New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!
Permalink  
 


35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!

 

ரஷ்யாவின் சைபீரியாப் பகுதி அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி.
அங்கு குளிரும் பனியும் அதிகம்.
பூமியின் சாய்மானத்தைப் பொறுத்து இந்தப் பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சீதோஷ்ண நிலை அமைகிறது.
பூமி தன்னுடைய அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கவே இந்த சாய்மானம், 22 டிகிரி முதல் 25 டிகிரி வரை மாறுபடுகிறது.
சாய்மானத்தில் இந்த வேறுபாடு வருவதற்கு 41,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். மிலன்கோவிட்ச் என்பவர் இதைக் கண்டுபிடிக்கவே இதற்கு மிலன்கோவிட்ச் தியரி என்று பெயர்.
இதன்படி பூமியின் தற்போதைய சாய்மானமான 23-1/2 டிகிரி என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதிக சாய்மானம் இருந்த போது பூமியின் வடபாகம், அதாவது சைபீரியாப் பகுதிகள் பனியில் உறைந்து கிடந்தன. அந்தக் காலக் கட்டத்தைப் பனியுகம் என்கிறார்கள்.
சாய்மான மாறுபாட்டால், அந்தப் பகுதிகளில் வெயில் விழ ஆரம்பிக்கவே பனி யுகம் முடிந்தது.
பனி யுகம் முடிவுக்கு வந்த காலம் இன்றைக்கு 13,000 ஆண்டுகள் முதல் 17,000 ஆண்டுகளுக்குள் இருந்திருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இந்த விவரம் மிக முக்கியமான விவரம். பனியுகம் முடியவே பனி உருகி கடலில் கலந்து, அதனால் கடல் மட்டம் உயர்ந்து, மூன்று முறை கடல் கோல்களால் குமரிக் கண்டம் மூழ்கடிக்கப்பட்டது.
பனியுகம் முடிந்ததால், பாரதத்துக்கும், சைபீரியப் பகுதிகளுக்கும் போக்குவரத்து ஆரம்பித்தது.
இமயமலைக்கு அப்பால், வடக்கில் இருந்த அந்தப் பகுதி பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
மொத்தப் பகுதிக்கும் ஐராவத வர்ஷம் என்று பெயர்.
ஐராவதம் என்பது இந்திரனது யானையின் பெயர்.
இந்திரனது உலகம் அங்கு இருந்தது.
அதுவும் ஒரு ராஜ்ஜியமாகத்தான் இருந்திருக்கிறது.
இந்திரனுக்குச் சக்கரன் என்று இன்னொரு பெயரும் உண்டு.
அந்தப் பெயரைக் கொண்டு அந்தப் பகுதியை சக்கரவாளச் சக்கரவர்த்திகள் ஆண்டார்கள் என்று தமிழிலும்,
நான் அறிந்த வரையில் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றை வரும் பகுதிகளில் காண்போம்.
ஐராவத வர்ஷத்தின் வடக்கில் வட கடல் உள்ளது (ஆர்டிக் கடல்)
அதை ஒட்டிய வட துருவப்பகுதி சோம கிரி என்ப்பட்டது.
ஐராவத வர்ஷத்தின் தென் பகுதி  அதாவது இமய மலையின் வட பகுதி உத்தர-குரு என்றழைக்கப்பட்டது.
(கு  என்பதைக் குயில் என்னும் சொல்லில் உள்ள கு- வைப் போல உச்சரிக்க வேண்டும்)
உத்தரம் என்றால் வடக்கு என்பது பொருள்.
இமய மலைக்கு வடக்கில் உள்ளது உத்தர குரு.
இமய மலைக்குத் தெற்கில் உள்ள நாட்டை தக்‌ஷிண குரு என்று அழைக்கவில்லை.
அதைப் பாரத வர்ஷம் என்றே அழைத்தனர்.
தெற்கில் குரு வம்சத்தினர் வாழந்தார்கள்.
பாண்டவர்கள் குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது மூதாதையர் உத்தர குருவில் வாழ்ந்தனர் என்றே சொல்லியுள்ளனர்.
அதாவது இவர்களில் ஒரு பிரிவினர் உத்தர குரு சென்று குடி அமர்ந்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்னொரு வகையிலும், உத்தர குருவுக்கு பாரத மக்கள் குடி பெயர்ந்துள்ளனர். அது எப்படி என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
பொதுவாக ராமாயண காலத்தில் ரிஷிகள் இரண்டு இடங்களில் வாழ்ந்துள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள தண்டகாரண்ய காட்டுப் பகுதிகளில் கிருஹஸ்த வாழ்க்கையில், மனைவியுடன் குடும்பம் நடத்திய ரிஷிகள் வாழ்ந்தனர்.
ராமன் வனவாசம் சென்ற போது இவர்களைச் சந்தித்தான்.
கிருஹஸ்த வாழ்க்கையை விட்ட ரிஷிகள் வானப்ரஸ்ததுக்குவைகானஸ ஏரிப் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.
கடை நிலையான சன்யாசி வாழ்க்கை, மற்றும் யோக வாழ்க்கையை இமய மலையில் கழித்துள்ளனர்.
வானப்ரஸ்த நிலையை மேற்கொண்ட ரிஷிகள் வைகானஸ ஏரிப்பகுதிக்குச் சென்றனர்.
வானப்ப்ரஸ்த நிலைக்கே ‘வைகானஸ நிலை என்று பெயர். 
வைகானஸ ஏரிக்கரையில் அமையவே இந்தப் பெயர் வந்தது என்று தெரிகிறது. 
இந்த வைகானஸ ஏரியைப் பற்றிய வர்ணனை வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.
சீதையைத் தேட வானரர்கள் நான்கு திசைகளிலும் சென்றனர்.
அவர்களுக்கு வானர அரசனான சுக்ரீவன் கட்டளைகள் பிறப்பிக்கிறான். ஒவ்வொரு திசையைப் பற்றியும் அவன் சொல்லும் போது, பாரதத்திலிருந்து அந்தந்தத் திசையில் செல்லும் போது பார்க்ககூடிய நாடுகள், காடுகள், மக்கள், அவர்கள் வழக்கங்கள் என்று பல விவரங்களையும் தெரிவிக்கிறான்.
வடக்கு நோக்கிப் போகும்போது தெரிவிக்கும் விவரங்களின் மூலமாக அவன் சைபீரியப் பகுதிகளை விவரித்துள்ளான் என்று புலனாகிறது.
(கிஷ்கிந்தாகாண்டம் -43)
இமயமலைப் பகுதியில் கைலாச மலையைத்தாண்டி,
பிறகு மானசரோவரைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
இமய மலைப் பகுதிகளைக் கடந்து வடக்கில் சென்றால்,
வைகானஸ ஏரி வரும்.
அதன் கரையில் ரிஷிகள் தவத்தில் இருப்பார்கள்.
அவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள் என்று சுக்ரீவன் கூறுகிறான்.
இந்தப் பகுதியில் இன்று இருப்பது பைகால் ஏரி என்னும் ஏரியாகும்.
bAIKAL-2.bmp
இந்தப் படத்தில்
(1)     சக்‌ஷுஸ் நதிப் பகுதி (கேகய நாட்டுப் பகுதி)
(2)     புரூரவஸ் இருந்த பகுதி (விவரங்கள் பிறகு)
(3)     பைகால் ஏரி
(4)     ஸ்த்ரீ ராஜ்ஜியம் (விஷ்ணு கோயில் இருந்த இடம்)
(5)     அர்க்கைம் (ரஷ்யாவில் ஆராய்ச்சிகள் நடந்த இடம்)
Baikaal.bmp
                             பைகால் ஏரி
இந்த ஏரியின் நீர் மிகவும் சுத்தமானது.
கங்கை நீரைக் குடத்தில் வைத்திருந்தால், எந்த நுண் கிருமியும் உண்டாகாமல் எப்படி கெடாமல் இருக்கிறதோ அது போலவே இந்த ஏரியின் நீரும் கெடாமல் இருக்கிறது.
வைகானஸ ஏரி ஒரு புண்ணிய தீர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.
பல மில்லியன் வருடங்களாக இந்த ஏரி இருந்து வந்திருக்கிறது.
இந்த ஏரிக் கரையில் ரிஷிகள் வைகானஸ வாழ்க்கை மேற்கொண்டனர் என்கிறான் சுக்ரீவன்.
வைகானம் என்பது உருமாறி பைகால் என்று காலப்போக்கில் ஆகியிருக்கலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


சுக்ரீவன் சொல்லும் பிற குறிப்புகளும் ஒத்துப் போகின்றன. இந்த ஏரிப் பகுதி 55 டிகிரீ வடக்கில் இருக்கிறது. இங்கு சூரிய சந்திரர்கள் எப்போதும் தெரிவதில்லை.
இதைச் சுட்டிக் காட்டும் சுக்ரீவன் இந்த ஏரியின் வடக்கில் செல்லும்ஷைலோதம் என்னும் நதியைப் பற்றி விவரிக்கிறான்.
இந்த நதியை ரிஷிகள் கீசகம் என்னும் மரத்தின் கிளைகளைத் தெப்பமாகக் கொண்டு கடந்து செல்வர் என்கிறான்.
இந்த மரம் மூங்கில் போல் குழலுடன் கூடியது அதனால் ஒலி எழுப்புவது என்றும் கூறுகிறான். அந்த மரத்தின் கட்டைகளைக் கட்டி, அவற்றில் ஏறி நதியின் மறுகரைக்குச் சென்றனர் என்கிறான்.
அப்படிப்பட்ட மரங்கள் இன்றும் அங்கு அதிக அளவில் வளருகின்றன.
சென்ற பகுதியில் பார்த்தோமே பிர்ச் என்னும் பூர்ஜ பத்ர மரம்,
அதன் வகையைச் சார்ந்தது இந்த மரம்.
இன்றைக்கும் அந்த மரத்தைக் கொண்டு கட்டுமரம் செய்து அதில் பயணித்து பைகால் ஏரி மற்றும் அந்தப் பகுதி நதிகளைக் கடக்கிறார்கள்.
இந்த மரத்தைக் கொண்டு வாத்தியக் கருவிகள் செய்கிறார்கள்.
பைகால் ஏரியின் வடபகுதியில் ஓடும் பல ஆறுகளுள் அங்காரா நதிமுக்கியமானது. சுக்ரீவன் சொன்ன நதி இதுவாக இருக்கலாம்.
இது வட கடலில் கலக்கிறது.
கீசகம் என்னும் பெயரை நினைவுறுத்தும் விதமாக கிசேரா என்னும் நதியும் பைகால் பகுதியில் உள்ளது.
அதைக் கட்டுமரம் கொண்டுதான் கடக்கிறார்கள்.

 

Angara+river.bmp
                               அங்காரா நதி
வைகானஸ ஏரிக்கு வடக்கே உத்தர குரு இருப்பதாக சுக்ரீவன் கூறுகிறான். 
புண்ணியம் செய்தவர்கள் அங்கே பிறக்கிறார்கள்.
அங்குள்ள மக்களுக்குள் போட்டி, பொறாமை, கெடுதி, கெட்ட எண்ணம் என்று எதுவும் இல்லை.
ஆடை முதற்கொண்டு எல்லாம் அவர்களுக்குக் இயற்கையில் கிடைக்கிறது. விருப்பம் போல அவர்கள் வாழ்ந்தார்கள்.
இசையும், இன்பமுமாக அவர்கள் வாழ்ந்தார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மஹாபாரதத்திலும் சஞ்சயன் தூர திருஷ்டி மூலம் கண்டு இவ்வாறே கூறுகிறான்.
அங்கு மக்கள் ஜோடி ஜோடியாக (மிதுனம், தம்பதி) வாழ்ந்தனர்.
ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழவில்லை.
அப்சரஸ் என்னும் பெண்கள் அங்கு வாழ்ந்தனர்.
அந்தப் பெண்கள் விருப்பப்படி வாழ்ந்தனர்.
 
உத்தர குருவுக்கு அப்பால் இந்திரனுலகம் உள்ளது என்று சுக்ரீவன் கூறுகிறான். 
உத்தரகுருவைப் போலவே இந்திர லோகத்தில் இருந்த மக்களும் கவலை, கஷ்டம் இன்றி, சந்தோஷமாக வாழ்ந்தனர். 
புராணக் கதைகளில் இந்திர லோகத்தில் எப்பொழுதும், ஏதாவது ரிஷி வந்து போய்க் கொண்டிருப்பார். வைகானஸ ஏரிப்பகுதியில் ரிஷிகள் வாழ்ந்தார்கள் என்பது இந்த சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. 
பூமியின் ஒரு பகுதியில்தான் தேவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை வலியுறுத்தும் வண்ணம் தேவர்களுக்குப் பிறந்த வீரர்கள் நம் நாட்டில் பேசப்பட்டுள்ளனர்.

 

 
பாண்டவர்கள் அனைவருமே தேவர்களுக்குப் பிறந்தவர்கள்.
குந்திக்கு, இந்திரனிடம் பிறந்தவன் அர்ஜுனன் என்றால் அந்த இந்திரன் எங்கோ உலகில் இருந்தவனாகத்தானே இருக்க முடியும்?
இதில் வேற்றுலத் தொடர்பு எதுவும் இல்லை என்று சொல்லும் வண்ணம் ஒரு விவரம் இருக்கிறது.
கர்ணன் சூரியனுக்குப் பிறந்தவன் ஆவான்.
அந்த சூரியன் எங்கிருந்தான் என்று சொல்லப்படவில்லை.
ஆனால் அதே சூரியனுக்கும்சம்ஞ்ஞா என்பவளுக்கும் உத்தர குருவில்ரேவந்தன் என்பவன் பிறந்தான் என்று மார்கண்டேய புராணம் கூறுகிறது.
அந்த சூரிய புத்திரன் உதீச்சய வேஷத்துடன் இருந்தான்.
அதாவது கவச குண்டலத்துடன் பிறந்தான் என்று அந்தப் புராணம் கூறுகிறது. உதீச்சயம் என்றால் வடக்கு என்று பொருள்.
உத்தரகுரு மக்களைப் போன்ற அலங்காரத்துடன் அவன் இருந்தான்.
அவனைப் போலவே சூரியனுக்குப் பிறந்த கர்ணனும் கவச குண்டலத்துடன் உதீச்சய வேஷத்துடன் பிறந்தான்.
கர்ணனுடன் இந்த ஒற்றுமை இருப்பதால், ரேவந்தனின் தந்தை சூரியனும், கர்ணனது தந்தை சூரியனும் ஒருவனே அல்லது ஒரே வம்சத்தில் அதே பெயருடன் வந்தவர்களே என்று தெரிகிறது.
ரேவந்தனின் தந்தையான சூரியன் உத்தர குருவில் வாழ்ந்தான் என்பதாலும் அந்தப் பகுதி தேவலோகம் என்றும் தெரிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுக்ரீவனும் இப்படியே சொல்கிறான்.
மஹாபாரததில், சாந்தி பர்வத்தில் பிருகு முனிவர், பாரத்வாஜ முனிவர்ஆகிய இருவருக்கிடையேயான உரையாடலில் (அத்196) இது விரிவாக சொல்லப்படுகிறது.
இமய மலைக்கு வடக்கில், பூமியின் வட பாகத்தில் உள்ள இடம் சுவர்க லோகத்துக்குச் சமமானது.
அதனைப் பர லோகம் என்றும் சொல்வர்.
புண்ணியத்தைச் செய்த மக்கள் அங்கே பிறக்கிறார்கள் என்று பலவிதமாக விவரிக்கப்படுகிறது.
இந்திரனும், சூரியனும் பல இடங்களில் சொல்லப்படுகிறார்கள்.
நாம் முன்பு பார்த்த நாளங்காடிப் பூதம் இந்திரனைச் சேர்ந்தது.
இந்திரன் தனது நகரமான அமராவதியைப் பார்த்துக் கொள்ளுமாறு சோழ அரசன் முசுகுந்தனுக்குச் சொல்லிவிட்டுச் செல்கிறான்.
தன்னைத் தொந்திரவு செய்த அசுரர்களை அடக்க வேண்டி இந்திரன் செல்லவே முசுகுந்தனிடம் தன் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்தான்.
சோழ அரச பரம்பரையில் வரும் மற்றொரு மன்னனான உபரிசிரவஸுஇந்திரனது நண்பன்.
அவன் இருந்த இடம் இமயமலையில் மானசரோவர் ஏரிப்பகுதி.
அங்கிருந்து புகார் நகரில் இந்திர விழாவுக்க்கு 2000 ஆண்டுகள் முன் வரை மக்கள் வந்திருக்கிறார்கள் என்று முன் பகுதிகளில் கண்டோம்.
ராவணனின் மகன் பெயர் இந்திரஜித் ஆகும்.
இந்திரனை வென்றதால் இந்தப் பெயர் பெற்றான்.
இந்திரன் ஊருக்குச் சென்று அவனை வென்று, அவனை இலங்கைக்குக் கொண்டு வந்தான்.
பூமியில் நடக்காமல் வேறு எங்கு இது நடந்திருக்கும்?


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அதுபோல பிரம்மவைவர்த புராணத்தில், பல இந்திரர்கள் தோன்றி மறைந்தனர் என்ற விவரம் வருகிறது.
இந்திரன் என்னும் பட்டப் பெயரில் பல மன்னர்கள் இந்திர லோகத்தை ஆண்டிருக்கின்றனர்.
அவர்கள் இருப்பிடத்தைச் சாராத ஒருவர் இந்திரனாக முடி சூட்டப்பட வேண்டுமென்றால் 100 அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டும்.
12  ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரர்-2 என்னும் பாரத வான் சாஸ்திரி (அவர் பெயரில்தான் இந்தியாவின் முதல் விண்கலம் அனுப்பட்டது.)
சித்தாந்த சிரோமணி என்னும் தனது நூலில் இந்த உலகைப் பற்றியும், விண்வெளியைப் பற்றியும் பல விவரங்கள் தந்துள்ளார்.
இன்றைய இந்திய விண்வெளி அறிவியலின் முன்னோடியான அவர் சொல்வது என்ன தெரியுமா?
இந்த உலகில் 4 வகையான மக்கள் வாழ்ந்தார்கள்.
அவர்கள், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், தைத்தியர்கள் என்கிறார்.தேவர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் இந்த உலகில் வாழந்தனர் என்கிறார்.
எதனால் ஒருவன் தேவனாகிறான் என்று முன்னம் பார்த்தோம்.
அப்படிப்பட்ட குணங்கள் கொண்ட தேவர்கள் வாழ்ந்தது உத்தர குரு, அதற்கும் வடக்கே இருந்த பகுதிகள் இந்திர லோகம்..
அர்ஜுனனுக்கு அது தந்தை வீடு.
பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற பிறகு அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்கிறான். அங்கு நடந்த ஒரு சம்பவத்தால் அவன் பெண்ணாக இருக்கும் படி சாபம் பெறுகிறான். அதை அஞ்ஞாத வாசம் செய்தபோதுப்ருஹந்நளை என்னும் பெண்ணாக உருமாறி தீர்த்துக் கொள்கிறான்.
இங்கு, நாம் முன்பு இந்திரனைப் பற்றிய கட்டுரைகளை நினைவுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (பகுதி 21).
இந்திரன் என்பவனுக்கு மூன்றுவித முகங்கள் உள்ளன.
இந்திரன் என்னும் தெய்வம்.
இந்திரன் என்னும் இயற்கைச் சக்தி.
உடலுடன் உலகில் நடமாடிய இந்திரன் என்னும் அரசன்.
இந்த நுட்பமான வேறுபாடுகளை நாம் தான் புரிந்துகொள்ளாமல், கட்டுக்கதை என்று விட்டிருக்கிறோம். 
ரஷ்யாவில் இதுவரை கிடைத்துள்ள தகவல்கள்படி உத்தரகுரு என்பது உண்மையில் இருந்தது என்பதற்கு முதல் நிலை ஆதாரம் கிடைத்துள்ளது. 

 

அதன் மூலம் அதற்கப்பால் இருந்த தேவலோகம் பற்றிய வர்ணனைகள் உண்மையே என்றும் தெரிகிறது. 
உத்தரகுரு, தேவர்கள் நாட்டுக்குத் திறவுகோல் போன்று விளங்கியது.
யாரையும் எளிதில் உத்தரகுருவுக்குள் நுழையவிட்டதில்லை.
அர்ஜுனன், ராஜசூய யாகத்துக்காக திக் விஜயம் சென்றபோது, உத்தரகுருவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டான். 
வெளியாட்கள் அங்கு நுழைந்தால், அங்கு வாழ்ந்த மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று காரணம் சொல்லப்பட்டது. 
ஆனால் வெளியாட்களைத் தடுப்பதன் மூலம், அந்தப் பகுதிகளைக் கற்பனைக்கெட்டாத தூரத்தில் வைத்து, அங்கு வாழ்ந்த தேவர்களைப் பற்றிய எண்ணங்களை - அடைய முடியாத, ஆனால் அடையப்பட வேண்டிய வேருலகம் என்று உருவாக்க முடிந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அதைதான் நாம் பிருகு- பரத்வாஜர் உரையாடலில் காண்கிறோம்.


uttarakuru.bmp

சைபீரியப் பகுதிகளில் பல தடயங்கள் மறைந்துள்ளன.
இதுவரை அர்க்கைம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள தடயங்கள், அந்தப் பகுதிகளில் மனித வர்கத்தின் பழைய சரித்திரம் இருப்பதைப் பறை சாற்றுகின்றது.
இன்னும் பைகால் ஏரிப் பகுதி அதன் வடக்குப் பகுதிகளை ஆராயவில்லை. அந்தப் பகுதியை ஆராய்ந்தால் உத்தரகுருவின் உண்மை தெரியவரும். 
உத்தர குருவும், அதற்கப்பால் தேவர்கள் எனப்படும் மக்கள் வாழ்ந்தனர் என்பதர்கான சாத்தியக் கூறுகள் மரபணு ஆராய்ச்சியில் தெரிகிறது. 
ரஷ்யாவில் தற்சமயம் நடந்து வரும் ஆராய்ச்சிகளிலேயே, அந்தப் பகுதிகளில் தேர் போன்ற வசதிகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இதுவரை கண்டுபிடித்த அர்க்கைம் போன்ற இடங்களிலேயே அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியாத புதிர் இருக்கிறது.

அந்தக் குடியிருப்புகள் அனைத்தும், தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
ஆனால் தீயில் கருகிய சாமான் ஒன்றும் இல்லை.
அதாவது அங்கு வாழ்ந்த மக்கள், அந்த இடங்களைக் காலி செய்து விட்டு அந்த இடத்தைத் தீ வைத்து அழித்துள்ளனர். 
ஏன் தீ வைத்தார்கள் என்பது ஒரு கேள்வி.
தீ வைத்து விட்டு அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது அடுத்த கேள்வி.

 அர்க்கைம் பற்றிய விவரங்களை இங்கு படிக்கலாம்:-

அங்கு வாழ்ந்த மக்கள் ரகசியமாகவும், மற்ற மக்களிடமிருந்து தனித்து வாழவும் விரும்பினர் என்பது மீண்டும் மீண்டும் நாம் உத்தரகுரு வர்ணனைகள் மூலம் அறிகிறோம். 
அவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் அன்னியர் நடமாட்டம் அல்லது அன்னியர் ஊடுருவல் இருந்திருந்தால், இப்படிக் காலி செய்து, தங்கள் இருப்பிடத்தையும் யாரும் பயன் படுத்த முடியாதபடி தீக்கிரையாக்கிச் சென்றிருக்க முடியும். 
அங்கிருந்து அவர்கள் சென்றது, கிழக்கு சைபீரியப் பகுதி அல்லது வடக்கு சைபீரியப் பகுதியாக இருக்க முடியும். 
தெற்கில் வந்த அடையாளாங்கள் இல்லை. 
எனவே சைபீரியப் பகுதியை ஆராய வேண்டியது மிக முக்கியம்.
பெரும்பாலும் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள், இவர்களைப் பற்றிய அபூர்வமான விவரங்கள் வெளி வரலாம்.


உத்தர குரு பகுதிகளைச் சார்ந்த மரபணு ஆராய்ச்சிகள் படி
அங்கு குடியிருப்புகள் 40,000 வருடங்கள் முன் தோன்றின என்றுதெரியவந்துள்ளது.
இது இந்தியா வழியாகத்தான் சென்றிருக்கிறது.
காஸ்பியன் கடல் அருகில் ஒரு கூட்டம் தங்கி அவர்களிடமிருந்து மக்கள் பெருக்கம் ஏற்பட்டது.
இன்றைய மத்திய ஐரோப்பா மக்கள் அவர்களிலிருந்து உண்டானார்கள்.
கஸ்யப ரிஷியின் பெயரால் காஸ்பியன் கடல் வந்திருக்க வேண்டும். எங்கெல்லாம், கஸ்யபர் பெயர் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் பெருக்கம் உண்டாகும்.

 

40,000 முதல் 20,000 வருடங்களுக்கு முன் வரை வட துருவப் பகுதி வெப்பமாக இருந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தேவர்கள் இருந்த வட பகுதி அது.
தேவருலக வர்ணனைகளில் வருவது உண்மையே.
அங்கு அவர்களுக்கு பகல் 6 மாதம், இரவு 6 மாதம்.
அந்தப் பகுதி 20,000 ஆண்டுகளுக்கு முன் பனி யுகத்தில் உறைந்தது.
அதனால் அங்கிருந்து தென் பகுதிக்கு ஒரு ரிவர்ஸ் குடி பெயர்ப்பு ஆனது. அந்த காலக்கட்டத்தில் தேவ லோகத்தின் பொற்காலம் முடிந்து விட்டது.
மிஞ்சி இருந்தது உத்தர குரு மட்டுமே.
அந்த உத்தரகுருவில் எஞ்சிய தேவலோக வாசிகளது வம்சாவளியினர் வழியில் வந்தவன் புரூரவஸ்.
அவனைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பாரதம் திரும்பி ஸரஸ்வதி நதிப் பகுதியில் குடி அமர்ந்தனர்.
அப்பொழுது கங்கை பிறக்கவில்லை.
புரூரவஸின் வம்ஸத்தில் வந்தவன் யயாதி.
அவனுக்குப் பிறகு நடந்தவற்றைத்தான் இதுவரை பார்த்தோம்.
உத்தரகுரு பெண்கள் சுதந்திரமானவர்கள் என்று பார்த்தோம்.
உத்தரகுருவைச் சேர்ந்த ஒரு பெண் லோபமுத்திரை.
இவள் அகத்திய முனிவரது மனைவி. .
இவள் எழுதிய பாடல் ரிக் வேதத்தில் உள்ளது.
இவளது போக்கில் என்றுமே அகத்தியருக்கு ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது. ஏனெனில் உத்தரகுரு பெண்கள் அப்படிப்பட்டவர்கள்
சந்தேகத்தின் விளைவாக, தன் மாணவனுடன் அவருக்குப் பிணக்கு ஏற்பட்டது.
அதன் பயனாக நம் தமிழ் நாட்டில் நமது மூலத்தை வெளிப்படையாக சொல்லாமல் விட்டார் தொல்காப்பியர்!
அந்த மூலம் தெரியாததால், பிரித்தாளும் சக்திகளது துவேஷப் பிரசாரத்தால் இன்றைய தமிழர்கள் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அதை விவரிக்கும் போது லோபமுத்திரையைச் சந்திப்போம்.
இந்தக் கட்டுரையில் உத்தரகுரு இருக்கும் ரஷ்யாவைப் பற்றி இன்னும் சில விவரங்கள் அறிவோம்.
ரஷ்யப் பகுதிகள்  'ரிஷி வர்ஷம்' என்றும் அழைக்கப்பட்டது.  
வர்ஷம் என்றால் நாடு என்று பொருள்.
ரிஷிகள் வாழ்ந்த நாடு என்பதால் அந்தப்பகுதிக்கு இந்தப் பெயர். 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகா  ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்அவர்கள் பழைய நூல்களில்  சொல்லப்பட்டுள்ள  ரிஷி வர்ஷத்தை விளக்கியுள்ளார். ராமபிரானின் மாமனாரான ஜனக மகா ராஜாவின் சபையில் யஞ்ஞவாக்கியர் என்னும் ரிஷி வாதத்தில் வெற்றி பெற்றார்.
ப்ருஹதாரண்யக உபநிஷத்து என்னும் உபநிஷத்தைத் தந்தவர் அவர். 
அவர் ரஷியாவின் வட பகுதியில் வேத ஆராய்ச்சி மையமே நடத்தி வந்தார். அவர் வைகானஸ்  என்னும் பைகால் ஏரிக்கு அருகில் வாழ்ந்தார்.
இன்றும் ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் பேசப்படும் மொழி சமஸ்க்ருதத்தை ஒத்திருக்கிறது.
ரஷ்ய மக்களின் பெயர்களும் சமஸ்க்ருதத்தை நினைவு படுத்தும் வணணம் உள்ளன.
இன்றைய ரஷ்ய அதிபர் பெயர் மேட்வேதேவ் என்று வேதம்’   அல்லதுதேவன்’  என்னும் சொல்லைக் கொண்டுள்ளது.
Medvedev.bmp

                                               ரஷ்ய அதிபர் மெட்வேதேவ் 

குருஷேவ் என்னும் பெயர் ரஷியாவில் அதிகம் காணபபடுவது. 
முன்னாள் ரஷ்ய அதிபர் பெயரும் அதுவே.
'உத்தர குரு'  என்பதில் உள்ள குருவுக்கு ஒத்ததாக இருப்பதைக் கவனிக்கவும்.

எல்லாவற்றையும் விட சுவாரசியமான தகவல் ரஷியர்கள் எழுதும் முகவரியில் இருக்கிறது. ரஷியர்களைத் தவிர உலகில் எல்லா இடத்திலும் முகவரி எழுதும் போது முதலில் பெயரை எழுதிபிறகு வீட்டு  எண்தெருவின் பெயர்ஊரின் பெயர்நாட்டின் பெயர் என்று எழுதுகிறார்கள்.
ஆனால் ரஷ்யாவில் ரிவர்சில் எழுதுவார்கள்.
முதலில் நாட்டின் பெயர்பிறகுஊர்தெருவீட்டு எண் என்று  வரும். அதாவது பெரிய பகுதியான நாடு முதல் ஆரம்பித்து படிப்படியாக சிறிய பகுதி வரை முகவரி அமையும்.


இந்த  முறைதான் வேத மரபிலும் உள்ளது. எந்த  வழிபாட்டிலும்,ஹோமத்திலும் சங்கல்பம் என்று ஒன்று சொல்வார்கள்.
ஒருவர் எங்கேஎந்த காலகட்டத்தில் அந்த வழிபாட்டைச் செய்கிறார் என்று முகவரி சொல்வது  போல அமையும். அதைபெரிய பகுதியில் ஆரம்பித்துபடிப்படியாக கடைசிப் பகுதி வரை சொல்வார்கள்.
அதாவது பிரபஞ்சத்தில் ஆரம்பித்துஇந்த உலகில் பாரத வர்ஷத்தில்,பரதக் கண்டத்தில் என்று சொல்லிதமிழ்நாட்டில் இருப்பவர் என்றால் தட்சிணப் பகுதியில் (தெற்கு பாரதத்தில்) என்று முடிப்பார்கள். 


இந்த வகையில் முகவரி அமைவது வேத மரபு.
இதை நாம் விட்டு  விட்டோம். ஆங்கிலேயன் சொன்னான் என்று அவன் மரபுகளைப் பின் பற்ற ஆரம்பித்து விட்டோம்.
இன்னும் ஆங்கிலேயத் தாக்கம் இல்லாத ரஷ்யாவில் இந்த முறை இருக்கிறது என்றால்அது அங்கு வாழ்ந்த ரிஷிகளால்தான் வந்திருக்க வேண்டும்.
நம்மைப் போல ரஷ்யர்களும்ரிஷி வம்சத்தை மறந்து விட்டார்கள்.
நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் பாரதத்தின் ஒரிஜினல் சரித்திரங்களான இராமாயணமகா பாரதத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன.
இவை ஆரியம் - திராவிடம் என்பதற்கு அப்பாற்பட்டவை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard