New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறித்து- கன்னி மேரி தீர்க்க தரிசனங்கள் நிறைவேறல் கட்டுக்கதையே


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இயேசு கிறித்து- கன்னி மேரி தீர்க்க தரிசனங்கள் நிறைவேறல் கட்டுக்கதையே
Permalink  
 


 

இயேசு கிறித்து- கன்னி மேரி தீர்க்க தரிசனங்கள் நிறைவேறல் கட்டுக்கதையே

   
கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் வாழ்வில் சம்பவங்கள் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் வரவேண்டிய மேசியா- கிறிஸ்து வாழ்வில் நடக்கவேண்டியவை என சொன்னபடி நடந்தது,அதனால் இறந்த நபர் ஏசு தான் கிறிஸ்து எனப் புனையப் படுகின்றது.

ஏசு பிறப்பில் தீர்க்க தரிசனங்கள் நிறைவேறல் கட்டுக்கதை அதிகமாகக் காணலாம். நாம் இக்கதைகளை காண்போம்.முதலில் நாம் அறிய வேண்டியது, சுவிசேஷங்களில் முதலில் புனையப்பட்ட மாற்கு(70 – 75) பிறப்பு பற்றி ஏதும் கிடையாது.மத்தேயு லூக்காவில் மட்டுமே- இவை 80 – 95 இடையே புனையப்பட்டவை.
இயேசுவின் தாய் திருமணத்திறுகு முன்பே கருத்தெருத்து இருந்தாளாம், இதை அறிந்த ஜோசப் விவாகரத்து அமைதியாக செய்ய பார்த்தபோது, ஜோசப் கனவில் தேவதூதன்  ஏசாஇயா தீர்க்கத்தில் கன்னி ஒருத்தி மக்ன் பெறுவாள் என்றது நிறைவேர பரிசுத்த ஆவுயினால் மேரி கர்ப்பமானதாக சொன்னதாகக் கதை.

மத்தேயு 1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார். 22 ‘இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள்.

18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னேஅவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

 

 மத்தேயு 2: 15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ‘ எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. 16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.17 அப்பொழுது ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்;18 ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது. 
மத்தேயு 2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ‘ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்  என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ ″நசரேயன்என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: இயேசு கிறித்து- கன்னி மேரி தீர்க்க தரிசனங்கள் நிறைவேறல் கட்டுக்கதையே
Permalink  
 


இயேசுவின் தாய் திருமணத்திறுகு முன்பே கருத்தெருத்து இருந்தாளாம்இதை அறிந்த ஜோசப் விவாகரத்து அமைதியாக செய்ய பார்த்தபோதுஜோசப் கனவில் தேவதூதன்  ஏசாஇயா தீர்க்கத்தில் கன்னி ஒருத்தி மக்ன் பெறுவாள் என்றது நிறைவேர பரிசுத்த ஆவுயினால் மேரி கர்ப்பமானதாக சொன்னதாகக் கதை. .மேலும் அதிசயங்கள் நடந்ததாகக் புனையல்கள்.
   

ஏசாயா 7:14

14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.15. தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.16. அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும்நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.17. எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும்உன் ஜனத்தின்மேலும்உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும்அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.18. அந்நாட்களிலேகர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும்அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.19. அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும்கன்மலைகளின் வெடிப்புகளிலும்எல்லா முட்காடுகளிலும்மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.

13 அதற்கு எசாயா: தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.15 தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.16 அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.

மூல எபிரேய மொழி ஏசையா புத்தகத்தில் கன்னி இல்லவே இல்லை. இளம்பெண் மட்டும் தான். மேலும் அம்மகன் வளரும் முன் நடக்கவேண்டும் எனச் சொன்னது எதுவுமே ஏசு வாழ்வில் நடக்கவே இல்லை.

மீக்கா5:22 நீயோஎப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும்இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்: உன்னிடமிருந்தே தோன்றுவார்: அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

இதற்கு அடுத்தது- இந்த மத்தேயு சுவிசேஷத்தின் ஜோசப் பெத்லஹும் வாழ்பவர்யாக்கோபு மகன். இதன் மூலம் சர்ச் கூறும் இன்னொரு தீர்க்கம் நிறைவேறியதாம். அதாவது தாவீது வாரிசு யூதர்களின் ராஜா” பெத்லஹெமில் பிறத்தல் என்பதாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆனால் ரோமன் தண்டனை முறையில் தூக்கு மரத்தில் தொங்கும்படி மரண தண்டனையில்கைது செய்து விசாரித்து தண்டனை தந்த ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து ” நசரேயன் ஏசு- யூதர்களின் ராஜா” என்பதாக கதை

 

மத்தேயு 2:11 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்அப்போது கிழக்கிலிருந்து ஜோதிட ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கேஅவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ‘ என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும்மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டிமெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், 

‘ யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், ″ யூதா நாட்டுப் பெத்லகேமேயூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லைஏனெனில்என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ‘ என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ‘ நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ‘ என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

16 ஜோதிட ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.17 அப்பொழுது ‘ ராமாவிலே ஒரு குரல் கேட்கிறதுஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறதுஇராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்;18 ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை ‘ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

ஏரோது குழந்தைகளை- வயது வரை உள்ள குழந்தைகளை கொல்லல்ஏரோதின் மரணத்திற்கு வருடம் முன் ஏசு பிறந்திருக்க வேண்டும். ஏரோது மரணம் பொ.மு. ல்.

லேவியர்1926  குறி பார்க்க வேண்டாம்: நாள் பார்க்க வேண்டாம்.
உபாகமம்18:9 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின்அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே. 10 தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும்குறி சொல்கிறவனும்நாள் பார்க்கிறவனும்சகுனங்களை நம்புகிறவனும்சூனியக்காரனும்11 மந்திரவாதியும்ஏவிவிடுகிறவனும்மாயவித்தைக்காரனும்இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது. 12 ஏனெனில்இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம்உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.

எசாயா47: 12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி 

சூனியங்களோடும் வந்து நில்: ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்: ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்:வான்வெளியைக் கணிப்போரும்விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும்வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.14 இதோஅவர்கள் பதர் போன்றவர்கள்நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்: தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று: எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.15 நீ முயன்று பயின்றவையும் இவ்வாறே அழிவுறும்: உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்: ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்: உன்னை விடுவிக்க எவரும் இரார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

நட்சத்திரம் பார்த்தல் நிமித்தம் பார்த்தல் கர்த்த்ருக்கு விரோத்மே, பின் ஏன் இது சுவிசேஷக் கதையில் வந்தது.
 
 பெத்லஹேமில் வாழ்ந்த ஜோசப்-மேரி குடும்பத்தை நாசரேத் கொண்டுவர வேறொரு கதை, தீர்க்கமாம்.

மத்தேயு 2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ‘ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ ″நசரேயன்என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. .

  ஏசு பிறந்தபின் வெளிநாட்டு ஜோதிடர்கள் பஞ்சாங்க நட்சாத்திரம் பார்த்துயூதர்களின் ராஜா பிறந்துள்ளதாக தேடி வர, ஏரோதை விசாரிக்க, அவர்தீர்க்கம் வழியே பெத்லஹேம் எனச் சொல்ல, மீண்டும் நட்சத்திரம் வழிகாட்ட ஏசுவைப் பார்த்து , வெளிநாட்டு ஜோதிடர்கள் தங்கள் நாடு திரும்பிட, ஏரோது குழந்தை கொலை செய்யப் போவது தெரிந்து குடும்பம் எகிப்து ஓடியதாம். பின் ஏரோது மரணத்தை தேவதூதன் சொல்ல திரும்பி வந்தனராம். ஆனால் யூதேயாவை ஏரோது மகன் ஆண்டதால் கலிலேயா நாசரேத் வந்து தங்கினராம்.

 இதில் ஒரு தீர்க்கம் -மத்தேயு 2:23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ நசரேயன்என அழைக்கப் படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. “ 
 இப்படி ஒரு வசனம் பழைய ஏற்பாட்டில்எங்குமே கிடையாது.
மேலும் நாசரேத் என்னும் ஊரே மூன்றாம் நூற்றாண்டில் தான் மக்கள் குடியேற்றம் பெற்றது என்பர் புதைபொருள் ஆய்வினர்.
www.nazarethmyth.info/

கலிலேயா ஆண்டதும் ஏரோது மகன் தான். நாசரேத்து அருகில் சிபோரிஸ் என்பது தான் எரோது அந்திப்பாவின் தலை நகர்.  எரோது அந்திப்பா இங்கே 2000 பேர் நிர்வாணமாக சிலுவையில் கொல்லப்பட்டனர். அமைதியைத் தேடுபவர் நிச்ச்யமாய் சிபோரிஸ் ஊர் அருகில் சென்றிருக்கவே முடியாது.

லூக்கா2:11 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர்சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்இவர் பதவி ஏற்றது .கா.6 இல்

பழைய ஏற்பாட்டில் இல்லாத வசனம், உள்ள வசனத்தில் பாதி எல்லாம் போட்டு தீர்க்கம் நிறைவேறல் கதை அனைத்தும் கட்டுக் கதையே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard