New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முகமது நபி உண்மைகள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
முகமது நபி உண்மைகள்
Permalink  
 


முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1

 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1 
Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1

புத்தக அறிமுகம்:



Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1 

8.5"x11", color, hard cover, 67 pages 

ISBN-10: 0982964307, ISBN-13: 978-0982964309


புத்தக அட்டைப்படம்:

8121617.jpg?401

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8121617.jpg?401


என் பெயர் அப்துல். என் தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.இது என்னுடைய புதிய புத்தகம்.இந்த புத்தகம் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இஸ்லாமை சுலபமாக நீங்கள் புரிந்துக்கொள்ள இப்புத்தகம் உதவும் என்ற நோக்கத்தோடு இப்புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன்.


9068355.png?289

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/9068355.png?289

இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், நாம் முதலாவது அதன் ஸ்தாபகர் இறைத்தூதர் முஹம்மதுவை புரிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமை புரிந்துக்கொள்ள இது ஒரு சுலபமான வழியாகும்.

ஏன்?

4026245.png?316

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4026245.png?316

இஸ்லாமைப் பற்றி மக்கள் அனேக விதமாகச் சொல்வார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் தவறாக இருக்கலாம். ஏனென்றால், அவைகள் முஹம்மது என்ன சொல்லியுள்ளாரோ எவைகளை செய்துள்ளாரோ அவைகளுக்கு எதிராக இருக்கும். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல், இவை இரண்டிற்கு எதிராக இருப்பதெல்லாம் இஸ்லாம் அல்ல.

உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்போம்.

8605183.png?363

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8605183.png?363

ஆனால், தீவிரவாதிகள் முஹம்மது சொன்னது போலத் தான் நாங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொன்னாலும், இஸ்லாமியர்கள் இதனை மாற்றிச் சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் கூறுவது: இது உண்மையான இஸ்லாம் இல்லை. இஸ்லாம் அமைதியையும், அன்பையும் போதிக்கிறது. அந்த தீவிரவாதிகள் (இரட்டை கோபுரங்களை தகர்த்திய தீவிரவாதிகள்) இஸ்லாமை கடத்திவிட்டார்கள் அல்லது அமைதி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாம் இப்படி தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை.

5711649.png?565

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5711649.png?565

நீங்கள் கவனித்தீர்களா?

முஹம்மது என்ன செய்யச் சொல்லி கட்டளையிட்டாரோ அதற்கு நேர் எதிரான கருத்தை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் முஹம்மது மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஆகையால், யார் சொல்வது உண்மையான விவரம் என்பதை தெரிந்துக்கொள்ள நாம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிக்கவேண்டும், முஹம்மதுவை படிக்கவேண்டும்.

5189545.png?363

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5189545.png?363

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றி நாம் கீழ்கண்ட புத்தகங்களில் படிக்கலாம்.

1) குர்‍ஆன் (அல்லாஹ்வின் வெளிப்பாடு / இஸ்லாமியர்களின் வேதம்)
2) ஹதீஸ்கள் (முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களின் தொகுப்பு)
3) சிரத் (முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு)

இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது.

8180786.png?366

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8180786.png?366

குர்‍ஆனை படிப்பது என்பது மிகவும் சோர்வு உண்டாக்கும் செயலாகும், அதாவது ஒரு சரியான முறைப்படி கோர்வையாக குர்‍ஆன் எழுதப்படவில்லை. ஒரு விவரத்திலிருந்து இன்னொரு விவரத்திற்கு குர்‍ஆன் அடிக்கடி தாவும். ஆகையால், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் மட்டுமே நிற்கும், குர்‍ஆன் என்ன சொல்கின்றது என்பது நமக்கு புரியாது.

குர்‍ஆனை புரிந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் தஃப்ஸீர் என்றுச் சொல்லக்கூடிய "குர்‍ஆன் விளக்கவுரைகளை" படிப்பார்கள்.

8186244.png?312

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8186244.png?312

த‌ஃப்ஸீர் என்கின்ற குர்‍ஆன் விளக்கவுரைகள் அனேகம் உள்ளன, அதாவது இபின் கதீர் விளக்கவுரை, தபரி விளக்கவுரை, இபின் அப்பாஸ் விளக்கவுரை, ஜலாலைன் விளக்கவுரை என்று அனேக குர்‍ஆன் விளக்கவுரைகள் உள்ளன.

இதே போல, ஹதீஸ்களும் அனேக தொகுப்புக்கள் உள்ளன. ஹதீஸ்களில் புகாரி என்றும், முஸ்லிம் என்றும், அபூ தாவுத் என்றும், முவட்டா என்றும் அனேகம் உள்ளன. ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பிலும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அதே போல, சிரத் என்றுச் சொல்லக்கூடிய முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகள் அனேகம் உள்ளன, உதாரணத்திற்கு, இபின் இஷாக், இபின் ஹிஷாம், தபரி, இபின் ஸாத், இபின் கதீர் என்று அனேகம் உள்ளன.

154530.png?444

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/154530.png?444

இஸ்லாமை அறிந்துக்கொள்ள இத்தனை புத்தகங்களை படிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.

5173027.png?179

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5173027.png?179

ஒரு வேளை நமக்கு நேரமிருந்தாலும், எந்த புத்தகத்தை நாம் படிப்பது?

6950385.png?228

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6950385.png?228

இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை ஒரு கோர்வையாக படக்கதைகள் மூலம் விளக்கியுள்ளேன். இஸ்லாமை அறிந்துக்கொள்ள நமக்கு முன்பாக இருக்கும் இத்தனை புத்தகங்களை படிக்க‌வேண்டும் என்ற தலைவலி இனி உங்களுக்கு இல்லை. இந்த படக்கதைகளை நீங்கள் இரசித்து படிக்கலாம்.

இது முதலாவது தொகுப்பாகும் (Volume 1)

4434218.png?302

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4434218.png?302

இந்த முதலாவது தொகுப்பில், நீங்கள் முஹம்மதுவின் வாழ்க்கையை "மக்கா தொடங்கி அவர் மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த (இடம் பெயர்ந்த) காலம்வரையிலான" விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

அதுவும், ஒரே முறை உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

7578037.png?332

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/7578037.png?332

இந்த புத்தகத்தை நீங்கள் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.

86573.png?317

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/86573.png?317

நீங்கள் இந்த புத்தகத்தை பார்க்கில் (தோட்டத்தில்) உட்கார்ந்து படிக்கலாம்.

2950704.png?446

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/2950704.png?446

உங்கள் கணினியில் உட்கார்ந்துக்கொண்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

3838682.png?304

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/3838682.png?304

ஆனால், பல‌ன் ஒன்று தான், அதாவது நாம் அனேக இஸ்லாமிய புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளும் விவரங்களை ஒரே ஒரு படக்கதை புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அறிவு நமக்கு சீக்கிரமாகவும், சரியான விவரமும் இதன் மூலம் கிடைத்துவிடும்.

இஸ்லாம் பற்றி இத்தனை விவரங்கள் எனக்குதெரிந்துவிட்டதே என்றுச் சொல்லி நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

6032384.png?365

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6032384.png?365

இவைகளை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செலவிடவேண்டியதெல்லாம், புத்தக வடிவில் தேவையானால் $16.99 யும், கணினியில் படிக்க ஈ-புத்தகம் (e-book) என்ற வடியில் படிக்க $ 10.99 யும் ஆகும்.

இஸ்லாமை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால், அதுவும் சுவாரசியமாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருந்தால் மற்றும் உங்களிடம் அதிக நேரம் இல்லை என்றால், உங்களுக்குத் தான் இந்த புத்தகம்.

1560242.png?394

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/1560242.png?394

மேலும் அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்:

http://prophetmuhammadillustrated.com/


இந்த படக்கதை புத்தகத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை கீழ்கண்ட தொடுப்பில் சென்று படக்கதையை படிக்கலாம்:

http://prophetmuhammadillustrated.com/the-killing-of-umm-qirfa.html

You tube Video: 





Source: http://prophetmuhammadillustrated.com/


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

 

முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

"லைலா மஜுனு" என்ற காதல் கதையை நம்மில் அனேகர் கேள்விபட்டு இருப்போம். ஆனால், "லைலா முஹம்மது" என்ற கதையை கேள்வி பட்டு இருப்போமா? 

இஸ்லாமிய சரித்திர அறிஞர் அல் தபரி " The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்",இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார். 

... Layla bt. al-Khatim b. 'Adi b. 'Amr b. Sawad b. Zafar b. al-Harith b. al-Khazraj approached the Prophet while his back was to the sun, and clapped him on his shoulder. He asked who it was, and she replied, "I am the daughter of one who competes with the wind. I am Layla bt. al-Khatim. I have come to offer myself [in marriage] to you, so marry me." He replied, "I accept." She went back to her people and said that the Messenger of God had married her. They said, "What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him." She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]. 

(The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours)Source 

முஹம்மதுவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த "ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கை" என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் சரித்திர ஆசிரியர் பதித்த விவரங்கள் இதற்கு எதிர்மாறான விவரத்தை தருகிறது. 

இதர மார்க்க மக்கள் முக்கியமாக, கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு நபி என்று நம்பவேண்டும், அவர் வாழ்ந்தது போல வாழவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சொல்கின்றபடி, முஹம்மது நமது வழிகாட்டியாக இருக்க தகுதியானவரா? என்று சோதிப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். 

முஹம்மதுவின் கால மக்கள் அவரை ஒரு "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறும் அளவிற்கு வாழ்ந்த ஒரு நபரை எப்படி மக்கள் வழிகாட்டியாக கருதமுடியும்? 

மேற்கண்ட நிகழ்ச்சியை படித்த பிறகு மக்களுக்கு எழும் கேள்விகளை இப்போது காண்போம். இதற்கு இஸ்லாமியர்கள் பதில் அளிப்பார்களா? 

முஹம்மது பெண் பித்து பிடித்தவரா? (அ) பெண்ணாசை உள்ளவரா?

இந்த நிகழ்ச்சி உண்மை என்று நாம் கருதினால்...? 

இப்போது நாம் மேற்கண்ட இஸ்லாமிய சரித்திர விவரம் உண்மை என்று கருதி நமது கேள்விகளை முன்வைப்போம்.

1) உலக மகா மேன்மையுள்ள ஒரு நபி (இஸ்லாமியர்களின் கருத்துப்படி) தெருவில் நடந்துச் சென்றுக் கொண்டு இருக்கும் போது, ஒரு பெண், முஹம்மதுவின் பின்னால் தட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கும் போது, உலக வழிகாட்டியாக கருதப்படும் ஒரு நப‌ர் உடனே, உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லமுடியுமா? 

2) நன்மை செய்ய சிந்திக்கத் தேவையில்லை, அவகாசம் கேட்கத் தேவையில்லை, ஆனால், ஒரு பெண் திடீரென்று வந்து திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று நடுத்தெருவில் கெட்கும் போது, முன்பின் யோசிக்காமல், தனக்கு இருக்கும் மனைவிகளிடம் ஒப்புதல் கேட்காமல், அவர்களைக் குறித்து சிந்திக்காமல் முஹம்மது "ஆம், உன்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம்" என்று கூறுவது "ஒரு நபிக்கு பொருத்தமானதாக" தெரிகின்றதா? 

3) திருமணம் என்பது மிகவும் புனிதமானது என்றும், ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து இறைவன் "திருமண உறவை" அவர்கள் இருவரின் இடையில் உண்டாக்கி வைத்தார் என்று இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட திருமண‌த்தை நடுத்தெருவில் முடிவு செய்கிறார் முஹம்மது, இவரை எப்படி ஒரு நபி (தீர்க்கதரிசி) என்று மக்கள் நம்புவது? 

4) இந்த விவரத்தை அப்பெண் தன் ஜனத்தாரிடம் குடும்ப நபர்களிடம் சொல்ல, அவர்கள் "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர்" என்று கூறி திருமணத்தை முறித்துவிடு என்று கூறுகிறார்கள். 

5) ஒரு வழிகாட்டி, ஆன்மீக தலைவர், உலக மகா பரிசுத்தர் என்று இஸ்லாமியர்களால் போற்றப்படும் முஹம்மது, தன் ஊர் மக்களிடம் "பெண் பித்துபிடித்தவர், பெண்ணாசை உள்ளவர்" என்ற சாட்சியை பெறுகிறார். இப்படிப்பட்டவரை கிறிஸ்தவர்களோ, இதர மார்க்க மக்களோ தங்களுக்கு வழிகாட்டியாக இவரை கருதமுடியுமா?

இந்த நிகழ்ச்சி ஒரு இட்டுக்கட்டியது/பொய்யானது என்று கருதினால்... 

இஸ்லாமியர்களுக்கு என்று தனித்தன்மை உண்டு. ஒரு அறிஞர் அவர் இஸ்லாமியரோ அல்லது இஸ்லாமியரல்லாதவரோ யாராக இருந்தாலும் சரி, "முஹம்மது பற்றி உயர்வாக அவர் கூறினால்", அது பொய்யாக இருந்தாலும் சரி, அதனை அங்கீகரிப்பார்கள். ஆனால், அதே நபர் "முஹம்மது பற்றிய இருண்ட நிகழ்ச்சிகளை கூறினால்", இவர் இஸ்லாமுக்கு எதிரி, முஹம்மது மீது இட்டுக்கட்டுகிறார் (பொய் சொல்கிறார்) என்று அடித்துக் கூறுவார்கள். 

மேற்கண்ட சரித்திர ஆசிரியர் அல் தபரி ஒரு கிறிஸ்தவரோ, இந்துவோ அல்லது இஸ்லாமுக்கு எதிரியோ அல்ல, இவர் ஒரு பக்தியுள்ள இஸ்லாமியர். இவர் இஸ்லாமிய ஆட்சி கொடிகட்டி பறக்கும் போது வாழ்ந்தவர், இஸ்லாமியர்களால் மதிக்கப்படுபவர். இவரைப் பற்றி அறிய, இவரது குர்‍ஆன் விரிவுரை பற்றியும் அறிய இந்த (http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Jarir_al-Tabari,http://www.muslimheritage.com/topics/default.cfm?ArticleID=649 ) தொடுப்புக்களை சொடுக்கிப் பார்க்கவும். இவரது குர்‍ஆன் தப்ஸீரிலிருந்து (விரிவுரையிலிருந்து) பாகவி (Baghawi), சுய்யுதி (Suyuti) மற்றும் இபின் கதீர் (Ibn Kathir) போன்றவர்கள் தங்கள் விவரங்களை அதிகமாக சேகரித்துள்ளார்கள். 

இஸ்லாமியர்களுக்கு அல்தபரி சொன்ன 99 விவரங்கள் வேண்டும், ஆனால், அதே அல்தபரி சொன்ன 1 விவரம் தேவையில்லை. 

இப்போது இஸ்லாமியர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்போகும் விவரங்களையும் அதற்கான விளக்கங்களையும் இப்போது காண்போம்.

1) இந்த நிகழ்ச்சி பற்றி இஸ்லாமியர்கள் கூறும் பதில்: "முஹம்மது ஒரு பெண் பித்துபிடித்தவர் (உமனைஜர்)" என்று சொன்னவர்கள் முஹம்மதுவின் எதிரிகளாவார்கள், அவர்கள் சொல்வதை எப்படி நாம் ஏற்கமுடியும்? 

ஆனால், இவர்கள் எதிரிகள் என்று அல் தபரியின் விவரங்களிலிருந்து நமக்கு தெரிவதில்லை. இவர்கள் முஹம்மதுவின் எதிரியாக இருந்திருந்தால், முஹம்மது அவர்களின் கதையை எப்போதே முடித்து இருந்திருப்பார். 

2) உண்மையாகவே, முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவராக இருந்திருந்தால், அப்பெண் மறுபடியும் மறுத்தபோது அதனை அங்கீகரித்து இருந்திருக்கமாட்டாரே, ஆனால் முஹம்மது உடனே அதனை அங்கீகரித்தார் அல்லவா எனவே, அவர் ஒரு பெண் பித்து பிடித்தவர் அல்ல என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். 

ஒரு மனிதன் தனக்கு அனேக மனைவிகள் இருக்கும்போது, தெருவில் சென்றுக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னால், "பெண் பித்து இல்லாதவர்" என்ன பதில் கூறுவார்? 

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் மற்றும் எல்லாராலும் மதிக்கப்படும் ஒரு பெரிய மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முஹம்மதுவிற்கு ஏற்பட்ட நிகழ்ச்சி உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே "ஆமாம்" என்று தலை ஆட்டுவீர்களா?

சரி, ஒரு கணக்கு போடுவோம். ஒரு ஆணை எப்போது பெண் பித்துபிடித்தவர் (பெண்ணாசை உள்ளவர்) என்று நாம் கூறுவோம். 

கேள்வி 1: ஒரு ஆண், தன் வாழ்நாள் எல்லாம் ஒரே மனைவியுடன் வாழ்க்கை நடத்தி, வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமலும், இதர பெண்களுடன் கள்ளத் தெடர்பு வைத்துக்கொள்ளாமலும் இருந்தால், இந்த ஆணை நாம் "பெண்ணாசை உள்ளவர்" என்று சொல்வோமா? 

பதில் 1: சொல்லமாட்டோம், இவ‌ர் பெண்ணாசை உள்ளவர் அல்ல‌. 
(1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌) 

கேள்வி 2: ஒரு ஆண், இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்டு இருந்தால், இப்படிப்பட்டவனை "பெண்ணாசை" பிடித்தவன் என்று சொல்வோமா? (அவன் வாழும் நாட்டில் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கருதுவோம்) 

பதில் 2: ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன் என்றுச் சொல்லலாம். 
(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்) 

கேள்வி 3: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துள்ளான், இவனை பெண்ணாசை உள்ளவன் என்று கூறலாமா? 

பதில் 3: கண்டிப்பாக கூறலாம், பெண் பித்து இல்லாமலா நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொண்டான். 
(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்) 

கேள்வி 4: ஒரு ஆண், நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு, இன்னும் அனேக அடிமைப் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டும் இருக்கும் நபரை, பெண் பித்துபிடித்தவர் என்று கூறலாமா? 

பதில் 4: இந்த கேள்வியையே கேட்கக்கூடாது. அதாவது, நாலு மனைவி மற்றும் அனேக கள்ளத்தொடர்புகள் அதாவது திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளுதல். இவன் பெண்ணாசை பிடித்தவனே. 

(1: 4, a, b, c, p, q, r, x, y, z etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை) 

கேள்வி 5: ஒரு ஆண், 12 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டான். இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறான். மற்றும் திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்கிறான் . மற்றும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாகரத்து, திருமணம் என்று மாறி மாறி செய்தால், இவரை நாம் என்னவென்று அழைக்கலாம். 

பதில்: இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும். 

ஒர் ஊர் மக்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக, ஒரு ஆன்மீகத் தலைவர் "அனேக மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டும், விவாகரத்து புரிந்துக்கொண்டும் இருந்தால், அவரை "பெண் பித்துபிடித்தவர்" என்று கூறமாட்டார்களா? 

இதைத் தான் அந்த லைலாவின் குடும்பத்தார்களும் ஜனங்களும் கூறினார்கள். அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

( 1:1 = பெண்ணாசை உள்ளவர் அல்ல‌)

(1:2 = ஓரளவிற்கு பெண்ணாசை உள்ளவன்) 

(1:4 = நிச்சயமாக பெண்ணாசை உள்ளவன்)

(1: 4, a, b, c, p, q, r, x, y, z, etc.. = இவன் பெண்ணாசை பிடித்தவனே, ஒரு சதவிகிதமும் சந்தேகமில்லை)

( 1: 12, 13, 14, 15,………… = ?)

தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியில் ஒரு இறை நோக்கம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், இந்த தெருவில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் என்ன இறைநோக்கத்தை காணப்போகிறார்கள்? 

இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் 12/13 திருமணங்கள் தவிர, இத‌ர பெண்களையும் முஹம்மது திருமணம் செய்ய விரும்பினார், சில பெண்கள் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டனர். 

முஹம்மதுவின் இப்படிப்பட்ட கேள்விக்குரிய நடத்தைகள் பற்றிய இஸ்லாமிய விவரங்களை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கவும்: 

1) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html 

2) முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post.html 

3) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html 

4) இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html 

5) அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html 

எதிரிகளாக இருந்தாலும், தன் மீது பொய்களை கூறாதபடிக்கு முஹம்மது வாழ்ந்து இருந்திருக்கவேண்டும், ஆனால், இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள ஹதீஸ்களின், சரித்திரங்களின் படி பார்த்தாலே போதும், அன்று அம்மக்கள் சொன்னது பொய் அல்ல உண்மை என்பது விளங்கும். 

இங்கு ஒரு கேள்வியை கேட்கவேண்டும், அதாவது லைலா தன் மக்களிடம் சென்று, விவரத்தை சொன்னதும், முஹம்மது ஒரு "பெண்ணாசை பிடித்தவர்" என்று அம்மக்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னதை அப்பெண் உடனே எப்படி நம்பிவிடுவாள்? இதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறீர்கள் என்று அப்பெண் கேட்டு இருந்திருப்பாள் அல்லவா? தெருவில் ஒரு நபர் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, தைரியமாகச் சென்று பேசிய அதுவும் திருமணம் பற்றி பேசும் அளவிற்கு தைரியமுள்ள பெண், எப்படி அம்மக்கள் சொல்லும் பொய்யை (இஸ்லாமியர்களின் படி பொய்யை) எப்படி நம்புவாள்? 

ஆனால், தபரியின் சரித்திர விவரத்தின்படி, அப்பெண் தன் மக்கள் சொன்னதை நம்பியிருக்கிறாள், அதாவது, அவர்கள் இப்பெண்ணிடம் "முஹம்மதுவிற்கு இருக்கும் மனைவிகளின் எண்ணிக்கையை கூறியிருப்பார்கள்", உடனே அவள் நம்பியிருப்பாள். ஆக, அம்மக்கள் சொன்னது உண்மையே... அப்படி இல்லையென்றுச் சொல்வீர்களானால், நாம் மேலே கண்ட அந்த கணக்கின் படி ஐந்தாவது கேள்வியின் பதில் என்ன என்று எங்களுக்குச் சொல்லுங்கள். 

(ஒரு கேள்வி: நான்கு மனைவிகளை உடைய ஒரு ஆணின் முதல் மனைவியிடம் சென்று, உங்கள் கணவருக்கு பெண்ணாசை உண்டா இல்லையா? என்று கேட்டுப்பாருங்கள், மற்றும் நீங்கள் சொல்லும் விவரம் இரகசியமாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள், அந்த முதல் மனைவி என்ன சொல்லுவாள்? என் கணவருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது என்று சொல்வாளோ? நிச்சயமாக சொல்லமாட்டாள், அவள் அனுபவிக்கும் வேதனையை அப்படியே கொட்டிவிடுவாள், பெண்களின் இதய வேதனை பலதார ஆண்களுக்கு புரியுமோ?) 

இஸ்லாமியர்கள் "எங்கள் நபி ஒரு பரிசுத்தர்" என்று சொன்னவுடன், ஏன் எப்படி என்று கேள்வி கேட்காமல் நம்பிவிட்டு, தங்கள் மார்க்கத்தை விட்டு, உடனே இஸ்லாமை ஏற்க இங்கு யாரும் அறிவீளியாக இல்லை. எனவே, எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கவேண்டும். 

அல் தபரி சொன்னது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், இஸ்லாமியர்களுக்குத் தான் பிரச்சனை. அல் தபரி சொன்னது பொய் என்று இஸ்லாமியர்கள் கூறும் பொய்யை நாம் நம்பினாலும், முஹம்மதுவின் திருமண வாழ்க்கையின் தரத்தையும், திருமணம் எண்ணிக்கையையும் நாம் காணும் போது, லைலாவின் மக்கள் சொன்னது உண்மை என்பது விளங்கும்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


Answer Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்

 

Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் 
"ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?"

முஹம்மதுவிற்கு பிடித்தவைகளில் ஒன்று "பெண்களை திருமணம்" புரிவதும், அவர்களுடன் உடலுறவு கொள்வதுமாகும். பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனி கவனம் அல்லாஹ் செலுத்தியுள்ளான், விதிவிலக்கு அளித்துள்ளான், பார்க்க‌ குர்‍ஆன் 33:50. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிப்பவர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம். 

குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி ஒரு சிறிய கட்டுரையை எழுதியிருந்தேன். அதனை இங்கு சொடுக்கி படிக்கவும்: முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா? 

இந்த கட்டுரைக்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, சகோதரர் அப்ஸர் என்பவர் ஒரு பதிலை பதித்து இருந்தார், அதனை இங்கு படிக்கவும்: ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் கூறிய அவதூறுக்கு பதில். மக்களுக்கு ஸஃபிய்யாவின் மீது இருந்த மரியாதையை அவர் காற்றில் கலந்துவிட்டார். ஏன் இப்படி செய்தார் என்று கேட்டால், தங்கள் நபியை காப்பாற்றுவதற்காக, அவர் செய்த செயல்களை நியாயப்படுத்துவதற்காக இப்படி செய்தார். இது சர்வ சாதாரணமாக‌ இஸ்லாமியர்கள் செய்யும் செயலேயாகும். 

இனி, அவர் ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை காண்போம். ஒருவகையில் பார்த்தால், இஸ்லாமே ஸஃபிய்யாவை கொச்சை படுத்தியுள்ளது, இவர் என்ன செய்யமுடியும்? இஸ்லாம் சொல்வதை தானே இவரும் சொல்லமுடியும்?

என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க நடுங்கும் "இஸ்லாமியர்கள்":

கடந்த மூன்று ஆண்டுகளாக நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், எத்தனையோ தளங்கள் வருகின்றன, ஆவேசமாக சில கட்டுரைகள் எழுதுகின்றன, மறுபடியும் மறைந்துவிடுகின்றன.

•    சரி, எழுதும் சில கட்டுரைகளிலாவது "என் கட்டுரையின்" தொடுப்பை தரலாம் அல்லவா? தரமாட்டார்கள்!
•    இஸ்லாமியர்களுக்கு பயம் அதிகம். 
•    அவர்களுக்கு இஸ்லாம் மீதோ, முஹம்மதுவின் நடத்தையின் மீதோ குர்‍ஆன் மீதோ நம்பிக்கை இல்லை.

பதில் என்றும், மறுப்பு என்றும் கூறுவார்கள், அவதூறு என்று கூறுவார்கள் ஆனால், தொடுப்பை தரமாட்டார்கள். இவர்களது தளங்களை படிக்கும் உங்களைப் போன்ற வாசகர்கள், என்னையும் சேர்த்து அடிமுட்டாள்கள் என்று இவர்களது நம்பிக்கை. இவர்கள் சொல்வதை நாம் படிக்கவேண்டும், ஆனால், இவர்கள் யாருக்கு பதில் சொல்கிறார்களோ, அவர்கள் என்ன எழுதினார்கள் என்று முழுவதுமாக படிக்க தொடுப்பை தரமாட்டார்கள், இது தான் இவர்களது கேவலமான கீழ்தரமான இஸ்லாமிய யுக்தி. ஒரு மனிதனுக்கு ஒரு சொல், ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்றுச் சொல்வார்கள், ஆனால், சிலர் மாட்டைவிட கேவலமாக நடந்துக்கொள்கிறார்கள். எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு உறைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் யாரென்றால், மற்றவர்களின் தொடுப்பை தராமல் இஸ்லாமிய சமுதாய தொண்டு செய்ய வரும் இஸ்லாமிய அறிஞர்களாவார்கள். 

இணையத்தில் இஸ்லாமுக்காக எழுதும் எல்லா தளங்களும் பெரும்பான்மையாக‌ இப்படியே செயல்படுகின்றது, இதில் இப்போது இன்னொரு தளமும் சேர்ந்துள்ளது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாயிற்றே! ஒரே மாதிரியாகத் தான் செயல்படுவார்கள். 

என் கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லி, என் தள தொடுப்பை கொடுக்காமல் பதில் தர முன்வந்து இருக்கின்ற சகோதரர் அப்ஸர் அவர்களே உங்களுக்கு கேவலமாக இல்லை? என்ன மனிதர்களோ!?! 

சரி, இனி அப்ஸர் எழுதிய பதிலுக்கு வருகிறேன். 

என் கட்டுரையில் நான் கேட்ட கேள்வி, முஹம்மது செய்துக்கொண்டது திருமணமா அல்லது விபச்சாரமா என்பதாகும். அதற்கு பதில் என்றுச் சொல்லி, இரண்டு விவரங்களை கூறியுள்ளார் சகோதரர் அப்ஸர், அவைகள்: 

      1)    கைபர் போருக்காக காரணம் என்ன‌?
      2)    ஸஃபிய்யாவின் திருமணத்திற்கான காரணம் என்ன‌?

நான் எழுதிய கட்டுரையில் கைபர் போருக்கான காரணம் என்ன என்று கேட்கவில்லை, இருந்தாலும் இவர்கள் சொல்லியுள்ளார்கள். இதைப் பற்றி தனி தொடர் கட்டுரைகளாக நாம் பிறகு காண்போம்.

•   கைபர் மக்கள் என்ன குற்றம் புரிந்திருந்தார்கள்? 
•   ஏன் முஹம்மது கைபரை பிடிக்க அதிகாலையில் சென்றார்? 
•   போருக்கு இலக்கணம் சொல்லிக்கொடுத்தவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டும் இஸ்லாமியர்கள் எந்த முன்னெச்சரிப்பும் இல்லாமல், அதிகாலையில் சென்று போர் புரிந்ததின் காரணமென்ன? 
•   முக்கியமாக அந்த கைபர் போரில் நடந்த நிகழ்ச்சிகள் என்னென்ன?

போன்றவைகளை தனி கட்டுரைகளாக காண்போம். கைபர் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றிய சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

1.   MUHAMMAD AND THE TREATY OF HUDAYBIYYA 
2.   MUHAMMAD AND THE DEATH OF KINANA 
3.   Muhammad and the Treaty of Hudaybiyya 
4.   The Profit of the Prophet: Should Muhammad Get Paid Or Shouldn't He?

"ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?"

என் கட்டுரையில் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அவர்கள் எழுதிய, ஸஃபிய்யாவின் திருமணம் பற்றிய உண்மையை நாம் இப்போது அலசப்போகிறோம். 

முதலாவது, அப்ஸர் அவர்கள், "ஸஃபிய்யாவுடன் திருமணம்" என்று தலைப்பு கொடுத்து, நான் என் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருந்த ஹதீஸை காட்டினார். இதற்கு தனிப்பட்ட பதில் தேவையில்லை ஏனென்றால், இந்த ஹதீஸைத் தான் என் கட்டுரையில் நான் அடிப்படையாக கொண்டு இருந்தேன். 

இரண்டாவதாக, அப்ஸர் அவர்கள் கீழ்கண்ட விவரத்தை எழுதினார்:

இன்னொரு வரலாற்று புத்தகத்தில் வருவதாவது: 

நபிகளார் ஸபிய்யாவை விடுவித்து, அவர் யூதப் பெண்ணாகவே தொடர்ந்திருக்க அல்லது இஸ்லாத்தினுள் நுழைந்து தமது மனைவியாகிக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்கள். "நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தெரிந்து கொண்டேன்" என்றார் ஸபிய்யா. மதினாவுக்குத் திரும்பி வரும் வழியிலான முதல் தரிப்பிடத்தில் அவர்கள் மணஞ்செய்து கொண்டனர். 
formats are mine.

உமரின் பதில்: 

அப்ஸர் அவர்களே, இன்னொரு வரலாற்று புத்தகம் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அது எந்த வரலாற்று புத்தகம் என்று தெரிந்துக்கொள்ளலாமா? 

இஸ்லாமியர்களின் ஒரு பொதுவான டெக்னிக்: ஒரு இஸ்லாமிய வரலாற்று புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் "முஹம்மதுவிற்கு" சாதகமாக உள்ளவைகளை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டுவார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அதே வரலாற்று புத்தகத்திலிருந்து, மற்றவர்கள் மேற்கோள் காட்டினால், அது முஹம்மதுவின் நடத்தையை இன்றைய சமுதாயத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கேவலமானதாக சித்தரிக்குமென்றால், உடனே அந்த வரலாற்று ஆசிரியர் சொல்வதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றுச் சொல்வார்கள். 

அது பலவீன ஹதீஸ் அல்லது பலவீன வரலாற்று தகவல் என்றுச் சொல்லி மழுப்புவார்கள். இன்னொரு வரலாற்று புத்தகம் என்று எழுதிய அப்ஸருக்கு, அந்த வரலாற்று ஆசிரியரின் பெயரை எழுத ஏன் தயக்கம்? 

என்னுடைய கருத்தின் படி, மேற்கண்ட விவரம் "தபரி" என்ற வரலாற்று ஆசிரியருடையதாக இருக்கவேண்டும், ஏனென்றால், தபரி சரித்திரத்திலிருந்து இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுவார்கள், ஆனால், மற்றவர்கள் மேற்கோள் காட்டக்கூடாது, இது முஹம்மதுவை காப்பாற்ற இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் முயற்சி யாகும். 

எனவே, எந்த வரலாற்று ஆசிரியர் என்று நமக்கு அப்ஸர் அவர்கள் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளார். 

சரி, இஸ்லாமியர்களின் வழிக்கே வருவோம், மேற்கண்ட வரலாறு உண்மை என்றே நாமும் நம்புவோம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை இப்போது முன்வைப்போம், மேற்கண்ட வரலாற்றை நம்புவதினால், "ஸபிய்யாவின் நடத்தை" மீது மக்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை உண்டாகும் என்று இப்போது பார்ப்போம். 

வாசகர்கள் நிதானமாக படியுங்கள், கூர்ந்து கவனியுங்கள். 

அப்ஸர் மேற்கோள் காட்டிய விவரங்களின்படி:

1) முஹம்மது ஸபிய்யாவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறார். 

2) முஹம்மது ஸபிய்யாவை விடுதலை செய்வதாகவும், இதனால், அவள் தன் மக்களோடு சேர்ந்து விடுதலையோடு வாழலாம் எனவும் சொல்கிறார். அதாவது விடுதலைப் பெற்று, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படாமல், தன் ஊரில் அவள் விடுதலையோடு வாழலாம் என முஹம்மது சொல்கிறார். 

3) அல்லது, இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவிற்கு மனைவியாக மாறி, முஹம்மதுவோடு வாழ விருப்பமா என்று கேட்கிறார். 

4) இந்த இரண்டு விருப்பங்களில், ஸபிய்யா, "நான் இஸ்லாமை ஏற்று, முஹம்மதுவை திருமணம்" செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னார்களாம்.

இது தான் அப்ஸர் அவர்களின் அந்த இன்னொரு வரலாறு கூறிய விவரம். இப்போது உண்மை மனசாட்சியோடு கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்லுங்கள்:

1) முஹம்மது கைபரை அதிகாலை பிடித்து, மக்களை அழித்துப் போட்டார்.

2) ஸபிய்யா திருமணமான பெண்ணாக இருக்கிறார். திருமணமாகி ஒரிரு நாட்கள் ஆகியிருக்கிறது. (அதாவது தமிழ் நாட்டில் இப்படியாகச் சொல்லுவார்கள், "திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மரித்துவிட்டால், தாலி இன்னும் ஈரமாகவே உள்ளதே, அதற்குள் மரித்துவிட்டானே என்றுச் சொல்லி மக்கள் கூறுவார்கள், இது போல உள்ளது ஸபிய்யாவின் கதை)

3) ஸபிய்யாவின் தந்தையை முஹம்மதுவே கொன்றார், தன் உறவினர்களை முஹம்மதுவே கொன்றுள்ளார். 

4) ஸபிய்யாவின் புது மாப்பிள்ளையை கூட இந்த கைபர் போரில் தான் முஹம்மது கொன்றார். 

5) தன் ஊர் மக்கள் 'ஓ' வென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்கள், பிள்ளைகள் அநாதைகள் ஆகிவிட்டார்கள். 

6) பெண்கள் இஸ்லாமிய வீரர்களுக்கு அதாவது முஹம்மதுவின் போர் வீரர்களுக்கு அடிமைகளாக மாறி, அவர்களின் காம வேட்கைக்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அடிமைப்பெண்களை கற்பழித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

7) சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாக மாறிவிட்டார்கள், பெண்களை அவரரவர் தெரிந்தெடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் அவர்களோடு விபச்சாரம் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

8) இந்த நிலையில், ஸபிய்யா வேறு ஒரு நபரின் அடிமையாக பிடிக்கப்பட்டு சென்றுக் கொண்டு இருக்கும்போது (எதற்காக ?), ஸபிய்யாவின் அழகு பற்றி முஹம்மதுவிற்கு கூறப்படுகின்றது. 

இஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக அதிகமாக மதிக்கும் புகாரி ஹதீஸ் சொல்லும் விவரம், முஹம்மதுவிற்கு புது மணப் பெண்ணாக இருந்தஸபிய்யாவின் அழகு பற்றி கூறினார்கள், அதனால், முஹம்மதுவிற்கு ஆசை வந்துவிட்டது. ஸபிய்யா வேறு ஒரு இஸ்லாமியரின் கணக்கில் வந்தாலும், அழகாக இருக்கிறாள் என்பதற்காக தன் கணக்கிற்கு மாற்றிக்கொள்கிறார் முஹம்மது. 


பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4211 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 

நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ('கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் 'குமுஸ்'பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அரும்லுள்ள) 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். ………

தன் குடும்பம் தனக்கு முன்பாக உயிரை விட்டது, ஊரில் உள்ள பெண்கள் முஸ்லிம்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள், சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாகிவிட்டார்கள். இதையெல்லாம் கண்டுக்கொண்டு இருந்த ஸபிய்யா: 

தன் குடும்பத்தை அழித்துப்போட்ட முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லுவாரா? 

என் குடும்பம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?

என்னைப் பெற்ற தகப்பன் அழிந்துப்போனால் எனக்கென்ன?

என் உறவினப்பெண்கள் கற்பழிக்கப்பட்டால் எனக்கென்ன?

இப்போது தான் திருமணமான என் புதுமாப்பிள்ளை இரத்தவெள்ளத்தில் கிடந்தால் எனக்கென்ன?

"நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன்" என்று ஸபிய்யா சொன்னதாக, இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். 

இதை படிக்கும் வாசகர்களே, உலகத்தில் எந்த ஒரு குடும்பப்பெண்ணாவது இப்படிப்பட்ட முடிவை எடுப்பாளா? தன் குடும்பத்தை அழித்த ஒரு கொடூரமான மனிதனுக்கு தன் முந்தானையை சந்தோஷமாக நான் விரிக்க தயார் என்றுச் சொல்லுவாளா? சிந்தித்துப் பாருங்கள். 

இஸ்லாமியர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை பார்த்தால், முஹம்மதுவை காப்பாற்ற பின்பு வந்த இஸ்லாமியர்கள் எழுதிவைத்த கட்டுக்கதை என்று தெரிகின்றதல்லவா? 

இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், இது கட்டுக்கதை அல்ல, இது உண்மையாகவே நடந்தது, அதாவது "ஸபிய்யா" இப்படித் தான் சொன்னார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறினால், "ஸபிய்யா" எப்படிப்பட்ட நடத்தையுள்ளவராக நீங்கள் உலகத்திற்கு அடையாளம் காட்ட வருகிறீர்கள்? 

தன் தாய்வீட்டையும், தன் புகுந்த வீட்டையும் அழித்த ஒரு நபருக்கு மனைவியாக‌ என்னை தர நான் விருப்பம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றுச் சொல்லும் ஒரு பெண் ஒரு பெண்ணா? இப்படிப்பட்ட பெண்ணை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியுமா? 

முஹம்மதுவின் கொடூர செயலை நியாயப்படுத்த "ஸபிய்யாவை" கேவலமாக்காதீர்கள் இஸ்லாமியர்களே!

எந்த குடும்ப பெண்ணுக்கு தன் குடும்பத்தை நாசமாக்கிய நபரோடு குடும்பம் நடத்த விருப்பம் உண்டாகும்?

எந்த குடும்ப பெண்ணுக்கு தன் புது மாப்பிள்ளையை கொன்ற கோடுரமான நபரோடு திருமணம் செய்துகொள்ள விருப்பமுண்டாகும்?

எந்த குடும்ப பெண்ணுக்கு தன் ஊரில் உள்ள பெண்கள் கற்பழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தன் ஊர் பெண்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய முஹம்மதுவோடு, தன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள விருப்பமுண்டாகும்?

அதுவும் இந்த கொடூரங்கள் நடந்த ஒரு வாரத்திற்குள்ளாக, முஹம்மது ஸப்பியாவோடு உடலுறவு கொண்டுள்ளார், இதை படிப்பவர்களாகிய நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தால், இந்த நிகழ்ச்சிக்கு என்னவென்று பெயர் வைப்பீர்கள்? ஸபிய்யா சந்தோஷமாக முஹம்மதுவோடு 'அந்த' இரவை கழித்துயிருப்பாரா? 

சாதாரணமாக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டாகி, சிறிது மனக்கசப்பு உண்டானால் கூட, பெண்கள் தன் கணவனோடு ஒரு சில நாட்கள் சந்தோஷமாக இரவை கழிக்காமல் இருப்பார்கள், அதாவது, தங்கள் எதிர்ப்பை குறைந்தபட்சம் காட்டும் இடமாக, கணவன் மனைவியின் தனி அறை இருக்கும். ஆனால், இங்கு பார்க்கிறோம், ஒரு வம்சத்தை அழித்த கொடூரனை திருமணம் செய்து, அன்றே முஹம்மதுவோடு வீடு கூடினாராம் ஸபிய்யா, இதை சுயநினைவு உள்ள எந்த மனிதனாவது ஏற்றுக்கொள்வானா? சிந்தியுங்கள்.

ஓ, இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், மனசாட்சியுள்ளவர்களாக சிந்தியுங்கள். எந்த பெண்ணாவது இப்படிச் சொல்வாளா? 

ஸபிய்யாவின் நடத்தையை கேள்விக்குறியாக்கி, உங்கள் முஹம்மதுவை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளீர்கள், ஆனால், முஹம்மதுவின் மனைவி ஸபிய்யாவை கேவலப்படுத்திவிட்டீர்களே! 

தன் குடும்பம் என்ன ஆனாலும் சரி, தன் கணவன், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் மற்றும் உறவினர்கள் எப்படி அழிந்தாலும் சரி, இவர்களை கொன்றழித்த நபரை நான் திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வேன் என்ற மனப்பான்மையுள்ள ஒரு பெண்ணோடு உங்கள் முஹம்மது வாழ்ந்துள்ளார், இதைத் தான் நீங்கள் உலக மக்களுக்கு உங்கள் ஆதாரங்கள் மூலமாக காட்டுகிறீர்கள்.

மூன்றாவதாக, அப்ஸர் அவரகள் என்ன எழுதினார் என்பதை இப்போது காண்போம், அதற்கு பதிலைப் பார்ப்போம்.

அப்ஸர் அவர்கள் எழுதியது: 

ஸஃபிய்யா இஸ்லாத்தையும் நபி (ஸல்) திருமண பந்தத்தையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள காரணம். 

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழு நிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை.இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து. மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது" என்று கூறினார். (ஜாதுல் மஆது,இப்னு ஹிஷாம்) formats are mine.

உமர் எழுதியது: 

ஒரு சிறிய கேள்வி: இந்த இஸ்லாமிய மேற்கோளை "இப்னு ஹிஷாம்" வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ள இஸ்லாமியர் அப்ஸர் அவர்களே, இதே இப்னு ஹிஷாமின் மேற்கோள்களை நான் மேற்கோள் காட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா? 

முஹம்மதுவின் செயலை நியாயப்படுத்த இன்னொரு கட்டுக்கதை அரங்கேற்றம்:

1) ஸபிய்யாவின் கன்னத்தின் அடியில் ஒரு வடு (காயம்) காணப்படுகிறதாம். 

2) கன்னத்தில் என்னம்மா காயம்? என்று முஹம்மது கேட்டாராம்.

3) நீங்கள் எங்கள் ஊரை கைப்பற்றிய முந்தைய நாளில், என் கனவில் ஒரு முழு நிலா தன் இடத்திலிருந்து வந்து என் மடியில் விழுந்தது, அதைப் பற்றி தன் கணவருக்கு சொன்னார்களாம் ஸபிய்யா.

4) இதைக் கேட்ட ஸபிய்யாவின் கணவன் (புது மாப்பிள்ளை), நீ மதினாவின் அரசனை (முஹம்மதுவை) விரும்புகிறாயா? என்றுச் சொல்லி கன்னத்தில் அறைந்தானாம். அதனால், ஏற்பட்ட வடுவாம் அந்த வடு. ஆனால், உங்களைப் பற்றி நான் நினைத்துகூட பார்க்கவில்லை என்று ஸபிய்யா முஹம்மதுவிடம் கூறினாராம்.

இப்படி கனவில், ஒரு முழு நிலா தன்னிடத்திலிருந்து வந்து, ஸபிய்யாவின் மடியில் விழும்படி படி கனவு வந்ததால் தான் ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று "உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காது குத்துகிறார்கள் இஸ்லாமியர்கள்", இதில் நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்களும் அடங்குவர், அப்படிப்பட்டவர்களில் அப்ஸர் அவர்களும் ஒருவர், இவர் நமக்கு காது குத்த வந்துள்ளார். நாம் காதை காட்டுவோமா? இல்லை இஸ்லாம் சொல்லும் கதையை சிறிது அலசிப்பார்ப்போமா? மேலும் படிக்கவும். 

அப்ஸர் அவர்கள் காட்டிய ஒரு மேற்கோள் மூலமாக, ஸபிய்யாவின் நற்குணத்திற்கு இஸ்லாமியர்களால் களங்கம் உண்டானது, இப்போது இந்த 'கனவு' மூலமாக யாருக்கு பிரச்சனை என்று பார்ப்போம்.

ஸபிய்யாவின் திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ?

குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் நாம் படிக்கும் போது அறிந்துக்கொள்வது என்னவென்றால், முஹம்மதுவிற்கு பெண்கள் என்றால் அதிக விருப்பம், இன்னும் அழகான பெண்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். இதற்காக அவருக்கு அல்லாஹ் தனிப்பட்ட வசனங்களை இறக்குவார், கனவுகள் மூலமாக ஓகே சிக்னல் கொடுப்பார், அவ்வளவு ஏன் சிறுமியாக இருந்தாலும் சரி, காபிரியேல் தூதன் மூலமாக முஹம்மதுவின் கனவில் ஓகே சிக்னல் கொடுப்பார். (அல்லாஹ் தன் அடியார்கள் மரித்து சொர்க்கம் வந்தால், அங்கும் அவர்களுக்கு கன்னிப்பெண்கள் காத்திருப்பதாக வாக்கு செய்கிறார்). 

இப்போது, அந்த கனவு, முஹம்மதுவிற்கு வராமல், ஸபிய்யாவிற்கு வந்துள்ளது, இதனை சிறிது அலசுவோம். இந்த விவரமும் இஸ்லாமியர்களின் கட்டுக்கதை என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்ளலாம், ஸபிய்யாவோடு முஹம்மது புரிந்த திருமணம் கேவலமானது என்பதை மறைக்க ஆரம்பகால இஸ்லாமிய யுக்தி இதன் மூலம் வெளிப்படும். 

கவனிக்கவும்: 

1) ஸபிய்யா தன் புது மாப்பிள்ளையோடு வாழுகின்றாள்

2) அப்போது அவளுக்கு ஒரு கனவு வருகிறது, நிலா வந்து தன் மடியில் விழுகின்றது, 

இதன் மூலமாக நாம் அறிவது என்னவென்றால்:

அ) ஒரு பெண், மற்றவனின் மனைவியாக இருக்கும்பொது, அவளுடைய கனவில் இன்னொரு ஆண் பற்றிய கனவை கொடுத்த இறைவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்? 

ஆ) ஸபிய்யா ஒரு குடும்ப பெண், திருமணம் செய்துக்கொண்டு தன் கணவனோடு வாழுகின்றாள். மற்றவனுடைய மனைவியின் கனவில் இன்னொரு ஆண் பற்றி கனவு வருகிறது? இதை கொடுத்தவர் யார்? 

இ) இஸ்லாமியர்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த கனவை "அல்லாஹ்" தான் கொடுத்தார், இதனை நம்பித் தான், ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள். 

ஈ) ஒரு கனவு வந்தது என்பதறகாக, தன் வம்சத்தை அழித்த ஒரு கொடூரமானவனை ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்வாளா? தன் குடும்பத்தின் மீது ஸபிய்யாவிற்கு இருந்த அன்பு இவ்வளவு தானா? 

உ) இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஸபிய்யாவின் கணவனுக்கு கனவுகளுக்கு பொருள் கூறும் சக்தி இருந்திருக்கிறது! ஸபிய்யாவின் கண‌வனுக்கு இந்த சக்தியை கொடுத்தவர் யார்? அல்லாஹ்வா? 

ஊ) இஸ்லாமியர்கள் சொல்வதைப் பார்த்தால், ஸபிய்யாவின் கணவன் கொடுத்த "கனவு விளக்கம்" சரியானது தான், அதனால், தான் ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று கூறுகிறார்கள்?

நமக்கு அவ்வப்போது ஏதோ ஒரு கனவு வருகிறது, சிலருக்கு தினமும் கனவு வருகிறது, நமக்கு வரும் கனவுகளில் 99% கனவுகளுக்கு பொருளே இருக்காது, பைத்தியக்காரத் தனமாக கனவுகள் வரும், சைக்கிலை ஓட்ட கூட பயப்படும் ஒருவனுக்கு, ஏரோபிளேன் ஓட்டுவதாக கனவுகள் வரும். இப்படிப்பட்ட‌ கனவை நம்பியா ஒரு குடும்ப பெண், தன் வம்சத்தையே இரத்த வெள்ளதில் ஆழ்த்திய ஒருவரை திருமணம் செய்துக் கொள்வாள். வாவ் ரொம்ப ஆச்சரியாமாக உள்ளது? ஸபிய்யா பெண் அல்ல, ஸபிய்யா ஒரு பெண் தெய்வம், என்னே தியாகம், உலகத்தில் எந்த ஒரு பெண்ணாவது இப்படி செய்து இருப்பாளா? 
[இது சாத்தியமா பாருங்கள்: ஈராக்கை அமெரிக்க கைப்பற்றிய பிறகு, ஈராக்கை நாசமாக்கிய பிறகு, சத்தாம் உசேனை கொன்றுவிட்ட பிறகு, சத்தாம் உசேனின் மனைவி, ஜார்ஜ் புஷ்ஷை திருமணம் செய்துக்கொள்ள எனக்கு மகிழ்ச்சி என்றுச் சொன்னால் எப்படி இருக்கும்? இதே போலத்தான் ஸபிய்யா நடந்துக்கொண்டார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்] 

இப்போது அப்ஸர் அவர்களிடம் சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் கேட்கவேண்டும்: 

1) ஸபிய்யாவிற்கு வந்த கனவை கொடுத்தவர் யார்? அல்லாஹ்வா அல்லது இப்லிஷ் என்றுச் சொல்லக்கூடிய சாத்தானா? 

2) அல்லாஹ் தான் என்று பதில் கூறுவீர்களானால், ஒரு திருமணமான பெண்ணின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்துக்கொள்ளும்படியான கனவை ஒரு இறைவன் கொடுப்பானா?

3) அல்லாஹ் இல்லை, 'சாத்தான் தான் கனவை கொடுத்தான்' அல்லது 'இது சம்மந்தமில்லாத வீணான கனவு' என்றுச் சொல்வீர்களானால், முஹம்மது ஸபிய்யாவை செய்துக்கொண்ட திருமணம், திருமணமல்ல, அது ஒரு கற்பழிப்பு, முஹம்மதுவின் காமத்திற்கு பலியான ஒரு பெண்ணின் கதை என்றுச் சொல்லலாம் அல்லவா?

ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் ஒரு உண்மையான இறைவனே அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக புரிகிறது. அதே போல, முஹம்மது ஒரு பொய் நபி என்பதும், நல்ல வழிகாட்டியாக அவர் வாழவில்லை என்பதும் புரிகிறது. 

முடிவுரை: 

முஹம்மது தன் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள அவர் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் தங்க முலாம் பூச முற்படுகின்றீர்கள். ஸபிய்யா தன் குடும்ப துரோகியை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்து, ஸபிய்யாவை கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, கனவு வந்தது அதனால் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார் ஸபிய்யா என்றுச் சொல்லி "அல்லாஹ்வையும்" சேர்த்து கேவலப்படுத்தியுள்ளீர்கள். 

இன்னும் இந்த கட்டுரையைப் பற்றி அப்ஸர் அவர்களோ, அல்லது வேறு நபர்களோடு பதிலைக் கொடுத்தால், இன்னும் அனேக ஆதாரங்கள் முன்வைக்கப்படும். 

பெண்களை கற்பழிக்கும் முஹம்மதுவை எப்படி இறைவனின் தூதர் என்று நம்பச் சொல்கிறீர்கள்? ஒரு நபரின் மனைவியின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்வது பற்றிய கனவை கொடுத்த அல்லாஹ் ஒரு இறைவனா? தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருமணம் என்ற பெயரில் பெண்களை கற்பழிக்கும் ஒரு நபர், நாம் பின்பற்றத் தகுந்த மாதிரியா? இல்லை இல்லவே இல்லை. 

சரி, கடைசியாக இந்த கட்டுரைக்கு தொடர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பதற்காக, ஒரு சில கேள்விகளோடு முடிக்கிறேன்:

விதவையான பெண்ணின் "இத்தா" காலமும் முஹம்மதுவும்

1) இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால், அந்த பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்? 

2) இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால், அந்தப் பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் "இத்தா" இருக்கவேண்டும்? 

3) ஸபிய்யா விதவையானால் அல்லவா? (முஹம்மது தான் அவளை விதவையாக்கினார், அவளது கணவரை கொன்றார்), ஸபிய்யாவிற்கு "இத்தா" நாட்களை ஒதுக்காமல் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு விரோதமாக முஹம்மது, ஸபிய்யா தன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடனேயே அவளோடு உடலுறவு கொண்டார்? (ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்று ஒருவன் சொன்னானாம், அது போல அல்லவா உள்ளது இவரது செயல்கள்) 

4) அல்லாஹ் கட்டளையிடும் "இத்தா" முஹம்மதுவிற்கும் ஸபிய்யாவிற்கும் பொறுந்தாதோ? 

5) ஸபிய்யாவை விடுதலை செய்துவிட்டு, முஹம்மதுவை திருமணம் புரிந்து இருந்தால், விடுதலையான ஒரு விதவையின் "இத்தா" காலம் ஸபிய்யாவிற்கும் ஒதுக்கியிருக்கவேண்டாமா? 

6) இல்லை, ஸபிய்யா அடிமையாகவே இருந்தார், ஆகவே உடலுறவு கொண்டார் என்று சொல்வீர்களானால், திருமணம் புரியாமல் ஒரு பெண்ணொடு உடலுறவு கொள்வது, "கற்பழிப்பு தானே"?
முஹம்மதுவிற்கு அனேக ஆண்களின் சக்தியை அல்லாஹ் கொடுத்து இருந்தார், அதனால் அவர் அவசரப்பட்டார் என்ற பதிலை மட்டும் கூறாதீர்கள். 

அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரையில்..... 

உமர் (isa.koran (at) gmail.com or isa_koran (at) yahoo.co.in)


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?


மனிதன் இயற்கையாகவே மதப்பற்று உடையவன் என்று நாம நம்புகிறோம், ஆனால், இந்திய மண்ணில் மதப்பற்றின் வாசனை கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். 

நம் நாட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமுண்டு ஆனால் சாமியர்களுக்கு பஞ்சமில்லை. சமீப காலத்தில் நித்யானந்தா என்ற சாமியாரின் செயல்கள் பற்றி நாம் செய்தித்தாளில் படித்துள்ளோம். அவர் திருமண பந்தத்திற்கு வெளியே, தன்னை ஒரு மகான் என்று நம்பும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளார். 

விஷயத்திற்கு வருகிறேன், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள், நித்யானந்தாவிற்கு தமிழ் நாட்டு காவல் துறை "மரியாதை செய்ததையும், அவருக்கு ஆதரவாக பேசியதையும்" கண்டித்து கண்டணம் வெளியிட்டுள்ளார். இந்த கண்டனத்தை படிக்கும் போது, நல்ல வேலையை பீஜே செய்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. அதாவது, மக்கள் நல்லவர் என்று நம்பும் ஒருவர், இப்படி கீழ்தரமான செயல்கள் புரிந்துள்ளதை கண்டிப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களை கண்டிப்பதும் சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான். இதில் எந்த‌ மாற்று க‌ருத்தும் இருக்க‌முடியாது. 

ஆனால், நித்யானந்தாவை பீஜே அளந்த அதே அளவுகோலை பயன்படுத்தி, இன்னொரு நபரையும் பீஜே அளந்து தன் கண்டனத்தை தெரிவிப்பாரா? 

சரி, அந்த இன்னொரு நபர் யார்? என்று கேட்கிறீரகளா? பொறுமையாக கீழே இருக்கும் விவரங்களை படிக்கவும், பிறகு உங்களுக்கே தெரியும் அந்த இன்னொரு நபர் யார் என்று? 

1) இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், ஒருபெண்ணை அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்கிறார், அந்தப்பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி, உன்னை எப்படி திருமணம் செய்துக்கொள்வேன் என்று கேட்டு மறுக்கிறாள். இவருக்கு ஏற்கனவே அனேக மனைவிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறைத்தூதர் செய்தது சரியா தவறா என்று பீஜே அவர்கள் விளக்குவார்களா? 

புகாரி பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255 

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார் 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார்அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள். 

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html)

2) நாம் கூறிய இந்த இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துள்ளார்கள். அவளை அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவரது அடியார்கள் அப்படியே செய்து முடித்தார்கள், அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்தனர். பிறகு, இந்த இறைத்தூதர் அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள் என கூறினார்கள். உடனே, அப்பெண் இந்த மனிதரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் பாதுகாப்பு கோரினாள், இவரும் அப்பெண்ணை விட்டுவிட்டார். ஒரு இறைத்தூதர் பெண்களை கடத்திக்கொண்டு வந்து அறையில் தங்க வைத்துவிட்டு, பெண் கேட்பது தான் அழகா? 

இவரைப் பற்றியும், இந்த நிகழ்ச்சி பற்றியும், நம்முடைய பீஜே அவர்கள் என்ன விளக்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு தரப்போகிறார்கள்? 

புகாரி பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637 

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி)அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். …. 

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html)

3) நம்முடைய கதா நாயகராகிய அந்த இறைத்தூதர் போர் புரிந்தார், ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டார், போரிலிருந்து நாடு திரும்பும் போது, அப்பெண்ணை கற்பழித்தார். இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவரது சிப்பாய் ஒருவர் கதவிடம் இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். காலை விடிந்தவுடன், முஹம்மது எழுந்து வெளியே வரும் போது, தன் சிப்பாயைக் கண்டு, கதவிடம் என்ன செய்கிறாய் என்றுகேட்டபோது, நீங்கள் உடலுறவு கொண்ட பெண்ணின் அப்பாவை நீங்கள் கொன்றீர்கள், கணவனை கொன்றீர்கள், அவளுக்கு திருமணம் சில நாட்களுக்கு முன்பாகத் தான் நடந்தது. ஆகையால், நீங்கள் அப்பெண்ணுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்ளும் போது, அவள் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து காவல் காத்தேன் என்றார். அந்த இறைத்தூதர் சபாஷ் என்றார். 

ஒரு பெண்ணின் அப்பாவை கொன்று, கணவனை கொலை செய்து, புதுமணப்பெண்ணை கற்பழிக்கும் ஒரு நபரை பீஜே கண்டிப்பாரா? அல்லது இந்த செயல் பற்றி பீஜே அவர்களின் கருத்து என்ன? 

அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள். 

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். 

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours) 

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html)

இந்துக்களின் மனதை புண்படுத்திய நித்தியானந்தாவை கண்டித்த பீஜே அவர்கள், இந்த இறைத்தூதரின் செயலைக் கண்டு இஸ்லாமியர்களின் மனது புண்படவில்லை என்றுச் சொல்லத் தயாரா? அப்படி புண்படவில்லை என்று பீஜே கருதினால், அதனை விளக்குவாரா? 

இந்த இறைத்தூதரை விட, நித்தியானந்தா நல்லவர் போல காணப்படுகிறார். எப்படியென்றால், நித்தியானந்தா யாரையும் கடத்திக்கொண்டு வந்து அறையில் அடைத்து சம்மந்தம் பேசவில்லை. அவர் பணம் கொடுத்து விபச்சாரம் செய்துள்ளார். 

நித்தியானந்தா போர் செய்து, ஒரு பெண்ணின் அப்பாவையும், கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணை கற்பழிக்கவில்லை, ஆனால் இந்த இறைத்தூதர் இப்படி செய்தார் என்று அவரது நூல்களே சாட்சி சொல்கின்றன. 

இப்படி எழுதுவதினால், நித்தியானந்தா செய்தது சரியானது என்று நாம் சொல்வதில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட விதமாக நடந்துக்கொண்ட ஒரு நபரை இறைத்தூதர் என்று நம்பும் பீஜே அவர்கள் தங்கள் கண்களில் இருக்கும் துரும்பை பார்க்க தவறுவது ஏன் என்பது தான் கேள்வி. 

நித்தியானந்தா போன்ற நபர்களை ஆதரிப்பவர்களுக்கு பீஜே சூட்டிய புகழாறம்: 

"இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம்தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது "…. 

இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது  

 

Source:  http://dubaitntj.blogspot.com/2011/07/tntj.html


நித்தியானந்தாவை விட அதிகபடியாக இன்னும் கேவலமான செயல்களை செய்த மேற்கண்ட மகானை பின்பற்றுபவர்களுக்கு யார் புகழாறம் சூட்டப்போகிறார்கள்? யார் கண்டிக்கப்போகிறார்கள்? 

போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
கைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய கட்டுரையை இங்கு படிக்கவும்:
கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.
 
இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)
Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)
 
1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?
2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?
3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?
5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?
6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?
7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?
8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?
9) தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?
10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?
11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?
12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.
சரி,
ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?
அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.
மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

Source: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?

 
இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருந்தார்கள். இருந்தபோதிலும் அவருக்கு தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் (அ) ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. எந்த பெண்ணாவது முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். இது உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் இல்லாத தனிப்பட்ட சலுகை முஹம்மதுவிற்கு மட்டும் அல்லாஹ் கொடுத்துள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக முஹம்மது சில பெண்களை விரும்பிய பின்னரும் அப்பெண்கள் முஹம்மதுவை திருமணம் செய்ய மறுத்துள்ளனர்.
கீழ்கண்ட புகாரி ஹதீஸை படிக்கவும், அதன் கீழே சில கேள்விகள் இஸ்லாமியர்களுக்காக கேட்கப்படுகிறது.
 
பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்
 
இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:
1) தோட்டத்திற்குள் முஹம்மது ஏன் சென்றார்?

2) அந்த தோட்டத்திற்குள் ஒரு அறைக்குள் இருந்தது யார்?

3) ஏன் அந்த பெண் அந்த தோட்டத்தில் இருந்த அறையில் கொண்டு வரப்பட்டாள்?

4) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

5) அவருக்கு பதிலாக அந்தப் பெண் என்ன கூறினாள்?

6) மேற்கண்ட ஹதீஸில் அந்தப்பெண் முஹம்மதுவை என்னவென்று குறிப்பாகச் கேவலமாக சொன்னாள்?

7) அரசி யார்? இடையன் யார்?

8) தன்னை இடையன் என்றுச் சொல்லிய பிறகும் முஹம்மது என்ன செய்தார்?

9) அந்த பெண் முஹம்மதுவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள யாரிடம் பாதுகாப்பு கோரினாள்?

10) ஒரு வேளை அந்தப்பெண் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனிடம் பாதுகாப்பு கோரியிருந்தால் என்ன நடந்துஇருக்கும்?

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா?

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால், இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால், இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

17) முஹம்மதுவின் இதர மனைவிகள் தங்கும் இடத்தில் (அ) வீட்டில் ஏன் இந்த பெண் தங்க வைக்கப்படவில்லை?

18) ஏதோ தவறு செய்வது போல, ஊருக்கு வெளியே அதுவும் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு தனி அறையில் அடைத்து வைப்பது போல ஒரு நபி ஏன் இந்த பெண்ணை தங்க வைத்திருந்தார்?

19) இந்த பெண் குறிப்பாக அந்த தோட்டத்தில் ஒரு அறையில், முஹம்மது வருவார் என்று சொல்லி வைத்தாற் போல தங்கவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது இதன் மூலம் விளங்குகிறதல்லவா?

20) இந்த பெண் புத்திசாலித்தனமாக "முஹம்மது தன்னை தொடக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கோரியதால்" முஹம்மது அடிபணிந்து அவளை விட்டுவிட்டார். ஒரு வேளை அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் பெயரைச் சொல்லி அவள் பாதுகாப்பு கோரியிருந்தால், அந்த அறையில் என்ன நடந்து இருந்திருக்கும்?

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

24) அல்லாஹ்வின் மிகப்பெரிய நபி, அதுவும் கடைசி நபியைப் பார்த்து "நான் ஒரு அரசி, நீ ஒரு இடையன்" உன்னைப்போல உள்ள நபருக்கு ஒரு அரசி அன்பளிப்பாக தருவாளா என்று ஒரு பெண் சொல்லும் படி நடந்துக்கொண்டாரே, இதனை கண்டித்து அல்லாஹ் வசனம் எதுவும் இறக்கவில்லையோ? அல்லது இது என் நபிக்கு சர்வ சாதாரணமான விஷயம் தானே என்று அல்லாஹ் விட்டுவிட்டாரா?

25) அந்த இடத்தில், அந்த குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த அறையில் தங்க வை, நான் அந்த மணித்துளியில் வந்து என் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்றுசொல்லி வைத்தாற் போல, தன் தோழர்களை வேறு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, உடலுறவு கொள்வதற்கு முஹம்மது வந்துள்ளார், இது ஒரு நல்ல மனிதருக்கு அல்லது ஆன்மீக தலைவருக்கு தகுதியான செயலாக தெரியவில்லையே! இஸ்லாமியர்களே உங்களுக்கு இப்படி தோன்றவில்லையா?
இந்த திருமண ஒப்பந்தம், மற்றும் முஹம்மதுவின் மேற்கண்ட நிகழ்ச்சி எந்த வகையில் இஸ்லாமுக்கு நன்மை செய்கிறது அல்லது இது பின்பற்றத்தகுந்த ஒரு நடத்தையா? முஹம்மது நடந்துக்கொண்டது போல, இந்த ஹதீஸை படிக்கும் இஸ்லாமியர்களின் தந்தை, ஒரு பெண்ணைப் பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, ஒப்பந்தம் போட்டு, அந்தபெண்ணை ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, பிறகு அவளிடம் சென்று, உன்னை எனக்கு அன்பளிப்பாக கொடு என்றுச் சொல்லும் போது, அந்த பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி உனக்கு இது தகுதியில்லை என்றுச் சொன்னால், உங்கள் தந்தையைப் பற்றி பெருமித்தோடு தலை நிமிர்ந்து நடந்துச் செல்வீர்களா?
சிந்தியுங்கள்....
உங்கள் இஸ்லாமிய ஆதாரமாகிய சஹீஹ் புகாரி ஹதீஸிலிருந்து ஒரு துகள் இது...
இவரையா கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்...?
Source: http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

 
முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 
சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால்எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்'என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார்.அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள்.அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்
 
1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?
2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?
3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?
4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?
மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி

 

முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி

("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)

WAS MUHAMMAD A SINNER - PART 2

ஆசிரியர்: சைலஸ்

முஹம்மது ஒரு பாவி தான் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை இங்கு முதல் பாகத்தை சொடுக்கி படிக்கவும்.

ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்கள்: 

புகாரி ஹதீஸ்களில் உள்ள முஹம்மதுவின் வேண்டுதல்களின் சுருக்கத்தை இந்த கட்டுரையின் முதல் பாகத்தின் ஆரம்பத்தில் நான் கொடுத்து இருந்தேன். இப்போது, அந்த நான்கு ஹதீஸ்களை முழுவதுமாக இங்கு படிப்போம்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். 

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) …. 

என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார் 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368 

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' … 

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர். 

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399 

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்: 

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ.

(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

இந்த பாவமன்னிப்பின் ஜெபத்தில் அவர் "பாவம்" என்பதற்கு வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் "தன்ப்" என்ற வார்த்தைக்கு பதிலாக"க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். 

இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (The Encyclopedia of Islam [9]) "க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையின் பொருளை கீழ்கண்டவாறு விவரிக்கிறது:

"Moral lapse, sin, a synonym of dhanb. The root means "to fail, stumble", "make a mistake", "of an archer whose arrow misses the target". 

"நற்குண குறைபாடுபாவம்'தன்ப்' என்ற வார்த்தைக்கு சுமமானது". இதன் மூல வார்த்தையின் பொருள் "தவறுவது, தடுமாறுவது", "தவறு செய்வது", "குறி தவறிய அம்பை எய்தவன்" என்பவைகளாகும்.

முஹம்மது தன்னுடைய விண்ணப்பத்தில் (ஜெபத்தில்), பாவத்தின் அனைத்து விதங்களையும் அங்கீகரிக்கிறார்:

அதாவது: 

• தீய செயல்கள், 

• தவறுகள், 

• தெரியாமல் செய்த தவறுகள், 

• பிழைகள், 

• தற்செயலாக செய்த பிழைகள், 

• வேண்டுமென்றே தெரிந்தே செய்த பாவங்கள், 

• கடந்த கால பாவங்கள், 

• எதிர்கால பாவங்கள் மற்றும் 

• பெரிய பாவங்கள் 

என்று அனைத்து விதமான பாவங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த செயல்கள் அனைத்தும் வெறும் சிறிய "தவறுகள்" அல்ல, அதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் "தண்டனைக்கு உகந்த பாவங்கள்" ஆகும், இதனை முஹம்மதுவின் விண்ணப்பத்தை கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம். 

முஹம்மது ஒரு பாவி என்று அவரே அங்கீகரித்து விட்டார். அவர் செய்த பாவ மன்னிப்பின் விண்ணமானது, அவர் தன்னுடைய பாவத்தின் தீவிரத்தை அறிந்திருக்கிறார் என்பதை நமக்கு காட்டவில்லையா? அல்லாஹ் பாவங்கள் செய்யும் மனிதர்களை தண்டிக்கிறார் என்பதை அறிந்திருந்தார், அதனால் தான் அவர் பாவமன்னிப்பிற்காக அல்லாஹ்விடம் வேண்டினார். தன்னுடைய குற்றங்களுக்காக நரகத்தில் எரிய முஹம்மது விரும்பவில்லை. 

கடைசியாக, தான் தண்டிக்கப்பட்டு வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என்ற பயம் முஹம்மதுவிற்கு இருந்துக்கொண்டே இருந்தது.

சஹீ முஸ்லிம், [10], தொகுப்பு 4, எண் 1212 

ஆயிஷா அறிவித்ததாவது: 

ஒரு யூத பெண் என்னோடு இருக்கும் போது, இறைத்தூதர் என் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அந்த யூதப்பெண் இறைத்தூதரிடம்: "நீங்கள் கல்லரையில் இருக்கும் போது, உங்களுக்கு சித்திரவதை உண்டு என்பதை அறிவீர்களா?" என்று கேட்டாள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் நடுங்கிவிட்டார் மற்றும் சித்தரவதையை அனுபவிப்பது யூதர்களாவார்கள் என்று கூறினார். ஆயிஷா அறிவித்ததாவது: சில இரவுகளை நாம் கழித்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் கூறினார், "அல்லாஹ் எனக்கு என்ன வெளிப்படுத்தினார் என்று உனக்குத் தெரியுமா? ' நீ கல்லரையில் இருக்கும் போது உனக்கு சித்திரவதை உண்டு' என்று எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். இதன் பிறகு கல்லரையில் கொடுக்கப்பட இருக்கும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பிற்காக அல்லாஹ்வின் தூதர் வேண்டிக்கொள்வதை நான் கேட்டேன். 

Sahih Muslim, [10], Book 4, Number 1212:

Narrated Aisha:

"The Prophet entered my house when a Jewess was with me and she was saying: Do you know that you would be put to trial in the grave? The Messenger of Allah trembled (on hearing this) and said: It is the Jews only who would be put to trial. Aisha said: We passed some nights and then the Messenger of Allah said: Do you know that it has been revealed to me: "You would be put to trial in the grave"? Aisha said: I heard the Messenger of Allah seeking refuge from the torment of the grave after this."

கல்லரைக்குள் முஹம்மதுவிற்கு வேதனை உண்டு என்று அல்லாஹ் அவருக்கு "வெளிப்படுத்தினார்". இதனால், தனக்கு வரவிருக்கும் இந்த கல்லரையின் வேதனையிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று முஹம்மது தொடர்ச்சியாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார். முஹம்மது ஒரு சிறு குற்றமும் இல்லாத பரிசுத்தராகவும், தூய்மையானவராகவும் இருந்திருந்தால், கல்லரையில் ஏன் அல்லாஹ் அவருக்கு வேதனையை கொடுப்பேன் என்று சொல்லப்போகிறார்? முஹம்மது தன் பாவங்களைப் பற்றி அறிந்திருந்தார், அதனால் அவர் இறைவனிடம் பாவமன்னிப்பிற்காக வேண்டிக்கொண்டு இருந்தார். 

முஹம்மது என்னென்ன பாவங்களை செய்துள்ளார்? அவரது செயல்களை நீங்களே கவனித்து, சோதித்துப் பார்த்து, ஒரு முடிவிற்கு வாருங்கள். நான் இஸ்லாமிய நூல்களை ஆதாரங்களை வாசித்த போது, அதாவது குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா என்று சொல்லக்கூடிய அவரது வாழ்க்கை சரித்திரத்தை படித்த போது அதிர்ச்சியூட்டும் சில செயல்களை அவர் செய்ததாக கண்டேன். சில இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் இந்த செயல்கள் அனைத்தையும் அறிவார்கள். இவைகள் அனைத்தும் இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீது மிகவும் பக்தியுள்ள தீவிர இஸ்லாமியர்களே, இவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளார்கள்.

முஹம்மது செய்த சில பாவங்களின் பட்டியல்:

முஹம்மது செய்த சில பாவங்களின் விவரங்களை இங்கே காணலாம்.

1) அற்ப பணத்தை பெறுவதற்காக ஒரு மனிதனை கொடுமைப்படுத்தி, கொலை செய்தவர் முஹம்மது.

2) பெண் அடிமைகள் கற்பழிக்கப்பட அனுமதி அளித்தவர் முஹம்மது.

3) தன்னை "எதிர்த்தாள்" என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கொலை செய்ய வைத்தவர் முஹம்மது.

4) தன்னை "பரியாசம் செய்தாள்" என்ற காரணத்திற்காக ஒரு அடிமைப் பெண்ணை கொலை செய்தவர் முஹம்மது.

5) சாத்தானின் (இப்லீஷ்) வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாக கூறியவர் முஹம்மது.

மேலே உள்ள அனைத்து பாவங்களையும் செய்தவர் முஹம்மது ஆவார். இப்படிப்பட்டவர் தனக்கு பாவமன்னிப்பு வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது? தான் ஒரு பாவி என்ற உண்மை அவரது உள்ளத்தின் ஆழத்தில் வேறூன்றி இருந்தது. 

இரண்டாம் பாகத்தின் முடிவுரை: முஹம்மது ஒரு பாவியாக இருந்தார் என்பதாகும்

முஹம்மது தான் ஒரு பாவியாக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டார்.தன்னுடைய பாவங்களை அவர் "தீய செயல்கள்" என்று அழைக்கிறார். ஆனால், பிறகு வந்த இஸ்லாமியர்கள், "இஸ்லாமுக்கு எதிரான ஒருகோட்பாட்டை சொல்கிறார்கள்", அதாவது முஹம்மது ஒரு பாவி அல்ல என்று கூறுகிறார்கள். இவர்கள் இப்படி கூறுவதற்கு காரணம், அவர்கள் முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக காட்ட முயற்சி எடுக்கிறார்கள். 

முஹம்மதுவின் கூற்றுகளின் படியே முஹம்மது ஒரு பாவி தான். முஹம்மது கொண்டு வந்த கோட்பாடுகளின் படி பார்த்தால், அவர் மன்னிக்கப்படாவிட்டால், நிச்சயமாக அவருக்கு இறை தண்டனை உண்டு. 

முஹம்மது ஒரு பாவியா என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் முற்றுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தில் இயேசு எப்படி பரிசுத்தராக இருந்தார் என்பதை இஸ்லாமிய ஆதாரங்களின் படி நாம் காண்போம்.

ஆதார நூற்ப்பட்டியல்

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India. 

[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at: http://answering-islam.org/Gilchrist/Vol1/ 

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England 

[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY. 

[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England. 

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England. 

[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland. 

[8] The Hughes Encyclopedic Dictionary of Islam" 

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands. 

[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA. 

[11] இக்கட்டுரையின் அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

mo-sinner.htm
Rev A: 4/26/00

ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER? 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...

 
இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
முன்னுரை:  முஹம்மதுவை அவமதித்ததற்காக ஒரு பேராசியரின் கைகளை இஸ்லாமியர்களில் சிலர் வெட்டினார்கள். அதைப் பற்றிய ஒரு சிறு கட்டுரையை கீழே முதல் கட்டுரையாக படிக்கவும், அதற்கு வந்த பின்னூட்டத்திற்கான பதிலை இரண்டாம் கட்டுரையாக படிக்கவும்.
1) முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)
கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
2) வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்
வெட்டப்பட்ட ஜோசப் அவர்களுக்கு இன்னொரு இஸ்லாமிய குழு இரத்ததானம் செய்ததாக ஒரு செய்தியை தினமலரில் படித்தேன்.  மக்கள் மனதில் இப்போது தான் குழப்பம் ஆரம்பமாகிறது. அதாவது குழந்தையை கிள்ளியும் விட்டுவிட்டு, அழுதுக்கொண்டு இருக்கும் குழந்தையை தாலாட்டவும் வந்துவிட்டார்கள் என்றுச் சொல்லும் சொற்றொடருக்கு ஏற்ப ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.
முதலில் தினமலர் செய்தியை படிக்கவும்:

கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களுக்கு மனமார்ந்த என் நன்றிகள் உரித்தாகுக.
அனேக தானங்களில் இரத்ததானம் மிகவும் சிறந்தது, அதாவது தங்கள் உடலில் உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் இரத்தத்தை கொடுப்பது என்பது மிகவும் போற்றுவதற்குரியது. ஆகையால், இரத்த தானம் செய்து காயப்பட்ட ஜோசப்பிற்கு உதவிய இஸ்லாமியர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரங்கள் அனேகம் உள்ளன. அதாவது, 
1) தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மதுவை அவமதித்த ஒருவருக்கு, இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்து இருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.  (ஆம, இதை நான் சிந்துப்பார்க்கவே இல்லையே என்று சிலர் இப்போது தலையை சொறிந்துக்கொள்வார்கள்)


2) இப்படி தங்கள் மார்க்கத்தலைவரை தாக்கி எழுதியவருக்கே இரத்ததானம் செய்தவர்களாகிய இவர்களைக் கண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது (அன்பான மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா? அல்லது சட்டத்தின் படி தண்டனை பெற விட்டுவைக்காமல் கைகளை வெட்டிய அந்த இஸ்லாமியர்களைக் கண்டு இஸ்லாம் இப்படிப்பட்டது (அடாவடி மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா?
இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, இஸ்லாமை தோற்றுவித்தவரும், இஸ்லாமின் ஆணிவேராக இருப்பவரும், இஸ்லாமியர்கள் வழிகாட்டியாக இருப்பவருமான முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது என்று தீர்மானித்தால், அது மிகச்சரியாக இருக்கும். இது இஸ்லாமுக்கு மட்டுமல்ல, எல்லா மார்க்கத்திற்கும் பொருந்தும், அதாவது தோற்றுவித்தவர் எவ்வழியோ தொடர்பவர்களும் அவ்வழியே (சிலர் வேறு மாதிரியாக நடந்துக்கொண்டாலும் சரி).
இஸ்லாமியரல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும்: முஹம்மதுவின் வழிகாட்டல்: ஒரே ஒரு உதாரணம்
இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று அனேக விவரங்களைச் சொல்லியுள்ளார், அவைகளில் ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் ஹதீஸ்களிலிருந்து, முஹம்மது சொன்ன ஒரு கட்டளை அல்லது அறிவுரை: அதாவது யூதர்கள் கிறிஸ்தவர்களை வழியில் கண்டால், அவர்கள் நெருக்கமான வழியில் செல்லும்படி செய்யுங்கள், அல்லது கட்டாயப்படுத்துங்கள் என்று முஹம்மது இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறார். அவர் எதைச் சொல்வாரோ அதை ஒரு மயிரிழையும் பிசகாமல் இஸ்லாமியர்கள் பின்பற்றுவார்கள், இதற்கு சந்தேகமே இல்லை.
ஒரே வழியில் செல்பவர்கள் அவரவர் வழியில் செல்ல விட்டுவிடவேண்டியது தானே! முஹம்மது அவர்களே... ஏன் இப்படி மக்களின் மனதிலே வெறுப்புணர்ச்சியை ஊட்டுகிறீர்கள்?
சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.
இப்போது சில விவரங்களை அலசுவோம் வாருங்கள்.
இரத்த தானம் செய்த முஸ்லீம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களா?
மேலே படித்த முஹம்மதுவின் கட்டளையை படிக்கும்போது, சில விவரங்கள் தெளிவாக புரிகின்றது, அதாவது
1) இஸ்லாமியர்கள் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களிடம் கடுமையான நடந்துக்கொள்ளவேண்டும்.
2) அவர்களை இடுக்கமான வழியில் செல்லும்படி கட்டாயப்படுத்தவேண்டும்,
3) அந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் வழியில் செல்லும் இஸ்லாமியர்களுக்கு எந்த கெடுதியும் செய்யவில்லையானாலும் சரி, அவர்களை இடுக்கமான வழியில் செல்லச் செய்யவேண்டும், அதாவது இஸ்லாமியர்களின் கை உயர்ந்து இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்துத் தான் செல்லவேண்டும் என்று காட்டவேண்டும்.
4) முஸ்லீம்களின் மனதில் ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டு, மற்ற மார்கத்தவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை போதிக்காமல், ஒற்றுமையை குலைக்கும் விதமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமிய நபி கூறியுள்ளார்.
ஆனால், 
1) இன்று, தங்கள் நபி பற்றி அவதூறாக எழுதியவருக்கு இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்துள்ளார்கள்.
2) இப்படி கைகளை வெட்டுவது தவறு என்று கண்டித்து அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்
நாம் என்ன முடிவு எடுக்கப்போகிறோம்?
இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்கள் முஹம்மது சொன்னது போல செய்யாமல், முஹம்மதுவையே அவதூறாக பேசியவருக்கே இரத்ததானம் செய்து இருப்பதினால், இந்த இஸ்லாமியர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா?
ஒரு வேளை முஹம்மது இப்போது இருந்திருந்தால், இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களிடம் என்ன சொல்லியிருப்பார். என்னை திட்டியவருக்கே நீங்கள் உதவி செய்ய சென்றுவிட்டீர்களோ? இரத்தம் கொடுக்க முன் வந்துவிட்டீர்களோ? நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யாமல், அவரின் எதிரிகளுக்கு உதவி செய்துவிட்டீர்களே என்று கூறியிருப்பார்.
இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்:
 நாம் இதுவரை மூன்று வகையான விவரங்களை (நபர்களைக்) கண்டோம்:
1)முஹம்ம்துவை அவமானப்படுத்தியதற்காக வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

2)பாதிக்கப்பட்டவருக்கு மனமுவந்துச் சென்று இரத்த தானம் செய்த இஸ்லாமியர்கள்

3)மாற்று மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வெறுப்புணர்ச்சியை தூண்டிய முஹம்மது.
இப்போது இஸ்லாம் எப்படிப்பட்டது என்று யாரைக் கொண்டு தீர்மானித்தால் சரியாக இருக்கும்?

முஹம்மதுவைக் கொண்டா?  ------> இஸ்லாமை தோற்றுவித்தவர்

கைகளை வெட்டியவர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்

இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்
முஹம்மதுவைக் கொண்டே இஸ்லாம் எப்படிப்பட்டது என்று முடிவு எடுக்கவேண்டுமே ஒழிய, இரத்ததானம் செய்தவர்களைக் கொண்டு அல்ல.
அது எப்படி என்று கேட்பீர்களானால், முஹம்மது சொன்னது தவறு, அவருக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது, நாங்கள் செய்தது தான் சரியானது, அது தான் இஸ்லாம் என்று இரத்ததானம் கொடுத்தவர்கள் சொல்வார்களானால், இது எடுபடாது. அதாவது,முஹம்மதுவின் ஒவ்வொரு அசைவும் இஸ்லாம், ஒவ்வொரு வார்த்தையும் இஸ்லாம், ஒவ்வொரு மூச்சும் இஸ்லாம், முஹம்மதுவே இஸ்லாம்.
எந்த ஒரு முஸ்லிம், முஹம்மது சொன்னது தவறு என்றுச் சொல்வானோ அப்போதே அவன் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக அர்த்தம். அல்லாஹ்வையும்,அவரது தூதரையும் மதிக்காதவன் முஸ்லீமில்லை, இதை எல்லாரும் (இஸ்லாமியர்கள்) அங்கீகரிப்பார்கள்.
ஆக, இஸ்லாமியரல்லாதவர்கள், இரத்த தானம் கொடுத்தவர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்றுச் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது. 
எப்போது நாம் இப்படிச் சொல்கிறோமோ, அப்போதே அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக பொருள்,முஹம்மதுவை விட நல்லவர்களாக முஸ்லீம்கள் ஆகிவிடுவார்களா? அய்யோ இது முடியாத காரியம், முஹம்மதுவை விட அவர் காட்டிய வழியை விட நல்லவழியை ஒரு இஸ்லாமியன் காட்டமுடியுமா, கற்பனைக் கூட செய்து பார்க்கமுடியாது.
அப்படியானால், கைகளை வெட்டியவர்கள் தான் இஸ்லாமை முழுவதுமாக முஹம்மது சொன்னது போல செய்தவர்களா என்று கேட்கிறீர்களா? இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு. 
எந்த ஒரு குற்றமும் இழைக்காதவனுக்கே வழியை கொடுக்காதே என்று வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடுகிறார் முஹம்மது, அப்படி இருக்கும்போது, அவதூறாக எழுதியவருக்கு என்ன கதி? அதைத் தான் கேரளாவின் இஸ்லாமியர்கள் சிலர் செய்து காட்டினார்கள்.  தலைவன் எவ்வழியோ... தொண்டன் அவ்வழி.
அப்படியானால், இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களின் செயல்.... வெறும் ஏமாற்று வேலை... ஒரு புறம் இஸ்லாமியர்கள் வெட்டிச் சாய்ப்பார்கள்...இன்னொரு புறம் இரத்ததானம் செய்வார்கள்...
கேரளாவின் கோரச் செயலை கண்டித்த இஸ்லாமியர்கள், முஹம்மதுவின் கோரச் செயல்களை கண்டிப்பார்களா?  அவரின் வாயிலிருந்து விழுந்த ஹதீஸ்களை கண்டித்து அறிக்கையிடுவார்களா? 
இதை தான் "தக்கியா" என்பார்கள், அதாவது பொய் சொல்லியாவது, ஏமாற்றியாவது இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வர முயற்சிப்பது.  இது தான் நடந்தேறியுள்ளது.
முடிவுரை:
இந்த நாடகத்தினால் இஸ்லாமுக்கு இரண்டு நன்மைகள்:
1) இனி யாராவது பொதுவாக கூட, மறந்தும் முஹம்மது பற்றி தவறாக எழுதாமல் இருக்க ஒரு நல்ல ஏற்பாடு (ஒருவரின் கைகளை வெட்டியது)
2) அதே நேரத்தில் நாங்களும் இரத்ததானம் செய்கிறோம், அறிக்கையிடுகிறோம், இஸ்லாம் மன்னிக்கின்ற மார்க்கம் (அப்படியா..) என்று சொல்லிக்கொள்ள ஒரு ஏற்பாடு (இரத்த தானம் செய்வது)
ஒருவேளை இரத்ததானம் செய்த சகோதரர்கள், "அய்யா எங்களுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது... நாங்கள் வேதனை அடைந்து தான் இந்த தானத்தைச் செய்தோம். முஹம்மது சொன்னது போல நாங்கள் செய்யவில்லையே" என்று உண்மையாகவே வேதனை அடைந்து கூறுவார்களானால்,......அப்படிப்பட்டவர்களின் கால்களை கழுவி துடைக்க நான் கடனாளியாக இருக்கிறேன்.
முஹம்மது இஸ்லாமியர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்? கீழே உள்ள தமிழ் கட்டுரையை படிக்கவும்:
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்  
முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் 
ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்
முஹம்மது ஒரு தீவிரவாதியா?
முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் 
முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 1

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய கருத்தரங்கிற்கு அடிப்படையாக கீழ் கண்ட கட்டுரை தரப்படுகிறது. முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் அதிகமாக விவாதிக்கப்படாத நிகழ்வுகள், அனுபவங்கள் மற்றும் அவரது மனப்பான்மைகளை (Attitude) இக்கட்டுரை அலசுகிறது. இந்த கட்டுரையை கருத்தரங்கிற்காக பயன்படுத்தினால், அந்த கருத்தரங்ககை நடத்துபவர், இஸ்லாம் பற்றிய இதர விவரங்களை தெரிந்தவராக இருப்பது நல்லது, இதனால் அவர் அங்காங்கே வரும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆழமாக விவரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த கட்டுரை, இஸ்லாம் பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு "துணையேடாக" இருக்கும், மற்றும் இக்கட்டுரை ஒரு ஆழமான விளக்க புத்தகமல்ல என்பதை அறியவும். இதனால், இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக அறிய விரும்புகிறவர்களுக்காக அனேக விளக்க பின் குறிப்புகளையும், இதர உதவி புத்தகங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை:

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10:4,5 

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையை(முறையாக)க் கடைப்பிடித்து, ஜகாத்தும் செலுத்தும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால், (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மாற்கு 13:21,22

நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம், நாம் சரியான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டாலோ அல்லது தயாராக இல்லாமல் இருந்தாலோ, நாம் தோற்றுவிடுவோம்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படித்து கற்றுக்கொள்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது - ஏன்?

நீங்கள் இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவீர்களானால், உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இஸ்லாம் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நீங்கள் முஹம்மதுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். குர்‍ஆன் பேசுவது அவரைப் பற்றியும் மற்றும் அவரைப் பற்றி மட்டுமே குர்‍ஆன் பேசுகிறது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கைமுறை (Life Style) தான் இஸ்லாமாகும். இவரது வாழ்க்கை முறையை மட்டுமே பிரதிபலிக்கவேண்டும் அல்லது பின் பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். உண்மையான ஹதீதுகளில் 95% சதவிகிதம், முஹம்மது கூறியதாக உள்ள ஹதீதுகளே உள்ளன. இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலாவது முஹம்மதுவை அறிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மது தான் இஸ்லாம் (Muhammad is Islam).

இஸ்லாமிய‌ர்க‌ளின் ம‌த்தியில் ஊழிய‌ம் செய்வ‌தில் அனேக‌ வ‌கைக‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றில் சில ஊழியங்கள் செய்ய இஸ்லாம் பற்றி குறைவாக அறிந்திருந்தாலே போதுமானது. ஆனால், வேறு வகையான ஊழியங்களுக்கு இஸ்லாம் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாம் அனைவரும் ஒரே வகையாக ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைக்கவில்லை. தேவனிடம் ஜெபித்து, அவர் நம்மை எப்படிப்பட்ட ஊழியம் செய்ய அழைத்துள்ளார் என்று, அவரது விருப்பத்தை அறிந்துக்கொள்ளுங்கள். இந்த இக்கட்டுரையை முடித்ததும், நீங்கள் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் மிகவும் ஞானமிக்கவர்களாக பேச தெரிந்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட ஞானம் உங்களுக்குத் தேவையானால், நீங்கள் சுயமாக ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் ஆராய்ந்து படித்துப்பாருங்கள், ஒவ்வொரு தலைப்பாக படித்து ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கருத்தரங்கின் நோக்கங்கள்:

1) முதலாவதாக, நம்முடைய ஆய்விற்காக நாம் இஸ்லாமிய புத்தகங்களை அலசுவோம். நான் சொல்வதில் பெரும்பான்மையான விவரங்களை ஒரு வருடத்தில் நீங்கள் மறந்துவிடுவீர்கள். எனவே, நான் இஸ்லாமிய புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வேனேயாகில் அவைகளை படித்து உங்கள் அறிவை நீங்கள் பெருக்கிக்கொள்ளமுடியும்.

2) முஹம்மதுவின் வாழ்க்கையை சுருக்கமாக‌ தெரிந்துக்கொள்வதுடன், அது எப்படி தற்கால இஸ்லாமோடு தொடர்புக் கொள்கிறது என்பதையும் நாம் காணப்போகிறோம். ஒரு ம‌னித‌னின் 23 ஆண்டுகால‌ வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரமாக சில நாட்க‌ளுக்குள் யாராலும் விவ‌ரிக்க‌ முடியாது என்ப‌தை க‌வ‌னத்தில் கொள்ள‌வும்.

3) நாம் முஹம்மதுவின் செயல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளப்போகிறோம், அவரது செயல்களின் கனிகளை நாம் சுவைக்கப் போகிறோம் மற்றும் முக்கியமாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை படிக்கப்போகிறோம். இந்த பகுதியில் அவரது செயல்களை அலசுவோம், இந்த ஆய்வு அவரது "நடத்தையை" நமக்குக்காட்டும், மற்றும் அதிகமாக விவாதிக்கப்படாத அவரது ஆன்மீக அனுபவங்களைப் பற்றியும் அலசுவோம். 


முஹம்மது பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மதுவை எவ்வளவு அதிகமாக தெரிந்துக் கொள்வீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்வீர்கள். முஹம்மதுவோடு சில மாலைப் பொழுதுகளை செலவிடுங்கள். அவரோடு விருந்தை உண்ணுங்கள். அவரது கண்களோடு சூரிய உதயத்தைக் காணுங்கள், மதிய வேலை வெயிலின் உஷ்ணத்தையும் உணருங்கள். அவர் தன் மக்களுக்காக எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதை மற்ற மக்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இக்கட்டுரை முஹம்மது பற்றிய முக்கியமான விமர்சனத்தை முன்வைக்கிறது. நீங்கள் ஞானமாக இந்த விவரத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால், கிறிஸ்தவர்களே, ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள், பொதுவாக மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் சரி, முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள இருண்ட பக்கத்தைப் பற்றிய அறிவை புகட்டவேண்டியது மிக மிக அவசியம்.

என்னுடைய‌ இந்த‌ க‌ட்டுரையான‌து முழுக்க‌ முழுக்க‌ இஸ்லாமிய‌ ஆதார‌ நூல்க‌ள் மீதே ஆதார‌ப்ப‌ட்டு த‌யாரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அனேக‌ மேற்கோள்க‌ள், குறிப்புக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

என‌வே ப‌டியுங்க‌ள், புரிந்துக்கொள்ளுங்க‌ள் ம‌ற்றும் உங்கள் மனதில் வைத்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் செய்யவேண்டிய "சிந்திக்கும் வேலையை" எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கொடுக்காதீர்கள்.

குறிப்புக்கள்:

1. சுருக்க குறியீடு: "LoM" என்றால் "A. Guillaume" என்பவர் எழுதிய புத்தகமாகிய "Life of Muhammad" என்பதைக் குறிக்கும்.

2. தலைப்புக்கள் என்ற பகுதியில் மேற்கோள்களுக்காக புத்தகங்களின் பகுதிகளை/வசன எண்களை கொடுத்துள்ளேன். ஒரே நிகழ்ச்சி பற்றி அனேக இஸ்லாமிய ஹதீஸ்கள்/விவரங்கள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நான் இப்படிப்பட்ட ஹதீஸ்களை/விவரங்களை தருவேன்.

3. முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள அனேக "இருண்ட அல்லது தீய நடத்தையுள்ள‌" நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட்டுள்ளேன். அதே போல, முஹம்மதுவின் நல்ல செயல்களை மட்டும் சொல்லும் அனேக புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. பொதுவாக மக்களுக்கு அதிகமாக தெரியாமல் இருக்கும் முஹம்மது வாழ்க்கையின் "இருண்ட பாகுதியை" உங்களுக்கு முன்பாக கொண்டு வரலாம் என்று நான் விரும்புகிறேன்.

முஹம்மது பற்றி:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. குர்‍ஆன் 33:21

"நான் அவரைப் பற்றி படித்தேன் - அவ‌ர் அற்புதமான மனிதர் - என்னுடைய கருத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு புறம் அவர் அந்திக்கிறிஸ்துவாக இருந்தாலும், அவர் மனிதவர்க்கத்தின் இரட்சகர் என்றுச் சொல்லலாம்" - ஜியார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய "The Genuine Islam"என்ற புத்தகத்திலிருந்து.

"I have studied him - the wonderful man - and in my opinion far from being an anti-Christ he must be called the saviour of humanity." George Bernard Shaw in The Genuine Islam)

• முஹம்மது தான் இஸ்லாம்

• சரித்திரத்தில் மிகவும் முக்கியமான ம‌னித‌ர்

• இன்றுள்ள‌ இர‌ண்டாம் மிக‌ப்பெரிய‌ ம‌த‌த்தை தோற்றுவித்த‌வ‌ர்

• முஹ‌ம்ம‌துவின் ம‌ர‌ண‌த்திற்கு பின்பு 100 ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய‌ இராணுவ‌ம் மிக‌ப்பெரிய‌ இராஜ்ஜிய‌ங்க‌ளை ஜெயித்த‌து. இஸ்லாமிய‌ ஆக்கிர‌மிப்பு ஸ்பெயின் தொட‌ங்கி தென் கிழ‌க்கு ஐரோப்பா, இந்தியா, சைனா மற்றும் மத்திய ஆப்ரிக்கா வரை பரவியது.

நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்பும் முக்கியமான விஷயம்:

சூழ்நிலைகள் மாறும் போது முஹம்மது மாறினார், இதை தத்துவரீதியாக சொல்ல வேண்டுமென்றால், "இஸ்லாம் மாறியது" என்றுச் சொல்ல வேண்டும். மக்காவின் முஹம்மது மதினாவின் முஹம்மது அல்ல. மக்காவின் இஸ்லாம் மதினாவின் இஸ்லாம் அல்ல, அதாவது மக்காவின் இஸ்லாம் வேறு மதினாவின் இஸ்லாம் வேறு.

இதனால் தான் இன்று இஸ்லாம் மக்களின் கேலிக்கும் வேடிக்கைக்கும் பாத்திரமாக உள்ளது. சில இஸ்லாமியர்கள் மக்காவின் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள், வேறு சிலர் மதினாவின் இஸ்லாமை பின் பற்றுகின்றனர். இன்னும் சிலரோ, சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல், இவ்விரண்டிற்கும் இடையே அடிக்கடி தாவிக்கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மூல ஆதார நூல்கள் - ISLAMIC SOURCE MATERIAL

"அறிவே ஆற்றல் - Knowledge is power." Francis Bacon

பின்குறிப்பு ஆதாரங்கள்: இவைகள் தான் இந்த கருத்தரங்கின் முக்கிய பகுதியாகும். ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு எதுவென்றால், அவர் கொடுத்த விவரங்கள் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்கு எவைகளை படிக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்வது தான்.

ஆரம்பகால இஸ்லாமிய ஆதார நூல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைபடுத்தினால், நமக்கு கிடைப்பவைகள்: குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) ஆகும்.

குர்‍ஆன் ‍ - இது தான் இஸ்லாமிய நூல்களில் பிரதானமானது, ஆனால், நடைமுறையில் கவனித்தால், முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய விவரங்களுக்கு இது பிரயோஜனமற்றது. 

ஹதீஸ்கள் (பாரம்பரியங்கள்) ‍ - முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி, அவரது கட்டளைகள் பற்றிய குறிப்புகளையும் நிகழ்ச்சிகளையும் சொல்வது தான் ஹதீஸ்களாகும். ஹ‌தீஸ்க‌ளின் தொகுப்புக்கள், கால‌ வ‌ரிசைப் பிர‌கார‌மாக‌வோ அல்ல‌து ஒரு வ‌ரிசைக் கிர‌ம‌மாக‌வோ த‌ர‌ப்ப‌ட‌வில்லை, அத‌ற்கு ப‌திலாக‌ அவைக‌ள் த‌லைப்பு வாரியாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த ஹதீஸ் கதைகள் அனைத்தும், முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை தொகுக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள‌ அர்பணமுள்ள இஸ்லாமியர்களால் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டது. சுன்னி இஸ்லாமில் ஆறு பெரிய ஹதீஸ் தொகுப்புக்களும், சில சிறிய தொகுப்புக்களும் உள்ளன. இந்த ஆறு பெரிய பாரம்பரிய தொகுப்புக்களை "உண்மையான - சஹீஹ்" அதாவது ஆதிகாரபூர்வமானது என்றுக் கூறுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், இந்த தொகுப்புக்கள் உண்மையானது, நம்பகத்தன்மையுடையது மற்றும் பிழையில்லாதது என்று பொருளாகும். இந்த ஆறு ஹதீஸ்களில் இரண்டு தொகுப்புக்களை "உண்மையானவைகளில் எல்லாம் உண்மையானது" அல்லது சிறப்பானது என்றுக் கூறுவார்கள். இந்த இரண்டு சிறப்பான ஹதீஸ்கள், புகாரி மற்றும் முஸ்லீம் என்ற ஹதீஸ் தொகுப்புக்களாகும்.

• பெரிய தொகுப்புக்களாகிய ஹதீஸ்களை, பல இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் காலத்திற்கு பிறகு 200 - 300 ஆண்டுகளில் தொகுத்தார்கள்.

• ஒரு சில ஹதீஸ் தொகுப்புக்கள் மற்ற தொகுப்புக்களை விட நம்பகத்தன்மை அதிகமுள்ளது என்று கருதப்படுகிறது. சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய பிரிவுகள் தனித்தனி ஹதீஸ் தொகுப்புக்களை கொண்டுள்ளார்கள்.

• புகாரி: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் புகாரி" என்பார்கள், அதாவது இது தான் சுன்னி இஸ்லாமிய பிரிவில் முதன்மையான மற்றும் அதிக நம்பகமான ஹதீஸ் தொகுப்பாகும்.

• முஸ்லீம்: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் முஸ்லீம்" என்பார்கள், இது புகாரிக்கு அடுத்ததாக நம்பகத்தன்மையுள்ள இரண்டாவது அதிகாரபூர்வமாக தொகுப்பாகும்.

அபூ தாவுத், திர்மிதி, இபின் மஜா மற்றும் அன் நிசா போன்ற இந்த நான்கு ஹதீஸ் தொகுப்புக்கள் மேலே கண்ட தொகுப்புக்களுக்கு (புகாரி, முஸ்லீம்) அடுத்த நம்பகத்தன்மையான ஹதீஸ்களாக கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, அன் நிசா தவிர்த்து மற்ற அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. இணையத்தில் கீழ் கண்ட தொடுப்புக்களில் நீங்கள் சில தொகுப்புக்களை காணலாம்.

English:

Sahih Al-Bukhari

Sahih Muslim

Sunan Abu Dawud

Tamil:

சஹீஹ் அல் புகாரி

சஹீஹ் அல் முஸ்லீம்

சீரா (SIRA) - ‍ சீரா என்பது வாழ்க்கை வரலாறு கூறும் நூல் ஆகும். இதில் முஹம்மதுவின் வாழ்க்கையை காலவரிசையாக விவரிக்கிறது. அதிகாரபூர்வமான மற்றும் இன்று நம்மிடம் உள்ள சீரா இபின் இஷாக்கின் "சீரத் ரசூலல்லாஹ் - Sirat Rasulalla" ஆகும். இந்த வாழ்க்கை வரலாறு இப்போது "A. Guillaume" அவர்களின் புத்தகமாக "The Life of Muhammad" என்ற பெயரில் உள்ளது.

இதில் அனேக இஸ்லாமிய அறிஞர்கள் சந்தேகிக்கும் சில விவரங்களும் உள்ளன. ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் பல காரணங்களுக்காக விவரங்களுக்கு மெருகூட்டி எழுதியுள்ளனர்.

இபின் சாத்தின் "கிதாப் அல் தபாகத் அல் கபிர் (The Book of the Major Classes)" என்ற புத்தகத்தின் முதல் நாங்கு தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மூர் அவர்களின் "The Life of Muhammad" என்ற புத்தகம் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது:www.answering-islam.org/Books/Muir/Life1/section5.htm

நம்மிடம் தபரியின் சரித்திரம் (Tabari's History) 39 தொகுப்புக்களாக உள்ளது. இது ஒரு வாழ்க்கை வரலாறாக தொகுக்கப்படவில்லை, ஆனால், முஹம்மது பற்றிய அனேக வாழ்க்கை நிகழ்ச்சிகள் அதில் சொல்லப்பட்டுள்ளது (தொகுப்புக்கள் 6 லிருந்து 9 வரை முஹம்மது பற்றிச் சொல்கிறது)

இஸ்லாமிய வட்டாரங்களில் சீராவின் நம்பகத்தன்மைப் பற்றி தீவிரமாக விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வாழும் அனேக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த சீரா பற்றி மிகவும் வெட்கமடைகிறார்கள். ஏனென்றால், இந்நிகழ்ச்சிகள் மேற்கத்திய மக்களின் கண்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் வெட்கப்படக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதினால் தான்.

ஆரம்பகால வாழ்க்கை வரலாறாக‌ (Sira) கீழ்கண்ட புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

1) Ibn Ishaq, "Sirat Rasulallah" The most authentic biography of Muhammad extant today. Translated as, "The Life of Muhammad" by A. Guillaume.

2) Ibn Sa'd, "Kitab al-Tabaqat al-Kabir", "Book of the Major Classes". Another lesser-esteemed source of biographical material.

3) Wakidi - book on Muhammad's military campaigns, found in Muir's work, "The Life of Muhammad."

4) Tabari's History, 39 volumes. Tabari used information from many early Islamic writings to compile his history.

மேற்படி ஆய்விற்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்:

பிறகால அறிஞர்களால் முஹம்மது பற்றி அனேக சிறந்த புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது.

1. ஜான் கில்கிறைஸ்ட் அவர்கள் "Muhammad and the Religion of Islam" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். என் கருத்தைச் சொல்லவேண்டுமானால், எல்லா கிறிஸ்தவ ஊழியர்களும் இப்புத்தகத்தின் முதல் 3/4 பாகத்தை கட்டாயமாக படிக்கவேண்டும் என்றுச் சொல்வேன். "அறியாமை அல்லது எனக்கு தெரியாது என்றுச் சொல்வது எப்பொதும் மதிக்கப்படுவதில்லை மற்றும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. சுவிசேஷ ஊழியம் செய்யும் கிறிஸ்தவருக்கு இந்த புத்தகம் அடிப்படை என்றுச் சொல்வேன். இந்த புத்தகம் இப்போது காகிதப்பதிப்பாக வருவதில்லை, ஆனால், இணையத்தில் இதனை இலவசமாக நீங்கள் படிக்கலாம்: Muhammad and the Religion of Islam

நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலைப்புக்கள் பற்றி உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்களை பரிந்துரைக்கின்றேன்.

2. "The Quran and the Bible in the Light of Science and History" by Dr. William Campbell.

3. "Answering Islam" by Norman Geisler and Abdul Saleeb.

4. "23 Years: A Study of the Prophetic Career of Mohammad", by Ali Dashti

5. "The Christian Witness to the Muslim", John Gilchrist

நான் மேலே குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும் நம் காலத்தில் வாழ்ந்துக்கொண்டு/வாழ்ந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களால் எழுதப்பட்டவைகளாகும். இப்புத்தகங்களில் உள்ள விவரங்கள் கோர்வையாக, சுலபமாக புரியும் வகையில் உள்ளது, ஒரே விஷயத்தை பல முறை சொல்லாமல் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி சிறந்த அனேக புத்தகங்களை பல சிறந்த அறிஞர்கள் எழுதியுள்ளார்கள், இவர்களில் வாட், கிப்ஸ் மற்றும் லூயிஸ் (Watt, Gibb, and Lewis) போன்றவர்கள் அடங்குவர்.

இஸ்லாமை அறிய இணைய உதவிகள்:

1. AnsweringIslam.info - great site on Islamic topics
2. AnsweringIslam.info/L_c-on-i.html - Links to various Christian sites on Islam
3. www.muhammadanism.com/
4. http://www.light-of-life.com/ - great site on Islamic topics
5. christian-thinktank.com - great apologetic site; see http://www.christian-thinktank.com/qamorite.html
6. danielpipes.org - good info on Mideast issues (not Christian)
7. http://www.godandscience.org/ - apologetics on science
8. http://www.tektonics.org/ - another apologetic site

இஸ்லாமிய மூல நூல்கள் பற்றி ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

பாகம் 1 முற்றிற்று.

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 2

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும். 

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை காண்போம்.

முஹம்மதுவின் வாழ்க்கை - THE LIFE OF MUHAMMAD

"Power tends to corrupt, and absolute power corrupts absolutely." Lord Acton

"சக்தி கெடுக்கும், அதிக சக்தி முழுவதுமாக கெடுக்கும்"

"The measure of a man is what he does with power." Pittacus

"ஒரு மனிதனின் உண்மை முகம், ஆற்றல் அதிகாரம் அவன் கையில் கிடைக்கும் போது எதை செய்தான் என்பதைக் கண்டு தெரிந்துக் கொள்ளலாம்"

கட்டுரையின் பொருளடக்கம் (OVERVIEW):

1. முஹம்மதுவின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கை

2. மக்காவில் ஒரு அஹிம்சாவாதியாக மற்றும் "எச்சரிக்கை" செய்பவராக 13 ஆண்டுகள் (Warner) 

3. மதினாவில் ஒரு போர் செய்கின்றவராக 10 ஆண்டுகள் (Warrior)

4. கி.பி. 622/623ம் ஆண்டில் நடைப்பெற்ற "ஹிஜ்ரா" மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்தல். இஸ்லாமிய நாட்காட்டி இந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது.

மக்கா vs மதினா காலக்கட்டம் = எச்சரிப்பவர் vs சண்டையிடுபவர்

MECCAN VS MEDINAN PERIODS = WARNER VS WARRIOR
 


முஹம்மது பற்றி நீங்கள் அறியவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், அவர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றவுடன் அவரது "கொள்கைகள்" மாறிவிட்டன. மக்காவில் அவர் அமைதியாக எச்சரிப்பவராக இருந்தார். மதினாவில் அவர் கொடுமையாக சண்டையிடும் போர்வீரராக மாறிவிட்டார். 

முஹம்மதுவின் சூழ்நிலைகள் மாறும் போது, அவரின் வாழ்க்கை மாறியது, அவரது கொள்கைகள் மாறியது, அவரது இஸ்லாம் மாறியது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதுவரை அனுமதிக்கப்படாதது, இனி அனுமதிக்கப்பட்டது உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு முஹம்மதுவின் கட்டளைகள் கீழ்கண்ட விதமாக மாறின.

"இறைத்தூதர் இரண்டாம் அகபாவிற்கு முன்பாக சண்டையிட அல்லது இரத்தம் சிந்த அனுமதிக்கவில்லை. அவர் மனிதர்களை இறைவனிடம் வாருங்கள் என்றும், அவமானங்களை சகித்துக் கொள்ளுங்கள், மற்றவர்களின் அறியாமையை மன்னியுங்கள் என்றும் கட்டளையிட்டார்." Life of Muhammad (LoM), by A. Guillaume, p212

முஹம்மது எச்சரிக்கை செய்பவராக சொன்ன வசனம்:

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

முஹம்மது போரிடுபவராக சொன்ன வசனம்:

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 9:5)

நபித்துவத்திற்கு முன்பு வரை இருந்த‌ முஹம்மதுவின் வாழ்க்கைப் பின்னணி: 

[நபியாக அழைப்பு பெறுவதற்கு முன்பாக முஹம்மது: Tabari vol 6 p44 - 56, LoM p69 - 87] 

• முஹம்மது வாழ்ந்த காலம் கி.பி. 570 லிருந்து 633 வரை. அரேபிய தீபகற்ப நிலப்பரப்பில் (ஹிஜஜ் - Hijaz) அவர் வாழ்ந்தார். ஹிஜஜ் இடத்தில் வாழ்ந்த மக்கள் பேகன் என்றுச் சொல்லும் பல தெய்வங்களை வணங்குபவர்களாகவும், சிலர் யூதர்களாகவும் மற்றும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தாளர்களில் சிலர் அரேபிய தீபகற்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பல தெய்வங்களை வணங்குபவர்களாக மட்டுமே இருந்தனர் என்று தவறுதலாக சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் அங்கு யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர். 

• அவரது தந்தை அவர் பிறப்பதற்கு முன்பாக மரித்துவிட்டார், அவரது தாயார் 6 ஆண்டுகளுக்கு பின்பு மரித்தார்கள். அவரது சித்தப்பா அபூ தலிப் அவரை வளர்த்தார். 

• அவர் இப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கும் போது, சிரியாவிற்கு வியாபாரத்திற்காக சென்றார், அங்கு கிறிஸ்தவ சந்நியாசிகளை சந்தித்து, மதம் சம்மந்தப்பட்ட அனேக விஷயங்களை அவர்களுடன் விவாதித்தார். 

• அவர் ஒரு சிறந்த வியாபாரியாக இருந்தார். வியாபாரம் செய்து நல்ல செல்வ செழிப்புடன் இருந்த கதீஜாவை திருமணம் செய்துக்கொண்டார். அவரது வாழ்க்கை அமைதியாக நன்றாக சென்றுக்கொண்டு இருந்தது, மற்றும் அவர் ஒரு நாகரீகமுள்ள மனிதனாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மகள்களும் மகன்களும் இருந்தார்கள், ஆனால் அவரது எல்லா ஆண் பிள்ளைகளும் குழந்தை பருவத்திலேயே மரித்துவிட்டனர்.

முக்கிய அம்சம்: முஹம்மதுவின் பண்புகள் (VISTA: MUHAMMAD'S QUALITIES)

"There are depths in man that go to the lowest hell, and heights that reach the highest heaven ..." Carlyle. 

"மனிதனில் உள்ள குணங்கள், சில நேரங்களில் நரகத்தைப் போன்ற ஆழத்திற்கும் செல்லும் சில நேரங்களில் வானத்தைப் போன்ற அதிக உயரத்திற்கும் செல்லும்" 

"The test of every religious, political, or educational system is the man which it forms." Amiel. 

"மதம், அரசியல் மற்றும் கல்வி அமைப்புக்களின் தரத்தை பரிசோதிக்கவேண்டுமானால், அதை உருவாக்கியவர்களின் குணத்தை பரிசோதித்துப் பாருங்கள், தெரிந்துக் கொள்வீர்கள்."

ஒரு மனிதனில் எந்த பண்புகளை நீங்கள் பாராட்ட விரும்புவீர்கள்?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

முஹம்மது நல்ல மற்றும் தீய பண்புகள் கொண்ட மனிதராக இருந்தார். அவர் முழுவதுமாக தீயவராக இல்லை அதே போல அவர் முழுவதும் நல்ல மனிதராக இல்லை. அவர் ஒரு சராசரி மனிதர் மற்றும் மனிதர்கள் செய்யும் தவறுகளை தானும் செய்பவர். அவரை பிசாசு என்று தீர்த்துவிடாதீர்கள். அவர் எப்போதும் தீயவராகவே வாழ்ந்தார் என்றுச் சொல்லாதீர்கள். அவரைப் பற்றிய நம்முடைய மதீப்பீடுகளில் நாம் நேர்மையானவர்களாக இருப்போம். 

முஹம்மதுவின் நற்பண்புகள்:

• அவர் வலிமை மிக்கவராகவும், உறுதிகொண்டவராகவும் இருந்தார்.

• அவர் தன் செய்தியை பொறுமையோடும், தொடர்ச்சியாகவும் அறிவித்தார்.

• த‌ன‌னை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் சுக‌ துக்க‌ங்க‌ளில், ப‌சியில் ப‌ங்கு கொண்டார்.

• அவ‌ர் கொடுமையான‌ துன்புறுத்த‌ல்க‌ளை ச‌கித்தார்.

• சிறிய‌ வெற்றி கிடைத்தாலும் அத‌ற்காக‌ அதிக‌மாக‌ உழைத்தார்.

• ம‌ர‌ண‌ம் வ‌ரும் நேர‌த்திலும் பின் வாங்காம‌ல் போராடினார்.

• த‌ன்னை பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் ம‌த்தியில் தாழ்மையான‌வ‌ராக‌வும், நீதியுள்ள‌வ‌ராக‌வும் ந‌ட‌ந்துக்கொண்டார்.

• அவ‌ர‌து ச‌காக்க‌ள் அவ‌ர் மீது அதிக‌ அன்பு கொண்டு, அவ‌ருக்கு அதிகமாக கீழ்ப‌டிந்தார்க‌ள். • அவரது சில சகாக்கள் கொடுமைபடுத்தப்பட்டார்கள், சிலர் மரித்தும் போனார்கள்.

• அவரது சகாக்கள் அவருக்காக உயிரையும் கொடுத்தார்கள்.

இந்த பண்புகள் ஒரு பலவீனமாக மனிதனின் பண்புகள் அல்லவே!

குர்‍ஆனின் அழகான வசனங்கள்: 

குர்‍ஆனில் அனேக நல்ல கட்டளைகள் உள்ளன, அதாவது பசியுள்ளவர்களுக்கு உணவளியுங்கள், உன் சக முஸ்லீமுக்கு உதவி செய்யுங்கள் மற்றும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் போன்றவைகளாகும்.

குர்‍ஆன் 2:177

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்) 

குர்‍ஆன் 91:1-10

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக 
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக- 
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக- 
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக- 
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக- 
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக- 
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- 
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். 
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். 
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

முடிவுரை: முஹம்மது பற்றி நீங்கள் மதிப்பீடு செய்யும் போது, அவரில் நல்ல மற்றும் தீய குணங்கள் இரண்டும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நபித்துவ அழைப்பு "முஹம்மதுவின் குகை அனுபவம்" கி.பி. 610

[முஹம்மதுவிற்கு அழைப்பு: Tabari vol6 p60 - 80, various Hadith, LoM p109 - 114]

In morals, what begins in fear usually ends in wickedness; in religion, what begins in fear usually ends in fanaticism. Fear, either as a principle or a motive is the beginning of all evil. Mrs. Jameson. 

நற்பண்புகள் பயத்தோடு ஆரம்பிக்கப்பட்டால் அது முடிவில் தீய பண்பாக மாறிவிடும். ஒரு மதம் பயத்தோடு ஆரம்பித்தால், அது வன்முறையிலும் வெறுப்பிலும் முடிவடையும். "பயம்" என்பது ஒரு கோட்பாடாக இருந்தாலும் சரி, அல்லது நோக்கமாக இருந்தாலும் சரி, அது தான் எல்லா தீமைக்கும் ஆரம்பமாக இருக்கின்றது.

முஹம்மது அருகாமையில் இருந்த மலை குகையில் அடிக்கடி சென்று தியானம் செய்தார். ஒரு "ஆவி" அவருக்கு முன் தோன்றியது, அது அவரை அலைகழித்து பிழிந்துவிட்டது, மற்றும் "வாசிக்கும் படி" அவருக்கு கட்டளையிட்டது! இது அவரை பயத்திற்குள்ளாக்கியது. பின்பு இதே ஆவி அவரிடம் "தான் காபிரியேல் தூதன்" என்றுச் சொன்னது.

அவர் கூறினார் "படி!", நான் கூறினேன் "நான் படிக்கமுடியாது." அவர் என்னை வலுவாக பிடித்து அழுத்தினார், நான் மரித்துவிடுவேன் என்று எனக்கு தோன்றியது. பிறகு என்னை விட்டுவிட்டார், மறுபடியும் என்னை நோக்கி "படி!" என்றார். நான் "எதை படிக்கவேண்டும்?" என்று நான் கூறினேன். இப்படி சொல்லி, நான் அவரிடமிருந்து மீண்டேன், மறுபடியும் அவர் என்னை அப்படியே அழுத்துவாரோ என்று பயந்தேன்.

குர்‍ஆன் சூரா 96:1 லிருந்து 5 வரையுள்ள வசனங்கள் தான் குர்‍ஆனில் முதலாவது சொல்லப்பட்ட வசனங்களாகும்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (குர்‍ஆன் 96:5)

முஹம்மது பயத்துடன் அவ்விடத்தை விட்டு ஓடினார். வீட்டிற்கு விரைவாகச் சென்று தனனை மறைத்துக்கொண்டார், தனக்கு பேய் பிடித்துவிட்டதென்றும் அல்லது தான் பையித்தியமாக மாறிவிடுவார் என்றும் நினைத்து பயந்துவிட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனேக முறை தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி எடுத்தார்.

"எனக்கு வேதனையாக இருந்தது, எனக்கு பிசாசு பிடித்துவிட்டது என்று குவாரிஷ்கள் [மக்கா மக்கள்] ஒரு போதும் எனக்கு இப்படி சொல்லக்கூடாது, ஆகையால், நான் ஒரு உயர்ந்த மலையில் ஏறி அங்கிருந்து குதித்து மரித்துவிடுகிறேன் அப்போது தான் எனக்கு நிம்மதி என்று நான் நினைத்தேன்". Muhammad, LoM p106. 

இறைத்தூதருக்கு சில காலம் வெளிப்பாடு வருவது நின்று போனது, அவர் மிகவும் வேதனையுற்றார். அவர் மலைகளின் உச்சிக்கு செல்ல ஆரம்பித்தார், அங்கிருந்து விழுந்து மரித்துவிட முடிவு செய்தார்; ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் அப்படி மலையின் உச்சிக்கு செல்லும் போதெல்லாம், காபிரியேல் தூதன் அவருக்கு காணப்பட்டு, அவரிடம் "நீ இறைவனின் நபியாக இருக்கிறாய்" என்றுச் சொல்வார். அதன் பிறகு இறைத்தூதர் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு சாந்தமடைந்து திரும்பி வந்துவிடுவார். Tabari's History, Vol 6, p76

அனேக மக்கள் முஹம்மதுவிற்கு பிசாசு பிடித்துவிட்டது அல்லது பைத்தியம் பிடித்துவிட்டது என்று எண்ணினார்கள் (LoM, p121, 130). முஹம்மதுவிற்கு இப்படி பிசாசு பிடித்துவிட்டது அல்லது அவர் பைத்தியமாகி விட்டார் என்று மக்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது.

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. (குர்‍ஆன் 81:22-25)

இஸ்லாமை தோற்றுவித்தவரைப் பற்றி அறிந்துக்கொள்ள இது தான் முதலாவது துப்பு ஆகும். அது முஹம்மதுவின் மனச்சொற்விற்கும் தற்கொலை மனப்பான்மைக்கும் காரணமாக இருந்தது. இந்த மனச்சொற்வு அவருக்கு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் "மன நோய்" என்றுச் சொல்வார்கள். 

உண்மையான தேவன் தன் மக்களை சந்திக்கும் போது, இப்படி தற்கொலை மனப்பான்மை இருக்காது, அதற்கு எதிரான நிலையை உண்டாக்கும். ஆனால், சாத்தான்/பிசாசு ஒருவரை சந்திக்கும் போது முஹம்மது சந்தித்த அனுபவத்தை தரும். உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை கவனிக்கவும்: 

1) பன்றிக் கூட்டம் மலை மிது எறி, அங்கிருந்து குதித்து மாண்டது. 

2) பிசாசு பிடித்திருந்த ஒரு வாலிபன் வெருப்பில் தன்னை தள்ளி தற்கொலை செய்துக்கொள்ள‌ முயற்சி எடுத்தான்.
 

இவைகளை குறித்து அறிய படிக்கவும்: மத்தேயு 8:30-33, 17:14-18 

மேலும் நாம் முஹம்மதுவின் இஸ்லாமிய அனுபத்திற்கு முன்பு அவருக்கு இருந்த மத நம்பிக்கையைப் பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். அவருக்கு இறைவன் யார் என்றுத் தெரியாது. அவருக்கு இருந்த இறை நம்பிக்கை மிகவும் பலவீனமாக இருந்தது. உண்மையான இறைவனோடு ஒரு நல்ல உறவுமுறை அவருக்கு இருந்ததா? அல்லது ஒரு உண்மையான இறைவனை அவர் நம்பினாரா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனிடம் உதவிக்காக வேண்டியிருப்பார். ஆனால், அதற்கு பதிலாக முஹம்மது தற்கொலை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வேதனையடைந்தார். 

முஹம்மதுவின் இந்த ஆரம்பகால அனுபவம் இவ்வளவு தான் என்று நினைத்துவிடாதீர்கள், அவரை அலைகழித்த அந்த சக்தி அவருக்கு துன்பத்தை வருவித்து, அவருக்கு அதிக வலியை உண்டாக்கியது.

சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)

1) பைபிள் சொல்லப்பட்ட எந்த நபராவது, அதாவது தேவனை சந்தித்த எந்த நபராவது, இப்படி மன உலைச்சலுக்கு ஆலாகி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுத்துள்ளாரா? 

2) ஒரு நபரை பிசாசு பிடித்து இருந்தால், அந்த நபர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத‌ பட்சத்தில், அந்த நபர் எப்படி நடந்துக்கொள்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? 

3) தொட‌ர்ச்சியான‌ ம‌ன‌ உலைச்ச‌லுக்கும், த‌ற்கொலை முய‌ற்சிக்கும் உண்மையான‌ இறைவ‌ன் கார‌ணமாக‌ இருக்க‌முடியுமா? 

4) இயேசு பிசாசினால் சோதிக்க‌ப்ப‌ட்டார் ம‌ற்றும் அவ‌னை வென்றார். பிசாசை சந்தித்த‌ ம‌னித‌ன் எப்ப‌டி ந‌ட‌ந்துக்கொள்வான்?

பாகம் 2 முற்றிற்று 

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 3

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும். 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும். 

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை காண்போம்.

எச்சரிப்பவராக முஹம்மது: "பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்"

[பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்: LoM p117-218, Tabari vol 6 p88-145, various Hadith] 

முஹம்மது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு, இஸ்லாமைப் பற்றி வெளிப்படையாக மக்காவின் மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அவர்கள் "ஓர் இறைவனை" வணங்கும் படி, தன்னை ஒரு உண்மையான அல்லாஹ்வின் நபி என்று நம்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களின் இதர தெய்வ நம்பிக்கையைப் பற்றி கடுமையாய் விமர்சித்தார். 

இந்த காலக்கட்டத்தில் முஹம்மது "எச்சரிக்கை" செய்பவராக மட்டுமே இருந்தார். மக்கள் தன் கொள்கை மீது நம்பிக்கை கொள்ளும் படிச் செய்ய, அவர்களை கட்டாயப்படுத்த‌ அவருக்கு ஆற்றல் இல்லாமல் இருந்தது.

"வரவிருக்கும் பயங்கரமான அழிவைப் பற்றி எச்சரிக்கை செய்ய‌ நான் வந்திருக்கிறேன்". "நான் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, இறைவனின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கை செய்கிறேன்". Tabari vol 6, page 89, 92. 

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? குர்‍ஆன் 10:99

மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்து இருந்தது. 

முஹம்மது தன் செய்தியை உறுதியுடன் போதித்தார். அவர் நிந்தனைகளையும், அவமானங்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தார் மற்றும் சகித்தார். முஹம்மது மக்கா மக்களின் நம்பிக்கையை பரிகாசம் செய்தார் அதனால், மக்கா மக்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், "தங்கள் நம்பிக்கையைப் பற்றி பரிகசித்து பேசுவதை நிறுத்திவிட்டால், உம்மை விட்டுவிடுகிறோம்" என்று அம்மக்கள் சொன்னார்கள், ஆனால், முஹம்மது மறுத்துவிட்டார். 

முஹம்மது மக்கா மக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தியதாலும், வேறு ஒரு நம்பிக்கையை தங்களுக்கு போதித்ததாலும், அவர்கள் அவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தார்கள். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிப் அவருக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டு வந்தார். இதன் காரணமாக, மக்கா மக்கள் உடனே அவரை கொல்லமுடியவில்லை.

"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும்,அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.

தன்னை பின்பற்றும் சிலரை முஹம்மது சம்பாதித்தார். மக்கா மக்கள் அவரை பின்பற்றுகிறவர்களை அடிக்கடி தாக்கி பேசினார்கள்.

"இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஹம்மதுவின் சகாக்களாக இருந்தவர்களுக்கு எதிராக குரைஷி மக்கள் விரோதத்தை வளர்த்துக்கொண்டார்கள், அவர்களுக்கு எதிராக கலகஞ்செய்தார்கள்." Tabari vol 6, page 97. 

தன்னை எதிர்த்த சிலரை முஹம்மது வெறுத்தார், "கேளுங்கள் குரைஷி மக்களே, முஹம்மதுவின் உயிர் தங்கியிருக்கும் இறைவனின் பெயரில் சொல்கிறேன், உங்களுக்கு நான் மரணத்தை தருவேன்" என்று முஹம்மது கூறினார். Tabari vol 6 page 102.

இஸ்லாமியர்களுக்கு ஒடுக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தது, அதனால் முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை பாதுகாப்புக்காக அபிசீனியாவிற்கு அனுப்பிவிட்டார். முஸ்லீம்களுக்கு எதிராகவும் அவர்களின் இனத்திற்கு எதிராகவும் மக்கா மக்கள் மிகப்பெரிய புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். முஹம்மது தன் மார்க்கத்தை விட்டுவிட, மக்கா மக்கள் அவருக்கு இலஞ்சம் கொடுக்கவும் முயற்சித்தார்கள். 

இறைத்தூதருக்கு குரைஷி மக்கள் அதிகமதிகமான சொத்துக்களை கொடுப்பதாகவும், அதனால், மக்காவில் முஹம்மது மட்டுமே மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்றும் வாக்களித்தனர். அவருக்கு எத்தனை மனைவிகள் விருப்பமோ அத்தனை மனைவிகளை கொடுப்பதாகும், மற்றும் அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து இருப்பதாகும் வாக்களித்தனர்.

குரைஷி மக்கள் முஹம்மதுவிடம் இவ்விதமாக கூறினார்கள், "முஹம்மதுவே நீர் எங்கள் தெய்வங்கள் பற்றி ஏளனமாக பேசாமல் இருந்தால், குற்றப்படுத்தாமல் இருந்தால், இவைகளை நாங்கள் உங்களுக்குத் தருவோம். இப்படி நீர் செய்யவில்லையானால், இன்னொரு விஷயத்தையும் நாங்கள் சொல்கிறோம், இதனால் நீரும் நாங்களும் நன்மையடைவோம்". அது என்ன என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் "நீர் எங்கள் தெய்வங்களான அல் லத் மற்றும் அல் உஜ்ஜாவை ஒரு ஆண்டுகாலம் வணங்கவேண்டும், அதே போல நாங்கள் உங்கள் இறைவனை ஒரு ஆண்டுகாலம் வணங்குவோம்" என்றனர். Tabari, vol 6, pages 106, 107.

இதற்கு முஹம்மது ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன் நிலையைவிட்டுவிடவோ, தன் நம்பிக்கையை விட்டுவிடவோ விரும்பவில்லை (பார்க்கவும் குர்‍ஆன் சூரா 109:1 லிருந்து 6 வரை). முஸ்லீம்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உச்சியை எட்டியது, அவர்களுக்கு வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது. 

ஏதாவது கேள்விகள் உண்டா?

முக்கிய அம்சம்: சாத்தானின் வசனங்கள் (THE SATANIC VERSES)

[சாத்தானின் வசனங்கள்: "Tabari's History", vol 6 p 107-113, "Kitab al-Tabaqat al-Kabir", pages 236-239, LoM p165-167, "The Life of Mahomet", Volume 2, pages 150-152, by W. Muir, quoting "Kitab al-Wakidi"]

அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் - இயேசு, மத்தேயு 24:11

"And many false prophets will appear and deceive many people." Jesus, Matthew 24:11

அனேக‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நிக‌ழ்ச்சி (சாத்தானின் வசனங்கள்) ந‌டைபெற‌வில்லை என்றுச் சொல்கிறார்க‌ள். ஆனால், உண்மையில் "சாத்தானின் வ‌சன‌ங்க‌ள்" நிகழ்ச்சி ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ஆர‌ம்ப‌கால‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஹ‌தீஸ்க‌ள் ம‌ற்றும் குர்‍ஆனில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ளோடு ஒத்துப்போகிற‌து. 

முஹ‌ம்ம‌து த‌ன்னை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு ஒரு முடிவு க‌ட்ட‌வேண்டும் என்று விரும்பினார். அதே நேர‌த்தில் த‌ன் ஊர் ம‌க்க‌ளாகிய‌ ம‌க்காவின‌ரோடு ச‌மாதான‌மாக‌ இருக்க‌ விரும்பினார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை அனுப்புவார் என்று முஹ‌ம்ம‌து ந‌ம்பினார்.

"இறைத்தூதர் தன் மக்களின் நலனில் அதிக அக்கரையுள்ளவராக இருந்தார் மற்றும் மக்காவினரோடு ஒற்றுமையடைந்து சமாதானமாக இருக்க விரும்பினார்..." Tabari vol 6, page 107, 108.

இந்த சந்தர்ப்பத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டு முஹம்மதுவின் வாயில் தன் வசனங்களை போட்டுவிட்டான். முஹம்மது சாத்தானின் வார்த்தைகளை அப்படியே அல்லாஹ்வின் வார்த்தையாக வெளிப்படுத்திவிட்டார் மற்றும் மக்காவினரின் தெய்வங்களுக்கு மரியாதையும் செய்ய அனுமதித்து விட்டார்.

குர்‍ஆன் சூரா 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்.

முஹம்மதுவின் வார்த்தைகளை மக்கா மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஏனென்றால், இவர் அவர்களின் தெய்வங்களை அங்கீகரித்தார்.

"குரைஷிகள் இதை கேட்டதும், மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர், மற்றும் அவர் தங்கள் தெய்வங்கள் பற்றி சொன்ன விதம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது..." Tabari vol 6, page 108.

காபிரியேல் தூதன் முஹம்மதுவை கடிந்துக்கொண்டு அவரின் தவறை திருத்தினார். இதனால், முஹம்மது குர்‍ஆனில் இருந்த அந்த சாத்தானின் வசன பகுதிக்கு பதிலாக வேறு வசனத்தைச் சொன்னார், மறுபடியும் இது மக்காவினரின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. முஹமம்து தன் பாவத்திற்காக அதிகமாக வேதனையடைந்தார், ஆகையால், காபிரியேல் முஹம்மதுவிடம் "அல்லாஹ் உன் தவறை லேசாக எடுத்துக்கொண்டார்" என்றுச் சொன்னார், அதாவது சாத்தானின் பொய்யான வசனத்தை குர்‍ஆனோடு சேர்த்த முஹம்மதுவின் பாவத்தை அல்லாஹ் அவ்வளவு பெரிய பாவமாக கருதவில்லை. இதோடு நின்றுவிடாமல், முந்தைய நபிகளும் இதே போல சாத்தானால் தூண்டப்பட்டு, இதே பாவத்தை செய்தார்கள், அதாவது சாத்தானின் வசனத்தை இறைவனின் வசனமாகச் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் கூறினார்.

"முஹம்மதுவே நீர் செய்தது என்ன? நான் இறைவனிடமிருந்து கொண்டுவராத வசனத்தை நீர் சொல்லியிருக்கிறீர் மற்றும் உம்மிடம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லியுள்ளீர்". இதனால் இறைத்தூதர் மிகவும் வேதனையுற்றார் மற்றும் இறைவனுக்கு அதிகமாக பயந்தார். ஆனால், இறைவன் அவருக்கு வெளிப்பாட்டை அனுப்பினார், ஏனென்றால், அவர் மிகவும் கிருபையுள்ளவர், முஹம்மதுவை தேற்றினார் மற்றும் இந்த விஷயத்தை மிகப்பெரிய தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அவருக்கு முன்பிருந்த நபிகளும் அல்லது இறைத்தூதர்களும், முஹம்மது விரும்பியது போல விரும்பினார்கள், ஆனால், சாத்தான் தன் வார்த்தைகளை அவர்களின் வெளிப்பாடுகளில் புகுத்திவிட்டான், எப்படி முஹம்மதுவின் நாவில் போட்டானோ அது போல" என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அறிவித்தார். Tabari Vol 6, p109

பழைய ஏற்பாட்டின்படி, யாராவது ஒரு நபர் தேவனைவிட்டு வேறு தெய்வங்களை வணங்கும்படி செய்தால், அப்படிப்பட்டவர் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையுண்டு. யாராவது உண்மையான தேவன் சொல்லாத வசனத்தைச் சொன்னால், அவர் கொல்லப்படவேண்டும்உபாகமம் 13:1-5. 

யேகோவா தேவன் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அல்லாஹ் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொண்டார். ஆகையால், யேகோவா தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே அல்ல. துரதிஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அல்லாஹ்வும், கிறிஸ்தவ தேவனும் அல்லது யேகோவா தேவனும் ஒருவரே என்றுச் சொல்கிறார்கள், ஆனால், உண்மையில் அது தவறாகும், இவ்விருவரும் ஒருவரல்ல.

சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)

1) தேவன் எப்போதாவது இப்படிப்பட்ட மிகப்பெரிய பாவத்தை, லேசாக விட்டுவிடுவாரா? 

2) குர்‍ஆன் ஒரு விசேஷித்த ஒன்றாக இருந்தால், ஏன் சாத்தானின் வசனத்திற்கும் அல்லாஹ்வின் வசனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குர்‍ஆனால் சொல்லமுடியவில்லை? 

3) முஹம்மதுவினாலும், முஸ்லீம்களாலும் எது சாத்தானின் வசனம் எது அல்லாஹ்வின் வசனம் என்று வகைபிரிக்க தெரியாமல் இருக்கும்போது, குர்ஆனில் எவ்வளவு வசனங்கள் சாத்தானால் இறக்கப்பட்டு இருக்கும்? 

4) குர்‍ஆன் என்பது பரிசுத்தமான இறைவனின் வேதமாக இருந்தால், முஹம்மதுவினால் உடனே அவ்வசனம் சாத்தானின் வசனம் என்று ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை? ஏன் முஹம்மதுவை பின்பற்றினவர்களும் கண்டுபிடிக்கவில்லை? முஹம்மதுவினால், எது சாத்தானின் வசனம், எது அல்லாஹ்வின் வசனம் என்று வேறுபிரித்து சொல்லத் தெரியவில்லையானால், அவர் ஒரு உண்மையான நபி (தீர்க்கதரிசி) என்றுச் சொன்னால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?

பாகம் 3 முற்றிற்று 

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 4

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும். 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும். 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 3ஐ இங்கு படிக்கவும். 

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகத்தை காண்போம்.

தேவையில் இருந்த மனிதர்கள் (The People in Need)

[மக்காவிலிருந்து மதினாவிற்கு: Tabari vol 6 p93-150, LoM p191-218]

இஸ்லாமியர்கள் ஊரை விட்டு போகவேண்டுவதில்லை என்று சொல்லப்பட்டபோது, அவர்களுக்கு நிம்மதி உண்டானது. ஆனால், முஹம்மதுவின் அன்பான மனைவி கதிஜா மரித்துவிட்டார்கள். பிறகு அவரது சித்தப்பாவும் மரித்துவிட்டார்கள். இதோடு முஹம்மதுவிற்கு கிடைத்த பாதுகாப்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இப்போது முஹம்மது ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் அறிந்துக்கொண்டார். 

அவர் பழங்குடி நகரமான அல்-தையிபிற்கு‍ (al-Taif) பாதுகாப்பிற்காகச் சென்றார். அவர்கள் அவரை நிராகரித்துவிட்டனர், இந்த தோல்வியை இரகசியமாக வைத்திருக்கும் படி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், அவர்கள் அவரை துன்புறுத்தி கேலி செய்தனர், இதனால் அவர் அந்நகரத்தை விட்டு வெளியேறினார்.

"அபூ தலிப்பின் மரணத்திற்கு பின்பு, குரைஷி மக்களினால் அதிக வேதனை உண்டானபோது, இறைத்தூதர் தையிபிற்குச் சென்று, தகீப்பின் உதவியை நாடினார், தன் இன மக்களுக்கு எதிராக உதவும் படி கேட்டுக்கொண்டார்.... இதனால், தகீப்பினால் எந்த நன்மையும் இல்லை என்பதினால் இறைத்தூதர் எழுத்து சென்றுவிட்டார். அவர் இப்படி கூறினார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது "நீங்கள் உங்களுக்கு விரும்பியபடி நடந்துக்கொண்டீர்கள், எனினும் இதனை இரகசியமாக வைத்திருங்கள்". ஏன் இப்படி சொன்னார் என்றுச் சொன்னால், முஸ்லீம்கள் இதனை கேள்வியுற்றால், தனக்கு அவமானமாக இருக்கும் என்பதால் இப்படிச் சொன்னார்." LoM p192-193.

மக்காவில் முஹம்மது இன்னும் தன் பிரச்சாரத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்தும், முஹம்மது பலவகையான புனிதப் பிராயணத்திற்காக வரும் அரபி இனத்தவர்களிடம் தன் பிரச்சாரத்தை தொடர்ந்தார், தான் ஒரு நபி என்றுச் சொன்னார், அவர்களிடம் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

"அரபி இனத்தவர்களின் புனிதப்பயணத்தின் போது, இறைத்தூதர் அவர்களுக்கு முன்பாக தோன்றி, இறைவனிடம் அனைவரும் சேருங்கள் என்றும், தான் இறைவன் அனுப்பிய நபி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, தன் வார்த்தைகளை நம்பும்படியும், தன்னை காப்பாற்றும் படியும் கேட்டுக்கொண்டார். தனக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவர் இறைவனின் செய்தியை பறைசாற்ற வாய்ப்பு உண்டாகும் என்றுச் சொன்னார்." Tabari volume 6, page 120.

ஒருமுறை மதினாவிலிருந்து வந்த கஜ்ரஜ் இனத்தவர்களான சில மனிதர்களை சந்தித்தார். அவர்கள் அவரிடம் மதினாவில் உள்ள அரபியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உள்ள சண்டைகளை அறிவித்தார்கள். இம்மனிதர்கள் யூதர்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு இருந்தனர். மதினாவின் யூதர்கள் இவர்களிடம், "ஒரு நாள் எங்களிலிருந்து ஒரு நபி (தீர்க்கதரிசி) தோன்றுவார், அப்போது அவருடன் சேர்ந்து உங்களை (அரபியர்களை) நாங்கள் தோற்கடிப்போம்" என்று எச்சரிக்கை கொடுத்துயிருந்தார்களாம். 

முஹம்மது குர்‍ஆன் பற்றிச் சொல்வதை கேட்டு, இந்த கஜ்ரஜ் இனத்தவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். யூதர்கள் வருவார் என்றுச் சொன்ன நபி (தீர்க்கதரிசி) இவர் தான் என்று அம்மக்கள் நம்பினர். இதனால், யூதர்கள் இவரோடு சேர்ந்துவிடுவதற்கு முன்பாக, இவர்கள் முஹம்மதுவோடு சேர்ந்துவிட முடிவு செய்தனர். இதனால் இவர் அவர்களுக்கு எதிரியாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று நம்பினர். அவர்கள் முஹம்மதுவிடம், "மதினாவில் பிரிவினைகள் உண்டு, அதனை முடிவிற்கு கொண்டுவர உம்மால் முடியும் என்றுச் சொன்னார்கள்".

"இதனை குறித்துக்கொள்ளுங்கள்! இறைவனின் பெயரில், உங்களை பயமுறுத்துகின்ற யூதர்கள் குறிப்பிட்ட நபி (தீர்க்கதரிசி) இவர் தான். யூதர்கள் அவரை அங்கீகரிப்பதற்கு முன்பாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அவர் சொன்ன செய்தியில் இருக்கும் உண்மையை நம்பினார்கள், அவர்களிடம் சொல்லப்பட்ட இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்: 

"நாங்கள் எங்கள் மக்களை விட்டு வந்திருக்கிறோம், எந்த இன மக்களிடமும் காணமுடியாத அளவிற்கு எங்கள் மக்கள் விரிவினைகளினால் விரோதங்களினால் பிரிந்து இருக்கிறார்கள். உங்களின் மூலமாக இறைவன் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக. நாங்கள் எங்கள் மக்களிடம்(மதினாவிற்கு) சென்று அவர்களை ஒன்று கூட்டி, உங்கள் இஸ்லாமிய அழைப்பைப் பற்றி கூறுவோம். நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது போல, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நாங்கள் அழைப்பு விடுப்போம். அவர்கள் மறுபடியும் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால், உம்மைப் போல பலமுள்ளவர் யாருமே இருக்கமுடியாது" Tabari, volume 6, page 125
.

அவர்கள் மதினாவிற்கு திரும்பிச் சென்று, முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றி அங்குள்ளவர்களுக்குச் சொன்னார்கள். அவர்களில் 12 பேர் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவிற்கு நம்பிக்கையாளர்களாக இருப்போம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். இது தான் "அகபாவின் முதல் உறுதி மொழியாகும் (First Pledge of Aqabah)". 

இவ்வித‌மாக‌ இஸ்லாமுக்கு மாறிய‌வ‌ர்க‌ள் ம‌தினாவில் இஸ்லாமை பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள். அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி இன்னும் போதிப்பதற்காக முஹ‌ம்ம‌து முஸ்லீம்க‌ளை ம‌தினாவிற்கு அனுப்பினார். ஓரிரு ஆண்டுக‌ளுக்குள் ம‌தினாவில் அனேக‌ர் இஸ்லாமை தீவிர‌மாக‌ பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளாக‌ மாறினார்க‌ள். அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌துவை காப்ப‌தாக‌ உறுதிய‌ளித்தார்க‌ள்.

[மதினா மக்கள் கூறினார்கள்]: "உம்மை சத்தியத்துடன் அனுப்பியவரின் பெயரில் உறுதிகூறுகிறோம், எங்கள் பெண்களை நாங்கள் பாதுகாப்பது போல, உங்களை நாங்கள் பாதுகாப்போம். ஓ இறைத்தூதரே, எங்களுடன் நீங்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் போர் புரியக்கூடிய அளவிற்கு வலிமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதனை நாங்கள் எங்கள் முன்னோர்களிடமிருந்து பெற்று இருக்கிறோம். Tabari vol 6, page 133

அவருடன் ஒற்றுமையாக இருப்போம் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியானது, உலக மக்கள் அனைவரிடமும் போர் புரிய நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியாகும். Tabari vol 6, page 134

பிறகு எழுபதிற்கும் அதிகமான மதினா மக்கள் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவை சந்தித்து தங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாக சொன்னார்கள். இது தான் "அகபாவின் இரண்டாம் உறுதிமொழியாகும் (Second Pledge of Aqabah)". அவர்கள் மதினாவிற்கு திரும்பி வந்தார்கள், இஸ்லாம் அதிகமாக வளர்ந்தது. 

இங்கு முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இப்போது முஹ‌ம்மதுவிற்காக‌ அதிக‌ எண்ணிக்கையில் ம‌க்க‌ள் சேர்ந்தார்க‌ள், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரையும் அவ‌ருக்காக‌ தியாக‌ம் செய்ய‌வும் த‌யாரானார்க‌ள், என்பது தான்.

முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுகிறார் (MUHAMMAD FLEES TO MEDINA)

[முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுதல்: LoM p219-221, Tabari vol 6 p145-150]

"A hard beginning maketh a good ending." John Heywood 

"ஒரு கடினமான ஆரம்பம், சுகமான முடிவை உருவாக்கும்"

முஸ்லீம்களுக்கு மக்காவில் துன்பம் அதிகரித்தது, ஒரு நாள் மக்காவினர் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று முஹம்மது உணர்ந்துக்கொண்டார். முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை மதினாவிற்கு அனுப்புகிறார். இப்படி மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியைத் தான் "ஹிஜ்ரா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய முக்கியத்துவம் அனேகருக்கு தெரிவதில்லை. இந்த இடம்பெயர்தல் தான் "இஸ்லாமிய சமுதாயம்" உருவாக காரணமாக இருந்தது. இஸ்லாம் ஒரு ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும். 

இந்த "ஹிஜ்ரா" இஸ்லாமில் முக்கியமான மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது. இஸ்லாமை உருவாக்க வன்முறை கட்டளைகள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.


ம‌தினாவிற்கு இட‌ம் பெய‌ர்வ‌த‌ற்கு முன்பாக‌, ம‌க்காவில் இருக்கும் போதே, "ச‌ண்டையிட‌ க‌ட்ட‌ளை வெளிப்ப‌ட்ட‌து": குர்‍‍ஆன் சூரா 22:39-41 & 2:193

போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்‍ஆன் 22:39) 

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (குர்‍ஆன் 22:40) 

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (குர்‍ஆன் 22:41) 

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்‍ஆன் 2:192)

முஹம்மது மதினாவிற்கு செல்வதற்கு முன்பு "இனி மக்கா மக்களிடம் நீர் சண்டையிடலாம்" என்றுச் சொல்லியிருந்தார். இஸ்லாமியரல்லாதவர்களோடு தீவிரமான மற்றும் பாதுகாப்பு கருதி செய்யப்படும் சண்டைகள் இனி அனுமதிக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது, உற்சாகப்படுத்தப்படுகிறது மற்றும் பின்பற்றப்படுகிறது. கு‍ர்‍ஆனில் காணப்பட்ட அஹிம்சை வசனங்கள் இப்போது "இரத்து செய்யப்படுகிறது" அல்லது "செல்லாது என்றுச் சொல்லப்படுகிறது"

சூழ்நிலைகள் மாறின,

முஹம்மதுவிற்கு கிடைத்த வாய்ப்புக்கள் மாறின, 

சட்டங்கள் மாறின, 

கடைசியாக முஹமம்துவின் இஸ்லாமும் மாறிவிட்டது. 

(Many of the non-violent verses in the Quran were now "abrogated", or canceled. Circumstances changed, Muhammad's opportunities changed, the rules of the game changed, and thus Muhammad's Islam changed.)


முஹம்மது மிகவும் கஷ்டப்பட்டு மதினாவிற்கு ஓடினார். மதினா 200 மைல்கள் தூரத்தில் வட திசையில் இருக்கிறது. அங்கு அனேக அரபி மற்றும் யூதர்கள் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். 

ஹிஜ்ராவின் தேதி: கி.பி. 622 (அ) 623 ஆகும். இந்த தேதிலிருந்து தான் இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பிக்கிறது (After Hijrah = "AH"). இஸ்லாமிய சமுதாயம் மதினாவில் ஸ்தாபிக்கப்பட்டது.

பாகம் 4 முற்றிற்று 

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

naren said...
January 25, 2012 8:12 AM

Abu-Dawud Book 41, No. 5251: Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The prophet (peace be upon him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.

சார்வாகன் said...
January 26, 2012 8:28 AM

ஸலாம் இ.சா
இந்த வி.சே விடயம் நமக்கு பிடிக்காத ஒன்று என்றாலும் இதை போய் இப்படி அபு தாவுத் ஹதிதை காட்டினா அது சஹி இல்லைனு சொல்வாங்கனு தெரியாதா!!!!!
அண்ணன் குரானில் சொல்லாத வஹி ஹதிதில் ஒன்று என்றும் கூறுவார்.பிறகு ஒத்துவராத ஹதிதை சஹி இல்லை என்பார்.அப்புறம் இப்படியே இழுக்க வேண்டியதுதான்.

அதுக்கு என்ன செய்வது.ஒரே தீர்வு சவுதி உலமாக்ளின் கருத்தினை அறிவதே.மாபெரும் தவுகீத் அண்ணன் Sheikh Muhammed Salih Al-Munajjid என்ன சொல்ரார்?

http://islamqa.info/en/ref/427

I would like to know more about female circumcision in Islam. I have read the ahadith where the Prophet told a woman how to perform it. I would like to know if it is optional or obligatory, and - if it is obligatory - whether there is a certain way to do it (what part should be cut?).

கேள்வி மட்டும் கொடுக்கிறேன்.இதுவே கடுமையாய் இருக்கிறது.பதில் அங்கேயே போய் படியுங்கள்.
இவருக்கு தெரியாத விடயமா நம்ம தமிழ் முமின்களுக்கு தெரிந்து விடும்.
http://www.islamhouse.com/p/353498
அரபி அண்ணன் பெரிய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்காரு.இவருடன் அரபியில் நேருக்கு நேர் விவாதம் செய்ய தவுகீத் அண்ணன் தயாரா?



-- Edited by Admin on Saturday 4th of February 2012 08:33:59 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

புகாரி

//268. நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ்(ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார். 
மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. 
Volume :1 Book :5//
================



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


================================================புகாரி

2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும், 
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார். 
Volume :1 Book :1


================================================
புகாரி

3. ஆயிஷா(ரலி) கூறினார். 
"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். 
"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, 
'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். 
'வராக' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார். 
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று. 
Volume :1 Book :1
================================================



புகாரி

4. 'நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, 'போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!' (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி 'அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!' என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்" என் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றிக் கூறும்போது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அதன் பின்னர் வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்றும் அவர் கூறினார். 
Volume :1 Book :1

புகாரி

4. 'நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, 'போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!' (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி 'அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!' என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்" என் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றிக் கூறும்போது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அதன் பின்னர் வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்றும் அவர் கூறினார். 
Volume :1 Book :1

புகாரி


6. 'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
Volume :1 Book :1



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

4552 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ெகட்ட கனவு ைஷத்தானிடமிருந்து
வருவதாகும். ஒருவர் கனவு ஒன்ைறக் கண்டு அதில் எைதேயனும் அவர் ெவறுத்தால்,
அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முைற துப்பிவிட்டு,ைஷத்தானிடமிருந்து (காக்குமாறு)
அல்லாஹ்விடம் பாதுகாப்புக் ேகாரட்டும். அப்படிச் ெசய்தால் அவருக்கு அது எந்தப்
பாதிப்ைபயும் ஏற்படுத்தாது. ேமலும், அைதப் பற்றி யாரிடமும் அவர் ெதரிவிக்க ேவண்டாம்.
அழகிய கனவு ஒன்ைற அவர் கண்டால், அவர் ஆனந்தமைடயட்டும். அைதப் பற்றி தமது
ேநசத்திற்குரியவைரத் தவிர ேவறு யாரிடமும் ெதரிவிக்க ேவண்டாம்.
இைத அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Ibnu Shakir said...
January 24, 2012 4:46 PM

குரானை நபி எழுதவில்லை என்று நான் கூறவில்லை. குரானை நபிதான் எழுதினார். ஆனால் தான் எழுதவில்லை என்று நம்பினார். டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அந்த கருத்துக்கள் பல கோடிக்கணக்கானவர்களை சமீப காலத்திலேயே கவர்ந்திருக்கின்றன. ஆகையால் உங்கள் வாதம் தவறு.

//ஆனால் நீங்களும் நானும் அறியாத மலக்குகள் என்ற மூலத்தை வைத்து நபி முஹம்மது அவர்கள் ஏன் கூற வேண்டும்?//
மலக்கு என்பது நாம் அறியாததல்ல. ஜிப்ரீல்தான் லூக் எழுதிய சுவிசேசத்திலும் வருகிறார். ஆகையால், கிறிஸ்துவ உறவினர்களை கொண்ட அவர் தனக்கு கிடைத்த முன் அனுமானங்களின் படி, தான் உணர்ந்தது, ஜீப்ரீலின் வருகை என்று நினைத்துகொள்கிறார். மனப்பிறழ்வினால் அந்த உணர்வு அதிகரிக்கிறது. தான் கூறுவதையெல்லாம் ஜிப்ரீலின் கூற்றாகவே கூற ஆரம்பிக்கிறார்.

//இதைப்போன்ற நிலையில் ஒருவர் கூறும் நற்கருத்துக்களுக்கு தாம் உரிமையாளர் அல்ல என்று சொல்வதை விட மக்களின் மத்தியில் ஏற்படும் செல்வாக்குக்காக தாமே சொல்வதாகதானே இயல்பாக மனம் நாடும். //
இல்லை. அவர் அன்றைய ஒருமைப்பட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களையே கூறுகிறார். ஆகையால் இன்னொருவர்மீது பழி போடுவதுதான் எளிது.

//பொதுவாக எந்த ஒருவரும் எந்த ஒரு நிலையிலும் யாரையாவது எதையாவது ஒன்றை சார்ந்தே செயல்பட அல்லது பின்பற்றிதான் ஆக வேண்டும்//

ஒருவர் மற்றவர் ஒருவரின் கருத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதும் உங்களது submissive மனத்தின் நிலைப்பாடுதான். 

சமூகமே எந்த ஒழுக்கப்பாடுகள் சரியானவை என்று தீர்மானிக்கிறது. தெருவில் எச்சில் துப்புவது தவறு என்றும் ஒரு சமூகத்தில் இருக்கலாம். எச்சில் துப்புவது தவறல்ல என்றும் மற்றொரு சமூகத்தில் இருக்கலாம். உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்பது அந்தந்த சமூகத்தின் தரத்துக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப மாறிகொண்டே இருக்கும். அது யாருக்கும் எந்த வித சிக்கலையும் கொண்டுவருவதில்லை.என்றென்றைக்கும் நிரந்தரமான விதிகள் என்று எதுவும் இல்லை. ஏனெனில், ஒரு கால கட்டத்துக்கு சரியான விதி மற்றொரு நாட்டில் மற்றொரு காலகட்டத்தில் தவறான விதியாக ஆகிவிடும். இது உங்களால் சிந்திக்க கடினமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நடைமுறையில் அவ்வளவு கடினமானது அல்ல. 
ரோட்டின் வலது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. ரோட்டின் இடது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. எது சரி என்பதை சுற்றியுள்ள சமூகமே நிர்ணயிக்கிறது. Inherently there is no moral association with either left or right. 

ஆனால், இடது கை பழக்கத்தை சாத்தானின் பழக்கம் என்று யாரோ சொல்லி submissive ஆக நம்ப ஆரம்பித்தால், அது தீவிரத்தன்மை அடையும்போது இடது கை பழக்கம் உள்ளவர்களை எல்லாம் ஒரு குழு கொல்வதில்தான் முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 



I would like to know more about female circumcision in Islam. I have read the ahadith where the Prophet told a woman how to perform it. I would like to know if it is optional or obligatory, and - if it is obligatory - whether there is a certain way to do it (what part should be cut?).


Praise be to Allah.
Ibn Qudamah (may Allah have mercy on him) said, in his book al-Mughni: "Circumcision is obligatory for men, and it is an honour for women, but it is not obligatory for them. This is the opinion of many scholars. (Imam) Ahmad said: For men it is more strictly required, but for women it is less strictly required." (al-Mughni 1/70).

Circumcision of the female consists of the removal of a part of the clitoris, which is situated above the opening of the urethra. The Sunnah is not to remove all of it, but only a part. (al-Mawsu‘ah al-Fiqhiyyah 19/28).

In this matter, it is wise to follow the interests of the female: if the clitoris is large, then part of it should be removed, otherwise it should be left alone. This size of the clitoris will vary from woman to woman, and there may be differences between those from hot climates and those from cold climates.

A hadith on the topic of female circumcision has been attributed to the Prophet (Peace and Blessings of Allah be upon Him), according to which he said: "Circumcision is a Sunnah for men, and an honour for women," but there is some debate as to the authenticity of this hadith. See Silsilah al-Ahadith al-Da‘ifah by al-Albani, no. 1935.

How circumcision is to be performed is mentioned in the hadith narrated by Umm ‘Atiyah, may Allah be pleased with her, according to which a woman used to perform circumcisions in Madinah. The Prophet (Peace and Blessings of Allah be upon Him) told her: "Do not abuse (i.e. do not go to extremes in circumcising); that is better for the woman and more liked by her husband." (Reported by Abu Dawud in al-Sunan, Kitab al-Adab; he said this hadith is da‘if).

The scholars’ opinions cited above should be sufficient explanation. And Allah knows best.


Islam Q&A 
Sheikh Muhammed Salih Al-Munajjid



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வது-Kidan of Ladies Details
பெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வது
பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும்.இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை.

முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.'எவர் இஸ்லாத்தை தழுவுகிறாரோ அவர் கத்னா செய்து கொள்ளவும். அவர் பெரியவராக இருந்தாலும் சரியே என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும், உடம்புக்கு பாதிப்பில்லாத முறையில் கவனமாக இலகுவான முறையில் கத்னா செய்யுங்கள். ஏனெனில் கத்னா செய்வது முகத்தை மிகவும் செழிப்படையச் செய்யக் கூடியதாகவும், திருமணத்தின் போது மிகவும் இன்பமளிப்பதாகவும் இருக்கும்' என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஜல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும் அறிவிக்கும் ஹதீஸில் ,' ஆண் குறியில் கத்னா செய்யப்பட்ட (மொட்டுப் பகுதி) பெண் குறியில் கத்னா செய்யப்பட்ட பகுதியோடு இணைந்து விட்டால் குளிப்பு கடமையாகிவிடும் என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் 'கிதான்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

பித்ரத்- இயற்கை விசயமாகும் என்பதும் இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. கத்னா என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு கடமையாகும்.

'ஐந்து விசயங்கள் பித்ரத் இயற்கையைச் சேர்ந்தது. அவைகளாவன: கத்னா செய்வது, மாமஸ்தான முடியை நீக்குவது, மேல் மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது, கக்கத்து முடியைப் பிடுங்குவது ஆகிய ஐந்துமாகும்.'

பெண்களுக்கு கத்னா செய்வதின் அவசியம்:

'கத்னா செய்வது நிச்சயமாக முகத்தை செழிப்புறச் செய்யும். திருமணத்தின் போது இன்பமாக இருக்கும்'

'நிச்சயமாக கத்னா செய்வது பெண்களுக்கு சங்கையானதாகும்' என்று ஹதீதுகளில் வந்திருக்கிறது.

ஆணுக்குரிய கத்னாவை பகிரங்கமாகவும், பெண்களுக்குரிய கத்னாவை பகிரங்கப்படுத்தாமல் மறைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கும் விசயமாகும்.

அத்துடன் ஆண் பிள்ளைக்கு பால் அருந்தக்கூடிய காலத்தில், பிள்ளை பிறந்து முதல் வாரத்தில் அல்லது அதற்கு பின்னால் செய்ய முடியும். பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதை அடைவதற்கு முன்பாக கத்னா செய்ய வேண்டும் என்பதாக ஹதீதுகள் தெளிவாக அறிவிக்கின்றன.

1994 அக்டோபர் மாதத்தில் எகிப்திலிருந்து வெளிவரும் 'அல் அஸ்ஹர்' என்ற பத்திரிகையில் அல் கிதான்' என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை அஷ்ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் அவர்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கத்னா செய்வது இஸ்லாமிய இயற்கை விசயத்தில் உள்ளதாகும் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.

எகிப்து தாருல் இப்தாவின் தலைவரான முஹம்மத் ஸெய்யித் தன்தாவி அவர்கள் கத்னா பற்றிய தெளிவான ஷரீஅத் சட்டங்களை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.

இதில் மத்ஹப்களின் புகஹாக்களான சட்ட மேதைகளின் கூற்றுக்கள் ஒன்று பட்டதாகவே காணப்படுகின்றன.

கத்னா செய்வது வாஜிபா-கட்டாய கடமையா? அல்லது ஸுன்னத்தா என்பதில்தான் கருத்து வேறுபாடு இமாம்கள் மத்தியில் நிலவுகிறது. இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் ஆண், பெண் இருபாலரும் கத்னா செய்வது சுன்னத்தாகும். பர்ளு –கட்டாய கடமையைப் போன்று அது கடமையாகாது என்றாலும் அதை விடுவதனால் அவன் பாவியாகிவிடுகிறான் என்கிறார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கத்னா செய்வது ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறார்கள்.'ஆண்கள் விசயத்தில் கத்னா வாஜிபாகும் என்பதாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் கத்னா விசயமாக இமாம் ஹன்பல் அவர்களிடமிருந்து இரு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான கூற்று பெண்களுக்கும் கத்னா 'வாஜிப்' கடமை என்பதாகும்.

...தொடரும்

naren said...
January 26, 2012 10:51 PM

கத்னா செய்வதால் கிடைக்கும் சுகாதார பயன்கள்:

1. பெண்களுகு;கு கத்னா செய்வது அலங்காரப்படுத்தும் ஒரு செயலாகும். இயற்கையான அளவை விட மேலதிகமாக காணப்படும் பகுதிகளை மாத்திரமே கத்னாவின் மூலம் நீக்கப்படுகிறது.

2. இந்த கத்னா மேற்கொள்ளும் வேலை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. எனினும் விசேச வைத்தியர்களின் அறிவுரையின் பேரில் ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப கத்னா செய்ய வேண்டும்.

3. கத்னா செய்யப்படாமல் மேலதிகமாக இருக்கும் பகுதியினால் சில பெண்களிடம் சுகாதாரத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கும் உடல் நலத்திற்கு கேட்டை உண்டாக்கும் நோய்கள் உண்டாகுவதற்கும் இடமுண்டு.

4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் கத்னாவின் போது மென்மையாக நடந்து கொள்வீராக என்று சொன்னதன் மூலம் அறிவுப்பூர்வமான கத்னா முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
================================================

Ibnu Shakir said...
January 27, 2012 2:36 PM

واللائي يئسن من المحيض من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثة اشهر واللائي لم يحضن واولات الاحمال اجلهن ان يضعن حملهن ومن يتق الله يجعل له من امره يسرا

Yusuf Ali: Such of your women as have passed the age of monthly courses, for them the prescribed period, if ye have any doubts, is three months, and for those who have no courses (it is the same): for those who carry (life within their wombs), their period is until they deliver their burdens: and for those who fear Allah, He will make their path easy.
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் சிறுமிகளுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.

ஆகவே நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா சாமியாடி, மாதவிடாயே ஏற்படாத சிறுமிகளை விவாகரத்து செய்வதற்கு கூட என்ன செய்யணும்னு சொல்லிக்கிறார்.

ஆனால் சிறுமிகளை திருமணம் செய்வதை நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா தடை செய்தார் என்று இப்போதைக்கு நம்ம இபுராஹிம் தக்கியா செய்கிறார். 

அவருக்கு ஆறுவயசில் பொண்ணு இருக்கான்னு தெரியலை.

எது இருந்தாலும் நான் கடவுள்கிட்ட பேசறேன்.. உன் பொண்ணை எனக்கு நிக்கா பண்ணிவையின்னு யாராவது காக்காவலிப்பில் உளறினால், உடனேநம்ம இபுராஹிம் தன் பொண்ணை அந்த அறுபது வயது கிழத்துக்கு நிக்கா பண்ணி வைத்துவிடுவார். சும்மாவா இப்போதும் கிழட்டு அரபு ஷேக்குகளுக்கு ஆறுவயது பெண்களை நம்ம ஈமாந்தாரிகள் மூணுநாளைக்கு நிக்காஹ் செய்துதருகிறார்கள்?
எல்லா நபிவழியில்தான்.

http://senkodi.wordpress.com/2012/01/04/islam-dower



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

காக்காவலிப்பில் கடவுளை கண்ட கழண்ட கேஸும் கார்பன் கூட்டாளியும்

தமிழ்நாட்டில் இரண்டு வகையான இலக்கியவாதிகள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

ஒன்று கலைஞர்தான் பெரிய இலக்கியவாதி என்று சொல்பவர்கள். அவர் மாதிரி ஒரே எழுத்து ஒவ்வொரு வார்த்தையின் ஆரம்பத்தில் வருவது போல எழுதி வாசித்தால், கஜல் பாடுபவர் நிறுத்தும்போதெல்லாம் தூக்கத்திலிருந்து எழுந்து வாஹ் வாஹ் என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்குபவர்கள் போல, ஒரு அடுக்கு மொழி தொடரை சொல்லி நிறுத்தியதும், நம்ம உடன் பிறப்புகள் எல்லாம் டம டம டம என்று கைதட்டுவார்கள். அது ஒரு வகை இலக்கியம். இந்த வகை, அண்ணாவுக்கு மூன்றெழுத்து, அக்காவுக்கு மூன்றெழுத்து என்ற ரீதியில் சும்மா போட்டு தாக்குவார்கள்.

இரண்டாவது வகை எலக்கிய வாதிகள், சம்பந்தமே இல்லாத ரெண்டு விஷயத்தை உம்மை போட்டு சேர்த்து தலைப்பு எழுதி அதற்கு கீழே எழுதினவருக்கே புரியாத வார்த்தைகளை போட்டு எழுதுவது. உதாரணமாக, ”நவீன சொல்லாடலும், தகர டப்பாவும்” என்று தலைப்பு வைத்து, கீழே “ஆதித் தொல்மனப் படிமமான அரவம் என்பதைக் குறிக்கும் லிபிடனல் ஆற்றல் அல்லது உட்செறிக்கப்பட்ட பாலியல் ஆற்றல் பற்றியதாக ” என்று நாம் வாய்க்கு வந்ததை எழுதலாம்.

இந்த ரெண்டு வகையினருக்கும் ஒருத்தரை கண்டால் ஒருத்தர் ஆகாது. உம்மாவுக்கும் வாப்பாவோட சொந்தங்களுக்கும் எப்படி ஆகாதோ அதுமாதிரி ஆகாது. தெரியாம வந்துட்டானுங்க.. அவ்வளவுதான்.

சரி கெடக்கட்டும்.

இப்ப இந்த கட்டுரை தலைப்பு பார்த்தீங்கண்ணா, க க க கன்னு போய்க்கிட்டே இருக்கும். இது கலைஞர் வகையறா இலக்கியவாதிகளை கவர போட்ட தலைப்பு என்று அறியவும். அதே நேரத்தில் உம்மைத்தொகையும் இருக்கிறது. இது இரண்டாம் வகை எலக்கிய வாதிகளை கவரப்போட்ட தலைப்பு என்றும் அறியவும். இருந்தாலும் இந்த ரெண்டு பேருக்கும் இங்கே எதுவும் கிடையாது. உடு ஜூட்.

இப்ப விஷயத்துக்கு வருவோம்.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். உண்மையிலேயே நம்ம கண்ணுமணி புளுகித்தள்ளினாரா, அல்லது அவர் உண்மையைச் சொன்னாரா? தற்போது கிடைக்கும் தகவல்களை பார்க்கும்போது நம்ம கண்ணுமணி இந்த காஃபிர்கள் சொல்லுவது போல புளுகவில்லை என்றே அறிகிறோம். அவர் உணர்ந்ததைத்தான் சொன்னார் என்று ஆதாரப்பூர்வமாக அறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டிருக்கிறார்கள். (இஸ்லாமிய அறிவியல் இல்லை. ஒரிஜினல் அறிவியல்!)

நேரமிருந்தால் இந்த பக்கங்களை பார்த்துவிடவும்.
நேரமே இல்லைன்னாலும் பரவாயில்லை. பார்த்துவிடுங்கள். தருமி அய்யாவெல்லாம் இதிலே டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம். ஆனால், நம்மை மாதிரி சாதாரண ஆசாமிகள் இதுமாதிரி ரெண்டு பாத்தாதான், பின்னாடி எவனாவது என்கிட்ட கடவுள் பேசினார்னு டுமீல் விட்டா, ஆ அப்படியான்னு வாய பொளக்காம இருக்க கொஞ்சமாவது உதவும்.

http://puthu.thinnai.com/?p=7092
http://puthu.thinnai.com/?p=7277
http://puthu.thinnai.com/?p=7630

நிச்சயம் நம்ம தவ்ஹீத் அண்ணன் இந்த கட்டுரைகளை படித்தால் உடனே நம்ம கண்ணுமணிக்கு டெம்போரல் லோப் வலிப்புதான் என்று நூற்றுக்கு நூறு முடிவு கட்டிவிடுவார். அவர் புத்திசாலி. ஆனா அவர் அதிபுத்திசாலியாகவும் இருக்கிறதால் அதனை வெளியே சொல்லமாட்டார். தொழுகை பண்ணமலேயே கல்லா கட்டும் அவருக்கு இதயெல்லாம் நெஞ்சுக்கு நீதியாக உண்மையை சொல்லி கல்லாவை துடைக்க ஆசையா என்ன?

இப்ப பைத்தியக்காரன் ஒருத்தன், நான் தான் ஜார்ஜ் புஷ் என்று சொன்னால், அவன் புளுகுகிறான் என்றா சொல்ல முடியும்? அவன் அவனுக்குத் தெரிந்த உண்மையைத்தான் சொல்லுகிறான். காபிர்கள் சிந்திக்கவே மாட்டார்களா? இதற்காகத்தான் அடிக்கடி நமது மொஹம்மத் இப்னு அப்தல்லா சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா என்று அடிக்கடி கெஞ்சிகீறார்.

அந்த பைத்தியக்காரன் உண்மையைத்தான் சொல்கிறான். அல்லது தான் உண்மை என்று நினைத்ததை சொல்கிறான். உங்களுக்கும் எனக்கும்தான் இந்த பைத்தியக்காரன் சொல்லுவது உண்மை இல்லை என்று தெரியும். ஆனால் அந்த பைத்தியக்காரனுக்கு தான் பொய் சொல்லுகிறோம் என்று தெரியாது. இல்லையா? அப்படியிருக்கும்போது நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் ஜல்ல்லல்லாஹூ அலைஹிஸவஸல்லம் சொல்லுவதெல்லாம் புளுகுதான் என்று சொல்லும் காபிர்களை என்னவென்று
சொல்லுவது?

ஒரு பைத்தியக்காரன் தன்னை ஜார்ஜ் புஷ் என்று சொல்லிக்கொள்கிறான் என்றால், அவனுக்காக பரிதாபப்படலாம். ஆனால், அந்த ”பைத்தியக்காரன் சொல்லுவதெல்லாம் உண்மை; அந்த பைத்தியக்காரனே ஜார்ஜ் புஷ்” என்று சிலர் நம்புவார்கள். அவர்களைப் பார்த்தும் பரிதாபப்படலாம். பைத்தியம் உங்கள் சாய்ஸ்… !!

(பைத்தியக்காரனை சுற்றியும் பத்து பேர் என்று பழமொழி தமிழ்நாட்டில் இருக்கிறது. இதன் மூலம் தமிழர்களுக்கு பொது அறிவே இல்லை என்பதை அறியலாம். ஒரு சாதாரண அறிவு இருந்திருந்தால், பைத்தியக்காரனை சுற்றியும் ஒரு பில்லியன் பேர் என்று மாற்றி எழுதியிருப்பார்கள்)

இப்ப கார்பன் கூட்டாளிக்கு வருவோம்.

கார்பன் கூட்டாளி ரெண்டாம் வகை. இவர் பைத்தியம் இல்லை. பைத்தியத்தை ஜார்ஜ் புஷ் என்று நம்பும் கேட்டகிரி. உயிரியலில் மேற்படிப்பு படித்தவராம். சவுதி அரேபிய பல்கலைக்கழகத்தில் படித்திருப்பாரோ என்னவோ.

இவருக்கு வேலை மெனக்கிட்டு நமது காஃபிர் சார்வாகன், நரேன், வால்பையன் போன்ற காஃபிர்கள் பதில் கூறுகிறார்கள். காஃபிர்கள் கொஞ்சம் வெவரமாக இருந்தால், அவருடைய வாதம் “argument from incredulity” என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். ஆனால், அவருக்கு வெலாவாரியாக வெளக்கி கொண்டிருக்கிறார்கள். என்ன அரப்பு போட்டு வெளக்கினாலும், அவர் “அப்ப அந்த வாழப்பழம் ஏங்கே?” என்றுதான் கேட்டுகொண்டிருப்பார்.

இந்த காஃபிர்களை என்ன செய்ய என்று எனக்கே தெரியவில்லை.

இப்ப பாருங்கள்.

p67a.jpg

நமக்கெல்லாம் தெரியும் யாகவா முனிவர்னு ஒருத்தர் இருந்தார். நம்ம கண்ணுமணி பொன்னுமணி மாதிரி, என்னை நம்பாதவங்களோட வூடு பூந்து கொள்ளையடி, அவங்களோட பொண்ணுங்களையெல்லாம் கற்பழிச்சி வித்துடுன்னு அழகாக அறிவுரையெல்லாம் சொல்லலைன்னாலும், இவரும் நம்ம கண்ணுமணி எறும்பு பேசறது புரியும் என்றெல்லாம் கோக்குமாக்கு அரபுகள்ட்ட சொன்ன மாதிரியே எனக்கு பறவை பாஷை தெரியும் என்றெல்லாம் சும்மா பொளந்து கட்டியிருக்கார் என்பதை நாமும் அறிவோம். அதே நேரத்தில கண்ணுமணி மாதிரியே எல்லோரும் ஒத்துகொள்ளக்கூடிய அறிவுரையும் சொல்லியிருக்கார். (அப்பா அம்மாவை கும்பிடு இத்யாதி) இந்த யாகவா முனிவர் ஒரு கழண்ட கேஸ் என்பது இவரும்
சிவசங்கர் பாபாவும் நாய்மாரி டெலிவிஷன்லயே அடிச்சிக்கிட்டாங்கங்கறதிலேர்ந்து நாம தெரிஞ்சிகிட்டோம். (முஸைலமாவோட நம்ம கண்ணுமணி கூட போட்டி போட்டிருக்காரு.. அதுவும் இதே மாதிரிதான். என்ன டெலிவிஷன்ல அடிச்சிகிட்டவங்க கையில கத்தி கபடா இல்லாம அட்சிகிட்டாங்க. நம்ம கண்ணுமணி ஒடனே அபுபக்ர் அறுத்தெறிடா அவனோட தலையை.. என்றுதான்
ஆரம்பிச்சிருப்பார்)

இப்ப யாகவா முனிவரை பார்த்து நாம் பரிதாபப்படலாம். ஆனால் யாகவா முனிவர் சொன்னதெல்லாம் உண்மைன்னு ஒரு கும்பல் ஆரம்பிச்சிச்சின்னா என்ன பண்ணுவீங்க? இனான்ய மொழின்னு ஒன்னு இருக்கு, யாகவா முனிவர் சொன்ன 111 கட்டளைகள்னு புத்தகமெல்லாம் போடறாங்க.. யாகவா வசியா அறக்கட்டளைன்னு ஒன்னு மேடவாக்கத்திலேர்ந்து புக்கு போடறாங்க..
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE
அவரோட மறைவுக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானமெல்லாம் நடக்குது
http://home.dinakaran.com/District_detail_2011.asp?Nid=28391

இப்ப சிவசங்கர் பாபாவுக்கும் ஒரு கும்பல் அலைஞ்சிகிட்டிருந்திச்சி.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=651&rid;=36

(இப்ப இன்னொருத்தர் கிளம்பியிருக்கார். இவரும் நம்ம மொஹம்மத் இப்னு
அப்தல்லா மாதிரியே உலகம் அழியப்போவுது, மவனே ஓடியா, என்னை நம்புன்னு கூப்டறாரு
http://www.jeyamohan.in/?p=20500)

இது இன்னொரு மொஹம்மத் இப்னு அப்தல்லா
மிஹ்ராஜ் பயணம் போய் ராக்கெட்டை தள்ளிவிடும் அலேக் (ஏனுங்க மிஹ்ராஜ்
பயணத்தையே நம்பறதுக்கு ஆளுங்க இருக்கும்போது ராக்கெட்டை தள்ளிவுட்டதை நம்ப ஆளுங்க இல்லாமயா போய்டுவாங்க? இந்த ராஜ்குமார் சித்தர், சும்மா கோபால் பல்பொடி கணக்கா, மலேசியா சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் மூளையை கழுவிக்கொண்டிருக்கிறார்)
http://www.youtube.com/watch?v=DMFeg8FIRaQ

இந்த பாபாவாவது, யாகவா முனிவராவது உலகம் தட்டைன்னு சொல்லியிருக்காருன்னு வச்சிக்குவோம். இவரோட சீடர்கள்ட்ட போயி, , அண்ணே உலகம் தட்டையில்லண்ணே, அது உருண்டைன்னு அழுது கெஞ்சி பொலம்புனாலும் அவன் ஒத்துகிடுவானா? இப்பவே இங்க பாருங்களேன். போகோ ஹராம்னு ஈமான்ந்தாரிகள் நைஜீரியாவில் உலகம் தட்டைன்னு நம்புடா என்று கிறிஸ்துவ நைஜீரியர்கள் மீது குண்டு போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலோ, ஜைனுலாபுதீன் கார்பன் கூட்டாளி மாதிரி  ஈமாந்தாரிகள் உலகம் உருண்டைன்னுதான் குரான் சொல்லுதுன்னு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். போகோஹராம் முஸ்லீம்களுக்கு இந்த சனாதிக்கா முஸ்லீம்களை பற்றி தெரியாமலிருக்க அல்லாஹ் 50000 ஒளிவருட தொலைவிலிருந்து அருளட்டும்.

இந்த ஜுல்கர்னைன் வெவகாரந்தான் என்ன?
http://en.wikipedia.org/wiki/Alexander_romance
அலெக்ஸாந்தர் இறந்ததும் ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்கள் ஓரிடத்தில் இருக்க, அவரை பற்றிய கதைகள், நாவல்கள் காப்பியங்கள் பலரால் எழுதப்பட்டன. அதில் ஒன்றுதான் அலெக்ஸாந்தர் ரொமான்ஸ் என்ற நாவல். இதில் அவர் செய்த வீரதீர சாகசங்கள் பற்றி கதைகள் புனையப்பட்டன.

இந்த கதையில் வருவதே காக், மகாக் என்ற கதை, இதில் வருவதே ,
அலெக்ஸாந்தர் காக் மகோக் ஆகியோர் வெளிவராதிருக்க சுவர் கட்டுவதை படமாக வரைந்தது

397px-Alexander_%2528Iskandar%2529_building_the_brazen_wall_against_the_people_of_Gog_and_Magog._Painted_on_paper.jpg

அலெக்ஸாந்தர் தட்டையான உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் பார்த்த கதை. உலகத்தின் கிழக்கிலிருந்து மேற்கு வரை ஆண்டவராக அலெக்ஸாந்தர் கருதப்பட்டார். அலெக்ஸாந்தரை அந்த காலத்தில் இரு கொம்புகளுள்ள அரசன் என்று அழைத்தார்கள்.

alexander_coin_250.jpg

 

alexander-horns.jpg

ஜூல்கர்னைன் என்று அரபிய பகுதிகளில் அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர்
எகிப்தை ஆக்கிரமித்ததும் அதன் பரோவாவாக தன் தலையில் இரண்டு கொம்புகளுள்ள ஆட்டின் கிரீடத்தை வைத்துகொண்டார்.

The story of Dhul-Qarnayn in the Qur’an (Sura The Cave 18:83-98) matches the Gog and Magog episode in the Romance, which has caused some controversy among Islamic scholars (see Alexander in the Qur’an). Alexander was identified in Persian and Arabic-language sources as “Dhû-’l Qarnayn”, Arabic for the “Horned One”, likely a reference to the ram horns Alexander wears on coins minted during his rule to indicate his descent from the Egyptian god Amun. Islamic accounts of the Alexander legend, particularly in Persia, combined the Pseudo- Callisthenes material with indigenous Sassanid Middle Persian ideas about Alexander. The Alexander Romance is the source of many incidents in Ferdowsi’s Shahnama.

இப்போது அலெக்ஸாந்தரின் வரலாறு தெரிந்துவிட்டது. அலெக்ஸாந்தர் கிழக்கில் இந்தியாவையும் மேற்கில் எகிப்து வரைக்கும் ஆண்டார் என்பது தெரிகிறது. ஆகவே தட்டையான உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே ஈமாந்தாரிகள் என்ன செய்யவேண்டும்? கரெக்ட்! மொஹம்மது சொல்ற ஜுல்கர்னைன் வேற அலெக்ஸாந்தர் வேறன்னு சாதிக்கணும். அப்புறம் எப்படி நம்ம அரபு யாகவா முனிவர் காகககக மொஹம்மது இப்னு அப்தல்லாவை காப்பாத்தறது?

இப்ப ஜுல் கர்னைன் உலகத்தோட கிழக்கையும் உலகத்தோட மேற்கையும் பாத்ததா மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்றாரே? அதெப்படி உலகத்தோட கிழக்கையும் உலகத்தோட மேற்கையும் பார்க்கமுடியும்னு செங்கொடி கேட்டாரு. கேட்டாரா? கேட்டு தொலைச்சாரு.. இதுக்கு ஓடுதுங்கண்ணே ஒரு நூறு பின்னூட்டம். ”அந்த வாழப்பழந்தான்னே இது” மாதிரி கேட்டு கேட்டு செங்கொடியே நொந்து நூடுல்ஸ் ஆய்ட்டாரு.

நாங்கள்ளாம் ஈமானுள்ள மூமின்களல்ல்லா? ஈமான்ந்தாரிக்கு என்ன முக்கியமான குறிக்கோள்? எதிராளியெ போட்டு கொழப்பு கொழப்புன்னு கொழப்பி, வரும் ஆனா வராது ரீதியில  பேசி என்னடா இது ரெண்டாவது வகை இலக்கியவாதி சொல்றது கூட புரிஞ்சிடும்போலருக்கேன்னு நெனைக்கிற மாதிரி பண்ணிப்புடுவோம்ல? சும்மாவா காக்கவலிப்பில் வந்த அல்லாஹ் ஏக்கத்துடன் எதாவது சிந்தித்து என்னை காப்பாற்ற மாட்டீர்களா என்று கெஞ்சோ கெஞ்சி என்று மொஹம்மது இப்னு அப்தல்லாவின் மூலமாக கேட்கிறான்?

அது மாதிரி யாகவா முனிவர், சிவசங்கர் பாபா, கண்ணுமணி மாதிரி முத வகை
பைத்தியத்தை பார்த்தாவது நாம பரிதாபப்படலாம். மவனே வா, எதோ கெட்டகாலம் உனக்கு தலையில் அடிபட்டு போச்சு. அச்சு பிச்சுன்னு எதாச்சும் சொல்லி உன்னோட கெட்டகாலத்தை, எங்களோட கெட்டகாலமாக்கிடாத கண்ணுன்னு சொல்லி சாப்பாடு போடலாம்.

அந்த பைத்தியம் சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்பி ஒரு கொலவெறி கும்பல் கெளம்புச்சின்னு வச்சிங்கங்க.. அப்புறம் கார்பன் கூட்டாளிலேர்ந்து பின்லாடன் வகையறா வரைக்கும் பாக்கலாம்.

அப்ப அது நம்ம கெட்டகாலம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. Dr.Zakir Naik. M.B.B.S says:

    Brother Ibnu Shakir,As-Salāmu `Alaykum, Peace be upon you.Alhamdullillah what a great Dawah. You have put it precisely. It is abnormal for a normal person to follow the revelations of The Great Quran. You have deceptively concealed the facts that shows the mental and physical state in which our Holy Prophet (Peace Be Upon Him)received the revelations. If one puts in order the said state and conditions, it will clearly lead to conclusion that our Holy Prophet(PBUH) was suffering from temporal epilepsy.I am unable to conjure up in which Daool Ul Madarasa did you study but I insist upon you to join our Islamic International School so as you can fully use your faculty of Al Thakkiya.Your are welcome to send your contributions to IRF.Alhamdullillah, I was by chance introduced to your wonderful blog by one of my Tamilian Dayi, who immensely helped me with the translation. I will be a regular visitor to your site.Please propagate The Glorious Quran as unchanged for 1400 years. May Allah (SWT) give you courage and wisdom to do so.Alhamdullillah. P.S. In the next four parts there will be a submission of our research papers published in irf.

  2. Dr.Zakir Naik. M.B.B.S says:

    Understanding MuhammadTemporal Lobe EpilepsyThe first to suspect that Muhammad had epilepsy was Halima, or herhusband, when Muhammad was just five years old. Theophanes,188 (752-817) aByzantine historian, was the first recorded scholar to claim that Muhammadsuffered from epilepsy. Today, we can confirm this claim.Temporal lobe epilepsy (TLE) was defined in 1985 by the InternationalLeague Against Epilepsy (ILAE) as a condition characterized by recurrentunprovoked seizures originating from the medial or lateral temporal lobe. Theseizures associated with TLE consist of simple partial seizures without loss ofawareness (with or without aura) and complex partial seizures (i.e., with loss ofawareness). The individual loses awareness during a complex partial seizurebecause the seizure spreads to involve both temporal lobes, which in turn causesimpairment of memory.189Muhammad’s seizures were of both kinds. Sometimes he fell and lostconsciousness and at other times he did not. One hadith reports that during theconstruction of the Ka’ba, before he received his prophetic intimation,Muhammad fell unconscious on the ground with both his eyes towards the sky.At the time he lost his senses.190 This is very much an epileptic seizure.The website emedicine.com says, “90% of patients with temporalinterictal epileptiform abnormalities on their EEG have a history of seizures.”We know that Muhammad had seizures since his childhood. He saw two men inwhite opening his chest and washing his heart with white snow. Americanneurosurgeon and a pioneer of brain surgery, Harvey Cushing, reports of a boywith a cystic glioma in the right temporal lobe resulted in a vivid threedimensional vision of a man dressed in white.191 The Irish-American neurologistRobert Foster Kennedy (1884-1952) was one of the first to identify vividly realhallucinations of an audio-visual nature, localized outside of the body as beingtemporal lobe in origin.192Talking about his youth, Muhammad said:I found myself among the boys of Quraish, carrying stones such as boys play with.We had all uncovered ourselves, each taking his shirt [a cloth wrap] and putting it188 Theophanes, 1007, Chronographia, vol. 1, p334189http://www.emedicine.com/NEURO/topic365.htm190 Sahih Bukhari, Volume, Book 26, Number 652191 Cushing: Brain 1921-1922 xliv p341192 Kennedy: Arch Int Med 1911 viii p317.Muhammad’s Ecstatic Experiences115round his neck as he carried the stones. I was going to and fro in the same way,when an unseen figure slapped me painfully saying, ‘Put your shirt on’ so I took itand fastened it on me, then began to carry the stones upon my neck, wearing myshirt, alone among my fellows.”193Isn’t it interesting that Muhammad’s hallucinatory companions were justas violent and abusive as he was?

  3. Dr.Zakir Naik. M.B.B.S says:

    The Symptoms of Temporal Lobe SeizureA seizure originating in the temporal lobe may be preceded by an aura orwarning symptom, such as abnormal sensations, epigastric sensations (a funnyfeeling in the stomach), hallucinations or illusions (vision, smells, tastes, orother sensory illusions), sensation of deja vu, recalled emotions or memories, orsudden and intense emotion not related to anything occurring at the time. Allthese symptoms were present during Muhammad’s seizures.The epileptic experience can be partial, during which consciousness ismaintained or partial complex, resulting in the loss or reduction ofconsciousness during the seizure or spell. Other symptoms include abnormalhead movements and forced turning of the eyes. This kind of seizure happenedto Muhammad during the construction of Ka’ba.Repetitive movements and rhythmic muscle contraction affecting oneside of the body, one arm, one leg, part of the face, or other isolated area are alsosymptoms of TLE. Other symptoms include, abdominal pain or discomfort,nausea, sweating, flushed face, rapid heart rate/pulse and changes in vision,speech, thought, awareness and personality. Of course, sensory hallucinations(visual, hearing, touch, etc.) are major symptoms.194Dr. Mogens Dam, an internationally noted Danish epileptologist andauthor of many books on the subject, defines simple partial seizures as follows:“Simple partial seizures with mental symptoms, which can be remembered,afterwards, have from ancient times been known as ‘aura’. They are oftenfollowed by a convulsion. They are often dream-like… He thinks that he isgoing mad.”195 Muhammad actually did think that he was going mad. It wasKhadijah who persuaded him otherwise.193 Sirat Rasoul p. 77194http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001399.htm195http://www.epilepsy.dk/Handbook/Mental-complications-uk.asp

  4. Dr.Zakir Naik. M.B.B.S says:

    This comment has been removed by the author.

  5. Dr.Zakir Naik. M.B.B.S says:

    This comment has been removed by the author.

  6. Dr.Zakir Naik. M.B.B.S says:

    This comment has been removed by the author.

  7. Dr.Zakir Naik. M.B.B.S says:

    Other Symptoms of TLEPeople with TLE tend to demonstrate some of these five interictal traits(between rather than during seizures).1. Hypergraphia: Hypergraphia is an obsessional phenomenon manifested bywriting extensive notes and diaries. Even though apparently illiterate,Muhammad composed the Qur’an, asking others to write it down for him.2. Hyper religiosity: Religious beliefs not only are intense, but may also beassociated with elaborate theological or cosmological theories. Patients may199 A.S. Tritton, Islam: Belief and Practice 1951, p. 16.200 Sahih Bukhari Volume 2, Book 22, Muhammad’s Ecstatic Experiences119believe that they have special divine guidance. Muhammad obviously hadan unusual degree of concern with philosophy and mysticism, which ledhim to invent a new religion.3. Clingingness: From the stories that talk about Muhammad’s attachment tohis uncle, when he was a boy and from other stories we can determine thatMuhammad was emotionally needy and that he was very offended whenrejected or abandoned.4. Altered interest in sex: Muhammad’s obsession with women indicates thathis interest in sex was heightened even though, as we shall see later, hisabilities may have diminished or entirely disappeared in his later life.5. Aggressiveness: The intense emotions are often labile, so that the patientmay exhibit great warmth at one time, whereas at another time, anger andirritability may evolve into rage and aggressive behavior. Muhammad wasat times friendly, particularly to his companions, but extremely shorttemperedand irritable to those whom he perceived as resisting his demands.Bukhari says: “If the Prophet disliked something, the sign of aversionwould appear on his face.”



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

குரானை நபி எழுதவில்லை என்று நான் கூறவில்லை. குரானை நபிதான் எழுதினார். ஆனால் தான் எழுதவில்லை என்று நம்பினார். டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அந்த கருத்துக்கள் பல கோடிக்கணக்கானவர்களை சமீப காலத்திலேயே கவர்ந்திருக்கின்றன. ஆகையால் உங்கள் வாதம் தவறு.//ஆனால் நீங்களும் நானும் அறியாத மலக்குகள் என்ற மூலத்தை வைத்து நபி முஹம்மது அவர்கள் ஏன் கூற வேண்டும்?//மலக்கு என்பது நாம் அறியாததல்ல. ஜிப்ரீல்தான் லூக் எழுதிய சுவிசேசத்திலும் வருகிறார். ஆகையால், கிறிஸ்துவ உறவினர்களை கொண்ட அவர் தனக்கு கிடைத்த முன் அனுமானங்களின் படி, தான் உணர்ந்தது, ஜீப்ரீலின் வருகை என்று நினைத்துகொள்கிறார். மனப்பிறழ்வினால் அந்த உணர்வு அதிகரிக்கிறது. தான் கூறுவதையெல்லாம் ஜிப்ரீலின் கூற்றாகவே கூற ஆரம்பிக்கிறார்.//இதைப்போன்ற நிலையில் ஒருவர் கூறும் நற்கருத்துக்களுக்கு தாம் உரிமையாளர் அல்ல என்று சொல்வதை விட மக்களின் மத்தியில் ஏற்படும் செல்வாக்குக்காக தாமே சொல்வதாகதானே இயல்பாக மனம் நாடும். //இல்லை. அவர் அன்றைய ஒருமைப்பட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களையே கூறுகிறார். ஆகையால் இன்னொருவர்மீது பழி போடுவதுதான் எளிது.//பொதுவாக எந்த ஒருவரும் எந்த ஒரு நிலையிலும் யாரையாவது எதையாவது ஒன்றை சார்ந்தே செயல்பட அல்லது பின்பற்றிதான் ஆக வேண்டும்//ஒருவர் மற்றவர் ஒருவரின் கருத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதும் உங்களது submissive மனத்தின் நிலைப்பாடுதான். சமூகமே எந்த ஒழுக்கப்பாடுகள் சரியானவை என்று தீர்மானிக்கிறது. தெருவில் எச்சில் துப்புவது தவறு என்றும் ஒரு சமூகத்தில் இருக்கலாம். எச்சில் துப்புவது தவறல்ல என்றும் மற்றொரு சமூகத்தில் இருக்கலாம். உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்பது அந்தந்த சமூகத்தின் தரத்துக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப மாறிகொண்டே இருக்கும். அது யாருக்கும் எந்த வித சிக்கலையும் கொண்டுவருவதில்லை.என்றென்றைக்கும் நிரந்தரமான விதிகள் என்று எதுவும் இல்லை. ஏனெனில், ஒரு கால கட்டத்துக்கு சரியான விதி மற்றொரு நாட்டில் மற்றொரு காலகட்டத்தில் தவறான விதியாக ஆகிவிடும். இது உங்களால் சிந்திக்க கடினமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நடைமுறையில் அவ்வளவு கடினமானது அல்ல. ரோட்டின் வலது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. ரோட்டின் இடது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. எது சரி என்பதை சுற்றியுள்ள சமூகமே நிர்ணயிக்கிறது. Inherently there is no moral association with either left or right. ஆனால், இடது கை பழக்கத்தை சாத்தானின் பழக்கம் என்று யாரோ சொல்லி submissive ஆக நம்ப ஆரம்பித்தால், அது தீவிரத்தன்மை அடையும்போது இடது கை பழக்கம் உள்ளவர்களை எல்லாம் ஒரு குழு கொல்வதில்தான் முடியும்.

அபு தாவூத் சஹிதான்.http://muttaqun.com/pregnancy.htmlஎல்லாஇடங்களிலும் மேற்கோள் காட்டப்படும் சஹி ஹதீஸ். ஆனால் இப்போதைக்கு தவ்ஹீத் அண்ணன் அள்ளி விட்டிருப்பதால், ஜூவனப்பிரியன் அது சஹி அல்ல என்பார்.

Muhammed Salih Al-Munajjid என்ன சொல்ரார்?http://islamqa.info/en/ref/427I would like to know more about female circumcision in Islam. I have read the ahadith where the Prophet told a woman how to perform it. I would like to know if it is optional or obligatory, and – if it is obligatory – whether there is a certain way to do it (what part should be cut?).கேள்வி மட்டும் கொடுக்கிறேன்.இதுவே கடுமையாய் இருக்கிறது.பதில் அங்கேயே போய் படியுங்கள்.இவருக்கு தெரியாத விடயமா நம்ம தமிழ் முமின்களுக்கு தெரிந்து விடும்.http://www.islamhouse.com/p/353498அரபிஅண்ணன் பெரிய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்காரு.இவருடன் அரபியில் நேருக்கு நேர் விவாதம் செய்ய தவுகீத் அண்ணன் தயாரா?

@சார்வாகன், சௌதியெல்லாம் போக வேண்டாம் . இங்கே பாருங்கள்.http://sufimanzil.org/articles/others/kidan-of-ladies

  1. மார்க்க விஷயத்தை அறிய அசிங்கப்பட கூடாது….சார்வாகன் லிங்கிலிருந்து…================================================I would like to know more about female circumcision in Islam. I have read the ahadith where the Prophet told a woman how to perform it. I would like to know if it is optional or obligatory, and – if it is obligatory – whether there is a certain way to do it (what part should be cut?).Praise be to Allah.Ibn Qudamah (may Allah have mercy on him) said, in his book al-Mughni: "Circumcision is obligatory for men, and it is an honour for women, but it is not obligatory for them. This is the opinion of many scholars. (Imam) Ahmad said: For men it is more strictly required, but for women it is less strictly required." (al-Mughni 1/70).Circumcision of the female consists of the removal of a part of the clitoris, which is situated above the opening of the urethra. The Sunnah is not to remove all of it, but only a part. (al-Mawsu‘ah al-Fiqhiyyah 19/28).In this matter, it is wise to follow the interests of the female: if the clitoris is large, then part of it should be removed, otherwise it should be left alone. This size of the clitoris will vary from woman to woman, and there may be differences between those from hot climates and those from cold climates.A hadith on the topic of female circumcision has been attributed to the Prophet (Peace and Blessings of Allah be upon Him), according to which he said: "Circumcision is a Sunnah for men, and an honour for women," but there is some debate as to the authenticity of this hadith. See Silsilah al-Ahadith al-Da‘ifah by al-Albani, no. 1935.How circumcision is to be performed is mentioned in the hadith narrated by Umm ‘Atiyah, may Allah be pleased with her, according to which a woman used to perform circumcisions in Madinah. The Prophet (Peace and Blessings of Allah be upon Him) told her: "Do not abuse (i.e. do not go to extremes in circumcising); that is better for the woman and more liked by her husband." (Reported by Abu Dawud in al-Sunan, Kitab al-Adab; he said this hadith is da‘if).The scholars’ opinions cited above should be sufficient explanation. And Allah knows best.Islam Q&A; Sheikh Muhammed Salih Al-Munajjid

  2. naren says:

    டமிலியன் லிங்கிலிருந்து……================================================பெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வது-Kidan of Ladies Detailsபெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வதுபெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும்.இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை.முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.'எவர் இஸ்லாத்தை தழுவுகிறாரோ அவர் கத்னா செய்து கொள்ளவும். அவர் பெரியவராக இருந்தாலும் சரியே என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும், உடம்புக்கு பாதிப்பில்லாத முறையில் கவனமாக இலகுவான முறையில் கத்னா செய்யுங்கள். ஏனெனில் கத்னா செய்வது முகத்தை மிகவும் செழிப்படையச் செய்யக் கூடியதாகவும், திருமணத்தின் போது மிகவும் இன்பமளிப்பதாகவும் இருக்கும்' என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஜல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும் அறிவிக்கும் ஹதீஸில் ,' ஆண் குறியில் கத்னா செய்யப்பட்ட (மொட்டுப் பகுதி) பெண் குறியில் கத்னா செய்யப்பட்ட பகுதியோடு இணைந்து விட்டால் குளிப்பு கடமையாகிவிடும் என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் 'கிதான்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.பித்ரத்- இயற்கை விசயமாகும் என்பதும் இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. கத்னா என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு கடமையாகும்.'ஐந்து விசயங்கள் பித்ரத் இயற்கையைச் சேர்ந்தது. அவைகளாவன: கத்னா செய்வது, மாமஸ்தான முடியை நீக்குவது, மேல் மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது, கக்கத்து முடியைப் பிடுங்குவது ஆகிய ஐந்துமாகும்.'பெண்களுக்கு கத்னா செய்வதின் அவசியம்:'கத்னா செய்வது நிச்சயமாக முகத்தை செழிப்புறச் செய்யும். திருமணத்தின் போது இன்பமாக இருக்கும்''நிச்சயமாக கத்னா செய்வது பெண்களுக்கு சங்கையானதாகும்' என்று ஹதீதுகளில் வந்திருக்கிறது.ஆணுக்குரிய கத்னாவை பகிரங்கமாகவும், பெண்களுக்குரிய கத்னாவை பகிரங்கப்படுத்தாமல் மறைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கும் விசயமாகும்.அத்துடன் ஆண் பிள்ளைக்கு பால் அருந்தக்கூடிய காலத்தில், பிள்ளை பிறந்து முதல் வாரத்தில் அல்லது அதற்கு பின்னால் செய்ய முடியும். பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதை அடைவதற்கு முன்பாக கத்னா செய்ய வேண்டும் என்பதாக ஹதீதுகள் தெளிவாக அறிவிக்கின்றன.1994 அக்டோபர் மாதத்தில் எகிப்திலிருந்து வெளிவரும் 'அல் அஸ்ஹர்' என்ற பத்திரிகையில் அல் கிதான்' என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை அஷ்ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் அவர்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கத்னா செய்வது இஸ்லாமிய இயற்கை விசயத்தில் உள்ளதாகும் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.எகிப்து தாருல் இப்தாவின் தலைவரான முஹம்மத் ஸெய்யித் தன்தாவி அவர்கள் கத்னா பற்றிய தெளிவான ஷரீஅத் சட்டங்களை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.இதில் மத்ஹப்களின் புகஹாக்களான சட்ட மேதைகளின் கூற்றுக்கள் ஒன்று பட்டதாகவே காணப்படுகின்றன.கத்னா செய்வது வாஜிபா-கட்டாய கடமையா? அல்லது ஸுன்னத்தா என்பதில்தான் கருத்து வேறுபாடு இமாம்கள் மத்தியில் நிலவுகிறது. இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் ஆண், பெண் இருபாலரும் கத்னா செய்வது சுன்னத்தாகும். பர்ளு –கட்டாய கடமையைப் போன்று அது கடமையாகாது என்றாலும் அதை விடுவதனால் அவன் பாவியாகிவிடுகிறான் என்கிறார்கள்.இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கத்னா செய்வது ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறார்கள்.'ஆண்கள் விசயத்தில் கத்னா வாஜிபாகும் என்பதாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் கத்னா விசயமாக இமாம் ஹன்பல் அவர்களிடமிருந்து இரு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான கூற்று பெண்களுக்கும் கத்னா 'வாஜிப்' கடமை என்பதாகும்….தொடரும்

  3. naren says:

    கத்னா செய்வதால் கிடைக்கும் சுகாதார பயன்கள்:1. பெண்களுகு;கு கத்னா செய்வது அலங்காரப்படுத்தும் ஒரு செயலாகும். இயற்கையான அளவை விட மேலதிகமாக காணப்படும் பகுதிகளை மாத்திரமே கத்னாவின் மூலம் நீக்கப்படுகிறது.2. இந்த கத்னா மேற்கொள்ளும் வேலை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. எனினும் விசேச வைத்தியர்களின் அறிவுரையின் பேரில் ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப கத்னா செய்ய வேண்டும்.3. கத்னா செய்யப்படாமல் மேலதிகமாக இருக்கும் பகுதியினால் சில பெண்களிடம் சுகாதாரத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கும் உடல் நலத்திற்கு கேட்டை உண்டாக்கும் நோய்கள் உண்டாகுவதற்கும் இடமுண்டு.4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் கத்னாவின் போது மென்மையாக நடந்து கொள்வீராக என்று சொன்னதன் மூலம் அறிவுப்பூர்வமான கத்னா முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.=======

    واللائي يئسن من المحيض من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثة اشهر واللائي لم يحضن واولات الاحمال اجلهن ان يضعن حملهن ومن يتق الله يجعل له من امره يسراYusuf Ali: Such of your women as have passed the age of monthly courses, for them the prescribed period, if ye have any doubts, is three months, and for those who have no courses (it is the same): for those who carry (life within their wombs), their period is until they deliver their burdens: and for those who fear Allah, He will make their path easy.65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் சிறுமிகளுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.ஆகவே நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா சாமியாடி, மாதவிடாயே ஏற்படாத சிறுமிகளை விவாகரத்து செய்வதற்கு கூட என்ன செய்யணும்னு சொல்லிக்கிறார்.ஆனால் சிறுமிகளை திருமணம் செய்வதை நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா தடை செய்தார் என்று இப்போதைக்கு நம்ம இபுராஹிம் தக்கியா செய்கிறார். அவருக்கு ஆறுவயசில் பொண்ணு இருக்கான்னு தெரியலை.எது இருந்தாலும் நான் கடவுள்கிட்ட பேசறேன்.. உன் பொண்ணை எனக்கு நிக்கா பண்ணிவையின்னு யாராவது காக்காவலிப்பில் உளறினால், உடனேநம்ம இபுராஹிம் தன் பொண்ணை அந்த அறுபது வயது கிழத்துக்கு நிக்கா பண்ணி வைத்துவிடுவார். சும்மாவா இப்போதும் கிழட்டு அரபு ஷேக்குகளுக்கு ஆறுவயது பெண்களை நம்ம ஈமாந்தாரிகள் மூணுநாளைக்கு நிக்காஹ் செய்துதருகிறார்கள்?எல்லா நபிவழியில்தான்.http://senkodi.wordpress.com/2012/01/04/islam-dower

    Robin says:

    S.Ibrahim, on ஜனவரி25, 2012 at 8:23 மாலை said: ///முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது, தன்னுடைய ஈரலின் ஒரு பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்./// நான் நாத்திகன் ,சம காலத்தில் உலகம் முழுவதும் இதுபோன்று திருமணம் நடந்துள்ளது.அதை மறுக்க நாதி இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பாட்டை படிக்க வேண்டாம்,.நபி[ஸல்] காலத்தில் தான் முதலில் பால்ய விவாகம் தடை செய்ய துவங்கினார்கள். ///உங்களிடம் இல்லாத எந்த ஆணாதிக்கம் முஸ்லிம்களிடம் இருக்கிறது? ஆணாதிக்கமில்லாமல் எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும்? ///பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. /// இதற்கு மாற்று தீர்வுகள் என்ன?அதை நீங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுத்தி காட்டி வருகிறீர்கள்?///// நான் நாத்திகன் செங்கொடி வாய் திறக்க மறுக்கிறார்,உங்களது நாத்திக கோட்ப[ஆட்டில் பதில் சொல்லுங்கள் .மழுப்ப மீண்டும் ஆயிஷா [ரலி]திருமணம் பற்றி ஆரம்பிக்காதீர்கள். Robin, on ஜனவரி26, 2012 at 6:49 AM said: சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன. எனவே அன்று அண்ணல் முகமது செய்தது சரிதான்!!! S.Ibrahim, on ஜனவரி26, 2012 at 8:04 மாலை said: ////சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன./// அவற்றுக்கு தணடனைகள் உண்டு Robin, on ஜனவரி27, 2012 at 7:11 AM said: //அவற்றுக்கு தணடனைகள் உண்டு// ஆனால் இதே தவறுகளை இறைத்தூதர் செய்தால் தண்டனை இல்லை. கலை, on ஜனவரி27, 2012 at 9:33 AM said: //.நபி[ஸல்] காலத்தில் தான் முதலில் பால்ய விவாகம் தடை செய்ய துவங்கினார்கள்.// ஒரு செயலை தடுப்பவர் அதே செயலை செய்வாரேயானால் அவரை எப்படி முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியும். என்னய்யா இது வேடிக்கையாக இருக்குது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருவ அமைப்பு!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அதிக நெட்டையாகவும், அதிகக் குட்டையாகவும் இருக்கவில்லை. நடுத்தர உயரமானவர்களாக இருந்தார்கள். அன்னார் முற்றிலும் வெளுத்த நிறமுடையவர்களாகவோ பொது நிறமுடையவர்களாகவோ இல்லாமல் அவ்விரண்டிற்கும் மத்தியில் ஓர் அழகான நிறமுடையவர்களாக இருந்தார்கள். அன்னாரின் மேனி (கோதுமை போன்ற) பொன்னிறமானது. அன்னாரின் மேனி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

அவர்களுடைய சிரசின் ரோமங்கள் முற்றிலும் சுருண்டவையாகவும், முற்றிலும் நேரானவையாகவும் இல்லாமல் அவ்விரண்டிற்கும் பொதுவான ஒரு நிலையில் இருந்தன. தலைமுடி அடர்ந்து காதுச் சோணை வரை தொங்கிக் கொண்டிருந்தது. தாடி நெருங்கி அடர்ந்திருக்கும். அன்னார் மறையும் போது அவர்களின் சிரசிலும், தாடியிலும் இருபது நரைகள் கூட கிடையாது.

அன்னாரின் இரு புயங்களுக்கு மத்தியில் ஓர் இலஞ்சானை (முத்திரை) இருந்தது. அது தடித்து துருத்திக் கொண்டிருந்த ஒரு சதைக் கட்டியாக இருந்தது.

அன்னாருடைய இரு புஜங்களுக்கும் மத்தியிலுள்ள மார்பகம் விசாலமாக இருந்தது. அன்னாரின் இரு அகங்கைகளும், உள்ளங்கால்களும் சதைப் பிடிப்புள்ளவைகளாயிருந்தன. அன்னாரின் சிரசு சற்று பெரிதாக இருந்தது. மொழிகள் பருத்து எலும்புத் தாக்குள்ளவர்களாகவும், நெஞ்சுக் குழியிலிருந்து தொப்புள் வரை ஒரு சிறு உரோமக் கொடி ஓடியவர்களாகவும் இருந்தனர். வதனம் சதைப் பிடிப்பால் தொங்கிக் கொண்டிராமல் சமமாயிருக்கும். வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும்.

விழிகள் நன்றாக கருத்தவை. வெள்ளை விழிகளிலே செவ்வரி படர்ந்திருக்கும். இமைகள் நீண்டவை. அடர்ந்த மெல்லிய வளை புருவம். இரு புருவங்களும் ஒன்றோடு ஒன்று சேராது விலகியிருந்தன. இரு புருவங்களுக்கு மத்தியில் ஓரளவு தாரளமான அகலமிருக்கும். மேனியில் அதிகமான ரோமங்கள் இல்லை. மார்பு, வயிறுகளில் ரோமங்கள் கிடையாது. தோள் புயம், நெஞ்சின் மேற்பாகம் ஆகியவற்றில் ரோமங்கள் இருக்கும். 

கரண்டைக் கை நீண்டிருக்கும். கை, கால் ஆகியவைகளின் விரல்கள்  பொருத்தமான நீளமுடையதாக இருக்கும். குதிக்கால் தசைப் பிடிப்பில்லாததாக இருக்கும். பாதக்கால் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் ஒப்புரவாக இருக்கும். ஆதலால் அவைகளில் தண்ணீர் பட்டால் எங்கும் தங்குவதில்லை. கரங்களும் பாதங்களும் தசைப் பிடிப்பானவைகளாக இருந்தன. நடக்கும்போது முன்புறமாக சிறிது கவிழ்ந்து பாதத்தை பூமியிலிருந்து பிடுங்கி எடுப்பது போல் அழுத்தமாக அடியெடுத்து நிலத்தில் மெதுவாக வைத்து நடப்பர். பார்வை எப்பொழுதும் கீழ் நோக்கியே இருக்கும்.

வாய் விரிந்தும் ஒடுங்கியும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும். முன் பற்கள் சற்று இடை விட்டவைகளாக இருந்தன. அன்னார் பேசும் போது அந்தப் பற்களிலிருந்து ஓர் ஒளி வீசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்.

ஒருவரைத் திரும்பிப் பார்;ப்பார்களாயின் முகத்தை மட்டும் திருப்பாமல் – தேகம் முழுவதையுமே திருப்பி விடுவார்கள்.

ஆதாரம்: 'ஷமாயில் திர்மிதீ' நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நித்யானந்தாவும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் – ஒரு ஒப்பீடு

நித்யானந்தாவையும் மொஹம்மதையும் எப்படி ஒப்பிடலாம் என்று மூமின்கள் சண்டைக்கு வரமாட்டார்கள். எப்போதுமே முகம்மதையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு எப்படி முகம்மது நல்லவர் வல்லவர் என்று சொல்வது ஒரு ஈமாந்தாரி வேலைதான்.

அதே போல நம்ம ஜூவனப்பிரியன் செய்வது போல, திருமந்திரத்தையும் அல்குரானையும் ஒப்பிட்டு எப்படி அல்குரானில் மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்னதும் திருமூலர் சொன்னதும் ஒரே மாதிரி இருக்கிறது. இருந்தாலும் திருமூலருக்கு முகம்மது நபியை தெரியவில்லை என்பதால் அவர் காபிர்..ஆகவே முகம்மது நபி சொன்ன  குரானை மட்டுமே நம்புவோம் என்று அழைப்பார்கள் நமது மூமின்கள். ஆகையால் எதையும் எதையும் ஒப்பிடுவது என்று வரை முறையே இல்லாமல் கண்டபடிக்கு ஒப்பிட்டு இஸ்லாத்தை பரப்புவோம் இல்லையா?.

இதுவும் அதே மாதிரி தாவாதான் இந்த தாவாவும். நித்தியானந்தா மீது இந்துக்களுக்கே மரியாதை கிடையாது (நித்யானந்தாவை நம்புபவர்களை தவிர) . ஆகையால் ரொம்ப ஈஸியாக எப்படி நித்யானந்தாவை விட மொஹம்மத் இப்னு அப்தல்லா சிறந்தவர் என்று காட்டுவது ஈஸிதானே? ஆகவே ஒற்றுமை வேற்றுமை எல்லாம் போட்டு பார்த்து ஒரு ஒப்ப £டு செய்துவிடுவோம். பிறகு நம்ம கண்ணுமணி மொஹம்மது இப்னு அப்தல்லா எப்படி நல்லவர் வல்லவர் சிறந்தவர் அழகானவர் என்றெல்லாம் புகழ்ந்து காபிர்களை இஸ்லாத்துக்கு அழைப்போம்.

http://en.wikipedia.org/wiki/Swami_Nithyananda

ஜனவரி 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலையில் பிறந்தார். அவருக்கு ராஜசேகரன் என்று பெயர் சூட்டினார்கள். பன்னிரண்டாம் வயதில் முதன் முதல் ஆன்மீக அனுபவம் அடைந்தார். பிறகு பல வருடங்கள் இந்தியாவெங்கும் சுற்றி பல துறவிகளையும் கண்டு ஞானம் பெற்ற பின்னா 2000ஆம் வருடம் அன்று நிரந்தர ஆனந்த நிலையை பெற்றதாக கூறிகொள்கிறார். ஆகவே தன்னை நித்யானந்தா (நித்யம் – நிரந்தரம்) என்று கூறிக்கொண்டார்.

இதன் பின்னால், த்யானபீடம் என்ற ஒரு ஆசிரமத்தை பெங்களூரில்  அமைத்து தன் போதனைகளை கூற ஆரம்பித்தார். தன் பெயரை பரம ஹம்ஸ நித்யானந்தா என்று குறிப்பிடுகிறார்.

மார்ச் 2 ஆம் தேதி 2010இல் நித்யானந்தாவும் முன்னாள் நடிகை ரஞ்சிதாவும் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ சன் டிவியால் வெளியிடப்பட்டது. ஒருவரின் அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிட்ட சன் டிவி கலாநிதி மாறன் கைது செய்யப்படவில்லை. ஒரு பெண்ணோடு குஜால் செய்ததற்காக நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.  பிறகு பெயிலில் வந்து இன்னும் யோகா சொல்லிகொடுத்துகொண்டிருக்கிறார். அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைவதாக தெரியவில்லை.

இன்றும் நித்யானந்தாவை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனிலிருந்து 10 மில்லியன் வரை என்று நித்யானந்தா ஆசிரமம் தெரிவிக்கிறது.

மிக மிக சுருக்கமான வரலாறு.

– இப்போது நம்ம கண்ணுமணி பற்றி சுருக்கமான வரலாறு. நம்ம கண்ணுமணியை பத்தி விலாவாரியாக எழுதி வைத்திருப்பதால் சுருக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

மொஹம்மத் இப்னு அப்தல்லா ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார். இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது. இவர் இவர் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். தாயார் பெயர் அமினா. இவர் ஆறு வயதாக இருக்கும்போது அவரும் போய் சேர்ந்துவிட்டார். இவர் தனது தாய்வழி தாத்தாவான அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார். தாத்தாவும் மண்டையை போட்ட பின்னால், மாமாவான அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்.

பிறகு கதீஜா என்ற பணக்கார பெண்ணின் மூன்றாவது கணவனாக ஆனார். (கதீஜாவின் முதல் இரண்டு கணவர்களும் இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று யாருக்கும் தெரியாது)  கத £ஜா பணக்கார வியாபாரியாக இருந்ததால், அவர் சார்பாக கதீஜாவின் வியாபார வண்டிகளை ஓட்டி பல நாடுகளுக்கு சென்று விற்பனை செய்துவந்தார்.

கிபி 610இல் அவருக்கு நாற்பது வயதாக இருக்கும்போது ஹிரா மலையில் ஜிப்ரீல் என்ற ஒரு தேவதையை பார்த்ததாக கூறிகொள்கிறார்.  அதன் பின்னால், அங்கே இருக்கும் கோவிலை இடிக்க வேண்டும், அதில் உள்ள சிலைகளை உடைக்க வேண்டும் என்று போதனை செய்ய ஆரம்பிக்கிறார். இதனால் அங்கே இருக்கும் சிலர் அவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள். பலர் இந்த ஆள் லூஸு என்று விலகுகிறார்கள். ஆனாலும் இவரை யாரும் கொல்லவில்லை. காரணம் இவர் பானு ஹஷிம் என்ற குலத்தை சேர்ந்தவர். பானு ஹஷிம் ஜாதியை சேர்ந்தவர் ஒருவரை வேறொரு ஜாதிக்காரர் கொன்றுவிட்டால், இரண்டு ஜாதிகளுக்கிடையே குத்துவெட்டு நடக்கும். ஜாதி பாசம்! இதனால் பானு ஹஷிம் ஜாதி தைரியத்திலும் கதீஜா என்ற பணக்கார பொண்டாட்டியின் சொத்து தைரியத்திலும் நம்ம கண்ணுமணி விட்டு விளாசிக்கொண்டிருந்தார்.  பனு ஹஷிம் தலைமை இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபிடம் இருந்தது. குரேஷி என்ற பெரிய  ஜாதிக்குள் பனு ஹஷிம், பனு அப்த் ஷம்ஸ் என்று சின்ன சின்ன ஜாதிகள் உண்டு. (முக்குலத்தோர் ஜாதிக்குள் தேவர் ஜாதி, மறவர் ஜாதி என்று உப ஜாதிகள் இருப்பது போல)  619இல் இவரது மனைவி கதீஜாவும் இறந்தார். அதே நேரத்தில் இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபும் இறந்தார். உடனே பனு ஹஷிம் தலைமை அபு லஹப்பிடம் வந்தது. அபு லஹப் உடனே, பனு ஹஷிம் ஜாதி பாதுகாப்பு முகம்மதுவுக்கு கிடையாது என்று அறிவித்துவிட்டார். கெட்டது குடி. நம்ம கண்ணுமணிக்கு வயிறெறிஞ்சி அபு லஹப் மேல சாபம் உட்டு கண்டபடி திட்டினார். அப்புறம் கண்ணுமணி மேல அல்லா சாமி வந்து ஆடி அபு லஹபை திட்டி, குரான்ல எழுதி,  இன்னிக்கும் நம்ம மூமின்கள் அபு லஹபை திட்டிகொண்டிருக்கிறார்கள்.  பாதுகாப்பு இல்லாம எப்படி மெக்காவை உடைக்கணும், அங்க இருக்கிற சிலையெல்லாம் உடைக்கணும்னு பேச முடியும். அவனவன் கடுப்பில இருக்கான். வேற ஊருக்கு கிளம்பிற வேண்டியதுதான்னு நம்ம கண்ணுமணி முடிவு செஞ்சார்.

மக்கா ஊரில் கடை போணியாகவில்லை என்று வேறெதாவது ஊருக்கு போகலாம் என்று அபிசீனியா யாத்ரிப் என்று ஊரெல்லாம் தேடி, கடைசியில் யூதர்களின் ஊரான யாத்ரிப் ஊருக்கு போய் தங்குகிறார். அங்கே இருக்கும் பணக்கார யூதர்களின் கீழ் அன்சாரிகள் என்ற அரபியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களும் இவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள்.

கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும், மெக்காவில் இருக்கும் பணக்காரர்களது வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா பிறக்கிறது. ஆகவே இந்த புதிய கூட்டத்தை வைத்து மெக்காவிலிருந்து போகும் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க துவங்குகிறார். இதனால் அவரிடமிருக்கும் கொள்ளைக்கூட்டம் பெரியதாகிறது.  கிபி 624இல் மொஹம்மத் இப்னு அப்தல்லாவே ஒரு பெரிய முஸ்ல £ம் கொள்ளைக்கூட்டத்தை தலைமை தாங்கி வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க கிளம்புகிறார்.

இவர் கொள்ளையடிக்க கொள்ளையடிக்க, குரேஷிகள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்புக்கு என்று ஆயிரம் பேர்களை வியாபார வண்டிகளோடு அனுப்புகிறார்கள். முன்னூறு முஸ்லீம் கொள்ளைக்காரர்களும் ஆயிரம் சோப்ளாங்கிகளும் மோதியதில் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் வெற்றிபெறுகிறது. இதுவே பதர் போர் என்று மூமின்களால் குஷியுடன்அழைக்கப்படுகிறது.

பதர் போரினால் கிடைத்த ஏராளமான கொள்ளைப்பணத்தால் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் பெருக ஆரம்பித்தது. வியாபாரிகளிடமிருந்து கொள்ளையடித்ததை எப்படி பகிர்ந்துகொள்வது என்று அல்லாஹ் இப்போது இறைவசனமெல்லாம் இறக்குகிறார்.  இதனால், மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார். இப்போதுதான் தன்னை கிண்டல் செய்த  அஸ்மா பிந்த் மர்வான், அபு அபக் போன்ற கவிஞர்களை த £ர்த்துக்கட்டினார்.

யாத்ரிப் நகரில் எந்த அராபியரும் வரும் முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை எல்லாம் த £ர்த்துக்கட்டவும் முடிவு செய்தார்.  ஒரு முஸ்லீமுக்கும் ஒரு யூதருக்கும் நடந்த தகராறை காரணமாக வைத்து பனு கனுக்கா Banu Qaynuqa என்ற யூதர்கள் அனைவரையும் தலையை துண்டிக்க ஆணையிட்டார். கஸ்ராஜ் என்ற ஜாதியின் தலைவர் அப்துல்லா இப்னு உபய், இவர்களை கொல்லக்கூடாது என்று மறுத்ததால் இவர்கள் தலை தப்பியது. இவர்கள் யாத்ரிபிலிருந்து துரத்தப்பட்டார்கள்.

இதனால் ரொம்ப குஷியான மொஹம்மத் இன்னொரு வியாபார வண்டி கூட்டத்தை உஹுத் என்னுமிடத்தில் தாக்கியபோது முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்தது. இந்த போரில் முகம்மதுவும் காயமடைந்தார்.

இப்போது ஒரு  யூத கவிஞர் முகம்மது தோல்வியடைந்ததை கிண்டல் செய்து பாடினார். பனு நதிர் என்ற யூத குலத்தை சேர்ந்த  கப் இப்னு அல் அஷ்ரப் என்ற இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆளை அனுப்பி த £ர்த்து கட்டினார். பனு நதிர் என்பது யாத்ரிப் (மெதீனாவில்) இருந்த இன்னொரு யூத குலம். இவர்கள் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக்கி அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.  இவர்களது சோலைவனத்தை முற்றுகையிட்டு பத்தே நாளில் மெதீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். பதினான்கு நாட்களுக்கு பிறகு பானு நதிர் சரண்டைந்தார்கள்.  ஒட்டகத்தில் எடுத்துகொண்டு போகக்கூடியதை மட்டும் எடுத்துகொண்டு ஓடுங்கள் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னதும் அப்படியே ஓடினார்கள். சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.

துரத்தப்பட்டவர்கள் மெக்காவுக்கு சென்று உதவி கேட்டார்கள். இவ்வாறு மெக்காவிலிருந்து வியாபாரமே நடக்கமுடியாமல் கொள்ளையடித்துகொண்டே இருந்தததால், கடுப்பான மெக்காவாசிகளும்  படையை திரட்டிக்கொண்டு மெதீனாவை தாக்க வந்தார்கள். மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் மெதீனாவை  (முன்னாள் யாத்ரிப்) சுற்றி பள்ளம் தோண்டி மெக்கா படை உள்ளே வரமுடியாமல் செய்தது. இந்த அகழியை தாண்டமுடியாமல் மெக்கா படை பின்வாங்கி மெக்காவுக்கு சென்றது. மெதீனாவில் இருந்த முஸ்லீம்  கொள்ளைக்கூட்டம் ஒரே குஷியாகிவிட்டது.

திடீரென்று நம்ம கண்ணுமணிக்கு மெக்காவுக்கு எல்லோரும் போய் உம்ரா செய்றமாதிரி நாமளும் செய்யணும்னு ஆசை வந்திச்சி. காரணம் இருக்கு. மெக்காவை டேக் ஓவர் பண்ணனும்னா நாமளும் மெக்கா கோவிலுக்கு மரியாதை செய்யணும்னு தோணிடிச்சி. ஆக இவரு கொஞ்ச பேரோட உம்ரா கிளம்புனார். சரி இவரும் எதோ சமாதானம் பேசறார். விடுவோம் என்று குரேஷிகளும் ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது ஒருவரோடு ஒருவர் பத்துவருடங்கள் சண்டை போடக்கூடாது என்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் பெயர் ஹூதைபியா ஒப்பந்தம்.

மெக்காவோட குரேஷிகளோடு தானே போர் புரியக்கூடாது? நம்ம அங்கண இங்கண இருக்கிற யூதர்களை கொள்ளையடிப்போம் என்று கண்னுமணி கிளம்பி கைபருக்கு போனார். கைபரும் ஒரு யூதர்களது குடியிருப்பு. இங்கே பாலைவனத்தை சோலைவனமாக்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த யூதர்களை முற்றுகையிட்டார். இறுதியில் சரணடைந்த யூதர்கள் விளைச்சலில் பாதியை முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கப்பமாக செலுத்திவிடுகிறோம் என்று ஒப்புகொண்டனர். ஆக ஒன்றுமே செய்யாமல் முஸ்லீம்கள் அடுத்தவர் உழைப்பில் சுகமாக வாழ்வது இங்கிருந்துதான் என்று தெரிகிறது. இதுவே ஜிஸ்யா என்றும் அழைக்கப்படுகிறது.

(கைபர் போர் நாம ரொம்ப ஞாபகம் வச்சிக்க வேண்டிய போர். காரணம் அவர் சாக அதுதான் காரணம். அங்க ஒரு கிழவி கொடுத்த ஆட்டுக்கறியை தின்னுதான் கண்ணுமணிக்கு வியாதி வருது. பின்னாடி அதப்பத்தி எழுதறேன்)

இப்ப வேலையே செய்யாம கை நிறைய காசு. எவனோ உழைக்கிறான். ஒன்னுமே செய்யாம, வெளைச்சல்ல பாதி நமக்குன்னா எப்படி இருக்கும்! கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது. கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது. கத்தியெடுத்த கை சும்மா இருக்குமா? அரிக்குது. பத்தாண்டு ஒப்பந்தம் போட்டுட்டமே எப்படி சும்மா இருக்கிறது. அல்லாவை கூப்பிட்டு அதனை ரத்து பண்ணினார். கிபி 630இல் மெக்காவை கைப்பற்ற ஏராளமான முஸ்லீம் படைகளோடு கிளம்பினார். பத்தாயிரத்துக்கும் மேல் இந்த கூட்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மிக எளிதில் மெக்காவை கைப்பற்றினார். தன் மீது கிண்டல் கவிதைகள் பாடியவர்களை முதலில் தலையை துண்டித்தார். இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்றால் தலை இருக்காது என்று அறிவித்ததும், மெக்காவாசிகள் மனமுவந்து இஸ்லாத்தை தழுவினார்கள். மெக்கா கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தார். முக்கியமான சிலையான ஹுபாலை எடுத்து மெக்கா கோவிலுக்குள் நுழையும் படிக்கட்டில் போட்டார். இன்னமும் அந்த சிலை மீது நடந்துதான் மெக்காவுக்கு உள்ளே போகிறார்கள் மூமின்கள்.

பனு ஹவாஜின் என்ற கூட்டம் மெக்காவின் குரேஷிகளுக்கு பழைய விரோதிகள். அவர்கள் மெக்காவை தாக்க வருகிறார்கள். அந்த போரில் முஸ்லீம் படை வெற்றி பெறுகிறது.

வடக்கு அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லீம் படை முட்டா போரில் தோல்வி அடைந்தது.

632இல் மெதீனாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார் முகம்மது.  அதன் பின் சில நாட்களிலேயே ஜுரம் தலைவலி பலவீனம் அடைந்து திங்கட்கிழமை ஜூன் 8 ஆம் தேதி கிபி 632இல் செத்தார்.

அவர் மரணமடைந்த அயீஷாவின் வீட்டிலேயே புதைக்கப்பட்டார். இஸ்லாமின் மூலம் பல செல்வங்களை அடைந்த முஸ்லீம்கள் அந்த கல்லறைக்கு தங்கம் வைரம் என்று போர்த்தினார்கள். 1805இல் இப்னு சவுத், அரேபியாவுக்கு அரசராக ஆனதும், அரேபியாவின் பெயரை சவுதி அரேபியா என்று மாற்றினார். மெதீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கல்லறைகளை இடித்தார். முகம்மதுவின் கல்லறை மட்டுமே தப்பியிருந்தது. ஆனாலும் அதிலிருந்து எல்லா தங்கம் வைரம் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு போய்விட்டார்.  இருந்தாலும் ஏராளமான அரேபியர்கள் ஜியாரத் செய்கிறார்கள்.

அவருக்கு பின் அபு பக்ர் தலைவரானார். அதற்குள் ஏராளமான அரேபியர்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவித்துவிட்டார்கள். அபு பக்ர் கடுப்பாகி இஸ்லாமிலிருந்து எவன் வெளியேறினாலும் முகம்மது சொன்ன மாதிரி கழுத்தை வெட்டு என்று போர் துவங்கினார். இது ரித்தா போர்கள் என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கு மேல் அரபியர்களை கொன்று இஸ்லாம் மதம் காப்பாற்றப்பட்டது. ஆகவே அபு பக்ர் மட்டும் இல்லையென்றால் இஸ்லாம் இல்லை என்று சொல்லலாம்.

இந்த மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற அரபியரை சுமார் 1.5 பில்லியன் பேர் பின்பற்றுவதாக விக்கிபீடியா சொல்கிறது.

– சே என்னதான் சுருங்க எழுதனும்னு நெனச்சாலும் அது ரொம்ப நீளமா போய்டிச்சி. இருந்தாலும் தெரிஞ்சிக்கிறது நல்லதுதான். ஏனென்றால், நம்ம மூமின்களுக்கே பல விஷயங்கள் தெரியாது.

ஓக்கே.

இப்போது இரண்டு பேரின் கதைகளையும் பார்த்துவிட்டீர்கள்.

இப்போது ஒப்பிடுவோம்.

ஒற்றுமைகள்

நித்யானந்தா தனது முதல் ஆன்மீக அனுபவத்தை ஒரு மலையில்தான் பெற்றார். மலை திருவண்ணாமலை. மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் மலக்கு ஜிப்ரீல் (வானவர்) தன்னிடம் முதலில் பேசியது ஒரு மலையில்தான் என்று கூறினார். மலை ஜபல் அந்நூர்.

ஆன்மீக அனுபவத்துக்கு பின்னாடி நித்யானந்தா ஊர் ஊராக போயிருக்கிறார். இந்தியாவெங்கும் சுற்றியிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா ஜிப்ரீல் கட்டிப்புடிக்கிறதுக்கு முன்னாடி ஊர் ஊராக நாடு நாடாக போயிருக்கிறார். ஆன்மீக அனுபவத்துக்கோ அல்லது ஞானத்துக்கோ அல்ல. வியாபாரம் செய்ய. கதீஜாவின் வியாபாரியாக.

நித்யானந்தா பெரிய பணக்காரர். ஏராளமான சீடர்கள் அவருக்கு அளிக்கும் அன்பளிப்புகளை வைத்து சேவை செய்கிறார். அவரும் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிகொள்கிறார். மொஹம்ம்த் இப்னு அப்தல்லா கதீஜாவை திருமணம் செய்தபின்னால் பணக்காரர். அப்புறம் கொள்ளையடித்து நிறைய காசு சேர்த்திருக்கிறார்.  பொதுவாக ஐந்தில் ஒரு பாகம் கொள்ளைக்கூட்ட தலைவருக்கு என்று முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் அடிப்பதில் எல்லாம் பங்கு வாங்கியிருக்கிறார்.

வித்தியாசங்கள்

நித்யானந்தா மற்றவர்களின் மதம் எதனையும் அவதூறு செய்யவில்லை. கிண்டல் செய்யவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அரபியர்களின் பாரம்பரிய மதத்தை திட்டுவதே தொழிலாக செய்திருக்கிறார். யூதர்களை குரங்குகள் பன்றிகள் என்றெல்லாம் திட்டியிருக்கிறார்.

நித்யானந்தா தன்னை பரமஹம்ஸர் என்று நம்பாதவர்களை திட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை இறைதூதர் என்று நம்பாதவர்களை எல்லாம் நாயே பேயே என்றுதிட்டியிருக்கிறார்.

தான் சொன்னபடி வழிபடாதர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று நித்யானந்தா  சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார்

தனது ஆஸிரமம் தவிர மற்ற வழிபாட்டு தலங்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்று நித்யானந்தா  சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடும் கோவில்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கோவில்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா  சொல்லியிருக்கிறார். அவரே புள்ளி குத்தி மற்றவர்களின் வழிபாட்டு தலங்கள் ஏராளமானவற்றை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார். அவர் சொல்லி அவரது சீடர்களும் ஏராளமான கோவில்கள் சர்ச்சுகளை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அவற்றின் மீது மசூதிகளை கட்டியிருக்கிறார்கள்.

தன் சீடர்களை  மெட்ராஸ் – பெங்களூர் ரோடில் நின்றுகொண்டு வரும் போகும் லாரிகளையெல்லாம் கொள்ளையடி என்று நித்யானந்தா சொல்லி அனுப்பவில்லை மெக்காவிலிருந்து போகும் வரும் வியாபார வண்டிகளை எல்லாம் கொள்ளையடிக்க தன் சீடர்களை மொஹம்மத் இப்னு அப்தல்லா அனுப்பியிருக்கிறார். இப்போதும் அவரை பின்பற்றி சோமாலிய கொள்ளையர்கள் வரும் போகும் கப்பலையெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்.

நித்யானந்தா நமக்கு தெரிந்து ஒரே ஒரு அரைக்கிழவியை போட்டிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா கொள்ளையடிக்கும்போதும், எதிரிகளை ஆக்கிரமித்து அழிக்கும்போது அங்கங்கே இருக்கும் அழகான பெண்களை எல்லாம் அமுக்கியிருக்கிறார். கதீஜா பிந்த் குவாய்லித், சாவ்தா பிந்த் ஜமா, அயிஷா பிந்த் அபு பக்ர், ஹப்ஸ பிந்த் உமர், ஜைனப் பிந்த் குஷமா, ஹிந்த் பிந்த் அபி உமயா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜூவாரியா பிந்த் அல் ஹரித், ரய்ஹானா பிந்த் ஜைய்த், சபியா பிந்த் ஹூவாய், ரம்லா பிந்த் அபி சூஃப்யான், மரியா அல் குதிபியா, மைமுனா பிந்த் அல் ஹரித் என்று அதிகாரபூர்வமான மனைவிகள். இதில் தனது சீடரான அபு பக்கரின் மகளான ஆறு வயது அயீஷா, இன்னொரு சீடரான உமரின் மகள் ஹப்ஸா,  தத்து மகனின் மனைவியான ஜைனப் போன்றோரு அடக்கம்.  இது தவிர ஏராளமான கற்பழிப்புகள், அடிமைப்பெண்களோடு உறவு என்று பட்டையை கிளப்பியிருக்கிறார் மொஹம்மத் இப்னு அப்தல்லா

நித்யானந்தா இதுவரை யாரையும் கொல்லவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் ஞாபகம் வச்சி தீர்த்து கட்டியிருக்கிறார். ஒரே நேரத்தில் அறுநூறு ஆண் யூதர்களை கொன்று அவர்களது குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக விற்றிருக்கிறார்.

நித்யானந்தா அடிமை வியாபாரம் செய்யவில்லை. அடிமைகளை வாங்கவும் இல்லை. மற்றவர்களை அடிமைகளாக்கி விற்கவும் இல்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு ஊரை கொள்ளையடிப்பது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்குத்தான். ஒன்று அங்கிருக்கும் செல்வங்களை அபகரிப்பது. அங்கிருக்கும் ஆண்களை கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்று காசு பண்ணுவது.

நித்யானந்தா இதுவரை தன்னை விமர்சனம் செய்யும் எவரையும் போட்டு தள்ளவில்லை. அவரை கிண்டல் செய்யும் மூமின் பிளாக்கர்களையும் திமுக தொண்டர்களையும் ஆளை வைத்து தீர்த்து கட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அவரை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர், அபு அபக் என்ற கிழவர், இன்னும் தன்னை கிண்டல் செய்த ஏராளமான மெக்கா வாசிகளை தன்னை கிண்டல் செய்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீர்த்து கட்டியிருக்கிறார்.

நித்யானந்தா இதுவரை யாரையும் கற்பழித்ததாக தெரியவில்லை. அந்த அரைக்கிழம் கூட தானாக வந்து குஜால் பண்ணிக்கொண்டிருக்கிற மாதிரிதான் தெரிகிறது. மொஹம்மத் இப்னு அப்தல்லா பலரை கற்பழித்தது மட்டுமல்ல, எப்படியெல்லாம் கற்பழிக்கலாம் என்பதையும் மூமின்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

நித்யானந்தாவிடம் சீடராக இருந்துவிட்டு ஆள் சரியில்லை என்று போனவர்களை நித்யானந்தா ஒன்றும் செய்யவில்லை. ஆனால், மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் சீடராக இருந்துவிட்டு ஆள் சரியில்லை என்று வெளியேறியவர்களை மொஹம்மத் இப்னு அப்தல்லா ஆளை வைத்து தீர்த்து கட்டியிருக்கிறார். அவரை பின்பற்றி அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் சீடர்களும், கும்பலிலிருந்து யாரேனும் வெளியேறினால் தீர்த்துகட்டு என்று அவரது வழியை பின்பற்றுகிறார்கள்.

ஆகவே இந்த ஒப்பீடு மூலம் நாம் அறிவது என்னவென்றால், மொஹம்மது இப்னு அப்தல்லா என்ற அராபியருக்கு ஒரு கால்தூசு பெறமாட்டார் இந்த நித்யானந்தா.

ஒரு கொள்ளை உண்டா? ஒரு கொலை உண்டா? ஒரு கற்பழிப்புத்தான் உண்டா? இப்படி சோப்ளாங்கியாக இருந்துகொண்டு அவரவர் மனசாட்சியே கடவுள் என்றெல்லாம் உளறும் நித்யானந்தா எங்கே, மொஹம்மது இப்னு அப்தல்லாவின் மனம் மட்டுமே கடவுள் என்று கூறிய மொஹம்மது இப்னு அப்தல்லா எங்கே? (மொஹம்மத் இப்னு அப்தல்லாகிட்ட மனசாட்சியெல்லாம் கிடையாது. வெறும் மனம்தான்)

தன்னை கேவலப்படுத்தியவர்களை ஆளை வைத்து அடிக்கக்கூட துப்பில்லாத நித்யானந்தா எங்கே, தன்னை கிண்டல் செய்து பாடிய கவிஞர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டிய மொஹம்மது இப்னு அப்தல்லா எங்கே?

தன் சீடர்களின் ஆறுவயது குழந்தைகளை கூட லவுட்டிய மொஹம்மது இப்னு அப்தல்லா எங்கே, அரைக்கிழத்தை கூட உருப்படியாக போட துப்பில்லாத நித்யானந்தா எங்கே?

ஆகவே நாம் இன்னும் மொஹம்மது இப்னு அப்தல்லாவின் அருமை பெருமைகளை புகழ்ந்து பேசி பரப்புவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

suvanappiriyan on February 9, 2012 at 3:19 am

//தினம் நீங்கள் நமாஸில் சொல்லும் வாசகம்தான் என்ன ? சற்று தமிழில் விளக்கமுடியுமா?//

அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் : முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவனில்லை

 

திரு.சுவனபிரியன்
தங்களது நமாஸ் பற்றிய தமிழ் விளக்கம் தந்ததற்கு எனது நன்றியை முதலில் சொல்லிக்கொள்கிறேன். தமிழில் ஏன் நமாஸ் சொல்லகூடாது என்பதன் விளக்கம் மூக்கைசுத்தி தொடுவதாக உள்ளது. அது எனக்கு ஏற்புடையது அல்ல அதைபற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை. நமாஸ் விளக்கம் –
1.இறைவன் மிக பெரியவன்
2.ஏக இறைவனைதவிர வேறு இறைவன் இல்லை
3.முஹமது அவர்கள் இறைவனின் தூதன்
4.தொழுகையின் பக்கம் வாருங்கள்
5.வெற்றியின் பக்கம் வாருங்கள்
இதைதான் திரும்ப திரும்ப சொல்வதாக சொல்கிறீர்கள். வீக்கியில் உள்ள விளக்கம் இவ்வாறு உள்ளது –
1. God is greatest
2. I bear witness that there is no God except Allah
3. I bear witness that Mohammad is God’s messenger
4. Come to Salat (Prayer worship)
5. Come to success
There is no God except Allah (la ilaha illallah)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

suvanappiriyan on February 19, 2012 at 5:28 pm

//களிமிகு கணபதி on February 19, 2012 at 11:39 am
முஹம்மத் அவர்கள்தான் இறுதித் தூதர். அவர் மூலம் வெளியாகிய அல் குர்ஆனே இதை சொல்லும்போது வேறு ஆதாரங்கள் தேவை இல்லை. ஏனெனில், அல் குர்ஆனே இறுதி ஆதாரம் என்று முஹமத் அவர்களே சொல்லி விட்டார்.//

தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன
முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
கண்ணியமே வருமே

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம்.)

பவிஸ்ய புராணம்

‘இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா – பிரதி சரக் பர்வ் – காண்டம் 3 – அத்தியாயம் 3 – ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

——————————————————
‘அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.’

- சாம வேதம் – இந்திரா அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

——————————————————–

அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம் அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம் அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய பூர்வம் மாயா பரமந்த ரிஷா அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம் இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன ஸித்தான ஜலசாரன் அதிர்டம் குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ் அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா

- அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10

தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறைவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Sarang on February 20, 2012 at 12:03 pm

சுவனப்ரியன் சூப்பர் மா

எதையோ எடைக்கு மடக்கா சொல்லி பாரு வேடத்துல அல்லா கீறாரு அப்படிங்க வேண்டியது. மொதல்ல மேட்டர் நபிகளை பற்றினது – அதை இன்னும் நீங்கள் சுட்டிக் காட்டவில்லை.

தொல்காப்பியம் என்ன அதற்க்கு முன் கூட வேதங்கள் பிரம்மம் உருவமற்றது என்று தான் சொல்கிறது.

அல்லா உருவமற்றவர் என்று எங்கே உள்ளது. அவரது உருவத்தை பார்க்க முடியாது என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள் (ரெம்ப பயன்கரமானவராத்தான் இருக்கணும்). உருவம் இல்லாது ஒரு ஆசாமி ஏழு சுவர்க்கத்தின் மேல் அரசில் எப்படி அமர்ந்திருக்க முடியும்?

பவிஷ்யத் புராணம் வேதமல்ல. நீங்கள் எடுத்து விடுவது பரங்கியன் விட்ட சரடு பவிஷ்யத் புராணம் <IMG SRC=" style="height:auto;" />

அல்லா உபநிஷத்? எழுதினது யாரு வேத வ்யாசரா

நான் கூட ஒரு உபநிஷத் (சுவப்ரியோபநிஷத்) என்று எழுதி சாம வேதஹ்தில் சேற்று விட விடமுடியும். இது என்னமோ வடிவேலை வைத்து பாச மலர் பார்ட் டு எடுக்குற மாதிரி தான்.

நீங்கள் கொடுத்துள்ள அல்லா உபநிஷத் ச்லோகத்திருக்கும் நீங்கள் சொல்லும் அர்த்தத்திற்கும் ரெம்ப தூரம்.

ச்லோகஹ்திலேயே இலக்கண பிழை (குர்ஆனில் அதிகம் உள்ளது போல).

உதாரணம் : இந்திராய பூர்வம், இது இந்திராத் பூர்வம் என்றிருக்க வேண்டும். அந்த வரி பூரா அபத்தம்.

அல்லோ ஜ்யேஷ்டம் என்றால் அல்லா முழுமையானவர் என்றல்ல அல்லா வயசானவர் என்று பொருள் <IMG SRC=" style="height:auto;" /> போன போவுதுன்னு சொன்ன அல்லா பெரியவர் என்று அர்த்தம். அதுவு அல்லோ அல்ல அல்லா என்று தான் இருக்க வேண்டும்.

ஸ்லோகத்தில் சந்தஸ் ஓட்டவே வில்லை

அல்ல என்பது அரபு மொழியில் கடவுளை குறிக்கும் சொல் தானே. அது சமஸ்க்ரிதஹ்தில் இல்லை. இது மாதிரிச்வர்கத்தில் இருக்கு தேவிவங்களுக்கு சமஸ்க்ரிதத்தில் தேவாதஹ என்று பெயர். அல்லா என்பது சமச்கித சொல் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

குமரன் on February 20, 2012 at 6:39 pm

// தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன
முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
கண்ணியமே வருமே

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம்.) //

சுவனப்பிரியன்,

தொல்காப்பியரின் அகத்திணைப் பாடல்,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

இதற்கான விளக்கமும் கொடுங்கள்..



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

suvanappiriyan on February 21, 2012 at 12:02 pm

திரு குமரன்!

//சுவனப்பிரியன்,
தொல்காப்பியரின் அகத்திணைப் பாடல்,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
இதற்கான விளக்கமும் கொடுங்கள்..//

‘ மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.’

இறைவனின் ஆற்றலை விளக்க இந்த பாடல் பயன்படுகிறது. உதாரணமாக ரிக் வேதத்தில் வரும் ஒரு வரியை பார்ப்போம்.

‘ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்’
-ரிக் வேதம் (1:164:46)

இறைவனை பலர் ‘பிரம்மா’ அதாவது ‘படைப்பாளன்’ என்று கூறுகின்றனர். அதேபோல் இறைவனை ‘விஷ்னு’ அதாவது ‘பரிபாலிப்பவன்’ என்றும் கூறுகிறோம். இது போல் இறைவனுடைய ஆற்றலை நாம் தவறாக ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து அதை தனி கடவுளாக்கி விட்டோம்.
‘முருகன்’ என்ற சொல்லுக்கு ‘அழகிய தோற்றமுடையவன்’ என்ற பொருள் வரும். நம்மை படைத்த இறைவனும் அழகிய தோற்றம் உடையவனே! இந்த பண்புகளைத்தான் இங்கு தொல்காப்பியர் உதாரணமாக விளக்குகிறார்.

ஆனால் வழக்கில் நாம் விஷ்ணுவுக்கு நான்கு கைகளையும் கைகளில் சக்கரமும், பிரம்மனுக்கு நான்கு தலைகளையும், முருகனுக்கு நாமாக ஒரு அழகிய உருவத்தையும் கையில் வேலையும் கொடுத்து விட்டோம். இறைவன் ஒருவன்தான்: அவனுக்குரிய பண்புகள் தான் இவை என்று நாம் புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது. இந்து மத வேதங்களும், இஸ்லாமிய கிறித்தவ மத வேதங்களும் இதைத்தான் கூறுகின்றன.

‘அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கின்றார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.’

-ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கந்தர்வன் on February 22, 2012 at 9:10 am

சுவன்னப்பிரியன் அறிவு ஜீவி,

// இறைவனை பலர் ‘பிரம்மா’ அதாவது ‘படைப்பாளன்’ என்று கூறுகின்றனர். அதேபோல் இறைவனை ‘விஷ்னு’ அதாவது ‘பரிபாலிப்பவன்’ என்றும் கூறுகிறோம். //

‘பிரம்மா’ என்பதற்குப் ‘பெரியவன்’ என்று பெயர். ‘படைப்பாளன்’ என்று அர்த்தம் அல்ல. ‘விஷ்ணு’ என்பதற்கு ‘எங்கும் வியாபித்து இருப்பவன்’ என்று பொருள் (அதாவது, அல்லாவைப் போல வானத்தில் மாத்திரம் உட்கார்ந்து கொண்டு மிரட்டுபவன் அல்ல என்று அர்த்தம்). இது கூடத் தெரியாமல் வேதத்தில் வல்லவனைப் போல இங்கு எதற்கு பாவலா காட்டறீங்க?

//ஆனால் வழக்கில் நாம் விஷ்ணுவுக்கு நான்கு கைகளையும் கைகளில் சக்கரமும், பிரம்மனுக்கு நான்கு தலைகளையும், முருகனுக்கு நாமாக ஒரு அழகிய உருவத்தையும் கையில் வேலையும் கொடுத்து விட்டோம்//

அறிவு ஜீவி சுவன்னப்பிரியனுக்காக சங்க இலக்கியங்களிலிருந்து சில வரிகள் –

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை;
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

- பரிபாடல், முதல் பாட்டு

பொருள்:

நீ, ஆதிசேடனுடைய ஆயிரந்தலைகளும் நின் திருமுடிக்கு மேலே விரிந்து நிழற்றாநிற்ப மார்பினிடத்தே திருமகள் வீற்றிருப்ப விளங்காநின்றனை; மேலும் பலதேவனாகவும் இருக்கின்றனை. நீ, தாமரைமலரை ஒத்த கண்களை உடையை; காயாம்பூவை ஒத்த திருமேனியை உடையை; திருமகள் விரும்பியுறையும் மார்பினை உடையை; அந்த மார்பினிடத்தே விளங்குகின்ற கௌத்துவமணி அணியை உடையை; பொன்னாடையை அணிந்துள்ளனை; நினது பெருமையை அந்தணருடைய வேதம் விளங்கக் கூறாநிற்கும்.

இது தான் சங்க கால நிலை. தமிழர் சமயம் என்றென்றுமே உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த சான்று போதும்.

// ‘அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன். எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கின்றார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.’

-ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20 //

‘ஸ்வதேஸ் வதரா’? இப்படி ஒரு உபநிடதமா… வேடிக்கையாக இருக்கிறது. ச்வேதாச்வதார என்பதை ஒரு முல்லா எழுத்துக் கூட்டிப் படிக்கக் கூடத் தெரியாமல் உளறியிருக்கிறது. அதை இங்கு வந்து வாந்தி எடுத்தது சுவன்னப்பிரியன்.

சரி, ‘ச்வேதாச்வதார’ என்பதற்கு ஒரு பொருள் கூறட்டுமா? ‘ஸ்வேத அச்வேன தரதி இதி ச்வேதாச்வதார’ – அதாவது, ஸ்வேத அச்வமாகிய ஹயக்ரீவரை உபாசித்து சம்சாரத்தைக் கடக்கின்றவர் (ஸ்வேத அச்வம் = வெள்ளைக் குதிரை, தரதி = கடக்கிறார்) என்று பொருள். இதுவும் உருவ வழிபாட்டைத் தான் காட்டுகிறது பார்த்தீர்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கந்தர்வன் on February 22, 2012 at 9:19 am

சுவன்னப்பிரியன்,

// அப்படியே பவிஷ்ய புராணத்தில் இடைச்செருகலை வெள்ளைக்காரன் கொண்டு வந்திருந்தால் ஏசுவையும் கன்னி மேரியையும் அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும். இஸ்லாத்தை தூக்கிப் பிடிக்க வெள்ளையனுக்கு என்ன அவசியம் வந்தது? //

நீங்கள் காட்டும் வெள்ளையன் எழுதிய பவிஷ்ய புராணத்தில், முகம்மது ஒரு அசுரனின் மறுபிறவி, அவன் தோற்றுவித்த மதம் தீயவர்களால் பின்பற்றப்படும் என்று இருக்கிறது. இதோ பாருங்கள் (http://agniveer.com/479/prophet-puran/) –

// “Shri Suta Goswami said that a demon called Tripurasur who was earlier burnt to ashes by Shiva has taken birth again in form of Mahamada (Muhammad) and his deeds are like that of an evil ghost. The ghost was rebuked by Kalidas as “O rascal, you have created an illusion to bewilder the king, I will kill you, you are the lowest…”

Further, the ghost called Mahamada comes in dream of King Bhoja and says,

“O king, your religion is of course known as the best religion among all. Still I am going to establish a terrible and demoniac religion by the order of the Lord . The symptoms of my followers will be that they first of all will cut their genitals, have no shikha, but having beard, be wicked, make noise loudly and eat everything. They should eat animals without performing any rituals. This is my opinion. They will perform purificatory act with the musala or a pestle as you purify your things with kusha. Therefore, they will be known as musalman, the corrupters of religion. Thus the demoniac religion will be founded by me.”

It is amply clear that contrary to Dr Naik’s claims, Mahamada (Muhammad) is being condemned here as a demon and not as a spiritual person. Far from being a Kalki Avatar, Muhammad is being foretold as a devil harbinger of nuisance!

Having analyzed the verses, let us analyze a few more points regarding Bhavishya Puran:

Bhavishya Puran is not considered an authoritative religious scripture. It is amply clear that the book continued to be written till late 19th century. Because it also contains stories of Jesus Christ, Akbar, Sawai Jai Singh, Alha Udal, Tulsidas, Surdas, Guru Nanak, Shahjahan, Aurangzeb, Shivaji and even Queen Victoria and her Parliament. Bulk of the material seems to be written during foreign rule. Thus, Bhavishya Puran does not even come in category of evidence, when it comes to Hindu religion.
Still if Dr Zakir Naik has infallible faith in Bhavishya Puran, he should also admit that Muhammad was a devil and reincarnation of Tripurasur.
Also, if Dr Naik has so much trust on Bhavishya Puran and considers the book so prophetic, why does he not admit other advices of the book – the fastings on specific days and their benefits, worship of different idols, avoidance of meat, celibacy, shraadh, prohibition of marriage among close relatives, agnihotra, holy places, cow protection etc. And accordingly, he should refuse to believe in those verses of Quran which are against the precepts of Bhavishya Puran.
//

இதைக் கூடத் திரித்து உமது முல்லாக்கள் முகம்மதுவை பவிஷ்யத் புராணம் பெருமையாகப் பேசியிருப்பதாக உளறுகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

sarang on February 22, 2012 at 12:38 pm

மதமல்ல மார்க்க சகோ சுவனப்ரியன்

ரெம்ப அடிவாங்கிடீங்க போல இருக்கு எக்கு தப்பு தெரியாம உளர்றீங்க அவசரப் படறீங்களே. அல்லா சொல்வதை ஒரு கணம் மனதில் நிறுத்தி யோசித்துப்பாருங்கள். அவர் யோசிக்கமாட்டீர்களா என்று எவ்வளோ கெஞ்சுறார். நீங்கெல்லாம் என்னடான்னா மூளை அல்லாவோடது அதை நாங்க பயன் படுத்த மாட்டோம்னு அடம் பிடிக்கிறீங்களே

நான் ஒரு நூறு வஹிக்களை (நபியை விட பெட்டரா) உருவாக்கி அதை திருக் குர்ஆனில் சேர்த்து பாரு பாரு இது திருக் குர்ஆனில் இருக்கு என்று எல்லா அரபிகளிடம் சொன்னால். அரபிகள் கூட என்னை முட்டாள் லூசு என்று எப்படி சொல்வார்களோ அது போல தான் சுவனப்ரிய உபநிஷத் எழுதி அது சாம வேதத்தில் உள்ளது என்று சொல்வது. அது போல தான் அல்லா உபநிஷத்தும் அதர்வண வேதமும். புரியலேன்ன இன்னும் விளக்கமா சொல்றேன்.

வேதத்தை ஹிந்துக்கள் மிக துல்லியமாக பாது காத்து கொண்டு வருகிறார்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் அதிலிருந்து ஒரு அக்ஷரம் பிசகாமல் த்வனி மாறாமல் இன்றும் உள்ளது.

சுவனப்ரியன் வந்து புது உபநிஷத் எழுதி அதை நான் வேதத்தோடு சேர்த்தேன் என்றால் ஹிந்துக்கள் சிரித்து விட்டு சரி என்பார்கள் <IMG SRC=" style="height:auto;" />
முட்டாள்களோடு மட்டுமே மோத ஹிந்துக்கள் அரபுகள் கிடையாது

இங்க்லீஷ் காரன் அவனா ஒரு பவிஷ்யத் புராணம் எழுதி. இது தான் இது தான் பவிஷ்யத் புராணம் என்றான். ஹிந்துக்கள் எவரும் அதை கண்டு கொள்ளவில்லை. அதை தூக்கிப் பிடிப்பது சுவனப்ரியங்களும் சில்லி சாம்களும் தான்.

ஒரிஜினல் பவிஷ்யத் புராணம் ஒரிகினலாகவே இருக்கு. சீனா காரன் ஐ பாட காப்பி அடிச்சு சீபாட் செஞ்சாலும் ஐபாட் அபாட் தான் சீபாட் சீபாட் தான்

இந்த லட்சணத்துல <IMG SRC=" style="height:auto;" /> எல்லாம் போட்டு பகிரங்கமா நான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டாம்நேல்லாம் எழுதுறீங்க. சகோ அல்ல சொல்றத நல்லா கேளுங்கு. சிந்திக்க மாட்டீர்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

suvanappiriyan on February 22, 2012 at 5:21 pm

திரு கந்தர்வன்!

//இது தான் சங்க கால நிலை. தமிழர் சமயம் என்றென்றுமே உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு இந்த சான்று போதும்.//

விக்கிபீடியா தரும் தகவல்:

வேதகாலக் கடவுள்கள்
வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

“எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
-“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

“பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
-நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

“மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) மனு

நம் நாட்டு சட்டத்தை அம்பேத்கார் தலைமையில்தான் வகுத்ததாக சொல்வார்கள். நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ!

——————————————————————————-

தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.

இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!

வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. “இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத,” நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.

பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, “தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று” என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.

“ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்”, எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?

நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

-http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_28.html



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. suvanappiriyan on February 23, 2012 at 3:14 pm

    திரு மயில்வாகனன்!

    //தாங்கள் குறிப்பிட்டுள்ள அல்லோபநிஷத் 1:10 (அதர்வண வேதம்), சாம வேதம் – இந்திர அதிகாரம் 2 – மந்த்ரா 152 – புத்தகம் 2 – செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை, என்பதெல்லாம் எந்த வெளியீட்டில் உள்ளன? தெரியப் படுத்துங்கள்.//

    ஜாகிர் நாயக்கின் புத்தகத்திலிருந்து எடுத்தது அது. அது அல்லாமல் முழுவதுமாக டவுன்லோட் செய்ய கீழே நான் கொடுத்துள்ள தளத்திற்க்குச் செல்லுங்கள். இதை நான் ஒரு தகவலுக்காக திரு களிமிகு கணபதியின் பின்னூட்டத்திற்காக பவிஷ்ய புராணத்தைக் குறிப்பிட்டேன். குர்ஆனை நிரூபிக்க வேறு பல ஆதாரங்கள் முஸ்லிம்களிடம் உண்டு. முந்தய வேதங்களில் இந்த செய்திகள் இருந்ததால்தான் புராணங்களிலும் அது பற்றிய செய்திகள் காணக்கிடைக்கிறது. எழுதுபவரின் மன நிலையைப் பொறுத்து புராணங்களின் கதையும் மாறும். எனவே இதை தகவலுக்காகத்தான் குறிப்பிட்டேன்.

    இந்து வேதங்களின் மூலப்பிரதி நம்மிடம் கைவசம் இல்லாததும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பெறும் தடங்கலாக உள்ளது. தெரிந்தே பலர் அதனை அழித்து விட்டனர்.

    11.2 ThePrediction of Islam
    [From thethird part of thePratisarga Parva.]Shri Suta Gosvamisaid: In thedynasty of kingShalivahana,there were tenkings who went tothe heavenlyplanets afterruling for over500 years. Thengradually themorality declinedon the earth. Atthat timeBhojaraja was thetenth of the kingson the earth.When he saw thatthe moral law of conduct wasdeclining he wentto conquer all thedirections of hiscountry with ten-thousand soldierscommanded byKalidasa. Hecrossed the riverSindhu andconquered overthe gandharas,mlecchas, shakas,kasmiris, naravasand sathas. Hepunished themand collected alarge ammount of wealth. Then theking went alongwith
    Mahamada(Mohammad),the preceptor of mleccha-dharma,
    and hisfollowers to thegreat god, LordShiva, situated inthe desert. Hebathed Lord Shivawith Ganges

    water andworshipped him inhis mind withpancagavya (milk,ghee, yoghurt,cow dung, andcow urine) andsandalwoodpaste, etc. Afterhe offered someprayers andpleased him.SutaGoswami said:After hearing theking’s prayers,Lord Shiva said: Oking Bhojaraja,you should go tothe place calledMahakakshvara,that land is calledVahika and now isbeingcontaminated bythe mlecchas. Inthat terriblecountry there nolonger existsdharma. Therewas a mysticdemon named Tripura, whom Ihave alreadyburnt to ashes, hehas come againby the order of Bali. He has noorigin but heachieved abenediction fromme. His name isMahaoda and hisdeeds are likethat of a ghost. Therefore, O king,you should not goto this land of theevil ghost. By mymercy yourintelligence willbe purified.Hearing this theking came back tohis country……. That city is knownas their site of

    pilgrimage, aplace which was
    Madina
    or freefrom intoxication.Having a form of aghost (Bhuta), The symptoms of my followers willbe that they firstof all will
    cuttheir genitals
    ,have no shikha,but
    havingbeard
    …….Theref ore, they will beknown as
    musalman
    .Theintelligent king,Bhojarajestablished thelanguage of Sanskrit in threevarnas – thebrahmanas,kshatriyas andvaisyas – and forthe shudras heestablishedprakrita-bhasha,the ordinarylanguage spokenby common men.After ruling hiskingdom for 50years, he went tothe heavenlyplanet. The morallaws establishedby him werehonored even bythe demigods. The arya-varta,the pious land issituated betweenVindhyacala andHimacala or themountains knownas Vindhya andHimalaya. TheAryans residethere, but varna-sankaras resideon the lower partof Vindhya. Themusalman peoplewere kept on the

    other side of theriver Sindhu. Onthe island of Barbara, Tushaand many othersalso the followersof Isamsiha werealso situated asthey weremanaged by aking or demigods.

    பவிஷ்ய புராணத்தின் முழு பகுதியையும் டவுன்லோட் செய்ய இந்த தளத்துக்கு செல்லுங்கள். ஆங்கிலத்திலும் சமஸ்கிரதத்திலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    http://www.scribd.com/doc/36063659/Bhavishya

     
  2.  
    suvanappiriyan on February 23, 2012 at 4:19 pm

    The compiler of the Puranas, Mahrishi Vyasa, is highly honored among the Hindus as a great rishi and learned person. He was a pious and God fearing man. He also wrote the Gita and the Maha Bharat. Among the eighteen volumes of the Puranas is one by the title ‘Bhavishya Puran,’ literally meaning future events. The Hindus regard it as the Word of God. The prophecy containing Prophet Muhammad by name is found in Prati Sarg Parv III: 3, 3, Verse 5.

    Before the English translation is presented, a note on the word Malechha that appears in the first part of verse 5 is in order. The word Malechha means a man belonging to a foreign country and speaking foreign language. This word is now used to degrade people meaning unclean or even worse. Its usage varies and depends on who is using it and for whom. Sir William Jones had great difficulty in recruiting a Pundit to teach him Sanskrit because he was considered unclean (Malechha). It was only after the direct intervention of Maharaja (King) Shiv Chandra that Pundit Ram Lochna agreed to teach him Sanskrit.

    It is not known when this word began to be used in the derogatory sense, whether before the advent of Prophet Muhammad (s), after the conversion of Hindu King Chakrawati Farmas (of Malabar, located on the southwest coast of India) to Islam during the lifetime of the Prophet, soon after the arrival of Muslims in India (711 CE) or sometime later. Mahrishi Vyasa, the compiler of the Puranas, has defined a wise Malechha as “a man of good actions, sharp intellect, spiritual eminence, and showing reverence to the deity (God).

    The translation of Verses 5-27 (Sanskrit text of the Puranas, Prati Sarg Parv III: 3, 3) is presented below from the work of Dr. Vidyarthi.

    “A malechha (belonging to a foreign country and speaking foreign language) spiritual teacher will appear with his companions. His name will be Mahamad. Raja (Bhoj) after giving this Mahadev Arab (of angelic disposition) a bath in the ‘Panchgavya’ and the Ganges water, (i.e. purging him of all sins) offered him the presents of his sincere devotion and showing him all reverence said, ‘I make obeisance to thee.’ ‘O Ye! the pride of mankind, the dweller in Arabia, Ye have collected a great force to kill the Devil and you yourself have been protected from the malechha opponents (idol worshipers, pagans).’ ‘O Ye! the image of the Most Pious God the biggest Lord, I am a slave to thee, take me as one lying on thy feet.’

    “The Malechhas have spoiled the well-known land of the Arabs. Arya Dharma is not to be found in that country. Before also there appeared a misguided fiend whom I had killed [note: e.g., Abraha Al-Ashram, the Abyssinian viceroy of Yemen, who attacked Mecca]; he has now again appeared being sent by a powerful enemy. To show these enemies the right path and to give them guidance the well-known Mahamad (Mohammad), who has been given by me the epithet of Brahma is busy in bringing the Pishachas to the right path. O Raja! You need not go to the land of the foolish Pishachas, you will be purified through my kindness even where you are. At night, he of the angelic disposition, the shrewd man, in the guise of a Pishacha said to Raja Bhoj, “O Raja! Your Arya Dharma has been made to prevail over all religions, but according to the commandments of ‘Ashwar Parmatma (God, Supreme Spirit), I shall enforce the strong creed of the meat-eaters. My follower will be a man circumcised, without a tail (on his head), keeping beard, creating a revolution, announcing call for prayer and will be eating all lawful things. He will eat all sorts of animals except swine. They will not seek purification from the holy shrubs, but will be purified through warfare. Because of their fighting the irreligious nations, they will be known as Musalmans (Muslims). I shall be the originator of this religion of the meat-eating nation.”



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

sarang on February 23, 2012 at 8:07 pm

சுவனப்ரியன்

//
ஜாகிர் நாயக்கின் புத்தகத்திலிருந்து எடுத்தது அது.
//

இது ஒன்றே போதும் <IMG SRC=" style="height:auto;" />

கந்தர்வன் அதே பவிஷ்யத் புராணத்திலிருந்து [..] ஒரு காட்டுமிராண்டி என்றுள்ளதை காட்டி உள்ளார். என்னே தீர்க்க தரிசனம்

பவிஷ்யத் புராணத்தில் உள்ள பிரதி சரக பர்வம் என்பது டுபாகூர் என்பது எல்லோரும் அறிந்ததே. இதை வைத்துக் கொண்டு ஜாகிர் நாக் போன்ற கேணயர்கள் புத்தகம் எழுதுவார்கள். அதை படிக்க ஒரு பில்லியன் பேரால் தான் முடியும்.

உடனே பாருங்கள் நீங்கள் புராணத்தை பாதுகாத்த அழகை என்று கேனத்தனமாக குதிக்க வேண்டாம். சுவனப்ரியன் கூட பவிஷ்யத் புராணத்தில் ஒரு சுலோகம் சேர்க்கலாம் அதை நெட்டில் போடலாம் என்ன அதை நம்ப ஒரு பில்லியன் பேர் இருப்பார்கள் அவ்வளவே. அது உண்மையாகாது.

இரண்டு பிரசித்தி பெற்ற போஜ ராஜாக்கள் இருந்தனர். காளிதாசரின் காலத்தில் இருந்தவர். காளிடாசிரின் காலம் நான்காம் நூற்றாண்டு (முஹம்மத் இப்னு அப்துல்லாவிற்கு) ரெம்ப முன்னாடி. இன்னொருவர் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தவர். [..] குதிரையில ஜோய்ங்குன்னு பல வருடங்களுக்கு அப்புறம்.

எப்படி போஜ ராஜாவும் நம்ம [..]ம் கான்பிரன்ஸ் கால் போட்டு பேசினார்கள் என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக அல்லா ஒரு வஹியை கூட இறக்கவில்லையே. ஒரு ஹதீத்து கூடா இல்லையே. [..] நைட்டு யார் யார் வீட்டுகெல்லாம் போனார், [..] எப்படி உச்சா போனார் என்றெல்லாம் விலாவரியா விவரிக்கும் ஹதீத்துக்கள் இதை விட்டு விட்டது மிக தர்ம சங்கடமாக உள்ளது.

[Edited and Published]



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பைந்தமிழன் on February 24, 2012 at 8:02 pm
Your comment is awaiting moderation.

சுவனபிரியன்

முன்னோர்கள் கடவுள் மதத்திலிருந்து விலக்கப்பட்டு புத்தக மதத்திற்கு மாறிட்டதால் நீங்கள் முகமதியர். ஆனால் பைபிளை பின்பற்றி புனையப்பட்டுள்ள குரானைப் பற்றி என் கேள்விகளுக்கு பதிலே இல்லை.

கொடுங்கல்லுர் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வு முடிவுகள், 8ம் நுற்றாண்டிற்குப்பின் தான் மனிதகுலம் அங்கு குடியேரியது, வெறும் ஊகங்களை பரப்பப்பட்ட செவெளிக்கதை என்னும் பொய்களை லிங்க் கொடுப்பதால் என்ன பயன்.

தோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்
கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….
கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..
திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.
பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது.
பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள்
and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”

பைபிளில் மேசியா-கிறிஸ்து-இறுதித் தூதர் என யாரும் வரவேண்டியதில்லை என இன்று நடுநிலை பைபிளியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், உலகம் அழியும் கடைசி சந்ததியில் வந்து எபிரேயர்களை நேரடியாக சொர்கத்துக்கு கூட்டி செல்வார் என்பது எழுந்த மூட நம்பிக்கை மேசியா-இறுதிதூதர் கட்டுக்கதை நம்பிக்கைகள்

ஹிந்துமதம் பற்றி சாகீர் நாயக்கை பின்பற்றுவதாக சொல்வதைல் உங்கள் தரம்(?) தெரிகிறது.
Muhammad is not predicted in Hindu scriptures- By S. Prasadh
http://newindian.activeboard.com/t36847612/muslim-world-happeinings/?sort=oldestFirst&page=7
என் முன் பதிவிற்கு பதிலே தரவில்லையே-பைந்தமிழன் on February 14, 2012 at 9:27 am
பைபிள் எனப்படும் விவிலியம் ஒரு இலக்கிய நிகழ்ந்த வரலாற்று -அரசியல் நூல் எனவே கூற முடியுமே அன்றி அவற்றில் இறையியல் உள்ளது என்பது மிக அரிது. குரானும் அப்படியே எனச் சொல்லவும் தெளிவாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

பைபிள் தோண்டப்படுகிறது- இஸ்ரேல் டெல்அவிவ் பல்கலைக்கழக புதைபொருளாய்வுத் தலைவர் முழுநூலின் இணைப்பு.
http://www.mediafire.com/download.php?y177tc2oa3tegam
இவர் பல ஆய்வாளர்கள் முன்பு கூறியவற்றை தெளிவாகத் தருகிறார்.

எபிரேயர்கள் என்பவர்கள் இஸ்ரேலில் தொடர்ந்து வாழ்ந்துவரும் குடியே. பைபிள் விடும் காணான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, அதனை பாபிலோனைச் சேர்ந்த நபரான ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து இஸ்ரேலின் ஆட்சியுரிமை அவர் சந்ததிகளுக்கு என்று சொன்னார் எல்லாம் கட்டுக்கதை.
எபிரேயர்கள் எகிப்து சென்றதாகவும், மீண்டும் வரும்போது யாத்திரையாகமம் மோசஸ் அல்லது மூசா நபி தலைமையில் 20 லட்சம் எபிரேயர்கள் அதிகமானோர் 40 வருடம் வந்த்தாகவும் கதை பண்ணுகிறது, வரும் வழியில் செங்கடல் இரண்டாகப் பிழந்து வழி விட்டதாகவும் கதை. இவை அனைத்துமே கட்டுக்கதை. புதைபொருள் ஆய்வுகள் எகிப்தில் எபிரேயர்கள் இருந்ததாகவோ, யாத்திரை நடந்ததான எவ்வித ஆதாரமும் இல்லை என தெளிவாக காட்டுகிறனர்.
ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
http://wp.me/PxRSh-7E

R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.
New Catholic Encyclopedia Vol-5 page-745
“Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus.
The Hebrew term Yamsup signifies Reed sea. ”
New Catholic Encyclopedia Vol-5 page-745
மோசஸ் அல்லது மூசா நபி எழுதியதான தௌரத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெர்க்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.

ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Sharjah’s 3,000-year-old clue to the first domesticated camels
http://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=5
மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது. இவர்கள் வெறியில் பேசினார்களெ தவிர எந்த வார்த்தையையும் கடவுளிடமிருந்து பெறவில்லை.
சுவனபிரியன்-//பைபிளுக்கும் குர்ஆனுக்கும் பெயர்களிலும் இடங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் அதை ஒட்டி வரக் கூடிய சம்பவங்கள் அனைத்தும் இரு வெதங்களுக்கும் நிறைய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏசுவின் இறப்பிலேயே இரு வேதங்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இரு வேதங்களையும் நன்கு படித்தவர் இந்த வித்தியாசத்தை இலகுவில் உணர முடியும்.
திருத்தப்படாத பைபிளும் இறை வேதம்தானே! அவரது சீடர்களால் அந்த வேதம் திருத்தப்பட்டதால்தான் தற்போது அதன் பொலிவிழந்து காணப்படுகிறது.//
//super thinker on February 13, 2012 at 7:35 pm
Here Historical documents does not mean world creation and ideas about GOD in bible. Rather,the history of jews, how they came from Egypt to Isreal and Invansion of various kings in Isreal.//
Please read above that Egypt Israel stories are not history at all.
குரான் யாத்திரையை சொல்கிறது, மோசஸை சொல்கிறது. செங்கடல் வழிவிட்டதை 80 வசங்களில் பேசுகிறது. யாத்திரையின் போது தௌரத் வந்ததாகப் பேசுகிறது.
நீங்களே சொல்லுங்கள் இப்படி புனைந்த கதாசிரியர் யாராக இருக்க முடியும் திரு.சுவனபிரியன், அவர்களே



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Why Did Mohammed Get So Many Wives? 
July 2008 version
 

 Introduction

 Muslims will tell you a Muslim man can have up to four wives at a time, based on Sura 4:3. Strictly speaking that is not the complete truth, as a Muslim can also have unlimited concubines and can have sex with "women their right hands possess". (Sura 23:5-6; 33:50,52; 4:24; Sura 70:29-30). Regardless, though, Mohammed recited a verse in the Qur’an (Sura 33:50) that made an exception for one individual: himself. Why is that?

 

‘Aisha remarked, "It seems to me that your Lord hastens to satisfy your desire." Sahih Muslim vol.2 book 8 no.3453-3454 p.748-749.

 

On the other hand, a Muslim told me that every marriage was for humanitarian or alliance purposes. ‘Aisha and some wives were daughters of powerful chiefs Mohammed need the support of. Others such widows, "taken care of" by Mohammed after their previous husband died. I asked, incredulously, was the Muslim really taught that every marriage was for those reasons? When he said "yes", then I said, "what about Safiyah and Zainab bint Jahsh? Since he was not aware of those, other Muslims (as well as non-Muslims) might not be either. As to the accuracy of the sources of my information, it all comes from either the Qur’an itself or authoritative hadiths of Sunni Islam.

 Mohammed’s Wives

 Here is a list of wives of Mohammed by the Muslim scholar Ali Dashti. He probably based much of this on an earlier list in the History of al-Tabari vol.9 p.126-241. It should be mentioned that scholars and Hadiths are not entirely agreed on the wives of Mohammed. For example some hadiths (not Bukhari or Sahih Muslim) mention a couple of wives of Mohammed that he divorced, and these are not shown here. Nonetheless, Ali Dashti’s list, while perhaps not entirely agreed upon as being comprehensive, shows many of the wives. Following this is the evidence from the hadiths, independent of Ali Dashti, for these relationships. 

1. Khadija/Khadijah bint Khuwailid/Khywaylid - died first 
2. Sauda/Sawda bint Zam’a 
3. 'Aisha/Aesha/’A’ishah - 8 to 9 yrs old, 2nd wife 
   'Aisha's Slaves 
   'Aisha and the Battle of the Camel 
4. Omm/’Umm Salama/Salamah 
5. Hafsa/Hafsah 
6. Zaynab/Zainab of Jahsh 
7. Juwairiya/Jowayriya bint Harith (captive) 

9. Safiya/Safiyya bint Huyai/Huyayy bint Akhtab (captive) 
10. Maymuna/Maimuna of Hareth 
11. Fatima/Fatema/Fatimah (briefly) 
12. Hend/Hind (widow) 
13. Asma of Saba (Sana bint Asma') 
14. Zaynab of Khozayma 
15. Habla? 
16. Divorced Asma of Noman / bint al-Nu’man 
¾slaves / concubines ¾ 
17. Mary the Copt/Christian 
18. Rayhana/Raihana/Rayhanah bint Zayd/Zaid 
¾uncertain relationship - 
19. Divorced Omm Sharik 
20. Maymuna/Maimuna (slave girl?) 
21. Zaynab/Zainab the third? 
22. Khawla / Khawlah 
23. Divorced Mulaykah bint Dawud 
24. Divorced al-Shanba’ bint ‘Amr 
25. Divorced al-‘Aliyyah 
26. Divorced ‘Amrah bint Yazid 
27. Divorced an Unnamed Woman 
28. Qutaylah bint Qays (died right away) 
29. Sana bint Sufyan 
30. Sharaf bint Khalifah 
31. Women of Mohammed’s Right Hand 
Mohammed Turned Some Women Down 
Some Women Turned Mohammed Down

 

¾ Ali Dashti missed at least nine possible other wives.

 

Mohammed married 15 women and consummated his marriages with 13. (al-Tabari vol.9 p.126-127)

 Bukhari vol.1 Book 5 ch.25 no.282 p.172-173 said that [at one time] Mohammed had nine wives.

  Following is a short description of the hadiths and early Muslim historians say about the wives of Mohammed.

 1. Khadija/Khadijah

 (pronounced ka-DI-ja) bint Khuwailid/Khuwaylid Sahih Muslim vol.4 book 29 no.5971-5972 p.1297 died three years before 'A'isha married Mohammed. She is mentioned in Bukhari vol.5 book 58 no.164,165 p.103.

 

The full name of Mohammed’s first wife was Khadijah, daughter of Khuwaylid bin Asad bin. ‘Abd al-‘Uzza bin Qusayy. al-Tabari vol.39 p.3

 

Mohammed was 20-some years old when he married Khadijah, a widow. al-Tabari vol.9 p.127.

 

‘Aisha says that Khadija took Mohammed to a Christian convert who used to read the Gospels in Arabic. Bukhari vol.4 book 55 ch.17 no.605 p.395

 

A’isha was jealous of Khadija. "On that, the Prophet remembered the way Khadija used to ask permission, and that upset him. He said, ‘O Allah! Hala!’ So I [A’isha] became jealous and said, ‘What makes you remember an old woman amongst the old women of Quraish an old woman (with a teethless mouth) of red gums who died long ago, and in whose place Allah has given you somebody better than her?’" Bukhari vol.5 book 58 no.168 p.105

 

2. Sauda/Sawda bint Zam'a/Zam’ah

 

Sahih Muslim vol.2 book 8 no.3451 p.747; Bukhari vol.3 book 34 ch.4 no.269 p.154; vol.3 no.853 p.29; Sahih Muslim vol.2 book 7 no.2958 p.651; Sahih Muslim vol.2 footnote 1918 p.748 says that probably ‘Aisha was married to Mohammed before Sauda, but ‘Aisha did not enter Mohammed’s house until after Sauda was married to Mohammed.

 

There is disagreement about whether Mohammed consummated the marriage with Sauda or A’isha next, but al-Tabari vol.9 p.128-129 says it was Sauda.

 

Sauda’s ex-husband, al-Sakran b. ‘Amr b. ‘Abd Shams became a Christian in Abyssinia and died there. al-Tabari vol.9 p.128

 

Physically, ‘Aisha called Sauda "a fat huge lady". Bukhari vol.6 book 60 ch.241 no.318 p.300

 

When Sauda was old she was afraid Mohammed would divorce her, so she gave her turn to ‘A’isha. Abu Dawud vol.2 no.2130 p.572

 

Sauda is also mentioned in al-Tabari vol.39 p.169.

 

3. 'A’isha

 

A’isha was Abu Bakr’s daughter. Her moth was named Umm Ruman according to al-Tabari vol.9 p.129. She married Mohammed when she was (six) 6 years old, went to his house when (nine) 9. Bukhari vol.7 book 62 ch.60 no.88 p.65; Sahih Muslim vol.2 book 8 no.3309,3310,3311 p.715,716

 

Contrary to this marriage being important for political reasons, Abu Bakr was the first convert to Islam.

 

This wife of Mohammed is mentioned in many places, including Sahih Muslim vol.1 book 4 no.1694 p.372; Abu Dawud vol.1 no.1176 p.305; vol.1 no.1268 p.335; vol.1 no.1330 p.350; Abu Dawud vol.1 no.1336 p.351; vol.1 no.1419 p.373; vol.2 no.2382 p.654.

 

‘Aisha played with dolls while Mohammed was present. Sahih Muslim vol.4 book 29 no.5981 p.1299

 

 

 

‘Aisha was 6 (or 7) years old when she was married, and the marriage was consummated when she was nine years old. al-Tabari vol.9 p.130,131

 

A’isha was married when she was six years old, and nine when she went to Mohammed’s house. Ibn-i-Majah vol.3 no.1876 p.133

 

A’isha was seven years old when she married, nine years old when she lived with Mohammed, and 18 years old when he died. (not Sahih) Ibn-i-Majah vol.3 no.1877 p.134

 A rationale trying to explain why Mohammed married such a young girl is given in Sahih Muslim vol.2 footnote 1859 p.715. It says that "it was some exceptional circumstances that Hadrat ‘A’isha was married to the Prophet… The second point to be noted is that Islam has laid down no age limit for puberty for it varies with countries and races due to the climate, hereditary, physical and social conditions." They also mention support from the disreputable Kinsey report on Sexual Behaviour in the Human Female.

 Mohammed himself once deliberately struck ‘Aisha "on the chest which caused me pain", according to Sahih Muslim vol.2 book 4 ch.352 no.2127 p.462.

 There was other discord too. One incident, started by A’isha was so bad, Mohammed kept away from his wives for a month 29 days) Ibn-i-Majah vol.3 no.2060 p.241. Ibn-i-Majah vol.3 no.2063 p.243. This is the context of Sura 50:1.

 

A’isha’s Slaves

 

‘A’isha had at least one servant who cooked for her during the time of the delegation from Banu’l Muntafiq. Abu Dawud vol.1 no.142 p.34

 

A’isha had a male Muslim slave she later freed named Abu Yunus. Sunan Nasa’i vol.1 no.475 p.340

 A’isha had a slave girl. Abu Dawud vol.1 no.371 p.96

 Barirah was a female slave of A’isha’s, whom she later freed. Abu Dawud vol.2 no.2223 and footnote 1548 p.601

 A’isha was quick-tempered too, striking the hand of a servant and breaking a bowl of food from another wife for Mohammed. Abu Dawud vol.2 no.3560-3561 p.1011

 ‘A’isha had a strong, loud voice. al-Tabari vol.17 p.65

 ‘Aisha reluctantly freed many slaves due to a broken vow. "He [Ibn Az-Subair] sent her [‘Aisha] ten slaves whom she manumitted [freed] as an expiation for (not keeping) her vow. ‘Aisha manumitted more slaves for the same purpose till she manumitted forty slaves. She said, ‘I wish I had specified what I would have done in case of not fulfilling my vow when I made the vow, so that I might have done it easily.’"(1) Footnote (1) says, "‘Aisha did not specify what she would do if she did not keep her promise, this is why she manumitted so many slaves so that she might feel at ease as to the adequacy of her expiation." Bukhari vol.4 book 56 ch.2 no.708 p.465.

 

Just how many slaves did ‘Aisha have? Or how much money did she have to buy forty slaves? The hadiths do not say. The only two clue I have found are

 1) Mohammed’s wives could command for tents to be set up. Ibn-i-Majah vol.3 no.1771 p.67.

 2) One-fifth of the war booty went to the Muslim treasury, and Mohammed could take of that for he and his wives. Sahih Muslim vol.2 no.2347,2348; vol.2 footnote 1463 p.519; Bukhari vol.4 book 51 ch.80 no.153 p.99; vol.6 book 60 ch.297 no.407 p.379

 

A’isha and the Battle of the Camel

 

‘Aisha originally supported those who wanted to kill ‘Uthman. She claimed ‘Uthman became a disbeliever. However, after ‘Uthman’s murder she changed her mind and wanted to avenge ‘Uthman’s killers. Another Muslim called her to task for that. al-Tabari vol.17 p.52-53

 

After this, Mu’awiyah had Mohammed bin Abu Bakr executed for murdering ‘Uthman, then put his body in the carcass of a donkey, and then burned the donkey in 38 A.H.. A’isha mourned her half-brother greatly and made extra prayers for him. al-Tabari vol.17 p.158

 

4. ‘Umm Salama

 

‘Umm Salama bint Abi Umayyah (discussing intimate things with the apostle) Sahih Muslim vol.2 no.2455 p.540

 

Umm Salamah’s real name was Hind bint Abi Umayyah bin al-Mughirah bin ‘Abdallah bin ‘Umar bin Makhzum. al-Tabari vol.9; p.133; vol.39 p.175.

 

Um/Umm Salaim/Salama (not said to be a wife) Sahih Muslim vol.2 no.2992 p.656; vol.2 no.3445 p.746; wife Bukhari vol.4 book 53 ch.4 no.333 p.216; Bukhari vol.7 book 62 ch.34 no.56 p.40.Ibn-i-Majah vol.2 no.1634 p.473; Abu Dawud vol.1 no.383 p.99. Mohammed was married to Umm Salama, widow of Abu Salama (died 4 A.H. in Abyssinia). Al-Tabari vol.39 p.175. Umm Salama died when in 59 H. when she was 84 years old. Sahih Muslim vol.2 footnote 1218 p.435. Umm Salama was pregnant when Mohammed married her, and her daughter was Zainab bint Abu Salama (Sahih Muslim vol.2 no. 3539-3544 p.776-777. (This is the same girl as Zainab bint Umm Salama)

 

This wife of Mohammed is mentioned in Abu Dawud vol.1 no.274 p.68; vol.3 no.4742 p.1332; vol.2 no.2382 p.654; Sunan Nasa’i vol.1 no.240 p.228; Ibn-i-Majah vol.3 no.1779 p.72; al-Tabarivol.17 p.207; al-Tabari vol.39 p.80

 

‘Umm Salamah had a son before she married Mohammed. Her son went with A’isha, al-Zubayr, and Talhah. al-Tabari vol.17 p.42

 

Clients of Umm Salamah were Nabhan (=Abu Yahya) and Ma’in bin Ujayl(=Abu Qudamah) al-Tabari vol.39 p.320

 

5. Hafsa/Hafsah

 

The daughter of ‘Umar bin Khattab is mentioned in Sahih Muslim vol.2 no.2642 p.576; vol.2 no.2833 p.625; vol.2 no.3497 p.761; Abu Dawud vol.2 no.2448 p.675; vol.3 no.5027 p.1402. She was the daughter of ‘Umar bin al-Khattab. She was the 18-year old widow of Khunais when she married Mohamed in 625 A.D. She was born in 607 A.D., and died either 647/648, 661/662, or 665 A.D. She is also mentioned as a wife in Ibn-i-Majah vol.3 no.2086 p.258

 

After Hafsa’s husband died of wounds received at Uhud, Hafsa’s father thought of her marrying ‘Uthman, but ‘Uthman declined because he knew Mohammed wanted to marry her. They married in 3 A.H. She was four years older than ‘A’isha. Sunan Nasa’i vol.1 #32 p.117. Thus Mohammed did not marry her just to provide for her. Rather he married someone who otherwise would have been married to someone else.

 

‘Umar told his daughter Hafsa not to be misled by ‘Aisha who is proud of her beauty and Mohammed’s love for her. Bukhari vol.7 book 62 ch.106 no.145 p.108. Hafsa said to ‘Aisha "I have never received any good from you!" Bukhari vol.9 book 92 ch.5 no.406 p.299-300

 

‘Umar said Mohammed divorced Hafsah (revocable divorce) and then took her back. Abu Dawud vol.2 no.2276 p.619. According to Ibn Ishaq, Mohammed divorced Hafsa but then took her back. al-Tabari vol.9 footnote 884 p.131.

 

"Yahya … from Malik from Muhammad ibn Abd ar-Rahman …that he heard that Hafsa … killed one of her slave-girls who had used sorcery against her. She was a mudabbara. Hafsa gave the order, and she was killed." Muwatta Malik 42.19.14

 

Hafsa ordered killed on of her slave girls that had used sorcery against her. Muwatta Malik 43.19.4

 

Hafsa, wife of Mohammed, died when she was 60 years old. al-Tabari vol.39 p.174

 

6. Zainab/Zaynab bint Jahsh

 

Sahih Muslim vol.2 no.2347 p.519; vol.2 no.3330 p.723,724; vol.2 no.3332 p.725; vol.2 no.3494 p.760. Bukhari vol.3 book 33 ch.6 no.249 p.138; vol.3 no.829 p.512; vol.4 no.6883 p.1493; Zainab's original name was "Barrah", but Mohammed changed it to Zainab Bukhari vol.8 book 72 ch.108 no.212 p.137; Abu Dawud vol.3 no.4935 p.1377-1378. Abu Dawud vol.1 no.1498 says Juwairyiha’s name used to be Barrah.

 

Sura 33:36-38 in the Qur’an says, "It is not for any believer, man or woman, when God and His Messenger have decreed a matter, to have the choice in the affair. Whosoever disobeys Allah and His Messenger has gone astray into manifest error. When you said to him whom Allah had blessed and you had favoured, ‘Keep your wife to yourself, and fear Allah,’ and you were concealing within yourself what Allah should reveal, fearing other men; and Allah has better right for you to fear him. So when Zaid had accomplished what he would of her, then We gave her in marriage to you, so that there should not be any fault in the believers, touching the wives of their adopted sons, when they have accomplished what they would of them; and Allah’s commandment must be performed. There is no fault in the prophet, touching what Allah had ordained for him."

 

Zainab bint Jahsh was married to Mohammed’s adopted son, until Mohammed spoke the Sura that she was to divorce his son and marry Mohammed. Zainab "used to boast before the other wives of the Prophet and used to say, ‘Allah married me (to the Prophet) in the Heavens.’" Bukhari vol.9 book 93 ch.22 no.517 p.382. Also vol.9 book 92 ch.22 no.516,518 p.381-383; al-Tabarivol.9 p.133. In other words, in the eternally existing uncreated Qur’an in heaven, Zainab’s marriage was mentioned.

 

"One day Muhammad went out looking for Zaid (Mohammed's adopted son). Now there was a covering of hair cloth over the doorway, but the wind had lifted the covering so that the doorway was uncovered. Zaynab was in her chamber, undressed, and admiration for her entered the heart of the Prophet". (The History of al-Tabari, vol. 8, p. 4)

 

Narrated by Yunis, narrated by Ibn Wahab, narrated by Ibn Zaid who said, "The prophet -pbuh- had married Zaid son of Haritha to his cousin Zainab daughter of Jahsh. One day the prophet -pbuh- went seeking Zaid in his house, whose door had a curtain made of hair. The wind blew the curtain and the prophet saw Zainab in her room unclothed and he admired her in his heart. When Zainab realized that the prophet desired her SHE BEGAN TO HATE ZAID. English translation of al-Tabari's Arabic Commentary on Sura 33:37:

 

Zainab of Jahsh had a brother who died before her. Abu Dawud vol.2 no.2292 p.624

 

Alleged statement that Zaid first divorced his wife Zainab just so that Mohammed might marry her. al-Tabari vol.39 p.180-182

 

Zainab bint Jahsh died when she was 53 years old. al-Tabari vol.39 p.182

 

Zainab (unspecified) Sahih Muslim vol.2 no.2641,2642 p.575,576.

 

Zainab bint Jahsh should not be confused with Zainab who was Abu Sa’id al-Khudri’s wife. Ibn-i-Majah vol.3 no.2031 p.223

 

Zainab [verbally] abused A’ishah, so Mohammed told A’ishah to abuse her. "…The Apostle of Allah (may peace be upon him) came upon me [A’ishah] while Zainab daughter of Jahsh was with us. He began to do something with his hand. I signaled to him until I made him understand about her. So he stopped. Zainab came on and began to abuse ‘A’ishah. She prevented her, but she did not stop. So he (the Prophet) said to ‘A’ishah : Abuse her. Then she abused her and dominated her. Zainab then went to ‘Ali and said : ‘A’ishah abused you and did (such and such). Then Fatimah came (to the Prophet) and he said to her : She is favourite of your father, by the Lord of the Ka’bah! She then returned and said to them : I said to him such and such, and he said to me such and such. Then ‘Ali came to the Prophet (may peace be upon him) and spoke to him about that." Abu Dawud vol.3 no.4880 p.1364-1365

 

In the Bible Malachi vol.2 no.16 says that God hates divorce.

 

7. Juwairiya/yya/yah bint Hareth (captive)

 

Juwairiya bint Harith/al-Harith was a captive. Bukhari vol.3 book 46 ch.13 no.717 p.431-432. Sahih Muslim vol.2 no.2349 p.520 says that Mohammed attacked the Bani Mustaliq tribe without any warning while they were heedlessly grazing their cattle. Juwairiya was a daughter of the chief. Sahih Muslim vol.3 no.4292 p.942 and Abu Dawud vol.2 no.227 p.728 and al-Tabari vol.39 p.182-183 also say Juwairiya/Juwairiyyah was captured in a raid on the Banu Mustaliq tribe. She had been married to Musafi’ bin Safwan, who was killed in battle.

 

Mohammed’s wife Jawairyiyah used to be named Barrah. Abu Dawud vol.1 no.1498 p.392. However, Bukhari vol.8 book 72 ch.107 no.212 p.137; Abu Dawud vol.3 no.4935 p.1377-1378 say Zainab’s name used to be Barrah.

 

Juwayriyyah bint al-Harith bin Abi Birar bin Habib, great grandson of Jadhimah al-Mustaliq of the Khuza’ah group, was taken as booty when Muslims raided the al-Mustaliq tribe. Her husband, Musafi’ bin Safwan Dhu al-Shuir bin Abi Asrb bin Malik bin Jadhimah was killed in the battle. She was a prisoner of war who agreed to marry Mohammed. al-Tabari vol.39 p.182-183; al-Tabarivol.9 p.133.

 

Juwayriyyah was captured at the Battle of al-Muraysi [against the Banu Mustaliq]. al-Tabari vol.39 p.183

 

Juwayriyya married Mohammed when she was 20 years old. al-Tabari vol.39 p.184

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


8. Omm/Umm Habiba



Umm Habiba was the daughter of Abu Sufyan al-Tabari vol.9 p.133; Sahih Muslim vol.2 no.3413 p.739; vol.2 no.2963 p.652; Sahih Muslim vol.2 no.1581 p.352; vol.2 no.3539 p.776 Ibn-i-Majah vol.5 no.3974 p.302; al-Tabari vol.17 p.88



Umm Habiba was 23 years younger than Mohammed. Sunan Nasa’i vol.1 #60 p.127



Umm Habiba and her first husband ‘Ubaydallah were Muslims who went to Abyssinia. ’Ubaydallah converted to Christianity. al-Tabari vol.39 p.177



Mention of Zainab bint Jahsh. al-Tabari vol.39 p.180-182



Umm Habiba, wife of Mohammed should not be confused with another woman was also named Umm Habiba. She was the daughter of Jahsh, wife of ‘Abd al-Rahman and sister-in-law of Mohammed, since Zainab of Jahsh was his wife. Abu Dawud vol.1 no.288 p.73



9. Safiya/Safiyya/Saffiya (captive)







Safiya bint Huyai/Huyayy was a captive Mohammed married after slaughtering her father, brother, husband and the men at Khaibar, according to Bukhari vol.2 book 14 ch.5 no.68 p.35; vol.4 book 52 ch.74 no.143 p.92; vol.4 book 52 ch.168 no.280 p.175 and al-Tabari vol.39 p.185.







Safiyah’s husband was named Sallam bin Mishkam bin al-Hakam bin Harithah bin al-Khazraj bin Ka’b bin Khazraj. al-Tabari vol.9 p.134-135.







Safiyyah was called Safi, for the first share of the booty, which went to Mohammed. Abu Dawud vol.2 no.2988 p.848; Abu Dawud vol.2 no.2985-2989 and footnote 2406 p.846-849



Safiyya was purchased by Mohammed for seven slaves. Ibn-i-Majah vol.3 no.2272 p.357. She was 17 when Mohammed married her. al-Tabari vol.39 p.184



Mohammed felt kindness toward Safiyya. "If Safiyyah were not grieved, I would have left him [her husband whom Mohammed executed] until the birds and beasts of prey would have eaten him, and he would have been resurrected from their bellies." Abu Dawud vol.2 no.3130-3131 p.893



Physically, Safiyyah was short. Abu Dawud vol.3 no.4857 p.1359



There was discord between wives. Zainab did not want to loan a camel to Safiyya when Mohammed asked her to. Zainab called Safiyya a "Jewess" Abu Dawud vol.3 no.4588 p.1293



Mohammed had nine wives at one time, including Safiyya bint Huyayy, and later he did not give her a "turn". Sahih Muslim vol.2 no.3455-3456 p.749



This wife of Mohammed is also mentioned in Sahih Muslim vol.2 no.3325; vol.2 no.2783 p.605; vol.2 no.3118 p.678; vol.2 no.3497 p.761; Bukhari vol.3 book 33 ch.8-13 no.251-255 p.139-143; vol.2 book 21 ch.22 no.255 p.143; Ibn-i-Majah vol.3 no.1779 p.72; Abu Dawud vol.2 no.2464 p.681; al-Tabari vol.39 p.169



Safiya bint Abi 'Ubaid Mohammed’s wife in Bukhari vol.4 book 52 ch.136 no.244 p.151 is probably the same person.



10. Maimuna/Maymuna bint Harith/Hareth



Sahih Muslim vol.1 no.1671,1674,1675 p.368-369; vol.2 no.1672 p.369.



Mohammed married Maymunah bt. Al-Harith in 7 A.H. while Mohammed was in a state of ritual purity on the journey to Mecca. al-Tabari vol.8 p.136; al-Tabari vol.9 p.135



Maymuna had been divorced once, and widowed before marrying Mohammed. al-Tabari vol.39 p.185. Maymuna was 80/81 when she died. al-Tabari vol.39 p.186



Maimuna was 30 years old when the 53-year old Mohammed married her. Mohammed died four years later. Sunan Nasa’i vol.1 #43 p.120



Mainuma bint al-Harith had a slave girl. She asked Mohammed if she could free her, and Mohammed said instead to give her to Maimuna’s sister to take care of her. Muwatta’ Malik 54.4.9



Maimuna, Mohammed’s wife, screened Mohammed Bukhari vol.1 book 5 ch.22 no.279 p.170-171. People were screened when they bathed or went to the bathroom. Nothing was wrong with that though, for she was his wife.



‘Ata bin Yasar was a man who was a client of Maymunah. al-Tabari vol.39 p.317



Slaves: Maimuna’s freed slave girl was given a sheep, which later died. Ibn-i-Majah vol.5 no.3610 p.93



This wife of Mohammed is also mentioned in: Ibn-i-Majah vol.3 no.2408 p.435; Sunan Nasa’i vol.1 no.809 p.492; vol.2 no.1124 p.108; Abu Dawud vol.1 no.1351 p.356; vol.1 no.1359,1360,1362 p.357; Sunan Nasa’i vol.1 no.243 p.229.



11. Fatima/Fatema/Fatimah (briefly)



Fatima was mentioned by ‘Ali Dashti. al-Tabari vol.9 p.39 states that Mohammed briefly married Fatimah bint al-Dahhak bin Sufyan (also called al-Kilabiyyah).



Mohammed married Fatimah bint Shurayh/Sara’. al-Tabari vol.9 p.139. It is unclear if Shuray and al-Dahhak were two different people, making this two Fatimas, or they were alternate names for the same father.



Mention of Fatimah bin al-Dahhabi, Aliya bint Zahyah, Sana bint Sufyan al-Tabari vol.39 p.186



Mohammed consummated his marriage with "the Kilabiyyah" (i.e. from the Kilabi tribe). This would be Fatimah bint al-Dahhak bin Sufyan or ‘Aliyah bint Zabyan bin ‘Amr bin ‘Awf or Sana bint Sufyan bin ‘Awf. al-Tabari vol.39 p.187



Fatima, Mohammed’s daughter is different



The following could be Mohammed’s wife, but was probably his daughter. In the year of the conquest of Mecca, Fatima screened Mohammed. Ibn-i-Majah vol.1 no.465 p.255 and Sunan Nasa’ivol.1 no.228 p.224; vol.1 no.417 p.307



A Fatima screened Mohammed while he was bathing in Bukhari vol.1 book 5 ch.22 no.278 p.170-171. However, Mohammed was taking a bath and was screened by his daughter Fatima inBukhari vol.4 book 53 ch.29 no.396 p.263. Fatima was Mohammed's daughter and the wife of 'Ali in Bukhari vol.3 book 34 chg.29 no.302 p.171; Bukhari vol.4 book 53 ch.1 no.325 p.208.



Mohammed did not want ‘Ali to marry anyone else besides his daughter Fatima. Ibn-i-Majah vol.3 no.1998-1999 p.202-204. However, ‘Ali later had a captive slave girl, the daughter of Rab’iah, who bore him a daughter name Umm Ruqayyah. al-Tabari vol.11 p.66.



Wanted a slave: While Mohammed gave many slaves to A’isha, Fatima thought she got a bad deal. Mohammed’s daughter Fatima complained to Mohammed about her using the grinding stone and asked for a slave (prisoner of war). Mohammed did not give her one, but he said he gave her something better. He told her to say glory be to Allah 33 times, Praise be to Allah 34 times, and Allah is most great 34 times. Abu Dawud vol.3 no.5044-5045 p.1405



12. Hend/Hind (widow)



Hend/Hind was formerly married to Abu Sufyan, who was a very stingy man, according to Sahih Muslim vol.3 no.4251-4254 p.928-929.



13. Sana bint Asma’ / al-Nashat



Mohammed married al-Nashat bint Rifa’ah of the Banu Kilab bin Rabi’ah, allies of the Qurayzah. Some called her Sana bint Asma’ bin al-Salt al-Sulamiyyah; while others say Sana bint Asma’ bin al-Salt of the Banu Harm. However, she died before the Prophet consummated his marriage with her. She was also called Sana. al-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166 says the same thing about Sana bint al-Salt.



14. Zainab/Zaynab bint Khozayma/Khuzaima



This Zainab belonged to the tribe of Banu Hilal. She was divorced from a Muslim named Tufayl, then married his brother ‘Ubaydah, who was killed at Badr. Then she married Mohammed. She was born 595 A.D. and died in 626 A.D. at 31. See al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164 for more info.



al-Tabari vol.9 p.138 also says she died while Mohammed was alive.



Mohammed married Zainab bint Khuzaima, but she died before he did. Sunan Nasa’i vol.1 #64 p.129



15. Habla?



Habla is on Ali Dashti’s list, but I have not been able to independently verify this.



16. Divorced Asma’ bint Noman



Asma bint Noman, or Asma bint al-Nu’man bin Abi Al-Jawn, of the Kindah tribe, was married to Mohammed, but the marriage was never consummated. al-Tabari vol.10 p.185 and footnote 1131 p.185.



Daughter of Al-Jaun / Jahal was married very briefly to Mohammed. Bukhari vol.7 book 63 no.181 p.131,132



On the other hand, al-Tabari vol.10 p.190 says that Al-Nu’man al-Jawn offered his daughter to Mohammed, but Mohammed declined. Perhaps "declined" means Mohammed divorced her before ever sleeping with her.



Mohammed married Asma bint al-Nu’man bin al-Aswad bin Sharahil. However, she had leprosy, so Mohammed gave her money and divorced her. al-Tabari vol.9 p.137. Why would he do that to a woman he loved?



‘Asma bint al-Nu’man was a widow Mohammed married Either Hafsa or A’isha tricked ‘Asma by telling her Mohammed would be pleased if she said she took refuge in Allah from Mohammed.al-Tabari vol.39 p.188-190



Brief mention of ‘Asma bint Nu’man in al-Tabari vol.39 p.190.



Mohammed divorced one woman Mohammed because she took refuge in Allah from Mohammed. He divorced another because she had leprosy. There is some mixup of which name is with which case in al-Tabari vol.39 p.187.



17. Mary/Mariya the Copt/Christian



Mary was a wife [concubine] of Mohammed’s according to al-Tabari vol.9 p.141; Sahih Muslim vol.4 footnote 2835. p.1351;. Mary the Copt gave birth to Mohammed’s son Ibrahim in al-Tabarivol.9 p.39. He died when he was two years old. The Muslim emissary Hatib b. Abi Balta’ah returned from al-Muqawqis [Egypt] with Mariya [Mary the Copt], her sister Sirin, a female mule, sets of garments, and a eunuch. Hatib invited them to become Muslims, and the two women did so [according to Tabari]. Mariyah was beautiful, and Mohammed sent her sister Sirin to Hassan b. Thabit. Sirin and Hassan were the parents of ‘Abd al-Rahman b. Hassan. al-Tabari vol.8 p.66,131.



A Muslim might say Mohammed had to marry her because she was a gift from Egypt, but her sister Sirin was also a gift, and he did not marry Sirin. Mary was a gift from the governor of Alexandria. al-Tabari vol.39 p.193



It was claimed that Mary became a Muslim, but Mohammed still kept her as a slave rather than a regular wife. al-Tabari vol.39 p.194



Mohammed "had intercourse with her [Mary] by virtue of her being his property." al-Tabari vol.39 p.194. Footnote 845 explains, "That is, Mariyah was ordered to veil herself as did the Prophet’s wives, but he did not marry her."



Mary the Copt died in 637/638 A.D. al-Tabari vol.39 p.22



18. Rayhana/Raihana/Rayhanah bint Zaid/Zayd



Rayhana was a Jewish captive from the Quraiza tribe. Mohammed offered to make her a wife instead of a slave, but she decline and remained Jewish according to al-Tabari vol.8 p.39. See also al-Tabari vol.9 p.137,141. However, the source in al-Tabari vol.39 p.164-165 says Mohammed set her free and then married her.



Mohammed had two concubines: Mariya bint Sham’un the Copt, and Rayhanah bint Zayd al-Quraziyyah of the Banu al-Nadir. al-Tabari vol.9 p.141. Mariya was an um walid of Mohammed according to al-Tabari vol.13 p.58.



19. Divorced Omm/Umm Sharik / Ghaziyyah bint Jabir



Omm/Umm Sharik is the same person as Ghaziyyah bint Jabir in al-Tabari vol.9 p.139. She was called "Umm Sharik" because she was the mother of a son named Sharik by a previous marriage.



"When the Prophet went to her he found her to be an old woman, so he divorced her." al-Tabari vol.9 p.139. However footnote 922 says Ibn Sa’d in Tabaqat, 8 p.110-112 "gives a different account and lists her among the women to whom the Prophet proposed but did not marry. It was she who gave herself to the Prophet and the Qur’anic verse 33:50 refers to her."



20. Maymuna / Maimuna



Maimuna was a woman who offered herself to Mohammed according to Sahih Muslim vol.2 footnote 1919. It could be the same Maimuna as 10, or a different one. Married in 7 .H.



An unnamed woman said she gave herself to Mohammed as a wife. Mohammed did not accept her, but gave her to a poor Muslim. The only thing the poor Muslim could give as a dowry is his memorization of a sura of the Qur’an. Muwatta’ Malik 28.3.8



21. Zaynab/Zainab the Third?



Ali Dashti lists this wife, but I have not found independent evidence of this.



22. Khawla / Khawlah bint al-Hudayl



It is said that Mohammed married Khawlah bint al-Hudayl. al-Tabari vol.9 p.139. She was a wife of Mohammed’s according to al-Tabari vol.39 p.166







23. Divorced Mulaykah bint Dawud



Mohammed married (married is the word in the text) Mulaykah bint Dawud al-Laythiyyah, but when she was told that Mohammed was the one who had her father killed, she took refuge in Allah from Mohammed. So Mohammed separated from her. al-Tabari vol.8 p.189. The same thing is told of Mulaykah bint Ka’b (who is likely the same person) in al-Tabari vol.39 p.165



Mulaykah bint Ka’b was married very briefly to Mohammed. A’isha asked her if she wanted to marry the man who killed her husband. She "took refuge in God" from Mohammed, so Mohammed divorced her. al-Tabari vol.39 p.165



24. Divorced al-Shanba’ bint ‘Amr



Mohammed married al-Shanba’ bint ‘Amr al-Ghifariyyah; her people were allies of the banu Qurayza. When Ibrahim died, she said that if he were a true prophet his son would not have died. Mohammed divorced her before consummating his marriage with her. al-Tabari vol.9 p.136



25. Divorced al-‘Aliyyah



Mohammed stayed a while with ‘Aliyyah bint Zabyan bin ‘Amr bin ‘Awf bin Ka’b, then divorced her. al-Tabari vol.39 p.188



Mohammed married al-‘Aliyyah, but then divorced her. She died while Mohammed was still alive al-Tabari vol.9 p.138.



26. Divorced ‘Amrah bint Yazid



Mohammed divorced ‘Amrah bint Yazid because she had leprosy. al-Tabari vol.39 p.188



Mohammed married ‘Amrah bint Yazid (no mention of divorce) al-Tabari vol.9 p.139.



Mohammed divorced ‘Amra. Ibn-i-Majah vol.3 no.2054 p.233 vol.3 no.2030 p.226 (daif [weak], not Sahih)



Mohammed divorced a woman because she had leprosy. al-Tabari vol.39 p.187



27. Divorced an Unnamed Woman



Mohammed divorced an unnamed woman because she would peek at those leaving the mosque. al-Tabari vol.39 p.187



28. Qutaylah bint Qays (died right away)



Mohammed married Qutaylah bint Qays but she died before they consummated the marriage. Curiously, it also says he and her brother apostacized form Islam. So she must have apostacized after the marriage and before her death perhaps? al-Tabari vol.9 p.138-139.



29. Sana bint Sufyan



Mention of Mohammed’s brief marriage with Sana bint Sufyan. al-Tabari vol.39 p.188



30. Sharaf bint Khalifah



Mohammed married Sharaf bint Khalifah, sister of Dihyah bin Lhalifah al-Kalbi, but she died while Mohammed was still alive. al-Tabari vol.9 p.138



31. Women of Mohammed’s Right Hand



"…abstain from sex, except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess - for (in their case) they are free from blame," Sura 23:5-6. See also Sura 4:24



"He [Mohammed] replied, ‘Conceal your private parts except from your wife and from whom your right hands possess (slave-girls).’" Abu Dawud vol.3 no.4006 p.1123



Abu Dawud vol.3 no.4443-4445 p.1244 shows that having sex with a slave-girl a man owns is fine, but a man will be flogged for having sex with his wife’s slave-girl.



As was typical of wealthy Arab men, Mohammed apparently had need of a few slave girls too. See Bukhari vol.7 book 64 ch.6 no.274 p.210.



Salmah for was a maid-servant of Mohammed. Abu Dawud vol.3 no.3849 p.1084



Maimuna was the freed slave girl of Mohammed. Ibn-i-Majah vol.3 no.2531 p.514; Abu Dawud vol.1 no.457 p.118



Mohammed briefly had a "very beautiful" captive before he gave her to Mahmiyah b. Jaz’ al-Zubaydi. al-Tabari vol.8 p.151



One of the slave girls belonging to Mohammed house committed fornication with someone else. It is the "someone else" part that was a problem. Abu Dawud vol.3 no.4458 p.1249



Mohammed called a black slave-girl to come and conceal Abu Dharr behind a curtain while he was taking a bath. Abu Dawud vol.1 no.332 p.87



Mention Umm Ayman (=Barakah), a client (slave-girl) of the prophet. al-Tabari vol.39 p.287



Mohammed definitely had a sense of humor. Umm Ayman, the Prophet’s client [i.e. slave whom it was lawful for him to spend the night with]. According to al-Husayn … Umm Ayman: [One] night the Prophet got up and urinated in the corner of the house into an earthenware vessel. During the night I got up, and being thirsty, I drank what was in the vessel, not noticing [anything]. When the Prophet got up in the morning he said ‘O Umm Ayman, take that earthenware vessel and pour away its content.’ I said ‘By God, I drank what was in it.’ The Prophet laughed until his molar teeth showed, then said ‘After this you will never have a bellyache.’" al-Tabari vol.39 p.199



In general, Abu Dawud vol.3 no.4443-4445 p.1244 teaches that having sex with a slave-girl a man owns is OK, but a man will be flogged for having sex with his wife’s slave-girl.



But, having sex with a wife’s slave girl is OK if the wife made her lawful for him. Note that he did not have to be married to the slave girl. Ibn-i-Majah vol.4 no.2551 p.12







Mohammed Turned Some Women Down!



A’isha felt jealous of the women who offered themselves to Mohammed [as wives]. Sahih Muslim vol.2 no.3453 p.748. But it was OK that a woman offered herself to Mohammed. Ibn-i-Majahvol.3 no.2000-2001 p.304-305



Some thought Mohammed married al-Ash’ath, but al-Tabari says that is false according to al-Tabari vol.39 p.190i. (Overall, al-Tabari did a masterful job of trying to keep up with all of Mohammed’s women.)







Some Women Turned Mohammed Down



Mohammed asked to marry Ghaziyyah on account of her beauty, but she declined. Tabari claims she was in a state of infidelity but provides no evidence. al-Tabari vol.9 p.136. There is no evidence she was unfaithful and Mohammed was lax in not punishing her, or that she was and Mohammed punished her.



Layla clapped Mohammed’s shoulder from behind and asked him to marry her. Mohammed accepted. Layla’s people said, "’What a bad thing you have done! You are a self-respecting woman, but the Prophet is a womanizer. Seek an annulment from him.’ She went back to the Prophet and asked him to revoke the marriage and he complied with [her request]." al-Tabari vol.9 p.139



From to al-Tabari vol.9 p.140-141, Mohammed proposed marriage to, but ended up not marrying:



1) Umm Hani’ bin Abi Talib [Hind] because she said she was with child.



2) Duba’ah bint ‘Amir but she was too old.



3) Reportedly he proposed to Saffiyah bint Bashshamah, a captive. She was allowed to choose between Mohammed and her husband, and she chose her husband.



4) Umm Habib bint al-‘Abbas but since al-‘Abbas was his foster brother so it would not have been lawful so Mohammed backed out.



5) Jamrah bint Al-Harith. Her father falsely claimed she was suffering from something. When he returned, he found that she had already been afflicted with leprosy.



It is inconsistent on whether Umm Hani’ became a Muslim before or after Mohammed asked her to marry him. al-Tabari vol.39 p.197 and footnote 857 p.197



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  1. dharumi says:

    //மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார்.//

    //சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.//

    //கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது. கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது.//

    இப்படியெல்லாம் பண்ணினவர் பின் எப்படி //மக்களுக்கெல்லாம் மன்னராக இருந்து ஒருநாள் கூட வயிறார உண்ணதில்லை நபி// இப்படி உண்ணாமல் பாவம் போல் இருந்தார்??

     
  2. பகடு says:

    வாருங்கள் தருமி

    ஹெஹ்ஹே… அது சும்மனாச்சிக்கும்…

    அல்குரான்லயே நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை கொள்ளையடிப்பதன் மூலம் செல்வந்தனாக ஆக்கியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுகிறார்.
    அது கெடக்கட்டும்.
    இப்ப ஹதீஸ்ல கூட நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா நல்லா தின்னு கொழுத்த குண்டர் என்று சொல்லுகின்றன.

    The apostle made for a rock on the mountain to climb it. He had become heavy by reason of his age, and moreover he had put on two coats of mail(1), so when he tried to get up he could not do so. Talha b. ‘Ubaydullah squatted beneath him and lifted him up until he settled comfortably upon it.
    Ibn Ishaq

    Narrated AbuBarzah:
    AbdusSalam ibn AbuHazim AbuTalut said: I saw AbuBarzah who came to visit Ubaydullah ibn Ziyad. Then a man named Muslim who was there in the company mentioned it to me.
    When Ubaydullah saw him, he said: This Muhammad of yours is a dwarf and fat. The old man (i.e. AbuBarzah) understood it.
    So he said: I did not think that I should remain among people who would make me feel ashamed of the company of Muhammad (peace be upon him).
    Thereupon Ubaydullah said: The company of Muhammad (peace be upon him) is a honour for you, not a disgrace. He added: I called for you to ask about the reservoir. Did you hear the Apostle of Allah (peace be upon him) mentioning anything about it? AbuBarzah said: Yes, not once, twice, thrice, four times or five times. If anyone believes it, may Allah not supply him with water from it. He then went away angrily.
    Abu Dawud 40:4731

    மனுஷர் ரொம்ப குண்டாக வேறு இருந்தார். கடைசிகாலத்தில் உடம்பு ரொம்ப தின்று பெருத்து போய் நடக்கவே முடியவில்லை. ஒரு சிலர் அவருக்கு யூதக்கிழவி வைத்த விஷத்தால்தான் நடக்கக்கூட முடியாமல் போனது என்று சொல்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நம்ம *கண்ணுமணி நபியோட* வரலாறு...
குறிப்பு : நான் ex Muslim ... தற்போது நாத்திகன்...
இஸ்லாத்தில் உள்ள *கொடுமைகளை*
இடித்துரைக்கும் பதிவு இது...
——————————
இங்கே எழுதப்பட்டுள்ள *நபி வரலாறு முழுக்க முழுக்க உண்மையே....*
1) அல் சீரா அல் நப்பாவ்வியா,
2) சீரத் ரசூல் அல்லாஹ்
என்ற இஸ்லாமிய *முஹம்மதின் சரிதை* நூலில் இருந்து எடுக்கப்பட்டதே *இந்த கட்டுரை...*
காஃபிர் வாசகர்களுக்கு அலுப்பு தட்டாமலிருக்கவே வழக்கு மொழி நடை பயன்படுத்தப்பட்டிருக்கிறது...
காஃபிர்கள் பொறுமையா படிங்க, உங்களுக்கு இந்த வரலாறு தேவைப்படலாம்...
மொஹம்மத் இப்னு அப்தல்லா *என்னும் நபிகள் நாயகம், ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார்.*
இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது.
நபி பிறப்பதற்கு முன்பே *அவர் அப்பா இறந்துவிட்டார்.* தாயார் பெயர் *அமினா.*
நபி *ஆறு வயதாக* இருக்கும்போது அவர் *தாயும் போய் சேர்ந்துவிட்டார்.*
அதனால் அவர் தனது *தாய்வழி தாத்தாவான* அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார்.
தாத்தாவும் *மண்டையை போட்ட* பின்னால், *மாமாவான* அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்.
பிறகு கதீஜா என்ற *40 வயது பணக்கார பெண்ணின் மூன்றாவது கணவனாக தனது 25 வயதில் ஆனார்.*
(கதீஜாவின் முதல் *இரண்டு கணவர்களும்* இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று யாருக்கும் தெரியாது)
கதீஜா பணக்கார வியாபாரியாக இருந்ததால், அவர் சார்பாக கதீஜாவின் வியாபார வண்டிகளை ஓட்டி பல நாடுகளுக்கு?! சென்று விற்பனை செய்துவந்தார்.
கிபி 610இல் அவருக்கு *நாற்பது வயதாக* இருக்கும்போது ஹிரா மலையில் ஜிப்ரீல் என்ற ஒரு தேவதையை பார்த்ததாக கூறிகொள்கிறார். அதன் பின்னால், அந்த ஊரில் இருக்கும் கோவிலை இடிக்க வேண்டும், அதில் உள்ள சிலைகளை உடைக்க வேண்டும் என்று *போதனை செய்ய ஆரம்பிக்கிறார்.*
இதனால் அங்கே இருக்கும் சிலர் அவரது புதிய மதத்தில்?! சேர்கிறார்கள்.
பலர் இந்த ஆள் லூஸு என்று விலகுகிறார்கள்.
ஆனாலும் இவரை யாரும் கொல்லவில்லை.
காரணம் இவர் *பானு ஹஷிம்* என்ற குலத்தை சேர்ந்தவர்.
பானு ஹஷிம் ஜாதியை சேர்ந்தவர் *ஒருவரை வேறொரு ஜாதிக்காரர்* கொன்றுவிட்டால், இரண்டு ஜாதிகளுக்கிடையே *குத்துவெட்டு நடக்கும்.*
*ஜாதி பாசம்!*
இதனால் பானு ஹஷிம் *ஜாதி தைரியத்திலும்* கதீஜா என்ற *பணக்கார* சொத்து *தைரியத்திலும்* நம்ம கண்ணுமணி விட்டு விளாசிக்கொண்டிருந்தார்.
பனு ஹஷிம் *தலைமை* இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபிடம் இருந்தது.
குரேஷி என்ற பெரிய ஜாதிக்குள் பனு ஹஷிம், பனு அப்த் ஷம்ஸ் என்று சின்ன சின்ன ஜாதிகள் உண்டு. (முக்குலத்தோர் ஜாதிக்குள் தேவர் ஜாதி, மறவர் ஜாதி என்று உப ஜாதிகள் இருப்பது போல)
619இல் இவரது மனைவி *கதீஜாவும் இறந்தார்* அதே நேரத்தில் இவரை பாதுகாத்து வந்த *மாமா அபு தாலிபும் இறந்தார்.*
உடனே பனு ஹஷிம் *தலைமை இடம் மாறி* அபு லஹப்பிடம் வந்தது.
அபு லஹப் உடனே, பனு ஹஷிம் ஜாதி *பாதுகாப்பு இனி முகம்மதுவுக்கு கிடையாது* என்று அறிவித்துவிட்டார்.
கெட்டது குடி.
நம்ம கண்ணுமணி மரண காண்டாகி வயிறெறிஞ்சி அபு லஹப் மேல *சாபம் உட்டு கண்டபடி திட்டினார்.*
அப்புறம் கண்ணுமணி மேல அல்லா சாமி வந்து ஆடி அபு லஹபை திட்டி, *குரான்ல எழுதி*,
இன்னிக்கும் நம்ம மூமின்கள் *அபு லஹபை* திட்டிகொண்டிருக்கிறார்கள்.
ஜாதி பாதுகாப்பு இல்லாம மெக்காவை உடைக்கணும், அங்க இருக்கிற சிலையெல்லாம் உடைக்கணும்னு *நம்ம கண்ணுமணியால இனி எப்படி பேச முடியும்?*
ஏற்கனவே பேசினதிலயே அவனவன் கடுப்பில இருக்கான். உயிர் மிஞ்சனும்னா *வேற ஊருக்கு கிளம்பிற வேண்டியதுதான்னு* நம்ம கண்ணுமணி முடிவு செஞ்சார்.
மக்கா ஊரில் *கடை போணியாகவில்லை* என்று வேறெதாவது ஊருக்கு போகலாம் என்று அபிசீனியா யாத்ரிப் என்ற ஊரெல்லாம் தேடி, கடைசியில் *யூதர்களின் ஊரான* யாத்ரிப் ஊருக்கு போய் தங்குகிறார்.
அங்கே இருக்கும் பணக்கார யூதர்களின் கீழ் *அன்சாரிகள் என்ற அரேபியர்கள்* வேலை செய்கிறார்கள். அவர்களும் இவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள்.
கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும், மெக்காவில் இருக்கும் பணக்காரர்களது வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா பிறக்கிறது.
ஆகவே இந்த புதிய கூட்டத்தை வைத்து மெக்காவிலிருந்து போகும் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க துவங்குகிறார். இதனால் அவரிடமிருக்கும் *கொள்ளைக்கூட்டம்* பெரியதாகிறது.
கிபி 624இல் மொஹம்மத் இப்னு அப்தல்லாவே ஒரு பெரிய முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்தை தலைமை தாங்கி வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க கிளம்புகிறார்.
இவர் கொள்ளையடிக்க கொள்ளையடிக்க, குரேஷிகள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்புக்கு என்று ஆயிரம் பேர்களை வியாபார வண்டிகளோடு அனுப்புகிறார்கள்.
முன்னூறு முஸ்லீம் கொள்ளைக்காரர்களும் ஆயிரம் குரேஷி சோப்ளாங்கிகளும் மோதியதில் *முஸ்லீம் கொள்ளைக்கூட்டம்* வெற்றிபெறுகிறது.
இதுவே *பதர் போர்* என்று மூமின்களால் *குஷியுடனும் கர்வத்துடனும்* பெருமையுடனும் இன்றும் அழைக்கப்படுகிறது.
பதர் போரினால் கிடைத்த ஏராளமான கொள்ளைப்பணத்தால் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் பெருக ஆரம்பித்தது. வியாபாரிகளிடமிருந்து கொள்ளையடித்ததை எப்படி பகிர்ந்துகொள்வது என்று அல்லாஹ் இப்போது இறைவசனமெல்லாம் இறக்குகிறார்.
இதனால், மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார். தன்னை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான், அபு அபக் போன்ற கவிஞர்களை தீர்த்துக்கட்டுறார்.
யாத்ரிப் நகரில் அரேபியர் வரும் முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தார்.
ஒரு முஸ்லீமுக்கும் ஒரு யூதருக்கும் நடந்த தகராறை காரணமாக வைத்து *பனு கனுக்கா Banu Qaynuqa என்ற யூதர்கள் அனைவரையும் தலையை துண்டிக்க ஆணையிட்டார்.*
கஸ்ராஜ் என்ற ஜாதியின் தலைவர் அப்துல்லா இப்னு உபய், இவர்களை கொல்லக்கூடாது என்று மறுத்ததால் இவர்கள் தலை தப்பியது. அந்த யூதர்கள் யாத்ரிபிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
இதனால் ரொம்ப குஷியான மொஹம்மத் இன்னொரு வியாபார வண்டி கூட்டத்தை உஹுத் என்னுமிடத்தில் தாக்கியபோது முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்தது. இந்த போரில் முகம்மதுவும் காயமடைந்தார்.
இப்போது ஒரு யூத கவிஞர் முகம்மது தோல்வியடைந்ததை கிண்டல் செய்து பாடினார். பனு நதிர் என்ற யூத குலத்தை சேர்ந்த கப் இப்னு அல் அஷ்ரப் என்ற இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆளை அனுப்பி தீர்த்து கட்டினார்.
பனு நதிர் என்பது யாத்ரிப் (மெதீனாவில்) இருந்த இன்னொரு யூத குலம். இவர்கள் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக்கி அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களது சோலைவனத்தை முற்றுகையிட்டு பத்தே நாளில் மெதீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார்.
பதினான்கு நாட்களுக்கு பிறகு பானு நதிர் சரண்டைந்தார்கள். ஒட்டகத்தில் எடுத்துகொண்டு போகக்கூடியதை மட்டும் எடுத்துகொண்டு ஓடுங்கள் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னதும் அதன் படியே அவர்கள் ஓடினார்கள்.
சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.
துரத்தப்பட்டவர்கள் மெக்காவுக்கு சென்று உதவி கேட்டார்கள். இவ்வாறு மெக்காவிலிருந்தும் வியாபாரமே நடத்த முடியாமல் முஹம்மதின் கூட்டம் கொள்ளையடித்துகொண்டே இருந்தததால், கடுப்பான மெக்காவாசிகளும் படையை திரட்டிக்கொண்டு *மெதீனாவை தாக்க வந்தார்கள்.*
மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் மெதீனாவை (முன்னாள் யாத்ரிப்) சுற்றி பள்ளம் தோண்டி மெக்கா படை உள்ளே வரமுடியாமல் செய்தது. இந்த அகழியை தாண்டமுடியாமல் மெக்கா படை பின்வாங்கி மெக்காவுக்கு சென்றது. மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் ஒரே குஷியாகிவிட்டது.
*இவ்வளோ ரணகளத்துக்கு நடுவிலயும்,*
*ஆறு வயது ஆயிஷா முதல் தன் மருமகள் வரை னு கிட்டத்தட்ட 13 மனைவிகளையும் கணக்கே இல்லாத அடிமை பெண்களையும் ஆண்டு அனுபவிச்சாரு..*.
திடீரென்று நம்ம கண்ணுமணிக்கு மெக்காவுக்கு எல்லோரும் போய் உம்ரா செய்றமாதிரி நாமளும் செய்யணும்னு ஆசை வந்திச்சி.
*காரணம் இருக்கு.*
மெக்காவை டேக் ஓவர் பண்ணனும்னா நாமளும் மெக்கா கோவிலுக்கு மரியாதை செய்யணும்னு தோணிடிச்சி. ஆக இவரு கொஞ்ச பேரோட உம்ரா கிளம்புனார்.
சரி இவரும் எதோ சமாதானம் பேசறார். விடுவோம் என்று குரேஷிகளும் ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது *ஒருவரோடு ஒருவர் பத்துவருடங்கள் சண்டை போடக்கூடாது என்ற ஒப்பந்தம்*.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் *ஹூதைபியா ஒப்பந்தம்.*
மெக்காவோட குரேஷிகளோடு தானே போர் புரியக்கூடாது?
நம்ம *அங்கண இங்கண இருக்கிற யூதர்களை* கொள்ளையடிப்போம் என்று கண்னுமணி கிளம்பி *கைபருக்கு* போனார். கைபரும் ஒரு யூதர்களது குடியிருப்பு.
அங்கே பாலைவனத்தை சோலைவனமாக்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த யூதர்களை முற்றுகையிட்டார். இறுதியில் சரணடைந்த யூதர்கள் *விளைச்சலில் பாதியை முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கப்பமாக* செலுத்திவிடுகிறோம் என்று ஒப்புகொண்டனர்.
ஆக *ஒன்றுமே செய்யாமல் முஸ்லீம்கள் அடுத்தவர் உழைப்பில் சுகமாக வாழ்வது இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது.*
இதுவே *ஜிஸ்யா* என்றும் அழைக்கப்படுகிறது.
(கைபர் போர் நாம ரொம்ப ஞாபகம் வச்சிக்க வேண்டிய போர். காரணம் அவர் சாக அதுதான் காரணம். அங்க ஒரு கிழவி கொடுத்த ஆட்டுக்கறியை தின்னுதான் கண்ணுமணிக்கு வியாதி வருது. பின்னாடி அதப்பத்தி எழுதறேன்)
இப்ப வேலையே செய்யாம கை நிறைய காசு. எவனோ உழைக்கிறான். ஒன்னுமே செய்யாம, வெளைச்சல்ல பாதி நமக்குன்னா எப்படி இருக்கும்! கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது.
கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது.
கத்தி எடுத்த கை சும்மா இருக்குமா?
*அரிக்குது*.
பத்தாண்டு ஒப்பந்தம் போட்டுட்டமே எப்படி சும்மா இருக்கிறது.
*அல்லாவை கூப்பிட்டு அந்த பத்தாண்டு ஒப்பந்தத்த ரத்து பண்ணினார்.*
கிபி 630இல் மெக்காவை கைப்பற்ற ஏராளமான முஸ்லீம் படைகளோடு கிளம்பினார். பத்தாயிரத்துக்கும் மேல் இந்த கூட்டம் இருந்ததா சொல்லப்படுது.
மிக எளிதில் மெக்காவை கைப்பற்றினார்.
தன் மீது கிண்டல் கவிதைகள் பாடியவர்களை *தேடித் தேடி முதலில் அவர்கள் தலையை துண்டித்தார்.*
*இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்றால்* தலை இருக்காது என்று அறிவித்ததும், மெக்காவாசிகள் மனமுவந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.
மெக்கா கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தார். முக்கியமான சிலையான ஹுபாலை எடுத்து மெக்கா கோவிலுக்குள் நுழையும் *படிக்கட்டில் போட்டார்.*
இன்னமும் *அந்த சிலை மீது நடந்துதான் மெக்காவுக்கு உள்ளே போகிறார்கள் மூமின்கள்.*
பனு ஹவாஜின் என்ற கூட்டம் மெக்காவின் குரேஷிகளுக்கு பழைய விரோதிகள். அவர்கள் மெக்காவை தாக்க வருகிறார்கள். அந்த போரில் முஸ்லீம் படை வெற்றி பெறுகிறது.
வடக்கு அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லீம் படை முட்டா போரில் தோல்வி அடைந்தது.
632இல் மெதீனாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார் முகம்மது.
அதன் பின் சில நாட்களிலேயே ஜுரம் தலைவலி பலவீனம் அடைந்து *திங்கட்கிழமை ஜூன் 8 ஆம் தேதி கிபி 632இல் செத்தார்*.
அவர் மரணமடைந்த *அயீஷாவின்* வீட்டிலேயே புதைக்கப்பட்டார்.
இஸ்லாமின் மூலம் பல செல்வங்களை அடைந்த முஸ்லீம்கள் அந்த கல்லறைக்கு தங்கம் வைரம் என்று போர்த்தினார்கள்.
1805இல் இப்னு *சவுத்* அரேபியாவுக்கு அரசராக ஆனதும், அரேபியாவின் பெயரை *சவுதி* அரேபியா என்று மாற்றினார்.
மெதீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கல்லறைகளை இடித்தார்.
*முகம்மதுவின் கல்லறை மட்டுமே தப்பியிருந்தது.*
ஆனாலும் அதிலிருந்து எல்லா தங்கம் வைரம் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு போய்விட்டார். இருந்தாலும் ஏராளமான அரேபியர்கள் ஜியாரத் செய்கிறார்கள்.
அவருக்கு பின் அபு பக்ர் அரசரனார்.
அதற்குள் ஏராளமான அரேபியர்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவித்துவிட்டார்கள்.
அபு பக்ர் கடுப்பாகி இஸ்லாமிலிருந்து எவன் வெளியேறினாலும் *முகம்மது சொன்ன மாதிரி கழுத்தை வெட்டு என்று போர் துவங்கினார்.*
இது *ரித்தா போர்கள்* என்று அழைக்கப்படுது.
பாதிக்கு மேல *அரேபியர்களை கொன்னு தான்* இஸ்லாம் மதம் அழிவில இருந்து அப்போது காப்பாற்றப்பட்டது.
ஆகவே *அபு பக்ர் மட்டும் இல்லைனா இன்னைக்கு இஸ்லாமே இல்ல னு சொல்லலாம்.*
இந்த மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற முஹம்மது நபியை சுமார் 2 பில்லியன் பேர் பின்பற்றுவதாக விக்கிபீடியா சொல்லுது.
அவ்வளவு தான் *நம்ம கண்ணுமணி நபியோட பாலாறு, தேனாறு, வரலாறு...*
ஸ்ஸ்ஸ் யப்பா......
என்னதான் சுருங்க எழுதனும்னு நெனச்சாலும் ரொம்ப நீளமா போய்டிச்சி.
இருந்தாலும் தெரிஞ்சிக்கிறது நல்லதுதான்.
ஏன்னா, *நம்ம மூமின்களுக்கே* இதில பல விஷயங்கள் தெரியாது.
Edited by *LN*நம்ம *கண்ணுமணி நபியோட* வரலாறு...
குறிப்பு : நான் ex Muslim ... தற்போது நாத்திகன்...
இஸ்லாத்தில் உள்ள *கொடுமைகளை*
இடித்துரைக்கும் பதிவு இது...
——————————
இங்கே எழுதப்பட்டுள்ள *நபி வரலாறு முழுக்க முழுக்க உண்மையே....*
1) அல் சீரா அல் நப்பாவ்வியா,
2) சீரத் ரசூல் அல்லாஹ்
என்ற இஸ்லாமிய *முஹம்மதின் சரிதை* நூலில் இருந்து எடுக்கப்பட்டதே *இந்த கட்டுரை...*
காஃபிர் வாசகர்களுக்கு அலுப்பு தட்டாமலிருக்கவே வழக்கு மொழி நடை பயன்படுத்தப்பட்டிருக்கிறது...
காஃபிர்கள் பொறுமையா படிங்க, உங்களுக்கு இந்த வரலாறு தேவைப்படலாம்...
மொஹம்மத் இப்னு அப்தல்லா *என்னும் நபிகள் நாயகம், ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார்.*
இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது.
நபி பிறப்பதற்கு முன்பே *அவர் அப்பா இறந்துவிட்டார்.* தாயார் பெயர் *அமினா.*
நபி *ஆறு வயதாக* இருக்கும்போது அவர் *தாயும் போய் சேர்ந்துவிட்டார்.*
அதனால் அவர் தனது *தாய்வழி தாத்தாவான* அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார்.
தாத்தாவும் *மண்டையை போட்ட* பின்னால், *மாமாவான* அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்.
பிறகு கதீஜா என்ற *40 வயது பணக்கார பெண்ணின் மூன்றாவது கணவனாக தனது 25 வயதில் ஆனார்.*
(கதீஜாவின் முதல் *இரண்டு கணவர்களும்* இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று யாருக்கும் தெரியாது)
கதீஜா பணக்கார வியாபாரியாக இருந்ததால், அவர் சார்பாக கதீஜாவின் வியாபார வண்டிகளை ஓட்டி பல நாடுகளுக்கு?! சென்று விற்பனை செய்துவந்தார்.
கிபி 610இல் அவருக்கு *நாற்பது வயதாக* இருக்கும்போது ஹிரா மலையில் ஜிப்ரீல் என்ற ஒரு தேவதையை பார்த்ததாக கூறிகொள்கிறார். அதன் பின்னால், அந்த ஊரில் இருக்கும் கோவிலை இடிக்க வேண்டும், அதில் உள்ள சிலைகளை உடைக்க வேண்டும் என்று *போதனை செய்ய ஆரம்பிக்கிறார்.*
இதனால் அங்கே இருக்கும் சிலர் அவரது புதிய மதத்தில்?! சேர்கிறார்கள்.
பலர் இந்த ஆள் லூஸு என்று விலகுகிறார்கள்.
ஆனாலும் இவரை யாரும் கொல்லவில்லை.
காரணம் இவர் *பானு ஹஷிம்* என்ற குலத்தை சேர்ந்தவர்.
பானு ஹஷிம் ஜாதியை சேர்ந்தவர் *ஒருவரை வேறொரு ஜாதிக்காரர்* கொன்றுவிட்டால், இரண்டு ஜாதிகளுக்கிடையே *குத்துவெட்டு நடக்கும்.*
*ஜாதி பாசம்!*
இதனால் பானு ஹஷிம் *ஜாதி தைரியத்திலும்* கதீஜா என்ற *பணக்கார* சொத்து *தைரியத்திலும்* நம்ம கண்ணுமணி விட்டு விளாசிக்கொண்டிருந்தார்.
பனு ஹஷிம் *தலைமை* இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபிடம் இருந்தது.
குரேஷி என்ற பெரிய ஜாதிக்குள் பனு ஹஷிம், பனு அப்த் ஷம்ஸ் என்று சின்ன சின்ன ஜாதிகள் உண்டு. (முக்குலத்தோர் ஜாதிக்குள் தேவர் ஜாதி, மறவர் ஜாதி என்று உப ஜாதிகள் இருப்பது போல)
619இல் இவரது மனைவி *கதீஜாவும் இறந்தார்* அதே நேரத்தில் இவரை பாதுகாத்து வந்த *மாமா அபு தாலிபும் இறந்தார்.*
உடனே பனு ஹஷிம் *தலைமை இடம் மாறி* அபு லஹப்பிடம் வந்தது.
அபு லஹப் உடனே, பனு ஹஷிம் ஜாதி *பாதுகாப்பு இனி முகம்மதுவுக்கு கிடையாது* என்று அறிவித்துவிட்டார்.
கெட்டது குடி.
நம்ம கண்ணுமணி மரண காண்டாகி வயிறெறிஞ்சி அபு லஹப் மேல *சாபம் உட்டு கண்டபடி திட்டினார்.*
அப்புறம் கண்ணுமணி மேல அல்லா சாமி வந்து ஆடி அபு லஹபை திட்டி, *குரான்ல எழுதி*,
இன்னிக்கும் நம்ம மூமின்கள் *அபு லஹபை* திட்டிகொண்டிருக்கிறார்கள்.
ஜாதி பாதுகாப்பு இல்லாம மெக்காவை உடைக்கணும், அங்க இருக்கிற சிலையெல்லாம் உடைக்கணும்னு *நம்ம கண்ணுமணியால இனி எப்படி பேச முடியும்?*
ஏற்கனவே பேசினதிலயே அவனவன் கடுப்பில இருக்கான். உயிர் மிஞ்சனும்னா *வேற ஊருக்கு கிளம்பிற வேண்டியதுதான்னு* நம்ம கண்ணுமணி முடிவு செஞ்சார்.
மக்கா ஊரில் *கடை போணியாகவில்லை* என்று வேறெதாவது ஊருக்கு போகலாம் என்று அபிசீனியா யாத்ரிப் என்ற ஊரெல்லாம் தேடி, கடைசியில் *யூதர்களின் ஊரான* யாத்ரிப் ஊருக்கு போய் தங்குகிறார்.
அங்கே இருக்கும் பணக்கார யூதர்களின் கீழ் *அன்சாரிகள் என்ற அரேபியர்கள்* வேலை செய்கிறார்கள். அவர்களும் இவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள்.
கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும், மெக்காவில் இருக்கும் பணக்காரர்களது வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா பிறக்கிறது.
ஆகவே இந்த புதிய கூட்டத்தை வைத்து மெக்காவிலிருந்து போகும் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க துவங்குகிறார். இதனால் அவரிடமிருக்கும் *கொள்ளைக்கூட்டம்* பெரியதாகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 கிபி 624இல் மொஹம்மத் இப்னு அப்தல்லாவே ஒரு பெரிய முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்தை தலைமை தாங்கி வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க கிளம்புகிறார்.

இவர் கொள்ளையடிக்க கொள்ளையடிக்க, குரேஷிகள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்புக்கு என்று ஆயிரம் பேர்களை வியாபார வண்டிகளோடு அனுப்புகிறார்கள்.
முன்னூறு முஸ்லீம் கொள்ளைக்காரர்களும் ஆயிரம் குரேஷி சோப்ளாங்கிகளும் மோதியதில் *முஸ்லீம் கொள்ளைக்கூட்டம்* வெற்றிபெறுகிறது.
இதுவே *பதர் போர்* என்று மூமின்களால் *குஷியுடனும் கர்வத்துடனும்* பெருமையுடனும் இன்றும் அழைக்கப்படுகிறது.
பதர் போரினால் கிடைத்த ஏராளமான கொள்ளைப்பணத்தால் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் பெருக ஆரம்பித்தது. வியாபாரிகளிடமிருந்து கொள்ளையடித்ததை எப்படி பகிர்ந்துகொள்வது என்று அல்லாஹ் இப்போது இறைவசனமெல்லாம் இறக்குகிறார்.
இதனால், மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார். தன்னை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான், அபு அபக் போன்ற கவிஞர்களை தீர்த்துக்கட்டுறார்.
யாத்ரிப் நகரில் அரேபியர் வரும் முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தார்.
ஒரு முஸ்லீமுக்கும் ஒரு யூதருக்கும் நடந்த தகராறை காரணமாக வைத்து *பனு கனுக்கா Banu Qaynuqa என்ற யூதர்கள் அனைவரையும் தலையை துண்டிக்க ஆணையிட்டார்.*
கஸ்ராஜ் என்ற ஜாதியின் தலைவர் அப்துல்லா இப்னு உபய், இவர்களை கொல்லக்கூடாது என்று மறுத்ததால் இவர்கள் தலை தப்பியது. அந்த யூதர்கள் யாத்ரிபிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
இதனால் ரொம்ப குஷியான மொஹம்மத் இன்னொரு வியாபார வண்டி கூட்டத்தை உஹுத் என்னுமிடத்தில் தாக்கியபோது முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்தது. இந்த போரில் முகம்மதுவும் காயமடைந்தார்.
இப்போது ஒரு யூத கவிஞர் முகம்மது தோல்வியடைந்ததை கிண்டல் செய்து பாடினார். பனு நதிர் என்ற யூத குலத்தை சேர்ந்த கப் இப்னு அல் அஷ்ரப் என்ற இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆளை அனுப்பி தீர்த்து கட்டினார்.
பனு நதிர் என்பது யாத்ரிப் (மெதீனாவில்) இருந்த இன்னொரு யூத குலம். இவர்கள் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக்கி அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களது சோலைவனத்தை முற்றுகையிட்டு பத்தே நாளில் மெதீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார்.
பதினான்கு நாட்களுக்கு பிறகு பானு நதிர் சரண்டைந்தார்கள். ஒட்டகத்தில் எடுத்துகொண்டு போகக்கூடியதை மட்டும் எடுத்துகொண்டு ஓடுங்கள் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னதும் அதன் படியே அவர்கள் ஓடினார்கள்.
சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.
துரத்தப்பட்டவர்கள் மெக்காவுக்கு சென்று உதவி கேட்டார்கள். இவ்வாறு மெக்காவிலிருந்தும் வியாபாரமே நடத்த முடியாமல் முஹம்மதின் கூட்டம் கொள்ளையடித்துகொண்டே இருந்தததால், கடுப்பான மெக்காவாசிகளும் படையை திரட்டிக்கொண்டு *மெதீனாவை தாக்க வந்தார்கள்.*
மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் மெதீனாவை (முன்னாள் யாத்ரிப்) சுற்றி பள்ளம் தோண்டி மெக்கா படை உள்ளே வரமுடியாமல் செய்தது. இந்த அகழியை தாண்டமுடியாமல் மெக்கா படை பின்வாங்கி மெக்காவுக்கு சென்றது. மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் ஒரே குஷியாகிவிட்டது.
*இவ்வளோ ரணகளத்துக்கு நடுவிலயும்,*
*ஆறு வயது ஆயிஷா முதல் தன் மருமகள் வரை னு கிட்டத்தட்ட 13 மனைவிகளையும் கணக்கே இல்லாத அடிமை பெண்களையும் ஆண்டு அனுபவிச்சாரு..*.
திடீரென்று நம்ம கண்ணுமணிக்கு மெக்காவுக்கு எல்லோரும் போய் உம்ரா செய்றமாதிரி நாமளும் செய்யணும்னு ஆசை வந்திச்சி.
*காரணம் இருக்கு.*
மெக்காவை டேக் ஓவர் பண்ணனும்னா நாமளும் மெக்கா கோவிலுக்கு மரியாதை செய்யணும்னு தோணிடிச்சி. ஆக இவரு கொஞ்ச பேரோட உம்ரா கிளம்புனார்.
சரி இவரும் எதோ சமாதானம் பேசறார். விடுவோம் என்று குரேஷிகளும் ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது *ஒருவரோடு ஒருவர் பத்துவருடங்கள் சண்டை போடக்கூடாது என்ற ஒப்பந்தம்*.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் *ஹூதைபியா ஒப்பந்தம்.*
மெக்காவோட குரேஷிகளோடு தானே போர் புரியக்கூடாது?
நம்ம *அங்கண இங்கண இருக்கிற யூதர்களை* கொள்ளையடிப்போம் என்று கண்னுமணி கிளம்பி *கைபருக்கு* போனார். கைபரும் ஒரு யூதர்களது குடியிருப்பு.
அங்கே பாலைவனத்தை சோலைவனமாக்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த யூதர்களை முற்றுகையிட்டார். இறுதியில் சரணடைந்த யூதர்கள் *விளைச்சலில் பாதியை முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கப்பமாக* செலுத்திவிடுகிறோம் என்று ஒப்புகொண்டனர்.
ஆக *ஒன்றுமே செய்யாமல் முஸ்லீம்கள் அடுத்தவர் உழைப்பில் சுகமாக வாழ்வது இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது.*
இதுவே *ஜிஸ்யா* என்றும் அழைக்கப்படுகிறது.
(கைபர் போர் நாம ரொம்ப ஞாபகம் வச்சிக்க வேண்டிய போர். காரணம் அவர் சாக அதுதான் காரணம். அங்க ஒரு கிழவி கொடுத்த ஆட்டுக்கறியை தின்னுதான் கண்ணுமணிக்கு வியாதி வருது. பின்னாடி அதப்பத்தி எழுதறேன்)
இப்ப வேலையே செய்யாம கை நிறைய காசு. எவனோ உழைக்கிறான். ஒன்னுமே செய்யாம, வெளைச்சல்ல பாதி நமக்குன்னா எப்படி இருக்கும்! கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது.
கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது.
கத்தி எடுத்த கை சும்மா இருக்குமா?
*அரிக்குது*.
பத்தாண்டு ஒப்பந்தம் போட்டுட்டமே எப்படி சும்மா இருக்கிறது.
*அல்லாவை கூப்பிட்டு அந்த பத்தாண்டு ஒப்பந்தத்த ரத்து பண்ணினார்.*
கிபி 630இல் மெக்காவை கைப்பற்ற ஏராளமான முஸ்லீம் படைகளோடு கிளம்பினார். பத்தாயிரத்துக்கும் மேல் இந்த கூட்டம் இருந்ததா சொல்லப்படுது.
மிக எளிதில் மெக்காவை கைப்பற்றினார்.
தன் மீது கிண்டல் கவிதைகள் பாடியவர்களை *தேடித் தேடி முதலில் அவர்கள் தலையை துண்டித்தார்.*
*இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்றால்* தலை இருக்காது என்று அறிவித்ததும், மெக்காவாசிகள் மனமுவந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.
மெக்கா கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தார். முக்கியமான சிலையான ஹுபாலை எடுத்து மெக்கா கோவிலுக்குள் நுழையும் *படிக்கட்டில் போட்டார்.*
இன்னமும் *அந்த சிலை மீது நடந்துதான் மெக்காவுக்கு உள்ளே போகிறார்கள் மூமின்கள்.*
பனு ஹவாஜின் என்ற கூட்டம் மெக்காவின் குரேஷிகளுக்கு பழைய விரோதிகள். அவர்கள் மெக்காவை தாக்க வருகிறார்கள். அந்த போரில் முஸ்லீம் படை வெற்றி பெறுகிறது.
வடக்கு அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லீம் படை முட்டா போரில் தோல்வி அடைந்தது.
632இல் மெதீனாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார் முகம்மது.
அதன் பின் சில நாட்களிலேயே ஜுரம் தலைவலி பலவீனம் அடைந்து *திங்கட்கிழமை ஜூன் 8 ஆம் தேதி கிபி 632இல் செத்தார்*.
அவர் மரணமடைந்த *அயீஷாவின்* வீட்டிலேயே புதைக்கப்பட்டார்.
இஸ்லாமின் மூலம் பல செல்வங்களை அடைந்த முஸ்லீம்கள் அந்த கல்லறைக்கு தங்கம் வைரம் என்று போர்த்தினார்கள்.
1805இல் இப்னு *சவுத்* அரேபியாவுக்கு அரசராக ஆனதும், அரேபியாவின் பெயரை *சவுதி* அரேபியா என்று மாற்றினார்.
மெதீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கல்லறைகளை இடித்தார்.
*முகம்மதுவின் கல்லறை மட்டுமே தப்பியிருந்தது.*
ஆனாலும் அதிலிருந்து எல்லா தங்கம் வைரம் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு போய்விட்டார். இருந்தாலும் ஏராளமான அரேபியர்கள் ஜியாரத் செய்கிறார்கள்.
அவருக்கு பின் அபு பக்ர் அரசரனார்.
அதற்குள் ஏராளமான அரேபியர்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவித்துவிட்டார்கள்.
அபு பக்ர் கடுப்பாகி இஸ்லாமிலிருந்து எவன் வெளியேறினாலும் *முகம்மது சொன்ன மாதிரி கழுத்தை வெட்டு என்று போர் துவங்கினார்.*
இது *ரித்தா போர்கள்* என்று அழைக்கப்படுது.
பாதிக்கு மேல *அரேபியர்களை கொன்னு தான்* இஸ்லாம் மதம் அழிவில இருந்து அப்போது காப்பாற்றப்பட்டது.
ஆகவே *அபு பக்ர் மட்டும் இல்லைனா இன்னைக்கு இஸ்லாமே இல்ல னு சொல்லலாம்.*
இந்த மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற முஹம்மது நபியை சுமார் 2 பில்லியன் பேர் பின்பற்றுவதாக விக்கிபீடியா சொல்லுது.
அவ்வளவு தான் *நம்ம கண்ணுமணி நபியோட பாலாறு, தேனாறு, வரலாறு...*
ஸ்ஸ்ஸ் யப்பா......
என்னதான் சுருங்க எழுதனும்னு நெனச்சாலும் ரொம்ப நீளமா போய்டிச்சி.
இருந்தாலும் தெரிஞ்சிக்கிறது நல்லதுதான்.
ஏன்னா, *நம்ம மூமின்களுக்கே* இதில பல விஷயங்கள் தெரியாது.
Edited by *LN*நம்ம *கண்ணுமணி நபியோட* வரலாறு...
குறிப்பு : நான் ex Muslim ... தற்போது நாத்திகன்...
இஸ்லாத்தில் உள்ள *கொடுமைகளை*
இடித்துரைக்கும் பதிவு இது...
——————————
இங்கே எழுதப்பட்டுள்ள *நபி வரலாறு முழுக்க முழுக்க உண்மையே....*
1) அல் சீரா அல் நப்பாவ்வியா,
2) சீரத் ரசூல் அல்லாஹ்
என்ற இஸ்லாமிய *முஹம்மதின் சரிதை* நூலில் இருந்து எடுக்கப்பட்டதே *இந்த கட்டுரை...*
காஃபிர் வாசகர்களுக்கு அலுப்பு தட்டாமலிருக்கவே வழக்கு மொழி நடை பயன்படுத்தப்பட்டிருக்கிறது...
காஃபிர்கள் பொறுமையா படிங்க, உங்களுக்கு இந்த வரலாறு தேவைப்படலாம்...
மொஹம்மத் இப்னு அப்தல்லா *என்னும் நபிகள் நாயகம், ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார்.*
இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது.
நபி பிறப்பதற்கு முன்பே *அவர் அப்பா இறந்துவிட்டார்.* தாயார் பெயர் *அமினா.*
நபி *ஆறு வயதாக* இருக்கும்போது அவர் *தாயும் போய் சேர்ந்துவிட்டார்.*
அதனால் அவர் தனது *தாய்வழி தாத்தாவான* அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார்.
தாத்தாவும் *மண்டையை போட்ட* பின்னால், *மாமாவான* அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்.
பிறகு கதீஜா என்ற *40 வயது பணக்கார பெண்ணின் மூன்றாவது கணவனாக தனது 25 வயதில் ஆனார்.*
(கதீஜாவின் முதல் *இரண்டு கணவர்களும்* இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று யாருக்கும் தெரியாது)
கதீஜா பணக்கார வியாபாரியாக இருந்ததால், அவர் சார்பாக கதீஜாவின் வியாபார வண்டிகளை ஓட்டி பல நாடுகளுக்கு?! சென்று விற்பனை செய்துவந்தார்.
கிபி 610இல் அவருக்கு *நாற்பது வயதாக* இருக்கும்போது ஹிரா மலையில் ஜிப்ரீல் என்ற ஒரு தேவதையை பார்த்ததாக கூறிகொள்கிறார். அதன் பின்னால், அந்த ஊரில் இருக்கும் கோவிலை இடிக்க வேண்டும், அதில் உள்ள சிலைகளை உடைக்க வேண்டும் என்று *போதனை செய்ய ஆரம்பிக்கிறார்.*
இதனால் அங்கே இருக்கும் சிலர் அவரது புதிய மதத்தில்?! சேர்கிறார்கள்.
பலர் இந்த ஆள் லூஸு என்று விலகுகிறார்கள்.
ஆனாலும் இவரை யாரும் கொல்லவில்லை.
காரணம் இவர் *பானு ஹஷிம்* என்ற குலத்தை சேர்ந்தவர்.
பானு ஹஷிம் ஜாதியை சேர்ந்தவர் *ஒருவரை வேறொரு ஜாதிக்காரர்* கொன்றுவிட்டால், இரண்டு ஜாதிகளுக்கிடையே *குத்துவெட்டு நடக்கும்.*
*ஜாதி பாசம்!*
இதனால் பானு ஹஷிம் *ஜாதி தைரியத்திலும்* கதீஜா என்ற *பணக்கார* சொத்து *தைரியத்திலும்* நம்ம கண்ணுமணி விட்டு விளாசிக்கொண்டிருந்தார்.
பனு ஹஷிம் *தலைமை* இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபிடம் இருந்தது.
குரேஷி என்ற பெரிய ஜாதிக்குள் பனு ஹஷிம், பனு அப்த் ஷம்ஸ் என்று சின்ன சின்ன ஜாதிகள் உண்டு. (முக்குலத்தோர் ஜாதிக்குள் தேவர் ஜாதி, மறவர் ஜாதி என்று உப ஜாதிகள் இருப்பது போல)
619இல் இவரது மனைவி *கதீஜாவும் இறந்தார்* அதே நேரத்தில் இவரை பாதுகாத்து வந்த *மாமா அபு தாலிபும் இறந்தார்.*
உடனே பனு ஹஷிம் *தலைமை இடம் மாறி* அபு லஹப்பிடம் வந்தது.
அபு லஹப் உடனே, பனு ஹஷிம் ஜாதி *பாதுகாப்பு இனி முகம்மதுவுக்கு கிடையாது* என்று அறிவித்துவிட்டார்.
கெட்டது குடி.
நம்ம கண்ணுமணி மரண காண்டாகி வயிறெறிஞ்சி அபு லஹப் மேல *சாபம் உட்டு கண்டபடி திட்டினார்.*
அப்புறம் கண்ணுமணி மேல அல்லா சாமி வந்து ஆடி அபு லஹபை திட்டி, *குரான்ல எழுதி*,
இன்னிக்கும் நம்ம மூமின்கள் *அபு லஹபை* திட்டிகொண்டிருக்கிறார்கள்.
ஜாதி பாதுகாப்பு இல்லாம மெக்காவை உடைக்கணும், அங்க இருக்கிற சிலையெல்லாம் உடைக்கணும்னு *நம்ம கண்ணுமணியால இனி எப்படி பேச முடியும்?*
ஏற்கனவே பேசினதிலயே அவனவன் கடுப்பில இருக்கான். உயிர் மிஞ்சனும்னா *வேற ஊருக்கு கிளம்பிற வேண்டியதுதான்னு* நம்ம கண்ணுமணி முடிவு செஞ்சார்.
மக்கா ஊரில் *கடை போணியாகவில்லை* என்று வேறெதாவது ஊருக்கு போகலாம் என்று அபிசீனியா யாத்ரிப் என்ற ஊரெல்லாம் தேடி, கடைசியில் *யூதர்களின் ஊரான* யாத்ரிப் ஊருக்கு போய் தங்குகிறார்.
அங்கே இருக்கும் பணக்கார யூதர்களின் கீழ் *அன்சாரிகள் என்ற அரேபியர்கள்* வேலை செய்கிறார்கள். அவர்களும் இவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள்.
கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும், மெக்காவில் இருக்கும் பணக்காரர்களது வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா பிறக்கிறது.
ஆகவே இந்த புதிய கூட்டத்தை வைத்து மெக்காவிலிருந்து போகும் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க துவங்குகிறார். இதனால் அவரிடமிருக்கும் *கொள்ளைக்கூட்டம்* பெரியதாகிறது.
கிபி 624இல் மொஹம்மத் இப்னு அப்தல்லாவே ஒரு பெரிய முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்தை தலைமை தாங்கி வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க கிளம்புகிறார்.
இவர் கொள்ளையடிக்க கொள்ளையடிக்க, குரேஷிகள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்புக்கு என்று ஆயிரம் பேர்களை வியாபார வண்டிகளோடு அனுப்புகிறார்கள்.
முன்னூறு முஸ்லீம் கொள்ளைக்காரர்களும் ஆயிரம் குரேஷி சோப்ளாங்கிகளும் மோதியதில் *முஸ்லீம் கொள்ளைக்கூட்டம்* வெற்றிபெறுகிறது.
இதுவே *பதர் போர்* என்று மூமின்களால் *குஷியுடனும் கர்வத்துடனும்* பெருமையுடனும் இன்றும் அழைக்கப்படுகிறது.
பதர் போரினால் கிடைத்த ஏராளமான கொள்ளைப்பணத்தால் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் பெருக ஆரம்பித்தது. வியாபாரிகளிடமிருந்து கொள்ளையடித்ததை எப்படி பகிர்ந்துகொள்வது என்று அல்லாஹ் இப்போது இறைவசனமெல்லாம் இறக்குகிறார்.
இதனால், மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார். தன்னை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான், அபு அபக் போன்ற கவிஞர்களை தீர்த்துக்கட்டுறார்.
யாத்ரிப் நகரில் அரேபியர் வரும் முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தார்.
ஒரு முஸ்லீமுக்கும் ஒரு யூதருக்கும் நடந்த தகராறை காரணமாக வைத்து *பனு கனுக்கா Banu Qaynuqa என்ற யூதர்கள் அனைவரையும் தலையை துண்டிக்க ஆணையிட்டார்.*
கஸ்ராஜ் என்ற ஜாதியின் தலைவர் அப்துல்லா இப்னு உபய், இவர்களை கொல்லக்கூடாது என்று மறுத்ததால் இவர்கள் தலை தப்பியது. அந்த யூதர்கள் யாத்ரிபிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
இதனால் ரொம்ப குஷியான மொஹம்மத் இன்னொரு வியாபார வண்டி கூட்டத்தை உஹுத் என்னுமிடத்தில் தாக்கியபோது முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்தது. இந்த போரில் முகம்மதுவும் காயமடைந்தார்.
இப்போது ஒரு யூத கவிஞர் முகம்மது தோல்வியடைந்ததை கிண்டல் செய்து பாடினார். பனு நதிர் என்ற யூத குலத்தை சேர்ந்த கப் இப்னு அல் அஷ்ரப் என்ற இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆளை அனுப்பி தீர்த்து கட்டினார்.
பனு நதிர் என்பது யாத்ரிப் (மெதீனாவில்) இருந்த இன்னொரு யூத குலம். இவர்கள் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக்கி அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களது சோலைவனத்தை முற்றுகையிட்டு பத்தே நாளில் மெதீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார்.
பதினான்கு நாட்களுக்கு பிறகு பானு நதிர் சரண்டைந்தார்கள். ஒட்டகத்தில் எடுத்துகொண்டு போகக்கூடியதை மட்டும் எடுத்துகொண்டு ஓடுங்கள் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னதும் அதன் படியே அவர்கள் ஓடினார்கள்.
சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.
துரத்தப்பட்டவர்கள் மெக்காவுக்கு சென்று உதவி கேட்டார்கள். இவ்வாறு மெக்காவிலிருந்தும் வியாபாரமே நடத்த முடியாமல் முஹம்மதின் கூட்டம் கொள்ளையடித்துகொண்டே இருந்தததால், கடுப்பான மெக்காவாசிகளும் படையை திரட்டிக்கொண்டு *மெதீனாவை தாக்க வந்தார்கள்.*
மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் மெதீனாவை (முன்னாள் யாத்ரிப்) சுற்றி பள்ளம் தோண்டி மெக்கா படை உள்ளே வரமுடியாமல் செய்தது. இந்த அகழியை தாண்டமுடியாமல் மெக்கா படை பின்வாங்கி மெக்காவுக்கு சென்றது. மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் ஒரே குஷியாகிவிட்டது.
*இவ்வளோ ரணகளத்துக்கு நடுவிலயும்,*
*ஆறு வயது ஆயிஷா முதல் தன் மருமகள் வரை னு கிட்டத்தட்ட 13 மனைவிகளையும் கணக்கே இல்லாத அடிமை பெண்களையும் ஆண்டு அனுபவிச்சாரு..*.
திடீரென்று நம்ம கண்ணுமணிக்கு மெக்காவுக்கு எல்லோரும் போய் உம்ரா செய்றமாதிரி நாமளும் செய்யணும்னு ஆசை வந்திச்சி.
*காரணம் இருக்கு.*
மெக்காவை டேக் ஓவர் பண்ணனும்னா நாமளும் மெக்கா கோவிலுக்கு மரியாதை செய்யணும்னு தோணிடிச்சி. ஆக இவரு கொஞ்ச பேரோட உம்ரா கிளம்புனார்.
சரி இவரும் எதோ சமாதானம் பேசறார். விடுவோம் என்று குரேஷிகளும் ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது *ஒருவரோடு ஒருவர் பத்துவருடங்கள் சண்டை போடக்கூடாது என்ற ஒப்பந்தம்*.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் *ஹூதைபியா ஒப்பந்தம்.*
மெக்காவோட குரேஷிகளோடு தானே போர் புரியக்கூடாது?
நம்ம *அங்கண இங்கண இருக்கிற யூதர்களை* கொள்ளையடிப்போம் என்று கண்னுமணி கிளம்பி *கைபருக்கு* போனார். கைபரும் ஒரு யூதர்களது குடியிருப்பு.
அங்கே பாலைவனத்தை சோலைவனமாக்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த யூதர்களை முற்றுகையிட்டார். இறுதியில் சரணடைந்த யூதர்கள் *விளைச்சலில் பாதியை முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கப்பமாக* செலுத்திவிடுகிறோம் என்று ஒப்புகொண்டனர்.
ஆக *ஒன்றுமே செய்யாமல் முஸ்லீம்கள் அடுத்தவர் உழைப்பில் சுகமாக வாழ்வது இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது.*
இதுவே *ஜிஸ்யா* என்றும் அழைக்கப்படுகிறது.
(கைபர் போர் நாம ரொம்ப ஞாபகம் வச்சிக்க வேண்டிய போர். காரணம் அவர் சாக அதுதான் காரணம். அங்க ஒரு கிழவி கொடுத்த ஆட்டுக்கறியை தின்னுதான் கண்ணுமணிக்கு வியாதி வருது. பின்னாடி அதப்பத்தி எழுதறேன்)
இப்ப வேலையே செய்யாம கை நிறைய காசு. எவனோ உழைக்கிறான். ஒன்னுமே செய்யாம, வெளைச்சல்ல பாதி நமக்குன்னா எப்படி இருக்கும்! கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது.
கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது.
கத்தி எடுத்த கை சும்மா இருக்குமா?
*அரிக்குது*.
பத்தாண்டு ஒப்பந்தம் போட்டுட்டமே எப்படி சும்மா இருக்கிறது.
*அல்லாவை கூப்பிட்டு அந்த பத்தாண்டு ஒப்பந்தத்த ரத்து பண்ணினார்.*



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கிபி 630இல் மெக்காவை கைப்பற்ற ஏராளமான முஸ்லீம் படைகளோடு கிளம்பினார். பத்தாயிரத்துக்கும் மேல் இந்த கூட்டம் இருந்ததா சொல்லப்படுது.
மிக எளிதில் மெக்காவை கைப்பற்றினார்.
தன் மீது கிண்டல் கவிதைகள் பாடியவர்களை *தேடித் தேடி முதலில் அவர்கள் தலையை துண்டித்தார்.*
*இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்றால்* தலை இருக்காது என்று அறிவித்ததும், மெக்காவாசிகள் மனமுவந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.
மெக்கா கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தார். முக்கியமான சிலையான ஹுபாலை எடுத்து மெக்கா கோவிலுக்குள் நுழையும் *படிக்கட்டில் போட்டார்.*
இன்னமும் *அந்த சிலை மீது நடந்துதான் மெக்காவுக்கு உள்ளே போகிறார்கள் மூமின்கள்.*
பனு ஹவாஜின் என்ற கூட்டம் மெக்காவின் குரேஷிகளுக்கு பழைய விரோதிகள். அவர்கள் மெக்காவை தாக்க வருகிறார்கள். அந்த போரில் முஸ்லீம் படை வெற்றி பெறுகிறது.
வடக்கு அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லீம் படை முட்டா போரில் தோல்வி அடைந்தது.
632இல் மெதீனாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார் முகம்மது.
அதன் பின் சில நாட்களிலேயே ஜுரம் தலைவலி பலவீனம் அடைந்து *திங்கட்கிழமை ஜூன் 8 ஆம் தேதி கிபி 632இல் செத்தார்*.
அவர் மரணமடைந்த *அயீஷாவின்* வீட்டிலேயே புதைக்கப்பட்டார்.
இஸ்லாமின் மூலம் பல செல்வங்களை அடைந்த முஸ்லீம்கள் அந்த கல்லறைக்கு தங்கம் வைரம் என்று போர்த்தினார்கள்.
1805இல் இப்னு *சவுத்* அரேபியாவுக்கு அரசராக ஆனதும், அரேபியாவின் பெயரை *சவுதி* அரேபியா என்று மாற்றினார்.
மெதீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கல்லறைகளை இடித்தார்.
*முகம்மதுவின் கல்லறை மட்டுமே தப்பியிருந்தது.*
ஆனாலும் அதிலிருந்து எல்லா தங்கம் வைரம் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு போய்விட்டார். இருந்தாலும் ஏராளமான அரேபியர்கள் ஜியாரத் செய்கிறார்கள்.
அவருக்கு பின் அபு பக்ர் அரசரனார்.
அதற்குள் ஏராளமான அரேபியர்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவித்துவிட்டார்கள்.
அபு பக்ர் கடுப்பாகி இஸ்லாமிலிருந்து எவன் வெளியேறினாலும் *முகம்மது சொன்ன மாதிரி கழுத்தை வெட்டு என்று போர் துவங்கினார்.*
இது *ரித்தா போர்கள்* என்று அழைக்கப்படுது.
பாதிக்கு மேல *அரேபியர்களை கொன்னு தான்* இஸ்லாம் மதம் அழிவில இருந்து அப்போது காப்பாற்றப்பட்டது.
ஆகவே *அபு பக்ர் மட்டும் இல்லைனா இன்னைக்கு இஸ்லாமே இல்ல னு சொல்லலாம்.*
இந்த மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற முஹம்மது நபியை சுமார் 2 பில்லியன் பேர் பின்பற்றுவதாக விக்கிபீடியா சொல்லுது.
அவ்வளவு தான் *நம்ம கண்ணுமணி நபியோட பாலாறு, தேனாறு, வரலாறு...*
ஸ்ஸ்ஸ் யப்பா......
என்னதான் சுருங்க எழுதனும்னு நெனச்சாலும் ரொம்ப நீளமா போய்டிச்சி.
இருந்தாலும் தெரிஞ்சிக்கிறது நல்லதுதான்.
ஏன்னா, *நம்ம மூமின்களுக்கே* இதில பல விஷயங்கள் தெரியாது.
Edited by *LN*நம்ம *கண்ணுமணி நபியோட* வரலாறு...
குறிப்பு : நான் ex Muslim ... தற்போது நாத்திகன்...
இஸ்லாத்தில் உள்ள *கொடுமைகளை*
இடித்துரைக்கும் பதிவு இது...
——————————
இங்கே எழுதப்பட்டுள்ள *நபி வரலாறு முழுக்க முழுக்க உண்மையே....*
1) அல் சீரா அல் நப்பாவ்வியா,
2) சீரத் ரசூல் அல்லாஹ்
என்ற இஸ்லாமிய *முஹம்மதின் சரிதை* நூலில் இருந்து எடுக்கப்பட்டதே *இந்த கட்டுரை...*
காஃபிர் வாசகர்களுக்கு அலுப்பு தட்டாமலிருக்கவே வழக்கு மொழி நடை பயன்படுத்தப்பட்டிருக்கிறது...
காஃபிர்கள் பொறுமையா படிங்க, உங்களுக்கு இந்த வரலாறு தேவைப்படலாம்...
மொஹம்மத் இப்னு அப்தல்லா *என்னும் நபிகள் நாயகம், ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார்.*
இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது.
நபி பிறப்பதற்கு முன்பே *அவர் அப்பா இறந்துவிட்டார்.* தாயார் பெயர் *அமினா.*
நபி *ஆறு வயதாக* இருக்கும்போது அவர் *தாயும் போய் சேர்ந்துவிட்டார்.*
அதனால் அவர் தனது *தாய்வழி தாத்தாவான* அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார்.
தாத்தாவும் *மண்டையை போட்ட* பின்னால், *மாமாவான* அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்.
பிறகு கதீஜா என்ற *40 வயது பணக்கார பெண்ணின் மூன்றாவது கணவனாக தனது 25 வயதில் ஆனார்.*
(கதீஜாவின் முதல் *இரண்டு கணவர்களும்* இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று யாருக்கும் தெரியாது)
கதீஜா பணக்கார வியாபாரியாக இருந்ததால், அவர் சார்பாக கதீஜாவின் வியாபார வண்டிகளை ஓட்டி பல நாடுகளுக்கு?! சென்று விற்பனை செய்துவந்தார்.
கிபி 610இல் அவருக்கு *நாற்பது வயதாக* இருக்கும்போது ஹிரா மலையில் ஜிப்ரீல் என்ற ஒரு தேவதையை பார்த்ததாக கூறிகொள்கிறார். அதன் பின்னால், அந்த ஊரில் இருக்கும் கோவிலை இடிக்க வேண்டும், அதில் உள்ள சிலைகளை உடைக்க வேண்டும் என்று *போதனை செய்ய ஆரம்பிக்கிறார்.*
இதனால் அங்கே இருக்கும் சிலர் அவரது புதிய மதத்தில்?! சேர்கிறார்கள்.
பலர் இந்த ஆள் லூஸு என்று விலகுகிறார்கள்.
ஆனாலும் இவரை யாரும் கொல்லவில்லை.
காரணம் இவர் *பானு ஹஷிம்* என்ற குலத்தை சேர்ந்தவர்.
பானு ஹஷிம் ஜாதியை சேர்ந்தவர் *ஒருவரை வேறொரு ஜாதிக்காரர்* கொன்றுவிட்டால், இரண்டு ஜாதிகளுக்கிடையே *குத்துவெட்டு நடக்கும்.*
*ஜாதி பாசம்!*
இதனால் பானு ஹஷிம் *ஜாதி தைரியத்திலும்* கதீஜா என்ற *பணக்கார* சொத்து *தைரியத்திலும்* நம்ம கண்ணுமணி விட்டு விளாசிக்கொண்டிருந்தார்.
பனு ஹஷிம் *தலைமை* இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபிடம் இருந்தது.
குரேஷி என்ற பெரிய ஜாதிக்குள் பனு ஹஷிம், பனு அப்த் ஷம்ஸ் என்று சின்ன சின்ன ஜாதிகள் உண்டு. (முக்குலத்தோர் ஜாதிக்குள் தேவர் ஜாதி, மறவர் ஜாதி என்று உப ஜாதிகள் இருப்பது போல)
619இல் இவரது மனைவி *கதீஜாவும் இறந்தார்* அதே நேரத்தில் இவரை பாதுகாத்து வந்த *மாமா அபு தாலிபும் இறந்தார்.*
உடனே பனு ஹஷிம் *தலைமை இடம் மாறி* அபு லஹப்பிடம் வந்தது.
அபு லஹப் உடனே, பனு ஹஷிம் ஜாதி *பாதுகாப்பு இனி முகம்மதுவுக்கு கிடையாது* என்று அறிவித்துவிட்டார்.
கெட்டது குடி.
நம்ம கண்ணுமணி மரண காண்டாகி வயிறெறிஞ்சி அபு லஹப் மேல *சாபம் உட்டு கண்டபடி திட்டினார்.*
அப்புறம் கண்ணுமணி மேல அல்லா சாமி வந்து ஆடி அபு லஹபை திட்டி, *குரான்ல எழுதி*,
இன்னிக்கும் நம்ம மூமின்கள் *அபு லஹபை* திட்டிகொண்டிருக்கிறார்கள்.
ஜாதி பாதுகாப்பு இல்லாம மெக்காவை உடைக்கணும், அங்க இருக்கிற சிலையெல்லாம் உடைக்கணும்னு *நம்ம கண்ணுமணியால இனி எப்படி பேச முடியும்?*
ஏற்கனவே பேசினதிலயே அவனவன் கடுப்பில இருக்கான். உயிர் மிஞ்சனும்னா *வேற ஊருக்கு கிளம்பிற வேண்டியதுதான்னு* நம்ம கண்ணுமணி முடிவு செஞ்சார்.
மக்கா ஊரில் *கடை போணியாகவில்லை* என்று வேறெதாவது ஊருக்கு போகலாம் என்று அபிசீனியா யாத்ரிப் என்ற ஊரெல்லாம் தேடி, கடைசியில் *யூதர்களின் ஊரான* யாத்ரிப் ஊருக்கு போய் தங்குகிறார்.
அங்கே இருக்கும் பணக்கார யூதர்களின் கீழ் *அன்சாரிகள் என்ற அரேபியர்கள்* வேலை செய்கிறார்கள். அவர்களும் இவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள்.
கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும், மெக்காவில் இருக்கும் பணக்காரர்களது வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா பிறக்கிறது.
ஆகவே இந்த புதிய கூட்டத்தை வைத்து மெக்காவிலிருந்து போகும் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க துவங்குகிறார். இதனால் அவரிடமிருக்கும் *கொள்ளைக்கூட்டம்* பெரியதாகிறது.
கிபி 624இல் மொஹம்மத் இப்னு அப்தல்லாவே ஒரு பெரிய முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்தை தலைமை தாங்கி வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க கிளம்புகிறார்.
இவர் கொள்ளையடிக்க கொள்ளையடிக்க, குரேஷிகள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்புக்கு என்று ஆயிரம் பேர்களை வியாபார வண்டிகளோடு அனுப்புகிறார்கள்.
முன்னூறு முஸ்லீம் கொள்ளைக்காரர்களும் ஆயிரம் குரேஷி சோப்ளாங்கிகளும் மோதியதில் *முஸ்லீம் கொள்ளைக்கூட்டம்* வெற்றிபெறுகிறது.
இதுவே *பதர் போர்* என்று மூமின்களால் *குஷியுடனும் கர்வத்துடனும்* பெருமையுடனும் இன்றும் அழைக்கப்படுகிறது.
பதர் போரினால் கிடைத்த ஏராளமான கொள்ளைப்பணத்தால் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் பெருக ஆரம்பித்தது. வியாபாரிகளிடமிருந்து கொள்ளையடித்ததை எப்படி பகிர்ந்துகொள்வது என்று அல்லாஹ் இப்போது இறைவசனமெல்லாம் இறக்குகிறார்.
இதனால், மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார். தன்னை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான், அபு அபக் போன்ற கவிஞர்களை தீர்த்துக்கட்டுறார்.
யாத்ரிப் நகரில் அரேபியர் வரும் முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தார்.
ஒரு முஸ்லீமுக்கும் ஒரு யூதருக்கும் நடந்த தகராறை காரணமாக வைத்து *பனு கனுக்கா Banu Qaynuqa என்ற யூதர்கள் அனைவரையும் தலையை துண்டிக்க ஆணையிட்டார்.*
கஸ்ராஜ் என்ற ஜாதியின் தலைவர் அப்துல்லா இப்னு உபய், இவர்களை கொல்லக்கூடாது என்று மறுத்ததால் இவர்கள் தலை தப்பியது. அந்த யூதர்கள் யாத்ரிபிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
இதனால் ரொம்ப குஷியான மொஹம்மத் இன்னொரு வியாபார வண்டி கூட்டத்தை உஹுத் என்னுமிடத்தில் தாக்கியபோது முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்தது. இந்த போரில் முகம்மதுவும் காயமடைந்தார்.
இப்போது ஒரு யூத கவிஞர் முகம்மது தோல்வியடைந்ததை கிண்டல் செய்து பாடினார். பனு நதிர் என்ற யூத குலத்தை சேர்ந்த கப் இப்னு அல் அஷ்ரப் என்ற இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆளை அனுப்பி தீர்த்து கட்டினார்.
பனு நதிர் என்பது யாத்ரிப் (மெதீனாவில்) இருந்த இன்னொரு யூத குலம். இவர்கள் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக்கி அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களது சோலைவனத்தை முற்றுகையிட்டு பத்தே நாளில் மெதீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார்.
பதினான்கு நாட்களுக்கு பிறகு பானு நதிர் சரண்டைந்தார்கள். ஒட்டகத்தில் எடுத்துகொண்டு போகக்கூடியதை மட்டும் எடுத்துகொண்டு ஓடுங்கள் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னதும் அதன் படியே அவர்கள் ஓடினார்கள்.
சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.
துரத்தப்பட்டவர்கள் மெக்காவுக்கு சென்று உதவி கேட்டார்கள். இவ்வாறு மெக்காவிலிருந்தும் வியாபாரமே நடத்த முடியாமல் முஹம்மதின் கூட்டம் கொள்ளையடித்துகொண்டே இருந்தததால், கடுப்பான மெக்காவாசிகளும் படையை திரட்டிக்கொண்டு *மெதீனாவை தாக்க வந்தார்கள்.*
மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் மெதீனாவை (முன்னாள் யாத்ரிப்) சுற்றி பள்ளம் தோண்டி மெக்கா படை உள்ளே வரமுடியாமல் செய்தது. இந்த அகழியை தாண்டமுடியாமல் மெக்கா படை பின்வாங்கி மெக்காவுக்கு சென்றது. மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் ஒரே குஷியாகிவிட்டது.
*இவ்வளோ ரணகளத்துக்கு நடுவிலயும்,*
*ஆறு வயது ஆயிஷா முதல் தன் மருமகள் வரை னு கிட்டத்தட்ட 13 மனைவிகளையும் கணக்கே இல்லாத அடிமை பெண்களையும் ஆண்டு அனுபவிச்சாரு..*.
திடீரென்று நம்ம கண்ணுமணிக்கு மெக்காவுக்கு எல்லோரும் போய் உம்ரா செய்றமாதிரி நாமளும் செய்யணும்னு ஆசை வந்திச்சி.
*காரணம் இருக்கு.*
மெக்காவை டேக் ஓவர் பண்ணனும்னா நாமளும் மெக்கா கோவிலுக்கு மரியாதை செய்யணும்னு தோணிடிச்சி. ஆக இவரு கொஞ்ச பேரோட உம்ரா கிளம்புனார்.
சரி இவரும் எதோ சமாதானம் பேசறார். விடுவோம் என்று குரேஷிகளும் ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது *ஒருவரோடு ஒருவர் பத்துவருடங்கள் சண்டை போடக்கூடாது என்ற ஒப்பந்தம்*.
இந்த ஒப்பந்தத்தின் பெயர் *ஹூதைபியா ஒப்பந்தம்.*
மெக்காவோட குரேஷிகளோடு தானே போர் புரியக்கூடாது?
நம்ம *அங்கண இங்கண இருக்கிற யூதர்களை* கொள்ளையடிப்போம் என்று கண்னுமணி கிளம்பி *கைபருக்கு* போனார். கைபரும் ஒரு யூதர்களது குடியிருப்பு.
அங்கே பாலைவனத்தை சோலைவனமாக்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த யூதர்களை முற்றுகையிட்டார். இறுதியில் சரணடைந்த யூதர்கள் *விளைச்சலில் பாதியை முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கப்பமாக* செலுத்திவிடுகிறோம் என்று ஒப்புகொண்டனர்.
ஆக *ஒன்றுமே செய்யாமல் முஸ்லீம்கள் அடுத்தவர் உழைப்பில் சுகமாக வாழ்வது இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது.*
இதுவே *ஜிஸ்யா* என்றும் அழைக்கப்படுகிறது.
(கைபர் போர் நாம ரொம்ப ஞாபகம் வச்சிக்க வேண்டிய போர். காரணம் அவர் சாக அதுதான் காரணம். அங்க ஒரு கிழவி கொடுத்த ஆட்டுக்கறியை தின்னுதான் கண்ணுமணிக்கு வியாதி வருது. பின்னாடி அதப்பத்தி எழுதறேன்)
இப்ப வேலையே செய்யாம கை நிறைய காசு. எவனோ உழைக்கிறான். ஒன்னுமே செய்யாம, வெளைச்சல்ல பாதி நமக்குன்னா எப்படி இருக்கும்! கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது.
கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது.
கத்தி எடுத்த கை சும்மா இருக்குமா?
*அரிக்குது*.
பத்தாண்டு ஒப்பந்தம் போட்டுட்டமே எப்படி சும்மா இருக்கிறது.
*அல்லாவை கூப்பிட்டு அந்த பத்தாண்டு ஒப்பந்தத்த ரத்து பண்ணினார்.*
கிபி 630இல் மெக்காவை கைப்பற்ற ஏராளமான முஸ்லீம் படைகளோடு கிளம்பினார். பத்தாயிரத்துக்கும் மேல் இந்த கூட்டம் இருந்ததா சொல்லப்படுது.
மிக எளிதில் மெக்காவை கைப்பற்றினார்.
தன் மீது கிண்டல் கவிதைகள் பாடியவர்களை *தேடித் தேடி முதலில் அவர்கள் தலையை துண்டித்தார்.*
*இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்றால்* தலை இருக்காது என்று அறிவித்ததும், மெக்காவாசிகள் மனமுவந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.
மெக்கா கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தார். முக்கியமான சிலையான ஹுபாலை எடுத்து மெக்கா கோவிலுக்குள் நுழையும் *படிக்கட்டில் போட்டார்.*
இன்னமும் *அந்த சிலை மீது நடந்துதான் மெக்காவுக்கு உள்ளே போகிறார்கள் மூமின்கள்.*
பனு ஹவாஜின் என்ற கூட்டம் மெக்காவின் குரேஷிகளுக்கு பழைய விரோதிகள். அவர்கள் மெக்காவை தாக்க வருகிறார்கள். அந்த போரில் முஸ்லீம் படை வெற்றி பெறுகிறது.
வடக்கு அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லீம் படை முட்டா போரில் தோல்வி அடைந்தது.
632இல் மெதீனாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார் முகம்மது.
அதன் பின் சில நாட்களிலேயே ஜுரம் தலைவலி பலவீனம் அடைந்து *திங்கட்கிழமை ஜூன் 8 ஆம் தேதி கிபி 632இல் செத்தார்*.
அவர் மரணமடைந்த *அயீஷாவின்* வீட்டிலேயே புதைக்கப்பட்டார்.
இஸ்லாமின் மூலம் பல செல்வங்களை அடைந்த முஸ்லீம்கள் அந்த கல்லறைக்கு தங்கம் வைரம் என்று போர்த்தினார்கள்.
1805இல் இப்னு *சவுத்* அரேபியாவுக்கு அரசராக ஆனதும், அரேபியாவின் பெயரை *சவுதி* அரேபியா என்று மாற்றினார்.
மெதீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கல்லறைகளை இடித்தார்.
*முகம்மதுவின் கல்லறை மட்டுமே தப்பியிருந்தது.*
ஆனாலும் அதிலிருந்து எல்லா தங்கம் வைரம் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு போய்விட்டார். இருந்தாலும் ஏராளமான அரேபியர்கள் ஜியாரத் செய்கிறார்கள்.
அவருக்கு பின் அபு பக்ர் அரசரனார்.
அதற்குள் ஏராளமான அரேபியர்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவித்துவிட்டார்கள்.
அபு பக்ர் கடுப்பாகி இஸ்லாமிலிருந்து எவன் வெளியேறினாலும் *முகம்மது சொன்ன மாதிரி கழுத்தை வெட்டு என்று போர் துவங்கினார்.*
இது *ரித்தா போர்கள்* என்று அழைக்கப்படுது.
பாதிக்கு மேல *அரேபியர்களை கொன்னு தான்* இஸ்லாம் மதம் அழிவில இருந்து அப்போது காப்பாற்றப்பட்டது.
ஆகவே *அபு பக்ர் மட்டும் இல்லைனா இன்னைக்கு இஸ்லாமே இல்ல னு சொல்லலாம்.*
இந்த மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற முஹம்மது நபியை சுமார் 2 பில்லியன் பேர் பின்பற்றுவதாக விக்கிபீடியா சொல்லுது.
அவ்வளவு தான் *நம்ம கண்ணுமணி நபியோட பாலாறு, தேனாறு, வரலாறு...*
ஸ்ஸ்ஸ் யப்பா......
என்னதான் சுருங்க எழுதனும்னு நெனச்சாலும் ரொம்ப நீளமா போய்டிச்சி.
இருந்தாலும் தெரிஞ்சிக்கிறது நல்லதுதான்.
ஏன்னா, *நம்ம மூமின்களுக்கே* இதில பல விஷயங்கள் தெரியாது.
Edited by *LN*



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard