatore.  The bishop remained suspended from office, but the synod voted to allow the criminal case to guide the proceedings of any ecclesiastical trial.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bishop denies corruption allegations over hospital sale: The Church of England Newspaper, June 3, 2011 p 8. June 5, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
2 comments

Bishop P.J. Lawrence celebrating the St Werbergh's deal in Nandyal

First published in The Church of England Newspaper.

The Bishop in Nandyal has denied accusations leveled by the General Secretary of the Church of South India that he had abused his authority by granting a 40 year lease on a church hospital.

In a spirited exchange of letters, Bishop P.J. Lawrence said he was “shocked” by the rush to judgment made by the General Secretary, while the General Secretary Mr. M.M. Philip said he was “really shocked” the bishop would have signed the deal without the approval of the Synod.

On March 31, the CCC, a lay led advocacy group that has led the charge against corruption in the Church of South India, released a statement implicating Bishop Lawrence in a sweetheart deal that “virtually gifted” St. Werburgh’s Hospital to a foreign controlled “private limited company.”

Bishop Lawrence was accused of granting a 30 year lease on the hospital, built in 1931 by the SPG and valued at £8.5 million, in exchange for payments of “15 per cent of net surplus” from the operations or a minimum of Rs 25,000 (£350) per year.

The CCC claimed that “no payments to the CSI are likely to  materialize” from the deal as “sole control over accounting” was given to the firm acquiring the hospital, which also had the right to deduct from its payments “any outstanding liabilities” at the time of the takeover.

On April 8, Mr. Philip wrote Bishop Lawrence stated he was surprised by the deal and ordered the bishop to “cancel the agreement.”

The bishop replied on April 22.  St. Wergurgh’s was a “dying mission hospital” that was a drain on the limited resources available to his “poor rural diocese,” he said, adding that he had emailed a copy of the proposed lease to the CSI headquarters in Madras in September.  Having had no reply, he “took it for granted there is no objection from the CSI Synod.”

The bishop stated he was willing to re-negotiate the deal if the CSI Synod was unhappy with the terms Bishop Lawrence was able to obtain, but “there was no question of cancelling the agreement.”

Bishop Lawrence also denounced the tone and tenor of General Secretary’s letter.  “Your one unilateral letter has destroyed my unblemished reputation of 40 years ordained ministry and five years of episcopal ministry,” he said.

In a letter dated April 27 in reply, Mr. Philip said he was “very sorry for the inconvenience” caused by the dispute, but held fast in his demand the bishop cancel the agreement, or produce new terms acceptable to the CSI’s property management committee.

In a statement released on May 7, the CCC urged the CSI synod not to be swayed by the bishop’s blandishments as there was “a more sinister design involved than meets the eye.”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Moderator’s suspension quashed: The Church of England Newspaper, July 29, 2011 p 6. July 28, 2011

Posted by geoconger in Church of England NewspaperChurch of South India,Corruption
add a comment

Bishop S. Vasanthakumar

First printed in The Church of England Newspaper.

An Indian appeals court has thrown out a Madras civil court order suspending the moderator of the Church of South India (CSI).

On 15 July the court voided a 28 June order that suspended Bishop S Vasanthakumar from exercising the office of moderator, and further ordered a return to the status quo of the administration of the CSI pending a final adjudication of the dispute.

Last month Judge Thiru Chandrasekaran suspended the powers of all “office-bearers” of the church elected at the 17 January, 2010 general synod, including the moderator, deputy moderator, treasurer and general secretary in response to a lawsuit filed by a lay member of the synod from the Diocese of Madras who argued the elections were fraudulent.

The court found that a prima facie case could be made that the elections were voidable. On 25 February, 2010 the court issued an order suspending the elections that was subsequently overturned. On 28 June the court issued a second order suspending the elections, which was also overturned.

The church anti-corruption campaign group, the CCC noted the order suspending the moderator had “huge negative implications for the CSI and [put] into jeopardy several major policy and administrative decisions including the recent appointment of some bishops.”

The matter has now been set down for adjudication.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

aog.pngஇந்திய AOG சபைகளின் ஆரம்பகால
சரித்திரமும் - வீழ்ச்சியும்


star2.gif  AOG சபைகளிலும் ஊழல் என்ற தலைப்பில் 2011 ஜுன் மாத ஜாமக்காரனில் வெளியிட்ட தகவல்களை வாசித்து மிக அதிகமான கடிதங்களும், இமெயில் செய்திகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. சிலர் ஆதரித்தும், சிலர் ஏசியும் எழுதியுள்ளார்கள். எழுதியவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். அவைகளில் சில வாசகர்களின் பார்வைக்கு வெளியிடுகிறேன்.

தங்களின் ஜாமக்காரன் பத்திரிக்கையில் 2011 ஜுன் மாத இதழில் அசம்பளீஸ் ஆப் காட் சபைகளிலும் ஊழல் என்னும் செய்தி கட்டுரையை வாசித்தேன். தாங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரம் பல விவரங்கள் தவறாய் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை தங்களுக்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகிறோம்.

star2.gif  முதலாவதாக, இந்தியாவில் AOG சபைகளின் துவக்கம் குறித்த தகவல்கள் அறியவேண்டும். 1914ம் ஆண்டு அசம்பளீஸ் ஆப் காட் அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட வருடமே இந்தியாவிலும் AOG சபை துவங்கப்பட்டுவிட்டது. மேரிவீம்ஸ்சேப்மேன் என்னும் அம்மையார் முதன்முதல் AOG சபையின் மிஷனரியாக இந்தியாவிற்கு வந்தார்கள். மும்பை, பெங்களுர் போன்ற இடங்களில் ஊழியம் செய்து பின்சென்னையில் தங்கி ஊழியம் செய்தார்கள். அதன்பின் அன்றைய திருவிதாங்கூர் மக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் திருவனந்தபுரம் வந்து ஊழியம் செய்தார்கள். 1922ம் வருடம் அவருடன் ஸ்பென்சர் மே என்னும் வேல்ஸ் தேசத்தை சேர்ந்தவர் பிரிட்டிஷ் ஏ.ஜீ (AG) மிஷனரியாக இந்தியாவுக்கு வந்து இணைந்து ஊழியம் செய்தார். அவர்கள் சேர்ந்து பெந்தேகோஸ்தே எக்காளம் என்னும் பத்திரிக்கையை நடத்தி வந்தார்கள். ஏற்கனவே இந்தியாவில் ஊழியம் செய்துவந்த இராபர்ட்குக் என்னும் சுயாதீன மிஷனரி (Independent Missionary) ஏ.ஜீ (AG) சபையில் இவர்களுடன் சேர்ந்து, 1927ம் ஆண்டுசெங்கன்னூரில் மவுண்ட்சீயோன் பைபிள் இன்ஸ்டியூட் என்ற பைபிள் காலேஜை ஸ்தாபித்தார்கள்.


AOG சபை உடைந்தது - IPC சபை உருவானது

star2.gif  1929ல் இராபர்ட்குக் அவர்களுடன் பாஸ்டர்.K.E.ஆபிரகாம் ஆகியோர் AG சபையிலிருந்து வெளியேறி IPC சபையை ஸ்தாபித்தார்கள். இவர்கள்தான் கேரளாவில் IPC சபை ஆரம்பிக்க காரணமானார்கள். 1926ல் இந்தியாவிற்கு வந்த ஜான்பர்கஸ் என்னும் அமெரிக்க பெந்தேகோஸ்தே மிஷனரி சில மாதங்களில் 1927ல் மாவேலிக்கரையில் பெத்தேல் வேதாகம கல்லூரியை ஸ்தாபித்தார். இதுவே உலகளவில் ஏ.ஜீ (AG) சபை ஸ்தாபனம் துவங்கிய இரண்டாம் வேதாகம பயிற்சி நிறுவனம்ஆகும். இதுதான் பிற்காலத்தில் மாவேலிக்கரையிலிருந்து புனலூருக்கு இடம் பெயர்ந்தது. பின்பு 1948ல்தான் தமிழ்நாட்டில் ஏ.ஜீ (AG) ஊழியங்கள் வளர்ந்து பெருகின.

star2.gif  தமிழ்நாட்டில் ஏ.ஜீ (AG) ஊழியங்கள் 1937ம் வருடத்தில் துவங்கப்பட்டது. மிஸ்.கான்ஸ்டான்ஸ், எஸ்.ஈடி, குட் குடும்பம், ஆலிவர்போத், லவ்ரி குடும்பம் மற்றும் எட்வர்ட்ஸ் குடும்பத்தினர் ஆகியோரேAOG சபை ஊழியம் தமிழ்நாட்டில் துவங்க முக்கிய காரணமாயிருந்தவர்கள் ஆவர். ஆலிவர்போத்குடும்பத்தினர் முதலில் குன்னூரில் தங்கி ஊழியம் செய்தனர். 1947ம் வருடம் எட்வர்ட்ஸ் குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வந்து 18 மாதம் கொடைக்கானலில் தங்கி தமிழ் படித்தனர். பின்பு தென்காசிஅருகிலுள்ள கணக்கப்பிள்ளைவலசை என்னும் கிராமத்திற்குப்போய் AOG சபை ஊழியத்தைதுவக்கினர். 1948ம் வருடம் பாஸ்டர்.பெஞ்சமின் அவர்களின் விருப்பத்தின்பேரில் ஆலிவர்போத்என்பவர் மதுரையில் தமிழ்நாடு வேதாகம கலாசாலையை (AOG பைபிள் காலேஜ்) துவங்கினார். முதலில் பாஸ்டர்.பாப்பச்சன் பணிக்கர், மற்றும் பாஸ்டர்.சி.டி.ஜான் ஆகியோர் இவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் ஊழியம் செய்தனர். ஆரம்பத்தில் திருமதி.டாரிஸ் எட்வர்ட்ஸ் அவர்களே தனக்கு தெரிந்த தமிழில் தன் கணவரின் பிரசங்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வந்தார்கள். பின்பு தமிழ் தெரிந்தபாஸ்டர்.சி.டி.டேவிட் அவர்கள் இவர்களுக்கு மொழிபெயர்ப்பில் உதவினார்கள். 1952ம் வருடம்தென்காசி கணக்கப்பிள்ளைவலசையில் தொழிற்பயிற்சி பள்ளி (Industrial School) ஒன்று துவங்கப்பட்டது.

star2.gif  பின்பு அந்நாட்களில் ஏ.ஜீ ஸ்தாபனத்தில் இருந்து ஊழியம் செய்த பாஸ்டர்.பிலிப் மற்றும்சி.டி.டேவிட் ஆகியோர்மூலம் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களை எட்வர்ட்ஸ் தம்பதியினருக்கு பிரசங்கத்தை தமிழில் மொழிபெயர்த்து உதவ தென்காசிக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார். 1951ம் வருடத்தில்தான்பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் ஊழியத்தில் இணைந்து 3 வருடம் வேதாகம கல்லூரியில் படித்து பின் பாஸ்டரானார். அவருக்கு முன்பாகவே பாஸ்டர்.கே.சி.ஆண்ட்ரூஸ் மற்றும் பாஸ்டர்.ஆதாம்துரைஆகியவர்கள் AOG சபை ஸ்தாபனத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். இதற்கிடையில் வெளியிடப்படமுடியாதசில காரணங்களுக்காக பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் AOG ஊழியத்தைவிட்டு தன் சொந்த ஊருக்கே போய்விட்டார். அதன்பின் பாஸ்டர்.பிலிப் அவர்கள்தான் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களைத்தேடி கண்டுபிடித்து மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். பின் எட்வர்ட்ஸ் அம்மையாரின் வற்புறுத்தலின் பேரில் அம்மையாரின் வீட்டில் உதவி செய்துவந்த ராஜம்மாள் என்பவரை பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணமே இவரின் வாழ்க்கையின் திருப்புமுனையாய் அமைந்தது. இவர் திருமணத்துக்கு பிறகுதான் இவர் AOG சபைகளின் ஸ்தாபனத்தின் முடிசூடா நிரந்தர தலைவராவதற்கும் காரணமாக அமைந்தது. ஆரம்ப முதலே வெள்ளைக்கார பெண் மிஷனரிகள் வெள்ளைக்கார பாஸ்டர்கள் ஆகியவர்களின் மொழிபெயர்ப்புக்கு உதவியதால் அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதால் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். அதனால் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களை வெள்ளைக்கார ஊழியர்கள் மிகவும் நேசித்தார்கள். ஆகவே தடையின்றி வெளிநாட்டு உதவிகளையும், மிஷனரிகளின் ஆதரவையும் பெறுவதற்கும் அதுவே காரணமானது. அதேசமயம் AOG ஸ்தாபனத்தில் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களின் பங்களிப்பையும், உழைப்பையும்நிச்சயம் யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதேசமயம் தன் சொந்த மைத்துனராகியபாஸ்டர்.ஆதாம்துரை உட்பட வேறு எவரும் தலைமைத்துவத்தில் தலையெடுக்க பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களும், அவருக்கு முழு ஸ்பான்ஸசராயிருந்த எட்வர்ட்ஸ் அம்மையாரும் அனுமதிக்கவே இல்லை.

star2.gif  தென்இந்திய தேவசங்கம் South India Assemblies of God மும்பையில் 2701 என்ற பதிவு எண்ணுடன் 1951-52ல் 1860 சங்கப் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது.இந்த பதிவு எண்ணைக்காட்டி 1999ல் பாஸ்டர்.டி.சி.ஜார்ஜ் அவர்களின் தீவிர முயற்சியால் பெரும் பணச்செலவில் வெளிநாட்டு பணம்பெறும் அங்கீகாரமான FCRA, 12AA வருமானவரி விலக்கு போன்றவை பெறப்பட்டன. ஆனால் அதற்கு ஆதாரமாக காண்பிக்க உபயோகித்த சான்றிதழ் உண்மையானதுதான் என்று சான்றளித்த நோட்டரி பப்ளிக் அதை ட்ரூ காப்பி (உண்மை நகல்) என்று அறிவித்தார்கள். அந்த சான்றிதழ் அளித்தவர்கள் ஆரம்பகால ஒரிஜினலை பார்த்துதான் அப்போது சான்றளித்திருக்கவேண்டும். ஆனால் நான் ஒரிஜனலை பார்க்கவில்லை என்று மும்பை சேரிட்டி கமிசனர் முன் கூறி, பொய்சாட்சியம் அளித்ததால் அவர்களின் கோபத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளானார்கள். பிற்பாடு இந்த குறிப்பிட்ட எண்ணுடன் கூடிய பதிவு, குறிப்பிட்ட அதே வருடத்தில் மேற்கூறிய பெயருடன் பதிவு செய்யப்படவில்லை என்று மும்பை சேரிட்டி கமிசனர் எழுத்துமூலம் தெரிவித்துவிட்டார். இதைக்குறித்து AOGயின் ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொருவிதமாக பேசி வருகின்றனர். இன்று அகில இந்திய ஏ.ஜீ செயலாளராக இருக்கும் ரெவ.டி.ஜே.சாமுவேல் அவர்கள் பேசும்போது, "நான் SIAGசெயலாளராய் இருந்ததுவரை, அறிக்கைளை எல்லாம் மும்பையில் ஒழுங்காக பதிவுசெய்து வந்தேன். ஆனால் எனக்குப்பின் வந்த பாஸ்டர்.பி.எஸ்.பிலிப்பின் சோம்பல்தனத்தால்தான் அரசாங்க பதிவை AOGஇழக்கநேரிட்டது" என்கிறார். தற்போதைய AOG சபைகளின் செயலாளர் வி.டி.ஆபிரகாம் அவர்கள் பேசும்போது (ரெவ.பி.டி.ஜான்சன் காலத்திலேயே) 30 வருடங்களுக்கு முன்பாகவே அரசாங்க பதிவைநாம் இழந்துவிட்டோம். ஆனால் நாங்கள் இதற்கு காரணம் அல்ல. பி.டி.ஜான்சனுக்கு முன்பிருந்த தலைவர்களின் அறியாமையும், கவனக்குறைவும்தான் காரணம் என்கிறார். சமீபத்தில் சென்னையில்சுமார் 100 பேரைக்கூட்டி நடத்தப்பட்ட அவசரக்கூட்டத்தில் பேசிய தமிழ் பிரதேச பொருளாளர்ரெவ.சுவர்ணராஜ் அவர்கள் பேசும்போது "பதிவு காலாவதியாகாமல் இப்போதும் இருப்பதும் உண்மை, அதை நாம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பே இழந்ததும் உண்மை, அதற்காக நாங்கள் தற்போதுமும்பை பதிவாளருக்கு ரூபாய் ஏழு லட்சங்கள் லஞ்சமாக கொடுத்திருக்கிறோம். இன்னும் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால்போதும், இந்த 2011 ஜுலை 13ற்கு முன், நாங்கள் அன்றைய காலங்களில் கிடைத்த 2701 என்னும் அதே பதிவு எண்ணுடன் அரசாங்க பதிவை திரும்பப் பெற்றுவிடுவோம்" என்று ஆணித்தரமாக கூறுகிறார். இப்படி இரண்டுவிதமாக முரண்பாட்டோடு இவர்கள் கூறும் பதிலில் எதுஉண்மை என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை! என்று சம்பந்தப்பட்ட பாஸ்டர்கள் கூறுகிறார்கள்.

star2.gif  AOG சபைகளின் தலைவராய் இப்போது இருக்கும் பாஸ்டர்.பி.எஸ்.இராஜமணி அவர்களோ இனிமேல் இந்த பதவிக்கு நான் போட்டியிடப்போவது இல்லை என்றுமட்டும் கூறி, அதற்கான வேறு விளக்கம் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்கிறார். அகில இந்திய தலைவர் பாஸ்டர்.மோகன்அவர்களிடம் இது குறித்து கேட்டப்போது SIAG, என்பதும் Assemblies of God India என்ற இரண்டும் வேறுவேறு அமைப்புகள் ஆகும். மேலும் இதைக்குறித்து அறியவேண்டுமானால் SIAGதலைவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்று சமாளிக்கிறார். இவர்களில் யாரை நம்புவது? என்று தெரியவில்லை என்று பலர் சலித்துக்கொள்கிறார்கள்.

star2.gif  ஒன்று மட்டும் உண்மை, யாரோ ஒருவர் 2701 எண்ணும் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு ஒருபோலியான பதிவுச்சான்றிதழை தயாரித்து, இந்திய அரசாங்கத்தையும், AOG சபைகளையும் ஏமாற்றிவிட்டார் என்பதுமட்டும் தெளிவாகிறது! சீக்கிரம் அதுவும் ஆதாரபூர்வமான தகவல்களுடன் நிச்சயம் வெளியாகலாம்.

star2.gif  தென்இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா உள்பட இந்த AOG ஸ்தாபனம் இன்று முற்றிலும்தமிழ்நாட்டு தலைவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. தங்கள் ஓட்டுவங்கியை தரமற்ற விரிவு வேதாகமப் பள்ளிகள் மூலம் (Extension Bible Schools) அதிகரித்து, தங்கள் பணபலத்தையும்உபயோகித்து, அனைத்து AOG மாநாடுகளையும் சென்னை புது வாழ்வு ஏ.ஜீ சபையிலேயே நடத்தி, மீண்டும் மீண்டும் தாங்களே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட ஞானமாக ஏற்பாடுகளை செய்துகொள்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. இது எந்த ஒரு ஆவிக்குரிய சபையிலும்காணப்படாத விநோதமான பெந்தேகோஸ்தே சபை அரசியல் ஆகும். ஒவ்வொரு வருடமும் AOGசபைக்காக வரும் வெளிநாட்டு பணங்கள், கிட்டத்தட்ட அனைத்துமே பாஸ்டர்.மோகனுக்குத்தான்வருவதாக சொல்லப்படுகிறது. தேவையோடிருக்கும் மற்ற பாஸ்டர்களுக்கோ, சபைகளுக்கோகொடுப்பதற்கு பணம் இவர்களின் உள்ளத்தில் எண்ணம் இல்லை. சபைகளுக்கு பண உதவி கேட்டால்ஜெபம் பண்ண ஆலோசனை கொடுக்கப்படுகிறது!

star2.gif  சபை ஊழியத்தைத்தவிர, வேறு எந்த ஊழியமும் யாரும் செய்யக்கூடாது என்று வாதிடும் இந்தத் தலைவர்கள், தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் பெருத்த வருமானம் பெற்றுத்தரும்பள்ளிக்கூடங்கள், அனாதை இல்லங்கள், விபச்சாரிகளை பராமரிக்கும் இல்லங்கள், கருணை இல்ல ஊழியங்கள் என்று ஏராளமான சேவை ஸ்தாபனங்களை வைத்துக்கொண்டு கோடிகோடியாக வருமானம் பெறுகிறார்கள்!

star2.gif  வருடாவருடம் தங்கள் ஸ்தாபன விபரங்களை பண வரவு-செலவுகளை அரசாங்க பதிவாளருக்கு தெரிவிக்கவேண்டும் என்பது சட்டம்! ஆனால் அதை எந்த பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று இதுவரை தலைவர்களாகிய இவர்களுக்கு தெரியாது என்ற செய்தி ஆச்சரியமாக இல்லை! காரணம்அப்படி ஒரு பதிவு எந்தக்காலத்திலும் நடக்கவில்லை!

star2.gif  யார் வேண்டுமானாலும் இதை மும்பைக்கு ரிஜிஸ்டர் ஆபீசுக்கு நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். உலகம் முழுவதும் பிரயாணம் செய்வது எப்படி? எப்படி குடும்பம் நடத்தவேண்டும்? எப்படி சபை நடத்தவேண்டும்? என்றெல்லாம் பிரசங்கிப்பதில் மிகவும் தேர்ச்சியடைந்தபாஸ்டர்.பி.எஸ்.இராஜாமணி அவர்கள் மற்றும் பாஸ்டர்.டி.மோகன் ஆகியோருக்கு AOG ஸ்தாபனநிர்வாகம் எப்படி செய்வது? என்று இவ்வளவு காலம்தெரியாமல்போனது என்பது ஆச்சரியம்தான்!"கூரைமேல் கொள்ளி வைத்துக்கொண்டு நிற்பவன்தான் எங்கள் வீட்டிலேயே நல்ல பையன்"என்பதுபோல, எல்லாரையும் ஒரே வார்த்தையில் அடக்கிவைத்து இத்தனைகாலம் AOGஐ ஆட்சி செய்தபாஸ்டர்.ஒய்.ஜெயராஜ்தான் மிக சிறந்த நிர்வாகி என்று இன்று புகழப்படுகிறார். AOG சபைகளின் இன்றைய நிர்வாக நிலைமைகளை கண்டீரா? இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்து தங்கள் மனவேதனையை சபை முக்கியஸ்தர்கள், விசுவாசிகள் சிலர் வெளிப்படுத்துகின்றனர்.

star2.gif  25,000 சபைகளை உருவாக்கும் AOG சபைகளின் கவர்ச்சித்திட்டம்பற்றி இன்றுவரை எந்த ஏ.ஜீ சபை போதகருக்கும் தெரியாது! இது முழுக்கமுழுக்க பாஸ்டர்.டி.மோகன் அவர்களின் பிரம்மாண்டபேராலயத்திற்கு பணம் சேகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் என்று சிலர் கூறுகிறார்கள். இது இந்தியாவில் வேறு யாரும் அறியாதபடி செயல்பட்ட பாஸ்டர்.டி.மோகன் அவர்களின் இரகசிய திட்டம்ஆகும் என்றும் கூறப்படுகிறது. அவரிடம் இருக்கும் சென்னை வேதாகமக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை காண்பித்து, அவர்கள் மூலமும், சபை விசுவாசிகளின் மூலமும் தொடங்கப்படும் வீட்டு சபைகளுக்காகத்தான் அப்பணம் பெறப்படுவதாக பிரபல அமெரிக்க மிஷனரி.டேவிட் கிராண்ட்என்பவர் அடித்து கூறுகிறார். ஏற்கனவே AOGக்கு வந்த பணத்தைக்குறித்து கேள்வி கேட்டதால்தான்பாஸ்டர்.JJY.அருள் அவர்கள்மீது பாஸ்டர்.மோகனுக்கு இவ்வளவு கோபம் உண்டானது என்று எல்லாராலும் கூறப்படுகிறது.

star2.gif  ஜாமக்காரனில் குறிப்பிட்டதுபோல AOG சபைகளில் 6 பாஸ்டர்கள் தற்காலிக பணிநீக்கம்செய்யப்படவில்லை முழுவதுமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் AOGஸ்தாபனத்தைவிட்டே நீக்கப்பட்டுள்ளார்கள். வேறு 5பேர் 2 வருடம் AOG மாநாட்டிற்கு வரக்கூடாதுஎன்று தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணம் மும்பைக்குப்போகும் பணத்தைப்பற்றிஇவர்கள் கேள்விக் கேட்டதனால் மட்டுமல்ல, காழ்ப்புணர்ச்சியும் காரணமாகும். பாஸ்டர்.அருள்அவர்களை (3 வருடம் அல்ல) 5 வருடம் AOG தேர்தலில் நிற்கக்கூடாது என்று நியாயமற்ற நிலையில் அறிவிக்கப்பட்டதற்கும் இதே காரணம்தான். தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததற்க்காக 5 பேர் தடைசெய்யப்பட்டுள்ளனர். வேறு குற்றச்சாட்டு எதுவும் இவர்கள்மேல் இல்லை என்பது குறிப்பிட்டதக்கதாகும். நிர்வாகக்குழுவில் இருந்த காலங்களில் பாஸ்டர்.ஒய்.ஜெயராஜ் குடும்பத்தினர் செய்யும் சர்வாதிகாரதவறுகளையும், பாஸ்டர்.மோகனின் கோடிக்கணக்கான பணக்கொள்ளையையும் குறித்து நிர்வாகக்குழுவில் இருந்துகொண்டு பாஸ்டர்.அருள் அவர்கள் கேள்வி கேட்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு சதிசெய்து, இவரை முதலில் ஒரு வருடமும், பின்பு உலகில் எந்த சட்டத்திலேயும் இல்லாத அளவு 5 வருடம் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் அநீதியாகமுடிவெடுத்ததே தங்களை யாரும் கேள்வி கேட்டக்கூடாது என்ற ஒரே காரணம்தான் என்று பலரால் கூறப்படுகிறது.

star2.gif  இப்படியாக AOGயின் தரம், மற்றெந்த சபைக்கும் இயலாத நற்பெயர் AOG சபைகளிலிருந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது.

இதை யார்? தூக்கி நிறுத்தபோகிறார்கள். பரம்பரையாக AOG சபைகளை ஆண்டுகொண்டு இருக்கும் இவர்கள் கையிலிருந்து AOG ஆட்சி யாரால் விடுவிக்கப்படும்? என்று விவரம் அறிந்த AOG சபையினர் ஆவலாக காத்திருக்கின்றனர். 

ஜாமக்காரன் வாசகர்கள் AOG சபையில் இருந்தால் உங்கள் சபைகளுக்காகவும், முக்கிய தலைவர்களுக்காகவும் ஜெபியுங்கள். மற்ற ஜாமக்காரன் வாசகர்களும் ஜெபிப்போம்.


நான் கோடீஸ்வரன் அல்ல - பாஸ்டர்.அருள்
 
aog1.jpg
Pastor.ARUL

உங்கள் ஜாமக்காரனில் இரண்டுமுறை நான் பெரிய கோடீஸ்வரனாக என்னை குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்குள்ள கடன்கள் எவ்வளவு என்று வெளிஉலகமும், நீங்களும் அறிய வாய்ப்பில்லை!

மற்றபடி AOG சபை சம்பந்தமாக என் மீதுள்ள நீதிமன்ற வழக்கு பாஸ்டர்.மோகன் அவர்களின் விவகாரம் குறித்து எழுதியது அனைத்தும் உண்மை. 

அது சம்பந்தமான வழக்கு அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வருகிறது. ஆகவே அதைக்குறித்து இப்போது விளக்க விரும்பவில்லை.


அரசாங்க பதிவு புதுபிக்கப்பட்டுவிட்டது

அகில இந்திய AOG சபை அரசாங்க அங்கீகாரம் புதுபிக்கப்பட்டுவிட்டதாக பாஸ்டர்.மோகன் அவர்கள் கூற அதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

AOG பாஸ்டர்.பால்தங்கையா விவகாரம்

star2.gif  பாஸ்டர்.பால்தங்கையாவின் காரியம் . . . . . . நீங்கள் முன்மாதிரியான நபராக இருந்தால் அவரது பிரச்சனையைத் தீர்த்துவைக்க முன்வந்திருக்கலாம்.

. . . . . . . இவை எழுதுகிற நான் இயேசுவின் இரட்சிப்பை அனுபவிப்பதுடன் இந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் . . . . கிறிஸ்துவின்மூலம் வரும் இரட்சிப்பையும், அவரால் மனித இனத்திற்கு வரும் மகத்துவமான நன்மைகளையும் பறைச்சாற்றி வருகிறேன்.

. . . . . AOGயில் சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக AOG சபையின் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் பழிவாங்குவதுபோல் நீங்கள் நடந்துக்கொள்வது நல்லதல்ல.

star2.gif  தமிழ்நாட்டில் AOG சபைகள் என்றால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை பணியாளர்கள், வேத கலாச்சாலைகள், இரண்டு லட்சத்திற்கும் குறையாத விசுவாசிகள் அடங்கிய ஒரு பெரிய அமைப்பாகும். . . . . . . நீங்கள் வெளியிட்ட உங்கள் செய்தியால் அந்த AOG சபை ஸ்தாபனத்தைக் உங்கள் எழுத்தால் காப்பாற்றமுடியுமா? உங்கள் விளம்பரத்தினால் அவைகளை சீர்திருத்தமுடியுமா?

எவர் துணிந்து அநீதியான காரியங்களை செய்கிறார்களோ? அவர்கள் அதற்கேற்ற தண்டனையை அடைவார்கள்! இது அவர்களது மனசாட்சிக்கே தெரியும்! அவர்கள் திருந்துவதற்கு ஆண்டவரே அவகாசம் கொடுத்து காத்திருக்கும்போது நீங்கள் அவசரப்பட்டு அவர்களை விளம்பரப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது முறைதானா? . . . . . . . . . நல்லவேளை நீங்கள் டாக்டர் தொழிலை விட்டுவிட்டீர்கள்! சந்தோஷம்! இல்லாவிட்டால் உங்களிடத்தில் வருகிறவனின் குடலை உருவிமாலைப்போட்டிருப்பீர்கள்.

star2.gif  ஒவ்வொரு சபையிலுமே சில யூதாசுகளும், அசித்தோப்போல்களும் . . . தேமாக்களும் (2 தீமோ 4:10)இருக்கத்தான் செய்கிறார்கள். AOGயின் உண்மையான நல்ல விசுவாசிகள், நல்ல ஊழியர்கள்இதுபோன்ற செய்திகளை உங்களுக்கு அனுப்பியிருக்கமாட்டார்கள்!.

star2.gif  நீங்கள் ஜாமக்காரனில் வெளியிட்ட AOG சபை காரியங்களைக்குறித்து நானும் தீர விசாரித்து வருகிறேன். அவைகளை சீரமைப்பதில் பெரிய சிக்கல் எதுவுமில்லை. என்ன! அவர்கள் சற்று பிந்தி விட்டார்கள் அல்லது அசதியாக இருந்துவிட்டார்கள்! அவை சரிப்படுத்தக் கூடியவைத்தான்.

AOG செய்திகளை கேள்விப்பட்ட நீங்கள் ஏன் உங்கள் ஊரில் உள்ள AOG சபை கிறிஸ்தவர்களை அழைத்து, உபவாசித்து ஜெபிக்கவில்லை? நீங்கள் தானியேலைப்போல உபவாசித்து பாவ அறிக்கை செய்து ஜெபித்திருக்கலாமே! நெகேமியாப்போல என்றைக்காவது நீங்கள் இதற்காக அறைகூவல் விடுத்தீர்களா? நான் இதை கையெழுத்திடாத கடிதமாகவே எழுதுகிறேன்.

ஜாமக்காரன்: இதை எழுதியவர் தன் பெயரை, ஊரை வெளியிடவில்லை. ஆனால் இவரின் e-mail IDஅவருடையதா என்பது தெரியாது. அவர் அனுப்பிய இ-மெயிலில் hudloror2001@yahoo.co.in என்று காணப்படுகிறது.

பாஸ்டர்.பால்தங்கையாவின் மனைவி தவறான 
நடத்தை உடையவரல்ல
 
aog4.jpg
Pr.PAUL THANGAIAH

பாஸ்டர்.பால்தங்கையா அவர்களின் மனைவி தவறான நடத்தை உள்ளவர் அல்ல. எங்களுக்கு இது நன்றாக தெரியும். இப்போது புருஷனோடு ஒப்புரவாகி வாழ ஆசைப்பட்டார். இதற்காக சமரசம்பேச டெல்லியிலிருந்து ஒரு வக்கீல் பாஸ்டர்.பால்தங்கையா அவர்களை சந்தித்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் பாஸ்டர்.பால்தங்கையா கொஞ்சம்கூட வளைந்துகொடுக்கவில்லை! என் ஊழியம் முந்தையவிட சிறப்பாக நடக்கிறது. என் சபை மக்கள், என் கிளை சபை மக்கள், யாவரும் என்னை நம்புகிறார்கள். ஆகவே நான் மேய்ப்பனாக தொடர்வதை யாரும் கேள்வி கேட்கமுடியாது, யாருக்கும் என்னை கேள்வி கேட்க யோக்கியதையும் இல்லை! இப்படிப்பட்ட பதில் பாஸ்டர் அவர்களின்ஆணவத்தையும் எல்லா சொத்தும், கோடிகளும் அவர் பெயரிலிலேயே இருப்பதால் உண்டான தைரியத்தையும் இது தெரிவிக்கிறது!

AOG சபை தலைவர்கள் இதற்கு பிறகு இவரை AOGயில் மேய்ப்பனாக தொடர அங்கீகரிப்பார்களா? இதை ஜாமக்காரனில் எழுதுங்கள். அப்படி AOG தலைமை தகுதி இழந்த பால்தங்கையாவை மேய்ப்பனாக அனுமதித்தால் AOG தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் சோரம் போனவர்களே! நானும் குடும்பமும் தொடர்ந்து பெங்களுர் AOG சபைக்கு (பாஸ்டர்.பால்தங்கையா சபைக்கு) போய்கொண்டுதான் இருக்கிறோம். சீக்கிரம் ஒரு நல்ல முடிவை AOG தலைமை எடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு அந்த சபையில் தொடருகிறோம்.

11 கட்டளைகள் சகோ.பால் தங்கையாவின் திடீர் தரிசனம்

சகோ.பால்தங்கையா அவர்கள் தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன்னுடைய இ-மெயிலில் அவர் வெளியிட்ட விஷயமாவது:
நான் என் சபையோடு ஆரம்பித்த கிளை சபைகள் உட்பட உள்ள 12 ஸ்தாபனத்தைக்குறித்து கர்த்தரின் சித்தம் என்னவென்று அறிய நான் உபவாசித்தேன். இந்த தரிசனத்தை 8.7.2011 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு உபவாசிக்கும்போது கண்டேன். நான் கண்ட தரிசன விவரங்களான 11 கட்டளைகளையும் 11.11.2011க்குள் நிறைவேற்றியாகவேண்டும் என்று கர்த்தர் எனக்கு கட்டளையிட்டார். 12 x 11=132

பதினோறு கட்டளைகளாவன:
1) 11 வெவ்வேறு இடங்களில் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் திட்டம்.
2) தன் ஊழியம் நடக்கும் 12 ஊர்களில் 11 சுவிசேஷ கூட்டங்களை நடத்தவேண்டும்.
3) தன் ஊழியம் நடக்கும் 12 ஊர்களில் 11 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்.
4) 11 இடங்களில் 11 ஜெபக்குழுக்களை உருவாக்க வேண்டும்.
5) 11 இடங்களில் ஐக்கிய பரிசுத்த மேஜை (திருவிருந்துக்கு) ஏற்பாடு செய்யவேண்டும்.
6) 11 நபர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு விசேஷ உதவிகளை செய்யவேண்டும்.
7) 11 இடங்களில் உள்ள பாஸ்டர்களை சந்தித்து அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்.
8) 11 இடங்களில் வெளிப்படையான அற்புத அடையாளங்கள் நடைபெற ஜெபிக்கவேண்டும்.
9) 11 இடங்களில் 11 மிஷனரிகளை தெரிந்தெடுத்து அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்.
10) 11 இடங்களில் ஏழைகளை பராமரிக்கும் 11 குழுக்களை நியமிக்கவேண்டும். அதற்கான தலைவர்களையும் நியமிக்கவேண்டும்.
11) உன்னைவிட்டு பிரிந்துப்போன 11 பேரை தெரிந்தெடுத்து அவர்களுக்காக ஜெபி.

அன்பானவர்களே, கர்த்தர் மோசேக்கு கொடுத்தது 10 கட்டளைகளைதான் என்று நாம் வேதத்தில் வாசித்துள்ளோம். ஆனால் 11 கட்டளைகள் பால்தங்கையாவுக்குமட்டும் கொடுத்திருப்பதாக கூறிய இந்த தரிசனத்தை நம்புகிறீர்களா?. 11 பதினொன்றாக கூறியதில் என்ன சிறப்பு இருக்கிறது. இப்படியும் கர்த்தர் கூறுவாரா?

star2.gif  சசொந்த மனைவியை விவாகரத்து செய்து மேய்ப்பன் தகுதியை இழந்து, வேத வசனத்துக்கு விரோதமாக ஊழியம் இவருக்கு கர்த்தர் இப்படியொரு தரிசனத்தை கொடுப்பாரா? அதுவும் எல்லாம் 11, இந்த 11 என்ற எண்களில் என்ன விசேஷ சிறப்பு? கர்த்தரைவிட்டு விலகின ஒரு ஊழியனுக்கு பிசாசுதரும் அர்த்தமில்லா தரிசனத்தை கண்டீர்களா? பொய்க்கு பிதாவின் கைகளில் சிக்கிய இந்த பாஸ்டர்.பால்தங்கையாவை நம்பும் பெங்களுர் AOG சபை மக்களுக்காக பரிதாபப்படுகிறேன். நான் இப்போது எழுதியது உண்மையா என்பதை பால் தங்கையாவின் இ-மெயிலை பாருங்கள். இதன்பிறகும்AOG சபை இவர்மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர் தங்கள் சபை மேய்ப்பனாகஇருக்கவேண்டுமா என்பதை சபை மக்களே தீர்மானம் செய்யட்டும்! பொய்தரிசனம் பொய்அந்நியபாஷைகளை இனியாவது AOG சபை அஸ்திபார உபதேசமாக்காது மக்களை வசனத்தில் வழி நடத்துவர்களாக!

star2.gif  பால் தங்கையா பேசிய அந்நியபாஷை பொய்!

star2.gif  பால் தங்கையா கண்ட தரிசனமும் பொய்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆவியானவர் படும்பாடு

AOG சபையினாரின் ஒரு கடிதம்: பெந்தேகோஸ்தே சபைகளில் இரண்டு வார்த்தைகள் மிகவும் பிரஸ்தாபம்: 1) அக்கினி, 2) அந்நியபாஷை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அக்கிரமம் சொல்லி முடியாதது. 

star2.gif  எங்கள் சபைக்கு கன்வென்ஷனில் பேச ஒரு பிரபல ஊழியர் வந்திருந்தார் அவர் பிரசங்கம் செய்யும்போது நடுநடுவே அந்நியபாஷை பேசினார். அவர் பாஷை மிகவும் விநோதமாக இருந்தது. ஜெபவேளையில் அவர் நீண்ட நேரம் பேசிய பாஷை படுபயங்கரமாக இருந்தது. நான் எங்கள் தலைமை பாஸ்டரிடம் கேட்டேன். பாஸ்டர் நீங்கள் இத்தனை வருடம் பேசும் பாஷைக்கும், நாம் எல்லாரும் பேசும் பாஷைக்கும், இந்த கன்வென்ஷன் பிரசங்கியார் பேசும் பாஷைக்கும் சத்தத்திலும், வார்த்தைகளிலும்இத்தனை பெரிய வித்தியாசம் காணப்படுகிறதே இது ஏன்? என்று கேட்டேன். அப்போது என்னோடு வேறு இரண்டு நபர்களும்கூட இருந்தார்கள். பாஸ்டர் கூறினார்: அது அவருக்கு கர்த்தர் கொடுத்த விசேஷ வித்தியாசமான வரமாக இருக்கும் என்று பதிலளித்தார். அவர் பதில் எங்களுக்கு திருப்தியாக இல்லை, என்னோடுகூட இருந்தவர்கள் என்னிடம் பேசும்போது பாஸ்டர் கூறிய பதில் சரியில்லை. அதுமட்டுமல்ல, நான், நீ பேசும் பாஷைகளும் சரியல்ல என்றுதான் எனக்கு தோன்றுகிறது என்று கூறியவுடன் அட! எனக்கு ஏற்பட்ட சந்தேகமே உனக்கும் ஏற்பட்டுள்ளதே! இவைகளை யோசித்து நாங்கள் சோர்ந்துபோனோம். இரவு நான் வீட்டில் என் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினேன். உடனே அவள் ஆவியானவரை சந்தேகப்படாதிருங்கள் என்றாள்.

நான் ஆவியானவரை ஒருகாலும் சந்தேகப்படவில்லை. ஆனால் அந்த கன்வென்ஷனில் பேசிய பாஸ்டர் பேசிய பாஷை நம் பாஸ்டர் மோகன் பேசும் பாஷை, நானும், நீயும் மற்ற நண்பர்களும் பேசும் அல்லது பேசிய பாஷையைத்தான் சந்தேகப்படுகிறேன் என்றேன். உடனே என் மனைவி கூறினார்.டாக்டர்.புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரனை நீங்கள் படித்ததால்தான் இப்படி குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்றாள்.

சரி, நீ பேசும் பாஷையில் உனக்கு திருப்திதானா? நீயே சொல்! பாஷையில் நீ கர்த்தரிடம் பேசியது என்ன? அல்லது உனக்கு பதிலாக ஆவியானவர்தான் பாஷைமூலம் உன் வாய்வழியாய் பேசினார் என்று எல்லாரும் கூறுவார்களே, அப்படியே வைத்துக்கொண்டாலும் உன் வாய் வழியாய் ஆவியானவர் பேசியது உனக்கு விளங்கினதா? என்றேன். அப்பப்பா! என்னை குழப்பாதீர்கள்! ஆவியில் நிறைந்து பாஷைகள் பேசி நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றாள். அதன்பின் என் மனைவியின் உற்சாகத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. அநேக நாட்கள் கர்த்தரின் பாதத்தில் இவைகளைக்குறித்து மிகவும் யோசித்தேன். என் சபையைச் சேர்ந்த சில குடும்பங்களோடு இவைகளைக்குறித்து பேசி பகிர்ந்துக்கொண்டேன். நீண்ட நாட்கள் நாங்கள் கூடி அடிக்கடி இதைக்குறித்தே பேசிக்கொள்வோம்.

star2.gif  ஒருநாள் சபைக்குள் சில பிரச்சனைகள் எழும்பியது. சபையின் வயதான மூத்த அங்கத்தினர் பாஸ்டரிடம் அவர் மகனைப்பற்றி சில புகார்களை கூறினார். அதை அறிந்துக்கொள்ள நாங்கள் சிலராக அவர் வீட்டுக்கு போய் பேசினோம். அப்போதுதான் பாஸ்டர் மகனின் சாட்சியில்லா சில காரியங்களை குறித்து பாஸ்டரிடமே அவர் புகார் கூறிய விவரம் அறிந்தேன்.

star2.gif  சபையின் அந்த மூத்த விசுவாசி மேலும் எங்களிடம் கூறியதாவது, ஒரு ஊழியர் ஆவிக்குரியவரா இல்லையா? என்பதை ஆவியானவரே, நமக்கு விளங்க வைக்கவேண்டும். ஆகவே நீங்கள் நன்றாக ஜெபித்து பாஸ்டர்.மோகன் அவர்களின் மகன் நடத்தும் ஆங்கில ஆராதனையில் ஒருமுறைபோய்பங்குகொள்ளுங்கள். அப்போது நீங்கள் பல விஷயங்களை விளங்கிக்கொள்வீர்கள். நம் சபையின் ஆவிக்குரிய வீழ்ச்சியைக்குறித்தும், நம் சபையில் ஆரம்பத்தில் இருந்த தேவஆவியானவரின் அசைவுக்கும் இப்போது சபை அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் ஆபத்தைக்குறித்தும் நீங்களும் அறியமுடியும் என்றார். இதை கூறியவர் சென்னை Little Mount Assembles of God சபையின் ஆரம்பகால முதிர்ந்த அங்கத்தினராவார், தன் சபையைக்குறித்த பாரம் உள்ளத்தின் வேதனை அவர் முகத்தில் தெரிந்தது.

star2.gif  நான் ஒரு பட்டதாரி, என் மனைவியும் ஒரு பட்டதாரி. ஆனாலும் AOG சபையில் நடக்கும் ஆங்கில ஆராதனையில் இதுவரை கலந்துகொண்டதில்லை. முதிர்ந்த அந்த அங்கத்தினர் கூறியதை என் மனைவியிடம் கூறினேன். உடனே இந்த வாரமே நாம் ஆங்கில ஆராதனையில் பங்குக்கொள்வோம் என்று கூறியபோது என் மனைவியின் உள்ளத்தில் புகைந்துக்கொண்டிருந்த போராட்டத்தை அன்று அவர் புறப்பட்ட வேகத்திலிருந்து விளங்கிக்கொள்வதாக இருந்தது. 

என் நண்பர்களின் குடும்பத்தினருக்கும் தொலைபேசிமூலம் இவ்விவரத்தை அறிவித்தேன். நாங்கள் எல்லாரும் ஆங்கில ஆராதனையில் பங்குகொண்டோம்.

aaviyaanavar1.jpg

star2.gif  அன்றுதான் ஆவியானவர் இந்த வாலிபர்களிடம் சிக்கிக்கொண்டு படும்பாட்டை நேரில் காண முடிந்தது. வாலிபர்களும், வாலிப பெண்களும் நிதானம் இழந்து மேடையில் பாடும்பாட்டும், வாத்திய கருவிகளினால் உண்டான சப்தத்தால் ஏற்பட்ட போதையும் இணைந்து கஞ்சாஅடித்தவர்கள்போல பேசிய அந்நியபாஷை, பாஸ்டரின் மகன்பாஷை என்ற பெயரில் பேசிய சப்தம், ஆபாச வார்த்தைகள்போன்ற உச்சரிப்போடுகூடிய அந்நியபாஷையும், அவர்கள் ஆடிய ஆட்டம் வெளிநாட்டு கடைகளில் (பார்) ஆடும் நடனம்போல அமைந்திருந்ததையும், உச்சக்கட்டத்தில் சபையில் இருந்த வாலிபப்பெண்களை மேடைக்கு அழைத்து பாடலுக்கு ஏற்றபடி ஆட உற்சாகப்படுத்தியதையும் நேருக்குநேர் காணமுடிந்தது. 

star2.gif  இதை எழுதும் நான் கூறுகிறேன், பிழையான அந்நியபாஷை எப்படியிருக்கும் என்று யாராவது அறியவேண்டுமானால் சென்னை AOG சபையில் ஆங்கில ஆராதனையில் கலந்துக்கொண்டால் விளங்கும்.

star2.gif  அன்று இரவு என் மனைவி கண்ணீர்விட்டு அழுது ஜெபித்தாள். ஆண்டவரே, எங்கள் சபையை காப்பாற்றும், எங்கள் சபை வாலிபர்களையும், வாலிபப் பெண்பிள்ளைகளையும் காப்பாற்றும் என்று அவளோடு நானும் சேர்ந்து ஜெபித்தேன். இதே அனுபவம் என்னோடு, அந்த ஆங்கில ஆராதனையில் கலந்துக்கொண்ட குடும்பங்களுக்குள்ளும் ஏற்பட்டது.

star2.gif  இதை எழுதுகிற நாங்கள் AOG சபையில் பல வருடமாக அங்கத்தினர்களாக இருக்கிறோம். என் மகன் இரட்சிக்கப்பட்டது இதே சபையில்தான். நாங்கள் AOG சபையை விட்டுவிலகுவதாக இல்லை. ஆனால், நீங்கள் ஜாமக்காரனில் சுட்டிக்காட்டிய AOGயின் தலைமையில் ஏற்பட்ட ஊழல், சர்வாதிகார போக்கு, அதிகார ஆணவம் எல்லாவற்றையும் நீங்கள் வெளிப்படுத்தியதால் எங்கள் சபை முதியவர்கள் மூலமாக பல விவரங்களை கேட்டு நாங்கள் அறியலானோம்.

star2.gif  நீங்கள் எழுதியதை எங்கள் சபை மூப்பர்களோடு பகிர்ந்துக்கொண்டோம். மதுரையில் உள்ள AOGஅங்கத்தினர்களுடனும், திருச்சியில் உள்ள AOG அங்கத்தினர் சிலரோடும் பகிர்ந்துக்கொண்டோம். நீங்கள் எழுதியதில் பல மிகையானதும், பிழையானதுமாகும். என்றாலும் எழுதிய விவரங்கள் உண்மை என்று அறிந்துக்கொண்டோம். எழுதிய உங்களுக்கு நன்றி. AOG சபையைப்பற்றி இப்படி இதுவரை யாரும் எழுதியதில்லை? (AOG அரசாங்க அங்கீகாரம் புதுபிக்கப்பட்டுவிட்டது என்று கேள்விப்பட்டோம்).



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

AOG விவகாரம்
நீங்கள் (ஜாமக்காரன்) திருந்தவேண்டும்

அடுத்த ஜாமக்காரன் வெளியீட்டில் நான் எழுதும் இந்த விவரம் வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் திருந்தவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் . . . . நீங்கள் பிரச்சனைகளை உருவாக்குகிறவர்களாக இராமல், பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்கிறவர்களாக இருப்பதே அவசியம். Do not be a problem maker; But be a problem solver.

star2.gif  உங்கள் ஜாமக்காரன் செய்திகளை படிப்பதால் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை. எவருக்கும் பக்திவிருத்தியும் ஏற்படுவதில்லை. மாறாக உங்கள் எழுத்துக்கள் சுவிசேஷ ஊழிய தடைகளுக்கும், பக்திக்கேடான மனசஞ்சலங்களுக்கும் வித்திடுவதாகவே இருந்தது.

நீங்கள் பிறர் கண்ணில் இருக்கிற துரும்புகளை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து, அவைகளை உலக்கு அறியச்செய்து, அதனால் தனக்கு உருப்படாத ஒரு வாசகர் கூட்டத்தை உலகெங்கிலும் நீங்கள் எழுப்பி, அப்படிப்பட்டவர்களின் காணிக்கைகளால் ஆண்டவரின் பரிசுத்தப் பெயரைக் களங்கப்படுத்துவதாகவே உங்கள் பத்திரிக்கை அமைந்திருக்கிறது. . . . . சகோதரருக்கு விரோதமாக எப்போதும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிற சாத்தானின் (டையபோலஸ்) ஏஜென்ட் போல நீங்கள் செயல்படுவதை எண்ணி துயரமடைகிறேன்.

star2.gif  அன்பான அக்கா (தங்களின் மனைவி) மற்றும் பிள்ளைகளின் நிலைமையை நினைத்து மனம் வெதும்புகிறேன். நீங்கள் உங்கள் பத்திரிக்கைமூலம் அவப்பெயரை உண்டாக்குவதுடன் அவர்களும் வெளியில் தலைக்காட்ட முடியாத அவல நிலையை உருவாக்குகிறீர்கள்.

. . . . . . . . . நீங்கள் இதுவரை விதைத்திருக்கிற விதைகள், உங்கள் பத்திரிக்கை செய்திகள், வார்த்தைகள், குற்றச்சாட்டுகள், அந்நியபாஷைக்குறித்த உங்களது அறிவற்ற விவாதங்கள் யாவும் முளைத்து பலன் கொடுத்தது உண்மைத்தான். உங்கள் பத்திரிக்கையைப்படித்து கெட்டுப்போனவர்களை குறித்து எனக்குத் தெரியும்.

star2.gif  2011 ஜுன் மாத இதழில் 1 முதல் 7 பக்கங்களில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபர்களின் கடந்துவந்த பாதைகள் . . . . AOG ஸ்தாபனத்தை உருவாக்க அவர்கள் பட்டபாடுகள், செய்த தியாகங்கள், அபாரம்.ஆனால் காலச் சுழற்சியில் அவர்கள் மாறிவிட்டார்கள்.

அது உண்மையாக இருந்தால் அதை சரிப்படுத்த நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாமே! அல்லது உதவி செய்திருக்கலாமே! குறிப்பிட்ட அந்த நபர்களை நேரில் அல்லது தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்திருக்கலாம் அல்லது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இதுதான் ஒரு நல்லவனின் செயல். 

குறிப்பு: AOG சபையினர் தங்கள் சபை பிரச்சனைகளைக்குறித்து இனி எனக்கு எழுதவேண்டாம். பிரச்சனைகளை நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக குறிப்பாக AOG சபையிலுள்ள என் வாசகர்களுக்காக நான் என் பங்கை நிறைவேற்றி விட்டேன், விவரங்கள் அறிந்துக்கொண்டீர்கள். கேள்வி கேட்கும் தைரியம் பலருக்கு வந்துவிட்டது. நான் எழுதிய விவரங்களுக்கு பாஸ்டர்.ராஜாமணி அல்லது பாஸ்டர்.மோகன் அவர்களோ மறுப்போ அல்லது தன்னிலை விளக்கமோ எனக்கு எழுதி அனுப்பினால் அதை மட்டும் ஜாமக்காரனில் வெளியிடுவேன்.


நம்பாதீர்கள் - பொய்

star2.gif  பரிசுத்த ஆவியானவரின் நிறைவும் அந்நியபாஷை அடையாளம் என்று கூறும் எந்த சபையையும் நம்பாதீர்கள். அந்நியபாஷை சபையின் அடிப்படை உபதேசங்களில் ஒன்று என்று கூறும் எந்த ஒரு பெந்தேகோஸ்தே சபையும் உண்மையானதல்ல. இந்த அந்நியபாஷையில்உண்மையில்லாதவர்கள் தங்கள் அந்தரங்க விஷயத்திலும் நிச்சயமாகவே அவர்கள் உண்மையில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் அந்நியபாஷை பொய்யானது என்பதை சந்தேகமில்லாமல் நம்பலாம். இந்த விஷயத்தில் இவர்கள் யாரும் உண்மையில்லாததால் மற்றொல்லா விஷயத்திலும் உண்மையை இவர்களின் எதிர்ப்பார்க்கமுடியாது. 

பரிசுத்த ஆவியின் நிறைவை ஆவியானவரிடம் கேட்கும்படி எந்த பாஸ்டர் போதிக்கிறாரோ! அவருக்கு வேதம் தெரியவில்லை என்று அர்த்தமாகும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவை இயேசு கிறிஸ்துவிடம்தான் கேட்கவேண்டும். இப்படித்தான் வேதம் போதிக்கிறது! பிழையாக போதிக்கும் பாஸ்டர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேள்வி:  CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன?

பதில்:  நீங்கள் இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்ததைப்போல் பேசுகிறீர்கள்? இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் பிஷப்மார்கள் நீக்கம், CBI விசாரணை, நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு ஆகிய எதைப்பற்றியும் உங்களுக்கு தெரியாதா? ஐயா, நீங்கள் கூறிய எல்லா முயற்சிகளும் செய்தாயிற்று. இப்போது முயற்சியின் அல்ல, போராட்டத்தின் முடிவைத்தான் எல்லாரும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

தவறுக்கு சட்டத்தில் தண்டனை உண்டு - ஆனால் தீர்ப்பு எப்படியிருந்தாலும் சட்டத்திலுள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள், பிடிப்பட்டவர்கள் யாவரும் அந்த சட்டத்தின் ஓட்டைவழியாக தப்பிவர இப்போது வசதியும் இருக்கிறது. அதனால்தான் சுனாமி பணம்கொள்ளையடித்தவர்கள் கையும் களவுமாக பிடிப்பட்டும் தீர்ப்பு கூறமுடியாமல் நீண்டு கொண்டுபோகிறது.

star2.gif  மேலும் 44 வருட என் ஊழியத்தில் கடந்த 30 வருடங்களாகத்தான் பல பிஷப்மார்கள் பண ஊழலிலும், சாட்சி கெட்டும் சர்வாதிகாரமாகவும், நடப்பதை காண்கிறேன். அதற்குமுன் அப்படியில்லை. இப்போதும் பல திருமண்டலத்தில் பல விதத்தில் நான் விசாரித்து விவரம் சேகரித்தபோது, பணக்கொள்ளை, நில ஊழல், டொனேஷன், அட்மிஷன் இப்படிப்பட்ட காரியங்களில் பிஷப்மார்கள்பெயர்கள்தான் முன்னே வருகிறதே தவிர, பிஷப்மார்களை ஆட்டுவிக்கிற சபை பிரமானிகளும், கமிட்டியில் உள்ள சில முக்கிய புள்ளிகளுமாக பெரிய கொள்ளைக்கூட்டமே பிஷப்மார்களுக்கு பின்னால் இயங்குகிறது என்பதை அறிந்தேன். போதாததற்கு அரசியல்வாதிகளும், மந்திரிமார்களும் டையோசிஸ் விஷயங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டனர்.

star2.gif  உதாரணமாக, கேரளாவில் பிஷப் அவர்கள் 12 கோடி லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வந்தது. ஆனால் உண்மையாய் பிஷப் பெயரில் அந்த குறிப்பிட்ட டையோசிஸ்ஸில் உள்ள கமிட்டி பிரமுகர்கள்தான் அந்த 12 கோடியை வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அறிந்தேன்.

கோயமுத்தூர் CSI டையோசிஸ், கர்நாடகா CSI டையோசிஸ் மற்றும் ஆந்திராவில் சில CSIடையோசிஸ்ஸில் மட்டுமே அங்கு நடந்த எல்லா பண ஊழல்களுக்கும் பெரும்பாலும் பிஷப்மார்களேகாரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் மற்ற டையோசிஸ்ஸிலும் குறிப்பாக கேரளா CSIடையோசிஸ்களில் நடந்த பெரும்பாலான ஊழல்களுக்கு பிஷப்மார்கள் காரணமல்ல, அவர்களை ஆட்டிவைத்த கமிட்டியில் உள்ள பெரும்புள்ளிகள்தான் காரணம் என்று அறியப்பட்டது. என்றாலும் தவறுகள் யார் செய்தாலும், பொறுப்பில் உள்ள பிஷப்மார் அப்படிப்பட்ட பணக்கொள்ளைக்கு ஒத்துப்போகக்கூடாது. தவறு செய்தவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது.

star2.gif  பிரதமர் கைசுத்தம் என்ற பெயர் இருந்தாலும், தனக்கு கீழ் உள்ள மந்திரிமார்கள் ஊழல் செய்யும்போது அதை கண்டிக்காததும், அதை தடுக்காததும் பெரும் குற்றமாகும். அவர் தலைமை பதவிக்கே லாயக்கற்றவர் என்றுதான் கூறவேண்டும். இதன்மூலம் முழு இந்தியாவுக்கே கெட்டபெயர் வந்துவிட்டதே. அதேபோல் பிஷப் பெயரில் நடத்தப்படும் எல்லா தவறுகளுக்கும் பிஷப்தான் முழு பொறுப்பேற்கவேண்டும். ஆகவே எல்லா CSI & LUTHERAN டையோசிஸ்களிலும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை கழுவி சுத்தப்படுத்தினால் மட்டுமே நம் CSI & LUTHERAN சபைகளும், சபை மக்களும் வசனத்திலும் சாட்சியுள்ள ஜீவியத்திலும் வளரமுடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேள்வி:  உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன?

பதில்:  AOG சபையின் மீது எனக்கு வெறுப்பு என்று இப்போது எழுதிக்கொண்டு வருகிற விஷயத்தை வைத்து நீங்கள் தீர்மானித்துவிட்டீர்கள். அடிப்படை வேத படிப்பு இல்லாத ஆயிரக்கணக்கான சில்லறை பெந்தேகோஸ்தே சபைகளைவிட (Independent Pentecostal churches) ஓரளவு கட்டுப்பாடுள்ள ஸ்தாபன சபையும் உலகம் முழுவதிலும் குறுகிய காலத்தில் மிக அதிக எண்ணிக்கையோடு வளர்ந்துவரும் நல்ல சபையாக நான் கருதும் AOG சபையை நான் மதிக்கிறேன். அதை நான் வெறுக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பே அதில் உள்ள பல பாஸ்டர்கள், AOG விசுவாசிகள் இவர்களுக்குள்ளே புகைந்து, கொதித்து கொண்டிருந்த சில முக்கிய விஷயங்களையும், AOG சபை தலைவர்களால் வெறுக்கப்பட்ட அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட சில சிறிய AOG சபைகளின் பாஸ்டர்கள் மனதில் உண்டான பலவிதமான ஆதங்கங்களையும், மூடிமறைக்கப்பட்ட முக்கிய விஷயங்களையும் பல AOG சபை பாஸ்டர்களும், விசுவாசிகளும் சில வருடங்களாக என்னை நிர்பந்தித்து எழுதசொல்லி அறிவித்த தகவல்களையும், அவர்களுடைய நன்மைக்காகவும் குறிப்பாக AOG சபையில் உள்ள என் வாசகர்கள்கேட்டுக்கொண்டதற்கிணங்க AOG சபையின் உள்விவகாரங்களை வெளியிட்டேன். அது அந்த நல்ல சபைக்கு நன்மையாகவும் அவர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்கவும் நிச்சயம் உதவி செய்யும். மற்றபடி AOG சபைகள் மீதோ மற்ற எந்த பெந்தேகோஸ்தே சபைகள் மீதோ எனக்கு வெறுப்பு ஏதும் இல்லை.

ஆனால், பொதுவாக அனைத்து பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் சபையில் உள்ள விசுவாசிகள் யாவருக்குள்ளும் ஒரு பெரிய குற்ற உணர்ச்சி உண்டு. அது அவர்கள் பேசும் அந்நியபாஷை ஆகும். மாய்மாலமாக இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்நியபாஷையை இவர்கள் சபையின் அஸ்திபார உபதேசமாக வைத்துக்கொண்டிருக்கும் வரை சபைக்குள் போலி விசுவாசிகளின் எண்ணிக்கை,போலியான பாஸ்டர்களின் எண்ணிக்கை நீண்டுபோகுமே ஒழிய சபை பரிசுத்தத்திலும், வசனத்திலும் வளரவே வளராது.

போலி இருக்கும் இடத்தில் உண்மை எப்படியிருக்கும்? உண்மையில்லாவிட்டால் பரிசுத்தமும்இருக்காதே! பிசாசு எப்படியாய் வஞ்சிக்கிறான்! இந்த போலியான பாஷையால்தான் பாஸ்டர்மார்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் நம்ப முடியவில்லை. பாம்பின் கால் பாம்பறியும்என்பதைப்போல், ஒரு பாஸ்டர் பேசும் பாஷையை - மற்றொரு பாஸ்டருக்கு அது போலி என்பது மிக நன்றாக தெரியும். இப்படி ஒருவரை ஒருவர் நம்பாமல் இந்த பெரிய சந்தேகத்தை மனதிலே வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை காலம் சபையை நடத்துவார்களோ தெரியவில்லை. ஆத்துமாவுக்கு பிரயோஜனமில்லாத அந்நியபாஷையை இன்னும் எவ்வளவு காலம் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_11_2011_006_039american-college.jpg?w=511&h=651



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_11_2011_007_003.jpg american college

dinamalar+22_11_2011.jpg

24112011538.jpg

 

24112011537.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

VOICE RAISED AGAINST BISHOP ASIR - I

 
This 6 page book let forwarded to me to be published in our blog-site lists the corrupt practices of Bishop Asir and challenges him to declare his family's  assets before and after he assumed the offices as Bishop of Madurai-Ramnad Diocese. They have sent the signed copies of this notice to various government officials.
Hope the government takes suitable action soon!

[CLICK ON THE IMAGE TO ENLARGE]
noticeII.jpg

noticeII-2.jpg

noticeII-3.jpg

noticeII-4.jpg

noticeII-5.jpg

noticeII-6.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

VOICE RAISED AGAINST BISHOP ASIR - II

 
This 3 page book-let forwarded to me by the CSI Christian community to be published in our blog-site questions the illegal moves of Bishop Asir to 'take-over' The American College and to install his 'son-in-law' Davamani Christober as the Principal of the college. They have come down heavily on Bishop Asir's misuse of CSI machinery for his self centered & personal benefits.


[CLICK ON THE IMAGE TO ENLARGE]


aasir+1.jpg
aasir2.jpg

aasir+3.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

A CALL TO THE CHRISTIAN COMMUNITY

 
Herewith I am publishing a "notice" circulated among the CSI members of the Madurai-Ramnad Diocese. This was forwarded to me by a member who also requested me to publish it in this blog site. He wanted me to know that there are 'sensitive' Christians and they are trying their best to put and end to Bishop Asir's evil plans.

church+politics+notice+01+-+9-11-2011.jpg

church+politics+notice+02+-+9-11-2011.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bishop's son-in-law appointed principal
It's contempt of court, say faculty

DECCAN CHRONICLE | DATED 01-11-2011 | PAGE 06

 
The over 125-year-old American College in the city is mired in a fresh controversy.
Even as a slew of cases over the legitimacy of the institution’s governing council which appoints the principal is pending before the court, the administration controlled by CSI Bishop Christopher Asir has (illegally)  appointed his son-in-law Davamani Christober as the new principal and secretary.
On Friday, Mr Christober, the bursar and Maths professor, replaced ‘acting’ principal R. Mohan, also belonging to the Bishop’s camp. Mr Mohan continued to be in office since last December, even as the college had another principal incharge Dr P.R.Anbudurai to whom the then principal Chinnaraj T. Joseph handed over charges on his superannuation.
 While the Bishop’s supporters claimed that the selection of Christober was done in accordance with the college norms and was approved by the governing council (the constitution of their Governing Council is NOT valid & cases are pending in District Court regarding its validity) , the staffs opposing the Bishop for his “illegal takeover of the college” are up against arms over his appointment.
Questioning his appointment, Dr Anbudurai asked, “When the legitimacy of the governing council is itself sub-judice with cases pending before the district and high courts, the council convened by the Bishop is illegal and hence null and void.” Only the principal-cumsecretary is vested with the power to convene the council and the Bishop has no locus-standi in doing so, he says pointing out that Mr Mohan was not allowed to act as the secretary either by the government or the high court.
The same was made very clear in the judgment pronounced by the Madras high court on August 25, 2011, with regard to disbursal of salary. The government too in its representation before the court had categorically stated that Mr Mohan is not the secretary and no such approval had been given. In this scenario, neither Mr Mohan nor the Bishop have the authority to convene the meeting,” Dr Anbudurai said.
Coming down heavily on the Bishop, the protesting faculty members say that his act of appointing his son-in-law as the principal shows his scant regard not only for the college constitution but also for the government and the court. “The appointment, which amounts to contempt of court, has made it clear that the Bishop is keen on usurping the college for its property and other pecuniary interests,” Dr Anbudurai claimed.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

aog.pngஅசம்பளீஸ் ஆஃப் காட் (AOG) 
சபையின் தேர்தல்
 

SIAG (South Indian Assemblies of God)யின் அரசாங்க அங்கீகார பிரச்சனை பூதாகாரமாக வெடித்து ஒரு வழியாக நீரு பூத்த நெருப்பாக மாறிய நிலையில் (SIAGயின்) தென் இந்திய அசம்பளீஸ் ஆப் காட் தங்கள் சபைகளின் தலைமை பொறுப்பு தலைவர்களை தெரிந்தெடுக்கும் கூட்டம் 2011 செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னை சிறுமலை (Little Mount) AOG சபை கட்டிடத்தில் கூடியது.

பாஸ்டர்.ஆபிரகாம் அவர்கள் ஜெனரல் சூப்பிரண்டன்ட்டாக தெரிந்தெடுக்கப்பட்டார்.
பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ் அவர்கள் உதவி சூப்பிரண்டன்ட்டாகவும்,
பாஸ்டர்.பாபு ஜார்ஜ் அவர்கள் ஜெனரல் செக்ரட்ரியாகவும் (பொது காரியதரிசி),
பாஸ்டர்.அப்துல் கரீம் அவர்கள் பொருளாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்.

aog01.jpgaog02.jpgaog03.jpgaog04.jpg
Pr.ஆபிரகாம்Pr.ஸ்டீவ் ஜெயராஜ்Pr.பாபு ஜார்ஜ்Pr.அப்துல் கரீம்

star2.gif  இதில் பாஸ்டர்.பாபு ஜார்ஜ் (கேரளா) அவர்கள்தான் ஓணம், மகாவீர் ஜெயந்தி இவைகளுக்கு இந்து மதத்தினருக்காக வாழ்த்து அட்டை தயாரித்து அனுப்பி அவரவர்களின் தெய்வம் அவர்களை ஆசீர்வதிப்பார்களாக என்ற அர்த்தத்தில் ஆசீர்வாத வாழ்த்து அட்டைகளை அனுப்பியதை 2011 சூன் மாத ஜாமக்காரனில் புகைப்பட ஆதாரத்தோடு வாசகர்கள் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட நவீன உபதேசம் கொண்ட அந்நியபாஷை பேசும் பாஸ்டர்.பாபு ஜார்ஜ் (கேரளா) அவர்கள்தான் இன்று தென்னிந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளின் பொது காரியதரிசியாவார்.

இப்படிப்பட்டவர்களை AOG சபை தெரிந்தெடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மனைவியை விவாகரத்து செய்த பெங்களுர் பாஸ்டர். பால் தங்கையா அவர்களுக்கு அவரின் இந்த சாட்சியில்லா செயலுக்கு பரிசாக தென்னிந்திய அசம்பளீஸ் ஆப் காட் சபைகளின் பெரும் பதவியை அவருக்கு கொடுத்து கவுரவித்த சபையினர்தான் AOG சபைகளின் பொறுப்பாளர்கள் ஆவர். ஆகவே இவர்களுக்கு ஆவிக்குரிய தகுதி என்பது ஊழிய தலைமைக்கு அவசியமில்லை என்றாகிவிட்டது. என்றாலும் SIAGயின் மிக முக்கிய பொறுப்புள்ள பதவியான பொது காரியதரிசி பதவியை இவருக்கு AG சபைகள் அளித்தது. பெரும்பாலான கேரளா, தமிழ்நாட்டு AG சபை விசுவாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

சுனாமி பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளயடித்த CSI சினாட் பிஷப்மார், மாடரேட்டர், செயலர் ஆகியவர்களைவிட மிகத்தாழ்ந்த நிலையை நோக்கி AG சபைகள் போய் கொண்டிருக்கிறது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? நல்ல ஆவிக்குரிய சபையான AG சபைக்கு தகுதியிழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் இப்படிப்பட்ட பதவி உயர்வுகள் ஆரோக்கியமனதல்ல. சந்தோஷத்துடன் இதை இங்கு எழுதவில்லை. மனவேதனையுடன் இதை குறிப்பிடுகிறேன்.

star2.gif  சரி விஷயத்துக்கு வருவோம். SIAGயின் தலைவர்கள் தெரிந்தெடுப்பு சடங்குகள் முடிந்ததும் இக்கூட்டத்தில் இரண்டுபேர் விசேஷ பிரசங்கம் செய்தனர். 1). முன்னாள் AOGயின் சூப்பிரண்டென்டண்ட்A(Bishop) பாஸ்டர்.ராஜாமணி (மதுரை), 2). பாஸ்டர்.டி.மோகன் AOG (சென்னை)ஆகியவர்கள் பிரசங்கித்தனர்.

SIAG சபைகள் இத்தனை காலம் தமிழ் பாஸ்டர்களின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்தது. அநேக ஆண்டுகளுக்குப்பிறகு SI-AOG அரசாங்க பதிவு பற்றிய குளறுப்படி பிரச்சனைகளும், தமிழ் AOGசபைகளின் பாஸ்டர்கள் பலர் தலைமை பொறுப்பாளர்களால் சிறுமைப்படுத்தப்பட்டதின் விளைவால் அவர்களுக்குள் ஏற்பட்ட மனவேதனைதான் இந்த தேர்தலில் பிரதான தலைமையை மாற்றி அமைத்து புது இளைய தலைமுறையினரை தலைமை ஸ்தானத்தில் கொண்டு வரவைத்தது என்கிறார்கள்.

star2.gif  இந்த தேர்தலில் ஆரம்ப கட்டத்தில் பாஸ்டர்.V.T.ஆபிரகாம் அவர்களுக்குத்தான் தலைவராகும் சாதகமான அலை உருவானது.

star2.gif  கேரளத்தில் நடப்பதைப்போல் இரண்டு பெரும்தலைவர்களை சார்ந்து இரண்டுவித குரூப்புகளின் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையின்படி பாஸ்டர்.P.S.பிலிப் அவர்களை தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று முந்தின ராத்திரிவரை பேசி முடிவு செய்திருந்தார்கள். அன்று இரவு என்ன பேச்சு நடந்ததோ! யார் தலையிட்டார்களோ தெரியவில்லை! மறுநாள் காலையில் திடீரென்று பாஸ்டர்.P.S.பிலிப் அவர்கள் தானாகவே வாபஸ் வாங்கிக்கொண்டார். முன்னாள் தலைவரானபாஸ்டர்.ராஜாமணி அவர்கள் தொடக்கத்திலிருந்தே தான் எந்த பதவியிலும் நிற்கபோவதில்லை என அறிவித்துவிட்டார்.

மனுதாக்கல் செய்ததில் பாஸ்டர்.வி.டி.ஆபிரகாம் அவர்கள் முதலாவதாகவும், பாஸ்டர். டி.ஜே.சாமுவேல் அவர்கள் இரண்டாவதாகவும் மனுதாக்கல் செய்திருந்தார்கள். இரண்டவதாக டி.ஜே.சாமுவேல் அவர்கள் மனு சமர்பித்ததால் தானாகவே அவர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். தெரிந்தெடுப்பில் ஜெயிக்கவேண்டுமானால் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும். அதனால்தான் இரண்டாம் ரவுண்டில் பாஸ்டர்.வி.டி.ஆபிரகாம் ஜெயிக்கமுடிந்தது. இவர்களுக்கு எதிராக நின்றவர்கள் திருச்சி பாஸ்டர்.அருள் அவர்களும், பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ் அவர்களும் ஆவர். கமிட்டி அங்கத்தினராக ஜி.பீட்டர் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்.

star2.gif  பாஸ்டர்.ஸ்டீவ் ஜெயராஜ், பாஸ்டர்.அப்துல் கரீம் ஆகியவர்களை இம்முறை தெரிந்தெடுத்தது ஒரு ஆறுதலை தருகிறது. SIAGக்கு இளைய தலைமுறையினர் புதிய தலைவர்களாக அமையட்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் இவர்களை ஜெயிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

star2.gif  தென்-இந்தியாவில் மொத்தம் 5521 அசம்பளீஸ் ஆப் காட் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சபைகள் உண்டு. இந்த சபைகளில் அங்கீகரிக்கப்பட்ட சபை அங்கத்தினர்கள் மொத்தம் 6,51,777 பேர்கள் உண்டு என்று ஒரு செய்தி கூறுகிறது. அதோடு 6 கோடிகள் காணிக்கை பண வரவு-செலவுகள் உண்டு என்றும் அறியப்படுகிறது.

star2.gif  SIAG சபைகளுக்கு புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட நான்கு முக்கிய தலைவர்களுக்கும், AGசபைகளில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் சார்பில் எமது வாழ்த்துக்கள்.

மேலே எழுதப்பட்ட விஷயங்கள் யாவும் நாம் கேள்விப்பட்ட AOG செய்திகளாகும்.

star2.gif  புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் செய்யவேண்டிய முக்கிய பணிகளாவன: கடந்தகால AGசபை தலைவர்களால் ஒதுக்கப்பட்ட, அலட்சியப்படுத்தப்பட்ட, நீக்கிவைக்கப்பட்ட பாஸ்டர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவது நல்லது. காரணம் அவர்களும், சில AOG சபை விசுவாசிகளும் இருதயத்தில் காயப்பட்டவர்கள் ஆவர். அவர்களின் காயங்களை, மன உளைச்சல்களை மாற்ற முயற்சிப்பது நல்லது. கடந்தகால அவர்களின் செயல்கள், வெளியிட்ட துண்டுபிரதிகள் ஆகிய குற்றசாட்டுகளையெல்லாம் பெரிதுப்படுத்தாமல், அவர்களை மன்னித்து அரவணைத்து சென்றால் AGசபைகள் இன்னும் நல்லமுறையில் வளரவும், கடந்தகால AG சபையில் படிந்த கறைகள் துடைக்கப்பட்டு அதன்மூலம் ஆண்டவரின் நாமம் மகிமைப்படவும் உதவும்.


கடைசியாக AOG சபைகளுக்கு ஜாமக்காரனின் ஆலோசனை:

AOG சபையின் அங்கத்தினானாக சேரவேண்டுமானால் அல்லது வேதாகம கல்லூரியில் பயில வேண்டுமானால் அதற்கு அடிப்படை உபதேசங்களில் ஒன்றான அந்நியபாஷை அடையாளத்தை AOGசபையின் சட்டமாக வைத்துள்ளார்கள். இப்படி பாஷையை சட்டங்களில் ஒன்றாக வைக்காமல் இருந்தால் சபை மக்களுக்கும், பாஸ்டர்மார்களுக்கும் உள்ளத்தில் அல்லது வெளியில் காட்டாத குற்ற உணர்வு அவர்களுக்குள் இல்லாமல் இருக்க உதவும். அதன்மூலம் மாயமால ஆவிக்குரிய ஜீவியத்தை களையமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான ஆலோசனையாகும். இப்படி எழுதுவதால் நான்பரிசுத்த ஆவியானவருக்கு எதிரியல்ல!

வேதம் நமக்கு போதிப்பதைப்போல் அந்நியபாஷையை வரமாக அங்கீகரித்தால் சபைக்கு நல்லது.அந்நியபாஷையை பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அடையாளமாக உபதேசித்தால் நிச்சயமாகபிசாசு ஒளியின் தூதன் வேஷம் தரித்து சபைக்குள்ளும், பாஸ்டர்மார்களுக்கும் நீக்கமற நிறைந்து நிற்பான். போலி விசுவாசிகள், போலி பாஸ்டர்கள் AOG சபைகளில் பெருகிவிடுவார்கள். ஜாக்கிரதை!

http://jamakaran.com/tam/2011/december/aog.htm



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

marthoma.pngமார்தோமா சபை பிஷப்
பாவ செயலில் பிடிபட்டார்
 

"பெண்ணோடு பாலுறவு பண்ணுகிறதுபோல, ஆணோடு பாலுறவு பண்ண வேண்டாம். அது அருவருப்பானது உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே, நான் கர்த்தர்". லேவி 18:21,22.

maar1a.jpg
Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos

மார்தோமா சபை பிஷப்மார்களில் ஒருவரான Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos அவர்கள் ஹோமோ செக்ஸில் (ஆணுடன்-ஆண்) ஈடுபடும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார். ஏராளமான சிறுவர், பெரிய ஆள் இப்படி பலருடன் பாவத்தொடர்பு கொள்வது ஆரம்பம் முதலே குருவானவராக சபையில் ஊழியம் செய்தபோதே இந்த பழக்கம் உண்டு என்று பலர் கூறுகிறார்கள். அதை பிஷப் பதவி வகித்த பின்னும் அவரால் விடமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

மார்தோமா சபையை சார்ந்த அலுவலகத்தில் பணியாற்றும்Mr.Samkutty, வயது 38, கேரளாவிலுள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள Ranny என்ற ஊரைச் சேர்ந்தவர். மூணாறு என்ற மலைநகரிலுள்ள மார்தோமா Retreat Centreல் மேனேஜராக பணியாற்றியவர். இவர் இந்த பிஷப் பலமுறை கோட்டயத்திலுள்ள பிஷப்.Euyakim அவர்கள் தன் வீட்டிலும், ஆரன்முலா என்ற இடத்திலுள்ள Retreat Centre-லும் தன்னை பலமுறை அவரோடு ஆண் புணர்ச்சி பாவம் செய்ய தன்னை பிஷப் அவர்கள் உபயோகித்தார் என்றும் கூறியுள்ளார். தன் மேல்அதிகாரியான இந்த பிஷப்பின் டார்ச்சர் தாங்கமுடியாமல் இவரைப்பற்றி தலைமை பிஷப்பிடம் பலமுறை புகார் செய்தேன் என்றும் இவர் கூறியுள்ளார். இந்த பிஷப் தன்னை மட்டுமல்லாமல் வேறு பலரையும் தினசரி தன் பாவத்துக்காக அழைத்து உபயோகித்துக்கொண்டதை பலர் அறிந்துள்ளனர். அவர் பிஷப் பதவி வகிப்பதால் அவர்மீது மார்தோமா சபைகளின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இவர் கூறியதாக அறியப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பிஷப் அவர்களின் பாவகாரியத்துக்காக இட்ட கட்டளைக்கு தான் சம்மதிக்காததால் உண்டான கோபத்தினால் பிஷப் அவர்கள் என்னை வேலையைவிட்டும் நீக்கினார் என்றும் கூறுகிறார். 2009ம் வருடம்முதல் என்னை பாவக்காரியத்துக்கு உபயோகித்ததைக்குறித்து தலைமை பிஷப்புக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்காததை அறிந்து, வேறு பல ஆண்கள் இந்த பாவத்தில் இவர் மூலமாக விழுந்துப்போவதை உணர்ந்துதான் நான் போலீஸில் புகார் செய்தேன் என்று கூறுகிறார். ஆனால் போலீஸ்; என் புகாரை எடுக்கதயங்கினார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் நான் நீதிமன்றம் சென்று முறையிட்டேன். மேலும் பலநபர்கள் போலீஸ்சில் இதேபோன்ற புகார் பிஷப்மீது கூறியதால் இப்போதுகேரளா நீதிமன்றமே தலையிட்டு விசாரணைநடத்தி அறிக்கை சமர்பிக்க போலீஸுக்கு கட்டளையிட்டது. இப்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களின், சாட்சிகள் ஏராளமாக இருப்பதால் விசாரணை முடிய நீண்ட நாட்களானது. ஏறக்குறைய விசாரணை இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. பிஷப்மேல் குற்றம் Cr Pc 377 (Engaging in Unnatural Sex) என்ற தலைப்பின்கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பிஷப் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை நிச்சயம். இந்த விஷயத்தில் பிஷப்மேல் குற்றம் சுமத்திய நபரான Mr.Samkutty பலமுறை இந்த பாவத்துக்கு இவரே உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதும் விளங்குகிறது. தன்னை வேலையைவிட்டு நீக்கிய பிறகுதான் இந்த பாவ குற்றச்சாட்டை பிஷப்மேல் இவர் அறிவித்திருக்கிறார். இப்போது இவர் செய்த பாவத்தை இவர் நியாயப்படுத்த முயலுகிறார் என்பது விளங்குகிறது. ஆகவே இவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே! இப்போது பிஷப்Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos அவர்களை நீண்டநாள் விடுமுறையில் போகச்சொல்லி மார்தோமா சபை தலைமை கட்டளையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

maar2a.jpg
Most Rt.Rev.Chrysostum
 
maar3.jpg
Rt.Rev.Dr.Irenaeus

மார்தோமா தலைமை தன்னை இந்த வழக்கிலிருந்து காப்பாற்றாமல் போனாலோ அல்லது தன்னை தண்டித்தாலோ மார்தோமா தலைமை பிஷப் Most Rt.Rev.Philipose Mar Chrysostom, Rt.Rev.Dr.Joseph Mar Irenaeus ஆகியவர்கள் கடந்த காலங்களில் செய்த பாவங்களையும், அந்த பாவங்களில் சம்பந்தப்பட்டவர்களையும் பகிரங்கப்படுத்துவேன் என்று பயமுறுத்துவதாக மார்தோமா சபை குருவானவர்கள் பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே Rt.Rev.Dr.ஐரேனியஸ்பிஷப் அவர்கள்மேல் சிறு பெண்பிள்ளைகளுடனும், குருமார்களின் மனைவியுடனும் பல இடங்களில் இவர் நடத்திய பாவ சம்பவங்களைக்குறித்து மார்தோமா சபை மக்கள் மூலமாக கேள்விப்பட்டதையும், மார்தோமா சபை முக்கிய தலைவர்கள் சிலரிடம் பிஷப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் புகார் அறிவித்ததையும்,அதைக் குறித்த விவரங்களையும் நான் ஜாமக்காரனில் வெளியிட்டிருந்தேன். அதன் காரணமாக மார்தோமா சபைகளில் நான் பிரசங்கிக்கக்கூடாது என்று தலைமை அறிவித்து, என்மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க ஏற்பாடுகளை செய்தார்கள். அப்படி என்னை கோர்ட்டுக்கு அவர்கள் அழைத்தால் எனக்காக வக்கீல் யாரையும் நியமிக்காமல் நானே சாட்சிகளோடு சென்று வழக்கை சந்திப்பேன் என்று நான் அறிவித்தேன். மார்தோமா சபையில் பல விசுவாசிகள் குறிப்பாக(Gulf) அரேபியாவில் வேலை செய்யும் மார்தோமா சபை குடும்பங்கள், மார்தோமா சபை குருமார்களின் மனைவிமார்கள் எனக்கு உதவியாக சாட்சி சொல்ல தயார் என்று எனக்கு அறிவித்தார்கள். குறிப்பாக டிசம்பர்மாதங்களில் தங்களை அழைத்தால் சாட்சி சொல்ல இந்தியா வருவதாக தொலைப்பேசியில் என்னுடன் பேசி என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு நன்றி. மார்தோமா சபைகளில் டாக்டர்களின் ஐக்கியத்திலுள்ள சிலர் என் சார்பில் மார்தோமா சபை தலைமையிடம் வாதாடினார்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் என்மேல் தொடுக்க இருந்த மானநஷ்ட வழக்கு கைவிடப்பட்டது என்பதையும் அறிந்தேன்.

star2.gif  மார்தோமா சபையிலுள்ள வாலிபர் பலர் சேர்ந்து பாவம் செய்த அந்த குறிப்பிட்ட பிஷப் பெயரில் அவரைப்பற்றி ஒரு துண்டுப்பிரதி அச்சடித்து கேரளாவில் கோழஞ்சேரி தலைமை சபையில் வெளியிட்டனர். அந்த துண்டுப்பிரதியின் தலைப்பு நரி பரலோகம் சென்றாலும் கோழி பிடிப்பதை நிறுத்துமா? என்பதாகும். இந்த துண்டுப்பிரதி மார்தோமா வாலிபர்களே தங்கள் பிஷப்புக்கு எதிராக வெளியிட்டதால் மார்தோமா சபைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. அந்த துண்டுபிரதியை அப்படியே ஜாமக்காரனில் நானும் வெளியிட்டேன்.

பாவத்தில் பிடிக்கப்படும் எந்த பிஷப்மார்களுக்கும் தண்டனை கொடுத்ததாக மார்தோமா சபை சரித்திரத்தில் இல்லை. ஆகவே மார்தோமா சபையில், சில குருமார்களும், மார்தோமா சபையில் சில டாக்டர்களும், சபையிலுள்ள சில முக்கிய தலைவர்களும் என்னிடம் பேசி இந்த விவகாரத்தை ஜாமக்காரனில் மேலும் எழுதாமல் தயவுசெய்து இத்துடன் நிறுத்தி உதவுங்கள். பிஷப்மாரை சபை மண்டலம் (சினாட்) இதுவரை தண்டித்ததில்லை என்று கேட்டுக்கொண்டார்கள். மார்தோமா சபையிலுள்ள என் வாசகர்களுக்காக, வாசகர்கள் தெரிவித்த செய்தியை அன்று ஜாமக்காரனில் வெளியிட்டேன். அறிவித்தேன் என் வேலை முடிந்தது. அதன்பின் இப்போது சோதோம் கொமாராவின் பாவத்தை செய்ததாக கூறப்படும் பிஷப் அவர்கள் சபையில் பலரை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற புதிய பாவசெய்தியும், புதிய பிரச்சனையும் வேதனையுள்ள செய்தியாக கடந்த சில வருடங்களாகவே பலர் எனக்கு அறிவித்தார்கள். மார்தோமாசபை தலைமை இந்த பிஷப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை! சிறுவர்கள், ஆண்கள் பிஷப் அவர்களால் மேலும் கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இப்போது இதை அறிவித்தேன். பிஷப் அவர்களின் இந்த பாவப்பிரச்சனையை நீதிமன்றமேபொறுப்பெடுத்துக்கொண்டதால் இவைகளைக்குறித்து எனக்கு கிடைத்த தகவலை விவரித்து இப்போது நான் எழுதக்கூடாது! மேலும் சூர்யா டிவியில் கடந்த மாதம் பிஷப் அவர்களின் புகைப்படத்தோடு நான் மேலே எழுதிய பாவசெய்தியையும், பாவத்தையும் பலமுறை போட்டுக்காட்டினார்கள். இ-மெயில் மூலம் மார்தோமாசபை மக்களே பலருக்கு இந்த செய்தியை இப்போது அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நான் என் அபிப்ராயம் எதையும் கூற விரும்பவில்லை.

star2.gif  மார்தோமா பிஷப் Rt.Rev.Dr.Euyakim Mar Coorilosயைப்பற்றி எனக்கு எழுதியவர்களில் மார்தோமா சபையின் Trustyயும் ஒருவர் ஆவார். அவர் மிக மனப்பாரத்துடன் பிஷப் அவர்களின் பாவத்தைக்குறித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் அந்த குறிப்பிட்ட பிஷப் அவர்களை மார்தோமா சபை தெரிந்தெடுக்கும்போது அவர் குடும்பத்தைப்பற்றிய பின்னணியைப்பற்றி சபையின் தலைமை சரியாக விசாரிக்கவில்லை என்றும், பிஷப் அவர்களின் குடும்பத்தில் பலர் குடிகாரர்களாக இருந்தார்கள் என்றும், பிஷப் அவர்களின் தாயாரின் சகோதரன் ஒருவர் இந்துமத சன்யாசியாக மாறிவிட்டார் என்றும், அதனால்தான் பிஷப் வாழ்க்கையும் இப்படியானது என்ற அர்த்ததில் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இவருடைய இந்த குறிப்பிட்ட கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை.

star2.gif  ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் நிலை அல்லது ஜாதிபுத்தி என்று கூறும் குற்றச்சாட்டு விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஜாதியோ, குடும்பமோ ஒருவனுடைய சுபாவத்தை நிர்ணியிக்காது. ஒருவன் எந்த குடும்பத்தில் பிறந்தாலும், எந்த ஜாதியில் பிறந்தாலும் வேதவசனப்படிமனந்திரும்புதலின் அனுபவத்தில் வளர்ந்தால் இயேசுவின் இரத்தம் ஒருவனை கழுவினால் அவன் முற்றிலும் புது சிருஷ்டியாகிறான். அதுமட்டுமல்ல, பழையவை யாவும் ஒழிந்துப்போகிறது என்று நம் வேதம் போதிக்கிறது. அதில் பழைய பாவம் இயற்கை சுபாவம் ஆகிய எல்லாம் அடங்கும். ஆகவே மார்தோமா சபை பிஷப் தெரிந்தெடுப்பு பிரசித்திப்பெற்ற குடும்பம் (தரவாடு) உயர்ந்த குடும்பம் என்ற அடிப்படையில் இருப்பது சரியல்ல. இந்த பிஷப் Rt.Rev.Dr.Euyakim Mar Coorilos அவர்களும் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை பிஷப் அவர்களும், அடுத்த உதவி தலைமை பிஷப்பானமெத்ராப்போலித்தா என்று அழைக்கப்படுபவர்களும் மிக உயர்ந்த குடும்பத்திலிருந்துதான் (தரவாட்டில்)தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள்மேல் அந்த காலத்திலிருந்தே கூறப்பட்ட பல தவறான தொடர்புகளைக்குறித்தும், அடுத்த உதவி தலைமை பிஷப் அவர்களைக்குறித்து கண்டுபிடிக்கப்பட்ட பாவசெயல்கள் யாவும் எல்லா மனுஷருக்குள்ளும் உண்டாகும் காம விகாரமும், சரீர பாவமுமாகும். இந்த பெரிய பிஷப்மார்களும் மனுஷர்களே, மனுஷனில் காணப்படும் எல்லா உணர்ச்சிகளும் இவர்களுக்கும் உண்டு. பாவ உணர்ச்சிகள் உண்டாவதில் உயர்ந்த குடும்பம் - தாழ்ந்த குடும்பம் என்ற பாகுபாடு இதில் இல்லை.

ஆனால் இவர்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பின அனுபவத்தின் அடிப்படையில் ஊழியத்தில் இறங்கியிருந்தால் இந்த கெட்ட பெயர்கள் உண்டாக வழியில்லை! ஆகவே முதலில் மார்தோமாவில் பிஷப் அவர்களை தெரிந்தெடுப்பில் மிக உயர்ந்த குடும்பத்திலிருந்து தெரிந்தெடுக்கும் நிலைமாறவேண்டும்! இயேசுகிறிஸ்து தன் சீஷர்களாக தெரிந்தெடுத்தவர்கள் யாவரும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் அல்ல! அவர்கள் யாவரும் படிப்பறிவில்லாதவர்கள், வெறும் மீன் பிடிப்பவர்கள். இதை மார்தோமா மண்டலத்தில் (சினாட்) உள்ளவர்களும், குருமார்களும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

star2.gif  கடந்த சில மாதங்களுக்குமுன் 2011 மார்ச் மாதம் மார்தோமா சபைகளுக்கு மேலும் 3 பிஷப்புகளை தெரிந்தெடுக்க திருவல்லாவில் மண்டலம் (சினாட்) கூடியது. முதல் இரண்டு குருமார்கள் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் தெரிந்தெடுக்கப்பட்டனர். முதலில் ஆயரான Rev.K.V.Varki அவர்களின் பெயரை பிஷப் தெரிந்தெடுப்பில் அறிவித்து இவர்மேல் ஏதாவது குற்றசாட்டுகள் உண்டா? இவரை தெரிந்தெடுக்க கூடாதபடி எதிர்ப்பு கூறுபவர்கள் உண்டா? என்று சினாட்டில் பகிரங்க அறிவிப்பு உண்டானது. உடனே 13 பேர்கள் அந்த ஆயருக்கு எதிராக புகார் அறிவித்தார்கள். நியாயப்படி பிஷப்மார்களும், மண்டலத்தில் (சினாட்டில்) உள்ளவர்களும் அந்த குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் அல்லது அந்த ஆயரை பிஷப்பாக தெரிந்தெடுக்காமல் இருந்திருக்கவேண்டும். ஆனால் 13 பேர்கள் கூறிய எல்லா புகார்களையும் அலட்சியப்படுத்திவிட்டு அதை பொருட்ப்படுத்தாமல் அந்த குறிப்பிட்ட ஆயரே இப்போது புது பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டார் என்று சினாட்டில் பிஷப்மார் அறிவித்தது என்ன நியாயம்? ஜனநாயம் இங்கு செத்துப்போனது!

star2.gif  இந்த தேர்தல் நேரத்தில் CSI, லூத்தரன் சபைகளில் உண்டாவதைப்போல் நிச்சயம் அடிதடி உண்டாகும் என்று முதல்நாளே செய்திகள் வந்தது. தேர்தல் நடக்கும் காம்பவுண்டில் மார்தோமா சபைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் உலாவிக்கொண்டுருந்தார்கள் என்றும் அவர்கள் ரௌடிகள் என்றும் அதில் பலர் கலர் பனியனும், கைகளில் இரும்பு வளையமும் வைத்துக்கொண்டு திரிந்தார்கள் என்று பலர் அறிவித்தார்கள். தேர்தலுக்கு முதல்நாளே ஓட்டுபோடும் நபர்களுக்கு பயமுறுத்தல்களும், எச்சரிக்கை வார்த்தைகளும் போன் வழியாக கூறப்பட்டதாம். குறிப்பிட்ட நபர்களுக்கு ஓட்டுபோடாமல் எதிர்ப்புகள் தெரிவித்தால், நிச்சயம் அவர்கள் யாராகயிருந்தாலும் அடிவாங்காமல் வெளியே போகமுடியாது என்றும் அறிவிக்கப்பட்டதாம். உடனே Prof.மாமச்சன் என்பவர் பிஷப்.ஐரேனியஸ் மெத்ரோபோலித்தா அவர்களுடன் இவ்விவரம் அறிவித்து அடிதடி உண்டாகாமல் இருக்க எங்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டபோது நீங்கள் குண்டர்கள்மூலம் கிடைப்பதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பதில் கூறியபோது மெத்தப்படித்த அவர் மிகவும் வேதனைப்பட்டாராம். ஒரு பிஷப் இப்படி பதில் கூறுகிறாரே, அப்படியானால் குண்டர்களை ஏற்பாடு செய்தது யார்? என்பதை சபை விசுவாசிகள் எல்லாரும் புரிந்துக்கொண்டதாக ஒரு துண்டுப்பிரதியில் வெளியிட்டுள்ளார்கள். அந்தProf.மாமச்சனை அன்று அவர் பயந்ததைப்போல் ரௌடிகள் அவரை அடித்துப்போட்டார்கள். அவர் எதிர்ப்பார்த்தது நடந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

star2.gif  பிஷப்.ஐரேனியஸ் மெத்ரோபோலித்தா என்ற உதவி தலைமை பிஷப் அவர்களுக்கு குருமார்களின் சப்போர்ட் நிறைய உண்டு. இந்த சப்போர்ட் அந்த பிஷப்மேல் உள்ள அன்பினால் ஏற்பட்டதல்ல. அவர் ஒரு சர்வாதிகாரி என்ற பயத்தால் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

star2.gif  நல்ல குடும்பத்தில் பிறந்தவரும், மனந்திரும்பின அனுபவமுள்ளவரும், கன்வென்ஷன்பிரசங்கியும், குணமாக்கும் வரம் உள்ளவருமான Rev.Dr.ஆபிரகாம் லிங்கன் என்ற ஆயர் அவர்களை பிஷப் ஆகாமல் இருக்க மார்தோமா பிஷப்மாரும், சில ஆயரும் சேர்ந்து எப்படியெல்லாம் அந்த பதவி உயர்வை தடுத்தார்கள் என்று அநேக வருடங்களுக்குமுன் கதைகதையாக ஆயர்மார்கள் பலர் என்னிடம் கூறகேட்டேன். மார்தோமா சபையில் பெரும்பான்மை மக்கள் ஆபிரகாம் லிங்கன் என்ற ஆயரை பிஷப்பாக்க மிகவும் ஆசைப்பட்டார்கள். ஆன்மீகத்தில் ஆழமான அனுபவமுள்ளவர் பிஷப் ஆகக்கூடாது என்று பிஷப்மார்களே ஆயர்கள்மூலம் உள்ஏற்பாடுகள் இரகசியமாக செய்து அவரை பிஷப் ஆகாமல் தடுத்துப்போட்டார்கள் என்று கூறக்கேட்டேன். ஆவிக்குரியவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா?

star2.gif  மார்தோமா சபை பிஷப்மார்களின் நிலை மிக மோசமாகப்போவதை அறிந்த, மார்தோமா சபையின்மீது உண்மையான பாரம் கொண்ட மார்தோமா சபை மக்கள் பலர் உபவாசம் செய்து அழுது ஜெபிக்க ஒரு பெரிய ஜெபக்கூட்டத்தை மஞ்ஜாடியில் உள்ள திருமதி.பொன்னம்மா அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்து மார்தோமா சபை விசுவாசிகள் ஜெபித்தார்கள்.

star2.gif  பரிசுத்த குலைச்சலும், நவீன உபதேசங்களும், சோதோம் கொமாராவின் பாவங்களும் பல மார்தோமா பிஷப்மார்களிடம் பெருகிவிட்டது என்பதுதான் இப்படிப்பட்ட வேதனையான செய்திகள் மூலம் அறிகிறோம். நல்ல சபை, நல்ல சபைமக்கள், ஆனால் அந்த மார்தோமா சபையில் உள்ள பிஷப்மார்கள் பலர் சபை மக்களுக்கு அவமானம் உண்டாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பிஷப்மார்களின் செய்திகளை, பல வருடங்களுக்குமுன்பே ஜாமக்காரனில் மார்தோமா சபை வாசகர்களுக்காக அறிவித்த என்னை (Dr.புஷ்பராஜ்) மார்தோமா சபை பிஷப்மார்கள் தங்கள் சபைகளில் பிரசங்கிக்ககூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால் உலகமே பார்க்கும் வண்ணம் புகைப்படத்துடன் தினம்தினம் தொடர்ந்து மார்தோமா சபை பிஷப்மார்களின் பாவ செய்திகளை வெளியிட்ட சூர்யா TVயையோ, ஏசியா நெட் கண்ணாடி என்ற சேனலையோ தடை செய்ய இவர்களால் முடியாது. கர்த்தர் இவைகள் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.

star2.gif  மார்தோமா சபையில் பல பிஷப்மார்கள் இப்படிப்பட்ட பலவித பாவத்தின் பிடியில் அகப்பட்டிருக்கும்போது சபையில் பரிசுத்தம் எப்படி வரும்? வாலிபர்களுக்கும், வாலிபப் பெண்களுக்கும் இவர்கள் எப்படி வழி காட்டுவார்கள்? மார்தோமா சபை பிஷப்மார்களில் பலர் பெண்கள் சம்பந்தமான பாவத்தில் விழுகிறார்கள். ஆண்களோடு-ஆண்கள் சேரும் பாவத்தில் சிலர் விழுகிறார்கள்.

maramon.jpg

இப்படி இவர்கள் பாவத்தில் விழுந்துக்கிடந்தால் எத்தனை வருடங்கள் தொடர்ந்து இவர்கள் மாராமன் கன்வென்ஷன்கள் (MARAMON CONVENTION)நடத்தினாலும் சபை மக்கள், வாலிபப் பிள்ளைகள் எவருக்கும் உயிர் மீட்சியோ, பரிசுத்தமோ உண்டாகாது.

star2.gif  CSI சபைகளிலோ பணக்கொள்ளையில் சில பிஷப்மார் விழுந்துக்கொண்டிருக்கிறார்கள்.

star2.gif  மார்தோமா - பெந்தேகோஸ்தே, கத்தோலிக்க சபைகளில் பிஷப்மார்கள் பலர் பெண்கள்பாவத்தில் விழுந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

star2.gif  யாக்கோபையா - ஆர்த்டாக்ஸ் சபையில் பிஷப்மார்களின் சொத்து சண்டை, சொத்து உரிமை (அவகாசம்) சண்டை வீதிக்குவந்து உலகமக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சபைகளிலெல்லாம் அங்கத்தினர்களாக உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பலர் நாங்கள் இனி எங்குபோய் ஆராதிப்பது? எங்கள் பிள்ளைகளை பிஷப்மார் பக்கத்தில் அல்லதுபாஸ்டர்மார் பக்கத்தில் ஜெபத்துக்காக கொண்டுபோகவே பயமாக இருக்கிறது என்று சிலர் எழுதும்போது! அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எப்படி ஆறுதல் கூறுவது? எங்கு அவர்களை ஆராதிக்க அனுப்புவது? இதற்கு பதில் கூற முடியாமல் வேதனையுடன் இவ்விவரங்களை கர்த்தரின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

star2.gif  பத்திரிக்கையில் எழுதாத பல இரகசியங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. இதற்காக எல்லா சபை வாசகர்களும் பிஷப்மார்களின் இதுபோன்ற பாவ காரியங்கள் இனி தொடர்ந்து நடைபெறாதிருக்க நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஜெபியுங்கள். ஜெபிக்கிறேன். இதற்கெல்லாம் ஒருநாள் முடிவு உண்டு. எல்லா சபை விசுவாசிகளும் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும்.

star2.gif  மார்தோமா சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.

star2.gif  CSI சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.

star2.gif  கத்தோலிக்க சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.

star2.gif  பெந்தேகோஸ்தே சபை தலைவர்கள், பாஸ்டர்கள் இரட்சிக்கப்படவேண்டும்.

star2.gif  யாக்கோபையா - ஆர்த்டாக்ஸ் சபை பிஷப்மார்கள் இரட்சிக்கப்படவேண்டும்.

star2.gif  கத்தோலிக்க சபைகளில் உலக முழுவதும் ஹோமோ செக்ஸ்ஸிலும், பெண்கள் தொடர்பு பாவங்களிலும் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரம் குருமார்களை ஊழிய பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். சிலர் சிறை தண்டனையும் அனுபவகிக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. (தகவல்: சூர்யா டிவி). இதை கேட்க எவ்வளவு வேதனையாக இருக்கிறது.

star2.gif  இவர்களோடு இரட்சிக்கப்பட்டவர்கள், ஜெபவீரர்கள் என்றும் கூறும் மிஷனரி ஸ்தாபன தலைவர்களும் சென்னையிலும், வெல்லூரிலும், நாகர்கோவிலிலும், கேரளத்திலும், ஆந்திராவிலும் பாவத்தில் விழுந்துவிட்ட செய்திகள் மிஷனரி ஸ்தாபன தலைவர்களின் மகள், மகன் மூலமாக சாட்சி இழந்த செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நம் செவிகளில் வந்து விழும்போது பிசாசு எத்தனை வேகமாக செயல்படுகிறான் என்பதை உணர்ந்து விசுவாசிகள் உபவாச ஜெபத்தை தீவிரப்படுத்துங்கள். வேறு என்ன செய்ய? பிசாசை எதிர்க்கும் போர்கருவி நமக்குள்ளது அது ஒன்றேதான். எனவே விசுவாசிகள் எல்லாரும் ஜெபியுங்கள்.

star2.gif  . . . . நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று ஏசாயா 43:12ல் கர்த்தர் மிக எதிர்ப்பார்ப்போடு கூறியுள்ளார். நம் தேவனை நம் மூலமாக, நம் செய்கையின் மூலமாகத்தான் காட்டவேண்டும்என்று தேவன் விரும்புகிறார். புகைப்படமூலமாக அல்லது சிலுவை சின்னம் மூலமாக அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 The Article published in Keralasabdam, January 1st. 2012. Book 50 Issue 20
You can download the article in PDF format by clicking the bottom button.



csinkd1.jpgcsinkd2.jpg

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Express your Opinion

 

15-12-11mathrubhoomi.jpg
Mathrubhoomi 15-12-2011
We, the Church Scene Investigation Team, is placing before you certain questions to ponder over and answer to both your conscience and to the CSI NKD Society.


1. How come the decisions of the CSI North kerala Diocese Executive Committee were published through the Laity Pvt. Trust’s blog and SMS before the CSI North Kerala Bishop signing and granting approval?

2. What right does the Laity Fellowship/ Laity Pvt. Trust have to hinder, lock up and threaten the Hon. Bishop of CSI North Kerala Diocese?

3. IS the Laity Fellowship/ Laity Pvt. Trust a registered organization under our Diocese?

  1. Are Rev. B.N.Fenn (CSI NKD Treasurer), Rev. Mamman (CSI NKD Clergy Secretary), Mr. Jaypal Sakkai (CSI NKD Lay Secretary) etc., members of Laity Fellowship alias Laity Pvt. Trust? If so, what should be done with these ungrateful thugs?
  2. Or what should be done with these thugs who hinder, lock up and threaten  and betray their higher authority ?
  3. What should be done with these ungrateful louts when our Hon. Bishop returns?
Church Scene Investigation Team lays bare before you with 100% certainty, the fact that in the very near future the Laity Fellowship alias Laity Pvt. Trust, will make the CSI NKD Executive Committee, with its yeomanly fealty, to sell the CSI NKD Diocese to the Laity Fellowship alias Laity Pvt. Trust. Let us keep our eyes and ears open and act body and soul to protect our diocese.
--------------------------------csi.jpeg


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Madurai Collector to take action against Asir

 
The following is a gist of a news item by Mr. L.Srikrishna that appeared on page 4 of "THE HINDU" daily dated 29 Dec 2011.


On following complaints, the Madurai District Administration is determined to take action as per law against CSI Bishop Christopher Asir (along with few other bigwigs) for encroaching upon government land or selling the assigned land for monetary gain. The district administration has summoned Asir through a notice to appear in person on January 4 at 11 a.m.
It is alleged that the CSI Bishop Asir had sold a piece of land (assigned by the government for a specific purpose), which is a violation of law.

Refer to the previous articles related to this.....

1. Slap criminal case on CSI Bishop, directs HC Bench
http://saveamericancollege.blogspot.com/2011/01/slap-criminal-case-on-csi-bishop.html 

2. CCB enquiry against CSI Bishop Asir
http://saveamericancollege.blogspot.com/2011/01/ccb-enquiry-against-csi-bishop-asir.html 

3. RDO SUMMONS CSI BISHOP FOR INQUIRY
http://saveamericancollege.blogspot.com/2011/10/bishop-asirs-laundering.html 

4. COMPLAINT TO DVAC
http://saveamericancollege.blogspot.com/2010/12/complaint-to-dvac.html 

5. Complaint to DVAC in American College row
http://saveamericancollege.blogspot.com/2010/12/complaint-to-dvac-in-american-college.html 

 - peakay


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சி.எஸ்.ஐ., பிரதம பிஷப் தேர்வு

கோவை: தென்னிந்திய திருச்சபையின், பிரதம பேராயராக, கன்னியாகுமரி திருமண்டல பிஷப், தேவகடாட்சம் தேர்வு பெற்றார்.

 

கிறிஸ்தவ பிராட்டஸ்டண்டு பிரிவின், தென்னிந்திய திருச்சபை அமைப்பின் கீழ், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இலங்கை ஆகிய இடங்களில், 21 திருமண்டலங்கள் உள்ளன. இதன் தலைமையகம், "சினாட்' சென்னையில் உள்ளது. இதன், பிரதம பேராயரான வசந்தகுமாரின் பதவி காலம், கடந்த, 10ம் தேதி நிறைவு பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், பிரதம பேராயர் தேர்தல், கன்னியாகுமரியில் நடந்தது. துணை பேராயராக, பதவி வகித்த கன்னியாகுமரி பிஷப் தேவகடாட்சம், பிரதம பேராயர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, சென்னை திருமண்டல பிஷப் தேவசகாயம், களத்தில் இறங்கினார். கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த தேர்தலின் போது, தேவகடாட்சம், 88 ஓட்டுகள் வித்தியாசத்தில், தேவசகாயத்தை தோற்கடித்தார். தேவகடாட்சம், சி.எஸ்.ஐ., பிரதம பேராயராக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பதவி வகிப்பார். துணை பிரதம பிஷப்பாக, கிருஷ்ணா - கோதாவரி திருமண்டல பிஷப் தேவாசீர்வாதம், "சினாட்' செயலராக, கேரளா திருமண்டல பிஷப் பிலிப், பொருளாளராக திருவனந்தபுரம் திருமண்டல பிஷப் பெனட் ஆபிரகாம் ஆகியோர், தேர்வு பெற்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: CSI- Church of South India Exposed
Permalink  
 


csi_coimbatore_logo.pngCSI COIMBATORE DIOCESE
கோயமுத்தூர் திருமண்டலம்
 

2011 நவம்பர் 12ம் தேதி சனிக்கிழமை கோயமுத்தூர் CSI இம்மானுவேல் ஆலயத்தில் கோயமுத்தூர் திருமண்டலத்தில் 6 பேர்களை டீக்கன்மாராகவும், 13 பேர்களை குருவானவர்களாகவும் மொத்தம் 19 பேர்களுக்கு அபிஷேக ஆராதனை மிகச் சிறப்பாக நடந்தேறியது. மாடரேட்டர் தலைமையில் ஓய்வு பெற்ற CSI பிஷப்மார்கள் கைகளை வைக்க, சத்திய பிரமாணம் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

csi_coimbatore1.jpgcsi_coimbatore2.jpg

star2.gif  கோயமுத்தூர் CSI பிஷப் ஸ்தானத்தில் பொறுப்பு பிஷப்பாகவும், முன்னாள் மாடரேட்டராகவும்பணிபுரிந்த Most Rt.Rev.S.வசந்தகுமார் அவர்கள் அபிஷேக ஆராதனையை நடத்தி வைத்தார்.

 

பிஷப்.துரை அவர்களை பிஷப் பதவியிலிருந்து டிஸ்மிஸ்:

பிஷப்.மாணிக்கம் துரை அவர்கள் பிஷப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். முன்னாள் மாடரேட்டர் Most Rev.வசந்தகுமார் அவர்கள் தன் மாடரேட்டர் பதவியிலிருந்து ஓய்வு பெறும்முன் கோயமுத்தூர் பிஷப் பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திட்டு அதை அனைத்து CSI சபையிலும் ஆயர்களை கொண்டு வாசிக்கும்படி கட்டளையிட்டார்.

CSI சபை உருவாகி 64 வருடத்தில் CSI பிஷப் ஒருவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டது CSI வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

வேதனையுடன் நினைவு கூறுகிறேன்: 
star2.gif  இதே போன்ற குருபட்ட ஆராதனை சேலம் அஸ்தம்பட்டி CSI இம்மானுவேல் ஆலயத்தில் முன்னாள் பிஷப்பும், பண ஊழலில் கைது செய்யப்பட்டு இப்போது பிஷப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆனவருமானRt.Rev.துரை அவர்கள் காலத்தில் நடைபெற்றது. அப்போது கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் குடிக்கு அடிமையான ஊழியரும், பலமுறை குடியை நிறுத்த சிகிச்சை எடுத்தும் பலனின்றி அரை பட்டம் பெற்ற ஊழியராக, பணியாற்றிய ஆயர் ஒருவர் குடிகாராகவே தொடர்ந்து CSI சபையில் பல வருடங்கள் ஊழியம் செய்து வந்தார். அதே அரைப்பட்ட ஆயர் அன்றைய அபிஷேக ஆராதனையில் முழுஆயர் பட்டம் பெற அந்த ஆராதனைக்கு வந்தார். அன்றும் நிறைய சாராயத்தை குடித்தநிலையில்தான் தள்ளாடியபடி முழங்கால்படியிட்ட அவருக்கு பிஷப்.துரை அவர்கள் தன் கைவைத்து குரு பட்டம் அளித்தார். சபையினர் பலர் இதை ஆரம்பத்திலேயே எதிர்த்தார்கள், சபையில் பல குடும்பத்தினர் அவருக்கு குருபட்டம் கொடுப்பதை எதிர்த்தார்கள், நானும் ஜாமக்காரன் சார்பில் குடியை நிறுத்தமுடியாத அவருக்கு குரு பட்டம் கொடுக்கவேண்டாம் என்று எச்சரித்து பிஷப்.துரை அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனாலும் அந்த ஊழியர், பிஷப்.துரை அவர்களின் நெருங்கிய உறவினர் என்ற ஒரே காரணத்தால் அந்த குடிகார ஊழியரை, பிஷப்.துரை அவர்கள் துணிந்து, தெய்வபயமின்றி, தன் சுய இஷ்டமாக அவரை குருவானவராக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்தார். கர்த்தர் இதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

csi_coimbatore3.jpg
பதவி நீக்கம் செய்யப்பட்ட
பிஷப்.துரை

star2.gif  ஆனால், அதேசமயம் அதே ஆராதனையில் குடிபழக்கமில்லாததேவபக்தியுள்ள ஓர் ஊழியர், அன்றைய குரு அபிஷேக பட்டியலிலுள்ள அவர் ஆல்டரில் வந்து மற்றவர்களோடு சேர்ந்து முழங்கால்படியிட்டபோது, அனைத்து சபைமக்களும் பார்க்க, அவரை பிஷப் அவர்கள் எழுந்துபோக சொல்லிவிட்டார். அன்று அபிஷேக ஆராதனையை பார்க்க வந்த அந்த குறிப்பிட்ட ஊழியரின் மனைவி, பெற்றோர், அத்தனை பேர் முன்னிலையிலும் அவரை எழுந்துபோ உனக்கு குரு பட்டம் கொடுக்கமுடியாது, நீ ஆராதனைக்கு தாமதமாக வந்தாய் என்று கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டார். பிஷப்.துரைஅவர்கள் அகம்பாவத்துடனும், சர்வாதிகாரத்துடனும் இந்த விஷயத்தில் நடந்துக்கொண்டது பலருக்கு பிடிக்கவில்லை. அந்த ஊழியருக்கு மட்டும் அன்று குரு பட்டம் கொடுக்காமல் அவமானப்படுத்தி அனுப்பியதை பிஷப் பெருமையாக நினைத்தார். அன்று அந்த ஊழியரை அவமானப்படுத்திய அதே பிஷப்.துரை அவர்களை இப்போது நடந்த குருபட்ட அபிஷேக வைபவத்திற்கு வரவிடாமல் டையோசிஸ் மக்களே தடைசெய்துவிட்டனர். தன் கையினால் நடத்தி வைக்கவேண்டிய அந்த ஆராதனையை தூரத்திலிருந்துகூட பார்த்து ரசிக்க முடியாதபடி ஊழியத்திலிருந்தே அப்புறப்படுத்தி வைக்கப்பட்டார்.

star2.gif  மேலும் பிஷப்.துரை அவர்கள் சபை பொறுப்பில் இல்லாத தன் மனைவிக்கு அதே ஆராதனையில் குருபட்டம் அளித்தார். முன் ஆயத்தம் ஏதும் இல்லாத பிஷப் மனைவிக்கு குரு பட்டத்தை தன் கையால் அதே ஆராதனையில் கொடுத்து மகிழ்ந்து பெருமைப்பட்ட அந்த நிகழ்ச்சியை பெரும்பாலான சபை மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் மறக்கவில்லை. கர்த்தரின் கோபம் டிஸ்மிஸ் ஆர்டர் வழியாக பிஷப்.துரைக்கு வந்தது. 2012 ஜனவரி முதல் பிஷப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவதாக அனைத்து CSI சபையிலும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

star2.gif  அன்று சேலத்தில் நடந்த குருபட்ட ஆராதனையையும், இப்போது கோயமுத்தூரில் நடந்த குருபட்ட ஆராதனையையும் நினைத்துப்பார்க்கிறேன். ஜனவரி 2012, 15ம் தேதி நாகர்கோவிலில் நடந்த மாடரேட்டர் அபிஷேக ஆராதனையிலும் பிஷப்.துரை அவர்கள்மட்டும் இல்லை. பிஷப்.துரையின்நிலையை நினைத்துப்பார்க்கிறேன். என்ன பரிதாபம்! அன்று பெருமைக்கொண்ட நேபுகாத்நேச்சார்தேவனால் தள்ளப்பட்டு தரையில் விழுந்ததுபோல் இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது.

star2.gif  கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் குரு பட்டத்துக்காக சகல தகுதியுடன் பல வருடங்களாக காத்திருந்த, வேறு இரண்டு பேர்களையும் பிஷப்.துரை அவர்கள் உங்களை ஊழியத்தைவிட்டும், டையோசிஸ்விட்டும் விரட்டாமல் ஓயப்போவதில்லை என்று பகிரங்கமாக ஆணவத்தோடு சூளுரைத்தார். அதே பிஷப்.துரையின் இப்போதைய நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

star2.gif  பிஷப்.துரை அவர்களின் தற்போதைய நிலையும், அவரின் மனைவி, மகளின் இப்போதைய பரிதாப நிலை, CSIயிலுள்ள அனைத்து பிஷப்மார்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. ஊழலும், அகம்பாவமும், பெருமையும் உள்ள திருமண்டல தலைவனுக்கு கர்த்தருடைய தண்டனைஎப்படியிருக்கும் என்பதை பிஷப்.துரை அவர்களின் தற்போதைய வாழ்க்கைநிலை மூலமாக கர்த்தர்அனைத்து CSI மக்களும், ஊழியர்களும், ஆயர்களும், பிஷப்மாரும் காணும்படி செய்தார்.

star2.gif  சபைமக்கள் காணிக்கைப் பணத்தில் கைவைக்கும், கொள்ளையடிக்கும் அத்தனை பிஷப்மாருக்கும், ஆயர்களுக்கும், திருமண்டல நிர்வாகிகளுக்கும் பிஷப்.துரையின் தற்போதைய நிலையை கர்த்தர் எச்சரிக்கையாக வைத்துள்ளார்.

star2.gif  பெருமை உள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். குடிக்காரர்களை ஆயராக்கி, ஒரு உண்மை ஊழியனுக்கு ஆயர் அபிஷேகம் கொடுக்காமல் ஆல்டரில் வைத்து எழுந்து போ! என்று பகிரங்கமாக கூறின பிஷப்.துரை அவர்களை கர்த்தர் இப்போது ஓடஓட துரத்தினார். அவரின் பிஷப் பதவி பறிப்போனது! என்ன பரிதாபம்!

star2.gif  பிஷப்.துரை அவர்களை ஒரு சாதாரண ஆயராககூட இப்போது எந்த சபையிலும் யாரும்உபயோகிப்பதில்லை.

star2.gif  பிஷப்.துரை அவர்கள் யாரை அவமானப்படுத்தினாரோ அதே ஊழியர்களை ஆயராக அபிஷேகம் செய்து கர்த்தரே அவர்களை கனப்படுத்தினார்.

star2.gif  கர்த்தருடைய வேதத்தில் காணப்படும் நேபுகாத்நேச்சாரின் நிலை, அகம்பாவம் கொண்ட பல பிஷப்மார்களுக்கும் காத்திருக்கிறது.

star2.gif  என்னை அலட்சியப்படுத்துகிறவர்களை நானும் அலட்சியப்படுத்துவேன் என்று கர்த்தர் கூறுகிறார். 1 சாமு 2:30.

 

CSIயில் உள்ள மற்ற பிஷப்மார்கள் இந்த நிலையை
எச்சரிக்கையாக மனதில் வைப்பது நல்லது:

star2.gif  இப்படிப்பட்ட சர்வாதிகாரபோக்கு கோயமுத்தூர் திருமண்டலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில்CSIயில் வேறு இரண்டு டையோசிஸ்களில், இரண்டு பிஷப்மார்கள், பிஷப்.துரை அவர்களைப்போலசர்வாதிகாரிகளாகவும், பெருமைக்கொண்டவர்களாகவும் ஆட்சி செய்வதாக கூறுகிறார்கள்.

star2.gif  தங்கள் டையோசிஸ்ஸில் தனக்கு பிடிக்காத நல்ல ஆயர்களை அவமானப்படுத்தியும், குரு பட்டத்துக்காக வருட கணக்காக காத்திருக்கும் நல்ல ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு குருபட்டம் அளிக்காமலும், ஆயர்களை பந்தாடுவதுபோல் பழிவாங்கி கொண்டிருக்கும் ஏராளமான செய்திகள் தினம்தினம் ஜாமக்காரன் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறது.

star2.gif  மற்ற மாநில CSI திருமண்டத்திலும் பிஷப்மார்களின் பழிவாங்கும் படலம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அத்தனை பிஷப்மார்களையும் கர்த்தர் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர்களுக்கும் இது எச்சரிக்கையாக அமையட்டும்.

star2.gif  அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். சங் 55:19

star2.gif  நான் வெகுகாலம் மௌனமாக இருந்தேன் அல்லவா? ஆகையால், எனக்கு பயப்படாமல் இருக்கிறாய்? ஏசா 57:11.

 

கோயமுத்தூர் CSI திருமண்டலத்தின் இன்றைய நிலை:

star2.gif  மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போலத்தான் இன்றைய நிலை இருக்கிறது. தற்காலிகமாக பிஷப் ஸ்தானத்தில் பழைய மாடரேட்டர் அவர்கள் பெங்களுரில் இருந்துகொண்டு கோயமுத்தூர் டையோசிஸ்ஸின் நிர்வாகத்தை நடத்தி வருடங்கள் நீண்டுபோய்கொண்டிருந்தன. இப்போது ஒரு பகுதிமட்டும் முடிவுக்கு வந்துள்ளது.

star2.gif  கன்னியாகுமரி CSI டையோசிஸ் பிஷப்.G.தேவகடாட்சம் அவர்கள் 2012 ஜனவரி 15ம் தேதிபுதிய மாடரேட்டராக பதவி ஏற்றார்.

star2.gif  புதிய மாடரேட்டர் அவர்கள் சீக்கிரமே கோயமுத்தூர் டையோசிஸ்க்கு புதிய பிஷப்பை நியமிக்கும் ஏற்பாட்டை சீக்கிரம் செய்வார் என்று எல்லாரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

star2.gif  புதிய மாடரேட்டர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கோயமுத்தூர் CSI திருமண்டலத்தின் மக்கள் அவரிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்க்கும் இரண்டு விஷயம்:

1). கோயமுத்தூர் CSI திருமண்டலத்தை இரண்டாக பிரித்து சேலம் ஒரு திருமண்டலமாகவும்,கோயமுத்தூர் மற்றொரு திருமண்டலமாகவும், இரண்டு திருமண்டலமாக பிரித்தால் நிர்வாகம் செய்ய மிகவும் வசதியாக இருக்கும். மேலும், ஒவ்வொரு திருமண்டலத்தின்மீதும் பிஷப்மார்கள் தனிக்கவனம் செலுத்தி, அந்த திருமண்டலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும் மிகவும் வசதியாக அமையும் என்று சபை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

2). இரண்டாவது, CSIயின் முழு சினாட் சட்டதிட்டத்திலும் பெரும்மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம். திருமண்டலத்தின் கோடிக்கணக்கான சபைகாணிக்கைகளை இனி கொள்ளையடிக்க முடியாதபடியும், கல்லூரிகள், பள்ளிகள், CSIயின் மற்ற ஸ்தாபனங்கள், ஆசிரிய பயிற்சிபள்ளி இவைகளை நிர்வகிக்க தனி அமைப்பும், புதிய சட்டதிருத்தமும் தேவை. அட்மிஷன் பெயரில் டொனேஷன் பெயரில் பணம் பெறுவதும், ஒரு நபரை வேலையில் அமர்த்த அல்லது பிரமோஷன் கொடுக்க அவரிடமிருந்து லஞ்சமாக பணத்தை யாரும் வாங்காதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.

star2.gif  இந்த பணவிஷயத்தில் திருமண்டல பொறுப்பாளர்களோ, பிஷப்மார்களோ கொள்ளையடிக்காதபடியிருக்க நிர்வாக சீர்திருத்தம் தேவை. அப்படியே நிர்வாக கமிட்டியில் உள்ளவர்களின் தகுதி இவைகளை குறித்த சட்டங்களை உருவாக்குவது மிக அவசியம், மட்டுமல்ல, அது மிக அவசரமும்கூட.

star2.gif  CSI பிஷப்மார்களாக தெரிந்தெடுக்கப்படும் ஆயர்கள் ஓய்வுப்பெற அதிகப்பட்சம் 6 வருடங்கள்தான் இருக்கவேண்டும். மிகச் சிறிய வயதில் சில பிஷப்மார் பதவி வகிப்பதினால் அவர்கள் சர்வாதிகாரர்களாக மாறிவிடுகிறார்கள். பார்வோன் கையில் அகப்பட்ட மக்களைப்போல் திருமண்டல மக்கள் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பிட்ட பிஷப் எப்போது ஓய்வு பெறுவார் என்று ஆவலோடும், வெறுப்போடும்காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே ஒரு பிஷப்பின் நிர்வாக காலம் 6 வருடகாலமாக அமைக்கப்படவேண்டும். வரும் புதிய மாடரேட்டர் மற்றும் பிஷப்மார், சினாட் நிர்வாக கமிட்டி ஆகியவர்கள் நான் குறிப்பிட்ட இந்த முக்கிய மாற்றத்தை நிறைவேற்றவேண்டும் என்று அனைத்து CSIமக்களும் வெகுகாலமாக எதிர்ப்பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

 

சேலத்தின் புதிய பிஷப்?

star2.gif  ஏற்கனவே கறைப்பட்ட கரங்களை உடையவர்கள், முன்கால திருமண்டல கொள்ளையர்களோடு தொடர்பு கொண்டவர்கள் யாரையும் சேலத்தில் புதிய பிஷப்பாக தயவுசெய்து தெரிந்தெடுத்துவிடவேண்டாம். எத்தனைத்தான் மனம்திரும்பின அனுபவம் அவர்களுக்கு இருந்தாலும், பணக்கொள்ளையடிக்கும் விதம், கொள்ளை அடித்தாலும் இனி அகப்படாமல் எடுத்த பணத்தை பதுக்கிவைப்பது எப்படி? என்பதில் அவர்கள் பல வருட அனுபவம் உள்ளவர்களாக இருப்பதால் அப்படிப்பட்டவர்கள் யாரையும் பிஷப்பாக தெரிந்தெடுக்ககூடாது. மேலும், அவர்கள் பாவத்தில் பழக்கப்பட்டவர்களும், பாவத்தில் கூட்டு நின்றவர்களுமான அவர்கள் கை சும்மா இருக்காது. ஆகவே இவ்விஷயத்தில் பிஷப்பை தேர்வு செய்யும் நிர்வாகிகள் எச்சரிக்கையாக இல்லாமல் போனால் CSIஒருபோதும் உருப்படவே உருப்படாது. நான் கூறிய இந்த ஆலோசனைகளை நிறைவேற்றவும்,சரிப்படுத்தவும் முடியாதநிலை CSIக்கு ஏற்பட்டால் பழைய பிரச்சனைகள் புரையோடிப்போன தீராத வியாதியாக மாறிவிடும்.

star2.gif  கடந்த காலத்தில் CSIக்கு உண்டான அவப்பெயரையும் நான் மேலே கூறின இந்த ஆலோசனையின்மூலம் களையமுடியும். புதிய மாடரேட்டர், புதிய பிஷப், புதிய கமிட்டி, DC, சினாட் மெம்பர்கள் இந்த விஷயத்தில் தீவிரமாக முயலுவார்களாக?.

star2.gif  டையோசிஸ் பண விஷயத்தில் ஆயர்கள், பிஷப்மார்கள், மாடரேட்டர் ஆகியவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் இவர்களின் மேற்பார்வையில் தெய்வபயத்தோடு புது சட்டத்தோடுள்ள CSI நிர்வாகம் அமையவேண்டும். இவைகளை அனைத்து தென்னிந்திய மாநில CSIசபை மக்கள் ஆவலோடும், பாரத்துடனும் எதிர்ப்பார்க்கிறார்கள். ஜெபிப்போம்.

star2.gif  கர்த்தருடைய வேலையை அசதியாகச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். எரே 48:10, நீதி 18:9. இந்த வசனம் எல்லா மாநில CSI ஆயர்களுக்கும், பிஷப்மார்களுக்கும், மாடரேட்டருக்கும், CSIநிர்வாகிகளுக்கும் பொருந்தும்.

 

தற்போது கோயமுத்தூர் CSI டையோசிஸ்ஸின் நிலை

star2.gif  அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நியாதி 21:25.

star2.gif  பிஷப் இல்லாத கடந்த இரண்டு வருடமாக கோவை டையோசிஸ்ஸில் பல இடங்களில் பண ஊழல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பிஷப்.துரை பதவியில் இருந்த காலத்தில் பிஷப்பும், சில குடும்பங்களும் மட்டும் பண ஊழல் செய்ததாக கூறப்பட்டது.

star2.gif  ஆனால் இப்போதோ சபை பணத்தை ஆங்காங்கு உள்ளவர்கள் கைக்கு கிடைத்த அளவு, தன் சாமர்த்தியத்துக்கு ஏற்றப்படி, பலவழிகளில் பணம் எடுத்திருக்கும் விவரம் சில மாதங்களாக எனக்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

star2.gif  முன்பு எடுத்த பணத்தின் அளவைவிட இப்போது எடுக்கப்பட்ட பணத்தின் அளவு கூட்டிப்பார்த்தால் மிகமிக அதிகம் என்று கூறப்படுகிறது.

star2.gif  பிஷப் என்ற ஸ்தானத்தில் ஒரு தலைவனை நியமித்தாலும் பிரச்சனை - தலைவன் இல்லாமல் போனாலும் பிரச்சனை. ஆயர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மனசாட்சியும், தெய்வ பயமும் நிச்சயம் தேவை.

star2.gif  நியாதிபதிகள் புத்தகத்தில் எழுதப்பட்டதுபோல் ராஜா இல்லாத காலத்தில், நியாதிபதிகள் இல்லாத காலத்தில் அவனவன் தன் இஷ்டப்படி தைரியமாக செய்துவந்தனர். அதேபோல் இப்போது பண ஊழல் செய்ய தொடங்கிவிட்டனர். ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

என் மனதை மிகவும் வேதனைப்படுத்திய செய்திகள்

star2.gif  கோயமுத்தூர் CSI டையோசிஸ் பிஷப்.துரை அவர்கள் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கடந்த சில வருடமாக தன் வருமானத்துக்கு மீறின சொத்துக்கள் சேர்த்த விஷயமாகவும், டையோசிஸ்ஸில் பணம் லட்சலட்சமாக கோடிக்கணக்கில் கையாடல் செய்யப்பட்ட விஷயத்திலும் பிஷப் அவர்கள் மீது ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. CBCID போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இப்படி அடுக்கடுக்காக பல குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் பிஷப்.துரை அவர்கள் அப்போதே தன் பதவியை ராஜினாமா செய்துதிருந்தால் மிகவும் கவுரவமாக இருந்திருக்கும். மறுபடியும் அவர் முன்னாள் பிஷப் என்று பெயரில் சபைகளுக்குள் ஊழியம் செய்ய வாய்ப்பு இருந்தது.

ஆனால் இன்று வெல்லூரில் தன் மகன் திருமண அறிவிப்பை சபையில் கூறும்போது பிஷப்பின் மகன் என்று அறிவிக்க வெல்லூர் டையோசிஸ்ஸில் பலர் தயங்கினார்கள், பலர் கேள்விகள் எழுப்பினார்கள் என்றும் கேள்விப்பட்டேன். பிஷப்.துரை அவர்கள் தான் படித்த பெங்களுர் வேதாகமகல்லூரியில் வேலைதேடி சென்றபோது சில சர்டிபிகட்டுகள் போலியானது. ஆகவே அது செல்லாது என்று கூறி வேலை தரமறுத்ததாகவும் கேள்விப்பட்டேன். வெல்லூர் CMCசேப்பலனிஸ்ட்டாகவாவது ஊழியம் செய்ய அவர் வேண்டிக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். எங்கும், யாரும் அவருக்கு எந்த பதவியும் ஊழியமும் கொடுக்கவில்லை. என்ன பரிதாபம்!

ஒருவர் பதவியில் இருக்கும்போதுதான் மரியாதை, கவுரவம், பலர் அவரை தேடி வருவார்கள். நாள்கணக்கில் அவர் தரிசனத்துக்காக காத்திருப்பார்கள். இவர் பிஷப் பதவியிலிருந்தபோது எத்தனை குருவானவர்கள் மாதக்கணக்கில் பிஷப்பை பார்க்க காத்திருந்தார்கள்! சம்பள பாக்கிபெற, வேலையிலிருந்து தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்ட குருவானவர்கள் பிஷப்பிடம் கெஞ்ச, ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் பலர் பிஷப்புக்காக காத்திருந்தார்கள். பலருக்கு சம்பளம் கொடுக்காமல் நிறுத்திவைத்த காரணத்தால் அவர்கள் பலமுறை கடன்வாங்கி குடும்பம் நடத்தினார்கள். அவர்கள் பலவீடுகளில் இலவசமாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள். பிஷப்.துரை காலத்தில் இப்படி பலர் கஷ்டப்பட்டதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் சிலருக்கு பணஉதவியை சிலரிடம் பெற்று நானே அவர்களுக்கு உதவியும் செய்திருக்கிறேன்.

william_moses.jpg
Most Rt.Rev.வில்லியம் மோசஸ்

star2.gif  கோயமுத்தூர் டையோசிஸ் பிஷப்பாகவும், CSI மாடரேட்டராகவும் பணி புரிந்து ஓய்வுப்பெற்ற Most Rev.வில்லியம் மோசஸ் அவர்கள் தன் ஓய்வுகால பென்ஷன் பணத்துக்காக, பிஷப்பின் அலுவலகத்துக்கு எத்தனைமுறை சென்றார். அப்போது அவருக்கு உட்கார ஆசனம் கொடுக்காமல், நிற்கவைத்துப்பேசி ஓய்வூதியம் கொடுக்க மறுத்ததால், அவர் அலுவலகத்தைவிட்டுபோக மறுத்தார். CSI சினாடில் மாடரேட்டராக பணி புரிந்து பல பிஷப்மாரை நியமித்தவரும் முன்னாள் மாடரேட்டருமான பிஷப்.வில்லியம் மோசஸ் அவர்கள் தரையில் அமர்ந்து பிஷப்.துரையிடம் ஓய்வூதியம் கேட்ட சம்பவங்கள் மறக்ககூடியதா? (முன்னாள் மாடரேட்டர்.வில்லியம் மோசஸ் அவர்கள்தான் பிஷப்பை தெரிந்தெடுக்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது. CSI-யில் பிஷப்பை தெரிந்தெடுக்க பணம் வாங்கும் அவமானமான வழக்கத்துக்கு முதல் சுழி இட்டவர் என்று இவரைப்பற்றி கூறப்படுவது வேறு கதை). ஆக பிஷப்.துரை அவர்கள் திருமண்டலத்தில் பல கொடுமைகள், பழிவாங்குதல் இப்படி பல கெட்ட பெயர்களை சம்பாதித்தவர் ஆவார். CSIயில் பதவியில் இருக்கும் போதே டிஸ்மிஸ் ஆன பிஷப் என்ற கெட்டபெயர் CSI சரித்திரத்தில் உண்டாக பிஷப்.துரை அவர்கள் காரணமானவராகிவிட்டாரே என்ற வேதனை எனக்குள் வெகுவாக பாதித்தது.

star2.gif  இப்போதும் அவர் பிஷப் பதவியைவிட, மாடரேட்டர் பதவியைவிட மிக உயர்ந்த நிலைக்கு மாறமுடியும். பிஷப்.துரை அவர்கள் மனந்திரும்பி அதன் அடையாளமாக போலீஸில் அவர் சரணடைந்து, ஒருவேளை அவர் காலத்தில் ஊழல் செய்த கோடிகளை திரும்ப செலுத்தமுடியாமல் போனாலும், குற்றத்தை அவர் ஒத்துக்கொண்டால் போதும். தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அதை அறிக்கை செய்து விட்டுவிட்டவன் (கடவுளின்) இரக்கம் பெறுவான்.நீதி 28:13. அவர் மீது உள்ள வழக்கை CSI திரும்பபெறாவிட்டாலும், அவர் ஒருவேளை சிறையில் அடைக்கப்பட்டாலும், சில காலத்துக்கு பிறகு அவர் விடுவிக்கப்படமுடியும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு மனந்திரும்பின கிறிஸ்தவன் என்ற அற்புதமான பெயர் கிடைத்தாலும் அவர் மறுபடியும் பிஷப் ஆக இயலாது. ஆனால் சிறந்த கன்வென்ஷன் பிரசங்கியாக முடியுமே!

star2.gif  பிஷப்.துரை அவர்களுக்கு நல்ல பிரசங்கம் செய்யும் தாலந்தும், பாட்டு பாடும் தாலந்தும் உண்டு. சரியான மனஸ்தாபத்துடன் மனந்திரும்புதலை அவர் பெற்று விட்டால் எந்த இடத்தில் அவர் அவமானப்பட்டாரோ, அதே இடத்தில் கர்த்தர் அவரை உயர்ந்த நிலையில் கொண்டுப்போவார். அவர் பலராலும் மதிக்கப்படுவார்.

durai.jpg
பிஷப்.துரை அவர்களும் நானும்

star2.gif  என் வாழ்க்கையில் நான் வேதாகம கல்லூரியில்பட்டப்படிப்பு படித்தவனில்லை. டாக்டர் படிப்பிலும் உயர்ந்த டிகிரிகள் வாங்கியவன் அல்ல. ஆனால்மனந்திரும்புதலின் அனுபவம்பெற்று வேத புத்தகத்தைதியானிக்கவும், அதை என் வாழ்க்கையில் கைக் கொள்ளவும், கைக்கொண்டதை மற்றவர்களுக்குஅறிவிக்கவும் தொடங்கியபோது என் வாழ்க்கை உயர்ந்தது. ஊழியத்தில் நான் உயர்த்தப்பட்டேன். வேறு எந்த ஊழியர்களுக்கும் கிடைக்காத நல்ல பெயரைப்பெற்றேன். வேறு எந்த ஊழியர்களும் பிரயாணப்படாத உலகநாடுகளில் சிறப்பு செய்தியாளனாக 162 தேசங்களில் அடிக்கடி பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டேன். வானொலிசெய்தியாளன், TV செய்தியாளன் என்று படிப்படியாக உழியத்தில் என்னை கர்த்தர் உயர்த்தினார்.இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மற்றும் பல இடங்களில் சாதாரண ஊழியனான என்னை வரவேற்க விமான நிலையத்துக்கும் ரயில் நிலையத்துக்கும் மாடரேட்டர், பிஷப்மார்கள், ஆயர்கள், நீதிபதிகள் என்று உயர்பதவியிலுள்ள சபை தலைவர்கள் நேரில் என்னை வரவேற்க வந்துகாத்திருந்து, பூச்செண்டு கொடுத்து வரவேற்று என்னை அழைத்துப் போனது என்ன! சாதாரண விஷயமா? எத்தனை சிறப்பான உயர்வு அது?! சிறிதும் தகுதியில்லாத எனக்கு கிடைத்த இந்த சிறப்பை, மரியாதையை, முன்னாள் பிஷப்.துரை அவர்களும் தன் புதிய ஊழியத்தின் மூலம் பெறமுடியும் என்பது என் அபிப்ராயம். அது மாத்திரமல்ல, இதுவே என்னுடைய வேண்டுகோளும், எதிர்ப்பார்ப்புமாகும்.

..........என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்களை நான் கனயீனப்படுத்துவேன். 1 சாமு 2:30.

 

குறிப்பு: பிஷப்.துரை அவர்கள் டிஸ்மிஸ் ஆனது கோயமுத்தூர் - ஈரோடு - நீலகிரி - சேலம் ஆகிய இடங்களில் உள்ள சிலரின் கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவோ - ஜாமக்காரனில்விவரங்கள் வெளியிட்டதால் கிடைத்த வெற்றியாகவோ ஒருபோதும் கருதக்கூடாது. பிஷப்.துரை அவர்களை கர்த்தர் வெறுக்கவில்லை. மறுபடியும் பிஷப் ஸ்தானத்தைவிட ஊழியத்தில் உன்னத நிலையில் உயர்த்தவே பிரியப்படுகிறார். அதற்காக ஜெபிப்போம். நான் என் தனி ஜெபத்தில் ஜெபிக்க தொடங்கிவிட்டேன். திருமண்டல மக்கள் யாவரும் பிஷப்.துரை அவர்கள் சோர்ந்துபோகாதபடி மறுபடியும் ஊழியத்தை கர்த்தருக்காக தொடங்கவேண்டும் என்று ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆசீர்வாத தட்டு

திருநெல்வேலி & தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள CSI திருமண்டலத்தில் பணம் சேர்க்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் இது. அசனம், மாம்பழ பண்டிகை போன்ற விசேஷங்கள் இந்த குறிப்பிட்டCSI டையோசிஸ்ஸில்மட்டுமே இன்றைக்கும் பல ஆண்டுகளாக பரம்பரையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதில் நல்ல காரியம் என்று கூறவேண்டுமானால் சமபந்தி உணவுபோல பல ஆயிரம் மக்களுக்கு அந்த ஒருநாள்மட்டும் குறைவில்லாமல் சபை மக்களோடு, வெளி ஊர்களிலிருந்து வருவோர் அனைவருக்கும் விருந்து பரிமாறப்படுகிறது.

star2.gif  இது நெல்லை மாவட்ட CSI கிறிஸ்தவர்களிடையே மட்டும் காணப்படும் சிறப்பு ஆகும். 12 வருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்துமதமக்கள் கொண்டாடும், கும்பமேளாபோல் நெல்லை டையோசிஸ் சபை மக்களுக்குமட்டும் இது விசேஷ பண்டிகை போலாகிவிட்டது. இது மாத்திரமல்ல, இதில் கலந்துக் கொண்டால் குடும்பத்துக்கே பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதுபோல் குறிப்பிட்ட இந்த விருந்துநாளை இவர்களே திசை திருப்பிவிட்டனர். அதை நம்பி வியாபாரம் மற்றும் தொழில் செய்ய வெளிமாநிலத்தில் குடியேறிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்மஸ், புதுவருடம் போன்ற விசேஷங்களுக்கு வராமல்போனாலும் இந்த அசனத்துக்கு வந்து அந்த அசன சாப்பாட்டில் கைவைத்தால்போதும் ஒரு பெரும் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சபை மக்களை நம்பவைத்துவிட்டனர். அதனால் இவர்களில் பெரும்பாலோhர் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு கும்பமேளாவுக்கு போய்வரும் மக்களைப்போல் குடும்பத்தோடு தங்கள் ஊர் சபை அசனத்துக்கு வந்துபோவர்கள்.

இந்த குறிப்பிட்ட அசன பண்டிகையின் செலவினங்களுக்கு ஏராளமான பொருட்களையும், அரிசி, எண்ணெய், பருப்பு, ஆட்டுகிடா போன்றவைகளை அவரவர் குடும்ப சார்பில் கொடுப்பார்கள். அப்படியே அதன் செலவினங்களுக்கு பணத்தை காணிக்கை என்ற பெயரில் கணக்கு பார்க்காமல் அள்ளி கொடுப்பார்கள். பழைய காலங்களில் தங்கள் விளைநிலங்களில் விளைந்த அல்லது தங்கள் வீட்டில் விளைந்த தேங்காய், பழ வகைகள், காய்கறிகள் போன்றவைகளோடு பலகாரங்களை தயாரித்து அசனம் அன்று ஆலயத்தில் கொண்டுவந்து ஆல்டரில் வைத்து ஜெபம் ஏறெடுப்பார்கள். கடைசியில் அவைகளை ஏலம் இட்டு பெரும்தொகைக்கு ஏலப்பெருட்களை வாங்கி அந்த பணத்தை ஆலயத்துக்கு திருமண்டலத்துக்கு காணிக்கையாக சமர்பிப்பார்கள். இப்படிப்பட்ட செயல்களில் பிழையேதும் இல்லை.

star2.gif  இதுவரை பிரச்சனையில்லாமல் நடந்துக்கொண்டிருந்த இந்த அசனத்தில் திடீரென்று குறுக்கே புகுந்ததுதான் ஆசீர்வாத தட்டு என்ற புது வழக்கம். இந்த ஆசீர்வாத தட்டில் விலையுயர்ந்த பொருள்களை வைத்து அதோடு சிலர் தங்கள் நகைகளை அப்படியே கழற்றி அதில் வைப்பார்கள். சில இடத்தில் தாலிசெயினையே கழற்றி வைத்திருக்கிறார்கள். இந்த ஆசீர்வாத தட்டு சமர்பிப்பவர்கள் அந்த தட்டு ஆல்டரில் வைத்து ஜெபம் செய்தபின் முதலாதாக அந்த தட்டை அதில் உள்ள பொருள்களோடு ஏலம் விடுவார்கள். அந்த ஆசீர்வாத தட்டுக்கு வாங்க பெரும் போட்டியிருக்கும் காரணம் பெரும் தொகையுள்ள தங்கநகை, வளையல் உட்பட அந்த தட்டில் வைப்பார்கள். அந்த தட்டை வைத்தவர்களே அது எத்தனை ரூபாய்க்கு ஏலம் போனாலும் அந்த தட்டை தாங்களே திரும்ப எடுத்துக்கொள்ளும் நோக்கத்தில் பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுப்பார்கள். விலையை தூக்கிவிட அல்லது விலையை உயர்த்தவும் சிலர் திட்டமிட்டு வருவார்கள். அவர்களுக்கு தெரியும் தட்டு வைத்தவர் அதைவிட்டு கொடுக்க மாட்டார்கள் எவ்வளவு விலையினாலும் அவர்கள் வாங்கத்தான் போகிறார்கள் என்பதை அறிவார்கள். அந்த தட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தாங்களே வாங்கிவிட்டால் அதை பெரும் வெற்றியாகவும், ஆசீர்வாதமாகவும் கருதுவார்கள். அந்த தட்டு அவர்கள் குடும்பத்துக்கு பெருத்த ஆசீர்வாதத்தை கொடுக்கும் என்பது அவர்கள் மூடநம்பிக்கையாகும். இப்படிப்பட்ட ஆசீர்வாத தட்டுவியாபார தந்திரத்தை திருமண்டலத்தில் எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை. கொஞ்ச கொஞ்சமாக இது நெல்லை CSI சபையின் விக்கிரகமாக மாறியது. இதன்மூலம் மூடநம்பிக்கையும் வளர்ந்தது. அந்த ஆசீர்வாத தட்டை வாங்கி செல்ல வெறிகொண்டவர்கள்போல் விட்டுக்கொடுக்காமல் போட்டிபோட்டுக் கொண்டு மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்து அதை வாங்கிப்போவார்கள். ஏலம் முடிந்தவுடன் பிஷப்போ, ஆயரோ அந்த தட்டின் மீது கைவைத்து ஜெபித்து ஏலம் வாங்கியவரின் குடும்பத்தினரை மேடைக்கு வரவழைத்து அவர்கள் கையில் யாவரும் பார்க்க அந்த தட்டை ஒப்படைப்பார்கள்.

star2.gif  இந்த வழக்கம் இப்போது திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து வெளிஊர்களில் வாழும் கிறிஸ்தவர்கள் இந்தியாவிலுள்ள எந்த CSI சபையில் அதிகம் அங்கத்தினராகி நிறைந்து காணப்படுகிறார்களோ அந்த சபையில் இந்த அசன பண்டிகையை நடத்த தொடங்கிவிட்டனர். அந்த சபையின் ஆயரிடம் கூறி, கமிட்டியிலுள்ள பெரும்பான்மையினரை சம்மதிக்கவைத்து அசன பண்டிகையை எப்படியும் நடத்திவிடுவார்கள். அப்படித்தான் சென்னை, கோவை, சேலம் போன்று இன்னும் எங்கெல்லாம் திருநெல்வேலி CSI கிறிஸ்தவர்கள் ஆராதிக்கிறார்களோ அந்தந்த சபையில் ஆசீர்வாத தட்டையும் அறிமுகப்படுத்திவிடுகிறார்கள்.

star2.gif  ஒரு விதத்தில் இது சூதாட்டம் போலவும், விக்கிரகம் போலவும் மாறிக்கொண்டுவருகிறது.

star2.gif  முதலாவது அந்த ஆசீர்வாத தட்டு மூலம் எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் ஆசீர்வாதம் கிடைக்க போவதில்லை என்பதை இவர்கள் அறிந்துக்கொள்ளவேண்டும். நம் வாழ்க்கையை சீர்ப்படுத்திமனந்திரும்பி வசனத்தின்படி ஜீவித்தால்மட்டுமே தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதமும் தானே வரும். இதை மறந்து ஒரு குருட்டு விசுவாசத்தில் ஊழியத்துக்கு, சபைக்கு இதன்மூலம் பணம் சேருகிறது நல்லதுதானே! என்பது இவர்கள் வாதம். இப்படிக்கூறி இதை நியாயப்படுத்துகிறார்கள். நோக்கம் நல்லதுதான். ஆனால் வழி சரியில்லையே! வசனத்துக்கு விரோதமான உபதேசம் இதன் உள்ளே நுழைந்துவிட்டதே! ஆசீர்வாத தட்டு வாங்கியவருக்குமட்டுமே அதிக ஆசீர்வாதம் என்பதுபோலாகிவிட்டதே! அதுதான் ஆபத்து. பணம் அதிகம் கொடுக்கிறவர்களுக்குமட்டுமே ஆசீர்வாத தட்டு கிடைக்கும் என்றாகிவிட்டது.

இப்போது அந்த ஆசீர்வாத தட்டு நெல்லை CSI கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு விக்கிரகமாக மாறி சபை மக்களை வசனத்தில் இருந்தும், ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்ற உண்மையிலிருந்தும் விலக்க ஆரம்பித்துவிட்டதே! அதுதான் ஆபத்து.

star2.gif  ஆலயத்தை கள்ளர் குகையாக்குகிறார்கள் என்று கூறி காசு விற்கிறவர்களை (Money Ex-change)ஆலயத்திலிருந்து இயேசுகிறிஸ்து விரட்டினார். அன்றைய காலங்களில் வெளிநாட்டு பணத்தை எருசலேம் ஆலயத்தில் அப்படியே காணிக்கையாக போடமுடியாது, அதை காசுக்காரரிடம் (Money Ex-change கடையில்) விற்று ஆலய காணிக்கைக்கு ஒரு தொகை, ராயனுக்கு ஒரு தொகை என்று இரண்டு வித்தியாசமான காணிக்கை காசுகளை அங்கு ஆலயத்தின்முன் விற்பார்கள். அதை வாங்கி ஆலயத்தில் கொண்டுப்போவார்கள். ஆசாரியன் அந்த பணத்தில் பாதியை கொள்ளையடித்ததுபோக மீதி பாதியைத்தான் ராயனுக்கு அனுப்புவான். இப்படிப்பட்ட ஏமாற்று காரியங்கள் நடப்பதாக இயேசுகிறிஸ்து அறிந்து சாட்டையை எடுத்து விளாசினார்.

star2.gif  ஏறக்குறைய இதே நிலையில்தான் இன்றைய சபைகள் போய்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஆசீர்வாத தட்டு காணிக்கை சேகரிப்பு சூதாட்டம்போல் மாறி மக்களை ஆவிக்குரிய ஜீவியத்திலிருந்து திசை திருப்புகிறது. அசனம் நடத்தி எல்லாருக்கும் ஆகாரம் ஏற்பாடு செய்வது நல்லது. அது ஒருஅன்பின் விருந்தும் என்று எடுத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை. அதன் மூலம் சபை மக்களின்ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் காட்டலாம். ஆனால் ஆசீர்வாத தட்டு என்ற பெயரில் பணக்கார காணிக்கை ஏற்பாட்டை ஊக்கப்படுத்துவது சரியல்ல, பெரும்தொகை அதன்மூலம் ஆலயத்துக்கு கிடைப்பதால் ஆயர்கள் அதை தடை செய்யாமல் இருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் அந்த முறையை அங்கீகரிக்கிறதில்லை. சபைக்கு காணிக்கையை நல்லமுறையில் சமர்பிக்கலாமே?

star2.gif  சபையில் உள்ள ஏழை மக்கள் அந்த ஆசீர்வாத தட்டை தங்களுக்கு எட்டா கனியாக பார்க்கிறார்களே! அந்த நிலை சபைக்கு நல்லதில்லை.

star2.gif  முடிவாக நான் கூறுவது, அசனம் நடத்துங்கள், ஐக்கியத்தை வெளிப்படுத்துங்கள். ஆனால் தவறான விசுவாச நம்பிக்கை கொண்ட இந்த ஆசீர்வாத தட்டுமுறை சபைக்கு அவசியமா? ஆண்டவர் அதன்மேல் பிரியம் கொள்வாரா? என்று இந்த ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

star2.gif  சபை மக்களை வசனத்தின்படி காணிக்கை கொடுக்க பழக்குங்கள். ஆலயத்துக்கு அல்லது ஊழியத்துக்கு குறுக்குவழியில் பணம்திரட்ட முயலாதீர்கள். அந்த பண வசூல் ஆசீர்வாத தட்டுமூலம் வேண்டாம்.

star2.gif  சபை மக்கள் அவரவர்கள் வசதிப்படி தங்கள் நிலத்தில், மரத்தில் விளையும் பொருட்களைஆலயத்துக்கு கொண்டுவாருங்கள். தங்கள் தொழிலில் விற்கும் பொருட்களை காணிக்கையாக ஆலயத்துக்கு கொண்டு வாருங்கள். முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் சமைத்த பலகாரங்கள் அல்லது கடையில் விற்கும் பலகாரங்களை விலைக்கு வாங்கி தங்கள் சார்பில் அதை ஆலயத்துக்கு கொண்டு வரலாம். அது அவரவர்களின் விருப்பம். சபை மக்களில் கைத்தொழில் தெரிந்தவர்கள் எம்ராய்டரி, பின்னலாடைகள், பிளாஸ்டிக் கூடைகள், பைகள் இவைகளை செய்து அதை ஆலயத்தில் சமர்பிக்கலாம். அதை சபையில் கொண்டுவந்து சமர்பித்து அதை ஏலத்தில்விட்டு, அந்த பணத்தை காணிக்கையாக ஆலயத்துக்கும், மிஷனரி பணிக்குமாக இப்படி பல நல்ல காரியங்களுக்கு உபயோகிக்கலாம்.

star2.gif  அது சூதாட்டம் அல்ல, அதை கள்ளர் குகை என்று இயேசுகிறிஸ்து கூறமாட்டார்.

star2.gif  ஆலயத்தில் எதை செய்தாலும் அதில் சாட்சியும், நியாயமும், உண்மையும் காணப்படவேண்டும். அதுதான் கடவுளுக்கு பிரியம்.

star2.gif  ஆலயத்தில் அசனம் நடத்துவது தவறல்ல, அறுப்பின் பண்டிகையும் - அசனமும் ஒன்றுதான். எனவே அது தவறல்ல!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கேள்வி:  ஜாமக்காரனில் சபை தலைவர்களைப்பற்றிய பலவித ஊழல் செய்திகளை நீங்கள் எழுதி வருகிறீர்கள்.

ஆனால், அதேசமயம் அவர்கள் சபை தலைவர்களாக, பிஷப்புகளாக, மாடரேட்டர்களாக, தலைமை பாஸ்டர்களாக அவர்கள் பதவி ஏற்கும்போது அவர்களை வாழ்த்துவதற்காகவே ஜாமக்காரனில் கடைசி பக்கங்களை ஒதுக்கி விசேஷ வாழ்த்துதல்களை நீங்கள் கூறுகிறீர்களே! இது முன்னுக்குப்பின் முரண்பாடாக உங்களுக்கு தோன்றவில்லையா?

பதில்:  அது முரண்பாடு அல்ல. பிஷப், மாடரேட்டர், சபை தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி ஏற்கும்போது வாழ்த்துவது பத்திரிக்கை ஆசிரியரான என் கடமை. அது நல்ல நாகரீகமுமாகும். அது நல்ல பண்பாடு ஆகும். ஆனால் அதேசமயம் எனக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட விசேஷ பொறுப்பின்படி, எனக்களிக்கப்பட்ட வித்தியாசமான ஊழியத்தின்படி என் வாசகர்களின் நன்மைக்காக, அவர்களை எச்சரிக்கவேண்டி, அதே தலைவர்கள் செய்யும் ஊழல்களையும் செய்து கொண்டிருக்கும்பாவங்களையும் அந்தந்த சபையில் உள்ள ஜாமக்காரன் வாசகர்களுக்குமட்டும் அறிவிக்கவேண்டி நான் அறிந்த செய்திகளை அந்தந்த சபை வாசகர்களுக்கு அறிவிக்கிறேன். இது முரண்பாடு அல்ல.

வேதத்தில் பவுல் ஒவ்வொரு பட்டணத்தில் உள்ள சபை மக்களுக்கு நிரூபங்கள் (கடிதங்கள்) எழுதும்போது கடிதத்தின் ஆரம்ப வார்த்தைகளை கவனியுங்கள். ரோமாபுரி சபையினருக்கு எழுதும் கடிதத்தின் தொடக்கத்தில் தேவபிரியர்களுக்கு எழுதுவதாவது, பரிசுத்தவான்களுக்கு எழுதுவதாவது என்றும், கொரிந்துவிலுள்ள சபைக்கு எழுதும்போது பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு, அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுவதாவது என்றும், எபேசுவில் உள்ள சபைமக்களுக்கும், பிலிப்புபட்டணத்தில் சபையினருக்கும், கொலேசு சபையினருக்கும் எழுதும்போது பரிசுத்தவான்கள் என்றும், விசுவாசிகள் என்றும் அவர்களை குறிப்பிட்டு புகழ்ந்து எழுதிவிட்டு, உடனே அதே கடிதத்தில் உங்களிடம்விபச்சாரம் உண்டென்று அறிகிறேன். பாவம் உங்களிடம் காண்கிறேன். உங்களுக்கு அன்பில்லை என்று அறிகிறேன் என்று எந்தெந்த சபைகளில், என்னென்ன தவறுகளை பாவங்களைக்குறித்து கேள்விப்பட்டாரோ, அவைகளை பகிரங்கமாக சுட்டிகாட்டி பவுல் எழுதிய வார்த்தைகளை கவனித்தீர்களா? இந்த சபைமக்கள் பாவம் செய்ததை, விபச்சாரம் செய்ததை பவுல் நேரில் கண்ட பின்னா அப்படி எழுதினார்? நீங்களே சொல்லுங்கள்? கேள்விப்பட்டதை வைத்து அவர் எழுதினார். ஒரு கடிதத்தில் வாத்தியார்போல பிரம்பை கையில் எடுத்துக்கொண்டு நான் வரவேண்டுமா? என்று உரிமையோடு கண்டித்து எழுதுகிறாரே! சபை மக்கள் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளாக சபையில் சேர்ந்ததால் அவர்களை பரிசுத்தவான்களே, விசுவாசிகளே என்று புகழ்ந்தார். ஆனால் சபையில் அந்த மக்கள் சேர்ந்தபின் அவர்களுக்குள் உண்டான விபச்சார, வேசித்தன பாவங்களை சுட்டிக்காட்டி அதை சபை மக்களுக்கு வாசிக்கும்படி அனுப்பப்பட்ட அதே கடிதத்தில் அவர்கள்பாவங்களை பச்சையாகவும், பகிரங்கமாகவும் சுட்டிக்காட்டி எழுதினாரே! இது முன்னுக்குப்பின்முரண்பாடா? அவர் வழியைத்தான் நான் பின்பற்றினேன். இதில் தவறு இருந்தால் கூறுங்கள். கோபப்பட்டு பிரயோஜனமில்லை.

star2.gif  சுமார் 30 வருடங்களுக்குமுன்பே மார்தோமா, CSI, லூத்தரன் சபை விசுவாசிகளின் சபை தலைவர்களை இப்படி நான் தாக்கி எழுதியதால் அவர்கள் என்னை மிகவும் வெறுத்தார்கள். தங்கள் சபை தலைவர்களை கண்மூடித்தனமாக கடவுளுக்கு சமமாக அவர்கள் கருதியதால் அவர்களின் பாவங்கள், தவறுகள், அவர்களின் தவறான உபதேசங்கள் எதுவும் அவர்கள் கண்களுக்கு பாவமாக தெரியவில்லை.

star2.gif  புறமதஸ்தர்கள் தங்கள் தெய்வங்களின் பாவத் தொடர்புகளை, ஆபாச கதைகளை அறிந்தும், அது தவறு, அது பாவம் என்று மனதார அவர்கள் அறிந்த பின்னும் பயபக்தியாகத்தானே அதே விக்கிரகத்தை அவர்கள் கும்பிடுகிறார்கள்! அப்படிப்பட்ட அறியாமை, மடமை பரிசுத்த தெய்வத்தை ஆராதிக்கும் நமக்கும் வரலாமா? அப்படி செய்தால் அவர்களுக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லையே!.

star2.gif  பாவம் பாவமாகத்தான் கருதவேண்டும். அது மகன் செய்தாலும், மகள் செய்தாலும்,பெற்றவர்கள் அல்லது கூடபிறந்த சகோதரர்கள், உறவினர்கள் யார் செய்தாலும் அந்த பாவத்தை பூசிமொழுகி நியாயப்படுத்தி சிபாரிசு செய்யக்கூடாது.

ஒரு கூட்ட வாசகர்கள் அப்படிப்பட்ட பழைமையான மூடபக்தியுடனும், மரியாதையோடும் இருந்தாலும் என் ஜாமக்காரன் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு நல்ல விழிப்புணர்வுஉண்டாக்கியுள்ளது என்பதை உணருகிறேன். அவர்கள் எனக்கு எழுதும் கடிதத்தில், அவர்கள் எழுதி அறிவிக்கும் செய்திகளை அறியும்போது தேவஆவியானவர் அவர்களுக்குள் பலமாக கிரியை செய்துள்ளார் என்று அறிந்து தேவனைத்துதிக்கிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அகம்பாவம் - பதவி பெருமை
 
kpkuruvilla1.jpg
Rt.Rev.K.P.KURUVILLA

உயர்பதவியில் ஒருவர் இருந்தால் அந்த பதவிக்கேற்ற பெருமை தானாக வந்துவிடும். பெருமை கொள்ளக்கூடாது என்று அவர்கள் நினைத்தாலும், கூடவேயுள்ள மற்றவர்கள் பதவியில் உள்ளவர்களை பெருமை உள்ளவர்களாக மாற்றிவிடுகிறார்கள். பிஷப் Rt.Rev.K.P.KURUVILLA அவர்கள் தன்னைப்பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, தன்னைக்குறித்த குற்றசாட்டுகளை வெளியில் மற்றவர்களிடம் கூறி தூற்றிதிரியாமல் என்னோடு நேரில் பேசி உண்மை விவரங்களைகேட்டு அறிந்துக் கொள்ளலாமே! என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த நேர்முக சம்பாஷனையில் இந்த விஷயத்தில் அவர் பதில் சரியல்ல. டையோசிஸ்ஸில் பல பிரச்சனைகளில் சபை மக்கள், சபை நிர்வாகிகள் பலர் அவரிடம் சபை பிரச்சனைக்குறித்து நேரில் பேச பல ஊர்களிலிருந்து சபையினர் பலமுறை நேரம் கேட்டு கடிதம் எழுதியும் பிஷப் அவர்கள் அவர்களோடு பேசவிரும்பவில்லை. அவர்களுக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்கவும் இல்லை, என்றாலும் சபை கமிட்டியினர் அனைவரும் சோரனூரில் உள்ள வடக்கு கேரளா டையோசிஸ் ஆபீஸ்ஸுக்கு அழைக்காமலே நேரில் சென்று பிஷப்பிடம் பேச அனுமதி கேட்டார்கள், பார்க்கமுடியாது என்று கூறிவிட்டதாக அறிந்தேன். இதற்காக பல மைல் தூரத்திலிருந்து வந்தவர்களை அவர் திருப்பி அனுப்பிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். பிஷப் அவர்கள் முன்கோபம் உள்ளவர், பிடிவாதம் உள்ளவர், செய்ய நினைக்கும் எந்த காரியத்தையும் அவர் முடிவுசெய்துவிட்டால் யார் ஆலோசனை கொடுத்தாலும், யார் தடுத்தாலும் அதை நிறைவேற்றியே தீருவார். இந்த சுபாவத்தால் டையோசிஸ்ஸில் சில நன்மைகளும் ஏற்பட்டது. மற்ற பிஷப்மார் யாரும்செய்யாத நடவடிக்கைகளை துணிந்து எடுத்து பண ஊழல் செய்த ஆயர்களை டிஸ்மிஸ் செய்தார். அதனால் பலரின் எதிர்ப்புகளும், விரோதங்களையும், வெறுப்புகளையும் சம்பாதித்துக்கொண்டார். இதன் காரணமாக பிஷப் அவர்களுக்கு இப்போது மனநிம்மதியில்லை. பல விஷயத்தில் சபை குருவானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. சீக்கிரமே பிஷப் தன் பதவியை அவரே ராஜினாமா செய்துவிடுவார் என்று பேசிக்கொள்கிறார்கள். பிஷப் அவர்கள் டையோசிஸ் பணத்தை திருடவில்லை, ஆனால் அவரின் கோப சுபாவமும், இணங்கிப் போகும் சுபாவம் அவருக்கு இல்லாததால், அதனால் உண்டான அகம்பாவம்தான் பிரச்சனைகளுக்குகெல்லாம் முக்கிய காரணம் என்றாகிறது.

star2.gif  இது பெரும்பாலான பிஷப்மார்களுக்கு பிஷப் பதவியில் அமர்ந்தவுடன் ஏற்படுகிற பதவி கர்வத்தால் உண்டாவதாகும். தமிழ்நாட்டில் அநேக ஆண்டுகளுக்குமுன் பதவியில் இருந்த பெரும்பாலான பிஷப்மார்கள் சபைகளை சந்திக்க வரும்போது அந்தந்த இடத்திலுள்ள ஆயர்கள் வீட்டில்தான் தங்குவார்கள். அங்கு சவுகரிய குறைவுகள் இருந்தாலும் அங்குதான் தங்குவார்கள். ஆயர்களிடம் சகோதரர்களைப்போல அவர்கள் குடும்பத்தோடு பழகுவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல, எந்த ஊருக்கு சபைகளை சந்திக்க வந்தாலும், மிகத்தொலைவிலுள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கி அங்கிருந்து தன் விலை உயர்ந்த காரில் இராஜாக்களைப்போல் ஆலயத்தில் வந்து இறங்குகிறார்கள். அதற்கான பிரயாண செலவை அந்த சபையிலிருந்து வாங்கிவிடுவார்கள். பிஷப்.துரை அவர்கள் பதவியில் இருந்தபோது சேலத்துக்கு வந்தால் அவர் தங்குவதற்காகவே எப்போதும் தயார் நிலையிலுள்ள பிஷப் பங்களா ஒன்று உண்டு. ஆனால் பிஷப் அங்கு தங்காமல் ஸ்டார் ஓட்டலில் தங்கி சேலத்திலுள்ள சபைகளை, ஸ்தாபனத்தை சந்தித்து செல்வதை வழக்கமாக கொண்டார். பிஷப் அவர்களின் மனைவியின்சர்வாதிகாரம் பிஷப்பைவிட கூடிப்போனது. பணிவு போனது - எளிமை போனது - தாழ்மை போனது. அதனால்தான் அவர்களுக்குள் பெருமை வந்தது - அகம்பாவமும் உயர்ந்தது.

இயேசுகிறிஸ்து சொன்னார். நான் ஊழியம் கொள்ள வரவில்லை. ஊழியம் செய்யவே வந்தேன்.

star2.gif  இப்போதுள்ள பிஷப்மார்களின் கார்களை கவனித்துப்பாருங்கள். ஊரில் எந்த கோடீஸ்வரர்களும் வைத்திராத விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார்கள். அப்படிப்பட்ட கார்களுக்கு பெட்ரோல் செலவு அதிகமாகும். அதனால் பல பணக்காரர்கள்கூட அப்படிப்பட்ட கார்களை உபயோகிப்பதை தவிர்த்தார்கள். ஆனால் நம் பிஷப்மார்களோ மிக ஆடம்பர கார்களையே வாங்கி அதில் பயணம் செய்கிறார்கள். அதுவும் ஒன்றல்ல, இரண்டு, மூன்று விலை உயர்ந்த கார்களை வாங்கி தன் கவுரவுத்துக்காக வீட்டின்முன் அழகாக நிறுத்தி வைத்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தாழ்மை, எளிமை, பணிவு எப்படி வரும்?

star2.gif  இவர்கள் ஆயர்களாக இருந்தபோது இவர்களின் பழைய குடும்ப நிலை எப்படியாக இருந்தது. அவர்களின் குடும்ப பின்னணி என்ன? பிஷப்மார்கள் தாங்கள் ஆயராக வாழ்ந்த ஆரம்ப வாழ்க்கையை யோசிக்க விரும்பவில்லை. அதை அவர்கள் யோசித்தால் குற்ற உணர்ச்சியினால் கூனி குருகிபோவார்கள்.

 

நிர்வாக கமிட்டிகளின் பெரும் தவறு

star2.gif  பிஷப்மார்களின் இப்படிப்பட்ட பெருமை - அகம்பாவ வாழ்க்கைக்கு கமிட்டியில் உள்ளவர்களே முக்கிய காரணமாகிறார்கள். இவர்கள் பிஷப்மார்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்க தாங்கள் லாபம் அனுபவிக்க பிஷப்மார்களை மிக உயரத்தில் கொண்டுபோய், அவர்களை புகழ்த்தி, உயர்த்திவிடுகிறார்கள். அதனால் தாழ்மையுள்ள நல்ல பிஷப்மார்களையும் இவர்களின் புகழ்ச்சி பெருமையடையசெய்து, கெடுத்துவிடுகிறது.

star2.gif  இந்தியாவின் நான்கு தென்மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலுள்ள CSI, மார்தோமா பிஷப்மார்களிடம் உள்ள விலையுயர்ந்த கார்களின் பெயர்கள், அதன் விலை விவரம், ஒவ்வொரு பிஷப்மார்களுக்கும் எத்தனை கார்கள் உண்டு என்ற விவரங்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியல் என்னிடம் உண்டு. அதை வாசகர் அறிந்தால் அதிர்ச்சியடைவீர்கள். CSIசபையில் காணிக்கை பணம் நிரம்பி வழிகிறது. அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த காணிக்கை பணத்தை பொருளாகவும், விலையுயர்ந்த கார்களை வாங்கியும், அரண்மணை போன்ற வீடுகளை பிஷப்மார்களுக்கு பணிந்து, அதில் குடியிருத்தி பிஷப்பை உயர்த்திவிடுகிறார்கள். Fanஇல்லாமல் வாழ முடியவில்லை என்ற காலம்போய் A/C இல்லாமல் இப்போது வாழமுடியவில்லை என்று அவர்கள் கூறும் அளவு கெடுத்துவிட்டனர்.

star2.gif  சில பிஷப்மார்கள் தேவையில்லாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உலகம் சுற்றும் வாலிபர்களாக மாறி தன் குடும்பங்களையும், உறவினர்களையும் டையோசிஸ் பணத்தில் கூட அழைத்துக்கொண்டு வருடத்தில் பலமுறை உல்லாச பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் டையோசிஸ்க்கு எத்தனை கோடி பணம் நஷ்டமாகிறது தெரியுமா?

 

பெருமையினால் வந்த பாதிப்பு ஒரு சின்ன உதாரணம்:

star2.gif  மிஷனரிகள் அந்தகாலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், ஸ்தாபனங்களை ஏற்படுத்தியது சபைக்காக, சபை மக்களுக்காக, குறிப்பாக சபையிலுள்ள ஏழை பிள்ளைகளுக்காக பணம் கட்ட வசதியில்லாவர்களுக்காக, விதவைகளுக்காக டையோசிஸ்ஸின் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமைகொடுக்கவே மிஷனரிகள் ஏழைகளுக்கு நல்ல ஏற்பாடுகளை செய்து வைத்தார்கள். இயேசுகிறிஸ்துவின் விருப்பமும் அதுதான். இதை நாம் யாவரும் அறிவோம்.

star2.gif  தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட CSI டையோசிஸ்ஸில் வேலை வாய்ப்புக்கான லிஸ்டில் பதிவு செய்துள்ளவர்களின் பெயர்களை எண் வரிசைப்படி அச்சடித்து வைத்துள்ளார்கள். அதில் ஆரம்ப வரிசையிலுள்ளவர் ஒரு பெண், அவள் யாருமற்ற ஏழைப்பெண், B.Com படித்தவர். அந்த பெண் அப்பா, அம்மா இல்லாத அனாதை வாலிபப்பெண், மேலும் அவளுக்கு இரண்டு கால்களும் செயலற்றுபோனதால் கையில் சுற்றி ஓட்டும் 3 சக்கர சைக்கிள் வாகனம் அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவள் சபையிலும், டையோசிஸ்ஸிலும் சபை ஊழியங்களிலும் பல வருடங்கள் அவள் பங்களிப்பு அதிகம். ஞாயிறு பள்ளி முதல் சபை வாலிபப்பெண்கள் ஐக்கியம், மேலும் பெண்கள் ஐக்கிய சங்கம் ஆகியவற்றில் எல்லாம் அவளின் பங்களிப்பு ஏராளம் இருந்தது. அவள் 1000 ரூபாய் சம்பளத்தில் தனியார் ஸ்தாபனத்தில் தன் ஆகாரத்துக்காக சிறுவேலை செய்துவந்தாள். இந்நிலையில் அந்த பெண் டையோசிஸ்ஸில் அக்கவுண்டன்ட் வேலைக்கு பல வருடங்களுக்கு முன்பே விண்ணபித்து முதல் ரேங்க் லிஸ்டில் வந்தாள். அந்த பெண் பிஷப் அவர்களை நேரில் சென்று தன் நிலையை விளக்கினாள். பிஷப் அவர்களும் அடுத்த வாய்ப்பில் உனக்கு வேலை போட்டு தருகிறேன் என்று வாக்கு பண்ணினார். ஆனால் நடந்தது என்ன?

star2.gif  பிஷப்புக்கு சுமார் 100 ஓட்டுகளை பெற்று தரும் நபர் ஒருவரின் சிபாரிசின்படி 99வது வரிசையில் உள்ள ஒரு பணக்கார வாலிபனுக்கு ஏற்கனவே நல்ல வருமானம் உள்ள வேலையில் இருந்த அந்த வாலிபனுக்கு அந்த வேலையை கொடுத்துவிட்டார். கால்கள் இயங்க இயலாத அந்த பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய வேலையை அந்த பையனுக்கு பிஷப் கொடுத்தது பலரின் மனதை வேதனையடைய செய்தது. இதைக்குறித்து பலர் எத்தனையோ முறை பிஷப்பிடம் எடுத்து கூறியும் அவர் மனம் இறங்க வில்லை. எனக்கு 100 ஓட்டுகள் பெற்றுதரும் அந்த நபரின் சிபாரிசுதான் எனக்கு மிக முக்கியம். ஆகவேதான் அந்த வேலையை அவர் சிபாரிசு செய்த பையனுக்கு தந்தேன் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

 

விளைவு:

star2.gif  இந்த ஏமாற்றம் தாங்காமல் அந்த ஏழை பெண் சில நாட்களில் தனக்கு வாழ, கிடைத்த வழியும் அடைந்துபோன ஏமாற்றத்தால் திடீர் என்று இறந்துப்போனாள்.

star2.gif  ஒரு பிஷப்பின் அகம்பாவ செயலை உணர்ந்தீர்களா? அந்த அனாதை, கால் இல்லாத ஏழை வாலிபப்பெண்ணின் கண்ணீர், அவளின் மரணம், பிஷப்பையும், அவரை கட்டாயப்படுத்தி சிபாரிசு செய்த அந்த பணக்கார நபரையும் சும்மாவிடுமா? அந்த பிஷப்புக்கும் மகள் உண்டு, அந்த பணக்கார நபருக்கும் மகள் உண்டு என்பதை இவர்கள் யாவரும் மறந்துபோனார்கள். ஆனால், தேவன் மறக்கமாட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கேள்வி:  கோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் ஜெபத்தில் பொய்யாய் பெயர்களையும், வியாதியின் பெயரையும் கூறும் நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களை தன் GEM மிஷனரி பணதளத்தின் கட்டிட திறப்புவிழாவுக்கு அழைத்துள்ளாரே? இப்போது மோகன் சி.லாசரஸ்ஸின் உபதேசத்தை அவர் சரி என்கிறாரோ? வைராக்கிய உபதேசம் கொண்டவர் என்று பெயர் பெற்ற சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் கூடவா தவறான உபதேசத்தை சமரசம் (Compromise) செய்து கொண்டார்? யாரையும் நம்பமுடியவில்லையே! ஊழியக்காரர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது!.

பதில்:  சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் ஒரு டெக்னிக் வைத்துள்ளார். தனக்கு மக்கள் அனுப்பும் காணிக்கையை FMPB, GEM, BYM போன்ற மிஷனரி ஸ்தாபனங்களுக்கு பணம் அனுப்பி பல மிஷனரிகளை தாங்க, நிறைய பணத்தை அள்ளிவீசி அவர்கள் வாயை அடைத்துபோடுகிறார். பணம் பெற்ற ஸ்தாபனங்கள் அவர் அனுப்பின பெருந்தொகைக்கு நன்றி காண்பிக்கவும், தொடர்ந்து அவரிடமிருந்து பணம் பெறவும் மோகன் சி.லாசரஸ் அவர்களை இப்படிப்பட்ட திறப்புவிழா கூட்டங்களுக்கு அழைத்து கவுரவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

agastin.jpg
சகோ.அகஸ்டின் ஜெபகுமார்

மேடையில் ஜெபத்தில் பெயர் அழைப்பது, மேடையில் நடிகர்கள், அரசியல்வாதிகளை, நக்மா போன்ற ஏமாற்று சாட்சிகளைக் கூறும் நடிகைகளை மோகன் சி.லாசரஸ் தன் மேடையில் அமர்த்தி தானும் பக்கத்தில் அமர்ந்து அவர்களை சாட்சி கூற வைக்கிறார்கள். இதைசகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் தன் ஒவ்வொரு கூட்டத்திலும் பகிரங்கமாக கண்டித்தவர்தான் இப்போது ஏனோ சில மாற்றங்கள் காணப்படுகிறது. ஜெபத்தில் பொய் பேசும் மோகன் சி.லாசரஸின் தவறான பல விஷயங்களை பிட்டுபிட்டு வைத்து பகிரங்கமாக கண்டித்தவர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார். ஆனால் இனிமேல் முன்புபோல் மோகன் சி.லாசரஸ்போன்றவர்களின் மேடையில் நடப்பிக்கும் மந்திரவாத ஊழியங்களைக்குறித்து தவறு என்று அவர் கூறமாட்டார் என்று பலர் நினைக்க தொடங்கிவிட்டனர். மேலும் அவரின் தவறான உபதேசங்களை அவர் இனி கண்டுக் கொள்ளவுமாட்டார். மக்களுக்கு இவர்களைக்குறித்து பேசி விழிப்புணர்வு உண்டாக்கியதைக்கூட தவறு என்று கூறி, தன் செய்த பிரசங்கத்தை வாபஸ் வாங்குவாரா என்பதும் தெரியவில்லை என்று ஒரு வாசகர் எழுதுகிறார். ஸ்தாபனங்கள் வளரவளர தவறான உபதேசத்தை சமரசம் செய்துக் கொள்வார் என்பது சகோ.அகஸ்டின் ஜெபகுமார் விஷயத்தில் நிச்சயமாக உண்டாகாது என்பதை எதிர்ப்பார்போம்.

ஊழியக்காரர்களைக்குறித்து நீங்கள் குறிப்பிட்டதுபோல உங்களின் பயம் நியாயமானதே! என்ன செய்ய? இயேசுகிறிஸ்து சொன்னார் இது கடைசி காலம்! எச்சரிக்கையாக இருங்கள்! ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கேள்வி:  உங்களுக்கு பரலோகத்தையோ, தேவ தூதர்களையோ இங்கிருந்து பார்க்க பிடிக்காதா? அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா? ஒருவேளை உங்களுக்கு அந்த ஆசையில்லை என்றால் அப்படிப்பட்ட அனுபவம் பெற்ற ஊழியர்களை நீங்கள் குறை சொல்ல கூடாதல்லவா?

பதில்:  உண்மையில் பரலோகத்தை எனக்கு இங்கிருந்து பார்க்கும் எண்ணம் இல்லை. ஆசையும் இல்லை. அப்படியே தூதர்களை பார்க்கும் ஆசையும் எனக்கு இல்லை. தூதர்களை நான் ஏன் பார்க்கவேண்டும்?

தேவ தூதர்கள் என்னை பாதுகாக்க, என்னைப்பற்றி விவரங்களை கர்த்தரிடம் அறிவிக்க தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட வெறும் வேலைக்காரர்கள் ஆகும். அவர்களை நான் பார்ப்பதில் எனக்கு என்ன பிரயோஜனம்!

அப்படியே பரலோகத்தை இங்கிருந்து பார்த்து ரசிப்பதைவிட பரலோகத்திலேயே தங்கியிருக்கத்தான் எனக்கு ஆசை. அதற்கு இந்த உலகத்தில் தேவன் அருளிய வேத வசனத்தின்படி பரிசுத்தமாக ஜீவித்து ஒவ்வொரு வசனத்துக்கும் கீழ்ப்படிந்து தேவன் என்னை என்ன நோக்கத்தோடு, எதை எதிர்ப்பார்த்து இந்த உலகத்தில் பிறக்கச்செய்தாரோ அதை நிறைவேற்றி பரலோகம் போய் இயேசுகிறிஸ்துவோடு என்றென்றும் வாழ இந்த உலகில் அவர் சித்தம் என்னில் நிறைவேற முயன்று கொண்டிருக்கிறேன்.

தாவீது ஜெபிப்பதைப்போல் கர்த்தாவே! உமக்கு பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்(சங் 143:10). என்பதே என் தினசரி ஜெபமாயிருக்கிறது.

மற்றப்படி நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட ஊழியக்காரர்களைப்போல் பரலோகம் நரகம் ஆகிய இடங்களுக்கு சென்றுவர தினசரி பஸ் சர்வீஸ் நடத்த எனக்கு பிரியமில்லை. அவர்களைப்போல்பரலோகம், நரகம் தேவ தூதர்களோடு பேசுவது போன்ற கற்பனை கதைகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்ற நான் விரும்பவுமில்லை. அப்படிப்பட்ட பரலோக அனுபவத்தையும், நரக அனுபவத்தையும் கூறும் எந்த ஊழியர்களையும் நீங்கள் நம்பாமல் இனியாவது உங்கள் ஆத்துமாவை ஜாக்கிரதையாக இப்படிப்பட்ட பொய் ஊழியர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!


கேள்வி:  இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் மரண நேரத்தில் நான் மரித்தால் தன்னைப் புதைக்கக்கூடாது என்றும், தன் சரீரத்தை எரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சபையினரும், எங்கள் மெத்தடிஸ்ட் சபை போதகரும், அவர் குடும்ப உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து எரித்துவிட்டனர். இவர்கள் செய்தது சரியா? மெத்தடிஸ்ட் பாஸ்டர்மார் அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கலாம்?

பதில்:  உங்கள் கேள்வியின் ஆரம்ப வரிகளிலேயே தவறு உண்டு. நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் இரட்சிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது தவறு. இரட்சிக்கப்பட்டவர் என்பவர் வேதத்தையும் வாசித்து தெளிவு பெற்றிருக்கவேண்டும். வசனப்படி நீங்கள் குறிப்பிட்ட நபர் இரட்சிக்கப்பட்டவராக இருந்திருந்தால் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கமாட்டார். மரித்தப்பின் தன் ஆத்துமா எங்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் இரட்சிக்கப்பட்டவரோ, இரட்சிக்கப்படாதவரோ, யாராக இருந்தாலும் அவர் மரித்தபின் எரித்தாலும் தவறில்லை, பெட்டியில்வைத்து அடக்கம் செய்தாலும், பெட்டியில் வைக்காமல் அடக்கம் செய்தாலும் அதிலும் எந்த தவறும் இல்லை.

"எத்தனையோ மிஷனரிகள் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட இடத்தில் வாளால் வெட்டப்பட்டு காடுகளில் எறியப்பட்டிருக்கிறார்கள். துண்டு துண்டாக எறியப்பட்ட அவர்கள் சரீரம் மிருகங்களுக்கு இறையாயின. சிலரின் சரீரம் அப்படியே அழுகி நாற்றமெடுத்து மண்ணோடு மண்ணாகிப் போயின. கப்பலில் பயணம் செய்தவர் கப்பலில் மூழ்கி மரித்தனர். விமானம் வெடித்து சிதறி சிலர் சாம்பலாய் காற்றில் கரைந்தனர். ஆகவே மரித்தப்பின் சரீரம் எப்படி போனாலும் பரவாயில்லை. ஆத்துமாதான் முக்கியம். அது விலையேறப்பெற்றது".

சாகும்போது மனம்திரும்பின அனுபவத்தோடு ஒருவர் மரித்தால் அவர் தன் சரீரத்தை குறித்து கவலைப்படமாட்டார். உங்கள் பாஸ்டர் அவர் ஆசையையும், குடும்பத்தினர் ஆசையையும் நிறைவேற்றியிருக்கிறார். அவர் செய்ததில் தவறேதும் இல்லை. அவர் குடும்பத்தினருக்கு இந்த சமயத்தில் வேதவசனப்படி மரணத்துக்குபின் உள்ள காரியங்களைக் குறித்து சரியான ஆலோசனை கொடுத்திருக்கவேண்டும். மரித்தவர் தவறான வசன அடிப்படையில்லாத காரியங்களை ஆசைப்பட்டால் அதையெல்லாம் உயிரோடு இருக்கும் விசுவாசிகள் குடும்பத்தினர் அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது தவறு. இதை பாஸ்டர் அந்த குடும்பத்தினருக்கு விளக்கியிருக்கவேண்டும்.


கேள்வி:  உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன?

பதில்:  AOG சபையின் மீது எனக்கு வெறுப்பு என்று இப்போது எழுதிக்கொண்டு வருகிற விஷயத்தை வைத்து நீங்கள் தீர்மானித்துவிட்டீர்கள். அடிப்படை வேத படிப்பு இல்லாத ஆயிரக்கணக்கான சில்லறை பெந்தேகோஸ்தே சபைகளைவிட (Independent Pentecostal churches) ஓரளவு கட்டுப்பாடுள்ள ஸ்தாபன சபையும் உலகம் முழுவதிலும் குறுகிய காலத்தில் மிக அதிக எண்ணிக்கையோடு வளர்ந்துவரும் நல்ல சபையாக நான் கருதும் AOG சபையை நான் மதிக்கிறேன். அதை நான் வெறுக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பே அதில் உள்ள பல பாஸ்டர்கள், AOG விசுவாசிகள் இவர்களுக்குள்ளே புகைந்து, கொதித்து கொண்டிருந்த சில முக்கிய விஷயங்களையும், AOG சபை தலைவர்களால் வெறுக்கப்பட்ட அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட சில சிறிய AOG சபைகளின் பாஸ்டர்கள் மனதில் உண்டான பலவிதமான ஆதங்கங்களையும், மூடிமறைக்கப்பட்ட முக்கிய விஷயங்களையும் பல AOG சபை பாஸ்டர்களும், விசுவாசிகளும் சில வருடங்களாக என்னை நிர்பந்தித்து எழுதசொல்லி அறிவித்த தகவல்களையும், அவர்களுடைய நன்மைக்காகவும் குறிப்பாக AOG சபையில் உள்ள என் வாசகர்கள்கேட்டுக்கொண்டதற்கிணங்க AOG சபையின் உள்விவகாரங்களை வெளியிட்டேன். அது அந்த நல்ல சபைக்கு நன்மையாகவும் அவர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்கவும் நிச்சயம் உதவி செய்யும். மற்றபடி AOG சபைகள் மீதோ மற்ற எந்த பெந்தேகோஸ்தே சபைகள் மீதோ எனக்கு வெறுப்பு ஏதும் இல்லை.

ஆனால், பொதுவாக அனைத்து பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் சபையில் உள்ள விசுவாசிகள் யாவருக்குள்ளும் ஒரு பெரிய குற்ற உணர்ச்சி உண்டு. அது அவர்கள் பேசும் அந்நியபாஷை ஆகும். மாய்மாலமாக இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்நியபாஷையை இவர்கள் சபையின் அஸ்திபார உபதேசமாக வைத்துக்கொண்டிருக்கும் வரை சபைக்குள் போலி விசுவாசிகளின் எண்ணிக்கை,போலியான பாஸ்டர்களின் எண்ணிக்கை நீண்டுபோகுமே ஒழிய சபை பரிசுத்தத்திலும், வசனத்திலும் வளரவே வளராது.

போலி இருக்கும் இடத்தில் உண்மை எப்படியிருக்கும்? உண்மையில்லாவிட்டால் பரிசுத்தமும்இருக்காதே! பிசாசு எப்படியாய் வஞ்சிக்கிறான்! இந்த போலியான பாஷையால்தான் பாஸ்டர்மார்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் நம்ப முடியவில்லை. பாம்பின் கால் பாம்பறியும்என்பதைப்போல், ஒரு பாஸ்டர் பேசும் பாஷையை - மற்றொரு பாஸ்டருக்கு அது போலி என்பது மிக நன்றாக தெரியும். இப்படி ஒருவரை ஒருவர் நம்பாமல் இந்த பெரிய சந்தேகத்தை மனதிலே வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை காலம் சபையை நடத்துவார்களோ தெரியவில்லை. ஆத்துமாவுக்கு பிரயோஜனமில்லாத அந்நியபாஷையை இன்னும் எவ்வளவு காலம் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கேள்வி:  திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தவரும், தமிழ் இலக்கணத்தை தமிழர்களுக்கே முதலில் எழுதி கற்று கொடுத்த வெளிநாட்டினவரான வீரமாமுனிவர் என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் என்ன?

cjb.jpg
Fr.CONSTANTINE
JOSEPH BESCHI.S.J

பதில்:  இவரின் இயற்பெயர் Costanzo Giuseppe Beschi என்பதாகும். ஆங்கிலத்தில் அவர் பெயர் கான்ஸ்டென்டைன் ஜோசப் பெஸ்கி (CONSTANTINE JOSEPH BESCHI.S.J) என்பதாகும். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னுமிடத்தில் பிறந்தவர்.

இவர் இலத்தீன் மொழியில் திருக்குறளின் முக்கிய பகுதியாகிய அறத்துப்பால், பொருட்பால் ஆகியவைகளையும் சிறப்பாக மொழி பெயர்த்து உலகுக்கு திருக்குறளின் பெருமையை நிலைநாட்டினார்.

தோமா இந்தியாவுக்கு வந்த காலகணக்கின்படி திருவள்ளுவர் கிறிஸ்துவின் உபதேசத்தை இயேசுகிறிஸ்துவின் சீஷன் தோமா மூலமாக அறிந்து வேத வசன கருத்துக்களை அப்படியே திருக்குறள் வடிவமாக்கி சிறப்படைந்தார் என்று இவரின் ஆராய்ச்சி கூறுகிறது.

star2.gif  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜீ.யு.போப் என்ற ஆங்கிலேயர் ஆவார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கேள்வி:  CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன?

பதில்:  நீங்கள் இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்ததைப்போல் பேசுகிறீர்கள்? இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் பிஷப்மார்கள் நீக்கம், CBI விசாரணை, நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு ஆகிய எதைப்பற்றியும் உங்களுக்கு தெரியாதா? ஐயா, நீங்கள் கூறிய எல்லா முயற்சிகளும் செய்தாயிற்று. இப்போது முயற்சியின் அல்ல, போராட்டத்தின் முடிவைத்தான் எல்லாரும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

தவறுக்கு சட்டத்தில் தண்டனை உண்டு - ஆனால் தீர்ப்பு எப்படியிருந்தாலும் சட்டத்திலுள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள், பிடிப்பட்டவர்கள் யாவரும் அந்த சட்டத்தின் ஓட்டைவழியாக தப்பிவர இப்போது வசதியும் இருக்கிறது. அதனால்தான் சுனாமி பணம்கொள்ளையடித்தவர்கள் கையும் களவுமாக பிடிப்பட்டும் தீர்ப்பு கூறமுடியாமல் நீண்டு கொண்டுபோகிறது.

star2.gif  மேலும் 44 வருட என் ஊழியத்தில் கடந்த 30 வருடங்களாகத்தான் பல பிஷப்மார்கள் பண ஊழலிலும், சாட்சி கெட்டும் சர்வாதிகாரமாகவும், நடப்பதை காண்கிறேன். அதற்குமுன் அப்படியில்லை. இப்போதும் பல திருமண்டலத்தில் பல விதத்தில் நான் விசாரித்து விவரம் சேகரித்தபோது, பணக்கொள்ளை, நில ஊழல், டொனேஷன், அட்மிஷன் இப்படிப்பட்ட காரியங்களில் பிஷப்மார்கள்பெயர்கள்தான் முன்னே வருகிறதே தவிர, பிஷப்மார்களை ஆட்டுவிக்கிற சபை பிரமானிகளும், கமிட்டியில் உள்ள சில முக்கிய புள்ளிகளுமாக பெரிய கொள்ளைக்கூட்டமே பிஷப்மார்களுக்கு பின்னால் இயங்குகிறது என்பதை அறிந்தேன். போதாததற்கு அரசியல்வாதிகளும், மந்திரிமார்களும் டையோசிஸ் விஷயங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டனர்.

star2.gif  உதாரணமாக, கேரளாவில் பிஷப் அவர்கள் 12 கோடி லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வந்தது. ஆனால் உண்மையாய் பிஷப் பெயரில் அந்த குறிப்பிட்ட டையோசிஸ்ஸில் உள்ள கமிட்டி பிரமுகர்கள்தான் அந்த 12 கோடியை வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அறிந்தேன்.

கோயமுத்தூர் CSI டையோசிஸ், கர்நாடகா CSI டையோசிஸ் மற்றும் ஆந்திராவில் சில CSIடையோசிஸ்ஸில் மட்டுமே அங்கு நடந்த எல்லா பண ஊழல்களுக்கும் பெரும்பாலும் பிஷப்மார்களேகாரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் மற்ற டையோசிஸ்ஸிலும் குறிப்பாக கேரளா CSIடையோசிஸ்களில் நடந்த பெரும்பாலான ஊழல்களுக்கு பிஷப்மார்கள் காரணமல்ல, அவர்களை ஆட்டிவைத்த கமிட்டியில் உள்ள பெரும்புள்ளிகள்தான் காரணம் என்று அறியப்பட்டது. என்றாலும் தவறுகள் யார் செய்தாலும், பொறுப்பில் உள்ள பிஷப்மார் அப்படிப்பட்ட பணக்கொள்ளைக்கு ஒத்துப்போகக்கூடாது. தவறு செய்தவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது.

star2.gif  பிரதமர் கைசுத்தம் என்ற பெயர் இருந்தாலும், தனக்கு கீழ் உள்ள மந்திரிமார்கள் ஊழல் செய்யும்போது அதை கண்டிக்காததும், அதை தடுக்காததும் பெரும் குற்றமாகும். அவர் தலைமை பதவிக்கே லாயக்கற்றவர் என்றுதான் கூறவேண்டும். இதன்மூலம் முழு இந்தியாவுக்கே கெட்டபெயர் வந்துவிட்டதே. அதேபோல் பிஷப் பெயரில் நடத்தப்படும் எல்லா தவறுகளுக்கும் பிஷப்தான் முழு பொறுப்பேற்கவேண்டும். ஆகவே எல்லா CSI & LUTHERAN டையோசிஸ்களிலும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை கழுவி சுத்தப்படுத்தினால் மட்டுமே நம் CSI & LUTHERAN சபைகளும், சபை மக்களும் வசனத்திலும் சாட்சியுள்ள ஜீவியத்திலும் வளரமுடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Erode CSI 20120322a_006101007



__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard