New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிரு


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிரு
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

மே 10, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? (5) – யாரால் பௌத்தத்திற்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடும்?

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.2

பிராமணர்களும், பௌத்தர்களும்: புத்தர் இறந்து 500 வருடங்களுக்குப் பின்னரே அவர் உபதேசங்களை மற்ற கதைகளைத் தொகுத்து பௌத்த பிக்குகள் எழுத ஆரம்பித்தனர். அரசவம்சத்தில் பிறந்த சித்தார்த்தன், “புத்தர்” ஆகியபோது, முதலில் பௌத்தத்தை எற்றுக்கொண்டது அரசவம்சத்தினரே. புத்தர் மறைந்தபிறகு, பலர் சங்கத்தில் சேர்ந்தாலும், அரச-வணிகர்களின் ஆதரவு பௌத்தத்திற்கு அதிகமாக இருந்தது. பிராமணர்கள் பௌத்தத்தில் சேர்ந்தாலும் அவர்களது நிலை பாதிக்கப்படும் நிலையில்தான் இருந்தது. பிராமணர்களை எதிர்த்து பௌத்தம் வளர்ந்தபோது, பௌத்தத்தில் அவர்களது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையினை ஆராயவேண்டியுள்ளது. விரும்பி ஏற்றுக்கொண்டாலும், வலுக்கட்டாயமாக மதமாற்றப்பட்டாலும் அவர்களை மற்ற பௌத்தர்கள் எவ்வாறு நடத்தினர் அல்லது தூரமாகவே வைத்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது. ஆகவே, பிராமணர்கள் பௌத்த மதத்தில் சேருவது என்பது சாத்தியமில்லை அல்லது குறைந்த அளவிலேயே இருந்திருக்கக் கூடும்.

சத்திரியர்களும், பௌத்தர்களும்: சத்திரியர்களின் நிலையோ அதைவிட முரண்பட்டதாகும். ஏனெனில் அவர்களுக்கும் அஹிம்சை போதிக்கும்
பௌத்தத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது வெளிச்சம். அரசர்கள் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டபோது, அவர்களது அரசுகள் “பௌத்த அரசுகளாக” இயங்கலாம், இயங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். தங்களது ஆட்சியை காத்துக் கொள்ளவேண்டும் என்றால், சத்திரிய தர்மத்தைத் தான் கடைபிடித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அஹிம்சை, சமாதானம், அமைதி என்றால், அத்தகை சத்திரியர்கள் சத்திரியர்களாக இருந்திரிக்க மாட்டார்கள். பௌத்தத்தின் அஹிம்சாபோதனை போர்களை நிறுத்திவிடவில்லை என்பதனை சரித்திரம் காட்டுகிறது. மேலும், புத்தபிக்குகளே ஒரு அரசை ஆதரித்து, மற்ற அரசை எதிர்க்கும் நிலையும் ஏற்பட்டது. அவ்வாறான நிலையில், பிக்குகளும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாகிறது.

வைசியர்களும் பௌத்தர்களும்: பௌத்தர்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்ததால், அங்கெல்லாம் பொருட்களின் தேவை இருக்கும் என்பதனால், வைசியர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. பௌத்தர்கள் வியாபாரிகளுக்கு முன்னோடியாக, உதவியாக இருந்தனர். “பட்டுப்பாதை/வழி” (the Silk route) ஆனாலும், கடல் வழியானாலும் வணிகர்கள் தமது பொருட்களுடன் பௌத்த பிரசாகரர்களுடன் பயணித்தனர். வியாபாரம் செய்தனர், லாபம் ஈட்டினர். அத்தகைய லாபங்களை தானமாக பிக்குகளுக்கு தோடங்களாக, விஹாரங்களாக அளித்து ஆதரித்தனர். எனவே பௌத்த பிக்கு-வைசிய உறவு பரஸ்பரமானது என்பதாகிறது.

சூத்திரர்களும், பௌத்தர்களும்: சூத்திரர்கள் பௌத்தத்தில் இணைந்துள்ளதை தம்மபாத மற்றும் ஜாதக கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் பௌத்தம் வளர்ந்ததற்கு, பரவியதற்கு பிக்குகளுடன் இணைந்து பணியாற்றிய விவரங்கள் தெரியவில்லை. பௌத்தத்தில் “வஸலா” என்ற வார்த்தை தாழ்த்தப்பட்ட, வெறுக்கத்தக்க மனிதனைக்குறிக்கிறது. பௌத்தம் அடிமைகளை மறுத்ததாகத் தெரியவில்லை.
http://www.bbc.co.uk/religion/religions/buddhism/history/slavery.shtml

பிராமணர்கள் கடல் கடக்கத் தடை: ஆகவே நிச்சயமாக “சிரமணர்கள்-பிராமணர்கள்” சேர்ந்து சென்றது அசோகனது காலத்திற்கு பிறகு மறைந்தது எனலாம். திடீரென்று பிராமணர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது, அவ்வாறு சென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர் என்ற தடை ஏற்படுத்தப்பட்டதும் நோக்கத்தக்கது. இதனால்தான், மனுஸ்மிருதியில் அத்தகைய இடைச்செருகல் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஏனெனில் தென்கிழக்காசிய மற்றும் தன்னமிரிக்க நாடுகளிலேயே இந்து மதம் பரவியிருந்தபோது, பிராமணர்கள் அங்கிருந்தனர். எனவே ஒன்று அவர்கள் நடந்து சென்றிருக்க வேண்டும் அல்லது கப்பலில் கடல் கடந்து செறிருக்கவேண்டும். பின்னதுதான் சாத்தியமாகிறது என்பதால், அத்தகைய தடை பிற்பாடு ஏற்படுத்தியிருக்கவேண்டும் எனத் தெரிகிறது. “சிரமணர்கள்”, “பிராமணர்கள்” தங்களுடன் வருவதை விரும்பவில்லையா அல்லது அவர்கள் வருவதை நிறுத்த முயன்றனரா என்பது நொக்கத்தக்கது. ஆகவே முன்னம் கப்பல்களில் சேந்து சென்ற இவர்களுக்குள் என்ன நேர்ந்தது? நிச்சயமாக, ஒருகாலகட்டத்தில், பிராமணர்கள் தங்களுடன் வருவதை “சிரமணர்கள்” விரும்பியிருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தடுக்க வழி உள்ள சட்டதிட்டங்களை வைத்துதான் செயல்படுத்த வேண்டும். அந்நிலையில்தான் மனுஸ்மிருதியை பௌத்தர்கள் திருத்தியிருக்கவேண்டும். ஏனெனில், பிராமணர்களே தங்களுக்கு பாதகமாக அத்தகைய சரத்தை நுழைத்திருக்க மாட்டார்கள்.

Ground plan and section of main Chaitya Hall, Karla caves.

பௌத்த சிற்ப-கட்டிடக் கலை வளர்ந்தது: குகைக்கோவில்கள், பெரிய அளவில் புத்தசிற்பங்கள், விஹாரங்கள் முதலியன அமைக்கப்பட்டது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டது, ஈடுபட்டது தெரிகின்றது. கற்கள் மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் என்பதனால் அவ்விடங்களில் விஹாரங்கள் கட்டப்பட்டது சாதகமாகவே தெரிகிறது. கற்கள் உருவான விதம், அவற்றின் உள் அமைப்பு, கடினம்-மென்மை தன்மைகள், முதலியன கல்-விற்பன்னர்களுக்குத் தெரிந்திருக்கும். 40 அடிகள் உயர தூண்கள் அல்லது சிலைகள் இருக்கும்போது, அத்தகைய பாறைகளை எவ்வாறு உடைத்து, செதுக்கி உருவாக்கினர் என்று நோக்க வேண்டியுள்ளது. மேலும் கற்களை உடைக்க, கழிக்க, கடைய, செதுக்க, மேற்பகுதியை மென்மையாக்க பலவித உலோகக்கருவிகள் உபயோகப்படுத்த்ப்பட்டிருக்கும். எனவே அத்தகைய கருவிகளை உருவாக்கும் உலோகவியல் வல்லுனர்கள் இருந்திருக்க வேண்டும். வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோருக்கு வேண்டியவற்றை அவர்கள் தொடர்ந்து விநியோகித்து வந்திருக்கவேண்டும்.
James Fergusson, History of Indian & Eastern Architecture, Low-Priced Publications, New Delhi, 1997.
E. B. Havell, Indian Sculpture and Painting, John Murray, London, 1908, p.183. Taraporavala & Sons, Bombay reprint is available.

அவர்கள் எல்லொரும் பௌத்தர்களா அல்லது பணம் பெற்று அவர்களுக்காக வேலை செய்து அத்தகைய சிற்பங்கள், விஹாரங்களை உருவாக்கினரா? அல்லது அடிமைகளாக வேலை செய்தனரா? அவர்கள் எல்லாம் பௌத்தர்கள் இல்லை என்றால், தமக்கு எதிரான மதத்திற்கு அவ்வாறு வேலை செய்திருக்க முடியாது. அல்லது, அத்தகைய வேறுபாடே இல்லாத நிலை இருந்திருக்கவேண்டும். பௌத்தமதம் வெறும் பிராமணத்தை எதிர்த்து மட்டும் வளர்ந்து விடவில்லை. உலகம் முழுவதும், புத்த சிற்பங்களை செதுக்கி, தமது மதத்தை பிரபலப்படுத்தி வளர்த்தனர். ஆகவே, அத்தகைய லட்சக் கணக்கான வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் எவ்வாறு பௌத்தத்திற்கு சாதகமாக வேலை செய்தனர்?

Takht-i-Bahai Chaita hall, temple

உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm): பௌத்தம் தேய்ந்ததற்கு அவர்களும் காரணமா? மஹாயான பௌத்தத்தை குறை சொன்னால், அல்லது ஒதுக்கினால், இவர்களது கதி அதோகதிதான். எனவே, மஹாயானத்தைக் குறைக்கூறுவது, விக்கிர ஆராதனையை (Idolatry) விமர்சிப்பது, புத்த சிற்பங்கள்-விஹாரங்களை வெறுப்பது முதலியன முரணான போக்கே. விக்கிரங்களை உருவாக்குகின்றவர்கள் (Icon producers), இறையியல் அல்லது மற்ற சித்தாந்த ரீதிகளில் விக்கிரங்களை வெறுப்பவர்கள் /உடைப்பவர்கள் (Iconoclasts) ஒரே மதத்தில் / சாகையில் பிரசாரகரர்களாக, ஒருமித்த-சித்தாந்திகளாக இருப்பது போலித்தனமாகும், கபடத்தனமாகும். ஆகவே பௌத்தம் எந்நிலையிலும் அத்தகைய வாதத்தை முன் வைக்கமுடியாது. அத்தகைய வெறுக்கும் நிலையே அவர்களது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. உருவத்தை உருவாக்கும் நிலை (Iconogenism) மற்றும் உருவங்களை உடைக்கும் நிலை (Iconoclasm) இரண்டையும் தன்னுள் அடக்கி பௌத்தம் இருந்தது என்றால் பொய்மைதான். கலாரசிகர்கள் கலையை வெறுப்பரோ, சிற்பங்களை “உருவாக்குபவர்கள்”, சிற்பங்களை “உடைப்பார்களோ?”
Vedaprakash, Was Indian Stone art Derived from the Chaldeans, Greeks, Romans or Persians? in Contribution of South India to Indian Art and Architecture, Bharatiya Itihasa Sankalana Samiti, Madras, 1999, pp.36-43.

அத்தகைய உருவங்கள் / சிற்பங்கள் உருவானது, இருப்பதற்கு எதிராகத்தான் அல்லது மக்களைக் கவரும் முறையில் உருவாக்கியிருக்கவேண்டும். எனவே அத்தகைய முறையை உருவாக்கிவிட்டு, பிறகு அது பாவச்செயல், சாத்தானின் செயல் என்றெல்லாம் பேசுவது, பிரசாரம் செய்வது அல்லது அவற்றை உடைப்பது / அழிப்பது அஹிம்சை-விரோத மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது, தீவிரவாதாமாகிறது, மானுடத்தை பாதிக்கிறது.
The Mohammedans’ iconoclast-fanatical-ferocious destruction of temples have been noted by the British surveyors and recorded in their records and works. James Fergusson, opt cit. Archaeological Survey of Western India, Vol. III, pp.20, 23, 38-40.

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture60

ஒருவேளை, அத்தகைய எண்ணம் வலுப்பட்டு, பௌத்தத்தில் “உருவவழிபாட்டு-எதிர்ப்புவாதிகள்” உருவாகி கிளம்பியிருந்தால், நிச்சயமாக மேற்கண்ட வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பர். ஏனெனில் அது அவர்களின் தொழில் என்றாகிவிட்டப் பிறகு அதனை மறுப்பவரை, ஒழிப்பவரை அவர்கள் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார்கள். மேலும், பௌத்தர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கக்கூடும். தங்களை வைத்தே, அத்தகைய பற்பல கோடிகணக்கில் சிற்பங்கள், லட்ச கணக்கில் விஹாரங்கள், மடாலயங்கள் என்று உருவாக்கி, பிறகு தங்களையே இழிவு படுத்துவதை எந்த வேலையாளும், தொழிலாளியும், சிற்பியும் அல்லது ஸ்தபதியும் தாங்கிக் கொண்டிருக்கமாட்டான். எனவே அத்தகைய“உருவவழிபாட்டு-எதிர்ப்புவாத பௌத்தர்கள்” மற்றும் இவர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்று ஆராயத்தக்கது.

தென்னிந்திய சம்பிரதாயப்படி பலவித சிற்பசாஸ்திரங்கள் இருந்தன. அவையாவன:

1. விருத்தம்                         9. வித்தியாபதி               17.மிகுத்தவட்டம்
25. ஸுஸ்ருதம்
2. விஸ்வபோதம்                10. மானசாரம்              18.கலயூபம்                26.
சைத்யகம்
3. விஸ்வகஸ்பியம்        11. மனுமன்                      19. கபீலம்
27. நமசம்ஹிதை
4. விஸ்சலம்                        12. மனபோதம்               20. கற்பர்யம்
28. சாத்விகம்
5. விஸ்வதர்மம்                13. மயிந்திரமல்               21. கலாம்ருதம்        29.
அதிசாரம்
6. விஸ்வேஸம்                14. மயாமனபோதம்     22. நளம்                        30.
அரிதகம்
7. விஸ்வசாரம்                15.மயன்மதம்               23. பானு                        31.
ஸௌம்யம்
8. வஜ்ஜிரம்                        16. மயன்-நீதி                       24.
பர்சரியம்                32. சித்ரம்.

Prasanna  Kumar  Acharya, A Dictionary of Hindu Architecture, Vol.I, Low Price Publications, New Delhi, 1997.
………………………………………., Indian Architecture according to Manasara-silpasastra, Vol.II, 1998.
………………………………………., Manasara on Architecture and sculpture: Sanskrit Text with critical nores, Vol.III., 1997.
………………………………………., Architecture of Manasara (English translation), Vol.IV, 1998.
………………………………………, Atchitecture of Manasara: Illustraions of Architectural and Sculptural objects, Vol.V., 1998
……………………………………….., Hindu Architecture in India and Aboard, Vol.VI, 1998.
………………………………………., An Encyclopedia of Hindu Architecture, Vol.VII, 2001
Bruno Dagens, Mayamata, Sitaram Bharatia Institute of Science & Research, New Delhi, 1995, p.v in Introduction.
T. Bhattacharya, The Cannons of Indian Art, Calcutta, 1963, pp.183-195.
K. V. Ramakrishna Rao, Stone – Work, Art, Architecture, Style and Dating in Indian Context, ICIH-2009 conference, Souvenir Volume, New Delhi, 2009, p.78. For full text see at:
http://www.scribd.com/doc/13798682/Stone-Work-Art-Architecture-Style-and-Dating

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture61

பௌத்தம் “இந்து/சனாதன மதத்திலிருந்து” பெற்றவை: “செரிந்தியா” எனப்படுகின்ற மத்திய ஆசியா பகுதிகளில் பௌத்தம் இருந்தபோதும், எட்டாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருத வழக்கு இருந்து வந்தது என்று ஏரியல் ஸ்டீன் என்ற ஆராய்ச்சியாளர் பல அத்தாட்சிகளுடன் காட்டியுள்ளார். பௌத்ததைப் பற்றிய ஆரம்பகால பாலிமொழி நூல் கரோஸ்தி லிபியில் இருந்தது. சமஸ்கிருதமோ பிரம்மி லிபியில் இருந்தது.
Sir Aurel Stein, Serindia, Vol.I, Introduction.

ஆகவே, எப்படி தத்துவம் முதலியன பௌத்தர்களுக்கு வேத-உபநிடதங்களிலிருந்து பெற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டனரோ, அம்மாதிரியே, வேதகலைகளையும் பெற்றனர் என்பது அவர்களது சிற்ப கட்டிட கலை அத்தாட்சிகள் காட்டுகின்றன. சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எது முன்பு, எது பின்பு என்பதனை காலகணக்கீட்டு முறையில் குறிப்பிடுவதில்தான் குழம்பியுள்ளனர், குழப்பியுள்ளனர், பாரபட்சமுறையில் இருந்துள்ளனர் என்பது இதனை படிக்கும்போது / ஆராயும்போது தெரிகிறது. ஏ. எல். பாஸம் “அசோகனுடைய தூண்கள்” அசோகனுக்கு முன்னமே இருந்தன என்றபோது, நமது சரித்திரஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிந்தும் அறியாதவர்கள் மாதிரி இருந்தனர்.
A. L. Basham, The Wonder that was India, Rupa & Co., New Delhi., 1990.

“எழுத்தறிவற்ற” சிந்துசமவெளி / ஹரப்பன் நாகரிகம் (c.2250-1950 BCE) மற்றும் திடீரென்று முளைத்த “சரித்திர கால” மௌரிய பேரரசு (c.300 BCE) இந்த இடைப்பட்ட காலத்தில், 1900 வருடங்களுக்கு இந்தியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? நமது அதி-மேதாவி / அறிவிஜீவி / பிரபலமான / முன்னோக்குள்ள சரித்திரஆசிரியர்கள் (eminent, progressive, secular etc), ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருட்துறை வல்லுனர்கள் அந்த ரகசியத்தைச் சொல்ல மறுக்கின்றனர்! எல்லாவற்றையும் proto-history (Proto- = original, primitive, first) காலத்தில் வைத்து இந்தியர்களை ஏமாற்றுகின்றனர்!

Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture62

இருப்பினும் ஏ. எல். பாஸம் போன்ற நடுநிலையாளர்கள் உண்மையை எடுத்துக்
காட்டியுள்ளனர்: குப்தகாலத்திற்கு முன்பே பராபர், நாகார்ஜுனா முதலிய இருப்பிடங்கள் / குகைக்கோவில்கள் முதலியவற்றைக் குறிப்பிடும்போது, அவர் இவ்வாறு எடுத்துக்காட்டுகிறார்:

“The inner walls of all caves are finely polished, no doubt by workmen of the school whch was responsible for the polish of the Asokan columns” (p.354). “குகைக்கோவில்களின் சுவர்களை மென்மையாக கழித்து வழுவழுப்பாக பளிச்சென செய்தவர்கள் அசோகனுடைய தூண்களை செய்த அதே சிற்ப-
கட்டிடகலை குடும்பத்தை சேர்ந்திருக்கவேண்டும்”.

“The capitals of Asokan’s columns, some of which were perhaps made before his reign, are the earliest important sculptures after those of the Indus cities” (p.366).  “சிந்து நகர கட்டிடகலைக்குப்பிறகு, அதேமாதிரியான தொன்மையான வேலைபாடு அசோகனுடைய தூண்களிலில்தான் காணப்படுகிறது, அவைகளில் சில அவனது காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்ககூடும்”

“Yet, if we did not know that the possibility of western influence existed, we might suggest that the animal sculptures of the columns were those of a school directly descended from the engravers of the Indus seals, which show a realistic treatment very unusual for so early a civilization”. “மேற்கத்தைய தாக்கம் இருந்ததற்கான வாய்ப்பு
உள்ளதா இல்லையா என்று அறிவதற்கு இயாலமல் இருக்கும் நிலையில், சிந்துசமவெளி நாகரிகத்தின் முத்திரைகளை கடைந்து பொரித்து உருவாக்கிய அதே கலைக்குடும்பம் அல்லது வம்சத்திலிருந்து நேரிடையாக வழி-வந்தவர்கள்தாம் இந்த விலங்குகளை செதுக்கியிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.”

பல “யக்ஸினிகள்” சிற்பங்களை ஆராய்ந்து கூறுவதாவது:

“The treatment of the ample abdomens of these figures has been compared with that of the Harappa torso and gives further evidence of the survival of tradition over the long intervening period” (p.367).
“எவ்விதமாக இந்த சிற்பங்களின் வயிற்றுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன / விவரங்களைக் கொண்டுள்ளன என்பதற்கு ஹரப்பன் சிற்பங்களின் முண்டத்துடன் ஒப்புமைப்படுத்தி போதுமான வரை ஆராயப்பட்டுள்ளது. அத்தகைய ஒப்புமை ஆராய்ச்சி கொடுக்கும் அத்தாட்சியானது, அத்தகைய கலைப்பாரம்பரியம் இடைப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது தெரிகிறது”.

ஆகவே, ஜைன-பௌத்த மதங்களுக்கு முன்பு, சிந்துசமவெளி நாகரிகத்திற்கு முன்பே அத்தகைய சிற்ப-கட்டிடகலை இருந்து வந்துள்ளது. ஜைன-பௌத்தர்கள் அவர்களிடமிருந்துதான் அத்தகைய கலையையும் பெற்றனர், அதன் வேலையாட்கள், தொழிலாளர்கள், கல்-தச்சர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள், முதலியோரையும் பெற்றனர். ஆகவே இருந்த பாரம்பரிய-கலாச்சாரக்கூறுகளுக்கு எதிராக ஜைன-பௌத்தர்கள் செயல்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயமாக பதில்-எதிர்ப்பை உணர்ந்திருப்பர். அதை பௌத்தத்திற்கு விரோதமாக நடந்த செயல் என்றாகாது. பாதிப்பு ஏற்படும்போது, பௌத்தர்களே புத்தர் சொன்னபடி நடக்காமல் இருந்திருக்கலாம். ஆகையால்தான், பௌத்தத்திலேயே பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வேதபிரகாஷ்
18-09-2009.

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

 Encyclopedia-Britannica-Volume-12-Part-1-Hydrozoa-Jeremy_Picture63

 

 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard