New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா


Guru

Status: Offline
Posts: 24603
Date:
சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா
Permalink  
 


சிலை வழிபாடு தவறா? பாவமா அல்லது அறிவியலா?-1

 

 
s1.gif

சிலை வழிபாடு மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றை தவறு என்றும் பாவம் என்றும் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது எந்த அளவு சரி? உண்மையிலே சிலை வழிபாடு அல்லது விக்கிரக வழிபாடு என்பது ஒரு பாவமான காரியமா? அது இழிவானதா? சில மாற்றுமத சகோதரர்கள் உருவ வழிபாடு செய்பவர்களுக்கு முடிவே இல்லாத நரக தண்டனையை கடவுள் அளிப்பார் என்று கூட பிரச்சாரம் செய்கின்றனர். இது சரியா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத்தான் நாம் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

சிலை வழிபாடு அல்லது பொதுவாக உருவ வழிபாடு எனக் கூறப்படுவதுதான் என்ன?

s4.gif



காலம் காலமாக தன்னலமற்ற ஞானிகளால் தியானம் யோகம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்ட தெய்வத் திருவடிவங்கள் மீது தியானிப்பது மற்றும் பூசனைகள் செய்வது, மனதால் அன்பு செலுத்துவது ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சியே சிலை வழிபாடு ஆகும். ஒவ்வொரு மனிதனும் -ஆணும் பெண்ணும்- அழிவற்ற சத்தியத்தை தன்னுள் உணர முடியும். இது நம் ஒவ்வொருவருடைய பறிக்கமுடியாத உரிமையாகும் என்பது நம் பாரத ஞான மரபு மனிதகுலத்துக்கு அளிக்கும் செய்தியாகும். 

 

s2.gif


இந்த உருவ வழிபாடு அல்லது சிலை வழிபாடு என்பது ஆழ்ந்த உளவியல் தன்மையை கொண்டது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நமது பிரக்ஞை என்பது பல தளங்களைக் கொண்டதாகும். அதைப் போலவே நமது அறிதலும் பல நிலைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் அறிதல் என்பது மற்றொரு தளத்தில் அல்லது அறிதல் நிலையில் வேறுபட்டு தெரியும். நாம் அனைவருமே பல தளங்களில் பல அறிதல் நிலைகளில் வாழ்கிறோம். ஒருவரே கூட ஒரே தளத்தில் ஒரே நிலையில் நிலையாக இருந்திடமுடியாது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடாத மிகச்சிறந்த தர்க்க வாதிகூட தன் குழந்தையைக் கொஞ்சுகையில் உணர்ச்சி மயமாக மாறலாம். ஆன்மிக தேடுதல் இந்த பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரத ஞான மரபின் சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு மானுடகுலத்தின் பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.


இந்த உலகில் வாழும் பெரும் ஆன்மிக மரபுகளில், முக்கிய இறை மார்க்கங்களில், மானுட அறிதலின் பன்மையை ஏற்பவை பாரத தேசத்தின் திருமறைகளே ஆகும். 


எனவே ஒவ்வொரு மனிதருக்கும் அவரது இயல்பிற்கும் அன்பிற்கும் ஏற்றவாறான ஒரு வடிவத்தில் பிரபஞ்சத்தின் ஆதாரமான சத்தியத்தை தியானிக்கவும் வழிபடவும் உருவாக்கப்பட்ட வழிமுறையே உருவ வழிபாடாகும். உருவ வழிபாட்டின் மூலம் எல்லையற்ற பரம்பொருளில் ஆன்மா லயிக்க முடியும். ஆதி அந்தமற்று விளங்கும் பரம்பொருளை உணர்வுப்பூர்வமாக ஒரு வடிவத்தில் ஏற்று வணங்குவது என்பது அழிவற்ற நித்திய சத்தியத்தைத் தேடும் ன்ம சாதனையில் முதல் கட்டமாக மட்டுமின்றி முக்கிய கட்டமாகவும் விளங்குகிறது. பாரத சிலை வழிபாட்டின் மற்றொரு முக்கிய அம்சம். அக-பிரபஞ்சத்தையும் (micro-cosom) புற-பிரபஞ்சத்தையும் (macro-cosom) இணைத்திடும் ஆதார குறியீடுகளை மனிதகுலத்துக்கு நமது சிலை வழிபாடு அளித்துள்ளது.


அறிவியலும் உளவியலும் (psychology) ஆழமும் விரிவும் அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரத மெய்யியலாளர்கள் மனிதகுலத்துக்கு அருட்கொடையென அளித்த ஆன்மீக திருவுருவங்கள் மென்மேலும் தம் ஞான வெளிப்பாட்டில் விரிவடைந்துள்ள விதம் அறிவியலாளர்களையும் தத்துவஞானிகளையும் வியக்க வைத்துள்ளது.

 

s3.gif


இது குறித்து விரிவாக விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அவர்களது வார்த்தைகளிலேயே பின்னர் கேட்க உள்ளோம். அதற்கு முன்னால் பாரதத்தில் சிலை வழிபாட்டின் விக்கிர ஆராதனையின் தொன்மை குறித்து வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களை காணலாம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிலை வழிபாடு தவறா? பாவமா அல்லது அறிவியலா?-2 உருவ வழிபாட்டின் தொன்மை

 

 

பாரதப் பண்பாட்டை போலவே பாரதத்தின் ஞான வெளிப்பாடான தெய்வத்திருவுருவச் சிலைகளும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. 

harappa.gif

5000 வருடங்களுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் சிந்து-சரஸ்வதி நாகரிகத்தில் சிலை வழிபாடு மிக உயர்ந்த முறையில் சிறந்திருந்ததைக் காண முடிகிறது. அகழ்வாராய்ச்சியாளர் B.B.லால் இது குறித்து கூறுகையில் கண்ணுக்குத் தெரியாத ஜீவ நதியாக சரஸ்வதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல நம் ஒவ்வொரு பண்பாட்டு இயக்கத்திலும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் ஆன்மிக பாரம்பரியம் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
lal1.gif



இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் டாக்டர்.பிஷ்ட் ரிக்வேத பண்பாட்டின் நிதர்சன வடிவமாக virtual reality ஆக சிந்து சமவெளி நாகரிக அமைப்புகள் திகழ்வதாகக் குறிப்பிடுகிறார். சில மாற்றுமத சகோதரர்கள் வேதங்கள் சிலை வழிபாட்டினை மறுப்பதாக தவறாகக் கூறுகின்றனர். இது பிழையான வாதமாகும். வேதங்களை நவீன காலத்தில் ஆராய்ச்சி செய்த ஸ்ரீ அரவிந்தரும் சரி, பழமையான உரையாசிரியராகிய சாயனரும் சரி வேதங்கள் உருவ வழிபாட்டினை கண்டனம் செய்ததாகக் கூறவில்லை. மாறாக ஸ்ரீ அரவிந்தர் வேதம் ஆழ்ந்த ஆன்மிக-உளவியல் உண்மைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். 

auro2.gif

வேத பண்பாட்டின் வெளிப்பாடாக அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அறியப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சார்ந்த இந்த முத்திரையை பாருங்கள்.
rao1.gif


கடலடியில் அகழ்வாராய்ச்சி நடத்தி மறைந்த இதிகாச நகரங்களான பூம்புகாரையும் துவாரகையையும் கண்டுபிடித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் (marine archeologist) டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் இம்முத்திரையின் மேலே காணப்படும் காட்சி வேத கால அக்னி வழிபாட்டினை காட்டும் உருவ இலச்சினை என கூறுகிறார். 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இம்முத்திரையின் கீழே காணப்படும் ஏழு பெண்கள் வேதத்தில் கூறப்படும் ஏழு தெய்வீக சகோதரிகளாக நதிகளைக் கூறுவதினை நினைவுப்படுத்துகின்றனர். இன்றைக்கும் நீர்நிலைகளின் அருகில் சப்த மாதர் வழிபாடு உள்ளது.

sapta1.gif

 


தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக வேதம் இந்திரனைப் போற்றுகிறது. வேதத்தில் இந்திரன் காளையாக உருவகிக்கப்பட்டுள்ளார். 


புகழ்பெற்ற மொழியியலாளர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு விலங்கு இலச்சினைகளை வேதத்தின் சோமபானச் சடங்குகளின் குறியீடாகக் காண்கிறார்.


இவையெல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கையில் வேத காலத்தில் உருவ வழிபாடு கிடையாது எனக்கூறுவது சரியல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேதம் வழிபாட்டுமுறையில் எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை.

'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்'

என ரிக்வேதம் கூறுகிறது. எனவே உருவ வழிபாடு வேத காலத்திலேயே நிலவியது மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மிக முறையாக ஏற்கப்பட்டும் விளங்கியது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிலை வழிபாடு தவறா? பாவமா? அல்லது அறிவியலா? -3

 

 

தெய்வ திரு உருவத்தின் ஆழ்ந்த குறியீட்டுத்தன்மை : விநாயக பெருமான் ஒரு எடுத்துக்காட்டு


ganesh1.gif

இனி நமது பாரம்பரிய தெய்வத்த்திருவடிவங்கள் எத்தகைய ஆழமான ஆன்மிக தத்துவார்த்த சிறப்பும் செழுமையும் கொண்டவை என்பதனை ஒரு உதாரணத்தின் மூலம் காணலாம். ஆனை முகமும், தொந்தி வயிறும் கொண்ட பிள்ளையாரை எடுத்துக் கொள்வோம்.
ganesa2.gif

பிள்ளையாரின் ஆனை முகம் பிரணவ வடிவமாக விளங்குகிறது. பிரணவம் எல்லையற்ற பரம்பொருளின் ஒலி வடிவம்.

ganesa3.gif

பிள்ளையார் ஒரு கரத்தில் கோடாரி சார்ந்த அங்குசத்தை ஏந்தி இருக்கிறார். ஆனையை அடக்கும் அங்குசத்தினால் மதயானை போல் நம் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை அகற்றுகிறார். கோடாரியால் நம் அன்றாட வாழ்விலும் ஆன்மிக சாதனையிலும் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தளைகளைக் களைகிறார். 
ganesa4.gif

மற்றொரு திருக்கரத்தில் விநாயகர் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தினை நோக்கி, (சில நேரங்களில் நாம் தயங்கி நிற்கும் போதும் கூட), அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது. 
ganesa5.gif

தொந்தி கணபதி என குழந்தைகள் அவரை அன்புடன் அழைக்கின்றனர். 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொந்தி கணபதி என குழந்தைகள் அவரை அன்புடன் அழைக்கின்றனர். 

ganesa6.gif

வேத முடிவில் நடம் நவிலும் விமலன்

 


அவரது தொந்தி அண்ட சராசரங்களும் பரம்பொருளுக்குள் அடக்கம் என்பதனைக் காட்டுகிறது. பரம்பொருளின் பிராண இயக்கத்தில் சுருங்கி விரியும் தொந்தி விரிவடைந்து சுருங்கி பின் மீண்டும் விரிவடைந்து பின் மீண்டும் சுருங்கும் பிரபஞ்ச இயக்கத்தினைக் காட்டுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் இயக்கமும் இறை சக்தியின் ஒரு பகுதியே எனக்கூறும் பாரத மெய்ஞான தரிசனத்தை இது உணர்த்துகிறது.

ganesa7.gif

 

ஆனை வடிவம் கொண்ட விநாயகரின் வாகனமாக இத்தனை சிறிய பெருச்சாளியா? அவ்வை பாட்டி எழுதிய விநாயகர் அகவலுக்கு உரை விளக்கம் எழுதிய அறிஞர் திரு.இரசபதி கூறுகிறார்:

"வழிபாட்டு வளர்ச்சிக்கு தக்க அளவாக,ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும். அந்நிலையை சத்தி நிபாதம் என்பர். சத்திநிபாதம் படரும் சமயம் சாதகருக்கு குண்டலினிக் கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலினிக் கனலேறி அமர்ந்துள்ளார் பிள்ளையார் என்பது பிண்ட நுட்பம்."

 

ganesa10.gif

 

இவ்வாறு ஒவ்வொரு வடிவமைப்பும் ஆழமான நுட்பமான ஆன்மீக உண்மைகளினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இந்த விநாயகரின் உண்மைத்தன்மைதான் என்ன? ஜான்.ஏ.க்ரிமஸ் எனும் தத்துவவியலாளர் 'Ganapathi: Song of the self' என ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் கூறுகிறார்,

ganesa8.gif
"விக்னேஸ்வரராக விளங்கும் இந்த கணபதி எனும் கணேசர் யார்? ஒரே வார்த்தையில் சொல்வதானால் கணேசர் என்றால் மெய்யுணர்வு. மெய்யுணர்வு என்பது சாஸ்வதமான அழியாத உள்ளுறையும் சத்தியத்தை இங்கே இப்போது உணர்வதற்கு தடையாக விளங்கும் விக்னங்களை அகற்றுவது என்பதாகும்."

 

 

ganesa9.gif


அனந்த குணப் பரப்பும் உதிக்கும் பந்தமறுக்கும் திருவதனன் விநாயகப்பெருமான். நம்முள் விளங்கும் அக ஒளி. அவருக்கு நாம் படைக்கும் மோதகம் நம் உள்ளிருக்கும் நம் சுயத்தின் இனிப்பு இயற்கையை விளக்கும். அப்பெருமானின் வடிவின் முன் உடைக்கும் தேங்காயில் அகங்கார ஓடுடைய வெளியாகும் அமுத நீர் நாம் அடைய வேண்டிய நிலையை நமக்குணர்த்தும். பாச அறிவும் பசு அறிவும் பற்றுதற்கு அரிய சுத்த சைதன்ய அறிவு வடிவானவன் விநாயகன். விநாயகத் திருவடிவத்தினைப் போலவே பாரதத்தின் எண்ணற்ற தெய்வத் திருவுருவச்சிலைகளும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. 


அடுத்த பதிவில் மேலும் நம் பாரம்பரிய திருவடிவங்களின் ஆழ் பொருளை ஆழ்ந்து நோக்கலாம்.
அதற்கிடையில் நம் தேசத்தின் நலிவுற்ற ஒடுக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு பாரத பாரம்பரியம் சார்ந்து சேவையாற்றிடுவது குறித்த சில பதிவுகளை காண இங்கேசொடுக்கவும்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.

உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.

உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?

உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.

"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். "அதற்கு உருவமில்லை" என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது. 

அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.

ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.

வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.

இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.

ஜயராமன் - வலைபதிவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்துமதத்தில் சிவன் புலித்தோல் மீதமர்ந்துபடியும், ஆதிசங்கரர் புலித்தோல், புள்ளி மான் தோல் மீது அமர்ந்தும் தியான நிஷ்டையில் இருந்து அருள்பாலிக்கின்றார்கள். அப்படியாயின் இந்துக்கடவுளர்கள், சாமியார்கள் புளூகிராஸ் அமைப்பினால் தேடப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களா?

இந்துக் கடவுளர்களூம், சாமியார்களும் புலி, மான் என மிருகங்களை வதை செய்கின்றதாகத்தானே அர்த்தம் என்கிற சந்தேகம் சர்வேசனின் இந்தப்பதிவில் வெளிப்படுகிறது.

இந்துமதத்தில் பல்வேறு குறியீடுகள் symbolism வழியாக அரிய வாழ்வியல் தத்துவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. புலித்தோல் மீது அமர்ந்திருப்பது என்பது தமோ குணம் எனப்படும் குணாதிசயத்தால் மனதில் ஏற்படும் தீய ஒவ்வாத எண்ணங்களால் உந்தப்பட்டு புலியின் வன்மையான ஆற்றலோடு தர்மத்திலின்று விலகி கொடுந் தவறுகள் செய்வதிலின்று மனிதன் தன்னை மீட்க, தன்னிலிருக்கும் அந்தத் தமோகுணமாகிய புலியைக் கொன்று கிழித்து, மனதினை, எண்ணங்களை வென்று அதன் மீதமர்ந்து இறைவனை தியானித்து நற்கதியடைவது என்பதை குறியீடாகக் காட்டுவதே!

மான் தோல் மீதமர்ந்திருப்பதான சிம்பாலிஸம் ரஜோகுணம் என்கிற குணாதிசயத்தால் ஏற்படும் அதிகார, ஆசைகூடிய எண்ணங்களால், மான்மாதிரி 45 டிகிரி வளைந்து வளைந்து விரைவாக மனதில் வந்தெழும் எண்ணங்களின் உந்துதலில் நெறியற்ற செயல்கள் செய்து மனிதன் வருந்துவதற்குக் காரணமான ரஜோகுணம் ஒழித்து அதனை வென்று அதன்மீதமர்ந்து இறைவனை துதித்து, தியானித்து, உணர்ந்து இறைவனோடு இரண்டறக்கலக்கவேண்டும் என்பதைக் குறியீடாக சிம்பாலிக்காகக் காட்டுவதே.

புலால் உண்பது பற்றி அது முற்றிலும் தவறு....கூடவே கூடாது என்பதாக கட்டளைகள் இந்துமதத்தில் ஏதுமில்லை. என்ற போதும் புலால் தமோ, ரஜோகுணம் மனதில் எழ பிரதான காரணியாகிறது என்கிற அறிவுறுத்தல் சொல்லப்பட்டிருக்கிறது.

துடிக்கும் தூண்டில் புழுவை உண்ண வாய் வைக்கும் மீன் தூண்டிலில் மாட்டி இழுக்கப்பட்டு நீரினின்று நீங்கி துடியாய்த் துடிக்கிறது. துடித்தபடியே மாள்கிறது. துடிதுடிக்கும் மீனை துடிப்போடு உண்ணும் மனிதனோ இன்னும் எப்படியெல்லாம் துடியாய்த் துடிக்கப்போகிறானோ என்று எண்ணி எண்ணியே நான் அஞ்சுகிறேன் என்கிற வள்ளலார் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானதே!

சனாதன இந்துமத வேத நெறி வாழ்வியலில் இப்படி மட்டுமே இரு என்று எங்குமே கட்டளைகள் கிடையாது. இப்படியான காரணிகள் இம்மாதிரியான குணாதிசய /செயல்பாட்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அறிவிப்புகள் மட்டுமே. 

சாத்வீகமான குணம் இருப்பதிலேயே சிறப்பானது. சாத்வீக எண்ணங்களின் உந்துதலில் செய்யப்படும் செயல்பாடுகளில் தெளிவு இருப்பதால் குற்ற உணர்வு நீங்கிய நிலையில் வாழ அது மனதில் நிரந்தரமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சனாதன தரும இந்துமத வேத நெறியில் இருக்கும் தெய்வ உருவ வழிபாட்டின் சிறப்பே அதன் ஊடாக சிம்பாலிஸமாக வெளிப்படுத்தப்படும் வாழ்வியல் தத்துவங்களே! 

உலகில் இருப்பதிலேயே மிகச்சிறப்பான வாழ்வியல் தத்துவங்க்கள் சனாதன இந்து தருமத்திலேயே மிகச் சிறப்பாக, மனிதனின் தினசரி வாழ்வுக்கு, மேம்பாட்டுக்கு, ஆவேசமில்லாத மனதினைப் பெறுவதே நிரந்தரமான மகிழ்ச்சி என்பதைச் சொல்லும் அறிவியல் சிந்தனைகள் இங்குமட்டுமே காணப்படும் சிறப்பாகும்.
http://harimakesh.bl...007/01/104.html 



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Spiritual life is always better than Ritual life

Spiritual - Wisdom
Ritual - Material

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard