New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது: வைரமுத்து மொழித் திறமையா? தமிழ்ப்புலமையா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது: வைரமுத்து மொழித் திறமையா? தமிழ்ப்புலமையா?
Permalink  
 


ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது:

 

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையாஅல்லது தமிழ்ப்புலமையா?

 

'தேவதாசி' ஒழிப்பு சட்டம் தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் முன் வைத்த வாதங்கள் அடிப்படையிலும்;

வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்கு ஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251  );

அதை உறுதிப்படுத்தாமல் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்று அறிவுநேர்மையுடன் வைரமுத்து ஒத்துக் கொள்ளாததையும்;

'கழகம்' என்ற சொல்லானது 'சூதாடுமிடம்' என்று திருக்குறளில்(937) வருவதன் அடிப்படையில், இன்று அதே பொருளில் 'திராவிட' கட்சிகளின் பெயரில் வரும் கழகத்தை குறிப்பிடமுடியுமா? என்ற கேள்வியையும்;

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக';

முன்வைத்துள்ள விளக்கமானது அறிவுநேர்மையாகுமா? என்ற கேள்வியையும்;

பின் தள்ள, எச்.ராஜா போன்றவர்கள் எழுப்பியுள்ள‌ உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் உதவ அனுமதிக்க கூடாது.

தமிழில் 'சாதிஎன்ற சொல்லின் பொருளானதுகாலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமலும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/   )

'நிலவுடமைஎன்ற கருத்தும் மேற்கத்திய இறக்குமதி என்பதும்அது ஆண்டாள் வாழ்ந்த தமிழகத்துக்குபொருந்தாது என்பது தெரியாமலும்; 

மேற்கத்திய குறிப்பாய (western paradigm)  'பெண் உரிமை'யின் வரை எல்லைகள் (limitations)  புரியாமலும்;( ;http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none.html  ) 

வைரமுத்து வெளிப்படுத்தியுள்ள விளக்கமும் விவாதத்திற்கு உரியதாகும். 

தமது மொழித் திறமையின் (language skills) மூலம்,  தாம் புரிந்த தவறுகளிலிருந்து தப்பிக்கஒரு வகை'கவர்ச்சிகர மொழிநடையைபிரபலமானவர்கள் கையாளும் போதுஅவர்களுடன்அவர்கள் கையாண்டமொழி நடையும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கேலிப் பொருள் ஆகிவிடும் அபாயமும்தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/06/  ) 

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவெளிப்படுத்தியுள்ள கட்டுரை மற்றும்தொலைக்காட்சி விளக்கம் அடிப்படையில்; 

தமிழில் அவருக்கு இருந்த திறமைகளையெல்லாம் (Tamil Language Skills) பயன்படுத்தியிருந்தாலும்; 

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையாஅல்லது தமிழ்ப்புலமையா?

 

என்ற ஆராய்ச்சிக்கு அவரின் படைப்புகள் அனைத்தையும் உட்படுத்த வேண்டிய நெருக்கடியையும்அந்தவிளக்கங்கள் ஏற்படுத்தி உள்ளன. 

அவரை ஆதரித்து முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்கள் எல்லாம்; 

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில்பொது அரங்கில் ஆதிக்கம் செலுத்திஆனால் இதுவரை அடையாளம் கண்டு அகற்றப்படாத;( http://tamilsdirection.blogspot.in/2015/10/ & http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html  ) 

தர்க்கவிரோத (illogical)  குறைப்பாடுகள் எல்லாம், 'ஆண்டாள்கருணையால் அறிவுபூர்வ குவியத்திற்குள்ளாகிஅந்த குறைபாடுகளில் இருந்துதமிழ்நாடு விடுதலை பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில்பொதுஅரங்கில் நிகழ்கால தலைவர்களில் வைரமுத்துவால் உச்சமாக பாராட்டப்பட்ட தலைவராகிய‌ தி.மு.தலைவர் வெளிப்படுத்திய‌ 'தரம் தாழ்ந்தசொற்களை எல்லாம் தொகுத்து, 'இதுதானா சார் உங்க தரம்என்றதலைப்பில் ' தமிழக அரசியல்' (24.01.2018; பக்கம் 40) வெளியிட்டுள்ளது.

மொழியில் திறமை (language skills) என்பதற்கும் புலமை (scholar) என்பதற்கும் உள்ள வேறுபாட்டினைவிளங்கிக் கொள்ளஇசை தொடர்பான விளக்கம் துணை புரியும். 

அது மட்டுமல்ல, 'கவிஞர்என்ற அடிப்படையில்திரைப்படங்களில் சுருதி சுத்தமில்லாத பாடல்களைஎழுதும் போக்கை, முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் வைரமுத்துவாஎன்பது தொடர்பான எனதுஆய்வினையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html) 

ஒரு இசை அமைப்பாளர் தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை என்ற இரண்டு'துடுப்புகளின்துணையுடன்தமது பார்வைக்கு வரும் இசைகளை மூலங்களாகக் கொண்டு வெளியில்தெரிந்தும் தெரியாமலும் 'காப்பிஅடித்து, 'ஹிட்பாடல்களையும் தரமுடியும். 1970களில் 'மாடர்ன்தியேட்டர்ஸ்தயாரித்த படங்களில்வெளியில் தெரிந்துபிரபலமான இந்தி திரைப்படப் பாடல்களைஅப்படியே தமிழிலும் 'ஹிட்டாகஇசையமைத்தவர் வேதா(பெயர் எனது நினைவின்படி). 

இன்று நாம் ரசிக்கும் பாடல்களில் வெளியில் தெரியாமல், தம்மிடமுள்ள தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை மூலம்  'காப்பியடித்துவெளிவந்த பாடல்களின் உண்மையான மூலங்களும் (sources) இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளனஆராய்ச்சி கட்டுரைகளில் 'திருடிஎழுதியவைகளைகண்டுபிடிக்கும் மென்பொருள் (Software) பயன்படுத்தப்படுகிறதுஅது போல இசையிலும் 'திருட்டைகண்டுபிடிக்கும் மென்பொருளை என்னால் உருவாக்க முடியும்தரமிக்க அமைப்புகள் அந்த ஆய்வுத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கினால். 

தம்மிடமுள்ள தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை மட்டுமின்றிஇசையில்புலமையும் உடையவர்களின் படைப்புத் திறனைப்
(Creativity) திறமையைப் பொறுத்துஉலக அளவில் சாதனையான இசைகள் (Compositions) வெளிவந்துள்ளனமேலே குறிப்பிட்ட இசைத் திருடர்களுக்கும் மூலங்களாக (Sources) பயன்படும் வகையிலும். 

இசையைப் போலவேஒரு மொழியிலும் தமக்குள்ள மொழித் திறமைகள் மூலம் ஒருவர் பேச்சாளராகவும்எழுத்தாளராகவும்கவிஞராகவும்தமக்குள்ள 'சந்தைப்படுத்தல் திறமையைப் (Marketing Skill)  பொறுத்து,வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அவ்வாறு வலம் வரும் நபருக்கு அந்த மொழியில் புலமை இருக்கிறதாஇல்லையாஎன்றஆராய்ச்சியானதுபொது அரங்கில் அதற்கான நெருக்கடி வரும்போதே வெளிப்படும்அந்த சமூகத்தில்புலமையும்புலமையாளர்களும் பொதுவாழ்வு வியாபாரிகளின் செல்வாக்கில் உள்ள மீடியாவின்வெளிச்சத்திற்கு வராமல்இருட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலில்.            


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது: வைரமுத்து மொழித் திறமையா? தமிழ்ப்புலமையா?
Permalink  
 


வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவிளக்கங்களில், 'சாதிஎன்ற தமிழ்ச்சொல்லைபயன்படுத்தி உள்ளார். 

ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தில், 'சாதிஎன்ற தமிழ்ச் சொல்லிற்கு இன்றுள்ள பொருள் இல்லை; ( ;( http://tamilsdirection.blogspot.in/2016/01/  ) 

என்று தெரியாமல்காலனிய சூழ்ச்சியில், 'பொருள் திரிபுக்குள்ளாகி' (Semantic Distortion), வைரமுத்துபயன்படுத்தியுள்ள பொருளில்தமிழில் இருந்த 'சாதிஎன்ற சொல்லானதுபொருள் திரிபுக்கு உள்ளானது; 

என்ற புலமை வைரமுத்துவுக்கு இல்லை;


என்பதற்கு அவரின் மேலே குறிப்பிட்ட விளக்கமே சான்றாகிறது.

ஆண்டாள் தொடர்பாக வைரமுத்துவின் புலமைக்குறைப்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுகீழ்வரும் கட்டுரை:

http://dhinasari.com/general-articles/23941-tips-to-vairamuthu-how-to-do-thesis-studies-in-andal-poems.html 
அது போலவேஇந்திய சமூகத்தை 'நிலவுடைமை  உறபத்தி முறை' (Feudal Mode of Production) சமூகமாஅல்லது 'ஆசிய சமூக உற்பத்திமுறை ( Asiatic Mode of Production) சமூகமா?' என்று காரல் மார்க்ஸேஅடையாளம் காண முடியாமல் குழம்பியது தெரியாமலும்; 

ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் நிலவுடமை சமூகம் இருந்ததாக கருதி, வைரமுத்து விளக்கம்அளித்துள்ளார். 

தமது விளக்கத்தில் உள்ள அபத்தம் பற்றிவைரமுத்து தெளிவு பெற விரும்பினால்; 

பேரா.அருணன் எழுதி 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வுஎன்ற நூலுக்கு; 

பேரா.வெற்றிமணி என்ற எனது புனைப்பெயரில், 'விடுதலை', 'உண்மை' இதழ்களில் மறுப்பு வெளிவந்து, பின் 'பெரியாரியலா? மார்க்சியமா?' என்ற தலைப்பில், ( என்னிடம் அனுமதி கூட பெறாமல் வெளியிடும்'நாகரீகம்'(?) உள்ள 'பெரியார்' ஆதரவாளர்கள் மூலம்) தற்போது வெளிவந்து விற்பனையில் உள்ள  நூலைபடிக்குமாறு ப‌ரிந்துரைக்கின்றேன்.

உலக மொழிகளிலேயே இன்று தமிழுக்கு மட்டுமே, மொழி தொடர்பான திறமைக்கும் (Language Skills)புலமைக்கும் (Scholarship) இடையிலான வேறுபாடு மறைந்துசந்தைப்படுத்தலில் (Marketing),  'அதீதவெற்றிபெற்றமொழி திறமையாளர்கள் (language skilled persons ) எல்லாம் புலமையாளர்களாக (scholars) வலம் வரும்அவலம் நேர்ந்துள்ளதா? 

என்ற விவாதம் தொடங்க வேண்டிய நேரமும் வந்து விட்டதுஆண்டாளின் கருணையால். 

உணர்ச்சிபூர்வ இரைச்சலுக்கு இடமளிக்காத மேற்குறிப்பிட்ட‌ விவாதத்தில், 'தமிழ் இலக்கணத்தில் தமக்குஆழ்ந்த புலமையில்லைஎன்பதை வெளிப்படுத்தியுள்ள அண்ணாவின் பங்களிப்பும்இடம் பெற வேண்டியநேரமும் வந்து விட்டது.( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

தமிழில் மொழி தொடர்பான திறமைக்கும் (Language Skills), புலமைக்கும் (Scholarship) இடையிலானவேறுபாடு மறைந்ததற்கு காரணமான சமூக செயல்நுட்பம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால்;
 

தமிழர்களில் தரகு/ரவுடி திறமைகளில் 'புலமை'(?) மிக்கோரின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கி சீரழிய, 'அந்தபுலமையாளர்களை'  துதிபாடி பிழைக்கும் பேச்சாளர்கள்எழுத்தாளர்கள்கவிஞர்கள் கும்பல் வளர்ந்தபோக்கில்தமிழில் புலமை சீரழியவும், 'அதே சமூக செயல்நுட்பம்காரணமாகி விட்டது;

 

என்ற முடிவும் வெளிப்பட்டால் வியப்பில்லை'அந்த சமூக செயல்நுட்பம்பற்றிய புரிதலின்றி, 'குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பு போதையில்தெரிந்தும்தெரியாமலும் 'அந்த புலமையாளர்களைஆதரித்த‌ அறிவுஜீவிகள் எல்லாம்
 


'ஆண்டாள் சர்ச்சையில்என்ன நிலைப்பாடு எடுப்பது?' என்று விழி பிதுங்கி மெளனப் போக்கினைகடைபிடித்தால்;
 
'அந்த மெளனப் போக்கே', அவர்களின் பொதுவாழ்வு மரணத்திற்கு இட்டுச் சென்றால் வியப்பில்லைஆண்டாளின்கருணையால்.
 
திருக்குறளை (423) ஓரங்கட்டி;
'எப்பொருள் எவர்வாய் என்றாய்ந்து அவர்பால்
 வெறுப்பை உமிழும் இழிவுஎன்ற புதுக்குறள் வழியில்;
 
பயணிக்கும் 'குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பானது', வைரமுத்துவின் பங்களிப்பால்ஆண்டாள்சர்ச்சையின் மூலம் அருங்காட்சியகத்திற்கு சென்றால்அது தமிழ்நாட்டிற்கு நல்லதாகவே முடியும்; 'சமூகத்தூண்டல்' (Social Induction)  மூலம் அந்நோய்க்குள்ளான இந்துத்வா ஆதரவாளர்களையும் குணப்படுத்தி.
 

'வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையாஅல்லது தமிழ்ப்புலமையா? என்ற தலைப்பில்ஆர்வமும் உரிய உழைப்பும்உள்ளார்ந்த ஈடுபாடும் (Passion) உள்ள எவரும், 

இந்தியாவில் தரம் மிக்க பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில்  ஈடுபட விடும்பினால்'ஆண்டாளின் 

கருணைக்குநன்றி தெரிவித்துஅந்த ஆராய்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை புரியஇயலும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, January 13, 2018

 

வைரமுத்து 'கோழை இரட்டை வேடப் போக்கில்பயணிக்கிறாரா?
 
ஆண்டாள் பற்றி இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் கூறிய ஒரு வரியையே மேற்கோள்காட்டியதாக விளக்கமளித்து;
 
'ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவதுஎன் நோக்கமன்றுஎன்றும், 'அவ்வாறுபுண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 
அந்த ஆய்வினை மேற்கோள் காட்டுவதற்கு முன்அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்திற்கானசான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு அறிவுபூர்வமானவை என்று ஆராயாமல்அதனை வைரமுத்துவெளிப்படுத்தியிருந்தால்தான் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்திருக்கவேண்டாமா? (குறிப்பு கீழே)
 
மேற்கத்திய உலகில் கிறித்துவ முஸ்லீம் மதங்களின் கடவுள்கள்குறியீடுகள்மதநூல்கள் பற்றியும்ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
உதாரணமாகஏசுநாதரின் உண்மையான பெற்றோர்கள் யார்என்பது குறித்த ஆய்வுகளைவெளிப்படுத்துவதானதுமேற்கத்திய உலகில் வாழும் கிறித்துவர்களின் மனதை புண்படுத்தியதாகஎந்தஎதிர்ப்பும் வெளிப்பட்டதாக தெரியவில்லை. (‘The evidence of the Rabbis’; https://www.bibliotecapleyades.net/biblianazar/esp_biblianazar_7.htm ) ஆனால் அதனை வைரமுத்துவெளிப்படுத்தினால்அதனால் மனம் புண்பட்ட கிறித்துவர்கள் எல்லாம்வைரமுத்துவை கண்டித்துபோராட்டம் நடத்த மாட்டார்களா?
 
முகம்மது நபியை இழிவுபடுத்தி கார்டூன்கள் வெளிவந்த போதுஉலகம் முழுவதும் எதிர்ப்புகள்வெளிப்பட்டனபின் அதற்காக மன்னிப்பு கேட்டும்அந்த எதிர்ப்புகள் அடங்கவில்லை. (https://en.wikipedia.org/wiki/Jyllands-Posten_Muhammad_cartoons_controversy#Response_to_protests_and_reprintings )
 
மக்களின் வழிபாட்டிற்கு உள்ளான கடவுள்கள்தலைவர்கள் தொடர்பான ஆய்வுகளைமக்கள் மன்றத்தில்வெளிப்படுத்தும்போது;
 
அவ்வாறு வழிபடுபவர்களின் மனம் புண்படும் வகையில் வெளிப்படுத்துவதானதுபொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் பொறுப்பற்ற செயலாகும்.
 
அதிலும் கிறித்துவமுஸ்லீம் மதங்களில் உள்ள வழிபாட்டாளர்களுக்கு அஞ்சி வாழும் போக்கில்;
 
இந்து கடவுள்களையும்மதநூல்களையும் இழிவுபடுத்தும் 'கோழை இரட்டை வேடப் போக்கினைகண்டிக்காத 'முற்போக்குகள்'  வாழும் தமிழ்நாட்டில்கட்சித்தலைவர்களின் நூல்களை அறிவுபூர்வமாககூட விமர்சிக்கமுடியாத 'அறிவு ரவுடித்தன போக்குஇருப்பதற்கு சான்றாகவே;
 
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்'  நூலாசிரியரின் வாழ்வானதுவரலாற்று சான்றாகி விட்டதுவைரமுத்து போன்ற இன்னும் பல பிரபலங்களுக்குதமிழ் மீது  நேர்மையான அக்கறை இருந்திருந்தால்;
 
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்நூல் எழுதிய தமிழ் அறிஞர் நக்கீரன்(http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802 );
 
சாகும் வரைதமது ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்திருக்க வேண்டிய நெருக்கடியானதுஅவருக்குவந்திருக்குமா?
 
'தமிழ் உணர்வு, இந்துத்வா எதிர்ப்பு' என்ற பெயரில் உணர்ச்சிபூர்வ முட்டாள்களை வளர்த்து, 'கோழைஇரட்டை வேடப் போக்கில்' வைரமுத்து போன்றவர்கள் பயணித்து, பணத்திலும், செல்வாக்கிலும்'வளர்ந்து'(?) வந்துள்ளார்களா? அந்த வளர்ச்சிப் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமளிக்காத'அறிவு ரவுடித்தன போக்கு' வளர்ந்து, நக்கீரன் போன்ற புலமையாளர்கள் எல்லாம் அஞ்சியும், மீடியாவெளிச்சமற்ற இருட்டிலும், வாழும் அளவுக்கு; 

தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வாஎதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில்பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?

வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா? (‘'அழுகியது' கழகங்கள் மட்டுமா? 'அழுகல்' மனிதர்கள்எல்லாம், ‘அழுகல்  இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்; http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html ) 


தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் துணையுடன் தமிழ்வழிக்கல்வியை மீட்பது பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  ) ஆங்கிலவழிக்கல்வியின் வளர்ச்சிக்கு கல்வி வியாபார‌ ஊழலே முக்கிய காரணமாக இருப்பதால், ஊழல் ஒழிப்பும் தமிழ்வழிக்கல்வி மீட்சியில் உள்மறைந்துள்ளது.
 
ஊழல் திமிங்கிலங்களின் அரவணைப்பில் வளர்ந்துள்ள ஆங்கிலவழிக் கல்வி மோகத்தில் சிக்கி,முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வைரமுத்து போன்ற பிரபலங்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம்அடிப்படைக்கல்வியைக் கூட ஆங்கிலவழியில் பயின்றிருந்தால்அது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.


மேற்கத்திய குறிப்பாயத்தின் (Western Paradigm) 'மன அடிமையாக', அத்தகைய ' கோழை இரட்டை வேடப்போக்கின்சான்றாக, ' மாதொரு பாகன்வெளிவந்ததுள்ளதையும் நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) 

அத்தகைய 'கோழை இரட்டை வேடப் போக்கில்இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் எல்லாம்சமூக குற்றம் புரியும் நோக்கில் செயல்படுபவர்கள் ஆவர். (The standard common law test of criminal liability is expressed in the Latin phrase actus reus non facit reum nisi mens sit rea, i.e. "the act is not culpable unless the mind is guilty". ( https://en.wikipedia.org/wiki/Mens_rea )
 
மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இது போன்ற ஆய்வுகள் எல்லாம் பெரும்பாலும் ஒருஉள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதானதுவைரமுத்துக்கு தெரியாதா?
 
உதாரணமாக அமெரிக்காவில் இர்சிக்ஹார்ட்கெரேவ்உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் எல்லாம்நீதிக்கட்சியை மட்டம் தட்டிஅதை விட தி. மேல் என்றும்பின் தி.கவை மட்டம் தட்டிஅதை விட தி.மு.மேல் என்றும்மேற்கொள்ளப்பட்டதைநான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
 
மேற்கத்திய பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் தொடர்பாக வெளிப்பட்ட ஆய்வினை தெரிந்து கொள்வதில்ஆர்வம் காட்டிய வைரமுத்துஅவரின் திரைப்படப் பாடல்களில்எழுத்தொலிகளின் சுருதி சுத்தமானதுகுறைபாடுள்ளதாஎன்பது தொடர்பாகநான் வெளிப்படுத்தியுள்ள ஆய்வினை தெரிந்து கொள்வதில்ஆர்வம் காட்டினாரா? ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )
 
தெரிந்தும் தனது செல்வாக்கின் மூலம் அதனை அறிவுபூர்வமான பொது விவாதத்திற்கு உட்படுத்தாமல்இருட்டடிப்புக்கு உள்ளாக்கியுள்ளாராஎன்பது அவரின் மனசாட்சிக்கே வெளிச்சமாகும்.
 
தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகளில் அதிகம் சிக்கிசிறைபட்டு தவிப்பது திருக்குறள் தொடர்பான ஆய்வுகளா? ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
 
 
 
 
என்பது பற்றி வைரமுத்து இதுவரை கவலைப்பட்டாராஇனியாவது கவலைப்படுவாரா?
 
உலக அள்வில் புகழ் பெற்ற மேற்கத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்டன் பொல்லாக் தமிழைப்பற்றிஅபத்தமானதவறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டதை வைரமுத்து இதுவரை கண்டித்தாராஇனியாவது கண்டிப்பாரா? (http://tamilsdirection.blogspot.in/2017/11/tamil-chair.html )
 
இல்லையென்றால்தமிழை முதலில்லாத மூலதனம் (capital without investment) ஆக்கிய பொதுவாழ்வுவியாபாரியாகஅவர் தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா?

தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கிதமிழர் பற்றிய‌ சுப்பிரமணியசுவாமியின் கருத்தினை, இந்துத்வா எதிர்ப்பில்உள்ள 'பிரபலதலைவர்கள் எவரும் கண்டித்தார்களாஅவர் வெளிப்படுத்திய 'பொர்க்கி தமிழர்வரையறையின் அடிப்படையில்குறைந்த பட்சம்அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டார்களா? (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html   மாறாக அவரின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா குடும்பஅரசியலை அவர்களும் ஆதரித்ததானதுஎதை உணர்த்துகிறதுஆதாய நோக்கற்ற இயல்பான‌ எதிர்ப்புவலிமையின்றியும்அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்புஎன்பதானது, 'சமூககோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானதுஆண்டாள் சர்ச்சையில்வைரமுத்துவின் மூலம்வெளிப்பட்டுள்ளதா?
என்பது போன்ற கேள்விகளை எல்லாம்;
 
ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில்திருக்குறளுக்கு ( 711 & 713) முரணாக அவை அறியாமல் பேசிய‌வைரமுத்துவின் ஆதரவாளர்களாக பயணிப்பவர்களின் மனசாட்சிக்கு முன்வைக்கிறேன்.வைரமுத்துவுக்கு ஆதரவாக கூட்டாக அறிக்கை வெளியிட்டகடந்த பாராளுமன்ற தேர்தலின் போதுமோடியை எதிர்த்து கூட்டாக அறிக்கை வெளியிட்டஎழுத்தாளர்களும் மேலே குறிப்பிட்ட, வைரமுத்துவைநோக்கி எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குஅவரவர் மனசாட்சிக்கு உட்பட்டுவிடைகள் கண்டுயணிப்பார்களா?


குறிப்பு :

'வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக‌ அம்பலம்' ; http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Saturday, January 13, 2018

 

வைரமுத்து 'கோழை இரட்டை வேடப் போக்கில்பயணிக்கிறாரா?
 
ஆண்டாள் பற்றி இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் கூறிய ஒரு வரியையே மேற்கோள்காட்டியதாக விளக்கமளித்து;
 
'ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவதுஎன் நோக்கமன்றுஎன்றும், 'அவ்வாறுபுண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 
அந்த ஆய்வினை மேற்கோள் காட்டுவதற்கு முன்அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்திற்கானசான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு அறிவுபூர்வமானவை என்று ஆராயாமல்அதனை வைரமுத்துவெளிப்படுத்தியிருந்தால்தான் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்திருக்கவேண்டாமா? (குறிப்பு கீழே)
 
மேற்கத்திய உலகில் கிறித்துவ முஸ்லீம் மதங்களின் கடவுள்கள்குறியீடுகள்மதநூல்கள் பற்றியும்ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
உதாரணமாகஏசுநாதரின் உண்மையான பெற்றோர்கள் யார்என்பது குறித்த ஆய்வுகளைவெளிப்படுத்துவதானதுமேற்கத்திய உலகில் வாழும் கிறித்துவர்களின் மனதை புண்படுத்தியதாகஎந்தஎதிர்ப்பும் வெளிப்பட்டதாக தெரியவில்லை. (‘The evidence of the Rabbis’; https://www.bibliotecapleyades.net/biblianazar/esp_biblianazar_7.htm ) ஆனால் அதனை வைரமுத்துவெளிப்படுத்தினால்அதனால் மனம் புண்பட்ட கிறித்துவர்கள் எல்லாம்வைரமுத்துவை கண்டித்துபோராட்டம் நடத்த மாட்டார்களா?
 
முகம்மது நபியை இழிவுபடுத்தி கார்டூன்கள் வெளிவந்த போதுஉலகம் முழுவதும் எதிர்ப்புகள்வெளிப்பட்டனபின் அதற்காக மன்னிப்பு கேட்டும்அந்த எதிர்ப்புகள் அடங்கவில்லை. (https://en.wikipedia.org/wiki/Jyllands-Posten_Muhammad_cartoons_controversy#Response_to_protests_and_reprintings )
 
மக்களின் வழிபாட்டிற்கு உள்ளான கடவுள்கள்தலைவர்கள் தொடர்பான ஆய்வுகளைமக்கள் மன்றத்தில்வெளிப்படுத்தும்போது;
 
அவ்வாறு வழிபடுபவர்களின் மனம் புண்படும் வகையில் வெளிப்படுத்துவதானதுபொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் பொறுப்பற்ற செயலாகும்.
 
அதிலும் கிறித்துவமுஸ்லீம் மதங்களில் உள்ள வழிபாட்டாளர்களுக்கு அஞ்சி வாழும் போக்கில்;
 
இந்து கடவுள்களையும்மதநூல்களையும் இழிவுபடுத்தும் 'கோழை இரட்டை வேடப் போக்கினைகண்டிக்காத 'முற்போக்குகள்'  வாழும் தமிழ்நாட்டில்கட்சித்தலைவர்களின் நூல்களை அறிவுபூர்வமாககூட விமர்சிக்கமுடியாத 'அறிவு ரவுடித்தன போக்குஇருப்பதற்கு சான்றாகவே;
 
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்'  நூலாசிரியரின் வாழ்வானதுவரலாற்று சான்றாகி விட்டதுவைரமுத்து போன்ற இன்னும் பல பிரபலங்களுக்குதமிழ் மீது  நேர்மையான அக்கறை இருந்திருந்தால்;
 
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்நூல் எழுதிய தமிழ் அறிஞர் நக்கீரன்(http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802 );
 
சாகும் வரைதமது ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்திருக்க வேண்டிய நெருக்கடியானதுஅவருக்குவந்திருக்குமா?
 
'தமிழ் உணர்வு, இந்துத்வா எதிர்ப்பு' என்ற பெயரில் உணர்ச்சிபூர்வ முட்டாள்களை வளர்த்து, 'கோழைஇரட்டை வேடப் போக்கில்' வைரமுத்து போன்றவர்கள் பயணித்து, பணத்திலும், செல்வாக்கிலும்'வளர்ந்து'(?) வந்துள்ளார்களா? அந்த வளர்ச்சிப் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமளிக்காத'அறிவு ரவுடித்தன போக்கு' வளர்ந்து, நக்கீரன் போன்ற புலமையாளர்கள் எல்லாம் அஞ்சியும், மீடியாவெளிச்சமற்ற இருட்டிலும், வாழும் அளவுக்கு; 

தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வாஎதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில்பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?

வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா? (‘'அழுகியது' கழகங்கள் மட்டுமா? 'அழுகல்' மனிதர்கள்எல்லாம், ‘அழுகல்  இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்; http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html ) 


தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் துணையுடன் தமிழ்வழிக்கல்வியை மீட்பது பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  ) ஆங்கிலவழிக்கல்வியின் வளர்ச்சிக்கு கல்வி வியாபார‌ ஊழலே முக்கிய காரணமாக இருப்பதால், ஊழல் ஒழிப்பும் தமிழ்வழிக்கல்வி மீட்சியில் உள்மறைந்துள்ளது.
 
ஊழல் திமிங்கிலங்களின் அரவணைப்பில் வளர்ந்துள்ள ஆங்கிலவழிக் கல்வி மோகத்தில் சிக்கி,முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வைரமுத்து போன்ற பிரபலங்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம்அடிப்படைக்கல்வியைக் கூட ஆங்கிலவழியில் பயின்றிருந்தால்அது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.


மேற்கத்திய குறிப்பாயத்தின் (Western Paradigm) 'மன அடிமையாக', அத்தகைய ' கோழை இரட்டை வேடப்போக்கின்சான்றாக, ' மாதொரு பாகன்வெளிவந்ததுள்ளதையும் நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) 

அத்தகைய 'கோழை இரட்டை வேடப் போக்கில்இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில்கருத்துக்களை வெளியிடுபவர்கள் எல்லாம்சமூக குற்றம் புரியும் நோக்கில் செயல்படுபவர்கள் ஆவர். (The standard common law test of criminal liability is expressed in the Latin phrase actus reus non facit reum nisi mens sit rea, i.e. "the act is not culpable unless the mind is guilty". ( https://en.wikipedia.org/wiki/Mens_rea )
 
மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இது போன்ற ஆய்வுகள் எல்லாம் பெரும்பாலும் ஒருஉள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதானதுவைரமுத்துக்கு தெரியாதா?
 
உதாரணமாக அமெரிக்காவில் இர்சிக்ஹார்ட்கெரேவ்உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் எல்லாம்நீதிக்கட்சியை மட்டம் தட்டிஅதை விட தி. மேல் என்றும்பின் தி.கவை மட்டம் தட்டிஅதை விட தி.மு.மேல் என்றும்மேற்கொள்ளப்பட்டதைநான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
 
மேற்கத்திய பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் தொடர்பாக வெளிப்பட்ட ஆய்வினை தெரிந்து கொள்வதில்ஆர்வம் காட்டிய வைரமுத்துஅவரின் திரைப்படப் பாடல்களில்எழுத்தொலிகளின் சுருதி சுத்தமானதுகுறைபாடுள்ளதாஎன்பது தொடர்பாகநான் வெளிப்படுத்தியுள்ள ஆய்வினை தெரிந்து கொள்வதில்ஆர்வம் காட்டினாரா? ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html )
 
தெரிந்தும் தனது செல்வாக்கின் மூலம் அதனை அறிவுபூர்வமான பொது விவாதத்திற்கு உட்படுத்தாமல்இருட்டடிப்புக்கு உள்ளாக்கியுள்ளாராஎன்பது அவரின் மனசாட்சிக்கே வெளிச்சமாகும்.
 
தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகளில் அதிகம் சிக்கிசிறைபட்டு தவிப்பது திருக்குறள் தொடர்பான ஆய்வுகளா? ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
 
 
 
 
என்பது பற்றி வைரமுத்து இதுவரை கவலைப்பட்டாராஇனியாவது கவலைப்படுவாரா?
 
உலக அள்வில் புகழ் பெற்ற மேற்கத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்டன் பொல்லாக் தமிழைப்பற்றிஅபத்தமானதவறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டதை வைரமுத்து இதுவரை கண்டித்தாராஇனியாவது கண்டிப்பாரா? (http://tamilsdirection.blogspot.in/2017/11/tamil-chair.html )
 
இல்லையென்றால்தமிழை முதலில்லாத மூலதனம் (capital without investment) ஆக்கிய பொதுவாழ்வுவியாபாரியாகஅவர் தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா?

தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கிதமிழர் பற்றிய‌ சுப்பிரமணியசுவாமியின் கருத்தினை, இந்துத்வா எதிர்ப்பில்உள்ள 'பிரபலதலைவர்கள் எவரும் கண்டித்தார்களாஅவர் வெளிப்படுத்திய 'பொர்க்கி தமிழர்வரையறையின் அடிப்படையில்குறைந்த பட்சம்அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டார்களா? (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html   மாறாக அவரின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா குடும்பஅரசியலை அவர்களும் ஆதரித்ததானதுஎதை உணர்த்துகிறதுஆதாய நோக்கற்ற இயல்பான‌ எதிர்ப்புவலிமையின்றியும்அறிவுபூர்வ விவாத வலிமையின்றியும், 'இந்துத்வா எதிர்ப்புஎன்பதானது, 'சமூககோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதானதுஆண்டாள் சர்ச்சையில்வைரமுத்துவின் மூலம்வெளிப்பட்டுள்ளதா?
என்பது போன்ற கேள்விகளை எல்லாம்;
 
ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில்திருக்குறளுக்கு ( 711 & 713) முரணாக அவை அறியாமல் பேசிய‌வைரமுத்துவின் ஆதரவாளர்களாக பயணிப்பவர்களின் மனசாட்சிக்கு முன்வைக்கிறேன்.வைரமுத்துவுக்கு ஆதரவாக கூட்டாக அறிக்கை வெளியிட்டகடந்த பாராளுமன்ற தேர்தலின் போதுமோடியை எதிர்த்து கூட்டாக அறிக்கை வெளியிட்டஎழுத்தாளர்களும் மேலே குறிப்பிட்ட, வைரமுத்துவைநோக்கி எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குஅவரவர் மனசாட்சிக்கு உட்பட்டுவிடைகள் கண்டுயணிப்பார்களா?


குறிப்பு :

'வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக‌ அம்பலம்' ; http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல்’ (2);

 

'தமது பக்கமே கோல் போட்ட’(same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' ?

 

 

 

'ஆண்டாள்தொடர்பான சர்ச்சையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்த பிரபலங்களில்நானறிந்தவரையில்தனிப்பட்ட முறையில்வைரமுத்துவை இழிவாக கண்டித்தவர் எச்.ராஜா மட்டுமே.தாம் எதிர்க்கின்ற நபர்களை தனிப்பட்ட முறையில் இழிவாகஅண்ணாவையும்ஜீவாவையும்கண்டித்துதமது 'குயில்இதழில் எழுதியவர் பாரதிதாசன்ஆனால் பாரதியாரோபாரதிதாசனைப் போலதாம்எதிர்த்த நபரைகாந்தி உள்ளிட்டு எவரையும்தனிப்பட்ட முறையில் இழிவாக கண்டிக்கவில்லைஎனவேஎச்.ராஜாவைஅந்த நோக்கில்பாரதிதாசன் வாரிசாக அடையாளம் காணலாம்மேற்குறிப்பிட்டசர்ச்சையில்வைரமுத்துவை ஆதரித்தவர்களில்எச்.ராஜாவைப் போலஉணர்ச்சிபூர்வமாகஆவேசப்பட்டவர் பாரதிராஜாஇருவருமே தாம் ஆதரித்த நிலைப்பாடுகளின் வலிமைக்கு சேதாரம்விளைவிக்கும் 'தமது பக்கமே கோல் போட்ட’ (same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' என்ற ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர்.
 

 

மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ இரைச்சல்களில்கீழ்வரும் கேள்விகளின் அடிப்படையில்அறிவுபூர்வவிவாதம் வெளிப்படுவதானது பாதிக்கப்பட்டிருந்தால் வியப்பில்லை.
 

'தேவதாசி' ஒழிப்பு சட்டம் தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் முன் வைத்த வாதங்கள்அடிப்படையிலும்;


வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்குஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251  );

 

அதை உறுதிப்படுத்தாமல் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்று அறிவுநேர்மையுடன்வைரமுத்து ஒத்துக் கொள்ளாததையும்;

 

'கழகம்என்ற சொல்லானது 'சூதாடுமிடம்என்று திருக்குறளில்(937) வருவதன் அடிப்படையில்இன்று அதேபொருளில் 'திராவிடகட்சிகளின் பெயரில் வரும் கழகத்தை குறிப்பிடமுடியுமாஎன்ற கேள்வியையும்;

 

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக';

 

முன்வைத்துள்ள விளக்கமானது அறிவுநேர்மையாகுமாஎன்ற கேள்வியையும்

பின் தள்ளமேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் உதவ அனுமதிக்க கூடாது.
 
தமிழில் 'சாதிஎன்ற சொல்லின் பொருளானதுகாலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமலும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/   )
 
'நிலவுடமைஎன்ற கருத்தும் மேற்கத்திய இறக்குமதி என்பதும்அது ஆண்டாள் வாழ்ந்த தமிழகத்துக்குபொருந்தாது என்பது தெரியாமலும்;
 
மேற்கத்திய குறிப்பாய (western paradigm)  'பெண் உரிமை'யின் வரை எல்லைகள் (limitations)  புரியாமலும்;( ;http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none.html
 ) 
 

வைரமுத்து வெளிப்படுத்தியுள்ள விளக்கமும் விவாதத்திற்கு உரியதாகும்



தமது மொழித் திறமையின் (language skills) மூலம்,  தாம் புரிந்த தவறுகளிலிருந்து தப்பிக்கஒரு வகை'கவர்ச்சிகர மொழிநடையைபிரபலமானவர்கள் கையாளும் போதுஅவர்களுடன்அவர்கள் கையாண்டமொழி நடையும்மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கேலிப் பொருள் ஆகிவிடும் அபாயமும்தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/06/  )

 
திராவிடக்கட்சிகளில் எதிர்க்கின்ற தலைவர்களை உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தும் பேச்சாளர்கள் ஒருகாலத்தில் 'செல்வாக்குடன்வலம் வந்தார்கள்அந்த நிலையிலும் கூட, அவர்களில் எவரும் தி.தி.மு....தி.மு. ஆகிய கட்சிகளில் மேல் மட்ட தலைவர்களாக இருந்ததில்லைஆனால் கடந்த 10 வருடங்களாக அப்படிப்பட்ட பேச்சுகளுக்கான 'ரசிகர்கள்', திராவிட கட்சிகளில் குறைந்து விட்டார்கள்இன்றுள்ள மாணவர்களும்இளைஞர்களும்கிராம மக்களும் அத்தகைய பேச்சுகளை ரசிக்காததுமட்டுமல்லவெறுக்கவும் செய்கிறார்கள்.
 

 

ஆனால் பா..கவில் தேசிய அளவில் தலைவராக இருக்கும் எச்.ராஜாதிராவிடக் கட்சிகளின் ' இரண்டாம்தரபேச்சாளரைப் போல, உணர்ச்சிபூர்வமாக எதிர்க்கின்ற நபரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசிவருவதைபா..கவில் எவரும் கண்டித்துஅந்த தவறான போக்கிலிருந்து அவரை திருத்த முனைந்ததாகதெரியவில்லை.
 

 

"பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன்' என்று அறிவித்து, உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் பா.ஜ.க தலைவர் எச்.ராஜா ஆவார்.  (‘தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்?’; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none.html அதைப் பற்றி கவலைப்படாமல், எச்.ராஜாவுக்கு 'நெருக்கமான' 'திராவிட' தலைவர்களும், 'அந்த' திராவிட‌ தலைவர்களுக்கு நெருக்கமாக 'முயலும்' 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களும், உண்மையில் ஈ.வெ.ரா அவர்களை அவமதித்தவர்கள் இல்லையா? என்ற கேள்வியானது;
 

 

 
 
இன்று 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா'வில் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு தோன்றியதுண்டா? என்பதானது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.
 
புறத்தில் 'எலியும் பூனையும் போல' காட்சி தந்து, உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு பேச்சுகள் மூலம் அப்பாவித் தொண்டர்களை உசுப்பி விட்டு, தமக்குள் 'பரிமாற்ற பலன் தரும்' நட்புடன்(?) வலம் வரும் தலைவர்களும் கட்சிகளும் இனி தமிழ்நாட்டில் எடுபட முடியாது; திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் வார்ட் கவுன்சிலர் வரை அந்த நோய் பரவி, மக்கள் மத்தியில் அம்பலமானதன் விளைவாக.

 
அதே போல, சுயலாப நோக்கின்றி வாழ்ந்து, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவர்களை இழிவுபடுத்தி கண்டிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியும் தமிழ்நாட்டில் எடுபட முடியாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 



தனது திரைப்படம் தோல்வியடைந்ததால் மனமுடைந்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர், தமது பூஜை அறையில் இருந்த முருகன் சிலையை செருப்பால் அடித்து விட்டு, பின் அதே சிலையை கட்டிப்பிடித்து அழுத சம்பவத்தை அவரே பத்திரிக்கையில் வெளிப்படுத்தினார்.
 

நமது நலனில் அக்கறை உள்ளவர் என்று நாம் மிகவும் மதிக்கும் நபர், நமக்கு பிடிக்காத செயலை செய்யும் போது, அவர் மேல் கோபப்படாமல் வருத்தப்படுவதே பொதுவான மனித இயல்பு ஆகும்.
 
பொது மக்களுக்கும் பொதுச்சொத்துக்கும் பங்கமின்றி, தமது காசில் கடையில் விற்ற பிள்ளையார் பொம்மைகளை விலைக்கு வாங்கி உடைத்தல் போன்ற போராட்டங்களை ஈ.வெ.ராவும், அவர் கட்சியினரும் நடத்திய போது, அதை அவ்வாறு பொறுத்துக் கொண்ட ஆத்தீகர்கள் தான் அந்த காலக்கட்டத்தில் இருந்தார்கள். மாறாக ' பெரியாரை செருப்பால் அடிப்பேன்' என்று உணர்ச்சிகரமாக பேசி விட்டு, பின் தேர்தலில் ஆதரவு கேட்டு திராவிடக் கட்சி தலைவர்களின் வாசலை மிதிக்கும்; தமது குடும்ப விழாக்களுக்கு அவர்களை அழைக்கும்; 'இரட்டை வேட' பக்தர்கள் அந்த காலக்கட்டத்தில் வாழவில்லை.
 
 
 
 
அஸ்ஸாமில் பிரிவினைக்காக போராடிய தலைவர்களை, கீழ்வரும் எச்.ராஜா பாணியில், அஸ்ஸாம் பா.ஜ.க தலைவர்களில் எவராவது இழிவுபடுத்தி கண்டித்திருந்தால், இன்று

அஸ்ஸாமில் பிரிவினைக்காக போராடிய மாணவர் தலைவரை ஈர்த்து பா.ஜ.கவில் சேர்த்து, இன்று அவரை முதல்வராகக் கொண்டு அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்க முடியுமா?

 

 

 

"முதலில் .வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும்ஏனென்றால் 1944-ல் .வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்கமாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார்தீர்மானம் என்ன சொல்கிறது என்றால்வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாதுஅப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்துகொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்டதேச துரோகிகள் தானேடா .வே.ராஅண்ணாதுரைவீரமணிகருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று .வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடிஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்தஇரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில் 18 ஏப்ரல்2015 அன்று நடைபெற்ற கறுப்பு சட்டை எரிப்பு போராட்டத்தில் .வெ.ரா வையும்வீரமணியையும்கம்யூனிசத்தையும் சேர்த்து எரித்து தள்ளிய திரு H.ராஜா அவர்களின் காரசாரமான பேச்சுஎன்றுமுகப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.பெரியாரைப் பற்றியும்அண்ணாவைப் பற்றியும்இவ்வளவு இழிவானகருத்துள்ள எச்.ராஜாகடந்த பாராளுமன்ற தேர்தலின் போதுமதுரையில் அழகிரியின் வீட்டிற்கு சென்றுதனக்கு ஆதரவு தருமாறு கெஞ்சியது சரியாஎன்ற கேள்வியைமனசாட்சியும்அறிவுநேர்மையும் உள்ளஎச்.ராஜா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.
 

 

பெரியார் .வெ.ரா அவர்களின் 'தனி திராவிட நாடுகோரிக்கையை ராஜாஜி பகிரங்கமாக ஆதரித்ததுஎச்.ராஜாவுக்கு தெரியாது போலும்தெரிந்திருந்தால்.வெ.ராஅண்ணதுரையுடன் ராஜாஜியையும் அடித்துதுரத்தியிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார்.

 

"We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ;http://en.wikipedia.org/wiki/C._R._formula
 

 

அது மட்டுமல்ல,எச்.ராஜா இந்து மகா சபை தலைவர்களையும் 'அடித்து துரத்தியிருக்க வேண்டும்என்றுபேசியிருப்பார்ஏனென்றால்இரண்டாம் உலகப் போரின் போதுகாங்கிரஸ் வெள்ளையரை எதிர்த்தபோதுதிராவிடர் கழகத்தைப் போலவேஇந்து மகா சபாவும் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தனர்.

 

“The Congress condemned Britain’s declaration of India as a “belligerent country” without its consent, and resented London’s refusal to promise India’s independence after the war. The Muslim League and the Hindu Mahasabha, however, supported the British war effort, seeking furtherance of their sectarian interests.” http://www.thehindu.com/books/freedom-movement-a-holistic-feat/article61951.ece
 

 

ஆங்கிலேயருக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களை ஆதரிக்காததில்தி.கவிற்கும்இந்துமகாசபைக்கும் அதிக வேறுபாடு கிடையாது.

 

“the Hindu Mahasabha did not actively support agitations against British rule in India. Under the leadership of Mohandas Gandhi, the Congress led several nationwide campaigns of non-violent civil disobedience. The Mahasabha refused to endorse any of the movements and participated in the legislative councils established by the British, which were otherwise boycotted by the Congress and most of the population..”

 

 

 

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிபெரியார் .வெ.ரா சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். 1925 முதல் 1947 இல் இந்தியா விடுதலை அடையும் வரைஅவர் அனுபவித்த அளவுக்கு சிறைத்தண்டனைகளும்அவர் நடத்திய பத்திரிக்கைகள் அனுபவித்த அளவுக்கு காலனிய அரசின்ஒடுக்குமுறைகளையும்தமிழ்நாட்டில் எந்த காங்கிரஸ்இந்துத்வா தலைவர்கள்அவர்கள் நடத்தியபத்திரிக்கைகள்அனுபவித்திருக்கிறார்களாஎன்ற கேள்வியை எச்.ராஜாவும்அவரின் பேச்சைபாராட்டுபவர்களும் மனசாட்சியுடனும்அறிவுநேர்மையுடனும் பரிசீலிப்பார்களா?
 

 

இந்தியா விடுதலையான பின் நடந்த 1952 முதல் பொது தேர்தலில்தனி திராவிட நாடு கோரிக்கையைமுன்வைத்துபெரியார் .வெ.ரா ஆதரித்த கட்சிகள் பெருவாரியாக வெற்றி பெறகாங்கிரஸ்பெரும்பான்மை பலம் பெறவில்லை என்பதுஎச்.ராஜாவுக்கு தெரியாது போலும்தெரிந்திருந்தால்தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களை அடித்து துரத்தியிருக்க வேண்டும் என்றுபேசியிருப்பார்.அப்படி இருந்த தமிழ்நாடுஇன்று இப்படி எச்.ராஜா பேசும் அளவுக்கு சீரழிந்ததற்குதிராவிடக்கட்சிகளின் ஆட்சிகளின் சாதனையா? தேர்தலில் தம்மை ஆதரிக்குமாறு எச்.ராஜா  கேட்கும்அளவுக்கும்அவரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும் அளவுக்கும், 'திராவிடகட்சித்தலைவர்களுடன் அவருக்கு உள்ள 'உறவானது', நாட்டின் நலனுக்காஅல்லது அவரவரின் சொந்தநலனுக்கா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 வெள்ளைக்காரர் ஆட்சிக்கு முன் தமிழ்நாடே பல மன்னர்கள் ஆட்சியில் இருந்தது எச்.ராஜாவுக்குதெரியாதாவீரசவர்க்கார் எழுதிய 'எரிமலை' -'The Indian War of Independence' - நூலில் 1857 இல் வடநாட்டில்இருந்த முஸ்லீம் அரசர்களும் இந்து அரசர்களும் சேர்ந்துவெள்ளையரை எதிர்த்ததை, ‘முதலாம்விடுதலைப் போர்’ என்று குறிப்பிடுவது எச்.ராஜாவுக்கு தெரியாதாஅந்த போர் வெற்றி பெற்றிருந்தால்,வெள்ளைக்காரர் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பார்கள்ஆனால் இந்தியா பல மன்னர்களின்ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா

 

 

'இந்தியர்என்ற அடையாளம் இந்தியாவில் உரிய அளவுக்கு வலுப்பெறாததன் காரணமாகவேஇந்தியாவில் பிரிவினை முயற்சிகள் மக்கள் ஆதரவுடன் நடைபெற்று வருவதும்அதைப் பலகீனப்படுத்திஇந்தியர் என்ற அடையாளத்தை வலிமையாக்கமத்திய அரசு எவ்வளவு கடுமையாக முயற்சிக்கிறதுஎன்பது எச்.ராஜாவுக்கு தெரியாதா?
 

 

இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுக்கு தேவைப்படும் 'பெரும் விரிவுரை - கிராண்ட் நேரேட்டிவ் (Grand Narrative)  ஆனதுமேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி இருப்பதும்அந்த சூழ்ச்சியிலிருந்து அந்த 'கிராண்ட்நேரேட்டிவைமீட்டுஇந்தியர் என்ற உணர்வை வலிமைப்படுத்த ராஜிவ் மல்கோத்ரா போன்ற அறிஞர்கள்மேற்கொண்டுவரும் முயற்சிகள் பற்றி எச்.ராஜாவுக்கு தெரியுமா? (http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html )
 

 

இது போன்ற கேள்விகளை சந்திப்பதை தவிர்க்கவேதிராவிடக்கட்சிகளில் எச்.ராஜா போன்றஉணர்ச்சிபூர்வ பேச்சாளார்களை மேல்மட்ட தலைவர்களாக அனுமதித்ததில்லை
 

 

எச்.ராஜா வைரமுத்துவை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியதை கண்டிக்காமல்மகிழ்ந்துபாராட்டுபவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு தமிழக பா..கவில் இருக்கிறதோஅந்த அளவுக்குதமிழக பா.. தமிழ்நாட்டில் மாற்றாக வர வாய்ப்பே இல்லை.
 

 

தமிழ்நாட்டில் ‘ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானதுஇன்று மக்களின்வெறுப்புக்கும்கண்டனத்திற்கும் உள்ளாகிஇந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளதா?

 

வேறு வழியின்றிஇயற்கையின் போக்கில்தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானதுஇந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா?' என்ற கேள்வியையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )
 

 

தமிழ்நாட்டில் பிரமிக்கும் வகையில் வேர் பிடித்து வளர்ந்து வரும் 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா'வை பிணைத்து, குஜராத் மாநில பா.ஜ.க, அஸ்ஸாம் மாநில பா.ஜ.க போன்று, தமிழக பா.ஜ.கவோ அல்லது வேறு கட்சியோ பயணித்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை உண்மையான மக்கள் ஆதரவுடன் நிரப்ப முடியும்.’ (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )
 

 

ஆனால் எச்.ராஜா போன்றவர்கள் தமது உணர்சிபூர்வ வெறுப்பு அரசியல் போக்கினை திருத்திக் கொள்ளாத வரையில், தமிழக பா.ஜ.க அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வாய்ப்பே இல்லை.
 

 



1857 முதலாம் விடுதலைப் போர் வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியா பல மன்னர்கள் ஆட்சியில் இருந்திருக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல்;
 

இந்தியா போன்ற காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில், 'நாட்டுப்பற்று' என்பது, அடையாளச் சிக்கலை (Identity Crisis)  தீர்த்து பயணிக்க வேண்டிய‌ 'தேச கட்டுமானத்துடன்', எந்த அளவுக்கு தொடர்பு கொண்டது? என்பதும் புரியாமல்;
 
இந்திய விடுதலைக்குப் பின், நேரு குடும்ப வாரிசு அரசியலானது இந்திய முழுவதும் தொத்து நோய் போல், பிரிவினைப் போக்குகளுடன் பின்னி பரவ;
 
மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் கூட, மேற்குறிப்பிட்ட 'தேச கட்டுமான' சவால் பற்றிய புரிதலின்றி, 'தேசியம்' என்ற பேரில் எச்.ராஜா போல, 'இந்தியர் யார்?' என்று தீர்மானிக்கும் 'எஜமானர்களாக' தம்மை கருதிக் கொண்டு, உண்மையில்  தேச கட்டுமான சீர்குலைவுகளை 'இந்துத்வா' என்ற பேரில் முன்னெடுப்பதை, தடுக்காமல் இருப்பது, தொடர்ந்தால்;
 
சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு இடையிலான 'சமநிலை' (equilibrium) குலையும் போது, இந்தியாவானது, சோவியத் ஒன்றியத்தை விட, இன்னும் மோசமான முறையில் ' சிதறலுக்கு' உள்ளாகி, ஆப்பிரிக்காவுடன்போட்டி போடும் நிலை உருவாகும்; என்பதும் எனது கணிப்பாகும்.
 
இந்தியாவில் தேச கட்டுமானம் (Nation Building)  சந்தித்து வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கா விட்டால்தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எல்லாம் ஆப்பிரிக்காவைப் போலகுடும்ப அரசியல்கொள்ளையர்களிடம் சிக்கி சீரழிந்து விடும்என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html)
 

 

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடுகொள்கை ஆதரவாளராக பயணித்து வந்தநான் (http://tamilsdirection.blogspot.in/2017/12/1-music-informationtechnologist-inputs.html );
 
இன்று 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா'வை பிணைப்பதன் மூலமே, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தடுத்து, தமிழ்நாட்டின் கனிவளங்களை  சூறையாடி வருவதை நிறுத்தி, தமிழ்நாட்டை மீட்கும் முயற்சிக்கு, என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறேன்; அறிவுபூர்வ விவாதத்தினை எதிர்நோக்கி.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது:

 

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையாஅல்லது தமிழ்ப்புலமையா?

 

'தேவதாசி' ஒழிப்பு சட்டம் தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் முன் வைத்த வாதங்கள் அடிப்படையிலும்;

வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்கு ஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251  );

அதை உறுதிப்படுத்தாமல் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்று அறிவுநேர்மையுடன் வைரமுத்து ஒத்துக் கொள்ளாததையும்;

'கழகம்' என்ற சொல்லானது 'சூதாடுமிடம்' என்று திருக்குறளில்(937) வருவதன் அடிப்படையில், இன்று அதே பொருளில் 'திராவிட' கட்சிகளின் பெயரில் வரும் கழகத்தை குறிப்பிடமுடியுமா? என்ற கேள்வியையும்;

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக';

முன்வைத்துள்ள விளக்கமானது அறிவுநேர்மையாகுமா? என்ற கேள்வியையும்;

பின் தள்ள, எச்.ராஜா போன்றவர்கள் எழுப்பியுள்ள‌ உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் உதவ அனுமதிக்க கூடாது.

தமிழில் 'சாதிஎன்ற சொல்லின் பொருளானதுகாலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமலும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/   )

'நிலவுடமைஎன்ற கருத்தும் மேற்கத்திய இறக்குமதி என்பதும்அது ஆண்டாள் வாழ்ந்த தமிழகத்துக்குபொருந்தாது என்பது தெரியாமலும்; 

மேற்கத்திய குறிப்பாய (western paradigm)  'பெண் உரிமை'யின் வரை எல்லைகள் (limitations)  புரியாமலும்;( ;http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none.html  ) 

வைரமுத்து வெளிப்படுத்தியுள்ள விளக்கமும் விவாதத்திற்கு உரியதாகும். 

தமது மொழித் திறமையின் (language skills) மூலம்,  தாம் புரிந்த தவறுகளிலிருந்து தப்பிக்கஒரு வகை'கவர்ச்சிகர மொழிநடையைபிரபலமானவர்கள் கையாளும் போதுஅவர்களுடன்அவர்கள் கையாண்டமொழி நடையும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கேலிப் பொருள் ஆகிவிடும் அபாயமும்தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/06/  ) 

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவெளிப்படுத்தியுள்ள கட்டுரை மற்றும்தொலைக்காட்சி விளக்கம் அடிப்படையில்; 

தமிழில் அவருக்கு இருந்த திறமைகளையெல்லாம் (Tamil Language Skills) பயன்படுத்தியிருந்தாலும்; 

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையாஅல்லது தமிழ்ப்புலமையா?

 

என்ற ஆராய்ச்சிக்கு அவரின் படைப்புகள் அனைத்தையும் உட்படுத்த வேண்டிய நெருக்கடியையும்அந்தவிளக்கங்கள் ஏற்படுத்தி உள்ளன. 

அவரை ஆதரித்து முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்கள் எல்லாம்; 

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில்பொது அரங்கில் ஆதிக்கம் செலுத்திஆனால் இதுவரை அடையாளம் கண்டு அகற்றப்படாத;( http://tamilsdirection.blogspot.in/2015/10/ & http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html  ) 

தர்க்கவிரோத (illogical)  குறைப்பாடுகள் எல்லாம், 'ஆண்டாள்கருணையால் அறிவுபூர்வ குவியத்திற்குள்ளாகிஅந்த குறைபாடுகளில் இருந்துதமிழ்நாடு விடுதலை பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில்பொதுஅரங்கில் நிகழ்கால தலைவர்களில் வைரமுத்துவால் உச்சமாக பாராட்டப்பட்ட தலைவராகிய‌ தி.மு.தலைவர் வெளிப்படுத்திய‌ 'தரம் தாழ்ந்தசொற்களை எல்லாம் தொகுத்து, 'இதுதானா சார் உங்க தரம்என்றதலைப்பில் ' தமிழக அரசியல்' (24.01.2018; பக்கம் 40) வெளியிட்டுள்ளது.

மொழியில் திறமை (language skills) என்பதற்கும் புலமை (scholar) என்பதற்கும் உள்ள வேறுபாட்டினைவிளங்கிக் கொள்ளஇசை தொடர்பான விளக்கம் துணை புரியும். 

அது மட்டுமல்ல, 'கவிஞர்என்ற அடிப்படையில்திரைப்படங்களில் சுருதி சுத்தமில்லாத பாடல்களைஎழுதும் போக்கை, முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் வைரமுத்துவாஎன்பது தொடர்பான எனதுஆய்வினையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html) 

ஒரு இசை அமைப்பாளர் தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை என்ற இரண்டு'துடுப்புகளின்துணையுடன்தமது பார்வைக்கு வரும் இசைகளை மூலங்களாகக் கொண்டு வெளியில்தெரிந்தும் தெரியாமலும் 'காப்பிஅடித்து, 'ஹிட்பாடல்களையும் தரமுடியும். 1970களில் 'மாடர்ன்தியேட்டர்ஸ்தயாரித்த படங்களில்வெளியில் தெரிந்துபிரபலமான இந்தி திரைப்படப் பாடல்களைஅப்படியே தமிழிலும் 'ஹிட்டாகஇசையமைத்தவர் வேதா(பெயர் எனது நினைவின்படி). 

இன்று நாம் ரசிக்கும் பாடல்களில் வெளியில் தெரியாமல், தம்மிடமுள்ள தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை மூலம்  'காப்பியடித்துவெளிவந்த பாடல்களின் உண்மையான மூலங்களும் (sources) இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளனஆராய்ச்சி கட்டுரைகளில் 'திருடிஎழுதியவைகளைகண்டுபிடிக்கும் மென்பொருள் (Software) பயன்படுத்தப்படுகிறதுஅது போல இசையிலும் 'திருட்டைகண்டுபிடிக்கும் மென்பொருளை என்னால் உருவாக்க முடியும்தரமிக்க அமைப்புகள் அந்த ஆய்வுத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கினால். 

தம்மிடமுள்ள தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை மட்டுமின்றிஇசையில்புலமையும் உடையவர்களின் படைப்புத் திறனைப்
(Creativity) திறமையைப் பொறுத்துஉலக அளவில் சாதனையான இசைகள் (Compositions) வெளிவந்துள்ளனமேலே குறிப்பிட்ட இசைத் திருடர்களுக்கும் மூலங்களாக (Sources) பயன்படும் வகையிலும். 




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இசையைப் போலவேஒரு மொழியிலும் தமக்குள்ள மொழித் திறமைகள் மூலம் ஒருவர் பேச்சாளராகவும்எழுத்தாளராகவும்கவிஞராகவும்தமக்குள்ள 'சந்தைப்படுத்தல் திறமையைப் (Marketing Skill)  பொறுத்து,வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அவ்வாறு வலம் வரும் நபருக்கு அந்த மொழியில் புலமை இருக்கிறதாஇல்லையாஎன்றஆராய்ச்சியானதுபொது அரங்கில் அதற்கான நெருக்கடி வரும்போதே வெளிப்படும்அந்த சமூகத்தில்புலமையும்புலமையாளர்களும் பொதுவாழ்வு வியாபாரிகளின் செல்வாக்கில் உள்ள மீடியாவின்வெளிச்சத்திற்கு வராமல்இருட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலில்.            
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) 

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவிளக்கங்களில், 'சாதிஎன்ற தமிழ்ச்சொல்லைபயன்படுத்தி உள்ளார். 

ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தில், 'சாதிஎன்ற தமிழ்ச் சொல்லிற்கு இன்றுள்ள பொருள் இல்லை; ( ;( http://tamilsdirection.blogspot.in/2016/01/  ) 

என்று தெரியாமல்காலனிய சூழ்ச்சியில், 'பொருள் திரிபுக்குள்ளாகி' (Semantic Distortion), வைரமுத்துபயன்படுத்தியுள்ள பொருளில்தமிழில் இருந்த 'சாதிஎன்ற சொல்லானதுபொருள் திரிபுக்கு உள்ளானது; 

என்ற புலமை வைரமுத்துவுக்கு இல்லை;


என்பதற்கு அவரின் மேலே குறிப்பிட்ட விளக்கமே சான்றாகிறது.

ஆண்டாள் தொடர்பாக வைரமுத்துவின் புலமைக்குறைப்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுகீழ்வரும் கட்டுரை:
http://dhinasari.com/general-articles/23941-tips-to-vairamuthu-how-to-do-thesis-studies-in-andal-poems.html 
அது போலவேஇந்திய சமூகத்தை 'நிலவுடைமை  உறபத்தி முறை' (Feudal Mode of Production) சமூகமாஅல்லது 'ஆசிய சமூக உற்பத்திமுறை ( Asiatic Mode of Production) சமூகமா?' என்று காரல் மார்க்ஸேஅடையாளம் காண முடியாமல் குழம்பியது தெரியாமலும்; 

ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் நிலவுடமை சமூகம் இருந்ததாக கருதி, வைரமுத்து விளக்கம்அளித்துள்ளார். 

தமது விளக்கத்தில் உள்ள அபத்தம் பற்றிவைரமுத்து தெளிவு பெற விரும்பினால்; 

பேரா.அருணன் எழுதி 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வுஎன்ற நூலுக்கு; 

பேரா.வெற்றிமணி என்ற எனது புனைப்பெயரில், 'விடுதலை', 'உண்மை' இதழ்களில் மறுப்பு வெளிவந்து, பின் 'பெரியாரியலா? மார்க்சியமா?' என்ற தலைப்பில், ( என்னிடம் அனுமதி கூட பெறாமல் வெளியிடும்'நாகரீகம்'(?) உள்ள 'பெரியார்' ஆதரவாளர்கள் மூலம்) தற்போது வெளிவந்து விற்பனையில் உள்ள  நூலைபடிக்குமாறு ப‌ரிந்துரைக்கின்றேன்.

உலக மொழிகளிலேயே இன்று தமிழுக்கு மட்டுமே, மொழி தொடர்பான திறமைக்கும் (Language Skills)புலமைக்கும் (Scholarship) இடையிலான வேறுபாடு மறைந்துசந்தைப்படுத்தலில் (Marketing),  'அதீதவெற்றிபெற்றமொழி திறமையாளர்கள் (language skilled persons ) எல்லாம் புலமையாளர்களாக (scholars) வலம் வரும்அவலம் நேர்ந்துள்ளதா? 

என்ற விவாதம் தொடங்க வேண்டிய நேரமும் வந்து விட்டதுஆண்டாளின் கருணையால். 

உணர்ச்சிபூர்வ இரைச்சலுக்கு இடமளிக்காத மேற்குறிப்பிட்ட‌ விவாதத்தில், 'தமிழ் இலக்கணத்தில் தமக்குஆழ்ந்த புலமையில்லைஎன்பதை வெளிப்படுத்தியுள்ள அண்ணாவின் பங்களிப்பும்இடம் பெற வேண்டியநேரமும் வந்து விட்டது.( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )


தமிழில் மொழி தொடர்பான திறமைக்கும் (Language Skills), புலமைக்கும் (Scholarship) இடையிலானவேறுபாடு மறைந்ததற்கு காரணமான சமூக செயல்நுட்பம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால்;
 

தமிழர்களில் தரகு/ரவுடி திறமைகளில் 'புலமை'(?) மிக்கோரின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கி சீரழிய, 'அந்தபுலமையாளர்களை'  துதிபாடி பிழைக்கும் பேச்சாளர்கள்எழுத்தாளர்கள்கவிஞர்கள் கும்பல் வளர்ந்தபோக்கில்தமிழில் புலமை சீரழியவும், 'அதே சமூக செயல்நுட்பம்காரணமாகி விட்டது;

 

என்ற முடிவும் வெளிப்பட்டால் வியப்பில்லை'அந்த சமூக செயல்நுட்பம்பற்றிய புரிதலின்றி, 'குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பு போதையில்தெரிந்தும்தெரியாமலும் 'அந்த புலமையாளர்களைஆதரித்த‌ அறிவுஜீவிகள் எல்லாம்
 


'ஆண்டாள் சர்ச்சையில்என்ன நிலைப்பாடு எடுப்பது?' என்று விழி பிதுங்கி மெளனப் போக்கினைகடைபிடித்தால்;
 
'அந்த மெளனப் போக்கே', அவர்களின் பொதுவாழ்வு மரணத்திற்கு இட்டுச் சென்றால் வியப்பில்லைஆண்டாளின்கருணையால்.
 
திருக்குறளை (423) ஓரங்கட்டி;
'எப்பொருள் எவர்வாய் என்றாய்ந்து அவர்பால்
 வெறுப்பை உமிழும் இழிவுஎன்ற புதுக்குறள் வழியில்;
 
பயணிக்கும் 'குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பானது', வைரமுத்துவின் பங்களிப்பால்ஆண்டாள்சர்ச்சையின் மூலம் அருங்காட்சியகத்திற்கு சென்றால்அது தமிழ்நாட்டிற்கு நல்லதாகவே முடியும்; 'சமூகத்தூண்டல்' (Social Induction)  மூலம் அந்நோய்க்குள்ளான இந்துத்வா ஆதரவாளர்களையும் குணப்படுத்தி.
 
'வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையாஅல்லது தமிழ்ப்புலமையா? 
என்ற தலைப்பில்ஆர்வமும் உரிய உழைப்பும்உள்ளார்ந்த ஈடுபாடும் (Passion) உள்ள எவரும், 

இந்தியாவில் தரம் மிக்க பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட விடும்பினால்;

'ஆண்டாளின் கருணைக்குநன்றி தெரிவித்துஅந்த ஆராய்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை புரியஇயலும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard