New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?
Permalink  
 


அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?

இன்றைய கிறிஸ்துவ சர்ச்சின் ஆரம்பம் ஜெருசலேமில் என்பது பைபிள் கதை. ஜெருசலேமில் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு தலைமையில் ஆதி சர்ச் இயங்கியதாக பவுல் கடிதங்கள் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் கதைகள் கூறுகின்றன. விபரமாக காண்போம்

சர்ச் மரபுக் கதைகளின்படி ஏசுவிற்குப் பின்பான ஜெருசலேம் அப்போஸ்தலக் குழுவை தலைமை ஏற்று நடத்தியது யாக்கோபு, இவர் ஏசுவின் சகோதரர் எனவும் சொல்லப்படுவார். இவர் பெயரில் ஒரு கடிதமும் உண்டு.

பவுல் கடிதங்களிலும் ஏசுவின் சகோதரர் - ஜெருசலேம் குழுவின் தலைவர் எனவும் இவை காட்டுகிறது. பவுல் கடிதத்தில் யாக்கோபின் தூதர்களுக்கு பேதுரு[ii] அடி பணிந்தார் எனவும் தெளிவாய் உள்ளது. யாக்கோபு & பேதுரு இருவருமே திருமணமானவர் தங்கள் மனைவியை  துணைக்கு வைத்துக் கொண்டும் செல்லும் இடமெல்லாம் அழைத்தும் சென்றனர்[iii] எனவும் உள்ளது.

 

ஏசுவின் குடும்பமும் சகோதர& சகோதரிகளும்

சர்ச் மரபுக்கதைகளின்படி  பேதுரு & பவுல் மரணத்திற்குப் பின் ஏசு கதையை முதலில் எழுத்தில் வரையப் பட்டது மாற்கு சுவிசேஷக் கதைகள், இதில் ஏசுவின் குடும்பம் பற்றி உள்ளதுபடி[iv] ஏசுவிற்கு 4 தம்பிகள்-  யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ளும், 2க்கும் அதிகமான உடன் பிறந்த சகோதரிகளும் இருந்தனர்.

லூக்கா சுவிசேஷக் கதையில் முதல் மகன்[v] என உள்ளதால் சகோதரர்கள் எல்லாம் தம்பிகளே, மத்தேயு சுவிசேஷக் கதையில் திருமணத்திற்கு முன் கர்ப்பமாய் இருந்தமையால்[vi] ஏசு முதல் மகன் என ஆகும்; ஏசு பிறக்கும் வரை ஜோசப்[vii]  மேரியோடு உடலுறவு கொள்ளவில்லை என உள்ளது, அதன் பின்னர் இணைந்து தமிபிகளை பெற்று இருக்கலாம் எனத் தெளிவாகும்

 

சர்ச் மரபுக் கதைகள்படி ஏசுவின் தாய் மேரி கன்னி என்பதால் இங்கு சகோதரர் என்றால் ஒன்றுவிட்ட எனவும் சில சர்ச் பிரிவு சாதிக்கும். நாம் கத்தோலிக கலைகளஞ்சிஅய்ம் சொல்வதைக் காண்போம்

 The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and sisters in the Greek speaking world at the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense. -New Catholic Encyclopedia, Vol-9 Page-337; from Catholic University America

  சகோதரர்கள் எழுதியதாக கடிதம் புதிய ஏற்பாட்டில் உள்ளது. 

யாக்கோபு 1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:

யூதா 1 யாக்கோபின் சகோதரனும், இயேசு கிறிஸ்துவின் பணியாளுமாகிய யூதாவிடமிருந்து, தேவனால் அழைக்கப்பட்டிருக்கிற எல்லா மக்களுக்கும் எழுதப்படுவது: 

ப்ரோட்டஸ்டண்ட் கிளர்ச்சியின் முன்னிலைப் பாதிரியாரான மார்டின் லூதர் - புதிய ஏற்பாட்டில் யாக்கோபு, யூதா, எபிரேயர் & வெளிப்படுத்திய விசேஷங்கள் இவை நான்கும் நீக்க வேண்டும் எனக் கருதினார். மற்றவர் தடுக்க முயற்சி கைவிடப்பட்டது.

http://en.wikipedia.org/wiki/Luther's_canon

 https://en.wikipedia.org/wiki/James,_brother_of_Jesus padiyaa ஜெருசலேம் சர்ச்சை ஏசுவிற்குப்பின் தலைமை ஏற்று அப்போஸ்தலர்களையும் வழி நடத்தியதான யாக்கோபு(ஆங்கில ஜேம்ஸ்)69ல் இறந்திருக்கலாம். இவர் கடைசிவரை யூத நம்பிக்கை கொண்டு, ஜெருசலேம் நோக்கி தொழுகை செய்து வாழ்ந்தவர் எனக் குறிப்புகள் கூறுகிறது.

சர்ச் மரபுக் கதைகள்படி ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பதற்கு அல்பேயுவின் மகன் என உள்ளதைக் காட்டுவார்கள். ஆனல இங்கே உள்ள யோவான் சுவி வசனம்

 யோவான்7:1 இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5ஏனெனில் இயேசுவின் சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

 ஏசுவின் சகோதரர் இருவர் அப்போஸ்தலர் என்றால் யோவான் சுவி தவறு. இந்தசுவி சரி எனில் அப்போஸ்தலர்கள் யார் என்பதே தெரியாது, அல்லது ஏசு- சீடர்கள் பற்றி சர்ச் ஏதுமே தெரியாது, பிற்காலத்தில் தன்னிச்சையாய் புனைந்து வருகிறது என்ப்பது தெளிவாக புரியும்.

சரி யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பற்றி பைபிளியல் அறிஞர் கூறுவது காண்போமா?

Oxford  Dictionary of Christian Church : Even if the Epistle is not the work of St.James, it seems likely that it was composed by A.D.95, At any rate it is not later than A.D.150. // Page 712

OXFORD Dictionary of Saints -1978 - JAMES THE LESS: The sons of Alphaues is often but not certainly, identified with the James whose mother stood by Christ on the cross and also with James, the brother of the Lord, who saw the risen Christ and is often called the first Bishop of Jerusalem, He is also sometimes identified with Author of the Epistle of the St.James. If None of this identification is correct, we know Practically nothing about James the Less.// Page - 208.

இவரைப் பற்றி சொல்வது எல்லாமே ஆதாரமில்லா நம்பிக்கை- செவிவழிக் கதைகள் என பரப்பப் பட்டவையே.

30 - 40 வருடம் ஜெருசலேம் ஆதிசர்ச் தலைமை தாங்கியவர் பற்றி நம்பிக்கைக்கு உரிய தகாவல்கள் ஏதும் இல்லை, எனில் ஏசு கதை - அதற்கு 30 வருடம் ஒரு சில மாதங்கள் மட்டுமே இயங்கிய ஏசு பற்றிய சுவி கதைகள் சற்றும் வரலாற்று ஆசிரியர் ஏற்கத் தக்கது அல்ல.

 


கலாத்திய1:19ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர அப்போஸ்தலர் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.

[ii] கலாத்திய2:9 அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின்தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் ..12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் யாக்கோபின் ஆள்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.

[iii] 1கொரிந்திய9:5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும்செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?

[iv] மாற்கு6: 1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள்.

[v] லூக்கா 2:23

[vi] மத்தேயு 1:19

[vii] மத்தேயு 1:25



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: அப்போஸ்தலர் யாக்கோபு யார்- ஏசுவின் சகோதரர் யார்- தெரியாது?
Permalink  
 


ஏசு சகோதரர் யூதா ஒருவரா- மூவரா?

1.யூதாசு இஸ்காரியோத்து  - சிரியா - அரேபிய பாரம்பரியத்தில் யூதாசு இஸ்காரியோத்து பார்க்க இயேசு போலவே தோற்றம் உள்ளவர். முஸ்லிம்கள் இவர் தான் சிலுவையில் கொல்லப்பட்டவர் எனவும் சொல்கிறது.

http://www.answering-christianity.com/abdullah_smith/crucifixion_of_judas.htm  இஸ்லாமியர்படி யூதாசு இஸ்காரியோத்து இயேசு போல தோற்றம் உள்ளவர். இவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இல்லை.

2. யூதா ததேயு – ததேயு எனும் பெயர் மாற்கு- மத்தேயுவில் யூதா எனமட்டுமே லூக்காவில் உள்ளது, இவர் தான் அவர் என்பதற்கு NTயில் ஆதாரம் கிடையாது.

யூதா இவரை சர்ச் மரபு ஏசுவின் சகோதரர் என்கிறது, இவரும் பார்க்க இயேசுவைப் போலவே இருப்பாராம்

http://en.wikipedia.org/wiki/Jude_the_Apostle

sometimes identified with Jude, “brother of Jesus”

http://www.catholiccompany.com/blog/saint-jude-thaddeus-surprisingly-popular-saint

அப்போஸ்தலர் 15 -  எருசலேமில் சந்திப்பு - Not a word on Jesus as God or New Religion at all

13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரேஎனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்றுஅவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.

16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.     தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.     அது விழுந்துவிட்டது. அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
அவனது வீட்டைப் புதியதாக்குவேன். 17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர். யூதரல்லாத மக்களும் என் மக்களே. கர்த்தர் இதைக் கூறினார். இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’ 18 தொடக்கக் காலத்திலிருந்தேஇவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன. 19 தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்: விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால்அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.

அப்போஸ்தலர் 21  பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டுசந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். 

20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோதுஅவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரேஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும்யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

22 நாங்கள் என்ன செய்வோம்நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [b] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். 

2 கொரி 11:5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன்.

2 கொரி 12:11… என்னை அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன். 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard