New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும்
Permalink  
 


 நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும்! (Post No.3305)

8ce7c-brahmin2.jpg?w=600

Written by S. NAGARAJAN  Date: 31 October 2016  Contact :– swami_48@yahoo.com

  சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 3

 நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !                         ச.நாகராஜன்

                            எட்டுத் தொகை நூல்களை விளக்கும் பாடல் இது:

 நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,                      ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,

கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

 நற்றிணை ஒன்பது முதல் பன்னிரெண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. இதை நற்றிணை நானூறு என்றும் குறிப்பிடுவர்.

 நற்றிணையின் கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியுள்ளார். அதைப் பார்ப்போம்:

 ‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர்

வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,

பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய

வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே’

 முதலில் பரம்பொருளின் திருவடியை நினைவு கூர்கிறார் பெரும் புலவர்.

பெரிய நிலப்பரப்பைத் தன் சிவந்த அடிகளாகக் கொண்ட்வன்; தூவுகின்ற அலை நீரினைக் கொண்டதும்,சங்கினம் ஆரவாரித்துக் கொண்டிருப்பதுமான கடலினையே  தன் இடுப்பில் உடுக்கையாக அணிந்திருப்பவ்ன, நீலவண்ண ஆகாயத்தினையே தன் திருமேனியாகக் கொண்டிருப்பவன், நான்கு திசைகளையே கைகளாகக் கொண்டிருப்பவன் பசுங்கதிர் நிலவையும் ஒளிக் கதிர் கொண்ட சூரியனையும் கண்களாகக் கொண்டிருப்பவன் இவ்வுலகில் உள்ள அனைத்திலும்பொருந்தி நின்றவன், அவற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அநேகனாய் அதே சமயம் ஏகனாய் இருப்பவன், நான்மறைகளுக்கும் முதல்வனாக இருப்பவன், அந்தத் திருமால் இந்த நூலை உலகிடத்தே இனிது நிலைபெறச் செய்ய அருள்வானாக என்பதே இந்தப் பாடலின் பொருள்.

  திருமாலை வேத முதல்வன் என்று குறிப்பிடுவதை உற்று நோக்கினால் சங்க இலக்கிய காலத்திற்கு முன்பிருந்தே திருமாலை வழிபடுதலும் வேதத்தைப் போற்றுதலும் தமிழகத்தில் நிலைபெற்றிருந்ததை உணர முடிகிறது.

 ரிக், யஜுர், சாம, அதர்வண்ம் ஆகிய நான்கு வேதங்களே நான்மறை ஆகும்.

 மறை என்பது இரகசியப் பொருளைக் கொண்டது என்பதை உணர்த்தும். மேலெழுந்தவாரியாக அர்த்தம் பார்க்கக் கூடாது என்பதே இதன் பொருள்.

 சுருதி என்பதால் கேட்கப் படுவது என்ற அர்த்தத்தைத் தரும்,வேதம் என்பது வித் = அறிதல் என்பதிலிருந்த எழுந்த பதம். கேள்வி, எழுதாக் கிளவி, முதுநூல், என்றெல்லாம் சிறப்புற நான்மறை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது

அகப்பொருளில் உள்ள நானூறு பாடல்களின் தொகுப்பே அகநானூறு ஆகும். ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை இப்பாடல்கள் கொண்டிருக்கும்.

 அகநானூறில் 181ஆம் பாடலில் சிவனையும் நான்மறையையும்  பற்றிய குறிப்பைக் காணலாம் முதுபெரும் புலவர் கபிலர் இப்பாடலில் காவிரியாற்றையும் அதன் சுற்றுப்புறத்தையும் அழகுற கவிதைநயம் படச் சொல்கிறார்.

 நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்

ஆல முற்றம் கவின்பெறத் தைஇய  (வரிகள் 16,17)
இப்பாடலை முழுமையாகப் படித்தால் சங்க கால மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு நான்மறை என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கிறது என்பதும்  முது நூல் என்பதால் அது தொன்று தொட்டு இருந்து வருவதும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதுமாகிய  உலகப் புகழ் பெற்ற வேத  நூல் என்பதும் முக்கட் செல்வன் என்பதால் மூன்று கண்களை உடைய சிவன் என்பதும் தெரிய வருகிறது.ஆலமுற்றம் என்பதால் கல்லால மரத்தின் கீழ் தவம் செய்யும் சிவபெருமானைப் பற்றித் குறிப்பாகச் சொல்லப்படுவதை உணர முடிகிறது.

  இந்தக் கட்டுரையின் கருப்பொருளை எண்ணி உரிய பகுதிகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. முழுப் பாடலை தமிழ் அன்பர்கள் தாமே படித்து இன்புறலாம். உண்மை அர்த்தத்தைக் கண்டு மகிழலாம்.

 நல்ல விளக்க உரைகளை மட்டுமே நாடுதல் வேண்டும். திரித்தும், முறித்தும், பழித்தும், இழித்தும், தனது சுயநல நோக்கத்திற்காக நினைத்ததை எழுதும் உரைகளை அறவே நீக்குதல் வேண்டும் சிலர் பாடல்களில் வரும் வேதம், நான்மறை என்ற மூலச் சொற்களைக் கூட விட்டு விட்டு உரை எழுதுகிறார்கள்.

 

 

இவர்களின் தீய நோக்கத்தை உண்மை நாடும் தமிழ் அன்பர்கள் உடனே புரிந்து கொள்ளலாம்..



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

 

                       ச.நாகராஜன்

 

அகநானூறு

அந்தணருக்குத் தொழில் எது என அகநானூறில் ஒரு புலவர் தரும் விளக்கம் 24ஆம் பாடலில் வருகிறது.

பாடலைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

இவர் வேளாள குலத்தைச் சேர்ந்த பெரும் புலவர். இவரது மகன் தான் பெரும் புகழ் வாய்ந்த சீத்தலைச் சாத்தனார்.

யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடலை புறநானூறு (166ஆம் பாடல்) கட்டுரையில் (கட்டுரை எண் 5) பார்த்தோம்.

கீழே உள்ள பாடலில் புலவர் பிரான், யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கையே தொழிலாகும் என்று இழித்துக் கூறுகிறார்.

வேளாண்  மரபினரான இவர் அந்தணர் மீதும் வேதம் வகுக்கும் யாகங்களின் மீதும் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை இந்தப் பாடல் மூலம் அறிய  முடிகிறது. தலைவன் சொன்னதாகவோ அல்லது படைக்களத்தில் பாசறையில் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகவோ இந்தப் பாடல் அமைகிறது.

பாடல் இதோ:

வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த                            

வளை களைந்து ஒழிந்த கொழுத்தின் அன்ன                 

தலை பிணி அவிழா கரி முகப் பகன்றை                      

சிதரல் அம் துவலை தூவலின்  மலரும்                     

தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்                    

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை                   

விசும்பு உரிவது போல வியல் இடத்து ஒழுகி                      

மங்குல் மா மழை தன் புலம் படரும்                            

பனி இருங்கங்குலும் தமியன் நீந்தி                                  

தம் ஊரோளே நன்னுதல் யாமே                               

கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து                           

  நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுச்                            

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி                             

கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு

தழங்கு குரல்  முரசமொடு முழங்கும் யாமத்து

கழித்து உறை செறியா வாளுடை எறுழத் தோள்                    

இரவு துயில் மடிந்த தானை                                          

உரவுச் சின வேந்தன் பாசறையேமே

 

b86cb-brahmin4.jpg?w=600

வேளாப் பார்ப்பான் என்றால் தனக்கு விதிக்கப்பட்ட நியமங்களைச் சரிவரச் செய்யாத அந்தணன் என்று பொருள் வளை அரம் துமித்த என்றால் நன்கு  கூர்மையாக்கப்பட்ட அரம் என்று பொருள் வளை களைந்து என்றால் அந்த அரத்தினால் வளைகளைக் களைந்து சங்கை அறுத்தல் என்று பொருள்.

         “இது தை மாதத்தின் கடை நாள் அன்று குளிர்ந்த மழைத் துளிகள் விழும் போது துளிர்க்கும் பகன்றை அரு,ம்புகளானவை, யாகம் செய்யாத பார்ப்பான் சங்கு அறுத்து அதில் மிகுதியாக இருக்கும் சங்கின் மேல் பகுதிகளைப் போல  (ஒழிந்த கொழுந்தின் அன்ன தலை) இருக்கிறது”என்கிறார் புலவர்.

வேளாப் பார்ப்பான் எனப்படும் யாகம் செய்யாத அந்தணன் சங்கை அறுக்கும் தொழிலைச் செய்வது இங்கு இழுக்காகக் குறிப்பிடப்படுகிறது.

பெரிய கருத்த  மழை மேகங்கள் வானமே உதிர்ந்தாற் போல மழை பெய்விக்க தெற்கே பனி இருளில் நன்னுதல் கொண்ட  அவள் மட்டும் நகரில் தனியே இருப்பாளே நான் இங்கு போர்க்களத்திலுள்ளேன். சினம் கொண்ட  மன்னன் உறையிலிருந்து எடுத்த வாள் உள்ளே போடப்படாமல் உள்ளது என்று அடுத்துக் கூறும் கவிஞர்  பாடலில் போர் நடைபெறும் களத்தின் கடுமையை விரிவாக விளக்குகிறார்.

இந்தப் பாடலைப் பாடியவர் வேதம் ஓதுதலும் அது வகுத்த விதிமுறைப்படி யாகம் செய்தலுமே அந்தணரின் கடமை என்பதைத் தெளிவாக்குகிறார்!

அகநானூறு பாடல்களை இயற்றியுள்ள புலவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. தமிழால் இணைந்த ஓர் குல மக்கள் இவர்கள்.

அந்தணர், அரசர், எயினர், இடையர்,கூத்தர், தட்டார்,வணிகர், வேளாளர் ஆகியோர் தமிழின் மீதுள்ள காதலால் பல பொருள் பற்றிச் சிறக்கப் பாடியுள்ளனர். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இலங்கி இருந்தமையை இது காட்டுகிறது.

 

2fd08-brahmin2.jpg?w=600

சங்க காலத்தில் அந்தணர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்ததும், வாழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது.

அந்தணர்கள் என்று எடுத்துக் கொண்டால்,

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்,

கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

கபிலர்,

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்,

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்,

நக்கீரனார்,

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,

மதுரை இளங்கௌசிகனார்,

மதுரைக் கணக்காயனார்,

மதுரைக் கௌணியன் தத்தனார்,

மாமூலனார் ஆகிய புலவர்களை அகநானூற்றுப் புலவர்களாகக் குறிப்பிடலாம். இவர்களின் பாடல்கள் அகநானூறில் இடம் பெற்றுள்ளன. படித்து மகிழலாம்.

இவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பைப் பற்றியும் தனியே தான் எழுத வேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அகநானூறு கூறும் பரிதாபத்திற்குரிய பார்ப்பானின் கதை !

 

                        ச.நாகராஜன்

 

அகநானூறு

 

எட்டுத்தொகை நூல்களில் உள்ள அகநானூறில் வரும் 181ஆம் பாடலில் சிவனையும் நான்மறையையும்  பற்றிய குறிப்பைப் பற்றி சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 3இல் கண்டோம்.

அதே அகநானூறு நல்ல காரியம் செய்ய விழைந்த ஒரு பார்ப்பானின் பரிதாபத்திற்குரிய கதையை பாடல் எண் 337இல் விவரிக்கிறது.

 

பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் பாலை பற்றிப் பாடுதலில் சிறந்த கவிஞர்.

அந்தக் காலத்தில் அந்தணர்கள் வேதம் ஓதுவது, யாகம் முதலியன இயற்றுவது தவிர போரை நிறுத்துவது, நல்ல காரியம் நடப்பதற்காக தூது செல்வது போன்ற நற்பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்படி தூது செல்லும் நற்பணியில் ஈடுபட்ட பரிதாப்பத்திற்குரிய ஒரு பார்ப்பான் மிகுந்த ஏழை. அவன் வற்றிய உடலைப் பார்த்தாலே அது தெரியும். அவன் கையிலே வெள்ளோலை என்பப்படும் தூதுச் செய்தி அடங்கிய ஓலையைக் கொண்டு செல்கின்றான்.

 

 

அதைப் பார்த்த  மழவர்கள் அவன் ஏதோ ப்ரிசுப் பண்ம் தான் கொண்டு வருகிறான் என்று அவனை இடைமறித்துக் கொல்கின்றனர். ஒரே குத்து. குடல் வெளியே வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி அவனிடம் பணம் இல்லை. ஓலை தான் இருக்கிறது. கையைச் சொடுக்கி தம்மை நொந்து கொண்டு  மழவர் செல்ல, உருவிக்  குடல் சரியச் செத்துக் கிடக்கும் பார்ப்பனனை ஆண் நரி ஒன்று அணுகுகிறது. அது அந்தக் குடலைத் தின்ற படியே க்ள்ளி மரத்தின் நிழலில் ஓலமிட்டுக் கூக்குரலிடுகிறது.

 

இந்த கடுமையான் காட்டு வழி நிகழ்வின் வர்ணனையை பாலை பாடிய பெருங்கடுங்கோ அழகுற மொழிகிறார்.

இந்தச் சம்பவம் பாடலில் ஏன் வருகிறது?

 

தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து  முன்னொரு  காலத்தில் ஊரை விட்டுச் சென்று பொருள் ச்மபாதித்து வருகிறான். இப்போதும் அது போலச் செல்ல எண்ணும் போது தன் நெஞ்சைப் பார்த்துச் சொல்லும் பாடலாக இது அமைகிறது.

வெம்மை மிகுந்த காட்டு வழியில் பார்ப்பானுக்கு நேர்ந்த கதியை அவன் நினைவில் கொண்டு வருகிறான். காதலி படவிருக்கும் துயரை எண்ணுகிறான். தான் செல்லும் எண்ணத்தை கை விடுகிறான்.

 

d4514-akam2b2.jpg?w=600

பாடலை முழுதுமாகப் படித்து கருத்தை அறிந்து இன்புறலாம்.

பார்ப்பனர்கள் வெள்ளோலை ஏந்தி அஞ்சாது காட்டு வழியே தூது செல்வதையும் இடை வ்ழியில் ஏற்படும் ஆபத்தில் தன் இன்னுயிரை விடுவதையும் படிக்கும் போது நெஞ்சம் உருகுகிறது.

 

பாடல் இதோ:

 

சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

மாரி ஈர்ந் தளிர் அன்ன  மேனிப்

பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய               

ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

அவணதாகப் பொருள் என்று உமணர்

கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்                       

தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்                            

படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது                         

பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே                       

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்                          

திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்                       

செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்                          

கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ                         

வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை                                

வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்                                

கள்ளி நீழற் கதறுபு வதிய                                     

மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை                         

எமியம் கழி தந்தோயே – பனி இருள்                 

பெருங்கலி வானம் தலை இய                                  

இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே

 

 

பொருள்

மலைச்சாரலிடத்தே ஆச்சா மரத்தின் உச்சிக் கிளைகளில் மழை காலத்தில் துளிர்த்த தண்மையான தளிரை ஒத்த மேனி உடையவள் தலைவி. அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் வருந்தி தன் அழகு கெடுமாறு இந்த இடத்திலேயே நம்மைப் பிரிந்து அவள் தனித்து இருக்கும்படி நாம் செல்லுதல் இனிதல்ல. ஆதலால் நெஞ்சே! நீ க்ருதும் பொருளான அதனை அடைதலை நாம் விரும்போம்.(சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த

மாரி ஈர்ந் தளிர் அன்ன  மேனிப்

பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய               

ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின்

அவணதாகப் பொருள் என்று)

 

 

   உப்பு வாணிகரின் பொதிகளைச் சுமந்து செல்லும் கழுதைகளைப் போல குறும்பாறைகள் வரிசையாக அமைந்திருக்கும் இடத்தினூடே , வழக்கமாகத் தூது செல்லும் பார்ப்பான் தன் மடியிலே வெள்ளிய ஓலைச் சுருளுடன் வருகிறான். அவன் வருவதை மழவர்கள் நோக்குவர். ‘உண்ணாமல் இருப்பதினால் வாடிய விலா எலும்பு தெரிய இருக்கின்ற இவன் கையில் இருப்பது பொன்னாக இருக்கும் போலும்’ என்று அவர்கள் கருதுவர். உடனே அவனை வீணாகக் கொன்று வீழ்த்துவர்.கையில் சிவப்புத் தடிகளையும் அம்புகளையும்  உடைய அவர்கள் அந்தப் பார்ப்பானுடைய வறுமையை நோக்கித் தன் கைகளை நொடித்துக் கொண்டு அங்கிருந்து செல்வர்.

 

 577e8-akam1.jpg?w=600

(உமணர்

கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்                      

தூது ஓய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்                           

படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி

‘உண்ணா மருங்குல் இன்னோன் கையது                         

பொன் ஆகுதலும் உண்டு’ எனக் கொன்னே                       

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்                         

 திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்                       

செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்)

 

 

நீள  ஒழுகுகின்ற இரத்தத்துடன் சரிந்து கிடக்கும் அப்பார்ப்பானின் குடலை வரிகளை கொண்ட் வெண்மையான கண்ணைப் பறிக்கும் கூழாங்கற்கள் மின்னும் வழியினூடே ஆண் நரி ஒன்றுக் கடித்துத் தின்றபடியே கள்ளி மரத்தின் நிழலின் கீழ் கூக்குரலிட்டுத் தங்கி இருக்கும்

 

மழையே இல்லாமல் வெம்மை மிகுந்திருக்கும் அந்தக் காட்டு வழியில் முன்பொரு காலத்தில் நடுங்க வைக்கும் இராப் பொழுதில் ஆரவர்ரம் கொண்ட மேகத் திரள் திரண்டு மழை பொழிய, குளிரோடு கூடிய வாடையும் வீச அப்போது நம் தலைவி நம்மை நினைத்து வருந்துவாளே! ஆகவே நீ செல்ல வேண்டாம்!

 

 

(கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ                         

வரிமால் இயவின் ஒரு நரி ஏற்றை                               

வெண்பரல் இமைக்கும் கண்பறிக் கவலைக்                                

கள்ளி நீழற் கதறுபு வதிய                                     

மழைகண் மாறிய வெங்காட்டு ஆர் இடை                         

எமியம் கழி தந்தோயே – பனி இருள்                 

பெருங்கலி வானம் தலை இய                                  

இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே)

 

பொருள் ஈட்ட விழையும் ஒரு தலைவனை காட்டு வழியும் அங்கு அந்தணன் ஒருவனுக்கு நேர்ந்த கதியும் கலங்க வைக்கிறது. அவன் அந்த வழியே முன்பொரு முறை சென்றவன் தான். என்றாலும் கடும் வழியை எண்ணியும் பிரிவை எண்ணியும் அவன் தான் செல்லுகின்ற எண்ணத்தை விடுகிறான்.

நமக்குக் கிடைப்பது, அஞ்சாது காட்டு வழியே சென்று தூதுப்பணி ஆற்ற விழைந்த அந்தணனின் சோகமான முடிவும் தலைவன் தலைவி காதலும் தான்!

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard