New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைரமுத்துவின் வகரம் பிடித்து தமிழப் பழித்த கட்டுரையை ஏற்பாடு செய்த தி ஜீயரை சந்தித்து மன்னிப


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வைரமுத்துவின் வகரம் பிடித்து தமிழப் பழித்த கட்டுரையை ஏற்பாடு செய்த தி ஜீயரை சந்தித்து மன்னிப
Permalink  
 


 Posted Date : 10:00 (23/01/2018)

ஜீயரை சந்தித்து மன்னிப்பு கேட்டார் வைத்தியநாதன்!

செ.சல்மான்
 செ.சல்மான்

 

 

 

 

 

வைத்தியநாதன்

ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் வருகைதந்து, ஜீயரை சந்தித்து மன்னிப்புக் கோரினார். 

https://www.vikatan.com/news/tamilnadu/114258-dinamani-vaithiyanathan-meets-jeeiyar-and-apologises-for-aandal-issue.html

தினமணி நாளிதழ் ராஜபாளையத்தில்  நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசித்தார். அது, தினமணி நாளிதழிலும் வெளியானது. அதில் ஆண்டாள் பற்றி வெளிநாட்டவர் எழுதியதை மேற்கோள் காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைணவர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், வைத்தியநாதன், வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். 

வைத்தியநாதன்

இதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்தபோதிலும், தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகிறன்றன. இந்த விஷயத்தில்,  பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்து குடும்பத்தைக் கொச்சையாக விமர்சித்தார். நைனார் நாகேந்திரன், `நாக்கை அறுப்பேன்' என்றார். இந்த நிலையில், `வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், இரண்டாவது நாளில் முடித்துக்கொண்டாலும், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தார். 

பிரச்னை முடிவில்லாமல் போய்க்கொண்டிருந்த நிலையில், இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.  அவர், சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்துப் பேசினார். மேலும், அவர் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார் என்று ஜீயர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், வைரமுத்து வந்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனையைத் திரும்பப் பெறவில்லை என்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard