New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
Permalink  
 


யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு

 
images?q=tbn:ANd9GcS8WpUnKimw52RbHT13BvDfQNEqZ0laqn4SfhgqoilJdqW9MQTYfQ  

பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் செய்த கொடுமைகளால் கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.

வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
இதன் காலம் எப்போது-என்பதை தெரிந்தால் மட்டுமே வேறு ஆதாரம் மூலம் சரி பார்க்கலாம்.

பழைய ஏற்பாட்டில் உள்ள ஆபிரகாம் முதல் சாலமன் வரை யாரைப் பற்றியும் எவ்வித ஆதாரமும் நடுநிலையாளர் ஏற்கும்படி இல்லை. கதைகளில் நமக்கு காலம் குறிக்கவும் சரிபார்க்க சமகால நடுநிலை கல்வெட்டு எனில் 1ராஜா14:25- 26ல் சொல்லப்படும் எகிப்து மன்னன் சீசாக்கு என்பவர் கல்வெட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதையும் சீசாக்கு வென்றதாக இவரது கல்வெட்டு சொல்கிறது. இது பைபிள் சொல்வதற்கு மாற்றாக இருப்பினும் காலம் குறிக்க உதவுகிறது.

1ராஜா14:25-  ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.
2நாளாகமம் 12:2ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.
 


பவுல் பரிசுத்த ஆவி மேலே வர சொன்னதாக நம்க்கு வருபவை.

 அப்போஸ்தலர் பணி13:17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்.23 தாம் அளித்த வாக்குறுதியின் படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

மோசேயுடன் அலைதல்- 40 வருடம் + யோசுவா 40 +நியாதிபதிகள் 450 + சாமுவேல் 40 + சவுல் 40 + தாவீது 40 ; பிறகு சாலமன்.

இப்போது மேலுள்ள சீசாக்கின் காலம் வைத்து தாவிது ஆட்சி 1010–970 BCE எனபடுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
Permalink  
 


40 வருடம் + யோசுவா 40 + 450 + சாமுவேல் 40 + = 570

எனவெ வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்- பொ.மு.1580, 16ம் நூற்றாண்டு.

 
கர்த்தர் பவுல் மூலம் சொன்ன கணக்கு.(தாவிதிற்கு 570 வருடம் முன்பு)
 
சரி பழைய ஏற்பாட்டில் சொன்ன கணக்கு என்ன
 1இராஜாக்கள்6:1
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
 
சாலமன் பதவி ஏற்று 4ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம்.
சாலமன் பதவி ஏற்று 3ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம் சாலமன் காலம் 970 - 930, 4ம் வருடம் எனில் 967, அதற்கு 480 வருடம் முன்பு எனில் வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்-பொ.மு.1447, 15ம் நூற்றாண்டு.
 
 யாத்திராகமம்1:11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
 
 
 
 
 
 
 
2ம் இராம்சேசு என்னும் மன்னன் தன் தந்தை பெயரில் இந்நகரங்களை கட்டியதாக எகிப்து வரலாறு. இராம்சேசு- 2 காலம் பொ.மு..1279- 1213 ,13ம் நூற்றாண்டு. http://en.wikipedia.org/wiki/Pharaohs_in_the_Bible.
 
இவன் காலத்தில் எப்ரிரேயர் வெளியேற்றம்- கஷ்டங்கள் ஏதும் நிகழவில்லை.
 
கர்த்தர் பழைய ஏற்பாடு கணக்கை மறந்து பவுல் வாயில் வெறொன்று சொன்னார். இரண்டுமே தவறு. இன்னும் சொல்லப் போனால் யாத்திரை என்பதே பொய்.
http://www.mediafire.com/?4yuc22gj6e46395 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தாவீது சாலமன் ஆட்சி என்பதே தவறு.
http://www.mediafire.com/?lyxvjn2808o6wah
 

கர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு-கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு

 
 
கர்த்தர் உலகம் படைத்து  5772 வருடம் ஆகிறது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின்  5772 வருடம்  28.9.2011  தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
   நபர்பிறந்தஆதாமிய வருடம்   வாழ்நாட்கள்இறந்தஆதாமிய வருடம்               
ஆதாம்
சேத்
ஏனோஸ்
கேனான்
மகலாலெயேல்
யாரேத்
ஏனோக்கு
மெத்தூசலா
லாமேக்கு
நோவா
சேம்
அர்பக்சாத்***
சாலா
ஏபேர்
பேலேகு
ரெகூ
செரூகு
நாகோர்
தேராகு
ஆபிராம்
---
130
235
325
395
460
622
687
874
1056
1556
1658
1693
1723
1757
1787
1819
1849
1878
1948
930
912
905
910
895
962
365
969
777
950
600
438
433
464
239
239
230
148
205
175
930
1042
1140
1235
1290
1422
987
1656
1651
2006
2156
2096
2122
2187
1996
2026
2049
1997
2083
2123
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.
images
யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard