New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்
Permalink  
 


 தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்

 


தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்
வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம்பொருள்இன்பம் முதலான  உறுதிப்பொருள் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் நீதி நூல்கள் (அ)அற நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம்பன்னிரு பாட்டியல் போன்றன அற நூல்களுக்கான இலக்கணத்தைத் தருகின்றன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும்அற நூல் என்று இவற்றை கூறிவிட முடியாது. எனினும். பிற்கால அறநூல்களில், சங்ககால இலக்கியங்களிலுள்ள அறநெறிக் கருத்துக்கள் பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான உள்ள 18 நூல்களுள் 11 நூல்களும் அற நூல்களாகக் காணப்படுகின்றன. ஒருவகையில், தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். ஜி. யூ. போப் பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும்விடதமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார். சங்க இலக்கியம்,காப்பியங்கள்அறநூல்கள்சிற்றிலக்கியங்கள்புராணங்கள்,சதகங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும்அவை அனைத்தின் அடிச்சரடு அறமே.

 
சங்க காலச் சூழலும் அற இலக்கியத் தோற்றமும்
 
சங்க காலப் புறவாழ்வியல் பெரிதும் தனிமனிதசமூகஅரசஅறநெறிகளின் சிதைவையே காட்டுகின்றன. இச் சிதைவைக் சரிசெய்யவேபுலவர்கள் அறநெறிக் கோட்பாட்டை வளர்த்தெடுத்துள்ளனர். . போர்கள் மலிந்து கிடந்த சங்ககாலகட்டத்தில் புலவர்கள் மன்னர்களின் மனதில் நாட்டின் அமைதிக்கான சிந்தனைகளை தோற்றுவிப்பதில் முனைந்து செயல்பட்டுள்ளனர். எனினும்அக்கால அரசுசமூகம் ஆகியவற்றின்தன்மையினால் உறுதியாக எடுத்துரைக்க இயலாமை இருந்ததையும்காணமுடிகிறதுஇந்நிலைகளே அற இலக்கியங்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெருக இடமளித்தன எனலாம். (‘‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும்என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும்இரண்டும் பொருளின் ஆகும் புனையிழை’’ (அகம்., 155),“தீதும் நன்றும் பிறர் தர வாரா,“ (புறம்) “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே;“(புறம் 182)
சங்க கால அற லக்கியங்கள் 
எல்லா இலக்கியங்களுமே அறநூல்கள் என்று கூறப்படும் தன்மை வாய்ந்தவை என்றாலும்  சில நூல்களை மட்டும் அற இலக்கியங்கள் என்று பாகுபடுத்துகிறோம். காரணம்இவை நேராகவே அறிவுரை கூறும் முறையில் அமைந்துள்ளன. திருக்குறள்நாலடியார்,நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது,திரிகடுகம்,ஆசாரக்கோவை,பழமொழி நானூறு,சிறுபஞ்சமூலம்,ஏலாதி,முதுமொழிக்காஞ்சி போன்ற அற இலக்கியங்களே தமிழில் தொடக்கத்தில் வெளிவந்த அற இலக்கியங்கள். இவையே அற இலக்கிய தோற்ற முன்னோடிகள். பிற்கால அறஇலக்கியங்கள் இவற்றின் வடிவ சிறப்பையும், நேர்த்தியான மொழி உத்திகளையும் மிக அழகுற எடுத்தாண்டு தமிழில் அற இலக்கியங்கள் பெருக வழிவகுத்துள்ளன.
இடைக்கால அறஇலக்கியங்கள்
இடைக்காலத்தில் வெளிவந்த அருங்கலச் செப்புஅறநெறிச்சாரம்,நறுந்தொகைநீதிநெறிவிளக்கம்நன்னெறிஉலகநீதி,முதுமொழி வெண்பாஇவற்றோடு, அவ்வையாருடைய ஆத்திசூடி,கொன்றை வேந்தன்மூதுரை,நல்வழிபோன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றைத் தவிர சிறந்த நீதி ஒழுக்கங்கள் அடங்கிய நூல்கள் இன்னும் பல உள்ளன. சான்றாக,முத்துராமலிங்க சேதுபதி இயற்றிய நீதிபோத வெண்பா,செழியதரையன் என்பார் இயற்றிய நன்னெறி,திருத்தக்க தேவர் இயற்றிய நரிவிருத்தம், கபிலர் அகவல், இராசகோபால மாலை போன்றவை.
இருபதாம் நூற்றாண்டு அற இலக்கியங்கள்
புதிய ஆத்திசூடி (பாரதியார், பாரதிதாசன்,உள்ளிட்டோர் படைத்த 45க்கும் மேலான ஆத்திச்சூடி நூல்கள் உள்ளன). மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூல்பெண்மதி மாலை,ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம்,நெறிசூடி,தமிழ் சூடி,நீதி சூடி,நீதி சிந்தாமணி,பொண்மதிமாலை,நீதிபேதம்,விவேக சிந்தாமணி
அறநெறி கருத்துக்கள் உள்ள பிற இலக்கியங்கள்
தண்டலையார் சதகம்,கோவிந்த சதகம்,சயங்கொண்டார் சதகம்,அறப்பளீசுர சதகம்மணவாள நாராயண சதகம் முதலான சதகங்கள் கூறும் அறநெறிக் கருத்துக்கள் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதவை.இவைதவிர, சித்தர் பாடல்கள்திருமூலரின் திருமந்திரம்தாயுமானவர்,வள்ளலார்மஸ்தான் சாகிபு போன்ற பல கவிஞர்களின் பாடல்களையும் நோக்கும் போது அவற்றுள் அறக்கருத்துகள் நிறைந்து கிடப்பதனைக் காணலாம். இவற்றில் செவ்வியல் இலக்கியங்களிலுள்ள பல கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. சில இலக்கியங்கள் செவ்வியல் கூறும் அறநெறிகளிலிருந்து மாறான கருத்தை முன் வைக்கின்றன. பிற்காலத்தில் தோன்றிய அறஇலக்கியங்களில் செவ்வியல் நூல்களில் உள்ள அறக்கருத்துக்களின் தாக்கமும்செல்வாக்கும் மிகுதியாக உள்ள கருத்துக்களையும்மாறுபடும் கருத்துக்களையும் அதற்கான காலச்சூழல்,காரணங்களையும் ஆராய வேண்டியது அவசியம். திருவள்ளுவர் ‘கற்க கசடற‘ என்கிறார்.பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அதிவீரராம பாண்டியர்வெற்றிவேற்கை என்னும்நூலில், ‘கல்விக்கழகு கசடற மொழிதல்,அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்‘ என்கிறார். உலகநாத பண்டிதர் உலகநீதியில், ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்கிறார். ‘சாதி ஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல் வட்டமன்றோ‘ என்கிறது குமரேச சதகப் பாடல். நீதிவெண்பா என்ற நூல், “கற்றோர்கள் எங்கே பிறந்தாலும் என்?”என்று கேள்வி எழுப்புகிறது.
 
அறநூல்களைப் பயிலுவதும் பாடமாக வைப்பதும் பயன்படுத்துவதும் இன்று குறைந்துவிட்டது. வாழ்க்கையின் நிலைகெடும்ஒவ்வொரு நிலையிலும் தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அறநூல்கள். இவை பழைய அனுபவங்களின் சாரங்கள். தமிழர்கள் இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்
Permalink  
 


 

 
 
PREMALATHAVJ.BLOGSPOT.COM
 
கட்டுரையாளர் பா.மணிவண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் , அரசுகலைக்கல்லூரி , சேலம் 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Selvakumar Udaiyar குழுவுடன் இடுகை ஐப் பகிர்ந்துள்ளார்: இந்து மதத்தை பற்றி அறிவோம்.
 
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
Shiva Ram பெறுநர் இந்து மக்கள் சேனா

பிராமணர்களை ஒடுக்குவதில் அரசியல் ஆரம்பித்து,

பிராமண எதிர்ப்பு என்பதையும் தாண்டி,

இப்போது பிராமணர்களை குறிவைத்து மதமாற்றம்

பல முன்னேறிய சமூகங்கள் இருந்தாலும் குறிப்பாக பிராமணர்களை மட்டும் எதிர்ப்பது,புறக்கணிப்பது, ஒடுக்குவது,மதம் மாற்றுவது என்று தொடர்ச்சியாக செய்வதன் காரணம்?இந்த நாட்டிற்கோ

அல்லது இந்த சமூகத்திற்கோ

அப்படி என்ன துரோகம் செய்து விட்டார்கள்??????

இதன் பின்னணியில் உள்ள

வெளிநாட்டின் மதங்களின் சதி திட்டம் தான் காரணமா?

100% yes. ஆம்.

காரணம் என்னவென்றால்,

இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக அரசாட்சியில் உள்ள மன்னர்களுக்கும்,

குறுநில மன்னர்களுக்கும்,

ஏன் ஜமீன்தாரர்களுக்கும்

கடவுள் அருளிய நல் புத்தி, நல் எண்ணத்துடன்

ஆட்சி எப்படி நல்வழியில் செயல்பட வேண்டும் என்பதற்கு

நல்ல ஆலோனைகளை வழங்கினார்கள்.ஆட்சியாளர்களுக்கு பக்கபலமாகவும்,

எந்த வித ஆதாயம் கருதாமல் பணியாற்றுகொண்டு இருந்திருக்கிறார்கள்.

Eg:

1.மெளரிய பேரரசில் அங்கம் வகித்த

அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர்.

2.முஸ்லீம்களிடம்வீழ்ந்து கிடந்த பாரதத்தை மீட்டெடுத்தமராட்டிய மன்னர் வீர சிவாஜிக்கு நல்வழிக் காட்டிய
"சமர்த்தர் ராமதாஸர்" அவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் என்பது வரலாறு.

ஆக அரசாள்பவர்களுக்கு

பக்கத் துணையாகவும்,

நல்ல ஆலோசனைகளை தருபவர்களாகவும்,

நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும்,

குறிப்பாக நாட்டை நேசிக்கிற தன்மை கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும்,மொத்தத்தில் நல்ல வழிக்காட்டிகளாக இருந்துள்ளதை பண்டைய வரலாறு சான்றாக இருக்குறது.

அடுத்த முக்கியமான விசயங்கள் .

பல நாடுகளை

குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இஸ்லாம் மதத்தினர்,

இஸ்லாமிய நாடாக மாற்றி உள்ளனர்.

அதற்கு Eg

இஸ்லாமியர்கள் இல்லாத

ஈரான் நாட்டை வெறும் 16 வருடங்களில் இஸ்லாமிய நாடாக மாற்றப்பட்டு உள்ளது.

மலேசியா, தாய்லாந்து | இந்தோனேசியா இது போல பட்டியல் நீண்டு செல்வதை நாம் அறிய முடிகிறது.

கிறித்தவர்களும்

பல நாடுகளை கிறித்துவ நாடுகளாக மாற்றி உள்ளனர்.

இந்த இருவருக்கும் எப்போதும் ஆகாது என்பது வேறு கதை.
ஆனால்,

இந்த இரு அரேபிய மதங்களும்

இந்தியாவில் மட்டும் கூட்டு சேர்ந்து கொண்டு,

பல உத்திகளை கையாண்டு

பல வருடங்களாக பாரத நாட்டை இஸ்லாமிய நாடக மாற்ற

முஸ்லீம்கள் முயற்சித்துக் கொண்டே உள்ளனர்.

எத்தனை ஆண்டுகளான முயற்சி என்றால் 1210ம் ஆண்டு செங்கிஸ்கான் முதல் அதாவது 1008 ஆண்டுகளாகஇந்தியாவை இஸ்லாம் நாடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். (இதில் ஓரளவு வெற்றியும் பெற்று உள்ளார்கள். உதாரணம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ்) என்ற இந்து நிலப்பரப்புகளை இஸ்லாமியர் நிலபரப்புகளாக மாற்றி உள்ளதை பார்க்கின்றோம்.)

சரி
முஸ்லீம்கள் தான் இப்படி என்றால் கிறித்துவர்களும் இந்த நாட்டை அபகரிக்க 1858 முதல் அதாவது160 வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த இருவரும் பல சூழ்ச்சிகளை செய்தும் பாரத தேசத்தை ஒன்றும் செய்ய முடியாமல் போவதற்கு உண்டான காரணங்கள் என்னவென்று இஸ்லாமும் , கிறித்துவமும்அலசி ஆராய்ந்து பார்த்ததில்
முக்கியமான காரணங்களில் முதன்மையான காரணம்

ஹிந்துக்களின் ஆன்மீகம்

வழிபாடு, பண்பாடு, வாழ்க்கை முறை சித்தாந்தங்கள் தான்.

இவை எல்லாம் உயிர்ப்போடு

இருக்கும் வரையில் இந்தியாவையும்

மக்களையும் மதமாற்றங்கள் செய்ய இயலாது என்பதை இந்த 2 அரேபிய மதங்கள் நன்கு அறிந்து கொண்டன.

அதற்கான சூழ்ச்சிகளின் அடுத்த கட்டம் தான் பிராமண எதிர்ப்பு என்ற அஸ்திரம்.

ஏன் பிராமணர்களை எதிர்க்க வேண்டும்?

ஹிந்துசமூகம் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் இந்த பிராமணர்கள் தான் என்பதை நாம் அறிந்தோமோ இல்லையோ
அவர்கள் அறிந்துள்ளனர்.ஹிந்து மக்களின்

ஆன்மீகத்தை, கலாசாரத்தை,

பண்பாட்டை,

முக்கியமாக ஹிந்துக்களின்

நம்பிக்கையை உடைத்து எறிந்தால் தான் ஹிந்துஸ்தானை உடைக்க முடியும். அதற்கு

ஹிந்துசமூகம் உயிர்ப்போடு இருக்க ஆன்மீகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் பிராமணர்களை ஒழித்தால் தான் முடியும்என்று அவர்கள் அறிந்தார்கள்.

பிராமணர்கள் இருக்கும் வரை கோவில்கள் இருக்கும்.

கோவில்கள் இயங்கும் வரை

ஆன்மீகம் இருக்கும் வரை ஹிந்து வழிபாடு இருக்கும்.

ஹிந்து வழிபாடுகள் இருக்கும் வரை

ஹிந்து மக்களின் நம்பிக்கை இருக்கும்.ஆக ஹிந்து மக்களின் நம்பிக்கையை உடைத்து எறியாமல்

இந்த நாட்டை இஸ்லாம் நாடாகவோ, கிறித்துவ நாடாகவோ மாற்ற இயலாது என்பதை அறிந்து

இஸ்லாமும், கிறித்துவமும்

பல வழிகளை கையாண்டு

நமது நம்பிக்கைகளை,

வாழ்க்கை முறைகளை,

ஆன்மீகத்தை,

வீழ்த்துவதற்கு பல சூழ்ச்சிகளை கையாளுகின்றனர்.குறிப்பு இந்த 2 மதத்தினரூம் இந்துகளின் உறவுகள் தான்)

அதில் முக்கியமானதும்

முதன்மையானதுமான

சூழ்ச்சியே

"பிராமண எதிர்ப்பு".

பிராமணர்களை அப்புறப்படுத்தி விட்டால்,

ஹிந்துசமூகம் விரைவில் வீழ்ந்து விடும் என்பதை அவர்கள் அறிந்தே

நம்மிள் உள்ள புல்லுருவிகளை பயன்படுத்தியே
பின்புலத்தில் இருந்து இன்றும் செயல்படுகிறார்கள்.

ஒரே பொய்யை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தால்?

அதுவே

"உண்மையாகவும்"

பிற்காலத்தில் அதுவே

" வரலாறாகவும்" ஆகி விடுகிறது.
ஏதோ பிராமணர் சமூகத்தின் போதாத காலம்

சுதந்திர இந்தியாவில் சேவை துறையில்

கவர்னர்கள், நீதிபதிகள், வக்கீல்கள்,ஆசிரியர்கள், ஆபிசர்கள் களாக

அதிகமான பிராமணர்கள் வேலை செய்ததையே

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மூலதனமாக எடுத்துக் கொண்டனர்.
மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான்களாக திகழ்ந்தனர்.

அவர்களின் ஆண்டாண்டுகளாக சேவை வாழ்க்கை முறையின் காரணமாக அந்நிலை ஏற்பட்ட தே

அவர்களுக்கு எதிராக திசை திருப்பி விட

நல்ல ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

இன்றளவும் பிராமணர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை...

இந்து மக்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்தி
இந்துமதத்தை அழிக்க சதித்திட்டம் நடந்து கொண்டு இருக்கிறது இதன் கைகூலிகள்தான் திராவிட இயக்க்த்தார்கள். அவர்களில் சிலர் தற்போது கோவில்களில் இடம்பெறுவதால் கொஞ்சம் 
கொஞ்சம் கட்டுக்குள் இருக்கிறது..

மேலும் ஹிந்து வீட்டு பெண்களை குறி வைப்பதன் மூலம்,ஹிந்துக்களின் பாரம்பரியத்தை குலைக்கும் செயல் நடந்து வருகிறது.

பெண்,பிள்ளைகளை பெற்ற
ஹிந்துக்கள்,அவர்கள் மதம் மாறும் பட்சத்தில்,மனதை தைரிய படுத்திக் கொண்டு நீங்கள் வளர்த்தசெடியை பிடுங்கி எறியவும்அந்நிய ஆம்ரகாமிய மதவாதிகளின் ,வலையில் விழாமல், அவர்களின்

சதித்திட்டங்களை முறியடித்து நம் பழம்பெரும் பாரம்பரீயங்களை காப்போம் உண்மையான நம் தமிழ் உறவுகளை...

இவ்வுலகில் இந்துக்கள் இல்லை என்றால் அமைதி என்பது துளியும் இல்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard