New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?
Permalink  
 


என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?

ஜனவரி 26, 2012

என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?

நரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் கொண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?
Permalink  
 


இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மீது நில-அபகரிப்பு புகார்: சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மற்றும் சிலர் மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை நகர போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது[7]:

கே.சி.பழனிச்சாமி, அதிமுக முன்னாள் எம்.பி. புகார்: “நான் கோவை நகரில் வசிக்கிறேன். அதிமுகவில் திருச்செங்கோடு எம்.பி., காங்கேயம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனக்கு கோவையில் சேரன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளது. இது சேரன் என்ட்ரபிரைசஸ் (பி) லிமிடெட் (சிஇபிஎல்) ஆகும். கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நடத்தும், ‘இந்து’ நாளிதழின் துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ) லிமிடெட் (எஸ்பிஐஎல்) ஆகும். இந்த நிறுவனத்திற்கு சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 400 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கோல்ப் கோர்ஸ் உருவாக இருந்தது. இதை எனது சிஇபிஎல்க்கு 2004ம் ஆண்டரூ.30 கோடிக்கு விற்றனர். இதன் மதிப்பு 2007ம் ஆண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நிலமதிப்பு உயர்ந்ததால் திரும்ப கேட்ட ராம் மற்றும் ரங்கராஜன்: “இந்நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததை அறிந்த கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனம், அரசியல் ஆதரவுடன் ரூ.30 கோடிக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த நிலத்தை நான் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டேன். இந்நிலையில், கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை, அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள எனது சேரன் டவர்ஸ் அலுவலகத்திற்கு சோதனை என்ற பெயரில் போலீசாரை வைத்து மிரட்டினர். அதன்பின் வந்த அவர்களது ஆட்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேரன் டவர்சில் உள்ள சட்டப்பிரிவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு தந்தி அனுப்பினார். இந்த அராஜக செயலை சென்னையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து 2008ம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த தேதி வரை நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து நாளிதழ் மீது வழக்கு: தமிழ் நாட்டில் முதலமைச்சர்ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும்அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்குதொடர்ந்துள்ளது[8]தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ராம் பதவி விலகல்: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்[9]. இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்[10]. இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குடும்பச் சண்டை, பிரச்சினைகள்; கஸ்தூரி அண்ட் சன்ஸ் 12 அங்கத்தினர் கொண்ட அளுமைக்குழுக் கொண்டது[11]. கஸ்தூரி ஐயங்காரின் குடும்பத்தாரான, இவகர்ளில் நான்கு பேர் ஒன்று விட்ட சகோதரர்கள் ஆவார்கள் –

  1. ஜி. நரசிம்மன், இவர் என். ராம் என். ரவி, என். முரளி முதலியோர்களின் தகப்பனார்.
  2. எஸ். பார்த்தசாரதி – மாலினி பார்த்தசாரதி, நிர்மலா நரசிம்மன், நளினி கிருஷ்ணன் முதலியோர்களின் தகப்பனார்.
  3. எஸ். ரஙராஜன் – ரமேஷ் ரங்கராஜன், விஜடயா அருண், அகிலா ஐயங்கார் முதலியோர்களின் தகப்பனார்.
  4. ஜீ. கஸ்தூரி – கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ச்மி ஶ்ரீநாத் முதலியோர்களின் தகப்பனார்.

பொதுவாக, ராமின் போக்கு குடும்பத்தாருக்கு பிடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ராம் –

  • பலமுறை திருமணம் செய்து கொண்டது (சூஸன்[12] முதல் மனைவி, மரியம் சாண்டி இரன்டாவது மனைவி),
  • விவாகரத்து செய்தது (சூஸனை விவாகரத்து செய்து விட்டு மரியம் சாண்டியை[13] மணந்து கொண்டது),
  • முந்தைய மனைவியர் வழக்குகள் போட்டது, சொத்துக்கள் கேட்டது (ஆக்ஸ்போர்ட் உனிவர்சிடி பிரஸ் கட்டிடம், நிலத்தை சூஸன் கேட்டது),
  • இடது சாரி சித்தாந்தவாதியாக இருந்து கொண்டு செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக சீனாவிற்கு ஆதரவாக எழுதியது[14]),
  • திமுகவிற்கு சாதாகமாக இருந்து வந்தது (கனிமொழி ஆசிரியக்குழுமத்தில் இருந்தது, ஜி. ராமஜெயம் இந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தது முதலியன),
  • ஊழலில் ஜெயிலில் இருக்கும் ஏ. ராஜாவிற்கு அளவிற்கு அதிகமாக ஆதரவாக செய்திகளை வெளியிட்டது (திமுக, கனிமொழி உந்துதல் பேராக),
  • அதிக ஆதாரங்கள் இருந்தாலும் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான், எடீயூரியப்பா போன்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது.

என்று விவாதத்தில் வெளிவந்தது[15]. இப்படி ஒருவேளை ஆளும் கட்சி, எதிராக திரும்பியுள்ளாதால், பெருத்த அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2ஜி விவகாரத்தில் ராம் திமுகவை / மைத்துனர் தயாநிதி மாறனை ஆதரிப்பதேன்? ரமேஷ் ரங்கராஜனின் மனைவி மற்றும் தயாநிதி மாறனின் மனைவியும் (பிரியா) சகோதரிகள். அதாவது பிரியா ரன்கராஜனின் மகள். இதனால், மைத்துனருக்கு உதவுவதில் ரமேஷ் மற்றும் ராம் ஈடுபடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதா குறைக்கு சிதம்பரம் வேறு பால்ய நண்பவர்கள், ஆனால் சிதம்பரமும் அக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். யார் விட்டாலும், சுப்ரமணி சுவாமி விடுவதாக இல்லை. இந்நிலையில் தான் இந்த இருவர் மீதும் அதிமுக முன்னாள் எம்.பி புகார் கொடுத்துள்ளார்.

வேதபிரகாஷ்

26-01-2012


[1] ராமஜன்ம பூமி விவகாரத்தில், பலதடவை இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் தலையங்களில் எழுதி வெளியிட்டு வந்த போது, பலர், அதிலும் பெரியவர்கள், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் முதலியோர்கள், அவற்றை தவறு என்று எடுத்துக் காட்டிக் கூட அவற்றை பிரசுரிக்காமல், தொடர்ந்து சித்தாந்தக் கட்டுக்கதைகளை சரித்திரம் என்ற போர்வையில் பரப்பி வந்த போது, பாரம்பரியமாக இந்துவை வாசித்து வந்த பெரியோர்கள் உட்பட பலர், அதை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கூட, தனது ஆசிரிய-தலையங்க நடுநிலை காக்க முடியாமல், சித்தாந்த ரீதியிலேயே செயல்பட்டு வந்ததினால், குடும்பத்திலேயே அதிருப்தி ஏற்பட்டது. அதற்குள், இந்துவின் சுற்றறெண்ணிக்கையும் சரிய ஆரம்பித்தது

[2] N. Ram, mate, comrade, editor of The Hindu, the prolix Mahadev of rightpolitic.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[3]  Justice K. Chandru has always been a rebel with a cause. In his college days, he ran the Students’ Socialist Forum (SSF) before joining the CPI(M) where he and his friends were absorbed into the Students Federation of India (SFI), CPM’s student wing.

[4] பி. சிதம்பரம், வழக்கறிஞர், சட்ட ஆலோசனையாளர், மத்திய மந்திரி என்று பல அவதாரங்களில் உள்ளவர்.

[5] On to the elite Madras Christian College where he meets N. Ram and P. Chidambaram. Spark merges with spark and makes a pool of light. It’s a journal called The Radical Review. It has things to sustain it — there’s the affluence of Ram and Chidambaram, there’s the ferment over America’s bull-headed misadventure in Vietnam. It’s a time heady with the air of resistance. Fidel Castro has repelled the Bay of Pigs; the CIA explosive in his cigar has turned a damp squib.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[6] Did N. Ram formally hook Karat with the CPM? Nobody’s telling. It’s true, though, that at the time, Ram had known Sundaraiyya better and longer than Karat. And he had a good sense of where Karat’s heart lay, what promise he held. Future general secretary of the party? Threeand- a-half decades is a long and risky period to lay bets over in politics, but there are those who never doubted where Karat would end up. Says a contemporary in the party, “We used to joke about it with him, sure, but everybody knew it was only half a joke.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[10] http://www.thehindu.com/news/national/article2811956.ece

[11] Kasturi & Sons has 12 board members, and roughly 50 shareholders – all of them members of the Kasturi Ranga Iyengar family. Each of the four cousins, who together control the entire equity, has three members on the board. The owner cousins are G Narasimhan (father of N Ram, N Ravi, N Murali), S Parthasarathy (father of Malini Parthasarathy, Nirmala Lakshman and Nalini Krishnan), S Rangarajan (father of Ramesh Rangarajan, Vijaya Arun and Akila Iyengar), and G Kasturi (father of K Balaji, K Venugopal and Lakshmi Srinath).

[12] Susan was an English woman who came to south India as a research student. Like Ram, she was (and remains) an atheist with a Left perspective on politics. After their marriage, Susan worked as a teacher, a freelance journalist, an editor for Oxford University press publications in India and a television presenter. As a husband and wife team, both published the first volume of a biography on R.K.Narayan, the eminent Indian writer. Their daughter Vidya Ram, herself a journalist, was a Journalism topper at Columbia University in New York and even won a Pulitzer fellowship for Journalism.

[13] Mariam Chandy, who is the founder and Managing Director of TNQ Books and Journals (an ePublishing company that works on the leading scientific journals of the world).

[14] Twenty years later, another senior left-wing editor has provided a willing whitewash of a totalitarian regime. The cover story in the latest issue of the Chennai fortnightly, Frontline, written by N. Ram, provides an extended and lavishly illustrated brief for the Chinese occupation of that country. The Chinese, claims Ram, have brought hospitals, roads and schools to a previously deprived land. He minimizes the attacks on Tibetan cultural institutions and religious beliefs that the Chinese have so demonstrably carried out.

http://www.telegraphindia.com/1000908/editoria.htm#head3

[15] Ravi has also alleged that there have been distortions creeping into the “editorial framework” of the paper. “Among the issues that I have raised with the other directors during the discussions in the Board and outside are: the unmerited coverage of certain political favourites on specific directions; excessive coverage of the activities of the Left and some of its leaders; for reasons that are bound to emerge sooner rather than later, turning the newspaper into an apologist for A Raja through the 2G scam coverage, remaining deafeningly silent on his resignation in the face of mounting evidence even when demanding the resignation of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa…”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard