New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பார்ப்பனீயம் [Brahmanism]


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பார்ப்பனீயம் [Brahmanism]
Permalink  
 


பார்ப்பனீயம் [Brahmanism] - பெரியாரியர்களிலிருந்து கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரியர்கள்வரை பயன்படுத்தும் வார்த்தை

இந்த வார்த்தையினை முதன்முதலில் தோற்றுவித்தவர் யார்? அந்த வார்த்தைக்கான பொருள் என்ன ? அப்படி ஒரு வார்த்தை தோற்றுவித்ததற்கான நோக்கம் என்ன ?

இதற்கு நாம் செல்ல வேண்டியது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 131 ஆண்டுகள் முன்பு . ஆங்கிலேயர் தங்களின் ஆதிக்கத்தை வேரூன்றிய காலம். அப்பொழுது Oxford பல்கலைக்கழகத்தில் May 5 1886 மோனியர வில்லியம்ஸ் "Monier Williams" எனபவர் ஒரு விரிவுரை செய்கிறார். அந்த விரிவுரை "Holy Bible and Sacred Books of the East " என்றநூலில் அவரே பதிவும் செய்கிறார் [தரவுகள் புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன]. அந்த விரிவுரையின் சுருக்கம் -

"கடந்த 25 ஆண்டுகளாக பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இந்திய பூர்வகுடி மக்களை கிறிஸ்துவத்துக்கு மதம்மாற்றம் செய்வதற்கான "Boden Chair of SanskritChair of Sanskrit" யின் முனைவராக இருப்பதில் நான் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன். Colonel Boden தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்துமே சமஸ்க்ரிதம் படிக்க தானம் செய்திருக்கிறார். அவருடைய நோக்கம் நாம் சமஸ்க்ரிதம் படித்தால் , நமது கிறிஸ்துவமதத்தை சமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்த்து மக்களிடம் எடுத்துசென்றவிடமுடியும் . அவர் நினைத்ததை நானும் என் முழு ஈடுபாடுடன் செய்துகொண்டிருக்கிறேன்".

நாம் ஏன் யாரோ "Monier Williams" சொன்னதையெல்லாம் மதிக்கவேண்டும்? ஏனென்றால் இன்றளவும் அவர் எழுதிய "English-Sanskrit Dictionary " தான் மேற்கத்தியர்கள் நம் வேதங்களையும் இதிஹாச புராணங்களையும் மொழிபெயர்க்க உபயோகம் செய்யும் அகராதி .

முதன்முதலில் பார்ப்பனீயம் [Brahmanism] என்கிற வார்த்தையையும் இவர்தான் பயன்படுத்திகிறார் . "Modern India and Indians" என்கிற நூலில் அதை பதிவு செய்கிறார். ஆதி சங்கரர் நமக்கு கொடுத்த பொக்கிஷமான "அத்வைத" தத்துவத்தையே அவர் பார்ப்பனீயம் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவத்தின் materialistic சித்தாந்தத்தில் சிக்கிக்கொண்டு, அத்வைத தத்துவத்தின் ஆழ் புரியாது அதன்பால் வன்மமும் கொட்டித்தீர்க்கிறார். ஹிந்து மதத்தை, "சாதிகள் நுழைந்த Polytheistic சீரழிந்த பார்ப்பனீயம் என்று சொல்கிறார்".

கவனிக்கவும், பார்ப்பனீயத்தில் சாதி இல்லை!!

பின்பு ஏன் இவர்கள் (மேற்கத்திய Indologists, பெரியார்வாதிகள், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரியர்கள்) "பார்பனீயம்தான் சாதி கொடுமைக்கும் தீண்டாமைக்கு காரணம்" என்று பிரச்சாரம் செய்கிறார்கள்?

அதற்கான பதிலும் அவரே அந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார் - "பார்ப்பனீயம் என்கிற பெரும் கோட்டையை தகர்க்கும் நாளில்தான் கிறிஸ்துவத்தின் பூரண வெற்றி".

இவர்களின் மதமாற்ற தொழிலுக்கு தத்துவரீதியாக எதிர்த்துநிற்கும் ஒன்று பார்பனீயம்தான் . அதுனாலதான் அதை எப்படியாவது அழிக்கவேண்டுமென்ற போராட்டம்தான் இவர்களுக்கு .

இங்கு எல்லா கிறிஸ்துவர்களையும் குறைகூறமாட்டேன். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும், தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பவர்கள் ஏராளம் . அவர்களால் ஒன்றும் தொல்லையில்லை. ஆனால் மதம் மாறியதை வெளியில் சொல்லாமல் , அரசு அச்சிலும் பதியாமல் "ஹிந்து மதம்தான் சாதிக்கொடுமைக்கு காரணம்" என்று கம்யூனிஸ்ட் , பெரியார்வாதி , அம்பேத்கரியர் என்ற போர்வையில் நிறைய பெயர்கள் கம்புசுற்றுகிறார்கள் . அவர்களின் நோக்கமும் Monier WIlliams நோக்கமும் ஒன்றே.

இன்னொரு சுவாரசியமான விஷயம் - இதே கோஷ்டிதான் பார்ப்பனீயம் பௌதத்திலிருந்து Copy அடித்தது என்றும் அளந்துவிடுவார்கள். இன்று வரைக்கும் மேற்கத்திய இன்டோலோஜிஸ்ட்களும் இதை வைத்துக்கொண்டு நிறைய புத்தகத்தை எழுதுகிறார்கள் . இதற்கான விடையும் Monier Williams கொடுத்துவிடுகிறார் - "பௌத்தம் என்கிற ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை . அது வெறும் ஒரு proselytising சிஸ்டம். பார்ப்பனீயத்தை எடுத்துவிட்டால் அவர்களால் பௌத்தர்களாக இருக்க முடியாது , அவர்கள் கிறிஸ்துவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ தான் மாற முடியும்".

Monier Williams எழுதின புத்தகங்களை படித்தால் இன்னும் நிறைய கிடைக்கிறது . ஒரு சின்ன sample அடுத்து.

Image may contain: text

No automatic alt text available.

Image may contain: text

Caste என்கிற வார்த்தை பற்றி குறிப்பிடுகையில் - "போர்த்துகியர்கள் இந்த நாட்டில் முதன்முதலில் இறங்கியபொழுது அவர்கள் இவ்வளவு வர்க்கங்கள் இருப்பதை பார்த்து அதை Casta என்று அழைத்தார்கள் . Casta போர்த்துகியதில் என்பது இனரீதியான அடையாளம். அதையே நாம் நமது ஆட்சியில் Caste என்று மாற்றி அதை ஹிந்து மதத்துடன் இணைத்துவிட்டோம். இந்த வார்த்தை இந்தநாட்டு ஹிந்துமக்களுக்கே தெரியாத வார்த்தை ஆனால் இன்றளவும் ஹிந்து மதத்தை பற்றி எழுதும் அனைவரும் அதை மறக்காமல் சேர்த்துவிடுவார்கள் [The Portuguese, who were the first to trade with India, used the word 'casta', 'race,' to denote the infinite number of classes into which Indian society is divided. This word was changed by us into 'caste' - a word unrecognized by the natives, but now universally adopted by all writers on Hinduism. - Brahmanism and Hinduism, 1891] ".



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நான் அறிந்தவரை சம்ஸ்கிருதம் மூல மொழியே. அதன் இலக்கியம், சொற்களஞ்சியம் இரண்டும் அசலானவை. சம்ஸ்கிருதம் இன்றைய முழு மொழியாவதற்கு முன்னால் ஒரு உரை வடிவம் [டைலக்ட்] மட்டுமாக இருந்த நிலையில் இயற்றப் பட்ட ரிக்வேதம் நமக்கு இன்று கிடைக்கிறது.  உலகச் செம்மொழிகளில் கிடைக்கும் மிகத் தொன்மையான மூலநூல்களில் ஒன்று ரிக்வேதம்.

சம்ஸ்கிருதத்தில் பின்னாளில் உருவான  இலக்கணங்களோ, சொற்களோ இல்லாத அதிபுராதனமான மொழி ரிக் வேதத்தில் உள்ளது. அதன் பழைய பாடல்களில் எழுவாய், பயனிலை அமைப்பு கூட உருவாகியிருக்கவில்லை என மோனியர் வில்லியம்ஸ் சொல்கிறார். அதில் ஒரே சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. பல சொற்களுக்கு வேர்ச் சொல் மட்டுமே உள்ளது. ஒரு மொழி குழந்தையாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அது உள்ளது.

உதாரணமாக சங்க இலக்கிய காலகட்டத்து தமிழ் மொழியில் செய்வினை,செயப்பாட்டு வினை பிரிவினை இல்லை. கொன்ற, கொல்லப் பட்ட இரண்டுமே கொன்ற என்றே சொல்லப் படும். பின்னாளில் அது உருவாகி வந்தது. இவ்வாறு தமிழுக்கு மூன்று அடுக்குகள் உள்ளன. நவீனத் தமிழ், சங்க காலம் வரையிலான தமிழ், சங்க காலத் தமிழ் என பிரித்துச் சொல்லலாம். அதே போல சம்ஸ்கிருதத்திற்கு குறைந்தது ஐந்து அடுக்குகள் உள்ளன. ரிக் வேதம் ஆகக் கடைசியில் உள்ள ஐந்தாவது அடுக்கைச் சேர்ந்தது.

அந்த ஐந்தாவது அடித்தளத்தில் இருந்து பின்னாளைய சம்ஸ்கிருதம் உருவாகி வந்தது.  அந்த தொல்மொழியில் இருந்து எழுந்து பின்னர் முறைப் படுத்தப் பட்ட மொழியை இலக்கண ஆசிரியர்கள் செம்மையாகச் செய்யப் பட்டது என்ற பொருளில் சம்ஸ்கிருதம் என்று பெயர்ச் சூட்டிக் குறிப்பிட்டனர். அவ்வாறு செம்மை செய்யப் படாமல் அப்படியே பல இடங்களில் புழங்கிய மொழியே பிராகிருதம். பிராகிருதத்திற்கும் புராதன சித்தியன், முண்டா துணை மொழிகளுக்குமான ஊடாட்டத்தில் பிறந்தது பாலி. இம்மூன்று மொழிகளில் இருந்தும் கிளைத்த மொழிகள் அபப்பிரம்ஸ மொழிகள் எனப் பட்டன.

தமிழில் சம்ஸ்கிருதம் பற்றி நிறைய அரைவேக்காட்டுத்தனங்கள் வெறும் மொழிக் காழ்ப்பினால் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே சம்ஸ்கிருதம் என்று பெயர் இருப்பதனால் அது பழைய மொழி இல்லை, பிற மொழிகளில் இருந்து பின்னாளில் உருவாக்கப் பட்டது என்பது. சமீபத்தி ல்கூட ஒருவர் எச்சில்தெறிக்க மக்கள் டிவியில் கத்திக் கொண்டிருந்தார்.   அவற்றை நம்பி வாசிக்கும் போது நாம், நம் வரலாற்றுணர்வை இழக்கிறோம். இந்த விஷயங்களெல்லாம் சாதாரணமாக எவரும் வாசிக்கக் கூடிய நூல்களில் கிடைப்பனவே.

https://vishnupuram.com/2012/10/25/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

இந்தியாவின் வரலாறு - தமிழக வரலாறு 
(பேரா.சிவத்தம்பியின் ஆய்வுப் பயணம் ) 
- வீ.அரசு

பேராசிரியர் கா. சிவத்தம்பி பவளவிழா கொண்டாட்டம் என்பது அவர் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பிற்கு நன்றி பாராட்டும் விழா. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பதைப் போல அவருக்கு நன்றி பாராட்டுவதாக நாம் சொல்லிக்கொண்டாலும் நமது மொழி, இலக்கியம், சமூகம் தொடர்பான நமக்குள் நாம் பேசிக்கொள்ளும் விழாவாகவும் இதனை நாம் கட்டமைத்துக்கொள்கிறோம். கடல் கடந்து, திணை கடந்து, புதுத்திணையில் வாழும்போது இப்படியான விழாக்களின் முக்கியத்துவம் கூடிவிடுவதாகவே கருதவேண்டும்.

பேரா. சிவத்தம்பி கடந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த பங்களிப்பை, நாம் புரிந்துகொள்ளப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, கட்டமைப்பு தொடர்பான அவரது பங்களிப்புகள்

தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், பாசுரங்கள், சாத்திரங்கள் வழி சமயங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முறைமைகள்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தை விளக்கிக்கொள்வதற்கு அவர் புலப்படுத்திய நெறிமுறைகள்.

கடந்த மூவாயிரம் ஆண்டு காலத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கு நெறிகளை, அச்சமூகத்தின் ஊடாக வெளிப்பட்ட பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேராசிரியர் செயல்பட்ட போக்கைப் புரிந்துகொள்ளவே மேற்கண்ட பாகுபாடு. இதில் முதல் நிலையில் கூறப்பட்ட பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்த பேராசிரியரின் ஆய்வுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்வதற்கு இவ்வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வேறு இருநிலைப்பட்ட போக்குகள் தொடர்பாக வேறு சந்தர்ப்பங்களில் பேசிக்கொள்ளலாம்.

பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய பேச்சு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருவான புதிய சூழலை அடிப்படையாகக் கொண்டு நிகழத் தொடங்கியது. காலனியம், இந்தியா, இலங்கை போன்ற நிலப்பகுதிகளை ‘நாடாக’க் கட்டமைத்தபோது, அந்நிலப்பகுதிகளில் வாழ்ந்த/வாழும் மக்கள் கூட்டத்தின் மொழி தொடர்பான உரையாடல்கள் தொடங்கின. ஐரோப்பிய நாடுகளில் 14 ஆம் நூற்றாண்டு முதல் உருவான, தொழிற்புரட்சி அது சார்ந்த சமூக மாற்றங்கள், மறுமலர்ச்சிகள், உலகப் போர்கள் ஆகிய அனைத்தும் அந்தந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தினையே அவர்களது அடையாளங்கள் அல்லது இருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அவர்களது மொழி தொடர்பான உரையாடல்களுக்குச் சென்றனர்.

இதனைப் புரிந்துகொள்ளுவதற்கு, உலகத்தின் / சூரியன் மறையாத பிரதேசமாகக் கட்டமைக்கப்பட்ட விக்டோரியா மகாராணியாரின் இலண்டன் மாநகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான பல்வேறு ஆய்வு அமைப்புகளே சாட்சியங்களாக அமைகின்றன. (Aboriginess Protecton Society-1987, The Ethnological Society of London-1843, The Anthropological Society London-1863, The Royal Anthropological Institute-1871) இவ்வகையான அமைப்புகள், உருவாக்கத்தின் மூலம் உலகத்தின் பழம் நாகரிகங்கள் மற்றும் மொழிகள் கண்டறியப்படுகின்றன. அவை குறித்துப் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் கட்டப்படுகின்றன. அருங்காட்சியகங்கள் மூலம் கட்டமைக்கப்படும் சமூக வரலாறு தொடர்பான ‘அரசியல்’ பல் பரிமாணங்கள் கொண்டவை.

இந்தப் பின்புலத்தில், ஆசிய நாடுகளில்/இந்தியா/ இலங்கை நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் மொழி பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வுரையாடலில் ஒற்றைப் பரிமாணமாக இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம் கட்டமைக்கப்படுகின்றது. அதில் பெரும்பங்கை மாக்ஸ்முல்லர் வகிக்கிறார். ஆசிய நாடுகளுக்கு ஒருமுறைகூட பயணம் செய்யாது லண்டனின் இருந்து செயல்பட்ட அவர், இந்தியா/இலங்கை நிலப்பகுதிகளைப் புனித தேயமாகக் கட்டமைத்து, அப்பகுதிகளில் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் சார்ந்த மொழியே இருப்பதாகக் கட்டமைக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதல்மொழிப் பேராசிரியராக அவர் நியமிக்கப்படுகிறார். 1868இல், ஒப்புமொழி நூல் (Comparative Philogy) பேராசிரியர் பதவி வழங்கப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் இந்திய/இலங்கை நிலப் பகுதிகளில் இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சாராத திராவிட மொழிக் குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்கிறது. இந்தோ ஆரிய மொழியான சமசுகிருதம் மட்டும் இந்திய/நிலப்பகுதியின் மொழி என்பது எல்லீஸ் மற்றும் கால்டுவெல் ஆய்வுகளாலும் பின்னர் எமனோவின் ஆய்வுகளாலும் மறுதலிக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் நமது பழம் பிரதிகள் அச்சுக்கு வரும்போது, மூன்றாம் முறையாகப் பழம் தமிழ்ப் பிரதிகள் அறியப்படுகின்றன. இந்நிகழ்வால், தமிழ்ச் சமூகம் குறித்த வரலாறு எழுதுநெறிகள் புதிய பரிமாணத்தில் செயல்படத் தொடங்கின. பிரதிகள் கண்டுபிடிப்புகள் மட்டுமின்றித் தொல்பொருள் ஆய்வுகளும் உடன் நிகழ்கின்றன. 1784இல் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறை பிரித்தானியர்களால் உருவாக்கப்படுகின்றது. 1863 இராபர் புரூஸ் புட் என்பவர் ‘சென்னைக் கோடரி’ என்று அழைக்கப்படும் மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளைச் செங்கற்பட்டு அருகில் கண்டெடுக்கிறார்.

1838இல் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் கல்கத்தா அருங்காட்சியத்தில் உள்ள அசோகன் காசுகளில் ஒரு பக்கம் இலத்தீன் மொழி எழுத்துக்களும் இன்னொரு புறம் வேறு மொழி எழுத்துக்களும் இருப்பதைக் கண்டறிந்து, இலத்தீன் மொழியை வாசிப்பதின் மூலம் இன்னொரு பக்கம் இருந்த பிராமி எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இந்திய நிலப்பகுதியில் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவமுறை ஒன்று கண்டறியப்பட்டது. இதனைக் காசுவியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் கன்னிகாம், 1902ஆம் ஆண்டில் காசுகளில் இவ்வகையான எழுத்து வடிவங்களைக் கண்டறிந்தார். இவ்வடிவங்கள் பற்றிய ஆய்வானது தமிழ்ச்சூழலில் 1930களில் தி. நா. சுப்பிரமணிய அய்யரால் மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 1890 இல் உல்ஸ் (Woltze) மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தருணத்தில்தான் சங்க இலக்கியப் பிரதிகள் அச்சு வாகனம் ஏறின. 1851-1940 என்ற கால இடைவெளியில் பல பரிமாணங்கள் சார்ந்து தமிழின் பழம் பிரதிகள் பதிவு செய்யப்பட்டன. அப்பிரதிகளையும் காசுகளையும் (1901இல் நிகழ்த்தப்பட்ட ஆதிச்ச நல்லூர் மற்றும் 1942இல் அரிக்கமேடு ஆய்வுகள் மற்றும் 1924 சிந்து சமவெளி அகழ்வாய்வுகள்) அடிப்படையாகக் கொண்டும் புதிதாகக் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் கொண்டும் வரலாறு எழுதுநெறி புதிய முறையில் உருப்பெற்றது. இவ்விதம் உருவான வரலாறு எழுது நெறியில், ஈராஸ் பாதிரியார் தி.பி. சீனிவாச அய்யங்கார், வி. சி. இராமசந்திர தீட்சதர் ஆகிய பிறர் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை நிகழ்த்தினர். இவர்களது ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், கா. சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய பிறர் பிற்காலங்களில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதத் தொடங்கினார். இன்னொரு புறம் கனகசபைப் பிள்ளை ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற ஆய்வு நூலைக் கொண்டுவந்தார். பின்னர் சிவராஜப்பிள்ளை ‘The Chronology of Early Tamils’ என்ற ஆய்வு நூலை எழுதினார்.

இவ்வாய்வு மரபுகளைப் பற்றிய விமரிசனம் என்பது இவை இலக்கியப் பிரதிகள் சார்ந்தவை, அகச் சான்றுகள் இல்லாதவை என்று பல நிலையில் பேசப்பட்டன. ஆனால் 1940களில் இரண்டாம் உலகப்போர் சார்ந்து உருவான மானிடவியல் ஆய்வுகளும் அது சார்ந்த மொழியியல் ஆய்வுகளும் உலகம் முழுவதும் மொழி ஒப்பாய்வு எனும் ஆய்வுத் தளத்திலிருந்து மொழியை மொழியியல் என்னும் மொழி சார்ந்த தர்க்கப்பூர்வமான ஆய்வுக்கு எடுத்துச் சென்றது. இச்சூழல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல விளைவுகள் உருப்பெற வாய்ப்பாக அமைந்தது. பேராசிரியர் எமனோ, பர்ரோ, கமில்சுவலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர்கள் சங்க இலக்கியப் பிரதிகள், தமிழகத் தொல் பழங்குடிகள், தமிழ்மொழி ஆகியவை தொடர்பான ‘வரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) மற்றும் மானிடவியல் சார்ந்த ஆய்வுப் புலங்களுக்கு வழிகண்டனர். (இவர்களால் உருவாக்கப்பட்ட IATR அமைப்பு Tamil Culture என்ற இதழும் அதில் முக்கியமான பங்களிப்பை செய்ய தொடங்கியது)

தமிழகத்தில் பேரா.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ ஆகிய பிறர் மொழி இலக்கிய ஆய்வுகள், இத்தருணத்தில் சங்க இலக்கியப் பிரதிகளை வேறு கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கியது. பேரா. தனிநாயகம் அடிகள் அணுகுமுறை மற்றும் அவரது மாணவரான சிங்காரவேலு அவர்களின் மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம் குறித்த அணுகுமுறை ஆகியவை, தமிழ்ச் சமூக வரலாற்றை, சங்க இலக்கியப் பிரதிகளைக்கொண்டு வேறு பரிமாணத்தில் கட்டமைக்க வழிகண்டது.

மேல் விவரித்தப் பின்புலத்திலிருந்து முற்றிலும் புதிதான பண்டைத் தமிழ்ச் சமூகம் குறித்து வரலாற்று ஆய்வை பேராசிரியர் கா. சிவத்தம்பி 1960-களில் தமது கலாநிதி பட்டத்தின் மூலம் மேற்கொண்டார். இவ்வாய்வு இதற்கு முன் தமிழ்ச் சமூகம் குறித்த வரலாற்று ஆய்வுகளை அடியொற்றியதாக அமையாது நவீன வரலாற்று வரைவியல் சார்ந்து அமைந்ததாகக் கருத முடிகிறது. அதனைப் பின்வருமாறு விவாதிக்க முடியும். அரச பரம்பரைகளின் அரசியல் தொடர்பான தகவல் எழுதுதல் எனும் வரலாறு எழுதுநெறி என்பதற்கு மாற்றாக, புவியியல் (Geopolitics) சார்ந்த அரசியல் வரலாறு எழுது முறையை அவர் நமக்குத் தருகிறார்.

நிலம் அதில் வாழும் மக்கள், அத்தன்மை சார்ந்து உருப்பெறும் பண்புகள், அதனைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் கட்டமைத்த முறை, இதிலிருந்த வரலாறு எழுது முறைமை நாம் எவ்விதம் கட்டமைப்பது என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் ஆய்வுகள் அமைகின்றன. இதனைச் சுருக்கமாக ‘திணை மரபு’ சார்ந்த ஆய்வு என்று சொல்லமுடியும். இதனைப் புரிந்துகொள்ள அவரது கலாநிதி பட்ட ஆய்வின் ஒரு பகுதியை இங்கு மேற்கோளாகக் கொண்டு விவாதிக்க முடியும்.

பெரும்பாண் :46-62 வரிகளை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பகுதி : 

பள்ளத்தாக்கு, நீர்ப்பாசனப் பகுதிகள், மீன்பிடிப்பு பகுதிகள், கடற்கரைப் பட்டினங்கள் ஆகியவை குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்கிறார். இதன் மூலம், குலக்குழுக்களின் வாழ்முறை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அது பின்வரும் வகையில் அமைகிறது. “திணைக்கோட்பாடு’ என்பது தமிழரிடையே காணப்பட்ட அகவுறவுகளினதும் அசத்துவ சமூக அரசியல் ஒழுங்கமைப்பினதும் புதை வடிவம் ஆன செய்யுள் மரபு” (2005) இத்தன்மையை ஆற்றுப்படை நூல்களின் மூலம் விரிவாக ஆய்வு செய்கிறார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் எழுதிய ‘திணைக் கோட்பாடு’ என்ற கட்டுரை, இந்திய வரலாற்று ஆய்வாளர்களான ரொமீலா தாப்பார் ஆகிய பிறருக்குப் பண்டைத் தமிழ்ச் சமூக இயங்குமுறை குறித்தப் புதிய ஒளியைப் பெறுவதற்கு உதவியாகக் கூறுகிறார்கள். இப்பின்புலத்தில் பேராசிரியர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளான ‘அரசமைப்பு உருவாக்கம்’, ‘உயர்குடி மேட்டிமை வளர்ச்சி’, ‘முல்லைத் திணை ஒழுக்கம்’ ஆகிய ஆய்வுகள் முக்கியமானவை. கலாநிதி பட்ட ஆய்வில் பாண், பொருநர், புலவர், கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலியர் ஆகியோர் குறித்த ஆய்வுகளும் வெறியாட்டு, தை நீராடல், வாடா வள்ளி ஆகிய சடங்குகள் தொடர்பான ஆய்வுகளும் இந்திரவிழா, பங்குனி விழா, ஓண விழா, உள்ளி விழா, சுடர் விழா, நீர் விழா, பூந்தொடை விழா ஆகிய விழாக்கள் தொடர்பான ஆய்வுகளும் கூத்தர், பாணர், பொருநர், விறலியர் மற்றும் குறத்தியர், வேட்டுவர், ஆயர் தொடர்பான ஆய்வுகளும் தமிழ்ச் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் ஆய்வுகளாக அமைகின்றன. துணங்கைக் கூத்து, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, சாக்கைக்கூத்து ஆகியவைத் தொடர்பான ஆய்வுகள், பண்டைத் தமிழ்ச் சமூக அரங்க வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

சடங்கு, விழா, கூத்து சார்ந்து வெளிப்படும் நமது அகத்திணை மரபு சார்ந்து பேராசிரியர் செய்துள்ள பதிவு முக்கியமானது. “திணை உருவாக்கத்தின் புவி இயல் அடிப்படைகளும் அப்புவிஇயல் அடிப்படையின் சமூக நிர்ணயிப்புகளும் ஆண் - பெண் உறவை பாதிக்கின்ற முறைமையை நாம் அகத்திணை மரபு” என்கிறோம் (2005) என்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் பிற்கால சமூக அமைப்பு குறித்துப் பேட்டன் ஸ்ரைன், நொபுறு கரோஷியா, சுப்பராயலு ஆகிய பலர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், சங்க காலம் எனக் கருதப்படும் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை சமசீரற்ற சமூக அமைப்பு என்று கண்டறிந்து அதன் பல்பரிமாணங்களையும் தமது தொடக்கக் கால ஆய்வாக (1960-80) பேராசிரியர் நிகழ்த்தி இருக்கிறார். இவை இவ்வளவு காலம் ஆங்கில மொழியில் தான் இருந்தது. இப்போதுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு உருவாக்கம் குறித்து:

“நெகிழ்ச்சியான குடிமுறையிலிருந்து விடுபட்டு வளர்ச்சியடைந்த ஆற்றுப்படுகைகளில் அமைந்த நிலவுடைமை வேளாண்மை மற்றும் இதற்கென உருவான தலைவன் அரசனாக வடிவமைக்கப்பட்ட தன்மையைப் புலவர்களின் பாடல்கள் பேசுகின்றன.” என்கிறார்.

உயர்குடி மேட்டிமை வளர்ச்சி குறித்து:

“சமயங்கள், சாதிகள் இவற்றை நிலைநிறுத்தும் அமைப்புகளான மடங்கள் போன்றவை மூலம், மேட்டிமை வளர்ச்சி உருப்பெறுகின்றன.” பேராசிரியரின் இவ்வகையான வரலாற்று ஆய்வுகள் எப்பின்புலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்து விவாதிப்பது அவசியம். மாக்ஸ்முல்லர், ஜான் ஸ்டீவென்சன், மோனியர் வில்லியம்ஸ், எச்.எச். வில்சன் ஆகிய பலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட ‘ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி’ (Royal Asiatic Society) மூலம் இந்திய வரலாற்றை எழுதினார். இவர்கள் 1846இல் மொழிபெயர்க்கப்பட்ட ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வரலாற்றைக் கட்டமைத்தனர்.

அதுவே உலகம் முழுவதும் அறியப்பட்ட வரலாறாக இருந்தது. இதற்கு முற்றும் மாறாக, சங்க இலக்கியம், சிந்துவெளி, தொல் பொருள் ஆய்வுகள் வழியாகக் கட்டப்பட்ட பிறிதொரு வரலாற்றின் தர்க்கப் பூர்வமான கட்டமைப்பை பேராசிரியர் ஆய்வுகள் முன்னெடுக்கின்றன. அரசப் பரம்பரை ஆய்வுகளின் போதாமை, அதன் தர்க்கப் பூர்வ ஏற்பு முறைமை ஆகியவை ரிக்வேதம் தொடர்பான ஆய்வுகளோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சமூக ஆய்வுகளின் தர்க்கப் போதாமை இருந்தது. இத்தன்மை பேராசிரியர் ஆய்வுகள் மூலம் நிறைவு செய்யப்படுவதைக் காண்கிறோம். வடமொழி எனப்படும் சமசுகிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளின் பின்புலத்தில் உருவான வேதங்கள்/ ரிக்வேதம், பிராமணங்கள், உபநிடதங்கள், வியாகரணங்கள், புராணங்கள், காவியங்கள் ஆகிய மரபின் ஒப்பீடு சார்ந்து ஐரோப்பியர்கள் கட்டமைத்த ஆய்வுகள் இந்தியச் சமூக வரலாறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சூழலில், தென்னிந்திய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை, மேற்கூறப்பட்ட முறைகளுக்கு மாற்றான வேறொரு சமூக அமைப்பைக் காட்டுகின்றன என்ற ஆய்வை மார்க்சிய வரலாறு எழுதுமுறை சார்ந்து உருவாக்கியதில் பேராசிரியருக்குத் தனித்த இடமுண்டு.

இந்திய வரலாறு எழுதியலில் ராகுல் சாங்கிருத்தியாயன், கோசாம்பி பின்னர் ரொமீலா, ஹபீப் எனும் ஆய்வாளர்கள் / வடஇந்தியச் சமூகம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டார்கள். இவர்களது ஆய்வுகள் மார்க்சிய வரலாற்று நெறிமுறை சார்ந்த ஆய்வுகள். குறிப்பாக ராகுல்ஜியின் ரிக்வேதம் சார்ந்த ஆய்வுகள் அவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இந்திய இனக்குழுக்கள் தொடர்பான கோசாம்பி ஆய்வுகளும் அவ்வகையில் முக்கியமானவை. இந்தப் பின்புலத்தில் தென்னிந்திய சமூகம் பற்றிய ந. சுப்பிரமணியம், நீலகண்ட சாஸ்திரி ஆகிய பிறர் ஆய்வுகள், மானிடவியல், புவிஇயல் மரபு சார்ந்தவையாக அமையவில்லை. பேராசிரியர் ஆய்வுகளே அவ்வகையில் அமைந்துள்ளன. இதனை வரலாற்று அறிஞர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். இவ்வகையில், காலனியம் கண்டெடுத்த இந்திய நிலப்பரப்பின் இருமொழி, இரு பண்பாடு என்பதன் அடிப்படையாக இன்னொரு வரலாறு பேராசிரியரால் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டிருகின்றது. இது இவருடைய மிக முக்கியப் பங்களிப்பு எனக் கூறமுடியும்.

மேலும் ஆய்வுகள் என்பவை நிகழ்த்தப்பட்ட காலத்திலிருந்து, சம காலத்திற்கு வரும்போது, அவை புதிய ஆதாரங்களால் வலுவிழந்து போகும் வாய்ப்பு மிகுதி. பேராசிரியரின் ஆய்வுகள் அவ்விதம் நிகழவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐராவதம் மகாதேவனின் பிராமி எழுத்துத் தொடர்பான ஆய்வுகளும் இவரது ஆய்வுகளும் சந்திக்கும் புள்ளிகளில் முரண் பாடுகளைக் காணமுடியவில்லை.

blank.gifblank.gif



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 கிறிஸ்துவ மதத்தை பரப்பி, இந்தியரை மதம் மாற்ற ஆங்கிலேயர்கள் செய்த கேவலமான சூழ்ச்சிகள்- பாகம்1 

***************************************************************************
மேக்ஸ்முல்லர், மெக்காலே ஆகியோர் ஆக்ஸ்போர்டிலும், தமிழகத்தில் கால்ட்வெல் பாதிரியும் இந்தியரை ஆரியர் – திராவிடர் எனப் பிரித்து செய்த சூழ்ச்சிகள்.
************************************************************************
கிறிஸ்துவ ஆங்கிலேயர்கள், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் நுழைந்து சிறிதாக வளர்ந்தது. ஆங்கிலிகன் சர்ச் கிறிச்துவம் பரப்பி இந்தியரை மதம் மாற்ற வேண்டும் எனத் துடிக்க, கொல்கத்தா அருகில் சீராம்பூர் மிஷநரி துவங்கியது.

கொல்கத்தாவில் பிரம்ம ஞான சபை- சர்.இராஜா ராம் மோகன்ராய் மூலம் இயங்கி வந்தது. அவர்கள் நான்மறையே முக்கியம், உருவ வணக்கம் அவசியமில்லை என்றிட, மேலை நாட்டுக் கல்வி பெற்ற அந்தணரான மோகன்ராயை கிறிஸ்துவராக்கிவிட்டால், இந்தியா முழுதும் பார்ப்பனர்களை பெரிதும் மதிக்கும் இந்தியாவை எளிதாக மாற்றிவிடலாம் எனக் கணக்கிட்டனர்.

ஆங்கிலிக்கன் சர்ச் – பாதிரியார் வில்லியம் ஆடம்ஸ், ராம் மோகன்ராயைத் நிழலாக பின் தொடர்ந்து விவாதித்து கிறிஸ்துவராக மாற்ற முயற்சித்தார்.

அவர் நான்மறைகள் பல தெய்வம் கொண்டது, கிறிஸ்துவம் ஓறிறைக் கோட்பாடு கொண்டது என்று தத்துவம் பேசி மோகன்ராயை மாற்ற முயற்சித்தார்.
ராய், பாரசீக, கிரேக்க, லத்தீன் மொழி அறிந்தவர், இவர் மிகத் தெளிவாக பைபிளில் பல தெய்வக் கோட்பாடு தான், அதன் தத்துவம் வெற்று கற்பனை என நிருபிக்க, கிறிஸ்துவத்தில் முழு பயிற்சி பெற்ற பாப்டிஸ்ட் பாதிரி வில்லியம் ஆடம்ஸ் பிரம்ம ஞான சபையில் இணைந்தார்.

ஐரோப்பா முழுதும் கிறிஸ்துவத்திற்கு ஒரு பெரும் கேவலமாய் அமைந்தது. ஒரு மிகத் திறமை வாய்ந்த நல்ல பயிற்சி பெற்ற கிறிஸ்துவப் பாதிரியார் கிறிஸ்துவத்திலிருந்து விலகினார் என்பது.
கிறிஸ்துவருக்கு பாரத – தமிழர் சமய வேர்களான நான்மறை தர்ம சாஸ்திரங்களை மொழி பெயர்த்தல் தேவை என உணர்ந்தனர். அப்போது கிறிஸ்துவ சதி தொடங்கியது.

இந்தியாவில் கல்விமுறை ஏன் அனுமதிக்கப்பட்டது?

மெக்காலே ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகம் மூலம் செய்த சதி திட்டம்.
*************************
“நமது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை எப்படி வேண்டுமானாலும் செலவளிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. அதைப் பயனுள்ள கல்வியைப் போதிப்பதற்கே செலவளிக்க வேண்டும். சமஸ்கிருதம், அரபியை விட ஆங்கிலம் கற்றுக் கொள்வதே மிகவும் சிறந்தது. இந்தியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

நம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கல்வி போதிக்க நம்மால் இயலாது. அதனால் நாம் ஒரு சிறு வகுப்பினரை உருவாக்க வேண்டும். அவர்கள் நம் அரசாங்கத்திற்கும் நம் ஆட்சிக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பார்கள்.

இந்த வகுப்பினர் இந்திய ரத்தமும் நிறமும் உடையவர்கள்; அதே சமயம் ஆங்கிலேய சிந்தனை, பண்பாடு, அறிவாற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட அறிவியலைக் கொண்டு தங்கள் உள்ளூர் மொழிகளை நாகரீகப் படுத்துவார்கள். தாங்கள் கற்ற அறிவை பிற மக்களுக்கு முன் எடுத்து வைப்பார்கள்”

ஆங்கிலேய ஆட்சிக்கு விசுவாசமாக உழைக்கக் கூடிய, ஆங்கிலம் பேசக்கூடிய குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப் பட்ட மெக்காலே-வின் கல்வித்திட்டம்தான் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.

ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்ட, புனைந்துரைகளும் திரிப்புகளும் நிரம்பிய ‘இந்திய வரலாறு’ தான் இன்றும் இந்திய மாணவர்களுக்கு போதிக்கப் படுகிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் கிழக்கத்திய கலாச்சாரம் குறித்து ஆராய கர்னல் போடன் ஒரு கணிசமான தொகையினை(அந்த காலத்தில் 1832 (CE) 25,000 பவுண்டுகள்) தன் உயிலில் அளித்திருந்தார். இதன் நோக்கம் குறித்து அவர் தெளிவாகவே கூறினார், ‘நாம் பாரத நாட்டு மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றவே இத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Boden_Professor_of_Sanskrit

பொ,ஆ. 1832 வில்சன் போடன் சம்ஸ்கிருதப் பேராசிரியராய் இருந்தார். 1860ல் மோனியர் வில்லியம்ஸ் தேர்வானார். அவர் சம்ஸ்கிருத அகராதியை (அகரமுதலி?) தயாரித்தார்.
அவரிடம் தேர்தலில் தோல்வியடைந்த ஜெர்மானியர் மேக்ஸ்முல்லரை கிறிஸ்துவ ஆங்கிலேய அரசு தேர்வு செய்தது. அவர் ஆங்கிலிக்கன் கிறிஸ்துவரில்லை, பிரிட்டானியரும் இல்லை. அவருக்கு நான்மறை மற்றும் அனைத்து சம்ஸ்கிருத நூல்களையும் மொழி பெயர்க்கும் பணி தரப்பட்டது.

மேக்ஸ்முல்லர் ஆக்ஸ்போர்டிலும், தமிழகத்தில் கால்ட்வெல் பாதிரியும் இந்தியரை ஆரியர் – திராவிடர் எனப் பிரித்து சூழ்ச்சிகள் செய்தனர்.

இன்றும் வேதத்தில் ஆரியர் போர் உள்ளது, சிந்து சரஸ்வதியில் ஆதாரம் உள்ளது எனக் கூவும் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்பும் அறிவிலிகள் சர்ச் சதியில் மறைமுகத் தொண்டர்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard