New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
Permalink  
 


ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

 

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.

324px-statue_of_g_u_popeபோப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. பால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் – “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”.  தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.

இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன.

போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்,  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் – “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.

ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.

“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால்  மறைக்கப்பட்டுவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திருவாசக மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு அறிமுகவுரையை ஜி.யூ. போப் எழுதியுள்ளார். ஜி.யூ. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பைத் தமிழ்ச் சைவர்களில் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.  ஜி.யூ போப்பின் மொழிபெயர்ப்பை வலைதளத்தில் ஏற்றியவர்களும் கூட அறிமுகவுரையை விலக்கிச் செய்யுள்பகுதியை மட்டுமே வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

ஜி.யூ. போப் திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்திற்கு எழுதிய அறிமுகவுரையின் போக்கையும் அது தமிழ்ச்சைவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை விளைப்பதாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

நீத்தல் விண்ணப்பம் தோன்றிய வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஞானாசிரியனாகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் திருவாதவூரரை ஆட்கொள்ளுகிறான். இதன் பின்னர் அடிகளுக்கு மதுரையினொடு தொடர்பு முற்றிலும் நீங்குகிறது. பூவுலகிற்குத் தான் எழுந்தருளிய பணி நிறைவுற்றதும் இறைவன் உடனிருந்த அடியவர்கள அங்குக் குருந்த மரத்தடியில் ஓர் பீடம் அமைத்துத் தன்னை வழிபட்டு வருக  என்றும் சிலநாட்களில் அங்குள்ள பொய்கையின் ந்டுவில் ஒரு பேரொளி தோன்றும் என்றும் அதில் அனைவரும் புகுந்து திருக்கயிலை வருக என்றும் கூறியருளினான். திருவாதவூரரை மட்டும் அவர்களுடன் பேரொளியில் புகாமல் யாத்திரையாகத் தில்லைக்கு வருக என்றும் வழியில் அவர் வழிபடும் தலங்களில் குருவடிவாய் காட்சி அளிப்பதாகவும் கூறியருளித் திருக்கயிலைக்கு எழுந்தருளினான்.

siva_as_guru_to_manikkavasagarஇறைவனின் பிரிவாற்றாமையால் வருந்திய திருவாதவூரர் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு இறைவனின் காட்சியைப் பெறாமையால் வருந்தி நீத்தல்விண்ணப்பம் என்னும் இந்தப் பதிகத்தை அருளினார். இறைவன் காட்சி நல்கினான். இது மாணிக்கவாசகரது வரலாற்றைப் பாடிய கடவுண்மாமுனிவர் அறிவிக்கும் செய்திகள்.

‘உன்னை பிரிந்த யான் என் உடலைத் தீவாய் மடுக்கிலேன், மலைமேல் உருண்டு உயிரை மாய்ப்பேனல்லேன்,  நாதனே! இந்த உடலும் உயிரும் உன்னுடைய உடைமையென்றே இவ்வுடலைவிட்டு உயிரைப் பிரிக்க அஞ்சினேன், என் செய்வேன்’ என நிலத்தில் வீழ்ந்து புரண்டு அழுது புலம்பினார். கற்றைவார் சடையார் கோலங்காட்டி ஆட்கொண்ட அன்றே, வாதவூரர், சுற்றமும் தொடர்பும் முற்றிலும் நீத்தார்; இன்பமும் துன்பமும் அற்றார்; உடல்மேல் அபிமானம் துறந்தார்; வெறுக்கை (செல்வம்)மேல் வெறுக்கை வைத்தார்; செற்றமும் செருக்கும் காய்ந்தார்; நல்வினை தீவினை இரண்டும் தீர்ந்தார்.  இறைவன் திருவாதவூரரை ஆட்கொண்ட பின் அவரது நிலையாகப்  பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்தில் அறிவிப்பது இந்நிலை

இனி, போப் இந்த கட்டத்தில் மணிவாசகரை எப்படி அறிமுகம் செய்கின்றார் எனக் காண்போம்.

நீத்தல் விண்ணப்பம் முழுவதும் ஆன்ம முன்னேற்றத்தைத் தடை செய்யும் ஐம்புல மயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தெய்வத்தின் துணை வேண்டி மானுடம் எழுப்பும் உணர்ச்சி மிக்க பாடல்கள் என்ற முன்னுரையுடன் ஜி.யூ. போப், மாணிக்க வாசகர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றைக் கூறுகின்றார் –

”சிவன் குருவாக வந்து ஆட்கொண்டு பிரிந்த பின், திருவாதவூரர் பாண்டி நட்டில் உள்ள சிவத்தலங்களைக் கண்டு வழிபடலை மேற்கொண்டார். முதலில் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கினார். திருப்பெருந்துறையிலும் மதுரையிலும் பெற்றிருந்த இறையனுபவத்திற்கு எதிர்விளைவான சோதனைகள் உத்தரகோச மங்கையில் திருவாதவூரருக்கு ஏற்பட்டன.

இளமையும்  பாண்டியமன்னனின் தனிப்பட்ட பேரன்பும் பெற்றிருந்த அடிகள் இதுவரை செல்வச்செழிப்புடன் இல்லற இன்பத்தில் வளமாக வாழ்ந்திருந்தார். இப்பொழுது அனைத்தையும் துறந்த துறவியாக மாற்றம் பெற்றார். மதுரையில் அமைச்சராக இருந்தபோது பெற்றிருந்த சுகபோக வாழ்க்கை அனுபவ நினைவும், உத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் இருந்த சூழலும் அடிகளுடைய புதிய தவவாழ்க்கைக்குப் பெருஞ்சோதனையாக இருந்தன. புலனிச்சை செய்யும் மயக்கத்தில் சிக்கிய அவர் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோளை அங்கு அவர் எட்ட முடியவில்லை.

உத்தரகோசமங்கைக் கோயிலின் சூழல் அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்தது. நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள பாடல்களைப் பார்த்தால் அவர் இருநிலைகளில் வருந்தி வந்தார் என அறிகிறோம். ஒன்று, அந்தக் கோவிலில் கூட்டம் கூட்டமாக இருந்த தேவரடியார்களின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட மனமயக்கம்; இரண்டாவது, புதிதாக அவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கைக்கு உரிய விரதங்களைக் மனம் ஒன்றிக்கடைப் பிடிக்க இயலாமை.

இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.”  – From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, – if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.

ஜி.யூ. போப் கூறும் இந்த வரலாறு மணிவாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன் மானம் உள்ள தமிழர்கள் போப்புக்குப் புகழ்மாலை சூட்டித் திருவாதவூரடிகளை ஒழுக்கக் கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?

போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்.

திருவாசகத்தில், குறிப்பாக நீத்தல் விண்ணப்பத்தில், திருவாதவூரடிகள் தாம் பெண்மயக்கத்தில் வருந்துவதாகக் கூறுவது போன்ற செய்திகள் அவர் தம்மைப் பற்றிக் கூறிய ஒப்புதல் வாக்கு மூலமல்ல. இது வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து  மேலும் வினைகளை ஈட்டிக் கொள்ளும் இயல்பைத் திருவாதவூரடிகள் தம்மேல் ஏற்றிக் கொண்டு கூறியதாகும். இதற்கு இவ்வாறன்றி, நம் அடிகளே மகளிர் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் மனத்தளவில் மகளிரை நினைந்திருந்தார் என்றும் அவ்வாறு இருப்பினும்  விழுத்தொழும்பில் நின்றதால் தம்மைக் கைவிடலாகாது என இறைவனிடம் மன்றாடினார் என்றும் அறியாது கூறிய போப்பை  எம்பெருமான் மன்னிப்பாராக.

உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி உலகவருக்காக இறைவனிடம் வேண்டுதல் இந்து பக்தி இலக்கிய மரபு. இதற்குத் தமிழிலேயே ஒரு சான்று காணலாம்.

காரைக்காலம்மையார் பெண்ணடியார் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. அவர் அருளிய ‘திருவிரட்டைமணிமாலை’ என்னும் திருப்பதிகத்தில்,

“நினையாது ஒழிதிகண் டாய்நெஞ்சமே
இங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும்
தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நம்
தாதைநொந் தாத செந்தீ
அனையான் அமரர் பிரான் அண்ட
வானன் அடித்தலமே” (13)

என்னும் பாடலில் தமக்கு மனைவியும் மக்களும் உள்ளதாகவும், நெஞ்சம் அவர்களை நினயாதொழிய வேண்டும் எனவும் பாடுகிறார். காரைக்கால் அம்மையாருக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என இந்தப் பாடலின் அடிப்படையில் கூறினால், அவ்வாறு சொல்பவனை அறிவுடையவன் எனலாமா?

போப்பின் கருத்து அவருடைய கிறித்துவ மரபையொட்டி எழுந்ததுவாகும். கிறித்துவ Saint களில் பலர் Sinner களாக இருந்து Saint ஆனவர்களே. இந்த மரபில் எழுந்ததுதானே “Every saint had a past; and ever Sinner has a future” (Imitation of Christ) எனும் கொள்கை.

galatic_sivaஇந்தக் கோட்பாடு நம் ஆசாரிய மூர்த்திகளுக்கும் இந்து மரபுக்கும் ஒவ்வாத ஒன்று.

முத்தி நிலையில் பரமுத்தி அபரமுத்தி என்று இருநிலைகள் உண்டு. பரமுத்தியாவது சிவவியாபகத்தில் இரண்டறக் கலந்துவிடும் நிலை. இத்தகையோருக்கு மறுபிறப்பில்லை.

அபரமுத்தி என்பது பதமுத்தி என்றும் சொல்லப்படும். பதமுத்தியில் உள்ளவர்கள் இறைவன் ஆணையின்படி மீண்டும் உலகநன்மையின் பொருட்டுப் பிறந்து உரிய காலத்தில் பரமுத்தி அடைவர்.

இத்தகைய உயர்ந்த ஆன்மாக்களாக சிவனடியை மறவாப் பான்மையராக இருந்து, இறைவன் ஆணையால் ஒருபயன் கருதி உலகிற்கு அனுப்பப்பட்டவரே நம் ஆசாரிய மூர்த்திகள். அவர்களுடைய அருளிச்செயல்களிலேயே இதற்கு அகச்சான்றுகள் உள்ளன.

“துறக்குமா சொலப்படாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல்செய்து மண்ணில் பிறக்குமாறு காட்டினாய்” எனத் திருஞானசம்பந்தர் தாம் மண்ணில் பிறப்பதற்கு முன்னிருந்த நிலையைப் பாடினார்.

கயிலை மலையில் சிவனுக்கு அருகில் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை இறைவன், திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தான் என்னும் செய்தி திருநாவுக்கரசர் புராணம் முதற் செய்யுளில் தெரிகின்றது.

மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.

திருஞான சம்பந்தரைப் போலவே, சிவலோகத்தில் சிவனடி மறவாப் பான்மையராகத் தன்னருகில் இருந்த ஒரு புண்ணிய ஆன்மாவை, திருவாசகத்தைப் பெற வேண்டி, மண்ணுலகத்தில் பிறக்குமார் இறைவன் செய்தான். மாணிக்கவாசகர் இச்செய்தியை,

“நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
…………………………………………………………………
ஆக்கி ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே” (அதிசயப்பத்து 8)

எனக் கூறினார்.

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! திருவாசகத்தை மொழிபெயர்த்ததனல் அதன் பெருமையை உலகெங்கினும் போப் பரப்பினார் என்றால் இப்புகழோடு, மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார் என்றும் ஆம்..

இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே.

போப் சைவ சித்தாந்தத்தைப் நூல்கள் வாயிலாகப் படித்திருந்தாலும் சித்தாந்த மரபினை அறியார். திருமுறைகளில் ஐயம் வந்தால், அதனை சித்தாந்த நெறி நிற்கும் சான்றோரிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். வெறும் தமிழ்ப்புலமை மட்டும் போதாது.(இதற்குச் சான்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய ‘தியாகராய செட்டியார்’ வரலாறு பார்க்கவும்). இந்த அறியாமையால் அவர் தவறான குறிப்புக்களும் எழுதியுள்ளார். இதனால் போப் சைவ நெறியைப் பாராட்டுகின்றாரா அல்லது பிற கிறித்துவர்களைப் போலக் கேலி செய்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுமாறு சில இடங்களில் கருத்துத் தெரிவிக்கின்றார்.

எப்படி ‘சங்கீதம்’ என்ற பைபிள் பகுதி கிறித்தவர்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கின்றதோ அப்படியே திருவாசகமும் காலங்காலமாகத் தமிழ்மொழி பேசும் மக்களின் பெரும்பான்மையோரின் மனத்தைத் தொட்டுள்ளது எனத் திருவாசகத்தைப் புகழ்ந்த போப் அவர்கள், இதில், மேன்மையான ஆன்மிகத் தத்துவச் சிந்தனைகளோடு மடமையானது என்று சொல்லத்தக்க உருவவழிபாடு பேணலும் கலந்துள்ளது; இன்றைய சைவநெறியில் ஒன்றையொன்று மறுதலித்துக்கின்ற, அதேசமயத்தில் பரஸ்பரம் வலுவூட்டுகின்ற இரு இயல்புகள் செழித்துள்ளன. சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எத்துணைக் கெத்துணை முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அத்துணைக்கு அத்துணை ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார் (There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce  to be the grossest idolatory. And this leads to the thought that in caiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen on another. The more philosophical and refined the caivite becomes , the more enthusiastic does he often apper to be in the performance of the incongruous rites of the popular worship. )

சைவம் உருவவழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்துகின்றது. ஆன்ம ஞானியும் புறவழிபாட்டைக் கைவிடலாகாது. சிவச்சொரூபம் அருவமாய் எங்கும் வியாபித்துள்ளது. உருவுடைய சீவர்களாகிய நாம் அந்த வியாபகத்தின் உள் உள்ளோம்.  நமக்குப் புறத்தேயுள்ள பொருள்களையே காண வல்ல கருவிகளைக் கொண்டுள்ள நாம் நமக்கு உள்ளும் புறம்பும் உள்ள அருவமாக உள்ள நம்மை நடத்திச் செல்லும் இறையின் அந்த வியாபக வடிவம் வழிபடுவதற்கு முன்னிலை(சன்னிதானம்) ஆகாது. அதனால்தான் உருவ வழிபாட்டை இந்து சமயம் வற்புறுத்துகின்றது. இறைவன் அடியவர் உளங்கொள்ளும் எந்த வடிவத்திலும் வந்து அருள்புரிவான், அந்த வடிவங்களெல்லாம் அருள்வடிவமே அன்றிக் கல் மண் பொன் போன்ற மாயாகாரிய வடிவங்கள் அல்ல என்பது இந்து மதக் கோட்பாடு. இறைவன் எந்த வடிவில்  தங்களுக்கு அருள் செய்தானோ அந்த உருவினைத் திருமுறையாசிரியர்கள் போற்றியுள்ளனர். மணிவாசகப் பெருமானுக்குச் சிவன் குருவடிவில் வந்தருளினான். ஆதலால் திருவாசகம் முழுவதும் குருஸ்துதியே ஆகும்.

தங்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்று கூறிக் கொள்ளுகின்ற கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அக்கிறித்து, முகம்மது என்பாரையே தம்முடைய மூர்த்திகளாகக் கொள்ளுவதால் அந்த இருவரும் அடைந்த கதியை அக்கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அடைவர் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.  இவர்களும் உருவ வழிபாடு உடையவர்களே.

போப் மணிவாசகப் பெருமானைப் பிழைபடக் காட்டிய மற்றொரு முக்கியமான இடத்தை அறிய வேண்டும்.

இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டுத் தான் மணிவாசகரை ஆட்கொண்டதை உலகுக்கு அறிவித்தபின் , மணிவாசகர் தில்லைக்குச் செல்லுமுன் நடந்த நிகழ்ச்சிகளைத் திருவிளையடற் புராணமும் திருவாதவூரர்ப் புராணமும் விரித்துக் கூறுகின்றன. இறைவன் தன்பொருட்டு மண்சுமந்து கோவால் மொத்துண்ட கருணைத் திறத்தை நினைந்து மணிவாசகர் நினைந்து பலவாறு அழுது புலம்பினார். பாண்டியன் வாதவூரடிகளை அடைந்து வணங்கித் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். ‘யான் நாளும் நுமது பணி செய்தொழுக இந்நாட்டின் ஆட்சியைத் தாங்களே ஏற்று நடத்தல் வேண்டும்’ என மன்னன் மணிவாசகரிடம் வேண்டி நின்றான். அரசனது அன்பினை உணர்ந்த வாதவூரடிகள், ‘என்னைத் திருபெருந்துறைக்குச் செல்ல விடுப்பதே இவ்வுலக ஆட்சியை எனக்கு வழங்கியதாகும்’ என்றார். அடிகளது சிவபத்தியின் மாண்பினை யுணர்ந்த மன்னன் ‘பெரியீர் நும் திருவுளப்படி செய்க’ எனக் கூறி விடை அளித்தான். திருவாதவூரர் நற்றவக் கோலம் பூண்டு திருப்பெருந்துறை நோக்கிச் சென்றார்.

manikka_vasagar_statueதமிழ்ச் சான்றோர்கள் கூறும் வாதவூரடிகள் வரலாறு இவ்வாறு இருக்க போப் இதனை வேறு விதமாகக் கூறுகின்றார். பாண்டிய நாட்டில் உள்ள மதுரைப் பெருங்கோவிலுக்கும் சோழமண்டலத்தில் சிதம்பரத்தில் உள்ள தில்லைப் பெருங் கோவிலுக்கும் ஏதோ ஒரு பெரிய போட்டி இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தில்லைக் கோவில் மதுரைக் கோவிலை பலநிலைகளில் முதன்மை பெற்றது எனலாம். மாணிக்க வாசகர் மதுரையை விடு நீங்கிய பின் மீண்டும் மதுரைக்கு வரவேயில்லை. இவர் குதிரைவாங்க அளித்த தன் பொருளைக் கவர்ந்து கொண்டதனைப் பாண்டிய மன்னன் மனதார மன்னிக்கவே இல்லை என ஊகிக்கலாம். போப்பின் ஊகத்தின்படி மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் தன்னை மனதார மன்னிக்காததால்தான் அவர் மீள மதுரைக்கு வரவில்லை என்பதாகும்.(It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses)

திருவாசகம் மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரையில் போப் மாணிக்கவாசகர் வரலாறு எழுதியுள்ளார். அதில் பாண்டிய மன்னன் தன்னுடைய பிழைக்கு மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவரைத் தன்னுடைய அமைச்சராகப் பணிகொள்ளுவதற்குத் தனக்குத் தகுதியில்லையாதலால் நாட்டை ஆளும் உரிமையை அவருக்கு அளித்துவிட முன் வந்ததாகவும் கூறியதற்குக் கண்டபத்து என்னும் பதிகத்தின் அறிமுகத்தில் கூறியுள்ள இந்தச் செய்தி முரண்படுகின்றது.(The King now pays the saint a visit, acknowledges all his  mistakes, declares his unworthiness to have such a , and offers to resign to him the kingdom)

இந்த முரண்பாடுகளால் ஒன்று நன்கு தெரிய வருகின்றது. புராணங்களும், சைவ உலகமும்  மாணிக்க வாசகருக்கு அளித்துள்ள உயர்வையும் அவருடைய மேன்மையையும் போப் அறிந்திருந்தாலும் , அவருடைய கிறித்துவ மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும்,  Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து  விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

தமிழனுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர் தாமஸ் எனக் கூறுவோருக்கும் போப்புக்கும் என்ன வேறுபாடு? ஒரே குட்டையில் ஊறியவர்கள் தானே! 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

chillsam on October 7, 2009 at 2:53 am

// சரி டேனியல் தகர டப்பா //
நீங்க..? “சூப்பர”இஷ்டாரா..?
அடப்போங்கய்யா காலிப் பெருங்காய டப்பாவ விட மோசமான..?..!
தனி மனித தாக்குதல்களை விட்டு எதிர் கருத்தினை மட்டும் அழுத்தமாகப் பதித்தல் போதுமே..!

// போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்

இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன //

இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்;
அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..!
பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?

இறைவனையே சலனப்படுத்திய பெண்களைக் குறித்து விவரமாக புராணங்களிலும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் கோவில்களிலும் காண்கிறோமே,இதில் மாணிக்க வாசகர் எம்மாத்திரம்..?

// இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே //

இயேசு பெருமான் மறுபிறப்பை மறுக்கவில்லை;
தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் ஒரு மனிதன் மறுபிறப்படைதல் வேண்டும் என்றே இயேசு பெருமான் போதித்தார்; இதற்கு ஆதாரமாக விவிலியத்திலிருந்து யோவான் எழுதிய நற்செய்தி நூலின் மூன்றாம் அதிகாரத்தினை வாசித்துப் பாருங்கள்.(Gospel according to John;chapter.3)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

C.N.Muthukumaraswamy on October 7, 2009 at 10:23 am

Chillsam

/இயேசு பெருமான் மறுபிறப்பை மறுக்கவில்லை;
தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் ஒரு மனிதன் மறுபிறப்படைதல் வேண்டும் என்றே இயேசு பெருமான் போதித்தார்; இதற்கு ஆதாரமாக விவிலியத்திலிருந்து யோவான் எழுதிய நற்செய்தி நூலின்/

திரு சில்சாம் அவர்களே, நீங்கள் காட்டியுள்ள யோவான் சுவிஷேசத்தின் பகுதி, ‘தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் மறுபிறப்படைய வேண்டும்’ என்பது ஒரே பிறப்பில் ஒருவன் அடைகின்ற அல்லது அடைய வேண்டும் என சுவிஷேசம் கூறுகின்ற நிலையாகும். அது ஒன்றும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதோ, அந்தப் பரிமாணங்களுக்கேற்ற உயர்நிலைகளைக் கொண்டதோ அல்ல.
யோவான் சுவிஷேசம் கூறுவது ஒரேபிறப்பு. தாயின் வயிற்றிலிருந்து பெற்ற ஒரே உடல். அந்த உடல் குழந்தையாக இருந்து முதிய கிழமைபருவம் அடையும் மூப்பினைப் பரிமாணம் என்று சொல்லுவது பொருந்தாது. அது பல பிறவியும் அல்ல
மறுபிறப்பினையும் அதனால் அடையும் பல உடல்களையும் மாணிக்கவாசகர்,
‘செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” எனக் குறிப்பிடுகின்ரார். இந்தப் பல்வகைப் பிறப்பினையும் திரு ஜி.யூ.போப் அவர்கள், His various embodiments என்னும் தலைப்பில், Within these immobile and mobile forms of life,
In every species born, weary I’ve grown, great lord! ” என அழகாக மொழிபெயர்த்திட்டுள்ளார். அவர் species என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ள சிறப்பை நோக்குக. தாய் வயிற்றில் பிறந்த ஒரு உடலைக் கொண்டு அடையும் வளர்ச்சி, மூப்புகளை species எனலாமோ?

யோவன் சுவிஷேசம் 3:5 ‘இயேசு நிக்கொதேமுக்குக் கூறுகிறார் “நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிட்மிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது”

இங்கு இயேசு குறிப்பிடுவது, மனிதனுக்கு ஒரே பிறப்பு உண்டு. இந்த ஒரே பிறப்பில் ஞானஸ்நானம்( நீரிலிருந்து) பெற்று செம்மறியாட்டுக் கூட்டத்தில்( ஆவியில்) ஒருவனாக ஆகவேண்டும்.. இப்படிச் செம்மறி ஆட்டு,மந்தையில் ஒரு ஆடாகாமல் போனால் தேவனின் இராஜ்யமாகிய ஆட்டுப்பட்டியில் உனக்கு இடம் கிடைக்காது. உனக்கு நிரந்தர நரகமே கிடைக்கும்.

பைபிளையும் Imitation of Christ by Thomas Kempis போன்ற கிறித்துவநூல்களையும் தமிழ் இந்துக்கள் படித்துச் சுவைப்பது உண்டு. யோவான் சுவிஷேசத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ப்குதிக்கு இந்து நூல்களில் கூறப்பட்டுள்ள அறங்களின் அடிப்படையில் தமிழ் இந்துவாகிய நான் வேறு விதமாகப் பொருள் காண்பேன்.

பிறப்புக்களில் எல்லாம் மனிதப் பிறப்பு மிகவும் உயர்ந்தது. இதனைத் தவற விட்டால் இனி எந்தப் பிறப்பு வந்து வாய்க்குமோ? அறியோம். கிடைத்தற்கு அரிய இந்தப் பிறப்பிலேயே பிறப்பினை அறுத்து வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியத்தைச் செய்துகொள்ள வேண்டும். அதற்கு சற்குருவை அடைந்து தீட்சை(நீரினால்) பெற்று, அவர் காட்டிய வழியில் நின்று இறையருளை (ஆவியை)ப் பெறவேண்டும். குருவருளும் திருவருளும் இன்றி ஒருவன் பிறப்பை அறுப்பதோ வீடுபேற்றை அடைவதோ இயலாது. ஒருவன் தாய் வயிற்றிலிருந்து பிறப்பது ஒரு இறப்பு; குருவருளும் திருவருளும் பெறத் தகுதியாக்கும் தீட்சை மற்றொரு பிறப்பு.

நீங்கள் பைபிளை மேற்கோள் காட்டிச் சிலவற்றைக் கூறியதால் நான் இவ்விளக்கம் அளித்தேன். டேனியல் தங்கப்பாபோல் தகரடப்பா ஒலி எழுந்திருந்தால் கேளாது போயிருப்பேன்

கள்ளபிரான் on October 7, 2009 at 3:39 pm

//இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.” –

From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, – if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.//‘

The above paragraph has irked Dr Muthukumarasamy.

Here, we may understand that the outlook of G.U.Pope on Tiruvasagam is not that of a Hindu but that of a stranger.

Suppose I read the Bible and I am not a Christian. What will be my outlook? Only as a stranger. And, after reading it, I may say, ‘Tthere are many places in that book which attracted me, which found me in tears etc.’

What does it all mean? My experience with the Book and that of a devote Christian are not same. He approaches the Book as his holy scripture. I approach it as an important book or as a historical document that date immediately after the protagonist (Christ) death, or as an example of dignified and excellent English to learn from, to name a few reasons why I read. During the course of my reading and later review, I may say, “I find Christ not as a Lord or God, but simply as a noble man who some noble teachings to pass to us. “
I don’t think at all that Christians will flay me alive for my ‘experience’ with their book. In fact, I said it so to so many; and none of them took me to task for that.

This is the way we must treat Pope’s experiences with Tiruvaasagam.

Further, his statement on Manivaasagar’s ‘struggle with flesh’ is not a humiliation on the saint; rather, it enhances the spirituality that the saint came to represent in our minds. It adds aura to the saint halo.

Dr Muthukumarasaamy says that

“இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே”

It is not correct according to me. In Hindu religion too, such a concept exists. In fact, ‘Every saint has a past and every man has a future’ can also be a rehash of the following Tamil proverb, which comes from the Hindu religion straight:

நதி மூலமும் ரிஷி மூலமும் கேட்கக்கூடாது.

Alvaars are the finest examples of having had a PAST and repenting that, and finally becoming alvaars. Manivaasagar’s is only one pathikam that is shown here. But alvaars have so many. Believe me or not, even during his last leg of his Divya Desha yaatra, Thirumangai alvaar prays at Kedarnath to relieve him from the pangs of sensual feelings.

I agree that the ‘pangs’ or ‘sins’ of the saints are symbolic, which represent the ‘pangs’ and ‘sins’ of the entire humanity. That exactly is also what comes out from Pope’s clear statement He says, as quoted by Dr Kumarasamy,

‘Hindu commentators will often find mystic meaning, which are harmless, – if unfounded.’ He accepts that Manivaasagar’s lines can be interpreted by us differently. “
Same interpretation exists for Alvaar’s paasurams where they tell us about their struggle with flesh. The Vaishanva commentators interpret it differently as Pope attributes to Hindu commentators..
In the paragraph quoted by Dr Kumaarasaamy, which is the corner stone of his whole article, I find Pope not motivated by any base feelings in approaching Tiruvaasagam.

His is a signal service to Tirvasagam. Hats off to him! He embodies the famous statement: திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.

How many of us have spent a life time over that book? Has he translated it for Europeans with the motive of making all of them Christians? The Europeans were already Christians, weren’t they? Why did he bring the book to Europe? Did he get any monetary benefit or benefit to his religion? Nothing. All for the love of Tamil and Tamil literature. He was motivated purely by யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

போப் தம் மதத்தைப் பரப்பத்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இதில் யாதெரும் சங்கையுமில்லை. ஆனால், அவர் தன் 62ம் அகவையில் இந்தியாவை விட்டு, அஃதாவது தமிழகத்தை விட்டு தன் நாட்டிற்கு உடல் நலக்குறைவால் நிரந்தரமாக போய்விட்டார். போனபின், தன்னை மதப்பிரச்சாரத்திலிருந்து விடுவிடுவித்துகொண்டு, முழுனேரக் கல்விப்பணிக்கு மாற்றிக்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Prof of Tamil and Telugu பொறுப்பை ஏற்றுகொண்டார்.

பின்னர் அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றபின், தன் 81ம் அகவையில் தன் நெடுநால் கனவான திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்தார்.

நான் கண்டவரை, அவர் மாணிக்கவாசகரின் பெயரைகெடுக்க வேண்டும் என்று செய்தாரில்லை.

அவர் அனைத்து தமிழர்களால் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டியவர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

Naradar on October 8, 2009 at 6:26 pm

கள்ளபிரான் அவர்களே

வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு தமிழை வளர்க்கிறோம் என்று வருபவர்கள் எல்லாம் தமிழை வளர்க வருவதில்லை. அதன் மூலம் கிருஸ்துவத்தை எப்படியெல்லாம் பரப்பலாம் என்றே வருகிறார்கள். வேலை முடிந்தவுடன் தன் நாட்டிற்கு திரும்பியவுடன் நல்லவர்க போல் காட்டிக்கொள்ள இந்த மாதிரி மொழி பெயர்ப்புகள் அவர்களுக்கு தேவைபடுகின்றன அவ்வளவே

நாரதர்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. ஜடாயு on October 8, 2009 at 10:18 pm

    ஜி.யு. போப் அவர்களின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதோடு திருவாசகத்தை மொழியாக்கம் செய்தபோது அவரது அணுகுமுறை என்ன, நோக்கங்கள் என்ன என்பதையும் ஆய்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள் முத்துக்குமாரசுவாமி ஐயா. மிக்க நன்றி.

    ஹைதராபாத் நகரில் டேங்க் பண்ட் சாலையில் தியாகராஜ சுவாமிகள், பத்ராசல ராமதாஸ், அன்னமாசாரியர் ஆகிய பக்த கவிகளுக்கு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். பெங்களூரில் பசவேஸ்வரர், கனகதாசர் ஆகிய சைவ, வைணவ குருமார்களின் சிலைகள் உள்ளன..

    தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா? அவரது புனித நினைவைப் போற்றும் வகையில் அரசு ஏதாவது செய்திருக்கிறதா? மாறாக, இன்று தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் உட்பட திராவிடக் கட்சி அரசியல்வாதிகளில் பலர் மாணிக்கவாசகரையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் ஏளனம் செய்தும், கிண்டலடித்தும், அவமத்திதுமே மேடைகளில் பேசி வந்திருக்கிறார்கள்! இன்னும் பேசி வருகிறார்கள்.

    ”மொழிபெயர்த்த” வெள்ளைய மிஷநரிக்கு ராஜ மரியாதை! (அதுவும் தவறான அணுகுமுறையுடனும், பிழைகளுடனும் உள்நோக்கத்துடன்மும் மொழிபெயர்த்தவர்) ஆனால் மூலநூலை எழுதிய சமயக் குரவருக்கு, பேரருளாருக்கு அவமதிப்பு! தமிழர்களின் பகுத்தறிவு உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது.

    ”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள். போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்! சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் – மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.

    ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.

     
  2. ஜடாயு on October 8, 2009 at 10:31 pm

    ஜி.யு.போப் கல்லறை புகைப்படம்:

    http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

    அந்தக் கல்லறைக்கு அருகில் இருக்கும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தத்துவ ஞானியின் கல்லறைகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதையும் அதே புகைப்படக் காரர் படமெடுத்துப் போட்டிருக்கிறார் (பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்).

    தமிழக கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு இஷ்டதெய்வமல்லவா போப்? அதனால், அவரது கல்லறையை நன்கு போற்றிப் பாதுகாக்கிறார்கள். அவர்களது நன்றியுணர்வும், தங்களுக்காக உழைத்தவர்களது நினைவைப் போற்றும் மாண்பும் பாரட்டுக்குரியவை.

     
  3. ந.உமாசங்கர் on October 8, 2009 at 10:46 pm

    ஜடாயு அவ‌ர்க‌ளே,

    த‌ங்க‌ள‌து ப‌ல‌ ப‌டைப்புக‌ளைப் ப‌டித்து ம‌கிழ்ந்திருக்கிறேன்.

    த‌ங்க‌ள‌து கேள்வி:

    தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா?

    என‌து பார்வை:

    த‌ய‌வு செய்து மாணிக்க‌வாச‌க‌ப் பெருமானையும், போப்பையும் ஒப்பிட‌ற்க‌.
    மாணிக்கவாசகப் பெருமான், நாய‌ன்மார்க‌ளில் சேர்க்க‌ப் ப‌டாவிட்டாலும், ச‌ம‌ய‌க் குற‌வ‌ர் நால்வ‌ரில் ஒருவ‌ராக‌, ந‌ம‌து சிவால‌ய‌ங்க‌ள் அனைத்திலும் இறைத்தொண்ட‌ராக‌ ந‌ம‌க்கு அருள்ப‌லித்துக்கொண்டிருப்ப‌வ‌ர். அறுப‌த்துமூவ‌ர் உற்ச‌வ‌ம் எங்கு எடுப்பினும், அங்கெல்லாம் எழுந்த‌ருளுப‌வ‌ர்.
    சிவச் சன்னதியில் ஓதுவார் மூர்த்திகள் திருப்ப‌திக‌ங்க‌ள் பாடும்போதெல்லாம் அவ‌ர்க‌ள‌து நாவில் நர்த்த‌ன‌ம் செய்ப‌வ‌ர்.

    போப்புட‌ன் நோக்குங்கால், ந‌ம‌து “அர‌சு” (அர‌சிய‌லார்) செய்யாத‌து தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத‌ ஐய‌ருக்குச் சிற‌ப்பு செய்யாத‌து, ம‌க‌த்தான‌ துரோக‌மாகும். தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத‌ ஐய‌ர் அவ‌ர்க‌ள் புற‌நானூற்றைக் குப்பைக‌ளாய்க் கிட‌ந்த‌ குவிய‌ல்க‌ளிலிருந்து எடுத்து, இன்றைய‌ எழுத்து வ‌டிவில் ப‌திப்பித்திருக்காவிட்டால், த‌ற்போதைய (தம்மைத் தாமே நியமித்துக்கொண்ட) “த‌மிழின‌த்தின் த‌லைவ‌ர்” க‌ருணாநிதி அவர்க‌ள், புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சியை மெச்சி நீண்ட கட்டுரை எழுதிப் புகழ் அடைந்திருக்க முடியாது. கலைஞர் என்ற அடைமொழியையும் அடைந்திருக்க முடியாது. ஆனால் அவ‌ரோ, த‌மிழ்த்தாத்தாவின் நூற்றாண்டு பிறந்த அன்று தாம் முதல்வராக இருந்தும், தமிழ்த் தாத்தாவின் திருவுருவ‌ப்ப‌ட‌த்துக்குக் கூட‌ மாலையிட‌வில்லை. அண்ணா நூற்றாண்டு கொண்டாடும் அர‌சு, கடந்த ஓராண்டாக “த‌மிழ்த்தாத்தா” என்ற‌ சொல்லைக்கூட‌ உச்ச‌ரிக்க‌வில்லை. ஏனென்றால், வீர‌ம‌ணி, அன்ப‌ழ‌க‌ன், க‌ருணாநிதி உள்ளிட்டோரின் நோபல் பரிசுக் கண்டுபிடிப்பு தமிழ்த்தாத்தா ஒரு தமிழரல்லர் !!! போப்போ ப‌ச்சைத் த‌மிழ‌ர் !!!

     
  4. ஜடாயு on October 8, 2009 at 11:29 pm

    உமாசங்கர் ஐயா, உ.வேசாவுக்கு உரிய மரியாதை செய்யாத அவலத்தையும் கூறியதற்கு நன்றி. கோடிக் கணக்கான தமிழர்கள் நெஞ்சில் தமிழ்த் தாத்தா வாழ்கிறார்.

    கேரளத்தின் கம்யூனிச அரசே ஆதி சங்கரர் பெயரில் காலடியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவியது, அந்த வளாகத்தில் அவரது சிலை கூட உள்ளது என்று நினைக்கிறேன். அப்போதைய கேரள முதல்வர் ஈ,.எம்.எஸ் அந்தத் திறப்பு விழாவில் ஆதிசங்கரரைப் போற்றினார்; கேரளத்தின் தத்துவ ஞானத்தின் அடையாளமாக சங்கரரைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.

    நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நாம் ஆலயத்தில் வணங்கிப் போற்றுகிறோம் தான்! அது மரபு, பாரம்பரியம். ஆனால், அது போதும், பொது இடங்களில் அவர்களது திருவுருவங்கள் அவசியமில்லை என்ற பார்வை சரியானதல்ல என்பது என் தாழ்மையான எண்ணம். ஏனென்றில், இவர்கள் சமயாசாரியர்கள் மட்டுமல்ல, தமிழ்க் கலாசாரத்தின், பண்பாட்டின் தலைசிறந்த அடையாளங்களும் ஆவார்கள்.

    நமது உண்மையான கலாசாரம் வீதிகளிலும் உலா வரவேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் ஆயிரம் ஆண்டு பழைய கோயில்கள் படைத்த ஊர்களில், முச்சந்திகளில் கலையுணர்வும் இல்லாமல், காட்சியழகும் இல்லாமல் கைவிரலை நீட்டிக் கொண்டும், நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கும் அரசியல் இனவெறி கரும்பூதங்கள் தான் இந்த மண்ணின் அடையாளம் என்ற எண்ணம் இங்கு வாழும் இளைய தலைமுறைக்கும், இங்கு பயணிகளாக வரும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்! அதனை நாம் தடுக்க வேண்டும்.

    எனவே இந்தக் காரணம் கருதியாவது, தெய்வீக உன்னதங்கள் தெருவுக்கு வரட்டும்.

     
  5. சீனு on October 9, 2009 at 12:31 am

    //திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//

    நெசம்மாவா? முடியல சாமி. ஆண்டவா! (நீ இருந்தால்) இந்த டேனியலை மன்னிக்கவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. தேவப்ரியா சாலமன் on October 10, 2009 at 7:31 am

    சகோதரரே,

    daniel நீங்கள் எழுதுவதை உணர்ந்து தான் எழுதுகிறீர்களா?

    //திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//

    சர்ச் செய்துள்ள கேவலமானவற்றை ஏன் இங்கே வ்ந்து அருவருப்பாக்கும் வண்ணம் வாந்தி எடுக்கீறீர்கள்.

    திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா- நான் சில குறள்களையும் அதற்கு G.U.Pope உரைகளையும் தருகிறேன்.

    திருவள்ளுவர் கிறிஸ்துவத்தின் அடிப்படைகளை பல குறள்களில் எதிர்க்கிர்றார், ஒன்றில் கூட வைதீகத்தை எதிர்க்கவில்லை, முழுமையாக ஆதரிக்கிறா.

    படியுங்கள். போப் ஆங்கில மொழிபெயர்ப்பை.

    18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.
    If the heaven dry up, neither yearly festivals,
    nor daily worship will be offered in this world, to the celestials.
    19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.
    If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of ‘penitence’.
    If rain fall not, penance and alms-
    deeds will not dwell within this spacious world.
    20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
    ]When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.
    If it be said that the duties of life cannot be discharged by any person without water,
    so without rain there cannot be the flowing of water.
    543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    Learning and virtue of the sages spring,
    From all-controlling sceptre of the king.
    The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
    559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain.
    If the king acts contrary to justice, rain will become
    unseasonable, and the heavens will withhold their showers.
    560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.
    Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie.
    If the guardian (of the country) neglects to guard it,
    the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

    மழை இல்லை என்றால் உலகமே இல்லை என்றவர், அதைவிடவும் நாட்டுக்குக் கேடு அந்தணர்கள் வேதம் ஓதுதலை விடுவது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     
  2. தேவப்ரியா சாலமன் on October 10, 2009 at 7:51 am

    chillsam
    நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்பியது வேறு, நீங்கள் கேட்கும் கேள்வி வேறு; வரலாற்றில் இருந்திருக்க முடியாத ஒரு நபரைக் குறித்து உங்களுக்கு என்ன அக்கறை..?

    இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்;
    அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..!
    பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?

    தேவப்ரியா அவர்களுக்கு, ‘கவுண்டர் க்வெஸ்டியன்’ பண்ணும் எல்லோரும் இயேசு நாதராகி விடமுடியாது, நண்பரே.//

    நண்பரே,

    பைபிளிற்கு நான் ஆதாரம் கேட்கவில்லை.

    கிடைத்துள்ள ஆதாரங்கள் ந்ல்லாம் நடுநிலை பைபிளியல் அறிஞகளால் பைபிளிற்கு எதிராக் உள்ளது என்பது தான். அதைப் பாமரரிடம் மறைத்து சர்ச் எத்தனை காலம் தான் ஏமாற்றும்? நீங்கள் உண்மை கூறுவோரை எத்கனி நாள் பொய்யாக நிந்திப்பீர்.

    இஸ்ரேல் அகழ்வாய்வுகள்
    தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்பது பொய், எபிரேயர் இஸ்ரேலின் ஆதி கானானியரே என்கிறட்து.

    எகிப்திலிருந்து யாத்திரை முழு பொய் என்றும், அந்த காலகட்டத்தில் கானான் எகிப்திற்கு அடிமைப் பட்டு இருந்தது.

    ஜெருசலெம் 7ம் நூற்றாண்டு வரை சிறு கிராமமாகவே இருந்தது. தாவீது, சாலமொன் கதைகள் வெறும் கட்டுகதைகள்.

    ஏசு கன்னிக்கு பிறந்தார், உயிர்த்தெழுந்தார் என்பவை சற்றும் ஆதாரமில்லத புனையலகள்.
    ஏசு- பவுல் தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தனர் -சுவிசேஷப்படி. இவை அனைத்தும் இன்றைய நிலையில் நடுநிலை பைபிளியல் அறிஞர் ஏற்பவை



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1.  க‌ர்மா திய‌ரிக‌ள் மூட‌ ந‌ம்பிக்கை கார‌ண‌மாக‌, என்று தாங்க‌ள் கூறுவ‌து, தாங்க‌ள் க‌ர்ம‌வினை ப‌ற்றி ச‌ரியாக அறிய‌வில்லை என்ற‌ க‌ருத்தை நிலை நிறுத்துகிற‌து. ம‌னித‌ இய‌ல்பு த‌ன‌க்குப் புரியாத‌தை ஒதுக்குவ‌தும் அல்ல‌து ஒடுக்குவ‌துமே. க‌ர்ம‌வினை ப‌ற்றி வ‌ள்ளுவ‌ரின் க‌ருத்துக்க‌ளைப் ப‌டித்துப் பாருங்க‌ள்.

    இந்து ம‌த‌ம் நீங்க‌ள் கூறுவ‌து போல் “இரு நம்பிக்கை” கொண்ட‌த‌ல்ல. ஓர் ஆராய்ச்சி போல பலவிதமான கருத்துக்களை சர்வ சுதந்திரமாக எல்லா ஞானியரும் கூற அதிலிருந்து அவரவர் சிற்றறிவுக்கு எது எட்டுகிறதோ, அதை நூல் போல் பிடித்து மேலேற, பிறவிப் பெருங்கடலிலிருந்து ஈடேற வழி செய்கிறது. கர்ம வினைகள் பற்றி பூர்வ மீமாம்சமும், பகவத் கீதை உள்ளிட்டவையும் போதிப்பதைப் படித்தீர்ப்பீர்களானால், “மூடநம்பிக்கை” என்ற கடுமையான சொல்லைப் பயன்படுத்தியிருக்கமாட்டீர்கள். க‌டும் சொற்க‌ள் அறியாமையாலும், இய‌லாமையாலும் வ‌ருகின்ற‌ன‌. சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் எதிராளியில் க‌டும் சொற்க‌ளாலும் வ‌ருகின்ற‌ன‌.
    நான் இதுகாறும் க‌டும் சொல்லேதும் கூற‌வில்லை.
    ப‌க்தி மார்க்க‌ம், க‌ர்ம‌ மார்க்க‌ம், ஞான‌ மார்க்க‌ம் என்று வெவ்வேறு வித‌ வ‌ழிக‌ளை இந்து ம‌த‌ம் உள்ளாட‌க்கிய‌து. It is an all-inclusive path. Depending on one’s abilitiies one can follow what appeals to one.

    இவ‌ற்றில் ஒன்றில் ஒன்று ச‌ளைத்த‌ல்ல‌. ஞான‌மார்க்க‌த்தில் செல்பவ‌‌ரும், பக்தி மார்க்கத்தில் செல்பவரும், கர்ம மார்க்கத்தில் செல்பவரும், அதே பேற்றையே அடைகின்றனர். இம்மதம் நான் மட்டுமே ஜீவஒளி என்று எப்போதும் சொல்வதில்லை.

    ந.உமாசங்கர் on October 10, 2009 at 4:14 pm

    அன்புள்ள glady அவர்களே,

    தங்கள் கூற்று:

    ///
    திருவாசகம் மாத்திரமா, திருக்குறள் போன்ற பொக்கிஷங்களும் அயல்நாட்டினர் வந்த பிறகுதானே தமிழர்கள் கவனத்துக்கு வந்தது..?
    ///

    அடடா, ஏற்கெனவே பலர் சொல்லிவந்திருக்கிறார்கள், தாமஸ்தான் தமிழர்களுக்குச் சிந்திக்கவே கற்றுக் கொடுத்ததாக தேவசஹாயம் உள்ளிட்டோர் “பிரசங்கம்” செய்வதாக. நீங்கள் இங்கேயே ஆரம்பித்துவிட்டீர்கள்.

    அதெப்படி ஐயா, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர்கள், பல நூற்றாண்டுகளாக, திருவாசகம், திருக்குறள் முத்லானவற்றை அறியாதவர்களாக நீங்கள் “கண்டுபிடித்திருக்கிறீர்கள்?” வியக்கத் தக்க வகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர் தமது இலக்கியத்தையே அறியாத்வர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்கே அடுக்குமா?

    பொய்யையே சொல்லிவழக்கப் படுத்துதல் கூடாது என்று இதற்காகத்தான் சொல்லித் தருகிறார்கள். வரிசையாகச் சொல்லி வரும் போது இப்படித்தான் யாருக்கும் அடுக்காத அபாண்டத்தைச் சொல்லிச் சிக்க வேண்டி வரும்.

    வாஸ்கோடகாமா வருவதற்கு முன்னர் கேரளாவுக்கே வராதவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக அங்கே இருப்பதாகச் சொல்லும் விந்தை போன்றதே இந்தப் பொய்யும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ந.உமாசங்கர் on October 10, 2009 at 4:45 pm

அன்புள்ள glady அவர்களே,

தங்கள் கூற்று:

///

அதாவது மறுபிறவி கொள்கை வடக்கிலிருந்து வந்து தெற்கைக் கவர்ந்தது என்றால் ஒரே பிறப்பு (தெய்வத்தோடிணைந்த தவ வாழ்க்கையினால் முக்தியடைய இயலும்) என்ற தென்னகக் கொள்கை வடக்கைக் கவர்ந்தது;

//

ஆரியம்‍ .. திராவிடம் , வடக்கு … தெற்கு,
எத்தனை விதமாகப் பிரித்தாளும் சதிசெய்வீர்கள் ?
அத்த‌னையும் க‌ட்டுக் க‌தை, கட்டைப் பிரித்துக் குச்சியை உடைக்கும் தொழில்.
நீங்க‌ளே அப்ப‌டி உடைப‌ட்ட‌ ஒரு குச்சிதான் என்ப‌து போக‌ப் போக‌ப் புரிந்துகொள்வீர்க‌ள்.

மேற்கு, கிழ‌க்கை ஆள‌வும், கொள்ளை அடிக்க‌வும் செய்யும் த‌ந்திர‌மே இது.
21 ஆம் நூற்றாண்டின் பிர‌க‌ட‌ன‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ கொள்கை, இல‌க்கு எல்லாமே
“ச‌ர்ச்சை விதை, ஆன்மாவை அறுவ‌டை செய்” என்ப‌துதான்.

இங்குள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் உறையும் இறை மூர்த்திக‌ளை, சாத்தான் என்று தாங்க‌ள் வ‌ர்ணிக்கும்போது, த‌ங்க‌ளை ஏவி விட்ட‌ மேற்க‌த்திய‌ எத்தர்களின் உள்ள‌ம் முழுதும் நிறைந்திருக்கும் வ‌ன்ம‌மும், குள்ள‌ந‌ரித்த‌ன‌மும், ஆளுகை வெறியும் வெளிப்ப‌டுகிற‌து. எமது கண்ணை எமது கையாலேயே குத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். யாம் முன்ன‌மே சொன்ன‌துபோல‌, க‌டும் சொற்க‌ள் அறியாமையாலும், இய‌லாமையாலும் வ‌ருகின்ற‌ன‌. தாங்க‌ள் ஏவ‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தை நீங்க‌ள் இன்னமும் அறிய‌வில்லை. தேவப் பிரியா அவர்களைப் போல உண்மையை நீங்களும் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 
  1. திருச்சிக் காரன் on October 12, 2009 at 5:00 pm

    வள்ளுவர் பொதுவானவர் தான். வள்ளுவரின் திருக்குறள் உலகப் பொதுமறை தான். வள்ளுவர் உண்மையை மட்டுமே எழுதுவார். பொய்யா மொழிப் புலவரின் உண்மை கருத்துக்களைக் கேளுங்கள்.

    “பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும், மற்று
    நிலையாமை காணப் படும்”

    ( பற்றும் அற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும். இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வந்து நிலையாமை காணப் படும் )

    இதை அறிந்தும் அறியாதவர் போல பிறப்பு இறப்புக் கொள்கை வடக்கிலிரிந்து வந்ததாக கதை கட்ட நினைக்கும் சுவிசேஷ சூழ்ச்சிகள் பலிக்குமா?

     
  2. ந.உமாசங்கர் on October 12, 2009 at 5:10 pm

    கள்ளபிரான் அவர்களே

    நான் கூறியது சைவ மரபைப் பற்றி. வீரசைவமும், சைவசித்தாந்தமும் வேறுபடுமேயானாலும், இவை சைவமரபின் உள்ளடக்கமே. தங்களுக்குத் தெரிந்து, எமக்குத் தெரியாதது எது இருப்பினும் தெளிவுசெய்தால் தெரிந்து கொள்வோம். “எல்லாம் எமக்குத் தெரியும்” என்பது என் கருத்தல்ல. பிற‌ரை எழுத‌ச்சொல்வ‌தைக்காட்டிலும் தாங்க‌ளே எழுத‌லாமே? தங்கள் அறிவு பிறருக்கும் பயன் தரட்டுமே.

    த‌மிழக அரசு (பிற‌ மாநில‌ அர‌சுக‌ளும் கூட) ஹிந்து அறநிலைய‌த் துறை மூல‌ம் திருக்கோவில்க‌ளையும் திருக்கோவில் சொத்துக்க‌ளையும் நிர்வ‌கிப்ப‌தால், அந்த‌ நிதியிலிருந்தே, அத்துறை மூல‌மாக‌வே இத்த‌கு ப‌திப்புக்க‌ளைச் செய்ய‌லாம். அத‌னால், பிற‌ச‌ம‌ய‌த்தார் கோருவ‌து த‌விர்க்க‌ப் ப‌ட‌லாம் அல்ல‌து அது குறித்து எந்த‌க் க‌வ‌லையும் வேண்டாம். அத்துறை மூல‌மாக‌ இசைப்ப‌ள்ளிக‌ளும், நாட்டிய‌ப்ப‌ள்ளிக‌ளும் ஏற்க‌ன‌வே ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஸ்த‌ல‌வ‌ர‌லாறு முத‌லிய‌ நூல்க‌ள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ப‌திப்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ன. அதுபோல‌ இதுவும் ந‌ட‌க்க‌லாம்.

     
  3. தேவப்ரியா சாலமன் on October 12, 2009 at 6:11 pm

    திருவள்ளுவமாலை

    ‘செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
    பொய்யா மொழிக்கும் பொருளொன்றே–செய்யா
    அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
    யிதற்குரிய ரல்லாதா ரில்.’

    -வெள்ளி வீதியார்

    ‘செய்யா மொழி- வேதங்கள்( எழுதப் படாதது)
    பொய்யா மொழி- திருக்குறள்.

    வேதங்கள் கூறுவதும் திருவள்ளுவர் உரைத்த திருக்குறள்
    கூறுவதும் ஒன்றே. வேதங்கள் அந்தணர் மட்டுமே பயன்படுத்த; திருக்குறள் எல்லா மக்களும் படித்து கடைப்பிடிக்க ஆனதாகும்.

    ———————————
    வேதங்கள் பாணினியால் வ.கா.மு. 5ம் நூற்றாண்டில் சமஸ்க்ருத இலக்கணம் வகுக்கப்பட்டது. அதற்கு சில பல நூற்றாண்டின் முன் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணமும்- வியாசரின் மஹாபாரதமும் அடக்கப் பட்டன.

    ஆனால் பாணினிக்கு 1000 ஆண்டுகள் முன்பே வரையப்பட்டிருந்த வேதங்கள் பாணினி சமஸ்க்ருத இலக்கணம வரம்பில் வராது. அதன் சொல் பகுப்புமுறைகள் முன்பிருந்த நடை. எனவே வேதங்கள் எழுதப்படல் கூடாது என்பது வழக்கு. எனவே அவை வடமொழியில் ஸ்ருதி- கேட்கப் படுவது எனப்படுவது எனப் படும்.

    சங்க இலக்கியத்தில் வேதங்களை – வேதம். நான்மறை, மறை, புலம், ஓத்து, ஆரங்கம், கேள்வி, எழுதாக் கற்பு, எனப் பல பெயர்களில் வழங்கப் பட்டுள்ளது

    ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதுஆகி,
    வேதப்பொருளாய், மிகவிளங்கித், தீதுஅற்றோர்
    உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளமுருக்குமே
    வள்ளுவர் வாய்மொழி மாண்பு. 24
    -மாங்குடி மருதனார்.

    படிப்போர்ககு எளிதாக, அரிய கருத்துக்களை-வேதங்கள் கூறும் நற்பண்புகளை மிக எளிதாக குற்றமற்றோர் உள்ளங்களில் படிக்கும் போது உள்ளத்தை உருக வைக்கும்வகையில் எழுதப்பட்டதே வள்ளுவர் எழுதியதின் சிறப்பு.

    Thirukural is dated to around 250CE, By then Tamilnadu has been taken over by Kalapirar, and lively Sangam Literature gave away to Ethical, Thirukural was the first.

    Thiruvalluvar was the first, he avoided naming any God directly in Kadavul Vazthu, but has used Vedic Principles all through out.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 C.N.Muthukumaraswamy on October 12, 2009 at 6:39 pm

நண்பர் கள்ளப்பிரான் அவர்கள் ஒரு மறுமொழியில் வீரசைவமும் சைவசித்தாந்தமும் ஒன்றா என முத்துக்குமாரசுவாமி விளக்க வேண்டும் என எழுதியிருந்தார். மகிழ்ச்சிதான்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒன்றுதான். காரணம் அதன் வரலாற்றுப் பின்னணி.
திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்தவர் குருநமச்சிவாய மூர்த்திகள். அவருடைய மாணாக்கர்களில் ஒருவர் சிவப்பிரகாசர். விஜயநகரமன்னன் விருப்பாச்சிராயர் என்பவரது ஆட்சிக்கு உடபட்டதாக தில்லை, குடந்தை முதலிய பகுதிக்ள் அக்காலத்தில் இருந்ந்து வந்தன. இப்பகுதியை வேலூரில் இருந்த இலிங்க்ண்ணபத்தர் என்னும் வீரசைவர் ஆட்சிக்கீழ் இருந்தது. அவர் கன்னடமொழியினர். அவருடைய குரு சித்தராமதேவ சுவாமிகள் என்ற வீரசைவ குரு. இந்த இலிங்கண்ணபத்தர் இலிங்கதாரணம்(வீரசைவச்சின்னம்) இல்லாதவர்களிடம்முகங்கூடக் கொடுத்துப் பேசமாட்டார். இந்தக்காலத்தில், தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோவிலின் வ்ழிபாடுகளில் வேற்றுச் சமயத்தவரால் பெருந்தொல்லைகள் நேரிட்டது. தில்லைவழந்தணர்கள் அரசனைச் சந்தித்துக் குறை தீர்த்துக் கொள்ள இயலவில்லை. இறைவன் ஆணைப்படி தில்லைவாழந்தணர்கள் சிவப்பிரகாசரிடம் வந்து உதவி கேட்டனர். குருவின் அனுமதியின்பேரில் சிவப்பிரகாசர் வீர்சைவமதம் தழுவி இலிங்கதாரணம் செய்துகொண்டு, இலிங்கண்ணனைச் சந்தித்து நிலமையைச் சீர் செய்தார். குருவின் ஆணைப்படித் துறையூரில் வீரசைவமடம் அமைத்து சமயப்பணி செய்து வந்தார். துறையூர் சிவப்பிரகாசர்மடமே தமிழ்நாட்டில் முதல் வீரசைவமடம். இவர் வழியாகத்தான் ஏனைய வீரசைவ மடங்களாகிய பொம்மையபுரமடம், பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் மடம் முதலாயின தோன்றின. தமிழக வீரசைவர்கள் சைவசித்தாந்திகளே. நால்வர் பெருமக்களையே ஆசாரியர்களாகக் கொண்டனர். வீரசைவரான.கற்பனைக் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நால்வர் நான்மணிமாலை , சைவசமய குரவர்களைப் போற்றும் அற்புதமானநூல்.

வீரசைவர்களுக்கு அவர்கள் தரித்திருக்கும் இலிங்கமே வழிபடு கடவுள். வீரசைவர்களுக்கு அங்கலிங்க வழிபாடும் ஜங்கம (அடியார்) வழிபாடும் இன்றியமையாக் கடமைகள். தாயின் கருவில் இருக்கும்போதே தாயின் கையிலோ அல்லது கழுத்திலோ ஒரு இலிங்கத்தைக் கட்டி விடுவர். குழந்தை பிறந்தவுடன் அந்தலிங்கத்தைக் குழ்ந்தைக்கு அணிந்துவிடுவர். இது அங்க இலிங்கம் எனப்படும். அங்கம் – உடல். இலிங்க தாரணம் செய்து கொண்டவர்களிடம் தொழில் வேறுபாடு உண்டே அன்றிச் சாதி வேறுபாடு இல்லை. இதைப் பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
என்னுடைய நண்பர் ஒருவர். இலிங்க தாரணம் உடையவர். தார்வார் பல்கலைக் கழகத்துக்குத் தேர்வாளராகச் சென்றிருந்தார். அங்கு முடி திருத்தகம் ஒன்றுக்கு சென்று சவரம் செய்து கொண்டார். முடிதிருத்திக் கொள்ளும் முன் சட்டையை கழற்றி ஆணியில் மாட்டினார். முடிதிருத்தும் வேலை முடிந்தவுடன், முடிதிருத்தியவர் இந்த நண்பரைத் தம் இல்லத்திற்கு உணவருந்த அழைத்தாராம். ஏனெனில் அவரும் ஒரு இலிங்கதாரண வீர்சைவர். இலிங்கதாரணமுடையவர் ஜங்கமர் எனப்படுவார். உணவளித்து வழிபடுதற்கு உரியவர்.

எங்கள் ஊரில் ஜங்கமர் எனும் ஓரினத்தவர்கள் உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் கட்டிட வேலை செய்யும் உழைப்பாளிகள். தெலுங்கு மொழி பேசுகிறார்கள். சதாசிவனே அவர்கள் வழிபடும் தெய்வம். அவர்களுடைய திருமணத்துக்கு முந்தி மணமக்களுக்கு இலிங்கதாரணம் நடைபெறும். இது ஒரு முக்கியமான திருமணச் சடங்கு. ஒருகாலத்தில் சைவ உணவுப் பழக்கம் உடையராக இருந்த இவர்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டாலும் இலிங்கதாரணத்தை மறக்கவில்லை.

Theologyயில் வீரசைவம் ஐக்கியவாதசைவம் என்ற பிரிவைச் சேர்ந்தது. உமாபதிசிவம் அவர்களின் சங்கற்ப நிராகரணத்தில் இக் கொள்கை மறுக்கப்படுகின்றது. இது வெறும் கொள்கை வேறுபாடு. சமய வேறுபாடு அல்ல. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அருகில் கொற்றவன்குடியில் உள்ள உமாபதி சிவாச்சாரியாரின் திருமடம் துறையூர் வீரசைவ ஆதீனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருப்பது அறியத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தேவப்ரியா சாலமன் on October 13, 2009 at 12:37 pm

The Christians has been so vocal that These Foriegn Padris has done great service to Tamil and Sanskrit by Translating (Actually Mistranslating) them.

The History behind is a great Cunning one.’

The Germans started translating in late 18th Century. After seeing that God Krishna Story had many features that have been adopted in New Testament Gospels and the Rejected Gospels. The Missionaries started saying that Christianity entered in to India in 3rd Cen. by Manichaeism and the gospel stories were incorporated in Mahabaratha and Bagavatha, but as the Proof started and Dating of Mahabaratha and Bagavatha to earlier than 600 BCE, this was stopped.

Later When Sir.Raja Ram Mohan Rai, who knew Sanskrit, learnt Greek, Hebrew and Latin and took on writing about truths of Christianity, the Church felt by converting RamMohan they can get total India converted.

That was the time British Baptist Church has entered India as Seerampoore Missionary and One Rev. ADAMS, British Pastor known for great Biblical Knowledge deputed to Shaddow RamMohan and they discussed on various subjects and the RESULT.- Rev.ADAMS WAS CONVERTED TO BRahmo Samaj.

British East India Company and British Govt and Church felt that knowledge of Hinduism is a must and that Translation was must.

A Colonel.Boden, who had worked in India and Plundered huge wealth, after retirement back in London set up a Trust in Oxford University for Sanskrit. Brtish Church -selected a Non British Citizen-Non British Baptist Christian Maxmuller to do the Veda Translation.
Swami Dayananda and others took on his mis translations.

A Great book- Maxmuller -a Masquadrer by Brahmm datt Bharti is a Thouroughly researched one with a copy of Colonel Boden will etc.,

How did the Bristish Missionaries view these Translaters –

“I am of the special Obligation to the volume of Monier Williams, Mitchell, Hopkin, Wilson,… Caldwell, Masmuller… and others too numerous to mention.”
Page-196, The Arsenal of Christian Soldiers in India; by Rev.J.F.Stacker.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

B.பாஸ்கர். on October 20, 2009 at 3:55 pm

வணக்கம்,

//டார்வினியம் ஒரு பொய். நம்ம தேவப்ரியவை போல அவரும் தன்னை மேதாவி என காட்டிக்கொள்ள செய்த ஒரு பாதக செயல்.
வேதமே (bible) சத்தியம்.///

ஆமாம், டார்வனியம் பொய், உலகம் உருண்டை என்று கலிலியோ சொன்னது பொய், புவி ஈர்ப்பு விசை பற்றி நியூடன் சொன்னது பொய், இன்னும் எந்த அறிவுள்ள சுய சிந்தனை உள்ள ஆராச்சியாளர்கள் எது சொன்னாலும் அது பொய், பொய், பொய்தான்,

எதுவாக இருப்பினும் இயேசு சொன்னதாக சர்ச்சில் ஒரு பாதிரியார் சொல்ல வேண்டும். அல்லது பைபிளிலாவது இருக்கவேண்டும். மற்றபடி மனிதன் கர்த்தர் சொன்னதை மட்டுமே செய்ய வேண்டும், சுயமாக சிந்திக்கக் கூடாது, அப்படி சிந்தித்து சொன்னால் தேவப்ரியா மற்றும் டார்வின் போல பாதக செயலாகி பாவியாகி (ஏற்க்கனவே ஆதாமால் பாவியாகிய ) எல்லோரும் கர்த்தரின் கோபத்துக்கு ஆளாகி விடுவோம். அதனால் இயேசுவின் வருகை வேறு தள்ளிப் போடப்படும், பிறகு எப்படி நாம் எல்லோரும் சொர்க்க வாழ்க்கை வாழ்வது? போங்கப்பா அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து புளித்து விட்டது.

B.பாஸ்கர். on October 20, 2009 at 9:20 pm

வணக்கம்.

//வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் ??? பலர் எழுதுவதை கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுதுவதாக தேவிபிரியா கூறி சந்தோஷப்பட்டுக்கொள்கிறார். இதேபோல் இந்துக்களாக இருந்த பகுத்தறிவுவாதிகள் இந்து மதத்தை பற்றி பல விமர்சனங்கள் செய்திருக்கின்றனர்.//

இந்து தர்மத்தை பற்றி விமர்சனம் செய்யும் பகுத்தறிவு வாதிகள் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் அத்தர்மத்தின் அடிப்படை புரியாமல் பேசுகிறார்கள், தேவப்ரியா உதாரணம் காட்டும் வெள்ளைக்கார கிறிஸ்துவர்களோ ஆதாரத்தோடு பேசுகிறார்கள். உண்மையில் நாத்திகம் என்பதுதான் பகுத்தறிவு என்று நம்பிய பல பகுத்தறிவு செம்மல்கள் இப்போது கோவில் வாசலில் உருண்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்து தர்மத்தை கேலி செய்தவர்கள் என்பதுதான் இங்கே உச்சமான உண்மை.

  1. வள்ளுவன் on October 20, 2009 at 9:29 pm

    தோழர் அசோக் குமார் கணேசன் அவர்களே,
    நீங்கள் மொக்கை போடும்போதே நினைத்தேன் நீங்கள் ஒரு இந்து இல்லை என்று!
    இராமயணத்தில், குரங்குகள் எப்படி பேசின என்று கேட்கும் கிறிஸ்தவர்களே! ஒரு பாம்பு சொல்வதை கேட்டு ‘பாவத்தை’ செய்த ‘உலகின் முதல் மனிதர்கள்’ இருக்கும்போது, பாம்பே பேசும்போது, குரங்குகள் பேசமுடியாதா??
    மேலும், ஆதாமும் ஏவாளும் ‘பாவம்’ செய்தனர் என்பதற்காக, ஒட்டுமொத்த மனித இனமே ‘பாவிகள்’ என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?
    மேலும், ஜான் 3:16- ஆண்டவர் உலகை நேசித்தால் அவரது ஒரே மகனை தந்தார்!
    இறைவனுக்கு ஒரு மகன்தானா? ஏன் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டு விட்டாரா?
    மேலும், பிரம்மதேவன் சரஸ்வதியை படைத்து தனது மனைவி ஆக்கிகொண்டான் என்று சொல்லும்போது, எப்படி தன பெண்ணையே மனைவி ஆக்கிக்கொண்டன் என்று கேட்கும் உங்கள் ‘பகுத்தறிவு’ ஆதாம் மற்றும் ஏவாளின் பிள்ளை எப்படி, யாருடன் சேர்ந்து மானுட இனத்தை பெருக்கினான் என்று சற்று சொல்கிறீர்களா??

    திரு. ஜோசப் டேனியல் அவர்களே,
    மொக்கை!
    உம்னையில் ரிக் வேத புருஷ சூக்தம் கூறுவது என்னவென்றால்:-
    பிராமணர்கள் ஆசிரியர்கள், அமைச்சர்கள், வித்வான்கள் போன்ற
    தொழிலை செய்பவர்கள். அவர்களுக்கு வாய் தான் முக்கியம். ஒரு ஆசிரியர் ஊமையாக இருந்தால் எப்படி இருக்கும்?
    அடுத்து, க்ஷத்ரியர்கள் அரசர்கள், போர்வீரர்கள் போன்ற தொழிலை பார்ப்பவர்கள். எனவே அவர்களுக்கு தோள்கள் தான் முக்கியம். எனவே, அவர்கள் இறைவனின் தோள்களை போல சித்தரிக்கப்படுகிறார்கள்!
    அடுத்து, வைஷ்யர்கள் வியாபாரம், கூட்டுறவு போன்ற தொழிலை செய்பவர்கள். அவர்கள்தான் நாட்டிற்கு உணவு வழங்குபவர்கள். எனவே அவர்கள் இறைவனின் வயிறாகவும், தொடயாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இன்றும், தலைசிறந்த வங்கிகளில் ஒன்றான கரூர் வைஷ்யா பேங்க் (Karur Vysya Bank) நினைத்துப்பாருங்கள்…
    இப்பொழுது, இம்மூன்று வர்க்கத்தினரையும் தாங்கி நிற்பவர்கள் சூத்திரர்கள்.. நாம் நிக்கும்போது, நம் பாதங்களே நம்மை தாங்கிகின்றன! அதேபோல சமுதாயத்தை வேறாக தாங்குபவர்களே சூத்திரர்கள்!! இவர்கள் விவசாயம், விலங்குகளை கவனித்தல் போன்ற வேலைகளை செய்பவர்கள்..
    ஒன்று யோசித்துப்பாருங்கள்.. ஒரு மனிதனுக்கு வாய், தோள், தொடை, வயறு எல்லாம் இருந்து நொண்டியாக இருந்தால் என்ன பயன்? அதேபோல மற்ற எல்லாம் இருந்து ஊமையை இருந்தாலும் அதே ஸ்ரமம்தான்!
    ஆக, நான்கு வர்ணத்தினரும் சமுதாயத்திற்கு தேவையானவரே. யாரையும், இறைவன் ஒதுக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்!
    யாரையும் கொல்லசொல்லி எங்கள் இறைவன் எங்களை அனுப்பவில்லை. அது உங்களைப்போல பாலைவன மதங்களுக்கே உரியது!!
    சொல்லப்போனால், மிகவும் கொடுத்துவைத்தவர்கள் சூத்திரர்களே! ஏனெனில், எல்ல பக்தர்களும் விரும்பும் இறைவனடியிலிருந்து இவர்கள் தோன்றியதால்!

    //ஏன் அப்படியே அசுரர்களை தேவர்கள் ஒரே போரில் ஒண்ணுமில்லாம செஞ்சிருக்கலாமே, ஏன் இன்ஸ்டால்மென்ட் மாதிரி ஒவ்வொரு பிறவியாக வரணும்//

    உலகத்தின் ஒரே ஒளி இயேசு கிறிஸ்து என்று நீங்கள் சொல்கிறீர்களே, அப்படியானால் ஏன் உலகத்தை படைக்கும்போதே அனைவரையும் கிறிஸ்தவர்களாக படைத்திருக்கக்கூடாது ? இல்லை, முதலில் ஆபிரகாமை அனுப்புவதற்கு பதிலாக, ஏன் எசுவயே அனுப்பியிருக்கக்கூடாது? உங்கள் ஆண்டவரின் வங்கியில் இன்ச்டல்ல்மேன்ட் இல்லியோ?? ஆதாம் ஏவாள் (அதாவது மனிதஇனம் தோன்றியே 6000-7000 ஆண்டுகள்தான் ஆகிறது என்று உங்கள் விவிலியம் சொல்கிறது. ஆனால், மனித இனம் குறைந்தபட்சம் 45,000-70,000 வருடங்களுக்கு முன்பே தோன்றியது என்று அறிவியல் சொல்கிறதே! அப்போ, கவுண்டமணி சொல்வதுபோல “ஹ ஹ ஹ, ஆதமுக்கு முன்னால இருந்ததெல்லாம் பண்ணீங்களா?”.
    ஆனால், புராணங்கள் மனித இனம் உருவாகி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்று கூறுகிறது. இது இன்றுவேண்டும் ஆனால் உண்மையில்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மை ஆனாலும் ஆகலாம். ஒரு காலகட்டத்தில், இந்து மதத்தை வெறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இன்று வேத மதம் பருவுவதே இதற்க்கு அத்தாட்சி! ஒரு காலத்தில், மறுபிறப்பு என்று சொன்னால் சிரித்த அமெரிக்கர்களில், 25% இன்று மறுபிறப்பை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றனர்!
    இயேசுவை நம்புபவன் எவ்வளவு அயோக்கியன் ஆனாலும், அவனுக்கு சொர்க்கம் உண்டு!
    ஆனால், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவன் எவ்வளவு நல்லவனாலும் அவன் நிரந்தர நரகத்தீயில் எரிக்கப்படுவான்! இது உங்கள் ஆராய்ச்சி!
    நீங்கள் சொல்வது எப்படி என்றால், ஒரு மாணவன் படிக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை, இயேசுவை நம்பினால் பாஸ் ஆகிவிடலாம் என்பது போல உள்ளது!

    ஆனால், எங்கள் இறைவன் உண்மையில் படிப்பவனுக்கே உயர்வு என்று கூறுகிறான் கீதையில் கண்ணபிரான்!

    பக்தி பண்ணி பிழைக்க சொன்னான்;
    பலனை எதிர்பாராமல் உழைக்க சொன்னான். – பாரதியார் பாட்டு!

    தேவர்களும், அசுரர்களும் அண்ணன் தம்பிகளே. காஷ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் தைத்யர்கள் (அசுரர்கள்). காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் ஆதித்யர்கள் (தேவர்கள்). நீங்கள் உளரியதுபோல, அவர்கள் ஆரியர்கள், இவர்கள் திராவிடர்கள் என்று சொல்வது, வடிவேலு சொல்வதைப்போல, “சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு”.

    இனிமேலாவது திருந்துங்கப்பா!
    அடுத்தவன் அழுக்காயிருக்கான் நு சொல்றதுக்கு முன்னாடி, நீங்க குளிச்சீங்களா நு பாருங்க!

     
  2. வள்ளுவன் on October 20, 2009 at 9:34 pm

    //இயேசுவின் அன்பு போதனைகளை காற்றில் பறக்கவிட்டதால் தான் இன்றைக்கு இந்த so called கிறிஸ்தவ நாடுகள் சீர்கெட்டு நாசமாய் போய்க்கொண்டிருக்கின்றன‌.//

    —————————–

    Dear Joseph Daniel,
    many Christians have a thinking that only Christianity has improved and developed so many nations. Well Sir, how did Japan develop? Is Japan a Christian nation? Alright then, Christianity is rapidly spreading in India, but still our motherland is looked down in the society. The only respect India has is due to its great spiritual and cultural Hindu heritage. Please remember that!

     
  3. வள்ளுவன் on October 20, 2009 at 9:40 pm

    //எந்த ஒரு நபரும் புண்படும்படியாக பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. அப்படி கிறிஸ்தவர்கள் பேசுவதும் ஏற்கத்தக்கது அல்ல. கிறிஸ்துவர்களை இழிவுபடுத்தும்படியாக பல நண்பர்கள் இங்கு எழுதுவதால் தான் எனக்கும் இந்து மதத்தில் உள்ள நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் எண்ணம் வருகிறது, இதில் மறைக்க ஒன்றும் இல்லை. வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் ??? பலர் எழுதுவதை கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுதுவதாக தேவிபிரியா கூறி சந்தோஷப்பட்டுக்கொள்கிறார். இதேபோல் இந்துக்களாக இருந்த பகுத்தறிவுவாதிகள் இந்து மதத்தை பற்றி பல விமர்சனங்கள் செய்திருக்கின்றனர். அதையெல்லாம் தாண்டி தான் நீங்கள் இந்து மதத்தில் பற்று கொண்டுள்ளீர்கள் அதே போல மேலை நாட்டு மேதாவிகள் கிறிஸ்தவத்தை பற்றி விமர்சனங்கள் வைப்பதால் நாங்கள் எங்களுடைய நம்பிக்கையை விட்டுவிட வேண்டிய முகாந்திரம் இல்லை.//

    ————————-

    Thanks Mr.Joseph Daniel. If this is so, why do you quote Periyar and his followers as your heroes. It is not only you people, but the Muslims too. The only thing I ask is:- “Brother, do you want me to quote from people like Voltaire?”. A Voltaire is nearly equal to a 1000 Periyar. He fearlessly condemned the atrocities of Vatican.
    In terms of religious texts, Voltaire’s opinion of the Bible was mixed. This did not hinder his religious practice, however, though it did gain him somewhat of a bad reputation in the Catholic Church. It may be noted that Voltaire was indeed seen as somewhat of a nuisance to many Catholics. Wolfgang Amadeus Mozart wrote to his father the year of Voltaire’s death, saying, “The arch-scoundrel Voltaire has finally kicked the bucket….”
    http://en.wikipedia.org/wiki/Voltaire …

    Please remember, everybody is criticized for something or the other. Even the greatest person, Dr.Abdul Kalam is criticized by some people. The way you use Periyar and Karunanidhi is as if they were Gods or so. Those people can be easily refuted with evidence from Tamil texts themselves!

     
  4. அன்பரசன் on October 20, 2009 at 10:56 pm

    //ஆதாமும், ஏவாளும், தன் முடிவை தானே எடுக்கும் மனிதர்கள். ரோபோக்கள் அல்ல. சாத்தானின் பேச்சைக்கேட்டது அவர்கள் முட்டாள்தனம்.. //

    அந்த முட்டாள்த்தனத்தை ஆதாமும் ஏவாளும் செய்யப்போகிறார்கள் என்பது யாஹ்வேக்கு முன்பே தெரியுமா தெரியாதா?

    தெரிந்திருந்தால், ஏன் மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களை காக்கவில்லை?

    தெரியாது என்றால், முக்காலமும் உணர முடியாத யாஹ்வே எப்படி இறைவனாக இருக்கமுடியும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

B.பாஸ்கர். on October 22, 2009 at 4:18 am

வணக்கம்’

////////Ashok kumar Ganesan
19 October 2009 at 8:20 pm
திரு. ராம்,
டார்வினியம் ஒரு பொய். நம்ம தேவப்ரியவை போல அவரும் தன்னை மேதாவி என காட்டிக்கொள்ள செய்த ஒரு பாதக செயல்.
வேதமே (bible) சத்தியம்.////

———–மார்ச்07,2009. விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் கொள்கைகள் கிறிஸ்தவ விசுவாசத்தோடு ஒத்துப் போகக்கூடியதாக இருக்கின்றது என்று வத்திக்கான் கருத்தரங்கில் கூறப்பட்டது.————-

……….இக்கருத்தரங்கு பற்றிப் பேசிய திருப்பீட விசுவாசக் காப்புப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா, படைப்பு, பரிணாம வளர்ச்சி பற்றி எவ்வளவுதான் கொண்டிருந்தாலும் இறுதியில் அனைத்தையும் படைத்தவர் இறைவனே என்பதை நாம் நம்புகிறோம் என்றார்………………..
http://www.radiovaticana.org/IN3/Articolo.asp?c=271097

என்னதான் குப்புற விழுந்தாலும் எங்கள் மீசையில் மண் ஒட்டாது என்கிறார்களா?

Arokiya on October 21, 2009 at 3:37 pm

கிறிஸ்துவ நண்பர்களே,

மனம் திருந்துங்கள், உண்மை உணருங்கள், உங்கள் சொந்த மூளையை உபயோகிக்கும் உரிமை கூட உங்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வாருங்கள். மூளையை மழுங்கச் செயும் பல கருத்துக்கள் மத போதகர்களால் உங்கள் மேல் திணிக்கப் பட்டுள்ளது, ஒரு கணம் சிந்தியுங்கள். சுற்று நடப்பதைக் கூர்ந்து பாருங்கள்.

வாடிகன் இந்தியாவையும், ஆப்ரிகாவையும் நம்பி உள்ளது – செய்தி.

விபரம்: உலகம் முழுவதும் கி.மதத்தை விற்பனை (பரப்பி) செய்து வந்த மத வியாபாரிகளுக்கு வட அமெரிக்கா, இரோப்பா கண்டங்களில் வியாபாரம் சரி இல்லை. மக்களுக்கு மதத்தின் மேல் நம்பிக்கை குறைந்து விட்டது. சர்ச்சிக்கு செல்ல ஆளில்லை, சர்ச்சை நடத்த பணம் இல்லை. விற்க முயன்றாலும் சர்ச்சை வாங்க கனடாவில் ஆளில்லை. மதபோதகர்களுக்கு வேலையே இல்லை.

குறைந்த கூலிக்கு இந்தியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மத வியாபாரிகள் (போதகர்கள்) கிடைக்கிறார்கள். எனவே வாடிகன் நம்பிக்கை.

உலகத்திலே வேண்டாம் என்று கழித்து ஒதுக்கப்பட்ட பல பொருட்கள் கடைசியாக இந்தியாவில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதை நாம் நன்கறிவோம். அதன் கேடுகளைப் பற்றி சிறிது கூட நாம் கவலைப் பட்டதில்லை.காரணம் நமது நாட்டின் ஏழ்மை நிலை.

இந்த ஏழ்மையின் காரணமாகவே பணத்திற்கும், வசதிக்கும்.வேலைக்கும் ஆசைப்பட்டு நம்மில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். நம்மவர்கள் சிலரை வைத்தே நாம் நாட்டைக் கெடுக்கும் ஈனக் காரியங்களைச் செய்பவர்களிடம் நாமும் விலைபோய் விட்டோமே என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும் போதுதான் நீங்கள் சுயமாக சிந்திக்கும் நிலைக்கு வருவீர்கள்.

இதை எல்லாம் சொல்ல நீ யார்? என்று இன்னும் மனம் திருந்தாத சில நண்பர்கள் கேட்கலாம்.எனக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம் என்ற டுபாக்கூர் ரீல் விட மாட்டேன்.

என் பதில்: தாய், தாய்நாடு, தாய்மதத்தை உயிரினும் மேலாக நேசிப்பவன். எந்நிலையிலும் வேற்று மதத்திற்கு விலை போகாதவன்.

அன்புடன்,
ஆரோக்யசாமி

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வள்ளுவன் on October 21, 2009 at 3:36 pm

தோழர் திருச்சிக்காரன் அவர்களே,
இன்னும் இருக்கிறது தர்க்கம்! ஆனால் தேவையில்லாமல் பிறர் மத நம்பிக்கையையும் மனதையும் புன்படுத்தசொல்லி என் பகவான் எனக்கு சொல்லவில்லை! ரிக் வேதம் 1.164.46 “ஏகம் ஸத் விப்ராஹ் பகுதா வாதாந்தி”. இதன் பொருள்:- “உண்மை ஒன்றுதான், மக்கள் பல பெயர்களில் அழைக்கின்றனர்”. இதுவே சகிப்புத்தன்மை என்று நான் கருதுகின்றேன்!!

ஆனால், சில கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பெரியார் மற்றும் அவரது தொண்டர்கள் உள்ளரியதைஎல்லாம் உண்மை என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்லவேண்டும்.
பெரியாரின் வழி ‘பகுத்தறிவு’ பயன்படுத்தி வந்து இன்று தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்குபவர்கள் ஏராளம், அவற்றில் பிரதானம் கலைஞரும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவும்!
‘காதலன்’ திரைப்படத்தில் வரும் “ஊர்வசி ஊர்வசி” பாட்டில், வைரமுத்து ஒரு வரியை எழுதுகிறார்:- “கண்ணகி சிலைதான் இங்குண்டு, சீதைக்கு தனியார் சிலை ஏது?”.
இதில், என்ன சொல்ல வருகிறார்? கண்ணகி, சீதை இருவருமே கர்புக்கரசிகல்தானே? இவர் எழுதுவதை பார்த்தல், கண்ணகி மட்டுமே கற்புக்கரசி என்றும், சீதை இல்லை என்பதுபோல அல்லவே உள்ளது! சிலப்பதிகாரத்தில், கோவலன் செய்யாத தவறுக்காக கொல்லப்பட்டதால், கண்ணகி சினம் கொண்டு சபித்தால் அல்லவா மதுரை நகரமே நாசமானது? அதே போல, பலவந்தமாக தன் விருப்பமில்லாமல் இராவணன் தன்னை கடத்திக்கொண்டு வந்துவிட்டதால், சினம்கொண்டு சபித்ததனால்தானே இலங்கை தீக்கு இறையானது? பத்தினி இட்ட சாபாம் பலிக்கும் என்றுசொல்வார்கள். அப்படிபார்த்தால், மதுரை, இலங்கை இரண்டுமே எரிந்துபோனதற்கு காரணம் இரு பெண்தெய்வங்கள் இட்ட சாபங்கள்:- இரண்டுமே பழித்ததனால் இருவருமே கற்புக்கரசிகள் என்பதுதானே பொருள்? சீதைக்கு சிலை வைத்தால் சாலையில் நிற்காதா? நீங்கள் வைக்காமல் விட்டுவிட்டு, பின்பு அவளை இகழ்வதுதான் உங்கள் பீ-திங்கும் பகுத்தறிவா?? இராமாயணத்தில், ஏன் இராமன் சீதையை ‘சந்தேகப்பட்டு’ காட்டில் விட்டுவரசொன்னான் என்று கேட்பவர்கள்தானே முதலில் அந்த தெய்வத்தை தூற்றுகிறார்கள்!! இராமன் காட்டில் விட்டபோழுதே, இவர்கள் இப்படி கேவலமாக பேசுகிறார்களே, அப்படி அவன் செய்யாமல் விட்டிருந்தால் இன்னும் என்னென்ன பேசியிருப்பார்களோ? பாவம் இராமன், அண்டு மட்டும் DNA-test போன்ற வசதிகள் இருந்திருந்தால், தன் மனைவி உத்தமி என்று ஊருக்கும், உலகிற்கும் நிரூபித்திருப்பான்!!

மேலும், 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பெரியார்’ என்னும் திரைப்படத்தில், சத்யராஜ் “புராணம் இதிகாசம் வெறும் பொய்வேஷம், பொய் பேசிப்பேசியே பொய்யா போச்சு தேசம்” நு ஒரு வரி பாடுவார். (இந்த வரியிலே ‘வேஷம்’, ‘தேசம்’ இரண்டுமே தமிழ் வார்த்தைகள் இல்லை என்பதை கவனிக்கவும்). அதற்க்கு, இரண்டு ‘ஆத்தீகர்கள்’ “இராமாயணத்தில் இராமன் அணிலின் முதுகில் போட்ட கோடு இன்றும் இருக்கு, அதனால் இராமாயணம் உண்மை” என்று மொக்கை போடுவார்கள். அதற்க்கு, ‘கவிப்பேரரசு’ எழுதிய மிக இன்கீதமற்ற வரிகள்:- “சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா, சீதையை ஸ்ரீ இராமன் தொடவே இல்லையா?” என்று கேட்பார் ‘பெரியார்’ பாத்திரத்தில் நடித்த சத்யராஜ். இதையே, இயேசு கிறிஸ்துவின் தாய்க்கோ, நபிகள் நாயகத்தின் மனைவளுக்கோ எழுதியிருந்தால் எழுதிய கைகள் துண்டிக்கப்பட்டிருக்கும்! சரி, இதுதான் இவர்கள் சொல்லும் பகுத்தறிவா? எனக்குப்பின்னால், பத்து ரவுடிகள் இருந்தால் நான் கூட கேட்பேன்:- “நாகம்மையின் முதுகில் கைரேகை இல்லையா, நாகம்மையை நாயக்கர் தொடவே இல்லையா?” என்று! ஆனால் என்னசெய்வது, என்னிடம், அரசியல் கூண்டாகளோ, என்னை எதிர்த்துப்பெசினால், வாயை வெட்டும் ரவுடிகளோ இல்லையே!!
மனிதத்தொளில், கைரேகை பதியும், அதை அறியலாம் என்றும் நிரூபிக்கபட்டிருக்கிறது! அப்படியானால், உலகில் இருக்கும், பெண்களில் எத்தனைப்பேர் கற்புக்கரசிகள் என்றறிய அவர் அவரவர்களின் கணவனின் கைரேகைகள் அவர்களின் முதுகில் உண்டா என்று ஆராய்வார்களா??

“A method for rendering latent fingerprints at a site on a portion of skin detectable. The method comprises the steps of forming a cyanoacrylate vapor from a cyanoacrylate, conducting the cyanoacrylate vapor to the site on a portion of skin, and applying the cyanoacrylate vapor to the site at a sufficient concentration for a period of time of between about 15 seconds and about 30 seconds sufficient to deposit between about 0.31 mg/cm2 and about 0.78 mg/cm2 of the cyanoacrylate on the portion of skin. The present invention also provides an apparatus for rendering latent fingerprints at a site on a portion of skin detectable.”
http://www.freepatentsonline.com/5395445.html ….

அது எப்படி நிரந்தரமாக இருக்கும், மறுநாள் அவர்கள் குளிக்கமாட்டார்களா என்று நீங்கள் கேட்கலாம்! சீதை மட்டும் குளித்திருக்க மாட்டாளா? புனித நதிகளைப்பற்றி நம் வேதங்களும், புராணங்களும் மாறி மாறி சொல்லும்போது, சீதை குளித்திருக்க மாட்டாளா? அப்பொழுது, இராமன் போட்ட கோடுகள் அழிந்திருக்கலாம் அல்லவா? எத்தனை அணில்கள் நீராடுகின்றன?? இவர்களால் சொல்லமுடியுமா? இராமன் சீதையை மட்டும் அணைத்துக்கொள்ள வில்லையே! இலக்குவனையும், விபீஷணனையும், சுக்ரீவனையும், பரதனையும், மலை பெயர்த்தெடுத்து வந்ததற்காக அனுமனையும் அல்லவா கட்டித்தழுவிக்கொண்டான்! அப்படியானால், இவர்கள் அனைவர் முதிகிலும், கோடுகள் இருக்குமா? பதில் சொல்வாரா ‘கவிப்பேரரசு’? ‘டா வின்சி கோட்’ திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று தடுத்த சென்சார் போர்டு (censor board) எப்படி இந்த வரிகளை அனுமதித்தது????

இறுதியாக, சுவாமி ஐயப்பன் ஹோமொசெக்ஷுஅல் உக்கு பிறந்தவன் என்று கேட்கிறார்களே இதுவாவது பகுத்தறிவா?? மகிஷாசுரன் பிரம்மதேவனிடம் “ஒரு பெண்ணின் கைய்யால் மட்டுமே எனக்கு மரணம் வரவேண்டும்” என்று வரம் வாங்கியதால், எல்லா தேவர்களும் ஒரு பெண்ணை படைத்து, அவளை அந்த அரக்கனுடன் போரிட வைத்து, அவனை வீழ்த்தி வெற்றி காண்கின்றனர். இதற்க்கு பழிவாங்க துடிக்கிறாள் அவனது தங்கை மகிஷி. பிரம்மதேவனிடம் “சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்த பிள்ளைதான் தன்னை கொல்லமுடியும்” என்று வரத்தை வாங்குகிறாள். இது ஏன் என்றால், இரண்டு ஆண்களுக்கு பிள்ளை பிறக்காது, தனக்கு அழிவே இருக்காது என்று அவள் அப்படி கேட்கிறாள். ஆனால் மால் பெண்ணாக மாறி சிவனுடன் இனைந்து ஒரு பிள்ளையை ஈன்று, அவன் 12 வயது ஆனபின்பு அவளுடன் போரிட்டு வென்றான் என்பதே புராணம்.
சரி, இவர்கள் கேட்ட மொக்கையான கேள்வியில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? சில விஞ்ஞான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி இருப்பதால், அதைமட்டும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். மன்னிக்கவும்!

Who said homosexuals can give birth? Generally, reproduction is of two types:- Sexual and asexual. Plants give birth asexually, and certain genus like Hydra vulgaris reproduce both sexually and asexually. I have studied a case called Hippocampus, commonly called Sea horse in which the male species lay the eggs. If Ayyappa was born to homosexuals that is of Shiva and Vishnu, how would have the intercourse taken place? Front or back?? Usually, a male reproductive organism Sperm (there are many sperms in one drop of Semen) mixes with a female reproductive organism Ovum to form the Zygote, out of which the child is born. If Shiva and Vishnu both mated as males, how will Sperm and Sperm mingle to form Zygote? Which sperm in this drop of semen mix with which sperm in that drop of semen? Will Periyar or his devotees answer?? Who would have carried the child if both were male? Does the same regular Gestation period of 280 days hold here? Or is there any other timespan? How will the child be born? Through the front or back?? Really interesting, isn’t it? A specialist called Periyar, who completed his Ph.D in Genetics from Harvard University has asked this question, and nobody is able to give this answer! Probably, a separate department has to be set up at many Universities to do a thorough research on this!!

மீனாக, ஆமையாக, பன்றியாக, சிங்கமாக, குள்ளனாக, குதிரையாக வடிவங்கள் எடுத்த பரந்தாமனுக்கு ஒரு பெண்ணாக மாறுவதா கடினம்??????

யோசியுங்கள் தோழர்களே!!!

பாரத மாதா பல்லாண்டு வாழ்க!!
நமச்சிவாய!
ஸ்ரீ ராம ஜெயம்!!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard