New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை
Permalink  
 


4. ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை

 
 

ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் செய்தபொழுதுமொழி ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய கிராக்கி இருந்தது. இங்கிலாந்திலும்,ஐரோப்பாவிலும் ஐரோப்பிய மொழிகள் ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்த நேரம் அது. ஆங்கிலம்பிரெஞ்சுஜெர்மானிய  மொழிசெக் மொழிரஷ்ய மொழி இவையெல்லாம் ஒரே மொழிப் பிரிவைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் பல நாடுகளைத் தாங்கள் காலனிகளாக மாற்றிக் கொண்டிருக்கையில்இந்த மொழிஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். மொழி ஆர்வம் கொண்ட அவர்கள் ஆங்காங்கு உள்ள லோக்கல் மொழியைக் கற்றுக் கொண்டு ஆட்சியாளர்களுக்கும்மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தனர்.
  

இங்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் மிஷனரிகளாகவும் இருந்தனர். அல்லது மொழிஆராய்ச்சியாளர்களை மிஷனரி வேலைக்குப் பயன் படுத்தினர். இவர்கள் அந்தந்த வட்டார மொழியையும் கற்றுக் கொண்டனர். அங்கு இருந்த மத நம்பிக்கைகளையும் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்டு அதைக் கிறிஸ்துவத்தில் புகுத்தி தாங்கள் கிறிஸ்துவம்தான் முதன்மையானது என்று மூளைச் சலவை செய்து மதம் மாற்றினர். அப்படி செய்து பலன் கண்டவர் முன்னரே சொன்ன நொபிலி என்பவர். இவர் தமிழ் வளர்த்த மதுரையில் உட்கார்ந்துஉங்கள் இந்துமதம் தான் எங்கள கிறிஸ்துவமும் என்று சொல்லி வேலையைக்  காண்பித்தார்.

pic-1.bmp
  
இவரைப் போலவே மற்ற மொழி ஆராய்சியாளர்களும்தாங்கள் வேலையை மொழியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நம் மதத்தை ஊடுருவிநம் சரித்திரத்தையே மறக்கடித்து விட்டனர். அவர்கள் மாற்றி எழுதின சரித்திரத்தைத்தான் நாம் பாடமாகப் படிக்க வைத்தனர். இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த மக்களைஆங்கிலேயனுக்கு அடி வருடியாக மாற்றச் செய்ய வேண்டும் என்றால்அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் கல்வியின் மூலம் இந்தியர்களை தங்கள் ரசனைஎண்ணம்கோட்பாடுகள்அறிவு என்ற வகைகளில் ஆங்கிலேயர்களைப் போல மாற்ற  வேண்டும் என்பதையே கல்விக் கொள்கையாக மெக்காலே கொண்டிருந்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

McCauley.bmp

                                 மெக்காலே  

அப்படி அவர் சொல்லி பதினைத்து வருடங்களாக ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் அவர் கண்ணில் பட்டார் மாக்ஸ் முல்லர் என்னும் ஜெர்மானியர்.


முல்லர் பிறப்பால் ஜெர்மானியர். அவர் வேலை பார்த்ததோ இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில். அவர் சம்ஸ்க்ருதம் அறிந்த மொழி ஆராய்ச்சியாளர். மெக்காலே அவரைப் பிடித்தார். மெக்காலேயின் குறிக்கோளை முல்லர் நன்றாகப் புரிந்து கொண்டார். இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது. அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம். இந்தக் கருத்தை தன் மனைவிக்கு 1866 -ஆம் வருடம் எழுதியகடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார். 'ரிக் வேதம் தான் இந்தியர்கள் மதத்தின் ஆதாரம். அந்த ரிக் வேதத்திற்கு  ஆதாரம் எது என்று நாம் காண்பிக்கவேண்டும். அப்படி காண்பித்தால்தான் மூவாயிரம் வருடங்களாக அவர்களைத் தன் பிடியில் வைத்திருந்த அந்த மதத்தை வேரோடு பிடுங்க முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன்" என்று எழுதினார்.

(“The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3000 years”
Source:- Müller, Georgina, The Life and Letters of Right Honorable Friedrich Max Müller, 2 vols. London: Longman, 1902.)
Muller.bmp

                                மாக்ஸ் முல்லர் 

அந்த ரிக் வேதத்திற்கு ஆதாரம் என்று அவர் கண்டு பிடித்து சொன்னதுஆரியப் படைஎடுப்பு. படையெடுத்து வந்த ஆரியர்கள் கொடுத்ததுதான் வேதமும்வேத மதமும் என்றார் அவர். ஆரியர்கள் எப்படியெல்லாம் இங்கிருந்த மக்களை அழித்தார்கள் என்று விளக்குகிறது  ரிக் வேதம் என்று சொல்லிஞான வழியாக விளங்கிய வேதத்தையும்இந்து மதத்தையும் கொச்சைப் படுத்தினார். இந்தக் கருத்து மொழி ஆராய்ச்சியாக மட்டுமல்ல,மிஷனரி பிரசாரமாகவும்  ஆனது. இதன் மூலம் மக்களுக்கு இந்து மதத்தின் மீது இருந்த பற்றை அழிக்கப் பார்த்தனர். அது மட்டுமல்ல,ஆரியர் விரட்டிய மக்கள் திராவிடர்கள் என்றும் கூறிஇன்றையஇந்தியாவில் இருக்கும் மக்களை ஆரியர்- திராவிடர் என்று பிரித்து ஒரு பகைமை உணர்ச்சியை மூட்டப் பார்த்தனர். ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆரிய- திராவிடப் பகை உரமானது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆகமொழி ஆராய்ச்சி என்ற பெயரில்நம் மதத்தை அழித்து,கிறிஸ்துவத்திற்கு மத மாற்றம் செய்வதற்கும்ஆங்கிலேயக் கூலிகளாக நம் மாறுவதற்குமே மாக்ஸ் முல்லர் பாடுபட்டார். இது சரித்திரம் சொல்லும் செய்தி. அப்படி அவர் சொன்னதை நம்பிஆரியப் படையெடுப்பில் ஓடி வந்த  திராவிடன் நாம் என்று சொல்லித் திரிவதுதமிழனுக்கு மானக் கேடு.


  
ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆரியன் வந்தான். வட இந்தியாவில் இருந்ததாச்யுக்களை  விரட்டினான். வந்த இடத்தில் உட்கார்ந்து விட்டான்.ஆக்கிரமிப்பாளனாக வந்த ஆரியன் கங்கைக் கரையில் உட்கார்ந்ததும் அமைதியாளனாக   ஆகிவிட்டான். வேதம் படைத்தான். இந்து மதத்தைத் தோற்றுவித்தான் என்று அவர் எழுப்பிய கதையில்இந்தியர்கள் மயங்கினார்களோ இல்லையோஐரோப்பியர்கள் மயங்கிவிட்டார்கள். தாங்கள் மூலத்தைத் தேடிக் கொண்டிருந்த அவர்கள் தாங்களே ஆரியர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 


அந்த நம்பிக்கை தந்த எழுச்சியில் துண்டு பட்டிருந்த ஜெர்மனி ஒருங்கிணைந்தது. 
1871 -இல் ஜெர்மனி ஒரு ஒருங்கிணைந்த பேரரசாக அறிவித்துக் கொண்டது. தங்களை 'ஆரிய நாடாக'  பிரகடனப்படுத்திக் கொண்டது. இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. இவர்கள் சொன்ன கதை இந்திய மக்களைக் கவர்வதற்காக. ஆனால் அதன் எதிரொலி அவர்கள் எதிரி முகாமில் கேட்கிறது. தாங்களே உயர்ந்தவர்கள் என்ற ஆரிய இன வெறியுடன் கூடிய ஜெர்மனிஅவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
  

மேலும் அந்த நேரத்தில்தான் இந்தியாவிலும் சுதந்திரப் போராட்டம் தலை தூக்கியது. 1857 - ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயனைக் கவலையில் ஆழ்த்தியது. ஆரிய இனக் கொள்கையைக்கொண்டு இங்கு கதை பரப்பிக் கொண்டிருக்கையில்அங்கேஜெர்மனி தான் ஆரிய நாடு என்று சொல்லிக் கொண்டதும் அபத்தமாக இருந்தது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பார்த்தார்கள்எந்த ஜெர்மானியரான முல்லர் ஆரிய இனக் கொள்கையைப் பரப்பினாரோஅவரைக் கொண்டே அந்தக் கருத்தை மறுக்கச் செய்தார்கள். முல்லரைப் பொறுத்தவரைஅவருக்கு சம்பளம் கொடுத்து சோறுபோட்டவன் ஆங்கிலேயன். அவனுக்கு விசுவாசமாக் நடந்து கொள்ள வேண்டும். அதனால் ஆரிய இனம் என்று பறை சாற்றியதைஆரிய மொழி என்று திருத்திக் கொண்டார்.  ஆரிய நாடாகத் தன்னை ஜெர்மனி அறிவித்துக்கொண்ட சில மாதங்களில்ஜெர்மானிய ஆதிக்கத்தில் அப்போது இருந்த பிரெஞ்சுப் பகுதியில் இருந்த ஸ்டிராஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஆரிய இனக் கொள்கையை மறுத்தார்.பிறகுஇந்த 'ஆரிய ரிஷிதன் புது கொள்கையை விடாமல் பற்றிக் கொண்டார்.


அதாவது. ஆரியன் என்று ஒரு இனமே இல்லை. அதுவரை அவர்சொன்னதெல்லாம் ஆரிய மொழியைப் பற்றியது. ஐரோப்பிய மொழிகளுக்கும்சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இம் மொழிகளை ஐரோப்பிய அல்லது ஆரியக் குடும்ப மொழிகள் என்று சொல்லலாம் என்று பல்டி அடித்தார். அவர் சொன்ன வசனம் சூப்பர் வசனம். ஆரிய இனம்ஆரிய ரத்தம்ஆரிய முடிஆரியக் கண் என்றெல்லாம் சொன்னால் அது பாபம். அது லோட்டாத் தலையன் அகராதிசொம்புத் தலையன் இலக்கணம் என்று ஆளை ஒரு அடையாளமிட்டுச் சொல்வது போல ஆகும். ஆரியம் என்பது ஆள் அடையாளம் இல்லை. அது மொழி அடையாளம் என்றார். 

("I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar.")



  
இப்படிஎல்லாம் சொன்னாலும்  ஜெர்மனி தாங்கள் உயர்ந்த ஆரிய இனம்என்று சொல்லிக் கொண்டதை மாற்ற  முடியவில்லை. உலகப் போர் வந்து ஹிட்லர் அழிந்துஜெர்மனி அடங்கிய பிறகுதான்ஐரோப்பிய உலகமே இந்த இனக் கொள்கையில் வாயை மூடிக் கொண்டது.
  
அப்படியும் ஆரிய இன வாதத்தைத் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் ஆங்கிலேயன் சொல்லிக் கொண்டு நம்மை ஆண்டு வந்தான். இப்படித்தான் ஆரிய இன வாதமும்ஆரியப் படையெடுப்பும் அரசியல் ஆதிக்கத்துக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டன. இதில் முளைத்த திராவிட இன வாதம் இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஊறுகாயாக உதவுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. தனபால்Nov 20, 2010 10:27 AM

    திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

    ///இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த மக்களை, ஆங்கிலேயனுக்கு அடி வருடியாக மாற்றச் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வி கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் கல்வியின் மூலம் இந்தியர்களை தங்கள் ரசனை, எண்ணம், கோட்பாடுகள், அறிவு என்ற வகைகளில் ஆங்கிலேயர்களைப் போல மாற்ற வேண்டும் என்பதையே கல்விக் கொள்கையாக மெக்காலே கொண்டிருந்தார்///

    அருமையான கட்டுரை.மிகச் சரியாக மெக்காலேயின் நோக்கத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.

    25 .10 .10 .அன்று வெளிவந்த தினமலர் -கல்விமலரில் " வேண்டாம் மெக்காலே...வரட்டும் புதிய விடிகாலை." என்ற தலைப்பில் பேராசிரியர் திரு.எஸ்.பி.தியாகராஜன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அதில் மெக்காலேவின் அறிக்கைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.அது அப்படியே மேற்கண்ட உங்கள் வரிகளின் சாட்சியாக உள்ளது.அந்தக் கட்டுரையில் உள்ளதாவது ...

    *இந்தியாவில் பிரிட்டிஷாரின் கல்விக்கொள்கையை அமல் செய்த மெக்காலே, பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 1835 பிப் -2 -இல் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.அதில் அவர்." நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன்.இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை.அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு.கலாச்சாரம் மற்றும் ஆன்மீகநெறி எனும் முதுகெலும்பை உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களைவிட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம், தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன்.அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள் " என்றார்.

    பதிலளி
     
     
  2. IMG_3918_s.JPG

    வணக்கம், என்னுடைய எண்ணங்களும் உங்கள் கருத்துகளை போல உள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒரு ஆராய்ச்சி உரை கண்டேன். 

    http://www.scribd.com/doc/3710598/DNA-Evidence-for-Aryan-Migration-Into-India. 

    உங்களின் கருத்து என்ன?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வணக்கம் திரு பால் அவர்களே.

நீங்கள் கொடுத்த ஆராய்ச்சியைக் கண்டேன். நன்றி.

இந்த ஆராய்ச்சி வந்த பிறகு, மற்ற ஆராய்சிகளும் வந்து விட்டன. சொல்லப்போனால், கடந்த ஒன்பது வருடங்களாக உலகில் ஆங்காங்கே நடந்து வந்த மரபணு ஆராய்சிகளின் முடிவுகள் ஒவ்வொன்றாக சென்ற ஒரு வருடமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவற்றின் ஒட்டு மொத்த முடிவு ஆரியப் படை எடுப்பை ஆதரிக்கவில்லை. மக்கள் அங்கும் இங்கும் சென்ற அடையாளங்கள் இந்த மரபணு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளன. அவை நடந்த காலக் கட்டமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆரியப் படை எடுப்பு நடந்ததாகச் சொல்லப்படும் காலக் கட்டத்தில் மக்கள் குடியேற்றம் வட மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் நிகழவில்லை. 

நீங்கள் சுட்டிக் காட்டிய உரை அந்தக் காலக் கட்டத்தைப் பற்றியது அல்ல.


இன்று உலக முழுவதும் விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்ட ஆராய்ச்சி ஒப்ன்ஹீமர் தந்துள்ள ஆராய்சிதான். அதை இந்த இணைப்பில் காணலாம்.
http://www.bradshawfoundation.com/stephenoppenheimer/


இந்தத் தொடரில் மரபணு ஆராய்சிகளும் தரப்படும். பெரிய அளவில் அதாவது நாடு தழுவிய அளவில் என்று மட்டுமல்லாமல், இந்தியாவுக்குள்ளேயே மக்கள் இடப்பெயர்வும் தகுந்த இடத்தில் இந்தத் தொடரில் எழுதப்படும். அவற்றுடன் இயைந்த இந்திய சரித்திரம், நம் புராண, இதிஹாச, தமிழ் மூலங்களிலிருந்துகொடுக்கப்படும்.


வேறு ஆராய்ச்சிகள் தங்கள் கவனத்திற்கு வந்தால், பகிர்த்து கொள்ளவும். நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. ஆனால் ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள்

    http://www.yarl.com/forum/index.php?showtopic=9086

    பதிலளி
     
     
  2. Himalay-1.JPG

    திரு பாலகுமார் அவர்களே,

    இன்னும் பல கட்டுரைகள் இந்தத் தொடரில் வந்து விட்டன. குறிப்பாக 31 ஆவது கட்டுரையைப் படியுங்கள்.

    ஈரானியர்கள் இன்னும் பின்னோக்கி ஆராயவில்லை. மரபணு ஆராய்ச்சிகள் அவர்களை இன்னும் போய்ச் சேரவில்லை. இன்னும் 10 வருடங்களில் ஈரானியர்கள் உட்பட ஆரியம் பேசும் பல ஐரோப்பிய மக்கள் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்வார்கள். இப்பொழுதுதான் அந்த ஆராய்ச்சிகள் மக்களிடையே இறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய நூல்களான ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை ஆராய்ந்தால், முழு உண்மைகளும் கிடைக்கும் என்று வெளி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுதுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் என்னுடைய இந்தத் தொடர் ஒரு முன்னோடி. 

    இந்தத் தொடரில் ஈரான் பகுதியில் இருந்த டேரியஸ் என்னும் மன்னன் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்ட காரணமும் அலசப்படும். அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை தொடர்பு செல்கிறது. அடுத்த சில கட்டுரைகளில் அந்த விவரங்கள் வருகின்றன.

    5000 வருடங்களுக்கு முன்னால், துவாரகை அழிந்த போது (அது 5ஆவது அழிவு, அதற்குப் பிறகு 3500 ஆண்டுகளுக்கு முன் 6 ஆவது முறையாக துவாரகைப் பகுதியைக் கடல் கொண்டது. இன்றைக்கு மீட்டு எடுத்துள்ள பேத் துவாரகா அந்த 6 ஆவது துவாரகை ஆகும்.) அரச குடும்பங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் துவாரகையிலிருந்து புறப்பட்டு சிந்து நதிக் கரையை அடைந்தனர். அர்ஜுனன் அவர்களை வழி நடத்திச் சென்றான். அப்பொழுது சிந்துவுக்கு மேற்கில் இருந்த மிலேச்சர்கள், பெண்களைக் குறி வைத்து, குறிப்பாக அரச குலப் பெண்களைக் கடத்திக் கொண்டு சென்றனர். அர்ஜுனனால் பலரையும் மீட்க முடியவில்லை. இந்த விவரங்கள் எல்லாம் மஹாபாரதம் முசல பர்வத்தில் வருகிறது. அப்படிச் சென்றவர்களில் பல கர்ப்பிணிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் வழித் தோன்றலாக டேரியஸ் இருக்க வேண்டும். அவர்கள் கலப்பால் இரானிய, மத்திய ஐரோப்பிய மக்கள் எழுந்தனர். 40,000 வருடங்களுக்கு முன்பும் ஒரு இடப்பெயர்வு இந்தியாவிலிருந்து இரான், ஐரோப்பாவுக்குச் சென்றது. ஆனால் என்றுமே அங்கிருந்து இங்கு வரவில்லை. 

    அர்ஜுனன் மீதம் இருந்த மக்களை அழைத்துச் சென்று குடியமர்த்திய பகுதிகளே இன்று சிந்து சமவெளிப் பகுதிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. உண்மையில் 2000 த்துக்கும் மேற்பட்ட அந்த பகுதிகள் சிந்து நதிக் கரையில் இல்லை. அவை இருக்கும் இடங்கள் சரஸ்வதி நதிப் படுகையே என்று விண்கலன்கள் தரும் படங்கள் காட்டுகின்றன. அதாவது சிந்து சமவெளி நாகரிகம் என்பது அச்சு அசலான ஆரிய நாகரிகம். அங்கு வாழ்ந்தவர்கள் துவாரகையைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தான் திராவிடன், தமிழன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், திராவிடவாதிகள்!!

    இன்று வரை வந்துள்ள சிந்து சமவெளி ஆராய்ச்சியை அறிந்தவர்கள் இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்வார்கள். திராவிட இயக்கம் என்பது அறிவுக்கு சம்பந்தமில்லாத இயக்கம் என்று நொபுரு கராஷிமா அவர்கள் ஏன் சொன்னார்கள் என்று இப்பொழுது தெரியும் என்று நினைக்கிறேன்.

    இன்னும் விஷயம் இருக்கிறது.
    கிருஷ்ணனது முதல் மனைவி ருக்மிணி பாதி வழியில் தீ மூட்டி அதில் இறங்கி உயிரை விடுகிறாள். இன்னொரு மனைவியான சத்யபாமா, சன்னியாசம் கொண்டு,இமய மலையைக் கடந்து ஆஃப்கானிஸ்தானம் நோக்கிச் சென்று விடுகிறாள். அவளுடன் சென்றவர்கள் உண்டாக்கினது மித்தானி ஆட்சியாகும். 

    3500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் அவர்கள் வாழ்க்கை அவதியுற்றது. அவர்கள் குடியமர்ந்த நதிப் படுகையில் - (இது சிந்து நதி அல்ல. சரஸ்வதி நதிப் பகுதி) பூகம்பம் ஏற்பட்டு, நீர் ஆதாரங்கள் முழுவதும் மறைந்து விட்டன. 

    அதனால் பலரும் கிழக்கு நோக்கி கங்கை நதிப் புறத்துக்குச் சென்றனர்.

    அந்த நேரத்தில் 6 ஆவதாக ஏற்படுத்தப்பட்ட துவாரகையில் தண்ணீர் புகுந்தது. அந்தத் துவாரகையில் வசித்த மக்கள் எங்கு சென்றார்கள் தெரியுமா?

    அதுதான் இந்தத் தொடரின் சஸ்பென்ஸ் என்று வைத்திருந்தேன். அதை இப்பொழுது போட்டு உடைத்து விடுகிறேன். அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். ஆனல் அவர்கள் பிராம்மணர்கள் அல்லர். யாரை வந்தேறிகள் என்றார்களோ அவர்கள் வந்தேறிகள் அல்லர். 

    வந்தேறியவர்களை, இங்கு இருந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஏன் தமிழ் மன்னர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. வந்தேறியவர்களது புரவலர்கள் பலம் குன்றிய பிறகு, அந்த மக்கள் பெற்ற அடையாளம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது. மற்றவை இந்தத் தொடரில் வரும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard