New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவாணர் கீர்த்தனங்கள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பாவாணர் கீர்த்தனங்கள்
Permalink  
 


தனித்தமிழ்

தனித்தமிழ் போற்றிய முதலிகளில் ஒருவர் அமரர் தேவநேயப் பாவாணர்; அவரது கீர்த்தனங்கள் சில -

தேவகுமார! உன் திருவடி சரணம்
தீனதயாளம் உன் திவ்வியா பரணம்
தீரென தாவரணம்.

பூமனு வாகிய புண்ணிய! சரணம்
பூரண நீதியிற் பொலிந்தனை கிரணம்
போற்றினேன் உன் சரணம்.

தேச மெங்கும் நலம் செய்தவா! சரணம்
தீயரை மீட்கவே தெரிந்தனை மரணம்
தேகமுற்றாய் விரணம்.

பாவியை மீட்டருள் பரமனே! சரணம்
பக்தருக் குன்பதம் பயமறும் அரணம்
பதிந்தருள் என் கரணம்.

வானவர் போற்றிடும் வலவனே! சரணம்
வருந்தியெற் காகவே பரிந்தனை சரணம்
வந்தருளாய் தருணம்.

யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம்
யூதாவின் மாகுலத்தில் ஏது நின்போல் இத்தலம்

என்னே! எனது பாக்யம் - இம்மையே

நித்திய சீவ னைமுன் நிமலனாந் தந்தை தந்தார்
குற்றவூண் மாந்தி மாந்தன் குற்றுயி ரானான் ஏசு
நற்றவன் தசையி ரத்தம் நன்மருந் துணவாய் நல்கச்
சுத்தமா வாவி யாரும் சுகம்பெற வீசி னாரே !

மன்பல பாடை தீர்க்க தரிசன மறிவு மாயும்
புன்றலைக் குழவிக் கேற்ற புருடனா யொழித்து விட்டேன்
நம்புதல் விசுவா சத்தில் நனிபெரி தாக மன்னும்
அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.

--------------------------

ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது

[‘ப்ரோவ சமைய‘ என்ற மெட்டு]

ப.
வனமே வாசம் வானப்பிர தேசம்

து. ப.

அணவுந் தேவேசும் ஆவியுப தேசம்
உணரும் பிரகாசம் ஊழியப்பிர வேசம்
(வனமே)

உ.

உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள்
உலகத்தே வானான் உன்னதன்பாற் போனான்
தின்பொருளி லிச்சை தேவனைப் பரீட்சை
தீயபேய ருச்சை தேறி யேசு ரட்சை

இதில் எல்லாமே தனித்தமிழ்ச் சொற்கள்தாமா ?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard