New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராவிடத்தால் வீழ்ந்தோம்-தமிழ்த் தேசியம்-குமரிமைந்தன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திராவிடத்தால் வீழ்ந்தோம்-தமிழ்த் தேசியம்-குமரிமைந்தன்
Permalink  
 


தமிழ்த் தேசியம் ... 1

தமிழ்த் தேசியம் - முன்னுரை

கிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில் வெளியிடுவதற்காகப் பல தலைப்புகள் கொடுத்துக் கட்டுரைகள் கேட்டுத் தாளிகைகளில் அறிக்கை விடுத்திருந்தார். அவற்றில் ″தமிழ்த் தேசியம்″ என்பதும் ஒன்று. இப்பொருள் பற்றிய என் கருத்துளை வெளியிட ஒரு வாய்ப்பு என்றெண்ணி இக்கட்டுரையை விடுத்தேன். என் வழக்கப்படி இன்னும் சிலருக்கும் படிகள் அனுப்பினேன். கட்டுரைகள் கேட்டவரிடமிருந்தோ மற்றவரிடமிருந்தோ இது நாள் வரை மறுமொழி எதுவும் இல்லை. ஆனால் தோழர் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலில் இக்கட்டுரையின் பகுதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிந்தேன். இதே நூலைப் படித்த வேங்கைப் பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன். மாறன் கட்டுரையை வெளியிட முன்வந்தார். கட்டுரை நூல் வடிவில் உங்கள் பார்வையில் உள்ளது.

பத்து அகவையிலிருந்தே திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்ந்தவன் நான்; களத்தில் இறங்கவில்லையாயினும் கனவுகளில் திளைத்தவன்; சிறுகச் சிறுக அந்தக் கனவு கலைந்து 1973 - இல் முற்றிலும் விடுபட்டவன்; பொதுமையை நாடி அதனிலும் முரண்பாடுகளைக் கண்டு இரண்டும் தமிழகத்துக்கும் பொதுமை இயக்கம் ஏழை நாடுகளுக்கும் செய்துள்ள இரண்டகத்தைக் கண்டு தெளிந்து புதுக் கோட்பாடு, இயக்கம் காண விழைபவன்; ஆனால் ஆர்வமுள்ள அளவுக்கு ஆற்றல்கள் வாய்க்கப் பெறாதவன்; கற்றும் கேட்டும் கண்டும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற கடமையுணர்வை எழுத்துகள் முலம் நிறைவேற்ற முயல்பவன்; இயலாமைகளால் ஆக்கங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை உணர்ந்திருந்தும் நகையாடப்படலாம் என்ற தயக்கம் இருந்தும் தெரிந்தவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவுகளை மக்கள் முன்வைக்க வேண்டுமென்ற கடமையுணர்வால் உந்தப்பட்டவன்; தவறுகள் இருந்தால் அவற்றைச் திருத்தி என் முடிவுகளை மேம்படுத்தும் ஆற்றல் நம் மக்களுக்கு வளர வேண்டுமென்று விரும்புபவன்; ஆனால் நண்பர் குணா தவிர வேறெவரிடமிருந்தும் அத்தகைய ஆற்றல் வெளிப்படவில்லை.

இந்தக் கட்டுரையில் நான் சொல்லியுள்ள கருத்துகளின் எதிரொலி மிகக் கொடியதாக இருக்கக் கூடும். எதிர்ப்பின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தால்தான் நிகழ்காலத் தேக்க நிலையிலிருந்து எதிர்காலத்தை விழித்தெழச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற முடியும் என்பது என் முடிவு.

கட்டுரையில் தேசியம் பற்றிய ஒரு வரையறை கூறப்பட்டுள்ளது. அது மிகப் பொதுப்படையானதாகும். உண்மையான தேசியர்கள் தேசியத்தின் வினைப்பாடுகள் கூர்மையாகும் போது தான் தங்களை இனங்காட்டுவர்.

இக்கட்டுரையை வெளிக்கொணர முன் முயற்சி எடுத்துக் கொண்ட வேங்கை அச்சக வேங்கை மார்பனுக்கும் நண்பர் பொன். மாறனுக்கும் கட்டுரை அச்சேறுமுன்பே அறிமுகம் தந்த தோழர் குணாவுக்கும் நன்றி.

நம் குமுகத்தில் அண்மைக் காலங்களில் பொய்த்துப் போய்விட்ட மனந்திறந்த திறனாய்வு மழை இப்போதாவது பொழியுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திராவிடத்தால் வீழ்ந்தோம்-தமிழ்த் தேசியம்
Permalink  
 


தமிழ்த் தேசியம்-2


தேசிய உணர்வென்பது இயற்கையானது. அது நில எல்லை அடிப்படையில் உருவாவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை வகுத்துள்ளன. சிலவகை மான்கள் தாம் வாழும் எல்லைகளுக்கு அடையாளமிட்டுப் பேணுவதாக உயிர்நூலார் கூறுவர். நாய்களும் இத்தகைய எல்லைகளை வகுத்துள்ளன. எல்லையினுள் புதிதாக நுழையும் நாயை அவை உடனே அண்டை நாய்களுடன் சேர்ந்து துரத்திவிடும்.

மனிதர்கள் ஓரிடத்தில் இறுதித் திரிவாக்கம் பெற்றுப் பரவினயமையால் உலக மொழிகளில் பல அடிப்படைச் சொற்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அவர்கள் பல்கிப் பெருகி உலகெலாம் பரவியபோது ஆங்காங்குள்ள பருப்பொருட் சூழல்கள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது பண்பாடுகளும் மொழிகளும் வளர்ச்சியடைந்தன.

அருகருகே வாழ்ந்த மக்கள் உணவு தேடி தத்தம் எல்லைகளை மீறியபோது சண்டைகள் நிகழ்ந்தன. வளமில்லாப் பூமியிலிருந்து கூட்டமாக வளமிக்க பரப்புகளில் புகுந்து கொள்ளையடிப்பதற்கும் போர்கள் நடந்தன. இப்போர்களிலிருந்து பேரரசுகள் உருவாயின. பற்றாக்குறைப் பகுதியிலுள்ளோர் வளமிக்க பகுதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்களை வாணிகம் மூலம் பண்டமாற்றுச் செய்து உயர்நிலையடைந்த போது அத்தகைய வாணிகக் குழுக்களும் பேரரசுகளை அமைத்தன. இப்பேரரசுகள் தம் மொழி பேசும் மக்களையே அடக்கி அவர்கள் நிலத்தின் வளத்தைச் சுரண்டிச் சென்றபோது சுரண்டப்பட்ட மக்களின் தேசிய உணர்ச்சி மலர்ந்தது. தங்களைச் சுரண்டுவோரிலிருந்து தம்மை இனம் காணும் வகையில் தாம் பேசும் மொழியை தம்மை அடக்கியாளுவோர் மொழியிலிருந்தும் மாறுபடுத்திக்கொண்டனர்.[1] இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளம், சிங்களம் ஆகிய தேசியங்களின் வளர்ச்சியைக் கூறலாம். தமிழகத்தின், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்தே தமிழில் சேர நாட்டுத் திசைமொழி மலையாளமாக மாற்றப்பட்டது. மலையாளத்துக்கு இன்றைய எழுத்து வடிவத்தைக் கொடுத்த எழுத்தச்சனின் முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்று கூட நாட்டுப்புற மலையாளிகளிடம் கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.

அது போன்றே சிறுபான்மையராயிருந்த சிங்களர் பக்கம் பெரும்பான்மையினரான தமிழர்கள் சோழர்கள் தாக்குதலின் எதரொலியாக உருவான தேசிய உணர்விலிருந்தே சாய்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்களர்களின் பெயர்களில் உள்ள பின்னொட்டுகள் இந்த ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இன்றும் பத்மநாப, டக்ளசு தேவானந்த எனும் பெயர்கள் சிங்களப் பெயர்கள் போல் ஈறு குறிலாக இருக்கின்றன. அவர்கள் செயலும் சிங்களரைச் சார்ந்து நிற்கிறது. வல்லாண்மையை அண்டி வாழ்வதற்காகத் தேசியத்தை மாற்றிக்கொள்வதற்கு இவர்கள் எடுத்துக்காட்டுகள்.

தமிழகத்தில் தேசிய உணர்வு, அதாவது தம் நிலம் பற்றிய மக்களின் ஓர்மை கழகப் பாடல்களிலிருந்து தெரிகிறது. மோரியர் படையெடுப்பின் போது எல்லையிலிருந்த குறுநில மன்னர்களே அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆனால் அக்குறுநில மன்னர்களை அழித்ததன் மூலம் முவேந்தர்கள் தமிழகப் பாதுகாப்புக்கு ஊறு விளைத்தனர். தமிழரின் மானம் காப்பதற்காக இமயம் நோக்கிச் சென்ற செங்குட்டுவன் தமிழகம் முழுவதையும் ஓரரசாக்க வேண்டுமென்ற சாத்தனார் போன்றோரின் மறைமுக வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதைச் செய்திருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்.

தமிழகத் தேசிய உணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இளங்கோவடிகள். ஆனால் அவர் காலத்திலும் தொடர்ந்தும் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் தமிழகம் பலமுனைத் தாக்குதலுக்காளாகித் தன் முகத்தைச் சில காலம் இழந்தது.

சமணம் மூலமாக வந்தவர்கள் ஆட்சியாளர்களானார்கள். சமணம் வாணிகர்களின் சமயம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் அது வெளிநாட்டு வாணிகர்களின் சமயம், ஏனென்றால் சமணத்தை எதிர்த்து உருவான சிவனியத்துக்குப் பள்ளி எழுச்சி பாடியவரான காரைக்காலம்மையார் ஒரு தமிழ் வாணிகப் பெண்மணி. சம்பந்தருக்கு ஆதரவளித்தவர்களில் வாணிகர்களே வலிமை வாய்ந்தவர்கள்.

புத்த சமயமும் வெளிநாட்டவர் தொடர்பு கொண்டிருந்தது. தன் தந்தை காலத்தில் பன்னீராயிரம் சிங்கள வீரர்களைச் சிறைபிடித்து வந்த கரிகாலனின் புகாரைக் கயவாகு மணிமேகலையின் துணைகொண்டு அழித்தான். இவையனைத்துக்கும் எதிர்ப்பாக, தேசிய எழுச்சியாகத் தான் சிவனியம் உருவானது. சிவபெருமானை மகிழ்வித்தவனாக ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாடலில் இராவணனைப் புகழ்வதன் மூலம் அவனை கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத் தேசியத் தலைவர்களில் ஒருவனாக சம்பந்தர் உயர்த்திவிட்டார். இதன் மூலம் அக்காலகட்டத்தில் வைணவமும் தேசியத்துக்கு இரண்டகம் செய்ததை உய்த்துணரலாம்.[2]

தமிழ்த் தேசியத்தின் நிழலில் உருவான சோழப் பேரரசு அதில் நிலைத்து நிற்கவில்லை. மக்களின் வெறுப்புக்கு உள்ளானது. நாளடைவில் வெளியார் ஆதிக்கத்துக்குத் தமிழகம் மீண்டும் மீண்டும் ஆளானது. அவற்றிற்கு மக்களின் எதிர்ப்பின் எதிரொலிகளாக குற்றலாக் குறவஞ்சி, திரிகூடற் பள்ளு போன்ற சில இலக்கியத் தடயங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இவ்வெல்லா இயக்கங்களுக்கும் உள்ள ஒரு பொதுத் தன்மை, தாழ்ந்த சாதி மக்களைத் தங்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டுவதேயாகும்.

இவற்றுக்குப் பின் கி. பி. 1682 முதல் 7 ஆண்டு காலம் பாண்டிய நாட்டை ஆண்ட அரங்ககிருட்டின முத்துவீரப்பனிடம் தேசிய உணர்வு தலைகாட்டியது. 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெள்ளையரை எதிர்த்து சின்ன மருது வெளியிட்ட சீரங்கம் அறிக்கை தமிழகத் தேசிய வரலாற்றில் ஒப்பற்ற ஒன்றாகும்.


(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1] தங்களுக்குத் தனி அடையாளமாக சமயத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. எ-டு. மோசேயின் தலைமையில் யூதர்கள்.

[2] தமிழகத்தில் மாலியத்தின் எழுச்சி குறிஞ்சி நிலத் தலைவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் உருவாகியிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் மாலியத்தை வைத்து குறிஞ்சி, முல்லை நில மக்களிடையில் செயற்பட்டுவந்ததன் தடயம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. குடகு நாட்டை அடுத்த மாங்காட்டு(இது பெரும்பாலும் மங்களூராயிருக்கலாம்) மறையோனின் சுற்றுச்செலவு இதையே சுட்டுகிறது எனலாம். களப்பிரர்கள் முதலில் மாலியர்களாகவே இருந்ததாகத் தோன்றுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-3

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத் தேசியம்

உலகில் தேசிய இயக்கங்களுக்கென்று ஒரு பொதுத் தன்மையுண்டு. ஒவ்வொரு தேசியத்திலுமுள்ள மிக உயர் மட்டத்திலிருப்பவர்களிடமிருந்து தோன்றுவதே அந்தப் பொதுத் தன்மை. பெரும்பாலான நேர்வுகளில் இவ்வாறு தொடங்கிவைக்கும் குழுவினரின் பங்கு வெளி உலகுக்குத் தெரியுமுன்பே அவை அவ்வியக்கத்திலிருந்து விலகிப்போகும். அவ்வாறு தமிழகத்தில் தமிழகத் தேசியத்தைத் தொடங்கி வைத்தவர்கள் தமிழ் பேசும் பார்ப்பனர்களாகும்.

கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைக் கைப்பற்றியாண்ட தெலுங்கு, மராட்டியம், கன்னடம் ஆகிய மொழி அரசுகளின் காலத்தில் அரசு அதிகாரத்திலும் கோயில்களின் ஆளுமையிலும் அம்மொழி பேசும் பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டனர். தமிழர்களின் மொழியையும் பண்பாட்டையும் சமற்கிருதத்திலிருந்து உருவானவை என்றும் அவர்கள் கூறி வந்தனர். இதற்கு மறுப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள் பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச் சங்கம் மூலமாகவும் தனியாகவும் ஆய்வுகள் செய்து தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவினர். மு.இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார், கிருஷ்ணசாமி அய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் இவ்வரிசையில் முன்னணியில் நிற்கின்றனர்.தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று தனித்தமிழில் மாற்றித் தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்திட்ட சூரியநாராயண சாத்திரி ஓர் ஒளி விளக்காய்த் திகழ்கிறார்.

இந்த எழுச்சி வரலாற்றில் பிற்போக்கு விசைகளும் வலிமையாயிருந்தன. அவற்றுக்கு ஊக்கம் தந்தவர்கள் இறையியல் கழகத்தை உருவாக்கிய அமெரிக்கராகிய ஆலிவர் ஆல்காட்டும் உருசியரான பிளாவட்கி அம்மையாரும்.

தமிழ்த் தேசியத்தைத் திசை திருப்பிய இன்னொரு முகாமையான கூறு ஆரிய - திராவிட வரலாற்றுக் கோட்பாடாகும். இதுவும் மேலையரால் உருவாக்கப்பட்டதே. செருமானியரான மாக்சுமுல்லரால் ஆரியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. கால்டுவெல் ஐயரால் திராவிடக் கோட்பாடு உருவானது. ஆரியர்கள் நடு ஆசியாவிலிருந்தும் திராவிடர் நண்ணிலக் கடற் பகுதியிலிருந்தும் வந்தனர் என்று இவர்கள் கூறினர். திராவிடர்வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கூற்றைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் சாதி ஏற்றத்தாழ்வினால் உருவான ஒரு குமுகச் சிக்கலை இனச் சிக்கலாகப் புரிந்து கொண்டனர். ஆரிய இனக் கோட்பாட்டை அறிஞர்களின் கடும் எதிர்ப்பினால் மாக்சுமுல்லர்கைவிட்டுவிட்டாலும் இரு காரணங்களினால் அக்கோட்பாடு நிலைத்து விட்டது. அப்போது தமிழகத் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த பார்ப்பனரல்லா மேற்சாதியினர்தாங்கள் கடைப்பிடித்து வந்த சாதிய ஒடுக்குமுறைக்கு ஆரியர்களைக் காரணம் காட்டித் தப்பிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குத் தாம் ஒரு பெரிய இனத்தின் வழியினர் என்ற மாயை தெம்பைத் தந்தது. இந்த அடிப்டையில் தமிழகத் தேசிய உணர்வு திசை திரும்பி இனச்சிக்கலாக வடிவெடுத்தது.

தமிழகத் தேசிய இயக்கம் நீதிக் கட்சி எனப்படும் நயன்மைக் கட்சியிலிருந்து அரசியல் வடிவம் பெற்றது. அன்றைய தமிழகம் சென்னை மாகாணமாக, ஆந்திர, கன்னட, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்ததால் அந்த இயக்கத்திலும் தமிழர்களுடன் இம்மொழி பேசும் தலைவர்களும் இருந்தனர். திராவிடக் கோட்பாட்டுக்கு இப்பின்னணியும் வலுச் சேர்த்தது.

நயன்மைக் கட்சி பார்ப்பன மேலாண்மையை மட்டும் எதிர்த்து நிற்கவில்லை. வெள்ளையராட்சிக் காலத்தில் இந்தியாவில் அவர்களின் தேவைகளுக்காக அவர்கள் உருவாக்கிய தொழில் முனைவுகளிலிருந்து தவிர்க்க முடியாமல் உருவாகிய உள்நாட்டு மூலதனத்தில் வடக்கு வலிமை பெற்று தெற்கை நசுக்கி வந்தது. எனவே வடக்கின் பிடியிலிருந்து தெற்கின் பொருளியலைக் காக்கும் குறிக்கோளும் நயன்மைக் கட்சிக்கு இருந்தது.

இக்கட்சியின் தலைமையிலிருந்த நிலக்கிழார்களும் இடைக்கிழார்களும்(சமீன்தார்களும்) சிற்றரசர்களும் வாணிகப் பெருமக்களும் போர்க்குணம் உள்ளவர்களல்லர். எனவே ஆளுவோர்களாகிய வெள்ளையர்களுக்கு வேண்டுகோள்களை விடுப்பதிலேயே குறியாயிருந்தனர். காங்கிரசுக்கட்சி எனப்படும் பேரவைக் கட்சியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்த ஆங்கில அரசு நயன்மைக் கட்சிக்கு ஆதரவாக இருந்தது. 1920 - இல் முதன்முதல் உருவான நயன்மைக் கட்சி அரசு கல்வியிலும் அரசுப் பணியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததுடன் புதிய தொழில்களைத் தமிழக மக்கள் தொடங்குவதற்கு மிகுந்த ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்து தமிழகத்தில் முதன்முதலில் பெருந்தொழில்கள் தோன்ற வழிவகுத்துக் கொடுத்தது. இவ்வாறு ஆங்கிலேய அரசின் ஆதரவு, "ஆரிய இன" எதிர்ப்பு, பொருளியல் தன்னுரிமை என்ற திசைகளில் ஊசலாடியதால் நிலப்பற்று என்ற உணர்வு இவ்வியக்கத்தில் வலிமை பெறவில்லை.

நாளடைவில் நயன்மைக் கட்சியில் இருந்த மேற்சாதியினரும் வாணிகர்களும் கட்சியினுள் உருவாகும் சாதிய எதிர்ப்பைப் பொறுக்க முடியாமலும் தங்கள் நலனுக்கு வளர்ந்து வரும் பேரவைக் கட்சியே உகந்தது என்று கருதியும் வெளியேறினர். கட்சிக்கு வலுவான தலைமை ஒன்று வேண்டும் என்ற நிலையில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து பேரவைக் கட்சியிலிருந்து வெளியேறி தன்மான இயக்கத்தைத் தொடங்கியிருந்த பெரியாரிடம் தலைமையை ஒப்படைத்தனர்.

பெரியாரிடம் தலைமை வந்த பின்னர் இயக்கத்தில் ஒர் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. பொருளியல் வளர்ச்சி பற்றிய பார்வை பெரியாருக்குக் கிடையாது. சாதி, சமயம், மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்ப்பதிலேயே அவரது முழுக் கவனமும் இருந்தது. இந்திய விடுலைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழகம், அதாவது அன்றைய நிலையில் திராவிட நாடு விடுதலை பெறவேண்டுமென்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார். இயக்கத்தின் பெயரையும் திராவிடர்கழகம் என மாற்றினார்.

ஆனால் வெறும் சாதி எதிப்பு மட்டும் ஒரு நாட்டு விடுதலையின் அடிப்டையாகயிருக்க முடியாது. எனவே சிறுகச் சிறுகப் பொருளியல் காரணங்களும் முன்வைக்கப்பட்டன. இந்தப் பணியை அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். இந்த அனைத்துக் கூறுகளையும் கொண்டதாக திராவிட இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வலிமை பெற்று வளர்ந்தது. தமிழகத்தின் அறிவும் ஆற்றலும் நிறைந்த இளைஞர் கூட்டம் இயக்கத்தின் கட்டுப்பாட்டினுள் நின்றது.

இந்நிலையில் இயக்கத்தினுள் முரண்பாடுகள் வலுத்துவந்தன. பெரியார் இயக்கத்தைத் தன் சொந்தச் சொத்து போலும் ஒரு பெருந்தொழில் நிறுவனம் போலும் நடத்தி வந்தார். இது அடுத்த நிலைத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தக்க காலம் கருதியிருந்தனர். அத்தகைய வாய்ப்பு ஒன்று உருவானது.

தொடக்கத்திலிருந்தே பெரியாரின் அரசியல் எதிரியும் தனிநிலை நண்பருமான ராசாசி எனப்படும் ஆச்சாரியாரின் அறிவுரையின் துணையுடனும் தனக்குப் பின் கழகத்தின் தலைமையையும் அதன் சொத்தையும் நடத்திச் செல்லும் ஒரு வழித்தோன்றல் வேண்டுமென்பதாலும் தனக்குத் தனிநிலை உதவியாளராயிருந்த மணியம்மை என்ற இளம்பெண்ணைப் பெரியார் தன் 61ஆம் அகவையில் மணமுடித்தார். இதனைக் காரணமாகக் காட்டி அண்ணாத்துரை கட்சியின் பெரும்பான்மையான இளந்தலைமுறைத் தலைவர்களையும் தொண்டர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை 1949 - இல் தொடங்கினார்.

திராவிடர் கழகத்தின் கொள்கைகளையே தொடர்ந்து பரப்பினர். தி.க.வும் தி.மு.க.வும் ″இரட்டைக் குழல் துப்பாக்கி″ என்றனர்.

பெரியார் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பது தன் கட்சியின் நோக்கமல்ல என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் தி.மு.க. 1952 - இல் மாணிக்கவேலர் என்பவரோடு ஓர்உடன்பாடு செய்துகொண்டது. சட்டமன்றத்தில் தி.மு.க.வின் கொள்கைளுக்காக வாதாடினால் அவரது தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடுவதாக ஒப்புப்கொண்டது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் வாக்குறுதியைக் கைவிட்டு ஆச்சாரியார் அமைத்த அமைச்சரவையில் அவர் சேர்ந்துவிட்டார்.

1957 - இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்தலில் ஈடுபட்டு அதன் முலம் திராவிட நாடு விடுதலைக்குப் பாடுபடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1957 தேர்தலில் பங்கு கொண்டு 15 இடங்களைப் பிடித்தனர்.

அதற்குள் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளிலொன்றான இறைமறுப்பைக் கைவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டனர். சமய நடவடிக்கைகள், குறிப்பாக கிறித்துவ, முகம்மதிய சமயங்கள் தொடர்பானவற்றைத் திறனாய்வது கைவிடப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனிய எதிர்ப்பாகக் குறுக்கப்பட்டது.

1962 தேர்தலுக்கு முன்பே தி.மு.க.வில் ஒரு பெரும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. தி.மு.க.வில் ஐம்பெருந் தலைவர்கள் பட்டியலில் இல்லாதிருந்த மு.கருணாநிதி பிறரையெல்லாம் புறந்தள்ளி மேலேறிக்கொண்டிருந்தார். திரைப்படத் துறையிலிருந்த தன் தொடர்பாலும் பண வலிமையாலும் ஒவ்வொரு மாவட்ட மாநாடுகளை நடத்தும் போதும் உள்ளுர்த் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தன் பிடிப்பைக் கட்சியில் மிக வலுவாக நிலைநாட்டியிருந்தார். அத்துடன் திரைப்பட நடிகரான ம.கோ. இராமச்சந்திரனும் செல்வாக்கில் வளர்ந்திருந்தார். இதனால் பல தலைவர்கள் கசப்புற்றிருந்தனர். அவர்களின் குரலாய் சம்பத் எழுந்தார். திராவிட நாட்டுப் பிரிவினை என்பது தி.மு.க. தலைவர்களுக்கு வெறும் மேடை முழக்கமே; அதில் அவர்களுக்கு உண்மையான ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை என்று அவர் கூறினார். கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் பலரை அவர் கவர்ந்தார். மோதல் முற்றி 1961 - இல் சம்பத் தனியாகப் பிரிந்தார். தன் கட்சிக்குத் தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். இன்று கூடத் ″தேசியம்″ என்ற சொல்லுக்கு ″இந்தியத் தேசியம்″ என்றே சராசரித் தமிழர்கள் பொருள் கொள்வர். இன்று வரை தமிழக அரசியல் கட்சி எதுவும் தேசியம் என்ற சொல்லின் அரசியல் பொருளை மக்களுக்கு புரியவைக்க முயலவில்லை. எனவே கட்சியின் பெயரைப் பார்த்ததுமே சம்பத்துடன் இணைய நினைத்தவர்களில் மிகப் பெரும்பாலோர் நின்றுவிட்டனர். 1962 இல் நடைபெற்ற தேர்தலில் ஈடுபட்டுப் படுதோல்வி அடைந்ததுடன் கட்சியைத் தொடர்ந்து நடந்த ஆற்றலின்றி பேரவைக் கட்சியில் அடைக்கலம் புகுந்தனர் சம்பத்தும் அவரது தோழர்களும்.

1952 - இல் முதலமைச்சரான ஆச்சாரியார் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நாளில் பாதியில் தம் பெற்றோரின் தொழிலில் பயிற்சி பெறவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டுவந்ததால் பழைய வருணமுறையை மீட்கும் திட்டமென்று அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். எனவே ஆச்சாரியார் பதவி விலக அவ்விடத்தில் காமராசர் வந்தார். அவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட போது அனைத்துக் கட்சியினரும் அவரை ஆதரித்தனர். இதன் தொடர்ச்சியாகப் பெரியார் காமராசரைப் ″பச்சைத் தமிழர்″எனக் குறிப்பிட்டு அதைச் சாக்காக வைத்துப் பேரவைக் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். உண்மையில் தி.மு.க.வுக்கு எதிர்நிலை எடுப்பதே உண்மையான அவரது நோக்கம். பெரியாரின் அண்ணன் மகனான சம்பத் தி.மு.க.வில் பிரிவேற்படுத்த மேற்கொண்ட முயற்சியும் பெரியார், காமராசர் ஆகியோரின் தூண்டுதலால் தான் என்ற குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம்.

இதற்கிடையில் இந்திய அரசு திட்டமிட்ட பொருளியல் என்ற பெயரில் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியது. இத்திட்டங்களில் தமிழகத்துக்குப் போதிய ஒதுக்கீடு இல்லை என்று தி.மு.க. கடுமையான கருத்துப் பரப்பல் செய்தது. இதன் மூலம் பம்பாய் மூலதனம் தமிழக மூலதனத்தை அடிமைப்படுத்துகிறது என்ற பழைய நிலைப்பாடு ஓசைப்படாமல் மூலையில் போடப்பட்டது. அது இன்று வரை எவர்கவனத்துக்கும் வரவில்லை.

1962 - இல் உள்துறை அமைச்சராயிருந்த இலால்பகதூர் சாத்திரி பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவந்தார். அச்சட்டத்தின்படி பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட உடனே தி.மு.க. தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. இவ்வாறு தி.மு.க. கொள்கைகளை எல்லாம் கைவிட்டுவிட்ட வெறும் பதவிதேடிகளின் கும்பலாக இழிந்துபோய் விட்டது; உயிரை இழந்த வெறும் பிணமாக மாறிவிட்டது.

1957 தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரும் போட்டியிட்ட தொகுதிகளை 1962 - இல் குறிவைத்துப் பேரவைக் கட்சி வேலை செய்தது. காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணாத்துரை வாக்காளர்களைக் கெஞ்சினார். கண்ணீர்விட்டு அழாத குறை. இறுதியில் கருணாநிதி தவிர 14 பேரும் தோல்வியுற்றனர். ஆனால் புதிதாக 61பேர் வெற்றிபெற்றனர்.

1965 இந்தியக் குடியரசு நாளான சனவரி 26 ஆம் நாள் முதல் இந்தி இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக வரவிருந்தது. அந்த நாளைத் துயரநாளாகக் கொண்டாடுவதென தி.மு.க. தீர்மானித்தது. ஆனால் தி.மு.க. தலைவர்கள் எதிர்பார்க்காத அளவில் இப்போராட்டம் வெடித்தது. மாணவர்கள் வீரார்ப்போடு புறப்பட்டனர். காவல் துறையினர்க்கும் மாணவர்களுக்குமாக மூண்ட மோதல் மக்களுக்கும் காவலர்களுக்குமாகப் புது வடிவம் பெற்றது. படையினர் அழைக்கப்பட்டனர். இந்த எதிர்பாராத வேகத்தைக் கண்டு அண்ணாத்துரையும் துணைவர்களும் கலங்கினர். மக்களையும் மாணவர்களையும் அமைதிப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் உண்மையில் தி.மு.க. எந்தப் பங்கும் எடுக்கவில்லை. ஆனால் முழுப் பயனையும் அது பெற்றது. 1967 தேர்தலில் பேரவைக் கட்சியின் முற்றதிகாரத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அண்ணாத்துரை வெற்றிபெற்றார். கொள்கையில் இரு முனைகளான பொதுமைக் கட்சிகளும் ஆச்சாரியாரின் சுதந்திரக் கட்சியும் இதில் பங்கேற்றன.

இந்தியாவில் கொள்கையில்லாக் கூட்டணியை முதன் முதலில் உருவாக்கிய பெருமை தமிழகத்துக்கும் அதைப் பெற்றுத்தந்த பெருமை அண்ணாத்துரைக்கும் உரியது.

கூட்டணியின் விளைவாக தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஏழைகளாய்ச் சட்டமன்றத்தினுள் நுழைந்த தி.மு.க. ச.ம.உ.க்கள்(சட்ட மன்ற உறுப்பினர்கள்) மகிழுந்துகள் வாங்க முற்பட்டனர். இதனால் உருவான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காக ″தொகுதி மக்கள் ச.ம.உ.க்களுக்கு மகிழுந்து வழங்கும்″ ஊழல் விழாக்களை அண்ணாத்துரையே முன்னின்று நடத்தினார். அவருடைய ஆட்சி சீரழிந்து பெயர் கெடும் முன் புற்றுநோய் அவரைக் கொன்று அவர் பெயரைக் காத்தது.

பின்னர் திராவிட இயக்கத்தில் பச்சையான ஊழலும் பதவிச் சண்டையும் விளம்பர அரசியலும் சொத்து சேர்த்தலும் பெண்ணை நாடலும் என நாற்றமெடுத்தது.

அண்ணாத்துரை காலத்தில் தில்லியில் ஆட்சி புரிந்த இந்திரா காந்திக்கும் பேரவைக் கட்சித் தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கருணாநிதியின் காலத்தில் 1969-இல் வெடித்தது. தமிழகத்தில் காமராசர் தலைமையிலான பழைய பேரவைக் கட்சி பெரும் செல்வாக்கோடு விளங்கியது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களின் துணைய நாடி இந்திரா கருணாநிதியை அணுகினார். பின்னர் பிற கட்சிகளின் தயவிலேயே ஆட்சி புரிய விரும்பாத இந்திரா, 1971- இல் பாராளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்த விரும்பினார். தி.மு.க.வின் 4 ஆண்டுக்கால ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பதாகக் கருணாநிதி கருதினார். காமராசரும் ஆட்சிக்கு எதிராகக் கணைகள் தொடுக்கத் தொடங்கியிருந்தார். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியும் சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் அறிவித்தார். சட்டமன்றத் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க.வுக்கும் பாராளுமன்றத் தொகுதிகள் அனைத்தும் இந்திரா பேரவைக்கும் ஒதுக்கப்பட்டன.

கழக வரலாற்றிலேயே, தமிழக வரலாற்றிலேயே 183 சட்டமன்ற உறுப்பினர்களை தி.மு.க. வென்றது. இந்திரா காந்திக்கு இன்னும் தனது உதவி தேவைப்படும் என்ற மிதப்பில் கருணாநிதி ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார். 1974 - இல் அலகபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் படி இந்திரா காந்தி பதவியிழக்க வேண்டியிருந்த சூழலில் நெருக்கடி நிலை ஒன்றை அறிவித்து அதிலிருந்து தப்பினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், இந்திரா காந்தியைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் என்ற வகையில் தி.மு.க. அரசும் கட்சியும் செயல்பட்டன. ஓர் எல்லை வரை பொறுத்த இந்திரா 1976 - இல் திடீரென்று படை அணிகளைத் தமிழகத்தினுள் அனுப்பி தி.மு.க. அரசைக் கவிழ்த்தார். பலர் தலைமறைவாயினர். கீழ்நிலைத் தலைவர்கள், தொண்டர்கள் என்று பலரும் சிறைச்சாலைகளில் அடித்தே கொல்லப்பட்டனர்.

கொள்கைப் பரப்பலுக்குச் சிறந்த கருவி என்ற வகையில் நாடகங்கள், திரைப்படங்களைத் தி.மு.க. பயன்படுத்தியது. அண்ணாத்துரையே ஒரு சிறந்த நாடகாசிரியர். கருணாநிதியும் அவ்வாறே. இருவரும் பிற தலைவர்கள் சிலரும் கட்சி மாநாடுகளில் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். திரைப்படத் துறையிலும் அண்ணாத்துரை கதை, உரையாடல்கள் எழுதியிருக்கிறார். சொந்தப் படமும் எடுத்திருக்கிறார். கருணாநிதி திரைப்படத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டு பெருஞ்செல்வம் சேர்த்தவர்.

திரைப்பட, நாடகத் துறைகளில் ஈடுபடுவது தி.மு.க.வுக்கு மட்டும் உரிய பழக்கமல்ல. பேரவைக் கட்சிக்கும் இந்த மரபு உண்டு. தமிழகப் பேரவைக் கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி கட்சி நாடகங்களில் நடித்திருக்கிறார். கல்கி முதலியோர் திரைக்கதை உரையாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஏ.வி.எம். போன்ற திரைப்பட நிறுவனங்கள், நவாபு இராசமாணிக்கம் பிள்ளையின் நாடக நிறுவனங்கள், கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் திரைப்படங்கள் மூலமும் நாடகங்கள் மூலமும் பேரவைக் கட்சிக்குப் பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவலில் கே.ஆர். இராமசாமி, ம.கோ. இரா., சிவாசி கணேசன், இரசேந்திரன் போன்ற நடிகர்ளை தி.மு.க. பயன்படுத்தியது. கணேசன் இடையில் ஓடிவிட்டார். ம.கோ.இரா. பெரும் ஆற்றலாக வளர்ந்துவந்தார். தேர்தல் முடிவுகளில் அவரது தாக்கம் இருந்தது. தி.மு.க.வின் வலிமையின் பின்னணியில் ம.கோ.இரா.வின் சுவைஞர் மன்றங்கள் இருப்பது கொஞ்சங் கொஞ்சமாகக் கருணாநிதிக்கு உறுத்தியது. எனவே தனது மகன் முத்துவைத் திரைப்படத் துறையில் நுழைத்து அதன் மூலமாக ம.கோ.இரா.வை ஓரங்கட்டுவது என்று திட்டமிட்டுச் செயற்படத் தொடங்கினார் கருணாநிதி. தினந்தந்தி நாழிதழ் உரிமையாளரும் அமைச்சராயுமிருந்த ஆதித்தனாரின்[1] துணைகொண்டு ம.கோ.இரா. மன்றங்களை முத்து மன்றங்களாக மாற்ற கருணாநிதி முற்பட்ட போது ம.கோ.இரா. நேரடி மோதலில் ஈடுபட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி தனிக் கட்சியாக 1973-இல் அண்ணா தி.மு.க.வைத் தொடங்கினார்.

ஆட்சிக் கலைப்பினாலும் ஒடுக்குமுறையாலும் நடுநடுங்கிப் போன கருணாநிதியிடம் அதுவரை இருந்தது திமிர்தானேயொழிய வீரமல்ல என்பது அவருக்கும் அவரை நோட்டமிட்டு வந்தவர்களுக்கும் தெரிந்தது.

1976-இல் ம.கோ.இரா. இந்திரா பேரவையோடு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். 1979-இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் கருணாநிதி ம.கோ. இரா.வின் கட்சியைத் தோற்கடித்தார். அரசியலமைப்புச் சட்ட விதி 356-இன் கீழ் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து சட்டமன்றத் தேர்தலுக்கு வழி வகுத்தார் கருணாநிதி. எந்தக் கண்ணோட்டத்திலும் முட்டாள்தனமென்று மெய்ப்பிக்கத்தக்க வகையில் பாதிக்குப் பாதி தொகுதிகளைத் தத்தம் அணிகளுக்குப் பங்கிட்டு முதலமைச்சர் பதவி தனக்கென்று இந்திராவினால் அரைமனதுடன் அளிக்கப்பட்ட ஒரு வெற்று வாக்குறுதியை மட்டும் பெற்றார். தேர்தலில் ம.கோ. இரா. வென்றார். அன்றிலிருந்று இறுதி வரைக்கும் பேரவைக் கட்சி தன்னை மிதித்தாலும் மறைவாக அதன் காலைக் கட்டிச் கொண்டு தி.மு.க. வாழ்கிறது.

ம.கோ.இரா.-வுக்குப் பின் வந்த செயலலிதா காலத்தில் அ.தி.மு.க. பேரவைக் கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்து இன்று முரணி நின்றாலும் மறைமுகமாக பேரவைக் கட்சியின் தலைமைக்கு அடிபணிந்தே நிற்கிறது.

இவ்வாறு இன்று தமிழ்த் தேசியம் என்ற ஒன்று இந்திய அரசியல் சூழலில் நிலவுவதாகக் கூற முடியவில்லை.

இந்தச் சூழலில் திராவிட இயக்கத்தைப் பற்றிய ஒரு மனந்திறந்த திறனாய்வை முன்வைப்பது நம் கடமையாகும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] ம.கோ.இரா.வின் செல்வாக்கு விரைந்து வளர்ந்து வந்த 1950-களில் ஆதித்தனார் அவரைக் கிழட்டு நடிகர் என்றும் மலையாளி என்றும் குறைகூறி அவரது நாழிதழில் எழுதினார். விசயபுரி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆனந்தன் என்ற நடிகரின் நடிப்பை வானளாவப் புகழ்ந்ததுடன் தமிழன் என்று போற்றவும் செய்தார். பின்னர் நாம் தமிழர் இயக்கம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார். திராவிட நாடு என்பது தமிழர்களுக்கு நலம் செய்யாது; தமிழர் நலனுக்காகத் தனி அரசியல் அமைப்பு வேண்டுமென்று சரியாகவே சொன்னார். சடுகுடு போன்ற தமிழ் மரபு விளையாட்டுகளை ஊக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். (அவரது முன்முயற்சியில் நடைபெறும் போட்டிகளில் வழங்கப்படும் கோப்பைகளை நிகழ்ச்சி முடிந்த பின் அவரே திரும்ப வாங்கி வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது). தி.மு.க.வின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் குறைகூறி வந்தவர் திடீரென்று 1967 தேர்தலில் அக்கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலில் சட்டப்பேரவைத் தலைவராகவும் பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுது அவர் மீது பேருந்துகளுக்கு டயர்கள் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய இந்த நடவடிக்கைகளின் உண்மையான நோக்கம், பின்னணி போன்றவை இன்றும் புரியாத புதிர்களாக உள்ளன. அவருடைய பெயரையும் கட்சியின் பெயரையும் கூறிக்கொண்டு இன்றும் சிலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் செயல் திட்டம் எதுவுமில்லை என்பதுடன் அவர்களது நடவடிக்கைகளும் புதிராகவே உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-4

பெரியாரைத் திறனாய்வோம்

பேரவைக் கட்சியில் இருந்த போதும் அதிலிருந்து வெளியே வந்த தொடக்க காலத்திலும் ஒரு நேர்மையான சாதிய எதிர்ப்புணர்வை அவரிடம் நம்மால் காண முடிகிறது. [1] ஊர் ஊராகக் கடும் வன்முறை எதிர்ப்புகளுக்கிடையில் உள்ளுரிலுள்ள ஆர்வலர்களின் உறுதுணையோடு சாதி சார்ந்த பழமைக் கருத்துகளுக்கு எதிர்ப்பை விதைத்ததில் அவரது வீரம் வெளிப்படுகிறது. ஆனால் பல வேளைகளில் ஒரு கோழைத்தனம் காணப்பட்டது. 1933-இல் உருசியா சென்று திரும்பிய கையோடு பொதுமைக் குமுகத்தை உருவாக்குவதற்கென்று ஈரோட்டுத் திட்டத்தை வெளியிட்டார். ஆங்கில அரசு அவரைச் சிறையிலிட்டு ஒடுக்குமுறையைக் கையாண்டதும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர் இன்னொரு முறை அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

சாதியத்தை எதிர்த்துக் கருத்துப் பரப்பல் செய்து வந்த வேளையில் முத்துராமலிங்கத்தேவர்மூலமாக நம் நாட்டுப் பிற்போக்கு விசைகளின் நேரடியான அறைகூவல் வந்தது. அதை அவர்களது வழியிலேயே எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று திராவிடர் கழகத்துக்கு இருந்தது. ஆனால் பெரியார் அதை எதிர்கொள்ளவில்லை. எதிர்கொண்டிருந்தால் இன்று நம்மால் எதிர்கொண்டு தீர்வு காண முடியாமலிருக்கும் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் பிளவு இருந்திருக்காது. தமிழகக் குமுக அமைப்பே புரட்சிகரமாக மாறியிருக்கும். எண்ணிக்கையில் குறைந்த, அடிதடிகளில் இறங்காத பார்ப்பனர்களையும் அவர்கள் பெண்களையும் வரைமுறையின்றி வசைபாடிய பெரியாரின் ″வீரம்″ முத்துராமலிங்கரிடம் பிடரியில் கால்பட பின்வாங்கி ஓடியது.

பார்ப்பன - பனியாக் கூட்டணி தமிழகத்தைச் சுரண்டுவதாக அடிக்கடி பெரியார் சுட்டிச் காட்டியுள்ளார். ஆனார் பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்துக் செயற்பட்டுள்ளார். பனியாக்கள் எனப்படும் மார்வாரிகளை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை அவர்.

1950களில் சென்னையிலுள்ள செனாய்நகரிலும் சவுக்கார்ப்பேட்டையிலும் வாழும் மார்வாரிகள் மீது தாக்குதல் நடைபெறும் என்ற அச்சம் நிலவும் அளவுக்கு இயக்கத்தவர்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அம்பிசு கபே எனும் உணவகத்தின் பெயர்ப் பலகையிலிருந்த ″பிராமணாள்″ என்ற சொல்லை அழிக்கும் போராட்டத்தில் கழகத்தவரை ஏறக்குறைய 1½ ஆண்டுகள் பெரியார் ஈடுபடுத்தினார். அத்துடன் ஊரெங்கும் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டங்கள் நடத்தினார்.

மார்வாரிகள் சமண சமயத்தினர். இந்து சமயத்துக்கு எதிராக சமண சமயத்தை உயர்த்திப் பேசுவது திராவிட இயக்கத்தவர் வழக்கம். இவ்வாறு தம் மறைமுக ஆதரவை மார்வாரிகளுக்குத் தந்தனர். பெரியாரின் செயற்பாடுளையும் திராவிட இயக்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் மார்வாரிகள் முழுமையாக வளர்ந்து தமிழகப் பொருளியலைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதையும் பார்க்கும் போது பெரியாருக்கும் மாரிவாரிகளுக்கும் இடையில் ஒரு மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவிலலை. அவர் தன் வாழ்நாளில் ஈட்டிய உரூபாய் 125 கோடிப் பணம் எடைக்கு எடை வெள்ளிப் பணம், பணத்தாள் மாலைகள், பெயர் வைக்கக் கட்டணம் போன்றவற்றால் மட்டும் சேர்ந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.

பெரியார் தேர்தல்களில் தன் கட்சி மூலம் நேரடியாக ஈடுபடுவதில்லையே தவிர ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவதொரு கட்சிக்குப் பாடுபட்டிருக்கிறார். அத்துடன் அவர் எப்போதும் ஆளும் கட்சிகளின் ஆதரவாளராகவே இருந்திருக்கிறார். ஆச்சாரியார், பக்தவத்சலம் இருவரின் ஆட்சியை மட்டுமே எதிர்த்திருக்கிறார். அவர்கள் இருவரும் இவரது பரிந்துரைகளை ஏற்றுச் செயற்பட முன்வந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மைக் காரணமாக இருக்க வேண்டும்.

பெரியாருக்குப் பின் வந்த தலைமை வேற்று நாட்டு மதங்களுக்கு விளம்பரம் தேடியது. நாட்டுப்புறத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக் கிணற்றிலே தண்ணீர் எடுக்கவும் பொதுச் சுடுகாட்டில் பிணம் எரிக்கவும் போராடிக்கொண்டிருந்த வேளையில் கோயில்களில் கிறித்துவர்களும் முசுலீம்களும் யார் வேண்டுமானாலும் பூசகராகலாம், இந்துக்களில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசகராகலாம் என்று கூறி அம்மதங்களுக்கு மறைமுக விளம்பரம் செய்து போராட்டங்கள் நடத்தியது.

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்போம். அக்கட்சியின் முதல் தலைவரான அண்ணாத்துரையும் அடுத்து வந்த கருணாநிதியும் பொட்டுக்கட்டும் சாதியினர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை பார்ப்பனர்களுடன் கோயில்களில் நெருங்கி உறவாடி வந்தவார்கள். ஏதோ காரணத்தினால் இவ்விரு சாதியினர்க்கும் பிணக்கு ஏற்பட பார்ப்பனர்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தேவதாசிப் பெண்களை இழிவுபடுத்தினர். அதன் எதிர்வினை தான் அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரின் தொடக்க காலப் புரட்சித் தன்மை. அரசியலில் தலைமை பெற்று குமுகத்திலும் ஏற்புக் கிடைத்தவுடன் பார்ப்பனார்கள் நட்புக் கரம் நீட்டினர், இவர்கள் பற்றிக் கொண்டனர். ஆனால் வெளிப்டையாக அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

அண்ணாத்துரை மிக உயாந்த அறிவுத்திறனும் நினைவாற்றலும் கல்வி அறிவும் படைத்தவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். தன் திறமைகளைத் தானே அறிந்தவர். இளையோர், முதியோர், கற்றோர், கல்லாதோர் என்று அனைவரையும் ஈர்க்கும் திறன் படைத்தவர். உலகில் தோன்றிய பெரும் தலைவர்களைப் போன்றவர். அவர் முன்னால் ஒரு மோசே, முகமது நபி, ஆலிவர் கிராமவெல், சோன் ஆப் ஆர்க், மாசினி, கரிபால்டி, பிம்மார்க், கமால் பாச்சா, லெனின், மசேதுங் போன்ற உலக விடுதலை வீரர்களுடன் ஒப்பிடும் வகையில் பெருமை வாய்ந்த ஓர் களம் விரிந்து கிடந்தது. அதனை ஆளும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் அவர் அவை அனைத்தையும் ஒரு முதலமைச்சர் பதவிக்காகக் காவு கொடுத்து விட்டது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு மாபெரும் அவலமாகும்.

தமிழக மக்களின் பொருளியல் நலன்களை இந்திய அரசிடமும் வட இந்தியப் பண முதலைகளிடமும் விலைபேசி விட்டு பேருந்துகளில் திருவள்ளுவர் படங்களையும் திருக்குறள்களையும் எழுதிவைத்தல், பேருந்துக் கழகங்களுக்கு பாண்டியன், சேரன், சோழன், பல்லவன் என்று பெயர்கள் சூட்டுதல். திருவள்ளுவருக்குக் குமரியில் சிலை எடுத்தல் என்று உணர்ச்சிகளை ஆற்றும் ஏமாற்று நடவடிக்கைகளைக் கருணாநிதி மேற்கொண்டார். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்ப்பதில் பங்கேற்றார். காவிரியில் கன்னட அரசு பல அணைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தார்.

தன்னை நாடி வருவோர்க்கு பதவியின் துணையால் உதவிக்கரம் நீட்டி ஒரு மாபெரும் மாபியாத் தலைவர் போல் கருணாநிதி விளங்கினார். ஊழல்களில் எதிர்க் கட்சியினருக்கும் உரிமை வழங்கி அவர்களின் எதிர்ப்பைத் தவித்தார்.

மக்களுக்கு நிலையான பயன் தரும் திட்டங்களை வகுக்காமலும் அவ்வாறு வகுத்ததைச் செயற்படுத்துவதற்குத் தங்களுக்கு அதிகாரமில்லை என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்காமலும் ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல், நர(ரிக்சா)வண்டி வழங்குதல் போன்ற இலவசத் திட்டங்களை அறிமுகம் செய்தார். நெடுநாட்களாக மக்கள் மறந்து விட்டிருந்த குடிப் பழக்கத்தைப் புதிய, இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கை ஒத்திவைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தமிழகத்தில் ஒரு பெரும் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிகோலினார். தனக்கும் தன் கட்சியினருக்கும் பல தலைமுறைகளுக்கு வேண்டிய செல்வத்தைத் தன் ஆட்சிக் காலத்திலும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய காலத்திலும் திரட்டினார். அவரும் அவரது கட்சியினரும் ஆங்கிலம், இந்தி கற்பிக்கும் மழலையர் பள்ளிக்குத் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அனுப்பினர். தமிழ் ஆட்சிமொழித் திட்டம் பேரவை ஆட்சிக் காலத்தை விட மிக மந்தமாகவே செயற்பட்டது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தை வகுத்தளித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை அலைக்கழித்து பலரின் கடுமையாக கண்டனத்துக்குப் பின்னரே அரைமனதாக ஒப்புதல் தந்தார். பார்பபனரை ஒடுக்குவதாக ஒருபுறம் பொய் கூறிக்கொண்டு நான்காம் நிலை ஊழியர்களிலிருந்து உயர் பதவிகள் வரை அவர்களுக்கு மறைமுகமான முன்னுரிமை வழங்கப்பட்டது. கட்சியின் பதவிகளில் கூட பார்ப்பனர் அமர்த்தப்பட்டனர்.

ஆண்டுதோறும் மார்வாரிகள் நடத்தும் பொங்கல் விழாவில் கருணாநிதி கலந்துகொள்வார். கடந்த 25 ஆண்டுகளாக இராசத்தானி சங்கத்தாருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அவர் ஒரு முறை பெருமையுடன் குறிப்பிட்டார்.

கொள்கையடிப்படையிலன்றி வெறும் ஊழலைக் காரணமாகக் காட்டி வெளியேறிய ம.கோ.இரா. பெரியாரைப் போல், அண்ணாத்துரையைப் போல், கருணாநிதியைப் போல் ஒரு கோழை.

எடுத்துக்காட்டாக உயர் நீதிமன்றம் வரை தீர்ப்புகள் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்த முயற்சியை முறியடிக்க இந்திரா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவர் என்று ஆணை பிறப்பித்து தமிழ் தெரியாத ஒரு நீதிபதியைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அமர்த்தினார். தமிழ் நீதிமன்ற மொழியாவதற்கு நடுவணரசு இவ்வாறு மறைமுகத் தடை விதித்துள்ளது என்ற உண்மையை அவர் மக்கள் முன் எடுத்து வைக்கவில்லை.

மதுரை மீனாட்சி ஆலை, இந்தியா சிமென்று ஆலை போன்றவை அரசுடைமை வங்கிகள், உயிர்காப்பீட்டுக் கழகம் போன்றவற்றின் துணையுடன் அயலவர்கள் கைகளுக்கு மாறிய போது ம.கோ. இரா. அரசு அதற்குத் துணைநின்றது. நயன்மைக் கட்சி காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட தமிழகத் தொழிற்கூடங்கள் அயலவருக்குத் தாரைவார்க்கப்பட்டன. தாதா, டாடா நிறுவனங்களுடன் தமிழக. அரசு நிறுவனங்கள் கூட்டு வைத்துத் தொழில்களைத் தொடங்கியது. எந்த வடநாட்டு முலதனத்தைக் காட்டி வளர்ந்து ஆட்சியைப் பிடித்தார்களோ அதே ஆட்சியை அதே வடநாட்டு முலதனத்தை இங்கு கொண்டுவருவதற்குப் பயன்படுத்தியுள்ளார்.

மக்களிடமிருந்து கையூட்டுப் பெறும் ஒரே நோக்கத்துடன் மிக எளிய பட்டா மாற்றுவதிலிருந்து தொழில்களுக்கு மின்சாரம் பெறுவது வரை எண்ணற்ற சிக்கலான விதி முறைகளை உருவாக்கி மக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் சலித்து செயலற்று நிற்கிறார்கள் மக்கள். அனைத்து மட்டத்திலும் தொழில் தேக்கம் ஏற்பட்டு படித்தோரும் படியாதோரும் செல்வரும் பிறரும் வெளிநாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் ஓடி மாய்ந்து சீரழிகின்றனர். பத்திரங்கள் பதிவதற்குக் கூட பிற மாநிலங்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.[2]

திராவிட இயக்கத்தினர் கையில் ஆட்சி வந்த பின்னர் அவர்கள் தம் பொருளியல் நடவடிக்கைகளுக்கு அவர்களது ஆட்சி அதிகாரமே உறுதுணையாய் நின்றது. எனவே பிற மக்களின் இடர்கள் தெரியாதது மட்டுமல்ல, பிறரை விடத் தமக்குக் கிடைக்கும் முன்னுரிமைகளாலும் முற்றுரிமைகளாலும் இத்தகைய தடங்கல்களுக்கு அவர்கள் ஆதரவாய் நின்றனர். எதிர்க்கட்சியாய் இருந்த போதும் தி.மு.க.வினர்க்கு இத்தகைய முன்னுரிமைகள் கிடைத்தன. இன்று எதிர்க்கட்சி என்ற நிலையும் தகர்ந்து போனதால் தான் கருணாநிதியை விட்டு வை.கோ.வுக்கு ஆதரவாகப் பலர் ஓடியிருக்கின்றனர். அதன் மூலம் ஆட்சியையாவது, குறைந்தது முதன்மை எதிர்க்கட்சி இடத்தையாவது பிடித்துக்கொண்டால் மீண்டும் பழைய முன்னுரிமைகளையாவது பெறலாம் என்ற எதிர்பார்ப்பினால் தான் ஊழலைத் தவிர வேறெதையும் பற்றி அக்கட்சி கூறவில்லை. மக்களுக்கு அரசுப்பொறி ஏற்படுத்தி வைத்திருக்கும், தொடர்ந்து ஏற்படுத்தி வரும் எண்ணற்ற இடையூறுகளைப் பற்றி அறிந்திருந்தும் எடுத்துக் கூற முற்படவில்லை. அவற்றை எடுத்துக் கூறி அகற்றி விட்டால் அவற்றால் தமக்குக் கிடைக்கும் ஆதாயம் பறிபோய்விடுமே! இவ்வாறு தமிழகப் பொருளியல் வளர்ச்சிக்குத் திராவிடர் இயக்கம் பெரும் இடையூறாக நிற்கிறது.

மொத்த ஆய்வில் திராவிடர் இயக்கம் எத்தர்களின் ஒரு கூட்டம். தமிழகத்தில் ஓர் உண்மையான தேசிய இயக்கத்தின் தேவை இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் களத்தை தங்கள் ஆதாயத்துக்குப் பயன்படுத்தி அரசியல், பொருளியல், பண்பாட்டியல், ஒழுக்கவியல் தளங்களில் தமிழகத்தை ஒரு பாலைவனமாக்கிவிட்ட குடிகேடர்களின் கும்பல்.

தி.க., தி.மு.க. ஆகியவை இவ்வாறு இரண்டகம் செய்துவிட்ட நிலையில் இளைஞர்களைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. பாவாணரின் மொழியியல் ஆய்வுகளின் பின்னணியில் தென்மொழி என்ற மாத இதழை நடத்திய பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ்க் கட்டுரைகளும் வீரம் சொட்டும் பாக்களும் பல இளைஞர்களை ஈர்த்தன. ஆனால் ஒர் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் திறமையும் தலைமைப் பண்புகளும் ஆழ்ந்த சிந்தனையும் அவருக்கு இல்லை. தன்முனைப்பும் தான்தோன்றித்தனமும் மிகுந்திருந்தன. நாளெல்லாம் கருணாநிதியைத் திட்டிவிட்டுத் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு வாக்களிக்கச் சொல்வார்.

இவர் தமிழக விடுதலை மாநாடெல்லாம் நடத்தினார். மக்கள் கவனத்தை அது ஈர்க்கவில்லை. மொழித் தூய்மைக்காக மட்டும் தமிழக விடுதலை வேண்டிப் போராட மக்கள் முன்வர மாட்டார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.

ஒரு கட்டத்தில் பெரும்படை போல் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் திடீரென்று புகைபோல் கரைந்து போயிற்று. காரணம் புரியாமல் பெருஞ்சித்திரனார் திகைத்தார்.

தமிழில் பட்டமும் பட்டமேற்படிப்பும் பயின்ற எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்த நேரத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆனால் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் பிற பேராசிரியர்களுக்கு இணையான சம்பளமும் பிற அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு ஈடான உரிமைகளும் உண்டென அறிவிக்கப்பட்டதாலும் பல புதிய பல்கலைக் கழகங்களும் கல்லுரிகளும் தமிழாய்வு நிறுவனங்களும் தோன்றியதாலும் தமிழ் பயின்றோரில் ஏறக்குறைய அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்து விட்டது. அனைவரும் ஓடிவிட்டனர்.

ஆனால் திராவிட இயக்கம் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்ட தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவைப் பொன் போல் பாதுகாத்து இளைய தலைமுறையினர் கைகளில் ஒப்படைத்தல் என்ற அரும்பணியைச் செய்தவர் என்ற வகையில் தமிழ்த் தேசிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] இதில் கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரியார் நடத்திய குடியரசு என்னும் ஏட்டின் முதல் இதழில் கடவுளின் அருளை வேண்டியும் வருண, சாதி முறைகளைக் காப்பது இதழின் நோக்கமென்றும் கட்டுரைகள் வந்திருப்பதாக குடியரசு முதல் இதழ் என்ற தலைப்பில் ஒருவர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அடுத்த இதழிலிருந்து தான் சாதி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை அந்த ஏடு தாங்கி வந்துள்ளது. இடையில் என்ன நடந்தது, அவர் இந்தக் கருத்துகளை யாருடைய அறிவுரையில் கைக்கொண்டார் அல்லது எந்தச் சூழல் தன்னை இந்தச் சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது என்பது பற்றி எதுவும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை அயோத்திதாச பண்டிதரின் கருத்துகள் அவரைக் கவர்ந்திருக்கலாம்.

[2] அந்த வழியைக் கூட இப்போது அடைத்துவிட்டனர், அதாவது தடைசெய்துவிட்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-5

அடுத்து வருவோர் மார்க்சிய இயக்கத்தினர்

மார்க்சியம் தேசிய விடுதலையை நோக்கமாகக்கொண்டு உருவானதல்ல. தேசிய இயக்கங்களுக்கு இனி உலகில் இடமில்லை என்ற நிலைப்பாட்டையே அதன் மூலவர்களான மார்க்சும் ஏங்கல்சும் கொண்டிருந்தனர். ஆனால் அயர்லாந்து மக்களின் போராட்டங்ளைக் கண்ட பின் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் உலகில் ஓர் இடம் உண்டு எனற அளவில் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

காலத்தின் கட்டாயமாக உருசியப் புரட்சியில் உருசியப் பல்தேசியங்களின் விடுதலை வேட்கை இரண்டறக் கலந்திருந்தது. அதை முழுக்கப் புரிந்து நேர்மையுடன் செயல்பட்ட உருசியத் தலைவர் லெனின் மட்டுமே.

சப்பானியப் படையெடுப்பையும் மேலை நாடுகளின் ஆதிக்கத்தையும் எதிர்த்து சீனம் தேசிய விடுதலைப் போரை நடத்திய காலத்தில் மசேதுங் புதிய குடியாட்சிப் புரட்சி என்ற பெயரில் பாட்டாளிகள் அல்லாத வகுப்பினரையும் சேர்த்து வெற்றிபெற்றார். புதிய குடியாட்சிப் புரட்சியை லெனினும் வரையறுத்துச் செயற்படுத்தியிருந்தார்.

இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் இவ்வாறு பல தேசிய விடுதலைப் புரட்சிகள் மார்க்சியத்தின் பெயரில் நடைபெற்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் மார்க்சியத்தைக் கைப்பற்றிக்கொண்ட கூட்டம் தேசிய விடுதலையை வாயினால் கூறிக்கொண்டே அதற்கு எதிராகச் செயற்பட்டது, செயற்படுகிறது.

1960களின் பிற்பாதியிலும் 1970களிலும் தீவிர மார்க்சிய-லெனினியக் கட்சிகள் உருவான போது அவை திராவிடர் கழகம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றில் ஊடுருவி இளைஞர்களைக் கவர்ந்து அவர்களுக்கு வெறியூட்டி பாதுகாப்பில்லாத ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். மிக எளிதாக அரசின் துப்பாக்கிக்கு அவ்விளைஞர்கள் அனைவரும் பலியானார்கள்.
இந்த மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் மா சே துங்கின் பெயரில் செயற்பட்டாலும் உருசியாவுக்கும் சீனத்துக்கும் ஏற்பட்ட மோதலில் உலகிலுள்ள மாவோவின் ஆதரவாளர்களுக்குள் அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஊடுருவலால் உருவானவை. இன்றைய நிலையில் மார்க்சியத்தின் பெயரில் எந்த இயக்கம் தேசியப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினாலும் செயற்பாட்டில் அது உறவாடிக் கெடுப்பதாகவே அமைவது தமிழகத்தின் நெடுநாள் பட்டறிவாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-6

உண்மையான தேசிய இயக்கம் ஏன் உருவாகவில்லை

கடந்த 80 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வலுவான தேசிய உணர்வுகள் இருந்தாலும் ஓர் உண்மையான தேசிய இயக்கம் ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை காண வேண்டுமாயின் இன்னொரு தமிழர் தேசியமான ஈழத் தேசியத்தின் வரலாற்றை ஆய்ந்து பார்க்க வேண்டும்.

இந்தியா பல தேசியங்ளைக் கொண்ட நாடு. இலங்கையோ இசுரேலைப் போல் இரு தேசியங்களை மட்டுமே கொண்டது. எனவே இந்தியாவைப் போல் அனைத்துத் தேசியங்களையும் கடந்த தேசிய ஒடுக்குமுறையாளர்கள் இல்லை. இந்தியாவைப் போல் மறைமுக ஒடுக்குமுறை இல்லை. பெரும்பான்மை தேசிய இனம் நேரடியாவே தன் ஒடுக்குமுறையைச் செயற்படுத்துகிறது.

நெடுநாட்களாகவே கல்வியிலும் ஆட்சிப் பணியிலும் நிலைத்துவிட்ட தமிழ் மேற்சாதியினர் சிங்களவர் மீது என்றும் மேலாண்மை செலுத்தலாம் என்ற இறுமாப்பில் வெள்ளையர் வெளியேறிய போது தம் நலன்களளைப் பாதுகாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதிலும் கூடச் சிங்களர்களுக்குத் துணைநின்றனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பெரும்பான்மையினர் சிறுகச் சிறுகத் தமிழ்ப் பகுதிகளில் குடியேறித் தமிழர்களை அவர்களின் மரபுப் பகுதிகளிலும் சிறுபான்மையராக்கி இறுதியில் இளைஞர்களின் கல்வியிலும் கைவைத்தபோது தான் சூழ்நிலையின் கடுமையை உணர்ந்தனர். ஆயுதத்துடன் தோன்றிய எதிரியை ஆயுதம் கொண்டு எதிர்க்க வேண்டியதாயிற்று. ஆயுதப் போராட்டமென்ற கடைதலில் உருவான வெணணெய் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். ஆயுதத்துடன் நிற்கும் எதிரிக்கு முதல் மறுமொழி ஆயுதம் தான், அதன் பின்னரே கோட்பாடுகளும் கொள்கைகளும் என்ற தூய இயங்கியலில் அவ்வியக்கம் ஊசலாட்டமின்றிச் செயற்பட்டதால் அது இன்று களத்தில் காலுன்றி, வேரூன்றி நிற்கிறது.

பிறரெல்லாம் ஏன் ஒடினார்கள்? பிறரெல்லாம் படித்து வேலை தேடி ஒட்டுண்ணி அடிமை வாழ்க்கை வாழப் புறப்பட்டவர்கள். அதற்கும் வழியில்லை என்றபோது ஆயுதம் தூக்கிப் பார்த்தனர். எனவே மக்களுடன் பிணைப்பு ஏற்படவில்லை. எதிரியிடமே சரணடைந்து விட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கமோ எளிய மக்களின் அடிப்படையான நிலத்தைப் பிடுங்கிய, பிடுங்க இடைவிடாது முயலும் எதிரியை எந்தத் தொய்வுமின்றித் தாக்கி வந்தது, வருகிறது. எனவே அதற்கு மக்களின் முழு ஆதரவும் உள்ளது. ஈழத்தில் உழைக்கும் இறுதித் தமிழன் இருக்கும் வரை அவனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கு இருக்கும்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேசிய முயற்சிகள் அனைத்துமே மொழி, பண்பாடு குறித்தனவாகும். இங்கு அவை இரண்டுமே வெளிப்படையாக அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றன. பொருளியல் சுரண்டலும் அடிமைத்தனமும் மிக மறைமுகமாகவும் சோசலிசம், சமூகநீதி, ஒப்புரவு, குழந்தை உழைப்பு எதிர்ப்பு, மாசுக் கட்டுப்பாடு, சிறு தொழில்களைப் பாதுகாத்தல், பணக்காரரிடமிருந்து ஏழைகளைக் காத்தல், நில உச்சவரம்பு, நிலச்சீர்திருத்தம் என்ற ″உயர்ந்த″ நோக்கங்களின் பெயரால் நடைபெறுவதால் அதனை இனங்கண்டுகொள்ளும் தெளிவும் அதனை மக்கள் முன் எடுத்து வைக்கும் துணிவும் யாருக்கும் இல்லை.

தமிழகத்தில் பெரியார் தொடங்கி நெடுமாறன் வரை மார்வாரிகளின் பிடியில் சிக்கியவர்கள். எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாண்டு மார்வாரிகளைக் காத்து வருகிறார்கள்.

மார்வாரிகளின் ஆதிக்கத்துக்கெதிராகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில் சிவகாசி, விருதுநகர் முதலாளிகள் குமரி அனந்தன், நெடுமாறன் முதலியவர்களை ஆதரித்தனர். ஆனால் அவர்களின் உதவியால் அரசியலில் வளர்ந்த பின் இத்தலைவர்கள் மார்வாரிகளிடமே தங்களை நம்பிய முதலாளிகளின் நலனுக்கு விலைபேசிவிட்டார்கள். எனவே இம்முதலாளிகள் நம்பிக்கையிழந்து எதிரியிடமே மண்டியிட்டுவிட்டார்கள். அண்மையில் மார்வாரி நிறுவனங்கள் முன் மறியல் செய்யும் நெடுமாறனின் போராட்டம் கூட மார்வாரிகளை மிரட்டி ஆதாயம் தேடும் முயற்சியேயன்றி வேறில்லை, ஏனென்றால் பல முறை இவர் இது போன்ற முயற்சிகளைத் தொடங்கிவிட்டுக் காணாமல் போயுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-7

தமிழகத் தேசிய இயக்கம் எந்தத் திசையில் நடைபோட வேண்டும்

இதுவரை தமிழகத் தேசிய இயக்கமாகக் கருதப்பட்டு வந்த திராவிட இயக்கம் இந்த மக்களின் வளத்தைப் பெருக்கி அதன் பலனை அனைவரும் நுகர வேண்டும் என்ற அடிப்படைப் பொருளியல் அணுகலைக் கைவிட்டு அரசு வேலைவாய்ப்புக்காகக் கல்வி என்ற நிலைப்பாட்டை மட்டும் எடுத்ததால் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தாய்மொழியைக் கைவிட்டுத், தாய்நாட்டைக் கைவிட்டு அயல்நாடுகளிலும் மாநிலங்களிலும் அடிமையிலும் கீழாய் அல்லல்படுகிறார்கள். வேலை வாய்ப்பென்ற மாயையில் வெள்ளைச் சட்டையுடன் 20 அகவை வரை பட்டம் பயின்று பின்னர் உடலுழைப்பு என்பதையே வெறுத்து காலத்தையும் வாழ்வையும் வீணாக்கி குமுகத்தின் புற்றுநோய்க் கண்ணறைகளாக(செல்களாக) இளந்தலைமுறை மாறிவிட்டிருக்கிறது. இவர்களைப் பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் கலை - இயக்கியக் கண்ணோட்டத்தை வளர்க்கும் ஒட்டுண்ணி இயக்கங்கள் ஈர்த்து கைகளில் கவிதை நூல்களைக் கொடுத்துவிடுகின்றன.

பார்ப்பனர்கள் அரசுப் பதவிகளிலும் கோயில்கள் மூலமும் ஆதிக்கம் செலுத்தியதின் எதிர்ச்செயலாய் உருவான பெரியாரின் இயக்கம் அதே ஒட்டுண்ணி வாழ்க்கை மீது ஏற்படுத்திவிட்ட வலுவான பிடிப்பு தான் இந்நிலைக்குக் காரணம். அத்துடன் மாவோவின் பெயரில் அமெரிக்க உளவு நிறுவனத்தால் பரப்பப்பட்ட பண்பாட்டுப் புரட்சி பற்றிய தாக்கமும் சேர்ந்துகொண்டது. செல்வம் படைப்பதை விட இருப்பதைப் பங்கிட வேண்டுமென்ற மார்க்சியத்தின் மறுப்பான பொதுமை இயக்கத்தின் தன்முரண்பாடும் இணைந்து கொண்டது. இந்த நிலையில் நம் கல்வி அறிவே நமக்கு எதிரியாகிவிட்டது. கல்வியில் நாட்டம் செலுத்தாத மார்வாரிகளும் முசுலீம்களும்[1]கொண்டிருக்கின்ற பொருளியல் கண்ணோட்டம் நமக்கில்லை. இன்றிருக்கும் ஒட்டுண்ணிக் கண்ணோட்டத்தை உடைப்பது மிகக் கடுமையான பணி என்பது பட்டறிவாகும். இருப்பினும் அக்கடும்பணியை எதிர்கொண்டே ஆகவேண்டும். ஒட்டுண்ணிக் கண்ணோட்டத்தை உடைத்தே ஆகவேண்டும்.

பொருளியல் வளர்ச்சி என்றால் என்ன? அரசு தன் சொந்தப் பணத்திலிருந்தோ அல்லது நாட்டை அடகுவைத்துக் கடன்பட்டோ தொழில்களைத் தொடங்கி பண்டங்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதல்ல. இந்திய விடுதலைக்குப் பின் இந்நாட்டு மக்களிடையில் உருவாகித் திரண்டு நிற்கும் மாபெரும் செல்வத்தை மூலதனமாக்குவதற்கும் பணக்கார நாடுகளின் தொடர்பினால் நமக்குக் கிடைத்திருக்கும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி தொழில்களைத் தொடங்கவும் அதன் மூலம் கிடைக்கும் பண்டங்களை நம் மக்கள் முன்னுரிமையுடன் நுகரவும் வழிபெறுவதே பொருளியல் வளர்ச்சியாகும்.

இன்னும் குறிப்பான சொற்களில் பேசுவோம். உள்நாட்டு மக்கள் தங்கள் பணத் திரட்சியை வெளியே காட்டினால், அதாவது முதலீடு செய்தால் வருமானவரித் துறை பிடுங்கிக்கொள்ளும். எனவே அவர்களுக்கஞ்சி அது கருப்புப் பணமாகப் பதுங்கியுள்ளது. வெளிநாட்டு இந்தியர் பெயரில் உண்மையான அவர்களது பணமோ, அயல்நாட்டினர் பணமோ முதலீடானால் அதற்கு வரி கிடையாது. பெரும் பண முதலைகளுக்கு வருமான வரியிலிருந்து தப்ப எவ்வளவோ சட்டப்படியான வழிமுறைகள். மார்வாரிகளை வருமான வரித்துறையினர் அண்டுவதே இல்லை.

உள்நாட்டு மக்கள் நுகர்வுக்கென்று செய்யப்படும் பண்டங்கள் மீது எத்தனையோ வரிவிதிப்புக்கள், அயலவருக்கென்று அதாவது, ஏற்றுமதிக்கென்று செய்யப்படும் பொருட்களுக்கு எத்தனையோ வரிச்சலுகைகள்.

நாட்டிலுள்ள தீர்ந்துபோகும் மூலப்பொருட்கள், உலோகக் கனிமங்கள் போன்றவை அனைத்தும் மலிவு விலையில் ஏற்றுமதி. முடிந்த பொருட்கள் உயர்ந்த விலையில் இறக்குமதி.

உள்நாட்டார் தொழில் தொடங்க எத்தனயோ தடங்கல். வெளிநாட்டாருக்கு வெற்றிலை வைத்து அழைப்பு. இதுவே முதல் தேசிய ஒடுக்குமுறை. தமிழர்களை மட்டுமல்ல இந்தியர் அனைவரையும் ஒடுக்கும் முறை.

இந்தத் தேசிய ஒடுக்குமுறைக்கு மாற்றாக மாநிலத் தன்னாட்சி கேட்பது பயனற்றது, ஏனென்றால் மக்கள் மாநில அரசுகள் மூலமாகவே ஒடுக்கப்படுகிறார்கள். மக்களுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ இல்லாமல் அனைத்தையும் அரசு தன் கைகளில் வைத்துள்ளது. குறிப்பாகப் பொருளியல் நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு தன் கைகளில் வைத்துள்ளது அல்லது உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, இசைவாணை, மின்சார இணைப்பு என்று பல வகைகளில் குறுக்கிடுகிறது. இந்தக் குறுக்கீடு மாநிலங்கள் மூலமாவே பெரும்பாலும் நிகழ்கிறது. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கம் உண்மையான தேசியத்துக்கு எதிரானது. ஏற்கனவே மாநில அரசின் அத்துமீறல்களுக்கு நடுவணரசு தலையிட வேண்டுமென்ற எண்ணம் பெரும்பாலான மக்களின் மனதில் இருக்கிறது. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதால் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. எனவே மக்களுக்கும் அதில் நாட்டமில்லை.

எனவே, பாதுகாப்பு, பணப்புழக்கம், அயலுறவு, காவல்துறை, நீதிமன்றம் தொடக்கக் கல்வி ஆகிய துறைகள் தவிர பிற அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டுமென்ற முழக்கமே இன்றைய தேவை. அதுவே தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு தேசியங்களின் விடுதலைக்கு முதல் தேவையாகும். மாநில அரசு என்பது நடுவணரசின் ஒரு கிளை அலுவலகமாக இருந்தால் போதும். இன்றும் அது தானே நிலை?

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] முகம்மதியர்களின் நிலைப்பாடு இன்று மாறியுள்ளது. மார்வாரிகளின் கிடுக்கிப்பிடியில் இந்திய முகம்மதியர்கள் வழக்கமான தங்கள் பொருளியல் அடித்தளத்தை இழந்துவருகின்றனர். அதனால் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் முன்பில்லாத ஆர்வம் ஏற்பட்டு ஒதுக்கீடு கேட்டுப் பல்வேறு வடிவங்களில் போராடுகின்றனர். மாநிலங்கள் ஒதுக்கீடு வழங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் முன் போன்று வேலைவாய்ப்புகள்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-8
ஒருவரை ஒரு தேசியத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வது?

தேசியம் என்பது ஒருவரின் தாய்மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அவர் வாழும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. எவரொருவர் தான் வாழும் நிலத்தின் நலத்தோடு தன் சொந்த நலம் இரண்டறக் கலந்துள்ளது என்று உணர்ந்து அதற்காகப் பாடுபடுகிறாரோ அதுபோல் எவரொருவருக்கு அவர் வாழும் நிலத்தின் மீது அவரது வாழ்வும் வளமும் வேர்கொண்டுள்ளதாக உணர்ந்துள்ளாரோ அவரே அத்தேசியத்தின் மக்களாவர்.

தமிழகத்தின் தேசிய வாழ்வில் ஒரு திரிபாகவேனும் நிலவிய திராவிட இயக்கத்தில் மொழி உணர்வை முழுமனதோடு வெளிப்படுத்தியவர்களில் பெரும்பாலோர் தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வரலாற்றுக் காரணங்களால் தமிழகத்தைத் தம் தாயகமாகக் கொண்டுவிட்ட இவர்களுக்குத் தமிழ் நிலத்தின் மீதுள்ள தொடர்பும் நெருக்கமும் வேறெவருடையதைக் காட்டிலும் குறைந்ததல்ல. அதே போல் தனித்தமிழ் இயக்கத்தில் கன்னடத்தைக் தாய்மொழியாகக் கொண்ட எத்தனையோ பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களெல்லாம் தமிழகத் தேச மக்களே.

மாறாகப் பார்ப்பனர்கள் எந்த நிலத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்களல்லர். அவர்களுக்குத் தேசியம் எதுவுமே கிடையாது. ஆனால் அவர்களும் ஒவ்வொரு சமயம் தாம் வாழும் வெளி இடங்களில் தங்களுக்கு அச்சுறுத்தல் வரும்போது தேசியம் பேசுவர். ஆனால் அதை நம்பி அவர்களைப் பொருட்டாகக் கருதக் கூடாது.

அதேபோல் வளவாழ்வு வாழ முடியுமென்ற நம்பிக்கையில் பிற நாடு சென்று வாழ நினைப்போரும் தேசியத்தில் வேர்கொள்ளாதவரே. ஆனால் இவர்கள் அனைவரும் தாம் செல்லும் இடங்களில் படும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறத் தாய்நாடு வரும்போது தேசியம் பற்றி நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

மொத்தத்தில் தமிழகத் தேசியம் புத்துயிர் பெற நாம் மக்களுக்குப் பொருளியல் உணர்வு ஊட்ட வேண்டும். இம்மண்ணின் வளங்கள் மீது நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இந்த மண்ணில் எந்த விதமான பொருளியல் நடவடிக்கையிலும் நாம் ஈடுபட நமக்குள்ள தடையற்ற உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும். ஒட்டுண்ணி வாழ்க்கையைக் கடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஏமாளித்தனமான, ஏமாற்றுத் தனமான முழக்கங்களைக் கைவிட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, காசுமீரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் சட்டத்தின் 370 - ஆம் விதி அனைத்துத் தேசியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று நாம் போராட வேண்டும்.

வாழ்க தமிழகம்! வளர்க தமிழகத் தேசியம்!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-9

பிற்சேர்க்கை - 1

திராவிட இயக்கம் ஒரு தமிழ்த் தேசிய இயக்கம் என்பது ஒரு மாயை. ஒரு காலகட்டத்தில் அது தமிழகத்தின் அரசியல் - பொருளியல் மீட்சிக்காகக் குரல் கொடுத்தது உண்மை தான். ஆனால் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை காய்தல் உவத்தலன்றி ஒரு மீள்பார்வையிட்டால் (மிகை நாடி மிக்க கொண்டால்) கிடைக்கும் விடை:

1. பெரியார் தமிழர்களின் உரிமை என்று சொன்னது பார்ப்பனர்களுக்கு எதிரானதேயொழிய நில எல்லைக்கு வெளியே இருந்து நம் மீது மேலாண்மையும் சுரண்டலும் நிகழ்த்துகிறவர்களுக்கு எதிரானதல்ல. எப்போதாவது தமிழக விடுதலை (இதைக் கூட பிரிவினை என்ற தவறான சொல்லால் தான் அவர்கள் குறிப்பிட்டனர், குறிப்பிடுகின்றனர். சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களுக்கு அதில் உண்மையான ஈடுபாடு இல்லை) பற்றிப் பேசினால் அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான மிரட்டலாகத்தான் இருக்கும். நிலம், அதன் அடிப்படையிலான பொருளியல் அடிப்படையில்லாமல் இனம் என்ற அடிப்படையிலேயே திராவிடர்கழகம் இயங்கியதால் அதனை ஒரு தேசிய இயக்கம் என்பது தவறு. தமிழினம் என்ற திராவிட இயக்கத்தின் சொல்லாட்சியே இது நிலம் தழுவிய ஒரு தேசிய இயக்கம் அல்ல என்பதற்குச் சான்று கூறும்.

கிறித்துவர்கள் வீட்டிற்குச் சென்றால் ″ஏசு கிறித்து இந்த வீட்டின் தலைவர்″ என்பது போன்ற எழுத்துக்களை வாயிலில் பதித்திருப்பார்கள். முகம்மதியர்களின் வாயில்களில் அரபு எழுத்துக்கள் இருக்கும். சில இந்துக்களின் வாயிலில் ″ஓம்″ இருக்கும். அதுபோல் திராவிடர் கழகத்தவர் வீடுகளின் முகப்பில் ஒரு காலத்தில் ″திராவிட நாடு திராவிடருக்கே″ என்றும் பின்னர் ″தமிழ்நாடு தமிழருக்கே″ என்றும் சொற்களைப் பார்க்க முடிந்தது. இதுவும் நம்மை ஏமாற வைத்தது. இந்தச் சொற்றொடர்களின் உண்மையான பொருள் திராவிடர் அல்லது தமிழர் என்ற சொல் நில அடிப்படையில் அமைந்ததல்ல, இன அடிப்படையில் அமைந்தது என்பதாகும். ஆரியர் எனும் ஆரிய நாட்டை(ஆரிய வர்த்தத்தை)ச் சேர்ந்த அயலவர்களுக்கு எதிரான திராவிடர் அல்லது தமிழர்களைக் குறிக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவரும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட, ஆனால் ஐரோப்பியரின் வரலாற்று வரைவுக் குளறுபடிகளினால் உலக வரலாற்றில் காலத்தின் கோலமாக இடம்பெற்றுவிட்ட ஆரிய இனத்தவரென்று தவறாகக் கருதப்படும் தமிழகப் பார்ப்பனர்க்கு எதிரானதாக அச்சொற்றொடர் அமைந்தது.

ஒரு தேசிய இயக்கத்தின் முகாமையான இயல்பு நிலம் சார்ந்து நின்று அந்த நிலத்தின் மேம்பாட்டில்தான் தம் வாழ்வையும் வளத்தையும் கொண்டவர்களும் அவ்வாறு நம்பிச் செயற்படுகிறவர்களுமாகிய மக்களைச் சிதறாமல் ஒன்று திரட்டுவதில் ஈடுபடுவதாகும். அத்தகைய ஒரு வலிய சூழல் திராவிடர் கழகம் உடைவதற்கு முன்பு உருவானது. அப்போது குமுகத்தின் பிற்போக்கு விசைகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சில தலைவர்களின் மூலம் அறைகூவல்களை விடுத்தன. அன்றைய நிலையில் நம் சமுகத்தின் வரலாற்று வகைப்பட்ட இப்பிற்போக்கு விசைகளின் இறுதி முயற்சியான அதை எளிதில் முறியடிக்கும் வலிமை அன்றைய திராவிட இயக்கத்துக்கு இருந்தது. ஆனால் திராவிடர் கழகத்தின் கோழைத் தலைமை பின் வாங்கி எண்ணிக்கையிலும் வன்முறை எதிர்ப்பிலும் வலிமையற்றவர்களாகிய பார்ப்பனர்கள் பக்கம் கை காட்டிக் கொண்டு வரலாற்றின் ஒரு நல்வாய்ப்பைக் கைவிட்டுப் பெரும் இழப்புக்கு வழிகோலியது.

பின்னர் அதே திராவிடர் கழகம் அதே பிற்போக்கு விசைகளைத் தன்னுள் சேர்த்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது முன்பு பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் பிற சாதியினர் மீது என்னென்ன ஒடுக்குமுறைகளைக் கையாண்டார்களோ அதே ஒடுக்குமுறைகளை இயக்கத்தினுள்ளும் நடத்தியது. அதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிட இயக்கத்திலிருந்து மட்டுமல்ல தமிழக மண்ணிலிருந்தே அயற்பட்டுப் போனார்கள். அதன் அடையாளம் தான் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் அம்பேத்கார் சிலைகள்.

தீமை இத்துடன் நின்றுவிடவில்லை. தங்களுக்கு மற்றவர்களுடன், குறிப்பாகத் தங்களை எல்லாத் திசைகளிலும் அடுத்து வாழும் பிற்படுத்தப்பட்டோருக்கு இணையான உரிமைகள் - பொதுக் கிணறு அல்லது குடிநீர்க் குழாயில் நீரெடுக்கும் உரிமை, சுடுகாடு இடுகாடுகளுக்குச் செல்லும் பாதை உரிமை ஆகியவற்றுக்காகப் போராடும் ஒர் அறிகுறியாக நாட்டுப்புறக் கோயில்களில் மோதல்கள் உருவாயின. அதன் அடுத்த கட்டமாக மிகுந்த ஆரவாரத்துடனும் ஆர்வத்துடனும் நாட்டுப்புறக் கோயில்களில் விழாக்கள் அளவின்றிப் பெருகி வருகின்றன. இதன் பொருளியல் - பண்பாட்டியல் இழப்பை அதைப் பற்றிய விழிப்புணர்வும் குமுக முனனேற்றம் பற்றிய தெளிவும் பொருளியல் துறையில் ஈடுபாடும் உள்ளவர்களால் தான் உணர முடியும்.

பகுத்தறிவு இயக்கம் என்ற பெயரில் கடவுள் சார்ந்த அனைத்து நிறுவனங்களின் செல்வாக்கையும் கிட்டத்தட்ட அழித்து வெற்றிவாகை சூடி மக்களின் தலைவனாக இருந்த திராவிட இயக்கம் தன் குற்றத்தினால் இன்று தமிழகத்தில் பகுத்தறிவு நிலையைக் கற்பனை செய்ய முடியா அழிவு நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. இந்த அழிவிலிருந்து தமிழகத்தை மீட்க இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது போன்ற இன்னுமொரு நல்வாய்ப்பு என்று கிடைக்குமோ என்று தெளிவான சிந்தனை படைத்தோரை மலைக்க வைத்துத் திகைக்க வைத்து ஏங்க வைத்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் திராவிடர் கழகம் தமிழக மண்ணிலிருந்து அயற்படுத்தவில்லை. அரசு வெள்ளை வேட்டி வேலையை மட்டும் நோக்கமாகக் கொண்ட கல்வி, அடிமை ஒட்டுண்ணி அரசுப் பணியில் இடம்பெறுவது என்ற அடிமைக் கோட்பாட்டுக்கு அளவுக்கு மீறிய பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் செல்வாக்கிலும் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சாதியினர் பலர் தமிழகத்துக்கு வெளியிலும் தோழமைச் சாதிகளைச் சேர்த்து இயங்கி அயற்பட்டு நிற்கின்றனர். இப்படித் தனித்தனிச் சாதியினர் மட்டும் அயற்பட்டுப் போகவில்லை. திராவிடர் கழகமே தமிழ் மண்ணிலிருந்து அயற்பட்டுத்தான் நிற்கிறது.

தமிழகம் என்ற எல்லையை விட்டுத் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியப் பணிகளிலும் ஒதுக்கீடு வேண்டும் என்று தொடங்கி பின்னர் தமிழகத்துக்கு வெளியேயுள்ள பிற்படுத்தப்பட்டோர் பெயரையும் சேர்த்துக்கொண்டு மண்டல் ஆணையத்துக்குப் பாடுபட்டு அதன் பின் ஆணைய அறிக்கையைச் செயற்படுத்துவதற்காகவும் போராடித் தான் ஒரு தமிழ்த் தேசிய இயக்கமல்ல என்பதை வெளிப்படுத்திக்கொண்டதுடன் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனையோ அவர்களுடைய நல்லெண்ணத்தையோ ஒத்துழைப்பையோ பற்றிக் கவலைப்படாத இயக்கம் என்பதையும் பறைசாற்றி நிற்கிறது. இதில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற திரு.ஆனைமுத்துவும் வீரமணியோடு போட்டி போட்டுக் களத்தில் நிற்கிறார். அவர் தான் கன்சிராம் போன்றோரின் துணையை நாடிச்சென்று இதைத் தொடங்கிவைத்தவர்.

எல்லாவற்றை விடவும் மிகப் பெரிய தீங்கு தமிழகத்தில் வேரோடிப்போயிருக்கும் "பிற்படுத்தப்பட்ட மனநோய்". தாமே தம் சொந்த முயற்சியால் போராடி உழைத்து வெற்றிபெற்று தம் நிலையை உயர்த்தித் தமிழகக் குமுக மக்களிடையில் மட்டுமல்ல உலகக் குமுகவியல் ஆய்வாளர்களின் மனதிலும் சிறப்பிடம் பெற்றுவிட்ட நாடார் சாதியினர் கூட தங்களை முற்பட்ட சாதியராக்க வேண்டுமென்று கேட்டுப் பெருமிதமடைய வேண்டிய ஒரு காலகட்டத்தில் தங்களை மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பதற்காகப் பெரும் உழைப்பில் உறுப்பினர் சேர்த்துப் பெருமிதமிழந்து நிற்கிறார்களென்ற ஒரே ஒரு நிகழ்வே இக்குமுகச் சீரழிவின் தெள்ளத் தெளிவான சான்றாகும்.

தமிழகத்திலும் தமிழகத்துக்கு வெளியிலும் இருந்துகொண்டு தமிழக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியாளர்களும் பிற விசைகளும் ஒரு உண்மையைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டுள்ளனர். பண்டைக் கால மரக்கலங்கள் கடலில் செல்லும்போது கூனிகள் எனும் இறால் வகையைச் சேர்ந்த மிகச் சிறிய மீன்கள் மிகப் பெருங்கூட்டமாக வந்து மரக்கலத்தையே மறித்துக் கொள்ளுமாம். அப்போது மாலுமிகள் இதற்கென்றே ஆயத்தமாக வைத்திருக்கும் உமியை அல்லது தவிட்டை அள்ளிக் கடலில் வீசுவார்களாம். உடனே அந்தக் கூட்டம் கலைந்து சிதறிக் கப்பலுக்கு வழி விட்டுவிடுமாம். அது போல் நம்மை ஆளுவோரும் தமிழக மக்களின் கவனத்தைக் சிதறடிக்க வேண்டிய வேளைகளில் ஒதுக்கீட்டில், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டில் ஒரு சிறு கோளாறைச் செய்துவிட்டால் போதும் கொஞ்ச நாளைக்குக் கவலையற்றுத் தம் வேட்டையையும் தேட்டையையும் தொடரலாம் என்பது அவர்களுக்குத் திராவிட இயக்கத்தினர் அமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு நல்வாய்ப்பு.

உண்மையில் நின்று தெளிந்து பார்த்தால் ஒதுக்கீடு என்பது இன்னும் தேவை தான். யாருக்கு? இன்று கல்வியையோ அரசு அதிகாரத்தையோ கண்டறியாத மலைவாழ் மக்கள், நடோடிப் பிழைப்பு நடத்துவோர், துப்புரவுத் தொழிலாளர் ஆகியோருக்குக் கட்டாயம் அது தேவை. அவர்களை வரலாற்று வகைப்பட்ட காரணங்களால் மனிதன் என்ற உயிர் வகையிலிருந்து தாழ்ந்ததாகிய ஒர் உளவியல், பண்பாட்டியல் நிலைகளிலிருந்து விடுவித்து தம் குமுகச் சிறைக்கூடங்களிலிருந்து வெளிப்படுத்தி திறந்த வெளிச்சத்தையும் காற்றையும் கண்டு பிறருக்கு இணையான குடிமக்களாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தேவையும் இக்குமுகத்துக்கு உண்டு. அரசு வேலைவாய்ப்புகள் அருகி வரும் இந்நிலையில் இனி வரும் வேலைவாய்ப்புகள் அனைத்தையுமே அவர்களுக்கு ஒதுக்கிவிடலாம். அதற்கு முழுக் குமுகத்திலுமிருந்து உருவாகும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய ஒரு மாபெரும் இயக்கம் தேவை. அதைச் செய்யும் அடிப்படை ஆற்றல்களுடன் தோன்றிய திராவிட இயக்கம் உண்மையில் மாண்டுவிட்டது பெருந்துயரம். உண்மையான ஓரியக்கத்தை மீண்டும் தொடங்குவது உண்மையான தமிழ்நில உணர்வுடையோரின் கடமையாகும்.

(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-10

பிற்சேர்க்கை – 2

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் பார்ப்போம்.

அண்ணாத்துரையும் அவரது தோழர்களும் வழித்தோன்றல்களும் அவ்வப்போது கூறும் ஒரு சொற்றொடர், "நாங்கள் திராவிடநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் நிலவுகின்றன" என்பது.

இந்தச் சொற்களை அன்று அண்ணாத்துரையும் இன்று அவரது தம்பிகளும் மேடைகளில் பேசும் பொழுது மக்கள் ஆரவாரமிட்டு தம் உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவர்.

ஆனால் இச்சொற்றொடரின் உண்மையான பொருள் யாது?

திராவிட நாடு விடுதலை (அவர்கள் சொல்லில் பிரிவினை) கேட்பதற்கான காரணங்கள் அகலவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் சொந்த நலன்களுக்காக (இதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?) அக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்பதல்லவா?

இந்தச் சொற்றொடருக்காக மக்கள் கொதிப்படைந்திருக்க வேண்டும். "அட கயவாளிகளே! எங்களை இந்நாள்வரை ஏமாற்றி ஆதரவைப் பெற்றுக் கொண்டு இப்போது எங்களை நட்டாற்றில் விட்டதுமல்லாமல் பெருமை வேறு பேசுகிறீர்களே" என்று கேட்டிருக்க வேண்டும். ஏனோ இன்றுவரை எவரிடமிருந்தும் இந்தக் கேள்வி எழவில்லை. ஒருவேளை தேசியம் என்ற சரியான உணர்வு இன்னும் தமிழக மக்களிடம் உருவாக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அல்லது இந்த இயக்கத்தில் உண்மையான தேசிய உணர்வை ஊட்டத்தக்க ஆற்றல் உள்ள தலைவன் ஒருவன் இதுவரை உருவாகாதது காரணமாக இருக்கலாம். அல்லது தமிழகத்தில் ஓர் உண்மையான தேசியச் சிக்கலே இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழகத்திலுள்ள மக்களின் உணர்வுக் காற்றை நுகரும் திறனுள்ள மனச்சாட்சியுள்ள எவரும் இங்கு ஒரு தேசியச் சிக்கல் இல்லை என்று கூறத் துணியமாட்டார்.

இவர்களின் இந்தக் கூற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. "நாங்கள் எங்களை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டு ஏமாற்றி வைத்திருக்கிறோம். அதற்குரிய எங்கள் பலனை நாங்கள் அடைவதில் குறுக்கிடாதீர். அப்படிக் குறுக்கிட்டால் அதன் விளைவுகளுக்கு நீங்கள் ஆளாக வேண்டியிருக்கும்" என்று தில்லியுடன் பகரம் பேசுவதற்கான எச்சரிக்கையாக இச்சொற்றொடார் பயன்பட்டது.

இவ்வாறு எச்சரிக்கை விடும் நிலையில் எந்தத் திராவிடத் தலைவரும் இல்லை என்பது தான் இன்றைய நிலை.

இந்திரா காந்தி ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்து ஒரேயொரு முறை ஆட்சியைத் கலைத்த உடனேயே இந்த மிரட்டல் உத்தி ஆவியாகிப்போய்விட்டது. தில்லித் தலைமையின் காலைப் பற்றிய கைகள் இன்னும் நகரவில்லை. மொரார்சி தேசாய் "இந்திரா காந்திக்குத் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆதரவளிக்கப் போகிறாயா" என்ற ஒரே கேள்வியிலேயே ம.கோ. இராமச்சந்திரனின் அனைத்து நாடிகளும் ஒடுங்கிப்போய்விட்டன.

இன்று சுப்பிரமணியம்சாமி ஊழலைப் பற்றியும் ஆட்சிக் கலைப்பைப் பற்றியும் மிரட்டிக்கொண்டேயிருக்கிறார். அம்மையார் அவ்வப்போது தில்லி சென்று உயரிடங்களில் "பாத தரிசனம்" செய்து வருகிறார்.

தமிழக வரலாற்றில் நினைக்க நினைக்க மனதில் ஆழமான துயரத்தையும் நம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கழிவிரக்கத்தையும் ஏமாற்றையும் இரண்டகத்தையும் பற்றிய குமுறலையும் நம் நாட்டுக்கு ஏற்பட்ட இழுக்கு பற்றிய ஆத்திரத்தையும் கடுஞ்சினத்தையும் எழுப்பும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. மதுரையை ஆண்ட நாயக்கர் மரபைச் சேர்ந்த அரசி மீனாட்சியின் வரலாறே அது. ஆர்க்காட்டு நவாபின் மருமகன் சந்தா சாகிப்பின் தாக்குதலிலிருந்து தன் ஆட்சியைக் காப்பற்ற அவள் ஒரு கோடி உரூபாய் கையூட்டாக அவனுக்கு வழங்கினாள். (முகலாயர்களிடமிருந்து தன் ஆட்சியைக் காத்துக்கொள்ள புகழ் பெற்ற அரசி மங்கம்மாள் இந்தப் பழக்கத்தைத் தொடங்கி வைத்தாள். 18 ஆம் நூற்றாண்டில் ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரும் தொகை. ஐரோப்பாவில் மக்களிடம் திரண்ட பணம் தொழிற்புரட்சி மூலம் வளர்ந்து உலகைக் கைப்பற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நம் மக்களின் உழைப்பும் வியர்வையும் தேடிய செல்வம் ஆட்சியாளர்களால் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணும்போது நம் குருதி கொதிக்கிறது. இன்னும் நிலைமை மாறவில்லை. எனவே தான் நம் நாட்டில் மக்களுக்குக் குருதிக்கொதிப்பு நோய் மிகுதி). அப்பணத்தைப் பெற்றுக் கொண்ட விலங்கினும் கொடிய கயவன், சமயத்தின் பெயரைக் கூறிக்கொண்டு இந்நாட்டின் செல்வமனைத்தையும் உறிஞ்சிக் கரியாக்கிக் குருதியாறுகளை ஓடவிட்ட கும்பலின் கடைகெட்ட ஒரு பேராளனான சந்தா சாகிபு அப்பேதையை ஏமாற்றிச் சிறைசெய்ய அவள் மனமுடைந்து சிறைக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டாள்.

இன்றும் தில்லிக்குப் பேழைகள் பறக்கின்றனவோ என்ற ஐயம் தோன்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதுரை மீனாட்சிக்கு நேர்ந்த நிலை சென்னை மீனாட்சிக்கும் ஏற்படுமா?[1]

திராவிட இயக்கம் தமிழ்த் தேசியத்தை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டதுதான் வரலாற்று உண்மை. எவ்வளவு ஆழத்தில் தோண்டிப் புதைத்திருந்தாலும் அது முளைவிட்டு மண்ணைப் பிளந்து வெளிவருவதற்கு ஒருவேளை அதிக நாளாகலாம். ஆனால் கட்டாயம் வெளிவந்தே தீரும். இது உலக வரலாறு இடைவிடாது மெய்ப்பித்துக்கொண்டிருக்கும் உண்மையின் சாரம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] இது கட்டுரை எழுதிய காலகட்டத்து அரசியல் சூழலை வைத்துக் கூறிய கருத்தாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-11

மனந்திறந்து... 1

தமிழ்த் தேசியம் கட்டுரைக்கு அச்சேறும் முன்பே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய விறுவிறுப்பான ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் தினமணி நாளிதழ் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் சில தலைப்புகள் தந்து அத்தலைப்புகளில் கட்டுரை கேட்டிருந்தார். அவற்றுள் ஒரு தலைப்பு ″தமிழ்த் தேசியம்″ என்பது. அத்தலைப்பில் இக்கட்டுரையை எழுதி அவருக்கு விடுத்தேன். திரு.இரா. சனார்த்தனம் திராவிட இயக்கம் சார்ந்தவர். தி.மு.க.வின் உறுதியான பற்றாளர். அவருக்கு இக்கட்டுரை உவப்பாயிராது என்று எனக்குத் தெரியும். அதற்கேற்பவே இந்தக் கட்டுரை வந்து சேர்ந்தது குறித்துக்கூட அவரிடமிருந்து எந்தக் குறிப்பும் வரவில்லை.

வழக்கம் போல் இந்தக் கட்டுரையைப் படியெடுத்துச் சிலருக்கு விடுத்தேன். படி பெற்றவர்களில் வெங்காலூர் குணாவும் ஒருவர். எவரிடமிருந்தும் கட்டுரை பற்றிய கருத்து எதுவும் வரவில்லை. கட்டுரையை அச்சிட்டு வெளியிடும் விருப்பம் இருந்தாலும் நூலை உரிய முறையில் விற்பனை செய்து உண்மையான ஆர்வலர்களைச் சென்றடைய உதவும் வகையில் யாரும் கிடைக்காததால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பின் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூற்படி வந்தது. பெரியாரின் திராவிடக் கோட்பாட்டைத் திறனாய்ந்து, தமிழக மக்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களைத் தமிழ்த் தேசியத்துக்கு எதிரிகளாகக் காட்டுவதே அந்நூலின் நோக்கமாக இருந்தது. இது தமிழ்த் தேசியம் கட்டுரையின் அடிப்படை அணுகலுக்கு நேர் எதிரானதாகும். இருப்பினும் பெரியாரைப் பற்றியும் அண்ணாத்துரை போன்றோர் பற்றியும் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் நூலில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குணாவின் நூல் தமிழன்பர்களிடையில் பரவலான ஈர்ப்பைப் பெறுவதில் தினமலர் நாளிதழ் பெரும் பங்காற்றியது. தமிழ், தமிழகம், தமிழக மக்கள் மீது பகையுணர்வு கொண்ட இந்த நாளிதழ் திராவிட - தமிழ் இயக்கத்தினுள்ளிருந்து வெளித்தோன்றிய இந்த முரண்பாட்டுக்கு நல்ல விளம்பரம் கொடுத்து மனநிறைவு கொண்டது. இவ்வாறு இந்த நூலால் திராவிட - தமிழ் வட்டாரங்களிடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியாரைப் பற்றிய திறனாய்வுகள் சிலருக்குக் கொதிப்பேற்றியது. அதன் விளைவாக குணா ஒரு பொய் வழக்கின் அடிப்படையில் ″தடா″ சிறையில் அடைக்கப்பட்டார். ″தமிழ்ச் சான்றோர்″ ஒருவர் குணாவைக் கொல்ல ஆளமர்த்தினார் என்று கூட அண்மையில் ஒரு பேச்சு அடிபட்டது. அதை நம்மால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் கட்டுரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை அந்நூலில் படிக்கும் போது முதல் பார்வையில் அவை குணாவின் கூற்றுப் போல் தோன்றுகின்றன; எனவே குமரிமைந்தன் மேல் பாய வேண்டிய கொதிப்பு குணாவின் மீது பாய்ந்துவிட்டது என்று கருதுவாரும் உள்ளனர். எது எப்படியாயினும் பெரியார் தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் என்ற பொய்ப் படிமத்தில் விரிசல் ஏற்படச் செய்ததில் இந்தக் கட்டுரைக்கு முகாமையான பங்கு உண்டு.

இந்தச் சூழலில் 1998 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பெரியாற்று நீருரிமை மீட்பு மாநாட்டில் நான் பேசி முடித்து இருக்கையில் அமர்ந்த போது அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த திரு. சுப.வீரபாண்டியன் அவர்கள் என்னைப் பார்த்து ″இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களே; ஆனால் பெரியார் குறித்து மட்டும்...?″ என்று கேட்டார். அதைப் பற்றி நாம் பேசலாம் என்று கூறினேன். நிகழ்ச்சி முடிந்த பின் பேசலாம் என்றார். இது நடந்தது நண்பகல் வேளையில். மாலை 6.00 மணிக்கு அவரைத் தேடியபோது அவர் 4.00 மணிக்கே சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அறிந்தேன். பின்னரும் கூட எம் இயக்க இதழான பொருளியல் உரிமை தொடர்ந்து அவருக்கு விடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருந்தும் அவர் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி விடை தேடி நின்றுகொண்டிருக்கிறது. அதற்கு விடையளிக்கும் போது என் வரலாற்றின் ஒரு பகுதியினுள் சென்று வர வேண்டியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-12

மனந்திறந்து... 2

குமரி மாவட்டத்தில் எங்கள் ஊர் வட்டாரத்தில் திராவிடர் கழகத்தின் முன்னோடிகளில் என் தந்தையும் ஒருவர். அதனால் ஏறக்குறைய பத்து ஆண்டு அகவையிலிருந்தே (1949) விடுதலை, திராவிட நாடு போன்ற இதழ்களையும் பின்னால் தோன்றிய இதழ்களையும் பல நூல்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவற்றில் வெளிப்பட்ட குறிக்கோள் என்னை இறுகப் பற்றிக்கொண்டது. சாதி, சமய வேறுபாடுகளற்ற, எவ்வித அடிமைத்தனத்துக்கும் ஆட்படாத, தாய் மொழியைப் பேணுகின்ற, பகுத்தறிவுள்ள - அதாவது அறிவியல் அணுகலைக் கொண்ட ஒரு தமிழ்க் குமுகம், அதே போன்று மாந்தநேயம் மிக்க ஓர் உலகம் ஆகியவற்றை உருவாக்குவது என்பது தான் அந்தக் குறிக்கோள். அதை எய்துவதற்காக திராவிட இயக்கம் முன்வைத்த கோட்பாடுகள் மீது நம்பிக்கையும் இருந்தது. அந்தக் கோட்பாடுகளைத் தாண்டியும் சில கருத்துகள் உருவாகிக் கொண்டிருந்தன. என் தந்தை திராவிடக் கழகத்தின் கொள்கைகளைப் பொது இடங்களில் பேசி ஊரில் பலரது வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாகியிருந்தார். ஆனால் அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஒரு குழு இளைய தலைமுறையினரிடையில் இருந்தது. நானும் என் பருவத்து நண்பர்களிடம் இக்கருத்துகள் பற்றிய கருத்தாடல்கள் செய்வேன். அவ்வாறே பள்ளி, கல்லூரிகளிலும். ஆனால் எனக்கு இயல்பான கூச்சத்தினால் மேடையேறியதோ இயக்கங்களில் பங்கு கொண்டதோ இல்லை. பணிபுரிந்த நாட்களிலும் இதே நடைமுறை தொடர்ந்தது. அத்துடன் தமிழ், தமிழகம், தமிழகப் பண்பாடு பற்றிய நூல்களையும் செய்திகளையும் தீராத் தவிப்போடு (தாகத்தோடு) படிப்பேன். அவ்வாறு கிடைத்த பல செய்திகள் இன்று மனதில் நிலைத்து நிற்கின்றன.

1957 திருச்சி மாநாட்டில் தி.மு.க. தேர்தலில் ஈடுபட முடிவு செய்த போது சிறு உறுத்தல் இருந்தாலும் மூத்த ஒருவர் சொன்ன விளக்கம் அதனை அகற்றியது. 1962இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைக் கைவிடுவதாக அண்ணாத்துரை அறிவித்த போது அவர் மீதும் பிறர் மீதும் இருந்த அசைக்க முடியா நம்பிக்கையில் அது அவரது அரசியல் சூழ்திறன்(ராசதந்திரம்) என்று பலரையும் போலவே நானும் மகிழ்ந்தேன். ஆச்சாரியாருடனும் அவருக்கு எதிரிகளாகக் கருதப்பட்ட பொதுமைக் கட்சிகளுடனும் 1967இல் ஒரே நேரத்தில் கூட்டணி வைத்துக்கொண்ட போதும் அதே நம்பிக்கை இருந்தது. 1961இல் சம்பத் வெளியேறும் முன் வெளிப்பட்ட முரண்பாடுகள் மூலம் இறைமறுப்புக் கோட்பாடு, ″திராவிட நாடு″ விடுதலைக் கொள்கை உட்பட இயக்கத்தின் கொள்கைகள் கைகழுவப்படுவதற்கு எதிரான இயக்கம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பின்னர் அதுவே பொய்மானாகிப் போன போது அண்ணாத்துரை வகையறாவிடம் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது.

1967இல் தி.மு.க. ஆட்சி அமைத்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருமொழித் திட்டம் பற்றிய சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்ட இசைவளித்தது, பேருந்துகள் அரசுடைமையானது, மும்முனைத் திட்டம்(இன்றைய ″மனுநீதி″த் திட்டத்துக்கு முன்னோடி), பரிசுச் சீட்டுத் திட்டம், படியரிசித் திட்டம், உலகத் தமிழ் மாநாடு என்று அனைத்துச் செயற்பாடுகளும் மிகப் பெரிய அருஞ்செயல்களாகத் தோன்றின. இந்தச் செய்திகளைப் படித்து மகிழ்வதற்காகவே தினமணி நாளிதழை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.

இதே காலகட்டத்தில் அறிமுகமான பொதுப்பணித்துறைப் பொறியாளர் ஒருவர் தென்மொழி இதழ் பற்றியும் பாவாணர் பற்றியும் பெருஞ்சித்திரனார் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது சோவியத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த மாவோயிய இயக்கத்திலும் அவர் தொடர்பு வைத்திருந்தார். அந்த இயக்கமும் மாவோவின் நூல்களும் தடைசெய்யப்பட்டிருந்தனவாக அவர் கூறினார். ஆனால் அவர் அறை மிசை(மேசை) மீது அந்த நூல்களை அவர் அடுக்கி வைத்திருப்பார். அவர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் திராவிடக் கருத்துகளின் விளைவாலும் 1962 சீனப் போரின் பாதிப்பாலும் அவற்றை நான் தொடவே இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே தென்மொழியையும் பாவாணரின் நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். அவற்றைப் படிக்கப் படிக்க என்னுள் உருவான கருத்துகள் தாம், ″ஆரியர்″ என்று ஒரு ″மனித இனம்″ உலகில் இருந்ததே இல்லை என்பதும் சமற்கிருதம் ஒரு தனி மொழி அல்ல, தமிழிலிருந்து உருவானது தான் என்பதும் பார்ப்பனர்கள் இந்த மண்ணின் மக்கள் தாம் என்பதும். இதே காலகட்டத்தில் படித்த, அ.கி. நாயுடு என்பார் எழுதிய தொல்காப்பியர் காட்டும் தமிழர் சமுதாயம் என்ற நூலின் கருத்துகள் இணைந்து கடவுள்கள் வெறும் கற்பனைகள் அல்ல, உயிர் வாழ்ந்த பெருமக்களின் வழிபாட்டிலிருந்து தோன்றியவை தாம் என்ற கருத்து கருக்கொண்டது.

அண்ணாத்துரை இறந்து கருணாநிதி தலைமையேற்றுப் பதவிச் சண்டைகள் தொடங்கிய போதும் ம.கோ.இரா.வுக்கும் கருணாநிதிக்கும் உருவான பூசலின் போதும் இவர்களைப் பற்றிய தெளிவுகள் உருவாகத் தொடங்கின. அதே காலகட்டத்தில் நடுவண் அரசின் ஏற்றுமதி - இறக்குமதிச் செயற்பாடுகளை அலசிப் பார்க்கையில் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்ட ஒரு கடத்தல் கும்பலாகவே நடுவணரசு தோன்றியது. கடத்தல்காரர்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் வெறும் தொழிற்போட்டிதான் என்பதும் உறுதியாகத் தெரிந்தது. அது போலவே மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் கட்டுப்பாடுகளும் ஊழலை நோக்கியவை என்ற ஐயப்பாடும் உறுதி பெற்று வந்தது. இந்த மனநிலையில் மார்க்சு, ஏங்கெல்சு, லெனின் போன்றோரின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரைகுறையாக உருவாகியிருந்த பல கருத்துகள் இப்போது முழு வடிவம் பெற்றன; அவற்றுக்குக் கோட்பாட்டு வடிவமும் கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் பெருஞ்சித்திரனார் பரிந்துரையின் பேரில் பாவாணரால் உலகத் தமிழ்க் கழக (உ..த.க.) நெல்லை மாவட்ட அமைப்பாளராக அமர்த்தப்பட்டேன். இது 1970களின் தொடக்கத்தில் நடைபெற்றது. இது தான் என் முதன் முதலான அமைப்பு சார்ந்த நடவடிக்கையாகும். இருப்பினும் கருணாநிதி பற்றி பெருஞ்சித்திரனார் வெளியிட்டு வந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துகளினால் அவரோடு சிறு கருத்து மோதலும் ஏற்பட்டது.

இத்தொடர்நிலைகளால் தமிழகத்தின் குமுகியல் வரலாற்றை நான் அறிந்த தமிழ் இலக்கியங்களிலிருந்தும் பிற நூல்களிலிருந்தும் குமுக நடைமுறைகளிலிருந்தும் மார்க்சியக் கோட்பாட்டினடிப்படையிலும் ஏங்கெல்சின் குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் கருத்துகளின் அடிப்படையிலும் எழுத எண்ணினேன். அப்பணி ஏறக்குறைய 1979 அளவில் முடிவுற்றது. பஃறுளி முதல் வையை வரை என்று பெயரிடப்பட்ட அந்த நூலை அச்சிட்டு வெளியிடச் சிலரை அணுகியதில் எந்தப் பயனும் கிட்டவில்லை. குமரிக் கண்டத்திலிருந்து தமிழர்களின் குமுக வரலாற்றை தொடங்கும் இந்த நூலின் அடிப்படைக் கருத்து ஆரியர் என்றொரு ″இனம்″ உலகில் என்றும் வாழ்ந்ததில்லை என்பதாகும். இந்நிலையில் பெரியாற்று அணையில் பணியாற்றும் போது (1980-81) உடன் பணியாற்றிய இந்திய மா.லெ. (மக்கள் போர்க்குழு) கட்சியைச் சேர்ந்த ஒருவர் மூலம் மதுரையிலுள்ள தோழர்கள் சிலரின் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலையைப் ″பாட்டாளியப் புரட்சி″ மூலம் எய்தப் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படாத(இது பாதுகாப்புக்காக) பல குழுக்களாக இவர்கள் இயங்கினர். அவர்கள் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் ″புரட்சிகரப் பாட்டாளியர்″ எவரென்பதைக் கண்டறியத் திணறிக்கொண்டிருந்தனர். பொதுமைக் கட்சி அறிக்கையைப் படித்திருந்த நான் மார்க்சின் மூலதனம் முதல் மடலத்தைப் படித்த போது நம் நாட்டை இன்றைய நிலையிலிருந்து அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேசிய முதலாளியப் புரட்சி தான் வழி என்ற முடிவுக்கு வந்திருந்தேன்; ஏனென்றால், நம் நாடு பொருளியலிலும் குமுக அமைப்பிலும் நிலக்கிழமைக் கட்டத்தில் உள்ளது. நிலகிழமைக்குப் பொருந்தாத வலிமையான நடுவண் அரசு இருப்பதற்குக் காரணம் அது வல்லரசுகளால் வழிநடத்தப்படுவதாகும். உலக வாணிகக் குழுக்களின் ஏவலாளாகிய அமெரிக்கா போன்றவற்றின் பின்னணி இல்லை என்றால் இந்தியா வெள்ளையர் வருகைக்கு முன்பிருந்தது போல் என்றோ எண்ணற்ற சிற்றரசுகளாகச் சிதறிப் போயிருக்கும். அந்த நிலக்கிழமைப் பொருளியலை அழித்து முதலாளியப் பொருளியல் உருவானால்தான் பிற துறைகளிலும் மேம்பாடு ஏற்படும். மார்க்சு கூறும் பாட்டாளி முதலாளியக் குமுகத்தில் தான் உருவாவான். அவனை இண்டு இடுக்குகளில் தேட வேண்டியதில்லை; அவனே பேருருக் கொண்டு முழுக் குமுகத்தையும் ஈர்த்து நிற்பான். இந்தக் கருத்தை முன்வைத்த போது அவர்களால் கோட்பாட்டடிப்படையில் மறுக்க முடியவில்லை. அதே நேரத்தில் தோழர்களிடையில் அவர்களே ஊட்டி வைத்திருந்த ″பாட்டாளியக் கோட்பாட்டை″ உடைக்கவும் முடியவில்லை. குழுவினரில் மிகப் பெரும்பாலோரும் திராவிட இயக்கத்திலிருந்து வந்திருந்ததால் ஒதுக்கீடு, பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் வேறு உறைந்துநின்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எமக்கு ஆணையிடு என்று கேட்டு மிரட்டும் பூதத்தைப் போலத் தோழர்கள் கொடுத்த நெருக்கடியாலும் கோட்பாடு பற்றி முடிவெடுக்க முடியாத குழப்பத்தினாலும் அக்குழுக்களின் மூலவிசையாகச் செயற்பட்ட தோழர் மனச்சிதைவடைந்து பெரும் குடியராக மாறிய பின் அக்குழு சிதறி ஓடியது.

இத்தோழருக்கு வந்த அழைப்பின் பேரில் வெங்காலூரில் குணாவின் தமிழக ஆய்வரண் நடத்திய ″தேனீக்கள் பட்டறை″யில் கலந்து கொண்டேன். இது 1980களின் தொடக்கத்தில். அதன் மூலம் குணாவின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் பஃறுளி முதல் வையை வரையின் கையெழுத்துப் படியை ஒளிப்படி எடுத்து அவருக்கு விடுத்தவுடனேயே அவர் அதை அச்சிடும் பணியைத் தொடங்கினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திராவிடத்தால் வீழ்ந்தோம்-தமிழ்த் தேசியம்-குமரிமைந்தன்
Permalink  
 


தமிழ்த் தேசியம்-13

மனந்திறந்து... 3

இதற்கிடையில் முகாமையான சில நிகழ்வுகள் இடம்பெற்றன. 1980-81இல் சென்னையில் பெருஞ்சித்திரனாரைச் சந்தித்தேன். அவரைப் பல வேளைகளில் இழிவான முறையில் ஏமாற்றியவரும் அவரது முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டவருமான கருணாநிதிக்கு வேண்டுகோள்கள் வைப்பதும் தேர்தல்களின் போது அவருக்கு வாக்களிக்கத் தன் பற்றாளர்களுக்கு அழைப்பு விடுப்பதுமாகத் தன்னை நம்பித் தன் பின்னால் அணி திரண்டு நிற்கும் தொண்டர்களைக் கருணாநிதியின் வாலாக்குவது பற்றிக் குறை கூறி அவருக்கு நான் எழுதியிருந்த மடலுக்கு அவர் நேரடியாகத் தந்த விடை எனக்கு நிறைவு தரவில்லை. எனவே அவரோடுள்ள தொடர்பை அறுத்துக் கொண்டேன்.

1980ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில் அண்ணா தொழில் நுட்பக் கல்லூரி(இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) மாணவர் ஒருவரைக் கல்லூரி விடுதியில் சந்தித்தேன். அவருடனிருந்த இரு இளைஞர்கள் துணையுடன் தமிழ்த் தேசியப் போராளிகள் என்று அறியப்பட்ட அல்லது தங்களை அறிவித்துக்கொண்ட பலரை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்தேன். அரு.கோபாலன், விடுதலை இராசேந்திரன், அவர் துணைவியார் கோவி. சரசுவதி போன்றோர் அவர்களில் முகாமையானவர்கள். பின்னும் சில தடவைகள் சென்னை செல்லும் போது பேராசிரியர்கள் இளவரசு, பெரியார்தாசன் ஆகியவர்களைச் சந்தித்தேன். நண்பர் நா.அரணமுறுவலும் சில வேளைகளில் உடன்வந்துள்ளார். இந்தத் தேடல் சென்னைக்கு வெளியிலும் தொடர்ந்தது. இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஓருண்மை புரிந்தது. இத்தகையவர்களில் மிகப் பெரும்பான்மையினரும் வெறும்பேச்சு பேசிக் கொண்டு தாங்கள் எந்தத் தேசியத்துக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்களோ அத்தேசிய நலன்களின் எதிரிகளோடு இணக்கம் கண்டு அத்தேசியத்தை விற்றோ அடமானம் வைத்தோ கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெறுவதற்காகத் ″தேசிய விடுதலை″ என்று கூறி மிரட்டுகிறவர்கள் என்பதுவே அந்த உண்மை. அதிலும் ″தமிழியக்கம்″ பேசும் பேராசிரியர் ஒருவர் ஒரு முறை சந்தித்த போது மீண்டும் வரச் சொன்னார். சென்ற போது வீட்டிலிருந்துகொண்டே இல்லை என்றார்.

மதுரையிலிருக்கும்போது (1981-83) தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி என்ற பேரா. கா.சிவத்தம்பியின் நூலைப் படிக்க வாய்த்தது. அதற்கு மறுப்பாக, கா.சிவத்தம்பியின் அரசியல் பின்னணி என்ற கட்டுரையை எழுதினேன். ஈழ மாணவர் அமைப்பு (ஈரோசு) சார்பில் தா.கோவேந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுமை இதழில் அது தொடர்கட்டுரையாக வந்தது. இங்குள்ள பொதுமைக் கட்சியினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஈழ மாணவர் அமைப்பினர் தங்கள் வெளியீடுகளை விற்பது அன்றிலிருந்து தடைசெய்யப்பட்டது. மதுரையில் இருக்கும்போது பேரா.கோ. கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலைப் படிக்க வாய்த்த போது அதற்கு மறுப்பாக விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை பேயன் என்ற பெயரில் எழுதினேன்.

இந்தக் கட்டத்தில் குணாவின் தமிழக ஆய்வரணைச் சேர்ந்த பொன். பரமேசுவரன் சென்னையிலிருந்தார். அவரோடு தொடர்பு கொண்டு, தேசியச் சுரண்டலில் பல்வேறு துறையினர் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர் வாழ்ந்த பகுதியில் செறிந்திருந்த கைத்தறி நெசவாளர்களிடத்தில் பணிபுரிய வலியுறுத்தினேன். அதற்குத் தேவையான ஆள்வலிமையும் அமைப்பும் இருந்தாலும் அவர் போன்றோர் மாவோயியத்தின் பாட்டாளிய மற்றும் பண்பாட்டுப் புரட்சிக் கோட்பாடுகளைத் தாண்டி வர இயலாதிருந்தனர். இளைஞர்களை அறைகளிலிருத்திக் கலந்துரையாடல் என்ற எல்லையைத் தாண்டிக் களத்திலிறக்க ஏனோ விரும்பவில்லை. இந்த நிலையில் ஒரு புதிய தொடர்பு வந்தது. அது கோவை ஞானி மூலமாக வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் எசு. என். நாகராசன் என்பவர் தான் இத்தொடர்புக்கு வழியமைத்தவர். ஞானி ஒரு வகையில் அவருக்கு மாணவர், அவ்வளவு தான். தொடர்பு கொண்டவர்கள் கேரள மாநிலத்தில் வலுப்பெற்றிருந்ததாக அவர்கள் கூறிக் கொண்ட நடுவண் மறுசீரமைப்புக் குழு என்ற மா.லெ., அதாவது நக்சலிய இயக்கத்தவரும் காம்ரேட் என்னும் மலையாள இதழின் ஆசிரியருமான ″காம்ரேட்″ கே.என். இராமச்சந்திரன் என்பவர். அவருடன் நான், நாகராசன், பொன். பரமேசுவரன், எசு.வி. இராசதுரை ஆகியோர் கலந்து உரையாடினோம். ந.ம.கு. இந்தியப் புரட்சியை இந்தியத் தேசியங்களின் விடுதலைப் புரட்சியின் திரட்சியாகக் காண்பதாகவும் அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தத் தாங்கள் ஒத்துழைப்பதாகவும் இராமச்சந்திரன் கூறினார். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பின்னணியில் தேசிய விடுதலை ஆர்வம் உருவாகியுள்ளது; கேரளத்தில் இது எவ்வாறு தோன்றியது என்று கேட்டோம்.

கேரளத்தில் தாங்கள் கள ஆய்வு செய்த போது அங்கு நிலவும் பொருளியல் வளர்ச்சிநிலைக்குப் பொருந்தாத, அதனை மிஞ்சிய பண்பாட்டு நிலை, அதாவது பாட்டாளிய இயக்க வளர்ச்சி நிகழ்ந்திருப்பதைக் கண்டதாகவும் அதைத் தடம்பிடித்த போது தேசியங்களை நடுவணரசு சுரண்டுவதால் பொருளியல் வளர்ச்சி தடைப்படுவதைக் கண்டதாகவும் அதிலிருந்து இந்த முடிவை எய்தியதாகவும் கூறினார். எனவே தமிழகத் தேசிய விசைகளோடு ந.ம.கு. ஓர் அணியமைத்துச் செயற்படுவதென்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மார்க்சியம் இன்று என்ற பெயரில் ஓர் இதழ் வெளியிடுவதெனவும் அதற்கு எசு.வி.இராசதுரை ஆசிரியராகச் செயற்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து பெரியவர் வே.ஆனைமுத்து அவர்களைச் சென்று சந்தித்து அவரது பெரியார் சமவுரிமைக் கழகத்தையும் இந்த அணியில் இணைத்துச் சில முழக்கங்களை அவரது அச்சகத்திலேயே அச்சிட்டுப் பிரிந்தோம். அடுத்து ஒரு கூட்டம் கல்பாக்கத்தில் நடந்தது. அதில் கேரளத்தைச் சேர்ந்த வேணு என்பவர் கலந்து கொண்டார். இவர் ந.ம.கு.வில் கே.என். இராமச்சந்திரனுக்கு மேல்நிலையில் உள்ளவர் என்று கூறப்பட்டது. அக்கூட்டத்தில் இந்திய அளவில் ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓர் அனைந்திந்தியத் தலைமையின் கீழ் அனைத்துத் தேசிய அமைப்புகளும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை வேணுவும் பிறரும் முன்வைத்தனர். நான் அதை ஏற்கவில்லை. ஒவ்வொரு தேசிய அமைப்பிலிருந்தும் இரண்டு பேராளர்கள் மட்டுமே இந்திய அமைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் தேசிய அமைப்புகளின் கருத்தை இந்திய அமைப்பில் எடுத்துச் சொல்வோராகவும் இந்திய அமைப்பு மேற்கொள்ளும் முடிவுகளைத் தேசிய அமைப்புகளிடம் கூறி விளக்குவோராகவும் இருக்க வேண்டும்; அவற்றை ஏற்பதோ மறுப்பதோ தேசிய அமைப்புகளின் உரிமையாயிருக்க வேண்டும்; இந்தப் பேராளர்கள் உட்பட தேசிய அமைப்புகளின் உறுப்பினர் எவரையும் இந்திய அமைப்பு கட்டுப்படுத்தக் கூடாது என்ற கருத்துகளை நானும் மதுரைத் தோழரும் முன்வைத்தோம். இந்திய அமைப்புக்கு முழு அதிகாரம் வேண்டும்; இல்லையென்றால் அது தன் ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்றனர். இந்தியாவிலுள்ள தேசியங்கள் வளர்ச்சி நிலையில் தமக்குள் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளன; எனவே முழு அதிகாரமுள்ள அமைப்பு ஒரே நேரத்தில் ஒரே வகையான நடவடிக்கையை எடுத்தால் இப்போது போல் ஒன்றிரண்டு தேசியங்கள் பிற தேசியங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை வரலாம்; அதே நேரத்தில் தளர்வான ஓர் இந்திய அமைப்பு இருந்தால் பின்தங்கிய தேசியங்களில் வளர்ச்சியை ஊக்கும் வழிகாட்டல்களை நடுவண் அமைப்பு மூலமாக மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பைப் பெற முடியும் என்று நாங்கள் வாதிட்டோம். நாங்கள் இன்றியே தமிழக ந.ம.கு. அமைக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், நாம் இங்கிருந்து கலைந்து சென்று களத்தில் மக்களை, அவர்களில் எந்த வகுப்பினரை, எந்தக் குறிக்கோள்களை, முழக்கங்களை முன்வைத்து அணுகுவது என்பது குறித்த ″செயல்திட்டம்″ வேண்டும் என்று கேட்டேன். கூட்டத்தை நெறிப்படுத்திய எசு.வி. இராசதுரை, ″மார்க்சியப் பொருளில்″, ″செயல்திட்டம்″ என்பது அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையைப் போல் வாக்குறுதிகளின் ஒரு பட்டியல்தான் என்பது போல் பொருள் கூறி நழுவ முயன்றார். ″செயல்திட்டம்″ என்ற பெயர் பொருந்தாதென்றால் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் இங்கிருந்து செல்வோர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள் என்று கேட்டதற்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. எனவே இதுவும் அனைவரையும் அறைகளுக்குள் அடைத்துவைத்துக் கலந்துரையாடுவதைத் தாண்டிச்செல்ல மறுப்பது என்ற வகையிலேயே அமைந்திருந்தது.

அதன்பிறகு, நக்சலிய இயக்கத்தில் செயற்பட்ட போது வெடிகுண்டு செய்தார் என்ற குற்றச் சாட்டில் மரண தண்டனை பெற்றவரும் பொது மக்கள் குடியுரிமை ஒன்றியம்(பி.யு.சி.எல்.)[1] என்ற அமைப்பின் முயற்சிகளால் பிணையில் வெளியில் வந்தவருமான பாவலர் கலியபெருமாள் இப்போது தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராட இயக்கம் நடத்தப் போவதாகவும் அதை அறிவிக்கப் பெண்ணாடத்தில் ஒரு கூட்டம் நடக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து ″தமிழ் உணர்வாளர்களும்″ ″தமிழ்த் தேசிய உணர்வாளர்களும்″ பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமே ஓர் ஏமாற்று என்று அதில் உரையாற்ற வந்திருந்த குணா சண்டையிட்டு வெளியேறினார். கலியபெருமாள், தமிழரசன் முரண்பாடு தோன்றி அவர்கள் பின்னர் பிரிந்தனர். கலியபெருமாள் பிணையில் வந்ததற்கும் கூட்டம் நடந்ததற்கும் முயற்சி எடுத்தவர் இராசதுரை தான் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் மார்க்சியம் இன்று இரண்டு மூன்று இதழ்கள் வந்திருந்தன. அடுத்து தனக்கு அமெரிக்காவிலிருந்து ஓர் ஆய்வுத் திட்டம் கிடைத்திருப்பதாகவும் அதனால் தான் தொடர்ந்து இதழின் ஆசிரியர் பணியைப் பார்க்க முடியாது என்றும் கூறி இராசதுரை விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஒரேயொரு இதழ் வெளிவந்ததாக நினைவு.

நான் எழுதியிருந்த விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை மார்க்சியம் இன்று இதழில் வெளியிட தோழர் பொன்.பரமேசுவரன் மூலம் குணா முயன்றபோது அது மறுக்கப்பட்டதால் அதனை அவரே தன் தமிழக ஆய்வரண் மூலமாக வெளியிட்டார் என்பதை ஓர் இடைக்குறிப்பாகக் கூறுகிறேன்.

நான் அறிந்த வரை இராசதுரை காசுக்காக எழுதுபவர். மார்க்சியம் என்ற பெயரில் அதன் எதிர்ப்புக் கோட்பாடுகளான இருத்தலியத்தையும் அயலாதலை(அந்நியமாதல்)யும் எழுதியவர். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது கோட்பாடுகளை எள்ளி நகையாடியவர். இன்று பெரியாரைக் கடவுளாக்குவதற்காகத் தொடர்ந்து நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு உள்ளிலும் வெளியிலும் பெரியாருக்கு ஒரு கடவுள் படிமம் கொடுப்பதால் பல வகைகளில் ஆதாயம் பெறும் குழுக்கள் உள்ளன. குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாணிக வல்லரசியங்களுக்கும் தமிழக அறிவாளிகளின் சிந்தனைகளைப் பொருளியல் சுரண்டல்களிலிருந்து திருப்பவும் ஒதுக்கீட்டு அரசியலாருக்கு வலிமை சேர்க்கவும் இது தேவையாகிறது. இந்திய விடுதலை, தமிழ் மேம்பாடு பற்றிய முயற்சிகளில் அடித்தள மக்களின் பணிகளை உலகுக்கு எடுத்துரைக்கும் ஆர்வம் அவரிடம் வெளிப்பட்டாலும் கூலிக்கு எழுதும் பண்பு அதை மீறி நிற்கிறது என்பது என் கணிப்பாகும். அதோடு இவரும் இவர் போன்று கோவை ஞானி, அ.மார்க்சு போன்றோரும் அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர்கள். கட்சி என்று ஒன்றிருந்தால் அதில் அதிகாரமும் ஆதிக்கமும் உருவாகிவிடும் என்று கூறுபவர்கள். கருத்து(பிரச்சாரம்) இல்லாத இலக்கியம், கட்சி இல்லாத அரசியல், இயங்கியல் இல்லாத மார்க்சியம் (அத்துடன் கரு இல்லாத குழந்தை என்ற ஒன்றையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்) பற்றியெல்லாம் கூறுவார்கள். கரு என்ற ஒன்றே கிடையாது, அனைத்தும் உருவெளித் தோற்றம், மாயை, பொய்ம்மை என்பது இவர்கள் வலியுறுத்தும் சிந்தனை. கரு என்ற ஒன்று இல்லை என்பார் அ.மார்க்சு; இந்த நொடி தான் உண்மை, நேற்று, நாளை என்ற தொடர்ச்சியெல்லாம் கிடையாது என்பார் இராசதுரை. நுணுகிப் பார்த்தால் நேற்று என்பது கடந்து போன உண்மை, நாளை என்பது நாம் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் வாய்ப்பு, இந்த நொடி என்பது தான் சொல்லி முடிப்பதற்குள் கடந்து சென்றுவிடும் ″மாயை″, ஆனால் இந்த ″மாயை″ தான் நாம் நேரடியாகப் புலனுணரும் உண்மை, நேற்றையும், நாளையையும் இணைக்கும் பாலம். நம் அறிதல் பிழைகளினால் ஏற்படும் தவறுகளைக் காட்டி இயற்கையையும் உலகையும் வாழ்வையும் காலத்தையும் பொய் என்று கூறும் தவற்றைச் செய்கிறார்கள் இவர்கள். நான் எழுதி தாராமதி இதழில் தொடராக வந்த மார்க்சியம் எனும் கட்டுரையைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் ″இயங்கியல் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் அதை நான் மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது″ என்றார் ஞானி. ஆக, இயங்கியல் இல்லாத மார்க்சியம் அவருடையது. ஆதிசங்கரரின் இரண்டன்மையியத்திலிருந்து (அத்துவைத்திலிருந்து) தான் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டதாக அவர் கூறுகிறார். ஆதிசங்கரர் உலகில் அனைத்துமே மாயை, பொய்த்தோற்றம், உண்மையென்று எதுவும் கிடையாது என்றவர். இந்தக் கோட்பாட்டிலிருந்து மார்க்சியத்தைப் பார்ப்பதாகக் கூறும் ஞானியை ஒரு மார்க்சியராகத் தமிழகப் படிப்பாளிகள் ஏற்றுக்கொண்டது ஒரு விந்தைதான். தமிழகத்தில் இவையெல்லாம் விந்தையல்ல என்கிறீர்களா? இந்த ″மாயாவாதி″களுக்கு ஏதோவொரு வகையில் வெளிவிசைகளின் தொடர்பும் இருக்கிறது. ஆனால் நிகழ்காலத் தமிழக வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்ற அரங்குக்குள் இவர்கள் புகுந்து சில காலமாயினும் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள், செலுத்துகிறார்கள்.

ந.ம.கு.வில் ஒரு ″புரட்சிகர மாற்றம்″ வந்தது. கேரள, அதாவது தலைமை அமைப்பில் வேணுவுக்கும் கே.என்.இராமச்சந்திரனுக்கும் தனிப்பட்ட ஏதோ பகைமையால் கே.என். இராமச்சந்திரன் பிரிந்தார். அவருடன் தமிழகக் குழுவும் விலகியது. . இப்பிளவுக்கு இராமச்சந்திரன் (நாகராசனும் சேர்ந்து) கூறிய காரணம், தேசியங்களின் விடுதலைப் புரட்சிகளின் தொகுப்பே இந்தியப் புரட்சி என்ற நிலைப்பாடு ″மக்களிடையிலிருந்து உருவாகவில்லை″யாம் (இதுவரை அது உறைக்கவில்லையா?); வேணு போன்றவர்களால் ″மேலிருந்து திணிக்கப்பட்டதா″ம்; எனவே அது ″மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதா″ம். அவ்வாறு பிரிந்தவர்கள் ஓர் அனைந்திந்நிய ″புரட்சிகரப்″ பொதுமை இயக்கத்தோடு (இவர்கள் சிவப்பு விண்மீன் என்றொரு ஆங்கில இதழ் நடத்துகின்றனர். அவ்விதழின் பெயரில் அவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்) இணைந்தனர் இவர்களுக்குத் தேசியங்களின் விடுதலை என்பதில் உடன்பாடு கிடையாது; ஆனால் ″மக்களாட்சிக் கோட்பாடுகளின்படி″ இயங்குபவர்கள் என்று எசு.என். நாகராசன் ″வழிகாட்டினார்″. ஆக, நாகராசனுக்கு மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாவோ போன்ற மார்க்சியத் தலைவர்களும் அந்த வட்டத்துக்கு வெளியில் உலகில் தோன்றிய தலைவர்களும் அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைக்கவில்லை என்ற அடிப்படையில் ஒதுக்கத்தக்கவர்கள். இவ்வாறு வெவ்வேறு களங்களிலிருந்து ″தமிழ்த் தேசிய விசை″களில் சிலரை இழுத்துச் சென்று நட்டாற்றில் விட்டாயிற்று. இந்த இயக்க நடைமுறைகளில் நாகராசனின் தலைமையை நம்பி முனைப்பாகச் செயற்பட்ட நேர்மையும் தூய்மையும் கடும் உழைப்பும் ஊக்கமும் நிறைந்த தோழர் பொன்.பரமேசுவரன் தான் நம்பிய பாட்டாளியக் கோட்பாட்டினால் தன் வேலையை இழந்து வயிற்றுப் பிழைப்புக்காக அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

நானறிந்த வரை எசு.என்.நாகராசன் அதன் பிறகு எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. இனி அழிப்பதற்கு உருப்படியான தமிழ்த் தேசிய விசை எதுவுமில்லை என்று மனம் நிறைந்திருக்குக் கூடும். இவர் மாவோவைக் கடவுளாக வணங்குபவர். நாம் இதுவரை குறிப்பிட்ட ″மார்க்சியர்″ அனைவரும் மாவோ வழிபாட்டினர் தாம் என்றாலும் இவர் தான் தலைமைப் பூசாரி. மாவோவைத் திருமாலின் (எத்தனையாவது என்று சொல்ல முடியவில்லை; ஏசுவையும் முகமது நபியையும் கூடத் தோற்றரவுகள் என்று கூறிக் கொள்கின்றனர்) தோற்றரவு என்று கருதும் வீர மாலியர்(வைணவர்). அதே நேரத்தில் தமிழ்த் தேசிய விசைகளைக் கெல்லியெடுத்து அழித்து ஊழித் தாண்டவமாடிய சிவன். இந்தியப் பொதுமை இயக்கத்தில் தேசியங்களின் விடுதலையை முன்வைத்து பொதுமை (மார்க்சியம்), அதாவது இடங்கைப் பொதுமைக் கட்சி பிரிந்து தனியாக வந்ததற்குத் தானே காரணம் என்பவர். நக்சலிய இயக்கத்தினுள்ளும் தேசியங்களின் விடுதலைக் கோட்பாட்டைப் புகுத்தியவன் தானே என்று பெருமையடித்துக் கொண்டவர். இவை உண்மையாக இருந்தால் தேசிய விசைகளை ஏமாற்றி ஈர்த்தெடுத்து அழிப்பது தான் அவரது உள்நோக்கம் என்பது இப்போது புரிந்திருக்கும்.

″மார்க்சியர்″களின் அடுத்துக்கெடுக்கும் பணிக்கு இன்னொரு சான்று: நான் மேலே குறிப்பிட்ட பெரியாற்று அணையில் பணிபுரிந்த நண்பரைப் பற்றி நெல்லைப் பகுதி நண்பர் ஒருவர் கூறியது. அவர் நெல்லையில் பணியாற்றிய போது அங்குள்ள தி.க., தி.மு.க., தனித்தமிழ் இயக்க இளைஞர்களை அணுகி தங்கள் இயக்கம் (இந்திய மா.லெ.இயக்கம்-மக்கள் போர்க்குழு) தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொள்வதாகவும் பெரியாரின் பங்களிப்பை, தனித்தமிழ் இயக்கக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாகவும் இரண்டாண்டுகள் நம்பவைத்திருக்கிறார். இறுதியில், தமிழக மக்களின் எதிரி தில்லி அரசு, அதன் பின்னணியில் சோவியத்து, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் (அவற்றுள் சோவியத்து தான் உலக மக்களின் முதல் எதிரி!) நிற்கின்றன; இந்த மாபெரும் விசைகளின் படைகளை எதிர்த்துப் போரிட வேண்டுமாயின் தமிழகத்தை மட்டுமே களனாகக்கொண்ட இயக்கத்தால் முடியாது; எனவே ஓர் இந்திய அமைப்பினுள் நீங்கள் வர வேண்டும் என்றிருக்கிறார். பெரும்பாலோர் அவரை விட்டு விலகிவிட்டனர்.

இவ்வாறு ″மார்க்சிய″க் கட்சிகள் அல்லது பொதுமை என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தை அடுத்துக் கெடுப்பவையாக, அணைத்து அழிப்பவையாகவே உள்ளன.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] அமெரிக்க உளவு முகவாண்மையின் உருவாக்கமான மாவோயிய முனைப்பியர்கள் வெடிகுண்டு போன்ற ஆயுதங்களைச் செய்யும்போதோ கொலைகளைச் செய்தோ பிடிபட்டுத் தண்டனையடைந்து சிறையிலிருக்கும்போது அவர்களை அணுகி ″தமிழ்த் தேசியம்″ புகட்டி மன்னிப்பு கேட்கவைத்து பிணையில் கொண்டுவந்து அவர்களை ″தமிழ்த் தேசிய மறவர்″களாக உலவவிடுவது அதே உளவு முகவாண்மையின் இன்னொரு படைப்பான பொ.ம.கு.ஆ. என்பது குறிப்பிடத்தக்கது. எ-டு. கலியபெருமாள், தியாகு போன்றோர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-14

மனந்திறந்து... 4

ந.ம.கு.வினருடன் தொடர்பு கொண்ட நாளிலிருந்தே பெரியவர் திரு.வே. ஆனைமுத்துவுடனும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவரது இயக்கத்தின் பெயர் பெரியார் சமவுரிமைக் கழகம் (இப்போது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி). அந்த இயக்கத்தின் கருத்தாய்வுக் கூட்டங்களில் சென்னை சென்று கலந்துகொண்டேன். சிந்தனையாளன் இதழில் பேயன் என்ற பெயரில் பொருளியல் உரிமை அடிப்படையிலான கட்டுரைகள் எழுதினேன். ஆனால் இதழின் பிற ஆக்கங்களிலிருந்து அக்கருத்துகள் தனிமைப்பட்டே நின்றன. இயக்கத்தை வளர்ப்பதற்கும் இதழைப் பரப்புவதற்கும் அவர் கொள்கை அடிப்படையிலன்றி இயந்திரவியலான அணுகல்களையே மேற்கொண்டார்.

உந்துவண்டி(வேன்)களை எடுத்துக் கொண்டு ஒரு முறை தமிழக வலம் வந்தார். அதில் நெல்லை மாவட்டமும் அடக்கம். நெல்லையில் ஒரு பொதுக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன். தமிழகப் பொருளியல் உரிமைகள் குறித்த செய்திகளைத் தொகுத்து நெல்லையில் உழவர், நெசவாளர் சிக்கல்கள் குறித்து துண்டறிக்கை அச்சிட்டு பரவலாக மக்களிடையில் வழங்கியிருந்தேன். அவருக்கும் விடுத்திருந்தேன். அவர் நெல்லை வந்ததும் உடன் வந்திருந்தவர்களுக்கு அத்துண்டறிக்கையை வழங்கினேன். அவர்களில் ஒருவரான சீர்காழி முத்துசாமி அதைப் படித்துப்பார்த்துவிட்டு ″இது நன்றாக இருக்கிறது; இதை நாம் எல்லோருக்கும் வழங்கலாம்″ என்றார். ஆனைமுத்து அவர்கள், ″நம்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? நம் துண்டறிக்கையை ஊரெங்கும் உந்துவண்டியில் சென்று வழங்குங்கள்″ என்று கடுகடுத்தார். அந்தத் துண்டறிக்கை, மண்டல் ஆணையப் பரிந்துரைகளின் நிறைவேற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பாகவே இருந்தது. தன்னை மண்டல் ஆணையப் பரிந்துரைகளின் நிறைவேற்றத்துக்காக உழைப்பவராக முன்னிறுத்தவே அவர் விரும்புகிறார் என்பது தெரிந்தது. எனவே நான் இட ஒதுக்கீட்டைப் பற்றிக் குறிப்பிட்டு அது என்றும் நிலைக்க முடியாது, இன்றைய நிலையிலேயே இக்கொள்கையினால் பிளவுண்டு நிற்கும் மக்கள் அணு அணுவாகச் சிதைந்துவிடுவார்கள்; தமிழகத் தேசிய உரிமைகளுக்கும் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கும் நடத்தும் போராட்டத்தினாலேயே மக்களிடையிலுள்ள பிளவுகளை அகற்றி ஓரணியில் கொண்டுவர முடியும் என்று விளக்கி ஒரு நீண்ட கட்டுரை விடுத்தேன். அடுத்த முறை அவரைச் சென்னையில் சந்தித்த போது கட்டுரையில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன என்று கூறி என்னைச் சாடினார். அவரது ஆத்திரம் தேவைக்கு அதிகமாக இருப்பதாக எனக்குப்பட்டது. ஒதுக்கீடு என்பது சாதிய ஏற்றத்தாழ்வுக்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இருக்க வேண்டும்; நிலையான தீர்வுக்கான போராட்டத்துக்கு இயக்கத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இரண்டு மணி நேரக் கருத்தாடலுக்குப் பின் அவர் ″மண்டல் ஆணைய நிறைவேற்றம் தான் என் இலக்கு; இறுதியான சாதி ஒழிப்புப் போராட்டம் கடுமையானதாகவும் நீண்ட காலம் நின்று போராட வேண்டியதாகவும் இருக்கும்; அது என்னால் இயாலது″ என்று தீர்த்தறுத்துக் கூறிவிட்டார். அதன் பின்னர் இன்று வரை அவரை நான் சந்திக்கவில்லை.

இந்த இடத்தில் பெரியவர் ஆனைமுத்துவைப் பற்றி நானறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவருக்கு வன்னியர் நலன்தான் உண்மையான குறிக்கோள். அதற்காகவே அவர் பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணியில் ஒதுக்கீடு வேண்டுமென்று பரிந்துரைத்த மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நிறைவேற்றத்துக்காகப் பாடுபட்டார். வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் இராமதாசு தலைமையில் போராடியதன் விளைவாகத் தமிழகத்தில் 20 நூற்றுமேனி ஒதுக்கீடு மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கி அதில் வன்னியர்களையும் சேர்ந்துக் கருணாநிதி ஆணையிட்ட போது வன்னியர்களுக்கு அதில் உள் ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்; ஏனென்றால் அந்த 20 நூற்றுமேனியில் பெரும்பகுதியைத் தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க முக்குலத்தோர் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு மிகுதி. இவரது அணுகலின் விளைவாக, ஒதுக்கீட்டு நோக்கத்துக்காகத் தமிழகத்தைப் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம் என்று பிரித்து அந்தந்த மண்டலத்திலுள்ள சாதிக் குழுக்களின் விகிதப்படி ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பொ.வீ. சீனிவாசன், பெ.பழனிச்சாமி என்ற இருவர் இதற்கேற்பத் தமிழக வரைபடம் ஒன்றில் வெவ்வேறு வண்ணங்களில் இம்மூன்று மண்டலங்களையும் காட்டியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, முக்குலத்தோர் இன்றுள்ள தமிழகத்தில் ஒரு நாளும் முதல்வராக வர முடியாது; எனவே தென்மாவட்டங்களை இணைத்து மதுரையைத் தலைநகராகக் கொண்ட ஒரு தனி மாநிலம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர் சிலர். ஆக, ஒதுக்கீட்டுக் கோட்பாடு அதன் தவிர்க்க முடியாத இலக்கைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது தமிழக மக்களை அணு அணுவாகச் சிதறச் செய்வதுடன் தமிழகம் என்னும் நிலப்பரப்பைப் பிரிக்கவும் தொடங்கியுள்ளது. ஆக, ஒதுக்கீட்டுத் திட்டத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் பெரியவர் வே.ஆனைமுத்து இப்போது தன் இயக்கத்துக்கு மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்று பொருத்தமாகத்தான் பெயர் வைத்துள்ளார். பெரியாரியம் தமிழக மக்களை மட்டுமல்ல, தமிழக மண்ணையே சாதி அடிப்படையில் சிதறடிக்கவும் ″மார்க்சியம்″ அவர்களைப் பொருளியல் அடிப்படையில் சிதறடிக்கவும் போதுமல்லவா?

தான் பெரியாரோடு நெருங்கிப் பழகியவன், பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக அறிந்துள்ளவன் தான் ஒருவன் தான் என்று பெருமை பேசுபவர் அவர். உண்மை தான். அதனால் தான் இட ஒதுக்கீட்டைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை. நக்சலிய இயக்கத்தவரும் திராவிட இயக்கத்தவரும் இணைந்து செயற்படுவது என்ற அடிப்படையில் தென்னாற்காடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இணைந்து செயற்படுவதைப் பற்றி ஒரு சொல் கூடப் பேசாமல், பெரியாரின் சிந்தனைகளை அறிந்தவன் தான் ஒருவன் தான் என்று முழங்கினார். கேட்டவர்கள் சலிப்படைந்தனர். பெரியாரின் சிந்தனைகள் என்ற தொகுப்பை வெளியிட்டவர் அவர் என்பது சரிதான். ஆனால் இப்படி அவர் முழங்கும் போது அவர் மனக்கண்ணில் தன் எதிரே ஒருவரை நிறுத்தி அவரைப் பார்த்துத் தான் முழங்குகிறார். அவர் வேறு எவருமில்லை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணிதான்.

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகப் பொறுப்பு தனக்குத் தான் வரும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருத்ததை அவரோடு பழகிய நாட்களில் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது கைகூடாமல் போனது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, தான் ஒருவன் தான் பெரியாரின் பின்னடியாக(வாரிசாக) இருக்கத் தகுந்தவன் என்று அவர் முழங்கினார். வீரமணி உந்து வண்டியில் தமிழகத்தைச் சுற்றி வந்ததைப் போலத் தானும் சுற்றி வந்தார்.அதனால் அவர் பொறுப்பில் இருந்த, பங்கு அடிப்படையிலான குழுமம் ஒன்றுக்கு உரு 80.000∕- க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பொதுவாக ஓர் இயக்கத்தில் உடைவு ஏற்படும் போது அதற்குப் பின்னணியாகச் சில காரணங்கள் இருக்கும். கொள்கை முரண்பாடுகள், தனிமனித மோதல்கள், பணம், பதவி ஆகியவை கருதி நடைபெறுபவை என்று அவை இருக்கும். அவற்றின் ஊடாக வெவ்வேறு மக்கள் குழுக்கள் அணி திரள்வதும் உண்டு. உருசியாவில் புரட்சிக்கு முந்திய உருசியப் பொதுமைக் கட்சி(உருசிய குமுக மக்களாட்சிக் கட்சி என்பது அதன் அப்போதைய பெயர்) பெரும்பான்மை (போல்சுவிக்), சிறுபான்மை (மென்சுவிக்) என்று பிரிந்த பின் அவை ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு புரட்சியை விரைவுபடுத்தின. அது போல் இந்தியாவில் காந்தியை எதிர்த்த சுபாசு சந்திரபோசு இந்திய விடுதலை என்பதை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எய்த வேண்டும் என்று செயலில் இறங்கியதன் விளைவாகத்தான் ஆங்கிலரும் காந்தியும் உடன்பாடு கண்டதால் இன்று நமக்கு ஒரு போலி விடுதலை கிடைத்துள்ளது. போசு அதைச் செய்யவில்லையாயினும் ஒரு போலி விடுதலை தான் கிடைத்திருக்கும்; ஆனால் கொஞ்சம் காலம் பிடித்திருக்கும்.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. தோன்றிய போது அது கொள்கை அடிப்டையிலான பிளவுதான் என்று காட்ட அண்ணாத்துரை முயன்றார். பிளவுபட்ட இரு இயக்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கியென்றார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற பொருளியல் முழக்கத்தை முன்வைத்தார். ″திராவிடர்″ என்பது இனத்தைக் குறிக்கிறது; ″திராவிட(ம்)″ என்பது நிலத்தைக் குறிக்கிறது என்றார். ஆனால் பெரியார் இத்தகைய முகமூடி எதையும் அணியவில்லை. திராவிட இயக்கத்தின் அரசியல் எதிரியான பேரவைக் கட்சிக்குள் சென்று காமராசரைத் தூக்கிப்பிடித்தார். இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், திராவிட இயக்கத்தின் உண்மையான குறிக்கோள் என்ன? கடவுள் மறுப்பா, சாதி ஒழிப்பா, பார்ப்பனர் எதிர்ப்பா, பார்ப்பனர் ஒழிப்பா, பார்ப்பனிய ஒழிப்பா, இட ஒதுக்கீடா, தமிழ் மொழிக் காப்பா, இந்தி எதிர்ப்பா, தமிழக விடுதலையா, பொருளியல் உரிமையா, நிகர்மை அல்லது பொதுமையா என்று எவரும் வரையறுத்ததாக நமக்குத் தெரியவில்லை. எனவே மேலே பட்டியலிட்ட குறிக்கோள்களுக்குள் முரண்களோ மோதல்களோ உருவாகும் போது எவ்வெவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கிவைக்கலாம், எவ்வெவற்றைக் கைவிடலாம், எவ்வெவற்றைக் கைவிடக் கூடாது, கைவிட முடியாது என்ற வரையறை எதுவும் இல்லை. ஆனால் நடைமுறையில் தமிழகத் தேசியப் பொருளியல் உரிமை என்ற ஒன்று, இடையில் சிறிது காலம் திராவிட இயக்கத்தின் கவனத்தில் இருந்து இப்போது முற்றிலும் அகன்றுவிட்டது. பிறவற்றை அவரவர் தத்தமது வசதிக்கேற்ப அவ்வப்போது கையாண்டு வருகின்றனர். இதனால் இன்றைய இளைஞர்கள் தமிழ்த் தேசியம் என்ன என்ற தெளிவேயின்றி அங்கும் இங்குமாக ஓடி ஓடி ஓய்ந்து போகின்றனர்.

பெரியாருடன் அறிவு, கருத்தாடல் என்ற அடிப்படையில் உறவு கொண்டிருந்த ஆனைமுத்துவை விட அவரது வளர்ப்புப் பிள்ளை போல் அவருக்குப் பணிவிடை செய்து வந்த வீரமணி அவருக்கு நெருக்கமானதிலும் இயக்கத்தில் செல்வாக்குப் பெற்றதிலும் வியப்பில்லை. அந்த நெருக்கத்தின் விளைவாகவே, ஆனைமுத்து அடிக்கடி குறிப்பிடுவதைப் போலப் பெரியாரின் இறுதிக் காலத்தில் வீரமணியும் மணியம்மையாரும் அவரை அடித்துத் துன்புறுத்தித் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. எத்தனையோ வழிகளில் (தன்னை நம்பிய தமிழக மக்களை ஏமாற்றி) அக்கிழவர் சேர்த்து வைத்திருந்த அப்பெருஞ்செல்வம் அவரது இறுதிக்காலத் துன்பத்துக்கே காரணமாயிருந்திருக்கிறது. சமய மடங்களில் நடைபெறுபவை போன்றதுவே இதுவும்.

ஆனைமுத்து அவர்கள் நிறைய தொடர்புகளைப் பேணியவர். எல்லாக் கட்சிப் பெருமக்களிடமும் அதிகார அமைப்புகளோடும் அவர் நல்லுறவு வைத்திருப்பார். எந்த ஆட்சி நடைபெற்றாலும் எவருக்கும் இடமாற்றுதலோ பதவி உயர்வோ பெற்றுத்தர அவரால் முடியும் என்பதை அவரோடு பழகிய காலத்தில் நான் கண்டிருக்கிறேன்.

திரு. ஆனைமுத்து அவர்களின் அணியில் இருந்தவர்களில் பெரியவர் சேலம் சித்தையன் அவர்கள் எனது செயற்பாடுகளைப் புரிந்து ஏற்று ஆதரித்தவர். அவருக்கே எனது சிந்தனை ஓட்டம் இருந்ததை என்னால் அறிய முடிந்தது. ஆனால் எதையும் செய்ய இயலாத நிலையில் மூப்பெய்தியும் தனிமைப்பட்டும் இருந்தார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ்த் தேசியம்-15

மனந்திறந்து... 5

இதற்கிடையில் மதுரையில் அன்று[1] வாழ்ந்திருந்த பெரியவர் திரு. பொன். திருஞானம் அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு அவராகவே முன்வந்து திராவிட இயக்கத்தவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அஞ்சல் துறையில் பணிபுரியும் ஓர் இளைஞருடன் ஒரு நாள் பின்னிரவு முழுவதும் உரையாடினேன். பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தான் தன் குறிக்கோள் என்று அடித்துக் கூறிவிட்டார். இட ஒதுக்கீடு முடிவில்லாமல் சென்றால் அது தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்குமான பிளவைப் பகைமையாக மாற்றுமே, சாதி ஒழிப்புக்குத் தடையாகுமே, தமிழ்த் தேசியத்துக்கு எதிராகுமே. இட ஒதுக்கீட்டுக்கு ஒரு மாற்று வேண்டாமா? நிலையான ஒரு தீர்வுக்குப் போராட வேண்டாமா என்ற எந்தக் கேள்வியும் அவரது மனதில் உறைக்கவில்லை. பின்னர் ஒருமுறை பலரை ஒன்று திரட்டி மதுரை மாநகராட்சிப் பயணியர் விடுதியில் ஒரு சந்திப்புக்கும் திரு. திருஞானம் ஏற்பாடு செய்தார். அவர்களிலும் எவருமே எந்தச் செயற்பாட்டுக்கும் முன்வரவில்லை.

இந்தப் பட்டறிவுகளுக்குப் பின்னர் தான் நெல்லையில் திரு.பசல் ரகுமான் என்ற இராசா என்னும் தோழரின் ஊக்குவிப்பால் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் எனும் பெயர் கொண்ட இயக்கம் கருக்கொண்டது. இந்த ஊக்குவிப்பு என்பதற்கு மேல் அவரால் இயக்க வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க எதையும் செய்ய முடியவில்லை. மதுரைத் தோழர்களுடனான தொடர்பு தொடர்ந்தது. 1988ஆம் ஆண்டளவில் மதுரைத் தோழர்கள் இரா. செல்வரசு, பொன்.மாறன் ஆகியோரின் முயற்சியில் மதுரை விக்டோரியா அரங்கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. தலைமைக்கு அழைக்கப்பட்டிருந்த பூ.அர.குப்புசாமி அவர்கள் வராமையால் தோழர் பறம்பை அறிவன் தலைமை தாங்கினார். அதன் பின்னர் 1989 தொடக்கத்தில் என்று நினைவு, திருவரங்கத்தில் தமிழ் இயக்கங்களை இணைத்து தமிழ்த் தேசிய இயக்கம் தொடங்குவதற்கான அமைப்புக் கூட்டம் நடைபெற்றுது. நான் மக்கள் பொருளியல் உரிமைக் கோட்பாட்டை எடுத்துரைத்தேன். அது எவர் கவனத்தையும் ஈர்த்ததாகத் தெரியவில்லை. அத்துடன் செயல்திட்டமாக அவர் உருவாக்கியிருந்த வரைவில் கோயில் சொத்துகளை உழவர்களிடமிருந்து ″மீட்க″ வேண்டுமென்றிருந்த திட்டம் தமிழ்த் தேசியத்தோடு எங்ஙனம் பொருந்துகிறது என்ற வினா என்னுள் எழுந்தது. இந்தக் கேள்வி கூட எவராலும் எழுப்பப்படவில்லை.

மதுரைத் தோழர் இரா.செல்வரசு திரு.நெடுமாறனோடு தொடர்புகொண்டு அவ்வவப்போது சந்தித்துவந்தார். பழனி அருகில் நடைபெற்ற த.தே.இ.மாநாட்டின்போதும் நாங்கள் அவரைச் சந்தித்தோம். பின்னர் 1989இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதாகத் திட்டமிட்டுக் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருமான வரி எதிர்ப்பு போன்ற தேசியப் பொருளியல் கொள்கைகளைத் தேர்தலில் முன்வைக்க வேண்டுமென்று கருத்துக் கூறினேன். அதற்கும் எவரும் செவி சாய்க்கவில்லை. தேசியப் பொருளியல் சிக்கல்களைப் பற்றி திரு. நெடுமாறனிடம் நான் எடுத்துரைக்கும் போதெல்லாம் தனக்கு அதைப்பற்றி இன்னும் கூடுதலாகத் தெரியும் என்று புதிய செய்திகளைச் சொல்வாரே தவிர அவற்றின் அடிப்படையில் அவரது இயக்க அணுகல்களை அமைக்க அவர் எந்த முனைப்பும் காட்டவில்லை. தேர்தலில் சராசரி அரசியல் கட்சி போன்றே ஈடுபட்டார். கட்சி கடுமையான தோல்வியைத் தழுவியது. தேர்தலுக்குப் பின் தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்ய நான்கைந்து பேர் பங்கு கொண்ட ஒரு கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் கூட்டல் கழித்தல் கணக்கு தான் போடப்பட்டதே தவிர கொள்கைகளைப் பற்றிய அலசல் எதுவுமே நடைபெறவில்லை. எனவே தமிழ்த் தேசிய இயக்கத்தில் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் இணையாது என்று அறிவித்துவிட்டு அந்த உறவுக்கு ஒரு முடிவைக் கட்டினேன்.

இந்த இடத்தில் திரு.பழ. நெடுமாறன் அவர்களைப் பற்றி நான் அறிந்தவற்றைக் கூற வேண்டும்.

1989 தேர்தலுக்குப் பின் அவருடன் நடைபெற்ற கலந்தாய்வின் போது அவர் ஒரு செய்தியைக் கூறினார். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் முனைப்பான ஈடுபாடு கொண்டிருந்தாராம். அப்போது ஒரு முறை அவரும் தி.மு.க. மீது ஈடுபாடுடைய வேறு மாணவர்களும் சேர்ந்து அண்ணாத்துரையைச் சந்தித்தனராம். அப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்களைப் போல திராவிட நாடு விடுதலைப் போருக்கு ஆயுதம் தாங்கிப் போராட தாங்களும் ஆயத்தமாகவும் ஆர்வமாகவும் உள்ளதாக அவர்கள் அண்ணாத்துரையிடம் கூறினராம். ஆனால் அண்ணாத்துரையோ, திராவிட நாட்டு விடுதலைக்காக ஒரேவொரு தோட்டாக்கூட சுடப்படாது, ஒரு சொட்டுக் குருதிகூடச் சிந்தப்படாது என்று கூறினாராம். இந்த அண்ணாத்துரை தான் ″ஓட்டு முறை, அது பயன் தரவில்லை எனில் வேட்டுமுறை″ என்று மேடைகளில் அடுக்கு மொழியில் ″வீர வச்சனம்″ பேசியவர் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் தான் போலும் சம்பத்துடன் நெடுமாறனும் பிரிந்து சென்றார். தனிக் கட்சி நடத்த இயலாத நிலையில் சிற்றப்பா பெரியாரின் அறிவுரை, பரிந்துரைகளுடன் பேரவைக் கட்சியில் காமராசரின் அரவணைப்பைப் பெற்ற சம்பத்துடன் பேரவைக் கட்சியினுள் போய்ச் சேர்ந்தார். ஆக மனதில் பதிந்திருந்த கொள்கைகள் கோட்பாடுகளுக்கு நேர் எதிரான ஓர் இயக்கத்தினுள் சென்று சேர்ந்தாயிற்று. இனி அவற்றுக்குப் பகரம் பதவி, அரசியல் செல்வாக்கு, பணம், புகழ் என்று நாட்டம் கொள்வது இயற்கை தானே!

அண்ணாத்துரையும் கருணாநிதியும் கட்சியினுள் கொள்கை, கோட்பாடு, நேர்மை, போன்ற ″கவைக்குதவாத″ கருத்துகளை வைத்திருப்போரை ஆங்காங்கே இனங்கண்டு அவ்வப்போதே அவர்களை ஒதுக்கி வைத்து நேரம் கிடைக்கும் போது கழித்துக்கட்டிவிடுவர். இதைச் செயலாக்கியவர் களப்பணியில் கைதேர்ந்த கருணாநிதிதான். அண்ணாத்துரை களங்கமில்லாத் தூயவர் போன்று இருப்பார்.

கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினிலாயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தாரையும் கருவறுக்கும்

சம்பத்தோடு தி.மு.க.விலிருந்து வெளியேறியவுடன் கண்ணதாசன் அண்ணாத்துரையை மனதில் வைத்து தாய்சொல்லைத் தட்டாதே திரைப்படத்துக்காக எழுதிய ஒரு பாடலில் உள்ள சில வரிகள் இவை.

அண்ணாத்துரையுடன் சேர்ந்து நடத்திய இந்தக் கருவறுக்கும் சொல்லுக்கான முழுப்பழியையும் கருணாநிதி தாங்கிக் கொண்டார். ஆனால் அதற்குரிய பலன்களை இரண்டு தலைமுறைகளாக அறுவடை செய்திருக்கிறாரே! ஒரு தேனீரைப் பங்கு போட்டுக் கண்ணதாசனுடன் குடித்தவர் 60 ஆண்டுகளில் ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் பட்டியலில் இடம் பெறும் அளவுக்குப் பயனடைந்திருக்கிறாரே! ஆனால் பாருங்கள் தமிழக அரசியலில் புதிதாக, நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் உள்ள ஒரேயொரு ஆள்கூடத் தலையெடுக்க முடியாமல் தமிழகம் பாழ் நிலமாக, பாலைநிலமாகப் போய்விட்டதே!

இனி நெடுமாறனுக்கு வருவோம். மதுரையில் தி.மு.க.வின் தொடக்க நாட்களில் பேரவைக் கட்சியினரின் அடியாட்களை எதிர்கொண்டு தன் கீழும் ஓர் அடியாள் கும்பலை வைத்து கழகத்தை வளர்த்தவர் மதுரை முத்து; அதே மதுரையில் அது போலவே அடியாட்களைக் கொண்டு மதுரை முத்துவை எதிர்த்து பேரவைக் கட்சியை மீட்டவர் நெடுமாறன் என்று மதுரை நண்பர்கள் கூறியிருக்கின்றனர். அத்துடன் நெருக்கடி நிலைக் காலத்தில் தி.மு.க.வினர் மீது இந்திரா காந்தி நிகழ்த்திய அடக்குமுறை வெறியாட்டத்துக்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் வகையில் 1977 தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட இந்திரா மதுரையில் கலந்துகொண்ட ஊர்வலத்தில் அவரைத் தாக்கத் திட்டமிட்டனர் தி.மு.க.வினர். ஊர்வலத்தின் போது அவருடன் சென்ற நெடுமாறன் தி.மு.க.வினர் வீசிய கல்லடிகளைத் தான் தாங்கிக் கொண்டார். இதனாலெல்லாம் அவர் மாவீரன் என்ற பட்டம் பெற்றார். விருப்பம் போல் கண்டவர்க்கெல்லாம் பட்டங்கள் வழங்கும் வள்ளன்மையில் தமிழர்களை மிஞ்ச உலகில் எவருமே இல்லை.

ஆனால் இந்திராவின் இறுதிக் காலத்தில் தமிழ்நாடு பேரவைக் கட்சித் குழுத் தலைவராக இருந்த இவரை ஒதுக்கிவிட்டு கருப்பையா மூப்பனாரை இந்திரா அமர்த்திய போது வெறுப்படைந்து வெளியேறி தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார். இதே காரணத்துக்காக குமரி அனந்தனும் காந்தி - காமராசு காங்கிரசு என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்.

இந்தச் சூழலில 1983 இல் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர் மனித வரலாற்றையே இழிவுபடுத்தும் வகையில் கொடுமைகள் புரிந்தனர். தமிழக மக்கள் யாருடைய முன்முயற்சியும் வழிகாட்டலும் தலைமையும் இன்றி தன்னெழுச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த பின்தான் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாகக் களம் புகுந்தன. அந்த வகையில் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.)வின் துணையுடன் பழ.நெடுமாறன் இராமர் உருத்தாங்கி கையில் வில்லும் அம்பும் தலையில் மணிமுடியுடனும் படகில் ஏறிச் செல்ல ஒரு படகுகளின் அணி இராமேசுவரத்திலிருந்து இலங்கை நோக்கிச் செல்வதாகப் புறப்பட்டது. வழக்கம் போல் காவல் துறையினர் தளையிட்டுப் பின்னர் விடுவித்தனர். அன்றிலிருந்து அவரது ″தமிழ்த் தேசிய″ப் பயணம் மீண்டும் தொடங்கியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இந்தியாவினுள் தம் பேச்சாளராக அவரை ஈர்த்துக்கொண்டனர்.

புலிகளுக்குப் பணி செய்யப் போகிறவர்களின் பாடு கொஞ்சம் சிக்கல் தான், புலிமீது ஏறியவனின் நிலை தான். அப்படியொன்றும் எளிதாகக் கீழே இறங்கிவிட முடியாது. அந்தச் சிக்கல் தான் அவரை இன்றுவரை அங்கு நிறுத்திவைத்துள்ளது என்று கருதுகிறேன்.

புலிகளின் இயல்பு அத்தகையது. அது தவிர்க்க முடியாதது. போர்க்களத்தில் இருப்பவன், அதிலும் உலகம் முழுவதுமே எதிரிகளாகப் படிப்படியாக மாறிக்கொண்டிருந்த சூழலில், எந்த நண்பன் எப்போது பகையாவான் என்று கணிக்க முடியாத உலகில் அதிலும் ″நட்பும் பகையும் நிலையானவையல்ல″ என்பதைப் பெருமைக்குரிய கொள்கையாக நாள்தோறும் அறிவித்துக்கொண்டிருக்கும் அரசியல் களத்தில் நட்பு, பகை, நன்றி போன்ற உணர்வுகளுக்கு இடமில்லை. இலக்கு நோக்கி முன்னேறுவது ஒன்று தான் நிலையானது. இந்த ஒரே இடத்தில் தான் கண்ணன் அருச்சுனனுக்குக் கூறியதாக வரும் அறிவுரைகளின் அந்தப் பகுதி நடப்பில் தவிர்க்க முடியாததாகிறது. அந்தப் பாணியைக் கைக்கொள்வதால்தான் இன்று விடுதலைப் புலிகளால் களத்தில் நின்றுகொண்டிருக்க முடிகிறது.

தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களை வைத்துத் தமிழக அரசியல்வாணர்கள், குறிப்பாகத் திராவிட மற்றும் தமிழ் இயக்கத் தலைவர்கள் பெயரையும் புகழையும் அரசியல் செல்வாக்கையும் வளர்த்துவந்துள்ளனர். சென்ற(20ஆம்)நூற்றாண்டில் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போரட்டம் வெடித்து எண்ணற்றோர் புலம் பெயர்ந்து சென்ற போது இத்தலைவர்களுக்கும் ″அறிஞர்″களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு பெரும் சந்தையாகிவிட்டனர். அத்துடன் ஆங்கிலராட்சிக் காலங்களில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்று அங்கு தமிழ் மொழியையும் பண்பாட்டையும் மறந்துவிட்ட தலைமுறைகள் உருவான நிலையில் அந்நாடுகள் அரசியல் விடுதலை பெற்றன. உள்நாட்டு மக்கள் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கத் தொடங்கினர். இதை எதிர்த்து நிற்பதற்கு அவர்களை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள் தேவைப்பட்டன. அவை தாம் மொழியும் பண்பாடும். அதற்காக அவர்கள் தமிழகத்தை நோக்கினர். தமிழையும் தமிழர்களையும் வாழவைப்போம் என்று அரியணை ஏறியவர்கள் எதையும் செய்யவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பெரும் தமிழறிஞர் திருக்கூட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளுக்குப் படையெடுத்தது. நல்ல வேட்டை, நல்ல தேட்டை.. காலஞ்சென்ற தமிழ்க்குடிமகள், வாழும் வா.மு.சேதுராமன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். காலமுறையில் சென்று வந்தனர், வருகின்றனர். தாளிகைகள் என்று எடுத்துக்கொண்டால் காலச்சுவடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதனுடைய களம் ஈழத்தமிழர்களே. அதிலும் பார்ப்பன - மலையாள மனப்பான்மையுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை, இன்னும் பழைய சாதிய மேலாண்மை மனப்பான்மை மாறாமலிருக்கும் புலம் பெயர்ந்த மேட்டுக்குடி ஈழத் தமிழர்களின் கருத்துகளை அது நஞ்சாகப் பரப்பி வருகிறது.

தமிழகத் திரையுலகின் இன்றைய தரங்கெட்ட திரைப்படங்கள் பெரும் வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கில் முதலீட்டில் படங்கள் எடுக்க முடிகிறதென்றால் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் புலம் பெயர்ந்த தமிழர்களின் தேவையை ஓரளவுக்காவது அவை நிறைவு செய்வதால்தான். இத்தகைய சூழலில் தான் நெடுமாறனின் செல்வாக்கு உலகத் தமழிர்களின் தனிப்பெரும் தலைவர் என்னுமளவுக்கு வளர்ந்துள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தேவை அவர்களை ஒன்றிணைக்கும் அடையாளங்களாகிய மொழியும் பண்பாடும். ஆனால் அதே வாய்ப்பாடு தாய்நாட்டுத் தமிழர்களுக்குப் பொருந்தாது. இங்கு அவர்களுக்குத் தாய்மொழி - பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல் இல்லை. பொருளியல் திரிபுகளால், திராவிட இயக்கம் கொடுத்த ஒதுக்கீட்டு ″அமுதக் கரைசலை″ உண்டதால், நிலத்திலிருந்தும் அது தரும் செல்வத்திலிருந்தும் கவனம் திருப்பப்பட்டு நாட்டை விட்டோடத் துடிக்கும் துடிப்பால் தாய் மொழியை வெறுத்து அயல் மொழிகளில் எழுதவும் சிறப்பாகப் பேசவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் புதிய தலைமுறையினர். அவர்களுக்கு நாம் நம் நிலத்தின் மீதும் அதன் வளங்கள் மீதும் நம் ஆற்றல்கள் மீதும் ஈடுபாட்டை உருவாக்கி அந்த வளங்கள் நமக்கு மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராட அவர்களை ஆயத்தப்படுத்துவது தான் தாய்நாட்டுத் தமிழர்களுக்குப் பொருத்தமான உத்தி. அதற்குப் பகரம் விதிவிலக்கின்றி அனைவரும் மொழி, பண்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அறைகூவலை முன்னிலைப்படுத்திக் கவனத்தைத் திருப்புகிறார்கள். காரணத்தை மறைத்து வினைவை முன்னிலைப் படுத்துகின்றனர். நச்சு மரத்தின் வேரை வெட்டியெறிவதற்குப் பகரம் கிளைகளை வெட்டினால் போதுமென்று ஒன்றுகூடிப் பெருங் கூச்சல் போடுகிறார்கள்.

இவர்கள் இதைச் செய்வதற்கு உள்நோக்கங்கள் உண்டு. காமராசர் வாழ்ந்த போது தன் காலத்துக்குப் பிறகும் நெடுமாறன் குமரிஅனந்தன் போன்றோருக்கு மாதந்தோறும் பணம் கொடுக்குமாறு மார்வாரிகளிடம் ஏற்பாடு செய்திருந்தார் என்றொரு செய்தி உண்டு. அதை அவர்கள் நிறுத்த முயன்றால், மார்வாரி கடைகளுக்கு முன்னால் மறியல் போன்ற போராட்டங்களை அறிவித்து அவர்களை வழிக்குக் கொண்டுவருவர்.

எனவே உள்நாட்டுத் தமிழர்களின் மீட்சிக்கு நெடுமாறன். உதவமாட்டார் என்பது உறுதி. வைக்கோவின் கதையும் அது தான். என்று தில்லி பாராளுமன்றம் போனாரோ அன்றே அவர் மார்வாரிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டார். எனவே தமிழக மக்கள் நிலம் சார்ந்த பொருளியல் வளர்ச்சி சார்ந்த கோட்பாட்டுடன் தமிழ் மொழியின் மீட்சி என்ற குறிக்கோளையும் இணைத்துப் போராடத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பழ.நெடுமாறன் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இன்று போல் சோர்வின்றி உழைப்பார் என்று உறுதியாக நம்பலாம். எனவே அவரது எல்லைகளை நன்கு புரிந்து கொண்டு புதுவழிகாண வேண்டுமென்பதற்காகவே அவரைப் பற்றி இவ்வளவு விரிவாகக் கூறப்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] பின்பு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து சென்ற 2005ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். தமிழ்த் தேசிய இயக்கங்கள் என்ற கானல் நீரை நம்பி குடும்ப வாழ்க்கையையும் மன அமைதியையும் இழந்து அலைந்த எத்தனையோ நல்லுள்ளங்களில் அவருடையதும் ஒன்று.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard