New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்
Permalink  
 


இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

August 8, 2009
ஜடாயு rss_icon16.jpg

 

அண்மையில் ஒரு மடலாடற்குழு விவாதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நண்பர் ஒருவர் எழுதினார் – “ நேற்றுதான் `Dogma’ எனும் படம் பார்த்தேன். அது கிறிஸ்தவ சமயத்தின் பின்நவீனத்துவ விமர்சனம் என்று காண்கிறேன். ஒரு சமயம் உலக அளவிற்கு பரவுகிறது என்றால் அதன் அடிப்படை அசைக்க முடியாத உண்மைகளைக் கொண்ட சத்யமதமாக இருக்க வேண்டும். இல்லை இழுபட்டு அழியும். இன்று கிறிஸ்தவத்திற்கு அந்த நிலைதான். அது `தத்துவங்களை` அடிப்படையாகக் கொண்டு அமையாமல், யார்,யாரோ சொன்ன கதைகளை வைத்து, தேவாலயம் எனும் மையம் செய்த நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக நடக்கிறது. அங்கு `சிந்தி` என்பதை விட `நம்பு` என்பதே பிரதானம். `அறிவு` என்பது கீழ் போய் `மூடநம்பிக்கையே` முன்வைக்கப் படுகிறது. இந்த ஆங்கிலப் படம் இது பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது… ஒரு சொற்பொழிவிற்கு நெதர்லாந்து போயிருந்தபோது, கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயம் போனால், ஆள் வராமல் தேவாலயம் மூடியே கிடந்தது. அங்கெல்லாம், கிறிஸ்தவத்தை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை. அது பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறது. அவ்வளவுதான்… இந்த நிலையை சரிகட்ட, தேவாலய நிறுவனம் புதிய சந்தையை எதிர்நோக்குகிறது. .. இந்தியா போன்ற நாடுகளில்தான் காசிற்காக சிறுநீரகத்தையே விற்கும் போது, காசிற்காக கட்சி மாறும் போது, காசிற்காக `மதம்` மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே? என்ற எதிர்பார்ப்பில் இச்சந்தை விரிவில் அது ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது தோல்வியுறும்”.

அவருக்குப் பதிலளிக்கையில் நான் குறிப்பிட்டேன் – ”ஆமாம், நீங்கள் கூறியது போல மேற்குலகில் கிறிஸ்தவம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. அதை ஒரு enlightened மார்க்கமாக சிந்திக்கும் மக்கள் யாருமே அங்கு நினைப்பதில்லை. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் இந்த விமர்சனங்களின் துளிகள் கூட வந்து சேர்வதில்லை என்பது தானே நிதர்சனம்? இங்கு ஊடகங்கள், அரசியல் அதிகார சக்திகள் எல்லாம் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் இருக்கிறது. ஒருபக்கம் அவை இந்த தேசத்தின் கலாசாரத்தின் மீதும், அதன் சமயங்கள், தத்துவங்கள் மீதும் அவதூறுகளையும், ஏளனத்தையும் பரப்பி வருகின்றன. இன்னொரு புறம், இதே கலாசாரத்தின் கூறுகளைத் திருடி, அவற்றின் மீது கிறிஸ்தவ முத்திரையைக் குத்த முயன்று கொண்டிருக்கின்றன. .. கிறிஸ்தவ பொய்மை இங்கு அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தைப் பற்றிய நேர்மையான விமர்சனம், ஏன் பிரான்ஸ் போன்ற “கிறிஸ்தவ” நாடுகளிலேயே தங்குதடையின்றி பொதுத்தளத்தில் கிட்டும் விமர்சனம் கூட இந்தியாவில் கிட்டுவதில்லையே??”

சொல்லப் போனால், கிறிஸ்தவம் காலூன்ற முயன்ற ஆரம்ப காலங்களிலேயே, அது இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருப்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த சீசன்பால்கு என்ற பாதிரியை தமிழறிஞர்கள் நேரடியாகவே எதிர்கொண்டு கிறிஸதவ மதத்தின் அடிப்படைகள் என்று சொல்லப் படும் கருத்துக்கள் குறித்து அறிவார்ந்த கேள்விகள் எழுப்பினர். நம் தரப்பில் அவற்றைப் பதிவு செய்யாததால், காலனிய வரலாற்றின் ஒரு பகுதியாக “ஹிந்து அக்ஞானிகளின் கேள்விகள்” என்ற முத்திரையுடன் அவை பாதிரியாரால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய “ஏசு மத நிராகரணம்” என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்தர், சுவாமி விவேகானந்தர் தொடங்கி “சைவதூஷண பரிகாரம்” எழுதிய ஆறுமுக நாவலர் வரை இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்.

expressions_bookஇந்தச் சூழலில், “Expressions of Christianity, with a Focus on India” என்ற தொகுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பிரசார நெடி சிறிதும் இல்லாமல், அதே சமயம் கசப்பான உண்மைகள் எதையும் மறைக்காமல் எழுதப் பட்ட பல அருமையான கட்டுரைகள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

நூலின் அமைப்பும் சிறப்பாக உள்ளது.

கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் முகங்கள், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் கிறிஸ்தவத்தின் முகங்கள், கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ் சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40 கட்டுரைகள் உள்ளன.

”கிறிஸ்தவம் தான் பீற்றிக் கொள்வது போல அச்சு அசலான மதம் கிடையாது. பழைய ஏற்பாடு ஏராளமான விஷயங்களை பழைய மெசபடோமிய, எகிப்திய மூலங்களில் இருந்து பெற்றது என்பது இப்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதே போன்று புதிய ஏற்பாடு தனது மையமான படிமங்களையும், நம்பிக்கைகளையும் அக்காலத்திய பன்முகப் பட்ட கிரேக்க கலாசாரத்திலிருந்தும் (Hellenistic – cosmopolitan culture), கிழக்கு மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அப்போது பரவியிருந்த இந்திய மதங்களிடமிருந்துமே பெற்றது. .. குறிப்பாக, உபநிஷத- பௌத்த சிந்தனைகள் கூறும் முக்தி பற்றிய *தத்துவக்* கோட்பாடு, மறுபிறவி மற்றும் பிறவிச் சுழல் பற்றி ஏதும் அறியாத யூத பின்னணியில் நுழைந்து, ஒரு இறையியல்-நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக உருமாறியது தான் கிறிஸ்தவத்தின் கதிமோட்சம் (liberation) என்கிற கோட்பாடு. பண்டைக் காலத்திய பலதெய்வ வழிபாட்டின் மறைமுக-சுவடுகள் தவிர்த்து இந்தக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தை இஸ்லாம், யூதம் ஆகிய “ஆபிரகாமிய” மதங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது..”

– ”Christianity, a Man made Religion indebted to India” என்ற தலைப்பில் பெல்ஜிய அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst)எழுதிய கட்டுரையிலிருந்து

இந்த அரிய கட்டுரையில், எல்ஸ்ட் கிறிஸ்தவத்தின் சடங்குகள், பண்டிகைகள், சமயக் கருத்துக்கள் உருவான விதம் பற்றி சுவைபட விளக்குகிறார். தன் இளமைப் பருவத்தில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றெல்லாம் இப்போது பிரசாரம் செய்யப் படும் “Jesus in India” என்கிற கருதுகோள் உருவாகி வளர்ந்தது பற்றிய முழுமையான சித்திரமும் இதில் உள்ளது.

கிறிஸ்தவத்தில் பெண்கள் (Women in Christianity) என்ற தலைப்பில் வரலாற்று அறிஞர் மிஷேல் டானினோ (Michel Danino) வின் கட்டுரை இன்னொரு முத்து. பெண்மையைக் கீழானதாக சித்தரிக்கும் ஆதியாகமம், செயிண்ட் பாலின் பெண்மை பற்றிய வசனங்கள், கத்தோலிக்க சர்ச் அதிகார பீடம் மதத்தின் பெயரால் ஏராளமான பெண்களைக் கொன்று குவித்த “சூனியக்காரி வேட்டைகள்” (Witch hunting), கிறிஸ்தவ இறையியலில் இன்று வரை தொடரும் பெண்மை மீதான அச்சம் ஆகியவை பற்றியது இந்தக் கட்டுரை.

ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா வில்லனாகவும், “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ) மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின் உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை முழுமையாக ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது இல்லையா?? மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள் இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை. கலவை வெங்கட் எழுதியிருக்கும் “From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.

பின்னர் காரைக்காலின் பாதிரி (Father Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். சுத்தியால் உடைத்தார். பின்னர் விஷ்ணு மற்றும் பிற திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார். சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர் பாதிரியிடம் சென்று அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு விஷயத்தை சீமாட்டி நடத்திக் காட்டியிருக்கிறாள்; பழங்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில் ஒருவர் தான் அவள் உருவில் வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.

சீதாராம் கோயல் (1921-2003)

சீதாராம் கோயல் (1921-2003)

பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான். பிறகு அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும் என்னால் எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது… அவர்களுக்கு இதனால் என்ன விளையுமோ எனக்குத் தெரியாது.. ஆனால் தமிழர்கள் பிரளயமே வந்து விட்டது என்று எண்ணினார்கள். பாதிரிகளும், கிறிஸ்தவர்களாகி விட்ட தமிழர்களும், கவர்னரும், அவரது மனைவியும் அவர்கள் முன்பு எப்போதுமில்லாதது போல சந்தோஷமடைந்தார்கள் … “

– சீதாராம் கோயல் எழுதிய ”பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்” என்ற கட்டுரையிலிருந்து.

ஆனந்த ரங்கம்பிள்ளையின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, அனைத்து சாதி மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம் பிரெஞ்சு காலனிய அரசாட்சியாளர்களால் தகர்ப்பட்ட வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

தூய்மை, அன்பு, சேவை இவையே இந்தியாவில் கிறிஸ்தவத்தின் முகங்கள் என்று தீவிர பிரசாரம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. பாதிரி, மிஷநரி, பிஷப் எல்லாம் போய் இப்போது தமிழில் “அருட்பணியாளர்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். திரைப்படங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாவும் இத்தகைய சொல்லாட்சிகள் பரப்பப் பட்டு பிரசாரம் செய்யப் படுகிறது. எப்பேர்ப் பட்ட கொடுஞ் செயல்களையும், பயங்கரவாதத்தையும் பிரசாரம் மூலமாகவே வெள்ளைச் சுண்ணம் பூசி ம்றைத்து விடலாம் என்று காலனிய, சர்வாதிகார சக்திகள் கருதுவது போலவே கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் கருதுகின்றன.

சொல்லப் போனால் கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற விரிவான கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. இந்தியாவின் கோவா கடற்கரை தொடங்கி பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி அதன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது. (இதே பணிக்கரின் நூலின் அடிப்படையில் திண்ணை இதழில் புருஷ் அவர்கள் ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும் எனகிற விரிவான கட்டுரையை முன்பு எழுதியிருக்கிறார்).

கோவாவின் புனித விசாரணைகள், அதன் பின்னணி, அங்கு இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரங்கள் பற்றிய இரு முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. ஆல்ஃபிரடோ டிமெல்லோ (Alfredo De Mello) வின் “Pouncing on Goa”. ராதா ராஜன் எழுதிய ”Antecedents of the Goa Inquisition”.

”கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்” என்ற பகுதியில் தொகுப்பாசிரியர்களின் அயராத உழைப்பும், பரந்த வாசிப்பும், கூரிய பார்வையும் காணக் கிடைக்கிறது. ராபர்ட் இங்கர்சால் (Heretics and Heresies), பெட்ரண்ட் ரஸ்ஸல் (Why I am not a Christian) ஆகிய சிந்தனையாளர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதிய ”கிளாசிக்” கட்டுரைகளை சேர்த்திருப்பது நல்ல ரசனை. கலிலியோ, மார்க் ட்வெய்ன் உள்ளிட்ட மேற்குலகின் பல முக்கிய சிந்தனையார்களின் மேற்கோள்கள் களஞ்சியத்தை அளித்திருப்பது அருமை.

கிறிஸ்தவம் உண்மையிலேயே உண்மையாக இருக்கவேண்டும் என்று யாராவது விரும்புவார்களா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் அதன் புனிதநூல் மிக வெளிப்படையாகக் கூறுவதன் அடிப்படையில் விசுவாசிகளாக இல்லாதவர்கள் நிரந்தர நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்.. இந்தப் பட்டியலில் என் அப்பா, என் சகோதரர் மற்றும் என் உற்ற நண்பர்கள் எல்லோருமே வந்து விடுகிறார்கள்! இது முற்றிலும் கண்டனத்திற்குரிய கோட்பாடு இல்லாமல் வேறென்ன? (.. and this is a damnable doctrine).

– சார்லஸ் டார்வின்

கங்கையும், காவிரியும், இமயமும், பொதிகையும் பெருங்காடுகளும் சூழ்ந்த நிலப் பரப்பில் உருவாகியவை இந்து, பௌத்த, சமண மதங்கள். மாறாக அங்கங்கு சில சுனைகள் மட்டுமே கொண்ட வறண்ட பாலை நிலத்தில் தோன்றியவை ஆபிரகாமிய மதங்கள். இயற்கையின் இந்த விசித்திரமே இந்த இரு மத-கலாசாரங்களின் உலகத்தைப் பற்றிய பார்வையில் பங்கு வகிக்கிறதோ? பாரத மதங்கள் பன்முகப் பட்ட தன்மையும், இயற்கையின் கொடைகளைப் பற்றிய பிரக்ஞையும் கொண்டவையாக இருக்க, செமித்திய மதங்கள் ஒற்றைப் பார்வையுடனும், இயற்கையின் வதைக்கும் முகத்தையே அதிகம் கண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சிந்தனை இழையில் தொடரும் லோகேஷ் சந்திராவின் Theo Diversity and Human Values என்கிற சுவாரஸ்யமான கட்டுரை மதங்களின் உருவாக்கத்தில் இயற்கை மற்றும் பூகோள அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உருவாக்கும் பங்கு பற்றி ஆராய்கிறது.

இந்த அருமையான நூலை உருவாக்கியிருக்கும் பரமேஸ்வரன், அரவிந்தன் நீலகண்டன் ஆகிய தொகுப்பாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்தப் புத்தகம் கிறிஸ்தவத்தின் கருத்தியலையும், வரலாற்றையும் பற்றிய முதல் தொகுப்பு, இதைத் தொடர்ந்து ”Christianity: Proselytism and Conversion: with a focus on India என்ற தலைப்பில், நடைமுறையில், சமகாலத்திய கிறிஸ்தவத்தின் மதமாற்ற செயல்பாடுகள் பற்றிய இன்னொரு தொகுப்பும் வெளிவரப் போகிறது என்று முன்னுரை கூறுகிறது. அதையும் உடனடியாக அவர்கள் வெளியிடவேண்டும். இந்து அறிவியக்கத்தின் வளர்ச்சிக்கு இந்த இரு தொகுப்புக்களும் சிறந்த துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

——————

Expressions of Christianity With a focus on India
Paperback – 600 Pages (Year: 2007)
Vivekananda Kendra Prakashan Trust /Suruchi ~ ISBN: 8189248847

இணையம் மூலம் இங்கே (வெளிநாடு) மற்றும் இங்கே (இந்தியா) வாங்கலாம்.

சென்னையில் கிடைக்குமிடம்:

விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
தொலைபேசி: 44-2844-0042
மின் அஞ்சல்: vkpt@vkendra.org
இணையதளம்: http://www.vkendra.org



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

aravindan neelakandan on June 27, 2010 at 8:24 am

//என் பள்ளி நாட்களில் எந்த வகுப்பாசிரியர் (ஒரு பாதிரியார்) வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்றும்… அவர் அரசர் அல்ல எனவும் ஒரு பாதிரியாரின் குறிப்பில் இருந்ததாக சொல்லுவார்//

விடுதலைக்காக போராடிய சுதேசிய மன்னர்களான வீர பாண்டிய கட்டபொம்மனையும் பூலித்தேவனையும் அவ்வாறு இழிவாக பேசித்திரிந்த மதமாற்றி கால்டுவெல் என்கிற எஸ்டேட் பிஸினஸ்காரன். மதமாற்றம் அவனது சைட் பிஸினஸ். எல்லீஸ் என்கிற அறிஞர் எழுதியதிலிருந்து திருடி எழுதப்பட்டதுதான் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம். எல்லீஸ் இரு அந்தணர்களுடன் இனைந்தே இந்த ஒப்பிலக்கண ஒற்றுமையை கண்டுபிடித்தார். அதை அவர் நேர்மையாக குறிப்பிடவும் செய்தார். ஆனால் கால்டுவெல்லுக்கோ மூளை முழுவதும் நிரம்பி வழிந்தது இந்து சமுதாயத்தின் மீதான துவேசமே என்பதால் அவன் அதை குறிப்பிடக் கூடிய அடிப்படை நேர்மை கூட இல்லாதவனாக இருந்தான்.முத்துக்குமாரசுவாமி on August 19, 2009 at 8:57 am

ஏசுமத நிராகரணம் என்னும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் செய்யப்பட்டது. வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால், அவர் எழுதிய, சாந்தலிங்க சுவாமிகளின் நூலான, ‘கொலைமறுத்தல்’ உரையில் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது.

ram on September 11, 2009 at 6:54 am

///RAMGOBAL
10 September 2009 at 1:08 pm
திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் இணைந்தார் பாஸ்கர் அவர்களே. திருக்குறள் இந்து மறை கிடையாது. அது உலகப்பொதுமறை என்று தங்களுக்கு தெரியாதா. மதங்களை குறிப்பிடாத ஒரே மறை திருக்குறள். பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.///

திருக்குறளில் வருண பகவானையும் இந்திரனையும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளாரே படிக்கவில்லையா. இந்துவாக இல்லாமல் இந்து வழிபடும் தெய்வங்கள் அல்லது தேவர்களை ஏன் குறிப்பிட்டு எழுத வேண்டும்? திருவள்ளுவர் இந்துவே. அவருக்குப் பழைய படங்களில் பூணூல் இடப்பட்டிருக்கும். அவர் பார்ப்பனர் என்பதாகத் தெரிவது பலபேரின் வயிறு வாய் எல்லாம் எரிந்து புண்ணானது. எனவே அவரது தோளைச் சுற்றி பூணூலுக்கு பதிலாக துணியைப்போட்டார்கள். இப்போது அதுவும் மாறி வள்ளுவர் என்பவர் இந்துவே இல்லை என்றும் மாற்றப்பார்கிறார்கள். எல்லாம் திராவிட சதி.

 

தேவப்ரியா சாலமன் on September 20, 2009 at 3:53 pm

I have to see how Indian Christian church works

Updates about sister Abhaya murder case. The murder took place in a convent in Kerala about 18 years ago, and church did everything to cover that up with full support of political parties.

The video tapes of narco analysis on the three prime accused- Father Thomas Kottur, Father Jose Puthrikayil and sister Sephi were telecast in Malayalam TVs couple of days back. They are now available in Youtube.

http://www.youtube.com/watch?v=E_GRV0wg4uI
http://www.youtube.com/watch?v=lm0SznkecA8
http://www.youtube.com/watch?v=qdPMtWec5ew

It is obvious that the video has been edited. The nun admits that she hit sister Abhaya with an axe. The nun also admits illicit relationship she had with other two male priests.

ஒருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.//
Pls refer http://www.israelect.com/reference/WillieMartin/Judas.htm

With Love,
Ashok//

தயவு செய்து நடுநிலை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு படியுங்கள்.

நான முன்பே சொன்னேன் பயனற்ற வெற்று போலி மழுப்பல் சமாதானங்கள் வீண் வேலை. சுவியில் இல்லததை எல்லாம் தானாக கற்பித்துக் கொண்டு மழுப்புவது உங்களுக்கும் போதுமாக இருக்கலாம். நடுநிலை பைபிளியல் அறிஞர்களுக்கே ஏற்பில்லை.

யூதா மரணம் பற்றி – கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ் எழுதிய நூல்- : “நிஜங்கள்- விவிலியம் பற்றிய கேள்வி – பதில்கள்”, இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.

பக்கம்49-50இல் யூதாஸ் மரணம் பற்றிய கேள்விக்கு பதில்
//மத்தேயு நற்செய்தியாளர் யூதாசை தற்கொலை செய்து கொண்டான் என்று கூறுகிறார்(மத். 27:3-10) …
தி.ப. 1:18-9இல் யூதாஸ் வயிறு வெடித்துக் குடல் எல்லாம் சிதறி இறந்த்தாகக் கூறப்படிகிறது, ஆகவே, யூதாஸ் இறந்தது உண்மை. எப்படி என்பது கேள்விக்குறியே”//

உங்கள் நம்மிபிக்கையை நான் மதிக்கிறேன்,

என் பார்வை முழுமையும் வரலாற்று உண்மைகளெ, நான் இதற்காக மூல எபிரேயம் கிரேக்க சொற்கள்சித் தேடுபவன், தாராளமாக என்னை விமர்சியுங்கள், ஆனால் என் வலைப்பூவில் செய்யுங்களேன், இங்கு நேரடியாக தலைப்பில் நிற்போம்.

தேவப்ரியா சாலமன் on September 22, 2009 at 8:44 am

////லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.//
Please refer http://www.biblehistory.net/newsletter/quirinius.htm

//மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.//
That is his paternal generation.

//லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.//
This is his maternal generation. People who doesn’t have son, track their generation thru their son-in-law.//

முதலில் ஏன் இந்தக் கதைகள் நுழைந்தது. ஏதோ ஒரு பழைய ஏற்பாடு வாசகம் எடுத்துக் கொண்டு- இது தீர்க்கம்; இது நிறைவேர வேண்டும் என, பெத்லகேமில் பிறப்பு எனக் காட்டல் வேண்டும், பின் ஏசு நசரேயன் என தூக்குமரத்தில் நிருபிக்கப் பட்ட குற்றத்தை தன் கையால் ரோமன் கவர்னர் பிலாத்து எழுதியது இருக்க இரண்டு சுவி கதாசிரியர்களும் குழம்பி தன்னிச்சையாகப் புனைந்தனர். மத்தேயு யாக்கோபு மகன் ஜோசப் பெத்லகேமிலே வாழ்ந்தவர், அவருக்கு இயேசு குடும்பத்தை பெத்லகேமிற்கு அனுப்ப நட்சத்திரக் கதைகள், ஏரேது ஏசுவிற்காக பலப்பல அப்பாவி குழந்தைகாக கொன்றாராம்.
லுக்கா ஏலி மகன் ஜோசப்பை நசரேத் வாழ்பவராகப் புனைய அவருக்கு பிறப்பிற்கு ஏலி மகன் ஜோசப்பை பெத்லகீம் கொண்டு வர சென்சஸ் கதை தேவைப்பட்டது.

வரலாற்றில் ஒரே ஒரு சென்சஸ் தான், அதன் போது கலிலேயர் யூதாஸ் பெரும் மரியல் செய்தார், என்பதையும் லுக்கா சுவி புனைந்தவரின் இரண்டாவது நூலான அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம்.

சுவிசேஷஙளைக் கொண்டு எவ்வளவு தூரம் உண்மையான வரலாற்று இயேசுவைத் தேட முடியாது, எங்களுக்கு வரலாற்று இயேசு அல்ல பரப்பப்பட்ட கதை நாயகர் இயேசு தான் வேண்டும் Bultman என்றனர். இதை சுட்டிக் காட்டி பேராசிரியர் F.F.புரூஸ், தன் “The Real jesus ” என்னும் நூலில் இதை மீறி ஜெ.சி.கெடவுக்ஸ் (J.C.Cadoux- Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)என்பவரின் நூலை சுட்டிக் காட்டுகிறார்.

See what this Learned Scholar says :

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-

“There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.
Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.

மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு வசனம் எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்கம் என்றுப் புனைந்து அதற்காக இருவரும் இருவிதமாகப் புனைந்ததை பற்றி மேலும் விரிவாகப் பேச என் வலைப்பூவிற்கு வாருங்களேன்.

தயவு செய்து சுவிக் கதைகளைப் படியுங்களேன். மத்தேயு லுக்கா இருவரும் இது தந்தைவழி பட்டியல் எனத் தெளிவாகக் கூறி உள்ளனரே? நீங்கள் இல்லாததைக் கற்பனை செய்கின்றீர்கள்?

பட்டியலில் உள்ள பெயர்கள் அதில் தன்னிச்சையாய் மத்தேயு சில பெயர்கள் விட்டுள்ளதையும் இன் இவ்வலையில் காணாலாம்.
லுக்கா பட்டியலில் தாவிது சாலமன் வரிசை இல்லாமல் -தாவீது வேறொரு வைப்பாஅட்டி மூலமான் நாத்தன் வரிசை என்கிறார். ஆனால் நடுவில் பாபிலோனிய வெளியேற்றத்தின் போதான சாலமன் வரிசைப் பெயர்களைப் புகுத்துவார்.
http://tamil.net/node/5646
http://tamil.net/node/5647

http://tamilarpage.blogspot.com/2007/08/blog-post.html
எல்ல பெயர்களிலும் இன்னார் மகன் இன்னார் என்று தான் உள்ளது; நீன்கள் ஏன் இல்லாததை எல்லாம் கற்பனை செய்யச் சொல்லுகிறிர்கள்.

மேலும் கிரிஸ்மஸிற்கு சர்ச் வாசல்களில் மாட்டுத் தொழுவ செட்டிங் போட்டு பல உருவம் வழிபாட்டிற்கு வைத்தல் லுக்கா சுவியின்படி நடக்கும். ஆனால் மத்தேயு சுவியோ பெத்லகேம் தான் யாக்கோபு மகன் ஜோசப் தன் வீட்டில் வாழ்ந்தார் என வாத்திகன் 2007 கிரிஸ்மஸிற்கு மாட்டுத் தொழுவ செட்டிங்கை விட்டு சாதாரண வீடு என மாற்றியது. இணைப்புக்கள் கீழே
http://www.foxnews.com/story/0,2933,317150,00.html

http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. தேவப்ரியா சாலமன் on September 22, 2009 at 10:50 pm

    //glady -15 September 2009 at 10:53 am
    வரலாற்றுரீதியாக “இயேசு” இல்லை என்பதை பைபிளுக்கு வெளியிலிருந்து மட்டும் சொன்னால் நலம்;
    காகிதமும் அச்சு இயந்திரமும் வந்தபிறகு வந்ததையெல்லாம் விட்டுவிட்டு
    பைபிளின் சமகாலத்து ஆதாரங்களை மட்டும் முன்வைக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்;//

    நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் – ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன்.

    யூத புராணக் கதைகள் பற்றிய அகழ்வாய்வு உண்மைகளை தொகுத்துக் கொடுக்கிறேன்.
    //josephdaniel -22 September 2009 at 12:17 pm
    தள நண்பர்களே
    தேவிபிரியா சாலொமொன் நாத்திகரா அல்லது கிறிஸ்தவ எதிர்ப்பாளரான இந்து மத பற்றாளரா. ஏனெனில் நாத்திகராக இருப்பின் அவர் அனைத்து சமய நம்பிக்கைகளையும் எதிர்ப்பவராக இருப்பார். கிறிஸ்தவ நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் நோக்கம் மாதிரியே இந்து மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் குறித்து குதர்க்க வாதங்களையும் எடுத்து கூற அவரால் நிச்சயம் முடியும்.//

    சகோதரரே இந்த போஸ்டிங்கிற்கு பதிலாய், சுவிசெஷங்களில் ஒரு இயேசு அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட இயேசுக்கள் உள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்ட, எழுந்த கேள்விகட்கு கொடுக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஏனோ உங்களை சுடுகிறது.

    //joseph -10 September 2009 at 4:18 pm
    நியாயத்தீர்ப்பை பற்றி பைபிளில் தெளிவாகத்தான் போட்டிருக்கிறது, இயேசு என்ன சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சுக்கனுமின்னா நான்கு சுவிஷேஷங்களையும் படித்து பாருங்கள். நியாயத்தீர்ப்பு ஒருமுறைதான் நிகழும்//

    நான் கூறிய கருத்துக்கள் ஆதாரங்களோடு தவறு என்னுங்கள், நான் ஏற்கிறேன், அல்லது என் ஆய்வின் நீளத்தை இன்னும் நீட்ட வேண்டும் என்பதை அறிவேன்.

    நான் ஒரு முனைவர் பட்ட மாணவன், இஸ்ரேல் பற்றிய ஆய்வு என் களம்.

    என் மத நம்பிக்கை- நமக்கு மேல் ஒரு சக்தி இறைவன் உள்ளது, ஆனால் நம் செயல்களின் வினைகளின்படி தான் நடக்கும், மேலுள்ள இறைவன் நம் வினைக்கும் ஏற்ப மீண்டும் மீண்டும் பிறக்க வைத்து புவியை அனுபவிக்க வைக்கிறார்.[Agnostic]
    எல்லா மதப் புராணங்களும் ஆய்வுக்கு உரியவையே, என்னை பைபிளை ஆராயச் செய்ததும் எழுத் வைப்பதும் அவ்விறைவனே.

    இஸ்ரேல் நாட்டு அகழ்வாய்வுகளைவிட பாரத்தில் கண்டுள்ள அகழ்வாய்வு பல 1000 ஆண்டு முன்பே நாகரீக மேம்பாடு; என்னை உங்களை போல் நம் மூதாதயர் பல ஆயிரம் ஆண்டுகளாய் போற்றி காத்து வந்துள்ளதை ஒதுக்காமல் மதிக்கவே செய்ய வைக்கிறது.

    நீங்கள் கற்பனையாக இஸ்ரேல் பற்றி புராண அடிப்படையில் நம்பிய ஊகங்களை (மூடநம்பிக்கைகளை} பற்றிய பல பைபிள் அறிஞர்கள் கூறியவையே தரப் பட்டுள்ளது. நீங்களே பல கேள்வி எழுப்பினீர்; நான் பாதிக்குத்தான் பதில் தந்துள்ளேன். மீதி அடுத்த சில நாட்களில். என் பார்வை வரலாற்று நோக்கு மட்டுமே.

    இதுவரை தமிழ் ஊடகங்களில் கிறிஸ்துவ மததின் வரலாற்று ஆய்வு பின்னணியை விமர்சனத்துக்கு ஆட்பட்டதே இல்லை. அதுதான் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

    நான் எல்லோரையும் சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

     
  2. தேவப்ரியா சாலமன் on September 23, 2009 at 12:25 am

    //Ashok kumar Ganesan – 20 September 2009 at 12:32 pm
    Dear Devapriya Solomon,
    //இயேசு போற்றத்தக்கவரா?//
    Jesus is very much to be appriciated. One of the very important thing that Jesus was teaching is humbleness. And here Jesus knew that woman is humble. And just to show the humbleness of the woman to the world, Jesus has asked such a question. See how happy Jesus was when her humbleness is proved.
    //.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.//
    //As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.//
    Did these people met Luke anytime? Just because some scholar (in your eyes) writes some crap, you need not beleive that.//

    மேலே சாப்பிடும் பொழுது வாயிலிருந்தும் கையிலிருந்தும் விழும் எச்சையாக சாப்பிடுகிறேன் என அப்பெண் தாழ்வு காட்டுகிறார் அன்றி இயேசுவிடம் அருவெறுக்கத்தக்க இனவெறி தான் காணகிறது.

    உலகில் பிறந்த ஒவ்வொருமனிதனும் கடவுளால் படைக்கப் பட்ட கடவுளின் மகன்கள். அதில் தன் மதமில்லாதவர் நாய் என்பவர் – பணிந்தாரா? என்ன சொல்கீறீர்கள்.

    இன்றும் யூதர்கள் ஏசு உட்பட தினமும் சொல்லும் தினசரி ஜெபம்.
    I quote from little Sedur (Jewish prayer book).
    The exact prayer is this:
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.”
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave.”
    Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.”

    This prayer is said every morning by millions of Jews around the world.

    இறைவனே என்னை பெண்ணாக படைகாததற்கு, யூதரல்லாதாரகப் படைக்காதற்கு அடிமையாக படைக்காதற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்.

    இந்த ஒரு இன வெறிக்கு ஆதாரமில்லத கற்பனை கதைகளான் தேர்ந்தெடுக்கப் பட்டவர் -எகிபிதிலிருந்து யாத்திரை என்ற வரலாற்று பொய்களை என்றும் பைபிள் கொண்டுள்ளதால் தான்.

    தேவப்ரியா சாலமன் on September 23, 2009 at 8:24 am

    josephdaniel 19 September 2009 at 2:23 pm
    இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், COMEDY OF ALL TIMES

    பைபிளை சர்ச்ச் சிறையிலிருந்து மொழி பெயர்த்துத் தந்த திண்டேல் சர்ச்சினால் உயிரோடு சிலுவையில் கொல்லப் பட்டு பின் கொழுத்தப் பட்டார்.
    விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.
    No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
    Page-266 The Religious World.

    josephdaniel September 2009 at 3:02 pm
    நீங்கள் சொல்லியுள்ள புத்தகங்களை எழுதியவர்கள் எதை ஆதாரமாக வைத்து இது மாதிரி எழுதியுள்ளார்கள்???

    பைபிளை ஆதாரமாக வைத்து எழுதியுள்ளார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டில் பக்கத்து நாட்டுடன் வாணிபம் பற்றியோ கடல் வாணிபம் பற்றியோ இல்லை. உலகின் பல முக்கிய வாணிபப் பொருட்களுக்கு உள்ள பெயர்களில் தமிழ் – வடமொழி என்று பார்க்கலாம். எந்த ஒரு நாட்டு பழைய இலக்கிய மொழியிலும் எபிரேயத் தாக்கம் இல்லவே இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. “The idea of a Universal Deity does not exist for most of the Biblical period; and every religion including YAWHism alest implicitly acnowledged the existance of other Gods (who however, tended to be impotent outside the boundaries of their own realms. Under these circumstances it was inevitable that a covenant of Israel enterend in to which Yahweh would focus on possession of the Land, the “promissed Land andthat this possession would ratify the exclusiveness of the relationship with their Diety in a very material way. The Biblical picture of a promissed Land is a strangly idealised one(for Eg.inthe allocation of Palestine to the different tribes, or the fixation as up on “Mount Zopm” a PLACE THAT OWE MORE TO THE IMAGINATION OF THE PROPHETS THAN TO THE TOPOGRAPHY OF JERUSALEM-
    ” Bible as Literature” , Oxford University Press

    And what Scholars says

    “Though most of this material is familiar to Scholars and specialists in the Fields, it is seldom made available to the wider Public and even when it does find its way into the books on the early Christian movement, it does not play a Major role in shaping our view of Christianity.”
    Page – xi-xii, Professor L.Wiken, Professor of History of Christianity –Notre dame University; Published by Yale University Press.

    “In contrast to the “Keep them Ignorant” policy, Protestantism has often, though not always, empasised literacy so that people could read the bible. The result was an enormous splintering of Protestantism. As people read, they also interpreted and often their interpretation was different from their Superiors, their denomination etd., So they started their Own Denomination.
    There are over 20,280 Christian Denominations in the world most of them Protestant, many of them based on some Variant interpretation of Bible”
    Pate 13,14. “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson- Practising Pastor & visiting Professor of Jordan University.

    “Surely God almighty could have found a less Blood thirst way of getting the Hebrews out of Egypt than murdering the Egyptian First Born (I am a First Born son, and I have a first born child) and killing the pursuing Forces of Pharaoh – a little sand storm would have stopped them with dry feet on the western shore. The vast Majority of those Egyptian mothers and fathers had nothing and to do with keeping the Hebrews in Egypt. Why should innocent Children be murdered and Parents suffer such loss when God himself hastened Pharaoh’s heart to keep the Hebrew there”

    P-42 “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson

    //Ravi Timothy – 23 September 2009 at 12:16 pm
    From where you quote all these references, most of the words which you quoting are not in the Holy Bible.

    I understand you undergone a scholar. Please concentrate your studies and at least try to fulfill ur parents dream.

    God bless you.//Ravi Timothy

    Thank you Timothy- if you are talking about the above quote referred- it is the compilation of Numbers and Chronicles, which needs to analyse totally mathematcially.
    Otherwise please be specific about which of my view Please.
    Thanks for your kind suggestions.
    You can Email me – devapriyasolomon@gmail.com

     


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard