அவுத்துப் போட்டு ஆடத் துடிக்கிறார்கள் தமிழ் நடிகைகள்: அறந்தை நாராயணன்!
அறந்தை நாராயணன் என்ற சினிமா எழுத்தாளர் இப்படி 35 வருடங்களுக்கு முன்பு எழுதியபோது, பல நடிகைகள் கோபம் கொண்டார்கள். ஆனால், இப்பொழுது அப்படி விமர்சித்தால் மகிழ்வார்கள் எனலாம். “குத்தாட்டம்” என்ற பெயரில் நிர்வாண ஆட்டங்களை ஆடி, அதற்கு ஆபாசமாக கவிக்கோக்கள் / கவிப்பேரரசுகள் பாட்டுகளை எழுதி, பெரிய பாடகர்கள் அரைகுறை தமிழில் பாடி, இவற்றையெல்லாம் டிவி செனல்களிலேயே காட்டிய பிறகு, நிர்வாணத்தைப் பற்றியும், கற்பைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மேலும் இந்த அசிங்கங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு விருதுகள் வேறு கொடுக்கிறார்கள். உடனே அந்த ஆபாசக்கும்பிகள், ஏதோ தமக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று, எல்லைகளை மீறி ஊழலைப் பெருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பணம் கொடுத்தால் சரிதான் என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. இருப்பினும், ஒரு நடிகை இப்படி சொல்லியிருப்பது நோக்கத்தக்கது.
விக்ரமுடன்குத்தாட்டம்போடரூ.1கோடிஹன்சிகாமறுப்பு!! “ராஜபாட்டை” படத்தில் விக்ரமுடன் ஒருபாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ.1 கோடி தர சம்மதித்தும், அதனை மறுத்துவிட்டார் ஹன்சிகா மோத்வானி. “தெய்வத்திருமகள்” படத்திற்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் படம் “ராஜபாட்டை”. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தில் அசத்தலான ஒரு குத்துபாடல் ஒன்று இருக்கிறதாம். இதுவரை குத்து பாடலுக்கு ஆடாத ஒருவரை இப்பாடலுக்கு ஆட
ஒரு நடிகை பணத்திற்காக நடிக்க வரவில்லை, என்பது உண்மையா இல்லையா என்பது நடிக்க வரும் நடிகைகளுக்கேத் தெரியும். கவர்ச்சியைக் காட்ட மாட்டேன் என்று, பிறகு அந்த காட்சிற்கு அது தேவைப் பட்டதால் காட்டினேன் என்று தொழில் ரீதியிலான விளக்கமும் கொடுப்பார்கள். |
வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்களாம் படக்குழுவினர். இதற்காக ஹன்சிகாவை அணுகி, ரூ.1 கோடி வரை தருவதாக கேட்டார்களாம். ஆனால், அவரோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த மாதிரி பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என்று கறாராக மறுத்து விட்டாராம். இது குறித்து ஹன்சிகா கூறியிருப்பது, “நான்பணத்திற்காக நடிக்க வரவில்லை. எனது திரையுலக வாழ்வில்எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நாயகியாக நடிக்காத படங்களில்ஒரு பாடல் ஆட்டத்துக்கு சம்மதிக்க மாட்டேன்.” என்று கூறி இருக்கிறார்
படுக்கையறைக்குஅழைத்தார்சரண்: நடந்தசம்பவம்பற்றிநடிகைசோனா[1]: நக்கீரன் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித் திருந்த வைபவ் வீட்டில் இரவு, `பார்ட்டி’ நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப் பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட `மங்காத்தா’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். நடிகை சோனா, பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சரணும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்கள்.
நடிக-நடிகைகள் இப்படி இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது, குடிப்பது, கும்மாளம் அடிப்பது, தனக்கு வேண்டியவர்களுடன் ரூம்களுக்குள் செல்வது என்பதெல்லாம் ரகசியங்கள் அல்ல. |
இந்த பார்ட்டியின் போது சரண், தன்னை படுக்கை அறைக்கு அழைத்தார் என்று நடிகை சோனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.
பலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார். கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது[2].
ஜோக் விபச்சாரம் முதல் கொக்கோக விபச்சாரம் வரை: சோனா படங்களில் ஆபாசமாகத்தான் நடிக்கிறார். மற்ற நிகழ்ச்சிகளில் அரைகுறை உடைகளில் அளவிற்கு மீறித்தான் நெருக்கமாகப் பழகுகிறார்[3]. பிறகு, பெண் அதிலும் நடிகை எனும்போது, கட்டுப்பாட்டுடன் இருந்தால், பிரச்சினை தானே வரும். ஆபாச கொக்கோக டயலாக் கோமாளி விவேக், தத்துவப்பித்து அதிகமாகி விட்டால், சில வார்த்தைகளை உபயோகிக்கக் கூடத் தவறுவதில்லை. அரசு விருதுகள் வரவர, மமதை ஏறி, ஏதோ தான்தான் புரட்சிகர-மறுமலர்ச்சி-தீர்திருத்த நடிகன் போல ஆபாசத்தையே பிழைப்பாக வைத்து பிழைக்கும் விவேக், இந்த சோனாவுடன் “நகைச்சுவை” என்ற பெயரில் அடிக்கும் கூத்து கொஞ்ச-நஞ்சமல்ல. “வார்த்தை விபச்சாரத்தில் வல்லவன்” என்ற பட்டத்தை விவேக்கிற்கு அளிக்கலாம்.
நடிகை-நடிகர்களுக்கு தார்மீகம் பேச அருகதையில்லை: கண்டபடி நடித்து விட்டு, அனாதைகளை தத்தெடுக்கிறேன், பிறந்தநாளை சிம்பிளகக் கொண்டாடுகிறேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை, கற்பு சிறக்காது அல்லது நடிகையின் அங்கங்களைப் பார்ப்பவர்கள் தொடத்துடிக்காமல் இருப்பார்கள். ரசிகர்களே கிள்ளிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்றால், மிகவும் அருகில் இருப்பவர்கள் என்னமெல்லாம் செய்வார்கள் என்று சொல்லவா முடியும். நடிகர்களும் அவ்வாறே, அவர்களுக்கும் இதில் சரியான பங்கு உண்டு.