சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது "Online இஸ்லாமிய செக்ஸ் கடை", இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான் இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் " இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை." திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார்.அவர் மேலும் கூறும் பொழுது: "நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது. திருமணமான தம்பதிகளுக்கு தேவையான தாம்பத்திய வாழ்வை திருப்தி செய்யும் பொருட்களையே விற்கிறேன்." என்றார். இதிலே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், பாலியல் வக்கிரங்களை சந்தைப் படுத்தும் சாதாரண மேற்கத்திய செக்ஸ் கடையைப் போல இதனைக் கருத முடியாது. இருப்பினும் நெதர்லாந்து ஊடகங்கள், இதை ஏதோ இஸ்லாமிய மதத்தினரிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சி என்பதைப் போல சித்தரித்திருந்தன.

பாலியல் கேளிக்கைப் பொருட்களை விற்கும் செக்ஸ் கடைகள், முதலாளித்துவம் கோலோச்சும் சர்வதேச நகரங்களில் சாதாரணமாக காணப்படும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசியாவில் இந்து /பௌத்த/கிறிஸ்தவ பழமைவாதம் பேணும் நாடுகள், ஆகிய இடங்களில் மட்டும் இவை காணப்படுவதில்லை. தனி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்ற சூத்திரம் முதலாளித்துவத்தின் அடிப்படை. அதன் பிரகாரம் எதோ ஒரு வகையில் செக்ஸ் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. "இன்டர்நெட்" என்ற மகத்தான கண்டுபிடிப்பு அதற்கு உதவுகின்றது. ஏதாவது நாடு அதை தடை செய்யும் பட்சத்தில், "தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறார்கள்" என்று அந்த நாடு மீது குற்றம் சாட்ட முடியும்.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பகிரங்கமாக செக்ஸ் கேளிக்கைப் பொருட்கள் விற்கும் கடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் அவை கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ரகசியமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அல்லது சில சட்டவிரோத வியாபாரிகள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள். தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள்,பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு "கலாச்சார மோதல்", "அல்கைதா அபாயம்", "மத அடிப்படைவாதத்தை அடக்குதல்" என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது.
கம்யூனிசத்திடம் இருந்து விடுதலையான ரஷ்யா முதல், இஸ்லாமிய அடிப்படைவாதத்திடம் இருந்து விடுதலையான ஆப்கானிஸ்தான் வரை பரவி வரும் சமூகச் சீரழிவுகளுக்கு தனி மனித சுதந்திரம் என்று பெயர் சூட்டப்படுகின்றது. இத்தகைய "விடுவிக்கப் பட்ட பகுதிகளில்" பாலியல் தொழில் அமர்க்களமாக நடக்கின்றது. பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கூட குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சமுதாய சீர்குலைவுக்கு காரணமான வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அதனால் "கம்யூனிசமும், இஸ்லாமும் தனி மனித சுதந்திரங்களை அடக்கி வைத்திருந்தார்கள்." என்று நாமும் விளக்கம் கூறக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்குலக பல்கலைக்கழகங்கள் இதை "கலாச்சாரங்களின் மோதல்" என்று வரைவிலக்கணம் கொடுக்கின்றன. தாலிபானும், அல்கைதாவும் அதையே "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரத்திற்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் போராட்டம்" என்று
திருப்பிப் போடுகிறார்கள். யாழ்ப்பாண தமிழர்களிடையே கலாச்சார சீர்குலைவு காணப்பட்டால், அதனை "தமிழர்கள் மீதான சிங்களவர்களின் சதி" என்பார்கள் தமிழ் தேசியவாதிகள். தென்னிலங்கை கடற்கரைகளில் வெள்ளையின உல்லாச பயணிகளின் காமவெறிக்கு இரையாகும் (சிங்கள) சிறுவர்கள் பற்றி இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மதவாதிகள், தேசியவாதிகள் எல்லோரும் இதனை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கின்றார்கள். இவர்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினை ஒன்று தான். சமூக சீரழிவுகளுக்கு காரணம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பதை நம்ப முடிவதில்லை.
மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக "ஹலால்" பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், "ஹலால் சந்தையில்" ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள். "இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே" என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள். நெதர்லாந்தின் மிகப் பெரிய சூபர் மார்க்கட் நிறுவனம் (Albertheijn) தனது கடைகளில் ஹலால் முத்திரை இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றது. இந்த ஹலால் வியாபாரத்தில் புதிய வரவு "சைக்கிள் கம்பனி".
நெதர்லாந்து ஒரு சைக்கிள்களின் நாடு என அழைக்கலாம். ஐரோப்பாவில் இந்த நாட்டில் தான் சைக்கிள் பாவனையாளர்கள் அதிகம். ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சைக்கிள் பாவிப்பது குறைவு. அவர்கள் அநேகமாக கார், அல்லது மோட்டார் சைக்கிளையே நாடுகின்றனர். வெளிநாட்டு குடிவரவாளர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்வது பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. அதனால் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கேற்ற "ஹலால் சைக்கிள்" தயாரிக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், " இஸ்லாமிய மத நம்பிக்கையின் பிரகாரம் பெண்கள் சைக்கிள் ஓடுவது விரும்பத்தக்கதல்ல என்று எமது ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறோம்." என்பது தான். இறைதூதர் முகமது நபி வாழ்ந்த காலத்தில் சைக்கிள் இருந்ததாக நாம் அறியவில்லை. பெண்கள் சைக்கிள் ஓடக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு, பெருமளவு சைவத் தமிழர்கள் வாழும் யாழ் குடாநாட்டிலும் இருந்துள்ளது. (கடந்த 30 வருடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன.)
முஸ்லிம்கள் சைக்கிளை விரும்பாததற்கு மதக் கட்டுப்பாடு தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செய்தியை அறிவித்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே மேலதிக விளக்கமும் கிடைக்கிறது. காரில் வீதிவலம் வருவது, வயதுக்கு வராவிட்டால் ஸ்கூட்டரில் ஸ்டன்ட் காட்டுவது, என்பது இளைய தலைமுறையின் நாகரீக மோகம். முஸ்லிம் இளைஞர்களும் உலகை ஆட்டிப்படைக்கும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகள் தான். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட "டூவீலரில்" போவது மத்திய தர வர்க்க "ஸ்டேடஸ்". சைக்கிளில் போனால் சமூகத் தாழ்வாக கருதிக் கொள்வார்கள். ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் தாம். ஜாலியாக காரில் பறக்கும் நாகரீக இளைஞர்களிடம் "வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவினால் சுற்றுச் சூழல் மாசடைவது" பற்றி போதிக்க முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
மத நம்பிக்கையாளர்களை விட பண நம்பிக்கையாளர்கள் பெருகி வரும் காலம் இது. முதலாளித்துவ கலாச்சாரம் இன்று அனைத்து மதங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கலாச்சாரமும், அதற்குள் துணைக் கலாச்சாரங்களும் இருப்பதாக வணிகத்துறை பாடநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. துணைக் கலாச்சாரங்களின் "தேவைகளை" பூர்த்தி செய்வதற்காக மூலதனம் ஹலால் சந்தையைக் கைப்பற்ற துடிக்கின்றது. அது முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் விட்டு வைக்கவில்லை. சவூதி அரேபியா உலகம் முழுவதும் மசூதி கட்டிக் கொடுக்கும் "ரியல் எஸ்டேட்" வியாபாரத்தில் இறங்கி இருப்பது இரகசியமல்ல. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவின் மூலதனம் பாய்வதைத் தடுப்பதற்காக, அரசாங்கமே மசூதி கட்ட நிதி வழங்குகின்றது. சவூதியின் (கடும்போக்கு) "வஹாபிஸ" இஸ்லாமுக்கு போட்டியாக, (தாராளவாத) "ஐரோப்பிய" இஸ்லாம் உருவாக்கப்படுகின்றது. சபாஷ்! சரியான போட்டி!!


“எங்க ஊரான வாலிநோக்கம் முழுக்க முழுக்க மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவக் கிராமமாகும். இந்தமுறை இந்த பஞ்சாயத்துப் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டதால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வஹிதா சகுபர் என்பவரை நிறுத்தி பஞ்சாயத்துத் தலைவியாக ஆக்கினோம்.
“ஏற்கெனவே இதே பஞ்சாயத்துத் தலைவி வஹிதா, கனிமொழியைத் தரக்குறைவாகப் பேசினாங்க. உடனே நாங்க போலீஸில் புகார் செய்து ரசீது வாங்கிவிட்டோம். அமைச்சரின் ஆதரவு தான் இவரை இந்த அளவுக்கு ஆட்டம் போட வைக்குது. கிராம நடைமுறைகளுக்கும், மார்க்க நெறிமுறைகளுக்கும் மாறாக நடக்கும் அவரை சும்மா விடமாட்டோம்” என்றார்கள் ஆவேசமாக.
தலைமை ஹாஜி என்பவர் ஷரியத் முறைப்படி நடக்கக்கூடியவர். மிகவும் மென்மையானவர். எங்கள் ஜமாத்தார்களுக்கு நீதிபதி போன்றவர்.அவரையே ஏமாற்றி பெறப்பட்ட ராஜினாமாவால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே கொந்தளித்துப் போய் இருக்கிறது. இது இஸ்லாமிய சமுதாயத்தவர் அனைவரையும் அவமானப்படுத்திய செயல். இதனை கண்டிக்கும் வகையில் எங்களது அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த-விருக்கிறோம். மேலும் வக்பு வாரியத்தில் உறுப்பினராவதற்கு கவிஞர் அப்துல்ரகுமானுக்குத்தகுதி இருக்கிறதா என்றால், அவர் மார்க்க அறிஞர் இல்லை என்பதுதான் என் கருத்து!” என்றார் மேலை நாசர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் தாவூத்-மியான்கான் நம்மிடம், “வக்பு வாரியத்தில் எம்.பி.க்கள் வரிசையில் ஜே.எம்.ஆருணும், காதர்மொய்தீனும் இருக்கின்றனர். இவர்களில் காதர்மொய்தீன் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு மேலாகக் கலந்துகொள்ளவில்லை. அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இப்படி எல்லாம் நிலைமை இருக்கும்போது, பாரம்பரியமிக்க தலைமை ஹாஜி சலாகுதீனை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். ராஜினாமாவை ஹாஜியே அவரது கைப்பட எழுத வேண்டும் என்பதை மீறி, அதிகாரி ஜலாலுதீன் தனது கைப்பட எழுதி ஏமாற்றி இருக்கிறார். ஆகவே அது செல்லாது என ஹாஜியும் அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். கவிக்கோ அப்துல்-ரகுமானை வாரிய உறுப்பினராக நியமிப்பது அரசின் இஷ்டம். ஆனால் அதற்குத்-தலைமை ஹாஜியைத்தான் ஏமாற்ற வேண்டுமா?” என்று கேட்டு ஆவேசமானார்.



















காவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது “”"நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்… கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்… சின்ன பையன்களைக் கூப்பிட்டு… என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து… இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்… அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்”’’என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.









.jpg)

.jpg)
































