New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்
Permalink  
 


திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

 
FB_IMG_1491925807705.jpg

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.
வாழும் வழிமுறை, அறநெறி ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சி

                          பரமாத்மா


நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதிமூன்று, பதினைந்தாவது அத்தியாயங்கள் உறுதி செய்கின்றன.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
(திருக்குறள் 3)

“இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.”
எல்லா உலகங்களுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளாகிய ஆதிபகவன் இதயத்திலிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனை “பரமாத்மா” என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே “வீடு” என்பது நிலையான அழிவற்ற உலகமாகிய கோலோக விருந்தாவனத்தை குறிக்கிறது.

பகவத் கீதை (13.23) கூறுகிறது:
உபத்ரஷ்டானு மந்தா சபர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோதேஹே ’ஸ்மின் புருஷ: பர:

“இந்த உடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்கு பவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.”

ஜடத்தளையில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து பரமாத்மாவிடம் திரும்புவானாகில், அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார். தனிப்பட்ட ஜீவாத்மா மற்றோர் உடலுக்கு மாற்றமடைவது, அவனுடைய எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும், பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்காணும் ஸ்லோகம் அதனை உறுதி செய்கின்றது.

கர்மணா தைவ-நேத்ரேணஜந்துர் தேஹோபபத்தயே
ஸ்த்ரியா: ப்ரவிஷ்ட உதரம்பும்ஸோ-ரேத: கணாஷ்ரய:

“தன்னுடைய செயல்களின் விளைவினாலும் முழுமுதற் கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில் அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

ஒரு நண்பன் மற்றொரு நண்பனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைப் போல பரமாத்மா அணு ஆத்மாவின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறார். முண்டக உபநிஷத், ஷ்வேதாஷ்வதர உபநிஷத் போன்ற வேத நூல்கள், ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழமைப் பறவைகளுக்கு ஒப்பிடுகின்றன. அப்பறவைகளில் ஒன்று (தனி அணு ஆத்மா) மரத்தின் கனிகளை உண்கிறது, மற்றதோ (பரமாத்மாவான கிருஷ்ணர்) தனது தோழனை வெறுமனே நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தில் ஒரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை ஜடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது. மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமனே நோக்கிக் கொண்டுள்ளது. கிருஷ்ணர் சாட்சிப் பறவை, ஜீவன் உண்ணும் பறவை. இருவரும் நண்பர்களே என்றபோதிலும் ஒருவர் எஜமானர், மற்றவர் சேவகன். இந்த உறவை அணு ஆத்மா மறந்து விடுவதே, மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அவன் தனது நிலையை மாற்றிக்கொள்வதற்கு காரணமாகிறது. ஜீவ பறவை ஜடவுடல் என்னும் மரத்தில் கடினமாகப் போராடிக் கொண்டுள்ளான். எனினும், அறிவுரைகளைப் பெறும் நோக்கத்துடன் தானே முன்வந்து கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனனைப் போல, தொண்டனான ஜீவ பறவை தனக்கு அருகிலுள்ள பறவையை உன்னத ஆன்மீக குருவாக ஏற்கும்போது, உடனடியாக அவன் எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபடுகிறான். முண்டக உபநிஷத் (3.1.2), ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (4.7) இரண்டுமே இதை உறுதிப்படுத்துகின்றன.

தனது நித்திய நண்பனான கிருஷ்ணரை நோக்கி முகம் திருப்பிய அர்ஜுனன் அவரிடமிருந்து பகவத் கீதையைப் புரிந்து கொண்டு ஆன்மீக பலம் பெற்று தர்ம யுத்தம் செய்ததால், போரில் வெற்றி மட்டுமல்லாது உயர்ந்த ஆன்மீக நிலையையும் பெற்றான். அதுபோல எந்தவொரு ஜீவாத்மாவும் கிருஷ்ணரின் பகவத் கீதையை அறிந்து, உன்னத நிலையை அடைந்து கவலைகளிலிருந்து விடுபட முடியும்.
       

               ஆத்மதத்துவம்


நாம் என்பது இந்த உடம்பல்ல, ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது, உடல் விட்டு உடல் மாறக்கூடியது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

"பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத் கீதை 2.22)

பகவத் கீதையின் இதே கருத்து வள்ளுவரால் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் உரைக்கப் படுகிறது. உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியே விட்டு விட்டு வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

(திருக்குறள் 338)

கீழ்காணும் குறளில், இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும்மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக் காட்டும் வள்ளுவர், துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

(திருக்குறள் 340)

உடலைக் கண்டு வருத்தம் கூடாது

தான் ஓர் ஆத்மா என்பதை உணர்ந்து நிலையான இடம் தேடுதல் முக்கியம் என்றும், நிலையற்ற உடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது என்றும் வள்ளுவர் கீழ்காணும் குறளில் கூறுகிறார்:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

(திருக்குறள் 627)

உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர் தன் உடலுக்கு ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் என்று கூறுகின்றார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கருத்தை,

தேஹினோ யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி

“உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதைப் போலவே, மரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா (தீரன்) இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” (பகவத் கீதை 2.13)

உடல் முழுவதும் உணர்வு பரவியிருப்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். உடலின் ஒரு பகுதியிலோ உடல் முழுவதுமோ ஏற்படும் இன்ப துன்பங்களை அனைவரும் உணர்கின்றனர். இவ்வாறு பரவியுள்ள உணர்வு, ஒருவரின் சொந்த சரீரம் என்ற வரம்பிற்கு உட்பட்டது. ஓர் உடலின் இன்ப துன்பங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே, ஒவ்வோர் உடலும் தனி ஆத்மாவை உடையதாகும். ஆத்மா உடலுள் உள்ளதால் தனிப்பட்ட உணர்வு உள்ளது.

ஆன்மீக அணுக்கள் எண்ணற்றவை. இந்த மிகச்சிறிய ஆன்மீகத் துகள் உணர்வுடையதாக இருப்பதால், உடல் முழுவதும் உணர்வு பரவியுள்ளது. சக்தி வாய்ந்த மருந்தின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவுவதைப் போல, ஆன்மீக ஆத்மாவின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவியுள்ளது. உடலில் பரவியுள்ள உணர்வே ஆத்மா இருப்பதற்கு ஆதாரம். உணர்வற்ற ஜடவுடல் பிணம் என்பதைப் பாமரனும் அறிவான். எந்தவித பௌதிக, வேதியியல் முறையினாலும் பிணத்தினுள் உணர்வை மீண்டும் புதுப்பிக்க முடியாது; எனவே, உணர்வென்பது ஜடப் பொருட்களின் கலவையினால் தோன்றுவதல்ல, ஆன்மீக ஆத்மாவினால் ஏற்படுகிறது. ஆன்மீக ஆத்மாவின் நிலையினை எல்லா வேதங்களும் தெரிவிக்கின்றன. மேலும் அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை அனுபவபூர்வமாக அறிய முடியும்.

உடலின் இயக்க சக்திகள் யாவும் இதயத்திலிருந்து உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் அந்த சக்தியின் உற்பத்தி மூலம், ஆத்மாவே என்பதை இவ்விஞ்ஞானம் காண இயலாமல் இருக்கின்றது. ஆத்மாவின் இயல்பான இடம் உடம்பினுள் இருக்கும் இதயம் என்றும், அங்கே அந்த ஆத்மாவுடன் பரமாத்மாவாக இறைவனும் இருக்கிறார் என்றும் பகவத்கீதை, பாகவதம் போன்ற வேத நூல்கள் கூறுகின்றன

           நிலையற்ற பெளதீக உலகம்

 ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

 “நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே பெருமையாக உடையது இவ்வுலகம்.” (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

இதே நிலையாமையை நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (1.2.2) மிகவும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

 மின்னின் நிலையில
என்னுமிடத்து, இறை – உன்னுமின் நீரே

 "உயிருடம்புகள் மின்னலைக் காட்டிலும் நிலையுடையவை அல்ல.”

 உலக வாழ்வின் நிலையாத் தன்மையை வேத சாஸ்திரங்கள் பல இடங்களில் உரைத்துள்ளன. பகவத் கீதையில் (8.15) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

 மாம் உபேத்ய புனர்ஜன்மது:காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:

இங்கே கிருஷ்ணர் பௌதிக உலகத்தை து:காலயம், அதாவது துன்பங்கள் நிறைந்த இடம் என்றும், அஷாஷ்வதம், அதாவது தற்காலிகமானது என்றும் குறிப்பிடுகிறார். இவ்வுலகம் ஒவ்வோர் அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையில் இருப்பவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே சிற்றறிவுடையோர், பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழுப் பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை.

 பௌதிக உலகத்தில் யாராலும் தீர்வு காண முடியாத நான்கு வகையான நிரந்தர பிரச்சனைகளும் மூன்று விதமான துன்பங்களும் உள்ளன. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை நான்கு நிரந்தர பிரச்சனைகளாகும்.

 மூன்று விதமான துன்பங்கள் என்னவென்றால்,

ஆத்யாத்மிக க்லேஷா – மனம் மற்றும் உடலால் விளையும் துன்பங்கள் (எ.கா) மன உளைச்சல்.
ஆதிதைவிக க்லேஷா – இயற்கையால் விளையும் துன்பங்கள் (எ.கா) சுனாமி.
ஆதிபௌதிக க்லேஷா – பிற உயிரினங்களால் விளையும் துன்பங்கள் (எ.கா) கொசுக்கடி.

விமானத்தில் பறக்கும்போது மனிதன் பல்வேறு திட்டங்களிலும் கற்பனைகளிலும் மிதக்கிறான். ஏதாவது சிறு இடையூறால் விமானம் நொறுங்கி விழுந்தால், அவனுடைய எல்லாத் திட்டங்களும் பாழ். தன்மனதாலும், பிற உயிர்களாலும், இயற்கையின் சீற்றத்தாலும் உயிர்வாழிகளுக்குத் துன்பம் கொடுப்பதுதான் இவ்வுலகு. இதனை உணர்ந்து மறுவுலகிற்குச் செல்ல நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே சாஸ்திரங்களும் பெரியோர்களும் நமக்கு வழங்கியுள்ள அறிவு.

          வாழ்வின்குறிக்கோள்


வாழ்வின் குறிக்கோள் யாது என்று மக்களிடம் வினவினால், புலன்களால் இந்த உலகப் பொருட்களை அனுபவித்தல் என்றோ இந்த ஜடவுலகில் உயர்ந்த நிலைக்கு வருதல் என்றோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்தல் என்றோ பதில் வரும். இவையெல்லாம் தான் இந்த உடல் என்றும் தனக்கு சம்பந்தமானவற்றை தனது என்றும் நினைப்பதால் ஏற்படுபவை. வாழ்வின் நோக்கமின்றி வாழ்வதைச் சாடும் வகையில் வள்ளுவர், நிலையாமை என்ற அதிகாரத்தில்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

“அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை, ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன.” (திருக்குறள் 337)

பகவத் கீதையில் (2.41) கிருஷ்ணர் இதே கருத்தைக் கூறுகிறார்:

வ்யவஸாயாத்மிகா புத்திர்ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் சபுத்தயோ

“இவ்வழியில் உள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.”

“இவ்வழி” என்று இங்கே குறிப்பிடப்படுவது கிருஷ்ண உணர்வு பாதை அல்லது புத்தி யோகம் என்று ஸ்ரீல பிரபுபாதர் தன் பொருளுரையில் விளக்குகிறார்.

கிருஷ்ண உணர்வின் உள்ளடக்கங்களாகிய இறைவனை அறிதல், அவரிடம் அன்பு செலுத்தப் பழகிக்கொள்ளுதல், அன்பைப் பெறுதல் இவையே வாழ்வின் குறிக்கோள் என்பது உறுதியாகிறது.

இந்த ஜடவுலகின் படைப்புகள் யாவும் நிலையற்றவை, அழியக்கூடியவை. தன் உடம்பே அழியக்கூடியது என்பதை மறந்து மனிதர்கள் அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் கோடிக்கணக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகின்றனர். பெரும்பாலானவை மனித குலத்திற்கே இடையூறு விளைவிப்பனவாக உள்ளன. இவற்றை அசுர வேலை என்று பகவத் கீதையின் 16ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறுகிறார். இந்த நிலையற்ற சிக்கலான வாழ்க்கை நமது வாழ்வின் குறிக்கோள் அல்ல.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு

“துச்சமான அறியாமையின் மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் வாழும் உயிருக்கு நிலையாக குடிகொள்வதற்கு இன்னும் ஒரு வீடு அமையவில்லையோ.” (திருக்குறள் 340) இங்கே பௌதிக உலகில் துன்புறும் ஆத்மாக்களின் மீதான தனது வருத்தத்தை திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். பகவத் கீதையில் (15.7) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதுபோலவே வருத்தப்படுகின்றார்:

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகிலிருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.”

நம்மைக் கடைத்தேற்றுவதற்காக கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக அவதாரம் செய்து போதனைகளைத் தொடர்ந்தார். பகவான் கிருஷ்ணர் இந்த மனித குலத்தின் மீது வைத்திருக்கும் கருணையை என்னவென்று கூறுவது? எல்லாவற்றிலும் உயர்ந்த இடமான முழுமுதற் கடவுளின் இருப்பிடத்தை அடைதல் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் வரையறுத்துக் காட்டியுள்ளார். மேலும், திருவாய்மொழியில் (1.2.1) நம்மாழ்வார் கூறுகிறார்:

வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே

“எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டுவிட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள்.” இறைவனிடம் சரணாகதி செய்து அன்புத் தொண்டாற்றுவதே எல்லா ஆழ்வார்களுடைய விருப்பமும் தவமும். எல்லா ஆழ்வார்களும் முழுமுதற் கடவுள் கண்ணனையும் அவனது திருஅவதாரங்களையும் கொண்டாடுவதை நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் காணலாம்.

தூய வைணவர்களின் விருப்பம் எங்கிருந்தாலும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு அன்புத் தொண்டாற்றுவதே. அவர்கள் எந்த வகையான முக்தியையும் எதிர்பார்ப்பதில்லை. இதை ஆஞ்சநேயரின் வாழ்விலிருந்தும் காணலாம். ஸ்ரீமத் பாகவதமும் இத்தகைய தூய பக்தியே சிறந்ததென்று குறிப்பிடுகிறது.

பகவான் ஸ்ரீ சைதன்யர் தனது சிக்ஷாஷ்டகம் நான்காவது பாடலில், “எனது ஜன்ம ஜன்மங்களில் கிருஷ்ணா, உனது அன்புத் தொண்டே எனக்குத் தேவை,” என்று கூறுகிறார். மேலும், ஜீவேர ஸ்வரூப ஹய, க்ரிஷ்ணேர நித்ய-தாஸ, “ஜீவனுடைய உண்மையான தன்மை கிருஷ்ணருடைய நித்திய அன்புத் தொண்டனாக இருப்பதே,” என்பதே பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாக்கியம். இதை மகா வாக்கியம் என்று சொன்னால் மிகையாகாது. எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை ஒருவன் கற்றுத் தேர்ந்தாலும், முழுமுதற் கடவுளான ஆதிபகவானுக்கு அன்புத் தொண்டாற்றவில்லை எனில், அவை எல்லாம் வீண் என்பதை இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும். இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வள்ளுவன் பார்வையில் வாசுதேவன்

 
FB_IMG_1491935272376.jpg
திருவள்ளுவர் எங்கனம் திருமாலை போற்றிதுதித்தார் என்பதை இப்பதிவில் எழுதியுள்ளேன்.
                     
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 

என தன் நூலை தொடங்கும் வள்ளுவர் முதற் குறட்பாவிலேயே மிக உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தை விளக்க ஆரம்பித்துவிட்டார்.

                                 அகாரார்தோ விஷ்ணுஹு ஜகதுதாய ரக்ஷா பிரளய க்ருத் மகாரார்தோ ஜீவாஹ ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரூனஞார்ஹம் நியமயதி சம்பந்தமனயோஹ் த்ரயி சாரஹா த்ரயாத்மா பிரணவ இமமார்த்தம் சமதிஷாத்

                                     மேலே சொல்லப்பட்ட சமஸ்க்ருத ஸ்லோகத்தின் பொருள் யாதெனின், ஓம் எனும் பிரணவம் 'அ' 'உ' 'ம' எனும் மூன்று எழுத்துக்களின் சங்கமமேயாகும். இதில் 'அ' என்கிற எழுத்து ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் 'ம' என்கிற எழுத்து ஜீவாத்மாக்களான நம்மையும் குறிக்கும். 'உ' என்கிற எழுத்து பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாக்களான நமக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும். ஜாதி வேறுபாடுகளையும் அது செய்யும் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்க்கும் ஸ்ரீ வைஷணவம் எல்லா உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கையே போதிக்கிறது. எல்லா உயிர்களும் சரணடைவது ஸ்ரீமன் நாராயணனையே. அந்த திருமாலே உலகம் யாவையும் தோற்றுவித்து, காத்து, பின் பிரளய காலத்தில் தன் திருவயிற்றில் வைத்து காக்கின்றான்.

                                திருக்குறளுக்கு வருவோம். திருமாலே உலகத்திற்கு முதலானவன் என்று சொல்லப்புகுந்த வள்ளுவர் அந்த ஆதி பகவானான ஆதி நாராயணனை குறிக்கும் அகரத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு 'எப்படி அ எழுத்துக்கெல்லாம் முதன்மயானோதோ அது போல திருமால் உலகுக்கெல்லாம் முதன்மையானவன். அவனோ ஆதி நாராயணனன், அவன் தேவியோ ஆதி லக்ஷ்மி. அவன் தொண்டனோ ஆதிசேஷன் - முதல் தொண்டன். இப்படி எல்லாம் ஆதியாக எல்லாவற்றுக்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது வள்ளுவன் வாய்மொழி.


மலர்மிசை ஏகினான்மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்   


திருமால் ஐந்து நிலைகளில் உறைகிறான். 1.பர- ஸ்ரீ வைகுந்தத்தில் இருக்கும் ஸ்ரீ பரமபத நாதன் 2. வியுஹ - திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்ட திருக்கோலம். 3. விபவ - ஸ்ரீ ராம, ஸ்ரீ கிருஷ்ண, லக்ஷ்மி வரா ஹ, லக்ஷ்மி நரசிம்ஹ அவதாரங்களாய் இந்த புண்ணியமான பாரத தேசத்தில் தோன்றியது. 4. அந்தர்யாமி - அடியார்களான நம் மனதில் அவரவர் கட்டை விரலளவு ஸ்ரீமன் நாராயணர் எப்போது வீற்றிப்பது 5. அர்ச்சை - திருவரங்கம், திருமலை, திருவல்லிக்கேணி முதலிய திவ்யதேசங்களிலும் மற்ற கோயில்களிலும் எழுந்தருளியிருக்கும் விக்ரஹ திருமேனிகள்.

  இந்த ஐவற்றுள் ஐயன் வள்ளுவர் மேற்சொன்ன குறளில் குறிப்பிடுவது அந்தர்யாமி நிலையை. அடியார்களின் அகமாகிய தாமரையில் வீற்றிருக்கும் திருமாலின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இந்த பூமியில் நீண்ட நாட்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்.

 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


திருமாலிடம் எல்லாம் உண்டு, ஒன்றை தவிர. அவன் அநாதன். அவன் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நாதன் அவனுக்கு நாதன் கிடையாது. மஹாபலி சக்ரவர்த்தியிடம் இந்திரனுக்காக மூன்றடி நிலம் கேட்கப்போன குரளனான ஸ்ரீ வாமனன் தன்னை அநாதன் என்று கூறி அறிமுகப்படித்திக் கொள்கிறான். மஹாபலி 'அனாதை' என்று புரிந்துகொள்ள அவன் குரு சுக்ரசாரியார் வந்திருப்பவன் 'அனாதை' அல்ல; தனக்கு ஒரு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தலைவன் அதாவது நாதன் இல்லாத, திருமால் என்று புரியவைத்தார்.

 ப்ர ஹலாதனுக்கு கொடுத்த வரத்தின்படி அவன் பேரனான மஹாபலியை ஸ்ரீ வாமனன் கொல்லவில்லை. அதே காரணத்தினால் தான் ப்ரஹலாதனின் வழி வந்த பாணசுரனை ஸ்ரீ கிருஷ்ணரும் கொல்லவில்லை.

 கலியுகமாகிய இன்றும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஸ்ரீ ஒப்பிலியப்பனை நாம் கும்பகோணம் அருகே திருவிண்ணகர் என்ற ப்ரசித்தி பெற்ற திவ்ய தேசத்தில் சேவிக்கலாம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திருமாலின் திருவடியை சேர்த்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு தங்கள் மனக்கவலை மாறாது என்கிறார் திருவள்ளுவர்.

 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை 


 எவனொருவனின் தலை எண்குணதானின் திருவடிகளை வணங்கவில்லையோ அவனுக்கு ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, மெய் முதலியவற்றால் பயன் ஏதுமில்லை. இங்கு 'எண்குணத்தான்' எனும் சொல் 8 குணங்களையும் குறிக்கும் எண்ணிறைந்த குணங்களையும் குறிக்கும்.

  ஸ்ரீமன் நாராயணன் அநேக கல்யாண குணங்கள் நிரம்பியவர். அதனாலேயே தமிழில் 'நம்பி' என்றும் வடமொழியில் 'குணபூர்னர்' என்றும் அழைக்கபடுகிறார். ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ், சௌசீல்யம், வாத்சல்யம் என்கிற முக்கிய 8 குணங்களும் மேலும் மார்தவம், ஆர்ஜவம், சௌஹர்தம், சாம்யம், காருண்யம், மாதுர்யம், காம்ப்ஹீர்யம், ஔதார்யம், சாதுர்யம், ச்தைர்யம், தைர்யம், சௌர்யம், பராக்கிரமம், சத்யகாமம், சத்யசங்கல்பம், க்ருதித்வம், க்ருதங்க்னதை, மற்றும் பலப்பல கல்யாண குணங்களை தன்னிடையே கொண்டான் கொண்டல்வண்ணனான கண்ணன், கேசவன், மாதவன் என பல நாமம்கள் கொண்ட திருமால். இந்த கல்யாண குணங்கள் பற்றித்தான் திருவள்ளுவர் மேற்படி குறளில் விளக்கியுள்ளார்.

  இன்னும் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள மற்ற குறள்களையும் விரிவாக சொல்லலாம். ஆயினும் மற்ற அதிகாரங்களும் இருப்பதால் அவற்றை பார்ப்போம்.

  மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு 


 மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக விண்ணையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.

அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் குறள்கள் கண்ட நாம் காமத்துப்பாலில் வள்ளுவரின் வாசுதேவர குரல்களைப் பார்ப்போம்.

 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு 


  புணர்ச்சி மகிழ்தல் பற்றி பாடவந்த வள்ளுவர், தன் காதல் மனைவியின் தோளில் தூங்குவதைவிட பங்கஜாக்சன் என்றும் தாமரைக்கண்ணன் என்றும் பெயர்க் கொண்ட திருமாலின் வைகுந்தம் இனிதாக இருக்குமோ? என்று கேள்வி எழுப்புகிறார் காதல் வசப்பட்ட வள்ளுவர். இங்கு காதலை உயர்த்தி சொல்ல விரும்பும் போதும் தன் அடிப்படை குணத்தை காட்டும் விதமாக மனித இனத்தின் ஒரே இலக்கான ஸ்ரீ வைங்குந்தம் எனும் திருநாட்டைப் பற்றித்தான் குறிபிடுகிறார்.

                               அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை   


  தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும் புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.

        சுபம்(சர்வம் கிருஷ்ணார்ப்பணம்)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கீதையே குறள், குறளே கீதை!

in — by — August-24-16

 

 

பாரதம் இண்டியாவாகி, இண்டியன் வெள்ளைக்காரனாகி, மெக்காலே கல்வியால் மூளை மழுங்கி பண்பாட்டிலிருந்து சரிந்து விழுகின்ற காலமிது. அதனால் கண்ணை விற்றுச் சித்திரம் வாக்கும் அனர்த்தங்கள் பெருகியிருக்கின்றன. இன்றைய இந்தியன் வயிற்றுக்காக ஆன்மாவை இழக்கத் தயாராயிருக்கிறான். முன்னோர்களின் பெருமை ஏதும் இன்றைய தலைமுறையின் தலையில் ஏறவில்லை. வள்ளுவனை, கிருஷ்ணனைத் தெரியாத இந்தியன், தந்தை பெயர் அறியாதவன் என்றால் தவறு ஒன்றுமில்லை.ஆனால், அத்தகைய இழிநிலையில் இன்றைய தலைமுறை இருக்கிறது.

 

ஆனாலும், இப்போது ஒன்றும் முழு மோசம் வந்துவிடவில்லை. சாம்பலில் நெருப்பாய்… நம் நாட்டில் இன்னும் பண்பாட்டின் உயிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஊதி ஊதிப் புதிய வேள்வி செய்துவிட முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்கு காரணம், இன்னும் திருக்குறள் நம் கையில் இருக்கிறது; கீதை இருக்கிறது என்பதுதான் அவ்விரண்டு நூல்களிலும் உள்ள ஆன்மிக ஒளி, சூரியனிலும் சந்திரனிலும் இல்லாதது. சூரிய தீபமும் ஒருநாள் அணையக்கூடும். கீதையின் ஒளியோ, குறளின் ஒளியோ என்றும் அணையாது. அது உலகின் கடைசி மனிதனுக்கும் வழிகாட்டும்.

நம் நாட்டில் காணப்படும் கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்கள், இசை, கவிதை… இவை எல்லாமே ஆன்மிக மெய்மைகளை வெளிப்படுத்தும் கலை வெளிப்பாடாக விளங்குகின்றன. ஜீராவில் குலோப் ஜாமூன் ஊறுவது போல, ஆன்மிகத்தில் ஊறிக் கிடந்த உள்ளங்களிலிருந்துதான் இத்தகைய வெளிப்பாடுகள் தோன்ற முடியும்.

ஆயுதங்களுக்கு சாணை பிடிக்கும் யுத்தப் பொழுதிலும் ஆத்மா விசாரணை செய்து கிடந்த மன்னர்களை வரலாறு காட்டுகிறது. தெய்வீக உணர்வில் திளைத்துக் கிடந்த கோடானு கோடி மகான்கள், ரிஷிகள், கவிஞர்கள் பற்றிய சான்றாதாரங்கள் எத்தனை எத்தனை இலக்கியங்களிலும் பிறவற்றிலும் காணக் கிடைக்கின்றன.

சராசரி மனித வாழ்க்கையும் தத்துவத்தில் ஊறியதாக, தார்மிகம் நிறைந்ததாக இருந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்கு சான்றுகள் தரமுடியும். தும்மினால்கூட ‘முருகா’ என்பவர்களை இன்றும் இங்கே காணமுடிகிறது. பிறர் மீது கால்பட்டு விட்டால், ‘சிவசிவ’ என்கிறாள் இந்நாட்டுப் பாமரப் பெண். காணும் இடமெல்லாம் பரம்பொருளைக் கண்டு பழகியவர்களின் குடும்பத்தில் பிறந்தால் வந்த பயன் இது.

கோபுரக் கிளிகளும் வேத மந்திரங்கள் சொல்லும் எனும்படி…. வேதம் செழித்த நம் நாட்டில் உலகாயத விஷம் தீண்டி… மக்கள் அஞ்ஞானக் குருடர்கள் ஆகிவருகின்றனர். இப்படி ஆன்மிக விழிப்பு கெட்டு, உறக்கமும் கொட்டாவியுமாக இருக்கின்ற கீதையையும் ஒரு சமூகச் சூழலில்,குறளையும் கீதையையும் குறித்து சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறேன்.

‘அதுசரி சுவாமி! இந்தக் குரலிலும், கீதையிலும் அப்படி என்னதான் இருக்கிறது?’ என்று சிலர் கேட்கிறார்கள். அதில் என்னதான் இல்லை என்ற பதிலை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். குறள், கீதை இரண்டும் மேலோட்டமாகப் பார்த்தல் மிக எளிய நூல்கள். ஆனால் அந்நூலுக்குள் எல்லோரும் மூழ்கி முத்தெடுக்க முடியாது. அவ்வளவு ஆழம் அதில் உள்ளது.

பொதுவாக வேதங்களை ‘எழுதாக்கிளவி’ என்றே முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் அவை முனிவர்களாலும் ரிஷிகளாலும் எழுதப்பட்டவை அல்ல. அவை அவர்களால் கிரஹிக்கப்பட்டவை. வானத்தில் அலையும் ஒலி வடிவங்களை ஒரு வானொலி பெட்டி கிரஹித்துக் கொடுப்பது போல அவர்கள் வேதங்களை கிரஹித்து வழங்கினார்கள் என்று கருதுவதே மரபு.

ஆனால், இந்தக் குறள், கீதை இரண்டு நூல்களையும் இறைவனே நேரடியாக வந்து வழங்கியதாக நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள்.
உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் இந்த திருக்குறளை நான்முகனே வள்ளுவர் வடிவில் வந்து வழங்கினான் என்று எழுதியிருக்கிறார். அப்படி ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் உள்ளது. கீதை திருமாலின் அவதாரமென, கிருஷ்ணன் வாய்மொழியாக வந்துள்ளது. ஆக, இவ்விரண்டு நூல்களின் பிறப்பு குறித்து, இது சாட்சாத் தெய்வமே வந்து தந்தவை என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அலைபேசி நடைமுறைக்கு வரும் முன்பு, பேஜர் என்ற ஒரு கருவி எல்லோருடைய இடுப்பிலும் இருந்தது. இப்போது இல்லை. அந்த பேஜர், அலைபேசி வந்த பிறகு சிறப்பிழந்துவிட்டது. பயனையும் இழந்துவிட்டது.
ஆனால், இந்தக் குறளும் கீதையும் தோன்றிய பிறகு எத்தனை எத்தனை புதிய நூல்கள் தோன்றியுள்ளன. ஆயினும், இவ்விரண்டு நூங்களும் தம் சிறப்பையோ, பயனையோ இழந்து விடவில்லை. இதுதான் அந்த நூல்களின் விசேஷம்.

திருவள்ளுவர் ‘சிறப்பீனும் செல்வமும் ஈனும்’ என்று தர்மத்தைப் பற்றிச் சொல்கிறார்.

தர்மமாக வாழ்ந்தால், நல்ல பேர் கிடைக்கும். காசு கிடைக்குமா என்று சந்தேகப்படுபவர்களுக்காகவே சொன்ன குறள் அது. சிறப்பு என்பது ஞானத்தையும் செல்வம் என்பது உலகச் செல்வத்தையும் குறிக்கும்.

திருக்குறள் முப்பால் நூல் என்று அழைக்கப்பாட்டலும், அதில் நாற்பாலும் அடங்கியுள்ளது. அதாவது, அறம்,பொருள், இன்பம், என மூன்று தவிர, வீடுபேறு என்ற மோட்ச சாஸ்திரக் கருத்துகளும் அதில் அடங்கியுள்ளன.

துறவறம், அவாஅறுத்தல், மெய்யுணர்தல் போன்ற அதிகாரங்களில், குறள் மோட்ச சாஷ்திரங்கள் கூறும் கருத்துகளை எல்லாம் நுட்பமாக கூறுகின்றது. ஆனால், கீதை என்பது தர்ம சாஸ்திரக் கருத்துகளையும் விரிவாகக் கூறுகிறது. அதிலும் தர்மத்தில் கர்மயோகம் மட்டும் அதிகம் பேசுகிறது.

கிராமத்தில் தென்னங்கீற்றுக்குப் பின்னே சிரிக்கும் அதே நிலவுதான், நகரத்தில் கான்கிரீட் கம்பிகளுக்கு பின்னே சிரிக்கிறது. உலகில் மொழிகள் மாறினாலும், அந்த மொழியின் வழியே தோன்றும் பரம்பொருளின் ஒளி ஒன்றுதான்.

வள்ளுவருக்கோ, கம்பருக்கோ சமஷ்கிருதத்தில் காழ்ப்புணர்ச்சி கிடையாது. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்று ஒரு குறளில் ஆச்சாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். கருமம் என்ற சொல்லைப் பல குறலில் அவர் பயன்படுத்தியுள்ளார்.
மொழியை விடவும், அந்த மொழியின் வழியாகச் செய்யும் விஷய தானமே அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கிறது. நானும் அந்த விஷய தானத்தைக் கருதியே, குறளையும் கீதையையும் இணைத்துப் பேசுகிறேன்.

வள்ளுவரைப் பார்த்து, ‘வள்ளுவப் பெருமானே! கடவுளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று நீங்கள் கேட்டால், அவர் அழகாக விளக்கமாகச் சொல்லி விடுவார்.

கிருஷ்ணனும் அதைப்பற்றி நன்றாகச் சொல்கிறார்.
திருக்குறளில் முதல் குறள், ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது. இது எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் என்றாலும், இக்குறளை ஆழமாக நோக்கினால், நாம் காணாத பொருளும் காட்டும்.

அகரம் மொழிக்கு முதல், அதுபோல் இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்பது எல்லோரும் அறிந்திருக்கும் பொருள்தான்.

‘அட்சரங்களின் நான் அகரமாக இருக்கின்றேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணரும் கீத்தையில் கூறுகிறார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-என்ற குறளில், உலகுக்கு முதலாக இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையும் அவர் தெளிவாகக் கூறிவிட்டார். கடவுள் இருக்கிறார் என்ற கட்சி அவர் கட்சி.

கடவுள் இல்லை என்று சொல்கிறவர்களை பேயாக எண்ணி ஒதுங்க வேண்டும் என்றும் கூட வள்ளுவர் சொல்லியுள்ளார். உலகத்தார் உண்டு என்பதை இல்லைஎன்பவன் வையத்துள் அலகையாய் வைக்கப்படும் என்பது அவர் கருத்துதான்.

‘அஹமாத்மா குடாகேச’ என்று கீதையில் பகவான் சொல்கிறார். உடலில் நான் ஆன்மாவாக இருக்கின்றேன் என்பது அதன் பொருள்.

உடல் வீடு; அதில் உள்ளுறையும் ஆத்மா அந்த வீட்டில் குடியிருப்பவன் ஆவான்.

இதம் சரீரம் கௌந்தேய ஷேத்ர மித்ய பி தீயதே| ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹீ: ஷேத்ராஜ்ஞ இதி தத்வித:

அர்ஜூனா இந்த உடல் ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்த உடலில் இருந்து கொண்டு, இந்த உலகையும், இந்த உடலையும் தன்னிலிருந்து வேறானதாக அறிபவன் சேத்திரக்ஞன் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

இதுவரை குரளிலிருந்தும், கீதையிலிருந்தும் சில மேற்கோள்கள் காட்டினேன். குரலிலும் கீதையிலும் உள்ள ஞானமணிகளில் ஒரு கைப்பிடி அளவு அள்ளித் தந்தேன். இன்னும் அவற்றில் ஏராளமாக இருக்கிறது. ஏராளமான ஞானச் செல்வம். அதை முழுவதும் அனுபவிக்க இறையருள் துணை செய்யட்டும்.

நன்றி : விஜய பாரதம்
– சுவாமி ஒங்காரானந்தர்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குறள் மாலை 4

 
வணக்கம்.
இத்துடன் குறள் மாலை  4 இணைக்கப்பட்டுள்ளதுஉங்கள் எண்ணங்களை kizhambur@gmail.com லும்தெரிவிக்கலாம்.
அன்பன்
கீழாம்பூர்
 
குறள் மாலை  4 (2.2.2014) வள்ளுவரும் மாக்ஸ் முல்லரும்
சிலப்பதிகாரம் இலக்கியம் அதில் தமிழின் பெருமை மட்டும் இல்லாது ஒரு நடன அரங்கு எப்படி அமையவேண்டும் என்பது கூடச் சொல்லப்படுகிறதுசங்கப்பாடல்களில் தமிழர்களின் வீரமும் காதலும் பேசப்படுகிறது.ராமாயணத்தில் நிறைய வர்ணனைக் காட்சிகள் இருக்கின்றனராமனின் பெருமையும் அனுமாரின் வீரமும்பாங்குடனே சொல்லப்படுகின்றனபல இயற்கைக் காட்சிகளின் வர்ணனை ராமாயணத்தை ஒரு சிறந்தஇலக்கியமாக அடையாளம் காட்டுகிறது.
 
குறளில் இவை போன்ற வர்ணனைகள் இல்லாவிட்டாலும் அதுவும் ஒரு தமிழ் இலக்கியம்தான்திருக்குறளில்கற்றவர்கள் வியக்கும் அழகிய சொற்கோவைகவி அழகுஅணிநலன் ஆகியவை நிறைய உண்டுபொருளின்ஆழமும் சொல்லின் வீரியமும் குறளின் பலம்எளிமையானது குறள்அதனால்தான் அது எக்காலத்திலும்எல்லோராலும் பேசப்படும் இலக்கியமாக திகழ்கிறது.
 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று கவி பாரதி பாடுகிறார்உலக அரங்கில் பெருமை தேடித்தரக்கூடியது திருக்குறள்தமிழ் பண்பாட்டையும்தமிழ் நாகரீகத்தையும் உலகிற்கு உரக்க எடுத்து இயம்புவது திருக்குறள்வேதம் என்பது நேற்று இருந்ததுஇன்றுஇருக்கிறதுநாளையும் இருக்கும்அதுபோலத்தான் திருக்குறளின் பெருமையும் எல்லாக் காலத்திலும் நிலைத்துநிற்கும்.
 
மாக்ஸ் முல்லர் என்றொரு அறிஞர் இருந்தார்இந்தியாவிலிருந்து வேதங்களை கற்றுணர்ந்து வெளிநாட்டில்வேத உபநிஷத்துகளைப் பரப்பியதில் மாக்ஸ் முல்லருக்கு ஒரு தனி இடம் உண்டு.
 
ஜெர்மானிய தத்துவ ஞானி மாக்ஸ் முல்லர்டீசா என்னும் ஊரில் வில்ஹெல்ம் முல்லர் என்பவருக்கும்அடல்லெய்ட் முல்லர் என்ற பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தவர்இவருடைய தந்தை ஒரு சிறந்த புலவராகத்திகழ்ந்தார்இவருடைய தாயாரோ அந்நாட்டு அமைச்சரின் புதல்விமாக்ஸ் முல்லர் பல்கலைக்கழகத்தில்பயின்று இசைகவிதைதத்துவம் ஆகிய துறைகளில் தேர்ச்சி உடையவராய் விளங்கினார்.
 
இந்திய ஐரோப்பிய மொழிகளை முதன்முதலாக முறையாகக் கற்றவர் மாக்ஸ் முல்லர் என்று சொன்னால் அதுமிகையல்லஇந்திய நாட்டில் வழங்கிவரும் கதைகளைப் பற்றிய தொகுப்பை ஜெர்மானிய மொழியில்மொழிபெயர்த்து வெளியிட்டார்மாக்ஸ் முல்லரின் முதல் புத்தகம் இதுபாரீஸ் மாநகரத்தில் யூஜின் பர்னாஃப்என்பவரிடம் சம்ஸ்கிருத நூல்களைக் கற்றுத்தேர்ந்தார்அவர்தான் முல்லரிடம் ரிக்வேதத்தின் சம்ஸ்கிருதமூலத்தை பதிப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 
திருவள்ளுவரோடு ஏன் மாக்ஸ் முல்லரை நான் சம்பந்தப்படுத்துகிறேன் என்றால்அதிகம் கற்றவராக முல்லர்இருந்தாலும் அவரிடம் ஒரு பணிவு இருந்ததுஇந்திய வேதாந்த சாஸ்திரங்களை மேலை நாட்டில் அவர்எடுத்துச் சொன்னபோது அவரிடம் எதிர்வாதம் செய்தவர்களிடமும் அவர் கோபம் கொள்ளாமல் சமரசத்தையேக்கடைப்பிடித்தார்உண்மையை உணர்தலே உண்மையான மதச் சிந்தனையாகும் என்பதே முல்லரின் நோக்கமாகஇருந்தது.
 
பணியுமாம் என்றும் பெருமை என்று திருவள்ளுவர் குறிப்பிடுவதைப் போல பணிவுடன் வாழ்ந்துக் காட்டியவர்முல்லர்எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற குறளுக்கு ஏற்பவாழ்ந்தவர்எனவேதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த திருவள்ளுவரின் அடியை ஒட்டிநடந்தார் முல்லர் என்பது என் எண்ணம்.
வேதம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள்இந்து சமயத்தின் புனித நூல்களில் தலைசிறந்தது வேதம்இந்த வேதங்கள் எழுதப்படாத மறைகளாக இருந்தமையால் சுருதி என்று அழைக்கப்பட்டனசுருதி என்றசொல்லுக்கு கேட்கப்பட்டது அல்லது வெளிப்படுத்தப்பட்டது என்று பொருள்ஞானிகளும் ரிஷிகளும்சொன்னார்களே தவிர எழுதவில்லை.
 
இந்தியா நமக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறதுஇந்திய தேசம் ஒழுக்கத்தை பேணிக்காப்பதில் சிறந்ததேசமாகும்இந்தியாவிலுள்ள இலக்கியங்கள் எல்லாமே ஒழுக்கத்தை முன்நிறுத்துபவைமுல்லருக்குஇப்படிப்பட்ட தீர்க்கமான சிந்தனை உண்டுஇதற்குக் காரணம் திருவள்ளுவரின் திருக்குறளும் ஒன்றாகும்.
 
‘‘நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு’’ (குறள் : 336)
 
உலகம் நிலையானது இல்லைமக்கள் வாழும் காலத்தில் அறம் செய்ய வேண்டும் என்ற உணர்வை பெறவேண்டும் என்று திருவள்ளுவர் எண்ணினார்எனவேதான் நேற்று இருந்தவன் இன்று இல்லை என்றுசொல்லப்படும் நிலையாமையைத்தான் இவ்வுலகின் தன்மை என்று எடுத்துரைக்கிறார்இதுதான் வேதத்தின்மையக்கருத்து என்றும் மாக்ஸ் முல்லரும் தனது ஆராய்ச்சிகளில் தெரிவித்து இருக்கிறார்.
 
As all have to sleep together laid low in the earth, why do foolish people wish to injure one another'.  மக்கள் ஏன் ஒருவரைஒருவர் பகைத்தும் துன்புறுத்தியும் வாழ்கிறார்கள் எனக் கேட்கிறது வேதம்.
 
‘‘குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
 
உடம்போடு உயிரிடை நட்பு’’ (குறள் : 338)
 
என்கிறார் திருவள்ளுவர்நம் உடம்பு கடலின் நுரையைப் போன்றதுநம் உயிரோ பறவையைப் போன்றதுநம்உறவுகள் நிரந்தரமானவை அல்லநம் வாழ்க்கை என்னும் சிறிய பயணத்தில் நாம் சந்திப்பவர்கள்தான்உறவினர்களும் நண்பர்களும்ஒருவனை தொடர்வது அவனது பாப புண்ணியம் மட்டுமேபுதிய ஆடையைஉடுத்துவதுபோல் ஆத்மா உடலை உதறிவிட்டு வேறொரு உடலுக்குள் புகுந்து உலகிற்கு வரும் என்கிறதுவேதம்.
 
நிலையாமையை வள்ளுவர் வழியில் உணர்த்தியவர் மாக்ஸ் முல்லர் என்றால் அது மிகையல்லதமிழ்நூல்களின் தலைமை நூலாக இருப்பது திருக்குறள்சம்ஸ்கிருத மொழியில் தலைமை நூலாக இருப்பவை வேதஉபநிஷதங்கள்.
 
வள்ளுவர் வேத கருத்துக்களை உள்ளடக்கியே திருக்குறளை யாத்தார் என்று சொல்பவர்கள் உண்டுமாக்ஸ்முல்லருக்கு திருக்குறளைப் படிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லைதிருக்குறளை அவர் படித்திருந்தால் தான் கற்றவேதத்தின் உட்பொருட்கள் அத்தனையும் திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியிருப்பார்.
 
திருக்குறள் தங்கத்திற்கு ஒப்பானதுதங்கத்திற்கு எல்லா நாட்டிலும் எப்போதும் மதிப்புண்டுபொன்னார்மேனியன் என்று இறைவனையே பாடிக்களித்தனர் சான்றோர்கள்அதைப்போன்று இரண்டாயிரம் ஆண்டுகளாகமதிப்பை இழக்காது உயர்ந்த செல்வமாக விளங்குவது திருக்குறள்.
 
இன்றைய உலகம் துரித உலகம்இந்த துரித உலகத்தின் மிக எளிய இலக்கியமான திருக்குறளை மனனம்செய்வதும் மிக எளிதுவேதங்கள் மனனம் செய்யப்பட்டுத்தான் ஒருவரிடம் இருந்து ஒருவருக்குவாய்மொழியாகச் செல்கிறதுதிருக்குறளும் வேதத்திற்கு ஒப்பானது என்பதாலும் எளிமையானது என்பதாலும்திருக்குறள் முழுவதையும் மனனம் செய்யும் பாங்கு தமிழர்களிடம் மலர வேண்டும்.
 

மாக்ஸ் முல்லர் போன்ற அறிஞர்கள் நல்ல இலக்கியம் எப்போதும் மக்களின் மனதில் வாழவேண்டும் என்றுஎண்ணியது திருக்குறள் போன்ற உயர்ந்த இலக்கியங்களை எண்ணித்தான்அடுத்த குறள்மாலையில்திருக்குறள் சொல்லும் மருத்துவத்தைப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிராமண எதிர்ப்பு உண்மையில் இந்துமத எதிர்ப்பு! 
 
 
ஆதியும் அந்தமும் இல்லாத நமது சனாதன தர்மத்தின் ஆணி வேரானது நமது வேதங்கள்…!!
இந்த வேதங்களும் நமது சனாதன தர்மமும், நாடு பிடிக்க வந்தவர்களின் காலக் கணக்கில் அடங்காது.
நான்கு யுகங்களாக தொடர்ந்து வரும் நமது சனாதன தர்மத்தின் கால அளவை நமது இந்து மத கணக்குகளின் மூலமாகவே கண்டு பிடிக்க முடியும்.
பல கோடி வருஷங்கள் ஆகிறது உலகம் தோன்றி என்கிறது நமது கால கணக்கு.
சூரியனிடமிருந்து வரும் ஒலி தான் ஒம் என்று அமெரிக்காவின் நாசா அமைப்பு தற்போது தான் கண்டு பிடித்து சொல்லி இருக்கிறது.
ஒம் எனும் பிரணவ மந்திரத்தை உலகிற்கு அளித்தது நமது ரிஷி முனிவர்கள்!!
 
 

வேதங்களின் முக்கியத்துவம்

சனாதன தர்மம் எனும் வாழ்கை முறையை கற்றுக் கொடுக்கும் இந்த வேத நெறிமுறைகள் அநாதியானவை.
காலங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு தருவதே தலையாய உன்னத கடமையாக கருதப்பட்டது.
 

வாய்மொழி கற்றல்

வேதங்கள் ஒதுவது என்பது ஒரு அரிய கலை. குருகுல வாசத்தில், பிரம்ம வித்தையை படிக்க வரும் இந்த குழந்தைகள் 12 வருடங்கள், அங்கேயே தங்கி, குருவிற்கு சேவகம் செய்து இந்த வேதம் ஒதுதலை கற்பார்கள்.
 

வாக்கும் மனமும்

இந்த வேதங்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் முதலில் அதில் புலமை பெற வேண்டும். அந்த சொற்களை புரிந்துக் கொண்டு மனனம் செய்ய வேண்டும். உச்சரிப்பு தான் வேதத்தின் சாரம் என்பதால் அதி ஜாக்கிரதையாக பயில வேண்டும்.
இதற்கு மனமும் வாக்கும் உடலும் சுத்தமாயிருக்க வேண்டும்.
இப்படி கடுமையான பயிற்சிக்கு பிறகே, வேதங்களை குருவோடு சேர்ந்து ஒத தொடங்க முடியும்.
 

அன்றைய கால கட்டத்தில்

இந்த வேதங்கள் காது வழியாகவே பயிலப்பட்டு இவ்வளவு லட்சம் ஆண்டுகள் கழித்தும் இன்று நமக்கு கிடைத்திருக்கின்றன என்றால் அதற்கு இந்த உலகம் ‘‘அந்தணர்களுக்கு’’த்தான் நன்றி சொல்ல வேண்டும். அன்று ஒலை சுவடிகள் கூட இல்லாத கால கட்டம்.
 

துறவு வாழ்வு

இந்த வேதங்களை பயின்று பல ஆயிரம் தலை முறைகளுக்கு தொடர்ந்து பயிற்றுவித்து வரும் இந்த பிராமணர்களின் வாழ்வே ஒரு தவ வாழ்வு தான்.
காலை 4 மணிக்கு எழுந்து, தியானம் வேதம் பயில்தல், சொற்ப உணவு, கடவுள் சிந்தனை, கோயிலை சுற்றியே ஒரு எளிய வாழ்கை.
இவர்களும் இவர்களை சார்ந்த குடும்பங்களும் இதில் அடக்கம். இப்படியாக இவர்களின் வாழ்வே ஒரு அர்ப்பணிப்பு தான்.
ஷத்திரிய மன்னர்கள் தங்கள் கோயில்களில் இவர் களுக்கு வசதி செய்தது கொடுத்து தெய்வ காரியங்களை செய்ய ஏதுவாக உதவினார்கள்.
அந்தணர்களை போற்றி வாழ்ந்தார்கள்! அவர்களை பாதுகாத்து தான் வாழ்ந்தார்கள்! சமூகத்தினர் இவர்களை உயர்ந்த நிலையில் வைத்து, பாதுகாத்து வந்தனர். தங்களது வீட்டு குருமார்களாகவே மதித்து வாழ்ந்தனர்.
 

சமூக அமைப்பு

வேதங்களை பயில்பவர்கள் பிராம்மணர்கள்!
ஆனால் பிராமண குலத்தில் பிறந்து விட்டதால் மட்டுமே அவன் பிராமணனாக முடியாது.குண தர்மமே முக்கியம் குல தர்மம் கிடையாது என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
யார் வேண்டுமானாலும் வேதம் பயிலலாம்!! அதற் கான கடுமையான நியமங்களை பின்பற்ற வேண்டும் என்பதே முக்கியம். நாம் புனிதமாக போற்றும் ராமாய ணமும், பாரதமும் எழுதியவர்கள் பிராமண குலத்தில் பிறக்காதவர்கள்!! என்பதே இதற்கு சாட்சி…
 
சிந்தித்து செயலாற்றுபவர்கள் பிராமணர்கள், பிரம்ம வித்தையை பயில்பவர்கள். நெஞ்சுரத்தோடு வீர போர் புரியும் ஷத்திரியர்கள்.
வயிற்று பசியை போக்கும் வியா பாரிகள் தான் வைசியர்கள்.
செய்யும் வித்தை தெரிந்தவர்கள், அதாவது சூத்திரங்கள் தெரிந்து செயல் வீரர்கள் தான் சூத்திரர்கள் இதனால் தான் சூத்திரதாரி என்றும் சிலரை இன்றும் கூறுகிறோம். இதில் வாழ்வு முறை தான் உள்ளதே தவிர, ஏற்றத்தாழ்வுகள் இன்று இல்லை.
அன்றைய காலத்தில் எல்லா இந்துக்களும் பூணுல் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்து இந்துக்களும் இன்றும் சுபத்திற்கும், துக்கத்திற்கும் பூணூல் அணிகின்றனர்…
 

அரசின் கள்ள மௌனம் ஏன்??

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் பிராமண எதிர்ப்பு கடந்த 50 ஆண்டுகளாக தொடர்கிறது. வலுவிழந்து விட்டது என்றாலும் தர்மத்திற்கு புறம்பானது என்பதில் ஐயமே இல்லை.
துருப்பிடித்து போய்விட்ட கருவியாகவே ஆகி விட்டாலும், அவ்வப்போது திராவிட கட்சியினர், அவதூறு பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் ஆளும் தமிழக அரசு இதை கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது.
மிகவும் கொச்சையாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள இந்த பெரியார் பேடிகளையும் ஏன் நமது தமிழக அரசு கைது செய்யவில்லை. சட்டத்தின் முன் நிறுத்த வில்லை என்ற கேள்வி உறுத்துகிறது.
அரசின் இந்த கள்ளமௌனம் நமது தூக்கத்தை கலைக்க வேண்டும். விழித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது!! சிந்திக்க தொடங்குவோம்…
 
 

 

பிராமண எதிர்ப்பு என்பது இந்து மத எதிர்ப்பு தான்…

 
 

Jan-Dhan

ஒவ்வொரு மதத்தினருக்கும் மத குருமார்கள் உண்டு. அவர்கள் அந்த மதத்தின் புனித நூல்களை, அந்த புனித நூல் எழுதப்பட்ட மொழியிலேயே படித்து  தெளிந்து, அதனை மக்களுக்கு புரியும் விதத்தில், பிராந்திய மொழியில் விளக்கி கூறி வழி நடத்துவார்கள்.மதகுருமார்களுக்கு சிறப்பு மரியாதை என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது தான்.
 

 இந்து மத குருமார்கள்

 
இந்து மதம் என்று அழைக்கப்படும் சனாதன தர்மம் சமஸ்கிருத மொழியில் உள்ள நான்கு வேதங்களால் வழி நடத்தபடுகிறது. தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என பல தமிழ் பக்தி புராணங்களால் வளம் பெறுகிறது.
இதனை பல லட்சம் ஆண்டுகளாக, வாய் மொழியாக கற்று, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த பேரறிஞர்கள் ‘‘பிராமணர்கள்’’ என்றே அழைக்கப்ட்டனர். அதாவது ‘‘பிரம்மத்தை’’ படித்தவர்கள் என்பதால் பிராமணர்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்களையே ஷத்திரிய மன்னர்கள் தங்களுக்கு அறம் சொல்லும் மத குருமார்களாக பாவித்தனர். பிற தொழில் செய்யும் இநது சமுதாயமும் ஆன்மீக குருமார்களானவே இவர்களை போற்றி வாழ்ந்தனர்.

அரபு மொழியும் ஷீப்ரூ, அராமிக், கிரேக்க மொழியும்

இஸ்லாமியரின் புனித நூலான குரான் அரேபிய மொழியிலேயே உள்ளது. இந்த அரேபிய மொழியில் புலமை பெற்று புனித நூலின் முழு பரிணாமங்களையும் எடுத்து கூறுபவர்கள் தான் இஸ்லாமிய மத குருமார்கள்.
 
 
இவர்களது அரேபிய மொழியை ஏன் திகவினர் விமர்சிப்பதில்லை.
அதே போவே கிறிஸ்த்துவ அமைப்புகளின் புனித நூல் பிரச்சாரத்திற்கும், திகவினர் மௌனம் தான் சாதிக்கிறார்கள்.
 

மத மாற்றும் சதி திட்டம்

இந்துக்களின் புனித நூல்களான வேதங்கள், பாகவதங்கள் தோவரம் திருவாசகம் இவற்றினை முறையாக பயின்று, மக்களுக்கு செவ்வனே இறைபணி செய்யும் மதகுருமார்களை எதிர்த்து வலுவிழக்கச் செய்வதால் சில அப்பாவி இந்துக்களை மதம் மாற்றம் செய்யலாம் என்ற கணக்கில் தான் இந்த திகவினர், தீய திட்டம் தீட்டி வருகின்றனர்.
மக்கள் மனதில் நமது மதகுருமார்களின் மேலும், நமது புனித நூல்களின் மேலும் அவநம்பிக்கை வரவேண்டும் அவமரியாதை வரவேண்டும் என்று திட்டமிட்டே இந்த தீய செயலை செய்கிறார்கள். தமிழக அரசு அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை எடுத்து வருகிறோம்
 
 
 

இலவசங்களை பெற்று அதர்மத்தை ஏற்பார்கள் தமிழக இந்துக்கள் என்று எண்ணினால் அது தவறு…

Jan-Dhan
இந்து தர்மத்தை கடை பிடித்து வரும் பிராமணர்கள், ஆசாரிகள், செட்டியார்கள் பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் திருமணம் மற்றும் அசுப சடங்கின் போது சத்திரியர்களும் பூணூல் அணியும் பழக்கம் உள்ளது. பன்றிக்கு பூணூல் போடுவோம் என கூறுவது. பூணூல் போடும் பழக்கம் உள்ள மொத்த இந்துக்களுக்கு எதிரான செயல் ஆகும்.
இந்துக்கள் ஒட்டுகளை வாங்க விரும்பும் திராவிட மற்றும் காங்கிரஸ் கட்சிகள். திகாவை எதிர்த்து கண்டன குறள் எழுப்பாதது ஏன். தமிழக இந்துக்கள் தர்மத்தை எதிர்த்து போராட துனிவு இல்லாமல் இலவசங்களை பெற்று ஒட்டளிப்பார்கள் என்று நினைக் கிறீர்களா? அப்படி எண்ணம் இருந்தால் அது தவரானது.
 
 

அந்நிய கைக்கூலிகளால் தான்…

Jan-Dhan
திராவிட கழகத்தின் வரலாறு தெரிந்தவர்களுக்கு பெரியாரின் மறுபக்கம் நன்றாக தெரியும். ஆனால் இன்றைய இளைஞர் கூட்டத்திற்கு எப்படி இந்த புரட்டுகள் தெரியும்.
உலகத்தின் 3வது பெரிய மதமாக உள்ளது இந்து மதம் தான். இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவம் பிற நாடுகளுக்கு சென்று கொடூரங்கள் புரிந்து, பல கோடி மக்களை கொன்றே தங்கள் மதத்தை வளர்த்தன.

எந்நாட்டுடைய சிவனே போற்றி எனும் நமது புராதானமான இந்து மதம். அன்பையே விதைத்து வளர்ந்தது!! இன்று மீண்டும் உலகை வியாபிக்க போகிறது உறுதி..

நமது மதத்தையும் நமது கலாசாரத்தையும் பண்டி கைகளையும் விமர்சிக்கும் இந்த கைக்கூலிகள் யார்??
அந்நிய கைக்கூலிகளான மிஷினரிகள், அவர்களது எச் சில் எலும்புகளை பொறுக்கி எடுத்து கொள்ளும் கம்யூனிஸ் விசுவாசிகள் தமிழர் உரிமைகளை மீட்க போகிறேன் என்று பொய்கூறி, தலீத் மக்களின் வளங்களை கவரும் மத பின் புலம் கொண்ட அரசியல் அமைப்புகள் என அனைத்துமே காசுக்கு மாரடிக்கும் கயவர் கூட்டம் தான்.
ஊடகங்கள் இவற்றை அம்பலபடுத்த வேண் டும். ஆனால் இன்று வேலியே பயிரை மேயந்த கதையாக பல ஊடகங்களையே இந்த சதி கும்பல் தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளது எனும் போது இனி இந்து பாதுகாப்பு அமைப்புகள் சிந்திக்க வேண்டும்.
 
 

இந்திய இறையாண்மை அரசியல் அமைப்பு சட்டம் விதி எண்&3ன் படி

 
Jan-Dhan
தமிழகத்தில் 1970 களில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் திராவிடர் கழகம் இந்துக்களுக்கு எதிராக, பிராம்மணர்களுக்கு எதிராக மாபெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் வன்முறையையே வாழ்க்கையாக கொண்டு  செயல்படுகிறார்கள். சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் இந்துக்களுக்கு இடையே சாதிய பிளவுகளை,
சாதிய வெறியைத் தூண்டிவிட்டு நாட்டில் அமைதி யைக் கெடுக்கும் முயற் சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் தங்களின் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து ஹிந்துக்களை, ஹிந்துக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதையே வழக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்திய குற்றவியல் சட்டப்படியும் இவை தண்டனைக்குரிய குற்றங்கள்.
மாண்புமிகு முதலமைச்சர்  சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்தவித அச்சமுமின்றி அமைதியாக வாழ்வதை  உறுதி செய்யவேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

VAISHNAVA ELEMENT OF TIRU-K-KURAL

 

It has been pointed out that the unrivalled Tamil classic of tiru-k-kuraL is held by some partisans to be Jaina and, alternatively, Saiva in character.     It is not only the tiru-k-kuraL, but also Kamban?s famed rAma-kathA and Srivilli-puttoorAr?s mahA-bhAratam, that have excited the Saivas to throw up claims of their religious estate over them.    

 

IS IT A JAINA WORK ?

 

As for Jaina claims, the Jaina-darSanam acknowledges the jeeva-s (individual soul), dharma (animating principle), adharma (the static principle), puttala (concretized atoms and their characteristic assembly), kaalam (time dimension), and AkASam (space). God or any of God?s valencies is not included in this six-fold basic Jaina assumptions. (This is discussed in SribhAshyam, ?naikasmin-na sambhavAt?, 2-2-31.) As such, it passes how the atheistic (?nireeSvara?) Jaina darSanam could justify itself in tiru-k-kuraL which vibrates throughout to theistic notes.  

 

And it was not only the Saivas ;  a Christian outfit at Tiruchi (Tamil Nadu) had, some 15-20 years back, eagerly funded a so-called **research** study which **started with its conclusion** that tiru-k-kuraL was an entirely Christian work !  

 

VAISHNAVA PROOF OF TIRU-K-KURAL

 

Tiru-k-kuRaL is what could be described as ?neeti-SAstram?. It contains profound epigrams, as in the ?subhA****a? literature, like bhartRhari?s ?Sataka-trayam? in Sanskrit, the ?sumati-Satakam? in Telugu, dAsa-bOdham in Marathi, but none of these can be designated as ?SAstram?.  It would be fruitful to make a synoptic study of kuRaL, Apastambha-dharma-sUtram and manu-smRti as works of kindred genre.   (The ?Srivaishnava Sudarsanam? editor, Sri S. Krishnaswami Aiyyangaar, has published an excellent Sanskrit translation of the first two books of kuRaL by the  incumbent vAna-mA-malai jeeyar svAmi.) 

 

A compilation of 55 verses, under the title tiru-vaLLuva-mAlai, contains tributes to kuRaL from different savants and all of them designate it as Tamil scripture.    The ?mAlai? contains repeated comparison of the kuRaL (consisting of two-lined verses) to the vAmana incarnation of the Lord, both being ?short? or ?tiny? in form but transcendental in import.

 

?tirumAl as little vAmana just shot up (in cosmic form) to stride in just two steps across all of creation; even so has Valluvar of blemishless wisdom comprehended, in  his couplets, the entirety of human values.? [bharanar]. 

 

?Our lores say that it was kaSyapa who was progenitor of the little vAmana;  verily so is Valluvar?s kuRaL exalted in heaven and has scanned the earth.?  [ponn-muDiyAr].

 

?Valluvar imparts the threefold values (purushArtha ~ dharma, artha, kAma) naturally, and in this (the kuRaL) would compare with bhAratam, SrirAma-kathA, manu, and the timeless vEda, no less.? [bhAratam perun-dEvanAr].

 

?The lotus among flowers, the jambUnatam for gold purity, kAmadhenu among kine, airAvatam among the elephants, and Narayana among the celestials, so is Valluvar?s work unique for poesy.?  [kavi-sAgara perun-dEvanAr].

 

QUOTES FROM KURAL ITSELF.

 

The opening verse is an invocation to God identified as ?the letter A precedent to alphabets?, ?primordial Adi?, and ?bhagavan?.

 

?the letter A precedent to alphabets? is a direct translation from Patanjali?s mahA-bhAshyam (on pANinee?s ashTAdhyAyee) averment, vAsudEva is identified in letter A (?akAra-vAchyO vAsudEva:?).

 

?primordial Adi? echoes the opening verse of taittireeya Upanishad, the Brahman from which these beings spring etc [?yatO vA imAni bhUtAni jAyantE??].   The Upanishad is cited by Sri Ramanuja in his SribhAshyam  on the brahma-sUtram  ?janmAdyasya yata:? (1.1.2.).

 

?bhagavan? is the unique and famous cognomen (?rUDhee vAchyam?] of Narayana, as testified in vishNu-purANam (6-5-68).   The root ?bhaga? signifies the host of six precious qualities of the Lord ~ aiSvarya, veerya, yaSa:, Sri, jnAna, vairAgya.   The derivative ?bhAgavata? applies to a Vaishnava.

 

Verse 84 extols the householder?s hospitality which makes for the grace of Lakshmi of pink lotus complexion (?SeyyAL?).

 

Verse 167 warns that envy would result in the lapse of the grace of Lakshmi (?SeyyavaL?).

 

Verse 356.  One who acquires the wisdom of instruction from the guru shall eventually reach for the passage of no-return (to worldly career of suffering and tribulation).  [maRReeNDu vArA neRi.]

 

?passage of no-return? [maRReeNDu vArA neRi] is, of course, from ?brahma-lOkam abhi-sampadyate, na cha puna: AvartatE, na cha puna: AvartatE? of  chhAndOgya Upanishad (viii.xv.1) which is recalled in the conclusive brahma-sUtram ?anAvrtti: SabdAt, anAvrtti: SabdAt?, where SribhAshyam fortifies with Lord Krishna?s declaration, O son of Kunti, one who attains unto me knows no more of rebirth (?mAm upEtya tu kauntEya, punar-janma na vidyatE?  Gita 8:16).   Also, The transcendental path reaches unto my Supreme Abode from which there is no return (?paramAm gatim, yat prApya na nivartantE tad-dhAma paramam mama?, Gita 8:21).   This manner of riddance of a return [maRReeNDu vArA neRi] unto worldly suffering, guaranteed by the permanent proximity with the Lord in his Supreme Abode, is testified in kaThOpanishad 1-2-9 (?He thus reaches that station from where he does not get back to be born?  that is the Supreme Station of Vishnu?  ~ ?sa tu tat padam ApnOti, yasmAt bhUyO na jAyatE? tad vishNO: paramam padam?.)

 

Verse 519.  Lakshmi (?tiru?) will desert the ruler who is  suspicious of an earnest worker.

 

Verse 610.  The ruler who is free from laziness shall attain unto the domain of the entire spread of worlds which the Lord (trivikrama) spanned with his feet (?aDi aLandAnn tAyadu ellAm?).

 

Verse 617.  The deity of Lotus (?tAmaraiyinAL?, padminee) will be with him who is free of idleness.

 

Verse 1103.  Do you fancy that the world of the lotus-eyed Lord (Vishnu, puNDareekAksha ~ tAmarai-k-kaNNAnn) offers greater delight than leaning on the slender shoulder of one?s beloved ?

 

The kuRaL classic, dated antecedent to 2nd cent.AD, thus extensively reflects the verities of our dharma-SAstra and the vEda and, on the plane of theomorphism, God-identity, it is richly permeated with Vaishnava elements.   The two marked characteristics of Sriman-nArAyaNa, namely, the lotus tint of his eyes (?kapyAsam puNDareekam Evam akshiNee?) and his stridence over the three worlds (?idam vishNur vichakramE trEdhA nidadhE padam?) are invoked in very crucial places in this classic.

 

STANDARD SAIVA OPERATIONS.

 

Attached to this note are some mails drawing attention to the on-going aggressiveness and crudity of Saiva assault on Vaishnava religion. It becomes important to understand what is the backdrop of such Saiva cynicism.  

 

It is patent that the Saiva icons are offensive to the eye as Saiva exploits are raucous on the ear ~ ?kANilum uru-p-polAr, Sevikku inAda keertiyAr?, as in tiru-c-chanda-vrttam 69:   cremation grounds for his haunt, grotesque in his looks, ?pitr-sadma-GOchara:? and ?bheema-rUpa:? is how the celebrated poet Kalidasa put it in his ?kumAra-sambhavam? as ?nindA-stuti?, but literally true, of the Siva concept.   

 

It was therefore necessary for Saivam to go for cosmetics on its essentially crude shamanistic practices (without abandoning its essential lewd and morbid elements) so as to acquire material resources (grab and sneak into Vaishnava temples) and seek respectability for its religious books.   Since their books do not get across rightaway, the ploy is to propagate stuff as part of expositions of the Vaishnava books of  SriRamayana and Mahabharatam.  [Why did Sri Vibhishana establish the Sriranga-vimAnam in river kAvEri ?  It was piLLaiyAr who made him do that !]   The late Saiva preacher Kripananda Variar was an adept in this.

 

The Saiva operations are two-fold in kind:  firstly, to effect massive interpolations into patently Vaishnava works, and force-instal sacreligious structural / sculptural additions in Vaishnava holy places. (One instance of such unaesthetic modern installations is the huge concrete nandi statue painted in blinding coppersulphate blue and set up at the approach to the AzhvAr-teertham falls at the foothills of tirumalai-tiruvEnkaTam. So with the same-tint concrete Siva outside of the Haridwar railway station.  But the most recent and offensive and unwarranted action of humdrum ?hindu? revivalism is the towering (60 ft ?) concrete Siva stood astride the holy stream of GangA right at the ?hari-ki-paeri? bathing ghat. The gazetteer compiled in British days contains a record of the armed rioting of Saiva gangs at Haridwar seeking to get it re-named as Haradwar, but the British upheld the ancient name Haridwar as sanctified in civil and religious history.)

 

Secondly,  the Saivas simply appropriated a Vaishnava work / shrine through the subversion of misinterpretation / disfiguration.   The Saiva shrines at Tirunelveli-tiru-k-kuRRAlam,  tiruvaNNA-malai, tiruvArUr, are said to be instances of such (mis-)appropriation.  Where for any reason a minor Saiva shrine is accommodated within a major Vaishnava temple, the Saiva tenant abruptly breaks bounds and gets to spill around all over the place.   This is happening right now in the divya-dESam karambanUr-uttamarkOyil (just to the north of Srirangam) and tiru-k-kuRun-kuDi (in district Tirunelveli).

 

The Tamil classics of SriRamayana and Mahabharatam were treated to liberal (and, predictably crass) Saiva interpolations.   The goody-goody Saiva scholar, T.K. Chidambaranatha Mudaliar, had issued his own edition of Kamban omitting drastically and virtually all crucial sections of Vaishnava aesthetics and sensibilities, but  TKC it was who had pointed out that massive interpolations had been effected in this surpassing classic by the Saiva, one Velli-ambala-desikar.    The aruli-c-cheyal edition of Vidwan Puduvai Venkatasami Reddiar carries his erudite article exposing the Saiva interpolations in Villi-puttoor Bharatam.    The legend of brahmA-vishNu expeditions to reach for the scalp and bottom of the cosmic phallus has been inserted in the vAmana-purANa?s section detailing the nara-nArAyaNa hermitage of badarikASramam ~ the insertion just sticks out as one, and is as visible as a wart.   The silly jalandhara episode (offered ostensibly as an account of the tulasi ~ sweet basil, or ocimum sacrum ~ which is central and sacred to Vaishnava sentiment) is one such morbid insertion in the beautiful and poetic padma-purANam, and the most recent savant to condemn it as unauthentic is the scholarly cognoscenti (rasika), Sri Krishna-premi svami, who lives in Srirangam.

 

The wonder of ?Atti-c-chUDi?, the alphabetically arranged epigrams (which are even shorter than kuRaL), also says (at the syllable ?ti?), Be thou devoted to Vishnu (?tiru-mAlukku aDimai seyi?).   The Saiva tamperer, in his despair, just wrote out a Saiva invocation (referring to Siva as donning the string of Atti leaves) and prefixed the invocation on top of this work.  Going by the potency and popularity of crass handiworks, the work has got to be known as ?Atti-c-chUDi?, despite that it contains no Saiva reference whatsoever..

 

tirumanjanam Sundara Rajan.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard