New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்
Permalink  
 


பழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்

 
யூதர்களின் பழைய ஏற்பாட்டின் ஆணிவேர் நம்பிக்கை அரசியலே. 

இஸ்ரேலின் ஆட்சி உரிமை- ஆபிரகாமின் வாரிசுகளுக்கு
 

பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனில் வாழ்ந்த அன்னியஅரேபிய ரான ஆபிரஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை.
 பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை சுய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விடுடு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். 

.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பஞ்ச்த்திற்கு எகிப்து செல்ல அங்கே அடிமைப் பட்டிருந்த எபிரேயர்களை மோசே தலைமையில்  - ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் வர செங்கடல் இரண்டாகப் பிழந்து வழி விட்டதாகக் கதை
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_26.html
images?q=tbn:ANd9GcQrkWG1vqY7lDNPNUW_kUbrlOR-3DQQaAN0cWEX28Z4Y92biOAtxg  images?q=tbn:ANd9GcSdd8XFP7FLL_0LwNeS1U5PuuIMfdUAQ9PWFQB5C2_dgv3O4anv


1கொரிந்திய10:1 சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.2 அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
 
எபிரேய13:29 இஸ்ரயேலர் கட்டாந்தரையைக் கடப்பது போன்று செங்கடலைக் கடந்து சென்றது நம்பிக்கையினால் தான். ஆனால் எகிப்தியர் அதைக் கடக்க முயன்றபோது மூழ்கிவிட்டனர்.



   வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
யாத்திராகமம்14:15 ஆண்டவர் மோசேயை நோக்கி, ″ ″ ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.16 கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.17 நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.18 பார்வோனையும் அவன் தேர்களையும் குதிiவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, நானே ஆண்டவர் என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்″ ″ என்றார். 20 அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.21 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.22 வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.23 எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.24 பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.25 அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், ″ ″ இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்″ ″ என்றனர்.26 ஆண்டவர் மோசேயை நோக்கி, ″ ″ நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு″ ″ என்றார்.27 மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.28 திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.29ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.30 இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.31 எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.
யாத்திராகமம்15:7 உம் மாபெரும் மாட்சியால் உம் எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்: உமது சீற்றக் கனலைக் கக்கித் தாளடிபோல் அவர்களை எரித்துவிட்டீர்.8 உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன: பேரலைகள் சுவரென நின்றன: கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.9 எதிரி சொன்னான்: துரத்திச் செல்வேன்: முன் சென்று மடக்குவேன்: கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்: என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்: என் வாளை உருவுவேன்: என் கை அவர்களை அழிக்கும்.10 நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்: கடல் அவர்களை மூடிக்கொண்டது: ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம்போல் அமிழ்ந்தனர்.11ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?
images?q=tbn:ANd9GcReIIXTv2hfuCr1hF_RFnjCj_7jgts3jGIttwMN2JvzNapKpj0simages?q=tbn:ANd9GcS1nY8VNyjU6Sqno85t1HHZsf2lHU1jpZCY3FRMZugK3fEyVYj9yA
images?q=tbn:ANd9GcQC0TVqYsxL8R32aVfyTZhTKz0uvZ0T_iGXqFgyCffO5I7geqUAoA


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பைபிள் கதைப்படி கானான் என்னும் பகுதியை தேர்ந்தெடுத்து அதை, மெசப்படோமியாவைச் சேர்ந்த ஆபிரகாம் - அவர் வாரிசுகளுக்கு என இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் கொடுத்தாராம். புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளில் இதில் சற்றும் உண்மையில்லை என இஸ்ரேல் டெலவிவ் பல்கலைக் கழக அகழ்வாய்வுத் துறைத் தலைவர் இஸ்ரேல் ப்ராங்ஸ்டைன் என்பவர் "பைபிள் தோண்டப்படுகிறது" என்னும் நுல்லை எழுதினார். அதே போல பஞ்சத்திற்கு பிழைக்க எகிப்து சென்ற எபிரேயர்கள் அடிமையாய் இருக்க 30 லட்சம் எபிரேயர்கள்களை கர்த்தர் ஆசியுடன் மோசஸ் வழிநடத்தினார். எகிப்திலிருந்து 40 வர்டங்கள் 30 லட்சம் எபிரேயர்கள் பயணம் செய்ததாகக் கதை. இப்படி ஒன்று நடந்ததாக புதைபொருள் ஆய்வுகள் ஏற்கவில்லை.
 உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது என கதை புனைகின்றது விவிலியம். உலகம் படைக்கப்பட்டதின் பைபிள் தரும் துல்லியக் வரலாற்று கணக்கு 
சந்ததி   பிறந்த ஆதாமிய வருடம்    வாழ்நாட்கள்     இறந்த ஆதாமிய வருடம் 
ஆதாம் ——————-000——————     930—————930 
சேத்————————௧30————————912—————1042 
ஏனோஸ் —————–235————————905—————1140 
கேனான்——————–325———————–910—————1235 
மகலாலெயேல்————395———————–895—————1290 
யாரேத்———————௪60————————962—————1422 
ஏனோக்கு——————622————————365————–987 
மெத்தூசலா—————௬87————————969————–1656 
லாமேக்கு ——————874————————௭77————–1651 
நோவா———————௰56———————950—————2006 
சேம்————————–1556———————600—————2156 
அர்பக்சாத்——————1658———————438—————2096 
************************************************************************ 
சாலா————————௧693———————433—————2122 
ஏபேர்————————1723———————464—————2187 
பேலேகு———————1757———————–239————–1996 
ரெகூ————————௧787———————–239————–2026 
செரூகு———————–1819———————–230————–2049 
நாகோர்———————1849————————148————–1997 
தேராகு———————௧878————————205————2083 
ஆபிராம்———————1948————————175————2123 
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து 
எடுக்கப்பட்டுள்ளது. 
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார். 
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது 
சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன். 
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர். 
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன். 
நோவா காலத்தில் அதாவது BCஏ 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 5000 வருடங்கட்கும் மேலாக. யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்.

ஆதியாகமம்24:63 மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது ஆபிரகாம்  கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.64 ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.

ஒட்டகங்கள் ஒரு பழக்கப்பட்ட மிருகமாக மாற்றப்பட்டது, பொ.மு 10நூற்றாண்டு வாக்கில், பரவலாக பயன்பாட்டில் வந்தது மேலும் சில நூற்றாண்டிற்குப் பின். ஆனால் பொ,மு.2000 வாக்கிலான ஆபிரகாம் ஒட்டகம் பயன்படுத்தியதாகக் கதை
http://www.npr.org/2014/02/14/276782474/the-genesis-of-camels



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 


செங்கடல்-கதை 
New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editorOne has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus

The Hebrew term Yamsup signifies Reed sea. ”
New Catholic Encyclopedia Vol-5 page-745

The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745 

மோசஸ் அல்லது மூசா நபி எழுதியதான தௌரத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெர்க்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.

 


  “இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.(  (First Edition in 1966; this is 3rd edition)

ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் 

சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் 

இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் 

கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60

இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் 

கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் 

திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் 

எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது 

சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் 

நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று 

சான்றுகளுண்டு. – பக்  90- 91

ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் 

பெயரைக்கூட  புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த 

இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் 

ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, 

பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே.   பக் 49 



நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; 

கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய 

மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச்  
பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் 

கொடுத்து -முள்ளனர். 

தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில்

நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன்

 தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்

(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் 

“படைப்பு” போன்ற புராண (Mythological கதைகள் வழியாகக் 

கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, 

பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் 

பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் 

கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல 

முடியாது. -- பக்கம் 15

அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் 

காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை 

வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் 

விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

 

  •  நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே புனையப் பட்டவையே.

மோசே இல்லவே இல்லை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard