New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா?
Permalink  
 


விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா? அல்லது விருதாவா??

02/05/2019

https://othisaivu.wordpress.com/2019/05/02/post-979/

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல்புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!)

அவர் ஒரு ஃபேஸ்புக் சுட்டியை அனுப்பியிருந்தார். ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் எனும் அன்பர் ஒருவர் இந்தப் பெரியாரிய யுனெஸ்கோ பொய்மை பற்றி எழுதியதை வைத்து, ஏகத்துக்கும் பொங்கி, இந்த திராவிடலை அரைகுறையார் வீரமணியார் ஒரு அறிக்கை வெளியிட்டதைப் பற்றித் தான் அது.
 
-0-0-0-0-
 

நிரந்திர விடலை வீரமணி அவர்களின் அறிக்கை:

 
 

அதற்கான, ஜகன்னாத் அவர்களின் எதிர்வினை.

 
-0-0-0-0-
 

சரிதான். பிரச்சினை என்னவென்றால் நான் இந்த ஃபில் ஸுக்கர்மேன் புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்; வறட்டு நாஸ்திகவாதத்தைப் பேசும் அரைகுறைப் புத்தகங்களை எழுதியிருப்பவர் இந்த ஆசாமி – ஆராய்ச்சி என்பதின் கிட்டவே போகாமல், காற்றுவாக்கில் வந்ததை படிப்பறிவோ பின்புலமோ இல்லாமல் அட்ச்சிவுடுபவர்; வீரமணியாருக்குப் பொருத்தமான ஜோடிதான்!  (இன்னொரு அக்கப்போருக்காக இந்த ஆள் எழுதிய எழவுகளை ஒரு காலத்தில் படித்திருக்கிறேன்; வாழ்க்கையை எப்படியெல்லாம் வீணடிக்கிறேன்! )

ஆகவே, ஜகன்னாத் அவர்களின் காத்திரமான எதிர்வினை  /கருத்துகளுக்கு அப்பாற்பட்டு:

1. ஆச்சரியத்துக்குரிய வகையில், பெரியாருக்கு ஒரு விருதும் சான்றிதழும் யுனெஸ்கோவினால் கொடுக்கப் படாததால், அதனைப் பற்றி ஒரு காத்திரமான தரவுபூர்வமான விவரமும் இல்லை. இதனை என்னால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

ஆகவே கொடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் ஒரு மசுத்துக்கும்விவரம் இல்லை.

ஆனால் திராவிட லாஜிக் என்பது திராபை லாஜிக். இது எப்படி இருக்கிறதென்றால்…

எனக்கு நொபெல் பரிசு (சகல துறைகளிலும், பலவருடங்களுக்குத் தொடர்ச்சியாகக்) கொடுக்கப்படவில்லை என்கிற விவரம் இணையத்தில், பொதுஅறிவுப் புலத்தில் இருக்காது.

ஏனெனில் நான் வாங்கவில்லை – ஆனால் மேற்படி எழுதியிருக்கிறேன்!  ஆகவே, திருட்டுத் திராவிட லாஜிக் எழவின் படி – நான் மெய்யாலுமே அந்தப் பரிசில்களை ‘வாங்கி’யிருக்கிறேன்.

எப்படி இருக்கிறது கதை!

2. வீரமணி பகர்கிறார்: “க்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும்.”

 

இல்லை. அதனை வெளியிட்டது க்ரீன்வுட் பதிப்பகம். ஏபிஸி-க்ளியோ குழுமத்தைச் சார்ந்தது.

 

இதற்கும் ‘ஆக்ஸ்போர்டு ‘ பல்கலைக்கழக எழவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

(திராவிட உதிரிகளுக்கு எதற்கெடுத்தாலும் அந்த கேம்ப்ரிட்ஜும் யேலும் ஆக்ஸ்போர்டும்தான்! அவைகள் என்னபாவம் செய்தனவோ!

ஆம், அண்ணாதான் உலகிலேயே முதல்முறையாக ‘பிகாஸ்’ (because) எனும் வார்த்தையை மூன்றுமுறை ஒர்ரே வாக்கியத்தில் உபயோகப்படுத்தினார். அதைக்கேட்ட வெள்ளைக்காரக் கூவான் தன் மூக்கில் உடனடியாக விரலை வைத்துக்கொண்டானன்றோ?)

2. வீரமணி பகபகர்கிறார்: “Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும்

இல்லை. அவர் எழுதவில்லை. அப்புத்தகத்தைத் தொகுத்தது இந்த ஃபில். அதுவும் அவர் ‘ஃபிக்‘ அல்லர். (ஒரு பெயரைச் சரியாக எழுதத்தெரியவில்லை; புத்தகத்தையும் படிக்கவில்லை – இந்த தண்டகருமாந்திரங்களுடனெல்லாம் பொருத வேண்டிய நிலை எனக்கு வரவேண்டுமா?)

3. வீரமணி: ” (தொகுதி 1 ) ”  ” அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது. 

இல்லை; அது தொகுதி 2ல் இருக்கிறது.

அதுவும் 143ஆம் பக்கத்தில், 142ஆம் பக்கத்தில் அல்ல!

 

அடிப்படை விஷயங்களைக் கூடச் சரிபார்க்கத்தெரியாத அறிவிலிகள்!

4. அது இன்னையா நரிஸெட்டி எனும் தெலுகு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டது.

 

இவரும் வீரமணி வகை பகுத்தறிவாள நாஸ்திகர்தாம். இன்னுமொருமதச்சார்பின்மைத் திலகம்!

ஹிந்து நம்பிக்கைகளை தரவுகளே இல்லாமல் விளாசும் அதே சமயத்தில், மிகவும் கவனமான பகுத்தறிவுடன் இஸ்லாம், க்றிஸ்தவம், பௌத்தம் பக்கமே போகமாட்டார்! (ஒரு விதமான பயம் கலந்த நடுக்கம்தான் காரணமாக இருக்கவேண்டும்; மேலும் கூலிக்கு மாரடிக்கும் வாழ்வில், வீரமணிபோல அவருக்கும் ‘சுதந்திரம்’ இல்லை; வெறும் வெறுப்பியத் தந்திரம் மட்டும்தான் இருக்கிறது. ஆகவே இவரை குள்ளநரி ஸெட்டி எனவும் கருதலாம்!

சுட்டுப்போட்டாலும் தமிழ்வராத, தமிழச் சூழலை அறியாத ஆசாமியாதலால், விலாவாரியாக திராவிடர் கழகம் பெரியார் யுனெஸ்கோ என்று கலந்துகட்டி அட்ச்சிவுட்டிருக்கிறார். (ஊக்க போனஸாக – இவர் எழுதிய பலவிவரங்கள் புளுகுகளன்றி வேறொரு ஆகச்சிறந்த சுக்குமில்லை – ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் அடிவருடியாகவும் இருப்பதால் கொஞ்சம் தேவலாம்!)

5. சரி. இப்படி இவர் யுனெஸ்கோ கினெஸ்கோ என அட்ச்சிவுடுவதற்கு என்ன ஆதாரம் என்று பார்த்தால்..

 
 

அடடே – நம்மூர் ‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைகள்தாம்! வரிசையில் நின்று ரேஷன் வாங்கி, படையல் வைத்துவிட்டாரே பார்க்கலாம்! சரியான, சோம்பேறிப் பகுத்தறிவாளர்!

‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் குப்பை, நம் வீரமணியின் பெரியார் திராவிடர்கழக’  மடம் பதிப்பிப்பது! http://www.modernrationalist.com/ 

இன்னாங்கடா?

நீங்களே ரூம்புபோட்டு ரோசிச்சி கண்டுபிடித்துப் புளுகியதை,  தேவைமெனெக்கெட்டு ஒரு கூமுட்டை மேற்கோள் காட்டி எழுதியதை, நீங்களே மறுபடியும் சுட்டிக்காட்டிப் பெருமைப் பட்டுக்கொள்வீர்களா?

அதுவும் வரிக்கு வரி புளுகு. உங்களுக்கெல்லாம் திராவிட இளைஞக் குஞ்சாமணிகளின் ஏகோபித்த ஆதரவு ஒன்றுதான் கேடு!

திராவிடப் பேடித்தனத்துக்கும் புளுகுணி மாங்கொட்டைத் தனத்துக்கும் இது இன்னுமொரு சான்றுதான்!

நன்றி!

இதுதாண்டா வீரமணி! இதுதாண்டா பஹூத் அறிவு!

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்!] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு!

03/05/2019

https://othisaivu.wordpress.com/2019/05/03/post-980/

திராவிடத் தன்மானத் தலைவரும் பகுத்தறிவாளத் திலகமுமான வீரமணியாரின் அறிக்கை பின்வருமாறு:

 

பெரியாருக்குப் புலி விருது வழங்கப்படவே இல்லையாம்! அது பொய்யான தகவலாம்!

இணையத்திலிருந்து தகவலை நீக்கிய பார்ப்பன சதி!

பார்ப்பனப் பித்தலாட்டத்தைப் பாரீர்!

​பெரியாரெனும் புலியைக் கண்டாலே பார்ப்பனர்களுக்குக் கிலி என்பதை உணர்த்துவோம்!​

 

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பிறகும் அக்கிரகாரத்தின் அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்திலும் அய்யா அக்னி திராவகத்தை ஊற்றி அலறச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒன்று போதாதா?

பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை இருட்டடிக்க எந்த எல்லைக்கும் சென்று பார்ப்பனர்கள் கீழிறக்க வேலையில் ஈடுபடுவார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆரியத்தின் அப்பட்டமான இந்துத்துவா கொள்ளியைக் கையில் பிடித்து அலைந்துகொண்டிருக்கும் பார்ப்பனர் ஒருவர் தான், இந்தப் பெரியாரிய வரலாற்றை இந்தியாவிலிருந்து அழிக்கும் வேலையைச் செய்துகொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில் இன்னொரு பார்ப்பனன் இந்த நச்சு வேலையைச் செய்திருக்கிறான்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை, இந்தியாவின் தேசிய அமைப்பு ஒன்றே அளித்த ஒரு விருதை இவர்கள் பொய்யென்று சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்?

தரவுகளையா கேட்கிறீர்கள், தரகர்களே! படியுங்கள் இங்கே!

பார்ப்பன ‘த ஹிந்து’ நாளிதழே வெளியிட்டிருக்கும், ஆனால் இன்னமும் அமுக்கப்படாத, இச்செய்தியைப் படிப்பீர்!

 

இந்தப் பட்டயமும் விருதும் பற்றிய இச்செய்தி என்ன சொல்ல வருகிறது என்றால், பெரியாருக்கு இந்தப் புலி விருதானது கொடுக்கப்படுவதாக முன்னமேயே ரிஸர்வ் செய்யப்பட்டுவிட்டது! பின்னர் 2015ல் கொடுக்கப்பட்டது!

இவை எல்லாம் பொய்யென்று ஒரு பார்ப்பான் சொன்னதாகவும், அதனை இணையம் ஏற்றுக்கொண்டு, பெரியாருக்கு விருது வழங்கப்பட்ட தகவலை நீக்கியதாகவும் ஒரு தகவலை அவிழ்த்துக் கொட்டியுள்ளான் ஒரு பார்ப்பான்.

இந்தப் பித்தலாட்டத்தை செய்ததோடு அல்லாமல் ‘திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்‘ என்றும் குறிப்பிடுகிறான் என்றால், இவர்களின் திமிரின் அளவு எத்தனை டிகிரிக்குச் சென்று இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. ஆட்சி அதிகாரம் தங்கள் கூட்டத்திடம் உள்ளது எனும் குருட்டுத் தைரியத்தில் எதையும் செய்யலாம் என்று கருதுகிறார்கள் போலும்.

இவர்கள் மின் கம்பியில் கை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவோம்.அவர்கள் கை வைத்திருக்கிறார்கள் எனப் பகுத்தறிவுடன் நாம் அறிந்துகொண்டபின் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதில் செலுத்துவோம்!

தமிழினத்தின் பாதுகாவலரை – கட்சிக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியார் என்று போற்றப்படும் சகாப்தத் தலைவரைப்பற்றி உண்மைக்கு மாறாக எழுதுகிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனக் கும்பலை நம் மக்கள் அடையாளம் காணவேண்டாமா?

பார்ப்பனர்களின் முயற்சிக்கு இணையம் ஆட்பட்டது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் இணையத்தின் காதைத் திருகி, மண்டையில் குட்டி, மூக்கில் குத்தி, நாக்கால் நக்கி உண்மையை நிலைநாட்டுவோம் என்பது உறுதி!

 
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
3.5.2019
சென்னை
 

​வீரமணியாரின் இம்மாதிரி அறிக்கைப் புழுக்கை லீலைகள்: ​​(இந்தக் களஞ்சியத்தைப் பொறுமையாகப் படிக்கவும், நகைச்சுவைக்கு நான் க்யாரண்டீ!)

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள்

03/05/2019

ஒரு அன்புக்குரிய திக திராவிடர் (=பொறுக்கி என்றறிக!) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே? 2) நீ மன்னிப்புக் கேட்பாயா??

-0-0-0-0-
 

எனக்கு, வசைச் சொற்கள் ஒரு பிரச்சினையுமில்லை, திட்டப்பட்டுத் திட்டப்பட்டுத் திகட்டிவிட்டது (கடைசியாக இந்தத் திட்டுத்திட்டவாதிகளுடன் ஐக்கியமானவர்கள் என் பேராசான் ஜெயமோகன் அவர்களின் சிலபல சீடகேடிகள்). பதிலுக்கு, முடிந்தவரை பண்பு(!)டனும் திட்டுவதிலும் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. ஆனால் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் இதனைச் செய்வதில்லை. இந்த ஒத்திசைவெழவில் மட்டும்தான் இந்தக் கோரம்.

…ஆனால் முடிந்தவரை கேள்விகளுக்குப் பதில் கொடுக்கவே முயல்வேன் (=முயல்களை எடுத்துச்செல்லப் பயன்படும் வண்டி, குறிப்பாக எஸ்ராமகிருஷ்ணனால்);  …இருந்தாலும் ஒரு நீஈஈஈஈஈள வரிசை இதற்கு இருக்கிறது, என்ன செய்ய!  (பல மாதங்கள் முன் என்னிடம் ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் பற்றிய காத்திரமான புத்தகங்களை+ஆசாமிகளைப் பற்றிக் கேட்ட அன்பருக்கு என் மன்னிப்புக் கோரல் – கூடிய விரைவில் அனுப்புகிறேன்)

கேடயம்:

அ. அந்தக் கேடயம் உண்மையாக இருக்கலாம். ஏனெனில், ஏதோ மண்டபத்தின் யாரோ தச்சுவேலை செய்து கொடுத்தது தானே அந்தத் திருட்டுத் திராவிடர்கழகத் திருவிளையாடல்?

ஆ. ஆனால், யுனெஸ்கோ, ஜெனமத்தில் இந்த மாதிரி கேடயம் எல்லாம் இவ்விஷயங்களுக்குக் கொடுத்ததாகச் சரித்திரமே இல்லை. அவர்கள் கொடுத்திருப்பதெல்லாம் மெடல்கள் மட்டுஂமே!

இ. யுனெஸ்கோ மன்றம் என்று ஒன்று அதிகாரபூர்வமாக, யுனெஸ்கோவை பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கவே முடியாது. இருந்திருக்கவும் முடியாது. இது வெறும் லோக்கல், கலக்கல் சாராய, அற்பத் தீராவிடச் சமாச்சாரம்.

நான் ஒரு ‘இங்கிலாந்து மன்றம்’ அல்லது ‘லெமூரிய மன்றம்’ எனவொன்றை ஆரம்பித்து எனக்கு நானே, என் செலவில், ‘தறுதலை வீரமணி அவார்ட்‘ என ஒரு கேடயத்தைக் கொடுத்துக்கொண்டால் – அதனை அந்த கேடுகெட்ட இங்கிலாந்தோ ஏழவெடுத்த லெமூரியாவோ அல்லது மானமிகு(!) வீரமணியோ கொடுத்தாகவா அர்த்தம்? வீரமணியே என்னைப் புகழ்ந்ததாகவா  அர்த்தம்?

ஈ. ஆகவே நீவிர் கொடுத்திருப்பது, இந்த நகைக்கத்தக்க சர்ச்சை தொடர்பான கேனயம். கேடயம் அல்ல. மிக்க நன்றி!

உ. யுனெஸ்கோ மன்றங்கள் (இந்தமாதிரி எழவு ஒன்றுதான் கேனயத்தைக் கொடுத்திருக்கிறது) என்பவற்றின் செயல்பாடுகள் தீவிரமாக வரையறை செய்யப்பட்டுள்ளன.  அதற்கான சுட்டி இதோ: Clubs, Centres and Associations for UNESCO

மேலும் – இந்தக் குப்பைகளின் செயல்பாடுகளுக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை எனவேறு – மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர் இந்த யுனெஸ்கோ அமைப்பினர்.

“Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.”

இந்த மன்றம் கின்றம் எல்லாம் குப்பைகள். இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியவைகள். துடைத்து எறியப் படவேண்டியவைகள். எரித்து மறுசுழற்சி செய்யப்படவேண்டியவைகள்!

அல்லது மண்ட்ரம் – mandram – என அக்குப்பையாளர்களே எழுதியிருப்பதைப் போல – அது மண்டுகளுடைய மண்டுகளுக்காக மண்டுகளால் நடத்தப்பட்ட, மண்டபத்துத் தச்சன் செய்தளித்த கேனயம்; அவ்ளோதான்!

இதையெல்லாம் கேனத்தனமாக, ஒரு ஆதாரம் எனக் காட்டும் படுமட்டமான நிலையில் இருக்கும் திராவிடக் குஞ்சாமணிகள், தேவையான அறிவுரைகளை இங்கு பெற்றுக்கொண்டதால் தாராளமான அகலலாம். நன்றி.

மன்னிப்புக் கோரல் குறித்து:

போடா, அறிவில்லாதவனே. புளுகில் புழுக்கும் திராவிடப் பதரே! உன்னைப் போன்ற அறிவிலிகளையும் பொய்யர்களையும் பொருட்டாக மதித்து, இப்படித் தரவுகளுடன் எழுதுகிறேனே – அதற்காக என்னிடம் நானே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நல்ல திராவிடக் குஞ்சாமணி. இதற்கு ஒரு மேலதிகத் தலீவராக நல்ல பெருந்திராவிடப் கடும்புளுகுப் பெருங்குஞ்சாமணி.

போங்கடா…



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள்

03/05/2019

ஒரு அன்புக்குரிய திக திராவிடர் (=பொறுக்கி என்றறிக!) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே? 2) நீ மன்னிப்புக் கேட்பாயா??

-0-0-0-0-
 

எனக்கு, வசைச் சொற்கள் ஒரு பிரச்சினையுமில்லை, திட்டப்பட்டுத் திட்டப்பட்டுத் திகட்டிவிட்டது (கடைசியாக இந்தத் திட்டுத்திட்டவாதிகளுடன் ஐக்கியமானவர்கள் என் பேராசான் ஜெயமோகன் அவர்களின் சிலபல சீடகேடிகள்). பதிலுக்கு, முடிந்தவரை பண்பு(!)டனும் திட்டுவதிலும் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. ஆனால் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் இதனைச் செய்வதில்லை. இந்த ஒத்திசைவெழவில் மட்டும்தான் இந்தக் கோரம்.

…ஆனால் முடிந்தவரை கேள்விகளுக்குப் பதில் கொடுக்கவே முயல்வேன் (=முயல்களை எடுத்துச்செல்லப் பயன்படும் வண்டி, குறிப்பாக எஸ்ராமகிருஷ்ணனால்);  …இருந்தாலும் ஒரு நீஈஈஈஈஈள வரிசை இதற்கு இருக்கிறது, என்ன செய்ய!  (பல மாதங்கள் முன் என்னிடம் ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் பற்றிய காத்திரமான புத்தகங்களை+ஆசாமிகளைப் பற்றிக் கேட்ட அன்பருக்கு என் மன்னிப்புக் கோரல் – கூடிய விரைவில் அனுப்புகிறேன்)

கேடயம்:

அ. அந்தக் கேடயம் உண்மையாக இருக்கலாம். ஏனெனில், ஏதோ மண்டபத்தின் யாரோ தச்சுவேலை செய்து கொடுத்தது தானே அந்தத் திருட்டுத் திராவிடர்கழகத் திருவிளையாடல்?

ஆ. ஆனால், யுனெஸ்கோ, ஜெனமத்தில் இந்த மாதிரி கேடயம் எல்லாம் இவ்விஷயங்களுக்குக் கொடுத்ததாகச் சரித்திரமே இல்லை. அவர்கள் கொடுத்திருப்பதெல்லாம் மெடல்கள் மட்டுஂமே!

இ. யுனெஸ்கோ மன்றம் என்று ஒன்று அதிகாரபூர்வமாக, யுனெஸ்கோவை பிரதிநிதிப்படுத்துவதாக இருக்கவே முடியாது. இருந்திருக்கவும் முடியாது. இது வெறும் லோக்கல், கலக்கல் சாராய, அற்பத் தீராவிடச் சமாச்சாரம்.

நான் ஒரு ‘இங்கிலாந்து மன்றம்’ அல்லது ‘லெமூரிய மன்றம்’ எனவொன்றை ஆரம்பித்து எனக்கு நானே, என் செலவில், ‘தறுதலை வீரமணி அவார்ட்‘ என ஒரு கேடயத்தைக் கொடுத்துக்கொண்டால் – அதனை அந்த கேடுகெட்ட இங்கிலாந்தோ ஏழவெடுத்த லெமூரியாவோ அல்லது மானமிகு(!) வீரமணியோ கொடுத்தாகவா அர்த்தம்? வீரமணியே என்னைப் புகழ்ந்ததாகவா  அர்த்தம்?

ஈ. ஆகவே நீவிர் கொடுத்திருப்பது, இந்த நகைக்கத்தக்க சர்ச்சை தொடர்பான கேனயம். கேடயம் அல்ல. மிக்க நன்றி!

உ. யுனெஸ்கோ மன்றங்கள் (இந்தமாதிரி எழவு ஒன்றுதான் கேனயத்தைக் கொடுத்திருக்கிறது) என்பவற்றின் செயல்பாடுகள் தீவிரமாக வரையறை செய்யப்பட்டுள்ளன.  அதற்கான சுட்டி இதோ: Clubs, Centres and Associations for UNESCO

மேலும் – இந்தக் குப்பைகளின் செயல்பாடுகளுக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை எனவேறு – மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர் இந்த யுனெஸ்கோ அமைப்பினர்.

“Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.”

இந்த மன்றம் கின்றம் எல்லாம் குப்பைகள். இடக்கையால் புறம் ஒதுக்கப்படவேண்டியவைகள். துடைத்து எறியப் படவேண்டியவைகள். எரித்து மறுசுழற்சி செய்யப்படவேண்டியவைகள்!

அல்லது மண்ட்ரம் – mandram – என அக்குப்பையாளர்களே எழுதியிருப்பதைப் போல – அது மண்டுகளுடைய மண்டுகளுக்காக மண்டுகளால் நடத்தப்பட்ட, மண்டபத்துத் தச்சன் செய்தளித்த கேனயம்; அவ்ளோதான்!

இதையெல்லாம் கேனத்தனமாக, ஒரு ஆதாரம் எனக் காட்டும் படுமட்டமான நிலையில் இருக்கும் திராவிடக் குஞ்சாமணிகள், தேவையான அறிவுரைகளை இங்கு பெற்றுக்கொண்டதால் தாராளமான அகலலாம். நன்றி.

மன்னிப்புக் கோரல் குறித்து:

போடா, அறிவில்லாதவனே. புளுகில் புழுக்கும் திராவிடப் பதரே! உன்னைப் போன்ற அறிவிலிகளையும் பொய்யர்களையும் பொருட்டாக மதித்து, இப்படித் தரவுகளுடன் எழுதுகிறேனே – அதற்காக என்னிடம் நானே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நல்ல திராவிடக் குஞ்சாமணி. இதற்கு ஒரு மேலதிகத் தலீவராக நல்ல பெருந்திராவிடப் கடும்புளுகுப் பெருங்குஞ்சாமணி.

போங்கடா…



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners

புதிய உலகின் தொலைநோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்தின் தந்தை


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ; பெரியாரும் திராவிட திருட்டு காவாலிகளும்

யுனெஸ்கோ விருது பித்தலாட்டம்.

பார்ப்பன் எனக் கூறியே தமிழனை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்த திராவிட கழகம் .

 

1970 இல் பெரியாருக்கு ஐ.நா. வின் UNESCO சார்பில் ‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்கிற பட்டத்துடன் விருது அளிக்கப்பட்டதாக ஒரு புரட்டை அவிழ்த்து விட்டு, அதனை TNPSC தேர்வு வரையில் கேள்வியாக்கி வைத்திருந்தனர் இந்த பெரியாரிய ஆதரவு கல்வியாளர்கள். இப்படியான குறிப்பு விக்கிப்பீடியாவிலும் இருந்தது, விக்கிப்பீடியாவிலுள்ள இந்த குறிப்பை யார் வேண்டுமானால் எடிட் செய்துவிட முடியாது, அங்கீகரிக்கப்பட்ட எழுத்தர்களால் மட்டுமே முடியும். குறிப்புகளுக்கான உண்மைத் தன்மையை பற்றிய கேள்விகள் மட்டும் எழுப்பலாம் என்கிற ரீதியில் நண்பர் Jagannath Srinivasan அவர்கள் UNESCO சார்பில் அப்படியான விருது பெரியாருக்கு எப்போதும் கொடுக்கப்படவில்லை என்பதை ஆதாரத்தோடு சமர்பித்தார், விக்கிப்பீடியாவும் அதனை ஏற்றுக் கொண்டு குறிப்பை நீக்கியது.

 கேள்வியை எதிர்கொள்ள திராணியில்லாத கயவர் கூட்டத்திற்கு வெட்கம் என்பது துளியும் கிடையாது. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் எது வெனில், கொடுக்காத விருதுக்கு ' UNESCO பார்வையில் பெரியார்' என்றொரு நூலையும் வீரமணி எழுதி சில வருடங்களுக்கு முன் விற்றது தான். பெரியாரியக் கூட்டமும் அதன் கூற்றும் பொய்யிலும் பித்தலாட்டத்திலும் நிரம்பியது என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த சான்று. வாங்காத ஒரு விருதிற்கு புத்தகம் எழுதி காசு பார்த்த ஒரே கோஷ்டி நம்ம ஊர் ஓசி சோறு கோஷ்டிதான். புத்தகத்தின் விலை - 171 ரூபாய் பக்கங்கள் - 250 புத்தக ஆசிரியர் - கி.வீரமணி சமூக ஊடகங்களின் தாக்கமிருப்பதால் இந்த மாதிரியான பித்தலாட்டங்கள் தெரிந்துவிடுகின்றன. ஆஸ்திரிய ஸ்டாம்ப்பு முதல் யுனஸ்கோ விருதுவரை வரலாற்றில் பதிந்திருக்க வேண்டிய சில்லுண்டித்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டியதுதான் சமூக ஊடகங்களின் தாக்கம். வெறும் கட்டுக்கதைகளை யுனஸ்கோவின் பெயரால் எழுதி காசு சம்பாதித்த வீரமணி தன்னுடைய பொய்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு சேர்த்து பொய் சொல்லி விற்ற புத்தகங்களை திரும்பப்பெற வேண்டும்.
 

இது நடந்து ஒரு மாத காலம் இருக்கும். சில தினங்களுக்கு முன் வீரமணி அவர்களுக்கு இது தெரியவர, அவரும் விடுதலைப் பத்திரிக்கையிலும் முகநூலிலும் தங்களுக்கே உரித்த வழமையில் பார்ப்பன கொழுப்பைப்ச பாரீர், Jagannath Srinivasan என்கிற பார்ப்பன பேர்வழியின் செயலைப் பாரீர் என்று சாதி ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் நடத்தி, பார்ப்பனர்களின் செயலுக்கு செவி மடுத்த விக்கிப்பீடியாவை ஆதாரத்தோடு காதை திருகுவேன் என்றார். சரி, ஆதாரம் வச்சுயிருப்பாருனு பார்த்தா, ஐ.நா வின் UNESCO விற்கு சற்றும் தொடர்பில்லாத UNESCO Mandram என்கிற பெயரில் சிலரால் தமிழ்நாட்டில் ஒரு சிறியஅளவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்திருக்கிறது, அவர்கள் கொடுத்த விருதை ஐ.நா வின் UNESCO கொடுத்ததாக விட்டார் ஒரு புருடா; விடுவாரா நமது நண்பர்? அந்த புருடாவை உடைக்கும் பொருட்டு அவரின் பக்கத்திற்கே சென்று கேள்விக்கணைகளைத் தொடுத்தார் நண்பர் Jagannath Srinivasan. பதிலளிக்க திராணியில்லாத வீரமணி அந்த நாச்சியப்பன் பாத்திரக் கடை விருதை மேற்கோள் காட்டி இட்டப் பதிவை முகநூலில் இருந்து நீக்கிவிட்டு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஊருக்கெல்லாம் ஜனநாயகப் பாடம் எடுக்கும் இந்த பெரியாரிய பேர்வழிகள் தற்போது Jagannath Srinivasan அவர்களின் ஐடியை ரிப்போர்ட் அடித்ததில் அவரின் ஐடி முகநூலில் இருந்தே டி ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பெரியாராம் பெரியார் இவர் யார்?

 
பெரியாராம் பெரியார் இவர் யார் என்று பார்த்தால்...UNESCO இவருக்கு விருது கொடுத்துள்ளதாம், தமிழ் நாட்டிற்கு ஹிந்தி வேண்டாம் என்றும் ஆங்கிலம் வேண்டும் என்று கூறிய தெலுங்கருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்ததில் ஆச்சரியம் இல்லை....தமிழ் நாட்டின் (நல்ல)தலைவர்களுக்கு அன்றே பஞ்சம் வந்து விட்டது...இவர் நிஜமாகவே பெரியாரா இல்லை சிறுமை செய்தவரோ...70 வயதில் 32 வயது பெண்ணை(மகள்,பேத்தி வயதுக்கு) மணம் முடித்து முற்போக்கு திருமணத்தை ஆரம்பித்தவர் தான் பெரியாரா? சாதி இல்லை (இந்துக்)கடவுள் இல்லை என்றெல்லாம் கூற இந்துக்களின் தாராள சுதந்திரம் இடம் கொடுத்துள்ளது....இவர்களுக்கு கிறிஸ்தவ மதத்திலும் சரி சீக்கிய மதத்திலும் சரி சாதி இருக்குன்னு தெரியாத பெரியாரோ? இன்னும் வேடிக்கை என்ன வென்றால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு மலர் தூவி, மாலை போட்டு அவரின் சிலைக்கு மரியாதை செய்தது, மிகவும் முற்போக்கு கொண்ட செயல். அந்த சிலைக்கு பால், அபிஷேகமும், கற்பூரமும் காட்டினால் இந்துக் கடவுள் இல்லை என்றவருக்கு கோவிலே கட்டி வழிபடுவார்கள் இவரை பெரியார் என்று அழைக்கும் சிறியவர்களின் கூட்டம்.கடவுளின் திருவுருவப் படங்களை எரித்து சிறை சென்றவர்கள் எல்லாம் இந்த தெய்வத் தமிழ் நாட்டில் தலைவர்களாம் பெரியாராம்...இப்போது இந்த மாதிரி புறப்பட்டால் யார் பின்னால் வருவார்கள்...அந்த மாதிரித் தான் இனிவரும் காலம் இந்த ஹிந்தி,சமஸ்க்ரித எதிர்ப்பு எல்லாம்...வருங்காலத்து சரித்திரத்தில் வெறும் கேலிக் கூத்துதான்.அறிவுள்ளவர்கள் இங்கே யார் பெரியார் அல்லது சிறுமையில் பெரியார் என்று சிந்திக்கட்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யுனெஸ்கோ மன்றத்து விருது

மே 7, 2019

 

ஆஸ்கர் விருதுக்கும், ஆஸ்கர் ரவிசந்திரன் விருதுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா?

அப்படித்தான் யுனெஸ்கோ விருது என ஒன்றை யுனெஸ்கோ மன்றத்து விருது என கொடுத்து வீரமணிக்கு ஒரு காலத்தில் விபூதி அடித்திருக்கின்றார்கள்

ஆம் அந்த விருதை வழங்கியவர் கலைஞர்தான்.

கலைஞர் சமாதியில் அடித்து புரண்டு நியாயம் கேட்க வேண்டிய வீரமணி வழக்கம் போல் பிராமண சூது என கிளம்பிவிட்டார்

வீரமணியின் சட்டையினை பிடித்து “எந்த பிராமணன் உன்னை யுனெஸ்கோ விருது என ஏமாற்றினான்? சூத்திரந்தான் உன்னை ஏமாற்றினான்” என கேட்க இங்கு ஒரு பிராமணரும் இல்லை

வீரமணிக்கு கலைஞர் விபூதி அடித்தது இருக்கட்டும்

கொஞ்ச நாளைக்கு முன்பு கலைஞருக்கு ஆஸ்திரிய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது என ஒருவர் வந்தார், ஸ்டாம்போடு கலைஞரை எல்லாம் சந்தித்தார்

விரைவில் ஸ்டாம்ப் கதை வெளிவரும் என்கின்றார்கள்

நமக்கு அடுத்த சுவாரஸ்ய தருணம் காத்திருக்கின்றது

எதையும் நம்பாதே, உன் சொந்த அறிவில் யோசி என சொன்ன பெரியாரின் வாரிசுகள் எப்படி எல்லாம் யோசிக்காமல் சிக்கி இருக்கின்றன‌?

யோசிக்க கொஞ்சமேனும் அறிவு வேண்டும் என்பதையும் பெரியாரா சொல்வார்?

அறிவு இருந்தால்தானே யோசிக்க?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 படித்தால்தான் ஈரோட்டு வெங்காயம் பற்றிய. தில்லுமுல்லு திருட்டுப்புரட்டு தெரியும்


முழுவதும் படியுங்கள்.
https://threader.app/thread/1127418463582953472
நாச்சியப்பன் பாத்திர 1/69

கடையில் வெற்றி கோப்பைகள் பல வாங்கி தனது பெயரை அதில் எழுதி தனக்குத்தானே கொடுத்து மகிழ்ந்தவர் ஈரோடு பெரிய வெங்காயம். 

வைக்கம் வீரர், யுனெஸ்கோ விருது என்ற இரண்டு கோப்பைகள் ஏற்கனவே காவி போராளிகளால் நசுங்கி விட்டது.நாம் இப்போது... ஈரோடு பெரிய வெங்காயம் தான் 2/69

இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்து, சமூக நீதியை நிலை நாட்டினார் என்ற வெற்றி கோப்பையை பெரிய வெங்காயம் வாங்கிய வரலாற்றை பார்க்கலாம். 

--

சமூக நீதி, இட ஒதுக்கீடு, வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் போன்ற வார்த்தைகளையே பெரிய வெங்காயம் தான் கண்டு பிடித்து தமிழர்களுக்கு 3/69

வாங்கி கொடுத்ததாகவும், பெரிய வெங்காயத்திற்கு பயந்து தான் இந்திய அரசியல் சட்டத்தையே முதன் முதலாக திருத்தியதாகவும் திராவிட கோயபல்ஸ்கள் வரலாற்றை எழுதி வைத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து சைமன், டேனியல் காந்தி, புலவன் டைமண்டு முத்து, பாவாடைகள், உண்டியல்கள் மற்றும் 4/69

திடீர் போராளிகள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. 

ஆனால் உண்மை என்ன... ? வரலாற்றை பின்னோக்கி பார்த்து ஆராய்ந்தால் திராவிடத்தை காறி துப்பி விடலாம். 

சமூக நீதியை ஈரோட்டு பெரிய வெங்காயம் பெற்றுத் தந்தார் என்று வரலாறை எழுதி கடந்த ஐம்பதாண்டுகளாக மக்களை 5/69

முட்டாளாக்கி வைத்துள்ளனர். 

------------------

முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்வது அவசியம். 

சமூக நீதிக்கான போராட்டம் என்பது நூறு ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. இதில் ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் பங்கு என்பது கும்பலில் கோவிந்தா போட்ட கதை 6/69

தான். கேரளாவின் வைக்கத்தில் நடந்த ஆலய நுழைவு போராட்டத்தில் கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்டு, அதை எப்படி பெரிய வெங்காயத்தின் வெற்றி என வரலாறை எழுதி வைக்கம் வீரர் என பட்டம் கொடுத்து பாடபுத்தகத்தில் வைத்து மக்களை நம்ப வைத்தார்களோ அதே கதை தான் சமூக நீதியை பெரியார் 7/69

பெற்று கொடுத்தார் என்பது. 

---------------

சமூக நீதிக்கான கருத்துக்களும், விவாதங்களும் நான் மேலே சொன்னது போல படிப்படியாக நூறாண்டுகளுக்கு மேலாக நடந்து, பல பரிமாணங்களை பெற்று இறுதியாக 1993 ல் ஒரு முடிவுக்கு வந்தது. அதைத்தான் நாம் இப்போது அனுபவிக்கின்றோம்.

8/69

பெரிய வெங்காயம் பிறப்பதற்கு முன்பாகவே பிரிட்டிஷ் இந்தியாவில் சமூகநீதிக்கான சிந்தனைகளும், விவாதங்களும் அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்கி விட்டன. 
பிரிட்டிஷ் இந்தியாவிற்கு உட்பட்ட கோலாப்பூர் மன்னர் சாகு மஹாராஜா முதன் முதலாக 1882 ஆண்டு 50% கல்வி ஒதுக்கீட்டை 9/69

பிராமணர் அல்லாதோருக்கு ஒதுக்கீடு செய்து உதரதரவிட்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. 
எனவே இட ஒதுக்கீடு ஈரோடு பெரிய வெங்காயத்தால் தான் கிடைத்தது என சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம். 

--------------------

காங்கிரஸ் கட்சியில் பிராமண ஆதிக்கம் உள்ளதால் 10/69

பிராமணர் அல்லாதோருக்கான ஒரு அரசியல் இயக்கம் தேவை என 1910 களின் ஆரம்பத்தில் ஒரு குழு தனித்து இயங்கியது. 

இந்த குழு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ( South Indian Liberal Federation ) என்ற பெயரில் டாக்டர் டி.எம்.நாயர், தியாகராய செட்டியார் ஆகியோரால் 1916 ம் ஆண்டு 11/69

முறைப்படி நிறுவப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. இது மக்களிடையே நீதிக்கட்சி ( Justice Party ) என அடையாளப் படுத்தப்பட்டது. 

இதே கால கட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. ஓரளவுக்கேனும் இந்தியர்களுக்கு இந்திய ஆட்சி பொறுப்புகளை 12/69

கொடுத்து சமாதானப்படுத்தி போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டிஷ் அரசு இருந்தது. 

-------------------

.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆகஸ்ட் 20, 1917 ல் பிரிட்டிஷ் அரசின் இந்திய விவகாரங்களுக்கான செயலாளர் எட்வின் மான்டேகு இந்திய நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்கை 13/69

அதிகரித்து நிர்வாக சீர்திருத்தங்களை செய்ய சில அரசியல் சீர் திருத்தங்களை அறிவித்தார். 

இதை தொடர்த்து நீதிக்கட்சி பிராமணர் அல்லாதோருக்கு மாகாண சட்டமன்றங்களில் வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டை கோரி மாநாடுகளை நடத்தியது.தியாகராச செட்டியார் வகுப்புவாரி உரிமை கேட்டு 14/69

மான்டேகுக்கு தந்தி அனுப்பினார். 1909ல் முஸ்லிம்களுக்கு வழங்கியது போல பிராமணர் அல்லாதோருக்கும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். 

நீதிக்கட்சியின் பரப்புரைகள், மாநாடுகளால் மிரண்ட காங்கிரஸ் அதை சமாளிக்க தனது கட்சியில் இருந்த பிராமணர் அல்லாதவர்களை 15/69

வைத்து போட்டியாக சென்னை மாகாண சங்கம் என்ற ஒரு போட்டி அமைப்பை தொடங்கினர். 

இந்த சென்னை மாகான சங்கத்தின் தலைவர்கள் பெரியார் ஈ. வே. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் தலைவர்கள். 

மேலே 16/69

உள்ள பாராவில் இருக்கும் தலைவர்களின் பெயர்களை படியுங்கள். விசயம் புரிகிறதா....? 

பிராமணர் அல்லாதோருக்கான ஒரே அமைப்பு என்ற இடத்திலிருந்து நீதிக்கட்சியை இறக்கி, பிராமணர் அல்லாதோருக்கான இயக்கங்களில் தாங்களும் ஒரு சக்தியாக காட்டி பிரிட்டிஷ் அரசுடன் பேசும் போது 17/69

தாங்களும் சரிசமமாக அமர்ந்து வகுப்பு வாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை வலுவிழக்க செய்வது தான் திட்டம். 

அதற்காக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாண சங்கத்தில் ஈரோடு பெரிய வெங்காயமும் ஒரு தலைவர்.
மேற்படி சங்கத்திற்கு காங்கிரஸ் பிராமணர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. இந்த 18/69

சங்கத்திற்கு தி ஹிந்து பத்திரிக்கையின் ஆதரவும் கிடைத்தது. 

நீதிக்கட்சியின் வகுப்பு வாரி கோரிக்கையை பலவீனப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் பிராமணர்களின் கைக்கூலிகள் என நீதிக்கட்சியினர் காறி துப்பினர். 
ஆக சமூக நீதி, இட ஒதுக்கீடு என்பதெல்லாம் ஈரோடு 19/69

பெரிய வெங்காயத்திற்கு எதுவும் இல்லை. ஏதாவது செய்து தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இந்த பெரிய வெங்காயத்தைத்தான் சமூக நீதியின் அடையாளமாக நமக்கு சொல்கின்றனர் திருட்டு திராவிடர்கள். 

------

டிசம்பர் 14, 1917 இல் மாண்டேகு அரசியல் 20/69

சீர்திருத்தங்கள்குறித்து பலதரப்பினரின் கருத்தறிய சென்னை வந்தார். ஓ. கந்தசாமி செட்டி தலைமையில் நீதிக்கட்சி தூதுக்குழுவும், கேசவ பிள்ளை தலைமையில் சென்னை மாநில சங்க தூதுக்குழுவும் வேறு இரு பிராமணரல்லாதோர் தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்து தங்கள் தரப்பினை முன் வைத்தன.

21/69

எதிர்பார்த்தது போலவே இரண்டு குழுக்களாக சென்று மாண்டேகுவை சந்தித்து பிராமணர் அல்லாதோருக்கான ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கேட்டு குட்டையை குழப்பியதால் இந்த கோரிக்கையை மாண்டேகு நிராகரித்தார். ஜூலை 2, 1918 ல் வெளியிடப்பட்ட அவரது அதிகாரப்பூர்வமான அறிக்கை வகுப்புவாரி இட 22/69

ஒதுக்கீட்டை குப்பை தொட்டியில் தூக்கி வீசியது. 

ஈரோடு பெரிய வெங்காயம் தலைவர்களில் ஒருவராக இருந்த சென்னை மாகான சங்கத்தின் எதிர்பார்ப்பும் இதுதான்.

ஆனாலும் விடாக்கண்டனாக நீதிக்கட்சி சென்னை மாகாணம் முழுக்க பல மாநாடுகளை நடத்தி வகுப்புவாரி இட ஒதுக்கீட்டிற்கு 23/69

மக்கள் ஆதரவை திரட்டி வந்தது. 

ஜூன் 1918 ல் தஞ்சாவூரில் நடந்த மாநாட்டில் டாக்டர் டி.எம். நாயரை இங்கிலாந்திற்கு அனுப்பி இட ஒதுக்கீடு கோர முடிவு செய்தது. லண்டன் சென்ற டி.எம் நாயர் 1918 டிசம்பர் வரை அங்கிருந்து கட்டுரைகள், அறிக்கைகள் எழுதி இங்கிலாந்து பாராளுமன்ற 24/69

உறுப்பினர்களிடமும், பிரபுக்களிடமும் ஆதரவு திரட்டினார். 

ஆனால் மாண்டேகுவின் பரிந்துரைகளை அமல்படுத்த பிரிட்டிஷார் அமைத்த சவுத்பேரா குழுவுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டது. காரணம் அந்த குழுவில் சீனிவாச சாஸ்திரி, சுரேந்திர நாத் பானர்ஜி என்ற இரண்டு ஐ.சி.எஸ் பிராமண 25/69

அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் சவுத்பேராவின் குழுவில் இருந்த இந்தியர் அல்லாத மற்ற உறுப்பினர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. மாண்டேகு பரிந்துரைகளுக்கு இறுதியாக சட்ட அங்கீகாரம் வழங்கும் முன் இங்கிலாந்தில் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. 26/69

இந்த கூட்டங்களில் ஆற்காடு ராமசாமி முதலியார், வெங்கட ரெட்டி நாயுடு, எல். கே. துளசிராம், கோக்க அப்பராவ் நாயுடு ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு கலந்து கொண்டு தங்கள் முறையீடுகளை முன் வைத்தது. 
பனகல் அரசர் ராமராய நிங்கார் அனைத்திந்திய நிலச்சுவான்தார்கள் சங்கம் 27/69

மற்றும் சென்னை சமீந்தார் சங்கங்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 

ரெட்டி நாயுடு, ராமசாமி முதலியார் மற்றும் ராமராயநிங்கார் ஆகியோர் பெரிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசி, உள்ளூர் இதழ்களில் பத்திகள் எழுதித் தங்கள் நிலைப்பாட்டிற்கு 28/69

ஆதரவு திரட்டினர்.இதற்கிடையில் டி.எம்.நாயர் காலமானதால் ரெட்டி நாயுடு நீதுக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனார். ஆகஸ்ட் 1919ம் ஆண்டு லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற குழு முன்பு ரெட்டி நாயுடு ஆஜராகி வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டிற்கான நீதிக்கட்சியின் நியாயங்களை எடுத்து 29/69

வைத்தார். இறுதியாக நவம்பர் 17, 1919 ல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழு நீதிக்கட்சியின் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்று தனது பரிந்துரைகளை அறிக்கையாக வெளியிட்டது. எத்தனை சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்திந்த பகுதி அரசியல் கட்சிகளும், மாகீன அரசுகளுமே தீர்மானிக்கலாம் 30/69

எனவும் பரிந்துரைத்தது. 

இறுதியாக பிரிட்டிஷ் அரசு, நீதிக்கட்சி, சென்னை மாகான சங்கம் இந்த மூன்றும் ஒரு முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மாரச் 1920 ல் ஒரு உடன் படிக்கை ஏற்பட்டது. இது மெஸ்டன் உடன்படிக்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டது.மெஸ்டன் உடன்படிக்கை 31/69

படி சென்னை சட்டமன்றத்தின் 63 பொது இடங்களில் 28 பிராமணர் அல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது. 

இதெல்லாம் இட ஒதுக்கீடு வரலாற்றின் ஆரம்ப கால அத்தியாயங்கள். இது முழுக்க முழுக்க நீதிக்கட்சியின் போராட்டத்தால் கிடைத்த வெற்றியின் வரலாறு. 

இதில் பெரிய வெங்காயத்தின் பங்கு 32/69

என்ன....? என்ன கிழித்தார். நீதிக்கட்சியே காறி துப்பிய சென்னை மாகாண குழுவில் சேர்ந்து நீதிக்கட்சிக்கு எதிராக செயல் பட்டுள்ளார் ஈரோடு பெரிய வெங்காயம். 
ஆனால் நீதிக்கட்சியின் போராட்டத்தையும், அதன் வெற்றியையும் ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் சாதனைகளாக எழுதி வைத்துள்ளது 33/69

திராவிட கும்பல் 

----

அதன் பின் நடந்த சென்னை மாகாண தேர்தல்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. காரணம் தங்களுக்கு தேவை முழுமையான சுதந்திரம் தானே தவிர பிரிட்டிஷ் அரசுக்கு உட்பட்ட அதிகாரங்கள் அல்ல என்றது காங்கிரஸ். 

பலமான கட்சியான காங்கிரஸ் 34/69

இல்லாத நிலையில் போட்டியிட்ட நீதிக்கட்சி சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 
அதன் பின்பு தான் சமூக நீதிக்கான மற்றும் சீர்திருத்த நடிவடிக்கைகளாக பல அரசாணைகள் வெளியிடப்பட்டது. அதில் இட ஒதுக்கீடும் ஒன்று. இந்த கால கட்டத்தில் 1925 ம் ஆண்டு 35/69

ஈரோடு பெரிய வெங்காயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார். 

ஈரோடு வெங்காயம் ஒன்றும் தன் சுய செல்வாக்கை நம்பி சுய மரியாதை இயக்கத்தை தொடங்கவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கி மற்றும் சூப்பர் ஸ்டார் பேசரசாளரான 36/69

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை நம்பித்தான் ஆரம்பித்தார். 

சுய மரியாதை திருமணம், தேவதாசி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துக்கள் மூவலூர் அம்மையாரிடமிருந்து பெரிய வெங்காயம் கடன் வாங்கி தன் பெயரில் பட்டா போட்டுக் கொண்டது இந்த கால கட்டத்தில் தான். 

----




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

37/69

ஈரோடு பெரிய வெங்காயத்தை பொறுத்த வரை முதலாவதாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது. அடுத்து எல்லாமே காசு... பணம்... துட்டு... மணி மணி தான். 

பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த காங்கிரசில் தொடர்ந்தால் துட்டு எதுவும் தேறாது என்ற காரணத்தால் தான் 38/69

அதிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். 

பிரிட்டிஷ் அரசின் ஆசிர்வாதமும், ஆளும் கட்சி என்ற அந்த அந்தஸ்தும் இருந்த காரணத்தால் தனது சுயமரியாதை இயக்கத்தை நீதிக் கட்சியின் பக்கம் கொண்டு சென்றார். 

பச்சையாக சொன்னால் ஆளும் கட்சியான 39/69

நீதிக்கட்சிக்கு சொம்படித்து .... அதாவது இன்று திருமாவளவன் திமுக விற்கு அல்லக்கை வேலை பார்த்து பிழைப்பது போல என வைத்துக் கொள்ளலாம். 

1937 வரை ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி அதன் பின் நடந்த தேர்தல் அரசியலில் காங்கிரஸ் குதித்ததால் படு தோல்வி அடைந்தது. 40/69

போதாக்குறைக்கு ஏகப்பட்ட உள்கட்சி கோஷ்டி மோதல் வேறு. 

இனி எதுவும் தேறாது என்ற நிலையில் 1938 ம் ஆண்டு நீதிக் கட்சியை பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் விலையில் ஈரோடு பெரிய வெங்காயத்திற்கு விற்று விட்டனர். நீதிக்கட்சி பெரிய வெங்காயத்தின் கைகளுக்கு வந்தது 41/69

இப்படித்தான். கட்சியை 1944ல் பெரிய வெங்காயம் திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார். 

--

அடுத்து சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக பெரியாரால் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது என்ற காமெடியை பார்க்கலாம். 

இந்திய சுதந்திரத்துற்குப் பின் செண்பகம 42/69

துரைராஜ் என்கிற பெண் தனக்கு தகுதி இருந்தும் பிராமணர் என்ற காரணத்தால் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை என சென்னை மாகாண உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிக்கட்சி ஆட்சியின் போது கொண்டு வந்து 43/69

கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடு முறை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் அது செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியது. 

அப்போதைய காங்கிரஸ் அரசு இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அனால் உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி 44/69

செய்து தீர்ப்பளித்தது. 

இதையடுத்து தமிழகத்தில் கொந்தளிப்பு உண்டானது. 
இது எந்த அரசியல் கட்சியும் சாராத பொது மக்கள் மற்றும மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 14.08.1950 அன்று மாணவர்கள் போராட்டத்தில் போராட்டத்தில் இறங்கியதாக ஆதாரங்கள் உள்ளது. 

ஆனால் 45/69

ஈரோடு பெரிய வெங்காயம் இதற்காக திருச்சியில் மாநாடு போட்டது 1950 டிசம்பர் முதல் வாரத்தில். 

விசயம் புரிகிறதா...? சமீபத்தில் நம் கண் முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் டுமீல் போராளிகளும், தொப்பிகளும் செய்த அதே டெக்னிக். 

மாணவர்களால் சுயமாக 46/69

ஆரம்பிக்கப்பட்டு அது வெகுஜன மக்களின் ஆதரவை பெற்று மிகப்பெரும் இயக்கமாக மாறியதும் அனைத்து பிரிவினைவாத கும்பல்களும் அதை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தங்களின் வெற்றியாக விளம்படுத்தி சுய இன்பம் கண்ட அதே டெக்னிக் தான். 
மாணவர் போராட்டமாக ஆரம்பித்து இந்தியாவின் 47/69

கவனத்தையே ஈர்த்த இன ஒதுக்கீட்டு போராட்டத்திற்கு நான்கு மாதங்களுக்கு பின் திருச்சியில் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டினாராம் பெரிய வெங்காயம். 

பெரிய வெங்காயத்தின் அழைப்பை ஏற்று மாணவர்கள் போராட்டத்தில் குதிதரதனர் என திராவிட கோயபல்ஸ் எழுதி வைத்துள்ளனர்.

48/69

டிசம்பர் மாதத்தில் பெரிய வெங்காயம் போராட்ட அழைப்பு விடுத்து ஆகஸ்ட் மாதம் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஒரு வேளை மாணவர்கள் டைம் மெஷினில் ஏறி நான்கு மாதம் முன்பாக சென்று போராட்டம் நடத்தினார்கள் போலும். 

பெரிய வெங்காயத்தின் எச்சரிக்கைக்கு பயந்த இத்திய அரசு அரசியல் 49/69

சட்டத்தையே முதன் முதலாக திருத்தியதாம். 

கேட்கிறவன் கேணையாக இருந்தால் எருமைமாடு ஏரோப்ளேன் ஓட்டும. என்கிற கதைதான் இது. 

சரி, இந்திய அரசுக்கே எச்சரிக்கை விடுக்குற அளவுக்கு ஈரோடு பெரிய வெங்காயத்திற்கு அரசியல் செல்வாக்கும், மக்கள் செல்வாக்கும் இருக்கிறதா 50/69

என்பதை முதலில் பார்க்கலாம். 

-------------

நீதிக்கட்சி என்பது அன்று காந்தியின் காங்கிரஸ் கட்சியின் பிரும்மாண்டத்திற்கு முன்னால் ஒரு தூசுக்கு கூட சமம் இல்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவு காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே இருந்தது. 

1920 ல் 51/69

தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவால் தான் நீதிக் கட்சி ஆட்சிக்கு வர முடிந்தது. 1937ல் தேர்தல் அரசியலில் காங்கிரஸ் இறங்கியதும் நீதிக் கட்சி செல்லாக்காசாகி விட்டது. 

காங்கிரஸ் முன்னால் நீதிக்கட்சி நிற்க முடியாது என்பதால் தான் ஈரோடு பெரிய 52/69

வெங்காயம் தேர்தல் அரசியலில் திராவிடர் கழகம் இறங்காது என அறிவித்து தன் மரியாதையை காப்பாற்றுக் கொண்டார். 

இரண்டாவதாக மணியம்மை விவகாரத்தில் ஈரோடு பெரிய வெங்காயத்தின் கட்சிக்குள்ளேயே பெரிய பிளவு ஏற்பட்டு அவரின் மொத்த தளபதிகளும் அண்ணா துரையின் பின் அணி வகுத்து சென்று 53/69

விட்டனர். 

பெரிய வெங்காயம் அன்றைய நிலையில் தன் கட்சி, அரசியல், மக்கள் அனைவரிடமும் தனிமைப் படுத்தப்பட்டு காலி பெருங்காய டப்பாவாகி கிட்டத்தட்ட ஒரு அனாதை போன்ற கேவலமான நிலையில் இருந்தார்.

இவர் ஏற்பாடு செய்த திருச்சி சர்வ கட்சி மாநாட்டில் எத்தனை கட்சிகள் 54/69

கலந்து கொண்டன...? அந்த கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டார்களா..? அல்லது தலையெழுத்து என்று பிற கட்சியினர் தங்கள் பிரதிநிதிகளாக தங்கள் கட்சி அலுவலக செக்யூரிட்டுகளை கலந்து கொள்ள அனுப்பி வைத்தார்களா...? 
இந்த கேள்விக்கு எங்கு தேடினாலும் பதில் வராது. பெரிய வெங்காயத்தின் 55/69

முழக்கத்தினால் இந்திய அரசே ஆடிப்போய் விட்டதாம். 

இந்திய அரசே பயந்து ஆடும் அளவுக்கு சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் திராவிடர் கழகத்தின் பலம் என்ன...? பதில் பூஜ்யம் தான். மக்கள் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, சுய கட்சி செல்வாக்கு எதுவும் இல்லாத பெரிய 56/69

வெங்காயத்திற்க்கு இத்திய அரசு பயந்து நடுங்கியது என்ற ஒரு பொய்யை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் எழுதி அதை மக்களை நம்ப வைக்க இந்த மானங்கெட்டவர்களால் தான் முடியும். 

உண்மையில் நடந்தது என்ன..? உச்ச நீதி மன்ற தீர்ப்பு இந்தியா முழுக்க பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. 57/69

தமிழகம் மட்டுமல்ல காங்கிரஸில் இருந்த வட இந்திய தலைவர்களும் கூட இதற்கான தீர்வை கண்டு சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என கருத்தில் நின்றனர். 

உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் மாணவர் போராட்டங்களும் தொடங்கி அது மக்கள் ஆதரவையும் பெற ஆரம்பித்தது. 

58/69

அன்று பிரதமர் நேரு மற்றும் வட இந்திய காங்கிரஸ் தலைவர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வர செய்தவர் கர்ம வீரர் காமராஜர். 

எப்படியும்அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அரசியல் சட்டத் திருத்த மசோதா நுறைவேற்றப்பட்டு விடும் என்பதை 59/69

முன்னிட்டு ஈரோட்டு பெரிய வெங்காயம் திருச்சியில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்து தீர்மானம் நிறைவேற்றி கொள்கிறார். 

அரசியல் சட்ட திருதரத மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 1951 ஜூன் முதல் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 243 60/69

வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் கிடைத்ததை தொடர்ந்து மசோதா நிறைவேறியது. 

இந்த வரலாறுகளை மறைத்து இரண்டு ஸ்பீக்கர், ஒரு மைக் செட் போட்டு திருச்சியில் நடத்திய மாநாட்டில் பெரிய வெங்காயம் எச்சரித்ததால் அரசியல் சட்டத்தையே முதன்முதலாக திருத்தினார்கள் என திராவிட 61/69

சொம்புகள் வரலாற்றை எழுதி வைத்துள்ளனர். 

---------------

இட ஒதுக்கீடு வரலாறு இத்துடன் முடியவில்லை. இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் இல்லாத மத்திய அரசின் மொராரஜி தேசாய் இட ஒதுக்கீடு சீர் திருதிருத்தங்களை செய்ய 1979 ம் ஆண்டு முன்னால் மத்திய அமைச்சராக இருந்த 62/69

பிந்தர்ஸ்வரி பிரசாத மண்டல்.... சுருக்கமாக B.P.மண்டல் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. அவர் அறிக்கையை தாக்கல் செய்வதற்குள் மொராஜி தேசாய் இகன்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பதவியிலிருந்தார். இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை தூக்கி பரணில் போட்டார். 
63/69

அதன் பின் பல அரசியல் சூறாவளிகளுக்குப் பின் பிரதமரான விஸ்வநாத பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங் மண்டல் கமிஷனை தூசி தட்டி எடுத்து பலஙதடைகளுக்கு பின் அமல் படுத்தினார். 

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒரு 64/69

முடிவிற்கு வந்து, தமிழகத்தில் ஜெயலிலிதா ஆட்சியில் 69% இட ஒதுக்கீட்டுற்கு சட்டப்ப்பூர்வமான பாதுகாப்பளிக்கும் போது 1993 வருடம். 

-

இந்த பதிவில் இவ்வளவு நீளமாக இட ஒதுக்கீடு வரலாறை சொல்ல காரணம் உள்ளது. 

இன்றுள்ள சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு என்பது 65/69

தனி நபர் சாதனை அல்ல. அதை தனிப்பட்ட நபர் தங்களின் வெற்றியாக கொள்ளவும் முடியாது என்பதே உண்மை. 

அந்தந்த காலகட்டத்தில் இருந்த தலைவர்கள் சமூக நீதிக்காக தங்களின் பங்களிப்பை செய்து படிப்படியாக வந்தது தான் இட ஒதுக்கீடு. இதில் ஈரோடு வெங்காயத்தின் பங்களிப்பு என்று 66/69

பார்த்தால் ஒரு கூந்தலும் இல்லை. 

ஆரம்ப கட்டத்தில் சமூக நீதிக்கெதிரான கூட்டத்துடன் சேர்ந்து ஜஸ்டிஸ் கட்சியின் முன்னெடுப்புகளை குழப்பியவர் தான் இந்த ஈரோடு பெரிய வெங்காயம். 

இதை தவிர்த்து சுதந்திரம் பெற்ற பிறகு திருச்சியில் ஒரு சர்வ கட்சி மாநாட்டை நடத்தியாக 67/69

சொல்கின்றனர். இது கும்பலில் கோவிந்தா போட்ட சாதனை. 

எப்படி கும்பலில் கோவிந்தா போட்டு வைக்கம் வீரர் என எழுதி வைத்தார்களோ அதே கதை தான் சமூக நீதியை ஈரோடு பெரிய வெங்காயம் வாங்கி கொடுத்தார் என்பதும். 

எவனோ பெற்ற சமூக நீதி பிள்ளைக்கு தன் இன்ஷியலை கொடுத்த 68/69

தியாகி தான் ஈரோடு பெரிய வெங்காயம்.

--------------------

நாச்சியப்பன் பாத்திரக்கடையில் ஈரோடு பெரிய வெங்காயம் வாங்கிய அனைத்து பாத்திரங்களும் இனி ஒவ்வொன்றாக நமது சிபி மீடியா குழுவால் நசுக்கப்படும். 

------------ Bommaiyah Selvarajan. 69/69



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 http://viduthalai.periyar.org.in/20091126/news24.html

எனக்கென்று ஒரு வசந்தகாலம்!
குவைத்தில் தமிழர் தலைவர் அற்புத உரை!

photo01.jpg

குவைத்தில் 16.10.2009 அன்று நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார்.

குவைத், நவ.26_ எனக்கென்று ஒரு வசந்தகாலம் ஒன்று இருந்தது. அது எந்தக் காலம் என்பதை அண்ணா அவர்கள் விளக்கிய செய்தியை குவைத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

யுனெஸ்கோ மன்றம் பாராட்டு!

யுனெஸ்கோ மன்றம் அய்க்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார மன்றம். அந்த யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியார் அவர்களுக்கு 1971 காலகட்டத்திலே மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது.

1971ஆம் ஆண்டு வாக்கிலே அந்த விருது வழங்கப்பட்டது. அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்தான் அந்த விருதினை அளித்தார்கள்.

அன்றைக்கு எங்கள் நாட்டின் மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் திரிகுணசென் அந்த விருதினை வழங்கினார்.

அந்த விருதுக்குரிய காரணங்களை அற்புதமான வரிகளில் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பெரியார். பெரியார் அவர்கள் காலத்தைக் கடந்த ஒரு முன்னோடி. அது மட்டுமல்ல, மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசாமல் தடுக்கக்கூடிய முழு எதிரி.

மனித நேயத்தின் மறுஉருவம் என்று தெளிவாகச் சொன்னார்கள்.

அண்ணா தலைசிறந்த பேச்சாளர்

தந்தை பெரியார் அவர்கள் செய்த சாதனை இருக்கிறதே அது ஒப்பற்ற சாதனை. வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை.

அய்யா அவர்களிடம் பயின்ற அண்ணா ஒரு தலைசிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அண்ணா அவர்களைப் பற்றி ஒரு சில உதாரணங்களை ஆங்காங்கே தொட்டுத் தொட்டு காட்டுகிறேன். அண்ணா அவர்களுடைய பேச்சு என்றால் பலாச்சுளையை தேனில் தோய்த்து சாப்பிடுவதைப் போன்று இனிக்கும்.

எதிரிகள் கூட வியப்பர்

எதிரிகள் என்று வருபவர்கள் கூட அவர் வயப்படுவர். அண்ணா அவர்களுடைய சிந்தனை, சொற்கள் எங்கிருந்து விழுகின்றதென்பதே தெரியாது. குற்றால அருவியின் நீர்வீழ்ச்சி போல, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல அண்ணா அவர்களுடைய கருத்துகள் அவ்வளவு வளம் பெற்ற கருத்துகளாகும்.

அண்ணா அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். அண்ணா அவர்களுடைய பேச்சுகளை அருகில் இருந்து கேட்டவர்கள் நாங்கள்.

கேள்விக்கு பதில் சொல்கின்ற ஆற்றல்

கேள்வி கேட்டு பதில் சொல்வது என்கிற முறை தந்தை பெரியாரிடம், அண்ணா அவர்களிடம், கலைஞர் அவர்களிடம், திராவிட இயக்கத்தினரிடம் உண்டு. எந்தக் கேள்விகளுக்கும் சரளமாகப் பதில் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். பெரியார் குருகுலத்திலே அப்படிப்பட்ட ஒரு பயிற்சி தெளிவாக உண்டு. காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு அவசரமாக ரயிலுக்குப் போக வேண்டும் என்று அண்ணா அவர்கள் மேடையை விட்டு இறங்குகின்றார்.

அண்ணா அவர்களிடத்திலே ஒரு கேள்வி

அவர் அவசரமாக இறங்குவதைப் பார்த்த அப்பொழுது இருந்த எதிர் கட்சியினர் உடனடியாக எழுதி வேண்டுமென்றே ஒரு கேள்வித்தாளை அண்ணா அவர்களிடத்திலே கொடுக்கின்றார்கள். இது நீண்ட காலத்திற்கு முன்னாலே நடந்த செய்தி.

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து அப்பொழுது பிரியவில்லை. பாகிஸ்தான் பிரிவினையை அப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று கேள்வி. அண்ணா அவர்கள் அந்தக் கேள்விச் சீட்டைப் பார்த்தார். படித்தவுடனே மேடையை விட்டுக் கீழே இறங்கிய அண்ணா, மீண்டும் மேடை ஏறினார்.

ஜின்னா ஆரியரா? திராவிடரா?

ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று ஒரு தோழர் கேள்வி கேட்டிருக்கின்றார். திரு. ஜின்னா திராவிடர்; ஸ்ரீமான் ஜின்னா ஆரியர்; ஜனாப் ஜின்னா அவர்தான் இஸ்லாமியர் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்கிப் போய்விட்டார். (கைதட்டல்)

அண்ணா அவர்கள் எதற்கும் மிகச் சிறப்பாக பதில் சொல்லக் கூடியவர். ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். அதேபோல அண்ணா அவர்களுடைய எழுத்துகள் சாதாரணமானவை அல்ல. அண்ணா அவர்களின் எத்தனையோ சிறப்பான எழுத்துகளை எடுத்துக் காட்டலாம்.

அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம்

அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுக் களஞ்சியம் என்ற நூலை நாங்கள் வெளியிட்டி ருக்கின்றோம். இந்த நூலிலே அற்புதமான செய்தி இதைத் திராவிடநாடு ஏட்டிலே அண்ணா அவர்கள் எழுதினார். இது ஒரு சுவையானது.

அண்ணா அவர்களுடைய தலைப்பே அற்புதமானது. அண்ணா அவர்களைப் போல தலைப்பு எழுதுகின்ற ஏட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் வேறு யாரும் கிடையாது.

அண்ணா விடுதலையின் ஆசிரியர்

கிளிநிறம் பெற்ற கழுகு. கிளி போன்று பச்சை நிறம் பெற்றிருந்தால் அது சரியாகுமா? அதற்கான உவமையை அவர்கள் சொன்னார்கள். அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தபொழுதுகூட தன்னுடைய முதலமைச்சர் பதவியை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை.

அண்ணா அவர்கள் விடுதலையின் பழைய ஆசிரியர் என்ற முறையிலே பெரியார் மலருக்கு, அய்யா பிறந்த செப்டம்பர் 17க்காக ஒரு கட்டுரையை விடுதலை ஆசிரியர் என்ற முறையிலே கேட்டிருந்தேன்.

அண்ணா முதல்வராகி அப்பொழுதுதான் சில மாதங்கள் ஆகின்றன. முதல்வர் பதவியை ஏற்பதற்கே அண்ணா அச்சப்பட்டார். எல்லோரும் பதவி கிடைக்காதா என்று பார்க்கிறார்கள்.

முதல்வர் பதவியை அச்சத்தோடு பார்த்தார்

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலே யாராவது ஒரு கட்சியைத் தொடங்கினாலே நான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். (கைத்தட்டல்) எனவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அண்ணா அவர்களை முதல்வராகத் தேர்ந்தெடுத்தி-ருக்கின்றார்கள். ஆனால், அச்சத்தோடு அண்ணா அவர்கள் பொறுப்பேற்கிறார்கள்.

இவ்வளவு மக்கள் நம்மீது இவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்களே இவர்களுடைய நம்பிக்கைக்கு மாறாக நான் நடக்க முடியுமா? நடக்கக் கூடாது.

அண்ணாவைத் தொந்தரவு செய்தேன்

எனவே, அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டும் என்று அண்ணா அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்திலேதான் அண்ணா அவர்களிடம் கட்டுரை வேண்டினேன். அவர்களிடம் மலருக்கு கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று அண்ணா அவர்களை நான் தொந்தரவு செய்தேன். அண்ணா அவர்களுடைய நிகழ்ச்சிக்கு இரண்டு, மூன்று முறை சென்றிருப்பேன் என்னுடைய முகத்தைப் பார்க்கின்ற அளவுக்கு முன்னாலே உட்கார்ந்திருப்பேன்.

நிகழ்ச்சி முடிந்து அண்ணா அவர்களை சந்திக்கும்பொழுது சொல்லுவார். என்னப்பா, மலருக்கு கட்டுரை கேட்கத்தானே வந்திருக்கிறாய்? கொஞ்சம் பொறு; எழுதிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுவார்.

சரித்திரம் படைத்த எழுத்துகள்!

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதினார். அவருடைய எழுத்துகள் எப்படிப்பட்ட உயிருள்ள எழுத்துகள் என்பதை சரித்திரம் படைக்கக்கூடிய எழுத்துகள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா அவர்கள் விடுதலை மலருக்காக அவரே தலைப்பிட்டு எழுதிக்கொடுத்த கட்டுரைதான் அந்த வசந்தம் என்பது. கட்டுரையின் துவக்கமே மிகச் சிறப்பானதாக இருக்கும். எழுத்தாளர் _ அண்ணா அவர்களை இப்பொழுது பாருங்கள்.

எனக்கென்று ஒரு வசந்தகாலம்

எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு _ ஆண்டு பலவற்றுக்குப் பிறகு _அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றைய கவலைமிக்க நாள்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி அவருடன் காடுமேடு பலசுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக்குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்பொழுது கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும்; பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும்.

தலைபோகும் - உயிர்போகும்...

புறப்படு முன்னர் தலைபோகும் _ தாடிபோகும் _ தடிபோகும் _ உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா? என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார் _ வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால்

பெரியார் மீது கற்கள்...

ஈரோட்டுக்குப் பக்கத்திலே இருங்கூர் என்ற ஊர் பெரியாரும், அண்ணாவும் செல்லுகிறார்கள். அந்த ஊரிலே பெரியார் பேசக் கூடாது என்பதற்காக பெரியார் மீது கற்கள் விழுந்து கெண்டிருக்கின்றன ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சாம்பலைக் கொண்டு வந்து இருவரின் எதிரிலே நின்று கொண்டு ஏராளம் வீசிக்கொண்டேயிருக்கின்றார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard