New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விவிலியம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
விவிலியம்
Permalink  
 


 விவிலியம்என்பவை பொதுவாக இன்று கிறிஸ்துவ சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள புராணக் கதை தொன்ம நூலாகும். மிக அதிகமான பொருட் செலவில் அதிக மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு ஆண்டு தோறும் பலாயிரம் கோடிகல் செலவில் உலகு எங்கும் கதைகள் பரப்பப் படுகின்றன.

விவிலியம் இரு பிரிவுகளை - பழைய ஏற்பாடு (எபிரேய புனித நூல்கள்)  மற்றும் 

கிரேக்கத்தில்  புதிய ஏற்பாடு.






__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிபிளியா என்ற கிரேக்க சொல்லில் எழுந்த பைபிள் எனில் புத்தகங்கள் எனப் பொருள்.

பாறைகள் நிறைந்த மலைப் பகுதியும் பாலைவனப் பகுதியுமான பாலஸ்தீன இஸ்ரேல் நாட்டில் புனையப்பட்டதே  எபிரேய பைபிள். இதில் உள்ள கதைகளை வரலாறு என  நம்பி, தொல்லியல் அகழ்வாய்வில் ஈட்பட, விலியத்தில் உள்ளவை புனையப்பட்ட கதைகளே என தெளிவாகியது.

வந்தேறி அன்னியர்களாய் ஆக்கிரமித்து மண்ணின் மைந்தர்களைக் கொலை செய்து ஆக்க்ரமித்து ஆட்சியை எபிரேயர்கள் பிடித்தார்கள் என்பதே அடிப்படை. இந்த இனப் படுகொலை, இன அழிப்பை அந்த இஸ்ரேலிற்கான எல்லை கடவுள் யாவே(கர்த்தர்) ஆபிரகாமை அழைத்து புதியதொரு நாட்டைக் கொடுத்து ஆட்சி உரிமை சந்ததிகளுக்கு  என வாக்களித்தார் எனும்படி கதைகள் புனையப்பட்டது.

தொல்லியல் ஆய்வுகளில் பல கடவுளர் சிலைகள் கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெய்வமான யாவேயின் அஸ்த்ரோத் எனும் கல்வெட்டு அதாவ்து யாவேயின் மனைவி உண்டு. இன்றுள்ள விவிலியக் கதைகளில் அஸ்த்ரோத் நீக்கப்பட்டுள்ளது. ஒரே கடவுள் எனும் கொள்கையுள்ளவர் போன்ற தோற்றம் காட்டுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எபிரேயர்கள் நாகரீக வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி இருந்தனர். கிரேக்கர், ரோமன் காலத்தில் தான் எபிரேயர்கள் வளர்ச்சி கண்டனர். மொழி ரீடியில் எபிரேய மொழியில் உயிர் எழுத்துக்கள் கிடையாது. இவை பொ.கா. 6ம் நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் எபிரேய பைபிள் உயிர் எழுத்துக்களோடு 10ம் நூற்றாண்டு வரை மாற்றப்பட்டு இன்றைய வடிவம் பெற்றது. இது மசோடரிக் வடிவம் எனப்படும். நம்மிடம் உள்ள பழைய ஏற்பாட்டின் மிகப் பழமையான ஏடுகள் 10ம் நூற்றாண்டினது தான்.

பழைய எற்பாடு மூன்று பிரிவாகும். அதன் எபிரேய முதல் எழுத்து கொண்டு தனாக் எனப்படும். 

முதல் ஐந்து நூல்கள் தோரா எனும் சட்டங்கள்

நபிகள் எனும்  தீர்க்கர்கள் 

கேதுபிம் எனும் எழுத்துக்கள்

இவற்றில் ஏசு காலத்தில் முதல் 2 பிரிவுகள் மட்டுமே தயாராய் இருந்தது. ஏசு பலமுறை தொன்மத்தை சட்டங்களும்- தீர்க்கர்களு என்பதில் காணலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தொல்லியல் ஆய்வுகளின்படி, அரேபியர்களே எபிரேயர்கள். ஆப்பிரிக்க மொழியோடு எபிரேயம் தொடர்புடையது என வேர்சொல் ஆய்வாளர் காட்டுகின்றனர். ஆப்பிரிக்காவில் தோன்றிய  மனிதக் கூட்டத்தில் பாலஸ்தீன அரேபியரே யூதர்கள். நாடோடிகள், ஆடு மாடு மேய்த்த காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்தவர்களே. எகிப்தின் கீழான ஒரு அடிமை நாடாக பொமு 15௧1ம் நூற்றாண்டுகளில் இருந்தது, பெரும் பஞ்சம் வர எகிப்தினர் கட்டுப்பாடு தளர பொமு 9ம் நூற்றாண்டு\இல் மிகச் சிறு நாடாக 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 யூதர்  அல்லாதவர்கள் அழிக்கப்பட வேண்டிய மிருகங்கள் என்ற ஒட்டுமொத்த மனிதகுலத்தினதும் விரோதி

இன மக்களைக் கைது செய்து, மனித குலம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு சித்திரவதை செய்து, சாரிசாரியாகக் கொலைசெய்த

வதை முகாம்களையும், கொலை கூடங்களையும் ஜேர்மனிய சாமானிய மனிதன் இன்று அவமானச் சின்னமாகவே கருதுகிறான்

தமது மக்களைச் சுரண்டி, பன்நாட்டு முதலீடுகளைக் குவிப்பதற்காகவே மிருகத்தனமான கொலைகளைத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறுகின்றனர்

மறைமுக உதவிகளை வழங்கிய ஐ.பி.எம் போன்ற நிறுவனங்களின் தகவல்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன.

இலங்கையில் சிங்கள மக்களை ஆரியர்கள் என்றும் ஏனையவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர்களும் முஸ்லிம்களும் என்று கூறியே சிங்கள பௌத்த பேரினவாதம் உருவாகியது. இலங்கைக்குக்ச் சென்ற ஹெலேனா பிளவாட்ஸ்கி என்ற பெண்ணும் கேணல் ஒல்கோட் என்ற அமெரிக்க இராணுவ அதிகாரியும், ஆரிய இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களே மேலானவர்கள் என்ற நஞ்சை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தனர். அதனையே  சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் வாக்குப் பொறுக்கினர்.

கொன்று குவித்தான். பச்சிழம் குழந்தைகள் முதல் கர்ப்பிணித் தாய்மார்கள் ஈறாக முதியோர்கள் வரை, பட்டினி போட்டும், சித்திரவதைகள் செய்தும். உயிரோடு எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.

மிழினத்தின் பெயரால் பிறந்த குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் கொன்றுகுவிக்கும் மிருகங்களாக ஈழத் தமிழர்களை உலகத்திற்குக் காட்ட முனையும் சீமான் அழிக்கப்பட்ட பிணங்களை வைத்து நடத்தும் பிழைப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அன்று தொடக்கிய நிற வெறியும், கொலை வெறியும் இன்று வரை பல்வேறு வழிகளில் தொடர்கின்றன.

எந்தக் கூச்சமும் இல்லாமல் சில புத்தி சீவிகள் என்று தம்மக் கூறிக்குள்பவர்களும் அலைகின்றனர். உலகத்தில் வாழ்கின்ற ஏனைய இன மக்கள் ராஜபக்ச தமிழர்களை அழித்தது நியாயம் என்று கூற வைக்கும் அளவிற்கு சீமானின் நடவடிக்கள் அமைந்துள்ளன.

ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி செய்யப்படும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளின் இனச் சுத்திகரிப்பு நியாயம் என உலக மக்கள் அனைவரும் கூற ஆரம்பிப்பார்கள். இதற்கான முகவராகவே சீமான் செயற்படுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விடுதலைப் பயணம் 3:1மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.8எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு — அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு — அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.

இணைச் சட்டம் 7:

1நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன்கண்முன்னே விரட்டியடித்து,

 

2உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளிக்கும்போது, நீ அவர்களை முறியடித்து முற்றிலும் அழிப்பாய். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம்.

 

3நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. 
 
இணைச் சட்டம் 20
16ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே.

 

17இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எண்ணிக்கை 31:

15மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?

 

16பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது.

 

17எனவே ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.

 

18ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.

கொள்ளைப் பொருளைப் பங்கிடுதல்

25ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
 
26ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.
 
27போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள்.
 
28போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள்.
 
29அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாகக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும்.
 
30இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும்.
31மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.
 
32படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை; ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள்,
 
33எழுபத்தீராயிரம் மாடுகள்,
 
34அறுபத்தோராயிரம் கழுதைகள்,
 
35ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்; அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தோரா[தொகு]

தோரா என்னும் எபிரேயச் சொல் படிப்பினைபோதனைதிருச்சட்டம்நெறிமுறை என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை மோசே எழுதிய நூல்கள் எனவும் ஐந்நூல்கள் (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன:

  1. தொடக்க நூல் (ஆங்.: Genesis; எபிரேயம்: Bere****h)
  2. விடுதலைப் பயணம் (ஆங்.: Exodus; எபிரேயம்: Shemot)
  3. லேவியர் (ஆங்.: Leviticus; எபிரேயம்: Vayikra)
  4. எண்ணிக்கை (ஆங்.: Numbers; எபிரேயம்: Bamidbar)
  5. இணைச் சட்டம் (ஆங்.: Deuteronomy; எபிரேயம்: Devarim)

நெவீம்[தொகு]

இச்சொல் நவி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது (נְבִיא - navi). அதன் பொருள் இறைவாக்கினர் (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 31 உள்ளன. அவை முன்னைய இறைவாக்கினர் (6 நூல்கள்), பின்னைய இறைவாக்கினர் (15 நூல்கள்) கொண்டன.

முன்னைய இறைவாக்கினர்[தொகு]


1) யோசுவா (ஆங்.: Joshua; எபிரேயம்: Sefer Y'hoshua)
2) நீதித் தலைவர்கள் (ஆங்.: Judges; எபிரேயம்: Shoftim)
3) 1 சாமுவேல் (1 Samuel)
4) 2 சாமுவேல் (2 Samuel)
5) 1 அரசர்கள் (1 Kings)
6) 2 அரசர்கள் (2 Kings)

பின்னைய இறைவாக்கினர்[தொகு]

இப்பிரிவில் 3 பெரிய இறைவாக்கினர் நூல்களும் 12 சிறிய இறைவாக்கினர் நூல்களும் முறையே அடங்கும். அவை:
1) எசாயா (Isaiah)
2) எரேமியா (Jeremiah)
3) எசேக்கியேல் (Ezekiel)
4) ஓசேயா (Hosea)
5) யோவேல் (Joel)
6) ஆமோஸ் (Amos)
7) ஒபதியா (Obadiah)
8) யோனா (Jonah)
9) மீக்கா (Micah)
10) நாகூம் (Nahum)
11) அபக்கூக்கு (Habakkuk)
12) செப்பனியா (Zephaniah)
13) ஆகாய் (Haggai)
14) செக்கரியா (Zechariah)
15) மலாக்கி (Malachi)

கெதுவிம்[தொகு]

கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துப் படையல் நூல் தொகுப்பு என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன.


1) திருப்பாடல்கள் (Psalms)
2) நீதிமொழிகள் (Proverbs)
3) யோபு (Job)
4) இனிமைமிகு பாடல் (Song of Songs)
5) ரூத்து (Ruth)
6) புலம்பல் (Lamentations)
7) சபை உரையாளர் (Ecclesiastes)
8) எஸ்தர் (Esther)
9) தானியேல் (Daniel)
10) எஸ்ரா (Ezra)
12) நெகேமியா (Nehemiah)
13அ) 1 குறிப்பேடு (1 Chronicles)
13ஆ) 2 குறிப்பேடு (2 Chronicles)

இவ்வாறு, பழைய ஏற்பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர் கணிக்கின்றனர். இவை பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று கொள்வதும் உண்டு.

இந்நூல்கள் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் எபிரேய வடிவம்கி.மு. 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும்.[1]

கத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை[தொகு]

எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறித்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை விவிலியப் புற நூல்கள் (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.

கத்தோலிக்க திருச்சபை ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை,

1) திருச்சட்ட நூல்கள் (5):
தொடக்க நூல்விடுதலைப் பயணம்லேவியர்எண்ணிக்கைஇணைச் சட்டம்.

2) வரலாற்று நூல்கள் (16):
யோசுவாநீதித் தலைவர்கள்ரூத்து1 சாமுவேல்2 சாமுவேல்1 அரசர்கள்2 அரசர்கள்1 குறிப்பேடு2 குறிப்பேடுஎஸ்ராநெகேமியாதோபித்து;யூதித்துஎஸ்தர்1 மக்கபேயர்2 மக்கபேயர்.

3) ஞான நூல்கள் (7):
யோபுதிருப்பாடல்கள்நீதிமொழிகள்சபை உரையாளர்இனிமைமிகு பாடல்சாலமோனின் ஞானம்சீராக்கின் ஞானம்.

4) இறைவாக்கு நூல்கள் (4[+2] பெரிய இறைவாக்கினர்; 12 சிறிய இறைவாக்கினர்):
பெரிய இறைவாக்கினர்எசாயாஎரேமியா; [ பாரூக்குபுலம்பல்; ] எசேக்கியேல்தானியேல்.
சிறிய இறைவாக்கினர்ஓசேயாயோவேல்ஆமோஸ்ஒபதியாயோனாமீக்காநாகூம்அபக்கூக்குசெப்பனியாஆகாய்செக்கரியாமலாக்கி.

மரபு வழிக் கிறித்தவ சபைகள் (Orthodox Churches) பழைய ஏற்பாட்டில் 51 நூல்கள் உள்ளதாகக் கருதுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  • மத்தேயு நற்செய்தியை அப்போஸ்தலரான (திருத்தூதர்) மத்தேயு எழுதினார்.
  • மாற்கு நற்செய்தியை அப்போஸ்தலரான பேதுருவின் சீடர் என்று கருதப்படும் மாற்கு எழுதினார்.
  • லூக்கா நற்செய்தியை சவுல் என்று அழைக்கப்பட்டு கிறிஸ்துவை ஏற்ற பின்னர் பவுல் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட இறையடியாரின் சீடரான லூக்கா எழுதினார்.
  • யோவான் நற்செய்தியை இயேசுவின் அன்புச் சீடர் எனக் கருதப்படும் அப்போஸ்தலரான யோவான் எழுதினார்.

இவற்றில் முதல் மூன்று நூல்களும் தமக்குள் உள்ளடக்கம், நடை போன்றவற்றில் மிகவும் ஒத்தவையாகும். எனவே அவை ஒத்தமை நற்செய்திகள் (Synoptic Gospels) என அழைக்கப்படுகின்றன. நான்காவது நூல் அவற்றிலிருந்து வேறுபட்ட பாணியில் உள்ளது.

புனித பவுல் எழுதிய திருமுகங்கள்[தொகு]

பொதுத் திருமுகங்கள்[தொகு]

வெளிப்படுத்தல்[தொகு]

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படை என்ன ?

December 20, 2012Vinodh Rajan   http://www.virtualvinodh.com/wp/fundamentals-abrahamic-tamil/
கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதங்கள் ஆகியவையே ஆபிரஹாமிய மதங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆபிரஹாமை தங்களின் பூர்வீகமாக ஏற்பதினால் இந்தப்பெயர். இவற்றின் கருத்துக்களை ஓரளவுக்கு நாம் பல்வேறுவகைகளில் நாம் கடந்து வந்திருப்போம். ஆனாலும், அவற்றின் நம்பிக்கைகளின் அடிநாதமாக இருப்பது என்னவென்று நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் இயேசுவும் வாசுவும் ஒன்று என்பதான பிதற்றலான வரிகளை நம்மில் பலர் கூறுவது எவ்வளவு தவறென்று தெரியும்.
 
பொதுவாக ஆபிரஹாமிய மதங்கள் அனைத்தும் ஓரிறைக்கொள்கையை உடையவை என்பதை அறிவோம். தங்களுடைய தெய்வத்தை தவிர்த்து உலகில் வேறு தெய்வம் கிடையாது என்ற கொள்கையை கொண்டவை. அப்படியான எந்த தெய்வத்தை அவை வணங்குகின்றன ? “கர்த்தர்” “ஆண்டவர்” என்றெல்லாம் பைபிளில் கூறப்படும் மூல தெய்வம் எது ? எப்போதுமே ஒரு தெய்வம் மட்டுமே வணங்கப்பட்டதா ? பிற தெய்வங்களின் நிலை என்ன ? முதலிய கேள்விகளுக்கான விடையை காண முயல்வோம்.
 
இதற்கு, 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தூர மத்திய கிழக்காசிய பகுதிக்கு நாம் பயணிக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில், அப்பகுதியில் இஸ்ரேலியர்கள் உட்பட போன்ற பல்வேறு இனங்கள் வாழ்ந்து வந்தன. அவை பல்வேறு தெய்வங்களை வணங்கி வந்தன. ஏல் என்ற படைப்புக்கடவுள் கனானியர்களால் வணங்கப்பட்ட தெய்வம் முக்கியமானதொன்று. இஸ்ரேலியர்கள் யாஹ்வே (பைபிளில் யெகோவா என்று வரும். யாஹ்வே என்பதே மூல பதம்) என்ற போர் தெய்வத்தை வணங்கி வந்தனர். காலப்போக்கில் யாஹ்வே தெய்வம் ஏலின் அனைத்து அம்சங்களையும் கிரகித்துக்கொண்டது. பைபிளின் பழைய ஏற்பாடு (யூதர்களின் தனாக்) ஏல் மற்றும் யாஹ்வே வழிபாட்டர்களின் வெவ்வேறு நூல்களை ஒன்றினைத்தே உருவாக்கப்பட்டது.
 

 

பைபிளில் பல இடங்களில் இஸ்ரேலியர்களின் தங்கள் தெய்வத்தை சுட்டும்போதெல்லாம் பெரும்பாலும் எபிரேய மூலத்தில் “யாஹ்வே” என்ற பெயருடன் “ஏல்” என்ற துணைப்பெயரும் காணப்படுகின்றது. மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் அதை பொத்தாம் பொதுவாக “கர்த்தர்” “ஆண்டவர்” என்று மொழிப்பெயர்த்தனர்.
 
யாஹ்வேவுக்கு துணையான பெண் தெய்வமும் உண்டு. இவளுக்கு “அஷேரா” என்று பெயர். ஒரு அகழ்வாராய்ச்சியில் ஒரு குடுவையின் மீது “யாஹ்வேவும் அவனுடைய அஷேராவும்” என்ற வாக்கியம் காணப்பபட்டது. இதன் காலம் பொது சகாப்தத்திற்கு முன்னரான எட்டாம் நூற்றாண்டு. இஸ்ரேலிய மக்கள் மத்தியில் சிறு தெய்வமாக வழிபடப்பட்ட யாஹ்வேவின் வழிபாடுகள் மிகப்பிற்காலம் வரை தொடர்ந்து வந்ததை அறியலாம்.
 
இவ்வறாக ஏல் தெய்வத்தை உள்வாங்கிய யாஹ்வே இஸ்ரேலின் பிரதான ஒரே தெய்வமாக இஸ்ரேல் மக்களின் மீது “தீர்க்கதரிசிகள்” எனப்படுவோரால் ஸ்தாபிக்கப்பட கடுமையாக முயற்சிக்கப்பட்டது. யாஹ்வேவை பிரதானமாக வழிபட்டாலும், பலரும் பாரம்பரியமான சுற்றியுள்ள தேசங்களின் பிற தெய்வங்களையும் தொடர்ந்து வணங்கியே வந்தனர். பண்டைக்காலத்தில் நெருங்கிய தேசங்களின் தெய்வங்களும் வழிபடப்பட்டது சாதாரணமாக நிகழ்ந்த ஒரு ஒன்று. எகிப்திய தெய்வங்கள் கிரேக்கத்திலும் கிரேக்க தெய்வங்கள் எகிப்திலும் என்பதாக பலகடவுளர்களையும் மக்கள் வழிபட்டே வந்திருக்கின்றனர்.
 
பைபிளின் பழைய ஏற்பாடு அனைத்துமே யாஹ்வே வழிபாட்டாளர்களால் தொகுக்கப்பெற்றதே. யாஹ்வேவின் வழிபாட்டை மட்டும் ஸ்தாபித்து மற்ற தெய்வங்களின் வழிபாட்டை தடுக்க யாஹ்வே தெய்வத்தை வணங்கியவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
 
யாஹ்வேயின் கூற்றாக பழைய ஏற்பாட்டில் வருபவை:
 
[…] என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது […] : யாத்திராகமம் 20 : 3
 
[…] நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து […] : யாத்திராகமம் 20 : 5
 
[…] மேலும், அந்நிய தெய்வங்களின் பெயரைக் கொண்டு ஆணையிடாதீர்கள். உங்கள் வாயினின்று அது யாராலேயும் கேட்கப்படலாகாது […] : யாத்திராகமம் 23 : 13
 
[…] அந்நிய தெய்வத்திற்கு ஆராதனை செலுத்தாதே. ஆண்டவருடைய திருப்பெயர்: பொறாதவர் […] : யாத்திராகமம் 34 : 14
 
பைபிளின் யாத்திராகமம் முழுக்கவே இதுபோன்ற பிரசங்கங்களை காணலாம். இதன் மைய நோக்கம் பிற தெய்வ வழிபாடுகளை புறக்கணித்து யாஹ்வேவின் வழிபாட்டை முழுமூச்சாக ஸ்தாபித்தல்.
 
இவ்வாறான யாஹ்வேவின் குணநலன்கள் யாவை ? யாஹ்வே பூர்வீகத்தில் போர் தெய்வமாக இருந்ததாக கருதப்படுகிறது. யாஹ்வே கடுங்கோபம் கொண்ட தெய்வமாக பழைய ஏற்பாட்டில் சித்தரிக்கப்படுவது இதன் தொடர்ச்சியாக இருக்கலாம். பழைய ஏற்பாட்டில் “ஒழிப்பேன்” “அழித்துப்போடுவேன்” “சங்காரம் பண்ணுவேன்” என்றெல்லாம் தான் யாஹ்வேயின் கூற்றுகளாக அதிகம் காணப்படுகின்றன. யாஹ்வேயுடன் பாகால், அஷேரா, இஷ்தார் என்ற பல்வேறு தெய்வங்களையும் வணங்கி வந்தனர். யாஹ்வே பூர்வீகமாகவே சிறு தெய்வமாக இருந்தபடியால், தன்னைத்தவிர எந்தவொரு தெய்வத்தையும் வணங்குவதை யாஹ்வே ஏற்கவில்லை. பழங்குடிகளின் கூறுகளின் ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட எல்லைகளை தீவிரமாக கடைபிடித்தல். ஸ்தாபிக்கப்பட்ட எல்லைகளை தாண்டுவது அத்துமீறலாக கருதப்பட்டும். யாஹ்வே தெய்வம் தன்னைவிடுத்து இஸ்ரேலியர்கள் பிற தெய்வங்கள் வணங்குவதை பொறாமையுடனும் அத்துமீறலாகவும் காண்பது இந்த குழுமனோநிலையின் தொடர்ச்சியே.
 
[…] பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன். வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன் […] : செப்பனியா 1 : 4-5
 
[…] பிள்ளைகள் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றார்கள்; பெண்கள் மாவில் எண்ணெய் விட்டுப் பிசைந்து அப்பம் சுட்டு விண்ணரசிக்கும் வேற்றுத் தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள்; பானப்பலிகளையும் இடுகிறார்கள். நமக்கோ சினத்தை மூட்டுகிறார்கள் […] : எரேமியாஸ் 7 : 18-19
 
[…] பாகால்களின் விழாக்களை அவள் கொண்டாடி, அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தி, வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்கள் பின்னாலேயே போய் நம்மை மறந்ததற்கு அவளைப் பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர் […] : ஓசே 2 : 13
 
[…] அந்நாளில், ‘என் கணவன்’ என என்னை அவள் அழைப்பாள்; ‘என் பாகாலே’ என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர். அவளுடைய நாவினின்று பாகால்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்; இனிமேல் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள். […] : ஓசே 2 : 16
 
மேற்கூறியவை வெறும் உதாரணங்களே, பழைய ஏற்பாடு முழுக்க இது போன்ற, இஸ்ரேலியர்கள் வணங்கிய பிற தெய்வங்களின் மீது “பொறாமை”யுள்ள யாஹ்வே தெய்வத்தின் வசனங்களை காணலாம். பெரும்பாலும் யாஹ்வேவுக்கு எதிராக கூறப்படுவது பாகால் என்றழைக்கப்படும் தெய்வம். யாஹ்வேயை பிரதானப்படுத்த, பாகால் வழிபாட்டாளர்கள் யாஹ்வேயிடம் தோற்றதாக கூட கதைகள் சேர்க்கப்பட்டன.
 
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும், யாஹ்வே தெய்வம் தன்னத்தவிர பிற தெய்வங்களை இருப்பதை தெளிவாக மறுப்பதில்லை. பிற தெய்வங்களை விட தன்னையே வணங்க வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறது. பிற தெய்வங்களின் இருப்பை இது மறைமுகமாக உறுதி செய்வதாக பைபிள் ஆரய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆக, இஸ்ரேலியர்கள் யாஹ்வேவை தவிர்த்தும் பிற தெய்வங்களின் இருப்பை நம்பினர். இவ்வாறாக பல தெய்வங்கள் இருப்பினும் (இஸ்ரேலியர்களுக்கு) முக்கிய தெய்வமாக யாஹ்வே தெய்வமும் இருந்தது.
 
ஏற்கனவே குறிப்பிட்டது போல, பல்வேறு பிற தெய்வங்களின் தன்மைகளும் யாஹ்வேவுடன் இணைக்கப்பட்டன. ஏன், யாஹ்வேவுக்கு எதிரான தெய்வமாக கருதப்பட்ட பாகால் தெய்வத்தின் சில குணங்களையும் யாஹ்வே தெய்வம் ஏற்றதாக தெரிகிறது. ஆக, பல்வேறு தெய்வங்களுடைய குணநலன்களை உடைய தெய்வமாக யாஹ்வேவின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்தது. இறுதியில் சிருஷ்டித்து பரிபாலித்து நிக்கிரஹம் செய்யும் சர்வ வல்லமை நிறைந்த தெய்வமாக ஆனது. அனைத்து தெய்வங்களின் இருப்பும் மறுக்கப்பட்டு யாஹ்வே மட்டுமே “ஜீவனுள்ள” ஒரே தேவனாக கருதப்பட்டது பிற்காலத்திலேயே எனத்தெரிகிறது. அதாவது இஸ்ரேலிய பல தெய்வவழிபாட்டில் பிரதான தெய்வமாக இருந்து (Monolatry), பிறகு அது ஒரே தெய்வமாக காலப்போக்கில் ஆகிப்போனது (Monotheism). இதற்கு சமய காரணங்களை விட அரசியல் காரணங்களே அதிகம். ஒரு தெய்வ வழிபாடு என்பது இஸ்ரேலியர்களை யாஹ்வே என்ற ஒரே தெய்வத்தின் குடைக்குள் கொண்டு வருகிறது.
 
யூதர்கள் யாஹ்வே தெய்வத்தை தங்கள் சொந்த இனத்தின் தனிப்பட்ட தெய்வமாக (குலதெய்வம் போல, இனதெய்வம் என்று வைத்துக்கொள்ளலாம்) கருதினர் (அல்லது இன்னொரு விதத்தில் தனாக்கின் படி, யாஹ்வே தெய்வம் இஸ்ரேலியர்களை தன்னுடைய மக்களாக தேர்ந்தெடுத்துக்கொண்டது). யாஹ்வே தெய்வம் இஸ்ரேலியர்களை குறித்து மட்டும் கவலைப்பட்டு, அவர்கள் வேறு தன்னைத்தவிற எந்த தெய்வங்களையும் வணங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. ஏதேனும் “தெய்வக்குற்றம்” நேர்ந்தால் இஸ்ரேலிய மக்களை யாஹ்வே தெய்வம் தண்டித்தது. ஒரு விதத்தில், நமது கிராம தேவதைகளைப்போல. யாஹ்வே தெய்வம் இஸ்ரேலியர்களுடன் மட்டும் உறவாடியது அவர்களுடன் பலமுறை “உடன்படிக்கை” எல்லாம் செய்துகொண்டது.
 
[…] நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும் […] : ஆதியாகமம் 17 : 4-5
  
[…] உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் […] : ஆதியாகமம் 17 : 7
 
பழங்குடி தெய்வமாக இருக்கிறபடியால் பலிகேட்பதும் அதற்கு உரித்ததாக கருதப்பட்டது.
 
[…] மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக. நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் […] : யாத்திராகமம் 20 : 24
 
எனவே, இஸ்ரேலியர்கள் அந்த உடன்படிக்கைகளை மீறாது “தெய்வக்குற்றம்” (பெரும்பாலும் யாஹ்வேவைத்தவிர பிற தெய்வஙக்ளை வணங்காதது) நேராது, யாஹ்வே தெய்வத்தை, பலிகள் பல கொடுத்தும் பூஜைகள் செய்தும் பல விதங்களில் மகிழ்விப்பது கடமையாக கொள்ளப்பட்டது. உடன்படிக்கையை மீறும் போது யாஹ்வே தெய்வம் அவர்களை தண்டித்தது (என தீர்க்கதரிசிகள் பிரசங்கித்தனர்).
 
“கர்த்தர்” “ஆண்டவர்” “தேவன்” என்ற பல்வேறு வார்த்தைகளால் ஆபிரஹாமிய மதத்தவர்கள் குறிப்பிடுவது ஏதோ நிர்குணமான பூரணமான abstract தெய்வத்தை அன்று. இஸ்ரேலியர்களைக் குறித்து மட்டும் கவலைப்படுவதும் இஸ்ரேலிய பழங்குடியர் வணங்கியதுமான “யாஹ்வே” தெய்வத்தையே என்பதை நாம் முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக கூறுவாதானால் யூதப்பழங்குடியினரின் பூர்வீக சிறுதெய்வங்களுள் ஒன்றை. யூதர்கள் தங்கள் இனத்தை காப்பதாக நம்பிய தெய்வம். அதை மகிழ்வித்தால் தங்கள் இனம் மகிழ்வடையும் என்றும், அதை கோபமாக்கினால் “தெய்வகுற்றமாகி” அதன் கோபம் இனத்தை அழித்து விடும் என்று தங்களை இனத்தை மட்டுமே மையமாக கொண்டு வணங்கப்பட்டு மகிழ்விக்கப்பட்ட சிறு தெய்வம்.
 
யாஹ்வே குறித்து விரிவாக கண்டோம். அடுத்து, ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை தத்துவம் என்னவென்று கான்போம். இக்னோரன்ஸ் இஸ் ப்லிஸ் (Ignorance is Bliss) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அறியாமை இன்பம் தரக்கூடியது என்பதே இதன் பொருள். இதுவே ஆபிரகாமிய மதங்களின் தத்துவத்தை விவரிக்கும் மிகச்சிறந்த வாக்கியம். ஏன், அவர்களுடைய மகாவாக்கியமாக எடுத்துக்கொள்ளுங்களேன். ஆபிரஹாமிய மதங்கள் அனைத்தும் அஞ்ஞானத்தையே அடிப்படியாக கொண்டவை. அவை அடிப்படையாகவே ஞானத்தை நோக்கி பயணப்பட்டது கிடையாது.
 
யாஹ்வே தெய்வம் மனிதர்கள் ஞானத்தை அடையவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் இருப்பது தெளிவாக தெரியவருகிறது. யாஹ்வே தெய்வம் ஆணையும் பெண்ணையும் படைத்து விட்டு, அவர்களை ஒரு விருக்ஷத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என்று கட்டளை இடுகிறது. இருப்பினும் அவர்களை உண்கின்றனர், அதன் மூலம் நன்மை தீமையை பகுத்தறியும் நிலையை பெறுகின்றனர்.
 
அந்நிலையில் யாஹ்வே தெய்வம் இவ்வாறு தனக்குள் எண்ணுகிறது :
 
[…] பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று […] : ஆதியாகமம் 3 : 22
 
இது மிக மிக முக்கியமானது. இந்திய தத்துவங்கள் அனைத்தும் ஞானத்தை அடைவதையே தனது லக்ஷ்யமாக கொண்டவை. அஞ்ஞானத்தை விளக்கி நன்மை தீமைகள் தெளிவாக அறிவதையே அடிப்படையாக கொண்டவை. ஆனாலோ, யாஹ்வே தெய்வம் மனிதன் ஞானம் அடைந்ததை தனக்கு போட்டியாக எண்ணுகிறது.
 
[…] இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார் […] : ஆதியாகமம் 3 : 24
 
மனிதனின் வாழ்நாள் நோக்கமே ஞானத்தை நோக்கி தானே ? பாகனிய மதங்களின் கடும் தாக்கத்தில் எழுந்த ஆரம்பகால கிறிஸ்தவ பிரிவுகளுள் ஒன்று நாஸ்டிசிசம். மனிதன் ஞானம் அடைவதை தடுக்கும் தெய்வம் பெருந்தெய்வமாக இருக்க இயலாது, என்றெண்ணி அதையும் மீறி முழுவதுமான ஞானஸ்வரூபமாக ஒரு தெய்வம் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதினர். யாஹ்வே சிறு தெய்வம் எனவும் அந்த பெருந்தெய்வத்தின் படைப்பெனவும் ஆரம்ப கால கிறிஸ்தவ பிரிவொன்றே கருத்துக்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறாக ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே, இந்தியத்துவத்துக்கு நேர் எதிர் ஆனவை. யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கான அடிப்படை வேறுபாடு தான் என்ன ? ஏற்கனவே கண்டது போல் இம்மூன்று மதங்கள் வழிபடும் தெய்வம் ஒன்று தான் – அதுவே யாஹ்வே. இவற்றின் புராணங்களும் கதைகளும் நம்பிக்கைகளும் இஸ்ரேலிய பழங்குடி தொன்மங்களை அடிப்படையாக கொண்டவை. பிறகு இவற்றின் மத்தியிலுள்ள வித்தியாசம் தான் என்ன ? யாஹ்வே தெய்வம் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி யார் என்பதே அது.
 
யூதர்களை பொருத்த வரையில் யாஹ்வே தெய்வத்தால் அனுப்பப்பட்ட கடைசி தீர்க்கதரிசி மலாக்கி. இவருக்குப் பின் தோன்றிய இயேசு திடீரென தன்னையே யூதர்களின் தனாக்கில் கூறப்பட்ட யூதர்களை காப்பாற்ற கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசியாக அறிவித்துக்கொண்டார். ஆனாலும் யூதர்கள் முற்றிலும் அதை நிராகரித்தனர். இயேசுவை யாஹ்வேவின் தீர்க்கதரிசியாக யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .கிறிஸ்தவர்கள் இயேசுவையே கடைசி தீர்க்கதரிசியாவும், யாஹ்வேவின் புத்திரனாகவும் கருத தலைப்பட்டனர். பல்வேறு பாகனிய கருத்துக்களை உள்வாங்கி, மூல யூத மதத்தில் இருந்து பெரிதும் வேறுபட்டுப்போயினர். யூதர்களின் தனாக்கை, பைபிளின் பழைய ஏற்பாடாக ஏற்றுக்கொண்டனர். இஸ்லாமியர்கள் நபியை கடைசி தீர்க்கதரிசியாக கருதிக்கொள்கின்றனர் (அவ்வழியில் இயேசுவை அவருக்கு முந்தின தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கின்றனர்), நபியின் மொழிகளே யாஹ்வேவின் கடைசிச்செய்தி எனக்கருதுகின்றனர்.
 
அவ்வகையில், யாஹ்வேவினுடைய கடைசி அப்டேடட் செய்திகள் எவரிடம் உள்ளது என்பதே இவற்றுக்கிடையேயான வேறுபாடுக்கான அடிப்படை காரணம்.
 
ஆக, ஏதேனும் ஒரு ஆபிரஹாமிய மதத்துக்கு மதம் மாறுகிறவர்கள், தாங்கள் வணங்க முற்படுவது ஒரு தூர மத்திய கிழக்காசிய பழங்குடி தெய்வத்தை என்பதை அறியாமல் இருக்கின்றனர். மத்திய கிழக்காசியாவின் சிறு தெய்வம் ஒன்றின் வழிபாடு எவ்வாறெல்லாம் உலகை ஆட்டிப்படை(க்கிற)(த்த)து என்பதை எண்ணும்போது வியப்பே மேலிடுகிறது. இந்திய மதங்களைப்போல ஆழ்ந்த தத்துவங்களோ குறைந்த பட்சம் ஞானத்தை நோக்கிய பயணமோ இவற்றினிடத்தில் இல்லை. மனிதன் நன்மை தீமை பகுத்தறிவதை தடுக்க நினைத்து, அதை நடவாமல் போய் மனிதன் நன்மை தீமை அறியும் திறனை பெற்றவுடன் அதை பொறாமையுடன் கண்ட “எரிச்சலுள்ள” இஸ்ரேலிய போர் தெய்வத்தை அடைவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள் போல். ஏதேன் தோட்டத்தில் உண்ட கனியின் மிச்சம் மீதி உணர்வு இருந்திருக்குமானால் எது சரி எது தவறு என்று அவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டும்
 
 

மேற்கோள்கள்:

 
1. Robert Wright (2009) : Evolution of God – ISBN: 978-0-316-73491-2


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சிரியா தேசத்தில்அஷேரா உருவம்தூக்கிய கைகளுடன்கதிர்களைமிருகங்களுக்கு உணவு அளிப்பதைக் காணலாம். இது ஸிந்து சமவெளி தாய்க் கடவுளை ஒத்திருக்கிறது.

Ishtar+9.png
அதே மாதிரி இன்னொரு அஷேரா  உருவம்,  மண்டை ஓடுகளின் மேல் நிற்பது. இந்தக் கருத்து எங்கிருந்து வந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.


Ishtar+10.png



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அஷேராவின் உருவமும்திறந்த மார்புடன் இருந்தாலும்யுத்தக் களைப்பு இல்லை. இதனால்காலத்தாலும்இடமாற்றங்களாலும்கருத்து மாற்றம் ஏற்பட்டிருப்பது நிதர்சனம். 


Ishtar+13.png

அஷேராசிரியா கி. மு. 1300
திறந்த மார்பகங்களுடன் இருக்கும் இந்தக் கருத்துநாளடைவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இது இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியமித்ரா சீரழிவை தழுவி இருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Goddess with Animal and Plants

Goddess with Animal and Plants

Canaanite Goddess (Astarte-Ashtoreth, Companion of Baal)
gold plaque from Lachish. 13th century BCE
(Israel Museum, Jerusalem)

1. இஸ்ரவேலர்களுடைய மண்ணின் கடவுளாக ஜெஹோவா அல்லது யெஹ்வா என்ற யூத-ஆண் கடவுளையும், பிற இனத்தவர்களின் கடவுள் மற்றும் கடவுள்களாக பால், பாலிம் (பாலிம் என்றால் பல கடவுள்கள் – இவை பாலின் வெவ்வேறு தோற்றங்கள், இந்து மதத்தில் கடவுள் பல உருவங்களில் வழிபடப்படுவது போன்று), அஷெரா போன்ற பெண் தெய்வங்கள் மற்றும் இத்தெய்வங்களுடன் அதுவரை சம்பந்தப்பட்டிருந்த இயற்கைக் குறியீடுகள், விலங்குகள் ஆகிய எல்லாமே நிராகரிக்கப்பட்டவையாக இஸ்ரேலில் இருந்த யெஹ்வா – ஜெஹோவா கடவுளின் ஆதரவாளர்களால் சித்தரிக்கப்பட்டன. இதற்கும் அடிமை மனோபாவத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் தொடர்புண்டு. தாழ்வு மனப்பான்மையிலிருந்து பிறப்பவையே ஆபிரகாமியக் கருத்தியல்கள் என்றுகூடச் சொல்லலாம், எனவேதான் இதே மனநிலையில் செயல்படுவோரை விரைந்து ஈர்த்துக்கொள்கிறது – இதை இன்றும் நாம் காணவும் முடிகிறது.

 

snakeinheadgear(எகிப்தின் ரா கடவுள் தலையில் இருக்கும் நாகம்)

souljourneyegypt(எகிப்திய ஓவியங்கள், ஆன்மீக அனுபவ விவரணைகளில் நாகம்)

புறாவாக விரைந்து பறக்கும் பரிசுத்த ஆவி (Holy Ghost) கிறிஸ்துவத்தில் உள்ளது. இது பெண் தன்மையினைக் குறிக்கும் அதே சக்தியின் வடிவம்தான். கிறிஸ்துவத்துக்கு முன்பு பரவியிருந்த மதங்களை அழித்துவிட்டுக் கிறிஸ்துவம் பரவினாலும், அப்போதிருந்த இந்த குறியீடுகள் ஆதரவாளர்களை சேர்க்கவென்று கிறிஸ்துவர்களால் சேர்க்கப்பட்டு பின்னாளில் மதத்தில் சேர்ந்து கொண்டுவிட்டது.

Sould attaining Liberation

Sould attaining Liberation

(விழிப்படைந்த ஆத்மா பறப்பதை குறிக்கும் எகிப்திய ஓவியம்)

 

holyghost(கிறிஸ்துவம்: புறா வடிவில் சித்தரிக்கப்படும் பரிசுத்த ஆவி)

4.அது போன்றே புராக் என்ற வாகனத்தில் இஸ்லாத்தின் இறைத்தூதர் விண்மண்டலப் பயணத்தை மேற்கொண்டதாக அறியாத அரபி மக்களிடையே ஒரு கதை உண்டு. இதெல்லாம், அறியாவிட்டாலும் ஆபிரகாமிய மதங்களில் சிக்குண்டோரும் எதோ ஒருவிதத்தில் இந்தக் குறியீடுகளை அறிந்துள்ளதையும், தம்மையும் அறியாமலேயே தெளிவில்லாத நிலையில் அவற்றைப் பின்பற்றுவதையும் குறிக்கிறது.

mohamedjourney(இஸ்லாம்: நபிகள் அகவெளியில் புராக் வாகனத்தில் பிரவேசிப்பதைக் குறிக்கும் ஓவியம்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கம்ப தெய்வ வழிபாடு என்பது யூத மதத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. இஸ்லாத்தில் நிகழ்ந்த அனைத்தும் யூதமதத்தை பின்பற்றி ஏற்படுத்தப்பட்டவையே.

யூத மதத்தில், ஆரம்ப கால கட்டத்தில் ஜெஹோவா என்ற ஆண் கடவுளுக்கு இணையான கடவுளான அஷெரா என்ற பெண் தெய்வம் இருந்தது. இந்த பெண் தெய்வம் மத்திய கிழக்கில் பல பெயர்களில் வழிபடப்பட்டது. அல்லாத் என்ற பெயரும் அதில் ஒன்று. அரேபியாவில் முழுவதும் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்ட அல்லாத்தின் படங்கள் எகிப்தில், பிற பிரதேசங்களில் அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த அல்லாத் தேவியை மூன்று தேவிகளுள் ஒருவராக வழங்குவதும் யூத மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த முறையே. அதுவே, அரேபியாவில் அல்லாத் – மனாத் – உஸ்ஸா வழிபாடாக இருந்தது. இந்த அல்லாத் தேவி எழுச்சியை காட்டக் கூடிய ஒரு கம்பமாக, கனிகள் தரக்கூடிய மரமாக உருவகப்படுத்தப் பட்டாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

In Numbers 17, Korah’s rebellion against Moses’ proclamation of the tribe of Levi as the priesthood has been quashed and the entire congregation’s ensuing rebellion has resulted in a plague, ended only by the intercession of Moses and Aaron. In order to “stop the complaints” of the Israelites, God commands that each of the Twelve Tribes provide a rod; and only that of the tribe chosen to become priests will miraculously sprout overnight. Aaron provides his rod to represent the tribe of Levi, and “it put forth buds, produced blossoms, and bore ripe almonds” (Numbers 17:8), as an evidence of the exclusive right to the priesthood of the tribe of Levi. In commemoration of this decision it was commanded that the rod be put again “before the testimony” (Numbers 17:10). According to tradition, the rod of Aaron bore sweet almonds on one side and bitter on the other; if the Israelites followed the Lord, the sweet almonds would be ripe and edible, but if they were to forsake the path of the Lord, the bitter almonds would predominate. A later tradition asserts (Hebrews 9:4) that the rod was kept in the Ark of the Covenant. The main fact, however, is thus confirmed, that a rod was preserved in the Tabernacle as a relic of the institution of the Aaronic priesthood.

http://en.wikipedia.org/wiki/Rod_of_Aaron

 

Moses was directed to consecrate the Ark, when completed, with the oil of holy ointment (Ex. 30:23-26); he was also directed to have the Ark made by Bezalel, son of Uri of the tribe of Judah, and by Aholiab, the son of Ahisamach of the tribe of Dan (Ex. 31:2-7). These instructions Moses carried out, calling upon every “wisehearted” one among the people to assist in the work (Ex. 35:10-12). Bezalel the artist made the Ark (Ex. 37:1); and Moses approved the work, put the testimony in the Ark, and installed it.”

http://en.wikipedia.org/wiki/Ark_of_the_Covenant

 

ஆபிரகாமிய மதங்கள், பாகன் வழிபாட்டு முறைகளில் சிலதை ஏற்று, அதை ஒரு இடத்தில் மட்டும் ஏற்பதும், மீதமுள்ள இடங்களில் நிராகரித்து அதே வழிபாட்டு முறையை தூற்றி கடவுளுக்கு எதிரானது என்று அழிப்பதும் வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை அடியொற்றியே யூத பாரம்பரியத்தை எல்லா வகையிலும் ஏற்ற முஹமது, பாகன் அரபிகள் புனிதமாக வழிபட்ட கம்பங்கள், ஹஜருல் அஸ்வத் லிங்கம் ஆகியவற்றை மெக்காவில் இருக்கும் காபாவில் அனுமதித்து, மற்ற இடங்களில் அதே விஷயங்களை சைத்தானாக, கடவுளுக்கு எதிரானதாக விவரித்து அழிக்கச் சொன்னார்.

யூத மதத்தில் ஏகத்துவம் நுழைந்த போது ஜெஹோவா என்ற குழுத்தேவன் உயர்த்தப்பட்டு, அஷெரா விரட்டியடிக்கப் பட்டாள். கம்பம்/கனிகள் தோன்றும் மரமான fertility goddess ஒழித்துக் கட்டப்பட்டது. இதே போன்றதொரு நிகழ்வு இஸ்லாத்திலும் நிகழ்ந்தது. அரபிகளின் தெய்வங்களுள் தலையான தெய்வமான லா(ஹ்) கடவுள், ஏகத்துவ இறைவனாக ஏற்கப்பட்டு, அத்தெய்வத்தின் இணையாக அல்லது அத்தெய்வத்திடமிருந்து வெளிப்படும்(மகள்) சக்தியான அல்லாத் வழிபாடு ஒழிக்கப் பட்டது.

ஆனால், யூத மதத்தில் ஏனைய கம்பங்கள் அழிக்கப்பட்டு ஏகத்துவம் நிலைநாட்டப்பட்ட பின்பும், Ark of Covenant என்ற பெயரில் அழைக்கப்பட்ட பெட்டக காபாவில் இருந்த கம்பம் பாதுகாக்கப் பட்டது போலவே முஹமதாலேயும், பாகன் அரபிகளின் காபாவில் இருந்த கம்பத்தெய்வங்கள், ஹஜருல் அஸ்வத்(கறுப்புக் கல்) பாதுகாக்கப் பட்டது. முஹமதின் காலத்திற்குப் பின்பு வந்தவர்களுக்கு, இதற்குப் பின்னால் இருக்கும் இறையியல் புரியாவிட்டாலும், கடவுளின் தூதர் செய்யாத ஒன்றை தாம் செய்ய அஞ்சி அதை விட்டு வைத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

நேசகுமார்.


pl0604092.jpg

 

கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் மெல்லத் தொட்டுவிட்டு முழுவதுமாக பின்பு தனியே எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன்.

உள்ளே செல்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நான் சொல்லிவிட வேண்டும். இந்த ‘இறையுதிர் காலம்’ என்ற சொல்லை முதன் முதலில் தன்னுடைய எழுத்தில் பயன்படுத்தியது சக தமிழ் எழுத்தாளரும், இறையியல் ஆய்வாளருமான திரு. அரவிந்தன் நீலகண்டன். இப்பதத்தை உருவாக்கியதற்கு அவருக்கு எனது நன்றிகள், இதை சுட்டிக் காட்டிய கால்கரி சிவா அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

***

முதலில் இந்த ஆய்வின் அவசியம் என்ன என்பது குறித்த கேள்வி இயல்பாகவே எழும். காபாவின் உள்ளே என்ன இருக்கிறது, இல்லை, இதன் ஆரம்பம் என்ன, இது உருமாறியது எவ்வாறு, மதங்கள் குறித்த ஆய்வு அவசியமா என்ற ஏராளமான கேள்விகள் எழுவதும் இயல்பானதே.

இந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது, நம்மை மனிதர்களாக மாற்றும். இயல்பான வரலாற்று நிகழ்வுகளை, விபத்துகளை, இயற்கையான விஷயங்களை அமானுஷ்யமாக கருதுவதும், அது நமது கண்ணுக்கு தெரியாத நல்ல/தீய சக்திகளால் நிகழ்கிறது என்று நம்புவதும், மனிதர்களை மிருகங்களாக மாற்றிவிடுகின்றன. இன்றும் சூனியக்காரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு மத்திய பிரதேச வனாந்திரங்களில், மலைவாழ் குழுக்களிடையே கொல்லப்படும் பெண்மணிகள் இருக்கின்றனர். மத்திய காலத்திலோ, இங்கிலாந்து போன்ற பிரதேசங்களில் கூட தெருவுக்கு தெரு சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அறியாத விஷயங்களைப் பற்றிய பயம், அறியாமையே இந்த குற்றச்செயல்களில் ஈடுபட மனிதர்களைத் தூண்டுகின்றன. இதற்கும் இன்று நடக்கும் குண்டு வெடிப்பு – கொலை – கலவர ஜிஹாதுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

இதுவும் தமது மதமென்று நம்புவது அமானுஷ்ய சக்தி ஒன்றால் உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் ஒவ்வொன்றும் பலம் கொண்ட ஒரு சக்தியின் செயல். மதமென்று கருதுவதை மீறுவது, அது மானுடத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், கடவுளுக்கு எதிரானது என்ற கருத்து வலுவாக பிடித்துக் கொண்டு மனிதர்களை ஆட்டுவிக்கின்றது. கண்ணுக்கு முன்னே இருக்கும் இந்த வாழ்க்கையை சுகமானதாக, வளமானதாக, நாலு பேருக்கு நல்லது செய்வதாக ஆக்கி, நிம்மதியாய் இருப்பதை விட்டுவிட்டு எப்போதோ இறந்தபின்பு கிட்டப்போகும் சொர்க்க வாழ்க்கையைப் பற்றிய கனவில் வன்முறைக்கு வாழ்க்கையை தொலைத்துவிட்டு தங்களையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துகிறார்கள் மதவாத நோயால் பீடிக்கப்பட்ட மனிதர்கள்.

***

காபாவின் உள்ளே தற்போதும் மூன்று தூண்கள் உள்ளன. அவை உத்திரத்தை தொடுவதில்லை. முஹமது அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பாகன்களின் பல வழக்கங்களை அங்கீகரித்தார். அவற்றுள் இந்த காபாவின் தன்மையுடன் இணைந்த கம்ப தெய்வ வழிபாடு, ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல் (ஹூபல் கடவுள்) வழிபாடும் அடங்கும். மற்ற இடங்களில் இவை நீக்கப்பட்டுவிட்டாலும், முஹமது அங்கீகரித்தபடியால் அவை காபாவில் இன்றும் இருக்கின்றன.

***

கம்ப தெய்வ வழிபாடு என்பது யூத மதத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. இஸ்லாத்தில் நிகழ்ந்த அனைத்தும் யூதமதத்தை பின்பற்றி ஏற்படுத்தப்பட்டவையே.

யூத மதத்தில், ஆரம்ப கால கட்டத்தில் ஜெஹோவா என்ற ஆண் கடவுளுக்கு இணையான கடவுளான அஷெரா என்ற பெண் தெய்வம் இருந்தது. இந்த பெண் தெய்வம் மத்திய கிழக்கில் பல பெயர்களில் வழிபடப்பட்டது. அல்லாத் என்ற பெயரும் அதில் ஒன்று. அரேபியாவில் முழுவதும் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்ட அல்லாத்தின் படங்கள் எகிப்தில், பிற பிரதேசங்களில் அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த அல்லாத் தேவியை மூன்று தேவிகளுள் ஒருவராக வழங்குவதும் யூத மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த முறையே. அதுவே, அரேபியாவில் அல்லாத் – மனாத் – உஸ்ஸா வழிபாடாக இருந்தது. இந்த அல்லாத் தேவி எழுச்சியை காட்டக் கூடிய ஒரு கம்பமாக, கனிகள் தரக்கூடிய மரமாக உருவகப்படுத்தப் பட்டாள்.

***

காபா என்பதும் இஸ்லாத்தில் தோன்றியதல்ல. மத்திய கிழக்கில் வழிபடப்பட்ட இறையில்லங்களின் பெயர்கள் காபாக்கள். ஜோர்டானில் இருக்கும் பெத்ரா காபாவின் பல படங்களை இணையத்தில், ஜோர்டான் அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே காண முடியும். அவை மெக்கா நகரின் காபாவைப் போன்ற சதுர வடிவிலேயே அமைந்திருப்பதையும் காண முடியும்.

இஸ்லாமை முகமது தோற்றுவிப்பதற்கு முன்பான காலகட்டத்தில் காபா எனும் சதுரவடிவ ஆலயங்கள் அரேபியாவில் பல இடங்களில், குறிப்பாக அரபி பாலைவனத்தில் நீர்நிலை இருக்கும் வியாபாரத்தலங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஜோர்டான் (பெத்ரா) காபாவில், மெக்காவின் காபாவில் இருப்பதைப் போன்றே ஹூபல்/அல்லாஹ் கடவுளை நீள் வடிவ உருவமாக சித்தரித்து சிற்பமாக செதுக்கியுள்ளதையும் காண முடிகிறது.

இந்த காபாக்களுள் என்ன இருந்திருக்கும் என்பது குறித்த யூத கற்பனைகள் பல இருந்தன. இன்று தொல்பொருள் ஆய்வில் அதற்குள் இருந்தவற்றை கண்டுபிடித்துள்ளனர். அநேகமாக எல்லா இடங்களிலும் (பெத்ரா, கெஸல் இன்னபிற), காபாவில் பெண் தெய்வமாக வணங்கப்பட்ட கம்பங்கள் இருந்ததை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்துள்ளனர். இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்புவரை இந்த காபாவின் நகலான பெட்டகம் யூதர்களின் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பிடித்தது. இதை உடன்படிக்கை அடங்கிய பெட்டி என்று யூதமதம் குறிப்பிடுகிறது(Ark of Covenant). ஆனால், இந்த பெட்டியில் இருந்தவற்றுள் முக்கியமான ஒன்று இந்த பெண் தெய்வ வழிபாட்டு உருவகமான கம்பம்/மரத்தின் வடிவு.

இந்த பெட்டி-காபாவின் மீது கடவுள் அமர்ந்திருப்பதாக கருதப்பட்டது (தற்போதைய இஸ்லாத்திலும் அந்த நம்பிக்கையே திரிந்து, காபாவிற்கு மேலே ஏழு வானங்களுக்கப்பால் கடவுள் அமர்ந்து உலகை பரிபாலிப்பதாக சித்தரிக்கப்படுகிறது).

மெக்காவின் காபாவிற்கு (அதாவது பாகன் அரபிகளின் ஆலயத்திற்கு) யூதர்கள் எப்படி பாகன்களிடமிருந்து கடன் வாங்கியதற்கு ஏகத்துவ சாயல் கொடுத்தார்களோ அதே போன்றதொரு புராண கதையை முஹமதுவும் கொடுத்தார்.

“Moses was directed to consecrate the Ark, when completed, with the oil of holy ointment (Ex. 30:23-26); he was also directed to have the Ark made by Bezalel, son of Uri of the tribe of Judah, and by Aholiab, the son of Ahisamach of the tribe of Dan (Ex. 31:2-7). These instructions Moses carried out, calling upon every “wisehearted” one among the people to assist in the work (Ex. 35:10-12). Bezalel the artist made the Ark (Ex. 37:1); and Moses approved the work, put the testimony in the Ark, and installed it.”

http://en.wikipedia.org/wiki/Ark_of_the_Covenant

இந்த காபாவை/பெட்டியை மோஸஸ் ஸ்தாபித்ததாக யூதர்களிடையே இருக்கும் புராணக்கதைபோல, இபுறாகீம் நபி மெக்காவின் காபாவை கட்டியதாக இஸ்லாமியர்களிடையேயும் நம்பிக்கை எழுந்தது.

யூதர்கள் தாக்குதலுக்குள்ளான சமயத்தில் தமது சமய வழிபாட்டு அம்சமான காபாவை பெட்டியாக தூக்கிச் சென்றது எங்கோ யூத சமய வழிபாட்டு அம்சமாக மாறி பெட்டியாக சுருங்கியுள்ளது. இது ஆயுவுக்குரியது.

***
இந்த பெட்டியினுள் நின்ற நிலையில் கம்பம் இருந்தது என்பதை யூத நூல்களில் காண முடிகிறது.

In Numbers 17, Korah’s rebellion against Moses’ proclamation of the tribe of Levi as the priesthood has been quashed and the entire congregation’s ensuing rebellion has resulted in a plague, ended only by the intercession of Moses and Aaron. In order to “stop the complaints” of the Israelites, God commands that each of the Twelve Tribes provide a rod; and only that of the tribe chosen to become priests will miraculously sprout overnight. Aaron provides his rod to represent the tribe of Levi, and “it put forth buds, produced blossoms, and bore ripe almonds” (Numbers 17:8), as an evidence of the exclusive right to the priesthood of the tribe of Levi. In commemoration of this decision it was commanded that the rod be put again “before the testimony” (Numbers 17:10). According to tradition, the rod of Aaron bore sweet almonds on one side and bitter on the other; if the Israelites followed the Lord, the sweet almonds would be ripe and edible, but if they were to forsake the path of the Lord, the bitter almonds would predominate. A later tradition asserts (Hebrews 9:4) that the rod was kept in the Ark of the Covenant. The main fact, however, is thus confirmed, that a rod was preserved in the Tabernacle as a relic of the institution of the Aaronic priesthood.

http://en.wikipedia.org/wiki/Rod_of_Aaron

யூத மதத்தில் தோன்றிய முக்கியமான ஒரு அம்சத்தை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது, எதோ ஒரு காலகட்டத்தில் ஏகத்துவ சிந்தனை தோன்றி, ஒன்றைத் தவிர மற்றதெயெல்லாம் அழிப்பது – ஒரு கடவுள், ஒரு நபியைத் தவிர மற்றவர்களையெல்லாம் கொன்று அழிப்பது (பெண்கள், குழந்தைகள் உட்பட) கடவுளின் ஆணையாக ஆனது. அப்படி ஏற்கப்படும் அந்த ஒன்று, அந்த நபி தோன்றும் பகுதியில் அல்லது மதம் பரவும் பகுதியில் இருந்த பாகன் நம்பிக்கை/வழிபாட்டு முறையாக ஆனால், அந்த மதம் விடுவிடுவென்று பரவுவதற்கு ஏதுவாக அந்த பாகன் நம்பிக்கை/வழிபாட்டு முறை செயல்பட்டது.

இதற்கு நல்ல உதாரணம், கிறிஸ்துவத்தில் இருக்கும் கன்னிமேரி கடவுள். கிறிஸ்துவ அடிப்படையில் எவ்வித ஆதாரமும் இல்லையென்றாலும், பரவிய இடங்களில் இருந்த பாகன் கருத்துகள் ஊடுறுவியதால் ஏற்பட்ட இந்த வழிபாட்டு முறையே கிறிஸ்துவம் பெருமளவில் பரவுவதற்கு உறுதுணை புரிந்தது. அதே போன்றே சூஃபியிஸம் என்ற பாகன் வழிபாட்டு முறையே துரதிர்ஷ்டவசமாக பலரை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தது. வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் அன்பர், திலீப்குமார் ரஹ்மானானதை குறிப்பிட்டு ஜெய்ஹோ என்று முழங்குகிறார் திண்ணையில். ஆனால், திலீப்குமார் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்தது இஸ்லாத்தால் இல்லை. தன் வீட்டில் சூனியம் வைத்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில், அந்த சூனியத்தை நீக்கிய சூஃபி ஒருவரின் ஆளுமையால் இஸ்லாத்திற்குள் வந்தார். சூனியம்/சூஃபியிஸம் இரண்டையுமே வஹ்ஹாபிகள் இஸ்லாத்தால் ஏற்கப்பட்டது என்று ஏற்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

***

இதே போன்றே ஆபிரகாமிய மதங்கள், பாகன் வழிபாட்டு முறைகளில் சிலதை ஏற்று, அதை ஒரு இடத்தில் மட்டும் ஏற்பதும், மீதமுள்ள இடங்களில் நிராகரித்து அதே வழிபாட்டு முறையை தூற்றி கடவுளுக்கு எதிரானது என்று அழிப்பதும் வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை அடியொற்றியே யூத பாரம்பரியத்தை எல்லா வகையிலும் ஏற்ற முஹமது, பாகன் அரபிகள் புனிதமாக வழிபட்ட கம்பங்கள், ஹஜருல் அஸ்வத் லிங்கம் ஆகியவற்றை மெக்காவில் இருக்கும் காபாவில் அனுமதித்து, மற்ற இடங்களில் அதே விஷயங்களை சைத்தானாக, கடவுளுக்கு எதிரானதாக விவரித்து அழிக்கச் சொன்னார்.

யூத மதத்தில் ஏகத்துவம் நுழைந்த போது ஜெஹோவா என்ற குழுத்தேவன் உயர்த்தப்பட்டு, அஷெரா விரட்டியடிக்கப் பட்டாள். கம்பம்/கனிகள் தோன்றும் மரமான fertility goddess ஒழித்துக் கட்டப்பட்டது. இதே போன்றதொரு நிகழ்வு இஸ்லாத்திலும் நிகழ்ந்தது. அரபிகளின் தெய்வங்களுள் தலையான தெய்வமான லா(ஹ்) கடவுள், ஏகத்துவ இறைவனாக ஏற்கப்பட்டு, அத்தெய்வத்தின் இணையாக அல்லது அத்தெய்வத்திடமிருந்து வெளிப்படும்(மகள்) சக்தியான அல்லாத் வழிபாடு ஒழிக்கப் பட்டது.

ஆனால், யூத மதத்தில் ஏனைய கம்பங்கள் அழிக்கப்பட்டு ஏகத்துவம் நிலைநாட்டப்பட்ட பின்பும், Ark of Covenant என்ற பெயரில் அழைக்கப்பட்ட பெட்டக காபாவில் இருந்த கம்பம் பாதுகாக்கப் பட்டது போலவே முஹமதாலேயும், பாகன் அரபிகளின் காபாவில் இருந்த கம்பத்தெய்வங்கள், ஹஜருல் அஸ்வத்(கறுப்புக் கல்) பாதுகாக்கப் பட்டது. முஹமதின் காலத்திற்குப் பின்பு வந்தவர்களுக்கு, இதற்குப் பின்னால் இருக்கும் இறையியல் புரியாவிட்டாலும், கடவுளின் தூதர் செய்யாத ஒன்றை தாம் செய்ய அஞ்சி அதை விட்டு வைத்தனர்.

***

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இஸ்லாமியர்கள் ஏன் சாத்தானை கல்லால் அடிக்கின்றார்கள், ஏன் காபாவில் உள்ள அந்தக்கால சிவலிங்கத்தை இன்றும் முத்தமிடுகிறார்கள் என்றெல்லாம் கேட்டால் அதற்கு வெளியில் உள்ள முஸ்லீமல்லாதவர்களுக்கு உயர் விளக்கங்களை இட்டுக்கட்டி இஸ்லாமிஸ்டுகள் சொல்கிறார்களே தவிர, உள்ளே நிகழும் குத்பா பிரசங்கங்களில் உண்மையான அடிப்படையை பகிர்ந்து கொள்கிறார்கள். இதோ இந்த பிரசங்கம் அதை தெளிவுபடுத்துகிறது:

“You don’t need your scientific reasoning to tell you why you stone the devil, or kiss the black stone. The Prophet(s) did it, so just do it.”

http://issu1.stanford.edu/?q=node/45

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கே இந்த அறிவுரை என்றால், எது உண்மை, எது அடிப்படை என்பது பற்றி எந்தக் குழப்பமும் வேண்டியதில்லை. எதை வணங்கவேண்டும் என்று தீர்மானிப்பது எங்கோ இருக்கும் லாஹ் கடவுள் அல்ல, அவரது தூதராக தம்மை சொல்லிக்கொண்ட முகமதுதான். முகமதின் சீடரும், தோழரும், மாமனாரும், இரண்டாவது காலிஃபுமான உமர் இப்படி சொல்கிறார்.

Volume 2, Book 26, Number 679: Narrated Zaid bin Aslam that his father said:
“I saw ‘Umar bin Al-Khattab kissing the Black Stone and he then said, (to it) ‘Had I not seen Allah’s Apostle kissing you, (stone) I would not have kissed you.’

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/026.sbt.html#002.026.679

முகமது வணங்கினார் என்றால், உமரும் வணங்குகிறார். ஆயிஷாவிடம் சஃபா மர்வா குன்றுகளை கிரிவலம் வரலாமா என்று முகமதின் மறைவுக்கு பின்பு சந்தேகம் கேட்டபோது, செய்யலாம் ஏனென்றால் முகமது அப்படி செய்தார் என்று அவர் பதிலளிக்கிறார். அதாவது முகமது செய்த உருவ வழிபாடுகளெல்லாம், ஏற்கப்படுபவையாகவும், அவர் செய்யாத ஒரு விஷயம் கடவுளுக்கு பிடிக்காததாகவும், கடவுள் அந்த வழிபாடுகளள ஏற்காததாகவும் இஸ்லாத்தில் கருதப்படுகின்றது. முகமது கடவுள் சொல்லியதாக சொன்னால், அது கடவுளின் சொல்லாகிறது. முகமதின் நண்பர்கள் இது தவறு என்று சுட்டிக்காட்டினால், அதை முகமது ஏற்று குரானின் வசனங்களை மாற்றினால் அது சாத்தானின் வேத வசனங்களாகிறது(லாத் தேவி வழிபாட்டை அபுபக்கர் தடுத்து நிறுத்தியதைப் போல). குரான் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு, பல வசனங்கள் முகமதாலேயே திருத்தப்பட்டன. இதை நியாயப்படுத்த முன்பிருந்ததைவிட இன்னும் நல்ல குரான் வசனங்களை கொண்டு வருவோம் என்று குரானே சொல்கிறது. இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையான ஹதீஸ்களே கடவுளின் குணத்தை, கட்டளைகளை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஹதீஸ்களில் பெரும்பாலானவை ஆயிஷா, அலி போன்று எதிரெதிராக சண்டையிட்டுக் கொண்ட முகமதின் குடும்பத்தார், தோழர்கள், பின்பு ஆட்சிக்கு வந்த கலீபாக்களால் தீர்மானிக்கப்படுபவை. ஆகவே, எது கடவுள் என்பதை தீர்மானிப்பது முகமதுவின் செயல்பாடுகள் தாம், பகுத்தறிவெல்லாம் அங்கே கிடையாது. ஆனால், ஒரு நம்பிக்கையை பகுத்தறிவு என்று முன்வைத்து, மற்றவர்களின் நம்பிக்கையை ஏளனம் செய்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

***

ஆனால், இந்தியர்கள் தம் கண்முன் காணும் பல உன்னத ஆன்மீகவாதிகள் சொன்னதை ஏற்றார்கள், செய்ததை ஏற்றார்கள். முஹமது சொன்னதால் கல்லை மதிப்பது, முத்தமிடுவது ஏற்புடையதாகிறது என்றால், இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற அப்பழுக்கற்ற ஆன்மீகவாதிகள் சுட்டிக்காட்டிய கடவுளை கல்லில் வழிபட்டு கடவுளை அடைவது, மலையை சுற்றி வந்து அகமுன்னேற்றம் அடைவது ஆகியவையும் ஏற்கத்தக்கவைதானே என்று இந்துக்கள் கேட்கிறார்கள். இஸ்லாமியர்களோ தங்களது உருவ வழிபாடுகள் உருவ வழிபாடுகளே இல்லை என்றும், மற்றவர்களின் உருவகங்கள் உருவ வழிபாடு என்றும் நம்பி வருகின்றனர்.

***

கல்லில் கடவுள் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிப்பதில்லை, சொல்வதில்லை. அது, கல்லில் சாத்தான் வசிக்கிறது, பெண் தெய்வங்கள், ஜின்கள் வசிக்கின்றன என்ற இஸ்லாமிய நம்பிக்கை. முஹமதின் தோழர்கள் அவரது உத்தரவின் போது பெண் தெய்வச்சிலைகளை உடைத்தபோது அந்த சிலைகளிலிருந்து கறுப்பாக, தலைவிரி கோலமாக பெண் தெய்வங்கள் ஓடியதை கண்டதாக ஹதீஸ்கள் சொல்கின்றன. முஹமதே கடவுள் சிலைகளை காபாவில் உடைத்தபோது, அவற்றின் கண்ணை குத்தினார் – ஏனெனில் அதில் இருந்த சாத்தானின் கண்கள் குருடாகிப் போகுமென்று! கல்லில் கடவுள் இல்லை என்றால், கல்லில் சாத்தான் மட்டும் எப்படி வசிக்க முடியும்?

தற்போதும் கம்பத் தெய்வத்தை சைத்தான் என்று கருதி கல்லால் அடிக்கும் வழக்கம் ஹஜ்ஜுக்கு செல்லும் இஸ்லாமியரிடையே இருக்கிறது. யூத மதத்தில் இந்த கம்பங்களை எரிப்பதும், மரங்களை வெட்டி வீழ்த்துவதும் சைத்தானை ஒழித்துக் கட்டும் உன்னத செயலாக கருதப்பட்டது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஹமதின் கட்டளையின் பேரில் அவரது சஹாபிகள் இப்படி தெய்வங்களாக க்ருதப்பட்ட மரங்களை வெட்டினர்.
பிற்காலத்தில் வஹ்ஹாபிகள் தலையெடுத்த போது அவர்களும் மரங்களை சைத்தானின் குறியீடு என்று குற்றம் சாட்டி வெட்டிச் சாய்த்தனர்.

***

இஸ்லாமியர்கள் ஏன் கடவுளை அல்லாஹ் என்று குறிப்பிடவேண்டும், ஏன் வேறு பெயர்களில் குறிப்பிடக் கூடாது என்று கேட்டால், பலவித சால்ஜாப்புகளை சொல்வார்கள். அதிலொன்று அல்லாஹ் என்பதற்கு பெண் பால் அரபியில் கிடையாது என்று. அது தவறு. மேலே குறிப்பிட்டுள்ளது போன்று அல்லாத் என்ற பெண் தெய்வம் அல்லாஹ்வைப் போலவே அன்றைய அரேபியாவில் இருந்திருக்கிறது. அத்தெய்வங்களுள் ஆண் தெய்வத்தை மற்றும் ஏற்று, பெண் தெய்வத்தை ஷைத்தானாக விரட்டியது இஸ்லாம். அடிப்படையில் ஆணை மயக்கி சொர்க்கத்திலிருந்து தள்ளியது பெண்ணே என்ற யூத கருத்தாக்கமே இது போன்று பெண்களை தெய்வங்களாகவோ, நபிகளாகவோ ஏற்க ஆபிரகாமிய மதங்கள் மறுப்பதன் அடிப்படை.

பெண் தன்மையை அடக்கும்போது, இயல்பாகவே அத்தன்மையுடன் கூடிய மனிதத்தன்மை, இரக்க மனோபாவம் ஆகியவை பின்னுக்குப் போய் ஆன்மீகவெளியிலும், அகவெளியிலும் சமச்சீர்தன்மை கெடுகிறது.

***

லாத் – ராத் எனும் பெண் தெய்வம் பற்றிய குறிப்புகள், சித்திரங்கள் எதுவும் இன்றைய சவுதியில் இல்லை – அவை முகமது காபாவைக் கைப்பற்றிய பின்பு முகமதாலும், அபுபக்கர் போன்ற முகமதின் தோழர்களாலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், எகிப்து போன்ற இடங்களில் அல்லாத் தலைக்குமேல் சூரியனுடன் இருக்கிறது, மனிதர்களை பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கும் சக்தியாக இந்த அல்லாத் தேவி உருவகப்படுத்தப்படுகின்றார். சந்திரன் ஆணாகவும் (ஆண் கடவுள்) சூரியன் பெண்ணாகவும் கருதும் வழக்கு அக்கால அரேபியாவிலும் எகிப்திலும் இருந்தது. சிற்சில இடங்களில் இப்பெண் கடவுள் உயர் கடவுளின் பெண் வாரிசாகவும் கருதப்பட்டது, இந்த அல்-லாஹ் மற்றும் அவரின் மகள்களான அல்-லாத், அல்-உஷா, அல்-மனாத் போன்ற பெண் தெய்வங்களை குரானின் அத்தியாயம் 53(53:19) குறிப்பிடுகிறது. “உங்களுக்கெல்லாம் மட்டும் ஆண் பையன் ஆனால் (லாஹ்) கடவுளுக்கு மட்டும் பெண் பிள்ளைகள் ” என்று முகமது குரானில் சொல்கிறார்(அவருக்கு ஆண் பிள்ளை இல்லை என்ற வருத்தம் இருந்தது இங்கே பிரதிபலிப்பதைக் காணலாம்):

Quran 053.019-22
“Have you then considered the Lat and the Uzza, and Manat, the third, the last?
What! for you the males and for Him the females!
This indeed is an unjust division! ”

http://www.usc.edu/dept/MSA/quran/053.qmt.html#053.019

ஒரு அசைவற்ற பரம்பொருளில் இருந்து, அதில் அசைவேற்பட்டு உத்வேகத்துடன் கூடிய, பிரபஞ்சத்தை வெளிப்படுத்தக் கூடிய தாய்த்தன்மையுடன் வெளிவரும் இறைத்தத்துவத்தை வெளிப்படுத்த பாகன்கள் இந்த அமைதியான ஆண்கடவுளிடமிருந்து பிறக்கும் மகளாக பெண் தெய்வத்தை உருவகப்படுத்தியிருக்கலாம்.

இதில் சில சமயங்களில் அல் – லா(ஹ்) கடவுள் இரவிற்கான கடவுளாகவும், அந்த இரவோடு இணைந்த மூன்று காலகட்டங்களை இந்த மூன்று பெண் தெய்வங்களும் குறிப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. Al-Uzza என்ற அதிகாலையின் கடவுள், உஷை என்ற ரிக்வேத கால பெண் தெய்வத்தின் பெயரையொத்திருப்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. ரிக் வேதத்திலும் இது அதிகாலையின் கடவுளாக, இரவு நீங்கி பகல் வருவதைப் போல மனதின் இருள் நீங்கி ஆன்மீக ஒளி நம்முள் தோன்றுவதை கட்டியம் கூறும் பெண் தெய்வமாக இந்த உஷை ரிக்வேத பாடல்களில் குறிப்பிடப் படுகின்றார்.

***

குரான் வசனம் 113:4. இதில் சூனியம் செய்வதை எதிர்த்து சொல்லப்படும் வசனங்கள் உள்ளன. இந்த வசனங்கள் உஷை தேவியிடம் சூனியத்திலிருந்து எங்களைக் காப்பாற்று என்று சொல்வதாக அமைந்துள்ளன. இந்த வசனங்கள் குரானே இல்லை என்று கருதிய பல ஆரம்பகால முஸ்லீம்களும் இருந்தனர் (அப்துல்லாஹ் பின் மசூத் போன்ற ஆரம்பகால சஹாபாக்கள் – இவர் சொல்வதே உண்மையான குரான் என்று முகமது சொல்லியதாக ஒரு ஹதீதும் இருக்கிறது – இந்த வசனங்கள் குரானா இல்லையா என்ற சந்தேகத்தினாலேயே குரானின் கடைசியில் அவற்றை கலீபாக்கள் தொகுத்திருக்க வேண்டும்) – ஆனால், இன்றைய இஸ்லாமியர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுதூதி, இதுவும் குரானின் அங்கமே என்று அடித்தம் திருத்தமாக சொல்கிறார். பார்க்க:
http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau113.html

(அப்துல்லாஹ் பின் மசூத் போன்ற ஆரம்பகால சஹாபாக்கள் சொல்வதே உண்மையான குரான் என்று முகமது சொல்லியதாக ஒரு ஹதீது இருக்கிறது – ஆனால் சரித்திர விபத்தாக இந்த குரான் வசனம் அப்போதிருந்த கலீபாக்களால் குரானாக திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டுவிட்ட நிலையில், மவுதூதி அதை ஏற்பதே சரி என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்).

இப்படி தனது ஆன்மீக வாழ்வை துவக்கிய முகமது, இதற்கடுத்த நிலையில் கிறித்துவத்தின் பால் /ஏகத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட பாகன் அரபிகளாலும்(நஃபால், கதீஜா, அரபி ஹனஃபிக்கள்), யூதர்களிடம் நபியின் வருகை பற்றி கேட்டிருந்த மதீனாவின் பாகன் அரபிகளாலும் நபியாக ஏற்கப்பட்டார். முதலில் தமது ஆதரவாளர்களை கிறித்துவ நாடொன்றிற்கே அனுப்பி ஆதரவு தேடினார். அவர்களும் அங்கிருந்த மன்னரிடம் தமது தலைவர் இயேசு கிறித்துவை ஏற்பவர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். குரானில் சில வசனங்கள், கிறித்துவர்களே இஸ்லாம் பற்றி பரிவு காட்டுபவர்கள் என்று சொல்கின்றன. ஆனால், கிறித்துவர்களில் பெரும்பாலோர் தம்மை ஒரு தேவதூதனாக ஏற்கவில்லை என்றவுடன், யூதர்களிடம் போய் அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் மெஸய்யா(நபி) தாம் தான் என்றார். தற்போதைய ஹாகரிஸ ஆய்வாளர்கள், முகமது தன்னை யூத மதத்தை பரப்பும் பிரச்சாரகாரகவே முதலில் அடையாளம் காட்டிக் கொண்டார் என்கிறார்கள்.( யூத நபிமார்கள் பலரும் ஆரம்பத்தில் இந்த மந்திர-தந்திர உச்சாடனர்களாக இருந்ததும் கவனிக்கத் தக்கது, எனவே இது கூட நபித்துவத்தின் பகுதியாக இருந்திருக்கலாம்).

ஆனால், யூதர்களும் தம்மை ஏற்கவில்லை என்றவுடன் – அதுவரை கடவுளின் இருப்பிடமாக தாம் அடையாளம் காட்டிய ஜெருசலேம் நகரின் காபாவிலிருந்து (இந்த காபாவிற்கு மேலேதான் கடவுளை புராக் பயணத்தின் போது முகமது கண்டார் – முகமதியர்கள் இன்றும் பின்பற்றும் பல இஸ்லாமிய நம்பிக்கைகள், ஐவேளை தொழுகை உட்பட இந்த விண்வெளிப்பயணத்தின் போதுதான் முகமதுவால் அருளப்பட்டது) கடவுளை இடம் மாற்றி, பாகன் அரபிகளின் காபாவையே, அங்கிருந்த கடவுளையே தமது கடவுளாக தேர்ந்தெடுத்தார். இதை ஏற்காதவர்களை ‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை புரிந்து கொள்ளாத முட்டாள்கள்’ என்று குரான் திட்டுகிறது:
Quran 002.142
“The fools among the people will say: What has turned them from their qiblah which they had? Say: The East and the West belong only to Allah; He guides whom He likes to the right path.”

http://www.usc.edu/dept/MSA/quran/002.qmt.html

***

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றால், காசியை கிப்லாவாக ஏன் ஏற்கக்கூடாது? சிரீரங்கத்தை ஏன் காபாவாக ஏற்கக்கூடாது? குரானில் விடை இருக்கிறது:

“(நபியே!) உம்முடைய முகம், அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் ‘கிப்லா’ (வாகிய மக்கா) வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமி’ன் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக!….” (குரான் 2: 144)

மற்ற மதத்தவர்கள் தம்மை ஏற்க மறுத்த நிலையில், முஹமது தீர்மானித்தார் தமது குலதெய்வக்கோவிலையே கடவுளின் இருப்பிடமாக ஏற்பது என்று. இப்படியாக முகமதுவின் உள்மன உந்துதலே அப்போதிருந்த அரபி பாகன், யூத, கிறித்துவ நம்பிக்கைகளில் சிற்சில பகுதிகளை ஏற்று அப்படி ஒன்று திரட்டியதையெல்லாம் கடவுளாக, மதமாக முன்னிறுத்தியது. இல்லையென்றால், முஹமது விரும்புவதால் தமது இருப்பிடத்தை கடவுள் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? அப்படி மாற்றிக்கொள்வது, முஹமதுவுக்கு பாகன் அரபிகளை தம் பக்கம் இழுத்து தனது அடிமைகளாக மாற்றுவதற்கு வழி செய்தது.

இப்படி முகமதுவின் விருப்ப வெறுப்புகள் எல்லாம் லாஹ் கடவுளின் விருப்ப வெறுப்புகளாக இஸ்லாத்தால் முன்னிறுத்தப்படும் நிலை. ஆபிரகாமிய மதங்களில் கடவுள் என்பது கட்டளைகளைப் பிறப்பிப்பதாகவும், சமூக நெறிகளை வகுத்துத் தருவதாகவும் இருக்கிறது. முகமது மட்டுமல்ல, அவரது மனைவியான ஆயிஷா, நண்பர்கள், கலீஃபாக்கள் எல்லோரும் இதுதான் கடவுள், இதுதான் கடவுளின் கட்டளை என்று தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை இஸ்லாமிய வரலாற்றில் பார்க்க முடிகிறது.

***

இவற்றை கடவுளின் வார்த்தைகள், கடவுளின் அங்கீகாரம் பெற்றவை என்று முகமதியர்கள் கருதுவதில் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், தனது நம்பிக்கை மட்டுமே உண்மையானது, மற்றவையெல்லாம் இழிவானது, பொய்யானது என்று சொல்லி வன்முறையில் ஈடுபடுவது தவறானது. அதனாலேயே இதன் பின்னால் இருக்கும் வரலாற்றை, கண் முன்னே இருந்தும் காண மறுக்கும் உண்மையை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கின்றது.

மதத்தின் பெரிய சக்தி இதுதான், எல்லாவிதமான ஆய்வுகளும் தமது நம்பிக்கைகளுக்கேற்ப இருக்க வேண்டும் என்று நம்புவது, முடிவுகளை முன்பே மனதினுள் அமைத்துக்கொண்டு அதற்கேற்ற விடைகளை மட்டும் தேடுவது என்பது மதவாதிகளின்/நம்பிக்கையாளர்களின் இயல்பான குணம். அதை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது அது மனதை புண்படுத்துவதாக அமைகிறது, ஆனால் உருவ வழிபாடு சைத்தானின் செயல் என்பதே இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக இருக்கும்போது, அதையே அடிப்படைக் கோட்பாடாக ஏற்போர், தமது நம்பிக்கையை மற்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது மட்டும் கொதித்து எழுகிறார்கள், அவதூறு என்று குற்றம் சாட்டுகின்றார்கள். இன்றைய இந்துக்கள், படித்தவர்கள், ஆய்வாளர்கள் பல பாகன் கடவுள்கள் எப்படி பெரிய கடவுளாக மாற்றம் பெறுகின்றன என்பதை ஆய்ந்துள்ளார்கள், தமது நம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும் ஏற்கிறார்கள், குறைந்த பட்சம் வன்முறையில் ஈடுபடாமலாவது இருக்கின்றார்கள். கிறிஸ்துவர்களும் அப்படியே, கன்னிமேரி கடவுள் பாகன் கடவுள் என்று நான் எழுதிவிட்டு அஞ்சத் தேவையில்லை. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒரே போன்று மூடநம்பிக்கை கொண்டனதான், எல்லா மதங்களுமே மனதை குழப்பியும், மூளைச்சலவை செய்துமே பிழைக்கின்றன. படிநிலைகள் தான் வெவ்வேறு என்றாலும், இஸ்லாத்தை தவிர பிற மதங்களில் இந்த அளவுக்கு வன்முறை இல்லை, அச்சுறுத்தல் இல்லை.

நான் சொல்வது சாதாரண, மூளைச்சலவை செய்யப்பட்ட, சிறு வயதிலிருந்து அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்று கற்பித்து பயத்தை ஊட்டி வளர்க்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சற்றே படித்த, படித்தவர்களுடன் பழகக் கூடிய, மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பவர்களாவது பெற்றோர் பயிற்றுவித்தவைகளை மீறி ஆய்வுப்பார்வையை மேற்கொள்ள வேண்டும். நாகூர் ரூமி, ஹமீது ஜாஃபர், அப்துல் கையும் மற்றும் பல சக எழுத்தாள இஸ்லாமிய சகோதரர்களுக்கான எனது வேண்டுகோள் இதுதான். வன்முறை தவிர்ப்போம், மதங்களை ஆய்வுக்குட்படுத்தி மூளைச்சலவையிலிருந்து வெளிவருவோம், அன்பும் அமைதியும் தழைக்கும் வையகத்தை உருவாக்குவோம். நமது காலத்தில் இது நடக்காவிட்டால் கூட, இதற்கான அடித்தளத்தை அமைத்துவிட்டுச் செல்வோம். நாம் இதற்கு முயற்சி செய்யவில்லை என்றால், நமது அடுத்த தலைமுறை நம்மை நிந்திக்கும்.  

http://old.thinnai.com/?p=20906042



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard