New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் சிவன்


Guru

Status: Offline
Posts: 25081
Date:
சங்க இலக்கியத்தில் சிவன்
Permalink  
 


1.2 சங்க இலக்கியத்தில் சிவன்
E
p2021aud.gif

 

பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.

1.2.1 தொல்காப்பியக் குறிப்பு

'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

 

காமஞ் சான்ற கடைக்கோட் காலை 
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி 
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
 

p2021aud.gif

(பொருள். கற்பியல்: 190)

 

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.

 

 

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே 

p2021aud.gif

(பொருள். அகத்திணையியல் - 5)

(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன்,மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)

இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.

''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார். 

 

காமப்பகுதி கடவுளும், வரையார், 
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
 

p2021aud.gif

(பொருள், புறத்திணையியல்: 81)

இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.

திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும். 

 

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் 
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
 

p2021aud.gif

(பொருள், புறத்திணையியல் : 85)

''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

1.2.2 எட்டுத்தொகை

அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.

சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

 கலித்தொகை 

 

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 

p2021aud.gif

(கலித்தொகை, 38)

 

(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)

இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் கிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....

இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)

கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் 
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ண்கதிர் தெறுதலின்

p2021aud.gif

(கலித்தொகை, 2)

(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)

இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.

• புறநானூறு

உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,

 

 

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே..... 

p2021aud.gif

(புறம் :91)

(மிடறு - கழுத்து)

என்கிறார்.

பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.

இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.

மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.

 

நன்றாய்ந்த நீணிமிர்சடை 
முது முதல்வன்

                                   

p2021aud.gif

(புறம் :166)

புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)

 
ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
p2021aud.gif

என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.

(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)

அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.

சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.

1.2.3 பத்துப்பாட்டு

சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும்,நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.

 
நீலநாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....ஆய் 

p2021aud.gif
(சிறுபாணாற்றுப்படை, 96-97)

 

(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)

இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.

மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை. 

 
நீரு நிலனுந் தீயும் வளியு 
மாக விசும்போ டைந்துடனியற்றிய 
மழுவாள் நெடியோன் தலைவனாக

p2021aud.gif
(453-455)

(வளி = காற்று, விசும்பு காயம்)

என்ற குறிப்பு வருகிறது.

இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.

இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன. 



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

01.jpg 93.jpg

94.jpg 95.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

96.jpg 97.jpg 98.jpg 99.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

100.jpg 101.jpg

102.jpg 103.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

Ks%2B66.jpg 104.jpg105.jpg 106.jpg107.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு

Tamil Sangam Literature (BC) hailing Lord Shivan


எட்டுத்தொகை

மாநிலம் சேவடி யாகத் தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கை யாக

விசும்புமெய் யாகத் திசைகை யாக

படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணக

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே                  நற்றிணை க வா

 

5. நீலமேனி வாலிழை பாகத்து 

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.                ஐங் க.வா. 1

 

எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்

கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்

எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்

காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்

புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து

வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்

சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா

ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்

இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி

மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய

சூலம் பிடித்த சுடர்ப் படைக்

காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!             பதிற்றுப்பத்து க வா

 

ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ

   வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து

   நாக நாணா மலைவில் லாக

25 மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய

   மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்

   பாக முண்ட பைங்கண் பார்ப்பான்

   உமையொடு புணர்ந்த காம வதுவையுள்

   அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி

30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு

   விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்

   விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த

   தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்

   எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு

35 திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்

   கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை

   நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து

   வசித்ததைக் கண்ட மாக மாதவர்

   மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்

40 சாலார் தானே தரிக்கென அவரவி

   யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்

   தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்

   வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்

   கடவுள் ஒருமீன் சாலினி யொழிய

45 அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்

   மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்

   நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே

   நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்

   பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்

50 பெரும் பெயர் முருக !                              பரி 5; 21-50

 

(பொருள்:  ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட,

வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும்,

வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும்,

பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை

ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்;

அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின்

அவியுணவை எற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய

பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய

அழகு (காமர் - அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம்

வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட

இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய,

"தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக

(புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்" என்பது தான் உண்மைப் பொருளாக

விளங்குவதால் "செய்வதற்கில்லை" என்று கூறி ஒதுக்காது,

அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று உருவினைக் கொண்டான்

ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு. அந்த நெருப்புருவத்தின் கருவினைப்

பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும்

அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம்

செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில்

அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட்

பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர்

வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத்

தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து

அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான

பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள்

அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர். மாசு மறு ஏதும் இல்லாத

கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை)

கருக்கொண்டனர்

 

குறிப்பு: இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது.

சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே

மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி

அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர்

என்பதும் இப்பரி பாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.)

 

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 

பூவொடு புரையும் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்             பரி 7, 1-4

 

 புங்கவம் ஊர்வோனும்                         பரி 8,2

ஆதிரை முதல்வனின் கிளந்த    நாதர் பன்னொருவரும்   பரி 8, 6

 மறு மிடற்று அண்ணல்                        பரி 8, 127

 

 இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி

அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்

உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட

எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி

விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

மணி மிடற்று அண்ணற்கு                              பரி 9, 1-7

 

 

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,

        தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,

        கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி

        மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:

5       படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,

        கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,

        கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

        மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

        பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,

10      வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?

        கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,

        தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,

        முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

        என ஆங்கு

15      பாணியும், தூக்கும், சீரும், என்று இவை

        மாண் இழை அரிவை காப்ப,

        ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி          கலி க வா

 

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,

        அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,

        மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்

        கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

5       உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,

        சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்

        ஏறு பெற்று உதிர்வன போல்                            கலி 2, 1-7

 

ஆன் ஏற்றுக் கொடியோன்                              கலி 26, 5

 இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை

எடுக்கை செல்லாது உழப்பவன் போல                   கலி 38; 1-5

 

சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ          கலி 101, 8

படரணி யந்திப் பசுங்கட் கடவுள்

இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்

குடர்கூளிக் கார்த்துவான்                                கலி 101, 21 - 26

கொலைவன் சூடிய குழவித் திங்கள்                     கலி 103, 15

எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை                    கலி 103, 25

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

        முக்கண்ணான் உருவே போல்                   கலி 104, 11-12

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல கலி 105, 13

 

கோடுவாய் கூடாப்பிறையை பிறிது ஒன்று

நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய

காணான் திரிதரும் கொல்லோ - மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றையான்                            கலி 142, 24-28

 

அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்

        இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,

        கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ

        மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்

5       மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,

        விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்

        இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,

        அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்

        பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்

10      பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?

        கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,

        'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,

        உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்

        உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?

15      கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,

        'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,

        புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்

        கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?

        ஆங்கு

20      அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த

        பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

        பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

        மை ஈர் ஓதி மட மொழியோயே!        கலி 150 



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;

மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;

நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,

கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்

வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;

ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே

செவ் வான் அன்ன மேனி, அவ் வான்

இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,

எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,

மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,

வரி கிளர் வயமான் உரிவை தைஇய,

யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.            அகம் க வா

 

.... மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவு                                        அகம் 141, 5-11

(கார்த்திகை விளக்கீடு -  திருநாளைக் குறிப்பது)

 

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்

வண்ன மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த 

சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.              புறம் க.வா.

 

பணியிய ரத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே                    புறம் 6. 17-18

 

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல                  புறம் 55,5

 

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று

அருங் கணிச்சி மணி மிடற்றோனும்                     புறம் 56, 1-2

 

12. பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே                                  புறம் 91, 5-7

 

நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகா

தொன்றுபுரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொருமுதுநூல்

இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையு முட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக                              புறம் 166, 1-9

 

 பத்துப்பாட்டு

 

வெள் ஏறு     

வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,  

உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,

மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும்            திருமுருகு 151-154

 

திருமுருகாற்றுப்படை முழுமையும்

 

நீல நாகம் நல்கிய கலிங்கம் 

ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த

சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்                        சிறுபா 96 - 99

 

 

நீரும் நிலனும் தீயும் வளியும்  

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,   455

மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்      

வாடாப் பூவின், இமையா நாட்டத்து,   

நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,     

மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,      

அந்தி விழவில் தூரியம் கறங்க                         மதுரைக் 453-460

 

2. தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின்

தொன்முது கடவுள்                                    மதுரைக்

 

 

20. நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பேரிசை நவிர மேஎ யுறையும்

காரியுண்டிக் கடவுள தியற்கையும்                       மலை

 

 பதினெண் கீழ்க்கணக்கு

 

 

முக்கட் பகவன் அடி தொழாதார்க்கின்னா

பொற்பனை வெள்ளையை உள்ளாதொழுகின்னா

சக்கரத்தானை மறப்பின்னா வாங்கின்னா

சத்தியான் தாள் தொழாதார்க்கு                  இன்னா நாற்பது க.வா.

 

கண் மூன்றுடையான் தால் சேர்தல் கடிதினிதே    இனியவை நாற்பது க.வா.

 

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்

பழுதின்றி ஆற்றப் பணிந்து முழுதேத்தி           சிறுபஞ்சமூலம் க.வா.

 

அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்

பெறுநால்வர் பேணி வணங்கிப் - பெறுநால்

மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு

இறைபுரிந்து வாழுதல் இயல்பு.                  ஏலாதி க.வா.

 

வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்

வாலிழை பாகத் தமரிய கொழுவேல்

கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்

கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.             கைன்னிலை க.வா.

 

 பிற நூல்கள்

 

 

மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்

ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்

ஊர்திரைநீர் வேலி உலகு                       முத்தொள் க.வா.

 

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூ

பைங்கண்வெள் ளேற்றான் பால் கண்டற்றால் - எங்கும்

முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்

அடிமிசையே காணப் படும்                              முத்தொள் 91

 

 

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்

வெள்ளியம்பலத்து                                     சிலம்பு - பதிகம், 39-41

 

குழவித் திங்கள் இமையோர் ஏத்த

அழகொடு முடித்த அருமைத்தாயினும்                   சிலம்பு 2 38 - 39

 

பெரியோன் தருக திருநுதல் ஆக என                    சிலம்பு 2 41

 

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்                 சிலம்பு 5:69

 

திரிபுரமெரியத் தேவர் வேண்ட  

எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

உமையவ ளொருதிற னாக வோங்கிய

இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்                சிலம்பு 6 40 - 43

 

தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும்                   சிலம்பு 6 44 - 45

 

பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய                 சிலம்பு 11 72

 

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும்                   சிலம்பு 11 128 - 129

 

கண்ணுதல் பாகம்                                      சிலம்பு 12 2

 

ஆனைத்தோல் போர்த்து                        சிலம்பு 12 8

 

புலியின் உரி உடுத்து                           சிலம்பு 12 8

 

கண்ணுதலோன்                                சிலம்பு 12 10

 

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து               சிலம்பு 12 55

 

நஞ்சுண்டு கறுத்த கண்டி                        சிலம்பு 12 57

 

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்             சிலம்பு

 

செஞ்சடை வானவன் அருளினில் விளங்கி

வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்                     சிலம்பு

 

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்                 சிலம்பு

 

இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்

சிமையச் சென்னித் தெய்வம் பரசி                       சிலம்பு

 

சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன்              சிலம்பு 22 86 - 87

 

ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய்           சிலம்பு 23 91

 

ஆலமர் செல்வன் மகன்                        சிலம்பு 24 15

 

நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்                  சிலம்பு 26 54 - 60

 

குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்

சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் க்டவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி        சிலம்பு 26 

 

சடையினர் விடையினர் சாம்பற் பூச்சினர்        சிலம்பு கால்கோட் காதை

 

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்            சிலம்பு - வேட்டுவவரி

 

திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்

பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்

செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்

செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்

பாடகம் பதையாது சூடகந் துளங்காது

மேகலை யொலியாது மென்முலை யசையாது

வார்குழை யாடாது மணிக்குழ லவிழா

துமையவ ளொருதிற நாக வோங்கிய

விமைய னாடிய கொட்டிச் சேதம்                சிலம்பு 28 67 - 75

 

இமையச் சிமையத் திருங்குயிலாலுவத்து 

உமையொரு பாகத்து ஒருவனை                 சிலம்பு 28 102-103

 

See Also:
1. thirukkuRaL kaDavuL vAzhththu
2. Shaivam a Perspective
3. Hinduism A Perspective 
4. திருக்குறள் போற்றும் சிவபிரான் 
5. ஔவையார் போற்றும் சிவபிரான் 



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

சைவத்தின் தோற்றம்-டாக்டர்.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)

 இந்திய சமூக வரலாற்றில் சைவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இதே முக்கியப் பங்கினை சைவம் தமிழக வரலாற்றிலும் ஆற்றியுள்ளது. ஒரு சமூகத்தில் சமூகத் தேவைகளின் அடிப்படையில் எந்த ஒரு தத்துவமும் தோன்றுகிறது. சமூக வரலாற்றில் சமூகத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தத்துவமும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து வருகிறது. இம்மாற்றங்களின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் ஒரு தத்துவம் வழக்கொழிந்து போவதும் பின்னர் கால ஓட்டத்தின் வேறொரு புதிய சமூகத் தேவைகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்படுவதும் இம்மாற்றங்களில் அடங்கும். இந்தியாவில் சைவத் தத்துவமானது இத்தகைய வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டே வளர்ந்திருக்கிறது. இன்று சைவ சமயம் என்று அழைக்கப்படுகின்ற தத்துவம் கி.பி, இரண்டாம் நூற்றாண்டில் பாசுபதம் என்ற பெயரில் முதன் முதலில் நிறுவனப்படுத்தப்பட்ட சமயமாக உருவானது. பாசுபதம் என்ற பெயரில் சைவ சமயத்தை நிர்மாணித்தவர் லகுளீசர் என்பவர் ஆவார். அவரது மாணவர்கள் காளாமுகம், காபாலிகம் என்ற பெயர்களில் உட்பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சமயத் தத்துவங்களை பரப்பி வளர்த்தனர். அதன் தொடர்ச்சியே அப்பர், ஞானசம்பந்தர்ம் பின்னர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் ஏற்படுத்திய சமய மறுமலர்ச்சியாகும்.

லகுளீசர் சைவ சமயமாகிய பாசுபத மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் உள்ள சான்றுகளைக் காண்பது முக்கியமானது. இன்று சிவன் என்றும் ருத்ரன் என்றும் கூறப்படுகின்ற கடவுளின் தொன்மைச் சான்றுகளாக கொஹஞ்சதாரோ ஹரப்பாவில் கிடைத்த சான்றுகளும், வேத இலக்கியங்களில் கிடைத்த சான்றுகளும் முக்கியமானவை. அச்சான்றுகளை உள்ளடக்கிக் கிரகித்துக் கொண்டு வளர்ந்த மதமே பாசுபதம் என்பதால் அச்சான்றுகளைச் சுருக்கமாக காண்பது அவசியமானதாகிறது.

தொல்காப்பியத்தில் ருத்ர - சிவன் காணப்படவில்லை.

தொல்காப்பியர் கூறுகின்ற நானிலத்திற்குரிய கடவுள்களில் சிவன் பெயர் காணப்படவில்லை.

மாயோன் மேய காடுறை உலகம் சேயோன் மேய மைவரை உலகம் வேந்தன் மேய தீம்புனல் உலகம் வருணன் மேய பெருமணல் உலகம்

எனக் கூறும் நால்வரில் ஏன் சிவன் இல்லை. வேந்தன் எனக் கூறியிருப்பது இந்திரனையே குறிக்கும்.

 சிவ - ருத்ரன் ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுள் ஆதலால், வேத கருத்துக்களின், செயல்பாட்டின் தாக்கம் சங்க இலக்கியங்களில் காணப்பட்ட போதும், ருத்ரன் காணப்படவில்லை. காரணம் சில ருத்ரன் உபநிஷத காலங்களிலேயே ஆரியர்களால் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறான். அதனால்தான் அதற்குப் பின்னர் எழுந்த கலித்தொகை, பரிபாடல்களிலும் ஓரிரு புறப்பாடல்களிலும் காணப்படுகிறான்.

  அதுபோல சங்க இலக்கியங்கள் குறிக்கும் கந்து வழிபாட்டையும் லிங்க வழிபாட்டோடு தொடர்புபடுத்துகின்றனர்.  கந்து ஊரின் நடுவே அமைந்திருந்த மன்றில் காணப்பட்டது. இந்த கந்தைத்தான் அப்பர் கன்றாப்பூர் பதிகத்தில் நடுதறி என்றார். நடுதறியாகிய கந்து அப்பர் காலத்தில் சிவனாக மாற்றப்பட்டதேயன்றி, சங்க காலத்தில் கந்தாக வழிபடப்பட்டபோது சிவ வழிபாட்டைக் குறிக்கவில்லை.

சங்க இலக்கியங்களில்...

சங்க காலம் என்பது புத்தர் தோன்றிய காலமாகிய கி.மு.7ம் நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கி பின்னர் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து கி.பி. 3ம் நூற்றாண்டு வரை நீடித்த நெடிய கால கட்டமாகும். இக்கால இலக்கியங்களுள் சிவபெருமானைப் பற்றிக் குறிக்கும் பாடல்கள் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் கூறும் செய்திகளாக திரு. அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் கூறும் செய்திகளில் ஓரிண்டைத் தவிர பிற குறிப்புகள் எல்லாம் சிவனைக் குறிப்பவை அல்ல. அவரே மிகவும் வலிந்துதான் அக்கருத்துக்கு வந்துள்ளார். சங்க காலத்தில் சமணமும் பெளத்தமும் ஆசீவகமும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அக்காலத்தில் நிலப்பரப்பின் அடிப்படையில் அமைந்த தெய்வங்களே மக்கள் வழிபாட்டில் நிலவின. சிவன், ருத்ரன், சைவம் என்பதெல்லாம் சங்க இலக்கியங்களில் இல்லாத செய்தியாகும். அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலுலும் பேராசிரியர் கு.சுந்தர்மூர்த்தி அவர்கள், ‘சிவபெருமான் என்னும் தெய்வம் இன்றைக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களில் காணப்பட்டிலது” என்று கூறியிருக்கிரா. ஆனால் அவரும் ஆலமரச் செல்வன், மழுவாள் நெடியோன், நீலமணி மிடந்றொருவன் என்றெல்லாம் குறிக்கப்பட்டிருக்கும் கடவுள் சிவபெருமானே என்ற கருத்துக்கு வந்திருக்கிறார். அவர் மேலே கூறுகின்ற பெயர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதாவது புராண காலங்களில் சிவனுக்கு ஒன்றிய பெயர்களாகும். சிவனுக்குரிய பிற்காலப் பெயர்கள், சங்க காலத்தில் வேறு ஒரு கடவுளுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

சங்க இலக்கியத் தொகுதிகளுள் பரிபாடலும், கலித்தொகையும் பிற்காலத்தவை என்பதை யாவரும் அறிவர். இவை தவிர புறப்பாடல்கள் சிலவற்றில் சிவன் பற்றிக் கூறும் பாடல்களும், பிற்காலத்தைவயே. குறிப்பாக புறநானூற்றுப் பாடல்கள் 55, 56, 166 ஆகியவற்றைக் கூறலாம்.

அரக்கர்கள் மூவர் இரும்பு. பொன், வெள்ளி ஆகிய உலோகங்களால் கோட்டை கட்டிக்கொண்டு தேவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினராம். சிவன் ஒரு வில்லைகொண்டு மூன்று எயில்களையும் அழித்தானாம். இக்கதைய புறநானூரு பாடல் 55 கூறுகிறது. இக்கதை இப்பாடல் தவிர வேறெங்கும் கூறப்படவில்லை. இக்கதை முதன் முதலாக மகாபாரதத்தில் பகுதி 33 - 35ல் கர்ணபர்வதத்தில் கூறப்பட்டுள்ளது. பிராம்மண நூல்களின் காலம் வரை கூட இக்கதை காணப்படவில்லை. எனவே இக்கதையைக் கூறும் புறம் 55 மகாபாரதத்திற்கு பிந்தைய காலத்தைச் சேந்த பாடலேயாகும். அதுபோல சிவனும் உமையும் அமர்ந்துள்ள கயிலையை தன் தோளால் அசைக்க முயன்ற இராவணனின் தோள் நெரிய சிவபெருமான் இறுக்கியதாகக் கூறப்படும் கதை குறிஞ்சிக் கலியில்(2) கூறப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 புறப்பாடல் 378- இராமன், அவன் மனைவி சீதை, அவளை கவர்ந்து சென்ற அரக்கன், குரங்கு கூட்டம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இராமாயணக் கதை நன்று வளர்ந்து பரவலாக பேசப்பட்ட பின்னர் எழுதப்பட்ட பாடலே இது எனக் கொள்ளலாம். வால்மீகி இராமாயணம் எழுதப் பெற்ற காலத்திற்குப் பிற் காலத்தைச் சேர்ந்ததாகவே இப்பாடல் இருத்தல் வேண்டும்.

 --Ksubashini (பேச்சு) 08:33, 2 ஆகஸ்ட் 2013 (CDT) சைவ சித்தாந்தம்



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

சங்க இலக்கிய்ங்களில் சிவன்
Permalink Reply Quote 
More indicator.png


சங்க இலக்கியங்களில் சிவன்

 

சிவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்; காளை வாகனன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவன்; உமையொருபாகன்; நீலகண்டன்; திரிபுரம் எரித்தவன்; முக்கண்ணன்; மழுப்படையை உடையவன்; கொடுகொட்டி, பாண்டுரங்கம், கபாலம் முதலிய கூத்துக்களை ஆடுபவன் ” என்பவைகள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளமையினை இங்கு காண்போம்.


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்

அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்க . கலி 150 : 20
ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் - பரிபாடல் 8 : 6-7

காளை வாகனன்

காளை மாட்டை வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருவபவன்.
ஊர்தி வால் வெள்ளேறே - புறநானூறு 1 : 3
புங்கவம் ஊர்வோனும் ( புங்கவம்-காளை) - பரிபாடல் 8 , 2
உருவ ஏற்று ஊர்தியான் - கலி 150 : 13
கங்கையினைச் சடையில் வைத்திருப்பவன்
விரி சடைப் பொறை ஊழ்த்து
விழுநிகர் மலர் ஏய்ப்பத்
தனிவுற தாங்கிய தனி
நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு - பரிபாடல் 9 : 5 - 7
தேறுநீர் சடைக் கரத்து திரிபுரம் தீமடுத்து - கலி : 1 -2
இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் - கலி: 38 : 1
பிறங்குநீர் சடைக் கரந்தான் ” - கலி 150 : 9
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவன்
கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல - கலி 103 : 15
“ கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே
ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய
காணான் றிரி தருங்கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையவன் - கலி : 142 : 24-28
புதுத்திங்கள் கண்ணியான் பொற்பூண் ஞான் றன்னநின் - கலித்தொகை 150 : 17
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை - புறநானூறு 1 : 8 – 9
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல - புறநானூறு 55 : 4 – 5

உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவன்:

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் - திருமுருகாற்றுப்படை 153
பெண்ணுரு வொருதிறன் ஆகின்றது ; அவ்வுருத்
தன்னுள் அடக்கின் கரக்கினும் கரக்கும் - புறநானூறு 1 : 7-8

நீலகண்டன்
தேவர்களும் - அசுரர்களும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு அமிர்தம் வேண்டிக் கடல்கடைந்த போது, வாசுகி என்ற அந்தப் பாம்பானது வலி பொறுக்க மாட்டாது நஞ்சைத் திரண்டுவரும் அமிர்தத்தில் கக்கிவிட்டது.

அதுகண்ட தேவர்கள் கலங்கினர். சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டான். உமாதேவி அதுகண்டு பயந்து ஓடிப்போய், அவனது கண்டத்தினைப் பிடித்தாள். அதனால் அந்த நஞ்சானது கண்டத்திலேயே நின்றுவிட்டது. இதன் காரணமாக சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றான் என்பது புராணக்கதை.

நீலமணிமிடற்று ஒருவன் போல - புறநானூறு : 91 -6
மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி பாடல் 8 : 127
மணி மிடற்று அணி போல - கலித்தொகை : 105 , 13
மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன் - கலித்தொகை : 142 : 27-28
கறைமிட றணியலு மணிந் தன்றக் கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே - புறநானூறு : 1 : 5 - 6

திரிபுரம் எரித்தவன்
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய மதிற் சுவரைக் கொண்ட மூன்று கோட்டை களையுடைய அவுணர்கள் தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் எல்லாம் பிரம்மாவினிடம் சென்று முறையிட, பிரம்மா தேவர்களை கூட்டிக்கொண்டு சிவனிடம் சென்று முறையிட்டான்.

அப்போது சிவன் பூமியை இரதமாகவும், தேவங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் தகர்த்து, அவுணர்களையும் அழித்தானென்பது புராணக்கதை. இதுவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.

ஆதியந்தணனறிந்து பரிகொளுவ
வேதமாபூண் வையத்தேரூர்ந்து
நாகம் நாணா மலை வில்லாக
மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின்முளிய
மாதிரம் அழவவெய் தமரர் வேள்வி - பரிபாடல் 5 : 22-26

ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞான்கொளீஇ
ஒருகனை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல்………” தியந்தணனறிந்து பரிகொளுவ - புறநானூறு 55 : 1-4

மூன்று கண்களை உடையவன்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே - புறநானூறு 6 : 18
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்- திருமுருகாற்றுப்படை 153
மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன்
முக்கண்ணா னுருவேபோன் - கலித்தொகை 104 : 11-12

இது மட்டுமல்லாமல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகக் கூறப்பட்ட பாட்டில் சிவன் ஆடியதாகக் கூறப்படும் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் ஆகிய கூத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.

கொடு கொட்டி
இது சிவன் உலகை எல்லாம் அழித்து நின்று கை கொட்டி ஆடும் கூத்தாகும்.

படுபறை பல வியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி யாடுங் காற் கொடுய ரகல் குறிக்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீா தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 5:7

பாண்டரங்கம் கூத்தாடல்
இது சிவன் திரிபுரங்களையும் அழித்து நின்று, எரிந்த சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடிய கூத்தாகும்.

மண்டமர் பல கடந்து மதுகையானீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்காற்பணை யெழி லணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ- கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 8 -10

கபாலக் கூத்தாடல்
இது சிவன் எல்லாவற்றையும் அழித்து மண்டையோட்டைக் கையில் ஏந்தி அடிய கூத்தாகும்.

கொலையுழுவைத் தோலைசக்இக் கொன்றைத்தார் சுவற்புரளத்
தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்காண்
முலையணிந்த முறுவலான் முற்பாணி தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 11 – 13

 



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

நீலகண்டர்

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் இருந்து பாற்கடலைக் கடைந்த போது, நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பு வலிதாங்காமல் விசத்தினை கக்கியது. அந்நஞ்சு உலகிலுள்ள உயிர்களை கொல்லும் தன்மையுடையதாகையால், அதிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்களும், அசுரர்களும் சிவனை வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட சிவன், ஆலால சுந்தரரை அனுப்பி, ஆலகால நஞ்சினை அள்ளிவரச் செய்து, உண்டார். உலகெலாம் நிறைந்துள்ள ஈசன் திருமேனியில் நஞ்சு பரவினால், அது உலகையே பாதிக்குமென்பதால், உமையவள், அஞ்சியவள் போல், ஈசன் திருக்கழுத்தைப் பற்றிக் கொண்டாள். நஞ்சு கீழிறங்காமல் கழுத்திலேயே தங்கிக் கொண்டது. சிவன் ஆலகால விசத்தினை இவ்விதம் நஞ்சு அருந்தி உலகை காப்பாற்றினார்

 

ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ

யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்

பெருவிறலமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்

பிறைநுதல் விளங்கு மொருகண் போல 

(புறம் 55)

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை

மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனும்...  (புறம் 56)

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீலமணிமிடற் றொருவன்......   (புறம் :91)

நன்றாய்ந்த நீணிமிர்சடை 

முது முதல்வன் ..... (புறம் :166)

நீலநாகம் நல்கிய கலிங்கம் 

ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....  (சிறுபாணாற்றுப்படை, 96-97)

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பேரிசை நவிர மேஎ யுறையும்

காரிஉண்டிக் கடவுளது இயற்கையும்.......  ( மலைபடுகடாம்)



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியவாதியர்தம் தனிப்பட்ட கவனத்துக்கு.....

”ஸங்க₄ ஸாஹித்யே ஸதா₃ஶிவ மாஹாத்ம்யம்”

முது முதல்வன், முக்கண்ணான், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், கறை மிடற்றண்ணல், ஆலமர் செல்வன், ஆல்கெழு கடவுள் - இவை இலக்கியம் சொல்லும் இறைவனின் பெயர்கள்.

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் 
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்.....
(கலித்தொகை 2)

ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல 
(புறம் 55)

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனும்...
(புறம் 56)

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன்......
(புறம் :91)

நன்றாய்ந்த நீணிமிர்சடை 
முது முதல்வன் .....
(புறம் :166)

நீலநாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
(சிறுபாணாற்றுப்படை, 96-97)

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கடவுளது இயற்கையும்.......
( மலைபடுகடாம்)

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 
(கலித்தொகை 6)

இக்கலித்தொகைப் பாடல் சிவபிரான் உமாதேவியாரோடு 
இமயத்தில் வீற்றிருந்ததையும், மலை பெயர்த்த 
இராவணனின் கரங்கள் சிக்குண்டதையும்
தெரிவிக்கிறது.

ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் ...... (அகம் 181)

உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான 
பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! - பரணர்

உருத்திரனார், இறையனார் என்ற பெயர்களில் புலவர்கள் இருந்தனர்.

[ஆலமர் செல்வன்- தென்முகக் கடவுள் - தக்ஷிணா மூர்த்தி, பவுத்தரின் அவலோஹிதர் பார்த்துக் காப்பியடித்து உருவாக்கிய வடிவம் என ரீல் சுற்றிக்கொண்டிருந்தார் ஓர் அமெரிக்கத் தமிழ் நண்பர்; மேற்கத்திய ‘ஆய்’வாளர் முடிவாகச் சொல்லி விட்டார்களாம்]



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

சிவனும் சைவமும் -சைவத்தின் தொன்மை

தமிழர்களின் வழிபாடுகளில் சிவவழிபாடு அல்லது சிவநெறி (சிவனியம் அல்லது சைவம் ) மிகவும் தொன்மையானது. பண்டைத் தமிழரின் மெய்ப்பொருளியல் என்றவுடனேயே நாம் நினைவு கொள்வது சைவத்தையேயாகும்.. சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் காணும் சமயச் சின்னங்களான இலிங்கம், பசுபதி

முதலியவற்றை ஆய்ந்த சர் ஜான் மார்ஷல், ஈராசுப் பாதிரியார் முதலியோர். தமிழர்களின் சைவம் அங்குப் பரவியிருந்த பாங்கினைப் பேசுகின்றனர். இருக்கு வேதத்தில் சிவன் விராத்தியரின் கடவுளாகவும், ‘சிசினதேவன் என்றும் குறிப்பிடப்படுகிறார்.88

சிந்துவெளியில் காணப்பெறும் சைவம் சுமேரியா, பாபிலோனியா, அக்கேடியா, எகிப்து, கிரேக்கம், மெக்சிகோ முதலிய நாகரிகத் தொட்டில்களிலும் காணப்பெறுகிறது. இன்றளவும் உலகில் பல நாடுகளில் சைவம் சிறந்து நிற்பதைக் காணலாம் .

 

சிந்துவெளிச் சிவனும், சங்கத் தமிழர் பின்பற்றிய சைவமும் ஒன்றாகவே உள்ளன. ஆனால், வேதகாலச் சிவன் இதிலிருந்து வேறுபடுகிறார். சங்கத் தமிழர் வழிபட்ட சிவன் முழுமுதற் கடவுள்; நலமே பயக்கும் நற்கடவுள். ஆனால், வேதகாலச் சிவன்

உருத்திரன் என அழைக்கப்பெற்றவர்; நோய்க்கும், அச்சத்திற்கும், அறிவுக்கும் கருத்தாவாக உள்ளவர். இவ்விரு சிவனும் (சிவனும் உருத்திரனும் ) ஒன்றாக இணைந்து ஒரே கடவுளாக வழிபடும் வழக்கம் பிந்திய வேதகாலத்தில் ஏற்பட்டது . வேதங்களுக்கு மிகவும் பிற்பட்ட இதிகாசங்களிலும் தொன்மங்களிலும்

 

87 - மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம் ( புறம் . 85 :27-29 )

88 Karmarkar , Dr. P. , The Religions of India , - Vol . I. p.82

 

மெய்ப்பொருளியல் 289

 

களை

சிவனை முழுமுதற் கடவுளாகவும், சூரியனாகவும், எட்டு மெய் உடையவனாகவும் , முத்தொழில் புரிபவனாகவும், முக்கண்ணனாகவும் கொண்டு வழிபடும் காட்சியைக் காண்

கிறோம். இவ்வாறு வேதகால உருத்திரனும் பண்டைத் தமிழரின் சிவனும் நன்றாகக் கலப்புண்டு வழிபடப்பட்ட காட்சியினை உபநிடதங்களிலும் காண்கிறோம். இஃது ஆரிய திராவிடரின் நாகரிகக் கலப்பினையே சுட்டுகிறது.89 வேதங்களிலும், உபநிடதங்களிலும் பற்பல தெய்வங்களைக் காண்கிறோம். ஆயினும், சிவனே முழுமுதற் கடவுள் என்பதை அவை முடிவாகக் கூறுகின்றன .



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

 சங்க இலக்கியங்களில் சைவம்

சிவன் தமிழரின் கடவுள். சைவம் தமிழரின் மெய்ப்பொருள் நெறி. இதனைச் சிவன் என்னும் சொல்லே மெய்ப்பிக்கிறது. சிவன் என்னும் சொல் சிவப்பு என்னும் பண்பின் அடியாகப் பிறந்தது . சிவப்பு என்பது தமிழ்ச்சொல். 90 எனவே தான் சங்கப் பாக்களில் சிவன் தெளிவாக அறியப்படுகிறார் .

 

புறநானூற்றில் சிவன்

சங்ககாலப் பாண்டிய மன்னன் பெருவழுதியைச் சிவநெறிச் செம்மலென வாழ்த்த முற்பட்ட காரிகிழார் என்னும் புலவர் ‘பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே91 என வாழ்த்துகிறார் .

 

நீண்டநாள் உயிர்வாழவைக்கும் நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் தமிழைப் பரவிய அதியமான் தமிழ் வாழ ஔவையாருக்கு அளித்தான். அதனைப் பெற்ற ஒளவையார் திருப்பாற் கடலைக் கடைந்து அமிழ்தம் பெற்றபோது அதனைத் தான் உண்ணாது (நஞ்சுண்டு) அமரர்க்கு. ஈந்து அவர்களின் சாவை ஒழித்த சிவனைப்போல நிலைபெற்று நற்புகழுடன் வாழுமாறு வாழ்த்துகிறார் .92

 

சிவனுக்கு மூன்று கண்களிருப்பதைப்போலவே தமிழ்க் காவலர்கள் மூவர் . அவர்கள் சேர , சோழ , பாண்டியராவர். மூன்று கண்களில் நெற்றிக்கண்ணே மெய்ஞ்ஞானக் கண்ணாகத்

89 lbid , pp . 38-57

91 புறம் . 6 : 17-18

90 1bid , pp . 49 , Estilin Carpenter , J. , 92 ஷ 91

Theism in Mediaeval India , p . 351 .

த.ச.வா. - 19

 

290 . தமிழ் நாடு - சங்ககாலம் ( வாழ்வியல் )

 

திகழ்வதைப்போல் பாண்டியன் தமிழின் புரவலனாகத் திகழ்ந்தான் என்று மதுரை மருதனிள நாகனார் பாண்டியனைப் புகழ்ந்துரைக்கிறார் .

 

பிற சங்க இலக்கியங்களில் சிவன்

வள்ளல் ஆய் அண்டிரன் கொடைக்குணமும், சைவநெறியும் டையவன். தான் அரிதில் பெற்ற கலிங்க ஆடையை ஆலமர் செல்வனுக்குப் படைத்தான் 94 என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. முக்கண்ணன் ஆலமரத்தைப்பற்றி அகநானூறும் பேசுகிறது .95 திருமுருகாற்றுப்படையில் செவ்வேள் , சிவன் ஆகியோர் பெருமைகள் பேசப்படுகின்றன . இருவரும் செம்மேனிய ராகவே ஏத்தப்படுகின்றனர் . பரிபாடலில் சைவம் தெளிவாக அறியக்கிடக்கிறது .

 

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் புத்த , சமண சமயங்களைக் கருப்பொருளாகக் கொண்டவையாயினும் சிவனே அவற்றிலும் முழுமுதற் கடவுளாக ஏற்றப்படுகிறார் .

‘ பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் 93

நுதல்விழி நாட்டத் திறையோன் கோயில் 97

எனச் சிவனுடைய திருக்கோயில்கள் பற்றிச் சிலப்பதிகாரம் பேசுகிறது .

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்

பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக 98

என மணிமேகலையில் சிவனார் பதிகொண்டமை போற்றப்படுகிறது.07 (இவற்றால் புத்த, சமண சமயங்கள் தமிழனால் அறியப்படும் முன்பே, சைவம் இம் மண்ணில் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காண்கிறோம். வேதங்களிலும் ஆகமங்களிலும்கூடச் சிவன் வீடுபேற்றிற்குரியவனாகவே போற்றப்படுவதும், வீடுபேறு ‘சிவகதி என்றே குறிக்கப்படுவதும் உணரத்தக்கதாகும். மணிமேகலையில் பல்வேறு சமயக் கோட்பாடுகள் அறியப்படுகின்றன. சைவக் கோட்பாடு தெளிவாகவும் விரிவாகவும் பேசப்படுகிறது .

சித்தாந்தம் என்றாலே நிலைநிறுத்தப்பெற்ற முடிவு அல்லது உண்மை என்பது பொருளாகும் . சைவசித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தெளிவாக அறியப்படுகிறது. ஆயினும் , இதனைச் சங்ககாலக் கருப்பொருளில் முளைத்ததெனக் கொள்ளவேண்டும் . சங்க இலக்கியங்களில் நாம் காணும் மெய்ப்பொருட் கோட்பாடுகளே இதிலும் காணப்படுதல் வெளிப்படை .

93 புறம் . 55 : 1-6

96 சிலப் . 5 : 169

94 சிறுபாண் . 96-99

97 ஷை 14 : 7 95 அகம் . 181 : 16-17

98 மணிமே . 1 :54-55

மெய்ப்பொருளியல் 291

 

சைவசித்தாந்தம் அறிவியலடிப்படையில் பதி (இறைவன், பசு(உயிர்), பாசம்(தளை) ஆகிய மூன்றின் கூறுபாடுகளையும் ஆய்ந்துரைக்கிறது. எங்கும் நிறைந்து, என்றும் நின்று முழுமுதலாய்த் திகழ்வது பதி; உடலின் வேறாய், யான், எனது எனும்

இருவகைப் பற்றுக்கொண்டு ஆற்றலும், அவத்தைகளும், மும்மலங்களால் பிணிக்கப்பட்டது பசு; உயிருக்கும் உடலுக்குமுள்ள தொடர்பு, பறவைக்கும் கூட்டிற்குமுள்ள தொடர்புபோலாகும் .

 

இதில் சைவம் என்னும் நெறியைப் பின்பற்றுவோன் சைவன் என்றும், அந்நெறியில் வல்லான்‘சைவவாதி என்றும் தெளிதல் காண்க. மேலும், சைவக்கோட்பாட்டையும் இது தெளிவாகப் பேசுகிறது.99 சைவம் என்னும் சொல் முதன்முதலில் சாத்தனாரால் கையாளப் படுவதை மணிமேகலையால் அறிகிறோம். சிலர் இக்காலத்தில் தான் முதல் தமிழ் ஆகம நூலான ‘திருமந்திரம்’ எழுதப் பெற்றதென்பர். இத்தகைய கூறுபாடுகளிலிருந்து தான் சைவசித்தாந்தம் பிற்காலத்தில் உருவானது .

 

பிற சமயங்களின் கோட்பாடுகளெல்லாம் காணவிழையும் முடிபுகளுக்கெல்லாம் ஒரு முடிந்த முடிபைக் காண்பதே சைவ சித்தாந்தம். உயிர் , மலங்களை நீக்கி இறையோடு கலக்கவல்லது. அதற்கான தளைகளை அறுத்தல் வேண்டும். அத்தளைகளை அறுக்க உயிர் நல்வழிகளைக் கடைப்பிடித்தால் தானே அது நிலைபேறு அடைந்து விடும் .

பொதுவாகப் பார்க்கும்போது சைவநெறி எல்லாச் சமயங்களிலும் காணப்பெறும் நெறிகளை உள்ளடக்கி ஒரு பொதுவான முடிந்த முடிபைத் தருவதாகும்.எனவே தான்,‘ வினைக் கோட்பாடும், உயிர்கள் பல பிறவிகளெடுக்கும் கோட்பாடும், யோக நெறியும், சிவன், உமை, திருமால்பற்றிய சமய தத்துவக் கோட்பாடுகளும், வேதங்கள் கூறும் ஓமவிதிகளுக்கு மாறாக நிகழும் வழிபாட்டு முறைகளும், இந்து சமயத்தில் அதிகமாகக் காணப்பெறும் சமயச் சிந்தனைகளும் ஆரியர் அல்லாதவருடையவை

99 மணிமே . 27 : 86-95

 என டாக்டர் சுநித்குமார் சட்டர்ஜி கூறுவதிலிருந்து 100 சைவ சமய நெறியே வேத ஆகம நெறிகளுக்குக் கருவூலமானதென்பதைத் தெளியலாம் . சிவனை மிகப் பெரிய யோகியாகவும் , பசுபதியாகவும் கொண்டு அம்மை அப்பனாகவும் போற்றும் கோட்பாட்டினை முதலில் கொண்டவர் திராவிடரே 101 என டாக்டர் சட்டர்ஜி கூறுவது சைவம் , தமிழரின் சொத்து என்பதை வலியுறுத்தவேயாகும் .

யற்கையின் பின்னணியில் இறைவனைக் கண்ட சங்ககால மக்கள் சிவனைச் செம்மேனியனாகவும் , அறிவுக் கடவுளாகவும், தங்கள் உயிர்கள் ஒடுக்கம் பெற்றபின் இன்பக் கூத்தாடுபவனாகவும் கொண்டனர் . சைவ வேதக் கோட்பாடுகளை ஆட்கொண்ட பின் சிவ உருத்திர இணைப்பு ஏற்பட்டதும் வேதக் கோட்பாடு களை வெல்லச் “ சைவ நெறி பலமுறை மறுமலர்ச்சி பெற வேண்டியதாயிற்று .

 



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

 

1.2 சங்க இலக்கியத்தில் சிவ வழிபாடு

 

 

     பழந்தமிழ் நாட்டின் வரலாற்றுக் காலத்தைச் சங்க

காலத்திலிருந்து தொடங்குவது வழக்கம். சங்க காலம் என்பது

கி.மு.10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

வரை எனக் கணக்கிடுவர். இக்காலக் கட்டங்களில் தோன்றிய

இலக்கியங்களைச் சங்க இலக்கியம் எனப் போற்றுவர். சங்க

இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவாகும்.

இவ்விருவகை இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப்

பெறுகிறது. அவ்விலக்கியங்கள் காட்டும் சிவ வழிபாட்டு

நிகழ்வுகளில் குறிப்பிட்ட செய்திகள் மட்டும் இங்கே சுட்டிக்

காட்டப் பெறுகின்றன.

 

    தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பாண்டிய நாட்டில்

தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடிச் சங்கத்தை நிறுவிப் பணி செய்த

காலம் சங்க காலம் எனப்படும். கடல் கொண்ட

தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், தற்பொழுது உள்ள

மதுரையிலும் மூன்று சங்கங்கள் இருந்தன. அவை முறையே

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வழங்கப்பட்டன.

கடைச்சங்கம் என்பது இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே

நிலவியதாகும். அச்சங்கப் புலவர்களால்     பாடப்பெற்ற

பாடல்களைக் கொண்டவையே பத்துப் பாட்டு எட்டுத்தொகை

என்ற இலக்கியங்களாகும். அப்பாடல்களில் அக்காலத்தில்

வாழ்ந்த     தமிழ் மக்களது வாழ்வியல் நிகழ்ச்சிகள்

இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி கடவுள்

கொள்கையாகும். கடவுள் கொள்கையில் தமிழ் மக்கள்

மேற்கொண்ட தெய்வ வழிபாட்டு நெறிமுறைகள் பிரிவின்றிக்

காணப் பெறுகின்றன.

 

    சங்க இலக்கியங்களில் ஒரு தெய்வ வழிபாடு என்பது

அன்றிப் பல தெய்வ வழிபாடுகள் காணப் பெறுகின்றன. மக்கள்

வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள்

முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சி

நிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்

நடத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்

இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்

நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்

நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத்

திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும்

தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய தெய்வங்களின்

வழிபாடுகள் சங்க இலக்கியங்களில் பரந்து காணப்படுகின்றன.

இத்தெய்வ வழிபாடுகளோடு பேய், பூதம், யமன் போன்ற

அச்சத்தைத் தருவதற்கு உரிய சக்திகளையும் தெய்வமெனக்

கொண்டு வழிபடும் செய்திகள் சங்க இலக்கியத்தில்

காணப்பெறுகின்றன.

 

    பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில்

பேய் என்பது 'அணங்கு' என்ற சொல்லால் குறிக்கப் பெற்று

வழிபடப் பெற்றமை காணப்படுகின்றது. “துணங்கையம்

செல்விக்கு     அணங்கு     நொடித்தாங்கு” (அடி.459).

பட்டினப்பாலையில் பேயின் வழிபாடு இடம் பெற்றதைக்

கீழ்வரும் அடி உறுதிப்படுத்துகிறது.

 

    “பிணம் தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்” (வரி. 260).

 

    பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில்

முருக வழிபாட்டின் வரலாறு அமைந்துள்ளது. கூற்றுவன்

எனப்படும் யமனைப் பற்றிய வழிபாடு சங்க இலக்கியங்களில்

பலவாறு காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் அமைந்த ‘மாற்றரும்

சீற்றத்து மாயிருங் கூற்றம்’ (பா. 51) என்பதனைக் காட்டலாம்.

இத்தகைய சிறு தெய்வ வழிபாட்டோடு இறந்தவர்களைப்

புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை வழிபடுகின்ற நடுகல்

வழிபாடும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.

 

    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்

கடவுளும் இலவே” (பா. 335) என்ற புறநானூற்றுப் பகுதி இங்குச்

சுட்டிக் காட்டத் தக்கதாகும். பரிபாடலில் கொற்றவை வழிபாடும்,

திருமால் வழிபாடும் இடம் பெற்ற பாடல்கள் பல உள்ளன.

திருமாலின் வழிபாடு சிவ வழிபாட்டிற்கு ஒத்த நிலையில் சங்க

இலக்கிய நூல்கள் பலவற்றிலும் காணப் பெறுகின்றது. திருமாலின்

10 அவதாரச் செய்திகளைப் பற்றிய நிகழ்ச்சிகள் பலவாறாக இடம்

பெற்றுள்ளன. இவ்வாறு சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாட்டு

முறைகள் நிலங்களின் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு தெய்வ

வழிபாடாகக் காணப் பெறுகின்றன. இவ்வழிபாடுகளோடு சிவ

வழிபாடும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க அளவில்

தனிநிலை பெற்று விளங்குகிறது.

 

1.2.1 எட்டுத்தொகை நூல்களில் சிவ வழிபாடு

 

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ

வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ

வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும்

காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு

நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக்

கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால்

குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான்.

அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை

என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான்,

ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன்,

ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்

பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,

மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால்

அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண்

தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும்

சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான்.

வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து

வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து

வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில்

தெரிகின்றது.

 

    மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்

எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப்

பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில்

ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள்

ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும்

நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப்

பாடல்கள்     சிவபெருமானைப்     பற்றியனவே     ஆகும்.

இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப்

பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை

ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை

உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில்

அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன

மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’

என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில்

கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை

உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

 

    இவ்வாறு     உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு

சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை

நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும்

இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட

நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன்

சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.

இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

 

    மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய

    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்

    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்

             - (பரி.5, 25-27)

 

அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த

எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை

எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.

 

    தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

    மணிமிடற் றண்ணல்      - (பரி. 9, 6-7)

 

ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த

செய்தியை,

 

    ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்

                 - (கலி - 81)

 

    ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்

                 - (புற - 198)

 

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள்

என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை

அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும்

குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள்

கூறுகின்றன.

 

    சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக்

கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள்

எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக்

கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக

எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய

மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை

நாளில்     சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி

நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

 

    சிவபெருமானுக்கு வேள்வித் தீ வழிபாடு இன்றியமையாதது

என்பதையும் அதனைச் செய்தவர்கள் அவிர்சடை முனிவர்கள்

என்பதையும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

    கடுந்தெறற் செந்தீ வேட்டுப்

    புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே

                 - (புறம் - 251)

 

    சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின்

வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன.

வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள்

நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.

 

    அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டு

நிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின்

34ஆம் பாட்டில்,

 

    கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி

    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்

    கடவு ளாயினும் ஆக

    மடவை மன்ற வாழிய முருகே     (பா- 34)

 

என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப்

பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும்

சிவபெருமானின் மூத்த     பிள்ளையாகிய யானைமுகப்

பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம்

பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண்

தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப்

பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை

அதற்குச் சான்றாகக் காட்டலாம்.

 

    இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப்

பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச்

சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

 

1.2.2 பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு

 

    பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு

முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது

பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின்

தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய

வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை

அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின்

வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின்ற

செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில்

சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும்.

மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள்

குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன்

குன்றுதோறும்     ஆடுகின்றவன்     என்பதை     நக்கீரர்

திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன்

பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.

 

    திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின்

திருத்தலங்களில் செய்கின்ற     வழிபாட்டு     முறைகள்

சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய

வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது

போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே

தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது

பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப்

பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம்

சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது.

 

    மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள்

பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில்

கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள்

இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.

 

    சிறுபாணாற்றுப்படையில்,     “ஆலமர் செல்வற்கு

அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99)

என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி

பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும்

பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப்

பெற்ற செய்தி,

 

    கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி

    ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428)

 

என்றும்     குறிக்கப்பெறுகின்றன.     அதுபோலப்

பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில்

அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை

நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை

வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக்

கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,

 

    கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

    முக்கோல் அசைநிலை கடுப்ப     (36-37)

 

என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின்

தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும்

வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.

 

1.2.3 தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு

 

    ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற

மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட

இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ்

இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ

வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும்

சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம்.

அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள்,

கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில்

தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது

காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப்

பிரித்து     அந்நிலங்களுக்குரிய     தெய்வங்களையும்

குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று

தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப்

பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள்

என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது.

எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை

புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக்

(ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய

வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று

தொடங்குகின்ற தொல்காப்பியச்    சூத்திரம்     இதற்கு

எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு

தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில்

குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய

விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை

எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில்

கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு

சிறப்பிடம் பெற்றது என்பதைக் “கொடிநிலை, கந்தழி, வள்ளி

என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே“

என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய

நிலையாமை     பற்றி     புறத்திணையில் காஞ்சித்திணை

வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும்,

சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின்

சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது

எனலாம்.

 

1.2.4 திருக்குறளில் சிவ வழிபாடு

 

    சங்க இலக்கியக் காலம் சார்ந்த திருக்குறளில் ஒரு

குறிப்பிட்ட கடவுள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை

என்றாலும் சமய நெறிமுறைகளும், தத்துவ உண்மைகளும் இடம்

பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. “ஆதி பகவன்

முதற்றே உலகு” என்ற தொடர் கடவுள் உண்மையைப்

புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும்

தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். “இருள்சேர் இருவினை”

(குறள் எண்.5) என்ற தொடர் வினைக் கொள்கையின் சிறப்பை

எடுத்துக் காட்டும். "பிறவிப் பெருங்கடல்" (10) என்பது

மறுபிறப்பு உண்மையை வெளிப்படுத்தும் "எண்குணத்தான்"

என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை

உடையவன் என்பதை உணர்த்தும்.

 

    திருக்குறளில் “உலகு இயற்றியான்” (1062) என்ற தொடர்

உலகத்தைப் படைத்த முதல்வனாம் கடவுள் உண்டு என்பதை

வலியுறுத்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' என்ற சொல்

திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை

நிலைநாட்டும். அதுபோலப் “பற்றுக பற்றற்றான் பற்றினை”

(350) என்ற தொடர் சிவ தத்துவ உணர்வை வெளிக்காட்டும்.

“மெய்யுணர்வு” (354) என்ற சொல் இறையுணர்ச்சி உடைய

பெரியோரை நினைவுபடுத்தும்.

 

    “சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்” (359) என்ற தொடர்

சிவ தத்துவக் கொள்கையைத் தெளிவுற உணர்த்தும். ஆகூழ்,

போகூழ் என்ற தொடர்கள் (371) விதிக் கொள்கையை

வலியுறுத்தும். “வகுத்தான் வகுத்த வகை” (377) என்ற தொடர்

இறைக் கொள்கையை வலியுறுத்தும். ஊழ் என்னும் அதிகாரம்

சிவ தத்துவக் கொள்கையை வலியுறுத்தும் அதிகாரமாகும்.

இவ்வாறு திருக்குறளில் சமயம் சார்ந்த வாழ்வியல் முறைகள்

சுட்டிக் காட்டப் பெற்றுத் தொல் பழந்தமிழ்நாட்டு

வழிபாட்டுமுறை உணர்த்தப் பெறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

  •  

 

சிவன் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதால் சிவ வழிபாடு சங்ககாலத் தமிழகத்தில் இல்லை என்பதல்ல, மாறாகச் சிவன் வேறு பல பெயர்களில் அறியப்பட்டான் எனவும் சிவபெருமானுக்கு ‘கணிச்சியோன்’ என்றொரு பெயர் இருந்தது என்பதையும் அப்பெயர் கணிச்சி என்ற ஆயுதத்தால் ஏற்பட்டது என்பதையும் சிவனின் பழமையான ஆயுதமான கணிச்சி அவரது கையில் காணப்படும் மழு என்னும் ஆயுதத்திற்கும் முற்பட்டது என்பதையும் இந்நூல் அறிய தருகிறது. மட்டுமன்றி கணிச்சி என்னும் ஆயுதம் ஒருகாலத்தில் பயன்பாட்டில் இருந்த நிலையையும் அதன் புராதனத்துவத்தையும் இந்நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.

senthee nadarasanஇந்த நூலில் ஊடுசரடாக ஆசிரியர் நமக்கு விடுக்கும் கேள்வி சங்க காலத்தில் ‘சிவன்’ என்ற சொல் அக்கால இலக்கியங்களில் காணப்படாமை ஏன்? என்பதுதான். அதற்கு அவர் இந்திரனும் வருணனும் சங்கப் பாடல்களில் இடம்பெறாத தெய்வங்கள். இப்புதிருக்கு விடை கிடைக்கும்போது சிவன் பற்றிய புதிருக்கும் விடை கிடைக்கும் என அமைதி காண்கிறார்.

பழங்காலத்தில் சிவனை வணங்கியவர்கள் உருவம் இல்லாத ஓர் அடையாளத்தை வைத்து வணங்கினார்கள். சிவன் உருவம் இல்லாத அந்த அடையாளத்திற்குப் பெயர்தான் இலிங்கம். சிவலிங்கத்துக்குத் தமிழர் வழங்கி வந்த பெயர் கந்தழி என்பது. லிங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு பழைய பெயரான கந்தழி என்பது மறைந்து விட்டது. கந்தழி யாகிய சிவலிங்க வழிபாடு மிகத் தொன்மையானது. சிவ பெருமானுக்குப் பல பெயர்கள் உள்ளன. ஆதிரை முதல்வன், ஆதிரையான், ஆலமர் கடவுள், ஆனேற்றுக் கொடியான் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு பழைய பெருஞ்சடை அந்தணன், எரிதழல் கணிச்சியோன், ஏற்றூர்தியான், கறைமிடற்றண்ணல், காரியுண்டிக் கடவுள், சடையன், செல்விடைப் பாகன், தாழ்சடைக் கடவுள், நீர்சடைக் கரந்தோன், நீலமிடற்றொருவன், புதுத்திங்கட் கண்ணியான், மணிமிடற்றண்ணல், மழுவாள் கொடியோன், முக்கட் செல்வன் முதலிய பெயர்கள் சங்க நூற்களில் காணப்படுகின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தமிழகத்துடன் அரசியல் வணிகத் தொடர்புகளில் ஈழம் இறுக்கமாகப் பிணைந்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தோடு மிகவும் நெருங்கிய பகுதி ஈழநாடு ஆகும். எனினும் ஈழத்து இலக்கியங்களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலும் ‘சிவன்’ என்ற பெயர் குறிப்பிடப்பட, தமிழகத்தில் மட்டும் இவ்வாறு குறிப்பிடப் படாதிருப்பது துலக்கமுடியாத மர்மமாக இருக்கின்றது. சிவன் என்ற பெயர் வடிவம் தமிழகம் தவிர்ந்த இந்தியப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளிலும் ஈழத்துக் கல்வெட்டுகளிலும் இடம்பெற்றிருக்கின்றது.

ஈழத்தின் மிகப் பழைய வழிபாடுகளில் ஒன்றாகச் சிவ வழிபாடு விளங்குகின்றது. வரலாற்றுக் காலம் தொடங்கியதி லிருந்து மன்னர்கள் சூட்டியிருந்த பெயர்கள் சிவ வழிபாட்டின் தொன்மையை உணர்த்தும். விஜயனுக்குப் பின் ஆட்சி செய்த பாண்டுவாசு தேவனின் பதினொரு பிள்ளைகளில் ஒருவன் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கியிருந்தான். பாண்டுகாபய மன்னனின் மாமன்மார்களில் ஒருவன் ‘கிரிகண்டசிவ’ என்பவன் ஆவான். பாண்டுகாபய மன்னனுக்குப் பின் அரசு கட்டிலேறியவன் ‘முடசிவ’ என்பவன் ஆவான். தேவநம்பீயதீசனின் சகோதரர்களில் ஒருவன் ‘மகாசிவ’ என்பவன் ஆவான். தாதுவம்சம் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கல்யாணி மற்றும் சேருவாவில் ஆகிய இடங்களை ஆண்ட சிற்றரசர்கள் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கி நின்றதைக் குறிக்கின்றது.

ஈழத்து இலக்கியச் சான்றுகளைவிட கிறிஸ்து பிறப்பதற்கு முன்னருள்ள பிராமிக் கல்வெட்டுகளில் ‘சிவ’ என்ற பெயர் உள்ளதோடு சிவதத்த, சிவரக்கித, சிவகுத்த என்னும் அடைமொழிகள் கொண்ட பெயர்கள் காணப்படுகின்றன. சிவதத்த என்றால் சிவனால் அளிக்கப்பட்டவன் என்பது பொருள். சிவரக்கித, சிவகுத்த என்ற சொற்கள் சிவனால் பாதுகாக்கப்படுபவர் எனப் பொருள்படுகின்றன. சிவன் அருளைப் பெற்றவன் என்ற பொருளைச் ‘சிவபூதிய’ என்ற சொல் உணர்த்துகிறது. ‘சிவ’ என்ற சொல் பிற்காலத்தில் ‘மங்களம்’ என்ற பொருளைத் தந்து நின்றாலும் தொடக்கத்தில் மூலத் திராவிடத்தில் சிவப்பு, செம்மை என்ற பொருளையே தந்தது. அதனாலேயே தமிழில் ‘சிவந்தமேனியன்’ என்ற பொருள் சிவனுக்கு ஆகி நின்றது. ‘சிவ’ என்ற பெயர்தான் பிற்காலத்தில் ‘சிவன்’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். ஞாயிற்று வழிபாட்டைக்கூட சிவந்தமேனியன் வழிபாடு என்று கூறுவர். ஞாயிற்றைச் சிவன் என்று எண்ணும் வழக்கம் இருந்திருந்தால் சிலம்பு குறிப்பிடும் ஞாயிற்று வணக்கம் சிவ வணக்கம் என்பதில் ஐயமில்லை. அதுபோல இளங்கோவடிகள் குறிப்பிடும் மழைவழிபாடு என்பது இந்திர வழிபாடு என்று கொள்ளலாம். புறநானூறு (182), பரிபாடல் (8:33, 19:50), பரிபாடல் திரட்டு (2:97), நாலடியார் (346) ஆகிய நூல்கள் இந்திரனைக் குறிப்பிட்டுச் சென்றாலும் பிற தெய்வங்களுக்கு இருக்கும் இடம் இந்திரனுக்கு இல்லையென்றே கூறலாம். ஆரியக் குடியேற்றம் நடந்த காலத்தில் வருணன் மற்றும் இந்திரன் ஆகியோர் செல்வாக்கு இல்லாத தெய்வங்களாகவே இருந்துள்ளனர். இதிகாச புராண காலத்தில் இவர்கள் இடத்தைத் திரிமூர்த்திகள் பெற்றுக்கொண்டனர்.

சிந்துவெளியில் காணப்பட்ட சிவன் வேதத்தில் உருத்திரனாக உருமாறினாலும் பிற்பட்ட இலக்கியங்களில் குறிப்பாக ஸ்வேதாரண்ய உபநிடதத்தில் சிவன், உருத்திரன் ஆகியோரின் பண்புகள் இணைய, இதிகாச - புராண காலத்தில் சிவன் மேன்மைப்படுத்தப்படுகிறான். மகாபாரதம் கிருஷ்ணனின் முதன்மையைக் கூறும் நூலாகக் காணப்பட்டாலும் கூட, கிருஷ்ணன், அர்ச்சுனன் ஆகியோர் சிவனின் ஆதரவைப் பெற்றவர்களாக உள்ளமை சிவ வழிபாட்டின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. தாழ்ந்த சடையன், பிறை கங்கை ஆகியவற்றைச் சூட்டியவன், முக்கண்ணன் முதலிய சிவனது பல அம்சங்கள் தமிழகத்திலும் சிவ வழிபாட்டில் காணப்பட்டதை சங்கநூல்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் காணலாம். இதே செய்திகள் அவற்றுக்குப் பிற்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் காணப்படுகின்றன. இதனால் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இடம்பெற்ற ’சிவன்’ என்ற சொல் ஏன் சங்க நூல்களில் இடம்பெறவில்லை என்பது புதிராகவே உள்ளது.

சங்க காலத்தில் ‘சிவன்’ என்ற பெயர் இலக்கியங்களில் இடம்பெறாமைக்குப் பலவாறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. சங்கநூல்களின் கடவுள் கோட்பாடு பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவற்றில் தெய்வம், கடவுள் என்ற இருவேறு அம்சங்கள் காணப்படுகின்றன எனக்கூறி, தெய்வம் என்பது ஒரு நிலத்திற்குரிய தெய்வமாக மதிக்கப்பட, கடவுள் அதற்கப்பால் முழுமுதல் நிலையில் மதிக்கப்பட்டது என விளக்கம் தந்துள்ளனர். மாயோன், சேயோன், கொற்றவை ஆகியோர் ஒரு நிலத்திற்குரிய தெய்வங்களாக விளங்கியதால்தான் இந்நூல்களில் அத்தெய்வங்கள் இடம்பெற்றன. சிவன் முழுமுதற் கடவுள் என்னும் நிலையில் பேணப்பட்டதால் பிற தெய்வங்களைக் குறிப்பிட்டது போல, சிவன் அந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்பது அவர்களது கருத்து ஆகும். இக்கருத்தினை முற்றிலுமாக நிராகரிப்பதற்கும் இடமில்லை. காரணம் வரலாற்றடிப்படையில் நோக்கும்போது சிவன் அகில இந்தியாவிலும் முதன்மை பெற்ற தெய்வமாகப் பேணப்பட்டான். சிவன் பற்றிச் சங்க நூல்களில் காணப்படும் பின்வரும் வருணனைகள் இதனை உறுதிசெய்கின்றன. தொன்முது கடவுள் (மதுரைக்காஞ்சி-41), கடவுணிலை இய கல்லோங்கு நெடுவரை (பதிற்றுப்பத்து-43;6), காரியுண்டிக் கடவுள் (மலைபடுகடாம்-83), மழுவாணெடியோன் தலைவனாக (மதுரைக்காஞ்சி-455), ஆல்கெழு கடவுள் (திருமுருகாற்றுப்படை-256).

சங்க இலக்கியங்கள் சிவனை இவ்வாறு வருணித்தும் சிவன் என்ற பெயரை எடுத்தாளாததற்கு இன்னுமொரு காரணத்தையும் எடுத்துக்காட்டலாம். அதாவது முழுமுதற் கடவுளை அவரின் பெயர் கொண்டு அழைப்பதைச் சங்க இலக்கியகர்த்தாக்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு அழைப்பது அவர்களது தரத்தினைக் குறைப்பதாக அமையும் என அவர்கள் எண்ணியிருந்திருப்பது அதற்கொரு காரணமாக அமைந்திருக்கலாம். இதற்கு மற்றொரு சான்று இப்படி அமைகிறது: பௌத்தம் வளர்ச்சி அடைந்த தொடக்க காலகட்டத்தில் புத்தருக்குச் சிலை வடிப்பது என்பது அவரது புனிதத்தன்மையை, முதன்மையைக் குறைப்பதோடு மாசுபடுத்திவிடும் எனக்கருதிய பௌத்த மதத்தினர் சிலைக்குப் பதிலாகப் புத்தரின் பாதங்களைச் சிற்பமாகக் கற்களில் வடித்து வணங்கினர். பின்னர் கி.பி யின் தொடக்க காலத்தில்தான் புத்தருக்குச் சிலை வடிக்கப்பட்டது. சங்க இலக்கியவாதிகள் சிவன் பற்றிய வருணனைகளைத் தாம் படைத்த இலக்கியங்களில் குறிப்பிட்டாலும் கூட, அவரது பெயரைத் தமது இலக்கியங்களில் கையாளாமைக்கு இந்த மனப்பான்மைகூட காரணமாக இருக்கலாம்.

இதற்கு தற்காலத்தில் வழக்கிலிருந்து மறைந்த ஒன்றைக்கூடச் சான்றாகக் கூறமுடியும். தாய்வழிபாடு மேன்மையுற்றிருந்த தமிழகத்துக் குடும்பங்களில் ஆண்தான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தான். பெண்கள் தங்கள் கணவன்மாரை உயர்வு என்ற காரணத்தால் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. தமிழில் வெளிவந்துள்ள பழைய சினிமாக்களில் கூட மனைவி தன் கணவனை “சுவாமி’ என்றும் அதற்கு அடுத்த நிலையில் ’நாதா’ என்றும் அழைப்பதையே காணமுடியும். தாய் தந்தையைப் பெயர்சொல்லி அழைக்காதபோது அவர்களது பிள்ளைகளும் தந்தையைப் பெயர்சொல்லி அழைப்பதில்லை. இது தமிழ்ப் பண்பாட்டு மரபு. இதனாலேயே தமிழ்ப் பண்பாட்டைப் போற்றும் சங்க இலக்கிய நூல்களில் முழுமுதல் கடவுளான சிவன் பெயர் சொல்லி அழைக்கப் பெறாமல் முழுமுதல் தெய்வமாகவே விளங்குகின்றான் என்ற ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது.

பொதுவாகத் தமிழர்களுக்குக் கணிச்சியோன் என்ற பெயருக்குச் சொந்தக்காரன் சிவன் என்பது தெரிவதில்லை. மழுவேந்துவதற்கு முன்னரே சிவன் கணிச்சியை ஏந்தியவன். மழுவேந்திய சிவனைத்தான் மக்கள் சிற்பங்களில் காண்கின்றனர். கணிச்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி கணிச்சியோன் என்று பெயர் பெற்றிருந்த சிவன் தமிழர்களின் நினைவில் இல்லை; அதனால்தான் அத்தகைய சிற்பங்களும் இல்லை எனலாம். சிவனது இப்பெயரை இந்நூலாசிரியர் திரு. செந்தீ நடராசன் அவர்கள் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்காக அப்பெயர் குறித்த செய்தியைப் பலவாறு ஆராய்ந்து கருத்துகளை முன்வைத்துள்ளார். கல்வெட்டு ஆராய்ச்சியாளராகத் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் சிற்பங்கள் குறித்தும் ஆய்வு செய்து வரும் இந்நூலாசிரியர் ஒரு காலத்தில் புதைந்துபோன இத்தகையப் புதையல்களையும் தோண்டி எடுத்து ஒளிகொடுக்க முயற்சிக்கிறார். அவ்வாறு சிதறிப்போன புதையலில் கிடைத்துள்ள ஒரு சிறு பருக்கைதான் இக் கணிச்சியோன். திரு செந்தீ நடராசன் அவர்கள் மீண்டும் பல புதையல்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒளியேற்றுவதற்கு இக்கணிச்சியோன் வழிகாட்டும் என நம்பலாம். பதினாறு பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூல் 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் தரத்தைக் கொண்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இச்சிறு நூலை சிறுநூல் வரிசையில் ஒன்றாகச் சேர்த்து அழகாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனத்தை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

இம்மதிப்பீட்டிற்குக் கைகொடுத்த நூல்கள்:

1.      க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்- 1991

2.      தேவநேயன், தமிழர் மதம், 1972

3.      வி. கனகசபை, ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், 1962

4.      சி.க. சிற்றம்பலம், ஈழத்து இந்துசமய வரலாறு, 1996

5.      மயிலை சீனி வேங்கடசாமி, சைவ சமய வரலாறு (கட்டுரை) ஆய்வுக்கட்டுரைகள்-3, 2001

6.      K.R. Subramanian, The Origin of Saivism and its History in the Tamil land,1985

7. R.S. Gupte, Iconography of the Hindus Buddhists and Jains,1980

8. சங்க இலக்கிய நூல்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

ஈழத்தில் சைவம் : வி.துலாஞ்சனன்

ஒரு வரலாற்றுப் பார்வை

“நாம் இந்தியாவின் மலபார்க் கரையிலும் குமரிமுனையின் இருபுறமும் உள்ள தூத்துக்குடி, திருவிதாங்கோடு, கொல்லம், காயாங்குளம், கொச்சி, கொடுங்கல்லூர், கோழிக்கோடு, கண்ணூர் பகுதிகளிலும்1 மற்றும் சோழமண்டலக் கரை, இலங்கைத்தீவு என்பனவற்றிலுமுள்ள பாகன்களின் சிலை வழிபாடு பற்றிப் பார்ப்போம். ரொஜேரியஸ் சொல்வதன் படி, பிராமணர்களில் ஆறு வகைச் சமயப்பிரிவினர் இருக்கிறார்கள் – வைணவர், சைவர், சுமார்த்தர், சாருவாகர், பாசாண்டர், சாக்தர்2 . [….] முன்பு குறிப்பிட்ட இடங்களில் நான்கு வகைப் பிராமணர்கள் பரவலாக இருக்கிறார்கள். முதல் வகை சாருவாகர் […] இரண்டாம் வகை சுமார்த்தர் […] மூன்றாம் வகை வைணவர் […] நான்காம் வகை யோகிகள். [..] சிலர் விஷ்ணுவை தங்கள் முழுமுதலாகக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் இக்சோராவையே தங்கள் முழுமுதலாகக் கொள்கிறார்கள்.”

  • Phillipus Baldaeus

இது பதினேழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தென்னிந்தியா – இலங்கை பற்றி ஆய்வுகளை மேற்கொண்ட இடச்சு எழுத்தாளர் பிலிப்பஸ் பால்டியசின் (Phillipus Baldaeus) நூலின் ஒரு பகுதி. 1703இல் எழுதப்பட்ட அவரது நூலில் கேரளம், சோழமண்டலக் கரையோரம், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் எத்தகைய சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்பது கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இக்சோரா (Ixora – ஈசுவரன்) பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இக்சோராவையும் சிவலிங்கத்தையும் (Quivelingam) வழிபடும் சமயத்தை யோகிகளின் சமயம் என்றும் சைவம் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையைப் பொறுத்தவரை சைவ சமயத்துக்கும், அதன் முதன்மையான வழிபடு தெய்வமான சிவனுக்கும் நீண்ட வரலாறுண்டு. இலங்கையிலுள்ள சைவர்கள், திருமந்திரத்தை மேற்கோள் காட்டி ஈழத்தை “சிவபூமி” என்று சொல்வார்கள். வரலாற்று அடிப்படையிலும் பார்த்தால், இலங்கையில் மிகப்பழங்காலம் தொட்டே சிவவழிபாடும் சைவ சமயமும் நீடித்து வந்திருக்கின்றன. இங்கு கிடைக்கின்ற தமிழ் – சிங்கள – பாளி இலக்கியங்களையும், ஐரோப்பியர் குறிப்புகளையும், கல்வெட்டு – தொல்லியல் சான்றுகளையும் தொகுத்து நோக்கும் போது, ஈழ நாட்டில் சைவசமயம் எத்தகைய நிலையில் இருந்தது என்பதை மேலோட்டமாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இலங்கையில் கிடைத்துள்ள பொது ஆண்டுக்கு முற்பட்ட3 கல்வெட்டுக்கள், பிராமி எழுத்திலும் தமிழி எழுத்திலும் பொறிக்கப்பட்டவை. பிராமிக் கல்வெட்டுக்கள், சிங்களத்துக்கு முந்திய ஈழப்பாகத (அல்லது இலங்கைப் பிராகிருத) மொழியிலும் தமிழ்க் கல்வெட்டுகள் பழந்தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை வாசிக்கப்பட்டுள்ள தமிழிக்கல்வெட்டுகளில் கணிசமானவை நாகர்களுடன் தொடர்பானவை.

திருக்கோணமலையின் கரைசை எனும் தலத்திலுள்ள சிவலிங்கமொன்றில் பொறிக்கப்பட்டிருந்த “மணிணாகன்” எனும் தமிழி வாசகத்தை பேரா.சி.பத்மநாதன் அண்மையில் வாசித்துள்ளார். மணிநாகன் என்பது நாகர்கள் தங்கள் தெய்வத்துக்குச் சூட்டியிருந்த பெயர். பெருங்கற்கால மற்றும் ஆதி இரும்புக் காலத்துக்குப் பிந்தைய இலங்கையின் வழிபாட்டுச் சின்னங்களிலும் தொன்மையான சைவ – பௌத்த அடையாளங்களிலும் அந்தப்பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

பௌத்தமும் சைவமும் ஈழத்து நாகரிடையே பரவியபோது, தமது மணிநாகனின் பெயரையே சிவனுக்கும் புத்தனுக்கும் சூட்டியிருக்கின்றனர் என்பார் சி.பத்மநாதன். திருமுறைகளில் சிவனைக் குறிக்க மணிநாகன் என்ற சொல் பயன்படாவிடினும் சிவன் அணிந்த பாம்பைக் குறிக்க “மணிநாகம்” எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த வாசகம் பொறித்த சிவலிங்கம் கிடைத்த கரைசை, இலங்கையில் தலபுராணம் பாடப்பெற்ற முதல் இரு கோவில்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது (மற்றையது திருக்கோணேச்சரம்). “மணிணாகன்” வாசகம் பொறித்த பொபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இன்னொரு சிவலிங்கம் யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலும் கண்டறியப்பட்டுள்ளது.

நாகரின் தமிழிக்கல்வெட்டுகள் தவிர, ஈழப்பாகதத்தில் அமைந்த பிராமிக் கல்வெட்டுக்களில் அறுபதுக்கும் குறையாத இடங்களில் “சிவ” என்ற சொல் ஆட்பெயராக வருகின்றது. இந்த எல்லாப் பெயர்களுமே பௌத்தத் துறவிகளுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் தொடர்பானவை எனும் போதும், சிவன் எனும் பெயரைக் கொண்டோரில் சிலர் பிராமணர்கள் என்பதும் அறியக்கிடைப்பதால், இவர்கள் பௌத்தத்தைத் தழுவமுன்னர் சிவவழிபாட்டில் ஈடுபட்டு வந்தோர் என்ற ஊகத்தை சில அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். இலங்கை வரலாற்றைப் பாடும் மகாவம்சம் முதலிய பாளி இலக்கியங்களில் மூத்தசிவன், யட்டயால சிவன், மகாசிவன், சந்திரமுக சிவன் முதலிய மன்னர்களின் பெயர்கள் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கி வருகின்றன. இவர்களில் மூத்தசிவன் (பொமு 367 – 307), இலங்கையில் பௌத்தத்தை அறிமுகப்படுத்தியதாகக் கருதப்படும் அசோக மன்னன் காலத்துக்கு முந்தியவனாகக் காலம் கணிக்கப்படுகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்தசிவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்டு பண்டுகாபய மன்னன் (பொமு 437 – 367) தன் அரண்மனையில் சிவிகசாலை எனும் மண்டபத்தை அமைத்திருந்ததாக மகாவம்சம் பாடும். சிவிகசாலைக்கு “சிவலிங்கக்கோவில்” என்று பொருள் கூறுகிறது மகாவம்சத்தின் உரைநூலான வம்சத்தப் பகாசினி.

பொபி 274 – 301 வரை அனுராதபுரத்தை ஆண்ட மகாசேன மன்னன் மகாயான பௌத்தத்தைக் கடைப்பிடித்ததுடன், அவனால் கோகண்ண, ஏரகாவில, கலந்தனின் ஊர் ஆகிய மூன்று இடங்களில் அமைந்திருந்த பிராமணக் கோவில்கள் சிதைக்கப்பட்டு விகாரங்கள் அமைக்கப்பட்ட குறிப்பு மகாவம்சத்தில் வருகின்றது. அவை மூன்றும் சிவாலயங்கள் என்றும் அவற்றில் கோகண்ண என்பதை திருக்கோணமலை கோணேச்சரம் என்றும், ஏரகாவில என்பதை மட்டக்களப்பின் ஏறாவூர் என்றும் இனங்கண்டிருக்கிறார்கள்.

வரலாற்றுக் காலத்தில் மேற்கு இலங்கையில் இருந்த மன்னார் மாதோட்டமும் கிழக்கு இலங்கையில் இருந்த திருக்கோணமலையும் புகழ்வாய்ந்த வணிகத் துறைமுகங்களாக இருந்தன. மாதோட்டமானது, அனுராதபுரத்தை ஊடறுத்து ஓடிவந்து கடலில் பாய்ந்த அருவியாற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருக்கோணமலை, மத்திய கால இலங்கைத் தலைநகரான பொலனறுவையை நெருங்கிப் பாயும் இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையின் கழிமுகத்தில் காணப்பட்டது. இலங்கைத்தீவினுள் நுழையும் பிரதானமான இந்த இரண்டு நீர்வழி மார்க்கங்களும் துவங்கிய துறைமுகங்களில் கேதீச்சரம், கோணேச்சரம் எனும் இருபெரும் சிவாலயங்கள் அமைந்திருந்தன. இவற்றை பொபி 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரும் அப்பரும்4 மற்றும் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரும் பாடியிருப்பதால், இவை அக்காலத் தமிழகத்திலும் புகழ்பெற்றிருந்ததை உய்த்துணரலாம்.

தாதுவம்சம் எனும் பாளிநூல், மாதோட்டத்தில் மேகவண்ண மன்னன் காலத்தில் (301 – 328) ஒரு சிவாலயம் அமைந்திருந்ததைச் சொல்கிறது. மாதோட்டத்தின் சிங்களப் பெயர் மகாதித்த (வடமொழி: மகாதீர்த்தம்) என்று குறிப்பிடப்படுவதாலும், சில கல்வெட்டுக்களில் மாதோட்டத்தில் பசுவதை புரிந்தோர் பெறும் பாவம் பற்றிய வரி காணப்படுவதாலும், மாதோட்டம் பண்டைக் காலத்தில் சிங்களவராலும் போற்றப்பட்டது என்பதும், மகாதீர்த்தக்கரையான அங்கு நீராடுவது புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை காணப்பட்டதும் தெரியவருகின்றது. பின்னாளில் கடல் நீரோட்ட மாறுபாடுகளாலும், அருவியாறு திசைமாறி ஓடியதாலும் மாதோட்டத் துறைமுகம் மண்மூடி மறைந்துபோனது. அதன் எச்சமே இன்றுள்ள பாலாவித் தீர்த்தக்குளம்.



__________________


Guru

Status: Offline
Posts: 25081
Date:
Permalink  
 

 

இலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தலைநகராக நீடித்த அனுராதபுரத்திலும் சிவவழிபாடு இடம்பெற்று வந்திருக்கிறது. அனுராதபுரம் விஜயாராம விகாரத்துக்கு அருகே கண்டறியப்பட்ட சிவாலயமொன்றின் இடிபாடுகளுக்கு மத்தியில் இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டன. அவை “குமாரகணத்துப் பேரூர்” எனும் சபையினர் சேக்கிழான் சங்கன், செட்டி சேக்கிழான் சென்னை என்னும் இருவரிடம் கோவிலில் விளக்கெரிக்க ஈழக்காசு பெற்றமையைத் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டும் சிவாலய இடிபாடுகளும் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியாகக் காலம் கணிக்கப்படுகின்றன என்பதும், அப்போது இலங்கையில் சோழராட்சி ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 993இற்கு முந்தையதாகக் காலம் கணிக்கப்படும் இராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டு திருக்கோணமலை நிலாவெளியிலும், இன்னொரு கல்வெட்டு துண்டமான நிலையில் கோணேச்சரத்திலும் கண்டெடுக்கப்பட்டன. நிலாவெளிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “திருக்கோணமலை” என்ற இடப்பெயர் ஆயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் அப்பழம்பதியின் பெயராக நீடிக்கின்றது.

ஆனால் அதே 993இல் இலங்கை மீதான இராஜராஜ சோழனின் பெரும்படையெடுப்பை அடுத்து, இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பகுதி சோழராட்சியின் கீழ் சென்றது. இலங்கையிலிருந்து தஞ்சைப்பெருங்கோவிலுக்கு இலுப்பை எண்ணெயும் நெல்லும் ஏற்றுமதி செய்யப்பட்டதை அக்கோவில் கல்வெட்டொன்று சொல்லும். அப்பொருட்களை ஏற்றுமதி செய்த கணக்கன் கொட்டியாரம் மாப்பிசும்பு கொட்டியாரம் எனும் இரு நிருவாகப் பிரிவுகள், சோழர் காலத்துக்கு முன்பின்னான சிங்களக் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கண்டபடி, இன்றைய திருக்கோணமலை சேறுவில் மற்றும் நீலாப்பளை ஆகிய இடங்களை முறையே அண்டி அமைந்திருந்தன என்பது தெரியவந்திருக்கிறது. கணக்கன் கொட்டியாரம் அல்லது கிணிகம் கொத்தசாரத்தைச் சேர்ந்த சேறுவில்லில் இன்று காடுமண்டிப் பாழடைந்து கிடக்கும் திருமங்கலாய் சிவன் கோவில் சூழலிலும் பல சோழர் காலச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழரால் கைப்பற்றப்பட்ட வட இலங்கையில் மாதோட்டத்துக் கேதீச்சரம் “இராஜராஜ ஈச்சரம்” என்ற பெயரைப் பெற்றுத் திருப்பணி கண்டது. அங்கு ஒன்பதாம் நூற்றாண்டில் வைகாசி விசாகத்தை இறுதியாகக் கொண்டு ஏழு நாள் திருவிழா இடம்பெற்றதை ஒரு கல்வெட்டு சொல்லும். மாதோட்டத்துக்கு அக்கரையில் இருந்த இராமேச்சரத்தின் தாக்கத்தில், மாதோட்டத்தில் திருவிராம ஈச்சரம் என்ற பெயரில் இன்னொரு சிவாலயமும் இக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சோழர்களின் பின்னணியில் இலங்கையில் குடியேறிய தென்னிந்திய வணிக கணங்களால் பல்வேறு புதிய நகரங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. திசையாயிரத்து ஐநூற்றுவர், வளஞ்செயர் முதலியோர் இத்தகைய புகழ்பெற்ற வணிககணங்கள். கடல்வழி வாணிகத்தில் பாதுகாப்பையும் நிலைபேற்றையும் உறுதிப்படுத்த இவர்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த வணிகர்களும் போர்வீரர்களும் கடற்படையினரும் கப்பல் மாலுமிகளும் அடங்கியிருந்தனர் என்பது தெரிகின்றது.

திருக்கோணமலைக்கு வடகிழக்கே “பதி” என்று அழைக்கப்பட்ட இடம் இப்படி வணிககணங்களின் குடியிருப்புகள் மூலம் வளர்ச்சி கண்ட நகராகும். இன்று “பதவியா” என்று அறியப்படும் பதி நகரத்தில் ஐந்து சிவாலயங்களின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான கோவில் “இரவிகுலமாணிக்க ஈச்சரம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இரவிகுலமாணிக்கம் என்பது இராஜராஜசோழனின் பட்டங்களுள் ஒன்று. அம்மன்னனின் ஆட்சிக்காலத்தில் 1005ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இங்கு கிடைத்தது. அங்கு மூன்றாம் சிவாலயம் என அடையாளமிடப்பட்ட கோவிலின் பெயர் “வலகழி உத்தமர் கோவில்” என்பது இன்னொரு கல்வெட்டால் தெரியவந்திருக்கிறது. பதவியாவில் அமைந்துள்ள புத்தனேஹெல எனும் பௌத்தக்குகைகளின் நடுவே சைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் குகையொன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பொலனறுவைக்கு வடக்கே உள்ள மெதிரிகிரி எனும் ஊர், அப்போது நித்தவினோதபுரம் என்று அழைக்கப்பட்டதுடன், அங்கு பண்டிதசோழ ஈச்சரம் என்ற பெயரில் ஒரு சிவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. குருநாகலுக்கு அருகே ஆதகடை எனும் இடத்தில் இராஜராஜசோழனுக்கு முன்பு ஆண்ட அவனது சிற்றப்பன் பெயரில் “உத்தமசோழ ஈச்சரம்” அமைந்திருந்தது. மட்டக்களப்பில் இதே காலத்தில் அமைந்திருந்த இன்னொரு சிவாலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு திருவுருவம் நிறுவப்பட்டதை அங்கு இடச்சுக் கோட்டையில் கிடைத்த கல்வெட்டொன்று சொல்கின்றது.

நிக்கவரெட்டிக்கு அருகே உள்ள மாகலில் “விக்கிரம சலாமேக ஈச்சரம்” என்ற பெயரில் ஓர் சிவாலயம் காணப்பட்டது. இந்தக்கோவிலுக்கு குலோத்துங்க சோழனின் மகளும் சிங்கள இளவரசனான மானாபரணனை மணந்திருந்தவளுமான சுந்தமல்லியாழ்வார் எனும் சோழ இளவரசி தானம் வழங்கியுள்ளாள். அக்கோவில் இடிபாடுகள் இன்று அருகில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரமொன்றில் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளன.

பதினோராம் நூற்றாண்டில் இலங்கையில் நாலாதிக்கிலும் இவ்வாறு புகழ்பெற்றிருந்த சிவாலயங்களுக்கெல்லாம் மேலாக, அப்போதைய சோழரின் தலைநகரான பொலனறுவையில் எட்டுக்குக் குறையாத சிவாலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பழைமையும் பெருமையும் வாய்ந்தது, முதலாம் இராஜேந்திர சோழனால் அவன் தாய் நினைவாக கட்டப்பட்டதாகக் கருதப்படும் “வானவன் மாதேவி ஈச்சரம்”. இலங்கையில் இன்றும் பெருமளவு சிதையாது நீடிக்கும் மிகப்பழைய சைவக்கோவில் கட்டுமானம் இது தான். பொலனறுவையில் ஐந்தாம் சிவாலயம் என்று அடையாளமிடப்பட்டுள்ள இன்னொரு கோவில் திசையாயிரத்து ஐநூற்றுவர் பெயரில் “ஐநூற்றுவ ஈச்சரம்” என்று அறியப்பட்டதை அங்கு கிடைக்கும் இன்னொரு கல்வெட்டுச் சொல்லும். பொலனறுவையின் எட்டுச் சிவாலயங்களிலும் கிடைத்த வெண்கல மற்றும் கருங்கற் திருவுருவங்களில் பிள்ளையார், முருகன், சிவன், அம்மன், நாயன்மார், சூரியன், திருமால் உள்ளிட்ட கலையழகு மிகுந்த ஏராளமான சிலைகள் அடங்குகின்றன.

சோழர் காலத்தில் ஏனைய இந்திய மதங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அனுராதபுரத்தில் “மும்முடிச்சோழ விண்ணகரம்” என்ற பெயரில் ஒரு பெருமாள் கோவில் அமைந்திருந்தது. பொலனறுவையில் இன்று மூன்று பெருமாள் கோவில்களின் இடிபாடுகளைக் காணமுடிகின்றது. நானாதேசி வணிகர்கள் கர்நாடகத்தின் “ஐகொலே” என்ற நகரில் கோவில்கொண்டிருந்த கொற்றவையை “ஐயம்பொழில்புர பரமேசுவரி” என்ற பெயரில் குலதெய்வமாக வழிபட்டதுடன், அவளுக்கு தங்கள் வணிகப் பட்டினங்களில் எல்லாம் கோவில்கள் அமைத்திருந்தனர். இந்தக் கொற்றவைக்கு பொலனறுவை, கல்லுத்துறை, அனுராதபுரம் முதலிய இடங்களில் கோவில்கள் எடுப்பிக்கப்பட்டிருந்தன. சுமார்த்த மதத்தவரான பிராமணர்களுக்கு திருக்கோணமலை கந்தளாயில் “இராஜராஜ சதுர்வேதிமங்கலம்” எனும் பிரமதேயம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. சோழராட்சியின் பின் அது “விஜயராஜ சதுர்வேதி மங்கலம்” எனும் பெயரைப் பெற்றுகொண்டது. அனுராதபுரத்துக்கு அருகே இருந்த மகாகிரிந்தகாமத்திலும் “சயங்கொண்ட சலாமேக சதுர்வேதி மங்கலம்” எனும் பிராமணர் குடியிருப்பு ஒன்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் அமைந்திருந்தது.

கோணேச்சரம் பற்றி மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட சோழக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பொலனறுவை தலைநகராக வளர்ச்சி கண்ட சோழராட்சிக் காலத்தில், அந்நகருக்கு நுழையும் பிரதான கடல்வழி மார்க்கமாக இருந்த திருக்கோணமலை முக்கியமான வர்த்தக நகராக புகழ்பெற்றதுடன், அங்கு அமைந்திருந்த திருக்கோணேச்சரம் “மச்சகேசுவரம்” என்ற பெயரில் பல சோழத் திருப்பணிகளையும் கண்டது. பொலனறுவையை ஆண்ட சோழ அரசின் பிரதிநிதி “சோழ இலங்கேசுவரன்” என்ற பட்டத்தைத் தரித்திருந்ததோடு, கோணேச்சரத்தையும் போற்றி வழிபட்டு வந்திருக்கிறான். இப்படி சோழர் காலத்தில் அக்கோவிலுக்கென திருப்பணிகள் புரிந்த ஒன்று அல்லது பல சோழ இலங்கேசுவரர் பற்றிய கதைகள் சேர்ந்து கோணேச்சரத்தில் திருப்பணிகள் செய்த “குளக்கோட்டு மகாராசா” என்ற மன்னன் பற்றிய நம்பிக்கைகள் இலங்கைத் தமிழர் மத்தியில் நீடிக்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் இலங்கை வந்த சோழகங்கன் எனும் இளவரசனொருவனை குளக்கோட்டனாக அடையாளம் காண்பது வழக்கம். எனினும் குளக்கோட்டன் யார் என்பதை சரியாக உறுதிப்படுத்த போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

சோழர் காலத்திலும் தென்னிலங்கையில் நீடித்திருந்த சிங்கள அரசான உரோகணத்திலிருந்து 1070ஆம் ஆண்டு படையெடுத்து வந்த முதலாம் விஜயபாகுவால் இலங்கை. சோழராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டது. எனினும் தென்னகத்து வணிகக் கணங்களும் சோழரின் வேளைக்காரப் படையினரும் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தனர் என்பது முதலாம் பராக்கிரமபாகு மன்னன் காலம் வரையான தொல்லியல் இலக்கியச் சான்றுகளிலிருந்து தெரியவருகின்றது.

1111இல் பொலனறுவையின் அரசுக்கட்டிலில் ஏறிய முதலாம் விஜயபாகுவின் மகனான விக்கிரமபாகு, முறைப்படி முடிசூடிக்கொள்ளாமல் தனக்கு முன் ஆண்ட தன் சிறிய தந்தை ஜயபாகுவின் ஆட்சியாண்டைக் குறிப்பிட்டே கல்வெட்டுக்களை வடித்தான். விக்கிரமபாகு முடிசூடாமைக்கான காரணம் அவன் சைவனாக இருந்தது தான் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் முடிவு. விக்கிரமபாகு சைவனாக இருந்தான் என்பதற்கு, அவனால் வெளியிடப்பட்ட கஹம்பிலியாவைச் செப்பேட்டிலுள்ள சைவச்சார்பான வரிகளை உதாரணம் காட்டுவார்கள். விக்கிரமபாகுவைப் போலவே அவனது மகனான இரண்டாம் கஜபாகுவும் பௌத்த முறைப்படி முடிசூடாது தன் பாட்டன் ஜயபாகுவின் ஆட்சியாண்டையே கல்வெட்டுக்களில் குறிப்பிட்டான். தன் ஆட்சிக்காலத்தில் பல தமிழ்க்கல்வெட்டுகளையும் வெளியிட்டுள்ள கஜபாகு, தனது மைத்துனன் முதலாம் பராக்கிரமபாகுவால் (1153 – 1186) தோற்கடிக்கப்பட்டபின்னர் தன் இறுதிக்காலத்தை கந்தளாயில் கழித்ததை மகாவம்சம் சொல்கின்றது. கஜபாகு மன்னன் திருக்கோணேச்சரத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி தட்சிணகைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு முதலிய திருக்கோணமலை இலக்கியங்கள் பாடுகின்றன.

பராக்கிரமபாகுவிற்குப் பின்னர் இலங்கையில் கலிங்க – பாண்டிய வம்சங்களுக்கிடையே ஆட்சியுரிமை பற்றிய முரண் ஏற்பட்டுவிடுவதால், அரசியல் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இக்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆசீர்வாதத்தோடு 1215ஆம் ஆண்டு படையெடுத்த கலிங்க மாகோன், சிங்களவருக்கும் பௌத்த சமயத்தும் பெருங்கேடுகளை விளைவித்த கொடுங்கோலனாக வர்ணிக்கப்படுகின்றான். மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள திருக்கோவில் முருகன் கோவிலிலும், கொக்கட்டிச்சோலை சிவன் கோவிலிலும் காலிங்க மாகோன் பற்றிய பல்வேறு தொன்மங்கள் நிலவுகின்றன. இவ்விரு கோவில்களும் சோழராட்சிக்கும் மாகோன் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என ஊகிப்பதற்கு பல சான்றுகள் கிடைக்கின்றன. இக்கோவில்களின் தொன்மங்களில் மாகோன் பௌத்தர், சமணர், வைணவர் முதலிய சமயத்தாருக்கு விளைவித்த இன்னல்களும் நினைவுகூரப்படுவதால், மாகோன் பற்றி மகாவம்சம் கூறும் விடயங்கள் உண்மையாகலாம்.

ஆனால் சுமார் 40 ஆண்டுகள் இலங்கையை ஆளும் மாகோன் தன் ஆட்சியின் பிற்காலத்தில் அமைதியான சூழலையே நாட்டில் உருவாக்கியிருந்தான் என ஊகிக்கலாம். மாகோனின் படைகள் பாசறை அமைத்திருந்த மானாமத்த, குருந்தி முதலிய இடங்கள் பற்றிய குறிப்புகள் பாளி இலக்கியங்களில் வருகின்றன. மானாமத்த என்பது இன்றைய திருக்கோணமலை கிவுலக்கடவலைப் பகுதி என இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் சிதைந்துபோன சோழர் காலச் சிவாலயமொன்றும் கல்வெட்டொன்றும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன. குருந்தி என்பது, எண்பட்டைச் சிவலிங்கம் கிடைத்ததாக இன்று இலங்கை அரசியலில் சர்ச்சைக்குள்ளாகிவரும் முல்லைத்தீவு குருந்தனூர் மலையாக இனங்காணப்படுகின்றது.

மாகோனின் ஆட்சியின் இறுதியில் சாவகத்திலிருந்து படையெடுத்து வந்த சந்திரபானுவால் பொலனறுவை அரசு வீழ்ச்சி கண்டபின்னர் இலங்கையில் பலம்வாய்ந்த மைய அரசுகள் உடைந்து பிராந்தியச் சிற்றரசுகளே குறுகிய நிலப்பரப்புகளில் ஆண்டுவந்தன. இந்தப் பிராந்திய அரசுகளில் சற்று பெரிய நிலப்பகுதிகளை ஆண்ட யாழ்ப்பாண அரசு, குருநாகல் அரசு, யாப்பகூவை அரசு, கம்பளை அரசு என்பன முக்கியமானவை ஆகும்.

14ஆம் நூற்றாண்டில் கிழக்கே திருக்கோணேச்சரமும் தெற்கே மாத்துறை தேனவரை நாயனார் கோவிலும் மிகப்புகழ் பூத்தனவாகத் திகழ்ந்தன. தேனவரை நாயனார் கோவில் திருமால் கோவிலாக இருந்தது. எனினும் அங்கு கிடைத்துள்ள நந்தி, சிவலிங்கம் என்பன அக்கோவிலருகே ஒரு சிவாலயம் அமைந்திருந்தமைக்கான ஆதாரமாகின்றன. தேனவரை நாயனார் கோவிலுக்கு அருகில் இன்று கல்வீடு (கல்கே) என்று அழைக்கப்படும் கட்டட இடிபாடு சைவக்கோவிலொன்றின் கருவறை வேலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதை இங்கு ஒப்புநோக்கலாம்.

வடக்கே யாழ்ப்பாண அரசர்கள் கோணேச்சர இறைவன் மீது பெரும்பக்தி கொண்டிருந்ததையும், தென்கயிலையான கோணேச்சரம் நினைவாக நல்லூரில் கைலாசநாதர் கோவில் அமைக்கப்பட்டதையும் கைலாயமாலை எனும் இலக்கியம் பாடுகின்றது. அங்கு பண்டுதொட்டே கீரிமலை நகுலேச்சரம் முக்கியமான வழிபாட்டுத் தலமாக நீடித்திருந்தது. யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் தங்கள் பூர்விகமாக இராமேச்சரத்தைக் கருதியதுடன் சிவனது ஊர்தியான இடபத்தையே தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர்.

கொழும்புக்கு அருகே சேர நாட்டு அளகைக்கோனால் பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட கோட்டை அரசில் சிவாலயம் அமைந்திருந்ததை சிங்களத்தூது இலக்கியங்களான “சந்தேச” பாடல்கள் பாடுகின்றன. யாழ்ப்பாண மற்றும் கோட்டை அரசர்கள் முத்துக்குளிக்கும் துறையாக விளங்கிய சிலாபத்துக்கு அருகே கோட்டை அரசனான ஆறாம் பராக்கிரமபாகுவால் (1412-1467) முன்னேச்சரம் எனும் சிவாலயம் திருத்திக் கட்டப்படுகின்றது. கோட்டை அரசிலிருந்து பிரிந்து உருவான சீதாவக்கை அரசால் நிருமாணிக்கப்பட்டிருந்த பழைய ஆலயமொன்றின் இடிபாடுகளை இன்றும் அவிசாவளையில் காணலாம். இன்று “பெரண்டி” என்று அறியப்படும் அக்கோவில் சிவவடிவமான “பைரவ ஆண்டிக்காக” அமைக்கப்பட்டதாக ஊகிக்கப்படுகின்றது.

14ஆம் நூற்றாண்டு அளவில் தமிழிலும் சிங்களத்திலும் “ஆண்டி” என்றும், பால்டியசால் “யோகி” என்றும் இனங்காணப்பட்ட சைவ சன்னியாசிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு யாத்திரை வந்துகொண்டிருந்தனர். கதிர்காமம், கோணேச்சரம், சிவனொளிபாதமலை என்பன அவர்களது முக்கியமான யாத்திரைத்தலங்களாக விளங்கின. மகாவலி கங்கை சமனொளி மலையடிவாரத்தில் ஊற்றெடுப்பதாகப் பாடும் 13ஆம் நூற்றாண்டு தமிழக சைவ இலக்கியமான நம்பி திருவிளையாடற் புராணத்திலும் 16ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியமான கைலாச புராணத்திலும் காணலாம். சிவத்தலமான கோணேச்சரத்தில் கடலில் கலக்கும் மகாவலி கங்கை, சிவனொளிபாத மலை அடிவாரத்திலேயே ஊற்றெடுப்பதாக சைவரிடமும் நம்பிக்கை நிலவியதால் அம்மலையும் சிவனது பாதங்கள் பதிந்த மலையாக வழிபாட்டுக்குரியதாயிற்று.

மணிமேகலை இலக்கிய காலம் தொட்டு பௌத்தத் தலமாக விளங்கிய சமனொளிபாதம், சைவ ஆண்டிகளின் தொடர்ச்சியான யாத்திரைகளால் சைவத்தலமாகவும் மாறியிருந்தது எனத் தெரிகிறது. சீதாவாக்கை அரசின் காலத்தில் (1521 – 1594) ஒரு கட்டத்தில் சிவனொளிபாதமலையை நிருவகிக்கும் பொறுப்பும் ஆண்டிகளிடமே கையளிக்கப்பட்டதாகவும் கண்டி அரசனான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்திலேயே (1747 – 1782) பௌத்த பிக்குகளிடம் கைமாறப்பட்டதாகவும் ஒரு சிங்களக்குறிப்பு தெரிவிக்கின்றது.

இக்காலத்தில் சிவன் சிங்களவரின் வழிபாட்டுக்குரிய பௌத்த தேவர்களில் ஒருவராகவும் இடம்பிடித்துக்கொண்டார். “இசுரு தெவி” (வடமொழி: ஈஸ்வர தேவன்) என்ற பெயரில் சிவன் தொடர்பான நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் சிங்கள இலக்கியங்களில் இடம்பெறலாயின. அதேவேளை சிங்களப் பண்பாட்டுடனும் தமிழகத்தவர் நெருங்கிய உறவுகளை இக்காலத்தில் பேணிவரலாயினர். சிவாலயங்களில் தேவரடியார் ஆடிய நடனங்கள் தேசி, வடுகு, சிங்களம் எனும் மூன்று வகைகளில் பயிற்றுவிக்கப்பட்டன. இவை முறையே தமிழ்நாட்டு, வடநாட்டு, இலங்கை நடன மரபுகளைப் பின்பற்றிக் கற்பிக்கப்பட்டவை என்று கொள்ளலாம். சிவாலயங்களில் இறுதி வழிபாட்டை ஏற்கும் சண்டேசுவரர் எனும் தெய்வத்துக்கான உருவவியல் சிங்கள தேசத்தில் மட்டும் மாறுபடும் என்ற குறிப்பு சிவாகமங்களில் காணப்படுகின்றது.

இறுதியாக, இலங்கையில் நிலவும் சைவத்தை ஈழத்துச் சைவம் என்று தமிழகச் சைவமரபிலிருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்கு அதற்கு ஏதும் தனித்துவங்கள் உள்ளனவா?

ஆம், ஈழத்தமிழ்ச் சைவ மரபின் தனித்துவமாக நான்கு சான்றுகளைச் சொல்லலாம்.

முதலாவது, சைவ சித்தாந்த அறிஞரான நெல்லை மாதவச் சிவஞான முனிவரால் (1753 – 1785), சமயங்கள், அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்று தலா ஆறு வீதம் பிரிக்கப்பட்டு, அந்த இருபத்து நான்கு சமயங்களிலும் மேலானதாக சைவ சித்தாந்தம் நிலைநிறுத்தப்படுகிறது. ஆனால் இலங்கைச் சைவ அறிஞரான பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை இந்த வகைப்பாட்டை மறுக்கிறார். பழஞ்சைவ நூல்களில் அகம், புறம் எனும் இரு பிரிவினைகள் மட்டுமே உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், பதினான்கு சைவசித்தாந்த நூல்களில் கண்டிக்கப்பட்ட சில சைவப்பிரிவுகள் அகச்சமயமாக காட்டப்பட்டுள்ளதையும், அந்நூல்களில் கண்டிக்கப்படாத வேறு சைவப்பிரிவுகள் அகப்புறம் என்று சற்று அப்பால் வகைப்பிரிக்கப்பட்டுள்ளமையையும் அவர் எடுத்துக்காட்டுகிறார். சைவத்தின் அகம் – புறம் எனும் சமய வகைப்பாட்டை காலத்துக்கேற்ப இற்றைப்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்திய முதற்குரல் இப்படி ஈழத்திலிருந்தே எழுந்தது.

இரண்டாவது, சித்தாந்த நூலான சிவஞானசித்தியாருக்கு யாழ்ப்பாணத்தவரான ஞானப்பிரகாச முனிவர் செய்த உரையை தமிழகத்து சைவ சித்தாந்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது உரையைக் கொண்டு அவரது தத்துவங்களும் ப“சிவசமவாதம்” எனும் சைவப்பிரிவைச் சேர்ந்தவராகவே அவர்கள் வகைப்பிரிக்கின்றனர். ஆனால் பண்டிதர் மு.கந்தையா ஞானப்பிரகாச முனிவரை ஏன் சிவசமவாதியாகக் கருதமுடியாது என்பதையும், அவரை சைவசித்தாந்தியாகவே கருதமுடியும் என்பதையும் போதுமான சான்றாதாரங்களுடன் முன்வைக்கின்றார்.

மூன்றாவது ஈழத்துச் சைவ மரபில் நாட்டார் முறைப்படி வழிபடப்படும் தெய்வங்களின் சைவச்சார்பு. திருமாலும் ஈழத்தில் சைவமரபுப்படியே வழிபடப்பட்டு வருகிறார். நாகதம்பிரான், வைரவர் ஆகியோர் ஒரேநேரத்தில் நாட்டார் தெய்வங்களாகவும், ஆகமவழிப்பட்டு மேல்நிலையாக்கப்பட்ட சைவக் கடவுளராக தனிக்கோவில் கட்டி வழிபடப்படும் மரபும் உண்டு. வைரவருக்கும் நாகதம்பிரானுக்கும் சிறப்பான இந்த வழிபாட்டு முறை தமிழ்நாட்டில் இல்லை, அல்லது மிகக்குறைவு. கண்ணகி, மாரி உள்ளிட்டோரை சிவசக்தியாகப் பாவித்து வழிபடும் மரபும் இந்நாட்டின் கிராமிய வழிபாட்டுக்குள்ளது.

நான்காவது, ஈழத்துக்குச் சிறப்பான வீரசைவம். வீரசைவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வசித்து வருகிறார்கள். கிழக்கு இலங்கையில் பரவலாக வாழும் வீரசைவர் ஆந்திரத்து ஸ்ரீசைலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக தம்மை சொல்லிக்கொள்கிறார்கள். கலிங்க மாகோனோடு இலங்கைக்கு வந்தததாகக் கூறப்படும் இவர்களிடம் தமிழக வீரசைவர்களைப் போல இலிங்கத்தை மார்பில் அணிந்து கொள்ளும் வழமையும் காணப்படுகின்றது. வீரசைவருக்குத் தனித்துவமான வேறு மரபுகள் இங்கு சமகாலத்தில் மருவிச்சென்றாலும், அவர்களின் சமய வகிபாகம் ஈழத்துக் கீழைக்கரையில் முற்றாக மறையவில்லை எனலாம்.

ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் கோணேச்சரம், கேதீச்சரம் முதலிய சிவாலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. சைவத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களால் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. பல சவால்களைக் கடந்து பல தனித்துவங்களுடன் நீடிக்கும் ஈழத்துச் சைவம் இன்றும் இந்துத்துவம் சார்ந்த பொது “இந்து” அடையாளத்துக்குள் தன்னை முற்றாகக் கரைக்காமல் ஓரளவுக்கேனும் தன் சுயத்தைத் தக்கவைத்துள்ளது எனலாம்.

௦௦௦

அடிக்குறிப்புகள்

[1]Tutecoryn, Trevanor, Coulang, Calecoulang, Cochin, Cranganor, Calecut, Cananor.
[2] Wesitnouwas, Seivia, Smaerta, Schaerwaeka, Pasenda, Tscheczea. உச்சரிப்புத் தடுமாற்றம் தென்படுவதால் இறுதிப்பிரிவு சாக்தம் தானா என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை.

[3] பொது ஆண்டு (Common Era  – CE) – கிறிஸ்து ஆண்டு; பொமு – பொது ஆண்டுக்கு முன் (BCE), பொபி – பொது ஆண்டுக்குப் பின் (CE)

[4] அப்பரின் பாடல்களில் கேதீச்சரமும் கோணேச்சரமும் “தெக்காரும் மாகோணத்தானே”, “கேதீச்சரம் மேவினார் கேதாரத்தார்” என்றவாறு நேரடியாகப் பாடப்படாமல் வேறு தலங்களின் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்:
Baldeus, P. (1672). A True and Exact Description of the most Celebrated East India Coasts of Malabar and Coromandel as also of the Isle of Ceylon, Amsterdam.
பத்மநாதன், சி., (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் (கிமு.250-கி.பி.300), கொழும்பு : இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
பத்மநாதன், சி. (2000). இலங்கையில் இந்து கலாசாரம் பகுதி ஒன்று, கொழும்பு: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

 
 
வி.துலாஞ்சனன்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard