New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல் காப்பியத்தின் காலம் - பேராசிரியர் B.G.L. சுவாமி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தொல் காப்பியத்தின் காலம் - பேராசிரியர் B.G.L. சுவாமி
Permalink  
 


தொல் காப்பியத்தின் காலம் - பேராசிரியர் B.G.L. சுவாமி

தொல் காப்பியத்தின் காலம்  ஹாவர்டு பல்கலைக்கழக வரலாற்று ஆராய்ச்சியாளர் சீ பார்மர்  தளத்தில் தொல்காப்பியம் காலம் 11- 12ம் நூற்றாண்டு   பேராசிரியர் B.G.L. சுவாமி  கட்டுரை
பசவங்குடி குண்டப்பா லட்சுமிநாராயண சுவாமி (1918௧980, B.G.L. சுவாமி - இந்திய தாவரவியலாளர் மற்றும் கன்னட எழுத்தாளர் ஆவார், அவர் பேராசிரியர் மற்றும் தாவரவியல் துறையின் தலைவராகவும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார். அவர் இந்திய எழுத்தாளரும் தத்துவஞானியுமான டி.வி.குண்டப்பாவின் மகன்.

thol%2B1.jpg  thol%2B1a.jpg thol%2B2.jpg

thol%2B2a.jpg thol%2B3.jpgthol%2B3a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தொல் காப்பியத்தின் காலம் - பேராசிரியர் B.G.L. சுவாமி
Permalink  
 


thol%2B4.jpg thol%2B4a.jpg thol%2B5.jpg 

thol%2B5a.jpg thol%2Ba.jpg thol%2Bab.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

thol%2B6.jpg thol%2B6a.jpg thol%2B7.jpg

thol%2B7a.jpg thol%2B8.jpg thol%2B8a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

thol%2B9.jpg thol%2B9a.jpg thol%2B10.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

thol%2B10a.jpg thol%2B11.jpgthol%2B11a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

thol%2B12.jpg thol%2B12a.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

thol%2B13.jpg thol%2B13a.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Gopinath R தொல்காப்பியம் ஒட்டகத்தை குறிக்கிறது பொயு 9ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவிலேயே ஒட்டகம் இருந்ததாக தெரியவில்லை அதோடு நீங்கள் சொன்ன புள்ளி எழுத்து வடிவம் இவை அதன் காலத்தை 7-12 ஆம் நூற்றாண்டிற்கு தான் கொண்டு செல்கிறது. யாப்பருங்கல காரிகை, நன்னூல், தொல்காப்பியம் மூன்றும் சம காலத்தவையாக இருக்கலாம்.

Dev Raj அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு

கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம் மா அரிவை ஒழிய....... சங்க இலக்கியத்தில் ஒட்டகம் இடம் பெறுகிறது

Gopinath R காய்ந்த வெள்ளை எலும்பு ஒட்டகத்தின் பசி தீர்க்கும் என்று வருகிறது ஒட்டகம் என்று எலும்பை தின்றது. இது குறிப்பிடும் ஒட்டகம் எது. தென்னிந்தியாவில் ஏது ஒட்டகம் அதுவும் 8ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்தியாவிலேயே ஒட்டகம் கிடையாதே. இந்த ஒட்டகத்தை தான் தொல்காப்பியம் குறிக்கிறதா.

Gopinath R "ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்" இது சிறுபாணாற்றுப்படை ஒய்மா நாட்டு நல்லியக்கோடனை நந்தத்தனார் பாடியது திருமுருகாற்றுப்படை உடன் இதன் காலமும் ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு ஆனால் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டது இது குறிக்கும் ஒட்டகம் தான் தொல்காப்பியம் கூறுவது நந்தத்தனார் வடவர் அவர் ஒட்டகத்தை அன்று அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு.

Gopinath R திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றி குறிப்பிடுகின்றன.

Gopinath R ‌"விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்" இந்த வேலூர் சிறுபாணாற்றுப்படை குறிப்பது இன்றைய வேலூர் தானே.

Gopinath R " தங்கையை மூக்குந் தமையனைத் தலையுந் தடிந்த" பெரியாழ்வார் வரிகள் காலம் எட்டாம் நூற்றாண்டு. இதற்கு முன்னர் தங்கை என்ற சொற் பிரயோகம் இல்லை என்று நினைக்கிறேன் அது சிறுபாணாற்றுப்படையிலும் பயின்று வருகிறது அதே அர்த்தத்தில் "உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை" ஆக இது கட்டாயம் சம காலத்தை சேர்ந்ததே.

Gopinath R சங்க பாடல்களில் மிக பழைய பாடல்கள் ராவணனை அரக்கன் என்று குறிக்கும் பாடல்கள் கூட இலங்கையை ஈழம் என்று தான் அழைக்கிறது. முதலில் தொன்மா இலங்கை, நன்மா இலங்கை என்று நல்லியக்கோடனை பாட்டுடைத் தலைவனாக கொண்ட சிறுபாணாற்றுப்படையும் அதே ஒய்மா நாட்டு வில்லியாதனை பாடும் புறம் 379 ம் தான் மாவிலங்கை என்கிற திண்டிவனம் அருகில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊர் பற்றி பேசுகிறது. இவை சங்க பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும் பொதுவாக சங்க காலம் என்று நம்பப்படும் காலத்தை சேர்ந்தவை அல்ல.

Ramachandran Gopinath R ,உப்புவேலூர் என்ற ஊர். மரக்காணம் பகுதியில் உள்ளது.

Ramachandran Gopinath R அக்கை மூத்தவள். அங்கை இளையவள். தமக்கை என்பது போல் தமங்கை. தங்கை எனத்திரிந்தது.

Gopinath R சங்க காலம் பொயுமு 3ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது என்பதும் தவறு. சேர மன்னர்களில் மூத்த உதியன் சேரல் பொயு முதலாம் நூற்றாண்டு தான். அதிக பட்சமாக பொயுமு முதல் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் துவங்கி இருக்கலாம். மாமூலனார் நந்தர்கள் மௌரியர்களை குறறிப்பிடுவதை வைத்து பேசக் கூடாது அவை சமகாலத்தியது அல்ல அதோடு அசோகன் குறிப்பிடும் சேர சோழ பாண்டியர் தமிழ் மன்னர்கள் அல்லர் அவர்கள் வடக்கிருந்து வந்து இங்குள்ள சிறுகுடி மன்னரை அடக்கி பேரரசை நிறுவினர் அசோகர் காலத்தில் அவர்கள் தமிழில் பேசினரா என்பதே கேள்விக்குறி.

Gopinath R திருக்குறள் 5-6 ஆம் நூற்றாண்டு காலத்தில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் பொயு 470 வாக்கில் வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை தோற்றுவிக்கிறார் அந்த காலத்தில் தான் திருக்குறள் இயற்றப்பட்டிருக்கும். அதன் பல சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்று வராததே அது பிற்காலத்திய நூல் என்பதற்கு சான்று உதாரணம் ஆதி, பகவன்.

மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்
எகர ஒகரத் தியற்கையுமற்றே

- தொல்காப்பிய சூத்திரம்

Means

Tolkappiam not only describes dots- 'pulli' - as the natural adjunct of the basic consonant and the short vowels 'e' and 'o' but also uses the expression dots to denote the basic consonant itself by transfer of meaning. It is thus clear that this grammatical work must have been composed after the dots was invented and had become an integral part of Tamil writing. Judging from this and with brahmi Tamil literature, Tolkappiam was composed most probably not in 500 BC or later. I hadn't see a brahmin script in which e and o (எ & ஒ) had dots. Please someone enlighten me

Ramachandran பொ. யு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமலை பிராமிக் கல்வெட்டில் மெய்யெழுத்து புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது. ( புள்ளி பற்றிய சுவையான கல்வெட்டுச் செய்தி: சிரவண பெளகோளாவில் கொமடேஸ்வரர் சிற்பத்தின் கீழுள்ள தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டில் செய்வ்வித்தான் என்ற சொல்லில் "செ" புள்ளி வைத்து எழுதப்பட்டுள்ளது- குறில் என உணர்த்துவதற்காக. இது தொல்காப்பிய விதிப்படி அமைந்தது)

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard