New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈ வே ரா -மைநாரிட்டி முஸ்லிம்கள் மலம் - ராமசாமி நாயக்கர் கருத்து


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஈ வே ரா -மைநாரிட்டி முஸ்லிம்கள் மலம் - ராமசாமி நாயக்கர் கருத்து
Permalink  
 


Vedagiri Venkatraman
மைனாரிட்டிகளை எப்படி நடத்த வேண்டும்?

சமூக விஞ்ஞானி ஈ வே ரா கூறுவதை கேளுங்கள்.

https://www.facebook.com/vedagiri.venkatraman/posts/2639176399446633

 

"எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால்- அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்."

69595180_2639176839446589_37658032604310

 

69406169_2639177222779884_52673362696328

 

உடனே இதை, பார்ப்பனரைத் தான் ஈ வே ரா சொல்கிறார். மற்றவர்களை இல்லை என்று நாம் நினைத்து விடுவோமோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டதோ என்னவோ, அடுத்து இன்னும் தெளிவாக சொல்கிறார்.

" இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லிம் ஆகியவர்களுக்கு தனிச்சலுகைகளை ஆட்சிகள் காட்டி வந்த காரணத்தால், நாடு வளர்ச்சியடையாமலும் மெஜாரிட்டி மக்கள் மனிதத்தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்"

இப்படி அவர் தெளிவாக சொல்லியும் கேட்காமல் போனால், என்ன நடக்கும் என்றும் அவரே எச்சரித்து இருக்கிறார்.

" மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் துரோகம் - பச்சைத் துரோகம் என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்று வருகிறது"

ஒரே போடாக போட்டு விட்டார்.இதையும் மீறி சிறுபான்மை மக்களுக்கு சலுகை செய்ய யாராவது முயன்றால், அவர்களை எப்படி அழைக்க வேண்டும்?

இதோ,

"நாட்டிலுள்ள யோக்கிய பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாய கேடான காரியங்களுக்கு, இப்படிபட்ட மைனாரிட்டிகளின் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணி்கிறார்கள்."

"இந்த துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூக துரோகிகளுக்கு பயன் பட்டு வாழக் காத்து கிடக்கிறார்கள்"

அதாவது இஸ்லாமியர், மற்றும் அவருக்கு சலுகை தருபவர்களை அயோக்கியர்கள், துரோகிகள் என்று தெளிவாக சொல்கிறார்.

இல்லை இல்லை.... அவர் இஸ்லாமியர் மீது பெரிய மரியாதை வைத்து இருக்கிறார். பார்ப்பனர் மட்டும் தான் அவர் எதிரி, என்று யாரும் எதிர் காலத்தில் சொல்லி விட கூடாதே என்ற எச்சரிக்கையில் அடுத்து இன்னும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

"பார்ப்பானுக்கு பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம்.அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப் பட்டு, மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது"

அதாவது பார்ப்பனர் கூட சாணிதானாம். இஸ்லாமியர் மலமாம்.

எவ்வளவு அழகான வார்த்தை பிரயோகம்?

முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

"இவ்வளவும் எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும், அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு- நாட்டுப் பெரு வாரி மக்கள் சமுதாயத்துக்கும் கேடு என்பதை விளக்கவேயாகும்"

இவ்வளவு தெளிவாக "பகுத்தறிவு பகலவன்" ஆழமாக சிந்தித்து தெளிவாக எடுத்து கூறி இருப்பதை ஏற்கவோ, ஏற்காவிட்டால் கண்டிக்கவோ மனமில்லாமல் ஓடி ஒளிபவர்களை எப்படி அழைக்கலாம்?

பின் குறிப்புகள்

1) வழக்கம் போல பதில் சொல்ல தெரியாத பகூத்துகள் ஈ வே ரா சொன்னதை, நான் திரித்து எழுதி இருப்பதாக சொல்வதற்கு முன், முதல் பின்னூட்டத்தில் இருக்கும் புத்தக ஆதாரத்தை பார்த்து விட்டு, வேறு ஏதாவது யோசிக்கவும்.

2) பதில் சொல்ல இயலாத பகூத்துகள் வழக்கம் போல் பார்ப்பான், அரை பார்ப்பான் என்று ஏதாவது உளறி விட்டு போகலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஈ வே ரா -மைநாரிட்டி முஸ்லிம்கள் மலம் - ராமசாமி நாயக்கர் கருத்து
Permalink  
 


பெரியார் போற்றும் இசுலாம் : ஒரு சரடு பரப்புரை

 
 
 
பெரியார் குறித்து இஸ்லாமியர் பலவாறு தங்கள் புழுகுகளை அவிழ்து விடுவது ஒருவழக்கம். அதில் சில இன்றியமையாதவை :
 
  1. மதம் என்று ஒன்று உனக்கு தேவையென்றால் இஸ்லாத்திற்கு செல்லுங்கள்.
  2. இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்தது.
  3. 5-மணிக்கு நீ இஸ்லாத்திற்கு மாறினால், 5.05-க்கு உன்னிடமுள்ள தீண்டமை நீங்கிவிடம்.
  4. பெரியார் இஸ்லாத்தை விமர்சித்ததே இல்லை.
  5. பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. சாதி தீண்டாமையையே எதிர்த்தார்.
  6. பெரியார் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தால் இஸ்லாத்திற்கு வந்திருப்பார். (இப்பொழுது இதற்கு பெரியார்தாசனையும் துணைத்து அழைத்துக் கொள்கிறார்கள்.)
 தோழர்களேஇவைகளெல்லம் உண்மைதானா? பெரியாரின் இஸ்லாம் தொடர்பான சில கருத்துக்களை இங்கு தந்துள்ளேன். அவரின் கருத்துகளின் கால வரிசையையும் கவனத்தில்கொண்டு படியுங்கள்.
 
(1946 இல் சென்னையில் திப்புசுல்தான் நாளில் கலந்து கொண்டு ஆற்றிய உரை. குடி அரசு 16.11.1946)
 
இங்கு இந்து மதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ சூத்திரனாகவோ இருக்கிறவன் வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்குப் போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்று கேட்கிறேன். மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?

மதம் மனிதனுடைய சொந்த ஆத்மார்த்தத்திற்கா? அல்லது மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்கா? ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு "எப்படியாவது அவனுக்குப் பறப் பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்" என்போம்.
 
தோழர்களே, மதப்போராட்டம் என்பதில் ஏதாவது அறிவுடைமையோ மேன்மையோ இருக்கமுடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய மதப்போராட்டம் என்பது ஒருவிதமான வெறி அல்லது மக்களை மக்கள் ஏய்த்துப் பிழைக்கச் சுயநல வழி என்பதல்லாமல் வேறு அதில் என்ன இருக்கிறது? 
 
 
பெண் ஏன் அடிமையானால் என்ற பெரியாரின் நூலிலிருந்து – எழுதப்பட்ட காலம் 1.1.1942
மற்றும்இங்கு இந்து மதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ சூத்திரனாகவோ இருக்கிறவன் வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்குப் போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்று கேட்கிறேன். மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?
 
மதம் மனிதனுடைய சொந்த ஆத்மார்த்தத்திற்கா? அல்லது மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்கா? ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு "எப்படியாவது அவனுக்குப் பறப் பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்" என்போம்.
 
தோழர்களே, மதப்போராட்டம் என்பதில் ஏதாவது அறிவுடைமையோ மேன்மையோ இருக்கமுடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய மதப்போராட்டம் என்பது ஒருவிதமான வெறி அல்லது மக்களை மக்கள் ஏய்த்துப் பிழைக்கச் சுயநல வழி என்பதல்லாமல் வேறு அதில் என்ன இருக்கிறது? 
 
 
(06-03-1962- இல் “விடுதலை” நாளிதழில் பெரியார் .வெராதலையங்கம்.)
 
      இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில்நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும்,துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம்மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம்– பச்சைத் துரோகம் என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்ஈன்றும் வருகிறதுஇது இயற்கைப் பண்பு. (அல்லது விதி)அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடானகாரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத்துணிகிறார்கள்இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக்காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்குஆளாகித் தான் தீரும்.
 
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவிபணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கதுஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும்முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம்அதன் பலனை இன்றுஅனுபவிக்கிறோம்இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டுஎன்னவென்றால் அவன்பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறதுஅதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும்அப்பொழுதுதான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்குஇடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான்ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன்என்பதையும் யாவரும் அறிவார்கள்.

தஜ்ஜால்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard