New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அக்பர் எனும் கயவன் – பி.எஸ். நரேந்திரன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அக்பர் எனும் கயவன் – பி.எஸ். நரேந்திரன்
Permalink  
 


அக்பர் எனும் கயவன் – 1

 

மூலம்: பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகம்

தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை :

இந்திய வரலாறு பொய்களாலும் புனைகதைகளாலும் ஆனது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய வரலாற்றை எழுதும்படி நேருவினால் பணிக்கப்பட்ட இடதுசாரிகள் தங்கள் இஷ்டம்போல எழுதி வைத்தார்கள். இந்தியாவில் ஹிந்துக்களைக் கொன்று இரத்த ஆறு ஓடச்செய்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் சிறிதும் நியாயமின்றி ஏணியில் ஏற்றி உட்கார வைக்கப்பட்டார்கள். இந்தியாவின் உண்மையான வரலாறு முற்றிலுமாக இந்திய ஹிந்துக்களிடமிருந்து மறைக்கப்பட்டது. இந்திய மாணவர்கள் செக்யூலரிசம் என்னும் போலிப் போதையில் ஆழ்த்தப்பட்டார்கள்.

எந்தவொரு இந்துவும் எம்மதமும் சம்மதம் என்று உணர்ந்தவன். ஆக இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் செக்யூலரே என்கிற உண்மையை உணராத போலிகள் தாங்கள் மத ஒற்றுமைக்குப் பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு இந்தியர்களை மத ரீதியாகப் பிரித்தார்கள். அதன் பலனை இந்தியா கடந்த 70 வருடங்களாக அனுபவித்துவருகிறது. இன்றைக்கு ஒருவன் இந்து என்று கூறிக் கொள்ளவே அச்சப்படும் ஒரு அவலத்தை மேற்படி அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆகவே, இந்தியர்களுக்குக் கற்பிக்கப்படும் பொய்யான கற்பிதங்களால் ஆன இந்திய வரலாறு மறுபரிசீலனை செய்யும் காலம் இன்றைக்கு வந்திருக்கிறது. அதன் ஒரு சிறு துவக்கமாக இந்தத் தொடர் இருக்கும். இது உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியேயன்றி எந்தவொரு பிற மதத்தவருக்கும் எதிரான ஒன்றல்ல என்பதினை வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு இந்தியனுக்கும் தனது கடந்தகால வரலாற்றை அறியும் அத்தனை உரிமையும் இருக்கிறது.

******

முகலாயர்களின் மூன்றாம் தலைமுறை அரசரான அக்பர் (1542-1605) ஒரு மிகப் பெரும் மனிதராகவும், நீதி தவறாத அரசராகவும் இன்றைக்கு அறியப்படுகிறார். ஆனால் உண்மையோ அதற்கு நேரெதிராக இருக்கிறது. அதனைக் குறித்து ஆராய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

அக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. அதனையே பெரும்பாலான இந்தியர்கள் படித்து அதனையே நம்பி வளர்ந்தவர்கள். ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள  மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை. அக்பரின் உண்மையான வரலாறு அவர்களிடம் இது நாள் வரைக்கும் மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அத்தகைய குணமுடைய ஒரு மனிதனை மிக உயர்ந்தவன் என்று இந்தியர்கள் புகழ்வதினைப் போன்றதொரு கேவலம் வேறொன்றில்லை.

எனவே அக்பரின் உண்மையான வரலாற்றை நாமறிய வேண்டிய தருணம் வந்திருக்கிறது. எனவே நமது வருங்கால சந்ததிகளேனும் உண்மையான வரலாற்றை அறிந்து வளர்வார்கள் எம நம்புகிறேன்.

முகலாய ஆட்சிக் காலத்தைக் குறித்து ஆதியோடு அந்தமாக ஆராய்ந்து எட்டு வால்யூம்கள் எழுதிய புகழ் பெற்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் H.M. Elliot இன்றைக்கு இந்தியாவில் ஏகத்திற்கும் புகழ்ந்து கூறப்படும் முகலாய ஆட்சியை “Imprudent and interested fraud” என்கிறார். முகலாய அரசவையில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த முகலாய வரலாற்றாசிரியர்கள் ஏகத்திற்கும் இல்லாத கதைகளை எழுதிவைத்தார்கள், ஆனால் என்கிறார் அதில் சிறிதளவும் உண்மையில்லை அவர். அக்பர் the so called “The Great” பற்றி நமகக்கு இன்றைக்குக் கற்பிக்கப்படும், சொல்லப்படும், எழுதப்படும் வரலாறு அதே வகையைச் சார்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அக்பரின் வரலாற்றை எழுதிய அபுல் ஃபைசல் முற்றிலும் பொய்களையும், புனைகதைகளையும் மட்டுமே எழுதி வைத்தார். அதே காலத்தில் வாழ்ந்த இன்னொரு வரலாற்றாசிரியரான பதாயுனி மற்றும் இளவரசர் சலீம் (ஜஹாங்கிர்) போன்றவர்கள் அபுல் ஃபைசலை “வெட்கம் கெட்ட புளுகன்” என்று அழைக்கிறார்கள். இளவரசர் சலீம் அக்பரின் சொந்த மகன் என்பதனை நாம் கவனிக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக இன்றைக்கும் அபுல் ஃபைசல்தான் நமக்கு மேற்கோள் காட்டப்படுகிறார்.

இந்தியாவின் பல்வேறு இனக்குழுக்களிடையே இணக்கம் பேணுவதற்காக அக்பர் பல்வேறு நாட்டு இளவரசிகளை மணந்தார் என்கிற பொய்யை மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்கிறார்கள். ஜோதாபாய் போன்ற ராஜபுத்திரப் பெண்மணி அக்பர் மீது கொண்ட காதலை(!) சினிமாவாகவெல்லாம் எடுத்து இன்றைக்கும் நம்மை புல்லரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அடிமூடர்கள். ஆனால் உண்மை அதற்கு மாறானது. மானமுள்ள எந்த ராஜபுத்திரப் பெண்ணும் அக்பர் போன்ற நிர்மூடனை, மதவெறி பிடித்த மூர்க்கனை மணக்க முன்வரவே மாட்டாள். அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பர் படையெடுத்துச் செல்லும் நாட்டின் அரசன் அடிபணிந்து அவனது மகள்களையும், பிற அரண்மனைப் பெண்களையும் அக்பருக்குக் கொடுத்தால் அவர்களின் நாடு சின்னாபின்னமாவதிலிருந்து தப்பிக்கும் என்கிற மிரட்டலுக்குப் பணிந்தே பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் அக்பரால் அங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டார்கள்.

அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக மாற விரும்பாத சித்தூர் ராணி பத்மினி போன்றவர்கள் நெருப்பில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற வரலாறு நமக்கு உறைப்பதே இல்லை. அக்பர் ஒரு அடிப்படைவாத, முகமது நபியின் உதாரணத்தை இறக்கும் வரை கடைப்பிடித்த ஒரு அடிப்படைவாத முஸ்லிம். அவரைப் பொறுத்தவரை போரில் வென்ற ஹிந்துக் காஃபிர் பெண்கள் அவரின் அடிமைகள். ஹிந்து அரசனின் அரண்மனையில் சீரும் சிறப்புமாக வளர்ந்த ஒரு பெண் அக்பரின் ஹராமில் இருந்த 5000 பெண்களில் ஒருத்தியாக மாறி, வெளியில் வரவே முடியாதபடி அங்கேயே மக்கி மடிந்தாள். அக்பரின் ஹராமிற்குள் அடைக்கப்பட்ட பெண் அவள் இறக்கும் வரை அவளது பெற்றோர்களை மீண்டும் பார்க்க அனுமதிக்கப்படவேயில்லை என்பதிலிருந்து அக்பர் என்னும் ஒரு மனித மிருகத்தின் மனோபாவத்தை அறியலாம்.

அரச குடும்பத்தைத் தவிர வேறு பல ஹிந்துப் பெண்களும் அக்பரினால் போர் வெற்றிப் பரிசாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள அனைவரும் டெல்லித் தெருக்களில் அக்பரால் விபச்சாரம் செய்ய வைக்கப்பட்டனர். அவர்களில் அழகானவர்கள் அக்பரின் அனுமதியுடன் பல்வேறு அரசாங்கத்து முஸ்லிம் அதிகாரிகளுக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்தப் பெண்களில் இருக்கும் கன்னிப் பெண்களை எந்த முஸ்லிம் அதிகாரியாவது விரும்பினால் அதற்கு அக்பரிடமிருந்து விஷேஷ அனுமதி பெறவேண்டும். விபச்சாரம் நடக்கும் இடத்தில் ஒரு மதுக்கடையும் அக்பரால் திறக்கப்பட்டது. சைக்கோபாத்தான அக்பர் விபச்சாரம் செய்யும் அந்தப் பெண்களில் அழகானவர்களை அவ்வப்போது அழைத்து யாரால் அவர்களுக்குக் கன்னி கழிய வைக்கப்பட்டது போன்ற “கிளு கிளு” சமாச்சாரங்களைக் கேட்டு மகிழ்ந்ததொரு அல்பன். இது அத்தனையும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதினை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களுடன் சிறுவர்களும் அக்பரால் தேவையானவர்களுக்கு சப்ளை செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.

டெல்லியின் ஹிந்து அரசன் ஹேமுவைத் தோற்கடித்த தனது பதினாலாவது வயதிலிருந்தே அக்பர் பெண் பித்தனாக, குடிகாரனாக, அபின் உபயோகிப்பாளனாகத்தான் இருந்திருக்கிறார் என்கிற விவரத்தை ஏன் நமது “வரலாற்றாசிரியர்கள்” சொல்லத் தயங்குகிறார்கள்? வரலாறு என்பது உள்ளது உள்ளபடியல்லவா சொல்லப்பட வேண்டும்? பின் எதற்காக இந்தப் பொய்களும், புனைகதைகளும்?

கொலைகாரர்கள் வழிவந்த அக்பர் மட்டும் எப்படி உத்தமனாக இருந்திருக்க முடியும் என்கிற அடிப்படைக் கேள்வியைக் கூடக் கேட்கத் தயங்குகிறார்கள் நமது வரலாற்றாசிரியர்கள். அப்படியே அக்பர் மஹா உத்தமனாக இருந்திருந்தால் அவருக்குப் பின்னர் வந்த ஜஹாங்கிர், ஷாஜஹான், அவ்ரங்க்ஸிப் போன்றவர் ஏன் கேடு கெட்டவர்களாக இருந்தார்கள்? அன்பும், கருணையும் கொண்ட அக்பரைப் பார்த்துக் கூடவா அவர்கள் கற்றுக் கொள்ளாமல் போனார்கள்?

அக்பரின் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை முதலில் அறிந்து கொள்ளலாம்.

*******

நவம்பர் 23, 1542, வியாழக்கிழமை : 

ஷேர் ஷாவினால் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்ட அக்பரின் தகப்பனான ஹுமாயூன், சிந்து மாகாணத்திலுள்ள அமர்கோட்டின் ஹிந்து அரசரான ராணா விர்சால் என்றழைக்கப்படும் ராணா பிரசாத்திடம் புகலிடம் கேட்டுத் தங்கியிருக்கிருக்கையில் அங்கு அக்பர் பிறக்கிறார். பிறந்த குழந்தைக்கு பத்ருதின் (The full moon of Religion) முகமது அக்பர் என்று பெயர் சூட்டப்படுகிறது. அக்பர் என்றால் “மூத்தவன்” அல்லது “மிகப் பெரியவன்” என்று பொருள்.

மார்ச் 1546 :

அக்பருக்கு சுன்னத் செய்யப்படுகிறது.

குறிப்பு : நெடுங்காலமாக செய்யப்பட்டு வருகிற சுன்னத் சடங்கு ஒரு புனித மற்றும் விலக்க முடியாத இஸ்லாமிய சடங்காக மாறியிருந்தாலும், அது ஆரம்பிக்கப்பட்ட நீரற்ற அரேபிய பாலைவனத்தில் உடல் சுத்தத்தைப் பேணும்படிக்காக துவங்கப்பட்டதொரு சடங்காகும். நீரில்லாத பாலைவனங்களில் வசிப்பவர்கள் குளிப்பது மிக, மிக அபூர்வமென்பதால் Phymosis போன்ற நோய்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக சுன்னத் செய்து கொண்டார்கள். ஆனால் இந்தியா போன்ற நீர் நிலைகள் அதிகமுள்ள நாடுகளில் தினமும் குளிப்பது ஒரு வழக்கமாக இருப்பதால் அங்கு சுன்னத் செய்வது ஒரு தேவையற்ற சடங்கென்றாலும் அது ஒரு மதக்கடமை என்கிற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜனவரி 27, 1556, திங்கள் :

அக்பரின் தகப்பனான ஹுமாயூன் தில்லியில் மரணமடைகிறார். டெல்லியில் புரானா கிலா (பழைய கோட்டை)யின் மாடிப்படிகளிலிருந்து ஜனவரி 24-ஆம் தேதி தவிறி விழும் ஹுமாயூனை அங்கிருந்து அரைமைல் தொலைவிலிருந்த அரண்மனைக்குத் தூக்கிச் செல்கிறார்கள். அங்கு மரணமடையும் ஹுமாயூனைப் புதைத்த கட்டிடமானது அவரது மறைவிற்குப் பின்னர் கட்டப்பட்டதாக தவறாகக் கூறப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்டிடம் ஹுமாயூனின் மரணத்திற்கு முன்பிருந்தே இருக்கின்ற ஒன்று. ஹிந்து அரசன் ஒருவருக்குச் சொந்தமான அந்தக் கட்டிடத்தில்  சக்தி சக்ர அடையாளமும், ஒன்றை ஒன்று தழுவி நிற்கும் முக்கோணங்களும், அதன் நடுவில் கல்லினால் செதுக்கப்பட்ட மலர்களும் இருப்பதனை இன்றைக்கும் காணலாம். எனவே ஹுமாயும் வாழ்ந்ததும், மறைந்ததும் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமானதொரு கட்டிடத்தில்தான்.

ஹுமாயூனின் மரணத்தின் போது 13 வயது இரண்டு மாதச் சிறுவனாக இருந்த அக்பர் அவரது மாமனான பைராம்கானின் துணையுடன் சிக்கந்த சுர்ரை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார். ஹுமாயூனின் மரணச் செய்தி கிடைக்கையில் பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருக்கும் கலனூரில் தங்கியிருந்தார் அக்பர். பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஹுமாயுனின் மரணம் ரகசியமாக வைக்கப்படுகிறது. பின்னர் அக்பரை அரசராக அறிவிக்கிறார்கள்.

பிப்ரவரி 11, 1556 :

அக்பர் தில்லியின் அரசராக அறிவிக்கப்படுகிறார். மூன்று நாட்கள் கழித்து, பிப்ரவரி 14, 1556, அன்று பஞ்சாபின் கலனூரிலிருந்த ஒரு பழைய ஹிந்து ராஜாவின் அரண்மனையில் வைத்து அக்பர் முடிசூட்டப்படுகிறார். அக்பரின் வரலாற்றாசிரியர்கள் பொய்யாகக் குறிப்பிடுவது போல அக்பருக்கு அங்கு பெரிய மாளிகை எதுவும் இருந்திருக்கவில்லை. ஒரு பாழடைந்த ஹிந்து அரசனின் அரண்மனைதான் அக்பர் முடிசூட்டிக் கொண்ட இடம். எட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைந்து கிடந்த அரண்மனை அது.

நவம்பர் 5, 1556 :

பானிப்பட்டில் ஹிந்து அரசர் ஹேமுவுக்கு எதிராக நிகழ்ந்த போரில் வெற்றி பெரும் அக்பர், டெல்லி-ஆக்ரா-ஃபதேபூர் சிக்ரி பகுதிகளுக்கு அரசராகிறார். ஹேமு மிக எளிதாக வென்றிருக்கக் கூடிய அந்தப் போரில் துரதிருஷ்டவசமாக ஒரு அம்பு அவரது கண்ணைத் துளைத்து மூளையில் பதிந்ததால் ஹேமு சுய நினைவை இழந்தார். அதனைக் கண்ட அவரது படையினர் சிதறி ஓடிவிட்டார்கள். ஹேமு அமர்ந்திருந்த அவரது பட்டத்து யானை காட்டுக்குள் ஓடிவிட்டது.

அக்பரின் முதல் திருமணம் குறித்த சரியான தேதி தெரியவில்லை. மாமன் மகளை மணக்கும் வழக்கப்படி அக்பரின் மாமனான ஹிண்டாலின் மகள் ருக்கியா பேகத்தை நவம்பர் 1551 அன்று மணந்த தகவல் இருக்கிறது.

1557-இன் முதல்பகுதி :

அக்பர் அப்துல்லாகானின் மகளை மணக்கிறார். அது அக்பரின் இரண்டாவது திருமணம். அவரது பாதுகாவலனான மாமன் பைராம்கான் அந்தத் திருமணத்தை எதிர்க்கிறார். அனேகமாக அந்தச் சம்பவமே அக்பருக்கும், பைராம்கானுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகக் காரணமாக இருக்கலாம். சிறிதுகாலத்திற்குப் பிறகு அக்பர் தனக்கு எல்லா உதவியும் செய்து தன்னை அரசனாக்கிய மாமன் பைராம்கானை படுகொலை செய்துவிட்டார்.

மே 1557 :

மான்கோட்டில் மிக நீண்ட முற்றுகைக்குப் பிறகு சிக்கந்தர் சுர் சரணடைகிறார். இந்தப் போரின் போது அக்பரின் மாமன் பைராம்கான் அக்பரின் அத்தை மகளான (ஹுமாயுனின் சகோதரி மகள்) சல்மா பேகத்தை மணந்து கொள்ள நிச்சயதார்த்தம்  செய்கிறார். அக்பருக்கும் அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் இருந்ததால் மீது கோபமடைந்து  பைராம்கானின் கூடாரத்தின் மீது யானைகளை ஏவிவிடுகிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்கள் கழித்து ஜலந்தரில் பைராம்கான் சல்மா பேகத்தை நிக்காஹ் செய்து கொள்கிறார். மீண்டும் பைராம்கானின் கூடாரத்தின் மீது யானைகள் ஏவிவிடப்படுகின்றன. கொஞ்ச நாட்கள் கழித்து ஆக்ராவுக்குத் திரும்பிய பிறகு மீண்டுமொருமுறை பைராம்கானின் மீது யானகள் ஏவிவிடப்படுகின்றன. தான் ஆசைப்பட்ட பெண்ணை மாமன் தள்ளிக் கொண்டு போனதை அக்பர் மன்னிக்கவேயில்லை. சில வருடங்கள் கழித்து பைராம்கானை தந்திரமாக படுகொலை செய்துவிட்டு சல்மா பேகத்தை தனது அந்தப்புரத்திற்குக் கவர்ந்து கொண்டார்.

1560 :

அக்பர் தனது தலை நகரத்தை ஆக்ராவிலிருந்து ஃபதேபூர்சிக்ரிக்கு மாற்றிக் கொள்கிறார். இதன்படி ஃபதேபூர்சிக்ரி ஏற்கனவே இருந்ததொரு நகரம் என்பது தெளிவு. வரலாற்றாசிரியர்கள் சொல்வதுபோல சிக்ரி அக்பரால் கட்டப்பட்ட ஒரு நகரமல்ல. தலைநகரை திடீரென மாற்றியதற்குக்கான காரணத்தை ஃபெரிஸ்டா விளக்குகிறார். அதன்படி அக்பரி தலைமை தாதியான மஹம் அனாகாவானவள் அக்பரை அவரது மாமன் பைராம்கான் சிறையில் அடைத்துவிட்டு தானே அரசனாகப் போவதான வதந்தியைச் சொன்னதால் அச்சமடைந்த அக்பர் உடனடியாக அங்கிருந்து ஃபதேபூர்சிக்ரிக்கு தலைநகரை மாற்றுகிறார்.

மிகக் குறைந்த நேரத்தில் எல்லா மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டும், அத்தனை அமைச்சர்கள் நிர்வாகிகள், அந்தப்புரத்திலிருந்த 5000 பெண்களுடன் ஆயிரக்கணக்கான விலங்குகளுடனும் திடீரென அக்பர் ஃபதேபூர்சிக்ரிக்கு சென்றது அந்த நகரில் ஏற்கனவே எல்லாக் கட்டிடங்களும், அரண்மனையும் இருந்ததனையே காட்டுகிறது. எனவே அக்பர் ஃபதேபூர்சிக்ரியைக் கட்டியதாகச் சொல்வது மாபெரும் பொய்யேயன்றி வேறேன்ன?

ஜனவரி 1561 :

குஜராத்தின் சித்தாபூர் பட்டானில் வைத்து அக்பரின் மாமனான பைராம்கான் அக்பரால் ஏவிவிட்டவர்களால் படுகொலை செய்யப்படுகிறார். பைராம்கானின் பதவியைப் பிடுங்கியதுடன் அவரைத் தொடர்ந்து தொல்லைகள் செய்துவந்த அக்பர், தான் அரசனாவதற்காக கடுமையாக உழைத்த தனது மாமனை சிறிதும் இரக்கமின்றி தந்திரமாகக் கொலை செய்கிறார். பைராம்கான் கொலை செய்யப்பட்ட சிறிது நாட்களில் அவரது மனைவியான சல்மா பேகம் அவரது மூன்று வயது மகனான அப்துல் ரஹிம் கான் கனானுடன் அக்பரின் அந்தப்புரத்தில் சங்கமமானாள். அக்பரின் மனையரின் கணக்கில் ஒன்று கூடியது.

மார்ச் 29, 1561 :

அக்பரின் படைத்தலைவர்களான ஆதம்கானும் பீர் முகமதுவும் மாண்டவகத் அரசரான பாஸ் பகதூரை (Baz Bahadur) மத்திய இந்தியாவின் தேவாஸ் நகரத்திற்கு அருகிலிருக்கும் சங்க்ரூரில் தோற்கடிக்கிறார்கள். இந்தப் போரில் பெரும் படுகொலைகளை மேற்கூறிய அக்பரின் இரு படைத்தலைவர்களும் நடத்தி முடிக்கிறார்கள்.

ஏப்ரல் 27, 1561 :

ஆதம்கான், பாஸ் பகதூரின் அழகான அந்தப்புரத்துப் பெண்களை தனக்குக் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டதாக வந்த தகவல்களை அடுத்து அக்பர் ஆக்ராவிலிருந்து சங்க்ரூருக்கு விரைகிறார்.

ஜூன் 4, 1561 :

ஆதம்கானிடமிருந்து பிடுங்கிய பாஸ் பகதூரின் அழகிகளுடன் அக்பர் ஆக்ராவுக்குத் திரும்புகிறார். அக்பரின் அந்தப்புரத்து அழகிகளின் எண்ணிக்கை கூடுகிறது.

ஜூன் 1561 :

எட்டா (Etah, Sakit Pargana) மாவட்டத்தின் மீது நடந்த தாக்குதலை அக்பரே முன்னின்று நடத்துகிறார். பரோக் என்கிற கிராமத்தில் ஆயிரம் ஹிந்துக்கள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு அந்த வீடு தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. உள்ளிருந்த அத்தனைபேரும் எரிந்து சாம்பலானார்கள். கருணையும், அன்பும் கொண்ட அக்பரின் ஆணைப்படி செய்யப்பட்டது அது.

ஜுலை-ஆகஸ்ட் 1561 :

அக்பரின் காலித்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும், கொலைகார மனோபாவத்தையும் பொறுக்காத அக்பரின் அரசவையைச் சேர்ந்த, ஜான்பூர் கவர்னரான அலி குலிகானும் அவனது சகோதரன் பகதூர்கானும் அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். அக்பருக்கு எதிராக அவரது அரசவையைச் சார்ந்தவர்களே நிகழ்த்திய பல புரட்சிகளில் முதலாவது அது (அந்தப் புரட்சிக்குப் பின்னர் அக்பரின் அத்தனை ஆண் உறவினர்களும் அக்பருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்). அக்பரே நேரடியாக அதனை அடக்குவதற்குச் செல்கிறார். அலி குலிகானும், பகதூர்கானும் சரணடைகிறார்கள்.

ஜனவரி 14, 1562 :

அஜ்மீரின் மொய்னுதீன் சிஸ்டி தர்காவிற்குப் போகிறார் அக்பர். ஆனால் அங்கு செல்வதற்கு உண்மையான காரணம் இந்தியாவின் வீரப் பரம்பரையினரான ராஜபுத்திர அரசர்களை அடக்கி அவர்களை ஒன்றுமில்லாமல் செய்வதுதான். அந்த எண்ணம் ஈடேறிய பிறகு அக்பர் அஜ்மீருக்குச் செல்வதனை நிறுத்திக் கொண்டார்.

ராஜபுத்திர அரசர்களை அடக்குவதின் முதல்படியாக ஜெய்பூர் அரசர் ராஜா பர்மால் தோற்கடிக்கப்பட்டு, அவரது மகளை அக்பரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கும்படி ஆணையிடப்பட்டது. ராஜா பர்மால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் அக்பரின் தளபதிகளில் ஒருவனான ஷரஃபுதீன் ஜெய்பூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தொடர்ந்து தாக்கிக் கொள்ளையிட்டான். ராஜா பர்மாலின் இரண்டு மகன்களும் (மான்சிங்கும், பகவான்தாசும்) சிறை பிடிக்கப்பட்டு ஆக்ராவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். ராஜா பர்மால் அவரது மகளை உடனடியாக அக்பரிடம் ஒப்படைக்காவிட்டால் அவரது இரண்டு மகன்களும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என மிரட்டப்பட்டார்கள். வேறு வழியின்றி அவரது மகளை ராஜா பர்மால் அக்பரிடம் ஒபப்டைக்கிறார். எனினும் அவரது இரண்டு மகன்களும் விடுவிக்கப்பட்டாமல் அக்பருக்கு சேவகம் செய்ய வைக்கப்படுகிறார்கள்.

அக்பரால் இவ்விதமாக மிரட்டப்பட்டு. இரக்கமில்லாமல் பிடித்துக் கொண்டு செல்லப்பட்டு மணமுடித்த  ஹிந்துப் பெண்களை,  மத ஒற்றுமை, இன ஒற்றுமைக்காக அக்பர் மணந்து கொண்டதாக இந்திய வரலாற்றாசியர்கள் மனசாட்சியின்றி புளுகுகிறார்கள்.

மார்ச் 1562 :

அக்பருக்கு எதிராகப் போர்புரிந்து கொண்டிருந்த மாண்டவகத்தின் அரசர் பாஸ்பகதூர் இறுதியில் அக்பரிடம் சரணடைகிறார். அரசவையில் அவருக்கு ஒரு சிறிய பதவி அளிக்கப்படுகிறது.

மே 16, 1562 :

அக்பரின் அரசவையில் பணிபுரிந்துவந்த மூத்த அதிகாரியும் அக்பரின் உறவினருமான சம்சுதீன் அல்காகான் என்பவர் அக்பரது படுக்கையறைக்கு வெளியே வைத்து ஆதம்கான் என்பவரால் படுகொலை செய்யப்படுகிறார். இந்த ஆதம்கான் சங்க்ரூரில் நடந்த போரை வழி நடத்திச் சென்ற அக்பரின் தளபதி. கோபமடைந்த அக்பர், ஆகாகானை ஆக்ரா கோட்டையின் உச்சியிலிருந்து தூக்கிவீசிக் கொல்ல உத்தரவிடுகிறார். கோட்டையின் மீதிருந்து வீசியெறியப்பட்ட ஆகாகான் இறக்காமல் அரை உயிருடன் இருக்கிறார். அக்பரின் உத்தரவின்பேரில் அவரை மீண்டும் கோட்டை உச்சிக்குத் தூக்கிச் சென்று இரண்டாவது முறையாகத் தூக்கியெறிந்து கொல்கிறார்கள்.

1562 :

அக்பரின் முதல் அமைச்சர்களில் ஒருவரான முனிம்கான் அக்பருக்கு எதிரான புரட்சியைத் துவங்கி ஆக்ராவிலிருந்து தப்பி ஓடுகிறார். அவரை ஷாஹரான்பூருக்கு அருகில் சரஸ்வத் என்னுமிடத்தில் பிடித்து அக்பரிடம் கொண்டு வருகிறார்கள். அக்பர் அவரை மன்னித்து மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறார். அக்பருக்கு எதிராக நிகழ்ந்த இரண்டாவது புரட்சி இது.

நவம்பர் 5, 1562:

ஜெய்பூரைச் சூறையாடி ராஜா பர்மாலைச் சரணடையவைத்து, அவரது மகளை அக்பரின் அந்தப்புரத்திற்க்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த தளபதி சைஃபுதீன் என்பவர் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். அவரைத் துரத்திச் சென்ற அக்பரின் படை அவரைப் பல வகையிலும் துன்புறுத்த, சைஃபுதீன் குஜராத்துக்குத் தப்பி ஓடுகிறார். பின்னர் அங்கிருந்து மெக்காவுக்குப் போய்விட்டார்.

இது நிகழ்ந்த சில நாட்களுக்குப் பிறகு அக்பரின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான அப்துல் மாலி என்பவர் அக்பருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார். பின்னர் அங்கிருந்து காபூலுக்குத் தப்பிச் செல்லும் அப்துல் மாலியை பாபரின் உறவுப் பெண் ஒருத்தி அடைக்கலம் கொடுத்து அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறாள். சிறிது நாட்களில் அப்துல் மாலி அந்தப் பெண்ணின் சொத்துக்களை அடைவதற்காக அவளைக் கத்தியால் குத்திக் கொல்லுகிறான். So much for giving shelter.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அக்பர் எனும் கயவன் – 2

 

மூலம்: பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகம்

தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

1563 :

மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலி வேட்டையாடப் போகிறார் அக்பர். ஆனால் மதுராவிற்கு அருகில் நூறாண்டுகளுக்கு மேலாக புலிகள் எதுவும் இருந்த தடையம் இல்லை. அக்பரின் அகராதியில் வேட்டையாடுவது என்றால் ராஜபுத்திர அரசர்களுடன் போர் புரிவதற்கான ஆயத்தங்கள் செய்வது என்பதாகும். தனக்கு முன்னதாக ராஜபுத்திர அரசர்கள் போர் ஆயத்தங்கள் செய்யாமலிருக்கச் செய்யும் ஒரு தந்திரமேயன்றி வேறில்லை. அக்பரின் இந்த மதுரா வேட்டையில் ஹிந்து வழிபாட்டு ஆலயங்களைத் தகர்த்தெறிவதும் ஒரு நோக்கமாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரா தொடர்ச்சியான இஸ்லாமியப் படைத்தாக்குதல்களால் சிதறுண்டு போயிருந்தது. அதில் அக்பரின் பங்கிற்கும் குறைவில்லை. அகப்ர் சென்ற ஒவ்வொரு ஹிந்து வழிபாட்டிடங்களும் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதரத்தை பின்னர் தருகிறேன்.

ஜனவரி 12, 1564 :

நிஜாமுதீன் தர்காவிற்குச் சென்றுவிட்டு தில்லியின் செங்கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அக்பரின் மீது புரானா கிலா (பழைய கோட்டை)வுக்கு அருகில் விஷம் தோய்ந்த அம்பொன்று எய்யப்படுகிறது. (இந்த இடத்தில் நீங்கள் ஒன்றைக் கவனிக வேண்டும். பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்கள் தில்லியின் செங்கோட்டை ஷாஜஹானால் கட்டப்பட்டதாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தில்லி செங்கோட்டை ஷாஜஹானுக்கு முன்பிருந்தே இருக்கிறது). அழகான பெண்களை தனது அந்தப்புரத்திற்குக் கவர்ந்து செல்லும் பொருட்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த அக்பரை மிரட்டுவதற்காக அந்த அம்பு எய்யப்பட்டது.

மார்ச் 1564 :

அக்பர் ஹிந்துக்களின் மீது கடந்த 800 ஆண்டுகளாக முஸ்லிம் அரசர்களால் விதிக்கப்பட்டு வந்த ஜிஸியா வரி நீக்கப்படுவதாக அறிவிக்கிறார். அது ஒரு பொய்யான அறிவிப்பே என்பதற்கான காரணங்களைப் பின்னர் விவரிக்கிறேன். மேலும் அக்பர் 1562-ஆம் வருடம் ஹிந்துக்களை போர்க் கைதிகளாகப் பிடிக்கக் கூடாது என்கிற சட்டத்தையும், 1563-ஆம் வருடம் கோவில்களுக்குப் புனிதப் பயணம் செல்லும் ஹிந்துக்கள் மீதான வரியை நீக்குவதாகவும் அறிவிக்கிறார். அதுவும் பொய்யானதொரு தகவலே.

1564 :

அக்பரின் தாய் மாமனான க்வாஜா முவாஸம் (அக்பரின் தாயாரான ஹமீதாபானு பேகத்தின் சகோதரன்) அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். அக்பர் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையின் நிலவறையில் அடைக்கிறார். க்வாஜா முவாஸம் மனம் பிறழ்ந்து, பைத்தியம் பிடித்து சிறையிலேயே இறக்கிறார்.

செப்டம்பர் 1564 :

காண்டேஷ் நாட்டை ஆண்ட மிர்ஸா முபாரக் ஷாவை தோற்கடிக்கும் அக்பர் அவரது மகளை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார். திருமணம் எதுவும் செய்து கொள்ளாமலேயே அந்த அப்பாவிப் பெண் அக்பரின் அலியான இட்டிமத்கானினால் அக்பரின் அந்தப்புரத்திற்குத் தூக்கிச் செல்லப்படுகிறாள்.

ஜுலை 1564 :

மால்வா பகுதியின் ராணுவ கவர்னராக இருந்த அப்துல்லாகான் உஸ்பெக் அக்பருக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார். அக்பருக்கு எதிரான ஆறாவது புரட்சி அது.

அக்டோபர் 1564 :

ஆக்ராவுக்கு அருகில் நாகர்செய்ன் என்னும் புதிய நகரத்தை நிர்மாணிக்க அக்பர் உத்தரவிடுகிறார். அதன்படியே பெரும் கட்டிடங்களும், பூங்காக்களும், கட்டிடங்களும், தோரண வாயில்களும் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறு எழுதப்படுகிறது. ஆனால் உண்மையில்  அபபடி ஒரு நகரம் கட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. அக்பர் ஒரு செங்கல்லைக் கூட அந்த நகரைக் கட்டச் செலவிடவில்லை. அக்பரின் வரலாற்றாசிரியர்கள் வழக்கம்போல்ப் புளுகி வைக்கிறார்கள். உண்மையில் அக்பர் கட்டியதாகச் சொல்லப்படும் எந்தவொரு நகரும், கட்டிடமும், கோட்டையும் ஹிந்து அரசர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவையே.

1564 :

அக்பரின் அரசவையிலிருந்த கான் ஜமான் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். அக்பருக்கு எதிரான ஏழாவது புரட்சி அது.

1564 :

அக்பர் அவரது தளபதியான ஆசாஃப் கானிடம், சிறப்பாக ஆளப்பட்டுவரும் ராணி துர்காவதியின் நாட்டைச் சிதறடித்து அழகியான அரசி துர்காவதியை தனது அந்தப்புரத்திற்குத் தூக்கி வரும்படி உத்தரவிடுகிறார்.

1565-66 :

ராணி துர்காவதியின் நாட்டைச் சூறையாடி அக்பரின் தளபதி ஆசஃப்கான் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். துர்காவதியின் அரண்மனையில் கைப்பற்றிய அளவற்ற செல்வத்தைத் தானே வைத்துக் கொள்வதற்குத் திட்டமிடுகிறான் ஆசஃப்கான்.

1567 :

காபூலை ஆண்டுகொண்டிருந்த அக்பரின் சகோதரனான முகமது ஹக்கீம், பஞ்சாபைத் தாக்குகிறார். அதனை அடக்குவதற்கு அக்பர் செல்கிறார். ஆக்ராவில் அக்பர் இல்லாததை உபயோகித்துக் கொள்ளும் மிர்ஸா வகுப்பினர் அக்பருக்கு எதிரான புரட்சியைத் துவங்க, அதனை அடக்க ஆக்ராவுக்கு விரைகிறார் அக்பர்.

ஏப்ரல் 1567 :

ஆக்ராவுக்குத் திரும்பும் வழியில் அக்பர் பஞ்சாபின் தானேஷ்வர் என்கிற இடத்தில் முகாமிடுகிறார். பஞ்சாபின் இரண்டு ஹிந்து வகுப்பினரான குருவும், புருவும் கோவிலின் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வதில் தங்களுக்குள் உள்ள சர்ச்சையை அக்பரிடம் முறையிடுகிறார்கள். அவர்கள் இருவரையும் இரண்டு பக்கமாகப் பிரித்து நிற்கவைக்கும் அக்பர் அவர்களுக்குக் கத்திகளையும், ஈட்டிகளையும், குறுவாள்களையும் கொடுத்து அவர்களை சண்டையிட வைக்கிறார். ஏறக்குறைய 800 பேர்களிருந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று மடிகிறார்கள். ஏதாவது ஒரு தரப்பில் ஆட்கள் குறைகையில் அக்பர் தனது படையிலிருந்த கொலைகார முஸ்லிம்களை அவர்கள் பகுதிக்கு அனுப்பி வைக்கிறார். இபபடியே மாற்றி மாற்றிச் செய்து அந்த 800 குருக்களும், புருக்களும் செத்து மடிகிறார்கள். அக்பர் அந்த “விளையாட்டை” மிகவும் ரசித்து மகிழ்ந்ததாக அவரின் அத்தனை வரலாற்றாசிரியர்களும் குறிப்பிடுகிறார்கள்.

மே 1567 :

இரண்டு வருடங்களுக்கும் மேலாக அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்து கொண்டிருந்த கான் ஜமானும் அவனது சகோதரனான பகதூரும் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவனுடன் பிடிபட்ட மற்றவர்கள் யானையின் கால்களில் இடறப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

மே-ஜுன் 1567 :

இந்தியாவின் செல்வவளம் வாய்ந்ததும், ஹிந்துக்களின் புனித நகரமுமான அலஹாபாதும், பனாரசும் மிகக் கொடூரமாக அக்பரால் தாக்கி அழிக்கப்படுகின்றன. அங்கிருந்தவர்கள் அக்பருக்கு அஞ்சி தப்பி ஓடுகிறார்கள்.

செப்டம்பர் 1567 :

அக்பர் சித்தூரைக் கைப்பற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார். அக்டோபர் 20-ஆம் தேதி ஏறக்குறைய 10 மைல்கள் தூரம் நீண்ட தனது படையணினருடன் (10 மைல்களா? பின்னர் விளக்குகிறேன்) சித்தூர் குன்றின் வடகிழக்கில் முகாமிட்டுத் தங்குகிறார்.

பிப்ரவரி 13, 1568 :

அக்பரின் கையில் சிக்கி அவரது முஸ்லிம் படையினரால் கற்பிழந்து, அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போவதனை விரும்பாத சித்தூர் ராஜபுத்திர வீரப்பெண்கள் பெரும் தீ மூட்டி அதில் குதித்து இறக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் சித்தூர் கோட்டைக்குள் புகும் அக்பர் அங்கிருக்கு அத்தனை பேர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஏறக்குறைய முப்பதினாயிரம் ஆண், பெண், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் எனக் கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகிறார்கள். அங்கு இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பூணூல் மட்டுமே ஏறக்குறைய எழுபத்தி நாலரை மாண்ட்கள் (1 maund = 37 kg) இருந்ததாகத் தெரிகிறது.

மார்ச் 1568 :

அக்பர் ஆக்ரா திரும்புகிறார். மிர்ஸா வகுப்பினர் மீண்டும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.

பிப்ரவரி 1569 :

ராஜபுத்திர சவுகான்களின் உட்பிரிவினரான ஹாடாவுக்குச் சொந்தமான ரன்தம்போர் கோட்டை அக்பரால் முற்றுகையிடப்படுகிறது. ஒரு மாதகால முற்றுகைக்குப் பின்னர் அதன் ஆளுனரான சுர்ஜன் அக்பரிடம் சரணடைகிறார்.

ஆகஸ்ட் 1569 :

பாண்டா மாவட்டத்தில் ராஜா ராம்சந்திற்குச் சொந்தமான கலன்ஜர் (kalanjar) கோட்டை கைப்பற்றப்படுகிறது. பிரபல சங்கீத வித்வானான தன்சேன் ராஜா ராம்சந்தின் அரசவைப்பாடகர். அக்பர் ஏராளமான பொக்கிஷங்களுடன் தான்சேனையும் கட்டித் தன்னுடன் இழுத்துச் செல்கிறார். செல்ல விருப்பமில்லாத தான்சேன் கண்ணீர் வடித்து துக்கத்துடன் அக்பருடன் செல்கிறார்.  ராம்சந்திற்கு அலகாபாத்திற்கு அருகில் சிறிது நிலம் ஒதுக்கப்பட்டு அக்பருக்கு கப்பம் கட்டுகிற சிற்றரசராக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் 30, 1569 :

சலீம், எதிர்கால ஜஹாங்கீர், அக்பரின் மனைவியருள் ஒருவரான அம்பரைச் சேர்ந்த ராஜா பர்மாலின் மகளுக்குப் பிறக்கிறார். அக்பர் சம்பாரிலிருந்து அந்தப் பெண்மணியை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

பிப்ரவரி 28, 1572 :

இந்தியாவின் வீரப்புதல்வர்களில் ஒருவரான ராணா பிரதாப்பிற்கு கோகுண்டாவில், உதய்பூருக்கு 16 மைல்கள் வடக்கிலிருக்கும், வைத்து மன்னராக அறிவிக்கப்படுகிறார். சிறிது காலம் கழித்து கும்பல்மீர் கோட்டையில் அவருக்கு முடிசூட்டப்படுகிறது.

நவம்பர் 1572 :

குஜராத்தின் சுல்தானான முஸாஃபர் ஷா பிடிக்கப்பட்டு அவரது ராஜ்ஜியம் முகலாய ராஜ்ஜியத்துடன் இணைக்கப்படுகிறது. முஸாஃப்ர் ஷாவின் படைகள் யானையின் காலிலிடப்பட்டு நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.

காம்பேயின் முதல் முறையாக கடலைப் பார்க்கிறார் அக்பர். அக்பரது பெற்றோர்களின் வளர்ப்பு மகனான கான்-இ-ஆஸம் (மிர்ஸா அஜிஸ் கோகா) குஜராத்தின் கவர்னராக அறிவிக்கப்படுகிறார். இப்ராஹிம் ஹுசைன் என்பவரின் தலைமையில் மிர்ஸாக்கள் மீண்டும் புரட்சி செய்கிறார்கள்.

பிப்ரவரி 26, 1573 :

சூரத்தின் புரட்சிக்காரர்கள் கைப்பற்றப்படுகிறார்கள். அவர்களின் தலைவனான ஹம்ஜபானின் நாக்கு துண்டிக்கப்படுகிறது. ஹம்ஜபான் அக்பரின் தகப்பனான ஹுமாயுனிடம் பணிபுரிந்தவன்.

செப்டம்பர் 2, 1573 :

மிர்ஸாக்களுக்கு எதிரான அகமதாபாத் போர் நடக்கிறது. பிடிபட்டவர்களின் தலைகள் வெட்டப்பட்டு அவர்களின் தலைகளினால் கோபுரம் அமைக்கப்படுகிறது.

(தொடரும்)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் எனும் கயவன் – 3

 

மூலம்: பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகம்

தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி… 

1573-1574 :

அக்பரின் அரசவையில் இருந்த தோடர்மல் சொன்ன யோசனையை ஏற்று அக்பர் முகலாய சாம்ராஜ்யத்தில் இருக்கிற அத்தனை குதிரைகளுக்கும் கட்டாய ராஜ முத்திரை இட வேண்டும் என உத்தரவிடுகிறார். இதன்படி குதிரை வைத்திருக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் அரசனுக்கு அடிமையாகி விடுவான் என்பதுடன் அக்பர் அழைக்கும் பொழுதெல்லாம் வருவதற்குமான கட்டாயத்திற்குள்ளாவான்.

மார்ச் 3, 1575 :

வங்காளம், ஒரிஸ்ஸா, பீஹார் பகுதிகளை ஆண்ட ஆப்கானியான தாவூதுக்கு எதிராக துகாரோய் என்னுமிடத்தில் நடந்த போரில் அவன் தோற்கடிக்கப்படுகிறான். தோற்றவர்களின் தலைகளை வெட்டி கோபுரமாக அடுக்குகிறார்கள். அந்தக் கோபுரம் எட்டு மினார்களின் உயரத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

1574-75 :

குஜராத்தில் மிகக் கடுமையான பஞ்சம் தலைதூக்குகிறது.

ஜூலை 12, 1576 :

ஆப்கானிய அரசன் தாவூத் வங்காளத்தில் ராஜமஹால் என்னுமிடத்தில் நடந்த போரில் கொல்லப்படுகிறான்.

1572-1597 :

ஹிந்துஸ்தானத்தின் சிறந்த வீரப்புதல்வர்களில் ஒருவரான ராணா பிரதாப்புடன் அக்பர் நிகழ்த்திய போர்கள் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்தன. இறுதியில் ராணாவை வெல்ல முடியாமல் அக்பர் தன் படைகளை திருப்பி அழைத்துக் கொள்கிறார். ராணா பிரதாப்பின் ஆட்சி செய்த நிலப்பரப்பின் அளவு குறைந்தாலும் இறுதியில் அவரே வெல்கிறார்.

ஜூன் 1576 :

ராணா பிரதாப்புக்கும் அக்பருக்கும் நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போர் நடைபெற்றது. யானையின் மீது அமர்ந்து அந்தப் போரில் பங்கேற்ற ஜஹாங்கிரைக் கொல்வதற்காக ராணா தனைது நீண்ட ஈட்டியுடன் பாய்கிறார். ஜஹாங்கிர் மாவுத்தனின் பின்னால் ஒளிந்து கொள்ள மாவுத்தன் கொல்லப்படுகிறான்.

நவம்பர் 1579 :

போர்த்துக்கிசிய பாதிரிகள் கோவாவிலிருந்து புறப்பட்டு அக்பரை ஃபதேபூர்சிக்ரியில் பிப்ரவரி 28, 1580 அன்று சந்திக்கிறார்கள். அக்பருக்கு ஒரு பைபிளை பரிசாக அளிக்கிறார்கள். அதனை வாங்கிக் கொள்ளும் அக்பர் சில வருடங்களுக்குப் பின்னர் அவர்களிடமே அதனைத் திருப்பித் தந்துவிட்டார்.

பிப்ரவரி 8, 1581 :

வடமேற்கு மாகாணங்களில் நிகழ்ந்த கலவரத்தை அடக்கப் புறப்படுகிறார் அக்பர். அக்பரிடம் நிதி மந்திரியாக இருந்த ஷா மன்சூர் அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். அக்பரை எதிர்த்து புரட்சி செய்தவர்களில் 12வது நபர் அவர். தானேஷ்வருக்கும் அம்பாலாவுக்கும் இடைப்பட்ட ஷாபாத் என்கிற இடத்தில் வைத்து ஷா மன்சூரை தூக்கிலிடுகிறார் அக்பர். அவரிடம் வரலாற்றாசிரியராக பணியாற்றிய அபுல் ஃபசலே அவரைத் தூக்கிலிடுபவராக பணியைச் செய்கிறார்.

ஆகஸ்ட் 9, 1581 :

காபூலுக்குள் நுழையும் அக்பரை எதிர்த்து நிற்கத் துணிவின்றி அவரது சகோதரனான (half-brother) முகமது ஹக்கீம் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். காபூலில் வெறும் ஆறு நாட்கள் மட்டுமே தங்கியிருக்கும் அக்பர் மீண்டும் ஃபதேபூர்சிக்ரி நோக்கித் திரும்புகிறார்.

1581-82 :

அக்பருடன் கருத்து வேற்றுமை கொண்ட பல ஷேக்குகளும், ஃப்க்கீர்களும் நாடுகடத்தப்படுகிறார்கள். பெரும்பாலனவர்கள் காந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டு பண்டமாற்று முறையில் குதிரைகளுக்கு பதிலாக அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்.

மார்ச் 1582:

அக்பரின் அரசவையில் இருந்த மாசூம்கான் ஃபர்ஹான்குடி அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். பின்னர் அக்பருடன் சமாதானாமாகும் ஃபர்ஹான்குடியை ஒன்றும் செய்யக்க்கூடாது என அக்பரின் தாயார் கேட்டுக் கொள்கிறார். இருப்பினும் வீடு திரும்பும் வழியில் வைத்து ஃபர்ஹான்குடி படுகொலை செய்யப்படுகிறார்.

1582 :

ஜைன முனி ஹிர்விஜயசூரி அக்பரின் அரசவையில் சில நாட்கள் தங்குகிறார்.

ஏப்ரல் 15, 1582 :

போர்ச்சுக்கீசியர்களின் வசமிருந்த டாமன் அக்பரின் படைகளினால் தாக்கப்பட்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் இன்னொரு கோட்டையான டையூ அக்பரின் படைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்துகிறது.

ஆகஸ்ட் 4, 1582 :

இஸ்லாமியர்களாக மதம் மாற மறுத்த இரண்டு கிறிஸ்தவ இளைஞர்கள் சூரத்தில் கொல்லப்படுகிறார்கள். அதற்கு முன்பு பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அவர்களை விடுவிப்பதற்காக அளிக்கப்பட்ட ஆயிரம் தங்கக்காசுகளை ஏற்க பிணியாளர்கள் மறுத்துவிட்டார்கள்.

ஆகஸ்ட் 1582 :

அக்பரின் அரசவைக்கு காதுகளற்ற ஒரு மனிதனை அழைத்து வந்தார்கள். காது துவாரம் எதுவும் அவனுக்கு இல்லையென்றாலும் அவனால் பிறர் சொல்வதனைக் கேட்க முடிந்தது. அக்பரின் படிப்பறிவற்ற மூளைக்கு அது அதிசயமாகப் பட்டது. எனவே அதனை சோதனை செய்து பார்க்க முடிவெடுத்த அக்பர் தாயிடம் பால் குடிக்கும்  இளம் குழந்தைகளை எந்த சத்தமும் இல்லாமல் வளர்த்தால் என்னவாகும் என்று ஆராய முடிவெடுத்தார்.

அதன்படி பால்குடிக்கும் வயதுடைய இருபது குழந்தைகளை அவர்களின் தாய்மார்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்து எந்தவிதமான சத்தமும் கேட்காத தூரப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் வைத்து வளர்க்க உத்தரவிடுகிறார். அந்தக் குழந்தைகளை கவனிப்பதற்காக  காது கேளாதா, வாய் பேசாத தாதிகள் அமர்த்தப்பட்டார்கள். யாரும் எந்த சத்தமும் எழுப்பக்கூடாது என கடுமையான உத்தரவு இடப்பட்டது. அந்த வீட்டிற்கு “செவிட்டு வீடு” எனவும் பெயரிடப்பட்டது. மனித சத்தமே கேட்காத விதத்தில் வளர்ந்த அந்தக் குழந்தைகள் அத்தனை பேர்களும் நான்கே வருடத்தில் காது கேட்காத, வாய் பேசாத ஊமைகளாகிவிட்டார்கள் என்கிறார் பதானி. பின்னர் அங்கிருந்த பல குழந்தைகள் இறந்துவிட்டார்கள் என மேலும் சொல்கிறார்.

அக்டோபர் 15, 1582 :

ஆறுமைல் நீளமும், இரண்டு மைல் அகலமும் கொண்ட ஃபதேபூர்சிக்ரியின் ஏரி உடைகிறது. தனது சகாக்களுடன் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் அக்பர் வெள்ளமெனப் பாய்ந்து வந்த நீரில் மூழ்கி இறப்பதிலிருந்து மயிரிழையில் தப்புகிறார். ஏரி நீர் முற்றிலும் வடிந்து காய்ந்துவிட்டது. நீரில்லாத ஃபதேபூர் சிக்ரியில் வாழமுடியாத அக்பர் 1585-ஆம் வருடம் அந்த நகரைக் கைவிட்டுவிட்டு ஆக்ராவுக்குத் திரும்புகிறார். அதேவருடம் குஜராத்தை ஆண்டுவந்த முகலாய கவர்னர் இட்டிமத்கான் அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். புரட்சி ஒடுக்காப்பட்டு மீண்டும் இட்டிமத்கானிடமே குஜராத் ஒப்படைக்கப்படுகிறது.

1583 :

அக்பர் தன்னிடம் பணிபுரிந்த ஒரு ராஜபுத்திர இளவரசனை வெளியூருக்குப் பணி நிமித்தமாக அனுப்பி வைக்கிறார். அரண்மனையை விட்டு வெளியே வந்த சிறிது தூரத்திலேயே அந்த இளவரசன் செத்துப் போனான். உடன்கட்டை ஏற முயன்ற அவனது அழகான  இளம் மனைவியை அக்பர் காப்பாற்றி தனது அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்கிறார். அனேகமாக அந்த இளவரசன் அக்பராலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அழகான அவன் மனைவி மீது அக்பரின் கண்கள் பட்டதால் அந்த இளவரசன் தேவையின்றி கொல்லப்பட்டான்.

அக்டோபர் 8, 1583:

பக்ரீத்தின் போது நடந்த போலோ விளையாட்டில் ராஜா பீர்பல் குதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்டு மயக்கமடைகிறார். அக்பர் அவர் மீது காற்றை ஊதி அவரை மயக்கத்திலிருந்து தெளிவிக்கிறார். அக்பருக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மற்றவர்களை நம்பச் செய்வதற்காக திட்டமிட்டே நடந்த நாடகம் இதுவாக இருக்க வேண்டும்.

நவம்பர் 1583 :

அக்பர் அலஹாபாத் நகரத்தின் கோட்டையைக் கட்டி அந்த நகரத்தை உருவாக்கியதகவும், பின்னர் அந்த நகரத்துக்குள் பல மாளிகைகளைக் கட்டியதாகவும் அவரது அமைச்சக சகாக்கள் சொல்கிறார்கள். ஆனால் பிரயாகை நகரம் (அலஹாபாத்) உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று என்கிற சமாச்சாரத்தை மிக வசயாக மறந்துவிட்டார்கள். அதனையே இந்திய வரலாற்றாசிரியர்களும் பின்பற்றி அதனை இன்றும் பள்ளிகளில் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா ராமச்சந்திரபாதாவின் நாடு அக்பரின் இஸ்லாமியப்படைகளினால் மூன்றாவது முறையாக சூறையாடப்படுகிறது. ராமச்சந்திரபாதா சரணடைவதுடன் ஏராளமான செல்வத்தையும் அக்பரிடம் ஒப்படைக்கிறார். இதேபோல் 1563-ஆம் வருடம் நிகழ்ந்ததொரு படையெடுப்பில் அவரது அரசவையில் இருந்த இசைமேதே தான்சேனை அக்பர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.

முகலாயர்கள் வசமிருந்த பகுதிகளில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

1584 :

அக்பரின் கேடுகெட்ட செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அக்பரின் அரசவையில் ஓவியனாக இருந்த ஹிந்து தஸ்வந்த் தன்னைத்தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்துகொள்கிறார்.

ஜுலை 15, 1584 :

அக்பருக்கு மிகப்பிடித்தவராக இருந்த காஸிகான் பதக்ஷானி அயோத்தியாவில் இறக்கிறார். மசூதிகளாக மாற்றப்பட்ட அயோத்தியாவின் பல கோவில்களைப் போல, பதக்ஷாவை புதைத்த கோவிலும் மசூதியாக மாற்றப்படுகிறது.

பிப்ரவரி 13, 1585 :

இளவரசர் சலிம் (ஜஹாங்கிர்) ராஜா மான்சிங்கின் சகோதரியான மன்பாயை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மகள் சுல்த்துனிஸ்ஸா பேகம் திருமணம் செய்துகொள்ளாமலேயே 60 வருடங்கள் வாழ்ந்து மறைந்தாள்.1587-ஆம் வருடம் பிறந்த மகன் குஸ்ரூ ஜஹாங்கிருக்கு எதிராக புரட்சி செய்து அலஹாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1622-ல் குஸ்ரூ மரணமடைந்தார். மன்பாய் 1604-ஆம் வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னனியில் அக்பரும், ஜ்ஹாங்கிரும் இருந்தார்கள்.

ஜனவரி 22, 1586 :

ஆப்கானிய யூசுப்ஸாய்களுக்கு எதிரான போரில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு பிர்பாலுக்கு ஆணையிடுகிறார். பீர்பால் போரில் கொல்லப்படுகிறார். 1528-ஆம் வருடம் கல்பி நகரில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர் பீர்பல். அவரது உண்மையான பெயர் மகேஷ்தாஸ் என்பதாகும்.

யூசுப்ஸாய்களை அடக்குவதற்காக ராஜா தோடர்மல் தலைமையில் இன்னொரு படை அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் கோபமடையும் யூசுப்ஸாய்கள் முகலாயப்படைகளுக்கு எதிராக வெறியுடன் மோதுகிறார்கள். அப்போது காபூலில் இருந்த மான்சிங்கும் போரில் கலந்து கொள்ள உத்தரவிடப்படுகிறார். பல ஆப்கானியர்கள் கொல்லப்படுகிறார்கள். பிடிபட்டவர்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். இருப்பினும் ஆப்கானிய கலகம் 1600-ஆம் வருடத்தினையும் தாண்டி நிகழ்கிறது.

ஜூன் 26, 1586 :

பிகானீர் அரசரான ராய்சிங்கின் மகள் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு ஜஹாங்கிரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.

அக்டோபர் 6, 1586 :

அக்பரின் படை காசிம்கானின் தலைமையில் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் புகுகிறது. முகலாயப் படைகளால் கொலையும், கொள்ளையும், வன்புணர்வும், சித்திரவதைகளும் நடத்தப்படுகின்றன. காஷ்மீரை ஆண்ட யாகூப்கானும், யூசுப்கானும் கொரில்லா போர்தொடுத்து முகலாயப்படைகளை தாக்குகிறார்கள்.

1587 முற்பகுதி :

தனது அரசவைக்கு வரும் ஒவ்வொரு குடிமகனும் அவனது தகுதிக்கு ஏற்ப தனக்கு பரிசுகள் கொடுக்க வேண்டும் அல்லது அவனது வயதின் எண்ணிக்கைக்க்கு ஏற்ப வெள்ளி அல்லது தங்கக்காசுகள் தரவேண்டும் என்கிற உத்தரவை அக்பர் விதிக்கிறார்.

ஜூலை 1589 :

யாகூப்கான் சரணடைகிறார். யூசுப்கான் விடுதலை செய்யப்பட்டு காஷ்மீர் முகலாய அரசுடன் இணைக்கப்படுகிறது. அக்பர் யூசுப்கானை ஒரிஸ்ஸாவிற்கு அங்கு ஆண்டு கொண்டிருந்த ஆப்கானிகளுக்கு எதிராகப் போர்புரிய அனுப்பி வைக்கிறார். யாகூப்கானின் வீரத்தை மெச்சிய அக்பர் அவருக்கு விஷம் தடவிய உடை ஒன்றை அனுப்பி வைக்கிறார். அதனை அணிந்த சில நிமிடங்களில் யாகூப்கான் செத்து வீழ்கிறான்.

இந்த காலகட்டத்தில் லாகூரில் இருக்கும் அக்பர், அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் ஹிந்து அரசர்களை மிரட்டி பணியவைக்கிறார். நாகர்கோட்டின் ராஜா பிபிசந்த், ஜம்முவின் பரசுராம், மாவ்வின் பாசு, அனுராதா ஜெய்ஸ்வால், கால்பூரின் ராஜா திலா…எனப் பல ஹிந்து அரசர்கள் அக்பருக்கு அடிபணிகிறார்கள்.

ஜனவரி 1, 1592 :

சிறிய மற்றும் பெரிய திபெத் நாடுகள் அக்பரின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள வைக்கப்படுகின்றன. சிறிய திபெத்தின் அரசனான அலிராய் அவரது மகளை ஜஹாங்கிரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க வற்புறுத்தப்படுகிறார். அதன்படி அந்த அப்பாவிப் பெண் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு ஜஹாங்கிரின் அந்தப்புரத்தில் அடைக்கப்படுகிறாள்.

ஏப்ரல் 26, 1589 :

அக்பரின் அரசவைப் பாடகரான தான்சென் லாகூரில் இறக்கிறார். வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்ட நாளிலிருந்து இருபத்தேழு வருடங்கள் மனமுடைந்தவராக வாழ்ந்த அவரது வாழ்வு முடிவுக்கு வருகிறது. அவரது உடல் முதலில் லாகூரில் புதைக்கப்ட்டு பின்னர் குவாலியருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

ஏப்ரல் 28, 1589 :

அக்பர் முதல் முறையாக காஷ்மீருக்குச் செல்கிறார்.

ஜூன் 5, 1589 :

காஷ்மீரை அடையும் அக்பர் அங்கு 36 நாட்கள் தங்குகிறார். அங்கிருக்கையில் அக்பருக்கும் அவரது மகனான ஜஹாங்கிருக்கும் மனஸ்தாபம் முற்றுகிறது. அக்பர் ஜஹாங்கிரைப் பார்க்க மறுத்ததால் அச்சமடையும் ஜஹாங்கிர் தனது கூடாரத்தை விட்டு வெளியே வராமலேயே அடைந்து கிடக்கிறார். அக்பரின் அருகாமையினால் அச்சமடையும் சிறிய மற்றும் பெரிய திபெத் நாட்டினர் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை அனுப்பி வைக்கிறார்கள்.

அக்டோபர் 3, 1589 :

அக்பர் காபூலை அடைந்து அங்கு 48 நாட்கள் தங்குகிறார். அங்கிருக்கையில் தோடர்மல்லின் ராஜினாமா கடிதம் அவருக்குக் கிடைக்கிறது. தோடர்மல் சாமியாராகி ஹரித்வாரத்திற்குச் சென்றுவிட்டார். எனினும் அவரை மீண்டும் அழைத்து வந்து அவரை அதே பதவியில் அமர்த்துகிறார்கள்.

நவம்பர் 9, 1589 :

ராஜா தோடர்மல்  லாகூரில் மரணமடைகிறார்.

மே 22, 1599 :

இளவரசர் முராத்தின் கட்டற்ற மதுவருந்தும் பழக்கத்தினாலும், போதை மருந்து உட்கொண்டதாலும் கோமா நிலைக்குச் சென்று பின்னர் தவுலதாபாதின் பூர்ணா நதிக்கரையில் மரணமடைகிறார். முராத்தின் பொறுப்பில் நிகழ்ந்து கொண்டிருந்த தக்காணப் போருக்குச் செல்லும்படு ஜஹாங்கிரிடம் உத்தரவிடுகிறார் அக்பர். ஜஹாங்கிர் அதனை ஏற்க மறுக்கிறார்.

போர்த்துக்கீசிய பாதிரி ஜெரோம் சேவியர் தான் போதுமான அளவு பாரசீகம் படித்திருப்பதாகவும் தன்னை மதப்பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அக்பரிடம் கோரிகை வைக்கிறார். அக்பர் அவரிடம் உங்கள் மதத்தைப் பற்றி இங்கு பேசவிட்டதே அதிகம் என்று சொல்லி அவரை மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியளிக்க மறுக்கிறார்.

ஃபதேபுர் சிக்ரி

ஆகஸ்ட் 1, 1601 :

அக்பர் ஃப்தேபூர்சிரிக்குச் சென்று அங்கு 11 நாட்கள் தங்குகிறார். இதே வேளையில் அவரது 31 வயதான அவரது மகன் ஜஹாங்கிர் அக்பருக்கு எதிரான புரட்சியில் ஈடுபடுகிறார். அவரது இருபதாவது வயதிலிருந்தே அக்பருடனான உறவு மிகவு சீர்கெடத் துவங்கியிருந்தது. அதற்கு முன்னதாக ஜூலை 8, 1589-ஆம் தேதி அக்பர் வயிற்று வலியால் துடிக்கும் அக்பர் தனது மகன் ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்துவிட்டார் என்று புலம்புகிறார். அவரது சமையற்காரரான ஹக்கிம் ஹுமாம் (நவரத்தினங்களில் ஒருவர்) ஜஹாங்கிரின் பேச்சைக்கேட்டு விஷம் வைத்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறார். அக்பர் தக்காணத்திற்குப் படையெடுத்துச் சென்றிருந்த வேளையில் அஜ்மீரிலிருந்து ஆக்ராவுக்குப் படையெடுத்து வரும் ஜஹாங்கிர் பின்னர் அங்கிருந்து அலகாபாதிற்குச் சென்று தன்னை ஒரு அரசனாக அறிவித்துக் கொள்கிறார்.

ஆகஸ்ட் 9, 1602 :

அக்பரின் “புகழ்”பெற்ற வரலாற்றாசிரியரான அபுல் ஃபைசல் ஜஹாங்கிரின் ஆணையின்படி குவாலியருக்கில் வைத்துக் கொல்லப்படுகிறார். அவரது தலை ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜஹாங்கிர் அந்தத் தலையை குப்பையில் தூக்கிப் போடுகிறார்.

1604 :

ஜஹாங்கிரின் மனைவியும், மான்சிங்கின் சகோதரியுமான  மன்பாய் கொலை செய்யப்படுகிறார். இருந்தாலும் அது ஒரு தற்கொலை என வெளியில் அறிவிக்கப்படுகிறது.

மதிய உறக்கத்திற்காக தனது படுக்கையறைக்கு விரையும் அக்பர் அங்கு தனது வேலையாள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதனைக் காண்கிறார். கோபமடையும் அக்பர் அவனை ஆக்ராக் கோட்டையின் மீதிருந்து தூக்கியெறிய உத்தரவிடுகிறார். அதன்படியே அவனைத் தூக்கி எறிந்து கொல்கிறார்கள்.

அக்பருக்கு சிறிதும் குறையாத சேடிஸ்ட்டான ஜஹாங்கிர் தனது எழுத்தனின் தோலை உயிருடன் உரித்துக் கொல்கிறார். அவரது இன்னொரு வேலையாள் காயடிக்கப்பட, மற்றொரு வேலையாளை அடித்தே கொல்கிறார்.

செப்டம்பர் 22, 1605 :

சிக்கந்தரா கோட்டையில் அக்பரின் உடல் நிலை சீர்கெடுகிறது.

அக்டோபர் 15, 1605 :

தனது 63 வயதில் அக்பர் மரணமடைகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் எனும் கயவன் – 4

 

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

அக்பரின் முன்னோர்கள் காட்டுமிராண்டித்தனமான கொடியவர்கள். அக்பருக்குப் பின் வந்த ஜஹாங்கிர், ஷாஜஹான், அவ்ரங்க்ஸிப் போன்ற அவரது வாரிசுகளும் சாமான்யமானவர்களில்லை. ஆனால் அக்பரை ஒரு நல்ல அரசராக, நீதி வழுவாத நேர்மையாளனாக, அன்பும் கனிவும் உடையவராகத்தான் இந்தியர்களான நாம் அறிந்திருக்கிறோம். எனவே உண்மையான அக்பரைக் குறித்து,  அதாவது அக்பரின் கொடுங்கோன்மையைக் குறித்து, அவரின் துரோகங்களைப் குறித்து, இந்தியர்களுக்கு குறிப்பாக இந்திய ஹிந்துக்களுக்கு அவர் இழைத்த கொடுமையான இரக்கமற்ற சித்திரவதைகளைப் குறித்தும் இனிவரும் கட்டுரைகளில் விளக்கமாக ஆராய முயல்வோம்.

காட்டுமிராண்டித்தனமான சூழலில் கல்வியறிவற்று வளர்க்கப்பட்ட அக்பரின் வாழ்வு ஒரு பெரும் காமுகனாக, குடிகாரனாக, போதைமருந்திற்கு அடிமையானவராகவே இருந்தது. இந்தச் சூழலில் வளர்ந்த ஒருமனிதன் ஒருபோதும்  நல்லொழுக்கம் மிகுந்த ஒருவனாக வாழ்ந்திருக்கவே இயலாது என்பதுதான் உண்மை. நமக்கெல்லாம் கற்பிக்கப்பட்டது போல அவர் உண்மையிலேயே நல்லொழுக்கம் மிகுந்த ஒருவராக இருந்திருந்தால் அவரது மகன்களும்,  பேரன்களும் ஒருபோதும் கொடுஞ்செயல்கள் புரிந்த வன்முறையாளர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதினையும் நாம் உணர வேண்டும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக ஆயிரம் ஆண்டுகள் அன்னியனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தில் மத ஒற்றுமையைப் பேணிக்காப்பது என்கிற பெயரிலும், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் உண்மைகளை மறைத்து பொய்யான வரலாற்றை எழுதுவது வழக்கமாகியிருக்கிறது. உண்மையான வரலாற்றை உள்ளது உள்ளபடியே எழுதுவது என்பது ஒரு தெய்வ குற்றத்திற்கு நிகராகப் பார்க்கப்படுகிறது என்பதனையும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே இந்திய வரலாறு ஏராளமான ஒழுங்கற்ற பகுதிகளையுடைய, முரண்பாடான, மூடத்தனமான, அபத்தமான ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத முடிவுகளை உடையதாக எழுதப்பட்டிருக்கிறது. எனவே இதனை ஆராயப் புகும் ஒவ்வொருவரின் முன்பும் இந்தப் போலித்தனமான வரலாறு சிதறிச் சின்னாபின்னமாவதனையும் நாம் கண்டிருக்கிறோம். அக்பரைக் குறித்து கவனமாகப் பின்னப்பட்ட கதையும் அதில் ஒன்று.

இந்தியாவில் மதச் சமநிலையைப் பேணுவது என்கிற பெயரில் இந்திய வரலாற்றாசிரியர்கள், குறிப்பாக இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், அக்பரை ஒரு பேரரசராக, நீதிமானாக, சிறந்த நிர்வாகியாக சித்தரித்ததுடன், அசோகர் போன்ற ஒரு ஹிந்து பேரரசனுக்கு நிகராகப் புகழ்வது என ஒரு வரைமுறையற்ற பொய்களால் நிறைத்திருக்கிறார்கள்.

அக்பர் அவரது தந்தை வழியில் பெரும் கொலைகாரனான தைமூரையும், தாய் வழியில் அவனை விடவும் பெரும் கொலைகாரனான செங்கிஸ்கானின் வழியில் வந்தவர். அக்பரின் பாட்டனான பாபர், கிழக்கு பாரசீகத்தின் ஒரு சிறு பகுதியாக இருந்த ஃபர்கானாவை ஆண்ட உமர் ஷெய்க்கின் மூத்தமகன். உமர் ஷெய்க்கின் தகப்பனான அபு சையத் தைமூரின் கொள்ளுப் பேரன். உமர் ஷெய்க்கின் முதல் மனைவியும் பாபரின் தாயுமான குட்லுங் நிகார் கானூம், சக்ட்டாய்கானின் மகனான யூனஸ்கானின் இரண்டாவது மகள். சக்ட்டாய்கான் மங்கோலியப் பேரரசரரான செங்கிஸ்கானின் இரண்டாவது மகன்.

அக்பரின் பாட்டனான பாபர் ஒரு ஆட்கொல்லியைப் போல பொதுமக்களால் அஞ்சப்பட்டவன். பாபர் வரும் வழியில் இருந்த ஜனங்கள் பாபரைக் கண்டதும் அஞ்சிச் சிதறி ஓடினார்கள். அக்பரும் பாபருக்கு எந்த விதத்திலும் சளைத்தவரில்லை. வேட்டைக்காரச் சிறுத்தை போல அப்பாவிகளை வேட்டையாடிக் கொல்வதனை ஒரு வழக்கமாக வைத்திருந்த அக்பரைக் கண்டவர்களும் அவருக்கு அஞ்சி விலகி ஓடினார்கள்.

வரலாற்றாசிரிய ஷெலத் பாபரைக் குறித்துச் சொல்கையில், “பாபர் திபல்ப்பூர் நகரைக் கைப்பற்றி அந்தக் கோட்டையில் இருந்த அத்தனை பேர்களையும் வாளுக்கு இறையாக்கினார். பாபரி முன்னனிப்படைகள் தில்லியை நோக்கி முன்னேறி இப்ராஹிம் லோடியின் படைகளைக் கைப்பற்றி அத்தனை பேர்களையும் கொன்று குவித்தார்கள்”. அதனைக் குறித்து பாபர், “நாங்கள் கோடைகாலத்தில் ஆக்ராவை நோக்கி வந்தோம். ஆக்ராவாசிகள் அத்தனை பேர்களும் அச்சத்துடன் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். நாங்கள் உண்பதற்கு உணவோ அல்லது குதிரைகளுக்குக் கொடுப்பதற்குச் சோளமோ கிடைக்கவில்லை. எங்கள் மீது வெறுப்பும், சினமும் கொண்ட அந்தப் பகுதி மக்கள் சாலைகளில் போவோர் வருவோரைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் பலரைப் பிடித்து கொலை செய்தபின்னர் அந்த வழக்கம் நின்றது” என்கிறார்.

தான் கொலை செய்பவர்களின் தலைகளைக் கொய்து அதனை ஒரு கோபுரமாக அடுக்கிப் பார்க்கும் வழக்கம் பாபருக்கு இருந்தது. அதனைக் குறித்து எழுதவரும் வரலாற்றாசிரியர்  கர்னல் டோட், பாபர் ராணா சங்காவை ஃபதேபூர் சிக்ரியில் தோற்கடித்த பின்னர் தோற்றவர்களின் தலைகளினால் அமைக்கப்பட்ட கோபுரமானது ஒரு சிறு மலையைப் போலத் தோற்றமளித்ததாக எழுதியிருப்பதனைச் சுட்டிக் காட்டுகிறார். பாபர் அந்த இடத்திலேயே தனக்கு காஜி  – Gazi (காஃபிர்களைக் கொல்பவன்)எனப் பட்டம் சூட்டிக் கொண்டார்.

பாபர் தன்னை ஒரு ஓரினப்புணர்ச்சியாளனாக அறிவித்துக் கொண்டவர். பாபரைக் குறித்து பிறர் சொல்லும் குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கையில் பாபர் ஒரு மூர்க்கன் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணமாகிறது. தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைக் குறிப்புகளாக எழுதும் பழக்கமுள்ள பாபரே தான் செய்த கொடூரங்களைக் குறித்து எழுதிவைத்திருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

“தாம்போல் போருக்குப் பின்னர் நிறையப் பேர்களை பிணைக்கைதிகளாகப் பிடிபட்டார்கள். அவர்கள் அத்தனை பேர்களின் தலைகளையும் வெட்டும்படி நான் உத்தரவிட்டேன். அதுவே எனது முதலாவது போரும் கூட. கோகாத் மற்றும் ஹங்கு போரில் சரணடைந்த ஆப்கானிகளின் தலைகளைத் துண்டித்து அந்தத் தலைகளைக் கொண்டு ஒரு பெரிய மினார் எழுப்பினோம். சங்கரைச் சேர்ந்த கிவி பழங்குடியினரின் கோட்டை பிடிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் தலைகள் ஒரு குவியலாக குவித்து வைக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிச் சென்ற படைவீரர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் மூக்குகள் வெட்டப்பட்டன. இதுபோலவே பஞ்சூரும் பிடிக்கப்பட்டு அங்கிருந்தவர்களின் தலைகளைக் கொண்டு ஒரு தூண் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சகோராவைப் பிடிக்கும்படி ஹிந்து பெக்கிடம் உத்தரவிட்டேன். அவர்கள் பஞ்சகோராவை நெருங்குவதற்க்கு முன்பே அங்கிருந்தவர்கள் அத்தனை பேர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இதுபோலவே சையத்பூரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிம் போது மேலும் பலர் வாளுக்கு இரயாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இப்ராஹிம் லோடியின் ஆப்கானிய படைத்தலைவர்கள் லாகூர் பஜாரில் தோற்கடிக்கப்பட்டார்கள். லாகூர் பஜார் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. நாங்கள் முதன் முதலாக ஆக்ராவுக்கு வருகையில் அங்கிருந்தவர்கள் எங்கள் மீது அச்சமும், வெறுப்பும் கொண்டார்கள். என்னைப் பார்த்தவுடன் அவர்களின் படைத்தலைவர்களும், பொதுமக்களும் அங்கிருந்து அச்சத்துடன் தப்பி ஓடினார்கள். அதனைத் தொடர்ந்து நாங்கள் தில்லியை அடையும்வரை வழியிலிருந்த அத்தனை பேர்களும் எங்களுக்கு அடங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

பயானாவை நோக்கிச் சென்ற காசிமி அங்கே வெட்டிய பல தலைகளுடன் திரும்ப வந்தார். மேவாத்தின் அழிவுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் கைப்பற்றுமாறு முல்லா துருக்கி அலிக்கு உத்தரவிட்டேன். இதுபோலவே மக்பூர் திவானுக்கும் உத்தரவிடப்பட்டு மேவாவின் எல்லைப் பகுதிகளிலிருந்த பல நகரங்களை அழித்து, அங்கிருந்தவர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்ப்ட்டு கொண்டுவரப்பட்டார்கள்”.

இத்தகைய கொடூரரனான பாபரின் வழிவந்த அக்பரின் தகப்பனான ஹுமாயூன் பாபரைவிடவும் கொடூரமானவனாக இருந்தான். பாபருக்காவது இந்தியாவைப் பிடிக்க ரத்தமும், வியர்வையும் வடிக்க வேண்டிய சூழ் நிலை இருந்தது. ஆனால் பாபரின் வாரிசான ஹூமாயுனுக்கு இத்தனை பெரிய தேசமும், அதன் செல்வமும், வளமும் மிக எளிதாகக் கிடைத்த ஒன்று.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித்தும்  “ஹூமாயுன் ஓப்பியம் எனும் போதை மருந்திற்கு அடிமையானவர்” என்கிறார். ஹுமாயூன் ஒரு கொள்ளைக்காரனும் கூட. அதனைக் குறித்து அவரது வேலைக்காரனான ஜவஹர் சொல்கையில் “அக்பரின் பிறப்பின் போது ஹுமாயூன் நாடிழந்து மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். தனக்கு மகன் பிறந்த்தை எப்படிக் கொண்டாடுவது என்று அறியாமல் திகைத்த ஹுமாயுன் என்னிடம் அவர் கொடுத்து வைத்திருந்த 200 வெள்ளிக் காசுகளையும், வெள்ளிக் காப்பையும், சிறிதளவு வாசனை கஸ்தூரியையும் அவர் யாரிடம் கொள்ளையடித்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்” என்கிறார்.

ஆக, அக்பரின் பிறப்பிற்கு சிறிது முன்பாக ஹுமாயூன் யாரோ அப்பாவிகளைக் வழிப்பறி செய்து கொள்ளையடித்திருக்கிறார் என்பது நிருபணமாகிறது. தனக்கு மகன் பிறந்ததால் மகிழ்ச்சியடைந்தாலும் தன்னால் கொள்ளையடிக்கப் பட்டவர்களின் சாபத்திற்கு அஞ்சியே ஹுமாயூன் கொள்ளையடித்தவற்றை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் போல ஹுமாயூனும் பாபரின் அரியணைக்காக அவரது சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். பல தொடர்ந்த போர்களுக்குப் பின்னர் அவரது சகோதரனான கம்ரானைப் பிடிக்கும் ஹுமாயூன் அவரை மிகவும் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்கிறார். இதனைக் குறித்து வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் விளக்குகையில் “கடுமையான போரில் தோல்வியுரும் வேளையில் கம்ரன் பெண்ணைப் போல உடையணிந்து தப்பிக்க முயல்கையில் பிடிபடுகிறார். ஹுமாயூன் அவரைக் குருடாக்குவதுதான் சரியானது என முடிவெடுக்கிறார். அதன்பின் நடந்தவற்றை ஹுமாயூனின் வேலைக்காரனான ஜவஹர் விளக்குகிறார். ஹுமாயூன் தனது உடன்பிறந்த சகோதரனின் துன்பத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கம்ரனை கூடாரத்திலிருந்து வெளியே இழுத்து வந்த ஹுமாயூனின் சிப்பாய்களில் ஒருவன் கம்ரனின் கால்களின் மீது உட்கார்ந்து பிடித்துக் கொள்ள ஒரு கூர்மையான ஈட்டி அவரது கண்களில் பாய்ச்சப்படுகிறது. பின்னர் சிறிது எலுமிச்சை சாரும் உப்பும் அந்தக் கண்களின் மீது பூசப்பட்டு, ஒரு குதிரையின் மீது உட்காரவைத்து விரட்டியடிக்கிறார்கள். ஆனால் கம்ரனின் குடும்பத்தினர் ஹுமாயுனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பபடவில்லை”.

தில்லியில் உள்ள படாடோபமான ஹுமாயுன் கல்லறை (Humayun Tomb)

இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் ஹுமாயுனின் கொடூரமான மனப்பாங்கையும், அவரிடம் சிக்கிய அடுத்தவர்களின் கதியையும் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். சொந்தச் சகதோதரனுக்கு ஒரு உபகாரமாக அவனுடைய குடும்பத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதே பெரியதொரு விஷயமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் தன் கையில் சிக்கிய அத்தனை அன்னியப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதையே முழு நேரமும் செய்தவர் ஹுமாயுன்.

ஹுமாயுனின் தகப்பனான பாபரே அவனுடைய சகோதரர்களைக் கொல்லவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார் என்றால் எத்தனை பெரிய கொடூர மனமுடையவனாக ஹுமாயுன், அதாவது அக்பரின் தகப்பன், இருந்திருக்க வேண்டும்? இந்தியாவில் பிடிபட்ட செல்வத்தின் அளவைப் பார்த்த ஹுமாயூன் கிறுக்குப் பிடித்தவனைப் போல நடந்து கொண்டான் என பாபரே அவரது குறிப்புகளில் எழுதுகிறார். “ஹுமாயுன் தில்லிக்குச் சென்று பெரும் பொக்கிஷங்கள் நிறைந்த பல பெரிய வீடுகளைக் கைப்பற்றி அங்கிருந்த செல்வத்தைக் கொள்ளையடித்தான். அவனிடமிருந்து இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே நான் மிக மனவேதனையடைந்தேன். மிகக் கடுமையான வார்த்தைகளுடன் கூடியதொரு கடிதத்தை அவனுக்கு அனுப்பி வைத்தேன்”.

ஹுமாயுனின் கொடுங்கோன்மைக்கு ஒரு உதாரணத்தை முகலாய வரலாற்றாசிரியரான பதாயுனின் ஒரு குறிப்பு கூறுகிறது. “ஹுமாயுன் ஆக்ராவிற்கு வந்தவுடன் அங்கிருந்த மக்கள் அனைவரும் இனிமேல் தன் முன்னர் வருகையில் தரையில் முத்தமிட வேண்டும் எனப் புதியதொரு உத்தரவினைப் பிறப்பித்தார்”.

“ஹுமாயுன் ஒப்பியத்திற்கு (போதை மருந்து) அடிமையானதொரு மனிதன்” என்கிறார் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித். ஆக்ராவில் இருக்கையிலேயே தனது சகோதரனான கம்ரனுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பார்த்தவர் ஹுமாயுன். பாபர் அவரை அனுப்பி வைத்த பகுதிகளிலிருந்து அவரது உத்தரவில்லாமல் அங்கிருந்து வெளியேறியவர். இதனைக் கண்ட பாபர் கோபமுற்று அவரை சம்பல் பகுதி கவர்னராக நியமிக்கிறார். குஜராத்தைக் கைப்பற்றிய பிறகு ஹுமாயுன் நடத்திய வெறியாட்டங்கள் கொடுமையானவை.

அக்பரின் தகப்பனான ஹுமாயுன் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த, சிதைந்த மனோபாவமுடைய, சீர்கெட்ட கொடுஞ்செயல் புரிகிற, திருத்தவே முடியாத குடிகாரன். அதனையும் விட போதை மருந்திற்குக் அடிமையான, பிறரைக் கொடுமைப்படுத்தி இன்பம் காண்கிறதொரு சாடிஸ்ட் மனோபாவமுடைய மனிதன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் எனும் கயவன் – 5

 

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

போதை மருந்திற்கு அடிமையான அக்பரின் தகப்பன் ஹுமாயூன் ஆட்சிக்காலம் மிக மோசமான ஒன்றாக இருந்தது. வரலாற்றாசிரியர் ஷெலட் அதனைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்.

“ஆக்ராவுக்குத் திரும்பிய ஹுமாயூன் ஓப்பியம் என்கிற போதை மருந்தை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தார். அரசு நிர்வாக ஸ்தம்பித்தது.  ரூமிகானின் தலைமையில் சுனார் கோட்டையில் நுழைந்த ஹுமாயுனின் முகலாயப்படைகள் அங்கிருந்தவர்களைக் கொடூரமாகக் கொன்றார்கள். ஏறக்குறைய முன்னூறுக்கும் மேற்பட்ட ஆப்கானிய பீரங்கிப் படையினரின் கைகள் துண்டிக்கப்பட்டன. ஹுமாயுன் ரூபிகானை படைத்தலைவராக நியமிக்க அதனை எதிர்த்த பிற படைத்தலைவர்கள் ரூமிகானுக்கு விஷம் வைத்துக் கொன்றார்கள்.

கவுர் என்னுமிடத்தில் அந்தப்புரத்தில் நுழைந்த ஹுமாயுன் அதை விட்டு வெளியே வராமல் குடியும், கூத்துமாகக் காலத்தைக் கழித்தார். ஹுமாயுனினி நிர்வாகிகள் (அமீர்கள்) அவரின் இந்த நடத்தையினால் மிக அவநம்பிக்கையடைந்தார்கள். 1538-ஆம் வருட காலத்தில் ஹுமயுனின் நடத்தை மிக மோசமான காலத்தை எட்டியது. இருந்தாலும் அவரது இரு சகோதரர்களான ஹிண்டாலும், கம்ரனும் தனக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதனை அறிந்த ஹுமாயுன் வங்காளத்திலிருந்து ஆக்ரா திரும்பினார்”

இதற்கிடையில் முப்பத்து மூன்று வயதான ஹுமாயுனுக்கு 14 வயதான ஹமீதா பானுவின் மீது மோகம் பிறந்து அவளை கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். இன்றைய காலகட்டத்தில் ஒரு பதினாலு வயதுப் பெண்ணுடன் உடலுறவு கொள்வது குழந்தைகளை வன்புணர்வு செய்வதற்கு ஒப்பானது. ஹுமாயுனுக்கு அதனைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்தியாவில் தோற்கடிகடிக்கப்பட்டு நாடோட்யாகத் திரிந்த ஹுமாயுன் சிந்துப் பகுதியில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இந்தச் சூழ் நிலையில் ஹுமாயுன் அவரது சகோதரனான ஹிண்டாலைப் பார்ப்பதற்கு வருகிறார். ஹிண்டாலின் அந்தப்புரத்திலிருந்த ஹமீதா பானுவை முதன்முதலாகப் பார்த்து அவளால் மிகவும் கவரப்பட்டார்.

ஹமீதா பானு, ஹிண்டாலின் ஆன்மிக குருவான பாபா தோஸ்த் என்பவரின் மகள். 33 வயதான ஹுமாயுன் 14 வயதான அந்தப் பெண்ணின் கரம்பிடிக்க ஆசைப்பட்டார். சிறுமி ஹமீதா பானு அச்சத்துடனும் அருவருப்புடனும் அதனை ஏற்க மறுக்கிறாள். சகோதரன் ஹிண்டாலும் அதனை ஏற்கவில்லை. இருந்தாலும் பிடிவாதமாக ஹுமாயுன் அந்தப் பெண்ணை ஏராளமான வரதட்சிணை (இரண்டு இலட்சம்)  கொடுத்துத் திருமணம் செய்து கொண்டார்.  நாடிழந்து, வீடிழந்து நாடோடியாகவும், வழிப்பறிக் கொள்ளைக்காரனாகவும் திரிந்த ஹுமாயுனுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்திருக்கும்? நிச்சயாமாக எவனையாவது கொள்ளையடித்த பணமாகத்தான் இருக்கும் அது. அதையும் மீறி பெண் கொடுக்க மறுத்தால் பாபா தோஸ்த்தும் அந்தப் பெண்ணும் உயிருடன் வாழ்வது நிச்சயமில்லை”

அக்பரின் முன்னோர்களான கொலைகார, போதை மருந்திற்கு அடிமையான,  குடிகாரர்களான, குரூரமான செங்கிஸ்கானையும், தைமூரையும் பற்றிப் பார்த்தோம். அவருக்குப் பின் வந்தவர்களும் இதில் எந்த விதத்திலும் குறைவானவர்களில்லை. இதுபோன்ற காட்டுமிராண்டிகளின் வழி வந்த அக்பர் மட்டும் ஏதோ அதிசயமானவராக நம்மை நம்ப வைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து அது மிகவு வெற்றிகரமாகவும் இன்றைக்கு ஆகியிருக்கிறது. வழி வழியாக கொடியவர்களின் வழி வந்த ஒருவன் மட்டும் எப்படி உத்தமனான் என்கிற கேள்விக்கு பதில் எதுவும் கிடைப்பதில்லை.

ஒரு வாதத்திற்காக அக்பர் நல்லவர், வல்லவர் என்று வைத்துக் கொண்டாலும் அக்பரின் மகனான சலிமின் (ஜஹாங்கிர்) குரூரம் தனி வகையைச் சார்ந்தது. கண்மூடித்தனமாக ஓப்பியமும், மதுவும் குடித்து எந்த நேரமும் மூளை மழுங்கி வெறியுடன் திரிந்த ஜஹாங்கிர் தனக்குப் பிடிக்காதவ்ர்களுக்கு இழைத்த கொடுமைகள் கடவுளால் பொறுக்க இயலாதவை. ஜஹாங்கிருடன் இருந்த அவரது குறிப்பெழுத்தாளன் ஒருவன் அந்தப்புரத்திலிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தியுடன் காதலில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஹாங்கிர் அவனது தோலை உயிருடன் உரித்தார் என்கிற செய்தியைப் படிக்கையிலேயே குலை நடுங்கும்.

அக்பர் ஒரு சிறந்த மனிதனாக இருந்திருந்தால் அவரது மகனான ஜஹாங்கிர் இப்படிப் பிறரைக் குரூரத்துடன் கொலை செய்வானா என்பதினை நாம் யோசிக்க வேண்டும். அதே ஜஹாங்கிர் அவரது தந்தையான அக்பரை விஷம் வைத்துக் கொல்லவும் முயற்சிகள் செய்திருக்கிறார். வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “1591-ஆம் வருடம் அக்பர் கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். தன்னுடைய மகனான ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என அக்பர் சந்தேகப்பட்டார்” என்கிறார். எனவே அக்பரின் காலத்தில் ஜஹாங்கிர் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகத்தான் இருந்தார்.

Married a 34 year-old Persian widow he renamed Nur Jahan ( Light of the World ). She would become one of the strongest personalities of the Mogul period. Painting commissioned by Akbar celebrating the birth of Jahangir.

விஷம் வைத்துக் கொல்வதில் வெற்றியடையாத ஜஹாங்கிர், தனது தகப்பனான அக்பரை சிறைப்பிடித்துக் கொல்வதற்கும் முயன்றிருக்கிறார். மீண்டும் வின்செண்ட் ஸ்மித், “….ஜஹாங்கிரின் புரட்சியை அறிந்த அக்பர் உடனடியாக ஆக்ராவுக்குத் திரும்புகிறார் (1601). ஜஹாங்கிர் போர்த்துக்கீசியர்களின் உதவியை நாடி அவர்களிடமிருந்த வெடிமருந்துகளைக் கோரிப் பெற முயன்றார்…..ஜஹாங்கிரை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட அவரது வரலாற்றாசிரியரான அபுல் ஃபைசல் படையெடுத்து வரும் வழியில் பிடிக்கப்ட்டு, ஒரு ஈட்டியின் முனையால் குத்தப்பட்டு மரத்தோடு அறையப்பட்டார்….பின்னர் அவரது தலை வெட்டப்பட்டு அலஹாபாத்திலிருந்த ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்பட்டது….ஜஹாங்கிர் கெட்ட வார்த்தைகளினால் அந்தத் தலையை அர்ச்சித்துக் குப்பையில் எறிந்தார்…..”

அக்பருக்குப் பின் அரியணை ஏற வேண்டிய இளவரசனான ஜஹாங்கிர் அலஹாபாத்தில் கண்மூடித்தனமாக போதைமருந்தையும், மதுவையும் குடித்து மயங்கிக் கிடந்தார். பெரும் கோபம் கொண்டவரான ஜஹாங்கிர் மதுவின் போதையால் மிகவும் வெறி கொண்டவராக எவராலும் கட்டுப்படுத்த இயலாதவராக ஆனார். அவருக்கு முன் நிகழ்ந்த சிறிய, சிறிய தவறுகளுக்கும் மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. மன்னிப்பு என்கிற வார்த்தையே மறந்து போனது. ஏற்கனவே சொன்னபடி தவறு செய்த எழுத்தனை தோலுறிக்கையில் துடித்த அவனை ஜஹாங்கிர் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். எனவே ஜஹாங்கிருக்கு எதிரான மனோபாவம் அவரது எதிரிகளிடையேயும், பொது மக்களிடையேயும் இருந்ததில் ஆச்சரியமில்லை. இப்படிப்பட்ட குரூர மனம் கொண்ட ஜஹாங்கிர் தனது தந்தையைக் கொல்ல நினைத்தது நிச்சயமான ஒன்றாகத்தான் இருக்கும்”

வயது ஏற, ஏற ஜஹாங்கிரின் காம லீலைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. குடிப்பதும் இன்னபிற இளவயது பிணக்குகளும் அதிகமாகின. ஏற்கனவே நூற்றுக் கணக்கான பெண்களைக் கொண்ட மிகப்பெரிய அந்தப்புரம் இருந்தாலும், ஜஹாங்கிர் அவரது சகாவான ஜய்ன்கான் கோகாவின் மகள் மீது மட்டற்ற காதல் கொண்டார். இதைப்போலவே மித்ருன்னிஸா (எதிர்கால நூர்ஜஹான்) மற்றும் அனார்கலியின் (அக்பரின் வைப்பாட்டி. ஜஹாங்கிரை விடவும் இரண்டு மடங்கு வயதானவள்) மீதான அவரது காதலையும் நாம் புறந்தள்ள முடியாது. அக்பருக்கு எதிராக புரட்சி செய்து அலஹாபாத்தைப் பிடித்துக் கொண்ட பிற ஜஹாங்கிரின் போக்கிரித்தனமும், போதைமருந்து உபயோகமும், குடியும் உச்சத்தைத் தொட்டது. ஒருகட்டத்தில் எவ்வளவு மது குடித்தாலும் போதையே ஏறாத ஒரு நிலைமையை அவர் வந்தடைந்தார் என்றால் எந்த அளவிற்கு அந்த ஆள் குடித்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். எனவே ஓப்பியத்தை மதுவுடன் கலந்து உபயோகிக்க ஆரம்பித்தார்.

தனது 18-ஆவது வயதில் குடிக்க ஆரம்பித்த ஜஹாங்கிர் ஒரே வேளையில் இருபது கோப்பைகள் மதுவை (double distilled spirit) அருந்துவதனை வழக்கமாகக் கொண்டவர். போதையின் உச்சத்தில் ஒருவனுக்கு காயடிக்க உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு வேலைக்காரனை அடித்தே கொன்றிருக்கிறார். மேலே சொன்னபடி ஒருத்தனுக்கு உயிருடன் தோல் உறிக்கப்பட்டிருக்கிறது.

ஜஹாங்கிர் மட்டுமில்லை. அவருக்குப் பின் வந்த அக்பரின் பேரனான ஷாஜஹானும் மிகக் குரூரமான, இரக்கமற்ற கொலைகாரனே. செங்கிஸ்கானின், தைமூரின் வழி வந்த ஷாஜஹானுக்கும் வேறு குணம் வந்துவிடவா போகிறது?

மவுல்வி மொயினுதீன் அகமது “மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஷாஜஹானின் குறுகிய மனப்பான்மை சில சமயங்களில் அவனது மனைவியான மும்தாஜிடமிருந்து துவங்குகிறது என்பதில் சிறிதளவு உண்மை இருக்கிறது” என்கிறார். இன்னொரு வரலாற்றாசிரியரான இ.பி. ஹாவெல், “கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஷாஜஹனால் மிகுந்த சித்திரவதைக்குள்ளானார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவளான அவரது மனைவி மும்தாஜ் இறப்பதற்கு சிறிதுகாலத்திற்கு முன்னர் ஷாஜஹானைத் தூண்டிவிட்டு ஹூக்ளியில் அமைந்திருந்த போர்ச்சுக்கீசிய காலனியைத் தாக்க வைத்தாள்” எனச் சொல்கிறார்.

இதனையே வேறுபல வரலாற்றாசிரியர்களும் உறுதி செய்கிறார்கள். “ஷாஜஹான் பலமுறை கிறிஸ்தவ பாதிரிகளை தனது அவைக்கு அழைத்து அவர்களை இஸ்லாமியர்களாக மதம் மாறுவதற்கு வற்புறுத்தினார். அதனை மறுத்தவர்கள் மீது மிகவும் சினம் கொண்ட ஷாஜஹான் அவர்களை உடனடியாக சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். இன்னும் சிலர் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு யானைகளில் கால்களில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். எதோச்சதிகார கொடூரங்களில் ஷாஜஹான் அவர்களின் முன்னால் வந்தவர்களையெல்லாம் மிஞ்சிய ஒருவர். அரியணையை அடைவதற்காக் தன்னுடைய உறவினர்கள், எதிரிகள் என அத்தனை பேர்களையும் படுகொலை செய்தவர் ஷாஜஹான். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்த இங்கிலாந்தின் தூதுவரான தாமஸ் ரோ “ஷாஜஹான் தன்னைப் பற்றிய மித மிஞ்சிய பெருமித உணர்வுடையவர். மற்றவர்களை (பிற மதத்தவர்களை) வெறுப்புடனேயே அணுகும் மனோபாவமுடையவர்” என்கிறார்.

“துரோகிகளான காஃபிரி ஹிந்துக்கள் பனாரஸில் சிலை வழிபாட்டு ஆலயத்தைக் கட்டத் துவங்கியிருப்பதாகவும், நாட்டின் பிற பகுதிகளிலும் அதுபோன்ற பல ஆலயங்கள் கட்டப்பட்டதாகவும் பேரரசருக்குத் தெரியவந்தது. அல்லாவின் மதத்தை பேணிப் பாதுகாப்பவரான பேரரசர் பனாரஸ் ஆலயத்தையும், பேரரசின் எந்தவொரு பகுதியிலும் இருக்கும் சிலைவழிபாட்டுத் தலங்களையும் உடனடியா இடிக்க உத்தரவிட்டார். இதுவரை வந்த தகவல்களின்படி பனாரஸ் மாவட்டத்தின் அலஹாபாத் பகுதியில் மட்டும் 76 ஆலயங்கள் இடிக்கப்பட்டதாகத் தகவல் வந்திருக்கிறது” என ஷாஜ்ஹானின் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஷாஜஹன் கிறிஸ்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் சிறிது பார்ப்போம்.

தவுலதாபாத்தை வென்ற ஷாஜஹானின் தளபதிகளான காசிம்கானும், கம்புவும் 400 கிறிஸ்தவ சிறைக்கைதிகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் என பலதரப்பினரும் இருந்தார்கள். தாங்கள் வழிபடும் சிலையை கையில் கொண்டு வந்த அவர்கள், அல்லாவின் மதத்தைப் பேணும் பேரரசரின் முன் நிறுத்தப்பட்டார்கள். பேரரசர்  மவுல்விகளைக் கொண்டு இஸ்லாமிய மதத்தின் அருமை, பெருமைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வைத்து அவர்களை இஸ்லாமியர்களாக மதம் மாறுவதற்கு அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்தவ சிறைக்கைதிகளில் ஒருசிலர் இஸ்லாமியர்களாக மதம் மாறுவதற்குச் சம்மதித்தனர். ஆனால் பெரும்பாலோர் அவ்வாறு செய்வதற்கு மறுத்துவிட்டனர். மறுத்தவர்கள் அமீர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களைக் கொடுஞ்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களின் சிலைகள் ஜமுனா நதியின் தூக்கியெறிப்பட்டன. எஞ்சியவைகள் உடைத்தெறியப்பட்டன.

(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 6

 

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

ஜஹாங்கிரின் ஆட்சிக்காலத்தைப்போலவே ஷாஜஹானின் ஆட்சிக் காலமும் குரூரங்கள் நிறைந்த ஒன்று.  ஷாஜஹானைத் தொடர்ந்து அரியணை ஏறிய அவரது மகனான ஔரங்கசிப் அவரையும் மிஞ்சிய மதவெறியும், குரூரமும், துரோகமும் செய்தவர்.  ஔரங்கசிப் இறந்தது முன்னூறு வருடங்களுக்கு முன்தான் என்பதினை யோசிக்கையில் அவரது கொள்ளுப்பாட்டனான அக்பர் எவ்வளவு கொடூரமானவராக இருந்திருப்பார் என்பதினை நாம் சிந்திக்க முடியும். எனவே அக்பருக்கு முன்னாலும் சரி, அக்பருக்குப் பின்னாலும் சரி அவர் வழிவந்த அனைவருமே காட்டுமிராண்டிகளாக, குரூரத்தில், கொலைவெறியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்களாக இருப்பதினைக் காண்கிறோம். அக்பர் இந்தச் சங்கிலியின் ஒரு கண்ணியே. எனவே அவர் பிறரைவிடவும் வித்தியாசமானவராக, அன்பே உருவான்வராக, கண்ணியம் நிறைந்தவராக இருக்க வாய்ப்பே இல்லை.

அக்பர் நற்குணங்கள் கொண்ட பேரரசராக இருந்திருப்பின், அவருக்குப்பின் வந்தவர்களும் அவரைப்போலவே நல்ல குணங்களை உடையவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்? எனவே அக்பரது முன்னோர்களினதும், அக்பரின் வாரிசுகளினதும் வரலாற்றை முழுமையாக அறியாத ஒருவனே அக்பரைப்பற்றி உலவும் கதைகளை நம்புவனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

அக்பரின் குரூரங்களைக் குறித்து நாம் ஆராய்வதற்குமுன்னர் அவரது சமகாலத்தவர்களான அவரது உறவினர்களின் குரூரங்களைப்பற்றியும் சிறிது ஆராய்வோம். நமக்கு மீண்டும்மீண்டும் கற்பிக்கப்படுவதுபோல அக்பர் ஒரு இரக்கமுள்ள, அன்பும், கனிவுமுள்ளதொரு பேரரசனாக இருந்திருந்திருந்தால் அவரது உறவினர்களின் கொடுஞ்செயல்களைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவர் அவ்வாறு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அவரும் அவரது உறவினர்களும் கொடூரமான ஓநாய்களைப்போலவும் கழுதைப் புலிகளைப்போலவும் அல்லவா நடந்து கொண்டார்கள்?

சுங்கிஸ் கானின் (Chungiz khan) அன்னையும் குஜராத்தின் பிரதிநிதியுமான ஒரு பெண்மணி (1573) ஜூஹார்கான் ஹப்சி என்பவன் தன்னுடைய மகனைக் கொலைசெய்துவிட்டதாக அக்பரிடம் முறையிடுகிறாள். இருவருமே அக்பரின் உறவினர்கள் என்றாலும் ஒருவரை ஒருவர் கொல்வதில் சளைத்தவர்களில்லை என்பதனை இந்த உதாரணம் காட்டுகிறது.

அக்பரின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த அபுல் மாலி என்பவர் காபூலுக்குத் தப்பியோடி அங்கிருந்த அக்பரின் வளர்ப்பு சகோதரனின் அன்னையான மாஹ் ச்சிக் (Mah Gchk) என்கிற பெண்மணியிடம் சரணடைகிறார். தனக்கும் ஹுமாயுனுக்கும் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் மனத்தைக் கரைக்கும் அபுல் மாலிக்கு தன்னுடைய மகளான ஃபக்ருன்னிஸ்ஸாவை திருமணம்செய்துவைக்கிறாள். சிறிது காலம் கழித்து அவளின் சொத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் அந்தப் பெண்மணியை அபுல் மாலி கத்தியால் குத்திக் கொல்கிறான்.

அக்பரின் சொந்த மாமனான கம்ரன் தன்னிடம் பிடிபட்ட எதிரியின் குடும்பத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் என அத்தனைபேர்களையும் குரூரமான சித்திரவதைக்கு ஆளாக்கினான்.

மேற்கண்ட சில சம்பவங்கள் அக்பரின் காலத்தில் அவரது உறவினர்களால் நிகழ்த்தப்பட்ட  சில குரூரங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அக்பரின் ஆட்சிக்காலம் முழுவதும் இதுபோன்ற கொலைகளும், படுகொலைகளும், கற்பழிப்புகளும், கொள்ளையடித்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அக்பரின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி அவருக்கு முன்னால் இருந்தவர்களின் குரூர நடவடிக்கைகளிலிருந்து சிறிதும் விலகியிருக்கவில்லை என்பதையே நாம் இங்கு காணாப்போகிறோம். அப்படியே அக்பரின் ஆட்சி அவரது முன்னோர்களின் காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருந்தால் அது நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் உண்மையில் நிலைமை அப்படி இருந்திருக்கவில்லை.

இனி வரும் பகுதிகளில் அக்பருடையதும் அவரது படைத்தலைவர்களினது, அவரது அமைச்சரவையில் இருந்தவர்களினதுமான குரூரங்களைப் பற்றிப் பார்க்கலாம். அதுவே உங்களுக்குத் தேவையான ஆதாரங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. துரதிருஷ்டவசமாக இந்திய வரலாற்றை எழுதியவர்கள் தர்க்கபூர்வமான தரவுகளை,  ஆவணங்களை, வரலாற்றுக் கூறுகளை, குறிப்புகளை முற்றிலும் மறைத்துவிட்டு தங்களின் இஷ்டம்போல எழுதிவைத்தார்கள்.

அக்பர் தனது முன்னோர்களைவிடவோ அல்லது அவருக்குப் பின்னர் வந்தவர்களைவிடவோ குரூரத்தில் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதே உண்மை.  தன்னிடமிருந்த அளவுக்கதிகமான அதிகாரத்தைக்கொண்டு, வஞ்சகமும், சூழ்ச்சிகளும், துரோகங்களும்செய்து பிழைத்த அக்பர் இந்தியாவில் மட்டுமலலாது உலகிலேயே மிகக் கொடுஞ்செயல்கள் புரிந்தவர்கள் வரிசையில் வருவதற்குத் தகுதியான ஒரு ஆளேயன்றி வேறில்லை.

வரலாற்றாசிரியர் கர்னல் டோடின் கூற்றுப்படி, “பல தலைமுறைகள்கண்ட இந்தியாவின் போர்க்குணம் கொண்ட ராஜபுத்திரர்களும், ஷத்திரியர்களும் அக்பரின் வஞ்சக வாளுக்கு இறையானார்கள். அவரால் வெற்றிகொள்ளப்பட்டவர்கள் அடைந்த துயரங்களும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அழிவையே வழியாகக் கொண்டு நடந்த ஷகாபுதின், அல்லாவுதின் போன்றவர்களுக்கு இணையானவர் அக்பர். ராஜபுத்திரர்களின் தெய்வமான ஏக்லிங்காஜி கோவிலை அழித்து அதன் மூலஸ்தானத்தில் இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களின் மேடையாக மாற்றியவர் அக்பர்’ என்கிறார்.

இந்தியாவின் செக்யூலரிஸ்டுகளாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் மிகவும் போலித்தனமான பாவனைகளோடு அக்பரை ஹிந்து அரசரான அசோகருடன் ஒப்பிடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் இந்தப் போலித்தனத்தைத் தோலுறிக்கிறார். “தன்னை ஒரு சிறந்த நீதி வழுவாத ஒரு ஹிந்து பேரரசனுக்கு ஒப்பிடுவதனைக் கேட்டு அக்பரே சிரித்திருப்பார். கலிங்கத்துப் போரில் அசோகர் நிகழ்த்திய அழிவுகளைக் கண்டபிறகு அசோகர் வன்முறையைக் கைவிட்டதனைப்போல அக்பர் ஒருபோதும் செய்ததில்லை. அதற்கு மாறாக மேலும், மேலும் வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் அக்பரால் நிகழ்த்தப்பட்டன”

அக்பரின் குரூர மனப்பான்மையைக் குறித்தான சில சிறிய உதாரணங்களை இங்கு பார்ப்போம். இவையனைத்தும் அக்பரின் காலத்தில் வாழ்ந்த அவருடைய சொந்த வரலாற்றாசிரியர்களால் எழுதிவைக்கப்பட்டவை.

அக்பரின் உறவினரான கம்ரனின் மகனை குவாலியர் கோட்டையில் 1565-ஆம் வருடம் யாருக்கும் தெரியாமல் கொலைசெய்ய உத்தரவிடுகிறார் அக்பர். அந்த உதாரணமே பிற்காலத்தில் அரியணை ஏறிய ஷாஜஹான், ஔரங்கசிப் போன்றவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு குவாலியர் கோட்டை பெரும் கொலைக்களமாகத் திகழ்ந்தது.

அக்பரின் குரூரம் (sadism) அவரது கல்யாண குணங்களில் ஒன்றாக நிரந்தரமாகத் திகழ்ந்த ஒன்று. அவரது சிறியவயதிலிருந்து முதியவயது வரைக்கும் அவரது குரூர குணம் பல்வேறுவகைகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்ததைக் காணலாம்.

இரண்டாம் பானிபட் போர்

நவம்பர் 5, 1556-ஆம் வருடம் அக்பர் வெறும் 14 வயதுச் சிறுவன். ஹேமுவுடன் நிகழ்ந்த போரில் கண்ணில் புகுந்த அம்பு மூளையைத் துளைத்ததில் ஹேமு அரை மயக்க நிலையில் இருந்தார். அந்த நிலையிலேய அவரைச் சிறுவனான அக்பரின் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அக்பர் வெறியுடன் தனது கையிலிருந்த குறுவாளால் (scimitar) ஹேமுவின் கழுத்தை அறுத்துக் கொல்கிறார்.

பானிப்பட்டில் நிகழ்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போரைக் குறித்துக் கூறும் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “இந்தப் போரில் ஹேமு மிக எளிதாக வென்றிருக்கும் வாய்ப்பே அதிகமிருந்தாலும் எதிர்பாராமல் பாய்ந்த அம்பின் காரணமாக அவர் தோல்வியடைய நேரிட்டது. அதனைக் கண்ட அவரது படைகள் சிதறியோடிவிட்டன. காட்டுக்குள் ஓடிய ஹேமுவின் பட்டத்து யானை பிடிக்கப்ப்ட்டு ஹேமு அதன்மீது அமர்த்தப்பட்டு அக்பரின் மாமனான பைராம்கானுக்கும், அக்பருக்கும் முன் அழைத்து வரப்படுகிறார்.

அக்பர் ஹேமுவின் கழுத்தை அறுத்த பின்னர் அங்கிருந்த அத்தனை பேர்களும் உயிரற்ற ஹேமுவின் உடலில் வாள்களைப் பாய்ச்சினர். ஹேமுவின் தலை காபூலுக்கு அனுப்பபட்டு அவரது உடல் தில்லியின் மசூதி வாசலுக்கருகில் புதைக்கப்படுகிறது. ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள் அவரது மாமனான பைராம்கானின் உத்தரவின்பேரில்தான் அக்பர் ஹேமுவைக் கொன்றதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

மேலும், “போரில் வெற்றிபெற்ற அக்பரின் படை பானிபட்டிலிருந்து தெற்கில் முன்னேறி தில்லியை வந்தடைகிறது. தில்லியின் கோட்டைக் கதவுகள் அக்பரின் வருகைக்காகத் திறந்துவைக்கப்படுகின்றன. ஆக்ராவும் அக்பரின் கைவசமாகிறது. மங்கோலியர்களின் கொடூர வழக்கப்படி போரில் பிடிபட்டவர்களின் தலைகள் கொய்யப்பட்டு ஒரு பெரும் கோபுரமாக செய்யப்படுகிறது. ஹேமுவின் அரண்மனையிலிருந்து விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள் அக்பரின் வசம் செல்கிறது, ஹேமுவின் வயதான தகப்பன் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார்”.

மால்வாவின் சுல்தானான பேஸ்பகதூரை வெல்லும் அக்பரின் படைத்தலைவர்களான ஆதம்கானும், பீர் முகமதுவும் அங்கு சொல்லமுடியாத குரூரங்களை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். வரலாற்றாசிரியர் பதாயுனி அதற்குச் சாட்சியாக அந்த நேரத்தில் அங்கு இருந்திருக்கிறார். பிடிபட்ட எதிரிகளின் படைகள் அணி அணியாக அழைத்துவரப்பட்டு அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அவர்களின் ரத்தம் ஆறுபோல ஓடியது. பீர் முகமது குரூரங்களின் எல்லைகளைக் கடந்தான். அவனைச் சந்திக்க கைகளில் குரானுடன் வந்த இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான சையத்கள்  கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

Image result for Malwa fort

மால்வா கோட்டை

அந்தப் போருக்குப் பின்னர் ஆதம்கான் மால்வாவின் கவர்னராக நியமிக்கப்படுகிறான். பின்னர் சிறிது நாள்களுக்குப் பிறகு ஆதம்கான் நீக்கப்பட்டு பீர்முகம்மது கவர்னராகிறான். பின்னர் அவனே பர்ஹான்பூரையும்ம் பிஜகத்தையும் தாக்கிப் பிடித்து கோட்டைக்குள்ளிருந்த அத்தனை பேர்களையும் படுகொலை புரிகிறான். செங்கிஸ்கான் செய்த அத்தனை கொடும் செயல்களையும் பீர்முகமது பின்பற்றியதாகச் சொல்கிறார் பதாயுனி.

ஆதம்கான் பின்னர் ஆக்ரா கோட்டையிலிருந்து தூக்கியெறியப்பட்டு கொல்லப்பட்டான். அக்பரின் ஏவலாளிகளில் ஒருவனான அட்காகான் என்பவனை ஆதம்கான் கொலை செய்த காரணத்தால் அக்பர் அவனை ஆக்ராக் கோட்டையிலிருந்து தூக்கியெறிந்து கொல்ல உத்தரவிடுகிறார். அதனைப் பற்றி விளக்கும் வின்செண்ட் ஸ்மித், “ஆதம்கான் ஆக்ரா கோட்டையின் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டான். ஆனால் அவன் இறக்காமல் அரை உயிராகத் துடித்துக் கொண்டிருந்தான். அக்பர் மீண்டும் அவனைத் தூக்கி வந்து கோட்டையின் மேலிருந்து மீண்டும் தூக்கியெறிய உத்தரவிடுகிறார். அவனுடைய கழுத்து உடைந்து மூளை நாலாபக்கமும் சிதறியது”.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 7

 

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

அக்பரே நேரடியாகப் படையெடுத்துச் சென்று எட்டா மாகாணத்திலுள்ள எட்டு கிராமங்களைத் தாக்கி அழிக்கிறார்.  பரோங்க் கிராமத்திலிருந்த ஒரு பெரியவீட்டில் ஆயிரம்பேர்கள் (ஹிந்துக்கள்) அடைத்துவைக்கப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

ஏப்ரல் 1567-ஆம் வருடம் ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆக்ராவுக்குத் திரும்பும் வழியில் அக்பர் பஞ்சாபின் தானேஷ்வர் என்கிற இடத்தில் முகாமிட்டார். பஞ்சாபின் இரண்டு ஹிந்து வகுப்பினரான குருவும், புருவும் கோவிலின் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வதில் தங்களுக்குள் உள்ள சர்ச்சையை அக்பரிடம் முறையிட்டார்கள். அவர்கள் இருவரையும் இரண்டு பக்கமாகப் பிரித்து நிற்கவைக்கும் அக்பர் அவர்களுக்குக் கத்திகளையும், ஈட்டிகளையும், குறுவாள்களையும் கொடுத்து அவர்களை சண்டையிடவைக்கிறார். ஏறக்குறைய 800 பேர்களிருந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று மடிகிறார்கள். ஏதாவது ஒரு தரப்பில் ஆட்கள் குறைகையில் அக்பர் தனது படையிலிருந்த கொலைகார முஸ்லிம்களை அவர்கள் பகுதிக்கு அனுப்பிவைக்கிறார். இபபடியே மாற்றிமாற்றிச் செய்ததால் அந்த 800 குருக்களும், புருக்களும் செத்துமடிகிறார்கள். அக்பர் அந்த “விளையாட்டை” மிகவும் ரசித்து மகிழ்ந்ததாக அவரின் அத்தனை வரலாற்றாசிரியர்களும் குறிப்பிட்டார்கள்.

அக்பரைப் போன்றதொரு “சிறந்த” மனிதன் இதுபோன்ற ரத்தவெறிகொண்ட விளையாட்டை அனுமதித்தது மட்டுமல்லாமல் அதனை ரசித்தும் பார்த்தனை என்னவென்று சொல்ல? இந்தச் சம்பவே அக்பரின் உண்மையான குணத்தையும் அவரின் உள் நோக்கங்களையும் தெளிவாக்குகிறது.

ஒரு அடிப்படைவாத இஸ்லாமியரான அக்பர், காஃபிர்களான ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், வெட்டிக்கொண்டும் சாவதனை ரசித்துக் குதூகலமடைந்த அக்பரின் வக்கிரபுத்திக்கு இதனைவிடவும் சிறந்த உதாரணம் வேறெதுவும் இருக்குமா என்ன?

அக்பர் வருவதனைக் கண்டு பனாரஸ் மற்றும் பிராயகை வாழ் ஹிந்துக்கள் சிதறி ஓடினார்கள். அன்பும், கருணையும் கொண்டதொரு அரசன் வரும்வழியில் உள்ள மக்கள் அவனுக்கு உற்சாக வரவேற்பல்லவா அளிப்பார்கள்? ஆனால் அக்பரை குடிமக்கள், குறிப்பாக ஹிந்துக்கள் ஒரு மனித வேட்டையாடும் விலங்காகவே அஞ்சி விலகினார்கள்.

வின்செண்ட் ஸ்மித், “அக்பர் பனாரஸ் மற்றும் பிரயாகையினுள் நுழைந்து அந்த நகரங்களைச் சூறையாடினார். தான் வருகையில் அந்த நகரின் கதவுகளை மூடியவர்களைப் பழிவாங்கவே அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது”. ஒரு நீதிமானான அரசனைப் பார்த்து ஜனங்கள் எதற்காக தங்களின் வீடுகளைப் பூட்டிக்கொள்ளவேண்டும்? ஆனால் உண்மையில் அக்பரின் படையினர் கட்டவிழ்த்துவிடும் வன்முறையும், பெண்களுக்கெதிரான பாலியன் வன்முறைகளுக்கும் அஞ்சியே அந்த நகரத்து மக்கள் அவ்வாறு நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். அக்பரின் ஐம்பது ஆண்டுகால ஆட்சிக்காலம் முழுக்க இதுவேதான் நிகழ்ந்தது.

தனக்கு எதிராகப் புரட்சி செய்த கான் ஜமானின் படையைச் சேர்ந்த முகமது மிராக் என்பவன் தொடர்ந்து ஐந்து நாட்கள் கொலைக்களத்தில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டான். ஒவ்வொரு நாளும் முகமது மிராக்கை ஒரு மரச் சட்டத்தில் அடைத்துப் பின்னர் அந்தப் பெட்டியை அவரது யானைகளுக்கு முன்னால் வைக்க உத்தரவிட்டார் அக்பர். யானைகள் அவனை தும்பிக்கையால் மூச்சுமுட்ட இறுக்கிப் பிடித்தும், கால்களால் மரச்சட்டத்தை உதைத்தும் விளையாடின. யானைகளுக்குக் கொல்ல உத்தரவிடும்வரை அவை யாரையும் கொல்வதில்லையாதலால், ஐந்து நாட்கள் இந்தக் கொடிய விளையாட்டு நடத்தப்பட்டது. அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல் ஃபசல் இந்தச் சம்பவத்தை மிகப் பெருமையாக எழுதிவைத்திருக்கிறார்.

அக்பரின் படையினரிடம் சிக்கி கற்பழிக்கப்படுவதில் இருந்து தப்பவும், பாலியல் அடிமைகளாவதிலும் இருந்து தப்புவதற்காக ராஜபுத்திரப் பெண்களும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக தீயில் குதித்து இறந்த சம்பவங்கள் அக்பரின் கொடுங்கோன்மையை பறைசாற்றும். இதைப்பற்றிக் கூறும் வின்செண்ட் ஸ்மித், “சித்தூரின் படைகள் இறுதிப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ஜுஹார் பலிதானம் (தீயில் குதித்து இறத்தல்) நடந்து முடிந்துவிட்டிருந்தது. அரண்மனையின் மூன்று பகுதிகளில் இதற்காக பெரும் தீ வளர்க்கப்பட்டது. ஒன்பது அரசிகளும், ஐந்து இளவரசிகளும், அவர்களின் பெண் குழந்தைகளும், இரண்டு கைக்குழந்தைகளும், அரண்மனையின் அத்தனை முக்கியஸ்தர்களின் குடும்பங்களும் தீயில் குதித்து இறந்தார்கள்.

அடுத்தநாள் காலை அரண்மனைக்குள் புகுந்த அக்பரைத் தடுத்து நிறுத்த 8000 ராஜபுத்திரர்கள் சாகும்வரை போரிடுவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். இதனைக் கண்டு சினமுற்ற அக்பர் சித்தூர் அரண்மனையின் மீது கடுமையான தாக்குதலைத் துவக்கினார். இரக்கமற்ற படுகொலைகள் துவங்கின. மேற்கண்ட 8000 ராஜபுத்திரப் படைவீரர்களுக்கு சித்தூரின் 40,000 பொதுமக்கள் உதவினார்கள் என்பதால் அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டார் அக்பர். ஏறக்குறைய 30,000 பேர்கள் வாளுக்கு இறையாக்கப்பட்டு,. எஞ்சியவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்.

இரக்கமுள்ளதொரு அரசன் செய்கிற செயலா இது?

நவம்பர் 1572-ஆம் வருடம் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்த அகமதாபாத்தின் அரசரான முஸாஃபர் ஷா தோல்வியுற்று, ஒரு சோளக்காட்டில் ஒளிந்திருக்கையில் பிடிபட்டார். அலஹாபாத் நகரம் சூறையாடப்பட்டு, பிடிபட்டவர்கள் அனைவரும் யானையின் கால்களில் இட்டு நசுக்கிக் கொல்லப்பட்டார்கள்.

அகபருக்கு எதிராகப் புரட்சி செய்த இன்னொரு அரசவையினனான ஹாம்-ஜபான் என்பவனை குஜராத்தின் சூரத்தில் பிடித்தார் அக்பர். ஹம்-ஜபான் என்ற பெயரின் அர்த்தம் “உண்மையை மட்டுமே பேசும் ஒரு நாக்கு” என்று அர்த்தம். எனவே அக்பர் அவரின் நாக்கைத் துண்டிக்க உத்தரவிட்டார். அதன்படியே “உண்மையை மட்டுமே பேசும் நாக்கு” துண்டிக்கப்பட்டது.

அக்பரின் கல்வியறிவற்ற மூளை செயல்படும் விதத்தில் இதுவும் ஒன்று.

ஹுசைன் குலிகான் (கான் ஜஹான்தனது சிறைக்கைதிகளுடன் அக்பருக்காக காத்து நிற்கிறான்கைதிகளில் ஒருவனான மசூத் ஹுசைன் மிர்ஸாவின் கண்கள் ஊசியால் தைக்கப்பட்டுமூடியிருக்கின்றனஅங்கிருந்த 300 பிற கைதிகளின் முகங்கள் கழுதைபன்றி மற்றும் நாய்த்தோலினால் மூடப்பட்டிருக்கின்றனஅவர்களில் சிலர் புதுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டுஇறக்கிறார்கள்….அக்பரைப் போன்றதொரு அரசன் இதுபோன்றதொரு சித்திரவதைகளை அவனதுதார்த்தாரிய மூதாதைகளிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும்“.

இதுபோன்ற கொடூரங்களை நாள்முழுக்கச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அக்பரை எதிர்த்தவர்கள் சித்திரவதைசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்னொருபுறம் அக்பருக்குப் பிடிக்காதவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். 1581-82-ஆம் வருடம் அக்பரை எதிர்த்த ஷேக்குகளும், ஃபக்கீர்களும் காந்தஹாருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, குதிரைவாங்குவதற்காக அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

அக்பரின் அரசவையில் இருந்த இளம் ஹிந்து ஓவியனான யஷ்வந்த் அக்பரைச் சுற்றி நடந்த, அக்பரால் நடத்தப்பட்ட வன்புணர்ச்சிகளையும், போது மருந்து உபயோகங்களையும், வெள்ளமென ஓடிய மதுவையும், விபச்சாரத்தையும் கண்டு வெறுத்துப்போய் தன்னைத் தானே கத்தியால் குத்தித் தற்கொலைசெய்துகொண்டான். அக்பரின் இன்னொரு மூத்த அமைச்சரான ராஜா பகவான்தாஸ் அக்பரின் அரசவையில் அவருக்குக் நிகழ்ந்த அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்துபோனார்.

” விஷம் தயார் செய்பவன் ஒருவனை அக்பர் வேலைக்கு வைத்திருந்தார்அக்பர் சொல்லும் ஆளுக்குவிஷம்வைப்பதுதான் அவனது வேலைசிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளும்கொடூரமானவைகழுமரத்தில் ஏற்றிக் கொல்வதுசிலுவையில் அறைந்து கொல்வதுதலையைத்துண்டிப்பதுயானையின் கால்களில் இட்டு மிதித்துக் கொல்வதுதூக்கிலிடுவது என விதவிதமானதண்டனைகள் அளிக்கப்பட்டனசிறிய குற்றங்களுக்கு கைகளை வெட்டுவதிலிருந்து சவுக்கால்விளாசுவதுவரை தண்டனை அளிக்கப்பட்டதுயாருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டதுயார்யார்சிறையில் இடப்பட்டார்கள் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் எழுதிவைக்கப்படவில்லைதண்டனைஅளிக்கப்படாதவர்கள் சிறையில் புழுத்துமனநிலை பிறழ்ந்து இறந்தார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள்அக்பரால்மன்னிப்பு வழங்கப்பட்ட வெகுசிலர் இரக்கத்தால் மன்னிக்கப்படவில்லைஅந்தச் சூழ்நிலையில்அக்பருக்கு என்ன சாதகம் நிகழுமோ அதன்படியே தண்டனை மன்னிப்புகள் வழங்கப்பட்டன,” என்கிறார் வின்செண்ட் ஸ்மித்.

அக்பர் காலத்தில் அங்கு வந்த கிறிஸ்தவப் பாதிரிகள் சொன்னது போல “அக்பர் ஒரு கிழக்கின் பயங்கரம்” என்பதில் சந்தேகமில்லை. தடைபடாத அக்பரின் நாற்பதாண்டுகால தொடர்ச்சியான ஆட்சி அவரின் சர்வாதிகார மனப்பான்மையை மேலும் கூடுதலாக்கியது.

அக்பரைக் கண்டு குடிமக்கள் அஞ்சினார்களேயன்றி ஒருபோதும் அவர் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கவில்லை. அரசின்மீது தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்த அக்பர், தான் விரும்பியபடியெல்லாம் நடந்து கொண்டார். அந்தச் சுதந்திரத்தை உபயோகித்து அக்பர் பல நம்பவேமுடியாத கொடூரங்களை அரங்கேற்றினார் என்பதே உண்மை.

குரானில் போதிக்கப்படும் படுபயங்கரமான தண்டனைகள் முகலாய அரசில் தாரளமாக உபயோகிக்கப்பட்டன.

நீதித் துறை நடவடிக்கைகளான குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதும், சத்தியப் பிராமணம் எடுப்பதும், சாட்சிகளை விசாரிப்பதும் அக்பரின் அரசவையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. தன் மனதில் தோன்றிய சித்திரவதைகளை குற்றவாளிகளின் மீது உபயோகிக்க ஒருபோதும் அக்பர் தயங்கியதில்லை. தனக்கு வரிவழங்காத விவசாயிகள் மது தனது படைகளை ஏவி, அவர்களைக் கசக்கிப் பிழிவதற்கும் அவர் பயன்படுத்தினார். தனக்குத் தோன்றியதை மற்றவர்கள் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் எனபதில் அக்பர் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 8

 

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

அக்பரின் சர்வாதிகார மனப்பான்மையையும், கல்வியறிவற்ற, பிறரை நிர்பந்தம் செய்யும் மனப்பான்மையையும் விளக்குவதற்காக, வரலாற்றாசிரியர் கர்னல் டோட் கீழ்க்கண்ட விசித்திரமான நிகழ்வொன்றைக் கூறுகிறார்.

“அக்பரின் மனைவியான ஜோதாபாய் மரணமடைந்தபிறகு, தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேர்களும் தங்களின் தாடி, மீசையை மழித்துக் கொள்ள உத்தரவிடுகிறார் அக்பர். அதைக் கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் என்பதற்காக அரசவை நாவிதர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஹதாஸ் (ராவ் போஜ்) என்பவரின் இடத்திற்கு  நாவிதர்கள் வந்தபோது தன்னுடைய ஆண்மையின் அடையாளமான தனது தாடி-மீசையை மழிக்க மறுத்து அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்,   ஹதாஸ். ராவ் போஜின் இந்த எதிர்ப்பையும், அவரது வசைபாட்டையும் அக்பரின் காதுக்குக் கொண்டு செல்லும் அவரது எதிரிகள், ஜோதாபாயின் மரணத்தை அவர் அவமதித்துவிட்டதாக அவரிடம் வத்திவைக்கிறார்கள்.

ராவ் போஜ் அக்பரின் படைத்தலைவர்களில் ஒருவர். அக்பருக்குப் போரில் பலவெற்றிகளை ஈட்டித் தந்தவர். இருந்தாலும் அதனையெல்லாம் புறந்தள்ளிய அக்பர், ராவ் போஜை உடனடியாக சக்கரத்தில் கட்டி, அவரது மீசையை மழிக்க உத்தரவிடுகிறார். ராவ் போஜின் ஹதாஸ் இனத்தவர்கள் ஆயதங்களுடன் அதை எதிர்க்கத் தயாராகிறார்கள். அக்பரின் ஆதரவுப் படைகள் அவர்களுடன் போர்புரியத் தயாராக, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அக்பர் உடனடியாக அங்கு சென்று அனைவரையும் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.”

இஸ்லாமிய அரசர்களின் அந்தப்புரத்திற்குத் தங்களின் பெண்களை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜபுத்திரர்கள் தங்களின் சுயமரியாதையை இழந்து வாடிக்கொண்டிருந்தார்கள். வீரர்களான ராஜபுத்திரர்கள் தங்களது பெண்கள் தங்களின் குலவழக்கப்படி ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு மணம்முடிக்க இயலாமல் முஸ்லிம்களின் விபச்சாரிகளாக இருக்கும் நிலைகண்டு மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ஹதாஸ்களின் மீசை-தாடியை மழிக்கச் சொன்னது அவர்களின் கோபத்தை இன்னும் தூண்டியது.

ஆனால்  நரியைப்போன்ற தந்திரகுணமுள்ள அக்பர், தனது உத்தரவிற்காகக் காத்துநிற்கும் ராஜபுத்திரர்களை, அவர்கள் வீரர்களாக இருந்தாலும், அவர்களின் தலைமுடியையும், மீசையையும், தாடியையும் மழிக்கச் செய்துஅவமானப் படுத்துவதற்காகவே இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. உறவினர் எவரும் இறந்துவிட்டால் குலவழக்கப்படி தலைமுடியை மழித்துக் கொள்ளும் ஹிந்துக்களான ராஜபுத்திரர்கள், அக்பரின் இந்தக் கட்டாயப்படுத்துதலை விரும்பவில்லை.

பிறரைக் கொல்வதையும், கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிப்பவர்களை படுகொலை செய்வதனையும் ஒரு பொழுதுபோக்காகவும், மற்ற பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் ஒரு தந்திரமாகவும் செய்து வந்தவர் அக்பர்.  இதனை விடவும் குரூரதையுள்ள மனிதன் எவனும் இருக்க முடியுமா என்ன?

வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா, “அக்பரின் மகனான இளவரசன் முராத் மிர்ஸா அளவுக்கதிகமான போதைமருந்து உட்கொண்டதால் மரணமடைந்து ஷாபூரில் புதைக்கப்பட்டான் (அந்தப் பிணம் பின்னர் அங்கிருந்து எடுக்கப்பட்டு தில்லியிலுள்ள அவரது பாட்டனான ஹுமாயுனின் கல்லறையில் புதைக்கப்பட்டது). அந்தத் துக்கத்திலிருந்து தனது மனதை மாற்றுவதற்காக மட்டுமே அக்பர் தக்காணத்தின்மீது படையெடுக்க முடிவு செய்கிறார்” என்கிறார்.

ஆக, கொலையும், கொள்ளையும் மட்டுமே தனது கவலைகளைத் தீர்க்கும் என நம்பிய பேரரசர் அக்பர் ஒருவாராகத்தானிருக்கும்.

Related imageநாகர்கோட்டைப் பிடித்த அக்பரின் படையினர் அங்கிருந்தவர்களுடன் ஏராளமான பசுக்களையும் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள், மற்றும் பசுக்களின் ரத்தத்தைத் தங்களின் காலணிகளில் நிரப்பி அங்கிருந்த ஆலயத்தின் கதவுகளின் மீதும், சிலைகளின் மீது தெளித்தனர். மத ஒற்றுமைக்குப் பாடுபட்டதாக நமக்குக் கற்பிக்கப்படுகிற அக்பரின் அக்கிரமங்களில் ஒன்று இது.

இஸ்லாமிய அடிப்படைவாத, சுன்னி முஸ்லிமான அக்பர், இந்துக்களை மட்டுமல்லாமல் இஸ்லாமின் பிறபிரிவினரையும் விட்டுவைக்கவில்லை.

“அக்பர் இலாஹிக்கள் எனப்படும் ஷேக்குகள் பலரை சிறைப்பிடித்தார். இந்த இலாஹிக்கள் இஸ்லாமில் இருப்பது போன்ற சில சட்டங்களையும், வழி முறைகளையும் உருவாக்கிக் கொண்டு அதனைப் பின்பற்றி வந்தனர். அக்பர் இலாஹிக்கள் தங்களின் நம்பிக்கைகளைத் துறந்துவிட்டு மீண்டும் உண்மையான இஸ்லாமிற்குத் திரும்பத் தயாரா? என அவர்களிடம் கேட்டார். அதற்கு மறுத்த அவர்கள் அடிமைகளாக காந்தஹாருக்கு அனுப்பப்பட்டு, அங்கு துருக்கிய துப்பாக்கிகளுக்குப் பதிலாக விற்பனை செய்யப்பட்டனர்”. அக்பரின் பரந்தமனப்பான்மைக்கு இந்தச் சம்பவமும் ஒரு சான்றே.

மத ஒற்றுமையைப் பேணிக்காப்பதற்காகவும்,  இனங்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அக்பர் பல திருமணங்களைச் செய்து கொண்டார் என்பது நமக்கு மீண்டும், மீண்டும் சொல்லப்படுகிறதொரு செய்தி.

இனிவரும் அத்தியாயங்களில் அந்தத் திருமணங்கள் அனைத்துமே அக்பர் தனது ஆயுதபலத்தை உபயோகித்து, பிற அரசர்களை மிரட்டி, அவர்களின் பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்து கொண்டவை என்பதனை விளக்கமாகப் பார்ப்போம்.

போரில் தோற்கடிக்கப்பட்ட ஹிந்து அரசர்களின் பெண்களை கட்டாயத் திருமணம்செய்து தூக்கிச்சென்று அவர்களைத் தனது அந்தப்புரத்தில் அடைத்துவைக்கும் குரூரனானஅக்பர், அந்தப் பெண்கள் தனது அந்தப்புரத்திற்கு வந்தபிறகு அவர்களின் பெற்றோர்களைக்கூடப் பார்க்க அனுமதிக்காத கொடிய மூடன். ஜெய்பூர் அரசரான ராஜா பர்மானில் மகளை இவ்வாறு திருமணம்செய்துகொண்ட அக்பர், அதற்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே அந்தப் பெண் தனது பெற்றோர்களைப் பார்க்க அனுமதித்தார். அந்தப் பெண்ணுடைய மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனம் எத்தனை துக்கங்களை அனுபவித்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது.

வரலாற்றாசிரியர் ஸ்ரீவத்சவ், “பேரரசரின் ஹிந்து மனைவியான ஜெய்ப்பூர் இளவரசி அவளது இறந்து போன சகோதரனான பூபதியின் மரணத்திற்கு துக்கம் விசாரிப்பதற்கு மட்டும் ஒரே ஒருமுறை அவளது பெற்றோரின் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள்,” என்கிறார்.

இதன்மூலம் அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று அடைத்துவைக்கப்பட்ட அத்தனை பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதிகளைப்போல நடத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஒருமுறை உள்ளே நுழைந்த எந்தப் பெண்ணும் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை.

நமக்குக் கற்பிக்கப்பட்டது போல அக்பர் எல்லா மதங்களையும் நேசிக்கிற ஒரு மனிதனில்லை. அவரின் ஹிந்து வெறுப்பு அதீதமானது. அவரது அரசவைக்கு வந்த கிறிஸ்தவ பாதிரிகளுக்கு ஹிந்துக்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொடுத்த கயவன் அவர்.

இதனைக் கூற வரும் ஸ்ரீவத்சவ், “நகரின் பிரபல ஹிந்து ஒருவரின் வீடுகள் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு, கிறிஸ்தவப் பாதிரிகள் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொருட்டு கொடுக்கப்பட்டது. போர்த்துக்கீசியப் பாதிரியான சேவியர், அக்பரின் உத்தரவின் பேரில் ஆக்ராவின் பல வீடுகளைக் கைப்பற்றி அந்த வீடுகளில் லாகூர் மிஷன் நடத்தப்பட்டது. அந்த வீடுகளுக்குச் சொந்தமான ஹிந்துக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள்,” என்கிறார்..

ஒரு மனிதனின் குணத்தை அவனது சிந்தனை மற்றும் நடவடிக்கைகளைக் கொண்டு எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடக்கும் சண்டையைப் பார்ப்பதிலும், அங்கு சிந்தப்படும் ரத்தத்தைக் கண்டு மகிழ்வதிலும் அக்பருக்கு மிகுந்த ஆர்வமிருந்தது.

முகலாய அரசில் பயணம் செய்த கிறிஸ்தவப் பாதிரியான மான்சராட் (Monserrate), தான் ஆக்ராவுக்குச் சென்றிருக்கையில் அக்பர் கிறிஸ்தவ பாதிரிகளை அப்படியான ஒரு சண்டையைப் பார்க்க அழைத்ததையும், அது தங்களின் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று சொல்லி அந்தப் பாதிரிகள் மறுத்ததால் அக்பர் வருத்தமடைந்ததனையும் குறிப்பிடுகிறார்.

அக்பர் கணவனை இழந்த இந்துக் கைம்பெண்கள் உடன்கட்டை ஏறுவதனை வெறுத்ததாகவும், அதனைத் தடுத்துப் பலபெண்களைக் காப்பாற்றியதாகவும் நாம் படித்திருக்கிறோம். அது அக்பரின் முன்னேற்றச் சிந்தனையைக் காட்டுவதாக மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அப்படியா நடந்தது? அக்பர் தனக்குப் பிடித்த பெண்கள் சிலர் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்துப் பின்னர் அவரது அந்தப்புரத்திற்கு தள்ளிக் கொண்டு போனதைத் தவிர, உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதே உண்மை.

உடன்கட்டை ஏறும் பெண்ணைத் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்டு மகிழவருமாறு அக்பர் கிறிஸ்தவ பாதிரிகளை அழைத்த விவரத்தை கிறிஸ்தவ பாதிரியான மான்சராட் பதிவு செய்திருக்கிறார். “அக்பர் சதி(உடன்கட்டை) ஏறும் ஒரு நிகழ்வைக் காண உடனே வருமாறு பாதிரிகளுக்கு அழைப்பு விடுத்தார். நடப்பது என்னவென்று அறியாத பாதிரிகள் அங்கு சென்று அந்த்க் குரூரமான காட்சியைக் கண்டு வருத்தம் கொண்டனர்”.

ஒரு பெண் உடன்கட்டை ஏறுவதனைக் கண்டு குரூரமகிழ்ச்சி கொள்ளும், அதனைப் பிறருக்கும் காட்டி அவர்களையும் மகிழ்விக்க எண்ணும் ஒருவரா உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடைசெய்ய முயன்றிருப்பார்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அக்பர் என்னும் கயவன் – 9

 

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

குறிப்பு :

அக்பர் ஒரு தோற்றப் பொலிவுள்ள, உடல் வலிமையுள்ள, அழகானதொரு பேரரசன் என மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அக்பரைக் குறித்து நாம் காணும் படங்களெல்லாம் கனிவான முகத்தோற்றமுள்ள, நரைத்த மீசையுடன், நெற்றியின் நடுவே ஒரு வட்டத்திலகமுடன்(!) இருக்கும் ஒரு மரியாதைக்குரிய பெரிய மனிதனின் தோரணையுள்ளவை. நமது பாடப்புத்தகங்களில் மட்டுமில்லை, அக்பரைக் குறித்து நாம் காணும் திரைப்படங்களிலும் அக்பரை ஷாஜஹானின் கண்டிப்பான தந்தையாக அதாகப்பட்டது ஆளுமையுள்ள பிரித்விராஜ் கபூராக,  அல்லது ஜோதாபாய் என்னும் ஹிந்துப் பெண்ணைக் காதலித்து உருகும் ஹ்ரித்திக் ரோஷனாகத்தான் நாம் கண்டிருக்கிறோம். அதுவே நமது உள்ளங்களில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. உண்மையை ஆராய்வதே இந்த அத்தியாயத்தின் நோக்கம் என மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

நாம் இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்த ஒரு பிம்பம் நம் கண்முன்னே நொறுங்கி விழுவதனை அனைவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் உண்மையை நாம் உண்மையாகத்தான் நோக்கியாக வேண்டும்.

*****

ஆனால் உண்மையில் அக்பர் நமக்குச் சொல்லப்பட்டது போன்ற ஆளுமையுள்ள, தோற்றப் பொலிவுள்ள மனிதனா என்றால் அதுதான் இல்லை. “அக்பர் ஒரு அருவருக்கத்தக்க, அசிங்கமான தோற்றமுடைய மனிதர் (ugly and ungainly)” என்கிறார் அக்பரின் காலத்தில் அவரிடம் வந்து சேர்ந்த போர்த்துக்கிச்சிய பாதிரியான மொன்சராட்டே (Monserrate). அக்பரின் சமகால வரலாற்றை எடுத்துப் பார்க்கையில் அவர் உண்மையில் கொடூரமான மனபாவமுள்ள, எந்தவொரு துரோகச் செயலுக்கும் அஞ்சாத, படிப்பறிவற்ற குரூரன் என்பது நமக்குத் தெளிவாகும். அதனைக் குறித்து அடுத்துவரும் அத்தியாயயங்களில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் அக்பரும், அசோகரும் தனித்து நிற்கிறார்கள். அதில் அக்பர் தனது கொடுஞ்செயல்களால் அசோகரை விடவும் ஒருபடி உயர்ந்து நிற்பதனைக் காணலாம். அவர்களிருவரையும் ஒப்பிடுகையில், அக்பரின் நாடு பிடிக்கும் பேராசையும், நேர்மைப் பற்றாக்குறையும், குடிமக்களை தனது மக்களாக நினைத்து ஆண்ட, சுயகட்டுப்பாடு மிகுந்த அசோகரும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள். அக்பரின் போர்கள் அனைத்திலும் கொடூரக் கொலைகாரனான தைமூரின் வழிவந்த ஒருவரின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும்.

இந்திய வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து அக்பரை பிளாட்டோவின் தத்துவ அரசனைப் போலச் சித்தரித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்றாலும் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அந்தப் பொய்களைத் தோலுறித்துக் காட்டியிருக்கிறார்கள். அக்பரின் குணங்களான குள்ள நரித் தந்திரமும், நாடுபிடிக்கும் பேராசையும் இன்றைக்கு நம் கண்முன்னே திறந்து கிடக்கிறது. குளத்தில் கிடக்கும் பெரிய மீன் தன்னைச் சுற்றிலும் இருக்கும் சிறிய மீன்களை விழுங்குவதுபோல தன்னைச் சுற்றியிருந்த வலிமையற்ற அரசுகளை விழுங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் அக்பர்.

“அக்பரால் தனது பலதார மணம் புரியும் வழக்கத்தைக் கைவிட இயலவில்லை. ஒருசமயம் தனது அத்தனை மனைவிகளையும் தனது அரசவைப் பிரதானிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப் போவதாய் வந்த வதந்திகளையும் அவர் மறுக்கவில்லை. தனது மந்திரிப் பிரதானிகள் ஆணவம் பிடித்தவர்களாக மாறுவதனைத் தடுக்கும் பொருட்டு அவர்களின் பல அருவருக்கத்தக்க உத்திரவுகளை இட்டு அவர்களைத் தனது அடிமைகளைப் போல நடத்துவதில் ஆர்வமுடையவராக இருந்தார் அக்பர்” எனச் சொல்கிறார் பாதிரி மொன்சராட்டே.

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

அக்பரின் உருவத்தைக் குறித்து விளக்கவரும் பாதிரி மொன்சராட்டே, “அக்பர் பரந்த தோள்களை உடைய,  பலகீனமான கால்களை (bandy legs) கொண்ட, மெல்லிய பழுப்பு நிறமுடைய மனிதர். அவரது தலை அவரது வலது தோளை நோக்கி வளைந்திருந்தது. மிகப் ப்பரந்த, திறந்த முன் நெற்றியும், விளக்கைப் போல ஒளிரும் கண்களையும் கொண்டிருந்தார். அந்தக் கண்கள் சூரிய ஒளியில் பளிச்சிடும் கடலைப் போன்ற தோற்றம் கொண்டவை. அவருடை கண்ணிமைகள் மிக நீளமானவை என்றாலும் அவருடைய புருவங்கள் அத்தனை அழுத்தமானவையல்ல. மிக நேரான சிறிய மூக்கை உடையவர் என்றாலும் மூக்கு முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஏளனம் செய்யும் ஒருவனைப் போல மிகப் பெரிய மூக்குத்துவாரங்கள்.

அவருடைய இடது மூக்குத் துவாரத்திற்கும் மேலுதட்டிற்கும் இடையில் ஒரு கறுத்த மச்சமிருந்தது. அவர் தனது தாடியை மழித்தாலும் மீசை இன்னும் வயது வராததொரு துருக்கிய விடலைச் சிறுவனுடையதைப் போலத் தோற்றமளித்தது. தனது தலைமுடியை அவர் கத்தரிப்பதில்லை. அதற்குப் பதிலாக தனது கேசத்தை ஒரு பந்தாகச் சுருட்டித் தனது தலைப்பாகையினுள் அடைத்து வைத்திருந்தார்.  போர்களத்தில் எந்தக் காயத்தையும் இடதுகாலில் அடையாத அக்பர் தனது இடது காலால் நொண்டி நடந்தார். அவர் மிக குண்டானவரும் அல்ல; அதேசமயம் மிக ஒல்லியானவரும் இல்லை. தனது முகத்தைப் பெரிய மனிதத் தோரணையில் வைத்துக் கொண்டிருந்தார்.

அக்பரைச் சுற்றிலும் எந்த நேரத்திலும் ஆட்கள் கூட்டமாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் தனது தர்பாருக்கு வரும் வழியில் பலதரப்பட்ட மக்கள், முக்கியமாக முகலாய அரசின் பல்வேறு பகுதிகளுக்கான பிரதிநிதிகள் தங்களின் வருடாந்திர ராஜமரியாதையைச் செலுத்த வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனையை விட்டு வெளியே போகும் ஒவ்வொரு சமயமும் அவரைச் சுற்றி அவரது மந்திரிகளும், பாதுகாவலர்களும் பின் தொடர்ந்தார்கள். அக்பர் உத்தரவு கொடுக்கும் வரை அவர்கள் தரையில் நடந்துவர வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதுவரை அவர்கள் குதிரைகளில் ஏறாமல் நின்றார்கள்.

தங்கத்தால் அற்புதமாக சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகான உடைகளை அவர் அணிந்தார். தொடைவரைக்கும் மறைக்கும் ராணுவ உடையை அணிந்த அக்பரின் காலணிகள் அவரின் கணுக்கால்கள் வரை மூடி மறைத்தன. மிக உயர்ந்த தங்க, வைரங்கள் மற்றும் முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்தார். தன்னுடன் எப்போதும் ஐரோப்பிய குறுவாளையும், உடைவாளையும் உடலில் அணிந்தவராகக் காட்சியளித்த அக்பர் ஒருபோதும் ஆயுதங்களை விட்டுவிலகி இருக்கவில்லை. அரண்மனைக்குள்ளும் 20 பாதுகாவலர்கள் சூழவே காணப்பட்டார்.

அவரது உணவு மேசையில் ஏறக்குறைய 40 பல்வேறு விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சமயலறையிலுருந்து மெல்லிய லினன் துணிகளால் மூடப்பட்டு, சமையற்காரனின் முத்திரை பதிக்கப்பட்ட உணவு (யாரேனும் விஷம் வைக்காதிருக்கும் பொருட்டு) அரசர் உணவு உண்ணும் அறைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அந்த உணவை வேலைக்கார இளைஞர்கள் அக்பரின் அறைக்கதவு வரைக்கும் எடுத்துச் சென்றார்கள். பின்னர் அவர்களிடமிருந்து உணவு அலிகளிடம் கொடுக்கப்பட்டுப் பின்னர் வேலைக்காரப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டு அக்பரை அடைந்தது.

தனது உணவை அக்பர் தனியனாகவே உண்டார். ஏதேனும் விழாக்காலங்களில் மட்டும் பிறர் அவருடன் சேர்ந்துண்ண அனுமதிக்கப்பட்டார்கள். உணவு உண்கையில் பெரும்பாலும் குறைவாகவே மதுவருந்தும் அக்பர், “ப்ருஸ்ட்” (ஓப்பிய விதைகளால் செய்யப்பட்ட பானம்) அல்லது தண்ணீரைக் குடித்தார். அதிகமாக “ப்ருஸ்ட்” குடிக்கும் நேரங்களில் கண்கள் சொருக உடல் நடுங்க ஆரம்பிக்கும்.

ஜலாலுதின் (அக்பர்) வெளிநாட்டவரையும், முன்பின் அறியாதவரையும் தனது நாட்டுக் குடிமகன்களையும்,  அரசவையைச் சார்ந்தோரையும் நடத்துவது போலல்லாமல் வேறு விதமான வரவேற்பினை நல்குவார். பொதுவாக வெளிநாட்டவர்களிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் அக்பர், அரேபியாவின் சனாவிலிருந்து (யேமன்) வந்த துருக்கிய கவர்னரை மிகக் கேவலமாக நடத்தினார். அந்தத் துருக்கிய கவர்னரின் முக்கிய தூதரின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு அவரை லாகூர் சிறையில் அடைத்தார். அந்தத் தூதுவரின் வேலைக்காரர்கள் மிகுந்த சிரமத்துடன் ரகசியமாக அங்கிருந்து தப்பினர். அக்பரின் அரசவையினரை மிகக் கடுமையாக நடத்திய அக்பர் அவர்களை மிகவும் கீழ்த்தரமானவர்களாகவே எண்ணினார். அவர்கள் செய்யும் சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. தன்னுடைய சொந்த அமைச்சர்களுக்கே இதுபோன்ற தண்டனைகளை வழங்கிய ஜலாலுதின் தனது குடிமக்களை அதற்கும் அதிகமான கீழ்த்தரமாகவே நடத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஜலாலுதினால் (அக்பரால்) ஒரு எழுத்தைக்கூட எழுதவோ அல்லது படிக்கவோ இயலாது!

ஜலாலுதினிடம் ஏறக்குறைய 20 ஹிந்து நிர்வாகிகள் அமைச்சர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும் பணியாற்றி வந்தனர். அவர்கள் முழுமையாக அக்பருக்கு அடிபணிந்து அவரது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்கள். அவர்கள் எப்போது அக்பரைச் சூழ்ந்தே இருந்தார்கள். அரண்மனையின் அத்தனை இடங்களுக்கும் செல்ல அவர்களுக்கு அனுமதி இருந்தது. அந்த அனுமதி அக்பரின் சொந்த மங்கோலியர்களுக்குக் கூட அளிக்கப்படவில்லை.

இந்த இடத்தில் அக்பர் ஹிந்துக்களை தனது அரண்மனைக்குள் நுழைய விட்டதனைக் குறித்து தவறாகப் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. அக்பர் ஹிந்துக்களை தனக்கு அருகே வைத்துக் கொண்டது அவரது பாதுகாப்பிற்கேயன்றி வேறெதற்குமில்லை. அவரது மங்கோலிய உறவினர்களைப் போல அல்லது அரசவை முஸ்லிம்களைப் போல ஹிந்துக்கள் தன்னைக் கொலை செய்ய முயலமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அக்பருக்கு இருந்தது. ஹிந்துக்களுக்குத் தான் எத்தனை துன்பம் விளைவித்தாலும் கடவுளுக்கு அஞ்சி அவர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்கிற எண்ணமும், அவர்களின் மரியாதையான நடத்தையும், முட்டாள்தனமும் தனக்கு லாபமாக இருப்பதனை உணர்ந்தவர் அக்பர்.

ஹிந்துக்களின் இடங்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நேரத்தைத் தவிர அக்பர் ஒருபோதும் அவரது சொந்த முஸ்லிம்களை நம்பியதில்லை. சக முஸ்லிம்களை தன்னுடைய பொக்கிஷ அறைக்கோ அல்லது அவரது அந்தப்புரத்திற்கோ நுழைய அவர் அனுமதித்ததேயில்லை என்பதே உண்மை.

வரலாற்றாசிரியர் டாக்டர் ஸ்ரீவத்சவ், “ஒரு சோம்பேறிக் குழந்தையாக வளர்ந்த அக்பர் ஒருபோதும் படிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ அமரவில்லை. எனவே அவர் தனது வாழ்நாள் முழுவதும் படிப்பறிவற்றவராகவே இருந்தார். தன்னைப் போலக் கல்வியறிவு இல்லாத ஒருவரும் அதனைக் குறித்து அவமானப்படத் தேவையில்லை என்பதே அக்பரின் எண்ணமாக இருந்தது. நம்முடைய தீர்க்கதரிசிகள் (நபி) படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே நம்பிக்கையாளர்கள் அவர்களது குழந்தைகளையும் கல்வியறிவற்றவர்களாகவே வயவளர்க்க வேண்டும் என மனம் திறந்து சொன்ன ஒரே பேரரசர் அக்பராகத்தான் இருக்க முடியும்”.

அக்பரின் இந்தக் கூற்றே அவரது கல்வியற்ற மூட மனோபாவத்தை விளக்கிச் சொல்லும்.

அக்பர் மூடத்தனமும், மூட நம்பிக்கைகளும் கலந்ததொரு கலவையான மனிதன். அக்பர் ஒரு சிறந்த நிர்வாகியென்றும், அவரது எதிரிகளிடம் மிகுந்த கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார் என்று சொல்வதனைப் போன்ற பொய் வேறொன்றுமில்லை. தன்னிடம் வந்து தனக்கு மரியாதை செலுத்தாத ஹிந்து அரசர்களை அக்பர் ஒருபோதும் மன்னித்ததில்லை.

“அக்பர் ஒருபோதும் தனது மனத்தில் ஓடும் எண்ணங்களை வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. வெறும் சுய நல எண்ணம் மட்டுமே நோக்கமாக தனக்குப் பிடிக்காத ஒருவரை ஒருவர் மோதவிட்டு அதில் குளிர்காயும் மனிதராகவே வாழ்நாள் முழுக்க இருந்தார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் ஒரு போதும் உண்மை வெளிவந்ததில்லை. வார்த்தைகளைத் திரித்தும் மறுத்தும் கூறுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். இன்றைக்கு அக்பரை ஒரு விதமாகப் பார்க்கும் மனிதன் நாளை முற்றிலும் வேறொரு மனிதனைச் சந்திப்பான். அவரை முதலில் சந்தித்த நாளிலிருந்து இறுதி நாட்கள் வரைக்கும் அவரது உண்மையான ரூபத்தை நான் காணவே இல்லை” என்கிறார் அவரைச் சந்தித்த பாதிரியான பர்த்தோலி.

கதைகளால் மூளை மழுங்கடிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு சிலருக்கேனும் இது ஒரு புதிய திறப்பினை அழிக்கும் என நம்புகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அக்பர் என்னும் கயவன் – 10

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

சிந்து (Indus) நதியைக் கடப்பதக்குச் சரியானதொரு இடத்தைக் கண்டுபிடிக்கும்படி ஒரு அதிகாரிக்கு உத்தரவிடுகிறார் அக்பர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த ஆசாமி ஆற்றைக் கடப்பதற்கு சரியான இடம் எதுவுமில்லை என்று பதிலளிக்கிறார். நான் சொன்ன இடத்தில் போய்ப் பார்த்தயா? என்று கேட்கிறார் அக்பர். அவ்வளவு தொலைவு செல்லவில்லை என்று சொல்லும் அந்த அதிகாரியை உடனே பிடித்துக் கயிற்றில் கட்ட உத்தரவிடும் அக்பர், அந்த ஆசாமியை அழைத்துக் கொண்டு தான் சென்று பார்க்கச் சொன்ன இடத்திற்கு போகிறார். மாட்டுத்தோலில் காற்றடைக்கப்பட்ட ஒரு மிதவையில் அந்த ஆளைத் தூக்கிப் போட்டுக் கட்டி ஆற்றில் தூக்கி எறிய உத்தரவிடுகிறார். அதன்படியே செய்து முடிக்கிறார்கள்.

அக்பரின் சேனையிலிருந்த அத்தனை பேர்களும் ஆற்றின் கரையில் நின்று அந்தக் காட்சியைக் காண்கிறார்கள். மிதவையில் கட்டப்பட்ட அந்த அதிகாரி ஆற்றின் போக்கில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அலைக்கழிக்கப்படுகிறார். கண்ணீர் விட்டுக் கதறி அழும் அந்த ஆள் தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகிறான். அக்பரின் கூடாரத்தைத் தாண்டி அந்த மிதவை செல்கையில் அவரை ஆற்றிலிருந்து மீட்கச் சொல்லிய அக்பர், அந்த ஆளை அரசாங்கச் சொத்தாக கணக்கெழுதச் சொல்கிறார். அதன்படி அந்த ஆள் சந்தயில் விற்பனைக்குக் கொண்டு போகப்பட்டு அடிமையாக விற்பனை செய்யப்படுகிறான். அந்த ஆசாமியுடைய நண்பர்களில் ஒருவர் அவரை 80 பொற்காசுகளுக்கு விலைக்கு வாங்குகிறார். அந்தப் பணம் அரசாங்கப் பொக்கிஷத்தில் சேர்க்கப்படுகிறது. இப்படியாக தவறு செய்த ஒருத்தனைத் தண்டிக்கும் அக்பர், அவனை அடிமையாக விற்பனை செய்து அதில் காசும் பார்க்கிறார்.

பாதிரி மான்செராட் அக்பரின் தந்திர நடத்தையைக் குறிக்கும் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். “கைபர் கணவாயைக் கடந்து சமவெளியை அடைந்த அக்பர், தான் ஆப்கானிஸ்தானுக்குப் போகையில் தனக்கு உணவு தானியங்களை அளிக்க மறுத்த கிராமங்களை எரித்து அழிக்கும்படி உத்தரவிட்டார்.  போருக்குப் போகையில் அந்தக் கிராமத்தினரைத் தாக்கினால் கைபர் கணவாயின் குறுகிய வழியில் தானும் தன்னுடைய படையினரும் தாக்குதலுக்கு உள்ளாக நேருமென்பதாலும், ஒருவேளை போரில் தோல்வியடைந்து இந்தியாவுக்குப் பின்வாங்க நேர்ந்தால் அவர்கள் வழியை அடைத்துவிட வாய்ப்பிருப்பதாலும் அவர்களை ஒன்றும் செய்யாமல் சென்ற அக்பர், ஆப்கானிஸ்தானத்திலிருந்து திரும்பி வருகையில் அதனை மறக்காமல் அந்தக் கிராமத்தினரை தாக்கி அழித்தார்”.

தன்னை எதிர்த்த இளவரசன் ஒருவனை குவாலியர் கோட்டையில் அடைத்து, அவன் சாகும் வரை சங்கிலியால் பிணைத்து கட்ட உத்தரவிட்டதை நினைவு கூர்கிறார் பாதிரி மான்செராட். பொதுவாக தண்டனைக்குள்ளான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிற அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் மூலமாக குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் சாதாரணர்கள் அரச காவலாளிகளிடம் அல்லது தபால்களை சுமந்து ஓடுபவர்களிடம் தண்டனை வழங்க ஒப்படைக்கப்படுவார்கள். மேற்படி காவலளி தோல்பட்டைகளும், சாட்டைகளும், கூர்மையான ஆணிகள் அறைந்த மரக்கட்டைகளும், கைதிகளை அடிக்க உதவும் வழ வழப்பான கட்டைகளும்,  அவனின் தலையை நசுக்கிக் கொல்லும் ஆணியறையப்பட்ட வழ,வழப்பான பலகைகளும் எனப் பல கொடூரமான ஆயுதங்களைத் தன்னுடன் வைத்திருப்பான். அத்துடன் பலவிதமான சங்கிலிகளும், இடுக்கி போன்ற ஆயுதங்களும், கை விலங்குகளும் மற்ற இரும்பால் செய்த கொடூரமான ஆயுதங்களும் அரண்மனையில் வாயில் கதவுகளுக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருக்கும். அதனை தண்டனை வழங்கும் காவலாளி பாதுகாத்துக் கொண்டிருப்பான்.

*******

அக்பரின் சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்தான நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் பெரும்பாலான அவரது போர்களின் நோக்கம் தோற்கடிக்கப்பட்ட அரசர்களின் பெண்களைப் பிடித்து தனது அந்தப்புரத்தில் அடைப்பது என்பதுதான். தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது.

முகலாய அந்தப்புரம் – ஒரு ஓவியம்

அதையும் விட தனது அந்தப்புரத்திற்குப் பெண்களைக் கவர்ந்து வருவதற்கு அக்பர் பலவிதமான தந்திரங்களையும் கடைபிடித்தார். தன்னைப் பார்க்க வருகிற முக்கியஸ்தர்கள் அல்லது அவரின் படைத்தளபதிகளின் மீதான அக்பரது கோபத்தைத் தனித்து அவரைக் குஷிப்படுத்த அந்தப்புரத்திற்குப் பெண்களை அனுப்ப நிர்பந்திக்கப்பட்டார்கள். அல்லது கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏற முயலும் பெண்களைக் காப்பாற்றுவது என்கிற போர்வையில் அவர்களைத் தூக்கி வருவது, தோற்ற அரசனின் பெண்களைக் கும்பலாக இழுத்துக் கொண்டு வருவது போன்றவை அக்பராலும் அவரது படையினராலும் செய்யப்பட்டன.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழும் ஒரு பேரரசனின் சுகத்திற்காக ஆடுகளைப் போல அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு வாழ்ந்த அந்தப் பரிதாபகராமான அந்தப் பெண்களின் அவலத்தை எவராலும் எளிதில் யூகிக்க முடியும். என்றைக்காவது வெளியூர் செல்லும் அக்பரின் அந்தப்புரத்து அழகிகள் பெண் யானையின் மீது நாலாபுறமும் அடைக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட கூண்டுகளில் ஏற்றப்பட்டு,  அவரின் கூடச் செல்லும் வாழ்வினை மகிழ்ச்சியாகவா நினைத்திருப்பார்கள்? அவர்களின் வாழ்க்கை முழுவதும் புர்காக்களால் அடைக்கப்பட்ட ஊமை விலங்குகளைப் போல வாழ்ந்த அவர்கள், அக்பரின் பார்வை தன்மீது விழும்வரை ஒரு மூலையில் கிடந்தார்கள்.

அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பாதிரிகளின் குறிப்பைக் கூறும் வரலாற்றாசிரியர் ஸ்மித்,”1582-ஆம் வருடம் அகாவிவா (Aquaviva) என்கிற பாதிரியின் தலைமையில் வந்தவர்கள் அக்பர் ஒரு பெரும் குடிகாரர் எனக் காண்கிறார்கள். வயதான பாதிரியான அகாவிவா அக்பரின் பெண்களைச் சூழ்ந்து வாழும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறையைக் குறித்து கண்டனம் செய்கிறார். தன்னை விமர்சிப்பவர்களை மன்னிக்கும் மனோபாவமற்றவரான அக்பர் முகம் சிவந்து அந்த இடத்தைவிட்ட அகன்றார்” என்கிறார். போதைக்கு அடிமையான அக்பரின் முன்னோர்களில் இருந்து அக்பர் எந்தவிதத்திலும் மாறியவராக இருக்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

அடுத்தவனின் மனைவிகளை அபகரிக்கும் எண்ணம் அக்பருக்குள் பெரும் நெருப்பெனக் கனன்றுகொண்டே இருந்திருக்கிறது. அக்பரின் தளபதிகளில் ஒருவனான ஆதம்கான் மால்வாவின் அரசன் பாஸ்பகதூரைத் தோற்கடிக்கிறான். பாஸ்பகதூர் இன்னுமொரு கேடுகெட்ட, தீயொழுக்கம் நிரம்பிய இஸ்லாமிய அரசன். பாஸ்பகதூரின் அந்தப்புர அழகிகளை ஆதம்கான் தனதுடையவர்களாக ஆக்கிக் கொண்டான் என ஆக்ராவிலிருக்கும் அக்பருக்குத் தகவல் வருகிறது. தனக்குக் கிடைக்க வேண்டிய அழகிகளைத் தனது தளபதி கைப்பற்றிக் கொண்டதனை அறிந்த பத்தொன்பது வயதே நிரம்பிய அக்பர்  பெரும் கோபம் கொண்டு உடனடியா ஆக்ராவை விட்டு (ஏப்ரல் 27, 1561) மால்வாவுக்குக் கிளம்புகிறார். ஆதம்கான் அக்பரின் தாதியான மஹம்  அனாகா என்பவளின் மகன். அக்பரின் குரூர மனப்பான்யையும், கொலைவெறித்தனத்தையும் நன்கு அறிந்தவளான மஹம் அனாகா உடனடியாக ஆட்களை அனுப்பி ஆதம்கானை எச்சரிக்கிறாள்.

பின்னர் அக்பரைத் தொடர்ந்து செல்லும் மஹம் அனாகா அக்பரிடம் தனது மகனின் தவறை மன்னிக்கும்படி வேண்டுகிறாள். அக்பர் ஆதம்கானை மன்னிக்கிறார். ஆனால் ஆதம்கானோஅந்தப்புரத்திலிருந்த இரண்டு பேரழகிகளான ஹிந்துப் பெண்களை  அக்பருக்குத் தெரியாமல் தள்ளிக் கொண்டுபோய் ஒளித்துவைக்கிறான். ஆக்ராவுக்குப் புறப்படத் தயாராக இருந்த அக்பருக்குத் தெரிய வருகிறது. உடனடியாக அந்தப் பெண்களை தன் முன்னர் அழைத்துவரும்படி ஆணையிடுகிறார் அக்பர். அந்தப் பெண்கள் அக்பருக்கு முன் வந்து உண்மையைச் சொன்னால் தன்னுடைய மகனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சிய மஹம் அனாகா அந்த இரண்டு அப்பாவி ஹிந்துப் பெண்களையும் கொலை செய்கிறாள். பின்னர் அக்பரிடம் அந்தப் பெண்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறாள். பின்னர் அந்தப் பெண்களைப் பற்றி அக்பர் எதுவும் கேட்கவில்லை. இறந்து போனவர்களைப் பற்றி அவருக்கு என்ன கவலை?

தனது மிகச் சிறிய பதினாலாவது வயதில் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாக அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல்ஃபசல் புர்காக்களின் பின்னே வீழ்ந்து கிடந்த அக்பரைக் குறித்து ஓயாமல் புகழ்கிறார்.

அக்பரின் பாதுகாவலரும், மாமனுமான பைராம்கானுடன் ஏற்பட்ட பகை காரணமாக பைராம்கானின் அதிகாரங்களை படிப்படியாக பிடுங்கி அவரைக் கொலை செய்தபின் அக்பர் வேசிகளால் ஆட்டுவிக்கப்பட்டார் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். “பைராம்கானின் அதிகாரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அக்பர் நேர்மையற்ற, தீய எண்ணம் கொண்ட பெண்கள் பட்டாளத்தினால் ஆட்டுவிக்கப்பட்டார். மிக மோசமான பாவாடை அரசாங்கம் நடத்திய அக்பர், ராஜாங்க நடவடிக்கைகளில் முற்றிலும் தனது ஆர்வத்தை இழந்தவராக இருந்தார். மஹம் அனாகா போன்ற நம்புவதற்குத் தகுதியற்ற பெண்கள் அவரை ஆட்டுவித்தார்கள்” என்கிறார்.

முகலாய வரலாற்றில் மகம் அனாகாவின் இடம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. பெண்களைக் கூட்டிக் கொடுகிற, அக்பரின் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு பெண்களைத் தயார் செய்து, அக்பருக்கும் பிற அரசவை முக்கியஸ்தர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அழகிகளைஅனுப்பி வைக்கிற மகம் அனாகா முகலாய அரசின் முக்கிய முடிவுகளில் தனது ஆளுமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்தாள். இரண்டு அப்பாவி ஹிந்துப் பெண்களின் கொலையில் மஹம் அனாகாவின் பங்கினை ஏற்கனவே பார்த்தோம்.

அக்பரின் பெண்ணாசையைக் குறித்துக் கூறும் பதாயுனி, “மதுராவிற்குச் செல்லும் அக்பர் அங்கிருக்கும் முக்கியஸ்தர்களின் பெண்களுடன் திருமண உறவு கொள்வதற்காக கவ்வாலி பாடுகிறவர்களையும், அலிகளையும் சுற்றியுள்ள நாடுகளுக்கு அனுப்பி வேவு பார்த்தார். அந்தப்புரங்களில் மிக எளிதாகப் புகுந்த அவர்கள் அங்கிருந்த அழகிகளைக் குறித்து அக்பருக்குச் சொன்னார்கள். மொத்த நகரத்திலும் அச்சம் ஒரு பெரும் தீயைப் போலப் பரவியது. அப்துல் வாஸி என்பவனுடைய மனைவி மிகப் பேரழகுடையவள். அக்பரின் கண்கள் அவள் மீது பட்டன. முகலாய அரசர் எந்தவொரு பெண்ணின் மீதாவது ஆசை வைத்தால் அந்தப் பெண்ணின் கணவன் சத்தமில்லாமல் விவாகரத்து செய்துவிட்டு அவளை உடனடியாக அரசரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்”.

அவ்வாறு அனுப்ப மறுப்பவர்களுக்கு நிகழும் கதியை நம்மால் எளிதாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். அப்பாவிகளின் அந்தப்புரத்தில் புகுந்து அழகான பெண்களைத் அரசனுக்காகத் தூக்கிச் செல்லும் ஆயுதம் தாங்கிய முகலாய படைத்தலைவனை யாரால் என்ன செய்துவிட முடியும்?

இதன் காரணமாகவே பெரும்பாலான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர் தங்களின் பெண்களின் முகத்தில் வாளால் வெட்டியும், தீயில் கருக்கியும் அவளது முகத்தை அவலட்சணமாக்கினார்கள். இன்னும் சிலர் தங்களைத் தூக்கிச் செல்ல வந்த முகலாயப் படைத்தலைவனுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அவனது மனதை மாற்ற முயன்றார்கள். பெரும்பாலான சமயங்களில் தப்புவதற்கு வாய்பில்லாமல் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தின் ஐயாயிரத்தில் ஒருத்தியாக அடைபட்டார்கள். இதன் காரணமாகவே அக்பர் வரும் வழியிலிருந்த அப்பாவிகள் சிதறி ஓடினார்கள். தங்களின் சொத்துக்களைப் பறிகொடுத்து பராரிகளானாவர்கள் தங்களின் மனவிகளை, அன்னையரை, சகோதரிகளை ஒரு கயவனுக்கு ஒப்புக் கொடுக்க மனமின்றி அஞ்சி ஒடுங்கினார்கள்.

(தொடரும்)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அக்பர் என்னும் கயவன் – 11

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன. அவரைச் சந்திக்க வருபவர்கள் பெண்களை பல இடங்களிலிருந்தும் கொண்டுவந்து அவரிடம் ஒப்படைத்தார்கள். வரலாற்றாசிரியர் பதாயுனி சொல்கிறார், “ஷியாக்கள் என்கிற ஒரே காரணத்திற்காக காஷ்மீரை ஆண்ட மீர் யாகூப்பும், பாரசீகத்தின் இஸ்ஃபஹானைச் சார்ந்த மிர்ஸா முக்கிமும் அக்பரால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹுசைன் கான் என்பவரின் இரு மகள்களை அக்பருக்குப் பரிசளிக்க அரசவைக்கு வந்தவர்கள்”.

இதன்படி யார் வேண்டுமானாலும் யாருடைய மகளையோ, சகோதரியையோ அல்லது மனைவியையோ தூக்கிக் கொண்டு வந்து அக்பருக்குப் பரிசாக அளிக்கலாம் அல்லது அவனது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலைமைதான் அக்பரின் ஆட்சிக்காலத்தில் நிலவியிருக்கிறது எனக் காட்டுகிறது.

நகர்ப்புறங்களுக்கும், கிராமப்பகுதிகளுக்கும் சென்ற அக்பரின் படையினர் அங்கிருந்த ஆண்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பெண்களைக் கைப்பற்றி அவர்களை இரக்கமின்றி வன்புணர்வு செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தப் பெண்கள் வாழ வழியின்றி விபச்சாரம் செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான அபலைப் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. பதாயுனி, “முகலாய அரசில் விபச்சாரிகளின் எண்ணிக்கை தலைநகரில் எண்ணவே இயலாத அளவிற்குப் பெருகிக் கொண்டே சென்றது.  அக்பர் அவர்களை கவனித்துக் கொள்ள ஒரு மந்திரியையும், ஒரு செயலாளனையும் நியமித்தார். அந்தப் பெண்களை உபயோகித்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்லலாம். அதேசமயம் நடனப் பெண்களை எவரும் தங்களது வீடுகளுக்கு, ஒருசில நிபந்தனைகளுக்கு உட்படாமல்,  அழைத்துச் செல்வதனை  அக்பர் அனுமதிக்கவில்லை.

யாருக்கேனும் ஒரு  கன்னிப் பெண் தேவைப்பட்டால், அவர்கள் அக்பருக்கு அறிந்தவர்களாக இருந்தால், அவர்களின் உதவியாளர்கள் மூலம் அக்பருக்கு மனு அளிக்க வேண்டும். எத்தனை சட்ட திட்டங்கள் புனையப்பட்டாலும் பலர் புனைப்பெயர்களை உபயோகித்து அந்தப் பெண்களை தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். இதன் காரணமாக தீயொழுக்கம் மிகுந்த குடிகாரர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்தினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் இதுபோன்ற செயல்களை அக்பரால் முழுமையாகக் கட்டுப்படுத்த இயலவில்லை.

அக்பர் தனக்குத் தெரிந்த பல விபச்சாரிகளைத் தனிப்பட்ட முறையில் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து அவர்களை யார், யாரெல்லாம் உபயோகித்துக் கொண்டார்கள் என்பது போன்ற ‘கிளு, கிளு’ கதைகளை கேட்டு மகிழ்ந்தார்” என்கிறார்.

இந்தியாவில் நடந்த இஸ்லாமிய ஆட்சி ஹிந்துஸ்தானத்தை ஒரு மாபெரும் விபச்சார கூடமாக மாற்றியது. அவ்வாறு மாற்றிய இஸ்லாமிய அரசர்களுக்கெல்லாம் அரசன் அக்பர்தான் என்பதில் சந்தேகமில்லை.

போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார். ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையில் கூடிக் கொண்டே போன தோல்வியுற்ற அரசர்களின் பெண்கள் எவ்வாறு வன்புணர்வுக்கும், விபச்சாரம் செய்வதற்கும் ஆளானார்கள் என்பதனை விளக்குவதற்கு பதாயுனி சொல்லும் ஒரு சம்பவம் இது. “ஆப்கானின் ஸ்வாட் பகுதியையும் பாஜூரையும் பிடித்து அழிக்கும்படி அக்பர் தனது தளபதிகளான ஜய்ன் கோகாவுக்கும் ஆசஃப்கானுக்கும் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அந்தப் பகுதியை ஆண்ட ஜலாலாவைத் தோற்கடித்து பல ஆயிரக்கணக்கான படைவீரர்களைக் கொன்றனர். ஜலாலாவின் மனைவிகளும், அவரது குடும்பமும் பின்னர் 14,000 மேற்பட்ட உறவினர்களும் அக்பரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்”. இப்படியாக அக்பரை அடைந்த ஏராளமான பெண்கள் ஆடு, மாடுகளைப் போல நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். பின்னர் அரசவையின் முக்கியஸ்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டார்கள். பல ஆண்களின் கைமாறிய அந்த அப்பாவிப் பெண்களின் நிலையை விளக்குவது கடினம். நேரம் காலமில்லாமல் புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண்கள் சரியான உணவின்றி அழுக்குப் பிடித்த அறைகளில் அடைத்துவைக்கப்பட்டார்கள். தினப்படி ஏச்சும், தங்களின் அந்தஸ்திற்குத் தகுதியில்லா கேவலமான வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டும்,  மூக்கின் முனை வரைக்கும் வரும் புர்க்காக்களை அணியச் செய்தும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

பல தார மணத்தை விலக்க இயலாத அக்பர் தனது அந்தப்புரத்திலிருக்கும் பெண்களை தனது அரசவைப் பிரதனிகளுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாக வதந்திகள் பரவியது. அந்த வதந்திகள் உண்மையானதாகவே இருக்க வேண்டும். அக்பருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைவிகள் இருந்ததில்லை என்பதினை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தன்னுடைய அந்தப்புரத்திலிருந்த அத்தனை பெண்களும் தன்னுடையவர்கள் என்கிற எண்ணமுடையவர் அக்பர். வெல்லப்பட்ட நாடுகளில் இருக்கும் எந்தவொரு அழகிய பெண்ணும் தனது அந்தப்புரத்திற்கு மட்டுமே வந்தாக வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்படியே அக்பர் தனது அந்தப்புரத்துப் பெண்களை பிறருக்குப் பகிர்ந்தளித்திருந்தாலும் அவருக்கு ஒன்றும் குறைந்திருக்கப் போவதில்லை. ஏனென்றால் அக்பரின் அந்தப்புரம் தொடர்ச்சியாக வெல்லப்பட்ட நாட்டுப் பெண்களால் நிரம்பிக் கொண்டே இருந்தது.

இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இருந்த ஒற்றுமைகளைக் குறித்து அக்பரின் அரசவை முஸல்மான்களிடம் விவாதித்துக் கொண்டிருந்த பாதிரி மொன்சராட்டே, அவருடைய சக பாதிரியான ருடால்ஃப் என்பவர் இஸ்லாமின் தீர்க்கதரிசியானவர் அவருடைய புத்தகத்தில் தான் இயற்கைக்கு முரணான புணர்ச்சிகளைச் செய்ய (சிறுவர்களுடன்) அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருப்பதனை சுட்டிக்கட்டியவுடன் அங்கிருந்த முஸல்மான்கள் அவமானத்தில் முகம் சிவந்தார்கள் என்கிறார்.

டாமனில் எதிர்பாராரத தாக்குதலைத் துவங்கிய முகலாயப் படைகள், தங்களிடம் பிடிபட்ட போர்த்துக்கீசிய சிப்பாய்களிடம் அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் அழகான, ராஜகுலப் பெண்களைப் பரிசளிப்பதாக அக்பரின் படையினர் வாக்களித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த போர்ச்சுக்கீசிய சிப்பாய்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு அக்பரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு வாக்களிக்கப்பட்ட “அழகான, ராஜகுலப்” பெண்கள் அக்பரால் சிறைப்பிடிக்கப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஹிந்துப் பெண்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் அக்பராலும் அவரது முகலாய அரசவையினராலும், சிப்பாய்களாலும் விபச்சாரிகள், நாட்டியப் பெண்கள், அடிமைகள் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வாறே அவர்கள் எழுதிய குறிப்புகளிலும் எழுதி வைத்திருக்கின்றனர் என்பதினைக் காணலாம்.

தன்னிடம் பிடிபட்ட பெண்களைத் துன்புறுத்தாமல், கற்பழிக்காமல் விட்டு வைப்பது ஒரு பெரும் இரக்க குணமாக தம்பட்டமடித்துக் கொண்டார் அக்பர். அவ்வாறு நிகழ்வது அபூர்வமான ஒன்று. அயோத்தியாவை ஆண்ட மாசும் ஃபரான்குடியைத் தோற்கடித்து விரட்டிய அக்பர் அவரது படைத்தலைவனான ஷாபாஸ்கானிடம் மாசுமின் வீட்டுப் பெண்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டது ஒரு உதாரணம். அனேகமாக ஒரு ஹிந்து அரசருக்கு அவ்வாறு நிகழ்வது சாத்தியமேயில்லை.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, விதவையான ஹிந்துப் பெண்கள் ஆற்றங்கரையில் உடன்கட்டை ஏறுவதினை தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து அக்பர் ரசித்துப் பார்ப்பதுடன், தனது விருந்தினர்களையும் அழைத்து அதனைக் காட்டி மகிழ்வார். அதேசமயம் அந்த விதவைப் பெண் அழகானவளாக இருந்தால் அக்பர் அந்தப் பெண் உடன்கட்டை ஏறுவதனைத் தடுத்து அவளைத் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டு செல்வார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ராய் ராய்சிங்கின் மகளை பன்னவைச் சேர்ந்த ராஜா ராமச்சந்திராவின் மகனான  விர் பத்ரா மணமுடித்திருந்தார். விர் பத்ரா அக்பரிடம் பணிபுரிந்து கொண்டிருந்தார். ராஜா ராமச்சந்திரா இறந்தவுடன் அக்பர் அவரை பன்னாவிற்குச் சென்று ஆட்சிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்படி உத்தரவிடுகிறார். ஆனால் விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று அவளையும் தனது அந்தப்புரத்தில் அடைத்துவிட்டார்.  மேலோட்டமாகப் பார்க்கையில் மிக உயரிய ஒன்றாகத் தெரியும் இதனை சிறிது யோசித்தால் அந்தப் பெண்ணை அடைவதற்காக அகபர் செய்த் திட்டமிட்ட படுகொலை என்பதனை நாம் உணரலாம். விர் பத்ரா அக்பரின் அரசவையின் பணிபுரிந்த ஒருவர் என்பதால் அக்பர் அவரது மனைவியை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

விர் பத்ராவின் மரணத்தில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் ஏராளம். பன்னாவின் தலை நகரை அடைய இருக்கையில் எப்படி விர் பத்ரா திடீரென பல்லக்கில் இருந்து கீழே விழுந்தார்? அப்படியே விழுந்திருந்தாலும் தரையிலிருந்து சில அடிகள் உயரமே இருக்கிற பல்லக்கில் இருந்து விழுந்தவுடனேயே எப்படி ஒருவனால் அதே இடத்தில் மரிக்க முடியும்?

ராஜா ஜெய்மல்

இதுபோன்ற இன்னொரு சம்பவத்தையும் பார்ப்போம். ராஜா பகவான்தாஸின் உறவினரான ஜெய்முல் என்பவர் அரச காரியமாக நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அவரச காரியம் எனச் சொல்லப்பட்டதால் தொடர்ந்து குதிரையில் பயனிக்கும் ஜெய்முல் சவுசா என்கிற இடத்தில் வெயில் தாங்காமல் களைப்புற்று இறந்துவிட்டார் (என அக்பரின் வரலாற்றாசிரிய அபுல் ஃபசல் கூறுகிறார்). உதய்சிங்கின் மகளான ஜெய்முல்லின் மனைவி கணவனுடன் தானும் உடன்கட்டை ஏறப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கையில் அக்பர் அந்த இடத்திற்கு குதிரையில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைத் தடுக்கிறார். அவளுடைய உறவினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்னர் அந்தப் பெண்ணும் அக்பரின் அந்தப்புரத்தில் சென்று அடைபடுகிறாள்.

இந்தச் சம்பவத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ராஜா ஜெய்முல் இளவயதுடையவர். உடல் வலிமை கொண்டவர். அனேகமாக ஒரு முக்கியமில்லாத, போலித்தனமான வேலையைச் செய்யப் பணிக்கப்பட்டஅவர் அக்பரின் அரசவையை விட்டு வெளியே வந்தவுடனேயே அவர் இறந்திருக்க வேண்டும். அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்பரால் எப்படி அந்த இடத்திற்கு உடனடியாக வந்திருக்க முடியும்? ஜெய்முல் இன்ன இடத்தில்தான் இறப்பார் என்று முன் கூட்டியே அறிந்திருந்தாலன்றி அக்பரால் உடனடியாக குதிரையில் ஏறி அங்கு வந்திருக்க இயலாது என்பதே உண்மை. எனவே ஜெய்முல் அக்பர் இருக்குமிடத்திற்கு அருகாமையில்தான் இறந்திருக்க முடியும்.

ஜெய் முல்லின் மனைவி உடன் கட்டை ஏறும் இடத்திற்கு அக்பரே தன்னந்தனியாக குதிரையில் விரைந்து வந்து காப்பாற்றியதெல்லாம் அபுல் ஃபசலின் கற்பனையாகத்தான் இருக்க முடியும். அக்பர் அந்தப் பெண்ணைக் கைப்பற்றிக் கொண்டு போனால் ஜெய்முல்லின் உறவினர்கள் அதனைத் தடுப்பார்கள் என்பதால் தகுந்த பாதுகாப்புடனேயே அங்கு அவர் போயிருக்க வேண்டும். ஏற்கனவே சொன்னபடி எதிர்த்தவர்கள் அத்தனைபேர்களும் பாதாளச்சிறையில் சென்று முடிந்தார்கள். எனவே இது ஒரு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகமே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 12

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பர் தான் தோற்கடிக்கும் நாடுகளில் இருந்து பெண்களைப் பிடிப்பதனை ஒரு தொழிலாகவே கொண்டிருந்ததொரு கயவன் என்று நான் சொன்னால் பெரும்பாலான இந்தியர்கள் அதனை மறுக்கவே செய்வார்கள். ஏனென்றால் அவர்களது மூளை பொய்களாலும், புனை கதைகளாலும் நிரப்பப்பட்டுள்ளன.

ராணி துர்காவதி

பெரும்பாலான இந்தியர்கள் ராணி துர்காவதி என்னும் வீரப்பெண்மணியை அறிந்திருக்க மாட்டார்கள். அக்பரின் படையினரை எதிர்த்துப் போராடிய ராணி துர்காவதி தோல்வியடையும் நிலையில் போற்களத்தில் வைத்தே தற்கொலை செய்து கொண்டார். அக்பரிடம் பிடிபட்டால் தனக்கு ஏற்படும் கதியை நன்கு உணர்ந்ததாலேயே அந்தப் பெண்மணி அந்த முடிவை எடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துர்காவதியின் சகோதரியான கமலாவதியும், அவளது மருமகளும் சிறைப்பிடிக்கப்பட்டு அக்பரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, இறை அச்சத்துடனும், பக்தியுடனும் வாழ்ந்த ஹிந்து அரச, அரசிகளைத் தோற்கடித்து அவர்களின் பெண்களைப் பிடித்துக் கொண்டு வந்து,  மதுவிலும் போதைமருந்திலும், கொலையிலும், படுகொலைகளிலும் மூழ்கிக் கிடக்கும் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டுவந்து அவர்களை அவமானமும், சிறுமையும் செய்வது மட்டுமே அக்பரின் நோக்கமாக இருந்தது. இதனை உணர்ந்த ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை எரித்துக் கொன்றார்கள். இப்படிப்பட்ட கயவனையே நமது வரலாற்றாசிரியர்கள் பிற மதத்துப் பெண்களை திருமணம் செய்து அக்பர் மத ஒற்றுமையைக் காத்தார் எனக் கதை கட்டுகிறார்கள்.

அக்பரின் வரலாற்றாசிரியரும், மஹா புளுகன் என்று அறியப்பட்டவருமான அபுல் ஃபசல், “அக்பர் தனது அந்தப்புரத்துப் பெண்களுக்காக அருமையான மாளிகைகளைக் கட்டினார். அங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தாலும் அக்பர் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியறையை அளித்தார். மேலும் அந்தப் பெண்களை பல குழுக்களாகப் பிரித்து அந்தப் பெண்களுக்கென பல வேலைகளைக் கொடுத்திருந்தார். பல நல்ல குணமுள்ள பெண்கள் அந்தப் பெண்களைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை மேற்பார்வை செய்பவர்களாகவும் அக்பரால் நியமிக்கப்பட்டனர். இன்னொரு பெண் அவர்களின் தேவைகளை எழுதிக் கொடுக்கும் எழுத்தராகவும் இருந்தாள்” என்கிறார்.

இதனை விடவும் ஆகாசப் புளுகினை நாம் எங்கும் கண்டிருக்க இயலாது. இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் ஐந்தாயிரம் பெண்கள் தங்குவதற்கு ஏற்றவாறு அக்பரால் கட்டிக் கொடுக்கப்பட்ட மாளிகையை நாம் காணமுடியாது என்பதே உண்மை.

அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை. பதாயுனி சொல்கிறார், “தங்களை அரசருக்கு ‘அறிமுகப்படுத்திக்’ கொள்ள விழையும் “தகுதியுள்ள”அரசவை முக்கியஸ்தர்களின் பேகம்கள் அக்பருக்கு தங்களின் விருப்பத்தைத் தெருவித்து பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட முக்கியஸ்தர்களின் மனைவிகள் அக்பரின் அந்தப்புரத்திலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அந்தப்புரத்தைப் பாதுகாப்பதெற்கென தன்னிடமிருக்கும் ஏராளமான காவலாளிகளை நம்பாத எண்ணமுடையவரான, அந்தப்புரத்தை தன்னுடைய நேரடிக் கண்கானிப்பிலிருந்து விலக்கியதேயில்லை”.

மேற்சொன்னவற்றை சிறிது ஆராய்ந்து பார்ப்போம். திருமணமான எந்தப் பெண் தன்னை அக்பரிடம் மனமுவந்து ஒப்புவிப்பாள்? ஏற்கனவே பெண்களால் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தில் நுழைவதற்கென மனுக் கொடுத்துக் காத்துக் கிடக்க அந்தப் பெண்களுக்கு வேறு வேலையில்லையா என்ன? தன்னுடைய கணவனைய்ம், குழந்தைகளையும், உற்றார் உறவினர்களையும் மாதக் கணக்கில் விட்டுவிட்டு அக்பரின் அந்தப்புரத்தில் அடைந்து கிடைக்க அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? மேற்சொன்ன “தகுதியுள்ள பெண்கள்” என்பதற்கு அக்பரின் கண்ணில் பட்ட தனது அரசவை முக்கியஸ்தர்களின் அழகான மனைவிகள் எனபதுதானே அதற்கு அர்த்தம். அவர்கள் வர மறுத்தால் அல்லது அவர்கள் கணவர்கள் அனுப்ப மறுத்தால் அவர்களுக்கு என்ன நிகழும் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆக, அக்பர் அடுத்தவனுடைய மனைவியை மாதக் கணக்கில் தன்னுடன் வைத்திருந்து சந்தோஷித்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவராக திரும்ப அவரது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தால்தான் உண்டு. இல்லைலெயென்றால் அவளும் ஐந்தாயிரம் பேர்களில் ஒருத்தியாக மாறிப்போவாள்.

அக்பர் அந்தப்புரத்தின் பாதுகாப்பைத் தானே நேரடியாக கண்காணித்தார் என்பதிலும் அர்த்தம் உண்டு. ஏனென்றால் அரசவையில் தனக்கு அருகில் இருப்பவன் தனது மனைவியை மீட்டெடுக்க எந்த நேரத்திலும் எதுவும் செய்வான் என்பது அக்பருக்கு நன்றாகவே தெரியும். நிச்சயமாக அவருக்கு மிரட்டல்களும் வந்திருக்கவே செய்யும். எனவே அக்பர் அந்தப்புர பாதுகாப்பில் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்திருக்கக் காரணம் இருக்கிறது.

தனது இருப்பிடத்திற்கு அருகிலிருந்த பெரும் விபச்சார மையங்களை நிர்வகிப்பதிலும், அதில் பணிபுரிந்த விபச்சாரிகள் மீதும் அக்பருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. தனது விபச்சார மையங்களில் பணிபுரியும் பெண்களிடையே இருந்த கன்னிகளின் எண்ணிக்கையையும் அக்பர் துல்லியமாகக் கணக்கு வைத்திருந்தார். அவ்வப்போது விபச்சாரிகளையும், கன்னிகளையும் அழைத்துப் பேசுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தார் அக்பர்.

அபுல் ஃபசல் சொல்கிறார், “பேரரசர் அரண்மனைக்கு அருகிலிருந்த விபச்சாரிகளின் பகுதியில் ஒரு மதுக்கடையைத் திறந்தார். அந்த விபச்சார மையத்தில் பணிபுரிந்த பெண்களின் எண்ணிக்கையை யாராலும் கணக்கிட இயலாத அளவிற்கு ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள். அந்தப் பகுதி ‘சைத்தான் புரா’ என்றழைக்கப்பட்டது. அரச சேவகர்கள் நடனமாடும் பெண்களைத் தங்களுடன் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் வழக்கமிருந்தது. அக்பருக்கு அறிமுகமானதொரு அரச சேவகனுக்கு கன்னிப் பெண் எவளும் தேவையாக இருந்தால் அவன் முதலில் அக்பரின் அனுமதியைப் பெற வேண்டும். பெண்களைப் போலவே சிறுவர்களும் அங்கு விபச்சாரம் செய்து வந்தார்கள். இதன் காரணமாக அங்கு அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு ரத்தம் சிந்தியது…..பேரரசர் அவ்வப்போது விபச்சாரப் பெண்களில் முக்கியமானவளை அழைத்து முதன்முதலில் யாரால் அவர்கள் கன்னி கழிந்தார்கள் என்பதினைக் கேட்டு மகிழ்ந்தார்….”.

அக்பர்நாமா நூலை அக்பரிடம் சமர்ப்பிக்கும் அபுல் பசல்

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் “விபச்சாரிகள்” என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது என்பதினை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள்.

மேற்கூறிய விஷயங்கள் பெரும்பாலான இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் அக்பரின் ஆட்சிக்காலத்தில் உண்மையிலேயே நிகழ்ந்த அவலங்கள் எனபதினை உங்களின் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஒரு பேரரசனே சிறுவர்களை பிறருக்குப் புணர்ச்சிக்கென அனுப்பி வைக்கும் “சேவைகள்” உலகின் எங்குமே கேள்விப்பட்டிருராத ஒரு விஷயமாகும்.

சிறுவர்களைப் புணர்வது அக்பரின் “விலைமதிப்பற்ற” பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அக்பரின் பாட்டனான பாபர் தனக்கும் இன்னொரு சிறுவனுக்கும் இருந்த முறையற்ற தொடர்பினைக் குறித்து மிக விளக்கமாகவே அவரது வரலாற்றுக் குறிப்புகளில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின் தகப்பனான ஹுமாயுன் அதற்குச் சிறிது குறைந்தவனில்லை. தனது உபயோகத்திற்கென சிறுவர்களை எப்போது தன்னுடனேயே வைத்திருந்தான் ஹுமாயுன். அக்பரும் ஏராளமான சிறுவர்களை தனது அந்தப்புரத்திற்கு அருகிலேயே வைத்திருந்ததாக அபுல் ஃபசல் கூறுகிறார்.

அக்பரின் சேவகர்கள் தங்களுக்கென “ஆண் காதலர்களை” வைத்திருப்பது சர்வ சாதாரணமானதொரு விஷயம். அபுல் ஃபசல் சொல்கிறார், “அக்பரின் ஆட்சிக்காலத்து 12-ஆவது வருடத்தில் அக்பரின் அரசவை சேவகனான முஸாஃபர் என்பவன் குதுப் என்னும் சிறுவனுடன் உறவு வைத்திருந்தான். பொறாமையடைந்த அக்பர் வேண்டுமென்றே அந்தச் சிறுவனை முஸாஃபரின் வீட்டிலிருந்து பிடித்து கொண்டு வர ஆணையிட்டார். அதனால் கோபமடைந்த முஸாஃபர் ஒரு ஃபக்கீரின் உடையை அணிந்து காட்டுக்குள் சென்றுவிட்டான். வேறுவழியில்லாமல் அக்பர் அவனைத் திரும்ப அழைத்து அவனது “ஆண் காதலனை” அவனிடம் ஒப்படைத்தார்”.

இதே போன்றதொரு இன்னொரு சம்பவம் அடில்ஷா காலத்தில் நிகழ்ந்தது. தன்னை தவறான முறையில் உபயோகிக்க முயன்ற அடில்ஷாவை அவரது அரண்மனையிலிருந்த அலி ஒருவன் கொன்றுவிட்டான். அடில்ஷா சிறுவர்களைப் புணர்வதில் பேரின்பம் கொண்டவர். தனது இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பீதரின் மாலிக் பரீத் என்பவரிடமிருந்து இரண்டு அலிகளை விலைக்கு வாங்கிய அடில்ஷா அதில் ஒருவனை உபயோகிக்க முயல்கையில் அவனால் கொல்லப்பட்டான். எனவே ஆண்களுடன் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்வதும், சிறுவர்களைப் புணர்வதும் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆட்சியின் ஒரு அங்கமாகவே இருந்துவந்துள்ளது என்பதினை அறியலாம்.

அபுல் ஃபசல் அக்பரின் அரசவையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தையும் கூறுகிறார்.

“ஷா குலி-மகரம்கான் என்பவன் காபூல்கான் என்கிற சிறுவனுடன் காதல்வயப் பட்டிருந்தான். அக்பர் அவனிடமிருந்து அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டார். கோபமடைந்த குலி-மகரம்கான் ஒரு யோகியைப் போல உடையணிந்து சாமியாராக காட்டிற்குள் போய்விட்டான் (வழக்கம் போல!). அக்பரின் மாமனான பஹ்ரம் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு குலி-மகரம்கானை மீண்டும் அக்பரிடம் அழைத்துப் போனார். வேறு வழியில்லாத அக்பரும் குலி-மகரம்கானிடம் அவனது காதலனான காபூல்கானை ஒப்படைத்தார்”.

பின்னர் அக்பர் குலி-மகரம்கானை தனது அந்தப்புரத்திற்குள் அனுமதித்தார். அப்பாவித்தனமாக அந்தப்புரத்திற்குள் சென்ற குலி-மகரம்கானை காயடித்துவிட்டார் அக்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அக்பர் என்னும் கயவன் – 13

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பர் மதுவிற்கும், ஓப்பியம் போன்ற போதை மருந்துகளுக்கும் அடிமையானதொரு மனிதர். மனசாட்சியை உறுத்தும்படியான கொடூரங்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்த்தி முடித்த அக்பர், அந்தச் செயல்களையெல்லாம் மறப்பதற்கானதொரு வடிகாலாகவே  இந்தப் போதைப் பழக்கத்தை உபயோகித்திருக்க வேண்டும்.

வின்செண்ட் ஸ்மித், “அக்பர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியில் குடிகாரராக, போதைமருந்து உபயோகிப்பாளராகவே கழித்தார். இந்தப் பழக்கம் அவரது தைமூர் அரச பரம்பரையிலிருந்து அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அக்பரின் பாட்டனான பாபரை இந்த விஷயத்தில் அடித்துக் கொள்ளவே இயலாது. அவரது தகப்பனான ஹுமாயுனோ அதனையும் விட மோசமான ஓப்பியத்திற்கு அடிமையானதொரு மனிதர். நன்றாக போதையை ஏற்றிக் கொண்ட அக்பர் அரசவையில் செய்த மோசமான செயல்கள் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்பரின் உதாரணத்தைத் தொடர்ந்து அவரது அரசவையில் இருந்த அத்தனை பேர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார்கள்.

அக்பரின் இரண்டு மகன்கள் (முராத் மற்றும் தானியெல்) இந்தப் போதைப் பழக்கங்கள் காரணமாக இளவயதிலேயே இறந்து போயிருந்தார்கள். அவரது மகனான ஜஹாங்கிர் அவரது உடல் உறுதியின் காரணமாக பிழைத்துக் கிடந்தார். ஜஹாங்கிரின் குடிப்பழக்கம் உலகப் பிரசித்தமானது. மூக்கு முட்டக் குடித்த அக்பர் யானையின் மீதேறி, யமுனையில் படகுகளைக் கட்டி அமைக்கப்பட்ட பாலத்தின் மீது வேகமாக ஓடியிருக்கிறார். சூரத்தில் குடித்துவிட்டு அருகிலிருப்பவர்களுடன் கத்திச் சண்டை போட முயன்ற சம்பவங்களும் உண்டு”.

****

இந்திய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்வது என்னவென்றால், பல சிறிய ராஜ்ஜியங்களாகச் சிதறிக்கிடந்த இந்திய அரசுகளை வென்று அவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றுபடுத்தி ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கியவர் அக்பரே என்பது. ஆனால் அதில் சிறிதும் உண்மை இல்லை. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இதுபோன்றதொரு முடிவுக்கு வருவது தவறானேதேயாகும்.

முதலில் மனதளவிலோ அல்லது உடலளவிலோ அல்லது இன, மொழி வழியாகவோ அக்பர் ஒரு இந்தியரில்லை. அவர் முற்றிலும் இந்தியாவிற்கு அன்னியப்பட்டதொரு ஆக்கிரமிப்பாளர். அவருடைய எண்ணமெல்லாம் இந்தியர்களை வென்று, அவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் கலாச்சார, வாழ்வாதாரங்களை அழிப்பதாக மட்டுமே இருந்திருக்க முடியுமே தவிர அவர்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்பதற்காக இருக்கவே முடியாது. அவ்வாறு அக்பர் இந்தியர்களுக்கு நன்மைகள் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாறாக அவர் வாழ்நாள் முழுவதும் இந்தியர்களின் மொழி, இன, கலாச்சார, பொருளாதார அடையாளங்களை அழிப்பதாக, குறிப்பாக ஹிந்துக்களை அவமதிப்பதாக மட்டுமே இருந்தது என்பதினை யாராலும் மறுக்க இயலாது.

அக்பர் மட்டுமில்லை. அவருக்கு அடுத்து வந்த அவரது வாரிசுகளும் தங்களை இந்திய வம்சாவளியினராகக் காட்டிக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் தைமூர் குடும்பமும், சக்டாய் (Chagtai) அரசும் மட்டுமே அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். துருக்கியையும், இராக், இரான், சிரியா, ஆப்கானிஸ்தான், அபிசீனிய நாடுகளைத் தங்களின் தந்தையர் நாடாகவும், மெக்காவையும், மெதினாவையும் தங்களின் வழிபடு இடமாகவும், இந்திய ஹிந்துக்களைத் தங்களில் எதிரிகளாகவும் மட்டுமே கருதி வந்தனர். இந்திய ஹிந்துக்களைப் படுகொலை செய்வதனையும், அவர்களின் வழிபாட்டிடங்களை அழிப்பதனையும் தங்களின் புனிதக் கடமையாகவும் செய்து வந்தார்கள் என்பதனைப் பார்க்கையில் சரியான சிந்தனையுள்ள இந்தியர்கள் எவரும் அவர்களைத் தங்களில் ஒருவராக நினைக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

எங்கிருந்தோ வந்து தங்களின் ஊரைத் திருடியும், கொள்ளையடித்தும்,  தங்களின் பெண்களின் கற்பைச் சூறையாடியும் வாழும் ஒருவன், தங்களுடைன், தங்களுடைய ஊரிலேயே வசிப்பதால் அவன் அந்த ஊரைச் சேர்ந்தவனாகிவிடுவானா என்ன? உண்மையில் அக்பரின் நடவடிக்கைகளினால் வெறுத்துப் போயிருந்த இந்தியர்கள் அவரை பெருந்தொல்லையாகவே கருதினார்கள். அக்பர் இறந்ததும் ஒரு பெரும் தொல்லை ஒழுந்ததாகப் பெருமூச்சு விட்ட இந்தியர்களே அதிகமிருந்தார்கள்.

இந்தியர்களுக்கு முற்றிலும் அன்னியரான அக்பர் இந்தியக் குடிமக்களை மிகக் கொடூரமாக அடக்கி ஆண்டார். இதனைக் குறித்துக் கூறும் வின்செண்ட் ஸ்மித், “உண்மையில் இதுபோன்றதொரு கொடுமையான அரசன் உலகில் எங்கும் இருந்ததில்லை. அக்பரின் ஒரே குறிக்கோள் இந்தியர்களை அடக்கியாள்வது மட்டும்தான். அவரது மொத்த ஆட்சியும் அடுத்த நாடுகளைத் தாக்கிப் பிடிப்பது என்பது மட்டுமே முக்கியமானதொரு செயலாக இருந்தது. ஒவ்வொரு சுதந்திர இந்திய அரசையும் வென்று அடிமைப்படுத்துவதே அக்பரின் தலையாய இலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. ராணி துர்காவதியின் கீழ் வாழ்ந்த கோண்ட்வானா ராஜ்ஜிய மக்கள் நிச்சயமாக ஆசிப்கானின் (அக்பரி தளபதி) கீழ் வாழ்வதனைவிடவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்…”

அக்பரையும் அசோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன்.

அக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்…..இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள். சித்தூர், ரந்தம்பூர், கலிஞ்சார், குஜராத், பெங்கால், பிகார், ஒரிசா, காஷ்மீர் கண்டேஷ், அகமத் நகர், அஸீர்கத், பன்ஸ்வாடா, டோங்க்பூர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்சால்மீர், சிரோஹி, காபூல், நாகர்கோட், பூன்தி…..என அளவிடமுடியாத இந்திய நகரங்கள் அக்பரிடம் சிக்கிச் சின்னாபின்னமடைந்தன என்பதன்றோ உண்மை?

வென்ற அரசர்களின் பெண்களை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்ட அக்பரை எப்படி அசோகனுக்கு இணையாகக் கூறமுடியும்? நாளெல்லாம் போதை மருந்து உண்டு, அடுத்தவனை அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த படிப்பறிவில்லாத அக்பருடன், தூய ஒழுக்கமும், பக்தியும் கொண்டு தங்களின் வாழ்நாளைக் கழித்த ஒரே ஒரு ஹிந்து சிற்றரசனுக்குக் கூட இணையில்லாதவர் அக்பர்.

தோற்ற ஹிந்து அரசனின் பெண்களைத் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் அடைத்த நாளில் இருந்த அந்தப் பெண்ணின் வாழ்வு முடியும் வரைக்கும் அவள் அதனை விட்டு வெளியே வரவே முடியாது. அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ அந்தப் பெண்ணைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏறக்குறைய ஐந்தாயிரம் பெண்கள் அடைந்து கிடக்கும் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்ட, ஹிந்து அரசனால் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதியை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை வயிறார உணவு கூட அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பில்லை. கழிப்பிட, குளியறைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு கரண்டியளவு எண்ணெயைக் கூட அந்தப் பெண்கள் பெறமுடியாத கொடூரத்தில்தான் வாழ்ந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் உழலும் தங்களின் பெண்ணை எண்ணி வருந்தும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலையைக் குறித்து சிறிது எண்ணிப்பாருங்கள். மனசாட்சியுள்ள எந்த அரசனாவது இதுபோன்றதொரு செயலைச் செய்யத் துணிவானா?

சில நேரங்களில் அந்தப்புரப் பெண்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் உண்டு. உதாரணமாக ஜஹாங்கிரின் மனைவியான மன்பாய். இத்தனைக்கும் மன்பாயின் சகோதரன் அக்பரின் அரசவையில் ஒரு குறிப்பிடத்தக்க பதவியில் இருந்தவர். இஸ்லாமிய வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அந்தப் பெண்கள் பரிசாக அளிக்கப்பட்டார்கள். சட்ட ரீதியான மனைவிகள் அந்தப்புரத்துப் பெண்கள் எவரேனும் கருவடைந்தால் அவர்களைக் கொன்றார்கள். தங்களின் பிள்ளைகளுக்குப் போட்டியாக அவளின் பிள்ளை வந்துவிடக்கூடாது என்பதற்காக. கட்டாயக் கருக்கலைப்புகளும் உண்டு. இவை அத்தனையும் ஹிந்து அரசர்களைக் கேவலப்படுத்துவதற்காக மட்டுமே அக்பர் என்னும் கயவனால் செய்யப்பட்டவை.

பல ஹிந்துக் கோவில்கள் அக்பரால் இஸ்லாமிய பயணியர் விடுதிகளாக, மசூதிகளாக, குதிரைகள் கட்டும் லாயமாக மாற்றப்பட்டிருக்கின்றனவே அன்றி இந்திய வரலாற்றாசிரியர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் போல அக்பர் “எல்லா மதங்களையும் சமமாக பாவித்தற்கான” ஆதாரங்கள் எதுவுமில்லை. அக்பர் அடிப்படையில் சந்தேகமில்லாமல் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். எல்லா மதங்களையும் சமமாக நினைத்த “அக்பர் தி கிரேட்” ஏன் ஒரே ஒரு மசூதியைக் கூட பயணியர் விடுதியாக, குதிரை லாயமாக மாற்றவில்லை?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 14

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

மத்தியகால இந்தியாவின் வரலாற்றைப் படிக்கிற வரலாற்று ஆர்வலர்கள் ரஸியா சுல்தானா, அலாவுதின் கில்ஜி, ஃபெரோஸ்ஷா துக்ளக், ஷேர் ஷா, அக்பர் போன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நிதி நிர்வாகத் திறமையைக் குறித்து அளவுக்கதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டிருபதனைக் கண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த விளக்கங்கள் அத்தனையும் பொய்யான தகவல்களே. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த அவர்களின் வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்த பொய்யையும், புனை கதைகளையும் இந்திய வரலாற்றாசிரியர்கள் தங்களின் வசதிக்கேற்ப எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை என்பதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது. அவ்வாறு செய்வதற்கு அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமிய அரசனின் முழு அனுமதியும் இருந்தது.

ஒரு நாட்டின் நிதி நிர்வாகம் சரியானதாக இருக்கவேண்டுமென்றால் உண்மயான, சட்டபூர்வமான, அனைவராலும் மதிக்கக்கூடியதொரு நிதி நிர்வாகமாக அது இருக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட நிதி பொதுமக்களின் நன்மைக்கென உபயோகப்படுத்தவும் வேண்டும். நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அங்கு சாந்தியும் சமாதானமும் நிலவவும் அந்தப் பணம் உபயோகிக்கப்படுவதே நியாயமானது. முறையானது. குடிமக்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வரி வசூலிக்கப்படவேண்டும். அவ்வாறு வசூலிக்கப்படும் வரியானது ஒரு நிலையான கால வரம்பிற்குள் வசூலிக்கப்படுவதுடன், அத்துமீறி வரி வசூல் செய்வதனைத் தடுக்கும் வகையான நீதி பரிபாலனங்களும் அங்கு செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தியாவை ஆண்ட எந்தவொரு இஸ்லாமிய அரசிலும் இந்த வழிவகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக சரித்திரமே இல்லை.

காரணம், இஸ்லாமிய அரசர்கள் அவர்கள் ஆண்ட நாட்டின் குடிமக்களுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்களின் நலம் விரும்பிகளாக அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. குரான் ஒன்றிற்கு மட்டுமே ஒரு இஸ்லாமிய அரசன் பதிலளிக்கக் கடமைப்பட்டவனாகத் தன்னை எண்ணிக் கொண்டான். மெக்காவையும், மதீனாவையும் மட்டுமே தனது அளவுகோலாகக் கருதிக் கொண்ட இஸ்லாமிய அரசர்கள் அனைவரும் இந்தியர்களை வெறுத்தார்கள். அவர்களை ஒருபோதும் ஹிந்துக்கள் என அவர்கள் அழைத்ததில்லை. தங்களின் கீழ் வாழ்ந்த இந்தியக் குடிமக்களை காஃபிர்கள் என்றும், திருடர்கள் என்றும், விலங்குகள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அழைத்தார்கள். அப்படியே எழுதியும் வைத்தார்கள். தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஹிந்துக்களை அடிமைகளைப் போல நடத்தி அவர்களைக் கசக்கிப் பிழியவே ஒவ்வொரு இஸ்லாமிய அரசனும் நினைத்தான். ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள் எவரும் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல தயங்கியே இருந்திருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இஸ்லாமிய அரசனும் விடாமல் தொடர்ந்து போர்புரிந்து கொண்டிருந்தான். தன்னுடைய உடன் பிறந்தவர்களுடன் அல்லது தனக்கெதிராக புரட்சி செய்கிற தனது படைத் தலைவர்களுடன் அல்லது அடுத்த நாட்டு ஹிந்து அரசனுடன் என அவர்களின் போர் ஓயவே இல்லை. அவ்வாறு நடந்த போர்கள் அந்தப் பகுதியில் அல்லது நாட்டில் வாழ்ந்த மக்களைக் கொள்ளையடிக்கவும், கொலைகள் செய்யவும், பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவும் உபயோகப்படுத்தப்பட்டது.

ஒரே சமயத்தில் பல முஸ்லிம் அரசர்கள் பலமுனைகளிலிருந்து ஒருவருக்கொருவர் போர் செய்து அழிவதும் நடந்து கொண்டிருந்தது. உதாரணமாக தாரா ஷிகோ, ஷுஜா, அவ்ரங்க்ஸிப், முராத் சகோதரர்கள் முகலாய அரியணைக்காக ஒருவருக்கொருவர் தொடர்ந்து போர் செய்தார்கள். இதுபோன்றதொரு அரசு மக்களிடம் நியாயமான முறையில் வரி வசூலித்து அதில் வரும் பணத்தில் போர் செய்வது என்பது நினைத்துக் கூட பார்க்கவியலாத ஒன்று. கொள்ளையடிப்பது ஒன்றே இதற்கு பதில்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அல்லது ஆண்ட அக்பர், ஃபெரோஸ்ஷா, ஷேர்ஷா, தைமூர் போன்றவர்கள் சாலைகளின் ஓரம் சத்திரங்கள் கட்டி அதில் பயணிகள் தங்க வசதிகள் செய்து கொடுத்தார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற அண்டப்புளுகுகளே. இந்தியாவை ஆண்ட ஷத்திரிய அரசர்கள் கட்டி வைத்த சத்திரங்களின் மீது தங்களின் பெயர்களைப் பொறித்துக் கொண்டார்கள் அவர்கள் என்பதே உண்மை.

இஸ்லாமிய அரசர்கள் அதுபோன்ற சத்திரங்களையும், தங்கும் விடுதிகளையும் கட்டினார்கள் என்றால் அது தொடர்ச்சியாக அவர்கள் ஆண்ட எல்லாப் பகுதிகளின் சாலையோரங்களிலும் அவர்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் எங்குமே அது காணக்கிடைக்கவில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னர் ஆண்ட ஹிந்து அரசர்கள் நட்டுவைத்த நிழல்தரும் மரங்களைக் கூட ஆக்கிரமிப்பாளர்களான இஸ்லாமிய அரசர்கள் விட்டு வைக்கவில்லை. அவற்றை வெட்டியெடுத்து விறகுக்கும், படகு தயாரிக்கவும், கோட்டைகளில் ஏறும் ஏணிகள் தயாரிக்கவும், ஆயுதங்களுக்குக் கைப்பிடியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள் என்பதே வரலாறே தவிர அவர்கள் எங்கும் மரம் நட்டுப் பராமரிக்கவில்லை.

இன்றைக்கு இந்தியாவில் தேர்வெழுதப் போகும் மாணவனை உண்மைக்குப் புறம்பாக ஜஹாங்கிரின், அக்பரின், ஷேர்ஷாவின், முகமது துக்ளக்கின் அல்லது ஃபெரோஸ்ஷா துக்ளக்கின் ஆட்சிச் சிறப்புகளைக் குறித்து எழுதப் பணிக்கும் தேர்வுகள் இந்தியர்களுக்கு பெரும் துரோகத்தை இழைக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. தங்களின் அரசுகள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் சின்னாபின்னப் படுத்தப்பட்ட பின்னரும் சிறப்பாக ஆண்ட சிவாஜியைக் குறித்தும், ராணா பிரதாப்பின் ஆட்சியைக் குறித்தும், அவர்களின் தியாகத்தைக் குறித்தும், துன்பங்களிடையேயும் குடிமக்களின் அன்பைப் பெற்ற அந்தச் சிறந்த மனிதர்களைக் குறித்தும் அல்லவா அந்த மாணவர்களை தேர்வெழுதச் சொல்ல வேண்டும்?

இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்களிலேயே மிகச் சிறந்தவர் அக்பர் என நமக்கு மீண்டும், மீண்டும் கிளிப்பிள்ளைகளைப் போலக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் உண்மையில் அக்பரின் ஆட்சி ஒரு பெரும் கொள்ளைக்கார, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து துன்புறுத்திய ஆட்சி என்பதினை நாம் காண வேண்டும். குடிமக்களைக் குறித்த அக்கறை சிறிதும் இல்லாத ஆட்சி ஒன்று இருந்ததென்றால் அது அக்பரின் ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா போன்றவர்களுக்குத்தான் அக்பரின் அரசவையில் மரியாதை இருந்தது. “இனிமேல் தன்னைப் பார்க்க வரும் அத்தனை பேர்களும், அவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் அல்லது சாதாரண குடிமக்களாக இருந்தாலும், தனக்குப் பரிசுகள் கொண்டுவந்து தரவேண்டும்” என ஆணையிடும் அக்பர் எந்த விதத்தில் குடிமக்களுக்கு நன்மை செய்பவராக இருந்திருக்கவியலும்?

தனது ஆட்சிக்குட்பட்ட எல்லா பர்கானாக்களையும் (மாவட்டங்கள்) ஒரே அளவாகப் பிரித்து அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவருடமும் தனக்குக் கோடிக்கணக்கில் வரிகட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் அக்பர். ஆனால் எல்லாப் பர்கானாக்களும் வளமையானவையாக இருந்திருக்கவில்லை. வறண்ட பகுதிகளும், மலைகளும், பாலைவனங்களும், காடுகளும், நதிகளும் இருந்த பகுதிகளும் ஒரே அளவாகப் பிரிக்கப்பட்டு அந்தப்பகுதிகள் அனைத்தும் ஒரேமாதிரியான வரிகட்ட வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களிடமிருந்து பணத்தை எப்பாடுபட்டகிலும் கசக்கிப் பிழிய குரோரிகள் (கோடிப்பணம்) என்பவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

மிகக் கொடூரமாக நடந்து கொண்ட குரோரிகளின் காரணமாக பல ஏழை விவசாயிகள் அவர்களின் பிள்ளைகளையும், மனைவியையும் சந்தையில் அடிமைகளாக விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பலர் அவர்களின் விவசாய நிலங்களைக் கைவிட்டுவிட்டு பிற நாடுகளுக்குத் தப்பியோடினார்கள். விவசாயம் முற்றிலும் நிறுத்தப்பட்டு எங்கும் குழப்பம் நிலவியது. ஆனால் சரிவர பணத்தை வசூலிக்காத குரோரிகள் ராஅஜா தோடர்மல் போன்ற அக்பரின் கையாட்களால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அடிகளாலும், உதைகளாலும் பல குரோரிகள் இறந்தார்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நாட்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

சரியாக வரி வசூல் செய்யாத பல அதிகாரிகள் சிறையிலேயே இறந்தார்கள். அவர்களைக் குழிகளில் புதைத்த மறுகணம் இறந்தவர்களுக்குச் சொந்தமான நிலங்களும், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அக்பரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்பரின் அமீர்கள் அப்பாவிகளிடம் பிடுங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள். சாதாரண குடிமக்களைக் குறித்து அக்பரோ அல்லது அவரது கீழ் பணிபுரிந்த வஸீர்களோ அல்லது அமீர்களோ எந்தக் கவலையும் படவில்லை. ராஜா தோடர்மல் போன்ற அயோக்கியர்கள் அக்பரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேலும், மேலும் குடிமக்களை கசக்கிப் பிழிந்து அவர்களை ஒட்டாண்டிகளாக்கினார்கள்.

இந்த வரலாற்றைத்தான் அக்பரின் சிறந்த நிதி நிர்வாகமாக இந்திய வரலாற்றாசிரியர்கள் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரலாறு நமது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்குமானால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு இந்தியா ஒரு பெரும் வல்லரசாக மாறியிருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 15

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பரின் நிதி நிர்வாகம் மோசமென்றால் அவரின் பொது நிர்வாகம் அதையும் விட மோசமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. “கிடைத்த வரைக்கும் சுருட்டு” என்பதே பொதுவானதொரு கொள்கையாக, சட்டமாக இருந்தது. சட்ட விரோதமான காரியங்களும், கொடூரமான சித்திரவதைகளும், வன்முறைகளும், முடிவே இல்லாமல் தொடர்ந்த போர்களும், அக்பருக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சிகளும், சொந்த நாட்டு மக்களின் மீது கொள்ளையடிப்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட அக்பரின் படையெடுப்புகளும், வாள்முனை மதமாற்றங்களும், அப்பாவிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு பணம் பறிக்கும் செயல்களும், படுகொலைகளும், லஞ்ச லாவண்யங்களும், பெண்களைத் தூக்கிச் செல்லுவதும், திருட்டும், வழிப்பறிக் கொள்ளையும், ஹிந்து வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் என அகராதியில் உள்ள அத்தனை கொடூரங்களும் அக்பரின் ஆட்சியில் நிகழ்ந்தன.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “அக்பரின் மொத்த நிர்வாகமும் சுயநலம் பிடித்த அயோக்கியக் கூட்டத்தின் கையில் இருந்தது. அவர்களின் ஒரே குறிக்கோள் தங்களுக்கும், தங்களின் கீழிருக்கும் படையணிகளுக்கும் தேவையானவற்றை எப்பாடுபட்டாவது அப்பாவிப் பொதுமக்களிடமிருந்து பிடுங்குவது என்பதில் மட்டுமே இருந்தது. அவ்வாறு தாங்கள் கேட்பதைத் தரமறுக்கும் அப்பாவிகள் மீது மிகக் கொடூரமான தண்டனைகளை அளித்தார்கள். கை அல்லது காலை வெட்டுவது, யானைகளைக் கொண்டு நசுக்கிக் கொல்லுவது, தலையை வெட்டுவது, சாட்டையால் கடுமையாக விளாசுவது போன்ற கொடூரச் செயல்களை அவர்கள் அரங்கேற்றினார்கள். எனவே இஸ்லாமிய அரசர்களின் கீழ் இருந்த இந்தியர்கள் இருந்த காலம் இஸ்லாமிய அரசர்களின் கொடூரச் செயல்களையும், அவர்களினால் அடக்கியாளப்பட்டவர்களின் துயரங்களையும் மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.”

அக்பரின் நீதி, நிர்வாகச் சிறப்புகளை பொய்யாக எழுதும் இந்திய வரலாற்றாசிரியன், அக்பரைப் போல இந்தியர்களை அடக்கியாண்ட, அவர்களைக் கொள்ளையடித்த, கற்பழித்த பிற இஸ்லாமிய அரசர்களுடன் ஒப்பிட்டு அவர்களை விடவும் அக்பர் சிறந்தவர் என்பது போன்றதொரு மாயத்தோற்றத்தை நம்முன்னே உருவாக்க விழைகிறார்கள். ஆனால் அது அத்தனை எளிதான ஒன்றில்லை. அக்பரின் கீழ் சுகமாக வாழ்ந்த இந்தியனின் வரலாறு எங்குமே எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவன் பட்ட துன்பமும், துயரமுமே எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கிறது. வின்செண்ட் ஸ்மித் சொல்வதுபோல அக்பரின் ஆட்சி பொதுமக்களின் நலனுக்காக நடந்த ஆட்சி என்பதற்கான ஆதாரமே இல்லை.

அதேசமயம் அக்பரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அவரைக் குறித்து இல்லாத கதைகளை மட்டுமே எழுதி வைத்த அவரது வரலாற்றாசிரியர்கள் மட்டுமே அக்பரை ஒரு “பேரரசர்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய வரலாற்றாசிரியர்கள் அதே பொய்களையே மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அக்பரின் “சிறந்த” ஆட்சிக்கு ஆதாரம் இல்லையென்றாலும் அவரது கொலைகார, கொள்ளைக்கார ஆட்சிக்கு ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றனவே. பின் எதற்காக இன்னும் அக்பரைக் குறித்தான கட்டுக்கதைகளை இன்னும் நம்மீது திணிக்கிறார்கள்?

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

அக்பரின் மொத்த அரசாங்க அமைப்பும் ராணுவம் சார்ந்தது. தூரத்துப் பிராந்தியங்களில் ஆளுகிற அரசப்பிரதிநிதி எந்தவிதமான சட்ட, திட்டங்களுக்கும் கட்டுப்படாதவர். தான் நினைத்ததையே சட்டமாக அங்கு பிரயோகிக்கமுடியும். அங்கு வாழுகிற குடிமகன் அந்த பிரதிநிதி சொல்வதற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கமுடியும். அப்படி நடக்காதவன் மீதான தண்டனை மிகக்கடுமையானது.

அபுல் ஃபஸல், “அக்பர் ஹிந்துஸ்தானத்தை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த இஸ்லாமிய அரசர்கள் (துருக்கி, இரான் போன்றவை) விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே அரசின் வரியாக வசூலித்தார்கள். ஆனால் அக்பரோ மூன்றில் ஒருபகுதியை தனக்கென வசூலித்தார்”. அதாகப்பட்டது பாரசீக அரசனை விடவும் இரண்டு மடங்கு வரி. இதன் பயனாக சாதாரண விவசாயி பெரும் துன்பமடைந்தான்.

இஸ்லாமிய அடிப்படைவாத மனோபாவமும், மதவெறியும் கொண்டவரான அக்பரின் ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள் பெரும் துன்பமைடைந்தனர் என்பதே உண்மை.

அபுல் ஃபசல், “குரானில் சொல்லப்பட்டிருக்கும் கொடூரமான தண்டனைகளான கை, கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகள் அக்பரால் ஹிந்துக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. அவ்வாறு தண்டனைகள் வழங்கப்படுகிற நேரத்தில் அக்பரோ அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களோ சாதாரண நீதிமன்ற  நடவடிக்கைகளையோ அல்லது சாட்சிகளை விசாரிப்பது போன்றவற்றையோ செய்யவில்லை” என்கிறார். ஒவ்வொரு படைவீரனும் அக்பருக்கு எதிரானவர்களைக் கொல்ல ஆணையிடப்பட்டிருந்தான். எனவே யாரும், யாரையும் கொலை செய்வது எளிதாகியிருந்தது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் அபுல் ஃபசலின் அய்ன்-இ-அக்பரியை பெரிதுக் கொண்டாடுகிறவர்கள். ஆனால் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் அவ்வாறு நேரடியாக அபுல் ஃபசலின் பொய்களை நம்புதல் கூடாது என்கிறார். அபுல் ஃபசலின் அய்ன்-இ-அக்பரி முற்றிலும் புனைகதைகளால் ஆனதொரு கட்டுக்தையேயன்றி அதில் துளியும் உண்மையில்லை.

அக்பரும் தோடர்மல்லும் நடத்திய நிர்வாகம் ஏழைகைளைச் சுரண்டி, அரசாங்க வருமானத்தை (அதாகப்பட்டது அக்பரின்) கூட்டுவதற்காகச் செய்யப்பட்ட நிர்வாகம். கல்வியறிவற்ற அக்பர் ஒரு மரமண்டை மனிதர். ஏழைகளுக்கு உதவுவதும், குடிமக்களின் வாழ்வைச் சிறக்கச் செய்வது எல்லாம் அவரால் புரிந்து கொள்ளவே முடியாததொரு விஷயம். ஜாகிர்களைப் பிரிப்பது, குதிரைகளுக்கு முத்திரையிடுவது போன்றவை அனைத்துமே அக்பரின் வருமானத்தைப் பெருக்கச் செய்த செயல்கள் மட்டுமே.

ஆனால் முன்யோசனையற்ற, சுயநலம் மிகுந்த திட்டங்களினால் நிகழ்ந்த கொடுமைகள் ஏராளம். உதாரனமாக கண்மூடித்தனமாக ஜாகிர்களைப் பிரித்து, விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்ததன் காரணமாக 1595-ஆம் வருடம் முதல் 1598-ஆம் வருடம் வரை கொடுமையான பஞ்சங்கள் வட இந்தியாவை வாட்டியதனைச் சொல்லலாம். பொதுமக்களைக் கசக்கிப் பிழிந்த வரிகள் முகலாய அரசின் ஆறு நகரங்களைச் சேர்ந்த கஜானாவில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் அக்பர் அதிலிருந்து ஒரே ஒரு பைசாவைக் கூடக் கூட்டம், கூட்டமாகச் செத்து விழும் தனது குடிமக்களுக்குச் செலவு செய்யவில்லை.

அக்பரின் கீழ் பணிபுரிந்த அவரின் அத்தனை அலுவலகர்களும் சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றிப் பிழைத்தனர். ஒரு அரசன் பிறப்பிக்கும் உத்தரவும் மேலிருந்து கீழ் வரைக்கும் அத்தனை அலுவலகர்களாளும் நேர்மையாகச் செய்யப்படுவது இயலாத ஒன்று என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே எல்லாவிதமான ஏமாற்றுக் காரியங்களும், லஞ்ச ஊழல்களும் எல்லா மட்டத்திலும் பல்கிப் பெருகியிருந்தது.

தாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது,

“இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படியாக தங்களின் திறந்த வாயுடன் ஹிந்துக்கள் திவானின் முன்னால் நிற்கவேண்டும். ஒரு காஃபிர் ஹிந்துவானவன் இஸ்லாமிய அரசனுக்குத் தனது பணிவைத் தெரிவிப்பதுடன், அந்த இஸ்லாமிய அரசனின் பாதுகாப்பையும் வேண்டி நின்று, இஸ்லாமின் பெருமையையும் அவனுக்கு உணர்த்தும். இஸ்லாம் ஒன்றே உண்மையான மதம் எனவும் மற்றக் கடவுளர்கள் எல்லாம் பொய்யானவர்கள் என்பதினை அவனுக்குக் காட்டும்.

ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள். ஹிந்துக்களைக் கண்ட இடத்தில் கொல்லவும், கொள்ளையடிக்கவும், அவர்களையும், அவர்களின் பெண்களையும் அடிமைகளாக்கவும் முஸ்தபா (முகமது நபி) கட்டளையிட்டிருக்கிறார். ஒன்று ஹிந்துக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட, அடிமைகளாக்கப்பட்ட, அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற குரான் உத்தரவிடுகிறது.”



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 16

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பரின் ராணுவத்தைக் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.

அக்பரது பொது, நிதி நிர்வாகத்தைப் போலவே அவரது ராணுவமும் காட்டுமிராண்டித்தனமான குண்டர்களால் நிரம்பியது. போர் முரசம் அறையப்பட்டதும் பெரும் திரளாக வந்து கூடும் அவர்கள் பின்னர் முழுவதும் கட்டவிழ்த்து விடப்படுவார்கள். எதிரி நாட்டுடன் போர் துவக்குமுன் அக்பரின் படைத் தலைவர்கள் குரானின் வாசகங்களை எடுத்துச் சொல்லி அவர்களை வெறியூட்டி வைப்பார்கள். அக்பரின் படைத்தலைவர்கள் படையெடுத்துச் சென்று வெல்லும் நாட்டில் எண்ணிப்பார்க்கவே இயலாத குரூரங்களை நடத்தி முடிப்பார்கள். எதிரிகளின் தலைகளை வெட்டி அதனை அக்பருக்குப் பரிசாக அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் தலைகள் ஓரிடத்தில் குவித்து வைத்து, பின்னர் அதனைப் பார்வையிடும் அக்பரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அக்பரின் அரசவையில் இருந்த வரி வசூலிக்கும் கொடூரர்களைப் போலவே அக்பரின் படையணிகளில் வேலை வெட்டியில்லாதவர்கள், கொலைகாரர்கள், அயோக்கியர்கள், மதவெறியர்கள், கொள்ளைக்காரர்கள், குண்டர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். அப்பாவிப் பொதுமக்களை மிரட்டுவது, கோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, அவர்களின் பெண்களைக் கவர்ந்து சென்று கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வது போன்ற கொடூரங்களை வகைதொகையில்லாமல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இது அத்தனையும் அக்பரின் முழு சம்மதத்துடன் மட்டுமே நிகழ்ந்தது.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “அக்பரின் ராணுவம் மிகப் பலகீனமானது என்றாலும் அவரது எதிரிகளை விடவும் வலிமையானது. ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகுந்ததொரு ஐரோப்பிய ராணுவத்தின் முன்னர் அக்பரின் ராணுவம் ஒரு மணி நேரம் கூடத் தாக்குப் பிடித்திருக்கவியலாது. அக்பரின் படைத்தலைவர்கள் போர்ச்சுக்கீசிய குடியிருப்புகளைத் தாக்க முனைந்த போதெல்லாம் பரிதாபமாகத் தோற்றிருக்கிறார்கள் என்பதே இதற்கு ஒரு உதாரணம். அலெக்ஸாண்டர் போன்றவர்களெல்லாம் அக்பரின் நெற்றி மீது ஏறி நடந்து சென்றிருப்பார்கள். தென்னிந்தியாவில் பிற்காலத்தில் தோன்றிய மராத்தா குதிரைப்படைகள் அக்பருக்கு எதிராக எளிதானதொரு வெற்றியை அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்பரின் மிக மோசமான ராணுவ நிர்வாகம் தோல்வியை மட்டுமே பெறும் வடிவமைப்பைக் கொண்டது”.

“ஒரு அரசனாக போர்களில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அக்பர், அந்த வெற்றியை அடைவதற்கு எல்லாவிதமான கீழ்த்தரச் செயல்களிலும் இறங்குவதற்குத் தயாரானவராக இருந்தார். தனக்கு ஆதரவளிக்கிற அத்தனை பேர்களையும் தனது ராணுவத்திற்குள் இழுத்துக் கொண்டார் அக்பர்” என்கிறார் ஸ்மித்.

அக்பரின் ராணுவ முழக்கம் “ஹிந்துக்களைக் கொல்லு” என்பதாகும். அந்த ஹிந்து அக்பருக்கு ஆதரவாக அவருடைய படையணியில் இருந்தாலும் அவனைக் கொல்வதில் தவறேதுமில்லை. ஏனென்றால் ஹிந்துவைக் கொல்வது இஸ்லாமிய மதத்திற்கு நன்மைபயக்கும் ஒரு விஷயம்.

வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், “நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்”.

“ராணா பிரதாப்பின் பட்டத்து யானையை உடனடியாக தன்னிடம் அனுப்பி வைக்கக் கோருகிறார் அக்பர். பிரதாப் தனது பட்டத்து யானையை அனுப்பி வைக்க மறுத்துவிட்டதால் உடனடியாக அவர் மீது படையெடுத்துச் செல்லும்படி மான்சிங்கிடம் உத்தரவிட்டார் அக்பர். காஃபிர்களுக்கு எதிரான இந்தப் போர் என் இதயத்தைப் பெருமிதப்படுத்தியது. எனவே அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய தாடியை காஃபிர்களின் ரத்தத்தால் நிறம் மாற்றிக் கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என அக்பரிடம் கூறினேன். பின்னர் குனிந்து அக்பரின் பாதத்தை முத்தமிட எத்தனிக்கையில் அக்பர் தனது கால்களை நகர்த்திக் கொண்டார். ஆனால் நான் வெளியே செல்ல எத்தனிக்கையில் என்னை மீண்டும் உள்ளே அழைத்த அக்பர் தன்னுடைய கை நிறைய பொற்காசுகளை அள்ளி என்னிடம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்” என்கிறார் பதாயுனி.

ராணா பிரதாப் – அக்பர்

அக்பரைப் போலவே ராணாவும் ஒரு பிராந்தியத்தின் அரசர். அவருடைய பட்டத்து யானையை உடனடியாக தனக்கு அனுப்பி வைக்கும்படி சொல்வது ராணாவைச் சிறுமைப்படுத்தும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. ராணா அதற்குப் பணிந்து அவரின் யானையை அனுப்பி வைத்திருந்தாரென்றால் அக்பர் அத்துடன் நிறுத்தியிருக்க மாட்டார். உடனடியாக பெரும் கப்பத்தொகையைக் கேட்டனுப்பியிருப்பார். ராணாவின் குடும்பத்துப் பெண்களைத் தன்னுடைய அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டிருப்பார்.

ராணா அக்பரின் இஸ்லாமியப் படைகளை நொறுக்கித் தள்ளினார். அவரிடம் தோல்வியடைந்து பின்வாங்கி ஓடிய முஸ்லிம் படைத்தலைவர்கள் “வெற்றியடைவதற்குச் சிரமமான இடத்தில் தப்பியோடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என முகமது நபியே சொல்லியிருக்கிறார்” என்றார்கள் என்கிறார் பதாயுனி. ஆனால் அன்றைய தினம் மான்சிங்கினால் காப்பாற்றப்பட்டது. ராணாவுக்கு எதிராக வெறியுடன் போரிட்ட மான்சிங் இறுதியில் ராணாவின் பட்டத்து யானையைக் கைப்பற்றிப் பின்னர் அதனை அக்பரிடம் ஒப்படைக்கிறார். பெரிதும் மகிழ்ந்த அக்பர் அவருடைய கைகை நிறைய அஷ்ரஃபி (பொற்காசுகள்)யை அள்ளி மான்சிங்கின் கையில் கொடுக்கிறார்.

பதாயுனி சொல்வதின்படி, அக்பரின் படையிலிருந்த போர்வீரர்கள் எவருக்கும் முறையான போர்ப் பயிற்சிகளோ அல்லது உத்தரவுக்குக் கட்டுப்படும் கட்டுப்பாடுகளோ சொல்லித் தரப்படவில்லை. காஃபிர்களுக்கு எதிராக போர்புரிந்து அவர்களைக் கொல்வதால் அல்லாவின் சுவனத்தில் இடம்பிடிக்கும் ஆசையுள்ள அத்தனை முஸ்லிம்களும் ஹிந்துக்களுக்கு எதிரான படுகொலைகளைச் செய்வதற்கு சந்தோஷமாக ஒன்று கூடினார்கள். கையில் கிடைத்த கத்தியோ, ஈட்டியோ, அரிவாளோ அல்லது மரம் வெட்டும் கோடாலியோ என எந்த ஆயுதம் கையில் கிடைத்தாலும் அதனைத் தூக்கிக் கொண்டு போருக்குக் கிளம்பி வந்தார்கள்.

அக்பர் அடிப்படையில் ஒரு கொடூர மனோபாவம் உடையதொரு மனிதன். தக்காணத்தில் படையெடுத்துச் சென்ற அக்பரின் மகன் முராத் மிர்ஸா உடல் நிலை சரியில்லாமல் அங்கேயே இறந்து விட்டார். அவரது மகனின் மரணத்தின் துயரத்தை விடவும் தக்காணத்தைத் தாக்கியழித்து அதனைக் கைப்பற்றுவதனையே அக்பரின் மனம் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்ததாக ஃபரிஸ்டா எழுதுகிறார்.

அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பாதிரியார் மொன்செராட், “முகலாயச் சாலைகளின் எல்லாப் பக்கங்களிலும் முஸ்லிம் கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் நிரம்பியிருந்தார்கள். அவர்களின் கையில் சிக்கிய கிறிஸ்தவனும், ஹிந்துவும் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்” என்கிறார். அக்பரின் அரசவையில் இருந்த முக்கியஸ்தர்கள் அக்பருக்குத் தேவையான படைகளை அவர் கேட்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். அவ்வாறு படைகளை அனுப்ப மறுப்பவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இம்மாதிரியான சூழ் நிலையில் முகலாய அரசின் ஒவ்வொரு குடிமகனும் ராணுவத்தில் சேர நிர்பந்திக்கப்பட்டான்.

பாதிரி மொன்செராட்டே, “அக்பரின் படையில் 45,000 குதிரைப்படையினரும், 5000 யானைகளும், பல்லாயிரக்கணக்கான காலாட்படைகளும் இருந்தார்கள். அவர்களுக்கான சம்பளம் அக்பரால் நேரடியாக வழங்கப்பட்டது. இதைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவர்களின் கீழ் படையணிகளை வைத்திருந்தார்கள். அக்பர் கேட்கும்போதெல்லாம் அவர்கள் அந்தப்படைகளை அக்பருக்கு அனுப்பிவைக்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.”

பெரும்பாலான அக்பரின் படையணிகள் கொள்ளையடிப்பதில் மட்டுமே காலத்தை ஓட்டினார்கள். விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவரும் தானியங்கள் மிகக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்கப்பட்டன. பின்னர் அந்தப் பணத்தை படையணிகள் தங்களுடன் பங்கிட்டுக் கொண்டன என்கிறார் பாதிரி மொன்சராட்டே. போருக்குப் போகிற அக்பர் அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களிடம் தானியத்தையும், பிற உணவுப் பொருட்களையும் கொண்டுவரச் சொல்லுவார். அவ்வாறு கொண்டு வந்த பொருட்களுக்கு மிகக் குறைந்த பணம் கொடுக்கப்பட்டும். அதனை ஏற்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்களின் மனைவி, பிள்ளைகள் அடிமைகளாக்கப்படுவார்கள் என்பதால் யாரும் அக்பரை எதிர்க்கத் துணியவில்லை.

அக்பர் மட்டுமில்லை. அவருக்கு முன்னும், பின்னும் வந்த அத்தனை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் இதுபோன்றதொரு கொடூரச் செயல்களைத் தயக்கமில்லாமல் செய்திருப்பதினைக் காணலாம். ஒரு ஹிந்து அரசன் பிற நாட்டின் மீது படையெடுக்கையில் அங்கிருக்கும் அப்பாவிப் பொதுமக்களை ஒன்று செய்யமாட்டான். இரண்டு எதிரிப் படைகளும் நேருக்கு நேராக போர்க்களத்தில் போரிடும். ஆனால் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. படையெடுத்துச் செல்லும் வழியில் இருக்கிற அப்பாவிகளின் வீடுகளும், வயல்களும் தீயிட்டுக் கொளுத்தப்படும். வழியில் இருக்கிற ஹிந்து ஆலயங்களை ஆக்கிரமித்து அங்கிருக்கும் சிலைகளை உடைப்பார்கள்.

கைப்பற்றப்படும் மொத்த நகரமும் முஸ்லிம் படைகளுக்குச் சேவை செய்யப் பணிக்கப்படும். மறுப்பவனுக்கு உயிர் உத்திரவாதமில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள், மதமாற்றம் செய்யப்படுவார்கள். புதிதாக மதம் மாறியவன் இஸ்லாமியப்படைகளுடன் சேர்ந்து கொண்டு அதே கொடுமைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பான். முஸ்லிம் படையணிகள் பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருக ஆரம்பிக்கும். அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கொள்ளையடித்துக் கொள்ள அனுமதியளிக்கப்படும்.

அதே சமயம் கோட்டை வாயிலை அடைத்துக் கொண்டு எதிரிகளை எதிர் நோக்கி நிற்கும் ஹிந்துப் படைவீரனுக்கு எந்த உதவியும் கிட்டாது. அங்கிருந்து பார்க்கையில் அவனுடைய குடும்பமும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போகப்படுவதனையும், அவனது வீடும்,வயலும் தீ வைத்துக் கொளுத்தப்படுவதனையும், ஆலயங்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்படுவதனையும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு நிற்பதனைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இப்படியாக அவன் எதிரியுடன் போரிடுவதற்கு முன்பே அவன் போரிடுவதற்குத் தேவையான காரணங்கள் அனைத்து அழிந்து போயிருக்கும். பதுங்கு குழிகளில் பசியுடனும், பட்டினியுடனும் போராடிக் கொண்டிருக்கும் அவன் சரணடைவதனைத் தவிர வேறு வழியில்லை.

இது போன்ற கொடூரமான வழிமுறைகளே இந்தியாவில் இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கின்றன. இந்திய வரலாற்றைப் படிக்கிற ஒவ்வொருவனும், இந்தியாவில் அன்றைக்கு இருந்த வீரம் நிறைந்த ஹிந்து அரசர்கள் எவ்வாறு இந்தக் காட்டுமிராண்டிகளிடம் தோல்வியடைந்தார்கள் என்கிற கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்வான். ஹிந்து அரசர்கள் தேவையற்ற உயிர்க்கொலைகளைத் தவிர்த்து மரபு சார்ந்து போரிட்டுத் தோற்றுப் போனார்கள். சிறிதும் ஈவு இரக்கமின்றி மதவெறியுடன் கொடூரக் கொலைகள் செய்பவர்களை எதிர்த்து அவர்களால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

முஸ்லிம்களைப் போலவே ஹிந்துக்களும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற கொள்கையுடன் போரிட்டிருந்தால், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட தங்களின் சகோதரரகளை மீண்டும் ஹிந்து மதத்திற்கு அனுமதித்திருந்தால் அக்பர் போன்றவர்களால் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பேரழிவு ஓரளவு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஹிந்துக்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பழமைவாதத்தில் தோய்ந்த ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட தங்களின் சகோதரர்களை ஒதுக்கி வைத்தார்கள். அவ்வாறு ஒதுக்கப்பட்டவன் கோபத்துடன் முஸ்லிம் படையணிகளில் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.

இருப்பினும், இந்த அத்தனை காரணங்களையும் மீறி ஹிந்துக்களின் போராடும் குணம் மறைந்துவிடவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் உலகில் வேறெந்த நாட்டிலும் நிகழவில்லை. இஸ்லாம் சென்ற ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேஷியாவரைக்கும் இஸ்லாமிய வாள்முனைக்கு அஞ்சி மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இன்றைக்கு அந்த நாடுகளெல்லாம் முழுமையான இஸ்லாமிய நாடுகள். ஆனால் ஹிந்து மதம் இன்றுவரை அழியவில்லை. மாறாக செழித்து வளர்ந்தே இருக்கிறது. ராஜபுத்திரர்களும், மராத்தாக்களும், சீக்கியர்களும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடியே வந்திருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அக்பர் என்னும் கயவன் – 17

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பர் அவரது ஆட்சிக்காலத்தில் நிரந்தரமாகக் கட்டமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார் என்று சொல்வதனைப் போன்ற பொய் வேறொன்றுமில்லை. அக்பரின் காலத்தில் மட்டுமல்ல. அவருக்கு முன்னர் இருந்த அத்தனை முகலாய ஆக்கிரமிப்பாளர்களிடையேயும் அதுபோன்றதொரு முறையான வரிவிதிப்பு முறைகள் இருந்ததேயில்லை. அப்படியே இருந்ததாக நாம் ஏற்றுக் கொண்டாலும் அது அத்தனையும் அரசின் பல பகுதிகளில் கொடுமையான முறையில் வரி வசூலிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த அக்பரின் அலுவலகர்களின் கொடூர நடவடிக்கைகளினால் காணாமல் போய்விட்டன. தனக்கு அளிக்கப்பட்ட பிராந்தியத்தில் வரி வசூலிக்கும் அதிகாரமுடையவனின் அப்போதைய மனோபாவத்திற்கு ஏற்ப வரிகள் கூடும் அல்லது குறையும். அதனைக் கொடுக்க மறுத்தவர்கள் கொடுமையாக சித்தரவதை செய்து கொல்லப்பட்டார்கள் என்பதே நாம் மீண்டும் மீண்டும் காண்பது.

இந்தக் கொடுமையான வரி வசூலிப்பு முறைகளிலிருந்து முஸ்லிம்களுக்குச் சிறிதளவேனும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம்கள் கூட்டாகச் சேர்ந்து தங்களுக்குள் பணம் வசூலித்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் அல்லது முல்லாக்களிடம் முறையிட்டு அவர்கள் மூலமாக அழுத்தம் கொடுத்தும் தங்களின் வரிச்சுமையைக் குறைத்துக் கொண்டார்கள். எனினும் அந்தச் சுமை பரிதாபகரமான ஹிந்துக்கள் மீது சுமத்தப்பட்டு அந்த நஷ்டத்தை ஈடுகட்ட நிர்பந்திக்கப்பட்டார்கள். ஹிந்துக்களும் இலஞ்சம் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் அம்மாதிரியாக நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக, மிகக் குறைவானதே. கையூட்டு கொடுக்கையில் பிடிபட்டால் ஹிந்துவின் மானம், மரியாதையும், அவனது சொத்துக்களும், நிலமும் அதனுடன் அவனது மனைவி, மகள்களும் ஏதாவது ஒரு முஸ்லிம் அலுவலனின் அந்தப்புரத்தை அலங்கரிக்க வேண்டியிருக்கும்.

அக்பரின் எங்காவது படையெடுத்துச் சென்று கொண்டிருக்கையில் செல்லும் பகுதிகளில் உள்ளவர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்பது நேரமெடுக்கும் செயல் என்பதால் மொத்த ராணுவமும் அந்தப் பகுதியைக் கொள்ளையடித்து மொட்டையாக்கும். அக்பர் அவ்வப்போது ஏதாவது காரணம் காட்டி புதிய வரிகளைத் தனது குடிமக்கள் மீது திணித்துக் கொண்டே இருந்தார். உதாரணத்திற்கு ஆக்ரா கோட்டையை பழுதுபார்ப்பதற்காக என்று அக்பர் விரித்த வரிகள். இப்படியாக தங்களைக் கொள்ளையடித்து, தங்களின் பெண்களைக் கவர்ந்து சென்று பாலியல் அடிமைகளாக்கிய, தங்களது வழிபடும் இடங்களை நாசம் செய்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஹிந்துக்கள் தொடர்ந்து சேவை செய்ய ஆணையிடப்பட்டார்கள். மறுத்தவன் உடனடியாகப் பிடிக்கப்பட்டு அடிமைச் சந்தையில் அடிமையாக விற்கப்படுவான் என்பதே தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அக்பர்நாமா நூலை அக்பரிடம் சமர்ப்பிக்கும் அபுல் பசல்

இதன் பின்னனியிலேயே அக்பரின் வரி வசூலிப்புமுறை ஆரயப்பட வேண்டும். முதலில், ஹிந்துக்களால் வெறுக்கப்பட்ட ஜிஸியாவைப் பார்ப்போம். எட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளி வாழ்கின்ற ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரியை விதித்தார்கள். ஜிஸியாவினா ஹிந்துக்கள் பெரும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் உள்ளானார்கள். ஜிஸியா வரி என்பது குரானில் முகமது நபியால் சொல்லப்பட்டதொரு வரி. அதன்படி, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி இஸ்லாமிய நாடாகிறது. அந்த நாட்டில் வாழும் காஃபிர்கள் அவர்களின் பாதுகாப்புக்கென ஜிஸியா வரியைச் செலுத்தியே ஆகவேண்டும். அவ்வாறு செலுத்த மறுக்கும் காஃபிர்களைக் கொலை செய்ய அந்த முஸ்லிம் ஆட்சியாளக்கு அதிகாரம் வழங்குகிறது குரான்.

ஆனால் உண்மையில் “ஜிஸியா” வழங்கும் பாதுகாப்பு ஒரு பொய்த்தோற்றமே. ஜிஸியா வரியைச் செலுத்திய பிறகும் ஹிந்துக்கள் தொடர்ந்து அவமானங்களுக்கும், படுகொலைகளுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். ஹிந்துக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு, அவர்களின் மனைகளும், பிள்ளைகளும் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இத்தனை கொடூரங்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் பிழைத்துக் கிடப்பதற்காக மட்டுமே ஜிஸியா வசூலிக்கப்பட்டது.

ஜிஸியாவைக் குறித்து எழுதும் அக்பரின் வரலாற்றாசிரியர்களான பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அக்பர் ஜிஸியாவை நீக்கியிருந்தால் ராய் சுர்ஜான் எதற்காக மீண்டும் அந்த வேண்டுகோளை அக்பரின் முன் வைக்க வேண்டும்?

அக்பரின் அரசவையில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த ஜைன முனியான ஹிர்விஜய சூரி (ஜூன் 7, 1583 முதல்), “குஜராத் மற்றும் கத்தியவாரைச் சேர்ந்த ஹிந்துக்களும், ஜைனர்களும் இனி ஜிஸியா வரியைச் செலுத்தத் தேவையில்லை என அக்பர் உத்தரவிட்டு அதனை உறுதிப்படுத்தினார்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அக்பரின் அரசவைக்கு 1587-ஆம் வருடம் வந்த இன்னொரு ஜைன முனியான ஷாந்தியிடம் அக்பர் ஹிந்துக்கள், ஜைனர்கள் மீதான ஜிஸியாவை நீக்கவும், விலங்குகளைக் கொல்லத் தடை செய்வதாகவும் ஒரு உத்தரவைப் பிறப்பித்ததாகச் சொல்கிறார்.

இதனை சிறிது ஆராய்ந்தாலேயே இதில் இருக்கும் பொய்மையை எளிதாகக் கண்டடையலாம். ஏற்கனவே ஜிஸியாவை நீக்க உத்தரவிட்ட அக்பர், மீண்டும் ஒருமுறை ஜிஸியாவை நீக்குவதாகச் சொல்லக் காரணம் என்னவாக இருக்க முடியும்? உண்மையில் அக்பர் ஜிஸியாவை நீக்கவேயில்லை. அதாகப்பட்டது அதனைச் செய்வதற்கு அவருக்கு விருப்பமில்லை. அக்பர் ஜைன முனிகளிடம் புளுகியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற காஃபிர் அந்த நாட்டுக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அவ்வாறு இருக்கிற காஃபிர்களை அவமானங்களுடன் மட்டுமே வாழ இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எதிரான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அந்தப் பகுதியில் வாழும் முல்லாவே தீர்மானிப்பான். இஸ்லாமியச் சட்டம் அந்த முல்லாவின் மூலமாகவே அங்கு வாழும் ஹிந்து காஃபிர்கள் மீது செயல்படுத்தப்படும் என்பதால் ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளையும், ஆலயங்கள் நிர்மாணிப்பதனையும், ஏன் இடிந்த பழையதொரு ஆலயத்தையும் மீண்டும் கட்டிக் கொள்வதற்கான அனுமதியும் கூட மறுக்கப்படும் என்பதே வரலாறு.

உண்மையில் அக்பருக்கு ஹிந்துக்களின் மீதான கரிசனம் எதுவும் இருந்ததில்லை. தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைக்கும் சாதாரண ஹிந்துவையும் அக்பர் விட்டு வைக்கவில்லை. அவ்வாறு திருமணமாகவிருக்கும் பெண்ணை அவளுடைய தகப்பன் முகலாய காவல் அதிகாரியிடம் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கட்டாயப்பட்டுத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களிடமிருந்து முடிந்த அளவிற்குப் பணம் கறக்கப்பட்டது. ஒருவகையில் இது அக்பரின் திருமண வரியாகும். அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அக்பருக்குச் சென்றது. அந்தப் பெண் அழகானவளாக இருந்தால் அவள் கவர்ந்து செல்லப்பட்டு அக்பருக்கும் அவரது சகாக்களுக்கும் விருந்தாக்கப்பட்டாள். பின்னர் அந்தப் பெண் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டு தில்லித் தெருக்களில் திரியவிடப்பட்டாள்.

எனவே அக்பரின் வரி வசூலிப்பு முறைகளைக் குறித்து நமக்குப் பாடமெடுக்கிற இந்திய வரலாற்றாசிரியர்கள் நமக்குப் பொய்களையும், புனைகதைகளையும் நம்மிடம் திணிக்கிறார்கள். ஜிஸியா, திருமண வரி, புனிதப்பயண வரி, நீதி மன்ற வரி, பிறந்த நாளுக்கு எடைக்கு எடை தங்கம் வரி, வரி கொடுக்காதவனின் மொத்த சொத்தையும் அபகரிப்பது, அதுவுமில்லாவிட்டால் கொள்ளையடிப்பது என வித,விதமான முறைகளில் எந்தத் திட்டமும், வரைமுறையும், கோட்பாடுமின்றி அக்பரின் வரி வசூலிப்புகள் கோலாகலாமாக நடந்து கொண்டிருந்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அக்பர் என்னும் கயவன் – 18

 

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பர் கலைகளையும், இலக்கியங்களையும் ஆதரித்த சிறந்த அரசர் என நமது வரலாற்று நூல்கள் கூக்குரலிடுகின்றன. அதனையெல்லாம் விடவும் அக்பரின் அவையை அலங்கரித்த அற்புதமான ஒன்பது “நவரத்தினங்கள்” அவரது புகழைப் பறைசாற்றுவதாக இருப்பதாக நம்மையெல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் அதற்கு முற்றிலும் எதிரான உண்மைகளைச் சொல்லுகின்றன. அந்த “நவரத்தினங்கள்” அத்தனைபேரும் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமற்ற, அக்பரை முகஸ்துதி செய்து பிழைக்கிற கைக்கூலிகள் என்பதே உண்மை.

வெளித் தோற்றத்திற்கு அக்பர் அவர்களை மதிப்பது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர்களை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை. “அல்லாவின் கருணையால் எனக்கு ஒரு நல்ல மந்திரி கூடக் கிட்டவில்லை. அப்படி இருந்திருந்தால் ஜனங்கள் நான் செய்வதனையெல்லாம் அவர்கள் சொல்லித்தான் செய்வதாக நினைத்திருப்பார்கள்” என்றார் அக்பர். அக்பரை வானளாவாகப் புகழ்ந்து பொய்யுரைகளை எழுதி வைத்த அபுல் ஃபசல் அக்பரின் நவரத்தினங்களில் ஒருவர் என்பதனை நினைக்கும் போது மற்ற ரத்தினங்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதினை நாம் எளிதாக யூகிக்கலாம். இந்திய வரலாற்றாசிரியர்கள் பீற்றிக் கொள்வது போல அவர்களில் ஒருவருக்குக் கூட அறிவோ, ஆற்றலோ இருந்ததில்லை.

அக்பரின் அரசவையை அலங்கரித்த நவரத்தினங்கள், அபுல் ஃபசல், அபுல் ஃபய்சி, தோடர்மல், மான்சிங், மிர்ஸா அஸிஸ் கோகா, அப்துல் ரஹிம்கான் கானா, பிர்பால், தான்சென் மற்றும் ஹக்கிம் ஹுமாம் என ஒன்பது பேர்கள் ஆவார்கள். ஏற்கனவே சொன்னபடி அக்பருக்கு இவர்கள் ஒருவர் மீதும் மரியாதை எதுவும் இருந்ததில்லை. ரத்தினங்களில் யாரேனும் இறந்த பிறகு அவர்களுக்கான நினைவிடங்களைக் கூட அக்பர் கட்டவில்லை. அதனையும் விட அவர்கள் இறந்தபிறகு அவர்களைக் குறித்து அக்பர் எங்குமே நல்லவிதமாக ஒரே ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்பதினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. அபுல் ஃபசல்

1551-ஆம் வருடம் பிறந்த அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல் ஃபசல் அல்லாமி, ஷேக் முபாரக் என்பவரின் மகன். அவருக்கும் அக்பரின் மகனான ஜஹாங்கீருக்கும் ஒத்து வரவில்லை. ஜஹாங்கிரின் உத்ரவின்பேரில் அபுல் ஃபசலை சராய் புர்க்கி என்கிற கிராமத்தில் வைத்து அபுல் ஃபசலைக் கொலை செய்துவிட்டார்கள். அதனைக் கண்டித்து அக்பர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதிலிருந்து அபுல் ஃபசல் மீது அக்பர் வைத்திருந்த மரியாதையை அறிந்து கொள்ளலாம்.

அபுல் ஃபசல் ஒரு அரேபியர். அவரருடைய ஷேக் முதாதையர்கள் அரேபியாவிலிருந்து வந்திருக்க வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டில் சிந்துப் பகுதியின் மீது படையெடுத்த அரேபியர்களுடன் அவரது மூதாதையர்களும் இந்தியாவிற்கு வந்து இங்கேயே குடியேறியிருக்க வாய்ப்பிருக்கிறது. அபுல் ஃபசலின் தகப்பனான ஷேக் முபாரக் சுன்னி இஸ்லாமியப் பிரிவிலிருந்து ஷியா பிரிவிற்கு மாறிவிட்டார். அதனைக் குறித்து அக்பருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். மத அடிப்படைவாதத்தில் ஊறியவரான அக்பர் உடனடியா ஷேக் முபாரக்கைக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அக்பர் தன்னைக் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சிய ஷேக் முபாரக் அவரது இரு மகன்களான அபு ஃபய்ஸி மற்றும் அபு ஃபசலை ஆக்ராவில் விட்டுவிட்டு சலிம் சிஸ்தி தர்காவில் ஒளிந்து கொண்டார். பின்னர் அக்பரின் அரசவையில் பணிபுரியச் சென்ற அபு ஃபய்ஸி அவரது சகோதரரான அபு ஃபசலை 1574-ஆம் வருடம் அக்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஆரம்பத்தில் அக்பர் அவரைக் கண்டு கொள்ளவில்லை எனினும் முகஸ்துதி செய்வதில் வல்லவரான அபு ஃபசல் மெல்ல, மெல்ல அக்பரின் மனதில் இடம்பிடித்தார். பொய்களையும், புனைகதைகளையும் அக்பரின் சுயசரிதையான அக்பர் நாமாவில் எழுதி வைத்த பெருமை அபு ஃபசலையே சாரும். அரசவையில் இருந்த ஜஹாங்கிர் அபுல் ஃபசலையும் அவரது புளுகுகளையும் வெறுத்தார். அவரை நீக்குமாறு ஜஹாங்கிர் செய்த வற்புறுத்தல்களை உதாசீனம் செய்த அக்பர் அபுல் ஃபசலைத் தனக்கு நெருக்கமானவராக ஆக்கிக் கொண்டார். ஃபசலுக்கு 2000 குதிரைப்படைகளை நடத்தும் படைத்தலைவர் பதவியும் கொடுக்கிறார் அக்பர்.

அக்பருக்கு எதிராக புரட்சி செய்து அலஹாபாத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஜஹாங்கிருக்கு எதிராக அபுல் ஃபசலை அனுப்பி வைக்கிறார் அக்பர். அதனை அறிந்து கோபமுறும் ஜஹாங்கிர் அவரைத் தந்திரமாகக் கொலை செய்கிறார். ஃபலைச் சுற்றி வளைக்கும் ஜஹாங்கிரின் படைகள் அவரது உடலை ஈட்டிகளால் துளைக்கிறார்கள். பின்னர் ஃபசலின் தலை கொய்யப்பட்டு அலஹபாத்திலிருக்கும் ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜஹாங்கிர் அந்தத் தலையைக் குப்பையில் தூக்கியெறிந்துவிட்டார். ஏற்கனவே சொன்னபடி அக்பர் ஃபசலின் மரணத்தைக் குறித்துத் துளியும் வருத்தப்படவில்லை. ஏனென்றால் அவரைச் சுற்றிலும் முகஸ்துதி செய்யும் கூட்டத்திற்குக் குறைவில்லை என்பதால்.

2. அபுல் ஃபய்ஸி

அபுல் ஃபசலின் சகோதரரான அபுல் ஃபய்ஸி அக்பரின் இரண்டாவது நவரத்தினம். அரசவைக் கவிஞராக அறியப்படுகிற அபுல் ஃபய்ஸி குறித்து அக்பர் மரியாதையாகச் சொன்னதாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. அக்பரின் மகனான முராத்திற்கு சிறிது காலம் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரும், அமிர் குஸ்ருவும் சமகாலத்திய சிறந்த பாரசீகக் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். ஃபய்ஸி ஏறக்குறைய 101 புத்தகங்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் புத்தகங்களுக்கான தடையங்கள் எதுவும் இல்லை. எனவே அவர் அத்தனை புத்தகங்கள் எழுதியதாகச் சொல்வது உண்மையில்லாமல் இருக்கலாம். ஆஸ்த்துமாவில் துன்பப்பட்ட அபுல் ஃபய்ஸி 1595-ஆம் வருடம் ஆக்ராவில் இறந்துவிட்டார்.

இந்திய வரலாற்றாசிரியர்கள் சொல்வது போல அக்பருக்குக் கலை, இலக்கியங்களில் துளியும் ஆர்வம் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. அபுல் ஃபய்சி எழுதியவற்றையெல்லாம் அக்பர் புகழ்ந்திருப்பார் என்பது போன்ற கற்பனை வேறெதுவும் இல்லை.

ராஜா தோடர்மால்

3. ராஜா தோடர்மல்

ராஜ தோடர்மல் ஒரு ராஜபுத்திர ஷத்திரியர். அக்பரின் படைகளைக் குறித்த கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்காக அக்பரால் வேலைக்கமர்த்தப்பட்டவர். முகஸ்துதியில் பிற ரத்தினங்களைப் போன்றவராதலால் மிக விரைவில் அக்பரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

அதன் பின்னர் அவரது முக்கிய வேலை அவரது ராஜபுத்திர அரசர்களை மிரட்டி அக்பரின் வழிக்குக் கொண்டுவருவதாக இருந்தது. அக்பருக்குப் பணியும் அரசர்களின் மகள்களை அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும் முக்கிய பணியும் செய்தவர் ரத்தினமான தோடர்மல்.

அக்பர் போரில் வெல்லும் இடங்களில் புதிய வரிவிதிப்பு முறைகளைக் கொண்டுவந்து அப்பாவி ஹிந்துக்களைக் கசக்கிப் பிழிந்து, அக்பரி கஜானவை நிரப்பியவர். பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் தங்களின் மனைவி, பிள்ளைகளை அடிமைச் சந்தையில் விற்பனை செய்வதற்குக் காரணமானவர்.

முஸ்லிமான அக்பருக்கு சேவைகள் செய்தாலும் தோடர்மல் இறுதிவரை மதம்மாறாமல் ஹிந்துவாகவே இருந்தவர் என்பதினை ஒரு சாதனையாகச் சொல்லலாம். அதனால் நேர்ந்த அவமானங்களைத் தாங்க முடியாமல் ஹரித்துவாருக்கு சாமியாராகச் சென்றவரை மீண்டு அக்பர் அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். ஆனாலும் சிறிது காலத்திலேயே தனது 54 வயதில் தோடர்மல் இறந்துவிட்டார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard