New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழ வெண்மணி- பெரியார் முழு அறிக்கை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கீழ வெண்மணி- பெரியார் முழு அறிக்கை
Permalink  
 


கீழ வெண்மணி- பெரியார் முழு அறிக்கை விவரம்

கீழ வெண்மணி- பெரியார் முழு அறிக்கை விவரம்

கீழவெண்மணி படுகொலை குறித்து பெரியார் விடுத்த அறிக்கை- முழுவிவரம்

கீழ வெண்மணிப் படுகொலை குறித்து 28.12.1968இல் பெரியார் ஒரே நாளில்  இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். “இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம் தான் கோலோச்சும்” என்ற தலைப்பில்  வெளியிட்ட அவ்வறிக்கையின் முக்கிய சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான். அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டிவிட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலமும் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலமும் காரியத்தை சாதித்துக்கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்படுவிட்டது. சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. 
அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலைமையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வeர்ந்தன என்றால்,

1. காந்தியார் கொல்லப்பட்டார்.

2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள் , ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப் பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டி விட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும். 

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாச வேலைகளாக காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப்பயன் படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழி வாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் – அமைச்சர்கள் நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் எங்களுக்கு மேலாக இருப்பதால் – எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றதன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கட்டு பிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக- எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது. 

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி – அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும். 

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது –
 
1.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில் , நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையயன்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும். 

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும்.சமுதாய- பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். 

பத்திரிகைகளைப் பெரும்அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையயன்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக்கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும். 

“Patriotism is the last refuge of a scoundrel” தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -ஜான்சன்

(விடுதலை 28.12.1968)

நன்றி: சுகுணா திவாகர், “மிதக்கும் வெளி” இணையப் பக்கத்திலிருந்து இவ்வறிக்கை எடுக்கப்பட்டது.

( குறிப்பு: கீழ வெண்மணிப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாரும் பிராமணர்கள் அல்ல, பெரியாரின் மொழியில் சொன்னால் அவர்கள் சூத்திரர்கள். சாதிவெறி பிடித்த கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிப்பதற்குப் பதிலாக, செத்துப்போன காந்தியை காரணம் கூறி, நாடு குட்டிச் சுவராகி விட்டது என்று கூறுவதில் யாதெனும் பொருளுண்டா?  இந்தியாவை ரஷ்யாவோ, அமெரிக்காவோ ஆள வேண்டும் என்று  விண்ணப்பம் போடுவதுதான் சுயமரியாதை பேசுபவருக்கு அழகா?
கீழ வெண்மணி மக்களுக்காக போராடி வந்த கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட வேண்டுமாம்! கொடுங்கோலன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு தண்டனை வாங்கித் தராத தி.மு.க.வும், தஞ்சை மாவட்ட நிலவுடைமையரின் பதுங்குகுழியாக இருந்த பேராயக்கட்சியும் இந்திய அரசின் ஆதரவோடு கட்சி நடத்தலாமாம்! மற்ற இயக்கங்களை  எல்லாம் அழித்து விட வேண்டுமாம்! கீழ வெண்மணித் தீயில் மடிந்த மக்களுக்கு கடுகளவேனும் அனுதாபம் காட்டாத, கோபால  கிருஷ்ண நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் இந்த நீண்ட அறிக்கை திசை திருப்புவதற்கென்று விடப்பட்ட அறிக்கையாக எண்ணத் தோன்றுகிறது)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்! – பெரியார்

கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்! – பெரியார்

கீழ வெண்மணிப் படுகொலைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம்!

-பெரியார்

12.1.1969 அன்று நாகை மாவட்டம் செம்பனார் கோவிலில் பெரியார்  ஆற்றிய சொற்பொழிவிலிருந்து… (விடுதலை 20.1.1969)

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு – பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல. தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்குத் தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

(குறிப்பு:  சாணிப்பாலுக்கும்,சவுக்கடிக்கும்  எதிராக கலகக்குரல் எழுப்பி நீண்ட காலமாக போராடி வந்த மக்களை வெறுமனே கூலி உயர்வுக்கு போராடிய மக்களாக பெரியார் சித்தரிப்பது தவறானது. ஒரு வாதத்திற்காக கூலி உயர்வுக்கு போராடினார்கள் என்றாலும் அந்த மக்களை எரித்துக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த மக்களை தீயிலிட்டு பொசுக்குவதற்கு உத்தரவிட்ட  கொடுங்கோலன் கோபால கிருஷ்ண நாயுடு மீது ஒரு கண்டனம் உண்டா?  பரிதாபமாக கருகிக்கிடக்கும் 44 உயிர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை உண்டா? தப்பிப் பிழைத்தவர்களிடம்  நேரில் சென்று ஆறுதல் கூறியது உண்டா? எதுவுமே செய்யாமல் கம்யூனிஸ்டுகள் தான் தூண்டி விட்டார்கள் என்று பெரியார் வசைபாடுவது திசை திருப்பும் முயற்சியேயன்றி வேறல்ல.)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கீழ வெண்மணிப் படுகொலையும்- ஈ.வெ.ரா.அறிக்கையும்

கீழ வெண்மணிப் படுகொலையும்- ஈ.வெ.ரா.அறிக்கையும்

கீழ வெண்மணிப் படுகொலையும் – ஈ.வெ.ரா.பெரியார் அறிக்கையும்
25.12.1968 அன்று ஆதிக்க சாதிவெறி, பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடி வந்த  தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் கீழவெண்மணியில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு அன்றைக்கு தமிழகத்தையே உலுக்கியது.

கீழவெண்மணி போராட்டத்தை முன் நின்று நடத்திய சி.பி.எம். கட்சி இக்கொடூர கொலைக்கு  காரணமான கோபால கிருஷ்ண நாயுடுவை கைது செய்து தண்டிக்குமாறு போர்க்குரல் எழுப்பியது. அப்போது கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்கவும், இறந்து போன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் மறுத்தவர் ஈ.வெ.ரா.பெரியார் ஆவார்.
 அதுமட்டுமின்றி, கலவரமூட்டிய சி.பி.எம்.கட்சியை தடை செய்ய வேண்டுமென்று (28.12.1968) அறிக்கையும் வெளியிட்டார்.

இந்த அறிக்கை குறித்து சி.பி.எம்.கட்சியோ, பெரியாரைக் கொண்டாடும் தலித் இயக்கங்களோ எவ்வித கருத்தும் சொல்வதில்லை. வெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முதன்மைப் படுத்தும் போக்குகள் கீழ்வெண்மணிப் போராளிகளை சிறுமைப் படுத்தும் செயலாகும்.  உண்மைநிலை தெரிந்தோ, தெரியாமலோ பெரியாரைப் பயன்படுத்தும் அமைப்புகளுக்கு அவரது கீழ்வரும் அறிக்கையினை தொகுத்து தருகிறோம்.
1. சட்ட மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் மாறி விட்டார்கள்.

 

2. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத  அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் செல்வாக்கு பெற்று விட்டபடியால் காந்தியார் கொல்லப்படுதல், காமராசர் கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகளை கட்டிப் போட்டு நெருப்பு   வைத்துக் கொளுத்தப்படுதல், நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள், பல வாகனங்கள் கொளுத்துதல் என வளர்ந்து விட்டன. 
3. கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டு கொளுத்தி 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும். 

4. இன்றைய நிலை மாற வேண்டுமானால் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு கட்சிகளைத் தவிர அரசியல் சம்மந்தமான எல்லாக் கட்சிகளையும் இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.

 
5. எந்தக்கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்து விட வேண்டும். 
6. எந்தக் காரியத்திற்கும் சட்ட மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.
 

7. இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி  வாய்ப்பு ஏற்படும்வரை தான். இந்த நிலையில் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.
 8.தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் (ஜான்சன்).
மேற்கண்ட பெரியாரின் அறிக்கையை படிப்பவருக்கு தலைசுற்றல் தான்வரும். ஏனெனில், அந்தளவிற்கு வெண்மணிக்கு சம்மந்தமில்லாத உளறல்களே அதிகமாக உள்ளன. காந்தியார் சட்ட மீறுதல் மூலம் மக்கள் அயோக்கியர்களாக்கி விட்டபடியால் நாடு முழுவதும் நாசவேலைகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கீழ்வெண்மணிப் படுகொலை நடந்து விட்டது. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு  கோரிக்கை வைப்பது தான் பெரியாரின் விரிவான அறிக்கையின் சாரமாகும்.
கீழவெண்மணியில் மக்களோ, கம்யூனிஸ்ட் கட்சியோ எந்த வன்முறையிலும் ஈடுபட வில்லை என்பது தான் அதன் உண்மை வரலாறு அறிந்தோர் கூறுவர். 

25.12.1968 அன்று மாலை 5 மணிக்கு வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மிராசுதரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் விடுவிக்கும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். 
அதில் கோபால கிருஷ்ண நாயுடுவின் அடியாள் பக்கிரி என்பவன் இறந்து விடுகிறான். அதைக் கேள்விப்பட்டு கோபால கிருஷ்ண நாயுடுவும், அவரின் ரவுடிக்கும்பலும் அங்கு வந்து சேர்ந்தது. போராடிய மக்களை ஆயுதங்களைக் கொண்டு  விரட்டியது. அதன் பிறகு இராமையா என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்த போது கதவைப் பூட்டி ஈவு இரக்கமின்றி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியது. அதில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 முதியவர்கள்  துடிதுடிக்க இறந்தனர்.
இதை மூடி மறைத்து விட்டு மக்களையும், கம்யூனிஸ்டு கட்சியையும் சாடுவதிலிருந்து கோபால கிருஷ்ண நாயுடுவை பெரியார் காப்பாற்ற முயல்வது தெரிகிறது.
கீழ்வெண்மணிப் படுகொலை என்பது ஒரு நாளில் நடந்த நிகழ்வல்ல. இது 25 ஆண்டு காலமாக  வர்ணசாதி ஆதிக்கம், பண்ணையடிமை முறைக்கு எதிராக நடந்து வரும் நீண்ட நெடிய போராட்டமாகும். 
தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பாலை ஊற்றுவது, குருதிப் பீறிடும் வரை சவுக்கடி தருவது எனும் காட்டுமிராண்டி கால கொடுமைகள் நிகழ்ந்த போது அதற்கு எதிராக களப்பால் குப்பு, வாட்டக்குடி இரணியன் ஆகியோர் போராடி உயிர் நீத்தனர். 
பி.சீனிவாசராவ் என்பவர் தலைமையில் மக்கள் போராடி ஓரளவு சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால் கலக்கமுற்ற ஆண்டைகளின் உச்சபட்ச தாக்குதல் தான் கீழ்வெண்மணிப் படுகொலையாகும்.
கீழவெண்மணிப் போராட்டம் என்பது வெறும் கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல. இது  வர்ண சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் கூட. எனவே உண்மை வரலாறு தெரியாமல்  கீழவெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முன்னிறுத்துவது என்பது நேர்மையற்ற வரலாற்று மோசடியாகும்!

கீழ வெண்மணிப் படுகொலையும்- ஈ.வெ.ரா.அறிக்கையும்

கீழ வெண்மணிப் படுகொலையும்- ஈ.வெ.ரா.அறிக்கையும்

கீழ வெண்மணிப் படுகொலையும் – ஈ.வெ.ரா.பெரியார் அறிக்கையும்
25.12.1968 அன்று ஆதிக்க சாதிவெறி, பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடி வந்த  தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் கீழவெண்மணியில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு அன்றைக்கு தமிழகத்தையே உலுக்கியது.

கீழவெண்மணி போராட்டத்தை முன் நின்று நடத்திய சி.பி.எம். கட்சி இக்கொடூர கொலைக்கு  காரணமான கோபால கிருஷ்ண நாயுடுவை கைது செய்து தண்டிக்குமாறு போர்க்குரல் எழுப்பியது. அப்போது கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்கவும், இறந்து போன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் மறுத்தவர் ஈ.வெ.ரா.பெரியார் ஆவார்.
 அதுமட்டுமின்றி, கலவரமூட்டிய சி.பி.எம்.கட்சியை தடை செய்ய வேண்டுமென்று (28.12.1968) அறிக்கையும் வெளியிட்டார்.

இந்த அறிக்கை குறித்து சி.பி.எம்.கட்சியோ, பெரியாரைக் கொண்டாடும் தலித் இயக்கங்களோ எவ்வித கருத்தும் சொல்வதில்லை. வெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முதன்மைப் படுத்தும் போக்குகள் கீழ்வெண்மணிப் போராளிகளை சிறுமைப் படுத்தும் செயலாகும்.  உண்மைநிலை தெரிந்தோ, தெரியாமலோ பெரியாரைப் பயன்படுத்தும் அமைப்புகளுக்கு அவரது கீழ்வரும் அறிக்கையினை தொகுத்து தருகிறோம்.
1. சட்ட மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் மாறி விட்டார்கள்.

 

2. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத  அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் செல்வாக்கு பெற்று விட்டபடியால் காந்தியார் கொல்லப்படுதல், காமராசர் கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகளை கட்டிப் போட்டு நெருப்பு   வைத்துக் கொளுத்தப்படுதல், நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள், பல வாகனங்கள் கொளுத்துதல் என வளர்ந்து விட்டன. 
3. கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டு கொளுத்தி 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும். 

4. இன்றைய நிலை மாற வேண்டுமானால் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு கட்சிகளைத் தவிர அரசியல் சம்மந்தமான எல்லாக் கட்சிகளையும் இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.

 
5. எந்தக்கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்து விட வேண்டும். 
6. எந்தக் காரியத்திற்கும் சட்ட மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.
 

7. இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி  வாய்ப்பு ஏற்படும்வரை தான். இந்த நிலையில் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.
 8.தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் (ஜான்சன்).
மேற்கண்ட பெரியாரின் அறிக்கையை படிப்பவருக்கு தலைசுற்றல் தான்வரும். ஏனெனில், அந்தளவிற்கு வெண்மணிக்கு சம்மந்தமில்லாத உளறல்களே அதிகமாக உள்ளன. காந்தியார் சட்ட மீறுதல் மூலம் மக்கள் அயோக்கியர்களாக்கி விட்டபடியால் நாடு முழுவதும் நாசவேலைகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கீழ்வெண்மணிப் படுகொலை நடந்து விட்டது. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு  கோரிக்கை வைப்பது தான் பெரியாரின் விரிவான அறிக்கையின் சாரமாகும்.
கீழவெண்மணியில் மக்களோ, கம்யூனிஸ்ட் கட்சியோ எந்த வன்முறையிலும் ஈடுபட வில்லை என்பது தான் அதன் உண்மை வரலாறு அறிந்தோர் கூறுவர். 

25.12.1968 அன்று மாலை 5 மணிக்கு வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மிராசுதரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் விடுவிக்கும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். 
அதில் கோபால கிருஷ்ண நாயுடுவின் அடியாள் பக்கிரி என்பவன் இறந்து விடுகிறான். அதைக் கேள்விப்பட்டு கோபால கிருஷ்ண நாயுடுவும், அவரின் ரவுடிக்கும்பலும் அங்கு வந்து சேர்ந்தது. போராடிய மக்களை ஆயுதங்களைக் கொண்டு  விரட்டியது. அதன் பிறகு இராமையா என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்த போது கதவைப் பூட்டி ஈவு இரக்கமின்றி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியது. அதில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 முதியவர்கள்  துடிதுடிக்க இறந்தனர்.
இதை மூடி மறைத்து விட்டு மக்களையும், கம்யூனிஸ்டு கட்சியையும் சாடுவதிலிருந்து கோபால கிருஷ்ண நாயுடுவை பெரியார் காப்பாற்ற முயல்வது தெரிகிறது.
கீழ்வெண்மணிப் படுகொலை என்பது ஒரு நாளில் நடந்த நிகழ்வல்ல. இது 25 ஆண்டு காலமாக  வர்ணசாதி ஆதிக்கம், பண்ணையடிமை முறைக்கு எதிராக நடந்து வரும் நீண்ட நெடிய போராட்டமாகும். 
தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பாலை ஊற்றுவது, குருதிப் பீறிடும் வரை சவுக்கடி தருவது எனும் காட்டுமிராண்டி கால கொடுமைகள் நிகழ்ந்த போது அதற்கு எதிராக களப்பால் குப்பு, வாட்டக்குடி இரணியன் ஆகியோர் போராடி உயிர் நீத்தனர். 
பி.சீனிவாசராவ் என்பவர் தலைமையில் மக்கள் போராடி ஓரளவு சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால் கலக்கமுற்ற ஆண்டைகளின் உச்சபட்ச தாக்குதல் தான் கீழ்வெண்மணிப் படுகொலையாகும்.
கீழவெண்மணிப் போராட்டம் என்பது வெறும் கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல. இது  வர்ண சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் கூட. எனவே உண்மை வரலாறு தெரியாமல்  கீழவெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முன்னிறுத்துவது என்பது நேர்மையற்ற வரலாற்று மோசடியாகும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிடமும் கீழ வெண்மணி படுகொலையும் :-
வருடம் 1968 - தமிழகத்தில் - திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிகட்டிலில் ஏறி ரெண்டு ஆண்டுகள் ஆகி இருந்த நிலை - அண்ணாதுரை ( 06 மார்ச்சு,1967 – 13 ஜனவரி,1969) கூலி உயர்வு கேட்ட தாழ்த்தப்பட்ட விவசாய பணியாளர்கள் குடிசையில் வைத்து கொளுத்தி கொல்லப்பட்டனர் !!! இதன் போது 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
ஆம் அன்பர்களே - சில நொடிகள் எடுத்து அந்த அப்பாவி பெண்கள் குழந்தைகள் பெயர்களை படித்து பாருங்க !!!
இன்றைய சோஷியல் மீடியா இல்லாத காரணத்தால் .. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் - கோர்ட்இல் தண்டனை இல்லாமல் தப்பினார்கள் என்று உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும் ??? -
அன்று திராவிட ஆட்சி நடைபெற்றது - அவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியாது .. ஆனால் ஈரோடு ராமஸ்வாமி நாயக்கர் .. 28.12.1968இல் தனது விடுதலை பத்திரிக்கையில் ஒரே நாளில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார்.
அதில் “இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம் தான் கோலோச்சும்” - என்றும் வெள்ளைக்காரன் ஆட்சி சிறப்பு என்று பொருள் பட எழுதி இருந்தார் ..
=============================
"இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்"
=======================
இந்த கொடூரங்கள் அரங்கேற்றியது - ராமஸ்வாமி நாயக்கர் ஜாதியை சேர்ந்த கோபலகிருஷ்ண நாயுடு என்பவரின் பண்ணையில் !!! - அவரது அறிக்கையில் எந்த இடத்திலும் பண்ணையாரை பற்றி கண்டித்து எழுதிய வில்லை ..
ஆனால் .. பார்பனன் ஒழிக்கப்பட வேண்டும் !!!
====================================
" பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது. "
.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும்.
=========================
மிக முக்கியமான செய்தி - கூலி உயர்வு கேட்ட அந்த கம்யூனிஸ்ட் கட்சி பற்றி நாயக்கர் ..
==========================
"கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது."
==========================================
கீழ வெண்மணிப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாரும் பிராமணர்கள் அல்ல, பெரியாரின் மொழியில் சொன்னால் அவர்கள் சூத்திரர்கள். சாதிவெறி பிடித்த கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிப்பதற்குப் பதிலாக, நாடு குட்டிச் சுவராகி விட்டது என்று கூறுவதில் மடை மாற்றும் திறமையை நாயக்கர் காட்டி இருக்கிறார் !!!
இந்தியாவை ரஷ்யாவோ, அமெரிக்காவோ ஆள வேண்டும் என்று விண்ணப்பம் போடுவதுதான் சுயமரியாதை பேசி இவர் போடும் நாடகம் - மேலும் 1940 களில் இவர் ரஷ்யா அரசின் காசில் அங்கே சுற்றுப்பயணம் சென்றது கவனிக்க தக்கது !!!
கீழ வெண்மணி மக்களுக்காக போராடி வந்த கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட வேண்டுமாம்! கொடுங்கோலன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு தண்டனை வாங்கித் தராத தி.மு.க.வும், தஞ்சை மாவட்ட நிலவுடைமையரின் பதுங்குகுழியாக இருந்த பேராயக்கட்சியும் இந்திய அரசின் ஆதரவோடு கட்சி நடத்தலாமாம்! மற்ற இயக்கங்களை எல்லாம் அழித்து விட வேண்டுமாம்!
===========================================
இந்த கொடூர கொலை கேஸ் 1968கடைசியில் தமிழகத்தில் நடந்த மிகப் பெரும் படுகொலைகள் 22 ஆண்டுகள் கழித்து 1990 கடைசியில், குற்றவாளிகளைத் தண்டனையின்றித் தப்பவிட்ட சோகமான நிகழ்வு நடந்தேறியது.!!!
அம்மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது 14.12.1980 அன்று கோபாலகிருஷ்ண நாயுடு கொல்லப்பட்டார்.
விஜயராகவன் கிருஷ்ணன்
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1. அந்த நீதிபதி எந்த மகான் என ஆய்வது நலம். (உங்கள் கேள்வி )
கொலை வழக்காக கீவளுர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை 328/1968 ஆகப் பதிவுசெய்தது..
இது கீழ் கோர்ட் ..
நீதிபதி சி.எம்.குப்பண்ணன் முன் இரு வழக்குகளும் வருகின்றன. முதல் வழக்கு பக்கிரிசாமி கொலை தொடர்பில் கோபால் மற்றும் 22 பேர் மீது தொடரப்பட்டதாகும். இதில், கோபால் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. இவ்வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றவாளி ராமய்யனுக்கு 5 வருடம், மற்ற 4 பேருக்கு 2 வருடம் கடும் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது. 8 பேர் விடுவிக்கப்படுகிறார்கள்.
30.11.1970 அன்றைய தினமே கீழ்வெண்மணியில் 44 பேர் குடிசையில் வைத்து எரிக்கப்பட்ட வழக்குக்கும் தீர்ப்பளிக்கப்படுகிறது. அவ்வழக்கிலும் 23 குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். இதில் கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்
நீதிபதிகள் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை உறுதிசெய்து கோபாலுக்கு ஆயுள் தண்டனையையும், ராமய்யனுக்கு 5 வருடக் கடுங்காவல் தண்டனையையும் உறுதிசெய்கிறார்கள் (4.8.1972).
கீழ்வெண்மணி கொலை வழக்கு மேல்முறையீட்டை 1973-ல் விசாரித்த நீதிபதிகள் (வெங்கட்ராமன் மற்றும் மகராஜன்) கோபாலகிருஷ்ண நாயுடுவும் மற்ற குற்றவாளிகளும் போட்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவர்களது தண்டனையை ரத்துசெய்தனர் (6.4.1973). அதே சமயத்தில், அரசுத் தரப்பில் விடுதலையான குற்றவாளிகளுக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடிசெய்யப்பட்டது.
உச்ச நீதி மன்றம் ..
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் அன்றைய திமுக அரசு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்தே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதிலும் கோபாலகிருஷ்ண நாயுடு, அவரது கூட்டாளிகள் தொடுத்த வழக்கில் மட்டுமே மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது 14.12.1980 அன்று கோபாலகிருஷ்ண நாயுடு கொல்லப்பட்டார். இப்படியாக, மேல்முறையீடு செய்து 14 வருடங்கள் கழித்து 31.10.1990 அன்று இறுதி விசாரணைக்கு வழக்குப் பட்டியலிடப்பட்டது.
அன்றும் ஆட்சியில் இருந்தது திரு கருணாநிதி அவர்களே - 27 January 1989 – 30 January 1991..
உப்பு சப்பு இல்லாமல் நடத்தப்பட்ட கேஸ் ..
தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் லலித் அன்று ஆஜராகவில்லை. பதிலாக, தமிழக அரசின் வழக்கறிஞர் அன்று மாலை 45 நிமிடம் வாதிட்டதாக உச்ச நீதிமன்றப் பதிவேடு கூறுகிறது. மறுநாள் மீண்டும் அவ்வழக்கு பிற்பகல் 12 மணிக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் 15 நிமிடம் பேசியதாகவும், குற்றவாளிகளின் வழக்கறிஞர் முற்பகலில் 45 நிமிடமும், மதிய உணவு இடைவேளைக்குப் பின் 15 நிமிடமும் வாதிட்டதாகப் பதிவேடுகள் காட்டுகின்றன. ஆக, தமிழகத்தையே உலுக்கிய ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் மொத்தத்தில் இரண்டு மணி நேரம் இரு தரப்பையும் கேட்டு மூன்று பக்கத் தீர்ப்பைக் கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தது.
May be an image of text
 

 

 

All reactions

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard