New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
Permalink  
 



குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
ஆசிரியர்: Khaled

முதல் உரை: இந்த கட்டுரை www.answering-islam.org என்ற தளத்தில் வெளியான " Is the Quran Preserved " ? என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர் சகோதரர் "கால்ட்" என்பவர் ஆவார். நான் அவருக்கு ஒரு மெயில் அனுப்பி, அவருடைய இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிடலாமா என்று அனுமதி கேட்டபோது. உடனே அவர் எனக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்ததற்காக அவருக்கு கர்த்தருக்குள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலத்தில் அவருடைய கட்டுரையை இங்கு படிக்கலாம், ஆங்கிலத்தில் படித்தால் இக்கட்டுரையின் விவரங்கள் இன்னும் தெளிவாக புரியும்.

அவருடைய மெயில் விலாசம் : Khaled 
அவருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles 
அவருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic

கட்டுரை தொடர்கிறது...

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

குர்-ஆன் இதை உரிமைபாராட்டுகிறது:

 
 

குர்-ஆன் 15:9 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

இஸ்லாமிய உரை எழுதுபவர்களில்(Commentators) ஒருவராகிய இபின் கதிர் என்பவரின் (Ibn Kathir) கருத்துப்படி, இந்த " நினைவூட்டும் வேதம் " என்பது குர்-ஆனை குறிக்கும். ஏனென்றால், இதே அதிகாரத்தில் சில வசனங்களுக்கு முன்பு நாம் படிக்கிறோம்:

 
குர்-ஆன் 15:6

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமியர்கள் கருத்துப்படி, "(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே!" என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படுபவர் "முகமது " ஆவார், எனவே, "நினைவூட்டும் வேதம்" என்று இங்கு குறிப்பிடுவது நிச்சயமாக "குர்-ஆனைத் தான்" என்று சொல்கிறார்கள். "குர்-ஆனை யாராலும் மாற்றமுடியாது " என்பது அல்லாவின் உறுதிமொழியாகும், எனவே இன்றளவும் குர்-ஆன் சரியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கின்றனர்.

இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சில கிறிஸ்தவர்கள் (Christian Apologists) "நினைவூட்டும் வேதம்" என்பது அல்லாவின் எல்லா வசனங்களையும், மற்றும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட வசனங்களையும் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாதாரணமாக கிறிஸ்தவர்களின் இந்த வாதத்தை மறுத்து, அல்லா பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தது குர்-ஆனை மட்டும் தான் என்றுச் சொல்கிறார்கள். யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் எல்லா வசனங்களையும் கருத்தில் கொண்டு கவனித்தால், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இப்போதுள்ள வேதம் இறைவனின் அதிகார பூர்வமான மற்றும் திருத்தப்படாத வேதம் தான் என்று குர்-ஆன் சொல்வதை நிச்சயமாக கவனிக்கலாம். ( இந்த கட்டுரைகளை படிக்கவும் ) . இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் இந்த விவரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இப்படி நம்பிக்கை கொண்டிருப்பதினால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை (Logical Problems) எடுத்துக்காட்டுவதாகும். எனவே, விவாதத்திற்காக வேண்டி, இஸ்லாமியர்கள் நம்பிக்கையின் படியே நான் செல்கிறேன், மற்றும் அவர்களுடைய இந்த நம்பிக்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம்.

 

குர்-ஆன் மற்றொரு இடத்தில் தன்னிடம் பிழை இல்லை என்று உரிமைபாராட்டுகிறது:

 
குர்-ஆன் 41:42 , 4:82

குர்-ஆன் 41:42 அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

 

அதே நேரத்தில், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதென்று வரும் குர்-ஆன் வசனங்களை முஸ்லீமகள் நம்புகின்றனர்.

 

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)

இப்படி இருந்தும், முஸ்லீம்கள் முந்தைய வேதங்களை நம்பவேண்டுமென்று குர்-ஆன் கட்டளையிடுகிறது:

 
குர்-ஆன் 2:4, 2:285 & 3:84

குர்-ஆன் 2:4

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

குர்-ஆன் 2:285 (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இந்த முந்தைய வேதங்கள், கீழ்கண்டவைகளை உள்ளடக்கி உள்ளது.

 
குர்-ஆன் 5:44, 21:105, & 5:46

 

குர்-ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகியஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம் ;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

(தவ்ராத் = ஆதியாகமம் முதல் உபாகமம் வரை, மோசேவிற்கு இறங்கிய வேதம், ஜபூர் = சங்கீதம் & இன்ஜில் = சுவிசேஷங்கள் - தெளிவிற்காக நான் சேர்த்தது)

 

 

 

இது வரையில் நாம் சேகரித்த விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்:

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

2. குர்-ஆனுக்கு முந்தி அல்லா இறக்கிய வேதங்கள்: தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் (ஆதியாகமம்-உபாகமம், சங்கீதம், சுவிசேஷங்கள்) ஆகும். (இந்த புத்தகங்கள் புனித பைபிளில் பெரும் இடத்தை பிடித்துள்ளது)

3. குர்-ஆன் , தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம், அல்லா இறக்கிய வேதங்கள் ஆகும்

4. அல்லாவின் வேதத்தை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது

5. குர்-ஆனுக்கு முந்தி வந்த வேதம் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.

6. முந்தைய வேதமாகிய பைபிளை(தவ்ராத், ஜபூர், இன்ஜில்) அதிகாரபூர்வமாக அல்லா தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.

நாம் இப்போது இந்த லாஜிக்கை(LOGIC) பார்ப்போம்: (We now here to deal with this logic)

A. குர்-ஆன், தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் என்பவைகள் அல்லாவின் வேதங்கள் ஆகும்.

B. இப்போதுள்ள தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் திருத்தப்பட்டது.

C. அல்லாவின் கடைசி வேதமாகிய குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

1st Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) திருத்தப்பட்டது

2nd Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) பாதுகாக்கப்பட்டது.

மேலே கண்ட பொதுவான விவரங்களிலிருந்து, கீழே கொடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நாம் வரலாம்.

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் திருத்தப்பட்டது.

Minor premise: குர்-ஆன் அல்லாவின் வார்த்தையாகும்.

Conclusion: குர்-ஆன் திருத்தப்பட்டு இருக்கலாம்.

அல்லது இப்படியும் இருக்கலாம்,

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் பாதுகாக்கப்பட்டது.

Minor premise: தௌராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் அல்லாவின் வார்த்தைகள்.

Conclusion: தவ்ராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.

முக்கிய பிரச்சனை: பலவீனமான மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை மாற்ற அல்லா அனுமதித்ததால், நாம் கீழ்கண்டவாறு அல்லாவைப் பற்றி கருத வேண்டியுள்ளது:

1. அல்லா ஒரு பலவீனமான இறைவன். அவரால் தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லா அதிக வலிமையை சம்பாதித்துக்கொண்டார், அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்-ஆனை பாதுகாத்து இருக்கிறார்.

2. மக்கள் கள்ளத்தனமான வெளிப்பாடுகளால்(counterfeit revelations) வழிவிலகி சென்றுக்கொண்டு இருந்தபோது, அதைப் பற்றி அல்லா அக்கரைக் கொள்ளவில்லை. தான் அக்கரைகொள்ளாமல் இருந்தும், மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லி, அவர்களுக்கு "நரக நெருப்பு" தப்பாது என்று தண்டனையும் தருகிறார். அல்லா தன் விருப்பத்தின்படியே முந்தைய வேதம் திருத்தப்பட அனுமதித்தார் என்று அந்த மக்கள் உணராமல் இருக்கிறார்கள். இதனால் அல்லா ஒரு அநீதியானவர் என்று தெரிகிறது.

மேற்கண்ட விவரங்களின் வெளிச்சத்தைக்கொண்டு பார்த்தால், அல்லாவின் மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்க தனக்கு சக்தியில்லாமல் சும்மா இருந்த அல்லா, தன் பிந்திய வேதமாகிய குர்-ஆனை மட்டும் பாதுகாத்தார் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி?

அல்லா தன் ஐந்தாவது வேதத்தை அனுப்பவேண்டி வரலாம்? ஒரு வேளை, தன் ஐந்தாவது புத்தகத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டும் இருக்கலாம். அது "பஹாய் மத நம்பிக்கையின்" நிறுவனரான "பஹாயுல்லா"விற்கு வெளிப்பட்ட வேதமாக கூட இருக்கலாம்?

மிகவும் முக்கியமாக, அல்லாவின் வேதத்தில் மாற்றம் இருந்தும், "இறைவனின் வார்த்தையில் மாற்றம் இல்லை" என்ற அல்லாவின் வாதத்தை முஸ்லீம்கள் எப்படி சரி செய்துக்கொள்ளப்போகிறார்கள்? அல்லது ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்?

இஸ்லாமியர்களே, நீங்கள் ஒரு முடிவை எடுக்கவேண்டும், கீழ்காணும் தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும்.

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது: இதை தெரிந்தெடுத்தால், இதன் பொருள், அல்லா பலவீனமானவர் அல்லது அவர் ஒரு அநீதிக்காரர். தன் முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்-ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாவின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

2. முந்தைய வேதங்களைப் போல குர்-ஆனும் திருத்தப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் எப்படி திருத்தப்பட்ட முந்தைய வேதங்களை படிப்பதில்லையோ அதே போல திருத்தப்பட்ட குர்-ஆனையும் படிக்கக்கூடாது. அப்படி திருத்தப்பட்ட குர்-ஆனை படித்தால், முந்தைய வேதங்களையும் படிக்கவேண்டும்.

3. குர்-ஆனும் பாதுகாக்கப் பட்டது, அதே போல முந்தைய வேதங்களும் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் அல்லா அதிகாரபூர்வமாக இறக்கிய முந்தைய வேதத்தை(பைபிளை) கட்டாயமாக படித்தேயாக வேண்டும்.

4. குர்-ஆன் திருத்தப்பட்டது, ஆனால், முந்தைய வேதம் பாதுகாக்கப்பட்டது:இதை தெரிவு செய்தால், நீங்கள் குர்-ஆன் படிப்பதை நிறுத்திவிட்டு, பைபிள் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு நொடி நில்லுங்கள், இன்னும் நான் முடிக்கவில்லை.

ஒரு வேளை நீங்கள், மூன்றாவது தெரிவை தெரிந்தெடுத்து இருந்தால், உங்களுக்கு மற்றோரு பிரச்சனை உள்ளது. குர்-ஆன் இந்த முந்தைய வேதங்களோடு பல அடிப்படை கோட்பாடுகளில் முரண்படுகிறது. இதற்கு பொருள் என்னவென்றால், குர்-ஆன் என்பது ஒரு பொய்யான வேதமாகும், அது நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்துயிருக்காது. ஏனென்றால், இறைவன் என்பவன் குழப்பத்திற்கு இறைவன் இல்லை. இறைவன் எப்போதும், தன் முந்தைய வேதத்திற்கு நேர் எதிரான முரண்பாடான வேதத்தை இறக்கமாட்டான்.

இந்த என் தெரிவுகள்(Alternatives) உங்களுக்கு பிடிக்கவில்லையானால், எனக்கு சொல்லுங்கள்:

மேலே சொல்லப்பட்ட என் கருத்துக்களில் மற்றும் முடிவுகளில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நீங்கள் என் வாதத்தின் அடிப்படையை(Premises) ஏற்றுக்கொள்ளவில்லையானால், என் முடிவுகளையும்(Conclusions) தவிர்த்துவிடுங்கள்.

அப்படியானால், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதென்று எனக்கு நிருபியுங்கள்

நீங்கள் அதை நிருபிப்பது "பகுத்தறிவு" முறையில் இருக்கவேண்டும். குர்-ஆனிலிருந்து வசனத்தை காட்டக்கூடாது, அது வெறும் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வாதமே தவிர அது "ஆதாரமல்ல". அல்லது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று நிருபிக்க முற்படாதீர்கள், ஒரு வேளை முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டாலும், அது குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிருபிக்காது. அல்லது குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உள்ளது என்று என்னிடம் சொல்லாதீர்கள், நான் அந்த அற்புதங்கள் பொய் என்று நம்புகின்றேன். மேலே சொல்லப்பட்ட தத்துவ இயல் முறையிலான பிரச்சனையை தீர்க்கும்படி நான் கேட்கிறேன்(I want you to resolve the philosophical problem outlined above).

பகுத்தறிவோடு சிந்தித்துச் சொல்லுங்கள்,, இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகிய "முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட குர்-ஆனும், திருத்தப்பட்ட முந்தைய வேதங்களும்" ஒரே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கை, நீதியான மற்றும் சர்வ வல்லமை படைத்த இறைவனை "இழிவுபடுத்துவது ஆகாது என்று நிருபியுங்கள்?".

(Show me logically and rationally how the Muslim assertion of a perfectly preserved Quran together with an alleged corruption of God's earlier Revelations is not an insult to God's perfect justice and great power.)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


சமர்கண்ட் MSS (குர்‍ஆன்) வுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு - பின் இணைப்பு A - பாகம் 1

 

 

 

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

 

பின் இணைப்பு: A

பக்கம் #50

-முதல் வரியில், மூல குர்‍ஆனின் 2:142ம் வசனத்தை, நம்முடைய தற்போதைய குர்‍ஆனோடு ஒப்பிடும் போது இரண்டு இடங்களில் வேறுபடுகிறது. [சதுர குறியீடு, விடுபட்ட பகுதியை காட்டுகிறது.]

பக்கம் #62:

-இரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:170 வசனத்தில் "வாவ்" என்று வந்திருக்கிறது, ஆனால், இப்போது நம்மிடமுள்ள குர்‍ஆன்களின் பதிப்புகளில் "லாம்" என்பதை சேர்த்துள்ளன்ர்.

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:171ம் வசனத்தில் ஒரு வார்த்தை, இப்போதுள்ள குர்‍ஆன்களில் இருப்பதோடு வித்தியாசமாக உள்ளது. 

-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் மெய் எழுத்தாகிய "நூன்" என்பது இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இந்த வார்த்தைவசனம் 2:172ல் சொறுகப்பட்டுள்ளது.

 

 
 

பக்கம் #64:

-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:177ம் வசனத்தில் "லாம்" என்ற மெய் எழுத்தை நாம் காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

 
 
 

i

 


 

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #74:

 

-பத்தாவது வரியில் மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இருக்கவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அதனை காணலாம்.

பக்கம் #76:

-இரண்டாம் மூன்றாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் "" என்ற மெய் எழுத்து இல்லை, ஆனால், தற்போது நம்மிடம் உள்ள குர்‍ஆனில் அவ்வெழுத்து உள்ளது.

 
 

பக்கம் #88:

-ஆறாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:282ம் வசனத்தில் "ட-அலிப் (ta-alif)" என்ற எழுத்துக்கள் இல்லை, ஆனால், நம்மிடமுள்ள தற்போதைய குர்‍ஆனில் இவ்வார்த்தைகள் உள்ளது.

பக்கம் #120:

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் வசனங்கள் 3:113 மற்றும் 114 இவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அதனை விட்டு விட்டார்கள்.

ii

 

 


 

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #89:

 

-பத்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:283ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து இருக்கிறது. மட்டுமல்ல, மூல குர்‍ஆனில் "காம்பு" போன்ற ஒரு குறியீடும் அதிகமாக உள்ளது.

பக்கம் #134:

-இரண்டாவது வரியில் மூல குர்‍ஆனில் 3:146ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது. 

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் "அலிஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் வசனம் 3:147ல் உள்ளது.

பக்கம் #232:

-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:95ம் வசனத்தில், தற்கால குர்‍ஆனோடு ஒப்பிடும் போது, அதிகபடியான "அலிஃப்" என்ற எழுத்து உள்ளது.

iii

 

 


 

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
 

பக்கம் #182:

 

-ஆறாவது வரியில், மூல குர்‍ஆனில் 4:36ம் வசனத்தில் நாம் "அலிஃப்" இருப்பதை காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அது "யா" என்று உள்ளது. 

-பதினோராவது-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் அதே வசனத்தில் "மீம்-நூன்" இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்துக்கள் இருக்கின்றன.

பக்கம் # 238:

-ஐந்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:99ம் வசனத்தில் "அலிஃப்" உள்ளது, ஆனால், இப்போதுள்ள குர்‍ஆனில் "யா" என்று உள்ளது.

பக்கம் #244:

-தற்கால குர்‍ஆன் 5:109ம் வசனத்தில் "சீன்-லாம்" என்ற எழுத்துக்கள் உள்ளன, ஆனால், மூல குர்‍ஆனில் ஒன்பதாவது வரியில் இவ்வெழுத்துக்கள் இல்லை.


 

iv

 

 


 

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #245:

 

-எட்டாவது வரியில் "அலிஃப்" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 5:110ம்வசனத்தில் வருகிறது, ஆனால், இப்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து இல்லை. 

-வரிகள் பத்து-பதினொன்றில், மூல குர்‍ஆனில் "லாம்-அலிஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அதே வசனத்தில் இவைகள் உள்ளன.

பக்கம் #257:

-முதலாவது வரியில், "மீம்" என்ற எழுத்துக்கு முன்னால், "லாம்" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 6:11ம் வசனத்தில் வருகிறது. ஆனால், தற்கால குர்‍ஆனில் "" என்ற எழுத்து வருகிறது.

பக்கம் #262:

-தற்கால அரபிக் குர்‍ஆனில் 6:25ம் வசனத்தில், "நிஹின் (நூன்-ஹ-மீம்)" என்ற வார்த்தை வருகிறது, ஆனால், இந்த வார்த்தை அல்லது மூன்று எழுத்துக்கள் மூல குர்‍ஆனில் 9-10 வரிகளில் காணப்படுவதில்லை.

பக்கம் #263:

-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:26ம் வசனத்தில் "அலிஃப்" என்ற குறியீடு அல்லது எழுத்து வருகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, "ஹம்ஜா" என்ற எழுத்தை சேர்த்துள்ளனர்.

v

 

 


 

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
 

பக்கம் # 268:

 

-எட்டாவது வரியில் மூல குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து குர்‍ஆன் 6:36ம் வசனத்தில் இருக்கின்றது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "யா" என்ற எழுத்துக்கு ஒரு தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால் "லாம்" இல்லை.

பக்கம் #269:

-பத்தாவது வரியில் மூல குர்‍ஆன் 6:39ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்லது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.

 
பக்கம் #276:

-ஆறாவது வரியில், மூல குர்‍ஆன் 6:54 ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.

 
பக்கம் # 289:
 
 
-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:80ம் வசனத்தில் "" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் "காஃப்" என்ற எழுத்து உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

 
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition

பக்கம் #279: 



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை. 

- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்‍ஆன்களில் அங்கு "ப (ba)" உள்ளது. 

 


பக்கம் #283: 

- எட்டாவது வரியில், 'மூல' குர்‍ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் அது இல்லை. 

 


பக்கம் #295: 

- முதல் வரியில் "ஸீன்" அல்லது "ஸாத்" என்ற எழுத்து 'மூல' குர்‍ஆனின் 6:91ம்வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. இன்னும் 'மூல' குர்‍ஆனின் அந்த முதல் வரியிலேயே "மீம்" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்‍ஆனில் "" வந்துள்ளது. 

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:92ம் வசனத்தில் "மீம்" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய "வாவ்" என்ற எழுத்து தற்கால அரபி குர்‍ஆனில் காணலாம், ஆனால், 'மூல' கு‍ர்‍ஆனில் அவ்வெழுத்து இல்லை] 

 


பக்கம் #297: 

- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:94ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து "வாவ்" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது. 

 


vii




சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #296: 

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:93ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை. 

 

 

- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. 

 


பக்கம் #314:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:129ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது. 

 


பக்கம் #336:



- முதல் வரியில் 'மூல' குர்‍‍ஆனின் 7:3ம் வசனத்தில் "அதிகபடியான காம்பு போன்ற" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை. 

 


பக்கம் #337:



- ஏழாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்புபோன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை. 

 


viii



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #338:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:11ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அதற்கு பதிலாக "ஸீன்" உள்ளது. 

 


பக்கம் #340: 

- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:19ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது. 

 


பக்கம் #342:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:26ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை. 

 


பக்கம் #343:



- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:27ம் வசனத்தில் "மீம்" மற்றும் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை. 

 


ix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #350:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:38ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது. 

 


பக்கம் #351:



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது இல்லை. 

 


பக்கம் #353:



- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:43ம்வசனத்தில் "அதிகபடியான" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. 

 


பக்கம் #356:



- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:47ம்வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த "அலீஃப்" எழுத்து 'மூல' குர்‍ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

 


x


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #359:



- மூன்றாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அந்த காம்பு இல்லை. 

 

 


பக்கம் #363:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்புஉள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அது இல்லை. 

 


பக்கம் #367:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:68ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" மற்றும் "" உள்ளது. 

 

 

- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:69ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "ஸாத்" உள்ளது. 

 


பக்கம் #389:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 11:58ம் வசனத்தில் "டால் (dal)" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக "ப (ba)" உள்ளது. 

 

 

xi



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #369:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. 

 


பக்கம் #370:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் "லாம்" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது. 

 


பக்கம் #373 / #374:



- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல'குர்‍ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்‍ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது. 

 

 


பக்கம் #382:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:100ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "" மற்றும் "வாவ்" உள்ளது. 

 


பக்கம் #421:



- எட்டாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 15:21ம் வசனத்தில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணவில்லை. 

 

xii



ஆங்கில மூலம்: Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

 
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition

பக்கம் #279: 



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை. 

- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்‍ஆன்களில் அங்கு "ப (ba)" உள்ளது. 

 


பக்கம் #283: 

- எட்டாவது வரியில், 'மூல' குர்‍ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் அது இல்லை. 

 


பக்கம் #295: 

- முதல் வரியில் "ஸீன்" அல்லது "ஸாத்" என்ற எழுத்து 'மூல' குர்‍ஆனின் 6:91ம்வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. இன்னும் 'மூல' குர்‍ஆனின் அந்த முதல் வரியிலேயே "மீம்" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்‍ஆனில் "" வந்துள்ளது. 

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:92ம் வசனத்தில் "மீம்" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய "வாவ்" என்ற எழுத்து தற்கால அரபி குர்‍ஆனில் காணலாம், ஆனால், 'மூல' கு‍ர்‍ஆனில் அவ்வெழுத்து இல்லை] 

 


பக்கம் #297: 

- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:94ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து "வாவ்" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் "வாவ்" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது. 

 


vii




சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #296: 

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:93ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை. 

 

 

- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை. 

 


பக்கம் #314:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:129ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது. 

 


பக்கம் #336:



- முதல் வரியில் 'மூல' குர்‍‍ஆனின் 7:3ம் வசனத்தில் "அதிகபடியான காம்பு போன்ற" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை. 

 


பக்கம் #337:



- ஏழாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்புபோன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை. 

 


viii



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #338:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:11ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அதற்கு பதிலாக "ஸீன்" உள்ளது. 

 


பக்கம் #340: 

- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:19ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது. 

 


பக்கம் #342:



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:26ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை. 

 


பக்கம் #343:



- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:27ம் வசனத்தில் "மீம்" மற்றும் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை. 

 


ix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #350:



- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:38ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது. 

 


பக்கம் #351:



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது இல்லை. 

 


பக்கம் #353:



- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:43ம்வசனத்தில் "அதிகபடியான" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. 

 


பக்கம் #356:



- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:47ம்வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த "அலீஃப்" எழுத்து 'மூல' குர்‍ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

 


x


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #359:



- மூன்றாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அந்த காம்பு இல்லை. 

 

 


பக்கம் #363:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்புஉள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அது இல்லை. 

 


பக்கம் #367:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:68ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "மீம்" மற்றும் "" உள்ளது. 

 

 

- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:69ம் வசனத்தில் "ஸீன்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "ஸாத்" உள்ளது. 

 


பக்கம் #389:



- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 11:58ம் வசனத்தில் "டால் (dal)" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக "ப (ba)" உள்ளது. 

 

 

xi



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 2


பக்கம் #369:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் "" உள்ளது. 

 


பக்கம் #370:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் "லாம்" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது. 

 


பக்கம் #373 / #374:



- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல'குர்‍ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்‍ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது. 

 

 


பக்கம் #382:



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:100ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "" மற்றும் "வாவ்" உள்ளது. 

 


பக்கம் #421:



- எட்டாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 15:21ம் வசனத்தில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணவில்லை. 

 

xii



ஆங்கில மூலம்: Appendix A2: Samarqand MSS VS 1924 Egyptian Edition



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

 
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 4



Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition



பக்கம் #622: 



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் "மீம்" எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது உள்ளது. 



- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:23ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்பாவில்லை. 

 


பக்கம் #684: 



- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 40:81ம் வசனத்தில் காம்பு போன்ற உறுப்பு காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் "" என்ற எழுத்து காணப்படுகிறது. 

 


பக்கம் #652: 



- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:103ம் வசனத்தில் முதலில் "வாவ்" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து "மீம்-அலீஃப்" என்ற எழுத்துக்களும் வருகின்றன. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப-லாம்-மீம்-அலீஃப்" என்ற வரிசையில் எழுத்துக்கள் வருகின்றன (முழுவசனத்தையும் பார்க்க 67ம் பக்கத்தைப் பார்க்கவும்). 



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:105ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது இடம் பெற்றுள்ளது. 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "ட (ta)" காணப்படுகிறது. 



- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் அதே வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் "நூன்" எழுத்து காணப்படுகிறது. 



- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:106ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது. 



- எட்டாம் வரியில் அதே வசனத்தில் 'மூல' குர்‍ஆனில் "ப (ba)" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது. 

 


xix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 4


பக்கம் #665:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:12ம் வசனத்தில் அனேக சிறிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'மூல' குர்‍ஆனில் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த "'மூல' (பெரிய) எழுத்துக்களை" நீக்கிவிட்டு, இந்த சிறிய எழுத்துக்களை அவ்விடத்தில் நுழைத்துள்ளார்கள். இந்த சிறிய எழுத்துக்கள் தற்கால குர்‍ஆனிலும் காணப்படுகிறது. 


- பத்தாம் வரியில் அதே வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படவில்லை. 

 


பக்கம் #669:



- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:22ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த இடத்தில் "" என்ற எழுத்து காணப்படுகிரது. 

 

 

- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:23ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் 'நூன்" காணப்படுகிறது. 

 


பக்கம் #671:



- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:26ம் வசனத்தில் "" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "" காணப்படுகிறது. 

 

xx



சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு


பின் இணைப்பு A - பாகம் 4


பக்கம் #673: 



- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:6ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பும் ஒரு "லாம்" என்ற எழுத்தும் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் இரண்டு காம்பு போன்ற உறுக்கள் காணப்படுகிறது, அவ்விடத்தில் ஒரு "" என்ற எழுத்தும், மற்றும் ஒரு "நூன்" என்ற எழுத்தும் காணப்படுகிறது. 


- அதே வரியில், 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு காணப்படுகிறது, அதோடு கூட "ஜீம்" காணப்படுகிறது, இந்த "ஜீம்" என்ற எழுத்தானது நீண்டுக்கொண்டு சென்றுள்ளது, இவ்வெழுத்து பொதுவாக ஒரு வால் போல மாறி திரும்ப பின்னோக்கி வரவேண்டும், இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றால், இந்த ஜீம் என்ற எழுத்துக்கு பிறகு வேறு எழுத்து(க்கள்) இருப்பதாக தெரிகிறது. தற்கால அரபிக் குர்‍ஆனில் இந்த ஜீம் என்ற எழுத்து ஒன்று மட்டுமே காணப்படுகிறது. 


- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:7ம் வசனத்தில் "இரண்டு காம்புகள்" இல்லாமல் காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "நூன் மற்றும் ட (ta)" காணப்படுகிறது. 

 


பக்கம் #696:



- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 41:31ம் வசனம் தற்கால அரபிக் குர்‍ஆனில் உள்ள வசனத்தை விட வித்தியாசமாக காணப்படுகிறது. 

 

xxi



ஆங்கில மூலம்: Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம்

சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

சாம் ஷமான்

குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இரவில் மொத்தமாக இறங்கியது என்று அனேக இடங்களில் குர்‍ஆன் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (குர்‍ஆன் 2:185) 

ஹா, மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). (குர்‍ஆன் 44:1-7) 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (குர்‍ஆன் 97:1-5)

நாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்‍ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்‍ஆன் இறங்கியதாக சொல்கிறது. இந்த குர்‍ஆன் வசனமாகிய 97:1ம் வசனம் பற்றி விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நாம் காண்போம். இப்படி விரிவிரையாளர்களின் விளக்கங்களை நாம் பார்க்கவில்லையானால், வசனங்களின் பொருளை மாற்றி இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

இதோ! நாம் அதை வெளிப்படுத்தினோம், குர்‍ஆனை முழுவதுமாகபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து வானத்திலிருந்து இறக்கினோம், கன்னியமிக்க இரவில், சிறப்புமிக்க இரவில் இறக்கினோம். (த‌ஃப்ஸீர் அல் ஜலலைன்) 

Lo! We revealed it, that is, the Qur'an, IN ITS ENTIRETY, [sending it down] from the Preserved Tablet to the heaven of this world, on the Night of Ordainment, that is, [the Night] of great eminence. (Tafsir al-Jalalayn; source; capital emphasis ours)

இப்படி இருந்தும், கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு மேலே கண்ட குர்‍ஆன் வசனங்கள் முரண்படுகின்றன:

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். (குர்‍ஆன் 17:105-106) 

இன்னும்; "இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (குர்‍ஆன் 25:32) 

And those who disbelieve say: "Why is not the Qur'an revealed (nuzzila) to him all at once?" Thus (it is sent down in parts), that We may strengthen your heart thereby. And We have revealed it to you gradually, in stages. (It was revealed to the Prophet in 23 years.). S. 25:32 Hilali-Khan

இந்த முரண்பட்ட நேரெதிர் வசனங்கள், இஸ்லாமிய அறிஞர்களை ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கும்படி செய்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, முழு குர்‍ஆனும் ஒரே முறை அல்லாஹ்வினால் கீழ் வானத்திற்கு கொண்டுவரப்பட்டது, அங்கு அது இருந்தது. அதன் பிறகு காபிரியேல் (ஜிப்ராயீல்) தூதன் மூலமாக சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு அல்லாஹ் குர்‍ஆனை இறக்கினான், அதாவது 23 ஆண்டுகள் முழு குர்‍ஆனும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று பொருள் கூறுகிறார்கள். 

நவீன காலத்தின் சலபி இஸ்லாமிய அறிஞராகிய டாக்டர் அபூ அமீனா பிலால் பிலிப்ஸ், இதைப் பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அல்லாஹ்வின் வேதத்தில் கூறியிருக்கிறபடி, குர்‍ஆன் இரண்டு தனிப்பட்ட விதங்களில் இறக்கப்பட்டது. குர்‍ஆனின் வெளிப்பாடு குறித்து குர்‍ஆனில் மற்றும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட விவரங்களில் உள்ள முரண்பாட்டை சரி செய்வதற்கு, இந்த இரண்டு வகையாக குர்‍ஆன் இறக்கப்பட்ட முறையை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது முதல் வகையில் பார்த்தால், முழு குர்‍ஆனும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது அல்லது லைலத்துல் கதிர், என் கன்னியமிக்க இரவில் இறக்கப்பட்டது. இரண்டாவது வகையில் பார்த்தால், குர்‍ஆன் சிறிது சிறிதாக இறைத்தூதர் மரிக்கும் வரையில் இறக்கப்பட்டது.

முதல் வெளிப்பாடு: 

பாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்த (அல் லாஹ் அல் மஹ்பூத்) குர்‍ஆனை அல்லாஹ் இறங்கச் செய்தான், கீழ் வானத்தில் இந்த குர்‍ஆன் இறக்கப்பட்டது. இந்த முதல் வெளிப்பாட்டில், முழு குர்‍ஆனும் ஒரே முறை கீழ்வானத்தில் இறக்கப்பட்டது, இந்த இடத்திற்கு "பைத் அல் இஜ்ஜாஹ்" என்று அழைப்பார்கள்(கன்னியம் மற்றும் வல்லமையுள்ள வீடு என அழைக்கப்படுகிறது). குர்‍ஆன் இறக்கப்பட்ட அந்த பாக்கியமான இரவை "லைலத்துல் கதிர் (The Night of Decree)" என்று அழைப்பார்கள். இது ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் வரும் ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட நாளாகும். இந்த முதல் வெளிப்பாட்டை அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான் (மேற்கோள்கள் : குர்‍ஆன் 44:1-3, 97:1, 2:185) 

இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட முதல் வெளிப்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன, ஏனென்றால், குர்‍ஆன் முழுவதும் ஒரே முறை ரமலான் மாதத்தின் ஒரே இரவில் முஹம்மது நபிக்கு இறக்கப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விவரமாகும்.

இபின் அப்பாஸ் கூறுகையில், குர்‍ஆன் மேல் வானத்திலிருந்து எடுக்கப்பட்டு கீழ்வானமாகிய பைத் அல் இஜ்ஜாஹ் என்ற இடத்தில் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தின் லைலத்துல் கதிர் என்ற இரவில் (The Night of Decree) இறக்கப்பட்டது என்று ஒரு தொகுப்புச் சொல்கிறது. அல்லாஹ் விரும்பியிருந்தால், முழு குர்‍ஆனையும் ஒரே இரவில் ஒரே முறை வெளிப்படுத்தியிருப்பான். இந்த வகையில் தான் முந்தைய வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் தன் வெளிப்பாட்ட இரண்டு வகையாக பிரித்தான். முதலாவதாக, மேல் வானங்களிலிருந்து குர்‍ஆன் தன் கடைசி தூதருக்கு இறக்கப்படுகிறது என்ற விவரத்தை "மேல் வானங்களில்" இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. (Philips, Usool at-Tafseer, 6. The Revelations of the Qur'aan, pp. 94-96; sources 12; comments within brackets and underline emphasis ours)

இன்னொரு இஸ்லாமிய மூலம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

ரமலான் மாதத்தில் தான் குர்‍ஆன் வெளிப்பட்டது, அதாவது ஜிப்ராயீல் தூதன் முழு குர்‍ஆனையும் முதல் வானத்திற்கு கொண்டு வந்தார், தேவதூதர்களில் எழுதுபவர்களுக்கு குர்‍ஆன் ஓதி காண்பிக்கப்பட்டது மற்றும் முஹம்மதுவிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது. சில நேரங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வசனங்கள் மட்டும் இறங்கின, சில நேரங்களில் ஒரு முழு அதிகாரமும் இறக்கப்பட்டது. … (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; capital and underline emphasis ours)

மற்றும் இன்னொரு இஸ்லாமிய விரிவுரை கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

இபின் அப்பாஸ் அவர்களின் அதிகாரபூர்வமான அறிப்பு கூறுகிறது: "இதோ நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்பதைக் குறித்து அறிவித்ததாவது: "நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்று கூறினார். இதில் அவர் சொல்லவருவது என்னவென்றால் "நாம் முழு குர்‍ஆனோடு ஜிப்ராயீலை கீழ் வானத்திற்கு அனுப்பினோம் (அது வல்லமையின் இரவாகும்) அது நியாயத்தீர்ப்பின் சட்டத்தின் இரவாகும். அந்த இரவு மன்னிப்பு மற்றும் பாக்கியம் பொருந்திய இரவாகும். அதன் பிறகு அந்த குர்‍ஆன் பகுதி பகுதியாக நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)க்கு இறக்கப்பட்டது. (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source)

இஸ்லாமியர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உள்ள பிரச்சனையை வாசகர்கள் உடனே கண்டுக்கொள்ளலாம். இரண்டு வகைகளில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக குர்‍ஆன் எங்கும் சொல்வதில்லை. அதாவது, முதலாவதாக‌ ஒரு முறை முழு குர்‍ஆனும் கீழ் வானம் வரைக்கும் இறக்கப்பட்டது என்றும், இரண்டாவதாக, பகுதி பகுதியாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இஸ்லாமியர்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களெல்லாம் தங்கள் வேதத்தில் உள்ள பெரிய தவறை சரி செய்ய கொடுக்கப்படும் விளக்கங்களே. அதாவது ஒரு குறிப்பிட்ட இரவில் முழு குர்‍ஆனும் இறங்கியதாக குர்‍ஆன் சொல்வது, பிறகு அதற்கு முரண்பட்ட விதத்தில் முஹம்மதுவிற்கு பகுதி பகுதியாக வெளிப்பாடு வந்தது என்று அதே குர்‍ஆன் சொல்வதும் முரண்பட்ட விவரமாகும். 

உண்மையில் சொல்லப்போனால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமலான் மாதத்தில் குர்‍ஆன் இறங்கியதாக ஒரு குர்‍ஆன் வசனம் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது....(குர்‍ஆன் 2:185)

ரமளான் மாதத்தில் தேவதூதர்களுக்கு கீழ்வானத்தில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது என்று இந்த வசனம் சொல்லாமல், இந்த புத்தகம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்டது என்றுச் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமளான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பதாகும், இது இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கியிருக்கும் சொந்த கருத்திற்கு விளக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் உள்ளது. 

மேற்கொண்டு படிக்க:

இந்த விவரங்கள் பற்றி குர்‍ஆனில் உள்ள சில வசனங்கள் மறைமுகமாக பிரச்சனையை உருவாக்கின்றன. இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசவில்லையானாலும், குர்‍ஆன் 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று நாம் கருதினால், அது இவ்வசனங்களுக்கு ஒவ்வாத முரண்பட்ட விவரங்களாக உள்ளன. இவ்வசனங்கள் நமக்கு எதை சொல்கின்றன என்று கவனித்தால், குர்‍ஆன் ஒரே முறை முழுவதுமாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்ற தோரணையில் அவைகள் விளக்கமளிக்கின்றன. இந்த விவரங்கள் ஆங்கிய இந்த விவாத மறுப்புக் கட்டுரையை படிக்கவும்: குறைந்த பட்சம் குர்‍ஆனில் பாதியாவது தெளிவாக உள்ளதா? 

இன்னொரு வகையில் பார்த்தால், குர்‍ஆன் ஒரு முழு புத்தகமாக ஒரே முறை இறக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குர்‍ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. இந்த விவரங்கள் அடங்கிய கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய ஆய்வு

இப்போது நாம் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரையைப் பற்றி ஒரு இஸ்லாமிய விவாதம் புரிபவர் கொடுத்த பதிலுக்கு மறுப்பை சாம் ஷமான் கொடுத்துள்ளார். அதனை இங்கு படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதம் பற்றிய மறு ஆய்வு - ஒரே முறை இறங்கியதா அல்லது சிறிது சிறிதாக இறங்கியதா? 

ஆங்கில மூலம்: Quran Contradiction: The descent of the Quran Piecemeal or all at once?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?

 

குர்‍ஆன் ஒரு அற்புதமா?



Is The Qur'an Miraculous?

 
சூரா 11:13-16ல் "இப்புத்தகம் இணையற்ற புத்தகம்" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதனால், குர்‍ஆன் ஒரு அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கைப் பற்றி மற்றவர்களுக்கு சவால் விடும்போது, இந்த ஒரு வாதத்தை முன்வைப்பார்கள், மற்றும் இந்த சவாலை யாராலும் எதிர்கொள்ளமுடியாது என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் முழு வாதத்தையும் இதன் மீதே வைத்திருக்கின்றனர், ஆனால், தன் தெய்வீகத் தன்மையை நிருபிக்க குர்‍ஆன் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை. குர்‍ஆன் இணையற்ற புத்தகம் என்ற கருத்து இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளதோ அது போல, இஸ்லாமிய நம்பிக்கை குர்‍ஆனின் தெய்வீகத்தன்மை மீது ஆதாரப்பட்டுள்ளது. குர்‍ஆன் தன் தனித்தன்மையைப் பற்றி அதிக நம்பிக்கையுடையதாக இருக்கிறது, இதனால் அது மனிதனுக்கும், ஜின்னுக்கும் இப்படிப்பட்ட ஓரு புத்தகத்தை அல்லது ஒரு வசனத்தை கொண்டு வரமுடியுமா? என்று குர்‍ஆன் சவால் விடுகிறது.


எது எப்படியிருந்தாலும், குர்‍ஆன் ஒரு அற்புதமா? என்ற கேள்வியை கேட்கும் போது, இஸ்லாமியர்கள் அனேக பதில்கள் சொல்வதை நான் கேட்டியிருக்கிறேன், அவைகளில் மிகவும் முக்கியமானவைகள் இவைகளாகும்:
 
 
1) குர்‍ஆனின் மொழி மற்றும் இலக்கிய நடை நிகரற்றது (In its literary eloquence) 

 
2) குர்‍ஆனின் உள்ளடக்க விவரங்கள் நிகரற்றது (In its subject matter)

 
3) குர்‍ஆன் அனேக நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இருப்பதால், இது நிகரற்றது (In its preservation over the centuries)
 
 
இந்த த‌ற்போதைய‌ க‌ட்டுரையில், மேலே இஸ்லாமிய‌ர்க‌ள் சொல்லும் ப‌தில்க‌ளில் முத‌ல் ப‌திலை ம‌ட்டுமே அல‌ச‌ப்போகிறேன். பிற‌கு என் இத‌ர‌ க‌ட்டுரைக‌ளில் ம‌ற்ற‌ இர‌ண்டு ப‌தில்க‌ளைப் ப‌ற்றி நாம் காண்போம். தற்போதைய க‌ட்டுரை நீண்ட‌தாக‌ இருப்ப‌தால், இந்த‌ ப‌திலை நான் இர‌ண்டு பிரிவுக‌ளாக‌ பிரித்து ப‌தில் அளிக்கிறேன். முத‌ல் பிரிவில் நான் "குர்‍ஆனின் ச‌வாலை" ச‌ந்திப்ப‌த‌ற்கான‌ ப‌திலை த‌ருகிறேன் (தற்போதைய கட்டுரை), இர‌ண்டாவ‌து பிரிவில் "குர்‍ஆனில் இல‌க்கிய‌ ந‌டை நிக‌ர‌ற்ற‌தாக‌ உள்ள‌து (perfect eloquence)" என்ற வாத‌த்திற்கான‌ ம‌றுப்புக்க‌ளை த‌ருகிறேன். இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்ட விவரங்கள் பெரும்பான்மையாக இதர ஆசிரியர்களின் கருத்துக்களாகும், அப்படி மேற்கோள் காட்டப்பட்ட இடங்களில் எந்த புத்தகத்திலிருந்து, எந்த ஆசிரியரின் கருத்து என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கம் இஸ்லாமிய வாசகர்களை துக்கப்படுத்து அல்ல, இதனால் தான் வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்தியுள்ளேன், இதன் மூலமாக இந்த முக்கிய தலைப்பு பற்றி விவாதிக்க இஸ்லாமியர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள். நான் அறியாமையில் ஏதாவது தவறான விவரத்தை எழுதியிருந்தால், வாசகர்கள் இந்த தளத்தின் நிர்வாகிக்கு எழுதினால், அவர்கள் திருத்தம் செய்து சரி செய்வார்கள். இந்த விவரங்களை மனதில் கொண்டு, இந்த கட்டுரையின் முக்கிய விவாதத்திற்குள் கடந்துச் செல்வோம். குர்‍ஆனின் இலக்கிய நடையோடு ஒப்பிடக்கூடிய மூன்று விவரங்களை இப்போது நாம் காண்போம், இந்த ஒப்பீடு கருத்தின் படி உயர்ந்ததாக கருதப்படவில்லையானாலும், எழுத்தின் படி குர்‍ஆனை விட மேன்மையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 

 
விவாதம் 1:

ஒரு மனிதனுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சரியான அபிப்பிராயம் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த விஷயத்தில் தேர்ச்சிப் பெற்ற நிபுனர்களிடம் சென்று கேட்கவேண்டும். ஒரு வேளை உங்கள் உடல் நலம் பற்றி தெரிந்துக்கொள்ள, சிகிச்சை பெற விரும்பினால், ஒரு சிறந்த மருத்துவரிடம் நீங்கள் செல்வீர்கள். ஒரு வேளை, எந்த தொழில் ஆரம்பிப்பது அல்லது எந்த வேலையை செய்வது என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், இதற்காகவே இருக்கும் "அறிவுரை நிபுனர்களிடம் (Counsellors)" செல்வீர்கள். இந்த பிரபஞ்சம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், அதற்குரிய புத்தகங்களை நீங்கள் படிப்பீர்கள். இது போல, ஒரு மொழியைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக நாம் அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்களிடம் செல்வோம். குர்‍ஆனின் மொழியைப் பற்றியும், அதன் இலக்கிய நடைப் பற்றியும், அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்: 

புகழ்பெற்ற ஈரான் அரபி அறிஞர் அலி தஸ்தி, கீழ் கண்டவாறு கூறுகிறார்:
 
ஆங்கிலம்: 

"Neither the Qur'an's eloquence, nor it's moral precepts are miraculous." (Ali Dashti, Twenty Three Years, pg 57) 

தமிழாக்கம்: 

"குர்‍ஆனின் இலக்கிய நடையோ அல்லது அதன் ஒழுக்க நெறி கட்டளைகளோ அற்புதமானவைகளாக இல்லை"
 
 
அலி த‌ஸ்தி த‌ன் புத்த‌க‌த்தின் ஆர‌ம்ப‌த்தில், இதே க‌ருத்தை கூறுகின்ற இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளைப் ப‌ற்றி கூறுகிறார். உதாரண‌த்திற்கு, சிரியாவைச் சேர்ந்த‌ க‌ண்பார்வையில்லாத‌ க‌விஞ‌ர் "அபூ அலா அல் மாரி" என்ப‌வ‌ரைப் ப‌ற்றி த‌ஸ்தி கூறும் போது, "…அவ‌ர் ஒரு சிற‌ந்த‌ ம‌ற்றும் ஆழ்ந்த அரபி சிந்தனையுடையவர் - a great and penetrating Arab thinker" (பக்கம் 53) என்றும், "…அவ‌ர் ஒரு சிறந்த மற்றும் உலக மக்கள் நேசிக்கும் கவிஞர், மற்றும் சிந்தனையாளர் - a great and universally admired poet-philosopher" (பக்கம் 94) என்றும் கூறுகிறார். இக்கவிஞர் த‌ன் சொந்த‌ க‌விதைக‌ளை ஒப்பிடும் போது, அவைக‌ள் குர்‍ஆனுக்கு ச‌ம‌மான‌வைக‌ள் என‌ க‌ருதுகிறார். ஒரு வேளை இவ‌ர‌து க‌ருத்து த‌வ‌று என்றுச் சொன்னால், வேறு யார் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரின் க‌விதைக‌ளின் த‌ர‌த்தை நிர்ண‌யிக்க‌முடியும்? இவ‌ரைப் போல‌ நிபுன‌த்துவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே, இப்ப‌டிப்ப‌ட்ட விஷயங்களில் ஒரு முடிவைச் சொல்லமுடியும்! உண்மையாகச் சொல்லவேண்டுமானால், இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இதர அறிஞர்கள் கூட "குர்‍ஆன் ஒரு இலக்கிய சிறப்பு மிக்க ஒரு அற்புதம்" என்று கருதவில்லை. இதைப் பற்றி அலி தஸ்தி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை படியுங்கள்.
 
 
"Among the muslim scholars of the early period, before bigotry and hyperbole prevailed, were some such as Ebrahim on-Nazzim who openly acknowleged that the arrangment and syntax of the Qur'an are not miraculous and that work of equal or greater value could be produced by other God-fearing persons", (emphasis mine, pg 48) 

 
"கருத்து சுதந்திரம் பரிக்கப்படுவதற்கு முன்பு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில், "இப்ராஹிம் அன் நஜீம்" போன்றவர்கள் அனேகர் இருந்தனர். குர்‍ஆனின் வடிவமைப்பும், அதன் இலக்கிய நயமும் அற்புதமானது அல்ல மற்றும் குர்‍ஆனுக்கு சமமாகவும் அதற்கும் மேலான நயத்துடனும் நூல்களை எழுத இறையச்சம் உள்ளவர்களால் முடியும்" என்று இவர் வெளிப்படையாக அங்கீகரித்தார்.
 
 
 
மேலே சொல்லப்பட்ட விவரமானது, அனேக எடுத்துக்காட்டுக்களில் ஒன்று மட்டுமே. இதே போல தங்கள் கருத்தைச் சொன்னவர்களில் இவர்களும் அடங்குவார்கள்: "இபின் ஹஜம் மற்றும் அல்-கய்யத்....ம‌ற்றும் இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளான‌வ‌ர்க‌ள் (several other leadering exponents of the Mo' tazzilite school)" (பக்கம் 48). சமீப காலத்தில் கூட அரபி மொழியில் அதிக நிபுனத்துவம் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, ஜெருசலேமில் 16 ஆண்டுகள் உழைத்து, குர்‍ஆனின் மொழி நடையிலேயே பைபிளின் வசனங்களை மொழியாக்கம் செய்தார்கள். இவர்களின் இந்த வெற்றியை புறக்கணித்தால், அவர்களின் ஒட்டு மொத்த நிபுனத்துவத்தையும், மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவியலையும் நாம் புறக்கணித்ததற்கு சமமாகும்.

 
எனினும், இந்த அறிஞர்கள் வேண்டுமென்றே இப்படிச் சொன்னார்கள், இவர்களின் கூற்றுகளில் உண்மையில்லை என்று இஸ்லாமியர்கள் இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். அந்த சிரியன் கவிஞர் தன் சொந்த கவிதைகளை புகழுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். இதே போல, ஜெருசலேமில் உழைத்த அந்த அறிஞர்கள் ஒரு பக்கம் சார்ந்து இவ்வேலையைச் செய்தார்கள் ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். 

 
நான் உங்களிடம் கேட்க விரும்புவது: " இந்த மனிதர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட ஒரு தைரியமான சவாலை மக்களின் முன்வைப்பதற்கு, அவர்கள் என்ன முட்டாள்களாக இருந்தார்களா? தங்கள் பெயர் மற்றும் புகழுக்கு இழுக்கு வரும் என்று தெரிந்துமா இப்படிப்பட்ட சவாலை மக்களின் முன் வைக்கமுடியும்?அவர்களின் கூற்றுகளில் உண்மையில்லாமலா இந்த சவாலை அவர்கள் மக்கள் பொதுவில் வைத்திருப்பார்கள்?" இது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கருத்துக்களை, கவிதைகளை மக்களின் முன் வைத்தார்கள், யாராவது வந்து இதற்கு மறுப்புக் கூறி நிருபியுங்கள் என்று சவால் விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால், அவர்களின் எழுத்துக்களை அலசுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், அவர்களுக்கு மறுப்பு தெரிவியுங்கள், நிருபியுங்கள். உங்களால், இப்படி மறுப்பு தெரிவித்து, நிருபிக்க முடியவில்லையானால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதே சரியானது. 

நான் மேலே சொன்ன இரண்டு மேற்கோள்களிலும், சந்தேகத்திற்கு இடமுண்டு என்பதை நான் நம்பமாட்டேன். ஆசிரியர் அலி தஸ்தி தன் புத்தகம் முழுவதும் நடுநிலையோடு எழுதியிருப்பதை நாம் காணமுடியும். அவர் வேண்டுமென்றே ஒருபுறம் சார்ந்து எழுதியதாக, இஸ்லாமுக்கு எதிராக எழுதியதாக நாம் அவரது புத்தகத்தில் காணமுடியாது. இந்த புத்தகம் ஒரு பக்கமாக சார்ந்து எழுதப்பட்டதா என்று, இந்த புத்தகத்தை வாங்கி, படித்து பிறகு எனக்குச் சொல்லுங்கள் என்று நான் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அலி தஸ்தி புத்தகத்தை எழுதியதின் முக்கிய நோக்கமே, முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றியும், இஸ்லாம் பற்றியும் நடுநிலையோடு எழுதுவதாகும். க‌டைசியாக‌ நாம் பார்த்த‌ விவ‌ர‌த்திலும் கூட‌, இஸ்லாமுக்கு எதிராக‌ வேண்டுமென்றே இவ‌ர்க‌ள் எழுதியிருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆகையால், இஸ்லாமுக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்திற்கும் இடமில்லை. முடிவாக, நிபுனர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய நிபுனர்களையும் சேர்த்து, குர்‍ஆனின் சவால் ஏற்கனவே சந்தித்தாகிவிட்டது.
 
 
விவாதம் 2: 

சூராக்கள் 1, 113 மற்றும் 114 ஆகிய மூன்று அதிகாரங்கள், மூல குர்‍ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை, அவைகள் பிறகு நுழைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்துல்லா இபின் மசூத் என்பவர் குர்‍ஆன் பற்றிய விஷயங்களில் முக்கிய அதிகாரபூர்வமானவர் என்பதை முஹம்மதுவே இவரைப் பற்றி கூறியுள்ளார் (புகாரி). இந்த அதிகாரங்கள் குர்‍ஆனின் ஒரு பாகமல்ல என்று கருதுகிறார். இவரது எழுத்துக்கள் மூலமாக இதனை அறியலாம். 1930களில் சில விமர்சகர்கள் இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அலசிப்பார்த்தார்கள், பிறகு இதே முடிவிற்கு வந்தார்கள். இஸ்லாமியர்கள் ஏன் சூரா 1ஐ குர்‍ஆனின் ஒரு பகுதியில்லை என்று கருதுவதற்கு மூன்றாவது காரணமும் இருப்பதாக நான் நம்புகிறேன். 

குர்‍ஆன் இறைவனின் நேரடி வெளிப்பாடு அல்லது வார்த்தைகள் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது, அந்த வார்த்தைகளை பேசுகிறவர், முழுக்க முழுக்க இறைவனாவார். வெளிப்பாடு பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து இப்படி இருப்பதினால், " இறைவன் நேரடியாக பேசும் வார்த்தைகள் அனைத்தும் தன்னிலையில் (First Person) இருக்கும், இப்படி இல்லாமல், முன்னிலையில் வரும் (Second Person) வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள் அல்ல" என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் புரிவதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். பைபிளில் உள்ள "சங்கீத புத்தகம்" இறைவேதமல்ல ஏனென்றால், அவைகளில் வரும் வார்த்தைகள் அதனை எழுதிய ஆசிரியர் இறைவனை தொழுதுக்கொள்வதாக இருப்பதால், சங்கீதம் இறைவேதமல்ல என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இஸ்லாமியர்கள் இப்படி கேட்பார்கள் "இறைவன் தன்னைத் தானே தொழுதுக் கொள்வாரா?"

நான் இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புவது, "குர்‍ஆனின் சூரா 1, வழிகாட்டுதலுக்காக இறைவனிடம் அதை எழுதிய ஆசிரியர் எழுதுவதாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் எப்படி அந்த சூராவை இறைவார்த்தை என்றுச் சொல்கிறார்கள்?" (இந்த சூராவின் ஆரம்பத்தில் "கூறுவீராக" என்ற வார்த்தை இல்லை என்பதால், இது இறைவன் கூறச்சொன்ன வார்த்தைகள் இல்லை). இஸ்லாமியர்களின் வெளிப்பாடு பற்றிய சித்தந்தத்தின்படி, இஸ்லாமியரின் பகுத்தறிவின் படி பார்த்தால், இறைவன் தன்னிடம் தானே துவா கேட்பாரா?" இக்கேள்விக்கு, என் கருத்துப்படி, இஸ்லாமியர்களின் அறிவுடமையான பதில் "இல்லை" என்பதாகத் தான் இருக்கும். இந்த சூரா, குர்‍ஆனில் உள்ள இதர சூராக்களை விட நல்ல நயத்துடன் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த சூரா இறைவனால் எழுதப்படாமல், ஒரு மனிதனாலோ அல்லது மனிதர்களாலோ எழுதப்பட்டிருக்கிறது மற்றும் இதர சூராக்களை விட நல்ல இலக்கிய நயத்துடன் இருக்கிறது, இன்னுமா குர்‍ஆனின் சவால் சந்திக்கப்படாமல் இருக்கிறது?

முடிவுரை:

மேலே கண்ட விவாதத்திலிருந்து ஒருவர் எந்த முடிவிற்கு வரமுடியும்? குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால் என்னவாகும்? ஒருவேளை குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால், அதன் பிறகு குர்‍ஆன் ஒரு அற்புதமாக கருதப்படாமல் போகுமா? ஆக, குர்‍ஆனின் தெய்வீகதன்மையை நிருபிக்க பயன்படுத்தப்படும் அந்த ஒரு ஆதாரமும் ஆட்டங்காணுகிறது. இஸ்லாமியர்கள் ஏன் குர்‍ஆன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதற்கான சரியான காரணமில்லாமல் தனிமையில் விட்டுவிடப்படுகிறார்கள். குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களோடு நாம் மேலே கண்டோம். அப்படியானால், உங்களின் தீர்மானம் என்ன?
 
 
இஸ்லாமிய வாசகர்களுக்காக சில வரிகள்: 

 
இந்த கட்டுரையில் நாம் சரியான ஆதாரங்களோடு எடுத்த முடிவை ஏற்க பல இஸ்லாமியர்கள் இன்னும் மறுக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களிடம் கீழ் கண்ட கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். 

உங்களுடைய முடிவு, உண்மையான விவரங்கள் (Facts) மீது ஆதரப்பட்டு இருக்கிறதா? அல்லது உங்கள் நம்பிக்கையின் (Faith) மீது ஆதாரப்பட்டு இருக்கிறதா? (Is your conclusion based on the facts, or on your faith?) 

குர்‍ஆனின் இந்த‌ ச‌வால் ஒருபோதும் ச‌ந்திக்க‌ப்ப‌டாது என்றுச் சொல்லும் ந‌ப‌ராக‌ நீங்க‌ள் இருக்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், நீங்க‌ள் எடுத்த‌ முடிவு உங்க‌ளின் ந‌ம்பிக்கையின் மீது ஆதார‌ப்ப‌ட்டு இருக்கிற‌து, பகுத்தறிவின் மீத‌ல்ல‌. நீங்க‌ள் ஏற்க‌ன‌வே முடிவை எடுத்துவிட்ட‌தால், இனி அந்த‌ ச‌வால் ப‌ய‌ன‌ற்ற‌தாக‌ உள்ள‌து. இங்கு நீங்க‌ள் மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டும், ஏனென்றால், நீங்க‌ள் மிக‌வும் ஆப‌த்தான‌ நில‌த்தை உழுதுக்கொண்டு இருக்கிறீர்க‌ள். நீங்கள் சவாலை பயனற்றதாக மாற்றுவீர்களானால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையும் பயனற்றதாக மாறிவிடும். 

இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்றுச் சொல்லக்கூடிய, இந்த அற்புதத்தின் மூலமாக, இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் சுழற்சி வாதத்தை (Circularity of Muhammad's claims) முறித்துவிடுகிறார்கள். நான் சொல்ல வருவது என்ன? ஒரு முஸ்லீமிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்: 

முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? 

இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: அவ‌ர் தீர்க்க‌த‌ரிசி என்று குர்‍ஆன் சொல்கிறது ம‌ற்றும் கு‍ர்‍ஆன் இறைவ‌னின் வேத‌மாக‌ இருக்கிற‌து. 

ம‌றுப‌டியும் அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள்: குர்‍ஆன் இறைவேத‌மென்று உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்? 

இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: குர்‍ஆன் இறைவேத‌மென்று முஹ‌ம்ம‌து சொன்னார். 

இப்படிப்பட்ட சுழற்சியை உடைக்கவேண்டுமானால், கிறிஸ்தவத்திற்கு உள்ளது போல, இந்த இரண்டு பதில்களுக்கு வெளியே ஆதாரங்கள் இருக்கவேண்டும் (ரவி ஜகரியா - இஸ்லாம் செய்திகள்). குர்‍ஆன் தன் அற்புதத்தைப் பற்றி மேன்மை பாராட்டுகிறது, இதற்கு வலுவூட்டும் விதமாக சவாலும் இருக்கிறது என்றுச் சொல்கிறது. ஆக, இந்த சவாலே பயனற்றதாக மாறும்போது, குர்‍ஆனின் அற்புதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போகும், இதனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு பகுத்தறிவான வாதம் இல்லாமல் போகும், இதனால் அவர்களின் நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கையாக மாறும், ஏனென்றால், அவர்களின் நம்பிக்கைக்கு குர்‍ஆனின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது. மனிதனின் அறிவு மட்டுமே அவனை எப்போதும் சத்தியத்திற்கு நேரே நடத்தவேண்டும் என்று குர்‍ஆன் வாதம்புரிவதால், இந்த நிலை. இன்னும் நீங்கள் உங்கள் வாதத்திலே அசையால் நிற்கிறீர்களா? அல்லது உங்கள் மனதில் நேர்மையானவர்களாக இருக்க முடிவு செய்யப்போகிறீர்களா?

 


 
Reference: Ali Dashti, "Twenty Three Years: A Study of the Prophetic Career of Mohammad", Routledge Chapman & Hall, Mazda Pubs, Bibliotheca Iranica: Reprints Ser., Vol. No. 2., 1985, 246p. $15.95, ISBN 1-56859-029-6.

 
 
ஆங்கில மூலம்: Is The Qur'an Miraculous? 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!

 
ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!
 

Quran or Qurans?!



இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
 
 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:


The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):


இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்: 

 
 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
 
முன்னுரை: 

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார். 

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்: 

 
 
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)

2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)

3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

 
 
இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர். 

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள். 

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
 
 
 
மூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji'faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
 
 
 
நான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
 
1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz) 

2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹ‌க‌ம் + அஹ்ம‌த் பின் ஃப‌ரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)

3. அல்ஹ‌ஸ‌ன் அல்ப‌ஸ்ஸ‌ரி: அபோ ந‌யிம் அல்ப‌ல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na'im Albalkhi + Aldori)

4. அலாம‌ஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய் (Ala'mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
 
 
 
வித்தியாசம் இப்படியாக உள்ளது: 
 
 
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling) 

2. தொனியில் வித்தியாசம் (tone - harkat) 

3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar) 

4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL) 

5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)

6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)
 
 
நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது. 

 
முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக்கூடிய "தாய் குர்‍ஆன்" என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை. 

 
"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள். 

 
முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)
 
 
நான் என்ன சொல்லவருகிறேன்? 

 
சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.
 
 
1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19 
[English translation based on the one done by Rashad Khalifa] 

 
* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son." 

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba
 
 
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:
 
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son." 

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
 
 
* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:
 
 
He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son." 

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba
 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25 
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit

 

* ஹம்ஜா, அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat

 

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat

 

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat

 

* அபோ நஹிக், அபோ ஹை:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt

 

* அலேரப் a book for Alnahas:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit

 

* மஸ்ரோக்

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit

 

* அபோ ஹையா:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat

 

* அபோ அல்ஸ்மல்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt

 

3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஜித் பின் அலி:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, 'I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being'

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman

 

* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten

 

* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten

 

* அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten

 

எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்:khaled@exmuslim.com

 

ஆங்கில‌ மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN

 

பல விதமான அரபி குர்‍ஆன்கள்

(THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

(இக்கட்டுரையின் முந்தைய பெயர் "குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்")

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

 
 
நான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical) என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது, மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின் தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.
 
 

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... அல்லாவின் இந்த புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

 
 
மேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில் "எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of text can be found". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும் முன்வைக்கிறார் "இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள் ". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.
 
 
தேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:
 
 
  1. முதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.
  2. பிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.
  3. கடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) "மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings" விவரங்களைக் காணப்போகிறோம்.
 
 
நம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர் எழுதுகிறார்:
 
 

"... முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக கருதப்படுகிறது". 

... owing to the fact that the kufic script in which the Koran was originally written contained no indication of vowels or diacritical points, variant readings are recognized by Muslims as of equal authority. (N.J. Dawood, The Koran, Middlesex, England: Penguin Books, 1983, p. 10, bold added)

 
 
இந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம் (Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக படிப்பது என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு முன்பாக, குர்‍ஆன் நமக்கு "ஓதுபவர்கள்– The Readers" என்ற மனிதர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இவர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள் (Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார்கள். இந்த "குர்‍ஆனை ஓதுபவர்கள் " ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் "செய்தியை கடத்துபவர்கள் (Transmitters)" என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a "transmission" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான "குர்‍ஆன் ஓதுபவரும்" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு "குர்‍ஆன் ஓதுபவரின்" முறைப்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த "ஓதும் முறைப்படித்தான்" நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு "ஓதும் முறையிலும்" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம் என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான "குர்‍ஆன் ஓதும் முறையை" பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
 
நான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:
 
 
குர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில் குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. ... நான்காவது இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி, பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின் அடிப்படையில்("readers" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters (rawi, pl. ruwah) அடிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும் முறையை(al-qira'at as-sab', "the seven readings") அடிப்படையாகக் கொண்டு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) விவரங்களோடு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும் இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது... அதிகார பூர்வமாக "குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது".
 
 
நஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785) 
இபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)
அபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)
இபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)
ஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)
அல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)
அபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)

 
(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p. 324, bold added)
 
 
மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers) மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters) இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.
 
 
 
The ReaderThe TransmitterCurrent Area of Use
"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை"
நஃபிThe Qur'an according  to the Warsh transmissionவர்ஷ்அல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் சூடான்.
The Qur'an according  to the Qalun transmissionகலுன்லிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்
இபின் கதிர்அல் பஜ்ஜி
குன்புல்
அபூ அமர் அல்-அலாThe Qur'an according  to the al-Duri transmissionஅல்துரிசூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.
அல்சுரி
இபின் அமிர்ஹிஷம்யெமன் நாட்டின் சில பகுதிகள்
இபின் தக்வான்
ஹம்ஜாகலஃப்
கல்லத்
அல்கிசய்அல்துரி
அபுல் ஹரித்
அபூ பக்கர் அசிம்The Qur'an according  to the Hafs transmissionஹஃப்ஸ்உலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்
இபின் அய்யஷ்
"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை"
அபூ ஜப்பர்இபின் வர்தன்
இபின் ஜமஜ்
யாகூப் அல்- ஹஸிமிருவய்ஸ்
ரவ்
கலஃப் அல்- பஜ்ஜர்இஷாக்
இத்ரிஷ் அல் ஹட்டட்
Abu Ammaar Yasir Qadhi, An Introduction to the Sciences of the Qur'aan, United Kingdom: Al-Hidaayah, 1999, p. 199.
 
 
மேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின் பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும் பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில் மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து குர்‍ஆன்களும் அச்சடித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்றை மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
 
 
இந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம் தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன் பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம் ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது "Hafs Transmission" ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் "Warsh Transmission" வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.
 
 
 
The Qur'an according  to the Hafs transmission
இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.
 
  1. அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter differences)
  2. வெவ்வேறு சப்த புள்ளிஎழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical differences)
  3. உயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)
The Qur'an according  to the Warsh transmission
 
 
இந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும் ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும் சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால், மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது, வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.
 
 
அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER DIFFERENCES:இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான் அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was these letters that Uthman standardized in his recension of the Qur'an [1]).
 
 
 
இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH
hafs_1.gif
சூரா 2:132 (wawassaa)
warsh_1.gif
சூரா 2:131 (wa'awsaa)
hafs_11.gif
சூரா 91:15 (wa laa yakhaafu)
warsh_11.gif
சூரா 91:15 (fa laa yakhaafu)
hafs_2.gif
சூரா 2:132 (himu)
warsh_2.gif
சூரா 2:131 (hiimu)
hafs_3.gif
சூரா 3:133 (wasaari'uu)
warsh_3.gif
சூரா 3:133 (saari'uu)
hafs_4.gif
சூரா 5:54 (yartadda)
warsh_4.gif
சூரா 5:56 (yartadid)
 
 
 
மேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.
 
 
 
 
வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical differences):அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த root.gif குறியீட்டை ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும் சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள் வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:

baa.gif baa', taa.gif taa', thaa.gif thaa', nuun.gif nuun, yaa.gif yaa'. 

 
இருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில் ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள் குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் "அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்" இருக்கும் குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை. எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும், மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

 
குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள் குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும் புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில் இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும் இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வந்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர், அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில் புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள் கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)
 
 
 
இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH
hafs_5.gif
சூரா 2:140 (taquluna)
warsh_5.gif
சூரா 2:139 (yaquluna)
hafs_6.gif
சூரா 3:81 (ataytukum)
warsh_6.gif
சூரா 3:80 (ataynakum)
hafs_7.gif
சூரா 2:259 (nunshizuhaa)
warsh_7.gif
சூரா 2:258 (nunshiruhaa)
 
 
மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition) வெவ்வேறாக இருக்கிறது.
 
 
உயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில் நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும் கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots) இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள் அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில் இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர் எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.
 
 
 
இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH
hafs_8.gif
சூரா 2:214 (yaquula)
warsh_8.gif
சூரா 2:212 (yaquulu)
hafs_9.gif
சூரா 2:10 (yakdhibuuna)
warsh_9.gif
சூரா 2:9 (yukadhdhibuuna)
hafs_10.gif
சூரா 2:184 (ta'aamu miskiinin)
warsh_10.gif
சூரா 2:183 (ta'aami masakiina)
hafs_12.gif
சூரா 28:48 (sihraani)
warsh_12.gif
சூரா 28:48 (saahiraani)
 
 
 
சில முஸ்லீம்கள் இவ்விதமாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின் மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள் என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல, அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது, "அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted variants" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு "அதிகார பூர்வமான ஒரு பதிப்பு இல்லை" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும் உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.
 
 
 
இந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளவும்.
 
 

இந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும் வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில் இருக்கின்ற‌து. ... (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்) அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை மாற்றுவதில்லை, அதே போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை கொடுத்துவிடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184) வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக்கூடியதாக இருக்கிறது-One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37, bold added)

 
 
நாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத் தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.
 
 

10cover.jpg

Translation

Making Easy the Readings of What Has Been Sent Down

Author 
Muhammad Fahd Khaaruun 
The Collector of the 10 Readings 
From al-Shaatebeiah and al-Dorraah and al-Taiabah

Revised by
Muhammad Kareem Ragheh
The Chief Reader of Damascus

Daar al-Beirut

இந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது

Copyright is for the publisher.
First Print
1420 - 1999

Can be acquired from Daar al-Beirut Bookshop.
Halabouny, Damascus, Ph: 221 3966
PO Box 25414

 
 
(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)
 
 
இந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers) கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில் ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌ ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌ புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌ புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக் கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின் ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.
 
 
 
இந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்கத்தின் ஓரங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds of the ayat (verses) of the Qur'an have some type of variant).
 
 

10page.jpg

 
 
எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].
 
 
  1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.
  2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.
  3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.
  4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.
  5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.
  6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.
  7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.
 
 
மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
 
 
முடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:
 
 
 

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... இந்த அல்லாவின் புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

 
 
நான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகிவிட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.

பின் குறிப்புக்கள்: 
[1] How and Why Uthman Standardized the Qur'an. 
[2] The Origin of the Different Readings of the Qur'an. 
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff. 

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்: 
மூல குர்‍ஆன் சமர்கண்ட வுடன், இன்றைய அரபிக் குர்‍ஆன் ஒரு ஒப்பீடு - பாகம் 1 
Grammatical errors in the Hafs transmission of the Qur'an. 
Sunan Abu-Dawud Book 30: Dialects and Readings of the Qur'an
ஆசிரியர் உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறார், தொடர்பு கொள்க: 
Copyright © Samuel Green 2005. 
சாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்

குர்‍ஆன் சம்மந்தப்பட்ட இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/authors/green/seven.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an

 
குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்
 

Scribal errors in the Qur'an
 

கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்‍ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.
 
 

 

(2)(1)(2)(1)
scribal.gif

 

 
 
மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது. 

 
 
மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a). 

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்‍ஆன் வசனம் 27:21 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph. 

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்‍ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d). 

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்‍ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19and the last half of page 125.
 
 
மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.

பி. நியூட்டன் அவர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்

 

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்

The 45 Bonus Questions for Muslims

இஸ்லாமியர்கள் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்று முஹம்மது விரும்பிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை நாம் கீழே கொடுத்துள்ளோம். அதாவது பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சந்திர கடவுள் பற்றிய விவரங்களை சிறிது மாற்றி தன்னுடைய இராணுவ பள்ளிக்கூடத்தில் அறிமுகம் செய்தார் முஹம்ம்து.

கேள்வி 1: அல்லாஹ் என்ற வார்த்தையை குர்‍ஆன் வரையறுக்கின்றதா?

பதில்: இல்லை. 

கேள்வி 2: "அல்லாஹ்" என்ற வார்த்தை முதன் முதலில் குர்‍ஆனில் மட்டும் காணப்பட்டதா?

பதில்: இல்லை. 

கேள்வி 3: குர்‍ஆன், தன்னை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே "அல்லாஹ்" பற்றிய அறிவு உண்டு என்பதை கருதியுள்ளதா?

பதில்: ஆம். குர்‍ஆனை படிப்பவர்களுக்கு அல்லாஹ் என்ற பெயர் பற்றி தெரியும் என்று குர்‍ஆன் நம்புகிறது. 

கேள்வி 4: முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு, இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபிய சரித்திரத்தில் அல்லாஹ் பற்றி நாம் படிக்கவோ,தெரிந்துக்கொள்ளவோ முடியுமா?

பதில்: ஆம், முடியும். 

கேள்வி 5: இஸ்லாமிய சரித்திரத்தின்படி, முஹம்மது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை. 

கேள்வி 6: முஹம்மது ஒரு யூத குடும்பத்தில் அல்லது யூத வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை. 

கேள்வி 7: முஹம்மதுவின் குடும்பம் மற்றும் வம்சத்தினர் பின்பற்றிய மதம் எது?

பதில்: பல தெய்வ வழிப்பாடு (பேகன் - Pagan) 

கேள்வி 8: பல தெய்வங்களை வணங்கிய முஹம்மதுவின் தந்தையின் பெயர் என்ன?

பதில்: அப்துல்லாஹ் (அப்த் + அல்லாஹ்) = அல்லாஹ்வின் அடிமை 

கேள்வி 9: மக்காவின் பல தெய்வ வழிபாடு விழாக்களில் நிகழ்ச்சிகளில் முஹம்மது பங்கு பெற்றாரா?

பதில்: ஆம், பங்கு பெற்றார். 

கேள்வி 10: இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் அரபியர்கள் 360 தெய்வங்களை வணங்கினார்களா?

பதில்: ஆம் 

கேள்வி 11: பேகன் (பழங்குடி) அரபியர்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 12: அந்த அரபியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 13: பல்வேறு வகையான அரபியர்கள் அந்த சந்திர கடவுளுக்கு பலவகையான பெயர்களை கொடுத்திருந்தார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 14: அவர்கள் வைத்திருந்த அந்த பெயர்கள் என்னென்ன?

பதில்: சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் (Sin, Hubul, Ilumquh, Al-ilah) 

கேள்வி 15: அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம். 

கேள்வி 16: அல்லாஹ் என்ற வார்த்தை "அல் இலாஹ்" என்பதிலிருந்து வந்ததா?

பதில்: ஆம். 

கேள்வி 17: பழங்குடி அரபியர்கள் "அல்லாஹ்வை" மற்ற எல்லா சிலைகளை விட உயர்வாக எண்ணினார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 18: இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளை காபாவில் அவர்கள் தொழுதுக்கொண்டார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 19: அல்லாஹ் என்பது மக்கா அரபியர்கள் வணங்கும் அனேக கடவுள்களில் இதுவும் ஒன்றா?

பதில்: ஆம். 

கேள்வி 20: காபாவின் மேலே ஹுபுல் என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 21: அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்களா?

பதில்: ஆம் 

கேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா? 

பதில்: ஆம். 

கேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா?

பதில்: ஆம். 

கேள்வி 24: அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா? 

பதில்: ஆம். 

கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா? அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா? 

பதில்: ஆம். 

கேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா? 

பதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78) 

கேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா? 

பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80). 

கேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா? 

பதில்: ஆம். 

கேள்வி 30: ஒரு சமயத்தில் குர்‍ஆன் அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா? 

பதில்: ஆம் (பார்க்க குர்‍ஆன் 53:19-20) 

கேள்வி 31: தற்கால குர்‍ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா?

பதில்: ஆம். 

கேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன? 

பதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

கேள்வி 33: அக்காலத்திலே, பழங்குடி மக்களிடையே "சந்திர கடவுளை" குறிக்கும் ஒரு சின்னமாக "பிறை நிலா" கருதப்பட்டு இருந்ததா? 

பதில்: ஆம். 

கேள்வி 34: அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக "பிறை" இருந்ததா?

பதில்: ஆம். 

கேள்வி 35: இதே போல, அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம். 

கேள்வி 36: அக்காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் "ஒரு பிறை, அதன் பக்கத்தில் நட்சத்திரங்களைக் கொண்ட சின்னத்தை" தங்கள் மத நம்பிக்கையின் சின்னமாக பயன்படுத்தினார்களா?

பதில்: இல்லை. 

கேள்வி 37: சிலைகளை வணங்கும் பழங்குடி மக்களின் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இஸ்லாம் தன்னுடைய மத சின்னமாக எடுத்துக்கொண்டதா?

பதில்: ஆம். 

கேள்வி 38: பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் சிலை வணக்கத்தின் (பேகன்-Pagan) பெயர்களையும், சின்னங்களையும், மத சடங்குகளையும், கோவில்களையும் தன்னுடமையாக்கிக் கொண்டதா?

பதில்: ஆம். 

கேள்வி 39: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தாங்கள் பின்பற்றும் சடங்குகள், சின்னங்கள் போன்றவைகளின் பின்னணி தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 40: இந்த இஸ்லாமியர்கள் தங்களின் சடங்குகள், மற்றும் மத காரியங்களின் பின்னணி சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்தது என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்களா?

பதில்: ஆம். 

கேள்வி 41: சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்த இஸ்லாம், ஆபிரகாமின் மார்க்கமாக இருக்கமுடியுமா? 

பதில்: இல்லை. 

கேள்வி 42: அப்படியானால், இஸ்லாம் என்றால் என்ன?

பதில்: புராதன காலத்தில் பழங்குடி மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த மதத்தின், இன்னொரு பெயர் தான் இஸ்லாம். 

கேள்வி 43: குர்‍ஆன் அல்லாஹ் என்பவர், கிறிஸ்தவர்களின் பிதாவாகிய தேவனா? குமாரனா அல்லது பரிசுத்த ஆவியானவரா?

பதில்: இல்லை 

கேள்வி 44: முஸ்லிம்களின் "அல்லாஹ்" தான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று யூதர்கள் நம்புகிறார்களா, சொல்கிறார்களா?

பதில்: இல்லை. 

கேள்வி 45: அப்படியானால், அல்லாஹ் யாருடைய இறைவன்?

பதில்: பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ். 

ஆங்கில மூலம்: The 45 Bonus Questions for Muslims: (Part2) 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?

சூரா ஹப்த் மற்றும் க்ஹல்

உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்

Surata al-Hafd and al-Khal’(from Ubayy ibn Ka`b’s Qur’an codex)

குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை இப்னு கஅப் ” என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.

இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.

Surat al-Hafd

You (alone) we worship,
and to You (alone) we pray and lie prostrate,
and to You (alone) we proceed and have descendants.
We fear Your torture and hope for Your mercy.
Truly Your torture will overtake the infidels.
உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்

Surat al-Hafd

O Allah, You (alone) we ask for help and forgiveness.
We speak appreciatingly of Your goodness.
Never do we disbelieve You.
We repudiate and disbelieve anyone who follows immorality.
ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம்
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.

மூலம்: 1) THE CODICES OF IBN MAS’UD AND UBAYY IBN KA’B 2) Surata al-Hafd and al-Khal’


மூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:

குர்‍ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்‍ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.

1. Evidence of Change Before ‘Uthman

உஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்‍ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்

ஏன் உஸ்மான் மற்ற குர்‍ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார்? இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார்? இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை? உஸ்மான் தொகுத்த குர்‍ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்‍ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது?

2. Evidence of Change After ‘Uthman

உஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்‍ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்

3. Hadiths which say the Qur’an is incomplete

குர்‍ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்

குர்‍ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.

Some Muslims are of the conviction spurious verses have been added:

4. Hadiths which refer to lost suras

தொலைந்துப்போன குர்‍ஆன் அத்தியாயங்கள்

தற்போதையை குர்‍ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்‍ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.

5. Variants which exist in present-day manuscripts

நம்மிடமுள்ள குர்‍ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்

குர்‍ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்‍ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

Source: http://www.answering-islam.org/Quran/Text/index.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sana'a manuscripts

http://en.wikipedia.org/wiki/Sana'a_manuscripts 

From Wikipedia, the free encyclopedia
 
 
Sana'a Qur'an parchments

The Sana'a manuscripts, found in Yemen in 1972, are considered by some to be the oldest existent version of the Qur'an.[1] Although the text has been dated to the first two decades of the eighth century (i.e. 70 or so years after the death of the Islamic ProphetMuhammad), carbon-14 tests indicate that some of the parchments in this collection date back to the 7th and 8th centuries.

Contents

  [hide

[edit]Discovery and assessment

In 1972, construction workers renovating a wall in the attic of the Great Mosque of Sana'a in Yemen came across large quantities of old manuscripts and parchments. They didn't realize what they had found and gathered up the documents, packed them away into some twenty potato sacks, and left them on the staircase of one of the mosque's minarets.[2]

Qadhi Isma'il al-Akwa', then the president of the Yemeni Antiquities Authority realized the potential importance of the find. Al-Akwa' sought international assistance in examining and preserving the fragments, and in 1979 managed to interest a visiting German scholar, who in turn persuaded the West German government to organize and fund a restoration project.[2]

Carbon-14 tests date some of the parchments to 645-690 AD.[3] This period may be quite long, especially if the parchment is re-used, a common practice in ancient times. Calligraphic datings have pointed to 710-715 AD.[4] Generally, it is accepted that "no extant manuscript has been unequivocally dated to a period before the ninth century on the basis of firm external evidence." [5]

[edit]About the manuscript

The above piece of the palimpsest codex shows two layers of script. Both scripts are of the Hijazi type: Firstly, a dark brown script is part of surah 20:1-10 (surah Taahaa or al-kamiyl).

Secondly, with some patience you will realize that under the dark brown script traces of a light brown script are recognizable. This latter original script was washed off from the parchment so that it might be used again. The chess board-like pattern of the substrate is an artifact of the scanning procedure.

Without applying special technical means the older script is not readable, but it is undoubtedly a Qur'anic text, too. This is to be seen easily by a peculiarity of both layers of writing: The washed off script as well as the second writing display verse separators, i.e. some simple geometrical point patterns. Even in the above small piece of the palimpsest one may recognize such separators in both layers of writing. Additionally at least one separator of surahs (two parallel lines crossing the page from right to left, again with some patterns between them) clearly can be recognized in the original script of the palimpsest codex (to be seen in the above piece). Such separators were used only in Qur’ans. There seems to be not any exception in non-Qur'anic texts within other early-Islamic writings.

Why the older layer was wiped out cannot be said definitely until it can be read in detail. This doesn't necessarily imply an alteration of the very text, since the formative period of the Qur'anic text already may have been completed, when the first script was written. Most probably the arrangement of the surahs was altered. And this hypothesis is corroborated by the fact that amongst the findings in Sanaa there are indeed Qur'ans with an arrangement of surahs different from the transmitted Qur'an.

[edit]Restoration project

Restoration of the manuscript has been organized and overseen by Arabic calligraphy and Koranic paleography specialist Gerd R. Puin of Saarland University, in Saarbrücken, Germany. Puin has extensively examined the parchment fragments found in this collection. It reveals unconventional verse orderings, minor textual variations, and rare styles of orthography and artistic embellishment. Some of the manuscripts are rare examples of those written in early Hijazi Arabic script. Although these pieces are from the earliest Qur'an known to exist, they are also palimpsests -- versions written over even earlier, scraped-off versions.[2]

A substantial amount of material has been retrieved from the site, as the work continues. From 1983 to 1996, around 15,000 of 40,000 pages were restored, including 12,000 parchment fragments some dating to the 8th century.[6]

In 1999, Toby Lester, the executive editor of the website of The Atlantic Monthly reported on Puin's discoveries: "Some of the parchment pages in the Yemeni hoard seemed to date back to the seventh and eighth centuries A.D., or Islam's first two centuries—they were fragments, in other words, of perhaps the oldest Korans in existence. What's more, some of these fragments revealed small but intriguing aberrations from the standard Koranic text. Such aberrations, though not surprising to textual historians, are troublingly at odds with the orthodox Muslim belief that the Koran as it has reached us today is quite simply the perfect, timeless, and unchanging Word of God." [2]

[edit]Yemeni attitudes

More than 15,000 sheets of the Yemeni Qur'ans have been flattened, cleaned, treated, sorted, and assembled. They await further examination in Yemen's House of Manuscripts. Yet that is something Islamic authorities seem unwilling to allow. Puin suggests, "They want to keep this thing low-profile, as we do, although for different reasons."[2]

Puin, and his colleague Graf von Bothmer, an Islamic historian, have published short essays on what they discovered. Von Bothmer, however, in 1997 shot 35,000 microfilm pictures of the fragments, and has brought the pictures back to Germany. The texts will soon[clarification needed] be scrutinized and the findings published freely. Puin wrote: "So many Muslims have this belief that everything between the two covers of the Qur'an is Allah's unaltered word. They like to quote the textual work that shows that the Bible has a history and did not fall straight out of the sky, but until now the Qur'an has been out of this discussion. The only way to break through this wall is to prove that the Qur'an has a history too. The Sana'a fragments will help us accomplish this."[1][2]

[edit]Puin's comments and conclusions

In a 1999 Atlantic Monthly article, Gerd Puin is quoted as saying that:[2]

My idea is that the Koran is a kind of ****tail of texts that were not all understood even at the time of Muhammad. Many of them may even be a hundred years older than Islam itself. Even within the Islamic traditions there is a huge body of contradictory information, including a significant Christian substrate; one can derive a whole Islamic anti-history from them if one wants. The Koran claims for itself that it is 'mubeen,' or 'clear,' but if you look at it, you will notice that every fifth sentence or so simply doesn't make sense. Many Muslims—and Orientalists—will tell you otherwise, of course, but the fact is that a fifth of the Koranic text is just incomprehensible. This is what has caused the traditional anxiety regarding translation. If the Koran is not comprehensible—if it can't even be understood in Arabic—then it's not translatable. People fear that. And since the Koran claims repeatedly to be clear but obviously is not—as even speakers of Arabic will tell you—there is a contradiction. Something else must be going on.[7]

[edit]Responses

In 2000, The Guardian interviewed a number of academics for their responses to Puin's claims, including Dr Tarif Khalidi, and Professor Allen Jones, a lecturer in Koranic Studies at Oxford University. In regard to Puin's claim that certain words and pronunciations in the Koran were not standardized until the ninth century, the article notes.[1]

Jones admits there have been 'trifling' changes made to the Uthmanic recension. Khalidi says the traditional Muslim account of the Koran's development is still more or less true. 'I haven't yet seen anything to radically alter my view,' he says. [Jones] believes that the San'a Koran could just be a bad copy that was being used by people to whom the Uthmanic text had not reached yet. 'It's not inconceivable that after the promulgation of the Uthmanic text, it took a long time to filter down.'

However, the article notes some positive Muslim reaction to Puin's research. Salim Abdullah, director of the German Islamic Archives, affiliated to the Muslim World League, commented when he was warned of the controversy Puin's work might generate –"I am longing for this kind of discussion on this topic." [1]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குரானா? இல்லை குரான்களா?

 
இஸ்லாமிய மத பிரச்சாரகர்களால் ஆணித்தரமாக கூறப்படும் இன்னொரு விஷயம் எங்கள் மத புத்தகம் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருக்கிற்து.
இறைவனால் வழங்கப்ப்ட்ட முந்தைய வேதங்கள் எல்லாம் மாறி விட்டன.இது இறுதி வேதம் என்பதால் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது. இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆராய்வோம்.
___________
இஸ்லாமியர்களின் குரான் வரலாறு
1.ஜிப்ரீல் என்னும் வானவர் திரு முகமதுக்கு 610 ல் இருந்து 632 வரை இறை செய்தி வழங்கினார்.முகமது எழுதப் படிக்க தெரியாதவர்.ஜிப்ரீல் சொன்னதை ஞாபகத்தில் வைத்து தன்னை பின் பற்றியவர்களுக்கு கூறி அவர்களையும் மனன்ம் செய்ய வைத்தார்.குரான் வசனங்கள் வெளிப்படும்போதெல்லாம் அதனை சிலர் தோல் சுருள்,எலும்புகள்,தகடுகள் போன்றவற்றில் எழுதி வைத்தனர்.
2. முகம்துக்கு பிறது அபு பக்கர் ,உமர்,உதுமானால் குரான் மன‌னம், செய்த எழுதி வைத்தவர்களிடம் இருந்து பெற்று ஒரே புத்தகமாஅக தொகுக்கப் பட்டது.
3.  அந்த புத்தகம்தான் உலக முஸ்லிம்கள் அனைவராலும் இன்று வரை பின் பற்ற‌ப் பட்டு வருகிறது.
__________
மேலே கூறிய விவரங்களின் நமபகத்தன்மை குறித்து வரும் பதிவுகளில் ஆராய்வோம். இந்த ஹதிதுகள்(புஹாரி) மேலே கூறிய கருத்துகளை பிரதி பலிக்கிறதா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
_______________
4986. (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார் 
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால்குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) .
(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129) 
(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 
Volume :5 Book :66
_____________
4984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 
(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறையுயரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறையுயரின் மொழி வழகம்லேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். 
Volume :5 Book :66
___________________


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். 
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். 
Volume :5 Book :66
__________________
4989. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார் 
(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். 
மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)13 
Volume :5 Book :66
_________________


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2807. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) 


6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
........................
.............................
அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)
நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
அறிந்துகொள்ளுங்கள்:
....................................

Volume :7 Book :86
இங்கே நாம் சொல்வது இபோது உல்க மக்கள் அனைவரும் ஒரே குரானையே அதாவது எல்லா உலகில் பயன்படுத்தப் படும் குரான்களும் ஒரு புள்ளி ,கோடு கூடமாறாமல் அப்படியே ருக்கிறது என்பது தவறு என்பதை மட்டும்தான்.  
உதுமான் மற்ற குரான்களை அழித்துவிட உத்தரவிட்டார் என்பதை இந்த ஹதிது கூறுகிறது.
_________
உதுமான் மற்ற‌ பிரதிகளை அழிக்க உத்தரவிட்டதின் காரணம் என்ன? 
பிற குரான் பிரதிகள் உதுமான் குரானில் இருந்து வேறுபட்டு இருந்திருக்க வேண்டும். இந்த ஹதிதுகளை பற்றி நிறைய விவாதிக்க முடியும் என்றாலும் நான் எனது கருத்துகளாக எதையும் கூறுவதை விட உங்களுக்கு தகவல்கள் அளித்து உங்களுக்கு சரியென்று படும் கருத்தையெ ஏற்றுக் க்ள்ளுமாறு கூறுகிறேன்.
உதுமான் குரான் ஹாஃப் குரான் என்று அழக்கப் படுகிறது இந்தியாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் இப்பிரதியே பயன் படுத்தப் படுகிறது.
இன்னும் சில குரான்கள்களை அழிக்காமல் பயன் படுத்தப் படுகின்றன என்றால் இந்த உதுமான் குரானில் இருந்து வேறு பட்ட குரான்கள் இப்போதும் உலகில் பயன் படுத்தப் பட்டு வருகின்றன.அதனை பற்றிய ஆய்வு செய்த திரு ஆலன் அட்ரியம் ப்ராக்கட்(Adrian Alan Brockett) என்பவரின் ஆய்வுக் கட்டுரையும் வார்ஸ் குரான் எனப்படும் ஒரு குரான் மின் பிரதியும் உங்களுக்கு அளிக்கிறேன்.
.இந்த வார்ஸ் குரான் பற்றி ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரையும் அதற்கு மறுப்பாக இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த விளக்கத்தின் சுட்டியும் அளிக்கிறேன்.
இந்த ஹாஃப் மற்றும்  வார்ஸ்  குரான்கள் பற்றியுமவைகளில் உள்ள  வித்தியாசங்கள் பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய கட்டுரை இது. ஆனால் இது குரான் முட்டும் என்ற இஸ்லாமிய பிரிவை சேர்ந்த அறிஞர்.(இவர்களை பற்றி தனி பதிவு இடுவேன்)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


இந்த வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில்(அல்ஜீரியா,சுடான்,லிபியா) போன்ற நாடுகளில் இன்றும் பயன் படுத்தப் படுகிறது.இந்த வித்தியாசமான வேத மூல பிரதிகள் எல்லா மதங்களிலும் உண்டு.ஒரு கருத்து பரவும் போது அது பல வித்தியாசமான் மாற்றங்களை அடைவது வரலாற்றில் மிக இயல்பான செயல்.

யேமன் நாட்டின் சானா என்னும் இடத்தில் ஒரு வழிபாட்டு இடத்தை மராமத்து செய்த போது அங்கு பல பழைய குரான் பிரதிகள் கிடைத்தன.இது குறித்து ஒரு ஆய்வாளர் ஜெரார்ட் புய்ன் புகைப்ப்ட பிரதி எடுத்து ஆய்வு செய்கிறார்.மதக் கட்டுப்பாடு காரணமாக இது குறித்து ஒரு விஷயமும் வெளி வரவில்லை.யெமன் அரசு இது குறித்து மௌனம் சாதிக்கிறது.



மதத்தை அதில் பிறந்ததற்காகவோ அல்லது ஒரு பிரச்சாரகரின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டோ அதில் சொல்லப் பட்டது எல்லாமே சரி ,அதனை காப்பாற்ற எதையும் செய்வேன் என்ற மன்ப் போக்கை எல்லாரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பம். மதத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் அதில் உள்ள நாகரிகமில்லாத விஷ்யங்களை ஒதுக்கி விடவுமே இப்பதிவுகளை எழுதுகிறேன்.
இப்பதிவில் கூறப்பட்டவற்ரை ஏதேனும் ஒரு பிரச்சாரகர் கூறியிருந்தால் எவரும் எங்கள் புத்தகம் சர்வ ரோஹ நிவாரணி என்றும் ,மதம் எங்கள் உயிரிலும் மேலானது என்று கூற மாட்டார்கள்.
     http://www.youtube.com/watch?feature=player_embedded&v=pUdyK-xAxlg



 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://saarvaakan.blogspot.in/2011/01/blog-post_22.html

சார்வாகன்!

//1.குரானின் சாமர்கண்ட் மூலப் பிரதிக்கும்,இப்போது உள்ள குரானுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இருக்கிறது 

சாஅமர்கண்ட் பிரதியில் உள்ள குரான் எழுத்து குயுஃபிக் வகை(8 ஆம் நூற்றாண்டு).ஆனால் முகமது எழுதிய கடிதம் வேறு வகையாக இருக்கிறது.ஏன்?//

மொழியின் வளர்ச்சி காரணமாக 1000 வருடங்களுக்கு முன்பு இருந்த எழுத்துக்கள் எல்லாம் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. நம் தமிழில் கூட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் நாம் பயன் படுத்தும் தற்போதய எழுத்து முறையைப் பயன் படுத்தவில்லை. சில ஓலைச் சுவடிகளை நம்மால் இன்று படிக்க முடியாது. குர்ஆன் இறங்கிய காலத்திய அரபி மொழிக்கும் தற்போதய அரபி மொழிக்கும் வித்தியாசம் இருப்பதை உணரலாம். பண்டைய காலத்தில் அரபி எழுத்துக்களில் புள்ளிகள் கிடையாது. தற்போதய உலக நாடுகளில் உள்ள குர்ஆனில் புள்ளிகள் இடப்பட்டிருக்கும். அனைவரும் சிரமம் இல்லாமல் படிப்பதற்க்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொருளில் எந்நத மாற்றமும் ஏற்பட்டிருக்காது. 'இந்த குர்ஆனின் தெளிவான வசனங்கள் கல்வி வழங்கப்பட்டோரின் உளளங்களில் இருக்கிறது.'- 29:48 என்று குர்ஆன் கூறுவதும் இதனால்தான்.

அந்த கடிதங்களை முகமது நபி எழுதவில்லை. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்ல அவரின் தோழர்கள் எழுதியதுதான் நீங்கள் குறிப்பிடும் கடிதங்கள். மேலும் குர்ஆனின் அரபி நடை மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். அதே சமயம் முகமது நபியின் போதனைகளை எடுத்துப் பார்த்தால் மிக சாதாரண நடையில் பேசப்படும் நாட்டுப்புற அரபி பாஷையாக இருக்கும். இதை அரபி மொழி தெரிந்த அனைவரும் அறியலாம். ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் இந்த வித்தியாசத்தைப் பார்க்கலாம். இதுவும் கூட முகமது நபி தனது சொந்த கற்பனையில் குர்ஆனை சொல்லவில்லை. அது இறைவனால் அருளப்பட்டது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறது.

  1. சுவனப்பிரியன் எந்த கேள்விக்குக் கொடுத்த பதில் இது? இங்கு அது பொருந்தாதது போல் தெரிகிறதே!

    Reply
     
     
  2. dhul2.jpg

    //எந்த கேள்விக்குக் கொடுத்த பதில் இது? இங்கு அது பொருந்தாதது போல் தெரிகிறதே!//

    இது உங்கள் பதிவில் உள்ள் ஒரு கேள்விக்கு அளித்த பதில்.வார்ஸ் குரான் பற்றி இதுவரை யாரும் எந்த கருத்தும் சொல்லவில்லை.வருகைக்கும்,கருத்து பதிவிற்கும் நன்றி.

    Reply
     
     
  3. dhul2.jpg

    ஆடு குரான் வசனத்தை தின்று விட்டது:திருமதி ஆயிசா முகமது
    _______
    Sunan Ibn Majah, Book of Nikah, Hadith # 1934),Sunan Ibn Majah, Volume 2, Page 39,Musnad Imam Ahmad, Volume 6, Page 269
    Narrated Aisha ‘The verse of stoning and of suckling an adult ten times were revealed, and they were (written) on a paper and kept
    under my bed. When the Messenger of Allah (SAWW.) expired and we were preoccupied with his death, a goat entered and ate away the paper.”
    ______________
    அதாகப்பட்டது,
    விபசாரத்திற்கு கல்லெறிந்து கொள்வதும்(ரஜ்கி) இன்னொரு விவகாரமான வசனமும் இறங்கியதாகவும் இந்த ஹதிது கூறுகின்றது.பொதுவாக இது ஹார்லிக்ஸ் அருந்தாத சக்திய்ற்ற ஹதிது என்று நண்பர்கள் கூறுவர்.இது அவர்கள் பாணி என்றாலும் கீழ்க்காணும் ஹதிதில் கல்லெறிந்து கொல்வது அல்லாவின் சட்டம் என்று திரு முகமது கூறி கல்லெறி தண்டனை நிறைவேற்றுகிறார்.
    ______________________
    2725. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
    கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
    Volume :3 Book :54
    ____________
    1.கல்லெறிந்து கொலவது அல்லாவின் சட்டமா?
    ஆம்/இல்லை
    2. அல்லாவின் சட்டம் குரானில் இருக்க வேண்டுமா?
    ஆம்/இல்லை
    3.அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா?அதாவது குரானின் மீதி செய்திகலை வேறு புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாமா?
    .திரு பி.ஜே கூறுகிறார் ஆம் என்று.திரு பி.ஜேதான் குரானில் கூறாத இறைசெய்தி உண்டு என்று கூறுவதை கேளுங்கள்.
    _______________

    Reply
     
     
  4. dhul2.jpg

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/
    258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
    இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்?” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.
    “அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை.
    அதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.
    “குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.
    அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.
    குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
    இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.
    முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.
    குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.
    11.07.2009. 03:28

    Reply
     
     
  5. dhul2.jpg

    Shi'i Qur'an:
    An Examination of Western Scholarship

    by Jonah Winters

    1997
    ____________
    http://bahai-library.com/winters_shii_quran#RTFToC10
    _____________
    http://en.wikipedia.org/wiki/Shia_view_of_the_Quran
    ____________
    Is the Qur’an Corrupted? 
    Shi’ites’ View 


    http://web.archive.org/web/20091027121038/http://geocities.com/noorullahwebsite/shiites.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

The 20 Versions of the Qur'an today. (7 are recorded in the Hadith.)

Qur'an of today is different than what Muhammad revealed!

Click to View

Islam: Truth or Myth? start page

 

 

The Muslim Claim that the Qur'an is unchanged:

No other book in the world can match the Qur'an ... The astonishing fact about this book of ALLAH is that it has remained unchanged, even to a dot, over the last fourteen hundred years. ... No variation of text can be found in it. You can check this for yourself by listening to the recitation of Muslims from different parts of the world. (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p 4)

Many Variant Readings of the Quran

  1. "Muslims attack the Bible on the grounds that it sometimes has conflicting wording from different manuscripts. Yet this is exactly the case with the text of the Quran. There are many conflicting readings on the text of the Quran as Arthur Jeffery has demonstrated in his book, Material for the History of the Text of the Quran" (New York, Russell F. Moore, 1952).
  2. Mentions Variant readings in the Koran: Dashti, 23 Years, p. 28
  3. Mentions Variant readings in the Koran: Mandudi, Meaning of the Quran, pp. 17-18
  4. Mentions Variant readings in the Koran: McClintock and Strong, Cyclopedia, V152).
  5. "[the Koran] had a large number of variants, not always trifling in significance" (Islam, p. 189).
  6. "It is interesting to note that in scholarly Muslim journals, there is beginning to be a grudging acknowledgment of the fact that there are variant and conflicting readings on the text of the Quran" (One example would be Saleh al-Wahaihu, "A Study of Seven Quranic Variants," International Journal of Islamic and Arabic Studies, Vol. V (1989), #2, pp. 1-57).
  7. "The Muslin accounts of the history of the Quran texts are a mass of confusion, contradiction and inconsistencies" (Burton, Collection, p. 231).
  8. "Abdollah renounced Islam on the ground that the revelations, if from God, could not be changed at the prompting of a scribe such as he. After his apostasy he went to Mecca and joined the Qoray****es" (Dashti, 23 Years, p. 98).
  9. "There being some passages in the Quran which are contradictory, the Muhammadan doctors obviate any objection from thence by the doctrine of abrogation; for they say that God in the Quran commanded several things which were for good reasons afterwards revoked and abrogated" (E. Wherry, A Comprehensive Commentary on the Qurun, p. 110).
  10. "It is to us astounding how so compromising a procedure can have been permitted to be introduced into the system by friends and foes (Canon Sell in his work, Historical Development of the Qura, Madras: Diocesan Press, 1923, pp. 36-37).
  11. "When Muhammad died there existed no singular codex of the sacred text" (Caesar Farah, Islam: Beliefs and Observations, New York; Barrons, 1987, p. 28).
  12. "One thing only is certain and is openly recognized by tradition, namely, that there was not in existence any collection of revelations in the final form, because, as long as he was alive, new revelations were being added to the earlier ones" (The Shorter Encyclopedia of Islam p. 271).

The proof the Muslim claim is false, is in this book:

Click to View

Translation of front cover:

Making Easy the Readings of What Has Been Sent Down

Author
Muhammad Fahd Khaaruun
The Collector of the 10 Readings
From Al-Shaatebeiah and Al-Dorraah and Al-Taiabah

Revised by
Muhammad Kareem Ragheh
The Chief Reader of Damascus

Daar Beirut

Click photos for enlargement

As you can see, the boxed text is the text of the Qur'an and the margins at the left and the bottom are variant readings. There are more known variants than this book includes. Even worse, there are more than readers in existence, but this book limits the variants to only these 10 readers.

Click photos for enlargement

Click to View

What Muslim and non-Muslim scholars say about the known variations/versions within the Qur'an being used in the world today:

  • "owing to the fact that the kufic script in which the Koran was originally written contained no indication of vowels or diacritical points, variant readings are recognized by Muslims as of equal authority." (N.J. Dawood, The Koran, Middlesex, England: Penguin Books, 1983, p 10, introduction to Dawood's translation of the Koran)
  • "Lists of the differences between the two transmissions are long, ... (however) The simple fact is that none of the differences, whether vocal (vowel and diacritical points) or graphic (basic letter), between the transmission of Hafs and the transmission of Warsh has any great effect on the meaning. Many are differences which do not change the meaning at all, and the rest are differences with an effect on meaning in the immediate context of the text itself, but without any significant wider influence on Muslim thought. One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications." (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, p 34,37)
  • "the Reading of Abu `Amr in the version of al-Duri ... prevails in the Sudan, Nigeria, and Central Africa." (Labib as-Said, The Recited Koran: A History of the First Recorded Version, tr. B. Weis, et al, Princeton, New Jersey: The Darwin Press, 1975, p. 84)

(C)ertain variant readings existed and, indeed, persisted and increased as the Companions who had memorised the text died, and because the inchoate (basic) Arabic script, lacking vowel signs and even necessary diacriticals to distinguish between certain consonants, was inadequate. ... In the 4th Islamic century, it was decided to have recourse (to return) to "readings" (qira'at) handed down from seven authoritative "readers" (qurra'); in order, moreover, to ensure accuracy of transmission, two "transmitters" (rawi, pl. ruwah) were accorded to each. There resulted from this seven basic texts (al-qira'at as-sab', "the seven readings"), each having two transmitted versions (riwayatanwith only minor variations in phrasing, but all containing meticulous vowel-points and other necessary diacritical marks. ... The authoritative "readers" are:

Nafi (from Medina; d.169/785)
Ibn Kathir (from Mecca; d.119/737)
Abu `Amr al-'Ala' (from Damascus; d.53/770)
Ibn `Amir (from Basra; d.118/736)
Hamzah (from Kufah; d.156/772)
al-Qisa'i (from Kufah; d.189/804)
Abu Bakr `Asim (from Kufah; d.158/778)

The predominant reading today, spread by Egyptian Koran readers, is that of `Asim in the transmission (riwayah) of Hafs (d. 190/805). In Morocco, however, the reading is that of Nafi` in the riwayah of Warsh (d. 197/812) and Maghrebin Korans are written accordingly. (Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p 324)

20 versions of the Qur'an!

Here is a list of the ten readers, each of which have two versions

 

The Readers and their Transmitted Versions

The Reader

The Transmitter

"The Seven" readers

Nafi`

Warsh

Qalun

Ibn Kathir

al-Bazzi

Qunbul

Abu `Amr al-'Ala'

Al-Duri

al-Suri

Ibn `Amir

Hisham

Ibn Dhakwan

Hamzah

Khalaf

Khallad

al-Qisa'i

al-Duri

Abu'l-Harith

Abu Bakr `Asim

Hafs

Ibn `Ayyash

"The Three" readers

Abu Ja`far

Ibn Wardan

Ibn Jamaz

Ya`qub al-Hashimi

Ruways

Rawh

Khalaf al-Bazzar

Ishaq

Idris al-Haddad

There are even more Readers than these but these are considered the most authoritative.

 

Seven different version of the Koran:

  • "What is said about Al-Mutaawwilin (those who form wrong opinions of disbelief about their Muslim brothers). Umar bin Al-Khattab said, "I heard Hisham bin Al-Hakim reciting Surat-al-Furqan during the lifetime of Allah's Apostle (SAW). I listened to his recitation and noticed that he recited it in several different ways which Allah's Apostle (SAW) had not taught me. So I was about to jump over him during his prayer but I waited till he finished his prayer whereupon I put, either his upper garment or my upper garment, around his neck and seized him by it and asked him, "Who has taught you this Sura?" He replied, "Allah's Apostle (SAW) has taught it to me." I said (to him), "You have told a lie! By Allah, Allah's Apostle (SAW) has taught me this Sura which I have heard you reciting." So I dragged him, to Allah's Apostle (SAW), I said, "O Allah's Apostle! I have heard this man reciting Surat-al-Furqan in a way which you have not taught me, and you did teach me Surat-al-Furqan." On that Allah's Apostle (SAW) said, "O Umar, release him! Recite, O Hisham." So Hisham recited before him in the way as I had heard him reciting. Allah's Apostle (SAW) said, "It has been revealed like this." Then Allah's Apostle (SAW) said, "Recite O Umar." So I recited it. The Prophet (SAW) said, "It has been revealed like this." And then he added, "This Quran has been revealed to be recited in seven different ways, so recite it which ever way easier for you." (See Hadith No. 514 Vol. 6) Vol. 9 - Apostates - Chapter 9 27/30)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பாருங்கள் குரான் 3.7 அல்லாஹ் மட்டுமே பொருள் அறிந்த இரக்சிய வசனங்கள் குரானில் உண்டு என்பதை, அண்ணன் அல்லாஹ் மட்டுமல்ல் அறிவிடையாருக்கு மட்டும் என்று அழகிய வழியில் திரிப்பதை பாருங்கள்.

அண்ணன் மட்டுமே அறிவுடையோர் [அலது அண்ணனை தவிர அறிவுடையோர் எவருமில்லை] என்பது அவ்ருடைய சீடர்கள் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை.

அல்லாவுக்கு மட்டும் தெரிவது அண்ணனுக்கும் தெரியும் என்றால் என்ன அர்த்தம்?. விளக்குங்கள்.

யார் உளருவது என புரியும்.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/86-iru-porul-tharum-varthaikal/

குரானில் இருப்பதை மொழி பெயர்ப்பதா இல்லை .எப்படி மொழி பெயர்த்தால் சரியாக் வருமோ அப்படி மொழி பெயர்ப்பேன் என்றால் என்ன? விளக்குங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. பகடு says:

    தம்பிகளுக்கெல்லாம் அண்ணன் தவ்ஹீத் அண்ணனின் தம்பிகள் ரெண்டு பேர் ஹதீஸ் பொய் என்று நிரூபிக்கும் தெறமையை கண்டு கை தட்டலாம் வாருங்கள்.

    http://onlinepj.com/bayan-video/vivathangal/ajva_pazam_hadees_sariyanatha/

    கருஞ்சீரகத்தை சாப்பிட்டால், சாவு தவிர எல்லாவற்றுக்கும் மருந்து என்பதும் அஜ்வா பழத்தை சாப்பிட்டால் விஷமுறிவு என்பதும் பொய்யான ஹ்தீஸாம்.

    ஏன் என்றால், அஜ்வா பழத்தை சாப்பிட்டுவிட்டு விஷத்தை சாப்பிட்டால் ஆள் நிச்சயம் காலி. அப்படிப்பட்ட ஒரு தப்பான விஷயத்தை நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்க மாட்டார். அதனால் அது பொய்யான ஹதீஸ்… சூப்பர்ல?

    இதில இன்னொரு சூப்பர் டூப்பர் ஜோக்கும் இருக்கு. இப்ராஹிம் ஒரு மன்னன்கிட்ட போய் சொன்னாராம். என்னோட இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்க வைக்கிறான். மேற்கில் மறைய வைக்கிறான். உன்னுடைய இறைவனை வேண்டுமெண்டால், சூரியனை மேற்கில் உதிக்க வை. கிழக்கில் மறைய வை. நான் உன் இறைவனை ஒத்துகொள்கிறேன் என்று சொல்லி இஸ்லாத்தை நிலை நாட்டினாராம்.

    அந்த மன்னன், லே. நான் தாண்டா கிழக்கில சூரியனை உதிக்க வைக்கிறேன். மேற்கில மறைய வைக்கிறேன். உன்னோட அல்லாவை வேண்டுமானா சூரியனை மேற்கில உதிக்க வைக்கச் சொல்லு, கிழக்கில மறைய வைக்கச் சொல்லு நா உன்ற அல்லாவை ஒத்துகிடறேன்னு சொல்லியிருந்தா இப்ராஹிம் என்ன சொல்லியிருப்பார்?

    இந்த எழவை அல்லாவே சொல்லிக்கிராராம் அல்குரான்ல…

     
  2. பகடு says:

    சார்வாகன்
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/86-iru-porul-tharum-varthaikal/

    அண்ணன் சொல்கிறார்.

    ஒரு நபருக்கு கூட புரியாத வசனங்கள் குரானில் இருந்தால் அது உளறல் என்றே கருதப்படும்.

    இது ஓக்கே..
    அடுத்து

    நபிகள் நாயகத்துக்கு காலத்து எதிரிகள் இது போன்ற வசனங்களை காட்டி “முகம்மது உளறுகிறார்” என்றே நிலைநாட்டி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை

    என்கிறார்.
    இங்கணதான் நம்ம தவ்ஹீத் அண்ணன் அல்குரானுக்கே மாறுபட்டு புளுக ஆரம்பிக்கிறார்.
    ஒன்று முகம்மது உளறுகிறார் என்று சொன்னவர்களை எல்லாம் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா தீர்த்துகட்டினார் என்பதை தவ்ஹீத் அண்ணன் கூறவில்லை.
    இரண்டாவது, முகம்மது உளறுகிறார் என்று மற்றவர்கள் சொன்னது அல்குரானிலேயே இடம் பெற்றிருக்கிறது.
    6:33 , 10:41 35:4 Q. 34:8; 42:24 16:24 16:101 38:4 44:14 Q. 34:46; 37:36; 68:2, 51



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

samurai says:

//2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.//

இப்ராஹிம் என்னும் பெயர் வைத்தவர் அனைவரின் விவாதமும் இப்படித்தான் இருக்குமோ!!!!!!!!!

அப்புறம் இந்த கிறித்தவ் காஃபிர் ஜெர்ரி தாமஸ் என்னமோ குரான் முழுமை பெறவில்லை என தானே கண்டுபிடித்தாதாக் ஒரு பதிவு போட்டு பீற்றுகிறார்.
http://www.sak****imes.org/index.php?option=com_content&task=view&id=569&Itemid=42
இதையும் தவுகீத் அண்ணன் அழகிய முறையில் “குரானில் சொல்லாத‌ வஹியும் உண்டு” என ஆணித் தரமாக் அன்றே கூறிவிட்டார் என்பதை அறியாத வீண் பிதற்ற‌ல் என்றே கூறலாம்.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/
258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்?” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.
“அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை.
அதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.
“குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.
அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.
குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.
முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.
குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

S.Ibrahim says:

கருஜீரகத்தைப் பற்றி முஹம்மதுநபி [அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்கள் கூறிய பல ஹதித்கள் உள்ளன.அதை கேட்டு அந்த மருந்தை உபயோகித்து உள்ளனர்.
விஷமுறிவு பற்றிய ஹதித் நிலை சரியன்று என்று பீஜே அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கருத்து தெரிவித்து உள்ளார்.

saarvaakan says:

சகோ இப்ராஹிம்
உங்களுக்கு அமைதி உண்டாவதாக‌
//ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த இமாம் குர்துபி அவர்களும் அவ்வாறு அர்த்ஹம் செய்துள்ளார்கள்.மேலும் தப்சீர் இப்னுகதிர் யிலும் இரண்டு அர்த்தங்களும் சொல்லப்பட்டுள்ளது//

இதன் சுட்டிகள் அளிக்க இயலுமா.நான் தேடி கருத்திடால் அதற்கு மறுப்பு சொல்வீர்கள் என்பதால்தான் கேட்கிறேன்.

குரான் 3.7 கூறுவது என்ன?

//3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.//

குரான் வசனம் இரு பொருள் கொடுக்குமா,அப்படியெனில் குழப்பம் அல்லவா ஏற்படும்,அல்லாஹ் இப்படி குழப்பம் செய்யலாமா!.இத்னால் எத்த்னை கலவரம் ,உயிர் இழப்பு!!!!!
விள்க்குங்கள் இபின் கதிர் கொண்டு

naren says:

இ.சா.

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

இந்த வசனத்தின் படி வசனம் 3:7 மாற்றப்பட்டிருக்குமோ?? ஆராய்ச்சிதான் செய்யவேண்டும்.

naren says:

மார்க்க அறிஞர் இ.சா.

கீழே உள்ள சொத்துரிமை வசனங்களை எளிய முறையில் இமாம்களின் உதவியில்லாமல் விளக்கவும்
இதில் எந்த வசனம் முதலில் வந்தது, பின்னர் வந்த எந்த வசனத்தால் நீக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவும்.
நீக்கப்பட்ட வசனம் எப்படி குரானில் இருக்கின்றது என்பதை விளக்கவும். அது அல்லாவால் மறந்து மறக்க செய்யப்பட்டிருக்குமே.
பாகத்தையெல்லாம் கூட்டினால் ஒன்றுதானே வரும்? இல்லை நாம் படிக்கும் கணிதம் தப்பா?

பதில் அளித்தால் நீங்க மார்க்க அறிஞர்? இல்லை என்றால் நீங்கள் தமாஷ் அறிஞர்

=======================================================
4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.

4:8. பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.

4:9. தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.

4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.

4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

4:12. இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ – இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் – (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. பகடு says:

    அல்குரானில் ஒரு பக்கம் முரண்பாடே இல்லைன்னு காககககே சொல்லுவார். அப்புறம் முரண்பாடுன்னு ஆளாளுக்கு வ்ந்து சொன்னதும், லே நான் கடைசியில சொன்னதை எடுத்துக்கடான்னு சொல்லி இத எறக்கிட்டார்.

    2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

    இப்படி பொலம்பியும் அவர் மீது உங்கள் மனது இரங்கவே இல்லையா?

     
  2. முஹம்மது பைஸல் says:

    /அல்குரானில் ஒரு பக்கம் முரண்பாடே இல்லைன்னு காககககே சொல்லுவார். அப்புறம் முரண்பாடுன்னு ஆளாளுக்கு வ்ந்து சொன்னதும், லே நான் கடைசியில சொன்னதை எடுத்துக்கடான்னு சொல்லி இத எறக்கிட்டார்.//

    நச்சென்று சொல்லிவிட்டீர்கள்.

    குரானை அல்லாஹ் கொடுத்தார் என்று நம்புபவன் மடையன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

//அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர்//

அல்லாஹ் குறித்த அடிப்படை கட்டுமானம், அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.

குர் ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள்.

39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him! (Translated by Yusuf Ali - http://www.islamawakened.com/Quran/39/67/default.htm)

39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் 1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (பிஜே தமிழாக்கம் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/assumar/) 

உருவமில்லாத ஒன்றிற்கு எப்படி கைகள் இருக்கக்கூடும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

//இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்//

குரான் பாதுகாக்கப்பட்டது அல்ல, பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் குர்ஆனில் இருந்தே 

16:101 When We substitute one revelation for another,- and Allah knows best what He reveals (in stages),- they say, "Thou art but a forger": but most of them understand not.

16:101 ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

இந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.

மூன்று கால் நண்பர்களே இந்த வசனம் உண்மையா? பொய்யா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கும்மி said...

@abdullah

39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him!

55:33 O ye assembly of Jinns and men! If it be ye can pass beyond the zones of the heavens and the earth, pass ye! not without authority shall ye be able to pass!

How do you mean heaven as universe?

If you mean heaven as universe, what is the need to specify earth, which is a part of universe, separately in each of these verses?

Why do muslim scholars correlate Heaven with sky?

//The second universe surrounds our universe. The third universe is larger than the second, and so on. More accurately, our universe should be considered the seventh universe, surrounded by the sixthuniverse, which is surrounded by the fifth universe, and so on. //

Which scientific body declared the number of universes as 7 and from where did you infer the above statement?


//God's greatness is represented not only by the fact that He holds the seven universes in His hand, but also by the fact that He fully controls every atom, even subatomic components, everywhere in the greater universe//

Basic question here is, how a shapeless entity can have hands?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சார்வாகன் said...

@suvanppiriyan
/முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?/
ஹதிதுகள் என்று ஒன்று வரப் போகிறது என்று முகமதுவிற்கோ,குரானை அவருக்கு சொன்னவருக்கோ(அப்ப்டி ஒருவர் இருந்தால்)தெரியாது.முகமது 632ல் இறக்கும் போது குரான் முழுதும் தொகுக்கப் படக் கூட இல்லை.முகமதுவை பின் பற்ற வேண்டுமெனில்

1.குரானை தொகுத்திருக்க கூடாது.
2.அச்சிட்டு இருக்க கூடாது.
3. மொழி மாற்றம் செய்யக் கூடாது.

தொகுக்கும் போது கல்லெறி[ரஜ்கி] வசனம் விட்டுப் போய் விட்டது என்று புஹாரி கூறுகிறார்.கல்லெறி தண்டனையைஅ சவுதி போன்ற அரசுகள் நிறைவேற்றுவதால் குரான் முழுவதும் தொகுக்கப் படவில்லை.குரானில் சொல்லாத இறை செய்தி உண்டு என்று பி.ஜேவும் ஒத்துக் கொள்கிறார்.
**********
சுவனப் பிரியன் கூற்றுப்படி முகமதுவை பின் பற்றுங்கள் என்றால் முகமது சொன்னதாக புகாரி, முஸ்லிம்,போன்றவர்கள் தொகுத்தவ்ற்றை பின்பற்ற வேண்டும்.இன்னும் கூட இம்மாதிரி விளக்கம் கொடுப்பவர்களையும் நம்ப வேண்டும்.
அபாரம் !!!!!!!!!!!!!

அப்ப இப்படிக்கா வாங்க !!!!!!!!!!!
/4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்./

குரான் 4.24 தற்காலிகத் திருமணம்[முட்டா] செய்ய அனுமதி தருகிறது.ஹதிதுகளின் மூலம் அதனை வஹாபிகள் நிராகரிக்கின்றனர்.(அவர்கள் மிஸ்யார் என்று அனுமதிப்பது வேறு பிரச்சினை.)

குரானுக்கு விரோதமான ஹதிது நிராகரிப்பு .ஆகவே குரானின் படி இஸ்லாமியர்கள் தற்காலிகத் திரும்ண‌ம் செய்யலாம்.

சார்வாகன் said...

/கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. /
வணக்கம் அது ஒன்றுமில்லை.
குரான் 4.24 ஐ ஷிய முஸ்லிம்கள் தற்காலிக‌த் திருமணத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்கள்.தற்காலிக திருமணத்தில் திருமனத்தின் கால அலவு குறிப்பிடப் படும் என்ற ஒரு வித்தியாசம் தவிர சாதாரண திருமணத்திற்கும் அதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.சாதாரண‌ திருமண‌த்திலும் மனைவி பிடிக்கவில்லையென்றாலோ,வேறு திருமணம்(4க்குள்) செய்ய வேண்டுமெனில் எளிதாக இரத்து செய்ய்லாம்.இன்னொரு திருமணம் செய்ய மனைவிக்கு அறிவிக்க கூட தேவையில்லை.குடும்பத்திலேயே ஜனநாயகம் இல்லை.இதில் முட்டா மட்டும் தவறு என்று வாதிப்பது சரியல்ல.இது குறித்த ஷியா முஸ்லிம்களின் விளக்கம்.
http://www26.brinkster.com/sdolshah1/muta.html
************

/அந்த காணொளியில் சாகீர் நாயனின் பதிலில் கணிதம் சொல்லித்த்ருகிறார், அது calculus விட கடினமாக இருக்கிறது சார்வாகன் தான் விளக்க வேண்டும்./

2+2 =4 என்பது முழு எண்களின் கூட்டுத்தொகையை குறிப்பதாக இருந்தால் மட்டுமே சரி.நான்கு வேதிப் பொருள்கலை கல்ந்து ஒரு வேதிப் பொருள் தயாரித்தால் 2+2=1 ஆகிறது.ஜாகிர் நாயக் இந்த உவமை ஏன் இஸ்லாமுக்கு மட்டும் பொருந்தும் என்ப்தை கூறவில்லை.இவருடைய விளக்கம் அனைத்துமே இப்படித்தான் இருக்கும்.பாருங்கள் எங்கள் நாடு என்று இஸ்லாமிய நாடுகளையே அழுத்தி கூறுகிறார். கொடுமை.இந்த காணொளியில் ஜாகீரை நன்றாக கிண்டல் அடிக்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=elkUNDATKSQ&feature=watch_response
http://www.youtube.com/watch?v=dMWdhs8qH04&NR=1



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren said...

ஐயா தருமி,
நீஙகள் அட்டைப்படத்தைப் பார்க்காமல், முதல் பக்கத்திற்கு சென்றுவிட்டீர்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் அலசி தேடிய வரையில் சரியான பதில் கிடைக்கவில்லை. பதில் அளித்தவையில் ஆயிரம் கேள்விகள். இந்நிலையில் நீங்கள் இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம்......செல்வது கடினம் தான். அதனால் தான் மூமின்களை இறைத் தூதர் துருவி துருவி மார்க்க விஷயத்தில் கேள்வி கேட்க வேண்டாம் என்று அறிவித்துவிட்டார் போலும்.

என் அட்டைப் பட (அடிப்படை) கேள்வி.
1) குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம்?

%அல்லா குரானில் சொல்லிவிட்டார், குரான் 1400 ஆண்டுகல் மாறவில்லை, குரான் போன்று வேறு யாரும் எழுத முடியாது என்ற பதில்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

2) இறைவன் ஒருவனே என்பதுக்கு என்ன ஆதாரம்?
#உலக அத்தாட்சிகளை பார், என்றால் அந்த அத்தாட்சிகளை வைத்து பல இறைவன்கள் இருக்கிறார்கள் என்பதற்க்கும் பொருந்தும்.

3)முகமதுதான் இறைவனின் தூதர், கடைசி தூதர் என்பதற்ககு என்ன ஆதாராம்?
# குரான் ஹதீஸ்கள் தவிர்த்து ஆதாராம் இருக்கிறதா.

4) குரான் தான் இறைவனின் கடைசி, தப்பே இல்லாத, எல்லா காலத்திற்க்கும் பொருந்தும், வேதம் என்பதற்க்கு என்ன ஆதாராம்?

5)அறிவியல் குரானை பின் பற்றி வளர்ந்ததா, தவிர்த்து வளர்ந்ததா?

6) குரான் அறிவியல் பூரவமாக நிருபிக்கப்பட்டது என்றால் எவ்வகையில்?

7) குரானை இறை வேதம் என்றால், நம்பிக்கையுடன் படித்தால் தான் நம்ப முடியும் என சொல்வது ஏன்?

இதற்கு பதில் கிடைத்தால் கதவை திறந்து உள்ளே செல்ல ரெடி. தாயிக்கள் எனக்கு பதில் தர கடமை பட்டிருக்கிறார்கள் என நம்புகிறேன்.

Saturday, June 18, 2011 6:54:00 PM

ஷர்புதீன் said...

 
for follow ups

Saturday, June 18, 2011 10:50:00 PM

சார்வாகன் said...

நண்பர் நரேன்,
நீங்க புதுசு என்ப்தால் இக்கேள்விகளை கெட்கிறீர்கள்.ஏற்கெனவே நடந்த விவாதங்களில் இருந்து இத்ற்கு பதில் அளிக்கிறேன்.
/1) குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம்?/
குரான் இறைவனால் அருளப்பட்டதற்கு இன்று கண்டறிப படும் பல அறிவியல் உண்மைகளை அன்றே கூறியது ஒன்று போதாதா?.வேண்டுமெனில் இன்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை வழக்கம் போல் இரு காஃபிர் விஞ்ஞானி கண்டுபிடிக்கட்டும்.எங்கள் குரு'அஆஇஈ' அதற்கு குரானில் இருந்து வசனம் காட்டுவார்.இம்மாதிரி அற்புதம் எங்காவது உண்டா.ஆகவே நிரூபிக்கப் பட்டது.இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?


2) இறைவன் ஒருவனே என்பதுக்கு என்ன ஆதாரம்?
முதல் கேள்விக்கு குரான் மட்டுமே மாறாத இறுதி வேதம் என்பதை நிரூபிதோன்.நீங்கள் நேரடி விவாதத்திற்கு வராததால் எங்கள் கூற்று நிரூபிக்கப் பட்டது.ஆகவே குரான் கூறு ஒருவரே கடவுள்.

3)முகமதுதான் இறைவனின் தூதர், கடைசி தூதர் என்பதற்ககு என்ன ஆதாராம்?
குரான் 33:40. 
**********************************
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்..
******************
பல ஹதிதுகள் காட்ட இயலும்.

4) குரான் தான் இறைவனின் கடைசி, தப்பே இல்லாத, எல்லா காலத்திற்க்கும் பொருந்தும், வேதம் என்பதற்க்கு என்ன ஆதாராம்?
ஹா ஹா ஹா முதல் இரு கேள்விகளின் பதிலே

5)அறிவியல் குரானை பின் பற்றி வளர்ந்ததா, தவிர்த்து வளர்ந்ததா?

அறிவியலையும் படைத்தது இறைவன்,குரானில் இரகசியங்களாக குறிப்பிட்டு ,அவை காஃபிர்களால் கண்டுபிடிக்கப் பட்டபின்,எங்கள் குரு 'அஆஇஈ' க்கு வசன‌ம் புரிந்து விள‌க்குகிறார்.

/6) குரான் அறிவியல் பூரவமாக நிருபிக்கப்பட்டது என்றால் எவ்வகையில்?/
எங்கள் தளத்தில் பல காணொளிகள் உண்டு அதனை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள் .யு ட்யூபையே நிறைத்து விட்டோம். 

7) குரானை இறை வேதம் என்றால், நம்பிக்கையுடன் படித்தால் தான் நம்ப முடியும் என சொல்வது ஏன்?

உங்கள் தாய் தந்தையரை இவர்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?அது போல்தான்.நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்இதற்குத்தான் சகோதரரே,நீங்கள் நேரடியாக வந்தால நேர்வழிக்கு அழைத்து செல்வோம்.இறைவன் நாடியது போல் தெரிகிறது.இறைவன் மிக பெரியவன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard