New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிக்கட்சியின் மறுபக்கம்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
நீதிக்கட்சியின் மறுபக்கம்
Permalink  
 


நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

justice11

‘‘சுதேச சீர்திருத்தமென வெளிவந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண்புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதி பேதம் விட்டுவிட வேண்டும் என பிரசிங்கிப்பதெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களாகிய நாலு வர்ணத்தார்கள் மாத்திரம் சேர்ந்து கொள்ளவேதான்.

மற்ற தாழ்ந்தவர்கள் என சொல்வோர்களிடம் சமயத்திற்கு மட்டுமே சேர்ந்து போரில் வெற்றிபெற்று சுய ஆதினம் பெற வேண்டும். பிறகு முன்போல தாழ்ந்தவர்களாக அந்த நாலு வர்ணத்துடன் சேர முடியாது என்பது எல்லா சுதேச சீர்த்திருத்தக்காரர்களுடைய கொள்கையேயாம்’’…

‘‘தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்

1. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடியது யார்?

திராவிட இயக்கத்தவர்கள் நீதிக்கட்சியைப் பற்றி எழுதும்பொழுது ‘‘ நீதிக்கட்சி பதினாறு ஆண்டுகள் இடைவிடாது ஆட்சி நடத்தாமல் இருந்திருந்தால் அந்த ஆட்சிக்கு 1925 முதல் தம் முழு ஒத்துழைப்பைப் பெரியார் தராமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தலை எடுத்திருக்கவே முடியாது. வளர்ச்சி அடைந்திருக்கவே மாட்டார்கள்’’ (அடிக்குறிப்பு 1) என்றும் -
‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப்பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….நீதிக்கட்சி உயர்ந்த சாதி இந்துக்களின் பெண்களை பறையர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக இடைவிடாது பார்ப்பனர் பிரசாரம் செய்தனர். நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த உயர்சாதி இந்துக்களிடையே இந்தப் பொறாமைப் பிரசாரம் ஒரு பயன்தராத நிலையை உருவாக்க முயன்றது. எனினும் பொருட்படுத்தாது நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது. (அடிக்குறிப்பு 2) தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும்,போராடுவதற்காகவும் நீதிக்கட்சி உருவாகிற்று.’’ (அடிக்குறிப்பு 3)

தாழ்த்தப்பட்டவர்கள் பிற சமுதாயத்தினர்க்கு ஒப்ப எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிறந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் தாழ்த்தப்பட்டவர் பட்ட துன்பங்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் அவர்கள் பெற்ற அவமானங்களையும் எழுதுவதென்றால் அவை இந்நாட்டின் ஒரு அவல வரலாறாகவே அமைந்துவிடும். அவர்கள் குரலற்றவர்களாகவும் செயலற்றவர்களாகவும் அப்போது இருந்தார்கள். அவர்களுக்காகப் பேச செயல்பட ஒரே இயக்கமாக நீதிக்கட்சி தென்னகத்தில் உருவாயிற்று. (அடிக்குறிப்பு 4)

- என்றும் குறிப்பிடுகிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் குறித்து எழுதவும் பேசவும் பொழுதெல்லாம் ‘நீதிக்கட்சி’ என்ற அரசை குறித்துத் திராவிடக் கழகத்தவர் முதல் பல எழுத்தாளர்கள் வரை பெருமைப் பொங்கக் கூறுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எழுதுவதின் நோக்கமென்ன?

தாழ்த்தப்பட்டோர் சிந்தனையற்றவர்களாவும் செயலற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றும், தாழ்த்தப்பட்டவரிடையே அரசியல் அனுபவமுள்ளவர்களே ஒரு சிலரே என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையையும் முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாத உயர்சாதி இந்துக்களால் வழிநடத்தப்பட்ட நீதிக்கட்சி மற்றும் ஈ.வே.ராமசாமி நாயக்கராலேயே செய்ய முடிந்தது என்று தாழ்த்தப்பட்டோர்கள் நம்ப வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாகும்.

‘‘ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர் எனப் பாராது அனைவர்க்கும் இடம் தரும் ‘திராவிடர் ஹோம்’ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சி. நடேச முதலியாரால் உருவாக்கப்பட்டது என்பதும் அறிகிறோம்.

உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இலண்டன் மாநகரத்தில் திராவிடச் சங்கம் சார்பில் சான்றுரை பகர்ந்தவர் பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சர். ஏ. இராமசாமி முதலியார் என்பதையும் அறிகிறோம்.(அடிக்குறிப்பு 5)”

இப்படிக் கூறுவதன் நோக்கமென்ன?

பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியைச் சார்ந்தவர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் என்பதை தெரியப்படுத்துவதற்குத்தான்.

ஆனால் உண்மை என்ன?

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?

நீதிக்கட்சி இல்லாத போது சிந்தனையற்றும் செயலற்றும், உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்தனரா தாழ்த்தப்பட்டவர்கள்?

தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா?

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா?

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

இந்தக் கேள்விகள் மிக மிக முக்கியமானவைகள். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே நாம் ஆராய்வோம்.

விருப்பு வெறுப்பு இல்லாமல் ஓர் ஆராய்ச்சி முறையில் நாம் நீதிக்கட்சிப் பற்றியும், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றியும் இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நிச்சயமாகவே இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துகள் அப்பட்டமான வரலாற்றுப் பொய்கள் என்பது புலப்படும்.

தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல்

justice-partyதாழ்த்தப்பட்டவர்கள் எப்பொழுதுமே தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதைத்தான் சரித்திரம் நமக்கு சான்று பகர்கின்றது.

1779 – இல் சென்னை நகரத்தின் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கருகில் இருந்த தங்களின் குடிசைகளை அப்புறப்படுத்துவதை எதிர்த்துக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு விண்ணப்பம் அளித்தனர்.

1810 – இல் அந்தக் காலத்தில் ‘பறச்சேரி’ என வழங்கிய பகுதியிலிருந்த தங்களின் குடிசைகளுக்கு விதிக்கப்பட்ட உரிமைத் துறப்பு வரிவிதிப்பை எதிர்த்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தாருக்கு மனு அளித்தனர். பிற்காலத்தில் இந்த இடம் ‘பிளாக் டவுன்’ என்று ஆனது.

1870 – இல் ‘ ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். அது பதிவு செய்யப்படாதது. பின்பு 1892ல் அது பதிவு செய்யப்பட்டது.

1917 – இல் இந்தியாவுக்கு வந்த மாண்டேகு – செம்ஸ்போர்டு தூது குழுவினரிடம் ஒரு மகஜரைக் கொடுத்துத் தங்களை ‘ஆதிதிராவிடர்’ என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த மகாஜன சபைவின் செயலாளர் எம்.சி.ராஜா, 1922 – இல் அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவால் சட்டமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றபோது ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரைச் சட்டபூர்வமாக ஏற்கச் செய்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்த தீண்டாதோர் ‘ஆதிதிராவிடர்’ எனப்படலாயினர். பின்னர் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்த தீண்டாதார் முறையே ‘ஆதிஆந்திரர்’, ‘ஆதி கர்நாடகர்’ எனப்பட்டனர்.

1891 – இல் ‘திராவிட மகாஜன சபா’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் சார்பில் 1-12-1891 – இல் உதக மண்டலத்தில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் செட்யூல்டு வகுப்பாருக்கு அரசியல் உரிமைகள், அரசு பணிகளில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கல்விச் சலுகைகள், சிவில் உரிமைகள் ஆகியவற்றைப் பெறுவது பற்றிப் பேசப்பட்டது. பின்வரும் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதற்காக ‘பறையன்’ என்று அழைப்பதையும், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்குரிய வகையில் கடுமையான தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும்.

2. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் காண்பதற்குக் கல்வி மிக அவசியமாகும்.எனவே, கிராமங்கள் தோறும் தாழ்த்தப்பட்டோரை ஆசிரியர்களாகக் கொண்ட தனியான பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்கள் தோறும் தொடங்க வேண்டும்.

3. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் மூவரைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்புப் படிப்பதற்காக உதவித் தொகை வழங்க வேண்டும்.

4. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறுவோர் அனைவருக்கும் அரசு அலுவலகங்களில் வேலை கொடுத்து உதவ வேண்டும்.

5. கல்விக்கும், நன்னடத்தைக்கும் தக்கவாறு அரசாங்க அலுவலகங்களில் நியமனம் அளிப்பதற்கு எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது.

6. மாவட்டங்கள் தோறும் நகராட்சிகளிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படுவோர் வரி செலுத்துவோராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாமல் கல்வித் தகுதி, நன்னடத்தை ஆகியவற்றைக் கருதி நியமிக்கப்பட வேண்டும். நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் நியமனம் பெற்ற உறுப்பினர் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாகவும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.

7. சிறைச்சாலை விதிகள் 464ன் படி சிறைச்சாலைகளில் ‘பறையர்கள்’ இழிந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று விதித்திருப்பதை நீக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணறுகள், குளங்கள் ஆகியவற்றில் எவ்வித தடையும் இன்றித் தண்ணீர் எடுத்து அருந்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

9. நீதிமன்றங்கள், அரசாங்க அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மற்ற இந்துக்களோடு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லவும், சமமாக உட்காரவும் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை ஒழிக்க வேண்டும்.

10. நன்னடத்தையுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையினராக உள்ள கிராமங்களில் கிராம ‘முன்சீப்’ பதவியிலும், மணியக்காரர் பதவியிலும் அமர்த்தப்பட வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கிராமங்களுக்குப் பார்வையிடப் போகும் போது தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நியாயம் வழங்க வேண்டும்.
இந்தத் தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் இவற்றைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி ரசீது பெறப்பட்டது. ஆயினும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதற்கான பதில் எதுவும் திராவிட மகாஜன சபாவுக்கு அனுப்பப்படவில்லை. முஸ்லீம்களின் சங்கமும் இதற்கான பதிலெதுவும் அளிக்க முன் வரவில்லை.இதைக்குறிப்பிட்டு அந்தக்காலத்தில் பெயர் பெற்ற செட்யூல்டு வகுப்பு மக்களின் தலைவர் அயோத்திதாசப் பண்டிதர், ‘பிராமணர் காங்கிரஸ்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார், அவ்வாறே முகம்மதியர் சங்கத்தையும் அவர் கண்டனம் செய்திருக்கிறார்.

1891 – இல் சென்னையிலிருந்த செடியூல்டு வகுப்பாரின் தலைவர்கள் ‘ஆதிதிராவிட மகாஜன சபா’ என்று இன்னொரு சங்கத்தை ஏற்படுத்தினர். இந்தச் சங்கமும், செட்யூல்டு வகுப்பாரின் நலன்களுக்காகப் பாடுபட்டது.

1892 – இல் சென்னை அரசாங்கம் அப்போது பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த எஸ்.ராகவ ஐயங்காரைச் சென்னை மாகாணத்தில் செடியூல்டு வகுப்பாரின் முன்னேற்றம் பற்றி விசாரிப்பதற்கு நியமித்தது.

1892 – இல் நடந்த சாதி இந்துக்களின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அயோத்திதாசப் பண்டிதரும் மற்றும் செடியூல்டு வகுப்பைச் சார்ந்த தலைவர்களும், செடியூல்டு வகுப்பைச் சார்ந்த பிள்ளைகள் படிப்பதற்குக் கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டுமென்றும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புறம்போக்கு நிலங்களை ஆங்காங்கே உள்ள செடியூல்டு வகுப்பாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். சாதி இந்துக்களின் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்படி தீர்மானங்களை ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஒரு மாநாட்டைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி அனுப்பினார். அப்போதைய சென்னை அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கோண்டு, நிலமில்லாத செடியூல்டு வகுப்பாருக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் நிலங்களை ஒதுக்கி அளிக்கவும், பள்ளிகளைத் தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
( அரசாணை எண்:1010 – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்:1010 அ – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்: (சென்னை) 68 – கல்வித்துறை-நாள்:1.12.1893)

1891 – ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் செடியூல்டு வகுப்பு மக்கள் தொடர்ந்து நடத்தி இருக்கிறார்கள். (1891ஆம் ஆண்டில்தான் ஈவேரா காசிக்குப் புனித பயணம் மேற்கொண்டார்)

தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய கூட்டங்கள், மாநாடுகள் பற்றிய விபரங்கள் பெரியவர் டி.பி.கமலநாதன் அவர்கள் எழுதிய Mr.K.Veeramani, M.A,B.L. is Refuted and the Historical Facts about the Schedule Caste’s Struggle for Emancipation in South India என்ற நூலிலும், பெரியவர் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய உணவில் ஒளிந்திருக்கும் சாதி என்ற நூலிலும் பல விபரங்கள் விரவிக்கிடக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் அப்புத்தகங்களைப் படிக்கவும்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக பல பத்திரிகைகளையும் தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.

1869 – சூரியோதயம், 1900 – பூலோக வியாசன்,

1871 – பஞ்சமன்

1877 – சுகிர்த வசனி

1885 – திராவிட பாண்டியன் – ஆசிரியர் : ஜான் ரத்தினம்

1885 – திராவிட மித்திரன்

1886 – ஆன்றோர் மித்திரன் – ஆசிரியர் : வேலூர் முனிசாமி பண்டிதர்

1888 – மகாவிகட தூதன் – ஆசிரியர் : டி.ஐ.சுவாமிக்கண்ணு புலவர்

1893 – பறையன் – ஆசிரியர் : இரட்டைமலை சீனிவாசன்

1898 – இல்லற ஒழுக்கம்

1900 – பூலோக வியாசன் – ஆசிரியர் : தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப்புலவர்

1907 – தமிழன் – ஆசிரியர் : க.அயோத்திதாசப் பண்டிதர்

1907 – திராவிட கோகிலம் – சென்னை, செடியூல்டு வகுப்பு மதம் மாறிய கிறிஸ்தவச்சங்கத்தார் வெளியீடு.

1916 – தமிழ்ப் பெண் – ஆசிரியர் : சொப்பன சுந்தரியம்மாள் (அடிக்குறிப்பு 6)

இந்த இதழ்கள் சாதிக்கொடுமையையும், தீண்டாமையையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளன. தமிழன் வார இதழ் இந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

இதனால் செடியூல்டு வகுப்பு மக்கள், குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, வடாற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் விழிப்புற்றனர். சிவில் உரிமைகளுக்கான கோரிக்கைகள் எழுந்தன. இவற்றைப் பற்றிய விபரங்கள் செய்தி இதழ்களில் வெளிவரலாயிற்று.

1902 ஆம் ஆண்டில் கிராம மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கும் இருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அப்போதைய செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தைச் சேர்ந்த ஒரத்தூர் கிராம மக்கள் சிவில் உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் இந்த மக்களின் குறையை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். தமிழன் இதழிலும் இதைப்பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தொண்டுமனம் படைத்த தன்னலமில்லாத பலர் கல்விக் கூடங்களையும், இரவுப் பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும் ஆரம்பித்தனர்.

சென்னை, வெஸ்லியன் மிஷன் பள்ளியைச் சார்ந்த ஜான் ரத்தினம் பிள்ளை, சென்னை, பிரம்மஞானச் சபையைச் சார்ந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் துரை, தங்கவயல் செல்லப்ப மேஸ்திரி, எம்.ஏ.முருகேசம், ஆர்.ஏ.தாஸ், சிதம்பரம் சாமி சகஜானந்தா, பி.வி.சுப்பிரமணியம், இரத்தினம், திருச்சி வீராசாமி, எல்.சி.குருசாமி, பி.எஸ்.மூர்த்தி, எம்.பழனிச்சாமி ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்க சிலராவர்.

1937ல் அப்போதைய ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜமேதார் ஆதிமூலம், பி.எத்துராஜ், தம்பிசாமி மேஸ்திரி, டி.முனிசாமி பிள்ளை ஆகியோர் முயற்சியால் வேலூரில் வட ஆற்காடு மாவட்ட ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்கம் நிறுவப்பட்டது. 1938 இல் இந்தச் சங்கத்தின் சார்பில் தங்கவயல் ஆர்.ஏ.தாஸ் அவர்களின் தந்தையார் ராமதாஸ் பெயரில் மாணவர் விடுதி ஒன்று ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜெயராமன், ஏ.சுந்தரம், வி.எல்.மோகனம், ஜி.ஜெகன்நாதன், ஜே.வி.ராகவன், கங்காதரன், ஆர்.டி.எஸ்.மூர்த்தி, கே.பி.ஆறுமுகம் ஆகியோரின் அரிய முயற்சியால் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மாணவர் விடுதி ஏற்பட்டது.

எம்.கிருஷ்ணசாமி, ஜே.ஜே.தாஸ், கே.எம்.சாமி, வி.எஸ்.சுப்பையா, ஆதிமூலம், டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோரும் பிறரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்டவர்களாவர்.

இதுமட்டுமல்ல,

மாண்டேகு குழுவின் அரசியல் சீர்திருத்தத்தைப்பற்றி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள் பல கூட்டங்களில் தங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டார்கள். நீதிக்கட்சியினர் அக்குழுவினரை சந்திப்பதற்கு முன்பே ஆதிதிராவிட ஜன சபையார் சந்தித்து விட்டார்கள்.(அடிக்குறிப்பு 7)

நீதிக்கட்சியும், ஈவேராவும் தங்களின் உரிமைகளைப் பற்றி சிந்தனை செய்யுமுன்னே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி சிந்தித்து அதற்காகப் போராடியுள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே போராடிய சரித்திர சான்று இப்படியிருக்க, நீதிக்கட்சி இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊமைகளாய் இருந்திருப்பார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் அல்லவா!

(தொடரும்)

அடிக்குறிப்பு :
1 – 5: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?, திராவிடர் கழக வெளியீடு
6 – 7: உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்



-- Edited by devapriyaji on Tuesday 23rd of August 2011 10:35:02 PM



-- Edited by Admin on Wednesday 28th of September 2016 02:13:29 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ஈ.வே.ரா - பெரியார்?
Permalink  
 


நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02

திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:

முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தலித் தலைவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக திரட்டித் தந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். உண்மையில், இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில், க.அயோத்திதாசர் பற்றிய தகவல்கள் மற்றும் பின்னிணைப்புகளைத் தவிர மற்றவை அனைத்தும் அறிஞர் அன்புபொன்னோவியம் எழுதியவை. அவற்றை அப்படியே திருடி க.திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். அவர் எங்கிருந்து திருடினார் ?

1969ல் பதிவுசெய்யப்பட்ட செட்யூல்டு வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம், சென்னைஎன்ற சங்கம் 1971ம் ஆண்டுக்கான ஒரு நாள்காட்டியை வெளியிட்டது. அந்த நாள்காட்டியில்தான் அறிஞர் அன்புபொன்னோவியம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். இந்த நாள்காட்டியில் உள்ள தகவல்களை மீண்டும் அகில இந்திய பட்டியலினத்தோர், மலைவாசியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையோர் பணியாளர் நல சங்கத்தின் சார்பாக செட்யூல் வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம் 1974ல் வெளியிட்டது. இந்த நாள்காட்டியில் உள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைகளைத்தான் க.திருநாவுக்கரசு அவர்கள் அப்படியே “களத்தில் நின்ற காவலர்கள்” என்ற தன் நூலில் ‘பயன்படுத்தியிருக்கிறார்’.

இவர் இதைப் பயன்படுத்தியது தவறே இல்லை. ஆனால் அத்தகவல்களை எங்கிருந்து எடுத்தார், அதை மூல நூலில் யார் எழுதினார்கள் என்பவற்றை மறைத்ததுதான் தவறு.  தன்மகன் உட்பட பலருக்கு முன்னுரையில் நன்றி தெரிவித்த க.திருநாவுக்கரசு, அறிஞர் அன்புபொன்னோவியத்திற்கும் நன்றி தெரிவித்து இருக்கலாம். ஆனால், அப்படி நன்றி தெரிவித்திருந்தால் அது தன் எழுத்து அல்ல என்று தெரிந்துவிடுமே என்ற காரணத்தால்தான் அவர் நன்றி தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் எழுதியதைத் தாம் அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற நெருடலும்கூட அறிஞர் அன்பு பொன்னோவியத்தின் பெயரை வெளியே சொல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

“களத்தில் நின்ற காவலர்கள்” என்ற இந்த நூல் உண்மையின் களத்தில் எதை நிரூபிக்கிறது ?

ஒரு தலித் எழுத்தாளரை, திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த நூல் நிறுவுகிறது. அது மட்டுமா ?

இந்நூலின் 92ஆம் பக்கத்திலும் 154ம் பக்கத்திலும் பி. எம். மதுரைப்பிள்ளை பற்றிய தகவல்கள் வருகின்றன. ‘புரவலர் பெருமகன் பி. எம். மதுரைப்பிள்ளை’ என்ற தலைப்பில் 92ம் பக்கத்தில் பி. எம். மதுரைப்பிள்ளையைப் பற்றிப் பேசிவிட்டு, அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை மீண்டும் தருவதாக நினைத்து 154ம் பக்கத்திலும் மதுரைப்பிள்ளையைப் பற்றித் தகவல்கள் தருகிறார்.  அவை “பி. எம். மதுரைப்பிள்ளை” என்ற தலைப்பில் திரு.வி.க வெளியிட்ட தகவல்கள் என்று குறிப்பிடுகிறார். அவரது குறிப்பின்படி, திருவிக தனது கட்டுரையில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆதிதிராவிடர்க்கு உதவி புரிந்தவர் என்று மதுரைப்பிள்ளையைக் குறிப்பிட்டுள்ளார்.

எம். சி. மதுரைப்பிள்ளை

பி. எம். மதுரைப்பிள்ளை

அதாவது 92ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும், 154ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும் ஒருவரே என்ற முடிவில் அவர் எழுதியிருக்கிறார். ஆனால், உண்மை என்ன?

92ம் பக்கத்தில் உள்ள பி. எம் மதுரைப்பிள்ளை 1858ல் பிறந்து 1913ஆம் ஆண்டு இறந்துபோனவர்.  திருவிக குறிப்பிடும் எம்.சி. மதுரைப்பிள்ளை 1880ல் பிறந்து 1935ல் இறந்தவர்.

திருவிக குறிப்பிடுவது எம். சி. மதுரைப்பிள்ளையை. திருநாவுக்கரசு குறிப்பிட நினைப்பதோ பி. எம்மதுரைப்பிள்ளையை.

(படங்கள் உதவி: அன்பு. பொ. ஆதிமன்னன்)

திருநாவுக்கரசு உண்மையிலேயே தேடி அலைந்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தால் இந்த உண்மைகள் அவருக்குப் புரிந்திருக்கும்! இது திருட்டுப் புத்தகம்தானே ! அதுவும் ஒரு ஆதிதிராவிட எழுத்தாளரின் புத்தகத்தைத்தானே திருடியிருக்கிறோம் என்ற நினைப்பில் எதையுமே ஆராயாமல் வெளியிட்டுவிட்டார் போலும். ஆனால் அறிஞர் அன்புபொன்னோவியம் தான் எழுதிய “மக்களுக்கு உழைத்த பெருமக்கள்” என்ற நூலில் தெளிவாக இருவரையும் பிரித்தே எழுதியிருக்கிறார். அது மட்டுமா ?

திருநாவுக்கரசுவின் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளரும், ஆய்வாளருமான (!) எஸ்.வி.ராஜதுரை. எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை.

இந்நூலின் அணிந்துரையில் “தலித் தலைவர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் உறுப்பினராகவே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர் என்று அவரே பல நேரங்களில் கூறியுள்ளார்” என்று எழுதியிருக்கிறார். ஆனால், “டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர்” என்று எம்.சி.ராஜா எங்கே, எப்போது கூறினார் என்ற விபரத்தை மட்டும் தரவில்லை !! போகிற போக்கில் எழுதிச் சென்றுள்ளார்.

எம்.சி.ராஜா தன் அரசியல் வாழ்வை ஆதிதிராவிட மகாஜனசபையிலிருந்தே துவங்கினார். தனது 25வது வயதில் 1908ல் இருந்து பொதுத்தொண்டில் ஈடுபட ஆரம்பித்தார். 1916ல் சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவைச் சீரமைப்பதில் பெரும்பங்காற்றினார். அந்த சபாவின் கௌரவச் செயலாளராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 36வது வயதில் 1919ல் சட்டமன்ற உறுப்பினரானார். 1927ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இதுதான் உண்மை. எம். சி. ராஜாவை அரசியலில் கொண்டு வந்தது ஆதிதிராவிட மகாஜனசபை. ஆனால், அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த பெருமையை நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் நாயருக்குத் தானம் செய்து விட்டார் எஸ். வி. ராஜதுரை. அது மட்டுமா ?

இந்த நூலில் “சில சாதனைகளும் தகவல்களும்” என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன உரிமைகள் பெறப்பட்டன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார். அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்.

வரலாற்றை தம் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி எழுதுவதிலும், அதை நம்ப வைக்க, எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதிலும் இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் மிக திறமைசாலிகள்தான். ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால்தான் உண்மை என்று அது நம்பப்படும் என்று நன்கு தெரிந்தவர்கள் அவர்கள். இல்லையென்றால், சமீபத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய நூல்கள்வரை இப்படிப்பட்ட பொய்களைத் தொடர்ந்து எழுதுவார்களா? பொய்களைத் தருவது மட்டுமல்ல. உண்மைகளையும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, திராவிட இயக்கத்தார் இருட்டடிப்பு செய்யும் வரலாற்றை, இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் பார்க்கத்தான் போகிறோம். இதோ.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய வரலாறுகள் பல உண்டு. அப்படிப் போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பண்டித க. அயோத்திதாசர் (1845 – 1914):

பண்டித க. அயோத்திதாசர்
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும், உயர்வு தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச் சிந்திக்க தூண்டும் வகையில் பல நூல்களை எழுதினார். 1886லிருந்து பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில் தமிழகத்தில் பரவச் செய்த பெருமைக்குரியவர். கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமும், இடுகாடு-சுடுகாடு போன்றவைகளும் கிடைக்க வழிசெய்தவர். மருத்துவத்திலும் இவர் சிறந்து விளங்கினார்.

1889ல் கர்னல் ஆல்காட், மேரி பால்மெர், ஆனி பெசன்ட் உதவியுடன் நகரில் பல பள்ளிகளை அமைத்தார். 1902ல் தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கத்தை நிறுவினார். சமயம், சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் மக்களுக்கு இடைவிடாமல் பணியாற்றினார்.  1907ல் தமிழன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். இது இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற கடல்கடந்த நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் பவனி வந்தது. அவர் படைத்த நூல்களில் ‘புத்தரது ஆதிவேதம்’ அவரது ஆராய்ச்சித் திறனுக்கு ஓர் சான்றாகும்.

இரட்டைமலை சீனிவாசனார் (1860 – 1945)

இரட்டைமலை சீனிவாசனார்
இவர் நீலகிரியில் வணிகத்துறை கணக்காயராக பணியாற்றினார். சென்னையில் குடியேறிய பின் 1882லிருந்து 1885வரை பல அரசாங்க குறிப்பேடுகளையும், வரலாற்று நூல்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்றாட வாழ்ககை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். 1884ல் தியோசஃபிகல் சொசைட்டியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால், அவ்வமைப்பு பழங்குடி மக்களுக்குப் பயன்படாது என்று உணர்ந்து அப்பேரவையிலிருந்து விலகினார். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் தோறும் சென்றார். உலக அறிவு தடுக்கப்பட்ட அவர்களிடம் அவர் கல்வி கற்றல், சுகாதாரத்துடன் இருத்தல், சுத்தமான ஆடைகளை அணிதல், ஒழுங்காகப் பேசுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தினார். 1891ல் ஆதிதிராவிட மகாஜன சபையில் திறம்பட பணியாற்றினார். 1892ல் ‘பறையன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி மக்கள் விழிப்படையும் வகையில் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

1893ல் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் பழங்குடி மக்களின் மாநாட்டைக் கூட்டினார். இதுவே பழங்குடி மக்களுக்காக இந்தியாவில் கூட்டப்பட்ட முதல் மாநாடாகும். 1900 வரை எண்ணற்ற மாநாடுகளைக் கூட்டி மக்கள் நலன் அடையவும், பாதுகாப்புப் பெறவும் ஆங்கில அரசிடம் ஓயாமல் போராடினார். பிறகு, இங்கிலாந்து செல்ல புறப்பட்டு, இடையில் தென்னாப்பிரிக்கா சென்று அரசாங்கப் பணியை மேற்கொண்டார். அங்கும்கூட இந்தியப் பழங்குடி மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே இந்திய மக்களின் நல்வாழ்விற்காகச் சிந்தித்தார், செயல்பட்டார். 1921ல் மீண்டும் இந்தியாவிற்கு வந்து, சமுதாய பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1922ல் சென்னை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1925ல் தீண்டாமை ஒழிய பல திட்டங்களைத் தந்தார். 1930ல் லண்டன் வட்டமேஜை மாநாட்டிற்கு இந்திய பழங்குடி மக்களின் சார்பில் கலந்துகொண்டார்.

1932ல் பூனா ஒப்பந்தத்தில் பொறுப்பேற்று அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து தொண்டாற்றினார்.

பழங்குடி மக்களின் பாதுகாவலன் எம்.சி. ராஜா (1883-1945)

எம். சி. ராஜா
இவர் இளமையில் ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்குப் பல நூல்களை எழுதினார். 1936ல் நுங்கம்பாக்கத்தில ‘திராவிடர் பள்ளியை’ துவக்கி வைத்தார். நகர் முழுவதிலும் இரவுப் பள்ளிகளை நிறுவ தூண்டுதலாக இருந்தார். சென்னை மாநகர சாரணர் குழுவின் தலைவராகப் பலகாலம் இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் பண்பாட்டை வளர்த்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பழங்குடி மாணவர்களை 1927லிருந்து சேர்த்துக் கொள்ள வகை செய்தார்.

இளம் வயதிலேயே மாநில ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராகத் தொண்டாற்றினார். பேச்சுத்திறன் மிகுந்த இவர் மக்களிடம் கால நிலைமையையும், அவர்களுடைய கடமையையும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். 1917லிருந்து பழங்குடி மக்களின் தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற போராட்டங்களில் அவர் ஆற்றிய பணி சிறப்பானதாகும். 1919ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு பாராளுமன்றத்திலும் பணியாற்றினார்.

பழங்குடி மக்களுக்கிருக்கும் இன்னல்களும், இழிவுகளும் நீங்கி முன்னேற அரசியல் அதிகாரம் பெற வேண்டினார். இதற்காக பட்லர் கமிட்டி, மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற பல குழுக்களைச் சந்தித்து சாட்சியம் கூறினார். 1929ல் லண்டன் சென்று பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடினார். 1930ல் வட்டமேஜை மாநாட்டிற்காக அரிய கருத்துக்களை வெளியிட்டார். கூட்டுத்தொகுதியுடன் கூடிய தனித்தொகுதி முறையை முதலில் கூறியவர் இவர்தான். மக்களுக்காக அரசியலே தவிர அரசியலுக்காக மக்கள் அல்ல என்பது இவருடைய வாதமாகும். சிறிது காலம் தமிழக அமைச்சராக பணியாற்றினார். இறுதிக்காலம் வரை சட்டமன்றத்தில் தொண்டாற்றினார்.

சிந்தனைச் செம்மல் பேராசிரியர் என். சிவராஜ் (1892-1964)

அம்பேத்கருடன் நமச்சிவாயம் சிவராஜ்
பட்டப்படிப்பிற்குப் பிறகு சிறிது காலம் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் இருந்தார். இவர் இளமையிலிருந்தே பழங்குடித் தலைவர்களோடு இணைந்து தொண்டாற்றினார். தன்னுடைய கருத்தாழமிக்க உரைகளால் மக்களால் நல்ல சிந்தனையாளராக இவர் மதிக்கப்பட்டார். மக்களுக்காகப் பல கூட்டங்களையும் மாநாடுகளையும் கூட்டி சிறந்த கருத்துக்களைக் கூறினார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

1922ல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார். நகரின் பல இடங்களில் மாணவர் விடுதிகள் தோன்றக் காரணமாயிருந்தார். மக்கள் சொந்த நில விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய அடிமைமுறை மாறாது என்ற கொள்கையை உடையவர். சட்டமன்றத்தின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்று சிறப்பாக பணியாற்றினார். 1945ல் மாநகராட்சி மேயரானார். 1942ல் தொகுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.

1946ல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார். இந்தியர்களையும், ஆங்கிலேயர்களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946ல் ஜெய்பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார். தொகுக்கப்பட்டோர் சம்மேளனம் அரசியல் இயக்கமாக மாறியபோதும் அதனுடைய அகில இந்திய தலைவராகவே நீடித்தார். 1956ல் பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள் உருவகப்படுத்திய அகில இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி அதன் காப்பாளராகவும் ஒப்பற்ற தலைவராகவும் விளங்கினார். 1944லும் 1960லும் பாராளுமன்ற உறுப்பினரானார். அங்கு பல செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை தந்தார்.

புரவலப் பெருமகன் பி.எம். மதுரைப்பிள்ளை(1858 – 1913)

1877ல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவிடம் எழுத்தராக பணியாற்றினார். பிறகு ரங்கூன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பின் ஊழியரானார். வாணிபத்தில் நன்னடத்தையும் நம்பிக்கைக்குரியவர்ராகவும் இருந்தவர். துபாஷ் ஸ்டீவ்டேன் என்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சுயமாக ஆரம்பித்துத் திறமையாக நடத்தினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நார்வே, இத்தாலி, எகிப்து ஆகிய மேலைநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.

தன்னுடைய வருவாயில் ஒரு பகுதியை இந்து கோயில்களுக்கென்று நிரந்தரமாகக் கொடுத்து வந்தார். சொந்தமாக ஒரு கோயிலையும் கட்டினார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குறுகிய மனிதாபிமானியாக இல்லாமல், கிறிஸ்துவர்களாலும், முகம்மதியர்களாலும் நடத்தப்பட்டு வந்த ஸ்தாபனங்களுக்கும்கூட உதவி புரிந்து வந்தார். சமூகத்தில் காணப்படும் கோளாறுகளுக்கு, கல்விதான் சரியான மருந்து என்பதை உணர்ந்து ஒரு உயர்நிலை பள்ளியைக் கட்டினார். அறிவுக்கு உகந்த நல்ல கதைகளையும், கருத்துக்களையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார்.

1885லிருந்து 1900 வரை ரங்கூன் முனிசிபாலிடி கமிஷனராக இருந்தார். சுமார் 25 ஆண்டுகள் இரண்டாவது வகுப்பு கௌரவ நீதிபதியாக பணியாற்றினார். டர்பன் மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாக கொடுத்து உதவினார். பழங்குடி புலவர் பெருமக்கள் இவர் மீது கவிபாடி பல உயர்ந்த பரிசில்களை பெற்றிருக்கிறார்கள். இவரை கிறிஸ்தவ, முகம்மதிய புலவர்களும் பாடியுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய ‘மதுரை பிரபந்தம்’ என்ற நூல் ஒன்றே இன்றும் அவர் புகழ் பாடி நிலவுகிறது.  இவர் 1906ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் சிறந்த பொதுத் தொண்டர் என்ற அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மக்களுள் மாணிக்கம் டி. ஜான்ரத்னம் (1846-1942)

ஸ்பென்ஸர் கம்பெனியில் ஊழியராகப் பணியாற்றினார். சமூகத்திலிருக்கும் கொடுமைகளுக்கும் சமயத்துறையில் நிலவும் வெறிச் செயல்களுக்கும் கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருந்து பழங்குடி மக்கள் எதிர்காலத்தில் வளர வைக்கும் என்று நம்பிய இவர் 1886ல் ஒரு ‘மாதிரிப் பள்ளியை’ நிறுவினார். அப்பள்ளி பயனளிப்பதை அறிந்து 1892ல் ஆண்-பெண் இருபாலரும் படிக்க ஆயிரம் விளக்கில் பெரியதொரு கல்விக்கூடத்தை அமைத்தார். அவரே தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும், மக்கிமா நகர், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் பள்ளிகளைத் தொடங்கினார்.

இவையன்றி சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும் தொழிற்கல்வி கூடம் ஒன்றையும், மாணவர் விடுதியையும் 1889ல் தோற்றுவித்தார். 1877ல் புனிதரான அவர், அதற்கு முன்னும் பின்னும் சமயத்துறையில் சிக்கலற்ற வண்ணம் மக்களை கவரத்தக்க பணியில் ஈடுபட்டார். 1885ல் திராவிட பாண்டியன் என்ற தமிழ் வெளியீட்டைத் துவக்கித் திறமையான வாதங்களால் மக்களை விழிப்படையச் செய்தார்.

அன்றைய சூழ்நிலையில் பழங்குடி மக்கள் பல்வேறு பெயர் கொண்ட அமைப்பைக்களில் இயங்க ஆரம்பித்தனர். இவர் 1892ல் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை துவக்கி அதனைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்தினார். இதற்கான பல அறிவு சார்ந்த விளக்கங்களை வெளியிட்டார். 1897லிருந்து சிலகாலம் கௌரவ நீதிபதியாக தொண்டாற்றினார். பழங்குடி மக்களின் வாழ்விலும் வளத்திலும் அக்கறை கொண்டிருந்த இவர் அவர்களுக்கு குடியிருக்கவும், பள்ளி கூடத்திற்கும் நிலம் பெறவும் கவர்னரைப் பார்த்து முறையிட்டு அவற்றைப் பெற்றுத்தந்தார். பழங்குடி மக்களை ஓரணியில் திரட்ட இணைப்புப் பாலமாக கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடத்துடன் அமைக்க முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த கிறிஸ்தவர், பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால் இது தடைபட்டு விட்டது.

பெரும் வணிகர் பி.வி. சுப்ரமணியம் (1859 – 1936)

தொழிலில் நாணயமும், செயலில் திறமையும், நம்பிக்கையும் கொண்ட இவர் வணிக துறையில் அயராது உழைத்தார். ஏராளமாக பொருள் சேர்த்தார். ஊறுகாய் மன்னர் என்று பலராலும் உலகமெங்கும் புகழப்பட்டார். அவர் தம் ஊறுகாய் வகைகளை இங்கிலாந்து பேரரசர் குடும்பத்தினர் முதல் உலகத்தின் எல்லாப்பகுதி மக்களும் அதனை பெரிதும் விரும்பினர். இவர் தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் பழங்குடி மக்களின் சமய நெறியாளர்களான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் போன்றவர்களை ஆதரித்தும், அவர்களுக்கு தலமெடுத்தும் அவற்றுக்கு காப்பாளராகவும், பல்வேறு சமயத்துறைகளுக்கும் பேருதவியாயிருந்தார்.

பழங்குடி மக்கள் அனைவரும் கல்வியை – குறிப்பாக ஆங்கில கல்வியைப் பெற வேண்டுமென்பது இவரது ஆசையாகும். எனவே பல சிறு பள்ளிகளுக்கு பொருளுதவி செய்து ஊக்குவித்தார். 1920ல் வேங்கடாசலம் ஏழையர் பள்ளியை சிந்தாதிரிப்பேட்டையில் துவக்கினார். இன்றும் அது நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். பலமுறை ஒரு பெரிய பள்ளியைத் தோற்றுவிக்க முயற்சித்தார். சமுதாயத்தில் அன்றுள்ள சமய சமுதாய உட்போராட்டங்களாலும் வேறு காரணங்களாலும் அது தடைபட்டுவிட்டது. வணிகத் துறையில் பெரிதும் ஆழ்ந்திருந்த இவர் தமது மக்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டிருந்தார்.

தமிழ் மக்களுள் இருக்கும் பிளவுகளையும் பிணக்குகளையும் ஒழிக்க வேண்டுமானால் ஒரே பெயரின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று எண்ணினார். எனவே 1922ல் திராவிடர் – ஆதிதிராவிடர் ஆகிய இருபெரும் வகுப்பினரையும் மாநாட்டின் வாயிலாக ஒன்று கூட்டி அறிவுரை வழங்கினார். பழங்குடி மக்களால் நடத்தப்பெறும் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஆகும் செலவினங்களை இவரே ஏற்றுக் கொள்வார். தலைவர்கள் வெளியூர்களுக்கும், அயல்நாடுகளுக்கும் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு உடை, வழிச்செலவு போன்றவற்றை கொடுத்து உதவுவார். சமுதாயத்தில் பழங்குடி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு கவர்னர் வைசிராய் போன்றோரிடம் முறையிட்டு அவ்வப்போது பயன் காணுவார்.

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை (1878 – 1938)

இவர் வள்ளல் ரங்கூன் மதுரைப்பிள்ளை அவர்களின் மருமகனும் தலைவர் சிவராஜ் அவர்களின் மாமனாருமாவார். கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு 1900ஆம் ஆண்டு முதல் சமுதாயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நமது மூத்த தலைவர்களான ஆர்.சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர்களிடையே தனித்தன்மை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். 1912 முதல் சிறிதுகாலம் ரங்கூன் சென்று வள்ளல் மதுரைப்பிள்ளை பள்ளியின் கண்காணிப்பாளராக பணியாற்றி மீண்டார். சென்னை மாநில சிறையதிகாரியாகவும் அலுவலாற்றினார். பொதுத்தொண்டில் தீவிரமாக செயல்பட்டுப் பல அரிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் தந்ததின் மூலமாக பலராலும் பாராட்டப்பட்டார். பழங்குடி மரபில் இந்தியாவிலேயே முதல் மாநகராட்சி உறுப்பினராக (1920ல்) ஆக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

அவரது உழைப்பின் நினைவாக சென்னை வால்டாக்ஸ் நெடுஞ்சாலையில் வாசுதேவ பிள்ளை பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இவர் பல்வேறு அமைப்புகளில் பங்கு கொண்டு திராவிட, ஆதித்திராவிட மக்களுக்கென பல மாநாடுகளை கூட்டுவித்து பொதுவாக மக்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகப் போராடினார். இவற்றில் 1928-1925ம் ஆண்டுகளில் பச்சையப்பன், வெஸ்லியன் கல்லூரிகளில் நடைபெற்ற மாநாடுகளின் நடவடிக்கைகளையும், கவர்னரிடம் சென்று வலியுறுத்தியதையும் சிறப்பாகக் கூறுவார்கள். 1935ம் ஆண்டிலிருந்து சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் அரசாங்கம் அமைத்த பல்வேறு குழுக்களில் பங்கேற்று மக்களுக்கும் நாட்டிற்கும் அரிய பல சேவைகளை செய்தார்.

ராவ் சாகேப் வி. தர்மலிங்கம் பிள்ளை (1872-1944)

இவர் 1872ல் சென்னையில் பிறந்து ரங்கூனில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பிற்குப் பிறகு கணக்கியல் துறை அதிகாரியாகவும் வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1860ல் பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் பலர் பல நூல்களையும், பத்திரிகைகளையும் வெளியிட்டு அவை கடல் கடந்து சென்று மக்களை விழிப்படைய செய்தன. அவற்றின் மூலம் உணர்ச்சி பெற்றவர்களில் தலைவர் தர்மலிங்கமும் ஒருவர்.

ரங்கூன், சிங்கப்பூர், சிலோன், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் குடியேறிய மக்களின் வாழ்க்கைத் தடுமாற்றங்களையும், இந்தியாவிலுள்ள இழிவான நிலைகளையும் உணர்ந்த அவர் இந்தியாவிற்கு திரும்பியவுடன் சிறிதுகாலம் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும், கௌரவ நீதிபதியாகவும் தொண்டாற்றிக் கொண்டே சமுதாயத் தொண்டில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.

1917, 1923 ஆண்டுகளில் மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற குழுக்களின் சீர்திருத்த ஆய்வின்போது எழுந்த கொந்தளிப்பில் பழங்குடி மக்களின் தலைவர்களோடு இணைந்து விரைந்த முன்னேற்றத்திற்கு அரிய திட்டங்களைத் தந்தார். வட்டமேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம் போன்ற காலங்களில் தலைவர்களில் சிலர் வேறு இயக்கங்களுக்கு இழுக்கப்பட்டார்கள். அதற்குப் பலியாகாமல் தனித்து நின்று ஷெட்யூல்டு வகுப்பினர் நன்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பல மாநாடுகளைக் கூட்டி தீர்மானத்தினை நிறைவேற்றக் காரணமாக இருந்தார்.

சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். 1928-1932 வரை சென்னை சட்ட மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார். வடசென்னையில் பல சங்கங்கள், இரவுப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலைகள் போன்றவைகள் இவரது தலைமையில் சிறப்பாக தொண்டாற்றின. ராயல் கமிஷன், ஹாமன்ட் குழு போன்றவைகளில் பழங்குடி மக்களின் விரைந்த முன்னேற்றத்திற்கு பல அரிய திட்டங்களை தந்திருக்கிறார்.

மாண்புமிகு தலைவர் ம. பழனிச்சாமி (1870-1941)

1900வரை தவத்திரு கங்காதர நாவலர் அவர்களின் அன்பு மாணவராக இருந்து திருப்பணிக் கூட்டம் என்ற அமைப்பால் மக்களிடையே அருள்நெறி பரப்பி வந்தார். நற்பழக்கம், நல்லொழுக்கம் போன்ற அறநெறிகளால் மக்கள் விழிப்படைய முதுபெரும் ஞானமார்க்க பெருந்தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்து தொண்டாற்றினார். நுங்கம்பாக்கம் பாலசுப்ரமணி ஆலயத்தின் ஸ்தாபகராகவும், திருக்காப்பாளராகவும் பலகாலம் இருந்து பணியாற்றினார்.

1921ல் மாணவர் விடுதியை ராயப்பேட்டையில் துவக்கி கவனமாகவும், பாதுகாப்பாகவும் மாணவர் படிக்க வகை செய்தார். ஒழுக்கமும் புலமையும் ஒருவரை சமூகத்தில் உயர்த்த வல்லது என்பதற்கு இவர் ஓர் உதாரணமாக திகழ்ந்தார். இவருடைய நற்பண்புகளாலும் புலமையாலும் ஈர்க்கப்பட்ட சங்கராச்சாரியார் அவர்கள் இவருக்கு 1923ல் பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தியது நல்ல சான்றாகும்.

இவர் சோதிட கணிதத்திலும் தேர்ந்தவர் என்று பலராலும் புகழப்பட்டவர். சமூக எழுச்சிப் பணியில் பெரும் பங்கு கொண்டார். பழந்தலைவர்களுடன் இணைந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் கூட்டினார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களுடன் சமுதாய-அரசியல் துறைகளில் தீவிரமாக பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

1929ல் பழங்குடி மக்களால் செய்யப்பட்ட வகைவகையான உண்ணும் பண்டங்களையும், தச்சு, தையல் போன்ற பொருள்களையும் தொழில் திறனை காட்டும் வகையில் காட்சியில் வைத்தார். 1917ல் எழுந்த அரசியல் எழுச்சியில் டாக்டர் நாயருடனும் பெருந்தலைவர்களுடனும் இணைந்து அயராது உழைத்தார். ‘திராவிடர் வாலிபர் சங்கம்’ போன்ற பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருந்து தொண்டாற்றினார். 1931ல் சென்னை மாநகராட்சிக்கு போட்டியிட்டார்.

சுவாமி தேசிகாநந்தா (1877-1949)

அரசியலில் மதத்தையும், மதத்தில் சமுதாயத்தையும் போட்டுக் குழப்பிய பல பெரியவர்களை நாம் கண்டவர்கள்தான். அகப்புறத் துறைகளான அரசியல், சமயம், சமுதாயம், கல்வி, தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், தனித்தனியாக சிறப்புடன் பணியாற்றி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல் முன்னேற்றியவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது சுவாமி தேசிகானந்தா அவர்களேயாவார்கள்.

இவர் 1877ல் சென்னை பெரம்பூரில் பிறந்தார். நல்ல குடும்பத்தின் செல்வப் புதல்வனாக சீலமாக வளர்க்கப்பட்டார். எம்.ஏ. படிப்போடு கல்வியை நிறுத்திக் கொண்டு 1917ல் எழுந்த அரசியல் சமுதாய சூழ்நிலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிதீவிரமாக பணியாற்றினார். இவர் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் தேர்ச்சியோடும், பல இலக்கியங்களில் புலமையும் நாவன்மையும் படைத்தவராகவும் இருந்தார்.

1918ல் பழங்குடி மக்களை உய்விக்க பல பள்ளிகளைத் தோற்றுவித்தார். இதில் ஜியோர்ஜ் பேரரசர் பேரால் தொடங்கிய பள்ளி குறிப்பிடத்தக்கது. இவற்றோடு மக்களுக்கு வீட்டுமனை வழங்கவும், சிறுதொகை மூலம் பொருளாதாரத்தை விருத்தி பண்ண கடன் வசதி தரும் கூட்டுறவு சங்கங்களையும் ஏற்படுத்தினார். பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிலகத்தின் மேற்பார்வையாளராகவும், தொழிலாளர் அதிகாரியாகவும் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார்.

1920ல் தவத்திரு. தேசிகானந்தா பெரம்பூர் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லில் நடந்த கலவரத்தில் முக்கிய பங்கேற்றார். இதில் பங்குகொண்ட மற்றொரு தலைவர் எம்.சி.ராஜா அவர்களாவார். பழங்குடி மக்களை வேலை நிறுத்தத்திலிருந்து விலக்கி தலித்துகள் மில்லில் தொழில் கற்பதற்குத் துணை செய்தார். மில்லில் பெரும் பகுதிகளில் தலித்துகள் நுழைய முடியாதிருந்த நிலையை மாற்ற இவர் பேருதவியாக இருந்தார். பழங்குடி மக்களுக்கு மில்லில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு நிலையைக் கண்டு மேல் சாதிக்காரர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமென்று பயந்து சர். சி. பி. தியாகராய செட்டியார், திரு.வி.க. போன்ற உயர்த்தப்பட்ட சாதி இந்துத் தலைவர்கள் தங்கள் ஆட்களை வேலைக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளிலும், புளியந்தோப்பு ஷெட்யூல் வகுப்பு – சாதி இந்து – முஸ்லீம் கலவரத்தாலும் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளித்து ஷெட்யூல் வகுப்பு மக்களை காப்பாற்றிய பெருமையும் இவரையே சார்ந்ததாகும். இவரது தமிழ் அறிவினையும், இலக்கிய, யோக, ஞான மார்க்கங்களில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும், வாதத்திறமையும் கண்டு வியந்தவர்களில் வடிவேல் செட்டியார், இலவழகனார், திரு.வி.க, உ.வே.சா, மறைமலையடிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இறுதி நாட்களில் சமயத்துறையில் சத்குரு அந்து சுவாமிகளின் அடியாராக இருந்தா



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்?

“சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் காவற்படையாகச் செயல்படுகிறவர்கள் சூத்திரர்களே… சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தாழ்த்தப்பட்டோர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து விடுவதை விரும்பவில்லை – இந்தியாவின் ஆட்சி பிரிட்டிஷாரிடம் இருந்தாலும் நிர்வாகம் (ஆதிக்க சாதி) இந்துக்களால் நடத்தப்பட்டது.  நகரம் முதல் கிராமம் வரை (ஆதிக்க சாதி) இந்துக்களின் பிடியில் உள்ளது.”

பேரறிஞர் அம்பேத்கர்
அம்பேத்கர் நூல்தொகுப்பு – 9, பக். 174 – 158.

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே அது தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு – முன்னேற்றத்திற்குத்  தொடங்கப்பட்டது அல்ல என்பதை நாம் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்.

458px-justice_party_1923

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது அரசியல் ஆட்சியை அந்தக் காலத்தில் விஸ்தரித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி.  தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நபர்களைப் பொறுக்கி எடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்த விவசாயிகளிடமிருந்து நிலவரியை வசூலிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கிழக்கிந்திய கம்பனி அளித்தது.  இந்த நபர்கள் தனக்குச் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையையும் பிரிட்டிஷ் சர்க்கார் நிர்ணயித்தது. அதை ஆண்டுதோறும் அவர்கள் செலுத்திவந்தால் போதும். இந்தத் தொகைக்குப் பெயர் ‘‘பேஷ்குஷ்’’.

இங்கனம் நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்களுக்கு இஷ்டமான அளவு பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக் கொள்ளலாம்.  மேலும்,  விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்காமல், ஒரு பெரும்பகுதி நிலத்தைச் சொந்த சாகுபடி என்ற பெயரால் வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு அனுமதி உண்டு.  இவர்களுக்குப் பெயர் ‘ ஜமீன்தார்’,  ‘மிட்டாதார்’,  ‘தாலுக்தார்’ என்பவையாகும்.

இந்த உரிமைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மேலும் மேலும் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தினர். ‘பேகார் வெட்டி’ என்ற பெயரால் விவசாயிகள் இந்த ஜமீன்தார் இட்ட வேலையைக் கூலி ஒன்றும் இல்லாமல் செய்தாக வேண்டும்.  இவ்வித கொடுமைகள் பல உருவங்களை எடுத்தன.

விவசாயிகள் வீட்டிலிருந்த மாடு முதன் முதலில் போடும் கன்றை ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஜமீன்தார் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலிய சடங்குகளுக்கு விவசாயிகள் பால் முதலியவற்றை இனாமாக வழங்க வேண்டும்.  காலப்போக்கில் விவசாயி திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் ஜமீன்தாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைந்தது.

இப்படிப்பட்ட வசூல்களுக்கு ஜமீன்தார்கள் குண்டர் படைகளை வைத்திருந்தனர். ஆரம்பத்தில் சர்க்காரின் சார்பாக விவசாயிகளிடத்தில் வரி வசூலிக்கும் காண்ட்ராக்டர்களாக நியமிக்கப்பட்ட இந்த ஜமீன்தார்கள் காலப்போக்கில் அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகவே கருதப்பட்டார்கள். குடியானவர்களை எந்த சமயத்திலும் அவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற்றும் அதிகாரமும் அவர்களிடம் இருந்தது.

300px-justice_party_1920sஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளுக்கு பிரிட்டிஷ் சர்க்காரின் போலீசும், நிர்வாக இயந்திரமும் உதவி செய்து வந்தன. இந்த ஜமீன்தார்களும் அவர்களுடைய ஆதரவில் வாழ்ந்தார்கள்.  தங்களை ஆதரிக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விசுவாசிகளாகவும், இந்த சர்க்கார் வாழையடி வாழையாக இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புபவர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு இவர்கள் விசுவாசமாக இருந்ததற்காக இவர்களில் பலருக்கு ‘மகாராஜா’, ‘ராஜா’, ‘நவாப்’ போன்ற பட்டங்கள் பிரிட்டிஷ் சர்க்காரால் வழங்கப்பட்டன.

இந்த ஜமீன்தார் முறையைத் தவிர  ‘ரயத்துவாரி – நிலவரி அமைப்பு’ என்ற முறையும் இருந்து வந்தது. 1803 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் கவர்னராக இருந்த லார்டு மன்றோ இந்த முறையை ஏற்படுத்தினார்.  நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நேரடியாக சர்க்காருக்கு நிலவரி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறை இது.

ஆனால் நிலம் யாருக்குச் சொந்தம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு நிலம் சொந்தம் என்பதற்கு சர்க்காரிடம் கணக்கு ஒன்றும் கிடையாது. இதை நிர்ணயிக்கும் அதிகாரம் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தாசில்தார்கள் தங்களுக்குப் பணம் (லஞ்சம்) கொடுத்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்திற்கேற்ப நில அளவை நிர்ணயித்தார்கள். அதைப் போலவே, கிராமங்களில் இருந்த பல முரடர்களுக்கும், சண்டியர்களுக்கும் பயந்து அவர்கள் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறும் இடங்களை அவர்களுக்குச் சொந்தமாக்கிவிட்டார்கள்.

உதாரணமாக, தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு சண்டியர், அந்த ஊர் தாசில்தாரை ஒருநாள் முழுவதும் குதிரை மீது சவாரி செய்யச் சொன்னாராம். அந்தக் குதிரை போகும் வழி பூராவும் கற்கள் நாட்டப்பட்டு அதற்குட்பட்ட பிரதேசம் பூராவும் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டதாம்.

இந்த ரயத்துவாரி முறை அமுலாக்கப்பட்ட போது ஆந்திராவில் பெருவாரியாக ஜமீன்தாரிமுறை இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா மாவட்டங்களிலும் – ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, மற்றும் சேத்தூர், சாப்டூர் – போன்ற பல இடங்களிலும் ஜமீன்தார்கள்தான் இருந்து வந்தனர். இங்கனம் ஜமீன்தாரி முறை இருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெரும்பகுதி ‘ரயத்துவாரி’ முறைக்கே உட்பட்டிருந்தது. இந்த ‘ரயத்துவாரி’ முறைக்கு உட்பட  நிலச்சொந்தக்காரர்களுக்கு ‘மிராசுதார்கள்’ என்று பெயர்.

கொஞ்ச நிலம் வைத்துக்கோண்டிருக்கக் கூடிய குடும்பங்கள் மட்டுமே நிலத்தை உழுது சாகுபடி செய்யும். அதிக நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டு குத்தகைக்கோ அல்லது வார குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த விதமான உரிமையும் கிடையாது. நிலச்சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.

இப்படிப்பட்ட நிலைமையின் காரணமாக நிலத்தைத் தவிர பிழைப்பதற்கு வேறு தொழில் இல்லாத நிலையில், பாடுபடும் விவசாயிகளிடையே குத்தகைக்கு நிலம் எடுத்துக்கொள்வதற்காக போட்டி வளர்ந்தது இயல்பு.  இதனால் இந்தப் போட்டியில் வெல்வதற்காக ஒரு வேலையும் செய்யாத நிலச் சொந்தக்கார மிராசுதாரர்களுக்கு  நிலத்தில் விளைந்ததில் 80.85 விழுக்காடு குத்தகை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

இதைத் தவிர கொஞ்ச நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்து நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலங்களைக் கடன் கொடுத்தவர்களே வாங்கிக் கொண்டார்கள். இவ்விதம் இந்த ரயத்துவாரி முறையில் நிலங்கள் சில நபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இந்த மிராசுதாரர்களில் பலர் நிலத்தை விவயாயிகளிடம் குத்தகைக்கு விடாமல், கூலிகளை அமர்த்தி சொந்த சாகுபடி என்ற பெயரால் பண்ணைகளை நடத்தி வந்தனர். இந்தப் பண்ணைகளில் வேலை செய்யும் கூலிகளின் நிலைமையோ படுமோசமானது.

இவ்வாறு அநியாயக் குத்தகை மூலமாக விவசாயிகளையும்,  அநியாயக் கூலியின் மூலமாக பண்ணைக்கூலிகளையும் கொள்ளையடித்து வந்த அந்தப் பெரு மிராசுதார்கள் பிரிட்டிஷ் சர்க்காரை நீடூழி வாழ வேண்டும் என்று விரும்பியது இயற்கையே.

இவர்களைத் தவிர பிரிட்டிஷ் கம்பெனிகளுக்காக இங்கே விளைந்த பருத்தி, கடலை போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டில் வாங்கி ஏற்றுமதிக்காக விற்ற தரகு வியாபாரிகளும் உண்டு. அதே போன்று பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்த நாட்டில் விற்பனைக்காக இறக்குமதி செய்த துணி போன்ற பொருட்களை வினியோகம் செய்யும் தரகு வியாபாரிகளும் இருந்தனர். பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கவேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புவார்கள் ?

இப்படி ஆங்கிலேயர்களுடைய பேராசைக்காகவும், தங்களுடைய பேராசைக்காகவும் மற்றவர்களைக் கொடுமைப்படுத்திய ஜமீன்தார்கள், மிட்டாமிராசுதாரர்கள், பண்ணையார்கள், ராஜாக்கள் தான் நீதிக்கட்சியில் இருந்தனர்.

இந்தக் கட்சியின் தலைவர்களின் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகும்.

அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரா, ஒரிசா பகுதிகளில் இருந்த அநேகமாக எல்லா ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர்.  (தற்சமயம் ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற) கஞ்சாம், கோரக்பூர் மாவட்டங்களில் இருந்த

கல்லிக்கோட் ராஜா,
பர்ஐம்பூர் ராஜா,
பர்லாக்கிமிடி ராஜா,
சின்னக்கிமிடி ராஜா,

ஆந்திரா பகுதியில் இருந்த

பொப்பிராஜா,
பிட்டாபுரம் ராஜா,
செல்லப்பள்ளி ராஜா,
பொப்பிலி ராஜா,
தேபுரேல் ராஜா,
வெங்கிடகிரி ராஜா

போன்ற ஜமீன்தார்கள் ஜஸ்டிஸ் கட்சியில் பிரமுகர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்காக விஜயநகர மகாராஜாவும் நூஜ்வீட்  ஜமீன்தாரும் இருந்தனர்.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர், சாப்டூர் முதலிய பல ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். சில ஜமீன்தார்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருந்தனர்.

இந்த ஜமீன்தார்களைத் தவிர தமிழ்நாட்டில் இருந்த பல பெரிய மிராசுதார்கள் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர். உதாரணமாக, தஞ்சை மாவட்டத்தில் இருந்த நெடும்பலம் சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையம் பி.டி. ராஜன், பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி. சௌந்திர பாண்டிய நாடார், திருநெல்வேலி மாவட்டத்தில் மேடைதளவாய் முதலியார் போன்றோர்.

இவர்களைத் தவிர சென்னை பி.தியாகராயசெட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி நாடார் போன்ற தரகு வியாபார பிரமுகர்களும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இ300px-justice_party_1930sருந்தனர்.

எனவே, ஜஸ்டிஸ் கட்சியின் தலைமை அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திரப் பகுதியிலும் தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருந்தவர்களால் ஆனது. தங்களுடைய சுரண்டலுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைப் பாதுகாவலனாகக் கொண்டிருந்த நிலபிரபுக்களையும்,  ஆங்கிலக் கம்பெனிகள் இந்தியாவில் அடித்த கொள்ளையில் பங்கு கொண்ட தரகு வியாபாரிகளையும் கொண்டதாகவே இந்தத் தலைமை திகழ்ந்தது.

இவர்கள் மட்டுமின்றி சிலோன், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோ – சைனா (இன்று வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்டது) போன்ற காலனி நாடுகளில் வட்டிக் கடைகள் வைத்து அநியாய வட்டி வாங்கி கொள்ளையடித்தவர்களும் இந்தக் கட்சியில் இருந்தனர்.

இவர்களைத் தவிர டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், சர். ராமசாமி முதலியார் போன்ற பிரிட்டிஷ் சர்க்காரின் செல்லப்பிள்ளைகளும் இந்தக் கட்சியில் இருந்தனர். இவர்களுக்கு ‘சர், திவான், பகதூர், ராவ்பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் சர்க்கார் அளித்திருந்தது.  (ஆதார நூல் : ஆரியமாயையா திராவிட மாயையா?  விடுதலைப்போரும்  திராவிட இயக்கமும் பக்-14)

இப்படி மக்களை சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?

நீதிக்கட்சியைச் சேர்ந்த யாரும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடவில்லை. உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்கள் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

கொங்கு நாட்டு ஆர். வீரையன் (1886-1938)

இவர் 1886ல் கோயம்புத்தூர் குக்கிராமமொன்றில் பிறந்தார். இளமைக் கல்வியை சிக்கலின்றி முடித்தார். புறநகரங்களிலே பொதுப்பணத்தாலும் அரசாங்கச் சலுகைகளாலும் நடத்தப்படுகிற பள்ளிகள் பழங்குடி மாணவர்களைச் சேர்க்க மறுப்பதையும், தவறிச் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனி இடங்களில் அமர்த்தப்படுவதையும் மிக வன்மையாக கண்டித்தார். இந்த அவலக் கேட்டிலிருந்து விடுபட தெருத்திண்ணைகளிலும், மரத்தடிகளிலும் சிறு பள்ளிகளை தொடங்கி வைத்து, வன்கொடுமைகளை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனேயே தீர்வு காணுவதில் முனைப்பாகப் பணியாற்றினார்.

பழங்குடி மக்கள் அஞ்சலகத்திற்குள் செல்லக்கூடாது, பொதுப்பாதையில் நடக்கக்கூடாது என்ற கட்டுத்திட்டங்களை மீறிப் பலரை அழைத்துக் கொண்டு சென்று பலமுறை விதியோடு விளையாடினார்.

வீதியோரங்களில் வீடமைத்து வாடும் ஏழை எளியோருக்கு உரியவிடத்தில் நிலந்தந்து ஆதரிப்பது ஆளுவோருடைய கடமை என்பதை அன்றைய அரசாங்கத்திற்கு ஓயாமல் உணரச்செய்தவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அச்சுறுத்தியும் அடித்தும் கூலி தராமல் வேலை வாங்கும் கொடிய பழக்கத்தை ஆட்சியாளர் கவனிக்காமலிருக்கும் போக்கினை வன்மையாக கண்டித்து அவற்றிற்குப் பரிகாரம் தேடியவர்.

இவர் 1924ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத்  தெரிந்தெடுக்கப்பட்டார். தீண்டாமையால் விளையும் கொடுமைகளை நீக்க சட்டமன்றத்தில் சிறப்பாகவும்,  குறிப்பாகவும் பாடுபட்டார். தேர்தல் நேரங்களில் ஊர்ச்சாவடிகளுக்குள் பழங்குடி மக்கள் போக முடியாமை, உயர்த்தப்பட்டோர் பழங்குடி மக்களின் குடிசைகளை எரிப்பது, கால்நடைகளைக் கொல்வது போன்ற கொடுமைகளை அவ்வப்போது அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து தீர்வு காணுவார்.

ராவ் பகதூர் வி.ஐ. முனுசாமிப்பிள்ளை (1899-1955)

தாவர உற்பத்தி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். காலச்சூழ்நிலையால் சமுதாய அரசியல் போன்ற துறைகளில் இறங்கும் கட்டாயத்திற்குள்ளானார்.

1926லிருந்து 1937வரை அவர் தொடர்ந்து சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது நேர்மையான உழைப்பும் உண்மையான தியாகமும் இவரைப் பல்வேறு அமைப்புகளில் பங்குபெறச் செய்தன. உதகை மாவட்ட ஆட்சியின் தலைவராகவும் மாவட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உறுப்பினராகவும் பணியாற்றினார். கோவை, நீலகிரி மாவட்டங்களின் கல்வித்துறைகளின் தலைவராகவும், விவசாய மன்றங்களின் செயலாளராகவும்,  கூட்டுறவு நிலையங்களில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

1933ல் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பாகக் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார். பழங்குடி மக்கள் உரிமைக்காக, குறிப்பாக அரசியலில் தனி உரிமை பெறுவதிலே இவர் பேரார்வம் காட்டினார். பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கும், பொதுவாக நாட்டின் நலனிற்கும் மிகச் சீரிய வகையில் திட்டங்களை தந்துள்ளார்.

முதுபெரும் தலைவரான ஆர். சீனிவாசன் போன்றோர்களோடு இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியா முழுவதிலும் சென்று மாநாடுகளில் கலந்துகொண்ட, பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் அறிமுகமான தமிழகத் தலைவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவராவார்.

1938ல் சென்னை மாநில அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார். 1950லிருந்து 1955 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போதே இயற்கை எய்தினார்.

ராவ் சாகேப் எம்.சி. மதுரைப்பிள்ளை (1880 – 1935)

எளிய குடும்பத்தில் பிறந்து உண்மை உழைப்பாலும் நல்ல பண்பாலும் செல்வந்தரானார். ஏழை எளிய பட்டியல் வகுப்பு மக்களின் நலனிலே அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்று பணியாற்றினார். சென்னையில் பொதுவாக விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1921ல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் கதவடைப்பு ஏற்பட்டது. முதலாளி-தொழிலாளி என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை சாதிச்சண்டையாக உருவெடுத்தது. இதனை புளியந்தோப்புக் கலவரம் என்று குறிப்பிடுவார்கள். இந்த வேலை நிறுத்தத்தினால் துயர வாழ்க்கைக்குப் பலியான திராவிடர்-ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினர்களையும் தலைவர் மதுரைப் பிள்ளை சமமாக பாவித்து உணவும், பணமும் கொடுத்து ஆதரவு தந்தார்.

1925ல் இவர் சட்டமன்ற உறுப்பினாராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் தனித்து நின்றே பணியாற்றினார். ஒரு சில சமயங்களில் முதுபெரும் தலைவர் சீனிவாசனாருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் அரசியல் அதிகாரமானது பழங்குடி மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். தனித்தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி முறையே சிறந்தது என இவர் ஆரம்பத்தில் கருதினார்.

சமுதாய நன்மைக்காக, திராவிடர், ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேடையில் பலமுறை கூட்டியிருக்கிறார். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பணம், உடை, இருக்க இடம் போன்றவைகளைத் தந்து உற்சாகப்படுத்தினார். இவர் நகர மன்ற உறுப்பினராகவும் சில காலம் தொண்டாற்றியுள்ளார்.

பண்டிதமணி ஜி. அப்பாதுரையார்  (1890-1962)

இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியில் ஆதாரங்களோடு வாதிட்ட உண்மையான பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிகக்குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றைய காலத்து தூயதமிழ் இணைந்தோடும்.  கருத்தில் தரம் தெரியும். திறன் பேசும். அறன் ஒளிரும்.  சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உறக்கத்தை  உதறி செயலிலே வீரத்தை காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.

இவர் 1890ல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலேயே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங்கொண்டிருந்தார் என்பார்கள்.

1907ல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு சென்னை ராயப்பேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த தமிழன் பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே இம்மாற்றத்திற்குக் காரணமாகும். சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் கிறுத்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21 வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இளைஞர் பௌத்த சங்கத்தை கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறுநூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அரிய கூட்டங்களை நடத்தினார்.

1912லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார்.

1917ல் மாண்டேகு-செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது, 1924ல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது ஆகியவை இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. 1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினைப் படைத்துள்ளார். 1930லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும்.

“எங்களுக்கெல்லாம் முன்னரே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மக்களைத்  திருத்தியவர் இவர்” என்று அன்னாரது நீத்தார் நினைவு நாளில் ஈ.வே.ரா பேசியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுவாமி சகஜானந்தர் (1891 -1958)

1891ல் வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். சமத்துவக் கொள்கையிலும் தன்னலமற்ற பணியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவராய் வாழ்ந்தார். தமிழ் மொழியில் புலமையும், வேதம், வேதாந்தம் மற்றும் பல கலைகளிலும் ஆழ்ந்த பயிற்சியும் பெற்ற பின்னரே அவர் சமுதாய தொண்டினை மேற்கொண்டார்.

வேதங்களில் கோயில் வழிபாடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பழங்குடியினர் கோயிலினுள் நுழைவதால் மூர்த்தா அல்லது மூர்த்தியின் புனிதம் சீரழிந்துவிடும் என்னும் நம்பிக்கையை இகழ்ந்தார். இந்த மூட நம்பிக்கைக்கு வேதங்களில் ஆதாரமில்லை என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் தன் இன மக்களுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோயிலை கட்டினார். சிதம்பரத்தில் நந்தனார் மடத்தை நிறுவி மற்றவர்களைப்போல தாமும் ஒரு மடத்தை நிறுவ முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.

கல்விப்பணி: ஆன்மிகத்தெளிவு பெறவும் ஆத்மா உயர்வு அடையவும் கல்வி இன்றியமையாதது என்பது அவரது கருத்து. வேதம், வேதாந்தம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியவும் ஆய்வு செய்யவும் கல்வி ஒன்றே துணை செய்யும் என்பதை உணர்த்தினார். அறிவையும் பாதுகாப்பையும் எல்லா மக்களுக்கும் கல்வியே  பயக்கும் என்பதை எடுத்துக்காட்டினார். குறிப்பாக பழங்குடியினர் முழுமையான கல்வி பெற வேண்டும் என விரும்பினார். இக்குறிக்கோளோடு 1910ல் அவர் நந்தனார் பள்ளியை நிறுவினார். இன்றும் இப்பள்ளியை திறமையாக செயல்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

1925ல் சுவாமி அவர்கள் சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே கருத்து ஒருமித்த பழங்குடிச்சமுதாய மக்களின் மற்ற தலைவர்களோடு ஒன்று சேர்ந்து அவர் பணியாற்றினார். உணர்ச்சிபொங்கும் அவரது சொற்பொழிவுகள் மற்ற இன மக்களின் உள்ளத்தைக் கூடத்  தட்டி எழுப்பும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன. பழங்குடி மக்களின் ஆன்மிக உரிமைகளுக்காகவும் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.

பி.எம். வேலாயுதபாணி (1896-1962)

பூஞ்சோலை முத்துவீரர் நாவலர் ஈன்றெடுத்த செல்வர் நமது தலைவர் பி.எம்.வேலாயுதபாணி அவர்கள். 12 ஆண்டுகாலம் தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டாற்றும் பேறினை பெற்றார். தன் வட்டத்து மக்கள் பிற பகுதி மக்கள் என்ற பாகுபாடில்லாமல் பொதுவாக மக்கள் சுகாதாரத்தை கண்காணிப்பதோடு, ஆங்காங்கே பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும், சத்திரங்களையும் முதியோர் கல்விக் கூடங்களையும் துவக்கினார்; பிறர்  துவக்குவதற்குக் காரணமாகவும் இருந்தார். சமுதாய நலனிற்காகப் பல மன்றங்களைத் தோற்றுவித்ததோடு அவற்றில் உறுப்பினராக இருந்து செயல்களிலும் ஈடுபட்டார். கௌரவ நீதிபதியாகவும் சிலகாலம் இருந்தார்.

சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக ராணிப்பேட்டை தனித்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தமது மூத்த தலைவர்களோடு பங்குகொண்டு தொண்டாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொறுப்பிலிருந்து வழுவாமலும், சமுதாய முன்னேற்றத்தையே குறிக்கோளாகவும் எண்ணி செயல்பட்டார். திட்டங்கள் தீட்டப்படுகிறதா என்பதைக் காணுவதைவிட தீட்டிய திட்டங்கள் செயலுக்கும் பயனுக்கும் உகந்ததா என்பதைக்  கண்காணிப்பதுதான் இவரது கொள்கையாயிருந்தது. மாநில உணவுக் குழு, மதுவிலக்குக் குழு, மருத்துவமனை திட்ட ஆலோசனைக் குழு போன்றவைகளில் இவர் மிகவும் பங்கேற்று பல அரிய கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.

பி. பரமேஸ்வரன் (1909-1957)

பி.ஏ. பட்டதாரியான இவர் முதுபெரும் தலைவர் ஆர்.சீனிவாசன் அவர்களுடைய மகள் வழி பேரனாவார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் செயலாளராக 1935லிருந்து பத்தாண்டு காலத்திற்கு பணிபுரிந்திருக்கிறார். இந்த இளமைப் பருவ சமுதாய, அரசியல் துறைகளில் ஏற்பட்ட அனுபவங்களோடு இவரை நாடு தெரிந்து கொள்ளுமளவுக்கு இவரது துணிவும் முயற்சியும் பெருந்துணையாய் நின்றன எனலாம்.

தலைவர் என்.சிவராஜ் அவர்களின் தலைமையில் மாமேதை அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழி நின்று தொண்டாற்ற 1942லிருந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டது இவருக்குள்ள மற்றொரு சிறப்பு. அனைத்து இந்திய செட்யூல் வகுப்பினர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளராகத் திறம்படப்  பணியாற்றியுள்ளார். பின்னாளில் அகில இந்திய டிப்ரஸ்ட் கிலாஸஸ் லீகிற்கு துணைத்தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். 1948ல் சென்னை மாநில பதிவுபெறாத ஷெட்யூல் வகுப்பினர் அரசாங்க ஊழியர் சங்கத்தை ஆரம்பித்து நடத்தினார்.

செங்கற்பட்டு, மதுராந்தகம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராகவும் பதவி வகித்தார். பதவிக் காலம் முடியுமுன்பு இடையில் சென்னை மாநில அமைச்சரவையில் இவரை சேர்த்துக் கொள்ளத் தவிர்க்க முடியாத நிலையேற்பட்ட போது மேயர் பதவியிலிருந்து விலகி அமைச்சரானார். இங்கு பல குழுக்களில் பங்கேற்று பழங்குடி மக்களின் வாழ்க்கைக்கு உகந்த திட்டங்களை அரசாங்கத்திற்கு தந்தார்.

1964ல் இவர் தனது தலைமையில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, விவசாயம், வீட்டுமனை போன்ற பல்வேறு துறைகளில் தனது கருத்தினை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04

நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி

தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக்  கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தமென்னும் சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தியுள்ளதால், அச்சமயங்களை, எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கிறன்றனரா? அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கின்றனரா என்பது விளங்கவில்லை.

அங்கனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பெயர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு (நான்-பிராமிண்ஸ்) எனக்கூறுவது வீணேயாகும்.

‘‘15-9-1909, தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்

தாழ்த்தப்பட்ட தலைவர்களில் சிலர் ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆனால், அதில் கலந்துவிடவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையிலேயே அந்தத் தொடர்பு இருந்தது. அப்போதும் கூட ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றை பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் விமர்சித்தே வந்திருக்கின்றனர்.

ஏனெனில், உயர்த்தப்பட்ட சாதியினரான நீதிக்கட்சியினர் தங்களது சொந்த சாதியினரின் உயர்வுக்காக மட்டுமே உழைத்தவர்கள். அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரைப் பற்றி எஞ்ஞான்றும் கவலை இருந்ததேயில்லை. இதை மறந்து விடக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தாழ்த்தப்பட்டோரே வாதாடினார்கள், போராடினார்கள், தியாகம் புரிந்தார்கள். அதனால் தாழ்த்தப்பட்டோர் பெற்ற உரிமைகள் ஏராளம்….ஏராளம். இதைத் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்நாட் குறிப்புகளைப் படிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம்.  இந்த குறிப்புகள் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த பெருமக்கள்’ என்ற நூலில் தெளிவாக உள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும், உரிமையையும் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நீதிக்கட்சி தோன்றியது என திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?

நீதிக்கட்சி ஆரம்பித்ததின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்போம்.

அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதனால் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு 1851ஆம் ஆண்டு முதலே கூற ஆரம்பித்தது.

அதன் பின்னர் உத்தியோகங்களைத் தங்களது உறவினர்களுக்கே பிராமணர்கள் வழங்குகிறார்கள் என்று கலெக்டர்களுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அந்த ஆண்டு வருவாய்த்துறை வாரியம் ஒரு உத்தரவினை வெளியிட்டது.

கீழ்நிலை உத்தியோகங்களை ஒரு சில செல்வாக்குள்ள குடும்பங்கள் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டுமென்றும், தாசில்தார் பதவிகளில் ஒரு விகிதாச்சாரம் பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார்,  இங்கிலீஷ் ஹெட்கிளார்க் என்ற இரு பிரதான வருவாய் அதிகாரிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாதென்றும் அந்த உத்தரவு கூறியது.

ஆனால், இந்த உத்தரவை அதைப் பிறப்பித்த அரசே பின்பற்றவில்லை. இது ஏன் என்பது ஆராயத் தக்கது.

ஆனால், 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டது.

‘அரசுப் பதவிகளில் அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக் குறைப்பதும், அதிக அளவு இந்து பிராமணரல்லாதாரையும், முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப் பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான் அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்’

நாட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உத்தியோகங்களில் எந்த ஒரு சாதியும் ஏகபோகம் வகிப்பதைத் தவிர்ப்பதற்கு, அரசு தனிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணிப்புக் கண்காணிப்பாளர் கார்னிஷ் குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தந்து அவர்களைக் கைதூக்கிவிடவேண்டும் என்ற ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும் இதற்கு காரணம் இல்லை. ஒரு சாராரின் ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர் ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம் கொடுத்துவிடும் என்கிற அச்சமே அப்போது ஆங்கிலேயரிடம் மேலோங்கியிருந்தது. (திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

பிராமணரல்லாதாரின் மனதில் ஆங்கிலேயர் போட்ட இந்த தூபம் தான் பின்னாளில் நீதிக்கட்சியாக உருவெடுத்தது.dravidian_1779

தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தால், வேலையில் புறக்கணிக்கப்பட்டு, வேலை உயர்வு போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை உணர்ந்து அரசு ஊழியர்கள் சிலர் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் அமைப்பை 1912ஆம் ஆண்டில் உருவாக்கினர். இந்த அமைப்பிற்கு டாக்டர் சி. நடேசன் முதலியார் வழிகாட்டியாக விளங்கினார்.

இந்த இயக்கம் அமைவதற்குப் பாடுபட்டவர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள்:

சரவணபிள்ளை (பின்னால் தஞ்சையில் டெபுடி கலெக்டர் ஆனவர்)

ஜி. வீராசாமி நாயுடு

துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சார்ந்தவர்)

எஸ்.நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணியாற்றியவர்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வாங்கித் தருவதற்காக இந்த அமைப்பை இவர்களில் யாருமே துவங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தியோகத்துறையிலும் பதவி உயர்விலும் தாங்களும், தங்களுக்கு இணையான மற்ற உயர்த்தப்பட்ட சாதியாரும் புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கவே  இந்த அமைப்பை உருவாக்கினர்.

1913ஆம் ஆண்டு. டாக்டர் நடேச முதலியாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் லீக்கின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது அதனுடைய பெயரைத் ‘திராவிடர் சங்கம்’ என்று மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெயர் மாற்றப்பட்ட திராவிடர் சங்கமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை எதுவும் செய்ததாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில் 1915ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கடிதங்கள் ரெட்டி, நாயுடு, வேளாளர் ஆகியோருக்கான ஒருங்கிணைவை முதலில் குறிப்பிட்டது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், கோ.கேசவன்)

1916ம் ஆண்டு டாக்டர் நடேச முதலியார் திராவிட சங்க விடுதி என்ற விடுதி ஒன்றைத் துவக்கினார். திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் பிராமணரல்லாத மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக அந்த விடுதி செயல்படத் துவங்கியது. இவ்விடுதியும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. பிராமணரல்லாத மற்ற உயர் சாதி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் டி.எம்.நாயர் மற்றும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் ஆகியோர். நீதிக்கட்சியை இவர்கள் ஆரம்பித்த கதை ரசிக்கும்படியானது. முக்கியமானதும் கூட.

டி.எம்.நாயர் கட்சி ஆரம்பித்த கதை:

t_m_nairடி.எம்.நாயர் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். 1907ஆம் ஆண்டில் சித்தூர் நகரில் நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகித்தார்.

1904ஆம் ஆண்டு பிராமணர்கள் அதிகம் வாழக் கூடிய திருவல்லிக்கேணித் தொகுதியிலிருந்து அவர் சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து மும்முறை அந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ம் ஆண்டு அதே தொகுதியில் இந்திய சட்டசபைக்குப் போட்டியிட்ட பொழுது அவர் தோற்றார். தாம் தோற்றதற்கு அங்கு வாழும் பிராமணர்களே காரணம் என்ற புதுமையான (?) முடிவுக்கு அவர் வந்தார். இந்தத் தோல்வியானது அவரை பிராமணரல்லாத இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

சர்.பி.டி.தியாகராய செட்டியார் கட்சி ஆரம்பித்த கதை:

வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன் காங்கிரசிலேதான் இருந்தார்.

ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும் விட அதிகத் தொகையாகிய ரூ.10,000 அளித்தார் தியாகராய செட்டியார். இருந்தும், விழாக் கூட்டத்திற்குச் சென்றபோது அவரை மேடையில் உட்கார வைக்காமல் கீழே உட்காரச் செய்தார்களாம். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் அர்ச்சக, பரிச்சாரக, தரகர் – பார்ப்பனரெல்லாம் மேடையில் அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய அலுவலகத்தில் வேலைக்கு இருந்த சில பார்ப்பனச் சிப்பந்திகள் கூட மேடைமேல் வீற்றிருந்தனராம். ஆனால், இவரை மேடையில் வீற்றிருக்க யாரும் அழைக்கவில்லையாம்.

இந்தப் பார்ப்பன சாதித் திமிரை சகிக்க முடியாத சர்.பி.டி.தியாகராய செட்டியார், அந்த இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர் நாயர் பங்களாவுக்குச் செல்லச் சொன்னாராம். இந்த நிகழ்ச்சிகள்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாம்.

இதைப்பற்றி ‘டாக்டர் நாயர், தியாகராயர், நான்’ என்ற தலைப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பின்வருமாறு எழுதுகிறார்:-

‘ …ஆரம்பகாலத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர் (நாயர்). நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி.டி.தியாகராய செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே நாங்கள் எல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்காமல் இழிவு பற்றிய உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள்.’1

(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவள விழா மலர் 1992)

ஈவேராவும் தனது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீதிக்கட்சியை ஆதரித்தார். இது குறித்து “ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” என்ற எனது நூலில் விவரங்கள் உள்ளன.

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நான் இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  டி. எம். நாயர் சென்னை மாநகராட்சிக்கு மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மும்முறையும் அவர் தாழ்த்தப் பட்டவர்களைப் பற்றி எண்ணியதுண்டா? கவலைப்பட்டதுண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா? சேரியிலே புழுக்களாக அகப்பட்டுக் கொண்டு தினமும் இன்னல்களை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மாநகராட்சியில் பேசியதுண்டா?

இல்லை…இல்லை…இல்லை.

அதைப் போலவே தியாகராய செட்டியாரும் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? கெடுதிதான் செய்திருக்கிறார்.

1921ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட போராட்டம் சாதிக் கலவரமாக மாறியது. இதைக் காரணமாக வைத்து தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டோர்களை நகருக்கு வெளியே குடியமர்த்த வேண்டும்’ என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அன்றைய தொழிலாளர் தலைவரான எம்.சி.ராஜா இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நேர்மையற்ற செயல் ‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நீதிக்கட்சியினர்’ என்று தலைவர் ஜெ.சிவசண்முகம் பிள்ளையை எழுத வைத்தது.

அதேபோல 1921-22ல் தியாகராய செட்டியார் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிய விவாதத்தில் ஆதரவான கருத்து ஏதும் கூறாமலே இருந்துவிட்டார்.

இப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யாத, அவர்களுக்கு எதிராக இருந்தவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியை ஆரம்பித்தனர்?

கல்வியிலும் செல்வத்திலும் வளமாக இருந்த நாயருக்கும் தியாகராய செட்டியாருக்கும் ஒருவேளை கட்சியிலும் மேல் சாதியாரிடத்தும் மதிப்பும் வாய்ப்பும் கிடைத்து இருக்குமானால் இந்த ‘இன உணர்வு’ உண்டாகியிருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இவர்களுடைய சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டதாலேயே பிராமணரல்லாத கட்சியை ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் நீதிக்கட்சி உருவானது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் தியாகராயச் செட்டியார் ‘பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’யை வெளியிட்டார். அந்த அறிக்கை, பிராமணரல்லாத உயர்சாதி மக்களுக்கான – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அறிக்கையாகத்தான் வெளிவந்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.

‘‘…..(கல்வித்துறையில்) தாமதமாக நுழைந்திருந்தாலும் பிராமணரல்லாத சமுதாயங்கள் முன்னேறத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள். செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர்கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

பிராமணர்களில் காணப்படுவதைவிட சில பிராமணரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (ஆண்-பெண் இருபாலரும் கல்வி கற்கும் சூழ்நிலையிலும்) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சூழ்நிலையாகும். எது காரணம் பற்றியோ கல்வி இலாக்காவினர் பிராமணப் பெண்களுக்கும், குறிப்பாக பிராமண விதவைகளுக்கும் ஏதோ அவர்கள் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக்கொண்டு கல்விச் சலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் பிராமணரல்லாதார் அடக்கமாக அதேநேரம் பயனுள்ள வகையில் இந்த மாகாணத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் இதுவரையில் வேறுவழியின்றி பின்னால் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். பிராமண ஜாதியினர் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்யோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் அறிவுத்துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் பரீட்சைகளில் வெற்றி பெறும் திறமை ஒரு தனித்திறமை என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், மற்றவர்களைவிட ஆங்கிலம் கற்ற ஆடவர் தொகை அதிகம் கொண்டிருக்கிற ஒரு சிறு வகுப்பு, இதர வகுப்புகளில் ஏதோ குறைந்த அளவாவது திறமை, ஞானம், பண்பாடு கொடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அரசாங்க உத்தியோகங்களில் பெரிதும், சிறியதும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமான அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கப்படுவதுதான்!” ….

(திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற தங்கள் சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனரே – நாயர் பெண்கள் முன்னேறி வருகின்றனரே, அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிடுகின்றனரே இந்த பிராமணர்கள்! என்ற ஆதங்கம்தான் இதில் தொனிக்கிறது என்பதைக் கூர்ந்து படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றிய கவலை இதில் இல்லை. ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள்தானே!

ஆனால், என்ன செய்தால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து, ஆக்கபூர்வமாகச் செயல்படுத்திய பெரியோர் பலர் உண்டு. உதாரணமாக,

ராவ் சாகேப் எல்.சி. குருசாமி (1885- 1966)

1920 முதல் பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றிருந்தார். இருபத்திரண்டு வருட காலம் அவர் கௌரவ நீதிபதியாகப் பதவியை அலங்கரித்தார்.

நாகரிகமான, பண்பாடு நிறைந்த வாழ்க்கையின் முதல்படியானது கல்விதான் என்னும் கோட்பாட்டை அவர் கொண்டிருந்தார். அதனால் 1921ல் இரண்டு இரவுப்பள்ளிகளை நிறுவினார். அதற்காக அவர் இரண்டாயிரம் ரூபாய் உதவிப்பணமும் அக்கால அரசாங்கத்திடமிருந்து பெற்றார். புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பு, ராயபுரம், மைலாப்பூர், பெரியமேடு ஆகிய பகுதிகளிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். செங்கல்பட்டு, பொன்னேரி முதலிய முக்கியப் பகுதிகளில் பகல் நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார். கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.

1921ல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார். புளியந்தோப்பு, வேப்பேரி, மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மக்களைக் குடியேற்ற அவர் நிலங்களைப் பெற்றார். ஆதிக்குடி மக்கள் கல்வி, பொருளாதார வகை முதலியவற்றில் வலிமை பெற்றால், பிறகு தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தாமாகவே ஒழிந்துவிடும் என்ற கருத்தையே அவர் மேற்கொண்டிருந்தார்.

1926ல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச் சங்கத்தில் இணைந்திருந்தார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927ல் அவர் ‘ராவ் சாகேப்’ என்ற பட்டம் பெற்றார். செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய பகுதிகளில் அவர் கல்வி நிறுவனங்களில் தொண்டாற்றினார்.

1929ல் அவர்  பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார்.

1932ல் டில்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.

1937ல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு அழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.

தளபதி எம். கிருஷ்ணசாமி, (1917 – 1973)

வறுமையின் பிடியிலே சிக்கினாலும் இலட்சியத்தின் மதிப்பினை குறைத்துவிடாமல் வாழ்ந்தவர்களிலே தலைவர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்பானவராவார். ஆசிரியராகவும் பின்னாளில் வணிகத்திலும் தம் வாழ்வை துவக்கினார்.

தமிழ்ப் பழங்குடி மக்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்த அவர்  ஏற்கனவே 1920ல் தோற்றுவிக்கப்பட்ட  பழங்குடி மக்கள் சம்மேளனத்தின் கொள்கைகளை ஏற்று 1940 முதல் பணியாற்ற முன்வந்தார். இடையில் புத்த பிரச்சாரத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அவரை பல்வேறு பகுதி மக்களிடையே ஈடுபாடு கொள்ளச் செய்தது.

தலைவர் என்.சிவராஜ் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின் விளைவாக மாமேதை அம்பேத்கர் 1942லும் 1956லும் ஷெட்யூல் வகுப்பினர் சம்மேளனம், இந்தியக் குடியரசுக்கட்சி போன்ற அமைப்புக்களை ஆரம்பித்தார். இந்த அமைப்புகளின் தலைவராக சிறப்பாக தொண்டாற்றினார் இவர்.

பழங்குடி சமுதாய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, சாதி ஒழிப்புப் போராட்டம், விலைவாசி போராட்டம் போன்றவைகளில் பெரும் பங்கேற்று சிறை சென்றார். பழங்குடிச் சமுதாயம் விழிப்படைய தனது சமத்துவ சங்கு என்ற பத்திரிகையின் மூலமாக சங்கநாதம் செய்தார். வளர்ந்த கட்சிகள் வலிய வந்து அழைத்தும் பதவிக்கோ, பணத்திற்கோ தமது இலட்சியத்தை விட்டு கொடுக்காமல் மறுத்து தேர்தல்களில் எதிர்த்து நின்றார்.

ஏழை பங்காளன் தொண்டு வீ. வீராசாமி, எம்.பி (1919-1995)

கல்லூரியில் படிக்கும்போது தான் தங்கியிருந்த திருச்சி ஹரிசன சேவாசங்க தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு மட்டும் கஞ்சி ஊற்றப்படுவதைக் கண்டு வருந்தினார். இந்த அவலத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள்  தலைவர் தந்தை சிவராஜின் கவனத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.மருதையனின் கவனத்துக்கும் கொண்டு சென்று தீர்வு கண்டார். இங்கனம் சமூக நலனுக்காக உழைத்தாலும், கல்வியிலும் கவனமாய் இருந்து 1941ல் பி.ஏ.பட்டம் பெற்றார்.

1945ல் திருச்சி தக்கர்பாபா ஹரிஜன மாணவர்கள் இல்லத்திலிருந்து தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர்களை அற்பக் காரணங்களுக்காக இல்ல நிர்வாகிகள் வெளியேற்றினர். மாணவர்களின் பரிதாப நிலையைக் கண்டு வீராசாமி 31-1-1945 அன்று இரவோடு இரவாக தம் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் மாணவர் இல்லமாக மாற்றினார்.

தந்தை சிவராஜ், ஈவேரா போன்றவர்களிடம் இருந்த நெருக்கத்தால் 1950ல் தாம் பணிபுரிந்த திருச்சி வானொலி நிலையத்திலிருந்து விலகி முழுநேரப் பொதுநலத் தொண்டரானார்.

1950ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ‘தொண்டு’ என்ற பத்திரிகையை (தமிழிலும், ஆங்கிலத்திலும்) தொடங்கி 20 வருடங்கள் தொய்வில்லாமல் நடத்தினார். 1952 நாடாளுமன்ற தேர்தலில் மாயவரம் (மயிலாடுதுறை) தாழ்த்தப்பட்டோர் தொகுதியில் தனிச்சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏழை மாணவர்களின் நன்மைக்காக பல நூல்நிலையங்களோடு கூடிய மாணவர் இல்லங்களை உருவாக்கினார்.

1974ல் சமூக புரட்சி என்ற இதழையும் (4 வருடங்கள்) 1980ல் (பௌத்த மார்க்கம்) என்ற இதழையும் (2 வருடங்கள்) நடத்திய பெருமை வீராசாமிக்கு உண்டு.

பறை அடிப்பதையும் , இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் வேலை செய்வதையும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நிறுத்த வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தார். 1980ல் தம் குடும்பத்துடன் துறையூரில் பௌத்தத்தைத் தழுவினார்.

ராவ் பகதூர் ஜெகந்நாதன் (1894 – 1954)

தனது காலத்திலே அரசியல் சமுதாய துறைகளில் உழைத்துக்கொண்டிருந்த தலைவர்களுடன் இணைந்து தொண்டாற்றி விரைந்து முன்னேறினார். இரவுப் பள்ளிகளையும் மாணவர் விடுதிகளைத் துவக்கி வைப்பதிலே இவர் அதிகம் அக்கறைக் காட்டினார். 1920ல் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1929லிருந்து 1938 வரை மாநகராட்சி உறுப்பினராக இருந்து திறம்பட தொண்டாற்றினார். சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சென்னை மாநில டிப்ரஸ்டு வகுப்பினர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், மாநில கொள்கை பரப்பும் தலைவராகவும், மற்றும் எண்ணற்ற அமைப்புகளிலும்  பொறுப்பேற்று உழைத்தார்.

அயல்நாட்டிலிருந்து இந்திய தேச நிலைமையையும், நிதி, சமுதாயம் போன்ற நிலைமைகளையும் ஆராய வந்த குழுக்களிடம் இவரது இன்றியமையாத அரிய கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் வேண்டிக் கொண்டது. எனவே, இவர் ராயல் கமிஷன், சைமன் கமிஷன், லோத்தியன் கமிட்டி, ஹாமென்ட் கமிட்டி போன்ற தலைசிறந்த அரசியல் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவினரிடம் தனது ஆலோசனைகளை வழங்கினார்.

1933ல் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

சமுதாய நன்மைகளுக்காக மக்களை விழிப்பூட்ட பல மாநாடுகளில் இவர் பங்கேற்று நிலைமைகளை மக்களுக்கு அறிவுறுத்தியும், அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் மக்கள் பயனடைய வகை செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் நிலப்போராட்டங்களை முதுபெரும் தலைவர் ஆர். சீனிவாசன் அவர்களுடனிருந்து நடத்தி ஏழை மக்கள் நிலங்களைப் பெறுவதற்கு பேருதவியாக இருந்தார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1904 – 1992)

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை – மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் 26-12-1904ல் பிறந்தார் அன்னை மீனாம்பாள். அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ.மு.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர்; வள்ளலுங்கூட. இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர்.

அன்னையவர்களின் தந்தையார் திரு.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.

அன்னை மீனாம்பாள் அவர்களுடைய பொதுப்பணி 1928ல் சைமன் குழுவினரை ஆதரித்த முதல் மேடைப் பேச்சில் துவங்கியது. 1930லிருந்து அண்ணல் அம்பேத்கரின் பணிகளை பொதுமக்களிடம் தமிழில் எடுத்துக் கூறியவர். ‘என் அன்பு சகோதரி’ என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதவிகள் அவரைத் தேடிவந்தன. அவற்றில் சில :

துணைமேயர், சென்னை மாநகராட்சி,

ஆனரரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட்,

உறுப்பினர் மெட்ராஸ் பிரசிடென்ட் அட்வைசரி போர்டு,

உறுப்பினர் போஸ்ட்வார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி,

உறுப்பினர் மெட்ராஸ் யூனியவர்சிட்டி (செனட்)

அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தன் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் அன்னையவர்கள் சிறப்பித்திருக்கிறார்.

தலைவி ஜோதிவேங்கிடசெல்லம் (1917 – 1992)

ஜோதி அம்மாள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் 27-10-1917ல் பர்மாவிலுள்ள மேம்யோ என்ற ஊரில் குப்புராம் தம்பதியிருக்கு பிறந்தவர். ரங்கூனில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்தவர். 1934 சென்னைக்கு வந்ததும் 1935ல் திரு பி.வி.எஸ்.வேங்கிட செல்லம் அவர்களை மணந்தார். 1961ல் கணவர் கார் விபத்தில் காலமான பிறகு தொழிலகத்திற்குப் பொறுப்பேற்றார்.

இந்திய வணிகர்களில் தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற வேங்கிட செல்லம் கம்பெனியார் குறிப்பிடத்தக்கவர். இந்த நிறுவனத்தின் ஊறுகாய் வகைகள் 1900ல் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தது. லண்டனில் இன்றைய எலிசபெத்ராணியாரின் பாட்டனார் எட்வர்ட் காலத்திலும், தந்தை ஜார்ஜ் மன்னர் காலத்திலும் அண்மை காலம் வரையிலும் வின்சர் அரண்மனையில் பி.வி.நிறுவனத்தின் ஊறுகாய் வகைகளைத்தான் விரும்பி உண்டு வந்தார்கள்.

1938லிருந்து இவர் பொதுப்பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபாடு கொண்டார்கள். 1940ல் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும் 1950ல் மாநில சமூக நலப் போர்டின் துணைத்தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் (செனட்) உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952ல் அவருடைய கணவர் சென்னை செரீப்பாக இருந்தபோது திரு.ராஜகோபாலாச்சாரியாரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜோதியம்மாளுடைய ஆற்றலையும், செல்வாக்கையும் கண்ட ராஜாஜி அவர்கள் தமது அமைச்சரவையில் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொண்டார். அன்றுவரை சமூக சேவகியாக இருந்த அவர் அமைச்சர் பொறுப்பைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டது அவருடைய திறமைக்கு நல்ல சான்றாகும்.

பிறகு 1962ல் திரு.காமராசரின் அமைச்சரவையிலும், திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராக இருந்தார்.

1976வரை கலைக்கப்பட்ட சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தார். 1974ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 1978ல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் புரிந்த விளம்பரமில்லாத சாதனைகள் பல. அவற்றில் சில: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை பி.ஜ.எம்.கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா சித்த வைத்தியக் கல்லூரி ஆகியவை அவர் காலத்தில் அவர் முயற்சியால் தொடங்கப்பட்டவை. அம்மையாருடைய மூதாதையர் ஏற்கனவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கிடாசல ஏழையர் பள்ளி ஒன்றை நிறுவி இருந்தார்கள். அது இன்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் !

‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….’’

என்று எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர் ராசதுரை உண்மையைத்தான் எழுதினாரா?

தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத்தைப் பெருமைபட எழுதலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு சமுதாயத்துக்காக உழைத்த பல தலைவர்களின் வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, தான் சார்ந்திருக்கிற இயக்கத்தால்தான் உரிமை போராடி பெறப்பட்டது என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா?

ஒரு சமுதாயத்தையே கீழ்த்தரமாக எண்ணி எழுதுகின்ற எழுத்தல்லவா அவர் எழுதியது?

அதைப் போலவே ‘பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய’ என்றுதான் இவரின் முன்னோடிகளான நீதிக்கட்சியினரும் எழுதினர்.

இப்படி எழுத என்ன காரணம்?

இவர்களுக்குள் இருப்பது ஜாதியம் மட்டுமே என்பதுதான் காரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05

தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை ?

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆகவே இந்த வகுப்புரிமை ஆணையை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம் 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை முன்வைத்தது. இந்தச் சட்டம் இந்திய அரசுச் சட்டம் [The Government of India Act 1919] எனப்படுகிறது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது. அதன்படி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருக்கும். தேர்தலில் வென்ற இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வர். அவர்கள் மாகாண அரசுகளை அமைத்துக் கொள்ளலாம். இதுவே இரட்டை ஆட்சி முறை. இந்த முறையின்படி 1920 மற்றும் 1923ல் நடந்த தேர்தல்களில் ஆங்கில அரசுக்கு ஆதரவான கட்சியான நீதிக் கட்சி வென்றது.

1920 டிசம்பர் 17ம் நாள், சென்னை மாகாண அரசின் முதல் அமைச்சரவையாக நீதிக்கட்சி பதவிப் பொறுப்பை ஏற்றது.

நீதிக்கட்சியைச் சார்ந்த ஓ. தணிகாசலம் செட்டியார் 5-8-1921 அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

‘‘பிராமண மனுதாரரைவிட பிராமணரல்லாத மனுதாரர் குறைவான தகுதியுடையவராக இருப்பினும் அரசுப் பணிகளின் நியமனத்துக்கு உரிய குறைந்த பட்சத் தகுதிகளைப் பெற்றவராக அவர் இருந்தால் ரூ 100/-க்கும், அதற்கு மேற்பட்டும் மாத வருமானம் உள்ள பதவிகளில் பிராமணரல்லாதார்க்கு 66 சதவீதமும் ரூ100/-க்குக் குறைவாக மாத வருமானம் உள்ள பதவிகளில் 75 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.’’

என்பதே தணிகாசலம் அவர்களின் தீர்மானம்.

cnatesamudaliarஇத்தீர்மானத்தை வழிமொழிந்த சி. நடேச முதலியாரின் உரையில் இட ஒதுக்கீட்டுக்கான தருக்க நியாயத்தைவிட அரசாங்க ஆதரவுத் தன்மை ததும்பி வழிந்தது. அது:

“ஐயா, இந்தியாவில் பிரிட்டன் பேரரசுக்கான அடித்தளம் இடுதலில் பிரிட்டன் அரசுக்கு பிராமணர் அல்லாதார் துணை செய்துள்ளனர்…..பிரிட்டன் அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம் அதைக் காப்பாற்ற அவர்கள் விரைந்தோடி வருகின்றனர். இந்த மண்ணின் மக்களின் நலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.”

(சென்னை மாகாண சட்டமன்ற நடவடிக்கைகள், தொகுப்பு 2,1921,பக்-425)

தணிகாசலத்தின் தீர்மானத்துக்கு சட்ட உருவம் கொடுப்பதில் நெருக்கடி ஏற்படுமென்பதை உணர்ந்து இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆங்கிலேய அதிகாரி ஏ. ஆர். கிநாப் இதிலிருந்து தப்புவிக்க ஒரு வழியைக் குறிப்பிட்டார்.

1854 இல் வெளியிட்ட வருவாய்த் துறையின் ஆணையை அரசின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அவர் சொன்னதன் அடிப்படையில் இதில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டு 16-9-1921 முதல் வகுப்புவாரி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

அவ்வாணையில் அரையாண்டு காலத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையைப் பின்வரும் தலைப்புகளின் கீழ்வகைப்படுத்தி அரசுக்கு அரையாண்டு விவர அறிக்கைகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

1. பிராமணர்கள்

2. பிராமணரல்லாத இந்துக்கள்

3. இந்தியக் கிறிஸ்துவர்கள்

4. முகம்மதியர்கள்

5. ஜரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள்

6. ஏனையோர்

இவ்வாறு கூறுகிறது அரசு ஆணை எண்-613.

இந்த வகுப்புரிமை ஆணையை கூர்ந்து கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரை குறிப்பாக உணர்த்தாமல் ‘ஏனையோர்’ என்ற தலைப்பில் அடைத்துவிட்டு கடைசியில் தள்ளி விட்டனர்.

இது நீதிக்கட்சி அரசால் பிறப்பிக்கப்பட்டது எனக் குறிப்பிடுதல் முழுமையான உண்மையன்று. நீதிக்கட்சியின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் ஆங்கிலேய அதிகாரியால் திருத்தம் செய்யப்பட்டும் பிராமண உறுப்பினர்கள் உட்பட அனைவராலும் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசாணை. இந்த அரசாணையை, ஆங்கிலேயரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட துறை வெளியிட்டது. இது ஒருமை மன உணர்வுடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த அரசாணையில் தெளிவாக இன்ன வகுப்பார்க்கு இவ்வளவு இடங்கள் எனக் குறிப்படாததால் இதை நிறைவேற்ற இயலவில்லை.

நீதிக்கட்சி அரசு மறுபடியும் இரண்டாவது வகுப்புரிமை ஆணையை 15-8-1922 ஆண்டு வெளியிட்டது. (அரசு ஆணை எண்-658).

முதலமைச்சரவையின் பதவிக்காலம் முடிந்தவுடன் 1923 செப்டம்பர் 11ம் நாள் அமைச்சர்கள் தமது பதவிப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டனர்.

இந்த இரண்டாவது வகுப்புரிமை ஆணையும் சட்டமாகவில்லை என்பதை கீழ்க்கண்ட செய்தியிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

3-12-1950 அன்று திருச்சியில் நடைபெற்ற வகுப்புவாரி உரிமை மாநாட்டில் எஸ். முத்தையா முதலியார் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீதிக்கட்சி பதவிக்கு வந்ததும் சட்டசபையிலேயே வகுப்புவாரிப் பிரநிதித்துவக் கோரிக்கையை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானம் 1920ம் ஆண்டிலேயே நிறைவேற்றம் ஆகியது என்றாலும், 1928 வரை அதை சட்டமாகக் கொண்டுவர முடியாமல்தான் இருந்தது.

நூல்: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?

இரட்டையாட்சி முறையின்படி, 1926 நவம்பர் 8ம் நாளன்று சட்டமன்றத்திற்கான மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் கைப்பற்றினர். அத்தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும் ஆட்சியை அமைக்கக் கூடிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

200px-psubbarayanஎந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரமுடியாத நிலையில், ஆளுநர் கோஷன், அரசின் நியமன உறுப்பினர்களான 34 பேர்களுடைய ஆதரவைத் தருவதாக வாக்குறுதி தந்து, சுயேச்சையாக வெற்றிபெற்று வந்திருந்த டாக்டர் பி.சுப்புராயன் அவர்களை அழைத்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

டாக்டர் சுப்புராயன் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும், ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும் அமைச்சரவையை அமைக்க இசைந்தார். தம்மை முதலமைச்சராகவும் சுயராஜ்ஜியக் கட்சியினரான ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரையும் அமைச்சர்களாகவும் கொண்ட அமைச்சரவையை அமைத்து ஆட்சிப் பொறுப்பை 4-12-1926ல் ஏற்றார்.

ஒரு சிறுபான்மை உடைய அமைச்சரவை, ஆளுநர் ஆதரவோடும் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடும் ஆட்சி புரிந்து வருதலை நீதிக்கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. புதிய அமைச்சரவையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பணியாற்றி வந்தனர்.  இருமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களை இயற்றினர்.

சுயராஜ்ஜிய கட்சியைச் சேர்ந்த சுவாமி வெங்கடாசலம் செட்டி 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 23வது நாள் டாக்டர். சுப்புராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு. பி. இராமச்சந்திர ரெட்டியும்,  திரு. எம். கிருஷ்ண நாயரும் ஆட்சியில் ஊழல்கள் மலிந்துவிட்டன என்றும் அமைச்சரவையானது நிர்வாகத் திறமையில்லாமல் செயல்படுகிறது என்றும் கூறி, அமைச்சரவையை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் வாதிட்டனர்.

அத்தீர்மானம் தோல்வி அடைந்தது.

பாராளுமன்ற சனநாயக முறையில் நேரடியாகப் பதவிகளை அனுபவிக்கும் அரசியல் நோக்கம் கொண்ட நீதிக்கட்சியினர், தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தனிப்பட்ட நலன் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனா, ஈவேரா டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார். ஏனெனில், டாக்டர் சுப்பராயன் ஆளும் கட்சியினர். அத்தோடு ஆங்கிலேயரால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்டவர்.  ஆளும் கட்சியினர் எவராயினும் அவரை ஒப்புக்கொண்டு மறைமுகமாகப் பதவிகளைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டவர் ஈவேரா. அதனால், அவர் டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார்.  பார்ப்பனரின் ஆதிக்கம் உள்ள சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆட்சிக்கு வராமல் பார்ப்பனரல்லாத சுப்பராயனின் கட்சியை ஆளுங்கட்சியாக ஆக்கியமைக்கு ஆதரவு தெரிவிப்பதில் பார்ப்பனரல்லாதாரின் நலன்கள் உள்ளது என்று கூறினார்.

முன்னாள் நீதிக்கட்சி உறுப்பினரும், பனகல் அரசரின் செயலரும், பார்ப்பனர் அல்லாதாருமான டாக்டர் சுப்பராயனின் அமைச்சரவை பார்ப்பனர் அல்லாத அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை எனக் கூறி ஆளுநரின் செயலில் பாராளுமன்ற சனநாயக உணர்வு இருப்பதாகப் போற்றினார் ஈவேரா.  (குடி அரசு 9-1-27).

இந்த வேறுபாட்டின் காரணமாகவே சுப்பராயன் அமைச்சரவை மீது நீதிக்கட்சியினர் கொணர்ந்த இரண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களையும் ஈவேரா எதிர்த்தார் (குடியரசு 29-3-27) மற்றும் (30-8-27).

இரண்டு தடவைகளிலும் காங்கிரசு மற்றும் சுயராஜ்ஜியக் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் டாக்டர். சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை தப்பியது.

ஒத்த நோக்கங்களைக் கொண்ட காங்கிரசு கட்சியுடன் இணைவதாக நீதிக்கட்சி தலைவர்கள் 1927 ஏப்ரலில் அறிவித்தனர். இதன்பின் கூடிய சிறப்பு மாநாட்டில் (கோவை 2-7-1927) நீதிக்கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் சேர இசைவளிக்கும் தீர்மானம் கொணரப்பட்டது. கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஜே.எஸ்.கண்ணப்பர் இதை ஆதரித்தனர். ஆனால், ஆங்கில அரசிற்கு சாதகம் இல்லாத இந்தத் தீர்மானத்தை ஈவேரா எதிர்த்தார்.

பிரிட்டிஷ் அரசு 1927 நவம்பர் 8ம் நாளன்று ஜான் சைமன் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்தது.

இரட்டையாட்சியின் பயன்களை இதுவரை அனுபவித்த நீதிக்கட்சி இப்பொழுது பதவியில் இல்லாத பொழுது ‘இரட்டையாட்சி இருக்கும் வரையில் இனிமேல் பதவிக்கு வர விரும்பவில்லை’ எனக் கோவை மாநாட்டில் தீர்மானித்தது. மேலும் ‘இந்தியர் எவரும் இல்லாததால் சைமன் ஆணைக்குழுவுடன் எவ்விதக் கூட்டுறவும் வைத்துக் கொள்வதில்லை’ எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஈவேரா, சைமன் ஆணைக்குழுவை வரவேற்றார். பொதுமக்களை ஏமாற்றும் காங்கிரசார் முயற்சியில் நீதிக்கட்சியினர் சிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். (குடியரசு 20-11-27)

சி.பி.ராமசாமி அய்யரை மீண்டும் சட்ட அமைச்சராக மறுநியமனம் செய்த ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரைப் பதவியிலிருந்து விடுவிக்கவும் கோரும் ஈவேராவின் தீர்மானம் நீதிக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளின் பேரில் கைவிடப்பட்டது.

oct25கோவை மாநாடு முடிந்தபின் அதன் தீர்மானங்களுக்காகத் தம்மிடம் பனகல் அரசர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என ஆளுநர் வைசிராய் இர்வினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சட்டமன்றத்தில் சைமன்குழு நியமனம் பற்றிய பிரச்சினை விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் டாக்டர் பி.சுப்புராயன் தீர்மானத்தை எதிர்த்து சைமன் குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் குழுவிற்கு எதிராக வாக்களித்தனர்.

அமைச்சரவைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர் பி.சுப்புராயன் அவர்கள், தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்து பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும் பதவிகளை தாமாகவே இழக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் கோஷன், டாக்டர் பி.சுப்புராயன் அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி, நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின் உதவியை நாடினார்.

நீதிக்கட்சியினர்க்கு மனநிறைவு ஏற்பட வேண்டி, நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.எம்.கிருஷ்ண நாயரை நிர்வாக ஆலோசனை அவையின் சட்ட உறுப்பினராக ஆளுநர் நியமித்தார். இரட்டையாட்சி இருக்கும் வரையில் பதவியேற்பதில்லை என்று நீதிக்கட்சி தீர்மானம் இயற்றிய பின்னர் இது நடந்தது என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்தான் பனகல் அரசர் ஒத்துழைப்பை அளிக்க முன்வந்தார்.

திரு.எஸ்.முத்தையா முதலியார், திரு.எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரையும் சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து, டாக்டர் பி.சுப்புராயன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வைத்தார் பனகல் அரசர்.  அதோடு அந்த அரசிற்கு நீதிக்கட்சியின் ஆதரவை அளிக்க முன்வந்தார்.

(மணத்தட்டை சேதுரத்தின அய்யர், ஒரு பிராமண மிராசுதார்; சுயராஜ்ஜியக் கட்சியின் வட்டக் கழகத்தின் தலைவராகவும், மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.)

இந்த அமைச்சரவை 1928 மார்ச் 16ம் நாள் பதவி ஏற்றுக்கொண்டது.

சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து அழைத்து வரப்பட்ட எஸ்.முத்தையா முதலியார் கொண்டுவந்ததுதான் மூன்றாவது வகுப்புரிமை ஆணை.

15-12-1928ம் ஆண்டு இவ்வாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை கீழ்வருமாறு குறிப்பிட்டது:-

(அ) ஒவ்வொரு வகுப்பாரிலும் தகுதியும் தக்கவராகவும் உள்ள வேட்பாளர்களிடமிருந்து அலுவலர்களை நியமனம் செய்யப்படுவது. ஒவ்வொரு 12 பணியிடங்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கும் பின்வருமாறு விகிதாச்சார நியமனமாக இருக்க வேண்டும்:

பிராமணரல்லாதார் (இந்து)  …..   5

பிராமணர்கள் …..   2

முகம்மதியர்கள் …..   2

ஆங்கிலோ-இந்தியர் மற்றும் கிறிஸ்தவர்கள் (ஜரோப்பியர் உள்பட)  …..   2

ஏனையோர் …..   1

(ஆ) இத்தகைய நியமனங்கள் பின்வரும் வரிசைப்படி செய்யப்பட வேண்டும்.

1. பிராமணரல்லாதார் (இந்து)

2. முகம்மதியர்

3. பிராமணரல்லாதார் (இந்து)

4. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்

5. பிராமணர்

6. பிராமணரல்லாதார் (இந்து)

7. ஏனையோர்

8. பிராமணரல்லாதார் (இந்து)

9.  முகம்மதியர்

10. பிராமணரல்லாதார் (இந்து)

11. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்

12. பிராமணர்

திரு.எஸ். முத்தையா முதலியார் கொண்டுவந்த இந்த ஆணை முதன்முதலாக இன்னின்னார்க்கு இத்தனை இடங்கள் என்று வரையறை செய்தது.

இந்த ஆணையிலும் தாழ்த்தப்பட்டோரை ஒரு வகுப்பாக கொள்ளாமல் ‘ஏனையோர்’ என்ற பெயரில் அடைத்து வைத்து ஒரே ஒரு இடத்தை அளித்தனர். தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு மிகக் குறைந்த முன்னுரிமையையே அளித்திருப்பதை பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கா இந்த வகுப்புரிமை ஆணைகள்? என்ற கேள்விதான் எழுகிறது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தில் பிராமணர்களைவிட, முகம்மதியர்களைவிட, கிறிஸ்தவர்களைவிட தாழ்த்தப்பட்டோர்,  மக்கள் தொகையில் அதிகமாக இருந்தனர். ஆனால் பிராமணர், முகம்மதியர், கிறிஸ்தவர் ஆகியோர்க்கு இரண்டு இடங்களை தந்துவிட்டு மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா?

நீதிக்கட்சி கொண்டுவந்த வகுப்புரிமை ஆணை தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமூக நீதியல்ல, சமூக அநீதி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 06

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’  என்ற பெயர் வந்தது யாரால்?

சொல்லிவைத்தாற்போல் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற உரிமைகள் நீதிக்கட்சியினரால் பெற்றது என்று திரும்பத் திரும்ப பொய்களையே திராவிட இயக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதிவருகின்றனர். அதில் ஒன்றுதான் ஆதிதிராவிடர் பெயரை நீதிக்கட்சியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வைத்தார்கள் என்பது.

no496651

இதோ இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் :

‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர் டாக்டர். சி. நடேசனார் ஆவார். இவர்தான் ‘திராடவிடர் சங்கம்’ என்கிற அமைப்பை 1912இல் தொடங்கினார். இதிலிருந்து தான் திராவிடர் இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது.

திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-3

திராவிடர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனார் நீதிக்கட்சி அரசுக்கு அனுப்பிய ஒரு வேண்டுகோளில் ‘பறையர்’ , ‘பஞ்சமர்’ என்ற சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு, அவர்களது வரலாற்றுக்குரிய சிறப்புப் பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1922-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம்நாள் பெயர் மாற்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-5

பஞ்சமர் – பறையர் என்று உழைக்கும் மக்களை அழைக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்ற குரலை முதன்முதலில் டாக்டர் சி.நடேசன் அவர்கள் எதிரொலிக்கச் செய்தார். இவரே வரலாற்றுப்பூர்வமாய் இந்த மக்களுக்குரிய பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயரையும் கண்டுபிடித்து இந்தப் பெயரால் இந்த மக்கள் அழைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசுக்கு வைத்தார். திராவிட இன மக்களின் ஒருங்கிணைந்த திராவிடர் சங்கத்தின் மூலவரான நடேசனாரின் குரலை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டு 1921ல் இம்மக்கள் எவ்வளவு பேர் (சென்னை மாகாணத்தில்) வாழ்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு பஞ்சமர்-பறையர் என்ற சொல் இம்மக்களுக்கு இழிவுதரும் சொல். ஆகவே, இம்மக்களை இனி ‘ஆதிதிராவிடர்கள்’ என்று அழைக்க வேண்டும் என்று 1922 மார்ச் 25ம் தேதி ஒரு பெயர் மாற்ற உத்தரவை பிறப்பித்தது.

தமிழர் சமூக விடுதலை இயக்கம், பொதிகைத் தமிழரசன்

இப்படி எல்லாம் தொடர்ந்து எழுதியும், பேசியும் அன்று முதல் இன்று வரை ‘ஆதிதிராவிடர்’ என்ற வார்த்தைக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள் நீதிக்கட்சியினர்.

ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான்.  ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள்.

பல ஆண்டுகாலமாகவே அப்படித்தான் தங்களை அழைத்துக் கொண்டு வந்தனர். தாங்கள் ஆரம்பித்த அமைப்புகளுக்கும் அப்படியே பெயரிட்டு வந்தனர்.

வைரக்கண் வேலாயுதம்பிள்ளை, மதுரைப்பிள்ளை, க.அயோத்திதாசர் மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய சபைக்கு ஆதிதிராவிடர் மகாஜன சபை என்று பெயர். இது உருவாகிய ஆண்டு 1890.

athidravidan-issueயாழ்ப்பாணத்திலிருந்து 1907ல் வெளியான பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்திரன்.

1919ல் கொழும்பு -இலங்கையில் இருந்து வெளியான மற்றொரு இதழுக்கு ‘ஆதிதிராவிடன்’ என்ற பெயரே வைக்கப்பட்டது.

1917இல் இந்தியாவில் அரசியல் சீர்திருத்த விஷயமாக சென்னைக்கு வந்த செம்ஸ்போர்ட் பிரபு, மாண்டேகு பிரபுவிடம் ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயரைப் பற்றியும், ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தைப் பற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு ஒரு விண்ணப்பம் தயாரித்து திரு. பி. வி. சுப்பிரமணிய பிள்ளை, திரு. வி. முக்குந்து பிள்ளை,  திரு. எம். சி. ராஜா, திரு. டி. ஓங்காரம், திரு. எம். சண்முகம்பிள்ளை, திருமதி. திருப்புகழ் அம்மாள், திரு. கே. முனுசாமி பிள்ளை, திரு. வி. இராஜரத்தினம்பிள்ளை, திரு. வி. பி. வாசுதேவப்பிள்ளை, திரு. வி. பி. வேணுகோபால்பிள்ளை ஆகியோர் கையொப்பமிட்ட விண்ணப்பம் இந்தியா மந்திரி மாண்டேகு பிரபுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. (ஆதிதிராவிடர் வரலாறு, 1922, திரிசிராபுரம் ஆ.பெருமாள்பிள்ளை)

ஆதிதிராவிட மகாஜனசபை 1918ல் சென்னை மாகாண அரசுக்குக்குக் கொடுத்த கோரிக்கையிலே மக்கள் கணக்கெடுப்பிலும், மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் ‘பறையர் – பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்கு பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அப்போதைய சென்சஸ் அதிகாரி திரு.ஈட்ஸ் இதனை ஏற்கவில்லை. ஆனால் ஆதிதிராவிடர் மகாசபை பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக்கூட்டங்கள் போட்டு, தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது.

அப்படியானால் நடேசனாரின் பங்கு என்ன?

ஆதிதிராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சி.நடேச முதலியார் சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றிலே தாமாக முன்மொழிந்தார். ஆனால், நீதிக்கட்சியினரே முன்வந்து இதை செய்யவில்லை.

ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் சொல்வதென்ன?

சி. நடேச முதலியாரே ஆதிதிராவிடர் என்ற பெயரை கண்டுபிடித்து வைத்ததுபோல எழுதுகிறார்கள். இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்கள் பேனாக்களில் மைக்குப் பதிலாக பொய்யை ஊற்றி எழுதுகிறார்கள்.

1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படிச் செய்தனர்.

m-c-rajaசட்டமன்றக்கூட்டமொன்றில் 1922 சனவரி 20ல் ஆதிதிராவிடர் எனும் பெயரை அரசாணையில் குறிப்பிட வேண்டும் எனும் தீர்மானத்தை எம்.சி.ராஜா முன்மொழிந்தார். ராவ்பகதூர் திரு. நம்பெருமாள் செட்டியார் வழிமொழிந்தார். சட்டமன்ற உறுப்பினரான எம்.சி. மதுரைப்பிள்ளை ஆதரித்துப் பேசினார்.

தீர்மானம் நிறைவேறியது. அந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அப்பெயரை அங்கீகரித்து அரசு உத்தரவிட்டது.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடரை சேர்த்ததற்கு யார் காரணம்?

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க போராடி வெற்றி பெற்றது நீதிக்கட்சி ஆட்சியின் சாதனை என்று திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினருக்கு சாதகமாக எழுதுவதில் எத்தனை வெறித்தனம் இவர்களுக்கு?

இந்த வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.

பார்ப்பன ஆசிரியர்கள் எவ்வளவு வகுப்பு வெறுப்பைக் கக்குகிறார்கள் என்பதை சர் தியாகராயர் தமக்கேற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலம் விளக்கிக்கூறினார்.

1917 டிசம்பர் 23ஆம் நாள் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டில் பேசுகையில் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

new-pachaiyappar1‘நான் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த சமயம். எனது சமீன்தார் நண்பர் ஒருவர், தனது பிள்ளைக்குக் கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி, என்னைச் சிபாரிசு செய்யும்படிக் கேட்டிருந்தார்.

பார்ப்பனரல்லாத மாணவர்கள் இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனால் அந்த மாணவருக்கு எப்படியும் ஒரு இடம் தர வேண்டும் என்று கடிதம் எழுதிப் பச்சையப்பன் கல்லூரித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைத்தேன். கல்லூரியில் எந்த இடமும் காலி இல்லை என்று குறிப்பிட்டு எனக்குப் பதில் வந்தது. அதற்குப் பின்னர் சில பார்ப்பன மாணவர்களுக்கு இடம் அளித்ததை நான் அறிந்தேன். இந்தச் சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தியிருக்கும்? பொதுவாக நான் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அப்படித் தலையிடுவது தவறு என்றும் கருதி வந்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கும் விஷயத்தில் நான் கண்டிப்பான விதிமுறைகளை வகுத்தேன். என் அனுமதியின்றி, எந்த மாணவனையும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவு போட்டேன்!’’

இவ்வாறு தியாகராயர் உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்.

திராவிட இயக்க வரலாறு, கே.ஜி.மணவாளன், பக்.89-90

1926ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரியில் அனுமதியில்லை என்ற நிலை இருந்தது. இதை அப்போதே ரெட்டைமலை சீனிவாசனாரும் குறிப்பிட்டிருக்கிறார். ரெட்டைமலை சீனிவாசனார் தம் ஜீவிய சுருக்கம் என்ற நூலில் கூறுகிறார் :

‘‘ஆங்கிலேயர்கள் மட்டுமே கலந்துகொண்டு வெற்றி பெறுகிற வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், அந்த தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என பிரிட்டிஷ் பார்லிமென்டில் காங்கிரஸ் ஒரு மசோதா சமர்ப்பித்தது. பறையர் மகாஜன சபையார் சென்னை வெஸ்லியன் மிஷன் காலேஜ் ஹாலில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்கள் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி  என்னும் பார்லிமெண்ட் மெம்பரிடம் சமர்ப்பித்தார்கள். அந்த மனுவில்,

‘வெளிஜில்லாக்களின் நாட்டுப்புறங்களில் ஜாதி வித்தியாசம் கட்டுப்பாடு இன்னும் முதன்மை பெற்று கொடுமையாய் நடக்கிறது. அறிவீனமான நாட்டுப்புறவாசிகள்தான் இப்படி நடந்து வருகிறார்களென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது மல்லாமல் இந்த ராஜதானியின் தலைநகரமாகிய சென்னையிலுள்ள பச்சையப்பன் கலாசாலை என்னும் சிரேஷ்ட வித்தியாசாலையிலும் பறையர், பறையர் பிள்ளைகளைச் சேர்க்கப்படாதென்று கட்டோடே விலக்கியிருக்கிறதும்….’’

ayothidhasar

- என்று பச்சையப்பன் காலேஜில் ஆதிதிராவிடரை சேர்ப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இதை அப்போதே அறிஞர் அயோத்திதாசர் குறிப்பிட்டு எதிர்த்திருக்கிறார்.

மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி,   ‘சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்.  (தமிழன், சனவரி 6, 1909)

1917ல் பிராமணரல்லாத மாணவர்களை சேர்க்கச் சொன்ன நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயர் ஏன் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க சொல்லவில்லை? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 1921ல் தியாகராயருக்கு இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

4.8.1921ல் சட்டமன்றத்தில் சௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து முகமது உஸ்மான் சாகிபு தனது இஸ்லாமிய சகோதரர்களை கூட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கூறி, அவர் மேற்கொண்டு ஒரு கோரிக்கையை வைத்தார்.

image_110‘‘….இந்த மாநகரத்திலுள்ள பெரிய இந்து நிலையமாகிய பச்சையப்பன் கல்லூரி நான் சார்ந்துள்ள சமுதாயத்தினர்க்குத் திறக்கப்படுவதில்லை. இந்தச் சமயத்தில் இங்குள்ள மதிப்பிற்குரிய நண்பர்கள் சர்.பி.தியாகராயச் செட்டியார், திரு.ஓ.தணிகாசலம் செட்டியார் ஆகிய அக்கல்வி நிலையத்தின் அறங்காவலர்களை ஒரு தாராள மனப்பான்மை மேற்கொண்டு எல்லாச் சமுதாயத்தாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இங்கு வற்புறுத்த விரும்புகின்றேன்.’’

இந்த கோரிக்கைக்குப் பிறகாவது நீதிக்கட்சியின் தலைவர் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.

இதுதான் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு போட்ட பட்டை நாமம். ஆனாலும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தொடர்ந்து அதற்காகப் போராடினார்கள்.

இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன்னுடைய ஜீவிய சரிதத்தில் இவ்வாறு கூறுகிறார் :

‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’

பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தொடர்முயற்சியால் 21-11-1927ல் அனுமதி கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி வெற்றி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினர் தான் பெற்றுதந்தார்கள் என்று எழுதுவது அயோக்கியத்தனம் அல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07

பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா?

“முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சி” – என்று பெருமை பொங்க, ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார் க. திருநாவுக்கரசு.

இதைப் படிப்பவருக்கு ‘ஆஹா ! நீதிக்கட்சி உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தது’ என்றும் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது’ என்றும் நினைக்கத் தோன்றும்.

நீதிக்கட்சி எந்தச் சூழ்நிலையில், எப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது என்பதை மட்டும் வசதியாக மறைத்துவிடுகின்றனர். ஆகவே, அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் தற்போது ஆராய்ந்து பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை அமைச்சராக்கும் சூழ்நிலை ஏன் வந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள நீதிக்கட்சியின் ஆரம்பகால ஆட்சி முதலாகத் தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை அமைச்சராக்கியவரையில் நாம் ஆராயலாம்.

rajaofpanagal

மாண்ட்போர்டு சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. அத்தேர்தலில் மொத்தம் இருந்த 98 தொகுதிகளில் 63 தொகுதிகளில் நீதிக்கட்சியினர் வெற்றி பெற்றனர்.

 

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை 17.12.1920ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக அகரம். ஏ. சுப்பராயலு ரெட்டியாரும், அமைச்சர்களாக பி. இராமராயநிங்கார் (பனகல்ராஜா), கே. வி. ரெட்டி நாயுடுவும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

இதில் தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

இரண்டாவது பொதுத்தேர்தல் 1923ஆம் ஆண்டு 31ம்நாள் நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுப்படி நீதிக்கட்சி மீண்டும் அமைச்சரவையை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது. இருப்பினும் நீதிக்கட்சியே ஆட்சி அமைத்தது.

இரண்டாவது அமைச்சரவை 19.11.1923ல் பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக பனகல் அரசரும், அமைச்சர்களாக ஏ. பி. பாத்ரோ, டி. என். சிவஞானம்பிள்ளையும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

நீதிக்கட்சியின் சரிவு இரண்டாவது தேர்தலிலேயே தெரிய ஆரம்பித்தது.

பார்ப்பனரல்லாதார்களுக்கு உரிமைப் பெற்றுத் தரவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று குறிப்பிடப்படும் நீதிக்கட்சி இரண்டாவது பொதுத் தேர்தலிலேயே அதிகம் இடங்கள் பெறாமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. நீதிக்கட்சியின் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, சீர்குலைவு காணப்பட்டன.

2.  நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களாக இருந்த டாக்டர் சி. நடேச முதலியார், ஓ. கந்தசாமிப்பிள்ளை, எம். சி. ராஜா போன்றோர் கட்சித் தலைமையின் நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என்று காரணங்காட்டிக் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதனால் கட்சியில் வலிவுக்குறைவு ஏற்பட்டது.

3. முதலாவதாக அமைந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூவரும், தெலுங்கர்களாகவே அமைந்துவிட்டதால், அப்படிப்பட்ட நிலை, தமிழகத் தலைவர்களிடையே பெரிதும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

4. நீதிக்கட்சித் தலைவர்களிடையே, தெலுங்கர் தமிழர் என்ற மாற்சரிய உணர்வு ஏற்பட்டிருந்ததானது கட்சியை ஓரளவுக்கு வலிவுக் குன்றச் செய்திருந்தது.

5. சரியான முறையில் பிரச்சாரம் செய்யப்படாமல் இருந்தது நீதிக்கட்சியின் தேர்தல் சரிவுக்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

டி. என். சிவஞானம் பிள்ளையை அமைச்சரவையில் சேர்த்ததற்கு எதிர்ப்பாகச் சில காரணங்களைக் காட்டி டாக்டர் சி. நடேசமுதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் மற்றும் சிலர் நீதிக்கட்சியின் தலைமை மீது குறை கூறினார்கள்.

நீதிக்கட்சியின் அமைச்சரவையைப் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி எதிர்க்கட்சியினரிடையே ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குள்ளேயே இருந்து அவ்வப்போது தகராறுகள் செய்து கொண்டிருந்த சிலரும், அந்த உணர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

சர். பி. தியாகராயரின் மறைவுக்குப் பின்னர், நீதிக்கட்சியைத் திறம்பட நடத்திச் செல்லும் தலைவர் யாரொருவரும் சரியாக அமையவில்லை. பனகல் அரசர்கூட ஆட்சியை நடத்திச் செல்லுவதில் வல்லமை பெற்றிருந்தாரேயல்லாமல், கட்சியைக் கட்டிக்காத்து வளர்ப்பதில் வெற்றிபெற முடியவில்லை. கருத்துவேறுபாடு கொண்டு நீதிக்கட்சியை விட்டுப் பிரிந்திருந்த டாக்டர் சி. நடேசமுதலியார் போன்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர, பனகல் அரசர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உருவான பலன் எதனையும் அளிக்கவில்லை.

நீதிக்கட்சியின் தலைவர்களில் பல பேர்கள் தங்கள் தங்களுக்கு என்று தனித்தனிப் போக்குகளை வகுத்துக் கொண்டு, தனித்தனியாகச் செயல்படத் தொடங்கினர். பனகல் அரசரால், நீதிக்கட்சியின் சரிவுநிலையை, ஓரளவுக்குத்தான் தடுத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே அல்லாமல், அந்த முயற்சியில், அவரால் முழுவெற்றி பெற முடியவில்லை.

1926ஆம் ஆண்டு நவர்பர் 8ஆம் நாளன்று, சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், சுயராஜ்யக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் வென்றனர்.

நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட தலைவர்களில் பனகல் அரசர் மட்டும் வெற்றி பெற்றார். மற்றத் தலைவர்களான கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியுற்றனர்.

இந்தத் தேர்தல் மூலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆட்சியை அமைக்கக் கூடிய பெரும்பான்மை இல்லை.

எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வர முடியாத நிலையில், ஆளுநர் கோஷன், அரசின் நியமன உறுப்பினர்களான 34 பேர்களுடைய ஆதரவைத் தருவதாக வாக்குறுதி தந்து, சுயேச்சையாக வெற்றிபெற்று வந்திருந்த டாக்டர் பி. சுப்பராயன் அவர்களை அழைத்து, அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் சுப்பராயன் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும் ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும் அமைச்சரவையை அமைக்க இசைந்தார். டாக்டர். பி. சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராகவும், ஏ. அரங்கநாத முதலியார், ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார் ஆகியோர் அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை ஆராய்ந்து பார்த்து, அறிக்கை ஒன்றினைத் தயாரிக்க வேண்டி, பிரிட்டிஷ் அரசு திரு ஜான் சைமன் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றினை 1927 நவம்பர் 8ஆம் நாள் அமைத்தது.

இக்குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தால் சட்டமன்றம் சைமன் குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்போ, உதவியோ நல்கக் கூடாது என்ற தீர்மானத்தை சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த திரு. ஜி.  ஹரி சர்வோத்தமராவ் என்பவர் கொண்டு வந்தார்.

நீதிக்கட்சியினர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முதலமைச்சர் டாக்டர் பி. சுப்பராயன் தீர்மானத்தை எதிர்த்து சைமன் குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ஏ. அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய இருவரும் சைமன் குழுவிற்கு எதிராகத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அமைச்சரவைக்குள்ளேயே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர் பி. சுப்பராயன், தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துப் பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும் பதவிகளைத் தாமாகவே இழக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் கோஷன், டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி, நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின் உதவியைப் பெரிதும் நாடினார். நீதிக்கட்சியினருக்கு மனநிறைவு ஏற்படச் செய்ய வேண்டி, ஆளுநர், நீதிக்கட்சியைச் சேர்ந்த எம். கிருஷ்ண நாயரை நிருவாக ஆலோசனை அவையில் சட்ட உறுப்பினராக நியமித்தார்.

அதன் காரணமாக பனகல் அரசர் டாக்டர் பி. சுப்பராயன் புதிய ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க முன்வந்தார். அவர் எஸ். முத்தையா  முதலியார், எம். ஆர். சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரையும் சுயராஜ்ய கட்சியிலிருந்து பிரித்து டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வைத்தார்.

(டாக்டர் பி. சுப்பராயன் அரசு நீதிக்கட்சி அரசு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது- டாக்டர் பி. சுப்பராயன் அரசை இங்கு குறிப்பிட்டதற்குக் காரணம் அந்த அமைச்சரவையிலும் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதிகள் அமைச்சர்களாக யாரும் அமர்த்தப்படவில்லை என்பதற்காகவே.)

1930ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், நீதிக்கட்சி வென்று 1930 அக்டோபர் 27ஆம் நாள் அன்று நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பி. முனுசாமிநாயுடு முதலமைச்சராகவும் பிடி. இராசன், எஸ். குமாரசாமி ரெட்டியார் ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

முதலமைச்சர் பி. முனுசாமி நாயுடு பிரச்சினைகளைத் திறம்படத் தீர்ப்பதில் வல்லவராகத்தான் இருந்துவந்தார் என்றாலும், நீதிக்கட்சியிலிருந்த பெரும் ஜமீன்தார்களும், பணக்காரர்களும், முனுசாமி நாயுடு அமைச்சரவைக்கு எதிராக உட்பூசல்களைக் கிளப்பித் தொல்லைகள் பலவற்றைத் தொடர்ந்து தந்து கொண்டே இருந்தனர். அப்படித் தொல்லைகளைத் தருவதில் பொப்பிலி அரசர், வெங்கட்டகிரி குமாரராஜா, எம். ஏ. முத்தையா செட்டியார் போன்றவர்கள் முன்னிலையில் நின்றனர்.

1932ஆம் ஆண்டு அளவில் நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே சில குழுக்கள் உருவாக, உட்கட்சிப் பூசல்கள் வளர்ந்து, பிளவுகளும் பிணக்குகளும் ஏற்பட்டுக் கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்து காணப்பட்டது.

முனுசாமி நாயுடு அவர்களின் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குள் பிளவை உண்டாக்கிக் கொண்டிருந்த குழுவினரே மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரைத் தூண்டிவிட்டு அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கினர்.  நாடகக் காட்சிகளைப் போல, சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர்களாக இருந்த பிடி. ராஜனும், எஸ். குமாரசாமி ரெட்டியாரும் திடீரென்று தமது அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். பி. முனுசாமி நாயுடு வேறுவழியில்லாமல் தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

நீதிக்கட்சிக்குள் ஏற்பட்ட பதவிப் போட்டியில் வெற்றி பெற்ற பொப்பிலி அரசர் அவர்களின் தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்பட்டது. 1932ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம்நாள் பொப்பிலி அரசர் முதலமைச்சராகவும், பிடி. இராஜன், எஸ். குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

பொப்பிலி அரசர் தலைமையின் கீழ்ப் புதிய அமைச்சரவை அமைந்ததே ஒழிய, நீதிக்கட்சியின் கட்டுக்கோப்பு நாளுக்குநாள் சீர்குலைய ஆரம்பித்தது. நீதிக்கட்சியைப் பழையபடி சரிப்படுத்த பொப்பிலி அரசர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் வீணாயின.

1934இல் இந்திய மத்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரசுக் கட்சி பெருவாரியான இடங்களில் போட்டியிட்டுப் பெரும் வெற்றியைப் பெற்றது. நீதிக்கட்சி உட்கட்சிப் பூசலின் காரணமாக வலுவிழந்து காணப்பட்டதால், அது அந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

அமைச்சர் எஸ். குமாரசாமிரெட்டியார், 1936ஆம் ஆண்டில்,  உடல்நலக் குறைவின் காரணமாக அமைச்சர் பதவியைத் துறந்தார். அந்த அமைச்சர் பதவியில் செட்டிநாட்டுக் குமாரராசா எம். ஏ. முத்தையா செட்டியார் நியமிக்கப்பட்டார்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைக் குறிக்கோள்கள் பரவ வேண்டிய இன்றியமையாமை பற்றியோ, திட்டங்கள் நிறைவேற்றுவதைப் பற்றியோ, பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பற்றையும் பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் நீதிக்கட்சியானது கவனிப்பாரற்றுக் கூனிக்குறுகிச் செல்வாக்குக் குறைந்து காணப்பட்டது. பொது மக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குநாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.

இந்நிலையில் 1935ம் ஆண்டு இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தலை 1937 பிப்ரவரியில் நடத்துவது என்று இந்திய அரசு முடிவு எடுத்திருந்தது.

இந்த நிலையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், டாக்டர் பி. சுப்பராயன், எஸ். இராமநாதன், கே. சீத்தாரம ரெட்டி போன்றவர்களும் காங்கிரசுக் கட்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

நீதிக்கட்சியினர் அதிகார மமதையிலும், பணத்திமிரிலும், அலட்சியப்போக்கிலும், பெரும்போக்கான மிதப்புத் தன்மையிலும், ஆழ்ந்து கிடந்ததால் பொதுமக்களின் ஆதரவைப் பெரும் அளவுக்கு இழந்து காணப்பட்டனர்.  தேர்தல் நெருங்க, நெருங்க நீதிக்கட்சியைச் சேர்ந்த பலர், நீதிக்கட்சியை விட்டுவிட்டுக் காங்கிரசில் சேரத் தொடங்கினர்.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு மாபெரும் வெற்றியை ஈட்டியது. நீதிக்கட்சியோ படுதோல்வி அடைந்தது. சட்டமன்றத்தில் மொத்தம் 215 இடங்களில், காங்கிரஸ் கட்சிக்கு 159 இடங்களும், நீதிக்கட்சிக்கு 17 இடங்களும், சுயேச்சைகளுக்கும் பிற கட்சிகளுக்கும் 46 இடங்களும் கிடைத்தன.

இந்தத் தேர்தலில் பொப்பிலி அரசர், பி. டி. இராஜன், வெங்கட்டகிரி குமாரராசா, ஏ. பி. பாத்ரோ போன்ற நீதிக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் பலரும் தோல்வியுற்றனர். 1937ஆம் ஆண்டு தேர்தல் நீதிக்கட்சியின் செல்வாக்கையும் வலிவையும் பெரும் அளவுக்கு மங்க வைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கும் தகுதியைப் பெற்றிருந்தபோதிலும் அது ஆட்சியை அமைக்க முன்வரவில்லை. அமைச்சரவை மீது ஆளுநருக்கு இருந்த சில ஆதிக்கக் கட்டுப்பாடுகளைக் குறைக்கும் அளவுக்கு, 1935 அரசமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும், அது நிறைவேறுகின்ற வரையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர்.

mcraja

ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் காங்கிரஸ் கட்சி முன்வராதநிலை ஏற்படவே ஆளுநர், எதிர்கட்சியினராக விளங்கிய நீதிக்கட்சியினரை அழைத்து இடைக்காலப் பொறுப்பு அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிக்கட்சியினர் இசைவு அளித்தனர். இந்த அமைச்சரவையில் சர். கே. வி. ரெட்டிநாயுடு தலைமையின் கீழ்ப் பொறுப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டது.

இந்த அமைச்சரவையில்தான் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதியான எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது நீதிக்கட்சி. அதாவது ஆட்சி காங்கிரஸ் கட்சியினருக்கு மறுபடியும் போய்விடக்கூடிய சூழ்நிலையில்தான் – மூன்றுமாதங்களே இருந்த அமைச்சரவையில்தான் – தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரதிநிதியான எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது நீதிக்கட்சி.

இதில் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் – நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றபோது தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை அமைச்சராக்கவில்லை என்பதைத்தான். மக்கள் செல்வாக்கு முழுவதும் இழந்துவிட்ட நிலையில் – எப்பொழுது வேண்டுமானாலும் அமைச்சரவை கலைக்கப்படலாம் என்று தெரிந்திருந்தபோதுதான் எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது.

இதில் கூட, சரிந்துவிட்ட தன் நிலைமையை, தாழ்த்தப்பட்ட சமுதாய பிரதிநிதி ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் உயர்த்திக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அடங்கியிருந்தது. அதனால் தான் தாங்கள் பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது – மக்கள் செல்வாக்கோடு இருந்தபோது – அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டநிலையில், அமைச்சர் பதவி கொடுத்தது. இந்த இடைக்கால பொறுப்பு அமைச்சரவை மூன்று மாதங்களே நடைபெற்றன. பிறகு காங்கிரசுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்ட சுமுகமான உடன்பாடு காரணமாக காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியார் யாருக்குப் பெரியார்?

வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான முரண்கள் – பிணக்குகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பிற்படுத்தப் பட்டோரின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது. நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில். இந்த கொடுமையான அடக்குமுறைகளை – அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.

dalit12தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட (?)  ஈ.வே.ராமசாமி நாயக்கர் தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் – தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா?

பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்  இடையே ஈ.வே.ரா. வகித்த பாத்திரம் எது?  என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
‘‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு 25.4.1926)

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்குச் செய்ததாகுமே ஒழிய, உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது……………. ” (குடியரசு 16-6-1929)

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
‘‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.’’ (குடியரசு 11.10.1931)

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு 6-7-1946)

இவ்வாறு ஈவேரா தான் சூத்திரன் என்று சொல்லப்படுபவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியபோதும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல் சில தலித் எழுத்தாளர்களும் கூட ஈவேரா தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.

பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டவர்களையும் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அந்த உந்துதலினாலேயே ஈவேரா பிற்படுத்தப்பட்டவர்களின் தீண்டாமை விலங்கை தகர்த்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே அதுவாகத்தான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட வேண்டும், அவர்களின் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்குக் கிடையாது. பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்கின்ற கொடுமைகளை ஈவேரா எதிர்த்ததே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
வேண்டும் என்று ஈவேரா  கூறுகிறார் :-
‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)

இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?

ஏனென்றால் அவர்கள் தன் சமுதாயம் அல்லவா?

மேலும் ஈ.வே.ரா. கூறுகிறார் :-
ரொக்கச் சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அனேகமாய்ப் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்கார்களிடமும் லேவாதேவிக் காரர்களிடமுமே போய்ச் சேரக்கூடியதாக இருப்பதால்
(குடியரசு 4-1-1931)

என்று பெரியார் குறிப்பிடுகிறார். இங்கு பெரியார் பார்ப்பனரை மட்டும் பெயரில் குறிப்பிட்டு விட்டு மற்ற உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் என்று பொதுப்படையாகவே கூறிச்சென்று விடுகிறார். உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் யார்? பிற்படுத்தப்பட்டவர்கள்தானே!

பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை செய்யும்போது அதை கண்டிக்காமல் அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் ஈவேரா.

ஈவேரா  கூறுகிறார் :-
‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் – பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை.” (குடியரசு 11-1-1931)

இதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறில்லை. இந்த காரணங்களைத்தானே பிராமணர்களும் தங்களுக்குச் சாதகமாக சொல்கிறார்கள்?  மத உணர்ச்சி, மத ஆதாரம், முன் ஜென்மத்தின் கர்மம், பூர்வபுண்ணியம், தலைவிதி என்றெல்லாம் சொல்லி தாழ்த்தப் பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடுகிறவர் என்று சொல்லப்படுகிற ஈவேராவின் தொண்டா?

‘‘பெரியார் பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதும் போக்கைக் குறித்த கண்டனவுரையில் பெரிதும் வெப்பம் இல்லை. சில நேரங்களில் பார்ப்பனரல்லாதாரே பார்ப்பனரைவிட மிகக் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை ஒப்புக் கொண்டாலும், பார்ப்பனரல்லாதாரின் கொடுமைக்குக்கூட , பார்ப்பனர்களைக் குறை சொல்லும் போக்கு பெரியாரிடம் இருந்தது. பார்ப்பனக் கருத்தியலுக்குப் பெரிதும் ஆட்படாத வேளாளர் சாதியத்தை தூக்கிப்பிடித்ததற்கும், தீண்டாமை கொடுமைகள் தாண்டவமாடியதற்கும் வரலாறு சான்று பகர்கிறது’’ என்று கோ.கேசவன் குறிப்பிடுவதில் உண்மையும் உள்ளது.

ஈவேரா ஒவ்வொரு சமயத்திலும் தான் பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்பதை அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறார்.

ஈவேரா  கூறுகிறார் :-
ஜின்னாவின் வெற்றி என்னவென்றால் முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு உள்ளதுபோல், சம உரிமை பங்கில் உண்டு என்பதல்லாமல், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் தவிர வேறு யாரும் பிரதிநிதித்துவம் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்கு வெற்றி என்னவென்றால் – ஷெட்யூல்டு வகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அம்பேத்கர்தான் பிரதிநிதி என்பதோடு, காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொண்டாடுவது சரியல்ல என்று செய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்கு வெற்றி என்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படி எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டும் என்று போராடினவர்கள் இந்நாட்டில் நாமேயாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தலைமையை உதறித் தள்ளிவிட்டு, நடுமாநாட்டில் நாலாயிரம் பேர் இடையில், ‘காங்கிரஸ் இங்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளாததினால், நான் கவலைப்படவில்லை. இதற்காக வெளியேறி வேறு ஸ்தாபனம் ஆரம்பித்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறேன் இல்லையா பார்’ என்று பந்தயம் கூறி, மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு வந்த என் பந்தயப் பிரச்சனை, சிம்லா மாநாட்டில் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு கல்சாசனமாக்கப்பட்டுவிட்டது என்பதேயாகும். அதுவும் நம் விகிதப்படி என்றால் இன்னும் மகிழ்ச்சி அல்லவா? (குடியரசு 28-7-1945)

அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லிவிட்டார். அடுத்து இதில் நமக்கு, நாமேயாகும், நம் விகிதப்படி என்ற வார்த்தையெல்லாம் யாரைக்குறிக்கின்றன? சூத்திரர்களான பிற்படுத்தப்பட்டவர்களைத்தானே? அப்படியென்றால் ஈவேரா யாருக்குப் பாடுபட்டார்? யாருக்கு அவர் பெரியாராக இருந்தார் என்பது விளங்கவில்லையா?

ambedkar_periyar

ஈவேரா யாருக்காக பெரிதும் கவலைப்பட்டார், யாருக்காக பாடுபட்டார் என்பதையும் அவருடைய பேச்சுகளில், எழுத்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றிய எரிச்சல்களையும் பார்க்கலாம்.

ஈவேரா கூறுகிறார் : -
……காங்கிரசும் சுயராஜ்யமும் இராமராஜ்யமும், திராவிடர்கள் சூத்திரத்தன்மையில் இருந்து மனிதத் தன்மை பெறாமல் இழிநிலையில் – அடிமை நிலையில் இருப்பதற்கு ஏற்பட்டவைகளே தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் ஏற்பட்டதல்ல என்பதை நான் எங்கும் நிரூபிப்பேன். இல்லாவிட்டால், தேவைக்கு மேற்பட்ட யோக்கியதாம்சத்தை ஏற்படுத்திக்கொண்டு, திராவிடனுக்கு மாத்திரம் தகுதி, திறமை என்கின்ற முட்டுக்கட்டை ஏன்? முஸ்லீம்களுக்குத் தகுதி, திறமை வேண்டியதில்லை; வெள்ளையனுக்கு வேண்டியதில்லை; சட்டைக்காரர்களுக்கு வேண்டியதில்லை. ‘வேறு மதத்திற்குப் போய்விடுவேன்’ என்று மிரட்டுகிற ஆதித்திராவிடர்களுக்குத் தகுதி, திறமை என்பவை – ‘திராவிடனுக்கு இருக்க வேண்டும் என்றபடி’ வேண்டியதில்லை. ஆனால் திராவிடனுக்குப் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கே தகுதி, திறமை வேண்டும் என்று சுயராஜ்ய பார்ப்பனப் பிரதம மந்திரி சர்க்காரிலுள்ள திராவிடக் கல்வி மந்திரியைக் கொண்டே திட்டம் செய்வாரானால், மனுதர்மமும்  விபீஷணத்தன்மையும் எவ்வளவு பலாத்காரமாகக் கையாளப்படுகிறது என்று பாருங்கள்.
…….
……ஆதித்திராவிடர்களையும் முஸ்லீம்களையும் நடத்திய மாதிரி மிக மோசமாக இருந்து வந்தாலும், இப்போது அவர்களுக்குப் ‘பிரைஸ்’ அடித்துவிட்டது. முதல் பிரைஸ் இல்லையானாலும் நல்ல பிரைஸ். அவர்கள் நிலை உயர்த்தப்பட்டுவிட்டது. இனி அவர்களுக்குச் சரியானபடி விகிதாசாரமும் மேலுங்கூட- கண்டிப்பாகக் கிடைக்கும். அவர்களுக்கு சிபாரிசு, குறைகளைக் கேட்க வசதிகள் ஏற்பட்டு விட்டன.
…..
……ஆதித்திராவிடர்களுக்குத் திடீர் என்று வந்தயோகம் டாக்டர் அம்பேத்கர் ‘நான் இந்து அல்ல; பஞ்சமன் அல்ல; இந்து மதத்தின் எந்தப் பாடுபாட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல’ என்று சொன்னதால்தான். கோயில் திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டு கொடுங்கள்; உத்தியோகம் கொடுக்கிறேன்’ என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்குமேல், அளவுக்குமேல் நன்மை செய்கிறேன். என்ன வேண்டும்? கேள்’ என்று பட்டேல் சொல்லுவதும், ‘நானும் ஆதித்திராவிடன், பங்கி’ என்று காந்தியார் சொல்வதும் ஆன காரியங்களுக்குக் காரணம் ‘நான் இந்துவல்ல’ என்று அஷ்டாட்சர மந்திரமேயாகும். டாக்டர் அம்பேத்காருக்கும் அய்ந்து வருடத்துக்கு முன்பே, நான், 1925ல் சொன்னேன், ஆனால் எனக்கு 5 வருடத்துக்குப் பின்பு சொன்ன அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இனியும் ‘இந்து அல்ல’ என்றுதான் – வாயிலாவது சொல்லிக் கொண்டே எல்லா உரிமைகளும் பெறப்போகிறார்கள்.

……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.
 (நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமைகள் பற்றிய எரிச்சல்கள் ஈவேராவிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில உரிமைகள் புரட்சியாளர் அம்பேத்கரால் கிடைத்தது. ஆனால் சூத்திரர்களுக்கு கிடைக்கவில்லையாம். அந்த எரிச்சல்களை எப்படி கொட்டுகிறார் பாருங்கள்!

ஈவேரா கூறுகிறார் : -
இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950)

மேலும் ஈவேரா கூறுகிறார் : -
‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’ (விடுதலை 22-9-1951)

‘‘ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள்.’’ என்ற ஈவேராவின் பேச்சு எரிச்சலைத்தானே காட்டுகிறது?

இந்த எரிச்சல் தாழ்த்தப்பட்டவர்களை நன்றியற்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு ஈவேராவின் குரல் ஒலித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தான்தோன்றித்தனமான பேச்சுக்களையும் தாழ்த்தப்பட்ட தலைவர்களால் போராடி பெறப்பட்ட உரிமைகளையும் கூட தன்னால்தான் பெறப்பட்டது என்ற அகங்காரப்பேச்சுகளையும் ஈவேரா ஒலித்திருக்கிறார்.

ஈவேரா கூறுகிறார் : -
‘‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதமாகிவிடுகிறது என்பதற்காக சர்க்காரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை 1950ல் எடுத்துவிட்டார்கள். பிறகு நாங்கள் செய்த கிளர்ச்சிகளின் பயனாகச் சட்டத்தில் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். படிப்பு, உத்தியோகம், சமுதாயம் ஆகிவற்றில் பின்தங்கியவர்களுக்குச் சலுகைகாட்டத் திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டத்தில் எழுதியிருக்கிறார்கள். அரசியல் திட்டத்தால் ஆதிதிராவிடருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய விகிதாச்சாரம் கிடைத்திருக்கிறதே ஒழிய, மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவே இல்லை. இப்படி நாங்கள் கூறுவதை ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு விரோதமானது என்று கூறிக் கொள்கிறார்கள். மற்ற திராவிட மக்களுக்கு அவர்களால் (ஆதித்திராவிடர்களால்) ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும், நாம் எவ்வளவோ செய்தோம். அப்படி இருந்தும் ‘பிராமணர்கள் தேவலை, சாதி இந்துக்களால்தான் எங்களுக்குத் தொல்லை’- என்று ஆதித்திராவிடர்கள் கூறுகிறார்கள். இது நன்றியற்றப் பேச்சு. அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? நாங்கள் செய்த கிளர்ச்சியாலும், முயற்சியாலும்தான் இன்று அவர்கள் சமுதாயத்தில் தலையெடுக்க முடிந்தது. அவர்கள் படிப்புத் துறையில் முன்னேற வழிகாட்டியவர்கள் நாங்களே. ஆதித்திராவிடர்களின் கோயில், தெரு நுழைவுக்கு முதல்முதல் போராடியவர்கள் நாங்கள்தாம். ஆதித்திராவிடர்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?’’ (விடுதலை 21-9-1956)

ஈவேரா சொல்கிற உரிமைகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த உரிமைகள். (பார்க்க – நீதிக்கட்சியின் மறுபக்கம், அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய மக்களுக்கு உழைத்த பெருமக்கள் – விரிவான வரலாறு, உணவில் ஒளிந்திருக்கும் சாதி) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் எந்தவிதமான போராட்டங்களையும் இதுவரை நடத்தியதில்லை. வைக்கம்போராட்டம்

காங்கிரசின் போராட்டம். காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி நடந்த போராட்டம். ஈவேரா அப்போராட்டத்தில் காங்கிரஸ்காரராகவே கலந்துகொண்டார். இதில் கூட ஒரு சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தெருக்களில் நடக்கின்ற, கோயில்களில் நுழைகின்ற போராட்டத்தை ஈவேரா தலைமையேற்று தமிழ்நாட்டில் நடத்தியதுண்டா? ஏன் நடத்தவில்லை?

அதுமட்டுமல்ல ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததே தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவினால்தான். அந்த நன்றியை மறந்துவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நன்றியற்றவர்கள் என்று கூறுகிறார் ஈவேரா.

ஆகவே ஈவேரா சொல்வதெல்லாம் பித்தலாட்டம், பிதற்றல், எரிச்சல் தவிர வேறொன்றுமில்லை.

மேலும் ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டுள்ளார் என்பதையும் அவருடைய பேச்சிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஈவேரா கூறுகிறார் : -
‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’
(விடுதலை 11.11.1957)

ஈவேரா கருத்துப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 25 இடம் கொடுத்தால்கூட அவர்கள் முன்னேறமாட்டார்கள் என்பது. ஆனால் அதை பார்ப்பனர்கள் கருத்தாகவே கூறிவிட்டார். பார்ப்பனர்கள் எங்கே அப்படி சொன்னார்கள் என்று கேட்டால் பார்ப்பனர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள் என்று ஒருபோடு போடுவார்கள், வரலாறு – சரித்திரம் – அப்படித்தான் நமக்கு காட்டுகிறது என்றெல்லாம் கதைவிடுவார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டமக்களுக்கு வாங்கித்தந்த உரிமைகள் பற்றி ஈவேரா பலதடவை எரிச்சல்பட்டிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்காக வாதாடவில்லை என்று ஒருதடவையும், வாதாடினார் என்று ஒருதடவையும் மாறி மாறி ஈவேரா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புரட்சியாளர் அம்பேத்கர் ஏதோ செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டமாதிரி ஈவேரா குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஈவேரா கூறுகிறார் :-
‘இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லே… அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர். அப்புறம் டாக்டர் அம்போத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னா?  உங்கள் சாதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க. மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்னு உடனே எங்க சாதிக்கு விகிதாச்சாரம் கொடுன்னிட்டார். அந்த ஆதி-திராவிட சாதிக்கு 100க்கு 16 இடம். அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக் கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்கு கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி எழுதிக்கிட்டான்.’ (17.1.68 கரூர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் ஈவேரா உரை. விடுதலை 2004 பொங்கல் மலர் பக்.38)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் கிடைத்ததை ஈ.வே.ரா எவ்வளவு மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார் பாருங்கள். ஆகவே ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்போதுமே தன் இயக்கத்தின் சார்பாக போராடியது இல்லை. அவர் போராடியது எல்லாம் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதிகளுக்குத்தான். ஆகவே பெரியார் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்குத்தான் பெரியாரே தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கு அல்ல. இதை தாழ்த்தப்பட்டவர்கள் உணரவேண்டும். ஈவேரா பின்னால் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர் என்ற பொய்ப்பிம்பத்தை அழிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வரலாற்றுகளை நாம் படித்தறியும்போதுதான் இந்த மாதிரி ஆட்களின் பொய்ப்பிம்பத்தை உடைத்தெறிய முடியும். ஆகவே தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். உண்மை புரியும். நமது உரிமைகள் யாரால் பெறப்பட்டது என்பது. அதுவரை இந்தமாதிரியான பொய்ப்பிம்பத்தை வைத்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் திராவிட கூட்டம் வல்லூறுகளாய் காத்துக்கொண்டு இருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – முன்னுரை

periyar_marubakkam

உங்களிடம் சில வார்த்தைகள்…!

 

இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம்தான் முதலில் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கும் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்.

 

நான் முதன்முதலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

 

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காகப் பாடுபட்டவர்

 

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றியவர்

 

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

 

பொய் பேசாதவர்முரண்பாடு இல்லாதவர்

 

இந்த எண்ணத்தின் காரணமாக ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள,கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.

 

அது மட்டுமல்லாமல்ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சமகாலத்தோடு வாழ்ந்த ம.பொ. சிவஞானம்ப. ஜீவானந்தம்தெ.பொ. மீனாட்சி சுந்தரம்உ. முத்துராமலிங்கத் தேவர்கி. ஆ. பெ. விசுவநாதம்அண்ணாத்துரைகாமராஜர்பாவாணர் போன்றவர்களெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் படித்தேன்.

 

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ- அந்த கருத்திற்கு-அந்த எண்ணத்திற்கு முரண்பாடாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் செயல்பாடும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டேன்.

 

அடுத்துதாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக உழைத்தஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி விமர்சித்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் எழுதலாமா?- இந்த எண்ணமும் சிலருக்குத் தோன்றும். அது இயற்கை.

 

ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருக்கும்போது தலித் தலைவர்கள்தலித் எழுத்தாளர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வந்திருக்கின்றனர். இப்பொழுதும் தலித் தலைவர்கள்தலித் எழுத்தாளர்கள் அவரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வருகின்றனர்.

 

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் என்று சொல்லும்போதுஅவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல தாழத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எனக்கு உரிமையுண்டு.

 

அதேபோல ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுதலையடைந்தார்கள்சமூகத்தில் முன்னேற்றம் கண்டார்கள் என்று சொல்வார்களேயானால் அது வடிகட்டினப் பொய் என்பதை என்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும். ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுத புலவர்,பண்டிதர் அரங்கையதாஸ்பண்டிதர் க. அயோத்திதாஸ்வேம்புலி பண்டிதர்ஏ. பி. பெரியசாமி புலவர்முத்துவீர நாவலர்ராஜேந்திரம் பிள்ளைதிருசிபுரம் பெருமாள்,தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்ஜான் ரத்தினம் கோலார் ஜி. அப்பாதுரைபுதுவை ரா. கனகலிங்கம்என். சிவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்பாராளுமன்ற உறுப்பினர்) டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் தாழத்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகளில் 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.

 

ஆகவே தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடிமறைத்து விட்டார்கள்.

 

ஆகவேஅவர்கள் மூடிமறைத்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பண்யை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டுவந்திருக்கிறேன். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலேயே அவரை விமர்சித்த ம. பொ. சிவஞானம்ப. ஜீவானந்தம், தெ. பொ. மீனாட்சி சுந்தரம்உ. முத்துராமலிங்கத் தேவர்கி. ஆ. பெ. விசுவநாதம்அண்ணாதுரைகாமராஜர்பாவாணர் ஆகியோர்களின் எழுத்துக்களை கட்டுரைகளின் நடுவிலும்பின்னிணைப்பாகவும் தந்திருக்கிறேன். இவை எல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் சேர்ப்பவை.

 

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர் கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்.

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூல் ஒன்று வெளிவர இருக்கிறது என்பதை அறிந்துஈ.வே. ராமசாமி நாயக்கரை கடைசிவரை எதிர்த்த ஆன்மீகத் தங்கம் முத்துராமலிங்கத் தேவரின் அடியை ஓற்றிஇந்த புத்தகம் வெளிவர உதவியவர் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் கே. ஏ. முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.

 

நான் இந்த நூல் எழுத எண்ணம் கொண்டதிலிருந்து பல நூல்களை எனக்கு வாங்கித் தந்து பல உதவிகளைச் செய்த எனது நண்பர் திரு. பிரகாஷ் எம். நாயர் அவர்களுக்கும்எனது ஆசான் என்று சொல்லக்கூடியவரும் என்னை ஊக்கப்படுத்தியவருமான திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும்மற்றும் எனது நண்பர்கள் ஜி. சுரேஷ்குமார்சி. அரிசங்கர்ஆர். நாகராஜ்எம். மணிகண்டன்ஏ. நெப்போலியன் ஆகியோர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

 

ம. வெங்கடேசன்.

 

(ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை  நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது.)


 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா?

 

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி)

என்றும்,

”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

‘நான் கன்னடியன்’ என்று சொல்லிக்கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்ப் புலவர்களை விமர்சித்த விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

தமிழ் புலவர்களைப் பற்றிய விமர்சனம்:

‘தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

இதுதான் முக்கியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய பார்வை ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. தொல்காப்பியரும், கம்பனும் துரோகிகள்! சரியான பட்டம்!

தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை படைத்த இவர்கள் தமிழ்த் துரோகி என்றால் அதே தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் துரோகிதானே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழை எவ்வாறெல்லாம் விமர்சித்தார் தெரியுமா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி:

”தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”

(அதாவது தமிழ் படித்ததால்தான் பகுத்தறிவு இல்லாமல் போய்விட்டார்களாம். உலகம் அறியாதவர்களாகி விட்டார்களாம். நூலாசிரியர்.)

”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”

”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”

”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”

”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”

(தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்கவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்துள்ளார் – நூலாசிரியர்.)

”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) குமுக எதிரிகள்”
(நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்)

”தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?”

”இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

இதுதான் தமிழைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கணிப்பு. இன்று தமிழுக்காக போராடுகின்ற தமிழறிஞர்கள் முதலில் எதிர்க்க வேண்டியவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(இதிலே இன்னொரு விஷயம் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.)

தமிழைப் பற்றி இவ்வளவு தரக்குறைவுடன் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழியைப் பற்றி பெருமையாக கூறிய கருத்துக்களைப் பற்றி பார்ப்போம்.

- தொடரும்

சில குறிப்புகள்:

01. ஈ.வே. ராமசாமி நாயக்கர் கன்னடர்…

பெரியார் ஈ.வே.ரா நாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம் அவரது வீட்டு மொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டார்.

டாக்டர் ம.பொ. சிவஞானம்
நூல்: தமிழகத்தில் பிறமொழியினர்

02. கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதியா?

சிலர் இலக்கிய ஆராய்ச்சி முறைக்கு மாறாகக் குறுக்கு வழியிலே புகுந்து கம்பனைப் பற்றி ஏதேதோ எழுதுகின்றனர். பேசுகின்றனர். அரசியல் கொள்கை, இன வெறுப்பு, பண்பாட்டு வெறுப்பு இவைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கம்பன் மீது காய்ந்து விழுகின்றனர்.

‘கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதி: தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி. தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. நாட்டுப்பற்றில்லாதவன். மொழிப்பற்றில்லாதவன். கலாசாரப் பற்றில்லாதவன்’ என்றெல்லாம் ஒரு சிலர் ஓங்கிப் பேசுகின்றனர். இது உண்மைக்கு மாறான பேச்சென்பதே கம்பனை நடுநிலையிலிருந்து கற்றவர்களின் கருத்து.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.

03. கம்பன் காவியத்தைக் கொளுத்தலாமா?

கம்பன் மீது இன்று சிலர் காய்ந்து விழுகின்றனர். தமிழின் சிறப்பைத் தரணியிலே விளக்கி நிற்கும் இக்காவியத்தை கொளுத்த வேண்டும் என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். கம்பன் காவியத்தைக் கையினால் தொடக்கூடாது என்றும் பேசுகின்றனர்.

சிறந்த காவியங்கள் – உயர்ந்த இலக்கியங்கள் – எந்தக் காலத்திலும் மக்கள் உள்ளத்திலிருந்து ஓடிப் போய்விடமாட்டா. அவைகளை அழிக்க முயன்றவர்கள் யாராயினும் வெற்றி காணமாட்டார்கள். இந்த உண்மையை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம்.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)

”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”

”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)

(முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

periyar_marubakkamதமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.

அது மட்டுமல்ல, ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர்-

-அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.

அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா? இல்லையே! சாக்ரடீஸ் முதலானவர்களோடு ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஓப்பிடுகிறார்களே- அப்படியானால் ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா? ஆங்கிலம் படித்ததனால் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு ஆற்றலும் திறமையும் வந்ததா? பதிலைப் பகுத்தறிவுவாதிகள்தான் சொல்ல வேண்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)

திருக்குறளைப் பற்றிய முரண்பாடு:

‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்த அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர், இதற்கு முரண்பட்ட வகையிலும் பேசியிருக்கிறார். முரண்பட்ட வகையில் பேசுவது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கரேதான். அப்படி என்ன முரண்பாடு ஏற்படும் வகையில் பேசினார் தெரியுமா? இதோ!

14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும்

‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

23, 24-10-1948 அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.

இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.

மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.

20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.

முரண்பாட்டின் மொத்த உருவம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

‘‘நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை’’ என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி!

ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

‘‘உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.

இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.

சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே! அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே! அதில் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே! இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் படித்திருக்க மாட்டாரா? நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவதுதானே! சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஈ.வே. ராமசாமி நாயக்கராவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே! அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை? நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொடுத்திருக்கலாமே! இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய நோக்கம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன? தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள்தானே இந்த பகுத்தறிவுவாதிகள்!

திருக்குறளை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் 23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில்,

‘‘முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது’’ என்றும் ‘‘குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது’’ என்றும் கூறுகிறார்.

முஸ்லிம்களை குறள் மதத்துக்காரர் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது திருக்குறளைத்தான் முஸ்லிம்கள் மதித்தார்களா? இல்லவே இல்லை என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை!

1968-டிசம்பர் மாதம், மதனீ என்பவர், திருச்சியிலே ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார். அந்த புத்தகத்தினுடைய தலைப்பு ‘‘முஸ்லீம்களுக்குப் பொதுமறை எது? குறளா? குர் ஆனா?’’ என்பதுதான். இந்தப் புத்தகத்திலே அவர் திருக்குறளையும், குரானையும் ஒப்பிட்டு ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

‘‘…அத்தகைய தகுதி திருக்குர்ஆனுக்கே உண்டு. குறளுக்கில்லை. திருக்குரான் இறைவன் அமைப்பு. குறள் மனித அமைப்பு. ஒப்பிட்டு பேசுவதோ, போட்டி மனப்பான்மையில் வாதிடுவதோ பெருந்தவறு, கூடாத வினையாகும். ஐந்து வயதுச் சிறுவன், போலு பயில்வானிடம் மல்லுக்கு நிற்பது போலாகும்.’’ (பக்.2)

‘‘இஸ்லாமியனுக்கு இது ஏற்புடையத்தன்று’’ (பக்.3)

‘‘குறள் ஒன்றே பொதுமறை என்று எவர் கூறியிருந்தாலும் சரி; கூறிக்கொண்டிருந்தாலும் சரி, அனைவரெல்லாம் திருகுரானை கற்றுணராதவர்கள் என்றே துணிவுபடக் கூறலாம்.’’ (பக்.5)

‘‘உருப்படியான ஒழுக்க நூல் திருகுரானைத் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்து வருபவர்கள் இஸ்லாமியர்கள். இறுதி மூச்சுப் பிரியும் வரை இதே நம்பிக்கையில் தான் இருப்பார்கள், இறப்பார்கள்.’’ (பக்.6)

‘‘களங்கமுள்ள ஓர் ஏடு எப்படிப்புனித இலக்கியமாகும்? வாழ்க்கை நூலாகும்? பொது மறையாகும்? எல்லார்க்கும், எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாகும்? திருக்குரானைத் தேன் நிலாவாகக் கருதிடும் சீலர்கள் சிறிதேனும் சிந்தித்தால் நல்ல தெளிவேற்படும்-உண்மை பல பளிச்சிடும்.’’ (பக்.8)

‘‘குறள்நெறி, குரானின் நெறி கொண்டதல்ல. இரண்டின் வழியும் விழியும் வேறு. குரலும் கோட்பாடும் வேறு. (பக்.23)

‘‘வள்ளுவர்க்கு ஒரு கொள்கை இல்லை. ஒரு குறிக்கோள் இல்லை. அதனால் மக்களைத் தன் கொடியின் கீழ் கொண்டு வரமுடியவில்லை’’ (பக்.30)

‘‘திருக்குறளை பாலுக்கு ஓப்பிட்டால், திருக்குரானை தண்ணீருக்கு ஒப்பிடலாம். பால் எல்லோருக்கும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படக்கூடியதல்ல. பொது உணவுப் பொருளாகவும் அது இருந்திட முடியாது. விரும்பக் கூடியதும் அல்ல. தண்ணீரோ அப்படியல்ல. எல்லோருக்கும் எல்லாக் காலத்துக்கம் எல்லாச் சந்தர்ப்பத்திலும் பயன்படக் கூடியதாகும்.’’ (பக்.139)

இவ்வாறு 144 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் திருக்குறளைத் தாழ்த்தி திருக்குரானை உயர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. திருக்குறளை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் உயிரோடு இருக்கும் போதே – அதுவும் திராவிடர் கழகம் நிலை கொண்ட திருச்சியிலேயே ஆணி அடித்தாற் போல் சொல்லப்பட்டு இருக்கிறது.

குறளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திருச்சியிலே, முஸ்லிமின் குரல் ஒலித்ததே – அப்படியானால் முஸ்லிம்கள் குறள் மதக்காரர்கள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே – அது ஏன்? அப்படிச் சொன்ன மதனீக்காவது கண்டனம் தெரிவித்தாரா? அந்த புத்தகத்துக்கு எதிராக விடுதலையில் ஒரு வரியாவது கண்டித்து எழுதினாரா? இல்லையே ஏன்?

ஒருவேளை முஸ்லிம்களின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாரோ என்னவோ! முஸ்லிம்கள் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பது கூட விமர்சனம்தான். ஆனால் அந்த புத்தகத்திலே திருக்குறளை கண்டபடி திட்டியிருக்கிறார்களே அதைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது அடியார் வீரமணியோ கண்டித்தார்களா? களங்கமுள்ள ஏடு என்றெல்லாம் திருக்குறளை முஸ்லிம்கள் சொன்ன போது – திருக்குறள் வழியில் நடக்கும் கழகம் திராவிடர் கழகம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது வீரமணியோ எங்கு போனார்கள்? திருக்குறள் திராவிடர்களின் வா¡க்கை நூல் என்று சொன்ன ஈ. வே. ராமசாமி நாயக்கர் – அதை கேவலப்படுத்திய முஸ்லிமையோ அந்த புத்தகத்துக்கோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? – இதுதான் திருக்குறளுக்கு திராவிடர் கழகம் செய்த தொண்டா?

ஒருவேளை இந்த புத்தகம் வந்ததே தெரியாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இந்து முன்னணி இந்த புத்தகங்களை வாங்கி பதிவுத் தபாலில் திராவிடர் கழகம் முதல் பகுத்தறிவுவாதிகள் அனைவருக்கும் அனுப்பியதே – அப்போது கூட வீரமணியோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ அல்லது தமிழறிஞர்களோ கூட கண்டிக்க வில்லையே ஏன்? இதுதான் தமிழ்ப் பற்றா? இவர்கள்தான் தமிழைக் காக்க புறப்பட்ட வீரர்களா? சரி அப்போதுதான் கண்டிக்கவில்லை. இப்பொழுதாவது கண்டிக்கத் துணிவு உண்டா? ‘தடை செய் இராமாயணத்தை’ என்று சொன்னார்களே? – அதே போல ‘தடை செய் மதனீயின் புத்தகத்தை’ என்று சொல்லத் தயாரா? பதில் சொல்வார்களா பகுத்தறிவுவாதிகள்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலிருந்தே தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓலித்துக்கொண்டு வருகின்றன. தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தான் போராடுகிறோம் என்று தி.க.வினர் சொல்கின்றனர், ஆனால்முதன் முதலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று கூறியவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது நாத்திகர்களோ அல்ல. ஆத்திகர்கள்தான்.

மறைமலை அடிகள் முதல் தனித் தமிழ் இயக்க ஆத்திகர்கள் அதற்காக போராடினார்கள். இதில் தி.க.வினர் சொந்தம் கொண்டாட உரிமையில்லை. ஏனென்றால் கடவுளும் வேண்டாம், கோயிலும் வேண்டாம் என்று சொல்லுகின்ற தி.க.வினர் கோயிலில் எந்த மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்ல உரிமையில்லைதானே!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு – தொடர்ச்சி)

periyar_marubakkamமசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்?

சரி, வழிபாடு எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று ஹிந்துக் கோயிலுக்கு மட்டும்தானா? மற்ற மதக்காரர்களுக்கு இந்த அறிவுரை இல்லையா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தான் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது அந்தத் தமிழர்களுக்கு தி.கவினர் போராட முன்வர வேண்டும் அல்லவா! எப்பொழுதுதாவது மசூதியில் தமிழில் குரான் ஓதப்பட வேண்டும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதுண்டா? அல்லது வீரமணிதான் சொன்னதுண்டா? இல்லையே ஏன்?

இதோ, நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் 11 குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 பேர், பள்ளிவாசலில் தமிழில் குரான் வாசித்ததற்காகவும், மார்க்க விளக்கக்கூட்டம் போட்டதற்காகவும் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். (குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2003) தமிழுக்காக ஏங்கும் அந்த முஸ்லிம்களின் அழுகுரல் கேட்கிறதே! அந்த அழுகுரல் தமிழர் தலைவரான உங்கள் காதுகளில் விழவில்லையா? அல்லது விழுந்தும் பயத்தில் வேர்த்து இருக்கிறீர்களா?

கோயிலில் தமிழ் அர்ச்சனை வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம் முதல் மாநாடு வரை கூடி விவாதிக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.க. வினர் இந்த சமயத்தில் மட்டும் எங்கு தொலைந்து போனார்களோ தெரியவில்லை!

தமிழில் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று சொன்ன முஸ்லிம்களை இதுவரை வீரமணி கண்டிக்காதது ஏன்? இதுவரை அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழில் வழிபாடு நடத்தியதால் ஜமாத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றால் விலக்கியவர்கள் தமிழ்மேல் எவ்வளவு வெறுப்பு கொண்ட முஸ்லிம்களாக இருக்கவேண்டும்? அவ்வளவு வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களை இதுநாள்வரை வீரமணியோ, மற்ற தமிழறிஞர்களோ கண்டிக்க முன்வரவில்லையே! இதுதான் தமிழ்பற்றா? இதுதான் தி.க.வினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துகளைத் தாங்கிவரும் இதழ் ‘நந்தன் இதழ்.’ ஈ.வே. ராமசாமி நாயக்கரை யாராவது விமர்சித்ததால் உடனே ‘நந்தன்’ இதழில் மறுப்புரை வரும். தலையங்கத்திலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் படம் போட்டுதான் வரும். அந்த அளவுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரை துணைகொண்டு வரும் ‘நந்தன்’ (99 நவம்பர் 1-15) இதழ், ‘குழப்பவாதிகள்’ என்னும் தலையங்கத்தை எழுதியிருக்கிறது.

இதோ அந்தத் தலையங்கம்:-

‘முதல் மாதம் என்பதற்காகச் சித்திரையில் விதைப்பதில்லை. மூத்தவர்கள் சொல்வதெல்லாம் தத்துவங்கள் ஆவதில்லை.

அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலம் நிரந்தரமாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் இந்நேரத்தில், இத்தகைய குழப்பமான, பிற்போக்கான கருத்துக்களை சி. சுப்ரமணியம் போன்றவர்கள் வெளியிடுவது அவர்களை மூத்த அறிஞர்களாகக் காட்டவில்லை. முதிர்ந்த குழப்பவாதிகளாகத்தான் காட்டுகிறது. தினமணி போன்ற ஏடுகள் இக்கருத்தை ஆதரிப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த மொழிப்போராட்டத்தின்போது ஒரு வரலாற்றுப் பிழை நேர்ந்தது. இந்தி மொழியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் ஒரு சேர எதிர்க்கத் தவறியதால் நேர்ந்த பிழை அது! இந்தி எப்படி நமக்கு அந்நிய மொழியோ ஆங்கிலமும் அப்படித்தான். இதனை நாம் கணிக்கத் தவறிய காரணமத்தினால்தான் ‘பேச்சுத் தமிழ்’ ஆங்கிலத்தின் ஆக்கிரமிரப்பால் சீரழிந்து போய்விட்டது. ‘மணிப்பிரவாள’ நடையில் இருந்து தமிழை மீட்டு தமிங்கில நடைக்குத் தாரை வார்த்துவிட்டோம். இந்த வரலாற்றுப் பிழையை நேர் செய்தாக வேண்டும். ‘தொடர்பு மொழியாக’ ஆங்கிலம் வேண்டும் என்பதெல்லாம் இந்த விஞ்ஞான யுகத்தில் அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள். ஒலியின் வேகத்தையும் விஞ்சுகிறது கணினிகளின் மொழிமாற்றும் திறன்வேகம்!

இந்நிலையில் இந்தி, ஆங்கிலம், இந்த இரண்டு அந்நிய மொழிகளின் ஆதிக்கங்களையும் அகற்றிவிட்டுத் தமிழைத் தமிழ்நாட்டின் ஒரே பயிற்று மொழியாக தமிழ்நாட்டில் ஒரே ஆட்சி மொழியாக, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழையும் ஒன்றாக ஆக்குவது ஒன்றே தமிழை வாழ்விக்கும், தமிழரை வாழ்விக்கும் ஒரே வழியாகும்.

இன்று இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் அரியணையில் ஏற்றிவிட்டால் தமிழ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும்.

தமிழைத் தமிழ்நாட்டின் பயிற்று மொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் கொண்டுவருவதற்காக, தமிழ் உணர்வாளர்கள் போராடுவது மட்டும் போதாது. ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும்.
இல்லையென்றால் எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக்கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாகத்தான் வாழநேரும்.’’

இந்தத் தலையங்கத்தில் ‘நந்தன்’ இதழ், இரண்டு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறது.

1. ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டோம்.

2. தமிழ் ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பால் சீரழிந்து விட்டது. அதனால் ஆங்கிலம் வேண்டாம்.

இந்த இரண்டு விஷயங்களை ஆராயும் முன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
‘தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்காதே’ என்ற கோஷம் 1926-ப் பிறகுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தியை வித்திட்டவர் யார் தெரியுமா? சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்காதே என்று எந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரோ அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு வித்திட்டார்.

கவிஞர் கலைக் களஞ்சியம் இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதோ அந்தக் கட்டுரை!

‘பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

‘திரு.வி.க. வின் வாழ்க்கை குறிப்புகள்’ என்ற நூலில் பக்கம் 436-ல் ‘ராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே’என்ற திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வே. ரா. 1925-க்குப் பிறகு அவர் பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல்கட்டமாக அவரால் வித்திடப்பட்ட இந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

‘சித்திர புத்திரன்’ என்ற புனைபெயரில் பெரியார் ஈ.வே.ரா. 07-03-1926-ல் தனது குடியரசு இதழில் ‘தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வே.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் அக்கட்டுரையை எழுத வேண்டிய அவசியம்தான் என்ன?

பெரியார் ஈ.வே.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைபெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வே.ராதான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வே.ராவைப் பார்த்து ‘நீதானே தென்னாட்டில் இந்திக்கு வித்திட்டாய்’ என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்குப் பயந்தே அவர் அவ்வாறு செய்தார்.

1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க, அதை நீதிக் கட்சியினர் எதிர்த்த போது நீதிக்கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வே.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது?

மூன்றாம் வகுப்புவரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வே.ராவுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு தமிழர்களின் மீதும், தமிழ்மொழியின் மீதும் திடீரென்று அவரது 47-வயதில் பாசமும், பற்றும், பீறிட்டுவரக் காரணம்தான் என்ன? அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.

தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பற்றுடையவர் போல நடந்து கொண்டு வந்த பெரியார் ஈ.வே.ரா நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

1.6.1954-ல் வெளியான ‘விடுதலை’ இதழில் பெரியார் ஈ.வே.ரா, ‘நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம் என்று என்னைக் கூடக்கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக்கொண்டிருக்கவே மாட்டான்’ என்கிறார்.

‘‘தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி, சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப்படுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை’’ என்றும் “ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல’’ என்றும் ‘‘என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை’’ என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 03.03.1965-ல் ‘‘விடுதலை’’ இதழின் தலையங்கத்தில் ‘‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதிவருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள்” என்றும், “காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஓழியவேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’’ என்றும், 08-03-1965-ல் ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில் ‘‘தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை, தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி’’ என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967ல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது.

kamarajar-anna1967-ல் நடந்த தேர்தலில்போது பெரியார் ஈ.வே.ரா ஆதரித்து வந்த காங்கிரசும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வே.ரா. 01.10.1967ல் ‘விடுதலை’ .இதழில் ‘‘தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?’’ என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரிவிட்டார் என்பதுதான்.

“பெரியார் ஈ.வே.ராவின் பேச்சுக்களையும் செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் வைத்திருந்த பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், இந்தியை அவர் உள உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் இந்தியை அவர் எதிர்க்க காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது’’
(புதிய கோடாங்கி, ஏப்ரல்-2003)

கவிஞர் கலைக்களஞ்சியம் சொல்வதுபோல ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஹிந்தி மொழி எதிர்ப்புக்குக் காரணம் பார்ப்பனர்களின் மேல் இருந்த வெறுப்புதான் என்பதை அறியலாம்.

மேலும் ஒரு கருத்தை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் கூறுகிறார்.

paavaanar1பாவாணர், ‘‘(பெரியார்)… இந்தியையும் தமிழ்ப்பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தியெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப்படையாய்ச் சொன்னார்’’ என்று கூறுகிறார்.(நூல்: பாவாணர் வரலாறு)

ஆக இந்தியெதிர்ப்பு தமிழ்ப் பற்றால் அல்ல என்பது தெளிவாகிறது.

இனி நந்தன் இதழ் விஷயத்திற்கு வருவோம். ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டதற்கு காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான். ஆம். அந்த வரலாற்றுப் பிழையைச் செய்து ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்த ஆங்கிலப் பற்றுதான், அதை எதிர்க்க தவறிவட்டதற்கு காரணம். நாம் ஏற்கனவே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கிலமோகம் பற்றி பார்த்தோமல்லவா!

மேலும், நந்தன் இதழ் கொண்டாடுகிற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கில மோகத்தைப் பார்ப்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

*நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.
(விடுதலை. 18-10-1962)

*ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும்.
(விடுதலை. 06-07-1968)

*மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை.
(விடுதலை. 29-06-1968)

*ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி-II)

இதிலிருந்து தெரிவதென்ன? ஆங்கிலத்தை எதிர்க்காததற்குக் காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கில மோகம்தான் என்பது தெளிவாகிறதல்லவா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கருத்துக்களைத் தாங்கி வரும் நந்தன் இதழ், ஆங்கிலம் வேண்டும் என்று சி. சுப்பிரமணியம் சொன்னதால் அவரை முதிர்ந்த குழப்பவாதி என்கிறது. ‘நந்தன்’ வழிப்படிப் பார்த்தால் ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூட முதிர்ந்த குழப்பவாதிகள்! ஆம். ‘நந்தன்’ கொள்கைப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் குழப்பவாதிதான்.

நந்தன் இதழ், ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய (ஆங்கிலம் வேண்டும்) அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும் என்று சொல்கிறது. ‘நந்தன்’ வழிப்படி, முதலில் எதிர்க்க வேண்டியது ஆங்கிலம் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிமைச் சிந்தனைகளைத்தான்.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் படிக்கும்போது அந்த அடிமைச் சிந்தனையில் அகப்பட்டுக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்ன ஆங்கில மோகம் பற்றியக் கருத்துக்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள் என்று கருதி தமிழர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

நந்தன் சொன்னபடி, எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக வாழ நேரிடும் அவலநிலைக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் முதிர்ந்த குழப்பவாதியின் கருத்தாகக் கருதி அதை ஒதுக்கிவிட வேண்டும்.

(‘நந்தன்’ இதழின்படிப் பார்த்தால், ‘நந்தன்’ இதழ் எதிர்க்க வேண்டியது ஈ.வே. ராமசாமி நாயக்கரைத்தான், சி. சுப்பிரமணியத்தை அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன சி. சுப்பிரமணியம் மட்டும் முதிர்ந்த குழப்பவாதியாம். ஆனால் ஆங்கிலம் வீட்டுமொழியாக, நாட்டுமொழியாக ஆக வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும் தமிழுக்காக பாடுபட்டவராம். ‘நந்தன்’ இதழின் இந்த ஓரவஞ்சனையை என்னவென்று சொல்லுவது?

ஈ.வே.ராவைப் பற்றி பாவாணர்:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி நமது உள்ளங்களிலே எழுமானால் அதற்கு விடையாக ஒன்றுமில்லை என்ற பதில்தான் வரும். ஆனால் தமிழுக்காக ஒன்றுமே செய்யாத ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கிலத்திற்காக நிறைய செய்திருக்கிறார். இதை நாம் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதிலிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த கடிதம்!

தமிழ் நாட்டுத் தந்தை ஈ.வே.ரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது, வேண்டுகோள்.

அன்பார்ந்த ஐயா,

வணக்கம்.

தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாயத்(சமுதாய) துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்கு செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின் மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன்.

அன்பன்
ஞா. தேவநேயன்.

குறிப்பு:- திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங-ஆம் பக்கத்தில் 25-06-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகர சபைத்தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

ஞா.தே.
(தென் மொழி. 7:10, 11 பக்கம்-22-24)
(நூல்:- பாவாணர் வரலாறு)

இந்த கடிதத்திலிருந்து நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் மொழித்துறையில் அதாவது, தமிழுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று, நாம் கூறவில்லை; தமிழுக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்திட்ட பாவாணர் கூறுகிறார். இத்தனைக்கும் பல ஆண்டுகள் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருடன் இணைந்து சமூகப் பணியாற்றியவர். ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழக மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்திட்டவர் என்றெல்லாம் பாராட்டிய பாவாணர் தான் ஈ.வே.ரா. மொழித்துறையில் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறார்.

மேலும் ஆங்கில கலைக்கல்லூரிக்கு ஈ.வே.ரா ஐந்திலக்கம் ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ்வழிக் கல்லூரிக்கு அல்ல. தமிழுக்கு ஒன்றுமே செய்யாத ஈ.வே.ராவைத்தான் தமிழுக்காகப் பாடுபட்டவர் என்று சொல்லித் திரிகின்றோம். இது வெட்கக்கேடான விஷயமல்லவா!

இதிலே கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே. ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. ஈ.வே.ராவுக்கு தமிழ்மொழிமேல் பற்று இருந்தால்தானே பதில் கடிதம் அனுப்புவார்? அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்தது மலடியிடம் பிள்ளையை எதிர்ப்பார்ப்பது போல்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்மொழியை மட்டும் வெறுக்கவில்லை. தமிழ்ப் புலவர்களைக் கூட வெறுத்தார். சங்ககாலப் புலவராகட்டும் அல்லது அவருடன் வாழ்ந்த பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த கவிஞர்களாகட்டும் – அவர்கள் தமிழ் புலவர்களாக, கவிஞர்களாக இருந்தால் அவர்களின் மேல் ஈ.வே.ராக்கு வெறுப்புத்தான் இருக்கும்.

தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் போன்ற சங்ககாலப் புலவர்களை ஈ.வே.ரா. எப்படியெல்லாம் திட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதேப்போல் பாரதிதாசனும், பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் ம. பொ. சிவஞானமும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வெறுப்புக்குத் தப்பவில்லை. இவர்கள் ஆதரிப்பவர்களையும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வெறுத்தார். அந்த உண்மைகளைச் சற்றுப் பார்ப்போம்.

பாரதிதாசனுக்குப் பணம் எதற்கு?

bharathidasan_01பாட்டின் மூலம் நாட்டின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனையையும், தனித்தமிழ்ப் பற்றையும் வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். அவரை சிறப்பிப்பது தமிழன்னையைச் சிறப்பிப்பது போன்றதாகும் என்று அண்ணா கருதினார். ஆகவே தோழர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டப்பட்டது.

28.07.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் அன்று ஒரே சந்தோஷம்.

ஏன் தெரியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்ற விழா எனலாம் இதனை! அதோடு மாற்றார் எவ்வளவு இருட்டடிப்புச் செய்திடினும் எங்களாலும் பணம் சேர்த்து முடிப்பு அளிக்க முடியும் என்பதை உணர்த்திய விழா.. சுயமரியாதைக்காரன், நாஸ்திகன் என்று ஏளனமாகக் கருதப்பட்டவர்களுக்கும் ஒரு கவிஞன் உண்டு. அவன் புரட்சிக் கவிஞன் என்றெல்லாம் சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ஆனால் ஒரே ஒரு தலைவருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை. அவர் யார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.

அவருக்குத்தான் இதில் சற்றும் உடன்பாடு இல்லை. ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ’’ என்று கண்டித்தார்.

(நூல்: பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு – மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு எவ்வளவு வெறுப்புப் பாருங்கள். இவருக்கு பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்புக் கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

கேட்டுச் செய்ய வேண்டாமோ என்று கேட்கிறார். கேட்டிருந்தால் கண்டிப்பாக ஓத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பதை அவரது பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பல விஷயங்களை கழகத்தவரை, முக்கியமாக அப்போது பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரையை, கேட்காமலேயே செய்திருக்கிறார். 1947-ஆகஸ்ட்டு 15ம் நாள் திராவிடருக்குத் துக்கநாள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவரையும் கலக்காமல் அறிக்கைவிட்டார். தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களில் கூட கழகத்தவரை கேட்காமலேயே செய்திருக்கிறார்.

அதனால் கேட்டு, செய்ய வேண்டாமோ என்ற கேள்வியை கேட்க ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத் தகுதியில்லைதானே



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 5 (பெரியாரும் இஸ்லாமின் சாதியும்)

periyar_marubakkamஇஸ்லாமின் சாதியைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்:

ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்வதில் எவ்வளவு வல்லவர்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், இஸ்லாமில் ஜாதியைப் பற்றிய இவர்களுடையப் பிரச்சாரங்கள்.

இஸ்லாமில் சாதி இல்லையாம், ஈ.வே. ராவின் பிதற்றல்!

இந்துமதத்தில் பல ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதத்தில் மட்டுமே உயர்வு-தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன-என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? இதோ!

* இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன.
(குடியரசு 03.11.1929)

* தீண்டாமையை ஒழித்து மகமதிய மதமே! இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு-தாழ்வு இல்லை.

* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
(குடியரசு 02.08.1931)

* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
(குடியரசு 23.08.1931)

* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
(குடியரசு 17.11.1935)

* இப்போது வரவர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும், சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லிம்களாக ஆகிவிட்டால் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.

* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.
(குடியரசு. 19.01.1936)

* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.
(குடியரசு 31.05.1936)

* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றன.

* இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.
(நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)

அதாவது இஸ்லாமில் ஜாதி இல்லை. இஸ்லாமில் உயர்வு-தாழ்வு இல்லை. அங்கு எல்லோரும் சமம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து. இதுபோலவே வீரமணியும் ‘சங்கராச்சாரியார்’ என்ற நூலில் ‘சாதி என்று வரும்போது அது இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலே உண்டு?’ என்று கேட்கிறார். ஆக இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் ஜாதி இல்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் கூறுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள்.

இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்களே – இதுவாவது உண்மையா என்று பார்க்கலாம்.

இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!

‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-

முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.

1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்

உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-

1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.

3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.

இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-

1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.

2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.

3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)

4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)

5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)

6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)

7. பஹாவீ

8. ஸனூஸி

9. கைதியானி

10. அஹ்மதியா

11. ஸீபிகள்

இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)

ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.

இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:

1. ஆந்திரா – மஹாதர்

2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.

3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.

4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்

5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்

6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்

7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)

8. பஞ்சாப் – பகிர், மேகாதி

9. ராஜஸ்தான் – ஜூலாஹா

10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா

11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்

மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?

இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே! இந்த சாதிகள் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் வீரமணிக்கும் தெரியாதா? தெரியாது என்று இவர்கள் சுலபமாகப் பொய் சொல்லிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு தெரிந்த மாதிரி மேலும் ஓர் ஆதாரத்தை நாம் காட்டலாம்.

இஸ்லாமின் சாதிப் பற்றி அம்பேத்கர்!

அம்பேத்கர்

அம்பேத்கர்

ஈ.வே. ராமசாமி நாயக்கரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாயணத்தின் இருபக்கங்கள் என்று சொல்கின்றார்களே, அந்த ஒரு நாணயத்தின் ஒரு பக்கமான டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர். 1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

மேலும் இஸ்லாமியர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாயத்து முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுவதாவது:-

”பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துக்களைப் போன்றே முஸ்லிம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லிம்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான். அவன் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றபடுகிறான்; இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது; அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாட முடியும். ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும்; இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.”

இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடி மதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத் தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கம் இடமில்லை. இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்தும் தீமைகளையும் வரிந்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லிம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.”

குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் கூறியதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகின்ற இந்த இஸ்லாமிய சாதிகள் கூட ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், வீரமணிக்கும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இஸ்லாமில் சாதி இல்லை என்று இவர்கள் மறுபடியும், மறுபடியும் பொய் சொல்வதற்குக் காரணமென்ன?

ஒன்று இஸ்லாமில் உள்ள சாதிகளை மூடிமறைத்து அம்மதத்துக்கும் இந்துக்களை மதமாற்ற உதவி செய்வதன் மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து தங்கள் அமைப்புக்கு பணம் பெறுவது.

இரண்டாவது, இஸ்லாமியர்களை விமர்சித்தால் தம் உயிருக்கு பாதகம் எற்படும் என்ற பயம்.

மூன்றாவது தங்களுடைய கருத்துக்கு எப்பொழுதும் யாராளும் மறுப்பு சொல்ல முடியாது என்ற ஆணவம்.

இவைகள்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறதல்லவா! உண்மைகள் அவர்களுக்கே வெளிச்சம்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய் ஒரு புறமிருக்கட்டும். வீரமணி என்ன சொல்கிறார்? இந்து மதத்தைத் தவிர வேறுமதத்தில் சாதி இல்லையாம். இஸ்லாமிலே சாதி இருக்கின்றது என்று பார்த்தோம். அடுத்து இவருடைய தந்தை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதை கவனியுங்கள்:-
பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். (குடியரசு 02-08-1931)

தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும், ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. கிருத்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை (குடியரசு 19-01-1936)

இதிலிருந்து தெரிவதென்ன?

கிறிஸ்துவ மதத்திலும், பவுத்த மதத்திலும், ஜைனமதத்திலும் தீண்டாமையிருக்கிறது என்பது தானே? வீரமணியுடைய தந்தைக்கு பல மதங்களில் உள்ள தீண்டாமை தெரிகின்றது. ஆனால் பிள்ளைக்கு தெரியவில்லை. இதில் யார் உண்மையை சொல்லியிருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் தீண்டாமைதானே தவிர சாதி இல்லை என்று வாதிடலாம். ஆனால் சாதி இருப்பதால்தான் தீண்டாமையே இருக்கின்றது என்று இவர்கள்தான் சொல்லி வருகின்றனர். அதனால் தீண்டாமை இருக்கின்றது என்று சொன்னால் அங்கு சாதியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் வீரமணி சொல்வது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி திரியும் இவர்கள் பண்பாடுமிக்கவர்களாம்! இவர்களுடைய இதழுக்கு பெயர் ”உண்மை”யாம்! அதைவிட ”பொய்மை” என்று வைத்திருக்கலாம் அல்லவா!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம்6 (பெரியாரின் கடவுள் நம்பிக்கை!)

periyar_marubakkamஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு பற்றி உயர்வாகப் பேசுகிறார்களே-அந்த உயர்ந்த பண்பாடு உடைய ஈ.வே. ராமசாமி நாயக்கருடையப் பேச்சுகள் பல எப்படியிருந்தன என்பதைப் பற்றி பார்க்குமுன் – அவரை விமர்சிக்கும் முன் – ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அதாவது வீரமணி கூறுகிறார்:-

‘‘பெரியாருடைய கருத்துக்கு ஒருவர் மறுப்புச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் பெரியாரைப் பற்றி சங்கராச்சாரியார் எழுதிய நூலை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பெரியாரைப் பற்றிப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலை வைத்துப் போசினால்தான் அது முழுமையான நிலையை அடையும்.’’.

ஆகவே வீரமணியின் இந்த கருத்தை நினைவில் கொண்டு விமர்சனத்தை மேலே தொடர்வோம்.

1937-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘நவமணி’ ஆண்டுமலரில் எழுதுகிறார்:-

‘‘எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்யவேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரோ என்றோ, தண்டிப்பாரோ என்றோ கருதி (எந்த காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எந்த காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கையில்லையென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை’’

என்றும்,

90-வது ஆண்டு மலரில்,

‘‘நான் 1920-இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதார் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்துவந்தேன். நான் 1900-க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்து வந்தேன்’’

என்றும் கூறுகிறார்.

இதைப் படிப்பவர்களுக்கு ‘அடடா! ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு பிறந்ததிலிருந்தே கடவுள் பற்று இருந்ததில்லை. அவர் ஒரு நாத்திகப் பிழம்பாகத்தான் பிறந்ததிலிருந்தே இருந்திருக்கிறார்’ என்றுதான் தோன்றும். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘பண்பாடு மிக்கவர்,’ ‘பொய் சொல்லாதவர்’ என்றெல்லாம் அவரின் அடியார்கள் மார்தட்டிக் கூறுகின்றார்களே அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்று உண்மையா?

எனக்கு சிறுவயது முதற்கொண்டு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுள் பற்று, மதப்பற்றுமிக்கவராக, நம்பிக்கையாளராக இருந்திருக்கிறார் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. அந்த வரலாற்று உண்மையை, வீரமணி சொல்கின்றாற்போல, ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பத்திரிகையான ‘குடியரசு’ இதழிலேயே காண்போம்.

46 வயதுவரை ஈ.வே. ராமசாமி கொண்ட கடவுள் நம்பிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முதல் குடியரசு இதழ் 02-05-1925 -இல் வெளியானது. அதில குடியரசு என்று தலையங்கம் இட்டு இவ்வாறு இருக்கிறது:-

‘‘தாய்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்.’’

இவ்வாறு துவங்கும் தலையங்கம்

‘‘இப்பெருமுயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பானாக’’

என்று முடிகிறது.

மேலும் அதே குடியரசில்,

‘‘இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகமெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். அவரது இடது கன்னத்தில் முளைத்த சிறு கொப்பளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக’’

என்று இருக்கிறது.

ஈ.வே. ராமசாமி நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட, ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஆசிரியராகக் கொண்ட குடியரசு இதழ் இறைவனைப் பற்றிக் கூறுகிறதென்றால் அதில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே அர்த்தம். மேலும் தலையங்கங்கள் தன்னால் எழுத்தப்பட்டது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது குடியரசில் எழுதப்பட்ட, தலையங்கத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே பொருள்!

இந்த ஆதாரங்கள் கூட போதாது என்பவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் இதோ!

அதற்குமுன், வீரமணியின் பொய்!

வீரமணியிடம், ‘பெரியார் பிறவி நாத்திகரா? அல்லது (பின்தாங்கிய) வயது வந்தபின் நாத்திகரா?’ என்று கேள்வி கேட்டதற்கு, வீரமணி, ‘‘அய்யாவின் கூற்றுப்படி அவர்களுக்குத் தெரிந்த காலம் முதல் கடவுள் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை என்றாலும் குடியரசின் துவக்க கால இதழ்களில் கடவுள் பற்றி சில தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதாலோ அவர் பிறகு நாத்திகரானார் என்று குறிப்பிட முடியாது. அப்போது உடன் இருந்தவர்கள் எழுதவும் ஒருவேளை அனுமதித்திருக்கக்கூடும்’’ என்று கூறுகிறார். (நூல்:- வீரமணியின் பதில்கள்)

வீரமணி சொல்வதுபோல வைத்துக் கொண்டாலும் நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துக்களை ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் அனுமதித்தார்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் அப்போது அனுமதித்தார் என்றால் அவர் வழிப்படி நடக்கும் தாங்கள் உண்மை இதழிலும் விடுதலை நாளேட்டிலும் கடவுளை வேண்டுகிற, கடவுளை நம்புகிற கட்டுரைகளை எழுத அனுமதிப்பீர்களா?

ஆனால் வீரமணி சொல்கின்ற மாதிரி உண்மை அதுவல்ல. ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுளை நம்பினார். அதை மறைக்க ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கரும் அவருடைய சீடர் வீரமணியும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இருப்பினும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டுவோம். இதோ! அதே முதல் குடியரசில் ஈ.வே. ராமசாமி நாயக்கரே பத்திரிகாலய திறப்பு விழாவில் பேசிய பேச்சு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில்,

‘‘ஸ்ரீமான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளைப் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டபோது கீழ்க்கண்டவாறு பேசினார்’’ என்று குறிப்பு எழுதி அதன் கீழ் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசிய பேச்சு அச்சிடப்பட்டு இருக்கிறது.

மேலும் அதில்,

‘‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றி செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்’’ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசியிருக்கிறார்.

இதன்மூலம் நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மீது 46 வயது வரை நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதுதானே! மேலும் சில ஆதாரங்கள் இதோ!

பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் என்பவர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு மு. கருணாநிதி அணிந்துரையும், க. அன்பழகன் வாழ்த்துரையும், தி.க. பொதுச்செயலாளர் கி. வீரமணி பாராட்டுகளையும் வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட இந்நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி வருபவற்றைப் பார்ப்போம்.

* வ. வே. சு. அய்யர் மறைவு குறித்து குடியரசில் பெரியார் எழுதுகையில் ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார்.

(குடியரசு 07-06-1925)

* காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தபோது ‘‘தப்பிதம் செய்த மக்களை தண்டித்தல் தவறு என உணர்ந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்த மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை மலை மேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. அஹிம்சையின் தத்துவமும் விளங்குகிறது. உண்ணாவிரதத்தின் போது அவருக்கு போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம்’’ என்று பெரியார் எழுதினார்.
(குடியரசு 06-12-1925)

* சித்தரஞ்சன் தாசின் புதல்வர் மறைவு குறித்து எழுதுகையில் ‘‘சென்ற ஆண்டில் விண்ணவர்க்கு விருந்தினராய்ச் சென்ற தேசபந்து சித்தரஞ்சன் தாசின் அருமையான ஏகபுதல்வன் கடந்த ஜீன் மாதம் 26-தேதி இறைவன் திருவடியெய்தினார் என அறிய நாம் பெரிதும் வருந்துகின்றோம்’’ என்று எழுதினார்.
(குடியரசு 04-07-1926)

மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலையெனத் தெற்றென விளங்கும். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஆத்திகர்கள் எவ்வாறு ஒரு நற்காரியத்திற்கு ஆன்மிகப் பெரியவர்களை அழைப்பார்களோ அதேபோல் தனது குடியரசு பத்திரிகாலயத்தை தொடங்கிவைத்திட ஸ்ரீலஸ்ரீ திருப்பாதிரிப் புலியூர் ஞானியர் சுவாமிகள் என்னும் சமய ஞானியையே அழைத்தார் என்பதிலிருந்தும் அவரது கடவுள் நம்பிக்கையை அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதிருந்தால் வேறு தலைவர்களை அழைத்திருப்பார். அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்த காரணத்தால்தான் சமய ஞானியை அழைத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது அவரது குடியரசு தலையங்கத்திலிருந்து நாம் அறியலாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுளை நம்பியிருக்கிறார். அதாவது தன் வாழ்நாளின் மொத்த வயதில் பாதி வயது வரை (46 வயது வரை) கடவுள் நம்பிக்கையில் கழித்திருக்கிறார்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வது என்ன? ‘யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை’ என்று சொல்கிறார். யோசித்து ஏன் பார்க்க வேண்டும்? 02-05-1925-ஆம் ஆண்டு குடியரசு இதழைப் பார்த்தாலே போதுமே! அந்த குடியரசு இதழ் காணாமல் போய்விட்டது அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்றுகூட இவர்கள் பொய் சொல்வார்கள். ஆனால் அந்த முதல் குடியரசு இதழ் என்ன ஐந்தாயிரம் வருடத்திற்று முந்தைய இதழா? அல்லது புனல்வாதம் செய்து ஆற்றில் விட்டுவிட்டாரா? அல்லது அனல்வாதம் செய்து நெருப்பில் போட்டுவிட்டாரா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘நவமணி’ இதழில் கடவுள் நம்பிக்கை சிறுவயது முதல் இல்லை என்று எழுதியது. 1937-ல். முதல் குடியரசு வெளிவந்தது 1925. அதாவது முதல் குடியரசு இதழ் வெளிவந்து 12 வருடங்கள்தான் ஆகிறது. இந்த 12 வருடங்களுக்குள் தன்னுடைய 46 வயது வரை கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையை மறுத்து சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா? ஹிந்து மதத்தின் பழமையான நூல்களை தேடித்தேடி ஆராய்ந்து இந்த நூலில் இப்படியிருக்கிறது, அந்த நூலில் அப்படியிருக்கிறது என்ற சொல்லத் தெரிந்த ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு, தான் வெளியிட்ட முதல் குடியரசு இதழை கண்டுபிடித்து எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது என்று உண்மையைச் சொல்ல துணிவு இல்லையே! இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடா?

கண்டுபிடிப்பது கூட கடினமாக இருந்திருக்கலாம். ஞாபகம் கூடவா ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்திருக்காது? தனது 46 வயது வரை நம்பியிருந்த கடவுள் பற்றை 12 வருடத்திற்குள்ளாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறந்திருப்பார் என்று கூறுவது அதைவிடப் பொய்யாகும். தன்னுடைய கடவுள் நம்பிக்கையை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறைத்து போலி விளம்பரத்திற்காகப் பொய் சொல்லியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் 46 வயது வரை கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையை மறைத்துப் பொய் சொல்ல வேண்டும்?

எல்லாம் விளம்பரமோகம்தான்.

1937-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரை பழுத்த நாத்திகவாதி என்று மக்கள் நம்பத்தொடங்கினர். அவரை பகுத்தறிவு பகலவனாக மக்கள் ஏற்கத் தொடங்கினர். அப்போது போய் நான் 46 வயது வரை கடவுளை நம்பினேன். பிறகு விட்டுவிட்டேன் என்று மக்களிடம் சொன்னால் தன்னை எங்கே பழுத்த நாத்திகவாதியாக – பகுத்தறிவு பகலவனாக ஏற்றுக் கொண்டு மரியாதை தரமாட்டார்களோ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் நினைத்தார். அதனால்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளப் பொய் சொன்னார். விளம்பரமோகம் யாரை விட்டது?ஆனால் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை மறைத்துப் பொய் சொல்லி திரியும் நடிகர்-நடிகைகளுக்கும், அவர்களைப் போலவே பொய் சொல்லி திரியும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் நம் மனதில் எழுத் கேள்வி! இப்படிப் பொய் சொல்பவர்தான் பெரியாரா என்றக் கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறதல்லவா?

தலைவரே பொய் சொல்லும்போது அவருடைய அடியார்கள் பொய் சொல்லாதவர்களாக இருப்பார்களா? அதனால்தான் வீரமணியும் இந்த விஷயத்தில் உண்மையை மறைத்துப் பொய் சொல்லியிருக்கிறார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய குடியரசு இதழை வைத்துத்தான் இப்போது வீரமணியிடம் கேள்வி கேட்கிறோம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் 46 வயது வரை கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாரா? இல்லையா? இதை திராவிடர் கழகம் தெளிவுபடுத்தட்டும். அதன்பிறகு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு எத்தன்மை வாய்ந்தது என்பதை பரிசீலிப்போம். அதுவரை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு என்பது பொய் சொல்வதிலே அடங்கியிருக்கிறது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?

- தொடரும்

குறிப்பு:

ஈ.வே. ராவின் தலைமையில் நடந்த நிகழ்ச்சி

1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி தினமணி நாளிதழில் வந்த செய்தி:

நாத்திக மாநாடு; முகூர்த்தக்கால் நடப்பட்டது! மஞ்சள், குங்குமம் மாவிலைக் கொத்துடன் – என்ற தலைப்பில் இருந்த செய்தியில் சேலம் போஸ் மைதானத்தில் 1971-ல் ஜனவரி 16,17-ம் தேதிகளில் ‘பகுத்தறிவாளர்கள் மாநாடு’ ஒன்று நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டிற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமை தாங்க உள்ளார். அதற்காக ஒரு பெரிய பந்தலும் போடப்பட்டுள்ளது. இந்தப் பந்தல் போடுவதற்கு முன்பாக ‘மாவிலை, வேப்பிலை’ கட்டப்பட்ட முகூர்த்தக்கால் நடப்பட்டு மஞ்சள் குங்குமமும் பூசப்பட்டது. அவ்வழியே சென்ற மக்கள் இதனைக் கண்டு வியப்படைந்தனர். (நன்றி: விஜய பாரதம் 10-02-2002)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை)

periyar_marubakkamஇந்து மதத்தை கண்டிக்கும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை கண்டிப்பதில்லையே ஏன் என்று இந்துக்கள் கேட்டால், அதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாரிசுகள் சொல்வது என்ன தெரியுமா?

‘‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’

என்றுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே தவிர இந்துக் கடவுள்களை மட்டும் சொல்லவில்லை. இதில் வரும் ‘கடவுள்’ என்ற சொல் கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களையும் குறிக்கும் என்று கூறுகின்றார்கள்.

jesusஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வாசகம் இந்து மதத்திற்கு மட்டும்தான் என்பதை இவர்கள் மூடி மறைக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மறுப்பு வாதத்தை இந்து மதத்திற்கு மட்டும்தான் சொன்னாரே தவிர கிறிஸ்த, முஸ்லிம் மத கடவுள்களுக்காக அல்ல. கிறிஸ்துவ, முஸ்லிம் மதத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறார். அந்த மதங்களைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் விமர்சனம் மிக மிக மிக சொற்பமே. அந்த சொற்ப விமர்சனமும்கூட அந்த மதத்தைக் கண்டிக்கும் விதமாக இல்லாமல் அறிவுரை கூறும் விதமாகவே இருக்கும். ஆனால் இந்து மதத்தை விமர்சனம் செய்யும்போது அறிவுரை கூறும் விதமாக இல்லாமல் கண்டிக்கும் விதமாக இருக்கும்.

கடவுள் மறுப்பு என்று வரும்போது கிறிஸ்துவ, முஸ்லிம் கடவுள்களுக்கு விதிவிலக்கு அளிப்பது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் போலி கடவுள் மறுப்பு கொள்கையைத்தானே காட்டுகிறது! ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானது என்பதற்கு இதோ ஆதாரங்கள்:-
16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-

வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.

வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.

25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதுகிறார்:-

‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.

23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-

புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.

… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’

26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’

26-12-1948 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (மகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).

31-12-1948 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

‘‘… ஆனால் கிருஸ்துவையோ, மகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’

04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-

‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’

25-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’

இந்த ஆதாரங்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானவை என்பதைத்தானே காட்டுகிறது! கடவுளே இல்லை என்று சொல்கின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் அன்பான தெய்வமே கிறிஸ்து என்று சொல்லுகிறார் என்றால் அது போலி கடவுள் மறுப்புக் கொள்கையைத் தானே காட்டுகிறது! ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை இந்து மதத்திற்கு மட்டும்தான். அதுவும் போலி கடவுள் மறுப்புக் கொள்கைத்தான்.

இதிலே மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக பல இடங்களில் பேசியிருக்கிறார்; எழுதியும் இருக்கிறார்.

‘‘நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்பவேண்டாம் என்று சொல்லவும் இல்லை… அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை’’
(விடுதலை 10-09-1956)

‘‘கடவுளைக் கும்பிடவேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளை கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை.’’
(விடுதலை 04-06-1959)

கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரி கும்பீடு’’
(விடுதலை 04-05-1959)

இது போன்ற முரண்பட்ட கருத்துக்களை பல தடவை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியிருக்கிறார். கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஒரே கடவுளை கும்விடு; கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை என்று பல்டி அடித்து முரண்பட்டவாதமல்லவா?-இப்படி நாம் கூறும் போது இதற்கு பதிலாக பகுத்தறிவுவாதிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரே ஒரு கடவுளை கும்பிடு என்று சொன்னது ‘‘கடவுள் வேண்டும் என்று சொல்லுகின்ற, கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான்’’ என்று பகுத்தறிவுவாதிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த பதில்கூட பலமில்லாததுதான். ஏனென்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களாக்குவதுதானே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வேலை. அதைத்தானே அவர் செய்து வந்தது. அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி சாதியை ஒழிக்க வேண்டுமானால் பிராமணர்களை ஒழிக்கவேண்டும். பிராமணர்களை ஒழிக்க வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டும். மதத்தை ஒழிக்கவேண்டுமானால் கடவுளை ஒழிக்க வேண்டும். இப்படி கடவுளை ஒழித்தால்தான் எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்று சொல்கின்றபோது சிலருக்கு மட்டும் கடவுளை கும்பிடு என்று சொன்னால் அது தான் பகுத்தறிவா? அதுதான் கடவுள் மறுப்புக் கொள்கையா? இது முரண்பட்டவாதம்தானே!

கடவுள் வேண்டும் என்று சொல்கின்ற-கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான் என்பது சரி என்றால் சாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா? சாதியைவிட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றபோது சாதியை விடமுடியாதவர்களுக்கு மட்டும் சாதியை கடைபிடியுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு மூடத்தனமோ அதேபோலத்தான் கடவுள் இல்லை என்று சொல்கின்றபோது கடவுளை விடமுடியாதவர்களுக்கு மட்டும் கடவுளை கும்பிடுங்கள் என்று சொன்னால் அதுவும் பகுத்தறிவற்ற மூடத்தனம் ஆகும். ஆனால் இப்படி பகுத்தறிவற்ற முறையில் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தானே பகுத்தறிவு பகலவன் என்று சொல்லுகின்றார்கள் பகுத்தறிவுவாதிகள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் – பெரியாரின் முரண்பாடு)

periyar_marubakkamசொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு அய்யா (ஈ.வே. ராமசாமி நாயக்கர்) அவர்கள் போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அது உண்மையில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு பல தடவை போயிருக்கிறார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்:-

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்.
(திராவிடன் 05-08-1929)

இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:-

தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.
(குடியரசு 20-10-1935)

அம்பேத்கருக்கு அறிவுரை கூறிய ஈ.வே. ரா!

தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம்-அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’ என்று கூறுகிறார்.
(குடியரசு 20-12-1935)

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார்.
(குடியரசு 31-05-1936)

ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவ்வளவு உறுதியாக, சபதம் ஏற்றிருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தனது கடைசி காலத்தில் மதம் மாறாமல் இந்துவாகவே இறந்தார்?

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியமா?

அம்பேத்கருக்கு அறிவுரை கூறியதுதான்.

அதாவது அம்பேத்கர் கொண்டுவந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சொன்னதுதான். ஆனால் அம்பேத்கர் தான் இந்துவாக இறக்கப்போவதில்லை என்று சொன்னவாறே பெளத்தத்தை தழுவி, தான் சொன்ன சொல்லை செயலில் காட்டினார். ஆனால் அம்பேத்கருக்கு அறிவுரை சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதை காற்றிலே பறக்கவிட்டுவிட்டார். உண்மையிலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத்தான் அம்பேத்கர் அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். இவர், தான் சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்குப் போகாதவராம்!

இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா?

அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்!

சொல் ஒன்று-செயல் ஒன்று என்ற கட்டத்திற்கே அய்யா போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அப்படியானால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொன்ன கட்டத்திலிருந்து இந்துவாகவே இறந்தார் என்ற கட்டத்திற்கு சென்றது ஏன்? இதுதான் சொல்லும் செயலும் ஒன்று என்ற கட்டமா? இதை வீரமணிதான் விளக்கவேண்டும்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்று நாம் சொன்னால்-உடனே ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துமதத்தை எதிர்த்தவர். நாத்திகர்களுக்கு மதம் இல்லை. அவர் மதம் மாறவில்லையென்றாலும் அவரை இந்து என்று சொல்லிவிடமுடியாது. ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாத்திகவாதியாதலால் அவர் இறக்கும்போது நாத்திகவாதிதான். இந்து அல்ல என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லிவிடுவார்கள்.

அறிவுரையை மறந்த ஈ.வே. ரா!

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்பதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்திருக்கிறார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்.
(விடுதலை 09-02-1950)

periyar_ambedkarஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 9 (பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)

பெரியார் திடல் வரலாறு!

periyar_marubakkam”இந்த பெரியார் திடல் மன்றத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு தடவை தந்தை பெரியார் அவர்கள் செயிண்ட் மெமோரியல் ஹாலில் மாநாடு கூட்ட வேண்டுமென்று கேட்டபோது அய்யாவின் கொள்கையை கேட்டுவிட்டு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படியானால் இங்கேயே ஒரு பொது மண்டபம் அமைப்போம் என்று இந்த மண்டபத்தை அமைத்தார்கள். அப்போது அங்கே இருக்கிற எல்லோரையும் அழைத்து தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:-

நாங்கள் கேட்டோம், மறுத்துவிட்டார்கள்-உடனே எனக்கு என்ன தோன்றிற்று? பொதுமண்டபம் ஒன்று சென்னையிலே இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் பயன்படவேண்டும். எனக்கு மாறுபட்ட கருத்து உடையவர்கள் கேட்டாலும் கொடுக்கவேண்டும், தைரியமாக.இன்னாருக்கத்தான் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை. ”பொது மண்டபம்” என்ற முறையிலே-நமக்கு அவர்கள் மறுத்ததற்கு நேர் எதிரிடையாக நீங்கள் நடக்க வேண்டும்…என்று சொன்ன காரணத்தினால்தான் இன்றைக்கு அய்யா அவர்கள் வகுத்த அந்த நெறிப்படி இங்கே அனைவருக்கும் பொதுவுக்குப் பயன்படும்படி இந்த மண்டபம் அமைக்கப்படுகிறது’’ என்று வீரமணி அவர்கள் ‘சங்கராச்சாரி யார்’ என்ற நூலிலே கூறுகிறார்.

மேலும் 31-03-1994 அன்று சன் டி.வி.யில் ரவி பெர்னாட் அவர்கள், ‘‘பெரியார்திடலில் தீ மிதி நடத்த வேண்டும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?’’ என்று கேட்டதற்கு வீரமணி அவர்கள், ”தாராளமாக ஒத்துக் கொள்வோம். அதற்கு அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்துவோம்” என்றும்

அதைத் தொடர்ந்த கேள்விக்கு ”பெரியார் திடல் எங்களுடைய கட்சியினுடைய மன்றம் அல்ல” என்றும் பதில் கூறியுள்ளார்.

…வீரமணி சொல்கின்ற இந்த பெரியார் திடல் வரலாற்றை ஆராய்ந்தால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.

மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!

உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று வீரமணி சொல்வாரா?

இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

veramani14.08.98 அன்று கோலாலம்பூரில் வீரமணி தன்னுடைய நிகழ்ச்சிக்கு இடம் கொடுக்காததைப் பற்றி பேசும் போது ”நண்பர்களே கீதையின் மறுபக்கம் நூலை அறிமுகப்படுத்த இங்கு இடம் தர மறுத்தால் இன்னொரு இடத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுப் போகிறோம். புத்தகம் பரவுவதில் எங்களுக்கொன்றும் எந்தச் சங்கடமும் இல்லை. இடம் கொடுத்தவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக்கூடாது என்ற உணர்வோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இதை ஒரு பெரிய குற்றமாகக் கூடக் கருதவேண்டிய அவசியமில்லை. ஆகா! இந்த இடத்தில் தான் பண்ணவேண்டும். அந்த இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள்” என்று கூறுகிறார்.

ஆனால் இப்படி பேசியிருக்கின்ற வீரமணி என்ன செய்திருக்க வேண்டும்? ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழிப்படி, கொள்கைப்படி, கோலாலம்பூரில் ஒரு பொதுமன்றத்தைக் கட்டி எல்லோருக்கும் பொதுவாக வாடகைக்கு விட்டிருக்கவேண்டுமா? இல்லையா? அதையும் விட்டுவிட்டு ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழியையும் விட்டுவிட்டு, இன்ன இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கூறுகிறாரே, அப்படியென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவுவாதி இல்லையா? ஒருவர் இடம் கொடுக்கவில்லை என்றால் மற்றொரு இடத்தில் நடத்திடவேண்டும். அவர்தான் பகுத்தறிவுவாதி என்று வீரமணியே சொல்கின்றபோது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்தது பகுத்தறிவின் செயல் அல்ல என்பது தெளிவாகின்றதே! வீரமணிக்கு இருந்த பகுத்தறிவு கூட ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு இல்லையே!

இது ஒருபுறம் இருக்க,

பொதுமன்றம் ஆரம்பித்ததன் மூலம் இவர்களே இவர்கள் கொள்கைக்கு முரணாக நடந்துகொள்கிறார்கள். எப்படியென்றால் பெரியார் திடலில் அடிக்கடி அற்புத சுகமளிக்கும் தெய்வீக கூட்டங்கள் நடைபெறுகின்றன. காது கேட்காதவர்களுக்கு காத கேட்கவைப்பது, குருடர்களை பார்வையடையச் செய்வத போன்ற நிகழ்ச்சிகள் பக்தியின் பெயரால் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருகின்றார்கள். நிகழ்ச்சி நடக்கும்போது மேலும் அங்கே பக்தி ஊட்டப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் போய் விடுகிறார்கள். ஆனால் அடுத்த நாள் வீரமணி சொல்கின்றது போல, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினால் அற்புத சுகமளிக்கும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் அல்லது பக்தர்கள் மறுநாள் நடக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா?

பெரியார் திடலில் தீமிதி விழா நடந்தால் சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருவார்கள். ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடந்தால் முதல் நாள் தீமிதி விழாவில் வந்தவர்கள் இதற்கு வருவார்களா? கண்டிப்பாக வரமாட்டார்கள். ஆகவே பெரியார் திடலை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் இவர்களே பக்தியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்! இதுதானா மக்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றும் முறை?

பெரியார் திடலில் அடிக்கடி இயேசு ஜீவிக்கிறார் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? இல்லவே இல்லை! ஆதாரத்தோடு பகுத்தறிவுவாதிகள் இதை நிரூபிக்கமுடியுமா? அப்படி ஒருவேளை நடத்தப்பட்டிருந்தால் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எத்தனைபேர் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்?

எலியை வயலில் அனுமதித்துவிட்டு, வயல் பாழாகிறதே என்று அலறிவிட்டு பின்பு எலியை விரட்டுகிறேன் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…

பாம்புக்கு பால் வைத்துவிட்டு ‘பாம்பு ஒழிப்பு’ நிகழ்ச்சி நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…

திரைப்படம் எடுப்பதற்கு பணம் தந்துவிட்டு ”திரைப்படம் ஒழிப்பு” போராட்டம் நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ… ஏமாற்றுத்தனமோ.. அதேபோல்தான் பெரியார் திடலில் பக்தியை பரப்பும் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு இடம் கொடுத்துவிட்டு, அவர்கள் போன பின்பு..(கவனிக்கவும்) அவர்கள் போன பின்பு-அய்யோ! மக்களுக்கு பக்தி பரவுகிறதே, மூடநம்பிக்கை பரவுகிறதே! என்று அலறிவிட்டு, பக்தியை ஒழிக்கிறேன் என்னும் பேரால் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவதும் முட்டாள்தனமான செயலாகும்.

பகுத்தறிவுவாதிகளே! ஆங்காங்கே கூட்டம்போட்டு மக்கள் பக்தி போதையில் அறிவை இழக்கிறார்கள் என்று உரக்க கத்துகிறீர்களே அந்த பக்தி போதை வளர நீங்கள் வாடகைக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒரு காரணியாக இருக்கின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?

தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றால் அதற்கு மறுநாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று வீரமணி சொல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தீமிதி நிகழ்ச்சி நடந்தால் மூடநம்பிக்கை வளர்கிறது. அதனால்தான் நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றுதானே அர்த்தம்! பிறகு ஏன் மூடநம்பிக்கை வளர பெரியார் திடலில் முதலில் அனுமதி தரவேண்டும்? தாங்களே அதை வளர்த்துவிட்டு அதை நாங்கள் ஒழிக்கிறோம் பாருங்கள் என்று சொல்வதுதான் பகுத்தறிவா?

எல்லோருக்கும் இடம் கொடுப்பதன்மூலம் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு தெரிகிறதாம்! மெமோரியால் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் அவர் கொள்கையில் வழுவாமல் நிற்கிறார் என்றுதானே பொருள், ஈ. வே. ராமசாமி நாயக்கர் இடம் கொடுக்கிறார் என்றால் அங்கே பண்பாடு எங்கே தெரிகிறது? கொள்கை நழுவல்தானே தெரிகிறது. பண்பாட்டிற்காக என்றால் இலவசமாக கொடுத்திருக்கலாமே! மாற்றுக் கொள்கை உடையவர்களுக்கு கூட தங்களுடைய இடத்தை இலவசமாக தருகிறார்களே என்று மக்கள் இவர்களை புகழ்ந்திருப்பார்களே! ஆனால் உண்மையில் இது பண்பாட்டிற்காக அல்ல.

பெரியார் திடல் பணத்திற்காகவே!

பணத்திற்காக! பணத்திற்காக மட்டுமே!!

தங்களுடைய இயக்கத்திற்கு பணம் சம்பாதிக்கவே ஈ. வே. ராமசாமி நாயக்கர், பெரியார் திடலை கட்டினார் என்பதுதான் உண்மை. இல்லையென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய சொந்தப் பணத்தில் இதைக்கட்டியிருக்கலாமே. இதை விட்டுவிட்டு மக்களிடம் பணம் வசூலித்துதானே இந்த மன்றத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கர் கட்டினார். மக்கள் பணம் தரவில்லை என்றால் இதை கட்டியிருப்பாரா ஈ. வே. ராமசாமி நாயக்கர்? தன்னுடைய சொந்தப் பணத்தில் இதைக் கட்டியிருந்தால் பண்பாட்டிற்காக என்று சொல்லலாம். ஆனால் மக்களிடம் வசூலித்த பணத்தில் கட்டிவிட்டு பண்பாட்டிற்காக கட்டினார் என்று சொன்னால் அதை நம்புவன் முட்டாளாகத்தான் இருப்பான். அதனால்தான் ஈ. வே. ராமசாமி நாயக்கரும் தன்னுடைய இயக்கத்திற்கு முட்டாள்கள்தான் வேண்டும் என்றார். அந்த அழைப்புக்கிணங்கித்தான் வீரமணியும் இயக்கத்தில் சேர்ந்தது. தற்போது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்த முட்டாள்தனமான காரியம் என்றும் தெரிந்தும் அதை பண்பாட்டிற்காக என்று வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்!

பெரியார் திடலின் நோக்கம் பண்பாடு அல்ல. பணம் என்பதை இவர்கள் வாடகை அதிகமாக வாங்குவதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயம்.

பெரியார் திடல் தங்களுடைய கட்சியினுடையது அல்ல என்று வீரமணி கூறுகிறார். அப்படியென்றால் அது யாருடையது? அது யார் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது? அதனுடைய தலைவர், செயலாளர் என்பவர்கள் யார்? அந்த வாடகைப் பணம் யார் வசூலிக்கிறார்கள்? இது போன்ற விஷயங்களை வீரமணி சொல்லியிருக்க வேண்டாமா?

இது எங்கள் கட்சியினுடையது அல்ல என்று வீரமணிதான் சொல்கிறாரே தவிர, அதன் உரிமையாளர் அல்லது பெரியார் திடலை நிர்வாகிப்பவர் இது தி.க. வினுடையது அல்ல என்று இதுவரை ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லையே ஏன்? பெரியார் திடலை விமர்சிக்கும்போது அதை எதிர்த்து வீரமணி மட்டுமே குரல் கொடுக்கிறாரே தவிர அதனை நிர்வாகிப்பவர் அல்லது அதனுடைய தலைவர் குரல் கொடுத்ததில்லையே ஏன்? பெரியார் திடல் எந்த அமைப்பின்கீழ், யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது என்று இனிமேலாவது வீரமணியோ அல்லது அதனை நிர்வாகிப்போரோ சொல்வார்களா?

வீரமணி பெரியார் திடல் எங்கள் கட்சியினுடையது அல்ல என்று கூறுகிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

anaimuthu2

ஆனைமுத்து

திருச்சி வே. ஆனைமுத்து கூறுகிறார்:-

இயக்க நிதி என்பது ”சுயமரியாதை ஸ்தாபன-திராவிடர் கழக நிதியே ஆகும் என்பதையும் அய்யாவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

”சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியவற்றிற்குக்கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன்; கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள்; அல்லது பொது மக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள்; அவ்வளவுதான்”(விடுதலை, தலையங்கம் 26-08-1972) அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சென்னை பெரியார் திடல் மனை வாங்கவும், கட்டடங்கள் கட்டவும், ”திராவிடர் கழகக் கட்டட நிதி” என்ற பேரால் தான் கழகத் தோழர்கள் வசூலித்ததும், பொதுமக்களே முன்வந்தும் அய்யாவிடம் ரூபாய் இரண்டரை லட்சம் அளிக்கப்பட்டது.

(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்)

வே. ஆனைமுத்து சொல்வதன் மூலம் நமக்கு தெரிவதென்ன?

திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திடல் இரண்டும் ஒன்றுதான் என்பதுதானே!

திராவிடர் கழகம் வேறு, பெரியார் திடல் வேறு என்று வீரமணி சொல்வது பொய்தானே!

மேலும் ஒரு கேள்வி.

இந்து முன்னணியோ, ஆர். எஸ். எஸ். அல்லது விஸ்வ ஹிந்து பரிஷத்தோ நிகழ்ச்சி நடத்த பெரியார் திடலை வாடகைக்குத் தருவார்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 10

periyar_marubakkamஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!

சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தில் ‘சொல்லும் செயலும்’ என்ற தலைப்பில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். அதாவது இறுதிவரை ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார் என்ற கருத்திலே சாமி சிதம்பரனார் சொல்கிறார்:-

nagammaiyar_periyar‘‘அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”

சாமி சிதம்பரனார் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தி. க. நண்பர் ஒருவரிடம் ‘‘இறந்தபின் அவர்களுக்காக அழுவது கூட தவறா?’’ என்று கேட்டபோது, அந்த நண்பர் ‘‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’’ ஒரு பகுத்தறிவுவாதி. பிணத்தைப்பார்த்து அழுவது மூடநம்பிக்கையாகும். நாம் அழுவதால் இறந்தவர் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. அதனால்தான் தம் மனைவி இறந்த பின் யாரும் அழக்கூடாது என்று பெரியார் சொல்லிவிட்டார்’’ என்று கூறினார். அதாவது பகுத்தறிவுப்படி பிணத்தைப் பார்த்து அழுவது மூடநம்பிக்கையின் செயலாகும் என்று கூறுகிறார்.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது இந்த நிகழ்ச்சி ‘சொல்லும்-செயலும்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. முன்னரே கூறியபடி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் இறுதிவரை ஒன்றாகவே இருக்கும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக் கூறுப்பட்டுள்ளது. வீரமணியும் 14-08-98 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேசும்போது ‘‘தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினார்களோ அதைச் செய்தார்கள். எதைச் செய்தார்களோ அதை மட்டும்தான் பேசினார்கள். இதுதான் பெரியாரின் ஒரு தனித்தன்மை. சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற அந்தக் கட்டத்திற்கு அய்யா அவர்கள் போகவில்லை’’ என்று சொல்கிறார்.

இவர் சொல்கின்றாற்போல ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்ததா? வீரமணி சொல்வதும் கூட உண்மையா?

rajajiபேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலில் “தமது தள்ளாத வயதிலும் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் பெரியார் கண்ணீர் உகுத்ததும் இன்னும் நம் கண்களில் நிற்கிறது’’ என்று குறிப்பிடுகிறார். இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மேலும் ஓர் ஆதாரம் இதோ!

சின்னராசு அவர்கள் ‘சோவின் குடுமி சும்மா ஆடாது’ என்ற புத்தகத்தில் ‘மூதறிஞர் காலமாகி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்த நேரம், தள்ளாத வயதிலும் மயானத்திற்கே வந்து பெரியார் சிறுபிள்ளை மாதிரி குலுங்கி குலுங்கி அழுதாரே’ என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட உதாரணங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் எதைச் சொன்னரோ அதைச் செய்யவில்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் வீரமணி என்ன சொல்கிறார்? தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினாரோ அதைச் செய்தார்கள் என்று சொல்கிறார். அதனால் வீரமணி எழுதிய புத்தகத்திலிருந்தே வீரமணி சொன்னது பொய் என்று நிரூபிக்கலாம். இதோ!

வீரமணி கூறுகிறார்:- ‘‘கொள்கைகளில் நேருக்கு நேர் எதிரியாக இருந்த திரு. ராஜாஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் எத்தனை முறை தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிப் பார்த்தார்கள்!ஆச்சாரியார் மறைந்தபோது முடியாத உடல்நிலையிலும் மயானம் வரை சென்று கசிந்துருகிய தந்தை பெரியாரின் மனிதாபிமானத்தையும்…” சங்கராச்சாரியார் என்ற புத்தகத்திலே இவ்வாறு கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் புகழ்கிறார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கே படிக்காத காரியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கரே செய்கிறபோது அதை பாராட்டுகிறாரே வீரமணி. இதுதான் பகுத்தறிவா? அதாவது பிணத்தைப் பார்த்து மக்கள் அழுவதால் அது மூடநம்பிக்கை; அதே பிணத்தைப் பார்த்து ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது வாரிசுகளோ அழுவதால் அது மனிதாபிமானம்; பகுத்தறிவு. இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அகராதி போலும்!

பிணத்தைப் பார்த்து அழக்ககூடாது என்று கட்டளையிட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதது ஏன்? சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அந்த கட்டத்திற்கே ஈ.வே. ராமசாமி நாயக்கர் போகவில்லை என்று வீரமணி பொய் சொல்கிறாரே-அப்படியென்றால் பிணத்தைப் பார்த்து அழக்கூடாது என்று சொன்னக் கட்டத்திலிருந்து இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதக்கட்டத்திற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் சென்றது ஏன்?

இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததில்லை என்பதை நாம் அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய வாழ்க்கையில் முரண்பாடாக நடந்துக்கொண்டதை மறைத்துப் பொய் சொல்வதுதான் அவருடைய சீடரான வீரமணியின் வேலை. பொய் சொல்வதில் வீரமணியும் விலக்கல்ல என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

இதில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது மூன்று மதத்துக்கும் பொதுவான ஏற்றாற்போல நாகம்மையாருடைய பிணத்தை எடுத்துச் சென்று எரிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்கின்றனர். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதைவிட ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கை முரண்பாடுதான் தெரிகிறது.

எப்படி?

நாகம்மையார் 1933-ல் இறந்தார். 1933-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பழுத்த நாத்திகவாதியாக, பகுத்தறிவாளராக இருந்தார் என்பதை அவருடைய சீடர்கள் சொல்கின்றனர். 1927-லே இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று காந்தியிடம் சொன்னார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்தார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய மனைவியின் பிணத்தை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதப்படி எடுத்துச்சென்று எரித்தது கொள்கை முரண்பாடு அல்லவா? தன்னுடைய மனைவியின் பிணத்திற்காக எல்லா மதப்படியும் எடுத்துச் சென்றதுதான் பகுத்தறிவா? ஆனால் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? எல்லா மதத்திற்கும் எதிராகத்தானே அடக்கம் செய்திருக்க வேண்டும்! அப்படி செய்பவர்தான் நாத்திகவாதி, பகுத்தறிவுவாதியாக இருக்கமுடியும்?

அதைவிட்டு தனக்காக, தன் குடும்பத்திற்காக ஒரு கொள்கையும், மக்களுக்கு ஒரு கொள்கையும் சொல்வதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பகுத்தறிவுக்கொள்கையா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்

periyar_marubakkamஈ.வே. ராமசாமி நாயக்கரை மிகைபடப் புகழ்கின்ற போதும், அவர் மீது கொண்ட பற்றினால் உண்மைக்கு மாறாக அளவுக்கு மீறி அறிமுகமும் விளம்பரமும் தொடரந்து கூறும் போதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யவைக்கிறது.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியும்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்; ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்பொழுதும் முரண்பட்டு பேசியது கிடையாது என்றெல்லாம் பேசி, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உயர்ந்த ஒரு இடத்தை கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் பல தடவை முரண்பட்டு பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல, வரலாற்றை திரித்தும் பேசியிருக்கிறார். ஆதாரம் இதோ!

முரண்பாடு: 1

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”
(விடுதலை 30-05-1967)

‘புத்தனுக்கு சிலை வேண்டாம்’ என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முன் என்ன சொன்னார் தெரியுமா? இதோ!

‘‘புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’
(விடுதலை 09-05-1953)

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

முரண்பாடு 2:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’
(குடியரசு 16-11-1930)

இப்படிச் சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’

முதலில் கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டும் மாறியது? கிறிஸ்தவ மதத்தில் காமக்களியாட்டத்திற்கு இடமில்லை என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போன்றதாகும். ஏனென்றால் கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்பதை கிறிஸ்தவ அறிஞர்களே விளக்கியிருக்கிறார்கள். அதனால் ஆபாசம் இல்லை என்ற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாதம் உண்மையில்லததாகும்.

முரண்பாடு: 3

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

budhdha‘‘மற்றெல்லா மதங்களைவிட புத்தமதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.
(குடியரசு 15-04-1928)

இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.
(விடுதலை 03-02-1954)

பவுத்தத்திற்கும், அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.
(விடுதலை 20-02-1955)

இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பவுத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை.
(குடியரசு 19-01-1936)

புத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.
(குடியரசு 31-05-1936)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:
‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.
(விடுதலை 06-01-1976)

நமக்கு புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

முரண்பாடு: 4

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மனித நேயம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் பிராமணர்களுடைய விஷயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய மனிதநேயம் எப்படிப்பட்டது தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்’’
(விடுதலை 29-01-1954)

‘‘எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக்கூடாது’’
(விடுதலை 20-10-1967)

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.
(விடுதலை 19-10-1958)

‘‘பெரியார் மாளிகைக்கு வந்தால் பார்ப்பன நிருபர்களை நெட்டித்தள்ளச் சொன்னார்’’
(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்
-வே. ஆனைமுத்து)

வீரமணி கூறுகிறார்:-

பெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.
(நூல்:- சங்கராச்சாரி யார்?)

‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
(நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)

‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும்’’.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தில் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.

‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’

“சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’

அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்யான மனிதநேயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் யாரை தங்களுடைய எதிரியாக நினைத்தாரோ- யாரை ஓழித்தால் சாதி ஓழியும் என்று சொன்னாரோ-அந்தப் பார்ப்பனரை தேர்தலிலே ஆதரிக்கவும் செய்திருக்கிறார். இது அவருடைய முரண்பாடுகளை அல்லது தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள செய்த தந்திரத்தைத்தான் காட்டுகிறதே ஒழிய மனிதநேயத்தைக் காட்டாது.
1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘காஞ்சிபுரத்தில் (அண்ணா போட்டியிட்ட இடம்) டாக்டர் சீனிவாச அய்யரையும், சென்னையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணாராவையும் ஆதரிக்கிறேன். பிராமணர்கள் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். காமராஜ் வெற்றி பெற்றால் பிராமணர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ‘‘
(நூல் : தேர்தல் அரசியல்-தி. சிகாமணி)

ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூறுகிறார்:- “தேர்தல் தினத்தன்று பிராமணர்கள் வாக்களிக்க வரக்கூடாது’’
(நூல் : தேர்தல் அரசியல்)

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! ஒரு முறை காமராசருக்கு ஓட்டுப்போடுமாறு வேண்டினார். பின்பு வாக்களிக்க வரக்கூடாது என்று மிரட்டுகிறார். 1957 ஆம் ஆண்டு பிராமணர்கள் உதவி வேண்டும். 1962 -வேண்டாம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய தந்திரம்.

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏ. பாலசுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணர்களையும் தேர்தலிலே ஆதரித்தார்.

பார்ப்பனர்களை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – பின் ஏன் பார்ப்பனர்களை தேர்தலிலே ஆதரிக்க வேண்டும்? இது ஒரு சந்தர்ப்பவாதமல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும் தொடர்ச்சி…

முரண்பாடு: 5

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசூரனுக்கு (திராவிட தலைவனுக்கு) வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கித்துக்க நாளாகக் கொள்ளவேண்டும்.
(விடுதலை 17-10-1965)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த பேச்சை படிக்கின்ற போது நமதுக்கே சிரிப்புதான் வருகின்றது. ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கிருஷ்ணர் கதை ஒரு கட்டுக்கதை, புராணங்கள் கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வந்தார். அவர் வாதப்படி கிருஷ்ணன் கதை கட்டுக்கதை என்றால் நரகாசூரனும் கட்டுக்கதைதான். நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும்பட்சத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் கட்டுக்கதையாகதான் இருக்கும்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார்?

krishna-kills-narakasuraநரகாசூரன் கொலைக்காக துக்க நாளாகக் கொள்ளவேண்டுமாம்! நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும் போது எதற்காக துக்கநாளாக கொள்ளவேண்டும்? நடக்காத சம்பவத்திற்கு துக்க நாளாக கொள்வதுதான் பகுத்தறிவா?

உண்மையிலேயே கிருஷ்ணனால் நரகாசூரன் கொல்லப்பட்டால் தானே துக்கநாளாக இவர்கள் சொல்லமுடியும்? துக்க நாளாக கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் என்றால் அந்த புராணக்கதை உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதை நம்பிதானே இவர் இப்படி சொல்கிறார்?

ஒரு இடத்தில் புராணங்கள் நடந்த, உண்மையான வரலாறுகள் அல்ல என்கிறார்.

மற்றொரு இடத்தில் நடக்காத சம்பவத்திறாக (இவர் வாதப்படி) துக்க நாளாக கடைபிடிக்க சொல்கிறார். என்னே ஒரு முரண்பாடு!

முரண்பாடு :6

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது.
(விடுதலை 26-01-1943)

அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூது வாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக்காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதை தொகுப்பாகும்.
(விடுதலை 17-10. 1954)

எவ்வளவு முரண்பாட்டைப் பாருங்கள்.

முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார்.

இரண்டாவது, திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூது வாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக்காட்ட உருவானது என்று கூறுகிறார்.

இதில் எது உண்மை?

முரண்பாடு : 7

இராமாயணம் நடந்த சம்பவம் அல்ல. இராமர் சரித்திர புருஷரும் அல்ல என்று இராமாயண குறிப்புகள் என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார். இராமாயணம் என்பது ஒரு கட்டுக்கதை என்றெல்லாம் பேசினார்.

ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார் :-

சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது, தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேத காலத்தில் இருந்திருக்கின்றது. அரிச்சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றத. ராமன் காலத்தில் இருந்திருக்கின்றது. எல்லா ஆழ்வார் நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது.

(குடியரசு 11-01-1931)

இராமாயணம், இராமர் என்பதெல்லாம் நடந்த சம்பவம் அல்ல, கட்டுகதை என்று சொல்லிவிட்டு இராமர் காலத்தில் ஜாதி இருந்தது என்று சொன்னால், அது எவ்வளவுப் பெரிய முரண்பாடு? எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்?

முரண்பாடு :8

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்த இராமாயணம், சமண இராமாயணத் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும், கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது, கோசலை என்று அழைக்கப்பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரச குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.
(விடுதலை 25-05-1961)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகள்தான் முதலில் தோன்றியவை. அவைகளைப் பார்த்துதான் பின்பு வால்மீகி மாற்றிவிட்டான் என்றாகிறது.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான். இதைப் பல அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.

rama01இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

எனக்கு புத்த இராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமண இராமாயணம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர்கள் பற்றியும் கவுசலையின் பெற்றோர்கள் பற்றியும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா? இதோ!

தசரதன் தந்தை அரண்யன்

கவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.

நூல்: ஜைன ராமாயணம்
மூலம்: இரவிசேனாச்சாரியார், தமிழில் -தத்துவ மேதை கஜபதி ஜைன்
வெளியீடு – ஜைன இளைஞர் மன்றம்.

ஆகவே தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். சமண இராமாயணத்தைப் பார்த்தால் தெரியும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுவது சுத்தப்பொய்யாகும்.

முரண்பாடு : 9

தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்த முறை அரச குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்?

இராமாயணம் நடந்த கதை என்பதுதானே!

இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இரந்த காரணத்தால்தான் சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்த முறை அரச குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுவதிலிருந்து அவரே இராமாயணம் நடந்த கதை என்று ஏற்றுக்கொள்கிறார்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன கூறுகிறார்?

இராமாயணம் நடந்த கதை அல்ல என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

ஈ.வே. ராவின் இராமாயணம் பற்றி அவரது சீடர்!

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ”இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் – ஒரு மதிப்பீடு” எனும் தலைப்பில் முனைவர் ப. கமலக்கண்ணன் அவர்கள் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.

முனைவர் ப. கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்பதை சற்றுப்பார்ப்போம்.

… ”பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டப இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது. ”
… ”பெரியார் பேச்சு வழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்துவைத்தவைகளை இராமாயணப் பாத்திரங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.

இராவணன் மகா கல்விமான், வேத சாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் என்று கூறும் பெரியார் இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டுகொள்ளவில்லை. இராவணன் திராவிடன் என்று கூறி இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக்காட்டுகிறார். ”

…. ”இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்திற்காகவே கும்பகர்ணனைப் பற்றிப் பெரியார் கண்டுகொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர். ”

… ”வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார் புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார்.

இராமாயணத்தில் இவர் பிரமனை நிகர்த்தவன் என அறிமுகம் செய்யப்படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கையில்லாத பெரியார் வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்பதால் பெரியாரின் கருத்து நடுநிலை தவறிவிட்டதாக எண்ணலாம். ”

இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காணமுடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது. ”

… ”இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படையற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார். ”

… ”எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஓப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. ”

இதுபோல் இராமாயணத்தைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து முழுவதுமே முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது.

முரண்பாடு : 10

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.

(இராமாயணக் குறிப்புகள் -பக். -3)

அதே புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.
(இராமாயணக் குறிப்புகள் – பக். -5)

தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
(இராமாயணக் குறிப்புகள். பக்.. 5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லாதபோது திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படி சொல்ல முடியும்?

தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்று வரையறுக்ககப்படாதபோது நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர் என்று சொல்வது பொய் அல்லவா?

முரண்பாடு : 11

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”சேலத்தில் மதுவிலக்கு செய்வதற்காகக் கோவையில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவது நியாயமா? ஐந்து, ஆறு லட்சம் குடிகாரர்களைக் காப்பாற்றுவதற்கு என்று நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்களிடமிருந்து பல வரியைக் கசக்கிப் பிழிவது நியாயந்தானா? நான் இப்படிச் சொல்வதால் மதுவிலக்கை எதிர்க்கின்றேன் என்று சனங்கள் எண்ணிக்கொள்ளக்கூடாது. நான் மதுவிலக்கை திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்கு பல தடைவை சிறை சென்றிருக்கிறேன். ”
(விடுதலை 24-07-1939)

அதாவது நான் மதுவிலக்கை திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்குக்கு பல தடைவை சிறை சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பெருமையாகக் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் ரு முட்டாள்தனமான போராட்டமேயாகும்”
(விடுதலை 09-11-1968)

எப்படிப்பட்ட முரண்பாடு என்று பாருங்கள். சினிமா பார்ப்பதை விட கள் குடிப்பதே மேல் என்று சொன்னவர்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.

மக்கள் கள்குடித்து சாகக்கூடாது என்பதற்காக தன் தோப்பிலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டினார் என்றெல்லாம் அவரைப் பற்றி பருமையாகக் கூறுகிறார்கள். ஆனால் இங்கே ஒன்றைக் கூறவிரும்புகிறேன்.

வீரமணியிடம் ஒருவர், கள் குடிப்பதை எதிர்த்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் மதுவிலக்கை எதிர்த்தது முரண்பாடல்லவா என்று கேட்கிறார். அதற்கு வீரமணி, ”அப்போது பெரியார் காங்கிரசில் இருந்தார். காங்கிரசின் கொள்கையை-திட்டத்தை செயல்படுத்தவே மரங்களை வெட்டினார். அது அவர் கொள்கை அல்ல” என்று கூறினார்.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் மக்கள் கள் குடித்து சாகக்கூடாது என்பதற்காக தன் தோப்பிலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டவில்லை. மாறாக காங்கிரஸ் சொன்னதால்தான் மரங்கள் வெட்டப்பட்டது என்பதை வீரமணியே ஒத்துக்கொள்கிறார். பின் எதற்காக 500 தென்னை மரங்களை வெட்டினார் என்று பெருமையாகப் பறைசாற்றுகிறார்கள்?

இதுபோன்ற முரண்பாடுகள் பலவற்றைச் சுட்டிகாட்ட முடியும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னுடைய பேச்சை மாற்றி மாற்றி பேசுபவர். உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு கிடையாது. பொய் சொல்லியாவது தன்னுடைய கருத்தை உண்மை என்று நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அவருடைய முரண்பட்ட கருத்துகள் ஒருபுறம் வைத்துக்கொள்வோம். இனி ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றுப் பொய்களைப் பார்ப்போம்.

வரவாற்றுத் திரிபு : 1

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”கடவுளைப் பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னார் புத்தர், பச்சையாகக் கூட சொல்லவில்லை நம்பிவிடாதீர்கள், சிந்தியுங்கள் என்று சொன்னார். கடவுள் நம்பிக்கைக்காரப் பசங்க அவனை என்ன செய்தார்கள்? வெட்டினார்கள். வெட்டி, வெட்டித்தலையை ஒரு பக்கம் முண்டம் ஒரு பக்கம் குவித்தார்கள். இப்படி வெட்டியதும், குவித்ததும் கோயிலில் இன்னும் சிற்பமாக இருக்கிறது.
(நூல்:- தந்தை பெரியார் இறுதிப் பேரூரை 19-12-1973)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்தப் பேச்சு உண்மைதானா? இல்லவே இல்லை.

டாக்டர் அம்பேத்கர் ”புததரும் அவரத தம்மமும்” என்ற நூலில் கூறுகிறார்:-

”இரவின் மூன்றாம் சாமத்தில், முன்னமே அறிவித்திருந்தபடி புனிதர் புத்தர் பரிநிப்பானமடைந்தார்”
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 22
(தமிழ் மொழிபெயர்ப்பு)

புத்தனை வெட்டினார்கள் ஆத்திகர்கள் என்று சொல்கிறார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். ஆனால் அம்பேத்கரோ, புத்தர் முன்னரே அறிவித்து பரிநிர்வாணமடைந்தார் என்று கூறுகிறார்.

இதில் யாருடையது உண்மை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் நிறைய படித்தவர் அல்ல. ஆராய்ச்சியாளரும் அல்ல. ஆனால் அம்பேத்கரோ நிறைய படித்தவர் ஆராய்ச்சியாளர். அதனால் அம்பேத்கர் சொல்வதைத்தான் நாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆத்திகர்களின் மேல் உள்ள பொறாமையால் ஆத்திரத்தினால் – நாத்திகர்களுக்கு ஆத்திகர்மேல் கோபம் வரவேண்டும் என்பதற்காகவே வரலாற்றில் நடந்த சம்பவத்தை திரித்துச் சொல்லியிருக்கிறார். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வரலாற்றுப் பணி! கோயிலில் சிற்பம் இருக்கிறது என்று சொன்னால் எந்த கோயில் என்று சொல்லவேண்டாமா? இது தான் ஆதாரமா?

வரலாற்றுத் திரிபு : 2

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார் :-

பவுத்தத்திற்கு அநேக உண்மை ஆதாரங்கள் உண்டு. புத்தர் பிறந்தார் என்பதற்கும் அவர் என்ன கூறினார் என்பதற்கும் சரித்திர ஆதாரம் உண்டு. வருடம், மாதம், தேதி முதல் சரித்திர வாயிலாகக் காணமுடியும்.
(விடுதலை 20-02-1955)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் ஒன்றே ஒன்றுதான் உண்மை. அதாவது புத்தர் பிறந்தார் என்பது மட்டுமே. அதுகூட மாதம், தேதி என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல புத்தர் என்ன கூறினார் என்பதற்கும் சரித்திர ஆதாரம் இல்லை. அவருடைய சீடர்கள்தான் பல நூல்களை எழுதியிருக்கின்றனர். அதில் கூட ஒருவர் ஒருவிதமாகவும், மற்றொரு விதமாகவும் புத்தருடைய கொள்கைகளை விளக்கியிருக்கின்றனர். மாதம், தேதி, புத்தர் என்ன கூறினார் என்பதற்கு சரித்திர ஆராய்ச்சி இல்லாதபோது, இருக்கிறது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்கிறார் என்றால் அது வரலாற்றுப் பொய்தானே!

வரலாற்றுத் திரிபு :3

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார் :-

இந்நாட்டில் வெள்ளைக்கார அரசாங்கமும், முகமதிய அரசாங்கமும் இல்லாத காலத்தில்தான் சம உரிமை, ஜீவகாருண்யம் ஆகியவைகளை கொள்கைகளாகக் கொண்ட பவுத்தமதம் அழிக்கப்பட்டது.
(குடியரசு 24-03-1929)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த கூற்றுப் பற்றி டாக்டர் அம்பேத்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

”இந்தியாவில் பவுத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் முசல்மான்களின் படையெடுப்புகள் என்பதில் ஐயம் இருக்கமுடியாது. ‘புத்’ தின் எதிரியாகவே இசுலாம் வெளிப்பட்டது… இசுலாம் பவுத்தத்தை இந்தியாவில் மட்டுமல்ல, தான் பரவிய இடத்தில் இருந்தெல்லாம் ஒழித்துவிட்டது. ”
(பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியம் – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் எத்தும் பேச்சும் தொகுதி 3)

பவுத்த குருமார்கள்மேல் இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகள் அத்தகையதாக இருந்தது. அடி மரத்திலேயே கோடாரி வைக்கபட்டுவிட்டது. ஏனெனில் புத்ததுறவிகளைக் கொன்றதன் மூலமே புத்தத்தைக் கொன்றுவிட்டது இஸ்லாம். இதுதான் இந்தியாவில் புத்த சமயத்துக்கு நேர்ந்த மாபெரும் பேரழிவாகும்.
(பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்: தொகுதி 3)

இப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாறு என்ற பெயரில் பல திரிபுகளை மக்களிடத்திலே திரித்திருக்கிறார்.

வரலாற்றுத் திரிபு : 4

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக்காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்க வந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும் பிறராலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு அடக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ”
(நூல் ”திராவிடர் ஆரியர் உண்மை)

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த வரலாற்றுப் பொய்யையும் டாக்டர் அம்பேத்கரே உடைக்கிறார். அவர் கூறுகிறார்:-

”ஆரியர்கள் என்பது ஒரு தனி இனம் அல்ல, ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை”
(நூல்:- சூத்திரர்கள் யார்?)

வரலாற்றுத் திரிபு : 5

”திருமணம் என்பதே கிரிமனல் குற்றமாக வேண்டம் என்று சொல்லி வருகிறேன். நான் மனுதர்மத்தை நல்லவண்ணம் படித்திருக்கிறேன். அதில் சூத்திரனுக்குத் திருமணமே கிடையாது; எனக்குத் தெரியும்”.
(விடுதலை 11-10-1967)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த உண்மைக்கு மாறான செய்தியை அவர்களின் திராவிடர் கழக வெளியீட்டை வைத்தே நிரூபிக்கலாம். திராவிடர் கழகம் சமீபத்தில் அசல் மனுதரும சாஸ்திரம் -(1919 பதிப்பில் உள்ளபடி) நூலை வெளியிட்டிருக்கிறது. அதில் மூன்றாவது அத்தியாத்தில் ‘கிறகஸ்த தர்மம்’ என்ற தலைப்பில், 13-வது சுலோகம் சொல்கிறது.

சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்கு தன் சாதியிலும் சூத்திரச் சாதியிலும், க்ஷத்திரியனுக்கு தன் சாதியிலும், வைசியசூத்திர சாதியிலும், பிராமணனுக்கு தன் சாதியிலும், மற்ற மூன்று சாதியிலும் விவாகஞ்செய்து கொள்ளலாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சூத்திரன் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதானே! நான் மனுதர்மத்தை நல்லவண்ணம் படித்திருக்கிறேன். அதில் சூத்திரனுக்குத் திருமணமே கிடையாது; எனக்குத் தெரியும்” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வது எவ்வளவு உண்மைக்கு மாறான செய்தி என்பது நமக்குப் புலப்படுகிறதல்லவா!

இப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு சாரார் மீது வெறுப்புக் கொண்டு வரலாற்றிலே நடக்காதவைகளை எல்லாம் நடந்தது போல, கற்பனைகளைச் சேர்த்து வரலாற்றைத் திரித்து உண்மைக்கு மாறானச் செய்திகளைச் சொல்லுகின்ற இவரா பெரியார் என்றுக் கேட்கத் தோன்றுகிறதல்லவா!

ஈ.வே. ராவைப் பற்றி ப. ஜீவனாந்தம்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட்வாதியான ப. ஜீவானந்தம் தோலுரித்துக்காட்டகிறார். இதோ!

1. ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் சமதர்ம விரோதிகளான ஆர். கே. சண்முகம், ஏ. ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈ.வே. ரா.

2. சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்காக சமதர்மக் கட்சி வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஜஸ்டிஸ் கட்சிக்குத் திரும்பவும் ஓடினார் ஈ.வே. ரா.

3. ஜமீன்தார் – அல்லாதார் மகாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று பாராட்டி, பொப்பிலி தலைமையைப் புகழ்ந்தார் ஈ.வே. ரா.

4. லேவாதேவிக்காரர் – அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்களெல்லாம் ஓழியவேண்டுமென்று சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக்குலாவினார் ஈ.வே. ரா.

5. மதங்களெல்லாம் ஒழியவேண்டுமென்று விருதுநகர் மாகாகண சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதன்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்று பிரசாரம் செய்தார் ஈ.வே. ரா.
(நூல் : ஈரோட்டுப் பாதை சரியா?)

இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான வகையில் நடந்துக் கொள்வதும் முன்னுக்குப்பின் முரணான வகையில் பேசுவதும் வரலாற்றைத் திரித்துக் கூறுவதிலும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை முரண்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிக்கக்கூடாது. அது நாகரிகமும் அல்ல என்று சிலரால் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணம், விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற பல விஷயங்களில் அறிவுரை கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிற ஈ.வே. ராமசாமி நாயக்கர், அந்த அறிவுரைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா, இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.ஊருக்கு மட்டும்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே என்று சொன்னால் அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.

இந்த அடிப்படையில்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் அவருடைய கொள்கைத் தவறிய திருமணத்தையும் நாம் விமர்சிக்கிறோம்.

13 வயதுப் பெண்ணை திருமணம் செய்த ஈ.வே.ரா!

periyar001ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13. ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர். அப்படியானால் 13 வயதுப் பெண்ணை – குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?

அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தவை. இவை தவறு என்று நினைக்கப்படவில்லை. காந்தி முதல் பல தலைவர்கள் சிறுவயதுப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குப் பொருந்தாது. ஏனென்றால் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த பலவற்றைக் கண்டித்து பகுத்தறிவுத்தனமாக முற்போக்குத்தனமாக நடந்து கொண்டவர். சிறுவயதிலேயே மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர் என்றெல்லாம் ஈ வே. ராமசாமி நாயக்கருக்கு புகழ்மாலையைச் சூட்டுகின்றனர்.

அப்படியானால் சிறு வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்றால் ஏன் 13 வயதுப் பெண்ணை மணக்கமாட்டேன் என்று சொல்லவில்லை? இந்தத் திருமணம் பிற்போக்குத்தனமானது என்று ஏன் சொல்லவில்லை? பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்று சொல்லலாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்றால் 19 வயதுப் பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாமே! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்காதவர்.

இதை ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், ”தமிழர் தலைவர்” என்ற நூலில் கூறுகிறார்:-

”(ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு) மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச்செய்தியை அறிந்தார் இராமசாமி. நான் நாகம்மையையே மணப்பேன். வேறொரு பெண்ணை மணக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். தாய் தந்தையர் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்கவேண்டும்?”

பெற்றோருக்குக் கட்டுப்படாத இவர் – மூடநம்பிக்கையை எதிர்த்த இவர் – கொள்கையில் உறுதியான பிடிப்பிருக்கும் இவர் நாகம்மையாருக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் திருமணம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? சிறுவயதிலேயே திருமணம் நடக்கும் அக்காலத்தில் வயது முதிர்ந்தவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாகம்மையாரைத் திருமணம் செய்திருந்தால் அதுதானே பகுத்தறிவு! அது தானே மூடநம்பிக்கை எதிர்ப்பு! அதை விட்டுவிட்டு 13 வயதுப் பெண்ணை மணப்பதுதான் பகுத்தறிவா? இது தான் மூடநம்பிக்கை ஒழிப்பா? ஆனால் சிறு வயதிலியே திருமணம் செய்ய வேறொரு முக்கியக் காரணம் உண்டு.

அது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் நடத்தையே!

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே.ரா!

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் விஷயத்தில் படுவீக்காக 19 வயதிலேயே இருந்தார். அது தான் அந்த இள வயதுத் திருமணத்திற்கு முக்கிய காரணம். அது பற்றி, சாமி சிதம்பரனார் கூறுகிறார்:-

”ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப் பருவம்; விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்.”
(நூல் :- தமிழர் தலைவர்)

இதே கருத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கரும் கூறுகிறார்:-

”நான் சுயநல் வாழ்வில் மைனராய்; காலியாய்; சீமானாய் இருந்த காலத்திலும் …” (நூல் :- தமிழர் தலைவர்)

(தமிழர் தலைவர் என்ற இந்த நூல் சாமி சிதம்பரனரால் எழுதப்பட்டு ஈ.வே. ராமசாமி நாயக்கரால் சரிபார்க்கப்பட்டு பின்பு வெளியிடப்பட்டது. அதனால் இதில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஒழுக்கங்கெட்ட நடவடிக்கை காரணமாகவே அவருக்குப் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து ஒழுக்கமானவராக, நாணயமானவராக ஈ.வே. ராமசாமி நாயக்கரை முன்னிலைப்படுத்துகின்றனர் அவரது அடியார்கள்.

இங்கே ஒன்றை யோசித்துப்பார்க்கலாம். கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை – கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை; அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர்தானே! உங்கள் அகராதியில்!

9 வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே! – இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்துக்குமுன் (விலைமாதர்களிடம்) – விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பார்த்தோம். சரி அது இளமைப்பருவத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்துவிட்ட தவறு என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகாவது ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஒழுக்கமாக நடந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.

அதையும் சாமி சிதம்பரமே கூறுகிறார்:-

இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய ”மைனராய்” விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
(நூல்:- தமிழர் தலைவர்)

இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம்! இப்படிப்பட்ட ஈ. வே. ராமசாமி நாயக்கர் தனிமனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொல்லத் தகுதி இருக்கிறதா என்ற எண்ணமல்லவா நம் மனதில் எழுகிறது!

இங்கே ஒரு எண்ணம் இயற்கையாகவே எழும். அதாவது தாசி வீட்டிற்கு கணவனைத் தூக்கிச் சென்ற நளாயினிக்கும் தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை உணவை ஆக்கிக் கொடுத்த நாகம்மையாருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. பகுத்தறிவாளர்களுக்காவது இதில் வேறுபாடு தெரிந்தால் சொல்லலாமே!

அதுமட்டுமல்ல.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ. வே. ராமசாமி நாயக்கரைக் காணவில்லை என்று சொன்னவுடன் உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளியூர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார் என்று சொல்லும்பொழுது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

BOX NEWS
நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா.
பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.

”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004)

நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ரா!

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசி” என்று தன் நண்பர்களிடம் சொன்னதுதான். அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்:-

நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.
(நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, periyar003புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா?

திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

periyar_and_maniammai_2ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்டannadurai_and_periyar ஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டுபோய்விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்.
(திராவிட நாடு – 21-08-1949)

வயதுப் பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி அண்ணாத்துரை!

அதுமட்டுமல்ல 1940-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாத்துரை எழுதிய ஒரு தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.

“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதுகிறார் :-

”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72! ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.

அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.

ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!

பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.

ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.

ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.

கல்கத்தா அருகேயுள்ள மைமன்சிங் என்ற ஊரில், 72 வயதுள்ள பார்ப்பனக் கிழவனொருவன் இளமங்கை யொருத்தியை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தான்.

பொன் அவிர் மேனியளைக் கிழவன், தன் பிண உடல் காட்டி எங்ஙனம் மணத்துக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும்! வாலிபம் இல்லை அவனுக்கு. ஆனால் பணம் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர் பணத்தைக் கண்டனர். கிழவனின் பெண்டாகப் போயினும், கை நிறையப் பொருள் இருக்குமல்லவா! மணத்துக்கு ஒப்பினர். சகல ஏற்பாடுகளும் நடைபெற்றன.

அந்த ஊரில் இந்தக் கிழவரின் கூடாத் திருமணத்தைத் தடுக்க வேண்டிப் பலரும் சென்று பலப்பல கூறினர்; கிழவர் கேட்டாரில்லை. திருமண நாள் குறித்துவிட்டார். மணப்பந்தல் அமைத்துவிட்டார். மங்கல ஸ்நானம் செய்தார். பட்டுடுத்திப் பணிபூண்டு, பரிமளம் பூசிப் பார்ப்பனக் கிழவர் பரிதாபத்துக்குரிய பாவையை மணமுடித்துக் கொள்ளப் பக்குவமானார்!

மைமன் சிங் ஊர்வாசிகள் கண்டனர். இந்த அக்ரமத்தை எப்படியேனும் தடுத்தே தீர வேண்டும் என உறுதி கொண்டனர். மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா! எனவே ஊரில் உறுதி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தனர். மணக்கோலத்திலிருந்த பெண்ணைத் தூக்கிச் சென்றனர்.

இந்தத் திவ்வியமான திடுக்கிடும் செயல்புரிந்ததில் மூஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றுபட்டே உழைத்தனர்.

கிழவர் கல்யாண மண்டபம் வந்தார். காலி இடத்தைத் தான் கண்டார். கடுகடுத்தார். முகம் சுளித்தார். கா, கூவெனக் கூவினார்.

இடையே அந்த இளமங்கையைத் தக்கவனொருவனுக்கு ஊராரே மணஞ்செய்து வைத்தனர்.

கண்டார் கிழவர் காரியம் மிஞ்சி விட்டதை. காரிகை போனால் போகட்டும். கைக்கு ஏதேனும் பொருளாவது வரட்டும் என்று கருதி, தனக்கு நேரிட்ட அவமானத்துக்கு, நஷ்ட ஈடாகப் பணம் கேட்டார்.

இந்தக் கூடாமணத்தைத் தடுக்க குணசீலர்கள், தமக்குள்ளாகவே பணமும் வசூலித்து விருந்தும் நடத்தினர்.

பாராட்டுகிறோம்.

பெண்ணாசைப் பித்துக்கொண்டு அலைந்து அந்தப் பார்ப்பனக்கிழவன் பணப்பேராசை தீர்ந்ததும் போதுமென்று இருந்துவிட்டான். பாவை தக்கனொருவனை மணந்தாள். ”தாத்தா” கட்ட இருந்த தாலியைத் தவிர்த்த, அந்த மைமன்சிங்வாசிகளை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

ஆனால் மைமன்சிங்கில் தடுக்கப்பட்டது போன்ற மணங்களை எத்தனை எத்தனையோ தடுக்கப்படாமல் நடந்தேறித்தான் வருகின்றன! தடுப்பாரில்லையே! அறிவு வளரவில்லையே!

ஏன் இத்தகைய கூடாமணங்களைக் கண்காணித்துத் தடுத்துச் சர்க்கார் முன்வரக்கூடாது என்று கேட்கிறோம். எத்தனை முறை ஊரில் உறுதி கொண்டவர்களால் தடுக்க முடியும்? இத்தகைய மணங்கள் நடக்கவொட்டாமல், நாகரிக சர்க்கார் மாதர் வாழ்வு கெடும் விதத்தில் நடைபெறும் இத்தகைய மூடத்தனத்தை தடுக்க, ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் பிரபலஸ்தர்கள், பகுத்தறிவாளர்கள் கொண்ட கமிட்டிகளை சர்க்கார் நிறுவி, இவ்விதமான கூடா மணங்கள் நடைபெற ஒட்டாது தடுக்க அக்கமிட்டிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். குடித்துக் கெடுவதை, சூதாடிக் கெடுவதை, விபசாரம் செய்து கெடுவதை, தடுக்க சர்க்கார் சட்டம் செய்து சமுதாயக் கோளாறுகளை நீக்குவது போலவே, இவ்விதமான மணவினைகள் மூலம் மங்கையர் வாழ்வு மிதித்துத் துவைக்கப்படுவதையும் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும்.

துருக்கியில் கலியாணம் நடப்பதென்றால் மணமகனும், மணமகளும் நோய் ஏதுமின்றி இருக்கின்றனர் என முதலில் டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கி சர்க்காருக்கு அனுப்ப வேண்டும்.

இந்தூர் சமஸ்தானத்தில் வயதில் அதிக வித்தியாசமுள்ள ஆண் மணந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சில சமஸ்தானங்களில் இத்தகைய சட்டமும் இருக்கிறது.

பம்பாய் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. அம்மையாரொருவர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவன் 18 வயதுக்குக் குறைவான பாவையை மணப்பதைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டுமென்றம், சிந்து மாகாண சட்டசபையில் பேராசிரியர் கன்ஷாயம், பெண்ணின் வயதுக்கு மேல் 20 வயது அதிகமாக உள்ள ஆடவன் பெண்ணை மணக்கக் கூடாது என்றும் பேசி சட்டங்கள் இயற்ற முற்பட்டனர்.

இத்தகைய சட்டத்தின் அவசியத்தைத்தான் மைமன் சிங் மணவினை எடுத்துக்காட்டுகிறது.

சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?
(திராவிட நாடு 10.07-49)

இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் – பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.

இது மட்டுமல்ல; இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-

”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
(நூல்:- நினைவுகள்)

திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?

கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா?

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

“நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய்..” என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும், தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. “கட்சியின் வளர்ச்சி தன்னால்தான்” என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே யாரால்? என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.

கழகத் தொண்டர்களைத் தலைவர் பாராட்டியதில்லையென்பது மட்டுமல்ல. அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார். தொண்டு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு தொண்டரின் சேவையால் கட்சிக்கு ஏற்படும் பயன் என்ன? இயக்க வளர்ச்சி, தொண்டர்கள் சேவையின் கூட்டப் பலன்தான் என்ற கேள்விகளைக் கழகப் பணிபுரிந்தோர் இதுவரை எண்ணியது கிடையாது.
(திராவிட நாடு 21-08-1949)

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.

அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!

கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!
(திராவிட நாடு 21-08-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.

துரோகிகள்! ஜூடாசுகள்!

தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!

வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்

இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!

விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!

மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!

தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள்

என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.

இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.
(திராவிட நாடு 09-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

போர்ஜரி செய்பவர்கள்!

பணமோசடி செய்பவர்கள்!!

இந்த இரண்டு பலமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவிட்டீர்கள் அன்பர்களே! பல ஆண்டு உழைத்த நமக்குப் பெரியார் தரும் இந்தக்கீழ்மைப் பரிசுகள் கள்ளக் கையொப்பமிடுபவர்கள்! மோசக்காரர்கள் தீரர், வீரர், திராவிடர் என்று அழைத்தார் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றுபவர் இருந்த வரையில். அவர் தீட்டிவிட்ட பகுத்தறிவினைத் துணை கொண்டு – அவருடைய சொல்லையும் ஆராயும் போக்கு ஒரு சிறிதளவு காட்டினோம். உடனே கோபம் பிறந்துவிட்டது. போர்ஜரி செய்பவர்கள்-மோசக்காரர்கள் என்று ஏசுகிறார். ஏசலுரையால், மனம் புண்படும் தோழர்களுக்கு, எத்தகைய சமாதானம் கூறமுடியும் – நானும் அதனால் தாக்கப்பட்டுத் தாங்கிக் கொண்டு வருகின்றேன் என்பதை எடுத்துக்காட்டுவது தவிர.
(திராவிட நாடு 16-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.

யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!

பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் – அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.
(திராவிட நாடு 10-07-1949)

ஈ.வே. ராவின் திருமணத்தை எதிர்த்த அண்ணாதுரை!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாதுரை மிக முக்கியமானவர். இந்த திருமணம் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்ட திருமணமாகும் என்று கருதிய காரணத்தாலேயே அண்ணாதுரை அதைக் கடுமையாக எதிர்த்தார். ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திருமணத்தை எதிர்த்து அண்ணாத்துரை எழுதிய கட்டுரையில் அந்தத் திருமணம் எப்படி தங்கள் கொள்கைக்கு முரண்பட்டது என்று கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை நழுவலை தோலுரித்துக் காட்டுகிறார்.

இதோ அந்தக் கட்டுரை..

periyar_and_maniammai_1சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.

இந்தத் திருமதிக்கு வயது 26.

அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.

பெரியாருக்கு வயது 72.

மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

-தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..

…அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.

இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

…திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

…பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.

பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.

சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

-முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல்.

வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!

வேதனைப்படுகிறோம் தனிமையிலே!

ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் – நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

-எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

- எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!

கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

…பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.

அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.

புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!!

இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.

அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
—————————
அன்புள்ள
சி. என். அண்ணாதுரை

(திராவிட நாடு 3-7-49)

சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ – அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடைபிடிக்கவில்லை. ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா? ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்திவைத்தார்.

இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்? திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயதுதான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.

தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.

இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்துகொண்டார்.

சொத்துக்களுக்காக – இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா? கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்-

அதே சொத்தை – இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக – சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்? அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா? சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால் -

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்கவேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார்! இது தானா கொள்கைப் பிடிப்பு?

சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே! ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா? தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?

ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே.ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ! அவர்களுக்கே வெளிச்சம்!!

தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
(விடுதலை 20-04-1962)

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்துகொள்ளவில்லை?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

 

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?

இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:

”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)


dr-ambedkarஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!

அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.

அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.

அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.

கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.

இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

நான் கேட்கிறேன்.

  • 1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?

இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?

இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.

மேலும் ஒரு சம்பவம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்– எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுசொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு– தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், தான் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகத் தூது அனுப்பினார். ஐந்து வருடங்களாக வகுப்புரிமைத் தீர்மானங்களையே ஏற்றுக்கொள்ளாத காங்கிரசுக்கு எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்? எதற்காக காங்கிரசுக்கு உறவு கொள்ள ஆசைப்பட வேண்டும்?

ஒருவேளை காங்கிரஸ் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதுதானே – என்று பகுத்தறிவாளர் சொல்கிறார்கள்.

அம்பேத்கரும் காங்கிரஸில் மந்திரி சபையில் பங்குகொண்டு மக்களுக்கு நன்மை செய்யவே சேர்ந்தார். பதவிக்காக அல்ல.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த காங்கிரஸை ஓழிப்பதே என் வேலை என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தார்.

எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுச் சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தது சரியென்று சொன்னால் அம்பேத்கரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரசுடன் உறவுகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு ஒரு நியாயம், அம்பேத்கருக்கு ஒரு நியாயமா?

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது.

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம்.

உண்மையிலேயே சந்தோஷம் அல்லவா அடைய வேண்டும்? எதற்காக மன வேதனை அடைய வேண்டும்? ஒருவேளை தாழ்த்தப்பட்டவர் வந்துவிட்டார் என்பதினாலா?

அம்பேத்கர் ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது நியாயம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அதே ஏக திராவிடஸ்தானுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்தது நியாயம் ஆகும்.

இந்தியத் தூதர்கள் பதவியிலும் ஆதிதிராவிடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் ஏற்படுவதானால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் தனியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ. முனுசாமிப்பிள்ளை கூறினார்.

அதை விமர்சித்த ‘விடுதலை‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?

ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார்………… வெறும் பதவிகள் மட்டுமே ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்………………. எனவே பழங்குடி மக்கள் முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால் மட்டுமே முடியாது. திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.
(விடுதலை 10-07-1947)

ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால் சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தீர்வாக இருக்க முடியும் அல்லவா? திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம்! ஆதிதிராவிடஸ்தான் கேட்டால் அது பிதற்றலாம்! இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் அம்பேத்கரை கேவலப்படுத்தவில்லை.

மணியம்மையாரும் கூட கேவலப்படுத்தியிருக்கிறார்.

அய்யா வழியில் அம்பேத்கரா?

‘அய்யா வழியில் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டு மணியம்மை எழுதுகிறார்:-

டாக்டர் அம்பேத்கர் வடநாட்டிலே பிறந்தவராக இருந்தும் தந்தை பெரியாரின் பெரும்பாலான கருத்துகளை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். வட நாட்டிலே நமது பணியைச் செய்து தந்தை பெரியார் கருத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தந்தை பெரியார் அவரை அடையாளம் கண்டு அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்… புத்தமதத்திற்கு சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.

(விடுதலை 06-01-1976)

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?

maniammaiyarஅம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?

இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டுகொண்டது. 1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும். 19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்துவைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் என்பதையும் அறியலாம். என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல. இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார். அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார், அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவதுதான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.

அடுத்து,

புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956.

அவர் இறந்தது 06-12-1956.

இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்துபோய்விட்டது? இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்குதான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்கமுடியுமா? அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிவிட்டாராம்.

அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்ததுதான் சரி என்று சொல்லவருகிறார்கள். இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதைப் பார்த்தோம். அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வீரமணி கூறுகிறார்:-

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களுக்கு -

அவர்கள் இன்று கூறியுள்ள இந்த நல்லெண்ணத்தை விரிவாக்க எனது அருமை தாழ்த்தப்பட்ட சமூதாய சகோதரத் தலைவர்கள் முயலவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
(விடுதலை 20-07-1997)

இந்த அறிவுரை சாதி இந்துக்களுக்கு இல்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான். இது தான் இவர்களுடைய சாதிப்பற்று.

ஹோட்டல்களிலோ அல்லது கடைகளிலோ பிராமணாள் என்று இருந்தால் அதை அழிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களே திராவிடர் கழகம்- அதே திராவிடர் கழகம் நாயுடு, கவுண்டர், முதலியார் என்று தமது கடைகளுக்கும் ஹோட்டால்களுக்கும் பெயர் வைத்துள்ளார்களே அதை எதிர்த்து அதை அழிக்கவேண்டும் என்று இதுவரை ஏன் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை?

ஆதிதிராவிடன் – திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்.
(குடியரசு: 08-07-1947)

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்கார்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும் என்று சொன்னார்களே – அந்த ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து என்னென்னப் போராட்டங்களை ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்தினார்? 1947-க்குப் பிறகுதானே முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?

1947லேயே ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தால் முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்திருக்குமா? ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை வழிக்குக் கொண்டு வர ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார்? ஜாதி இந்துக்களின் ஒரு சாதிவெறிச் செயலையாவது வன்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆங்காங்கே தற்பெருமைக்காக செல்லமாய் சாதி இந்துக்களைக் கடிந்துள்ளார் என்பதே பொருத்தமாகும்.

ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்

சுதந்திரப் போராட்டம் என்று சொன்னாலே மகாத்மா காந்திஜியின் ஞாபகம் வருவதுபோல், வைக்கம் போராட்டம் என்று சொன்னாலே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஞாபகம் தான் வருகிறது. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொன்னாலே நேதாஜி, வ.உ.சி. பாரதியார், போன்றவர்கள் ஞாபகத்தில் வருகிறார்கள். அதேபோல் வைக்கம் போராட்ட வீரர்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தவிர வேறு யாராவது பெயர் நமக்கு ஞாபகம் வருகிறதா?

யார் பெயரும் ஞாபகம் வராது.

kesavamenonஒருவேளை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும்தான் வைக்கத்திலே போராடினாரா? இல்லையே கே.பி. கேசவமேனன், டி.கே. மகாதவன், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலபேர் போராடி சிறை சென்றார்களே- அவர்களின் பெயரெல்லாம் வெளிவராமல், வைக்கம் போராட்டமே ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் துவக்கப்பட்ட மாதிரி எல்லோராலும் பேசப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் மற்ற தலைவர்களுடைய பங்கை மறைத்து ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பெயரை மட்டும் முன்நிறுத்துகின்றனர். காரணம் வைக்கம் போராட்ட வெற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த நினைப்பு அவர்களை எந்த அளவுக்கு பொய் சொல்வதிலும், குழப்பத்திலும் கொண்டுபோய் விட்டிருக்கிறது தெரியுமா? அந்த விபரங்களை சற்று பார்ப்போம்.

”வைக்கம் போராட்டத்தில் 19 பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தரால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு, சிறையிலிருந்தபடியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்,” என்று சாமி சிதம்பரனார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்களிடமே காட்டி, அவர் சொன்ன திருத்தங்களை ஏற்று பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்ட, ”தமிழர் தலைவர்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

”எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவமேனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்” என்று ”வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார்” என்ற தம் புத்தகத்திலே கூறுகிறார்.

இந்த இரு நூல்களிலும் இரு வேறுபட்ட பெயர்களை ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்.

வைக்கம் போராட்டத்தின் வெற்றி வீரர் என புகழப்படும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு யார் கடிதம் அனுப்பியது என்பதிலே கூட குழப்பம் போல் தெரிகிறது. தனக்குக் கடிதம் அனுப்பியது குரூர் நீலகண்ட நம்பூதிரியா? அல்லது கேசவமேனனா என்று சொல்வதில் குழப்பம் ஏன்?

காந்திஜியின் பங்கு

18-10-1973 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வைக்கம் பற்றி கூறுகிறார்:-

”காந்திதான் இதை செய்ய வேண்டாம் என்று சொன்னவர், காந்திக்கு இதில் சம்பந்தமே இல்லை”
(நூல்: வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)

 

வீரமணி கூறுகிறார்:-

”வைக்கம் போராட்டத்தில் – முதலாவது உண்மை என்பது அந்தப் போராட்டத்தினைக் காங்கிரஸ் தலைமை ஆதரிக்க மறுத்தது”.

”காந்தியார் வைக்கம் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பதுதான் உண்மை”. 

”போராட்டத்தின் தொய்வுக்குக் காரணமென்ன என்றால் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே காங்கிரசில் காந்தியாரின் ஆதரவைக் கோரினார்கள். காந்தியார் தம்முடைய ஆதரவைத் தரவில்லை என்பது மட்டுமின்றி போராட்டத்தின் எதிரிகள் சொன்னதையே ஒரே பக்கமாகக் கேட்டுக் கொண்டார்”.
(நூல்:- வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)

 

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர் சின்னக் குத்தூசி கூறுகிறார்:-

”வைக்கம் போராட்டம் காந்தியடிகளின் கட்டளைப்படி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அந்தப் போராட்டத்தை காந்தியடிகளே ஆதரிக்கவில்லை”.
(நக்கீரன் 31-04-1999)

 

இவ்வாறு காந்தியடிகளைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கர் முதல் அவருடைய சீடர்கள் வரை வைக்கம் போராட்டத்தில் காந்தியடிகளுடையப் பங்கை மறைத்து அவதூர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பொய் பிரச்சாரம் உண்மைதானா? என்பதைப் பார்ப்போம்.

”பெரியாரியம்’‘ என்ற ஒரு நூலுக்கு தலைப்பிட்டு, ‘வைக்கம் அறப்போர் பவழவிழாக் கருதரங்க மலர்’ ஒன்றை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த மலரில் ‘வைக்கம் அறப்போர் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்று தலைப்பிட்டு முனைவர் அ.கா.காளிமுத்து அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் காந்தியடிகளுடைய பங்கை மற்ற நூல்களின் துணை கொண்டு எழுதியுள்ளார். ஆதலால் வைக்கம் போராட்டத்திலே காந்தியடிகளுடைய பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

டி கே மாதவன்

டி கே மாதவன்

”(வைக்கம்) பிரச்சனையை அரசியல் ரீதியாகப் போராட வேண்டுமென்பதற்காக திரு.டி.கே. மாதவன் போன்ற ஈழவத் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரசு சபையை அணுக விரும்பினார். அதற்காக அக்கட்சியின் ஓத்துழைப்பை நாட, அச்சமயத்தில் நெல்லையில் தங்கியிருந்த காந்தியடிகளிடம் டி.கே. மாதவன் இப்பிரச்சனையை எடுத்துச் சென்றார். காந்தியடிகளும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாலும் உடனடியாக இது பற்றி முடிவு எடுக்க விரும்பவில்லை.

பின்னர் சில நாட்கள் கழித்து காந்தியடிகள் டி.கே.மாதவனுக்கு ஒரு தந்தி மூலம் ஈழவர்களும் மற்றைய கீழ்ச்சாதியினரும் கோவில்களில் நுழைய எல்லாவித உரிமையும் உண்டு என்று செய்தியனுப்பினார். இச்செய்தி கேரளமக்களின் கவனத்தை ஈர்த்தது. முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் கூட இதை ஆதரித்தனர்” என்று எழுதுகிறார் அ.கா. காளிமுத்து. அதனால் வைக்கம் பிரச்சனைக்கு காந்தியடிகள் 1922-23லேயே ஆதரவு கொடுத்திருக்கிறார் என்பது தெளிவு.

மேலும் அவர் எழுதுகிறார்:-

”டி.கே. மாதவன், கே.எம்.பணிக்கரின் உதவியுடன் 1923ஆம் ஆண்டில் கூடிய காக்கி நாடா காங்கிரசு மகாசபைக்கு இப்பிரச்சனையை (வைக்கம்) எடுத்துச் சென்றார். காந்தியடிகள் காங்கிரசு மகாசபையை தீண்டாமை ஓழிப்பு போன்ற ஆக்கரீதியான செயல்களில் ஈடுபடும்படி அறிவுரை கூறியிருந்தார்.

அதன்படி இப்பிரச்சனை கேரளத்தில் தோன்றியதும் இந்திய தேசிய காங்கிரசு மகாசபை. கேரள காங்கிரசு மகாசபைக்கு இதில் ஈடுபடும்படி அனுமதியளித்தது. அதற்குப் பின்னர் 1924 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 24-ம் நாள் எர்ணாகுளத்தில் கூடி கேரள காங்கிரசு தீண்டாமை ஓழிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தியது…

இக்குழு வைக்கம் என்ற ஊரை தேர்ந்தெடுத்து கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீதிகளில் தாழத்தப்பட்டோர் செல்ல உரிமை பெறுவதற்காக நடத்தும் போராட்டத்தை அறிவித்தது”.

இதன் மூலம் தெரிவதென்ன?

God is Truth

 

God is Truth

 

டி.கே.மாதவன் முன்முயற்சி எடுத்தாலும் 1924லேயே வைக்கம்  போராட்டத்தை நடத்தவும், அதற்காக ஒரு குழுவும் அமைத்தது காங்கிரசு மகாசபை, அதற்கு காந்திஜி ஆதரவு இருந்தது.

‘வைக்கம் போராட்டத்தினை காங்கிரஸ் தலைமை ஆதரிக்க மறுத்தது. காந்தி எதிராக இருந்தார். காந்திஜி ஆதரவுத் தரவில்லை என்று பொய் சொல்லி தன்னுடைய வெறுப்பை, ஆத்திரத்தை உண்மையிலேயே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவளித்த காங்கிரஸ் மீது காட்டுகிறார்.

வீரமணி எழுதிய ‘வைக்கம் போராட்ட வரலாறு’ என்ற நூல் காந்தியடிகளை தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அதில் காந்தியடிகள் வைக்கம் போராட்டத்தை நிறுத்தும்படி கூறியதற்கு, கே.பி. கேசவமேனன் எழுதிய கடிதம் உள்ளது. ஆனால் காந்தியடிகள் அனுப்பிய கடிதம் இல்லை. அதுமட்டுமல்ல கே.பி.கேசவமேனனுக்கு காந்தியடிகள் அனுப்பிய முதல் கடிதமும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த முதல் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் காந்தியடிகள்?

கே.பி. கேசவமேனன் தன்னுடைய சுயசரிதையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கேசவமேனன் கூறுகிறார்:-

”மகாத்மா காந்திக்கு வைக்கத்தின் நிலைகுறித்தும் எங்களைச் சத்யாக்ரஹம் செய்யத் தூண்டும் சூழலைக் குறித்தும் விவரித்து ஒரு கடிதம் எழுதி, அதற்கு அவருடைய ஆசிகளையும் கோரியிருந்தோம். அதற்கு அவர் வரைந்த கடிதம்:-

அந்தேரி
19-03-24

அன்புள்ள கேசவமேனன்:-

தங்கள் கடிதம் கிடைத்தது. தாங்கள் குறிப்பிடும் தங்களுடைய பிரதேச மக்களின் நிலை இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் வருந்துதற்குரிய தென்பதை நான் அறிவேன். நீங்களும் கூறுவதுபோன்று அவர்கள் தீண்டாதவர் மட்டுமல்ல. சில தெருக்களில் நடக்கவும் கூடாது என்ற நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியது! நமக்கு இன்னமும் சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்றால் அதில் எனக்கு ஆச்சரியம் தோன்றவில்லை.

நம் நாட்டின் தாழ்ந்த வர்க்கத்தினர் பொது வழிகளில் நடக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றே தீரவேண்டும். தடை விதிக்கப்பட்ட காலையில் கேரளக் காங்கிரஸ் கமிட்டியினர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து ஓர் ஊர்வலம் வரவேண்டுமென்று கருதுகிறேன். இது ஒருவகை சத்யாக்ரஹம். இதில் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்குரியதாகக் கூற வேண்டியதொன்றுமில்லை. நம்முடைய மக்களே உங்களை எதிர்த்தாலும் கூட நீங்கள் எதிர்க்க வேண்டாம்.

நீங்கள் அமைதியுடன் அடியேற்கவேண்டி வந்தாலும் ஏற்றுப்பொறுத்துக் கொள்ளவேண்டும். இந்த சத்யாக்கிரஹத்தில் பங்குபெறும் அனைவருக்கும் இக்கருத்தை வலியுறுத்தி அவர்களும், இதில் பூரண நம்பிக்கை கொண்டு நிறைவேற்றச் சித்தமாகும் வண்ணம் முயலவேண்டும். ஒரு தடவைக்குச் சிலரே சென்றால் போதும்.

ஆனால் அமைதியுடனும் பணிவுடனும் நடப்பவர்களாக இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விதிகளைப் பங்குகொள்ளும் எவரேனும் ஒப்புக்கொள்ளவில்லையெனில், யாத்திரையை நிறுத்திவிடத் தயங்கலாகாது. இத்தகைய பண்பாட்டுக்கு மாறாக இருப்பவர்களையும் நாம் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் நாம் இன்னும் ஈடுபடவில்லை. அதனால் கவனத்துடன் பணிபுரிய வேண்டியது மிகுந்த அவசியம்.

இச்செயல் அவ்வளவு எளிதானதல்ல. நான் இங்கே நோய்ப்படுக்கையில் இருந்தவாறே உங்களுக்கு கருத்தூன்ற வேண்டிய விஷயத்தை நினைவூட்டி, உங்களுடைய முயற்சிக்கு முழு வெற்றி கிடைக்கட்டுமென ஆசி மொழிந்து இப்போது விடைபெறுவது நலமென்று கருதுகிறேன்.

எம்.கே. காந்தி

(நூல்: கே.பி.கேசவமேனன் எழுதிய ‘கடந்தகாலம்’)

வைக்கம் போராட்டம் 30-03-1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் காந்தியடிகள் 19-03-1924 ஆம் ஆண்டு அன்றே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

காந்திஜியின் இந்த கடிதம் நமக்கு உணர்த்துவதென்ன?

அவரின் ஆசியோடு, ஆதரவோடு நடத்தப்பட்ட போராட்டம் என்பதைத்தானே! ஆனால் காந்திஜி ஆதரிக்கவில்லை என்று பொய் சொல்லி திரிகின்றார்களே பகுத்தறிவுவாதிகள் – வரலாற்றை திரித்துக் கூறுவதே சிலருக்குப் பிழைப்பாகிவிட்டது என்று கூற இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

 

முனைவர் அ.கா.காளிமுத்து கூறுகிறார்:-

“0-03-1924 ஆம் நாள் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தைத் தீவிரப்படுத்த கேரள மாநில காங்கிரசு கேரளத்தில் உள்ள பல இடங்களிலும் பிரச்சாரங்கள் செய்தது. காந்தியடிகள் இப்போராட்டத்தை மிக அமைதியாக நடத்தும்படி செய்தி அனுப்பினார். காந்தியடிகளின் முடிவை மதன்மோகன் மாளவியா, சுவாமி சகஜானந்தா போன்ற அகில இந்தியத் தலைவர்களும் ஆதரித்துச் செய்திகள் அனுப்பினார்”
(நூல்: பெரியாரியம்)

 

வைக்கம் போராட்டத்தை காந்தியடிகள் ஆதரித்தமைக்கும் இது போன்ற ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒருவேளை சிலருக்கு சந்தேகம் வரலாம். காந்தியடிகள் உண்மையிலேயே ஆதரவு கொடுத்தாரா? இல்லையா? இப்படி சந்தேகப்படுபவர்களுக்காக…

மேலும் சில ஆதாரங்கள்….

பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் ”சுயமரியாதை இயக்கம்’‘ என்ற நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் அணிந்துரையும், கல்வி அமைச்சராக இருந்த க.அன்பழகன் அவர்கள் வாழ்த்துரையும், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்கள் பாராட்டுரையும் வழங்கியுள்ளனர்.

அந்த நூலில் மங்களமுருகேசன் கூறுகிறார்:-

”கேரள காங்கிரசுத் தலைவரான ஜார்ஜ் ஜோசப், காங்கிரசுத் தலைவரான காந்தியடிகள் யோசனையின் பேரில் அறப்போரை நிறுத்திவைத்து மீண்டும் தொடங்கினார். கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் ஏப்ரல் 9ம் நாள் கைதாயினர். பம்பாயிலிருந்து காந்தியடிகள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.”

 

ஆக காந்திஜியின் ஆசி இருந்திருக்கிறது என்பது உண்மை

காந்திஜி வைக்கம் போராட்டத்தை நிறுத்தும்படி நடுவில் கூறிவிட்டார் என்று கதறுகின்றனர் பகுத்தறிவாளர்கள். ஆனால் காந்திஜி நிறுத்தும்படி சொல்வதற்கு முன்னாலேயே வைக்கம் போராட்டத்தை இரண்டு நாள் நிறுத்திதான் வைத்திருந்தார்கள் காந்தியடிகளைக் கேட்காமலேயே இதை கே.பி.கேசவமேனன் கூறுகிறார்: உயர் வகுப்பாரின் ஆதரவைப் பெறுவதற்கு இரண்டு நாட்கள் சத்யாகிரஹத்தை நிறுத்திவைத்தேன் இந்நிலையில் மகாத்மா காந்தி மற்றொரு கடிதம் எழுதினார்.

அது இது தான்.

அந்தேரி – ஏப்ரல் 1

உங்களுடைய சத்யாக்கிஹத்தைக் குறித்து சில செய்திகளை என்னிடம் கூறுவதற்காக மிஸ்டர் சிவராமய்யரும், மிஸ்டர் வாஞ்சீசுவர ஜயரும் இங்கு வந்திருக்கின்றனர். தாழ்ந்த சாதிக்காரரும் அங்கு செல்வதற்கு உரிமையளிக்கப்படவேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதற்கு இசையவில்லை. எனினும் கோயிலையும் அதன் வழிகளையும் பற்றிய பொறுப்பும் உரிமையுள்ள அறங்காவலரிடமும் பிற அந்தணர்களிடமும் எடுத்துக்கூறி உணர்த்துவதற்குச் சில நாட்களாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு மாதத்தில் அங்கு மாளவியாஜி வருவாரென்று அறிகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நீங்களும், கோயில் உரிமையாளரும் மாளவியாஜியை நடுவராக வைத்துக்கொண்டு பேசி முடிவு காணவேண்டியும் அவருடைய தீர்ப்பை ஒரு குறித்த காலத்துக்குள் வெளியிடவும், பிராமணர் அதற்கு இசைந்தால், இந்த நடவடிக்கைக்கு நடுநிலையாளர் இடைப்பட்டுப்பேசி முடிவு காண்பதற்கு தீர்மானம் செய்திருக்கிறபடியால், சத்தியாக்ரஹம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதென்று அறிவித்து நிறுத்திவைக்கும்படி நான் யோசனை கூறுகிறேன்.

மேற்கூறிய இரு சகோதர்களும், என்னிடம் அறிவித்த முக்கியமான செய்திகளை உண்மை என்ற நம்பியே நான் உங்களுக்கு இத்தகைய அறிவுரை கூறுகிறேன். இந்த சீர்த்திருத்தம் சம்பந்தப்பட்ட முயற்சிகளை நிறைவேற்றுவதில் அவர்களும் நம்மைப் போன்றே ஆர்வத்துடனிருப்பதாகக் கூறுகின்றனர். அது உண்மையானால் நாம் அவர்களையும் நம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்கள் என்ற வகையில் நம்மோடு இணைத்துக்கொள்ள நட்புறவும் இணக்கமும் காட்டவேண்டும்.

என்றும் உங்களுடைய உண்மையுள்ள
எம்.கே. காந்தி

(நூல்: கடந்த காலம்)

காந்திஜி எதிர்தரப்பினர் சொன்னதை நம்பியே இந்த கடிதத்தை எழுதுகிறார்.

சில நண்பர்கள் சொன்னதையடுத்து உயர்வகுப்பாரின் ஆதரவைப் பெறுவதற்காக வைக்கம் போராட்டத்தை நிறுத்தினார் கே.பி. கேசவமேனன். ஆனால் இதை யாரும் விமர்சிக்கவில்லை. அவர் செய்தது சரி என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இதையே காந்திஜி சொன்னால் காந்திஜி தடுத்துவிட்டார் என்று வீரமணி குற்றம் சாட்டுகிறார். இந்த கடிதத்திற்குப் பிறகுதான் வீரமணி குறிப்பிட்ட கடிதம் கே.பி.கேசவமேனன் எழுதுகிறார்.

மேலும் வீரமணி கூறுகிறார்: ”கேசவ மேனனின் இந்த விளக்கக் கடிதத்திற்குப் பிறகும் காந்தியடிகள் உண்மை நிலையை ஒப்புக்கொள்ளவில்லை.”
(நூல்: வைக்கம் போராட்ட வரலாறு)

 

ஆனால் அ.கா. காளிமுத்து கூறுகிறார்:-

”தம்மை சந்திக்க வந்த வைதீகப் பிராமணர்கள் கூறிய செய்தியைக் கேட்டவுடன் வைக்கம் அறப்போரைச் சிறிது காலம் தள்ளிவைக்கும்படி கூறினார். பின்னர் போராட்டக்குழு காந்தியடிகளிடம் வைக்கம் போராட்டத்தின் உண்மை நிலையை எடுத்துக் கூறியவுடன் போராட்டத்தை நடத்தச் சம்மதித்துள்ளார். இதன் பின்னர்தான் நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் மீண்டும் துவங்கியது.”
(நூல்: பெரியாரியம்)

வீரமணி சொல்வது உண்மை என்றால் அ.கா.காளிமுத்து ‘பெரியாரியம்’ நூலில் கூறுவது பொய்யாகும். ஆனால் பெரியாரியம் நூல் வைக்கம் போராட்ட பவழ விழாவுக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் அதில் அதிக நம்பகத்தன்மை இருக்கும் என்று நம்பலாம். வீரமணி சொல்வதிலேயே நிறைய பொய்கள் இருப்பதை பார்த்தோம். இந்த விமர்சனத்தையும் அந்த வகையிலேயே சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஒரு விமர்சனம் கூறப்படுகிறது.

அதாவது காந்தியடிகள் வைக்கம் போராட்டத்தில் வெளிமாநிலத்தவர் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுத்துவிட்டார் என்று பகுத்தறிவுவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் காந்திஜி அந்தகெட்ட எண்ணத்துடன் தடுக்கவில்லை. கேரளமக்களே போராடினால் அதற்கு அரசாங்கமே தலைசாய்க்கும். கேரள மக்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டாம் என்று அரசாங்கம் நினைக்கும் என்ற காரணத்தினால்தான் காந்திஜி அவ்வாறு கூறினார்.

இங்கே இன்னொன்றையும் கூறவேண்டும். அதாவது சித்தூர் மாவட்ட பிரச்சனை வந்தபோது தி.மு.க சித்தூரில் உள்ளவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ளலாம் என்று கூறியது. எல்லா மாவட்டத்தில் உள்ளவர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறவில்லை. சித்தூர் மாவட்ட பிரச்சனையில் அங்குள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று தி.மு.க கூறியது சரியென்றால், வைக்கம் போராட்டத்தில் கேரள மக்களே கலந்து கொள்ளவேண்டும் என்று காந்திஜி கூறியதும் சரிதான். தி.மு.க வை குறைகூறாதவர்கள், காந்திஜியை குறைகூறுவது உள்நோக்கம் கொண்டது என்பதை அறியலாம் நாம். ஆனால் காந்திஜி வெளிமாநிலத்தவர் கலந்துகொள்ளக்கூடாது என்று சொன்னதுடன் வேறொன்றையும் கூறினார்.

 

அதையும் கா.காளிமுத்துவே கூறுகிறார்:-

”காந்திஜி மலபார் பகுதி சென்னை மாநிலத்தோடு இருப்பதால், அம்மாநிலத்தில் உள்ள தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நடத்தலாம் என்று கூறியமையால் போராட்டக்குழுவின் முக்கிய தலைவர்களான ஜார்ஜ் ஜோசப்பும், கேசவமேனனும் சேர்ந்து கையெழுப்பமிட்டு ஒரு கடிதம் எழுதி பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு அனுப்பி தலைமை தாங்கும்படி அழைப்பு விடுத்தனர்”.
(நூல்:- பெரியாரியம்)

 

காந்திஜிக்கு தடுக்கும் எண்ணம் இருந்திருந்தால் சென்னை மாநிலத்தவர் கூட கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அந்த எண்ணம் அவருக்கு இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.

காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்று சொல்கிறார் வீரமணி. ஆனால் கா.காளிமுத்து கூறுகிறார்:-

“கேரள காங்கிரசு அமைத்துள்ள போராட்டக்குழுவில் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கும் கலந்த கொண்டார். காந்திஜியின் ஆலோசனைப்படி அக்குழுவில் பெரியார், டாக்டர் எம். பெருமாள் நாயுடு, மன்னத் பத்மனாபன், கோவை அய்யாமுத்து கவுண்டர், இராமகிருஷ்ணதாஸ், கோவிந்த சாணார் ஆகியோர் அங்கத்தினர்களாக இருந்து செயல்பட்டனர்”.
(நூல்: பெரியாரியம்)

 

காந்திஜியின் ஆலோசனைப்படித்தான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் குழுவில் கலந்துக்கொண்டார் என்கிறது வைக்கம் போராட்ட பவழவிழா மலர்.

இதிலே முக்கியமான விஷயம் வேறு ஒன்று இருக்கிறது. அதாவது திராவிடர் கழகம், பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கும் அளவுக்கு பெரியாரின் மீது பக்தி கொண்ட பிரபல எழுத்தாளர்சின்னராசு அவர்கள் ‘சோவின் குடுமி சும்மா ஆடாது’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:-

”எந்தத் தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியடிகள் அவரை (பெரியாரை) வைக்கம் போகச் சொன்னாரோ, அதே கொடுமை இங்கே தமிழ்நாட்டிலேயே காங்கிரஸ் இயக்கத்தின் ஆதரவுடனே ஊக்கப்படுத்தப்பட்ட அக்கிரமத்தைக் காண்கிறார்.”

அதே நூலில், ”இன்னொரு விஷயம், வைக்கம்போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் நாட்டிலே இருந்து பெரியாரைக் குறிப்பாக தேர்ந்தெடுத்து காந்தியடிகள் அனுப்பிவைத்தார் என்றால் அதற்கொரு முக்கிய காரணமுண்டு” என்றும்

”கை முதல் இழந்தும் காராகிரகம் புகுந்தும் கொண்ட கடமைக்கு உழைக்கும் குடும்பம் அது என்பதால்தானே காந்தியடிகள் தீண்டாமை ஓழிப்புப்போருக்கு தீண்டோள் தட்டி புறப்படுக என பெரியாரை வைக்கத்திற்கு வாழ்த்தி அனுப்பினார்” என்று எழுதியுள்ளார்.

அதாவது லட்சோபலட்சம் மக்கள் படிக்கக்கூடிய தினகரன் ஞாயிறு மலரில் தொடர் கட்டுரைகளாக, காந்தியடிகள் தான் வைக்கத்திற்கு பெரியாரை வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார் என்று எழுதுகிறார் என்றால் பொய்யாகவா எழுதியிருப்பார்? இச்செய்தி பொய் என்றால் அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட வீரமணியிடம் இருந்து வரவில்லையே ஏன்?

இவற்றை எல்லாவற்றையும் விட முக்கிய ஆதார நூல் ஒன்று உள்ளது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்ட, பெரியாரின் சீடர் கோவை சி. அய்யாமுத்து ‘தனது வரலாறு’ என்ற நூலில் கூறுகிறார்:-

”ஒன்றே குலம்-ஒருவனே தெய்வம் எனும் சீரிய நெறியைப் பரப்பி வந்த வரக்கலை ஸ்ரீநாராயண குரு சுவாமிகள் எனும் ஈழவ சமுதாயத்தலைவரின் ஆசியும், மகாத்மா காந்தியின் பேராதரவும் அந்தச் சாத்வீக சமருக்குக் கிடைத்தது”.

….இது வீரமணி எழுதியிருக்கின்ற வைக்கம் போராட்ட வரலாறு நூலிலேயே இருக்கின்றது.

 

இதுபோன்ற எண்ணற்ற ஆதாரங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வைக்கம் போராட்ட முடிவிலேயும் காந்திஜியின் பங்கு உள்ளது.

 

அ.கா.காளிமுத்து கூறுகிறார்:-

”கேரள காங்கிரஸ் கமிட்டியும் வைக்கம் சத்தியாக்கிரக் குழுவும் காந்தியடிகள் இப்பிரச்சனையில் ஈடுபடும்படி விரும்பியது. அதன்படி காந்தியடிக்ள 1925ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8ம் நாள் திருவனந்தபுரம் சென்றார். காந்தியடிகள் திருவாங்கூர் இராணியுடன் வைக்கம்போராட்டம் பற்றி நடத்திய சமரசப் பேச்சில் பிட் என்ற ஆங்கிலேயே அதிகாரி, திவான் இராகவ அய்யங்கார் மற்றும் வைதீகர்கள் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் திருவாங்கூர் இராணியார் வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்வதற்கு உரிமை வழங்கச் சம்மதித்தார். அதன் பின்னர் காந்தியடிகள் பெரியாரிடத்தில் இதைத் தெரிவித்தார். பெரியாரும் காந்தியடிகளின் முயற்சிக்கு ஓப்புதல் தெரிவித்தார்.”
(நூல்: பெரியாரியம்)

 

இதை ஈ. வே. ராமசாமி நாயக்கரே ஒப்புக்கொள்கிறார். ஆதலால் காந்திஜி எல்லோரையும் அரவணைத்து சென்றிருக்கிறார். காந்தியடிகள் நினைத்திருந்தால் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கேட்காமலேயே ஒப்புதல் கொடுத்திருக்கலாம். ஆனால் காந்தியடிகள் அதுபோல தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை, செய்யவிரும்பவில்லை என்பதுதான் இதன் மூலம் உணரப்படும் செய்தி. உண்மையை எப்பொழுதும் மறைக்க முடியாது. எத்தனை வீரமணிகள் வந்தாலும் காந்தியடிகளுடைய பங்கை மறைக்கமுடியாது.

இதிலே இன்னொரு குற்றச்சாட்டு.

வைக்கம் போராட்டம் பற்றி காந்தியடிகள் தமது ‘யங் இந்தியா’வில் எழுதும் போது ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்து எழுதிவிட்டார். அதாவது வைக்கம் போராட்டத்திலேயே ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பங்கு என்னவென்று யாருக்கும் தெரியக்கூடாது என்ற காரணத்திற்காக காந்தியடிகள் பெரியாரின் பெயரை எழுதவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்கள் பல காலமாக எழுதியும் பேசியும் வருகின்றனர். இதுவாவது உண்மையா?

இல்லவே இல்லை. இதோ ஆதாரம்!

திரு. காமராசர் கூறுகிறார்:-

kamarajar”மகாத்மா, சமஸ்தானத்தின் அடங்குமுறைப்போக்கை வன்மையாகக் கண்டித்துப் பெரியாரது செயலை வெகுவாகப் பாராட்டி எழுதினார். தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள தடையை பெரியார் கோரிக்கைப்படி நீக்காவிட்டால் பெரும் போராட்டம் துவங்கும் என்று மகாத்மா எச்சரிக்கை செய்தார்.

… இது வீரமணி எழுதிய வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்திலேதான் இருக்கிறது. மகாத்மா பெரியாரை பாராட்டி எழுதியிருக்கிறார் என்று வீரமணியே தன்னுடைய நூலிலே தொகுத்திருக்கிறார்.

இந்த ஆதாரம் போதாதவர்களுக்கு மேலும் ஒரு ஆதாரம்!

ஈ. வே. ராமசாமி நாயக்கர் தமது ‘குடியரசு’ (02-05-1925) முதல் இதழில் காந்தியடிகள் தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டு அதை மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கிறார். அது வருமாறு:

”திருவாங்கூர் அரசாங்கத்தார் குரூர் நம்பூதிரிபாட் அவர்களை விடுதலை செய்வதைக் குறித்தும், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மீதிருந்த தடை உத்தரவு எடுக்கப்பட்டதைக் குறித்தும் வாசகர்கள் சந்தோஷமுறுவார்களென நினைக்கிறேன்”.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இச்செய்தி, வைக்கம் போராட்டத்திலே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பெயரை காந்தியடிகள் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் என்பது தானே! எல்லாவற்றுக்கும் ஈ. வே. ராமசாமி நாயக்கரையே பயன்படுத்தும் இவர்கள், இதில் மட்டும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின்‘குடியரசு’ இதழை மறைத்ததேன்?

வைக்கம் போராட்டத்தில் வீரமணியினுடைய ஈ.வே. ராமசாமி நாயக்கர் பக்தி எந்த அளவுக்கு போயிருக்கிறது தெரியுமா?

”கால்களில் விலங்குச்சங்கிலி போட்டு சாதாரண கைதி போல, வைக்கத்திலே தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையிலே இருந்தார்” என்று வீரமணி கே.பி.கேசவமேனன் தன்னுடைய மலையாள சுயசரிதையில் கூறுவதாகக் கூறுகிறார்.

ஆனால் இது கூட உண்மையில்லை. கே.பி.கேசவமேனன் மலையாளத்தில் எழுதிய நூல் ‘கழிஞ்ஞ காலம்’. இதை தமிழில் மொழிபெயர்த்து நேஷனல் புக் டிரஸ்ட் ‘கழிந்த காலம்’ என்று வெளியிட்டுள்ளது. அந்த நூலியே இப்படியொரு செய்தி இல்லவே இல்லை.

இப்படி பொய்மேல் பொய் சொல்லி வருகிறார்களே காரணம் என்ன? வைக்கம் போராட்டத்தினுடைய வெற்றி காங்கிரசுக்கும், மகாத்மா காந்திக்கும் போய்விடக்கூடாது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே அந்த வெற்றி சேரவேண்டும் என்ற கேவலமான ஆசைதான். காந்திஜியினுடைய பங்கை சொன்னால் எங்கே வைக்கம் வீரர் பட்டம் போய்விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்! உண்மை தானே!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!

பெண்ணடிமையை அழிக்க வந்த வீரர்!
பெண் விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தீரர்!

- என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை நாம் பாராட்டுகிறோம். போற்றுகிறோம். தான் ஆணாக இருந்தபோதிலும் ஆணாதிக்கத்தை வெறுத்தவர் என்று அவரின் சீடர்கள் முதல் நாமும் கூறுகிறோம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஆணாதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

marriage01”பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

எப்படி? இதோ!

அன்று முதல் இன்று வரை பெண் விடுதலைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் பலர் ‘பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதுகின்றனர். இது தனக்கு மனைவி அடிமையானவள் என்பதைக் காட்டுவதைத் தவிர வேறில்லை. ஆனால் ஆண் தன் பெயருடன் தன் மனைவியின் பெயரை சேர்ப்பதில்லை. மனைவியின் பெயருடன் தன் பெயரையும் கணவன் போடச் சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் குறிக்கிறது என்று பெண்களுக்காக போராடும் போராளிகள் பலர் கூறுகின்றனர்.

அதேபோல், வீரமணியிடம் ஒருவர், ”பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டுமென்று மேடை தோறும் முழங்குகிறோம். ஆனால் மனைவி தன் பெயருக்கு பின்னால் கணவன் பெயரையும் சேர்த்து போட்டுக்கொள்வது எதற்கு? அதுபோன்று ஆடவர், மனைவி பெயரை சேர்த்து போட்டுக்கொள்வது இல்லையே ஏன்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வீரமணி பதில் கூறும் போது, ”மனைவி என்பவர் கணவனின் (ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் அப்படி நடக்கிறது” என்று கூறுகிறார்.
(நூல்:- வீரமணி பதில்கள்)

அதாவது மனைவியின் பெயருக்கு முன்னால் கணவனின் பெயரைப் போட்டுக்கொள்வது என்பது மனைவி என்பவர் கணவனின் அடிமை என்பதற்காகத்தான் என்று வீரமணியே அடித்துக் கூறிவிட்டார். வீரமணியின் சொல்படி பார்த்தால், ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் திருமணத்திற்குப் பிறகு(இரண்டாவது திருமணத்திற்கு பிறகு) மு. ஹ. மணிம்மை (மு. அரசியல்மணி)என்று இருந்துவந்த பெயரை தன்னுடைய பெயரையும் சேர்த்து அதாவது ஈ.வே. ராமசாமி மணியம்மை என்று தமிழிலும், நு. ஏ. சு. மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாரே-இது மனைவி என்பவர் கணவனின்(ஆணின்) அடிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நடந்ததுதானே! வீரமணியின் பதில்படி இது ஆணாதிக்க மனோபாவமா? இல்லையா?

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உண்மையிலேயே தனக்கு தன் மனைவி அடிமையல்ல என்று நினைத்திருந்தால் தன்னுடைய பெயரை சேர்க்கசொல்லியிருப்பாரா? தன்னுடைய பெயரை எதற்கு சேர்க்க சொல்லவேண்டும்? அப்படி என்ன அவசியம் வந்தது? மணியம்மையின் பெயருக்கு முன்னால் தம் பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்த ஈ.வே. ரா. தன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ மணியம்மையின் பெயரைச் சேர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கலாமே! அது தானே முற்போக்கு! ஏன் அவ்வாறு செய்யவில்லை? தன் பெயருக்கு முன்னால் ஒரு பெண்ணினுடைய பெயரை சேர்ததால் அவமானம், அகெளரவம் என்றெல்லாம் நினைத்திருப்பாரோ என்னவோ! யாருக்குத் தெரியும்? ஒரு வேளை இதுதான் ஆணாதிக்க மனோபாவமோ! அவர்களுக்கே வெளிச்சம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம் ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீள பல வழீகளைக் கூறியுள்ளார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார்.

மேலும் ‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-

பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)

marriage02இவ்வாறெல்லாம் பெண்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார். இந்த அறிவுரைகள் எல்லாம் தன்னுடைய திராவிடக்கழகத்தினுடைய தோழிகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருப்பார் என்று நம்பிக்கைக் கொண்டு நமக்கு எழுந்த சந்தேகங்களை கேட்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை நீங்கும் விதமாக கூறிய அறிவுரைகள், நாகம்மையாருக்கும், மணியம்மையாருக்கும் மற்றும் கழக தோழிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியானால் பெண்ணடிமை நீங்க ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்னரே ஈ.வே. ராமசாமி நாயக்கர்-

ஏன் மணியம்மையும் கழக தோழிகளும் வேஷ்டி-ஜிப்பா போடவில்லையே?

புடவையே தேவை இல்லை என்று சொல்லிவிட்டாரே-

ஏன் மணியம்மையும், கழக தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தார்கள்? இன்றும் இருக்கிறார்களே ஏன்?

கூந்தல் இருப்பது அநாகரீகம் என்று சொன்னாரே-

பின் ஏன் மணியம்மையாரும், கழக தோழிகளும் கூந்தலை வைத்திருந்தனர்? ஏன் இன்றும் வைத்திருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மீது அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கையை கடைபிடிக்கின்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற மணியம்மையும், கழக பெண்மணிகளும் ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி செய்யவில்லை? இதுதான் கொள்கைப்பிடிப்பா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இறப்புக்குப்பின் மணியம்மை தலைமை ஏற்று நடத்தினாரே திராவிடர்கழகத்தை – அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கையை கடைப்பிடித்தாரா? இல்லையே!

தம்மை பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வு செயலுக்கு ஒரு முன்மாதிரியான தன்மையில் நடந்து காட்டுவது தானே ஒரு நல்ல தலைவரின் கடமை.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னமாதிரி, பெண்ணடிமை விலக, மணியம்மையார் கூந்தலை அகற்றி, கிராப் வைத்துக்கொண்டு, புடவை கட்டாமல் ஜிப்பாவோ அல்லது சட்டையோ போட்டுக் கொண்டு, வேஷ்டிக்கட்டிக் கொண்டு முற்போக்காக ஒரு புரட்சி செய்திருக்கலாமே! நீங்கள் தான் புரட்சிவாதிகளாயிற்றே! முற்போக்காளர்கள் நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொள்பவர்களாயிற்றே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது முற்போக்கு கருத்து அல்ல என்று கடைபிடிக்கவில்லையா? அல்லது ஈ.வே. ராமசாமி நாயக்கரின்படி செய்தால் தமிழ் பண்பாடு அழிந்துவிடும் என்ற காரணமா?

எந்தக் காரணமாக இருந்தாலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்தான் மணியம்மையும், கழக பெண்மணிகளும் கடைபிடிக்கவில்லை என்று நாம் நம்பலாம்.

நம்முடைய இந்த நம்பிக்கை பொய் என்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்படி இவர்கள் ஏன் கடைபிடிக்கவிலலை என்பதை விளக்குவார்களா திராவிட கழகத்தவர்?

ஆண்களும், பெண்களும் வித்தியாசம் தெரியாதபடி பழகவேண்டும், உடை உடுத்தவேண்டும் என்றெல்லாம் புரட்சியான செய்திகளை சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.

ஆனால் தம்முடைய திராவிடர் கழகத்திலேயே பெண்களுக்கான தனி அணியை உருவாக்கினாரே ஏன்? திராவிடர் கழகத்திலே ஏன் மகளிரணி வைத்தார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அகராதிப்படி, ஆண்களும், பெண்களும் வித்தியாசமில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்பதுதானே! ஆனால் இவர்களே பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று பிரித்தது ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்பதைக்காட்டத்தானே! திராவிடர் கழகத்திலே மகளிரணி என்று பிரித்தவர்களுக்கு பெண்களும், ஆண்களும் ஒரே மாதிரிதான் என்றுச் சொல்ல அருகதை உண்டா?

தங்களுடைய கொள்கைக்கு மாறாக மகளிரணியை உருவாக்கினார்களே – அப்படி உருவாக்கும்போது யார் சட்டைப்போட்டுக்கொண்டு, தலைமுடிவெட்டி கிராப் வைத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை மட்டும்தான் சேர்ப்போம் என்ற விதியை சேர்த்திருந்தால் இன்னும் புரட்சிகரமாக இருந்திருக்குமே – ஏன் அவ்வாறு செய்யவில்லை?

திராவிடர் கழகத்தில் சேருபவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அல்லது தங்கள் அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கொள்கையை கடைபிடிக்கும் திராவிடர் கழகத்தினர் மகளிர் விஷயத்திலும் மேற்கண்ட விதிகளை சேர்த்திருக்கலாமே! பெண்ணடிமை விலகவேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே இருந்திருந்தால்தானே இவர்கள் இந்த விதியை சேர்ப்பதற்கு என்ற எண்ணம் அல்லவா நமக்கு தோன்றுகிறது!

மேலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இஸ்லாமிலும் பெண்கள் எவ்வளவு அடிமையாக – கேவலமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா?

இதைப்பற்றி பகுத்தறிவாளர்கள் இதுவரை பேசியதுண்டா? அல்லது அவர்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? இதைப்பற்றி கேள்விக் கேட்டால் என்ன தெரியுமா சொல்வார்கள்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”நமக்கு கடிதம் எழுதிய நண்பர் ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக்கொள்வோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகிறவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்ராயம்”
(குடியரசு 17-11-1935)

இஸ்லாமின் பெண்ணடிமையைப் பற்றிக் கேட்டால் பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்று சொன்னால் இந்து மதத்திலும் பெண்ணடிமை விலக பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்கப்படவேண்டியவை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் சொல்லவில்லை?

முஸ்லிம்களும் தமிழர்களே! திராவிடர்களே என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா? இல்லையா? கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? திராவிடர் கழகத்தவர் உண்மையிலேயே பெண்ணடிமை விலக பாடுபடுவர்கள்தான் என்றால் எல்லா மத பெண்களுக்கும் சேர்த்து போராட வேண்டியதுதானே! அது தானே சீர்த்திருத்தமாக இருக்கும்! இனிமேலாவது அவர்களுக்காக போராடுவார்களா?

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்ணடிமை விலக இன்னொரு வழியை கூறுகிறார்:-

”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.
(குடியரசு21-09-1946)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறிய இந்த அறிவுரையைகூட ஈ.வே. ரா. வே கடைபிடிக்கவில்லை. அதற்கு முரணாகத்தான் நடந்துகொண்டார். ஈ.வே. ரா. மணியம்மை என்று கூப்பிடுமாறு அறிவுறுத்தினாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அந்தப் பெயரிலே இருக்கின்ற அம்மை என்பது பெண்பாலை குறிக்கின்றது. அதைத்தவிர்த்து வெறும் ஈ.வே. ரா. மணி என்று அழைக்கச் சொல்லியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஆண்கள் பெயரையே பெண்களுக்கு இடவேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் – எத்தனை பெண்களுக்கு ஆண் பெயர் வைத்துள்ளார் என்பதை சொல்லமுடியுமா?

ஒரே ஒரு உதாரணம்.

திருவாரூர் தங்கராசு மகளுக்கு பெயரிடும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆண் பெயரையா வைத்தார்? பெண் பெயரைத்தானே வைத்தார். ஏன் தன் கொள்கைப்படி ஆண் பெயர் இடவில்லை? பதில் சொல்லுங்கள் பகுத்தறிவாளர்களே!

annathurai

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

துரோகி! எவ்வளவு இலேசாகக் குற்றம் சாட்டிவிடுகிறார்!

பொது வாழ்வால் வயிறு வளர்ப்பவர்கள் – எவ்வளவு கேவலமான குற்றச்சாட்டு – இதற்கு என்ன காரணம் காட்ட முடியும், நான் ஏழை என்பதும், அவர் இலட்சாதிபதியின் திருமகானர் என்பதும் தவிர!!

இதைச் சொல்வதால் என்னைப் பற்றித்தான் பொதுவாக மக்கள் எடைபோட – கணக்குப் பார்க்க – விரும்புவார்கள்? பெரியாரைப் பற்றியும் கூடத்தானே!

இன்னும் சொல்லப்போனால், பல்லக்குத் தூக்கிக்கே இவ்வளவு பலன் கிடைத்ததென்றால், பல்லக்கில் சவாரி செய்தவருக்கு அதிகமாகத்தானே கிடைத்திருக்கும் என்றுதானே பொதுவாகப் பேசுவார்கள்? பொது வாழ்வுத் துறைக்கே பொறுப்பற்றவர்களின் மூலம் ஒரு பழிச்சொல் கிடைக்குமேதவிர, என்னையா இச்சொல் இழிவுபடுத்தும்.

இவ்விதமெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத மனநிலை ஏற்பட்டுவிட்டது பெரியாருக்கு – ஏமாற்றத்தின் காரணமாக எனவேதான், தூற்றுகிறார். தூற்றினால் கோபம் பிறந்து நாம் சுடுசொல் கூறுவோம். அதைத்துருப்புச் சீட்டாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார். இங்குதான் என்னை அவர், பதினைந்தாண்டுக்குப் பிறகும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
(திராவிட நாடு 09-10-1948)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

‘விடுதலை வேளிவியில் தமிழகம்’ என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அப்பத்தம் தெரியுமா?

1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்.

காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.

மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ!

”சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ”
(அறிவு -1936 மே இதழ்)

ஈ.வே. ராமசாமிநாயக்கர் உயிருடன் இருந்தபோதுதான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.

மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.

கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்:-

kannadasanபெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக்கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.

பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

……….. இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், ”இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது” என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.

அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். ”என்னய்யா யோக்கிதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்ததுபோல, திராவிடஸ்தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும்’ என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை” என்று அவரே பேசியிருக்கிறார்.
(நூல்: நான் பார்த்த அரசியல்)

ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.

cho-ramaswamy‘துக்ளக்’ ஆசிரியர் சோ கூறுகிறார்:-

…. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நீடித்தது. ”இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும்விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும்விட்டுவிட்டுப் போகாதீர்கள்! என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது.
(குமுதம்: 03-02-2000)

உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்:-

வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப்போராட்டம் நடத்தப்பட்டபோது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.

சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும்.
(குமுதம்-03-02-2000)

இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

‘துக்ளக்’ ஆசிரியர் சோ சொல்வதுதான் உண்மை.

ஆதாரம் இதோ!

27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)

இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா! மேலும் ஓர் ஆதாரம்

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறார்.

ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்:-

”நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. ”
(தமிழர் தலைவர் பக். 14)

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறபோது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா!

ஈ.வே. ராமசாமிநாயக்கர் எப்போதாவது சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொடு போராடியிருக்கிறாரா?

இல்லை!

சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?

இல்லை!

சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?

இல்லை!

இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர்?

– தொடரும்…



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய புளுகுகளையும் வரலாற்றுப் பிழைகளையும், முரண்பாடுகளையும் நாம் பார்த்தோம். இனி அவருடைய வாரிசு மணியம்மையாரின் புளுகுகளையும் மணியம்மையினுடைய மூடநம்பிக்கையையும் ஆராயலாம்.

மணியம்மை கூறுகிறார்:-
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
(விடுதலை 6-1-1976)

அம்பேத்கர் முஸ்லீம் மதத்தில் சேரப்போவதாகச் சொன்னார் என்று சொல்கிறாரே மணியம்மை- இது உண்மையா?

drambedkarஒரு பொழுதும் உண்மையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்தபோது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை.

அம்பேத்கர் கூறுகிறார்:-
”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
(நூல் :- Ambedkar – A Critical study)

முஸ்லீமாக மாறினால் நாடே சீரழிந்து இருக்கும் என்று சொன்ன அம்பேத்கரா முஸ்லீம் மதத்தில் மாறப்போவதாக சொன்னார்? அம்பேத்கர் அப்படி சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு மற்றொரு ஆதாரம்–

அ. மார்க்ஸ் என்பவர், ”பெரியார்?” என்ற நூலில் கூறுகிறார்: ”அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய போது நீங்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியலாக இருக்கும் என (பெரியார்) அவருக்கு அறிவுரைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.”

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதை அம்பேத்கர் கூறியது என்று சொல்வதுதான் பகுத்தறிவா? அ.மார்க்ஸ் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் ஆரம்பித்திலிருந்தே ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியானதாகும்,’ என்று பல தடவை கூறியிருக்கிறார்.

இதையும் நம்பாதவர்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே பதில் சொல்கிறார்–

”நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்போது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டி, “போடு கையெழுத்தை; நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம்” என்றார். நான் சம்மதிக்கவில்லை.”
(விடுதலை 16-2-1959)

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்றிலிருந்து, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறவேண்டும் என்று சொன்னாரே தவிர இஸ்லாமுக்கு அல்ல என்பது தெளிவாகும். மணியம்மையின் இந்தப் புளுகை எதில் சேர்ப்பது? இதுதான் ஒரு தலைவிக்கு அழகா?

இதைக்கூட விட்டுவிடுவோம். இவர்கள் எதை மூடநம்பிக்கை என்று சொல்லிவந்தார்களோ, அதையே இவர்கள் நம்பினதுதான் வேடிக்கை.

maniammaiyarமணியம்மை கூறுகிறார்:-
”என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும் என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து விடுகிறேன். உடனே அய்யாவின், அந்தப் புன்னதை முகம் என் கண்முன்தோன்றி, ”பைத்தியக்காரி இவ்வளவு தானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்துச் சொல்லி வந்த கருத்துகளை உன்னிடத்திலே காணமுடியவில்லையே!

நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைபிடிப்பவளாய் இருக்கப்போகிறாயோ! சாதாரணப் பெண்கள் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்க வேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப் படுத்திவைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே! என்று சொல்வதுபோல் தோற்றம் அளிக்கும்”.

உடனே நான் ”இல்லை-இல்லை-மன்னித்துவிடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல, என்றுமே நடக்கமாட்டேன்” என்று மனதால் நினைத்துக்கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக்கொண்டு என் உள்ளத்தை இரும்பைப்போல் கடினமாக ஆக்கிவிடுவேன் அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்”.
(விடுதலை 4-1-1974)

பகுத்தறிவுவாதியான மணியம்மை கூறுகின்ற இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இந்துமதப் புராணங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அசரிரீ என்ற பெயரில் ஒரு குரல் கேட்கும். அந்த அசரிரீக் குரல், எச்சரிக்கைக் குரலாகவும், அறிவுரைக் குரலாகவும் அல்லது பாராட்டுக் குரலாகவும் இருக்கும். இப்படி அசரிரீ கேட்கும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையும் கூட.

ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை அல்லது கருத்து என்ன?

அசரிரீக் குரல் தானாகவே கேட்காது. அதுவும் மனிதன் யாருமே இல்லாமல், எந்தவிதக் கருவியும் இல்லாமல் மனிதனைப் போல் பேசுவது என்பது பகுத்தறிவுக்கு முரணானது. இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இப்படி பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை என்ன கூறுகிறார்?

தான் சோர்ந்து இருக்கும் சில சமயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தனக்கு ஆறுதல் கூறுவதுபோல் தோற்றம் அளிக்கும் என்கிறார் மணியம்மை. இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி தோற்றம் அளிப்பார்? அப்படியே தோற்றம் அளித்தாலும் பேசுகின்ற மாதிரி குரலுடன் தோற்றமளிக்க முடியுமா? ஒருவர் இறந்தாலும் கூட அவரை நினைக்கும்போது அவருடைய தோற்றம் நம் மனதில் எழும் என்று சொல்லலாம். அது வெறும் எண்ணமே தவிர உண்மை அல்ல என்றும் சொல்லலாம். அப்படியென்றால் உண்மையில்லாத இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், தோற்றத்திற்கு அல்லது எண்ணத்திற்கு எதற்காக மன்னித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டும்? மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன்னித்துவிடுமா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் ஆறுதல் சொல்லியவுடன்தான் மணியம்மைக்கு மனதில் அமைதியும், நிறைவும் பெறும் என்பதுதான் பகுத்தறிவா? எவ்வளவோ ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோழர்கள் மன அமைதியும் நிறைவும் இல்லாமல் திராவிடர்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்தார்கள். அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றி மன அமைதியைக் கொடுத்திருக்கலாமே- ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றவில்லை? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன அமைதியை கொடுத்துவிட முடியுமா?

இந்தத் தோற்றமே நம்மால்தான் ஏற்படுகிறது என்று சொல்வார்களானால் அதற்காக மன்னிப்பு எதற்கு? தோற்றமே நம்மால் தான் ஏற்படுகிறது என்கின்றபோது அதற்காக ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் மன அமைதி பெறுகிறது என்று சொல்வது எதற்காக? இதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று சொல்வது! அதாவது பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை.

அடுத்து-

மணியம்மை கூறுகிறார் :-
”அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்துவிட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடமாட்டேன்.. என்று கூறி அவரை மகிழ்வித்தேன்”
(விடுதலை 4-1-1974)

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று மணியம்மை கூறுகிறாரே? இதுவாவது பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

இராமர் ஒரு காரணத்திற்காக (இராவணனை கொல்ல) இப்பூமியில் பிறந்தார். கிருஷ்ணர் ஒரு காரணத்திற்காக (கம்சனைக் கொல்ல) பிறந்தார் என்று இந்துக்கள் சொல்லும் போது அதைப் பகுத்தறிவுவாதிகள் கேலி பேசினார்கள்… விமர்சித்தார்கள்… மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்னார்கள்.

இப்படிச் சொன்ன பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று சொன்னால் அதுவும் இவர்களின் மூடநம்பிக்கைத்தானேநதான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்றால் இறப்பதும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். (இது ஆத்திகர்களைப் பொருத்தவரை நம்பிக்கை. ஆனால் பகுத்தறிவுவாதிகளைப் பொருத்தவரை மூடநம்பிக்கை) அப்படியென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரும், மணியம்மையும் இறந்தது எந்தக் காரணத்திற்காக? மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொன்னால் அந்தக் காரணம் என்ன என்று விளக்க வேண்டாமா?

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொல்லும்போது, ஏதோ ஒரு செயல் புரிவதற்காக, சாகக் கிடந்த நான் மறுபடியும் பிழைத்திருக்கிறேன் என்று பொருள்படுகிறது. ஆனால் இதே கருத்தைத்தானே இந்துக்களும் கர்மா என்ற பெயரில் சொல்கின்றனர்! மக்கள் (தங்கள் வினைப்படி) ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிறக்கின்றனர். தங்கள் கர்மங்களை ஆற்றுகின்றனர். பின்பு இறக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கர்மக் கொள்கையை எதிர்க்கின்ற மணியம்மைதான் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிழைத்ததாகச் சொல்லி மறைமுகமாக கர்மா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏன் இந்த முரண்பாடு? இதுதான் இவர்களுடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை.

மேலும் மணியம்மை கூறுகிறார்:-
(பெரியார்) அமைதியுடன் நாம் இனி எப்படி நடந்து கொள்கிறோம். கட்டுக்குலையாமல் என்றும் போல் கட்டுப்பாடு, ஒழுக்கம் – உண்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான் நமது செயலைப்பார்த்துகொண்டு தான் இருப்பார்.
(விடுதலை 4-1-1974)

மணியம்மையினுடைய இந்தப் பேச்சு அவர்களுடைய பகுத்தறிவுப்படி மூடநம்பிக்கையா, இல்லையா?

1973-ல் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி 1974-ல் ஓய்வுடன் இருப்பார்? எப்படி கவனித்துக்கொள்வார்?

இறந்தவர்களின் ஆத்மா இவ்வுலகில் இருக்கும். ஒருவருடைய அப்பா அல்லது அம்மா அல்லது வேறு உறவினர்கள் போன்றவர்கள் இறந்தால் அவர்கள் நம்மோடு இருப்பார்கள். நம்மை கவனித்துக் கொள்வார்கள் – என்பது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆனால் இதை மூடநம்பிக்கை என்று சொல்லுகின்ற மணியம்மையார் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஓய்வுடன் இருக்கிறார். அவர் கவனிப்பார் என்று சொல்லுகிறாரே? அப்படியானால் இதுவும் மூடநம்பிக்கைத்தானே!

இப்படி இவருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு ஏராளமான சான்றுகளைத் தந்துகொண்டே போகலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு சமாதி வைத்தது, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நினைவுநாள் கொண்டாடுவது போன்ற இவர்களுடைய பகுத்தறிவுக்கு முரணான வகையில் மணியம்மையார் நடந்து கொண்டதை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்களே கண்டித்திருக்கிறார்கள் என்றால் மணியம்மையாருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த அளவுக்கு மூடநம்பிக்கை கொண்டிருந்த மணியம்மையாரும் அவருடைய சீடர்களும் ஆத்திகர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சொல்ல தகுதி இருக்கிறதா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்

veeramaniஈ.வே. ராமசாமி நாயக்கர், மற்றும் மணியம்மையாரின் மூடநம்பிக்கைகளையும், பொய் பித்தலாட்டங்களையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்.

மூடநம்பிக்கை: 1

இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச்‘சாபத்தை’ கேலி செய்தவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.

வீரமணி கூறுகிறார்:-
… தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?
(விடுதலை 23-4-1996)

சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார். அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும்போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும்போது அவரும் மூடநம்பிக்கைக்காரர்தானே!
மூடநம்பிக்கை 2

வீரமணி கூறுகிறார்:-
…மது விலக்கினால் இப்படி ஏழை, எளிய குடிப் பழக்கமுடைய கிராம மக்கள் விஷச் சராயத்தாலும், கள்ளச் சாராயத்தாலும், குடல் வெந்து சாகின்ற நிலை தவிர்த்து நல்ல சாராயம், கள்ளைக் குடித்தாவது இருக்க, அக்கடைகளையே திறக்கலாமே!
(விடுதலை 30-8-1998)

அதாவது கள்ளச் சாராயம் குடிப்பதைத் தடுக்க, நல்ல சாராயம் குடிக்க கடைகளைத் திறக்கலாமே என்கிறார்.

உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு தலைவருக்கு அழகல்ல. கள்ளச் சாராயத்தை அரசு கடுமையான சட்டங்கள் போட்டு தடுக்க வேண்டுமே ஒழிய அதற்குப் பதிலாக நல்ல சாராயத்தைத் தரும் கடைகளைத் திறக்கக்கூடாது.

வீரமணி சொல்கிற கருத்துப்படி-  அதுதான் சரியான கருத்தும் என்று பார்த்தாலும் கூட- நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

…கஞ்சா குடித்து சாவதைவிட சிறிது நல்ல கஞ்சாவை அரசே கடைகள் மூலம் கொடுக்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

…அபின் சாப்பிட்டு சாவதைவிட நல்ல அபினை அரசே கடைகள் மூலம் விற்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

கண்டிப்பாகச் சொல்லமாட்டார். ஏனென்றால் இது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்று அவருக்கே தெரியும்.

நல்ல அபின் அல்லது நல்ல கஞ்சாவை சாப்பிட்டாலும் உடலுக்குக் கெடுதிதான். அதே போல நல்ல சாராயம் குடித்தாலும் உடலுக்குக் கெடுதிதான். அதை எப்படித் தடுக்கவேண்டும் என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய அதற்கு பதில் நல்ல சாராயம் என்பதெல்லாம் முட்டாள்தனமான கருத்தாகும்.

மூடநம்பிக்கை: 3

வீரமணி கூறுகிறார்:-
…கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.
(விடுதலை 20-7-1997)

இதில் வரும் ‘பேய்‘ என்பது என்ன? ஆத்திகர்கள்தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள். ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?

பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!

அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்.

வீரமணியின் பதில் என்ன?

மூடநம்பிக்கை : 4

வீரமணி கூறுகிறார்:-
உலகின் புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயம் மேல்சாதியினர் செய்யக்கூடாது என்றே மனு கட்டளையிட்டுள்ளார். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீராததற்கு இதுவே அடிப்படை! பார்ப்பனர் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மை.
(விடுதலை 30-04-1998)

வீரமணி என்ன கூறுகிறார் தெரியுமா?

பார்ப்பனார் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மையாம். சரி.

அப்படியென்றால் இதில் ஓன்று தெளிவாகிறது.

அதாவது புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயத்தில் பார்ப்பனர் பங்கேற்கவில்லை. இதில் பங்கேற்றவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்றாகிறது. இதன் மூலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீரவில்லை என்றாகிறதல்லவா? பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் இன்றுள்ள கஷ்டங்கள் இருக்கின்றனவா?

எப்படி சுயமரியாதைகாரன்?

periyarதாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
– வே. ஆனைமுத்து, நூல்; பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்

மூடநம்பிக்கை : 5

வீரமணி கூறுகிறார்:-
ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்றுச் சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையது.
(நூல்: சங்கராச்சாரியார்?)

மேலும் வீரமணி கூறுகிறார்:-
(நினைவிடங்களுக்கு) அங்கே போகக்கூடியதோ, மற்றதோ அது ஒரு பிரசார நிகழ்ச்சி, ஒரு வரலாற்றுக் குறிப்பு – மற்றபடி அந்த நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை.
(நூல்: சங்கராச்சாரியார்?)

நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால் அந்த நினைவுச் சின்ன இடங்களில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என்று சொல்வது ஏன்?

பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களா?

பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களானால் அப்போது மட்டுமே நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு. சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று வீரமணி சொல்வது உண்மையாகும். அப்படி அனுமதி இல்லை என்று மறுக்கப்படுமானால் பகுத்தறிவாளர்களான உங்களுக்கும் நினைவு சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு என்றுதான் அர்த்தம்.

ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்று சொன்ன வீரமணி கூறுகிறார்:-

ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி; லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம், ஈடுஇணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண்.
(விடுதலை 19-05-1998)

இந்த ஈரோடு வர்ணனையைப் பார்க்கும்போது, மேலே சொன்ன ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்பதற்கும் இந்த வர்ணனைக்கும் உள்ள முரண்பாடு உள்ளங்கை நெல்லிக்கனிப்போல் தெளிவாகத் தெரிகிறதல்லவா!

ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லும்போதும் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்ககமாகும் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லும்போதும் நமக்கு ஒன்று புரிகிறது.

அதாவது ஆத்திகர்கள் எவ்வாறு கடவுள்கள் பிறந்த இடங்களான அயோத்தி, மதுரா, காசி, மதுரை, பழனி போன்ற இடங்களை பக்திப் பரவசத்துடன் எவ்வாறு இன்பபுரி என்றும் அருள்புரியக் காரணமான மண் என்றும் சொல்லுகின்றார்களோ அதே போல வீரமணியும் பக்திப் பரவசத்துடன் ஈரோடை இன்பபுரி என்றும் காரணமான மண் என்றும் சொல்லுகிறார்.

ஆத்திகர்கள் கடவுள்கள் பிறந்த இடங்களைப் புகழும்போது அது மூடத்தனம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த இடமான ஈரோடை வீரமணி புகழும்போது அதுவும் மூடத்தனம்தானே!

அது மூடத்தனம் இல்லையென்றால் ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லுகின்றாரே அந்த ஈரோடு – மற்றொரு அறிவு ஆசானை ஏன் அகிலத்திற்கு அளிக்கவில்லை?

ஈரோடு – லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லுகின்றாரே – அந்த ஈரோடுதான் காரணமா? அப்படியென்றால் அதே மண் மற்றொரு ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமாக இல்லையே ஏன்? இதனால் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளர அந்த மண்தான் காரணம் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!

மேலும் இங்கு மற்றொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன்.

அமைச்சர் அன்பில் தருமலிங்கம், “அய்யா திருச்சியைத்தான் தனது தலைமையிடமாக கொண்டு பெரும்பாலும் வாழ்ந்தார். ஆகவே திருச்சியில்தான் அடக்கம் செய்து அண்ணா சதுக்கம் போல எளிய நினைவுச்சின்னம் எழுப்பிடவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அதைப் போல் பிடிவாதமாக மணியம்மை ”அய்யா வாழும் போதே தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று தன்னிடம் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். அதற்கு வீரமணியும் ஆமாம் ஆமாம் என்றார்.
(நூல்:- வரலாற்று நாயகன், திருவாரூர் கே. தங்கராசு)

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்றும் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்தாகவும் சொன்னால் அது மூடநம்பிக்கைத் தானே!”

எப்படி மூடநம்பிக்கை என்று கேட்கிறீர்களா?

இறந்த பிறகு எங்கு புதைத்தால்தான் என்ன?

பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் பெரியார் திடலில் அப்படி என்ன மகிமை இருக்கிறது?

அந்த பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால் ஏதோ மகிமை இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

நமது ஹிந்து புராணங்களில் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவார். இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்லுகின்றார்கள்.

அப்படியானால் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம்?

இப்பொழுது சொல்லுங்கள்! பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!

மூடநம்பிக்கை : 6

வீரமணி கூறுகிறார்:-
…இதற்கு முன் உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள…
(விடுதலை 20-03.1998)

ஹிந்துக்கள்தான் தலையெழுத்தை நம்புவார்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் தலையெழுத்தை பிரமன் எழுதுகிறான். அந்த தலையெழுத்துப்படிதான் வாழ்க்கை நடக்கிறது. அதை மீறி எதுவும் நடப்பதில்லை. அதாவது தலையெழுத்துதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது என்று ஹிந்துக்கள்தான் நம்புகிறார்கள்.

இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் வீரமணி என்ன கூறுகிறார்?

‘உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள….’ என்று கூறுகிறார். அதாவது தலையெழுத்துதான் நிர்ணயிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்துக்கும் வீரமணி சொல்கிற தலையெழுத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு வித்தியாசமும் இல்லை.

அப்படியென்றால் ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்தை மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்வார்களானால் வீரமணி சொல்கிற தலையெழுத்தையும் நாம் மூடநம்பிக்கை என்று சொல்லலாம் அல்லவா?

இதன்படி வீரமணி மூடநம்பிக்கைக்காரர்தானே!

முரண்பாடு 1

பா.ஜ.க. ஐந்து அணுகுண்டுகளை வெடித்தது. உலகத்திலே பாரத நாட்டின் பெருமை உயர்ந்தது. ஒவ்வொரு பாரதக் குடிமகனும் பெருமை கொண்டான். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் வீரமணி என்ன கூறினார் தெரியுமா?

50ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அணுகுண்டுகள்; இந்த தரித்திர நாராயணர்கள் வாழும் பூமிக்கு இப்போது அவசியம்தானா?
(விடுதலை 10-06-1998)

இதைப் பார்த்ததும் நமக்கெல்லாம் ஒன்று தோன்றும். அடடா! வீரமணிக்குத்தான் நமது நாட்டு தரித்திர நாராயணர்கள் மீது எவ்வளவு பச்சாதாபம்! எவ்வளவு பரிதாபம்! எவ்வளவு இரக்கம்!

ஆனால் நமக்குத் தோன்றும் இந்த எண்ணம் கூட தவறானது. வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது அல்ல. இதை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.

இதோ வீரமணி கூறுகிறார்:-
நாகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பபட்டுள்ளது.
(விடுதலை:- 13-09-1998)

இப்பொழுது சொல்லுங்கள், வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது தானா?

இப்பொழுது அதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.

நாகையில் பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அவசியம்தானா? அந்த இரண்டு லட்சத்தையும் நமது நாட்டு தரித்திர நாராயணர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாமே! அதுதானே உண்மையான பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் ஆகும்? அதைவிட்டுவிட்டு பறவைகள் மலம் கழிக்க சிலையும், பீடமும், மனிதர்கள் பொழுதுபோக்க பூங்காவும் அமைக்க இரண்டு லட்சம் செலவழிப்பது இரக்கத்தைக் காட்டவில்லை. மாறாக ஆடம்பரம் மற்றும் விளம்பர மோகத்தைத்தான் காட்டுகிறது.

முரண்பாடு 2

வீரமணி கூறுகிறர்:-
ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடியாக இருப்பது என்பது பற்றி யாருக்குமே மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. அதன் மூலம் பொதுப்பணிகள் செய்கிறோம்.
(சன் தொலைக்காட்சியில் கி.வீரமணி பேட்டி)

ஆனால் வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட்டிக்கடை திறப்பதிலும், சீட்டு நிறுவனங்களை நடத்துவதிலும், காட்டும் ஆர்வம், பெரியார் நூல்களைக் காப்பாற்றுவதில் இல்லாமல் போய்விட்டது கொடுமையிலும் கொடுமை.
(நூல்:- வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?)

வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக திராவிடன் நல நிதியைக் குறிப்பிடுகிறார்கள். திராவிடன் நல நிதி வட்டிக்கு விடுவதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறார்கள். நியாயம்தானே! பதில் சொல்வாரா வீரமணி?

முரண்பாடு: 3

சாதி ஒழிப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கின்ற தி.க.வினர்தான் யார் யார் என்ன என்ன சாதி என்று நமக்கு நினைவூட்டுபவர்கள். ஆனால் அதில் கூட அவர்கள் பொய் சொல்லித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் வீரமணியையே கூறலாம்.

வீரமணி கூறுகிறார்:-
…சிவசேனையின் தலைவரான பால்தாக்கரே என்ற பார்ப்பனர்.
(விடுதலை 16-07-1997)

அதாவது பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று சொல்கிறார். பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று 1997-ம் ஆண்டு சொன்ன அதே வீரமணி கூறுகிறார்:-
…பால்தாக்கரே ஒரு சூத்திரர்தான். சாஸ்திரப்படி, சாதியில் அவர் ஒரு காயஸ்தா (நம் பகுதியில் உள்ள சில பிரபு முதலியார்கள், சைவப் பிள்ளைமார்கள் போன்ற பிரிவு அது!)
(உண்மை – ஜனவரி (16-31)-2001)

1997-ம் ஆண்டு பார்ப்பனராக இருந்த பால்தாக்கரே 2001-க்குள் எப்படி சூத்திரரானார்?

பால்தாக்கரே பார்ப்பனராக இருந்தால் சூத்திரர் என்று சொன்னது பொய்யாக இருக்கவேண்டும். அல்லது பால்தாக்கரே சூத்திரராக இருந்தால் பார்ப்பனர் என்று சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். கடைசியாகக் கேட்கிறோம், பால்தாக்கரே பார்ப்பனரா? சூத்திரரா?

முரண்பாடு : 4

‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்கள் ஒரு கட்டுரையில் ‘விவரமறிந்தவர்கள்’ என்று கூறிவிட்டாராம்! அதை விமர்சித்து வீரமணி கூறுகிறார்:-

…இன்னொருயிடத்தில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்கிறார். அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர் தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா?
(விடுதலை 21-09-1996)

ஆனால் இப்படி அவர்களை விமர்சித்து எழுதிய வீரமணி அவருடைய மற்றொரு கட்டுரையில் எழுதுகிறார்:-

…சாதி ரீதியாக, மத ரீதியாகக் கலவரங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கலவரங்களைத் தூண்டி விடுவதற்காகப் பணம் வருகின்றது. – இந்த இரண்டாவது செய்தி பற்றித் தென்மாவட்டங்களில் விவரம் அறிந்தவர்களிடையே பரவலான பேச்சு இருக்கிறது.
(விடுதலை 20-02-1997)

சோ அவர்களை வீரமணி கேட்ட அதே கேள்வியை இப்போது நாமும் கேட்கலாம் அல்லவா! அதனால்தான் கேட்கிறோம்.

அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர், தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா? இதற்கு வீரமணிதான் பதில் சொல்ல வேண்டும்.

வீரமணியைப் பற்றி சங்கமித்ரா!

sangamithraசாதி ஒழிப்புப் பணியில் சென்ற 20ஆண்டுகளில் வீரமணி செய்தது என்ன? மாறாக ஒரு கொள்கை அமைப்பாக – போராளி நிறுவனமாக இருந்த இதை(தி.க) வீரமணி ஒரு வட்டிக் கடையாக – கல்வி வணிக அமைப்பாக மாற்றிவிட்டார். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களாகிய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? துரோகங்களை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்த பெரியாருக்கே துரோகம் செய்ததில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துரோகி வீரமணி ஆகிறார்.

பெரியார் தந்த வேலைத் திட்டத்தில் வீரமணியின் – சாதனை – பங்களிப்பு என்ன?

வீரமணி பட்டியலிடுகிறார். கிட்டத்தட்ட 44 அறப்பணி அமைப்புகள் தோழர் வீரமணி – பெரியார் தந்த பணத்தில் நடத்துகின்ற அமைப்புகளாகும். இதில், எந்த அமைப்பு பெரியாரின் உயிர்க்கொள்கையான சாதி ஒழிப்புக்குப் பாடுபடுகிறது? பெரியாருடைய எத்தனை பள்ளிகளில் -கல்லூரிகளில் – பெரியாரின் பார்ப்பன, வருணாசிரம எதிர்ப்புக் கொள்கைள் – பாடமாக – பயிற்சியாக போதிக்கப்படுகின்றது? இதில் பெரியார் பால்பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம், முதலிய பணம் பண்ணுவதற்கென்றே தோழர் வீரமணியால் நடத்தப்படுகின்றன என்று நாம் சொன்னால் அதில் தவறு என்ன? மேலும் பெரியார் அமைப்புகளில் பீராய்ந்த பணத்தில் முழுக்க முழுக்க வட்டிக் கடைகளாக – திராவிடன் நல நிதியும் – குடும்ப விளக்கு நிதியும் நடத்தப்படுகின்றன என்றால், அதை யார்தான் மறுக்க முடியும்?

(சங்கமித்ரா உண்மை இதழில் பணியாற்றியவர். ஏப்ரல் 84 முதல் சூலை 85 வரை 15 மாதங்கள் உண்மை இதழ் இவர் தயாரிப்பில் வந்ததாகக் கூறுகிறார் சங்கமித்ரா.)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ஈ.வே.ரா - பெரியார்?- திராவிடர் கழகம் வீரமணி
Permalink  
 


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் – 17

திருக்குறள் பற்றி பெரியார் பெருமளவுக்கு முரண்பட்டு தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத காரணங்களைக் கூறி திருக்குறளை நியாயப்படுத்தி இருக்கிறார். அவற்றை இப்போது காண்போம்.

குறள் – ஹிந்துமத கண்டனப் புத்தகம் என்பதையும்அது சர்வமதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல்என்பதையும் எல்லோரும் உணரவேண்டும்விரும்பிப் படித்து அதன்படி நடக்கவேண்டும்ஒவ்வொருவரும் தான் ஹிந்துவல்ல தராவிடனே –திருக்குறளானே என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும்விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்கவேண்டும்புராணங்களைப்படிக்கக் கூடாதுஎன்ன மதம் என்றால் குறள் மதம்மனித தர்ம மதம் என்று சொல்லப் பழக வேண்டும்யார் எதைச் சொல்லிய போதிலும் எதுஎத்தன்மையுடையதாயிருப்பினும் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்து பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும். (விடுதலை 10-08-2008)

மேலும் பெரியார் கூறுவதைக் கேளுங்கள்.

இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வதுதான் நல்லதுஇன்றுள்ள அம்மாகாண முஸ்லிம்தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும் பயந்துக்காகவும் சுயநலத்துக்காகவும் காங்கிரஸ்காரர்களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர்.தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக்கொடுக்கத் துணிந்த அவர்களைக் கோழைகளாக்கிவிட்டனர்இதை முஸ்லிம் பாமரமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்காங்கிரசுடன் சேர்ந்து கொள்வதாயிருந்தால் தாராளமாய்ச் சேர்ந்து கொள்ளுங்கள்நாங்கள் வேண்டாம் என்றுகூறவில்லை.

100க்கு 90 பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனாகளா 100க்கு 7 பேரான உங்களுக்கு வளைந்து கொடுத்துவிடப் போகிறார்கள்.எங்களைப் பொறத்தவரை இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத்தான் கருதி வருகிறோம்.

நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம்நாங்களும் உங்களைப் போல் ஹிந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு குறளை ஒருபோதும்வெறுப்பவர்கள் அல்லஒன்றுமே முடியாது போனால் உங்களைப் போன்று குல்லாயாவது போட்டுக்கொள்ளலாம் என்றுதான் நாங்கள்கருதியிருக்கிறோம்எனவே எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக உங்களை இந்த அளவுக்கு அளவளாவும் ஆதரிக்கும் எங்கள் கழகத்தில்வேண்டுமானாலும் சேருங்கள்அல்லது வடநாட்டவனால் பல கோடி செலவிட்டு பத்திரிக்கைகளைக் கொண்டு தீவிரப் பிரச்சாரம் செய்துஹிந்துக்களைத் தூண்டிவிட்டு உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடாவது சேர்ந்துகொள்ளுங்கள். (விடுதலை 10-08-2008)

முஸ்லிம்களுடைய குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கும் சொல்கிறேன்கிறிஸ்தவர்களாகிவிட்டதாலேயே நீங்கள்உயர்ந்தவர்களென்று கருதிக் கொண்டு விடாதீர்கள்நீங்களும் குறள் மதக்காரர்கள்பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது.பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதை இழந்துவிடாதீர்கள்உங்கள் நன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால்ஜாதி சமயபேதமின்றி பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள்திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளைப் பின்பற்றி நடந்து வரும் கழகம்இந்நாட்டில்மனதர்மம் ஒழிந்து மனிதத் தன்மை ஏற்படப் பாடுபட்டு வரும் கழகம்அதற்குக் குறள்தான் வழிகாட்டிஎந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல்பணியாற்றிவரும் கழகம் என்பதை உங்களால் உணர்ந்துஆன எல்லா உதவியையும் அதற்களித்து ஆதரியுங்கள். (விடுதலை 10-08-2008)

தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும்நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் பார்பனர்.எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும் நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச் சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும்உலகத்துக்குங்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடைய முடியும். (விடுதலை 22-03-1960)

இதன் மூலம் பெரியார் பல விஷயங்களைக் கூறுகிறார்.

திருக்குறள் ஹிந்து மதத்தை கண்டிக்கும் நூல்.

எல்லா மதங்களிலும் கூறப்பட்ட நல்ல விஷயங்களின் தொகுப்பாக திருக்குறள் அமைந்துள்ளது.

இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் திருக்குறளை ஏற்க வேண்டும்.

என்றெல்லாம் பல விதங்களில் திருக்குறளைப் புகழ்ந்து பேசிய பெரியார் தனது மேற்கண்ட கூற்றுக்கு தானே எவ்வாறு முரண்படுகிறார் என்று பாருங்கள்.

அவரது குறளில் இந்திரன்பிரம்மாவிஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்புசுவர்கம்நரகம்மேலோகம்பிதுர்தேவர்கள் முதலிய ஆரிய மதசம்பிரதாயங்களையும்மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்க காணலாம். (20-01-1929 குடியரசு இதழில் பெரியார்)

திருக்குறள் இந்துமதக் கண்டன நூல் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்து மதத்தில் கூறப்பட்ட அனைத்து தவறான கொள்கைகளும் திருக்குறளில் உண்டு என்கிறார்.

கீதை ராமாயணம் ஆகிய நூல்களை என்ன காரணம் கூறி பெரியார் ஒழிக்கச் சொன்னாரோ அந்தக் காரணங்கள் அனைத்தும் திருக்குறளிலம் உண்டு என்று மேலே ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார்.

திருக்குறளில் சில நல்ல கருத்தக்கள் உள்ளன என்பதால் அதை ஆதரித்தார் என்று கூறினால் அதுவும் சரியான கருயான கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கி உள்ளது என்று அவரே கூறியதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். எல்லா மதங்களிலும் நல்ல கருக்துக்கள் உள்ளன என்று பெரியார் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்.

வள்ளுவர் குறளையும்அந்தபடியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர்என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு என்னதான் நூல்?’ என்று கேட்பார்கள்நான் ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது.அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?’ என்று பதில் கூறுவேன். (விடுதலை 01-06-1950 ல் பெரியார்)

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல் நீதி கூறும்முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார். (தமிழும் தமிழரும் என்ற நூலில் .வே.ரா)

தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளுவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதிநூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப்பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக்கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும்என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவதுகுற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்துவிடுவார்கள்பார்ப்பனர்களென்றாலோதிருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

இவ்வளவு இரந்தாலும் திருவள்ளுவர் யார்என்ன ஜாதிஎன்ன மதம்அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவேஇருக்கிறதுசைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள்வைணவர்களில் சிலர் அவரைவைணவர் என்று கொண்டாடுகின்றனர்சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள்தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகியபறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள்அவரைப் பற்றி கிடைக்கும்புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது.

இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோஅதுவும் மயக்கத்திற்கிடமானதாகஇருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்படவில்லைஅவரது குறளில் இந்திரன்பிரம்மாவிஷ்ணு முதலியதெய்வங்களையும் மறுபிறப்புசுவர்கம்நரகம்மேலோகம்பிதுர்தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும்மூடநம்பிக்கைகளையும்கொண்ட விஷயங்களைப் பார்க்கலாம்.

எனவே இவற்றைக் கொண்டு திரவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால்அவர் தற்காலப் பார்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக்கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள்பராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டுபார்ப்பனியம் என்னும் பார்ப்பனக்கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திரத்தக்காரர்கள் என்றும் தாங்கள் பெரிய கல்விகேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர்என்றும்உள்ளுக்குள் சைவ சமயம் தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.

இவை எப்படி இருந்தாலும் திரவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையை பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலள்ள நீதிகள்ஒருபுறம் இருக்கதிருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிரக்க முடியாதுஅதாவதுவாசுகியம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் முன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம்.அதாவது வாசுகி கற்பள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்கஅவ்வம்மையார் அந்தபடியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்குதமது கற்பைக் காட்டினாராம்அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிடஅம்மையார் கயிற்றை அப்படியேவிட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.

திருவள்ளுவர் ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழஉடனெ அம்மையாரைக் கூப்பிட்டு, ‘விளக்கேற்றிக் கொண்டுவா,நூற்கதிரைத் தேடவேண்டும்‘ என்று சொல்ல அம்மையார் ‘பகல் நேரத்தில் விளக்கு எதற்கு‘ என்று கேட்காமல் – கேட்டால் பங்கம் வந்துவிடும் எனக்கருதி உடனே விளக்குப் பற்றவைத்துக் கொண்டுவந்து கொடுத்தார்களாம்.

உரு நாள் நாயனார் பழைய சாத் சாப்பிடும்போது ‘சாதம் சுடுகின்றது‘ என்று சொன்னவுடன் அம்மையார் ‘பழைய சாதம் சுடுமா‘ என்று கூடக் கேட்காமல்– கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமே என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம்திருவள்ளுவர் அம்மையாரைதினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்து விட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம்.அவ்வம்மையாரும் ‘இது எதற்காக‘ என்று கேட்காமல் – கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்த படியேசெய்து வந்தாராம்ஆனால் அம்மையாரின் மரணத் தருவாயில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்கஅது ஏன் என்றுதிருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது அம்மையார் பயந்துகொண்டு ‘தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீhகளெ அதுஎதற்காக என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன்என்று சொன்னாராம்பிறகு திருவள்ளுவர் தயவு செய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தைஅதாவது சாம்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால்அந்த ஊசியில் குத்தியெடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம்அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம்.

இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம்எனவே இது இடைச் செருகலாகவோகற்பனைக் கதையாகவோ இல்லாமல்உண்மைக் கதையாய் இருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும்கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது?அதற்கு என்ன பரிட்சைஎன்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக. (ஜனவரி 20, 1929 ‘குடியரசு‘ பெரியார் சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் எழுதிய கட்டுரை)

திருக்குறள் எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்று பின்வரும் கற்பனை உரையாடல் மூலம் பெரியார் தெளிவு படுத்தகிறார்.

நா : தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைகேட்டிருக்கின்றீர்களா?

பெண் : ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா : கற்புடைய மங்கையர் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?

பெண் : ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா : சரிஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுதுகுடிக்கத் தண்ணீகிடையாதுதயவு செய்து ஒரு இரண்டு உழவு (இரண்டு அங்குலம்மழைபெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் பெரியார் அவர்கள் எழுதியது.

சில விஷயங்களை ஒருவர் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருந்து பின்னர் தமது கருத்தை மாற்றிக் கொண்டால் அது முரண்பாடு ஆகாது என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

இது எப்போது சரியான கருத்தாக இருக்கும்? திருக்குறளில் உள்ள தவறுகளை கவனிக்காமல் இருந்துவிட்டு பின்னர் தவறை அறிந்து மாற்றிக் கொண்டால் தான் அது சரியானதாகும். திருக்கறளில் உள்ள தவறுகளை விமர்சனம் செய்து விட்டு பின்னர் திரக்குறளை ஆதரித்தால் அப்போது இந்த கருத்து சரியாகாது.

திருக்குறளில் உள்ள தவறுகளை அறிந்த பின்னர் சந்தர்ப்பவாதத்துக்காகவோ கொள்கையில் சமரசம் செய்து கொள்வதற்காகவோ முரண்படுவதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். திருக்குறளின் குறைகளை விமர்சித்துவிட்டு பின்னர் அதை ஆதரிப்பதை மேலே நாம் எடுத்துக் காட்டியதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

திருக்குறளைப் பெரியார் புகழ்ந்ததை மட்டும் தான் வீரமணி வகையறாக்கள் வெளியிட்டு திருக்குறளை தூக்கிப் பிடிக்கிறார்களெ தவிர பகுத்தறிவுக்கு எதிரான திருக்குறளை விமர்சனம் செய்த பெரியாரின் கூற்றுக்களை இருட்டடிப்பு செய்து தாங்கள் பகுத்தறிவை வந்த விலைக்கு விற்று விட்டவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லவேண்டுமா?

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111119c_015101007.jpg periyar dk



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 1

 
தேசத் துரோக அமைப்பு – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 1 

எம்.ஜி.ஆர். நிறுவிய அ.இ.அ.தி.மு.க.வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியன்று. 

ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்ததைப் போல, குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது. 

தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963– ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும், இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு தீய குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டது இல்லை. 

இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிரதாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர். 

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணாம்சங்களில் ஒன்றுகூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

தி.மு.க., கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம், வைகோவின் ம.தி.மு.க., பெரியார் திராவிடர் கழகம், வே.ஆனைமுத்துவின் திராவிடர் கழகம் முதலிய திராவிடக் கட்சிகள் அனைத்துக்கும் ஐஸ்டிஸ் கட்சியே தாய்க்கட்சி என்று அவை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. ஐஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குச் சிலைகளை எடுத்துள்ளனர்; ஒவ்வொரு வருடமும் அவற்றுக்கு மாலைகளை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.

எனவே ஐஸ்டிஸ் கட்சியின் ‘வரலாற்றை’ முதலில் எடுத்துச் சொல்லுவேன். 

பிரித்தாளும் கொள்கை 

ஒரு நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டு மக்களிடையே பிரிவுகளை உண்டாக்கி, பேதங்களை ஏற்படுத்தி, அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் படியாகச் செய்து, அவர்களைப் பலவீனப்படுத்திய பிறகு, அவர்களை எளிதாக அடக்கி ஆளுகின்ற ஒரு கொள்கையை காலனி ஆதிக்கக் காலத்தில் ஆங்கிலேயர்கள் பின்பற்றி வந்தார்கள். அது பிரித்தாளும் கொள்கை என்று வருணிக்கப்பட்டது. 

இந்தியாவில் அடிமைத்தளையை நீக்குவதற்காக விடுதலைப்போரை, காங்கிரஸ் மகாசபை முனைப்புடன் நடத்திய போது, தங்களது பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலும் செயல்படுத்தினார்கள். 

இந்தியாவின் வடக்குப் பகுதியில் காங்கிரஸ் மகாசபையின் செல்வாக்கைக் குறைக்க, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவுகளையும், பேதங்களையும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினார்கள். முஸ்லிம்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் மதப்பூசலை எழுப்பி, விடுதலைப் போரை ஒடுக்குவது சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது. 

எனவே விடுதலைப் போராட்டத்தை நடத்திய காங்கிரஸ் மகாசபையின் செல்வாக்கை ஒடுக்குவதற்காகப் பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனையை எழுப்ப, சென்னை மாகாணக் கவர்னர் திட்டமிட்டு வேலை செய்தார்.

சூழ்ச்சியின் விளைவு 

“வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டதுபோல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே இந்திய வைசிராயும், சென்னை மாகாணக் கவர்னரும் வெற்றி கண்டனர்” என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதி உள்ளார். 

1916 - ஆம் ஆண்டில் அந்தக் கட்சி ‘தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம்’ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கட்சியைத் திட்டமிட்டு ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேய வைசிராயும், சென்னை மாகாணக் கவர்னரும் ஆவார்கள் என்பதைக் கவனத்தில் குறித்துக் கொள்ளுங்கள். 

அவர்கள் இந்தியர்களுக்கு எதிராகத் தேசத் துரோகம் செய்ய யார் வருவார்கள் என்று தேடிப் பார்த்து, ஆசைகள் பல காட்டி, பதவிகள், பட்டங்கள் தருவதாக பேரங்களைப் பேசி, நயவஞ்சக வலை விரித்தார்கள். அந்த வலையில் சிலர் சிக்கினார்கள். சிக்கியவர்களில் எவரும் சாமானியமானவர்களோ அல்லது நடுத்தர மக்களோ அல்லர். எல்லோருமே அன்றிருந்த சமஸ்தானங்களின் மன்னர்கள்; குறுநில அரசர்கள்; ஜமீன்தார்கள்; பெரிய நிலப்பிரபுக்கள்; கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த வியாபாரிகள். அவர்களே அந்தக் கட்சியின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்தார்கள். 

அந்தக் கட்சியின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகையும், ‘திராவிடன்’ என்று ஒரு தமிழ் இதழும் நடத்தப்பட்டன. நாளடைவில் அந்தக் கட்சி ‘ஜஸ் டிஸ் கட்சி’ என்று அழைக்கப்பட்டது. 

அதைத் தோற்றுவித்தவர்கள் சர்.பி.தியாகராயச் செட்டியாரும், டாக்டர் டி.எம்.நாயரும் ஆவார்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி அவர்கள் கட்சியைத் தொடங்கி நடத்தினார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லியாக வேண்டும். 

‘கொள்கைப் பிரகடனம்’ 

“ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான சர்.பி.தியாகராச செட்டியார், அந்தக் கட்சி பிறந்த ஆண்டிலேயே, அதன் கொள்கைப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, ‘அளவுக்கு மிஞ்சிய சுயாட்சிக் கோரிக்கையை ஜஸ்டிஸ் கட்சி ஆதரிக்கவில்லை’ என்பதைத் தெளிவு படுத்தியிருந்தார். மேலும், ஆங்கிலேய ஆட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள் விரும்பவில்லை என்பதையும் ஐயத்திற்கிடமின்றி அறிவித்திருந்தார். 

“இன்னும் ஒருபடி மேலே போய், ‘இன்று நாடு இருக்கும் நிலையில் வெவ்வேறு ஜாதியினருக்கு - வகுப்பினருக்கு நீதி கிடைக்கவும், அவர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்கவும் கூடியவர்கள் ஆங்கிலேயர்தான். அவர்கள் வெளியேறினால், நாட்டில் தேசபக்தியின்றி - ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு சீரழிய நேரிடும்’ 

இந்தியாவில் அடிமைத்தளையை நீக்குவதற்காக விடுதலைப் போரை, காங்கிரஸ் மகா சபை முனைப்புடன் நடத்திய போது, தங்களது பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலும் செயல்படுத்தினார்கள் 

என்றும் கூறித் திரு.செட்டியார் பிராமணரல்லாதாரை எச்சரித்திருந்தார். 

“ஜஸ்டிஸ் கட்சியின் இந்தப் பிரகடனமானது, காங்கிரஸ் மகாசபை தொடங்கவிருந்த ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிரானதாகும்” என்று ம.பொ.சி. பதிவு செய்து இருக்கிறார். 

ஜஸ்டிஸ் கட்சியின் உண்மையான முகத்தை, இந்தக் கொள்கைப் பிரகடனம் தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது.

“ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளும், வேலைத் திட்டங்களும் பிராமண ஆதிக்கத்திற்கு எதிரானவை என்று பொதுவாகச் சொல்லப்பட்டது என்ற போதிலும், அவை தேச விடுதலைப் போருக்கு எதிரானவையாகவே இருந்தன என்பது சரித்திரபூர்வமான உண்மையாகும்” என்றும் ம.பொ.சி. குறித்திருக்கிறார். 

மூவகைத் துரோகம் 

1916 - ஆம் ஆண்டு முதல், இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையில் ஜஸ்டிஸ் கட்சி இந்திய விடுதலையைக் கூச்சம் இல்லாமல் எதிர்த்தது. அந்தக் கட்சி மூன்று வகைகளில் இந்திய சுதந்திர இயக்கத்தை எதிர்த்து தேசத் துரோகம் செய்தது. 

முதலாவதாக, இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படக் கூடாது என்று ஜஸ்டிஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. 

இரண்டாவதாக, இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய விடுதலை இயக்கமாம் காங்கிரஸ் மகா சபையை ஐஸ்டிஸ் கட்சி எதிர்த்து, அதற்குப் பலவிதமான தொல்லைகளை உண்டாக்கியது. 

மூன்றாவதாக, இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் ஜஸ்டிஸ் கட்சி சேர்ந்து கொண்டு, பிரிட்டிஷ் அரசினரின் அடக்குமுறை கொடுமைகள் அனைத்திற்கும் தயக்கம் இல்லாமல், முழு விருப்பத்துடன் ஆதரவு தந்தது. 

இதுதான் ஜஸ்டிஸ் கட்சியின் உண்மையான ‘வரலாறு’ என்று முதுபெரும் தேசியத் தலைவர் எம்.பக்தவத்ஸலம் வருத்தத்துடன் பொருத்தமாகவே விவரித்தார். அந்தச் செய்தி அடுத்த இதழில். 

ஆதார நூல்: சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் எழுதிய ‘விடுதலைப் போரில் தமிழகம்’; இரண்டு தொகுதிகள். 

வெளியிட்டோர்: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,சென்னை - 600 004. 

முதற் பதிப்பு: 1982. விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்கு பற்றிய ஓர் ஒப்பற்ற ஆவணம் இந்த ஆய்வு நூல்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2

 
தலித்துகளைப் புறக்கணித்த ஐஸ்டிஸ் கட்சி
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 2

தமிழகத்தின் ஒரு சிறந்த தேசியத் தலைவரான எம். பக்தவத்ஸலம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் அவர் பணிபுரிந்தார். வாழ்க்கையில் எளிமை, ஆட்சியில் தூய்மை, நிர்வாகத்தில் நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இலக்கணம் வகுத்தவராக அவர் வாழ்ந்தார்.

எம்.பக்தவத்ஸலம்

ஜஸ்டிஸ் கட்சி ஒரு தேசத் துரோக அமைப்பே என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

“சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பிராமண ஆதிக்கம் இருந்ததாகவும், அதை எதிர்ப்பதே தனது குறிக்கோள் என்றும் ஜஸ்டிஸ் கட்சி கூறிக் கொண்டது. பிராமணரல்லாதாரில் பலர் நன்கு படிக்காததால்தான், சமுதாயத்தில் முன்னணி நிலைக்கு வர முடியவில்லை என்ற உண்மையை மறந்த நிலையில் தொடங்கிய அந்த பிராமண எதிர்ப்பு, இந்தியாவுக்குச் சுதந்திரமே வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் பிற்போக்குத் தன்மையில் அழுந்தி விட்டது” என்று ஒரு பேட்டியில் பக்தவத்ஸலம் கூறினார்.

“ஜஸ்டிஸ் கட்சியின் பிறப்புக்கு எது காரணமாக இருந்த போதிலும், அது சுதந்திர இயக்கத்தையே எதிர்த்து, வெள்ளையருடன் குலவிக் கொண்டு அவர்கள் அளித்த பதவிகளிலே ஒட்டிக் கொண்ட, பச்சைத் தேசத் துரோக அமைப்பாக ஆகிவிட்டது” என்று அவர் தெரிவித்தார்.

“மக்கள் ஆதரவு இல்லாத – சுதந்திரமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாறு, வெகு சீக்கிரத்தில் முடிவடைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை. பழைய ஜஸ்டிஸ் கட்சியே பிறகு திராவிடர் கழகமாக மாறி, இன்று திராவிட முன்னேற்றக் கழகமாகக் காட்சி தருகிறது” என்றும் பக்தவத்ஸலம் குறிப்பிட்டார்.

அடக்குமுறைக் கொடுமை

ரௌலட் சட்ட எதிர்ப்பு (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்புக் கிளர்ச்சி (1919), ஒத்துழையாமை இயக்கம் (1920), பிரிட்டிஷ் அரசு பரம்பரையின் கன்னாட் கோமகன் இந்திய வருகை பகிஷ்கரிப்புப் போராட்டம் (1921), வேல்ஸ் இளவரசர் வருகை பகிஷ்கரிப்புக் கிளர்ச்சி (1921), நாகபுரி கொடிப்போர் (1923), வைக்கம் சத்தியாக்கிரகம் (1924), நீலன் சிலையை அகற்றக்கோரி நடந்த வீரப்போராட்டம் (1927), சைமன் கமிஷன் எதிர்ப்புக் கிளர்ச்சி (1928), ஈடு இணையற்ற உப்புச் சத்தியாக்கிரகம் (1930), பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வெள்ளி விழாக் கொண்டாட்ட பகிஷ்கரிப்பு (1934), தனி நபர் சத்தியாக்கிரகம் (1940), ஆகஸ்ட் இயக்கம் (1942) ஆகிய விடுதலைப் போரின் கிளர்ச்சிகளையும், சத்தியாக் கிரகங்களையும் ஜஸ்டிஸ் கட்சியினர் எதிர்த்து ரகளை செய்தார்கள். அவற்றுக்குப் பல வகைகளிலும் இடையூறுகளை விளைவித்தார்கள்.

அந்தக் கிளர்ச்சிகள், சத்தியாக்கிரகங்கள் பல ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியின்போது நடந்தன. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பல அடக்குமுறைக் கொடுமைகளைச் செய்தார்கள்; தலைவர்களையும், தொண்டர்களையும் சிறைகளிலே அடைத்தார்கள்; சிறைகளில் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

அந்நாட்களில் கள், சாராயக் கடைகள் நாடு முழுவதும் இயங்கின. அவற்றில் பெரும்பாலானவற்றை ஜஸ்டிஸ் கட்சியினரும், அவர்களது ஆதரவைப் பெற்ற குண்டர்களும் நடத்தினார்கள். காங்கிரஸின் நிர்மாணத் திட்டங்களிலே ஒன்று மதுவிலக்கு. மகாத்மா காந்தி விரும்பிய வண்ணம் தேசம் முழுவதும் கள், சாராயக் கடைகள் முன்பாக அன்றைய காங்கிரஸார் மதுவிலக்குப் பிரச்சார மறியல் செய்தார்கள். பெண்களும் அந்தப் பணியில் கலந்து கொண்டார்கள்.

கள், சாராயக் கடைகள் முன்பாக மறியல் செய்த ஆண்களையும் பெண்களையும், ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவு பெற்ற குண்டர்கள் கடுமையாகத் தாக்கினார்கள்; பெண்களை மானபங்கம் செய்ய முயன்றார்கள். காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இந்த அட்டூழியங்கள் அரங்கேறின.

கம்யூனல் ஜி.ஓ.

காந்தியடிகள், ராஜன்பாபு, நேருஜி முதலிய விடுதலை இயக்கத் தலைவர்கள் சென்னை மாகாணத்திற்கு வந்தபோது, அவர்களை எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை ஜஸ்டிஸ் கட்சி நடத்தியது என்ற செய்தியைப் பல சான்றுகளுடன் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் விவரித்திருக்கிறார். சுருக்கமாகச் சொல்லுவதானால், அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக என்னென்ன கொடுமைகளைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்களோ, அந்தந்தக் கொடுமைகளையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியும், அதன் ஆட்சியும் செய்தன என்பது வரலாறு.

ம.பொ.சி.

அன்றைய சென்னை மாகாணத்தில் 1920-ஆம் ஆண்டு முதல் 1934- ஆம் ஆண்டு வரை ஜஸ்டிஸ் கட்சியானது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பரிபூர்ணமான ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது. அத்தகைய சாதகமான சூழ்நிலையையும், வாய்ப்பையும் பெற்றிருந்த ஜஸ் டிஸ் கட்சியின் ஆட்சி, மக்களின் நலனுக்காகச் சாதனைகளைச் செய்ததா? என்னென்ன சாதனைகளைச் செய்தது?

பிராமணரல்லாதாரின் நலன்களைப் பாதுகாப்பதே தனது தலையாய பணி என்றும், அதற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கையைச் செயல்படுத்தப் போவதாகவும் ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பத்தில் மிகுந்த ஆடம்பரத்துடன் அறிவித்திருந்தது. எனினும், அக்கொள்கையைச் செயல்படுத்த அவசியமான ‘கம்யூனல் ஜி.ஓ.’வை ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி பிறப்பிக்கவில்லை.

காங்கிரஸார் அடங்கிய சுயராஜ்யக் கட்சியின் ஆதரவைப் பெற்று இயங்கிய டாக்டர் பி.சுப்பராயன் தலைமையிலான சுயேச்சை அமைச்சரவைதான், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குச் சட்டப்படியான உத்தரவாதத்தை ஏற்படுத்தியது. ஆம், கம்யூனல் ஜி.ஓ. பிறந்தது டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான். சேதுரத்தினம் ஐயர் என்ற பிராமணரையும் அமைச்சராகக் கொண்டிருந்த அமைச்சரவைதான் இதைச் சாதித்தது என்று ம.பொ.சிவஞானம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்.

1937-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைத் தொடர்ந்து அமல் செய்தது என்றும், அதற்குக் காங்கிரஸ் அரசு எத்தகைய எதிர்ப்பும் காட்டவில்லையென்றும் ம.பொ.சி. நினைவூட்டி இருக்கிறார்.

ஆக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை பற்றி வாய் கிழியப் பேசியது ஜஸ்டிஸ் கட்சி. அதைச் செயல்படுத்தியது காங்கிரஸார் ஆதரவு பெற்ற அரசே என்பதைக் கவனத்தில் கொள்க.

தலித் புறக்கணிப்பு

ஏறக்குறைய பதினாறு ஆண்டு காலம் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதன் அமைச்சரவைகளில் ஒன்றில் கூட, இன்றைய தினம் தலித் என்று அழைக்கப்படும் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நடந்த முதலாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருந்த பின்னரும், அது வற்புறுத்திய வாக்குறுதியை அளிக்க கவர்னர் தயங்கியதால், இடைக்காலத்தில் ஒரு பினாமி மந்திரி சபை கே.வி.ரெட்டி நாயுடு என்பவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அது மூன்று மாதங்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்தது. அந்த மந்திரி சபையில்தான் முதன் முதலில் ஒரு தலித், மாகாண கவர்னரின் தயவால் அமைச்சராக இடம் பெற்றார்.

பின்னர் முறைப்படி ராஜாஜியின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரி சபையில் வி.ஐ. முனிசாமி பிள்ளை என்ற ஹரிஜன சகோதரர் மந்திரியாக இடம் பெற்றார். அந்த நியமனம் மிகப் பெரிய சமுதாயப் புரட்சியாகக் கருதப்பட்டது என்றும் ம.பொ.சி. விவரங்களுடன் தெரிவித்திருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபைகளில் முஸ்லிம்களுக்கும் பிரதி நிதித்துவம் அளிக்கப்படவில்லை. ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில்தான் யாகூப்ஹாசன் என்ற முஸ்லிம் இடம் பெற்றார். அந்த நியமனம், அப்போது நிகழ்ந்த அதிசயங்களில் ஒன்றாகும் என்று ம.பொ.சி. வியந்து குறிப்பிட்டிருக்கிறார்.

தலித் மக்கள் புறக்கணிப்பு, முஸ்லிம்கள் புறக்கணிப்பு ஆகியவற்றையே ஜஸ்டிஸ் கட்சி அரசுகளின் ‘சாதனைகளாக’க் குறிப்பிடலாம்.

இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். தேச பக்திக் கனலை மூட்டிப் பல ஆயிரம் மக்களை விடுதலைப் போரில் கலக்க வைத்து, வீரமிகு தியாகங்களைப் புரிய வைத்தவை மகாகவி பாரதியாரின் ஒப்பற்ற பாடல்கள். அந்தப் பாடல்களுக்கு, ஆங்கிலேய எஜமானர்களின் ஆணைப்படி தடை விதித்து, நீங்காத பழியைத் தேடிக் கொண்டது ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி.

வாழ்வு முடிந்தது

அன்றைய காங்கிரஸ் மகாசபை, முதன் முறையாக 1936-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அநேகமாக அத்துடன் அதன் வாழ்வு முடிவடைந்தது என்று சொல்லலாம். அக்கட்சியில் இருந்தவர்களில் பலரே அதைக் குறை கூற ஆரம்பித்தார்கள்; பலர் வெளியேறிக் காங்கிரஸில் சேர மனுப் போடத் தொடங்கினார்கள்.

ஈ.வெ.ரா., தமது பொதுவாழ்வில் ஒரு திருப்பு முனையைச் சந்திக்க முயன்று கொண்டிருந்தார்.

“ஈ.வெ.ரா விரும்பியது சமுதாயச் சீர்திருத்தம் அன்று; இந்தியா சுதந்திரம் பெறக் கூடாது என்பதே அவரது விருப்பம்” என்று இளைஞராக இருந்தபோதே துணிவுடன் அம்பலப்படுத்தியவர் தோழர் ப.ஜீவானந்தம். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்: எம்.பக்தவத்ஸலம் – எனது நினைவுகள் (சுயசரிதம்)
வெளியிட்டோர் – ஜனநாயக சேவா சங்கம், 11, வீரப்பெருமாள் முதலித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5, 1972. ம.பொ. சிவஞானம் – விடுதலை போரில் தமிழகம் – இரண்டு தொகுதிகள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3

 
சுய மரியாதையற்ற கூட்டம் – கே.சி.லட்சுமி நாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 3

1919 – ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர்ந்தார். 1923 – ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் மகாசபையின் கொள்கைகளான கதர்த் திட்டம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், அனைவருக்கும் சம உரிமைகள் முதலியவற்றை ஆதரித்து ஈ.வெ.ரா. தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

07.jpg

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் ஈ.வெ.ரா. சேர்ந்த மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவி அவருக்கு அளிக்கப் பெற்றது. காங்கிரஸில் ஓர் உயர்ந்த அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது.

ஈ.வெ.ரா.வுக்கு அந்தப் பெருமைகள் கிடைக்குமாறு செய்தவர் ராஜாஜியே! இந்த உண்மையைப் பல வருடங்களுக்குப் பின்னர் ஈ.வெ.ரா.வே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

“என்னை ராஜாஜி அவர்கள்தான் முதலில் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு, அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கினார். என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, என்னையே அவர், ‘நமது தலைவர் நாயக்கர்’ என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகு பேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படி செய்தார்” என்று ஈ.வெ.ரா. ‘விடுதலை’ நாளிதழின் தலையங்கத்தில் (26.12.1972) எழுதியிருந்தார். அந்தத் தலையங்கம், ராஜாஜி அவர்கள் மறைந்த போது ஈ.வெ.ரா. எழுதியது ஆகும்.

இவ்வாறு ஈ.வெ.ரா.வே ஒப்புக் கொண்டுள்ளபடி, அவருக்கு மரியாதையையும், உயர்நிலையையும் அளித்த விடுதலை இயக்கமான காங்கிரஸ் மகாசபை பற்றிய அவரது நிலை, துரதிருஷ்டவசமாக 1924– ஆம் வருட ஆரம்பத்திலிருந்து மாற ஆரம்பித்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சியினரின் வலையில் அவர் விழுந்து விட்டார்.

ஈ.வெ.ரா. கூறிய சமூகச் சீர்திருத்தங்களைக் காங்கிரஸ் அலட்சியப்படுத்தியதால், அவர் வெளியேறினார் என்று சொல்ல முடியாது. உண்மையில் விடுதலை இயக்கக் கால காங்கிரஸ், சமூகச் சீர்திருத்தங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தது. 
தீண்டாமை ஒழிப்பு, இளம் விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயங்களில் ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடும் கொடுமைக்கு எதிர்ப்பு என்று பல சமுதாயச் சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. எனவே, ஈ.வெ.ரா. காங்கிரஸில் இருந்து கொண்டே சீர்திருத்தப் பிரச்சாரம் செய்திருக்கலாம்.

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் கடவுள் நம்பிக்கையற்ற சிலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். நேருஜி ஒரு நாத்திகர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டே காங்கிரஸில் தொடர்ந்து ஈ.வெ.ரா. பணி புரிந்திருக்கலாம். எனினும், பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய எந்தவிதமான காரணமும் இல்லாமல், காங்கிரஸிலிருந்து ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார்!

ஈரோடு சுயமரியாதை மாநாடு

ஈ.வெ.ரா. காங்கிரஸிலிருந்து வெளியேறியதும், ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார்.

‘சுயமரியாதை இயக்கம்’ என்ற ஓர் அமைப்பையும் அவர் ஆரம்பித்தார். கடவுள் மறுப்புக் கொள்கைக்கு ஆதரவாக அந்த இயக்கத்தை அவர் நடத்தினார். ‘சுயமரியாதை உள்ள எவனும் எதற்காக மற்றவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்’ என்று அவர் கேட்டார்.

சுயமரியாதை என்ற சொற்கள் ஓரளவு கவர்ச்சிகரமாக இருந்தன. ஈ.வெ.ரா.வை ஆசிரியராகக் கொண்டிருந்த ‘குடியரசு’ என்ற பத்திரிகை, சுயமரியாதைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தது.

நாடு முழுவதும் உப்புச் சத்தியாகிரக இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1931– ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஈரோடு நகரில் சுயமரியாதை மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை ஈ.வெ.ரா. நடத்தினார். 



அந்த மாநாட்டிலும், பின்னர் நடந்த தேசிய சுயமரியாதை மாநாட்டிலும் முக்கியமான பங்கு வகித்த கோவை அ.அய்யாமுத்து, தமது வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த இரண்டு மாநாடுகள் சம்பந்தமாகவும், பல விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

அய்யாமுத்து சுதந்திரப் போராட்டத்தில் தமது மனைவியுடன் கலந்து கொண்டு சிறை சென்றவர். “கதர் இயக்கத்தில் அய்யாமுத்துவுக்கு இணையாகப் பணி செய்தவர்கள் யாருமே இல்லை. அவரது பணி ஒப்பற்ற ஒன்று” என்று மகாத்மா காந்தி அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இனி, ஈரோடு சுயமரியாதை மாநாடு பற்றி விவரிப்பேன்.

ஈரோடு சுயமரியாதை மாநாட்டில், ‘சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்திய ஒரு தீர்மானத்தை, ப.ஜீவானந்தம் என்ற இளைஞர் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். “சுதந்திரம் இல்லாத அடிமை நாட்டில் மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது. எனவே, இந்தியாவுக்கு முதலில் சுதந்திரம் வந்தாக வேண்டும். ஆங்கிலேயரின் ஆதிக்க ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்று ஜீவானந்தம் குறிப்பிட்டபோது, மாநாட்டில் பலத்த கைதட்டல் எழுந்தது.

ஜீவானந்தத்தின் தீர்மானத்தைக் கண்டு ஈ.வெ.ரா. கதிகலங்கிக் போய் விட்டார். அவரை எதிர்ப்பதற்குக் கோவை அய்யாமுத்துவை ஈ.வெ.ரா. பயன்படுத்திக் கொண்டார். ஈ.வெ.ரா செய்த சூழ்ச்சியின் விளைவாக ஜீவானந்தத்தின் தீர்மானம் தோல்வி கண்டது.

“தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருந்த சகோதரர்களுக்குப் பொதுக் குளங்களிலும், கிணறுகளிலும் நீர் எடுக்க உரிமை இல்லை. அந்த உரிமைக்காக நாம் முதலில் போராடுவோம்; பிறகு உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் கலந்து கொள்வோம்” என்று அறிவித்த அய்யாமுத்துவின் சமரசத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுயமரியாதைச் சத்தியாகிரக கமிட்டி ஒன்றை நியமித்து, அந்தக் கமிட்டியார் சில கோவில்களையும் குளங்களையும் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் ஹரிஜன மக்கள் பிரவேசிப்பதற்காகப் போராட்டம் நடத்துவது என்றும், முடிவை முப்பது நாட்கள் காலவரையறைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை அய்யாமுத்து எழுதிக் கொடுத்தார். ஈரோடு மாநாட்டில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அளவில் ஈரோடு மாநாடு முடிந்தது. 



தேசிய சுயமரியாதை மாநாடு

06.jpg

ஈரோடு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி ஈ.வெ.ரா. செயல்படவில்லை. எனவே, ப.ஜீவானந்தமும், கோவை அய்யாமுத்துவும் சேர்ந்து கோவை மாநகரில் ‘தேசிய சுயமரியாதை மாநாடு’ என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கம் செயல்பட்டதை, அந்த மாநாட்டில் பேசிய எல்லோரும் எதிர்த்தார்கள்.

உப்புச் சத்தியாகிரகத்தில் சுய மரியாதை இயக்கத்தினர் பங்கு பெற வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தையும், ஆலயங்களிலும் பொதுக் குளங்களிலும், பொதுக் கிணறுகளிலும் ஹரிஜன மக்களுக்கு அனுமதி தர வேண்டும் என்பதற்காகப் போராட்டம் நடத்துவது என்று, ஈரோடு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானித்து விட்டு, பொறுப்பற்ற முறையில் மேல்நாட்டுக்குக் கப்பலேறிச் சென்றுவிட்ட ஈ.வெ.ரா.வின் கொள்கையைக் கண்டிப்பதாக மற்றொரு தீர்மானத்தையும், கோவை தேசிய சுயமரியாதை மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது.

அந்த மாநாட்டில், தீர்மானங்களின் மீது பேசியபோதுதான், ஈ.வெ.ரா.வுக்கு மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் கிடையாது என்றும், இந்தியா சுதந்திரம் அடையக் கூடாது என்பதுதான் அவரது விருப்பம் என்றும் ஜீவானந்தம் முழக்கமிட்டார்.

கோவை தேசிய சுயமரியாதை மாநாடு முடிந்த பிறகு, அய்யாமுத்துவும், ஜீவானந்தமும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகி, காங்கிரஸ் மகாசபை நடத்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்கள்.

ஜீவானந்தம் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர்; கொள்கைப் பற்று மிகுந்தவர். விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்ட அவர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். அவர் இறுதிக் காலம் வரையில் தனி வாழ்வில் எளிமை பேணியவராக – தியாக சீலராக வாழ்ந்தார்.

கோவை தேசிய சுயமரியாதை மாநாட்டின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்திய சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும் வன்முறை வழிகளைப் பின்பற்றின. விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பணிபுரிந்த இளைஞர் காமராஜைப் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அடுத்த இதழில் விவரங்கள்!


ஆதார நூல்: எனது நினைவுகள் (சுயசரித்திரம்) 962 பக்கங்கள்.
எழுதியவர் கோவை அ.அய்யாமுத்து,
வெளியிட்டோர் – வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை –17. (1973).
 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4

 
“காமராஜைக் கொல்ல முயற்சி!” – கே.சி.லட்சுமி நாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4

ஜீவானந்தம், அய்யாமுத்து போன்ற சிந்திக்கத் தெரிந்தவர்கள் வெளியேறி விட்ட பிறகு, ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும், விடுதலைப் போர் வீரர்களுக்கு எதிராக வன்முறை வழிகளை ஆவேசத்துடன் பின்பற்றின.

கூட்டங்களில் கலகம் செய்வது, கற்களை வீசி எறிவது, பாம்புகளை விடுவது, கறுப்புக் கொடிகளைக் காட்டுவது, சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தடி கொண்டு தாக்குவது, ஆபாசச் சொற்களில் ஏசுவது... போன்ற வன்முறைக் காரியங்களை அவர்கள் செய்தார்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பரிபூரணமான தூண்டுதலும், ஆதரவும் அவர்களுக்கு இருந்தன.

“விடுதலைப் போர் வீரர்கள் வன்முறைக்கு ஆளானால் திருப்பித் தாக்கக் கூடாது” என்ற மகாத்மா காந்தியின் கட்டளை அப்படியே பின்பற்றப்பட்டது. இன்றைய தினம் இதை நம்புவது கடினம். ஆனால், இவ்வாறுதான் விடுதலைப் போர் வீரர்கள், அஹிம்சை நெறி பிறழாமல் ஒவ்வொரு சத்தியாக்கிரகத்தின் போதும் நடந்து கொண்டார்கள் என்பது வரலாறு.

ஜஸ்டிஸ் கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் விடுதலைப் போர் வீரர்களை எதிர்த்துப் பல நூறு வன்முறை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள். இவற்றில் பலவற்றை ம.பொ.சி.யின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற ஆய்வு நூல் பட்டியல் இட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்காகப் போராடிய பல காங்கிரஸ் தலைவர்கள், தமிழகத்திற்கு அவ்வப்போது இயக்கப் பணிகளை ஒட்டி வந்தார்கள். அவ்வாறு வந்த மகாத்மா காந்தி, நேருஜி, பாபு ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆஸாத்.... போன்ற தலைவர்களை ஜஸ்டிஸ் கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். தேசியத் தலைவர்கள் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.

பட்டுக்கோட்டை நிகழ்ச்சி 
ந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் மகாசபையின் பொன்விழா நிகழ்ச்சி 1934– ஆம் ஆண்டில் நடந்தது. அந்த ஆண்டில் கட்சியின் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் விளங்கினார். அவர் விடுதலைப் போரில் பலமுறை சிறை சென்ற தீரர். அவர் காந்தியடிகளை முழுக்க முழுக்கப் பின்பற்றியவர்; அஹிம்சையின் வடிவமாகத் திகழ்ந்தவர்; தமது பெரும் செல்வத்தை அழித்து விடுதலை இயக்கத்தை வளர்த்தவர்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற மிக உயர்ந்த பொறுப்பை வகித்தார். அவர் 1934– ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சுற்றுப் பயண ஏற்பாடுகளை சர்தார் வேதரத்தினம் பிள்ளை செய்திருந்தார்.

பாபு ராஜேந்திர பிரசாத் பட்டுக்கோட்டை நகருக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நாட்களில் பட்டுக்கோட்டை நகரில் சுயமரியாதை இயக்கத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் வலிமையாக இருந்தார்கள். பாபு ராஜேந்திர பிரசாத்தும், வேதரத்தினம் பிள்ளையும் கண்ணியமற்ற ஒரு கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்கள்.

“கூட்டத்தினர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராக ஒரு பெரிய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சாந்த சொரூபியான அவருடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தனர். கறுப்புக் கொடி ஏந்தியவர்கள் அவரைக் குச்சியால் குத்தினர்” என்று ‘சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூல்’ வேதனையுடன் தெரிவிக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தை ராஜாஜி நடத்தியபோது, அவருக்கு வலதுகரமாக விளங்கியவர் வேதரத்தினம் பிள்ளை என்பதையும், பின்னர் அவருக்கு ‘சர்தார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது என்பதையும் இங்கே குறிப்பிடலாம்.

ஒழிக்க முயற்சி

காமராஜ் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றியவர். அவர் மிக இளம் வயதில் விடுதலை வேட்கை கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். கட்சிப் பணிகளை நன்கு ஒருங்கிணைத்துப் பணிபுரிவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர் என்று பலரும் காமராஜைப் பாராட்டிப் பேசலானார்கள். ஜஸ்டிஸ் கட்சியினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். 



29.jpg

காமராஜை தீர்த்துக் கட்ட நடந்த ஒரு கொடிய முயற்சியை, விடுதலைப் போராட்ட வீரரும், தமது குடும்பச் சொத்தை அழித்துத் தேசிய இயக்கத்தை வளர்த்தவரும், சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் வாழ்க்கை வரலாற்று நூல் விவரிக்கிறது. அதனைப் படியுங்கள்:–

“ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள். மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

“முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். வண்டியை விரைவாக ஓட்டினார்கள். ‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார். மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார். விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.”

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்” தெரிவிக்கிறது.
(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

கொல்ல முயற்சி

1935– ஆம் வருட டெல்லி சட்டசபைத் தேர்தலிலும், 1936–ஆம் வருடச் சென்னை மாகாணச் சட்டசபைத் தேர்தலிலும் விடுதலை இயக்கமான காங்கிரஸ் மகாசபை வேட்பாளர்களை ஆதரித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

“அதனால் கோபம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியினர், ம.பொ.சி.யை வீடு புகுந்து தாக்கிக் கொலை செய்ய முயன்றனர்.”
‘கொலை செய்ய முயற்சி’ என்ற துணைத் தலைப்பில், இந்த முயற்சி குறித்து ம.பொ.சி.யே, ‘எனது போராட்டம்’ என்ற அவரது நூலில் எழுதியிருக்கிறார்.

அந்த நூல் அவர் தி.மு.க.வினருடன் உறவு கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது ஆகும்!

சுயமரியாதை இயக்கம் தொடர்பாக ஈ.வெ.ரா. தன் விருப்பப்படி காரியங்கள் நடத்திக் கொண்டிருந்தார். அதனை விரும்பாத சௌந்தர பாண்டியனும், அவரது சில தோழர்களும் சுயமரியாதைச் சங்கத்தைப் பதிவு செய்தார்கள். ‘ரிஜிஸ்டர்ட் சுயமரியாதை சங்கம்’ என்று அது அழைக்கப்பட்டது.

‘சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டது இல்லை’ என்று பி.டி.ராஜன் பகிரங்கமாகக் கூறினார். 1931– ஆம் ஆண்டில் சேலம் நகரில் சுயமரியாதைச் சங்கக் கூட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்துப் பேசினார். அவரது பேச்சு ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ இதழில் வெளியாயிற்று.

அப்போது அவர், “சுயமரியாதை இயக்கம் நாத்திக இயக்கம் இல்லை” என்று பிரடகனம் செய்தார்.

ஏற்கெனவே, ஜஸ்டிஸ் கட்சியில் மிகவும் கணிசமான ஒரு பிரிவினர், ஈ.வெ.ரா.வின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்க மறுத்தார்கள். ஈ.வெ.ரா.வுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் இடையே ஒரு முக்கியமான கருத்து வேறுபாடாக அது காணப்பட்டது.

பின்னர், சுயமரியாதை இயக்கத்திலும் இந்தப் பிரச்சனை கடுமையாக எழுந்தது. பி.டி.ராஜன் தீவிரமான ஆத்திகராகவே விளங்கினார். அந்நாட்களில் தமிழகத்தில் ஐயப்பன் வழிபாடு ஓர் இயக்கமாக அமைந்ததற்கு பி.டி.ராஜனின் பங்கே மிகவும் கணிசமானது என்று சொல்லுவார்கள். அவரது புதல்வர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் நெற்றியில் திருநீறு, குங்குமத்துடன்தான் எப்போதும் காணப்படுவார். 

“இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கினாலும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டனின் அடிமை நாடாக வைத்திருக்க வேண்டும்” என்று கெஞ்சிய ஒரு தீர்மானத்தைத் திருவாரூரில் கூடி ஈ.வெ.ரா. நிறைவேற்றினார்! விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தியாகத் திருமகனார் பி.எஸ்.கே. (பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாறு) எழுதியவர்: ‘எழுத்துச் செம்மல்’ குன்றக் குடி பெரிய பெருமாள். வெளியிட்டோர்: அமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழாக் குழு, இராஜபாளையம் (1999).

2. மறைக்காட்டில் ஒரு மாணிக்கம் (சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாழ்க்கை வரலாறு) வெளியிட்டோர்: கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீட்டுப் பகுதி, வேதாரண்யம் (1986).

3. எனது போராட்டம் (1007 பக்கங்கள்) எழுதியவர்: ம.பொ.சிவஞானம், வெளியிட்டோர்: இன்ப நிலையம், மயிலாப்பூர், சென்னை -4 (1974). 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

 
அடிமை நிலையை நீட்டிக்கக் கெஞ்சினார்! – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

ன்றைய சென்னை மாகாணச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு, ஈ.வெ.ரா. அந்தக் கட்சியின் நிலையிலிருந்து சிறிது சிறிதாக மாறுபடத் தொடங்கினார். கருத்து வேற்றுமைகள் குறித்து அவர் பகிரங்கமாகவே பேச ஆரம்பித்தார்.

1940– ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 18 – ஆம் தேதியன்று சென்னையில் டாக்டர் சி.நடேச முதலியார் நினைவுக் கூட்டத்தில், ஈ.வெ.ரா. நிகழ்த்திய உரையில் ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளேன்.

“கட்சிக்கு (ஜஸ்டிக் கட்சிக்கு) பணம் கிடையாது. ஏனெனில் முன்பு ஒரு காலத்தில் நம்மைச் சார்ந்திருந்த பணக்காரர்கள் எல்லோரும் இன்று நம்முடன் உரையாட யோசனை செய்கிறார்கள். நமது கட்சிக்கு வந்தால் என்ன லாபம் உண்டு என்றும் கேட்கிறார்கள். மற்றும் சிலர் கட்சியை விட்டு ஓடிப்போனதுடன் இல்லாமல், கட்சியைத் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

“இன்றைய தினம் நமது (ஜஸ்டிஸ்) கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள அங்கத்தினர் காரணமாக ஏற்பட்டது அல்ல. அது நமது எதிரிகளுடைய (காங்கிரஸுடைய) குற்றம் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்ளது ஆகும்.

“இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டு கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வைப்பதாகச் சொல்லும் காங்கிரஸின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும்.

“தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 
“பிராமணரல்லாதவர் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும், நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றி அமைக்காவிட்டால், நம்மால் வெற்றி பெற முடியாது.

“.... தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன்வருவது இல்லை.

“.... கடந்த 20 வருடங்களாக வாழ்விலும், தாழ்விலும் நாம் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும், பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.

“.... தற்போதுள்ள கவர்னர், காங்கிரஸின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திருக்கிறது. இம்மாதிரியான படுமோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டது இல்லை.

ஆதரவு கிடையாது

“.... ஐரோப்பியர்கள் மட்டும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டு விடும். “தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால், மற்ற மாகாணங்களில் இந்த இயக்கத்துக்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது. டாக்டர் அம்பேத்கரும், இன்னும் சில நண்பர்களும் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சுக் கூட விடாதே என்று சொல்லி விட்டார்கள்.

“இந்தப் பொய்யான இந்திய தேசம், தேசியம், தேசிய லட்சியம் என்பதை எல்லாம் ஜனங்கள் விட்டு விட்டு, நமது திராவிட நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவார்களேயானால் நமது இலட்சியம் கை கூடும். 
“ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பல பிரமுகர்களுக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான இலட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை.”

– இவ்வாறு ஈ.வெ.ரா. பேசினார். ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்றும், திராவிட நாட்டின் விடுதலை என்ற இலட்சியம், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த உரையில் அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

அதே சமயத்தில், தமிழகத்தில் மட்டுமே திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்தது என்றும், மற்ற மாகாணங்களில் அந்த இயக்கத்திற்கு இம்மியளவு கூட ஆதரவு கிடையாது என்றும் ஈ.வெ.ரா. குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும்.

உண்மையில், ஈ.வெ.ரா. இந்த உரையை நிகழ்த்திய 1940– ஆம் ஆண்டில், தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை .

திராவிட என்ற சொல்

திராவிட, திராவிட நாடு, திராவிடர்கள் என்ற சொற்கள் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும், ஈ.வெ.ரா. குழுவினருக்கும் இடையே மோதல்களை உண்டாக்கின. ஆங்கிலேய அரசினர் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் புகுத்திய ‘திராவிட’ என்ற சொல்லை ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரும், அவர்களைச் சாந்தவர்களும் ஓர் அவசர ஆவேசத்துடன் வரவேற்றார்கள். தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும், வடக்கே உள்ள இந்தியர்கள் ஆரியர்கள் என்றும், காங்கிரஸ் மகா சபையின் விடுதலை இயக்கம் திராவிடர்கள் மீது ஆரியர்களின் ஆதிக்கத்தைத் திணிப்பதற்காக நடைபெற்றது என்றும், பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருத்தம் இல்லாத வகையில் அவர்கள் பேசவும் எழுதவும் தலைப்பட்டார்கள்.

‘திராவிட’ என்ற சொல்லை ஜஸ்டிஸ் கட்சியில் பலர் விரும்பவில்லை. 1941– ஆம் ஆண்டில் ‘திராவிட நாடு’ என்ற பெயரில் ஒரு வார இதழை அண்ணாதுரை ஆரம்பித்தார். ‘திராவிட’ என்ற பெயரை வைத்துக் கொண்டு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், வேறு ஒரு பெயரில் பத்திரிகையை நடத்துவதே நல்லது என்றும் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அண்ணாதுரைக்கு ஆலோசனை கூறினார். 
‘நாம் வாழும் நாடு திராவிட நாடு, நம் இனம் திராவிட இனம் என்ற உணர்ச்சியை அண்ணாதுரை ஊட்டிக் கொண்டு வந்தார். இந்தச் சமயத்தில் நீதிக் கட்சியின் (ஜஸ்டிஸ் கட்சியின்) தலைவர்கள், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டனர்’ என்று ‘தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல் (1953), ஜஸ்டிஸ் கட்சியினருக்குப் பதில் அளிக்கும் வகையில் தெரிவித்தது.

திருவாரூர் தீர்மானம்

மேலே தரப்பட்டுள்ள ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவு நிகழ்த்தப் பெற்ற ஆண்டு 1940 என்பதை மீண்டும் ஒரு முறை கவனிப்போம்.

இரண்டாம் உலக யுத்தம் 1939– ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. யுத்தம் சம்பந்தமாக காங்கிரஸ் மகாசபை விதித்த நிபந்தனைகளை அன்றைய பிரிட்டிஷ் அரசு ஏற்க மறுத்தது. உடனே மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் அனைத்தும், பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மகாசபை தீர்மானித்தது. அந்த ஆணையை ஏற்று 1939 அக்டோபர் 28 – ஆம் தேதியன்று சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான மந்திரி சபை ராஜினாமா செய்தது.

ஒருபுறம் இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது; மற்றொரு புறம் மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் பதவி விலகி விட்டன; இன்னொரு புறம் காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் பெரியதொரு போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்று ஈ.வெ.ரா. பேச ஆரம்பித்தார்.

4.8.1940 அன்று திருவாரூர் நகரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் பதினைந்தாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானம் கீழே தரப்படுகிறது.

“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.” 
(‘நமது குறிக்கோள்’ – ‘விடுதலை’ வெளியீடு; 1948, பக்.34.)

இந்தத் தீர்மானம் தனிநாடு கோரவில்லை. பிரிட்டிஷ் இந்தியா மந்திரியின் நேர்ப் பார்வைக்குக் கீழ்ப்பட்ட ஒரு பகுதியாகச் சென்னை மாகாணம் அமைய வேண்டும் என்றுதான் இந்தத் தீர்மானம் வேண்டியது.

அதாவது, அண்டையில் உள்ள வட இந்தியாவிலிருந்து பிரிந்து, 6000 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரிட்டனுக்கு அடிமைப்பட்ட நிலையில் ‘தனிநாடு’ வேண்டும் என்றுதான் ஈ.வெ.ரா.வைத் தலைவராகக் கொண்டவர்கள் கேட்டார்கள்!

ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை அடியோடு மாற்ற, ஈ.வெ.ரா. தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்தார்கள். விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை - எழுதியவர் - கலைச்செல்வன்.
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 
2. விடுதலைப் போரில் தமிழகம் - (இரண்டு தொகுதிகள்) எழுதியவர் ம.பொ.சி.
இது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல் ஆகும். 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஐஸ்டிஸ் கட்சி – ஈ.வெ.ரா. மோதல்! – கே.சி.லட்சுமிநாரயணன் 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 6

ஸ்டிஸ் கட்சியினருடன் கடுமையாக மோதுவதற்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை தரப்பினர் முற்றிலும் தயாராகி விட்டனர் என்பதைச் சேலம் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் விவாதிப்பதற்காக, அண்ணாதுரை தயாரித்து அனுப்பிய ஒரு தீர்மானம் தெளிவாக்கியது.

laxman_04_08_2011_02.jpg

“நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும், நமது கட்சியின் பெயரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்து வரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக் கொண்டு போகப்பட்டு விட்டோம்” என்ற பீடிகையுடன், அண்ணாதுரையின் தீர்மானம் தொடங்கியது.

அந்தத் தீர்மானத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

“நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி, சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவி செய்து வந்ததும், குறிப்பாக சென்ற ஐந்தாண்டுக் காலமாக நடந்து வரும் உலகயுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு வரும்படியான நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெரும் கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரச்சாரம் முதலியவை நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.

“இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

“இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூடச் சேர்த்துப் பேசுவதற்கு இல்லாததாக அலட்சியப் படுத்தப்பட்டது. 
“மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல் மந்திரியினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பல தடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட, கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டு இருக்கிறது.

“ஆகவே இப்படிப்பட்ட நிலைமை மாறி, நம் கட்சி நிலை மதிக்கப்படவும், குறிப்பிடவும், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு, நாணயமாகவும், தீவிரமாகவும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும், நல்ல வசதியும் சௌகரியமும் ஏற்படுவதற்கும் நம் கட்சிக்கு அடியில் கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமுமான காரியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

பதவிகளைக் கைவிடுக! 

“அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

“ஆ. அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காரிலோ, மாகாண சர்க்காரிலோ, எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அவைகளையெல்லாம் உடனடியாக ராஜினாமா செய்துவிட வேண்டியது.

“இ. தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்து போர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர், அங்கத்தினர் ஆகிய பதவிகளில், சர்க்காரால் நியமனம் பெற்ற அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள் யாவரும், தங்கள் பதவிகளை உடனே ராஜினாமா செய்து விட வேண்டியது.

ஈ. சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத்தினர்கள் வேட்பாளர்களாக நிற்கக் கூடாது.“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும், தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டம் இல்லை என்று கருதி, கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் ஆவர். 


“கட்சியின் வேலைத் திட்டத்திலும், போக்கிலும் புது முறுக்குத் தரும் நோக்கத்துடன் நான் மேற்கண்ட தீர்மானத்தைச் சேலம் மாநாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.” 

பிறர் சிரிக்கும் நிலை 

மது தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்பதையும், அண்ணாதுரை எழுதித் தீர்மானத்துடன் அனுப்பியிருந்தார். 

“சர்க்காருக்கு ஒத்து ஊதும் கூட்டம் என்று சதா காலமும் விஷயம் அறியா மக்கள் ஒருபுறம் தூற்றுவதையும்; அடித்தாலும் அழத் தெரியாதவர்கள், மிக நல்லவர்கள் என்று ஆங்கில சர்க்கார் மற்றொரு புறம் தலையில் குட்டவும்; பட்டம் கிட்டுமா, பதவி கிட்டுமா என்று ஆரூடம் பார்ப்பதும்; துரைமார்களிடம் தூது போவதும் தவிர, ‘இதுகளுக்கு’ வேறு என்ன தெரியும் என்று காங்கிரஸார் பேசியும் வருவதைக் கேட்டுக் கேட்டு, உண்மையிலேயே கட்சியின் குறிக்கோளின்படி நடக்கக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உறுதி படைத்த வீரர்கள் ஒரு புறமும்; போர் கூடாது, கிளர்ச்சி ஆகாது, தீவிரம் கூடாது என்று கருதும் சீமான்கள் மற்றொரு புறமும் இருந்து கொண்டு, கட்சியை இப்பக்கம் இவரும், அப்பக்கம் அவரும் இழுக்க, இந்த வேடிக்கையைக் கண்டு பிறர் சிரிக்க இருக்கும் நிலைமையைக் கண்டு, நெஞ்சுவலி கொண்டு ஓர் இளைஞன் வெளியிடும் இருதய மொழியே என் தீர்மானம்” என்று அண்ணாதுரை தமது விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். “சர்க்காரின் அசட்டை (அலட்சியம்) சகிக்க முடியாததாகி விட்டதோடு, திராவிட இனத்தின் பண்பு எது என்பதை நாமே மறந்து விடும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு போய் விடுமோ என்று அஞ்ச வேண்டியபடி இருக்கிறது. இந்த நிலைமை மாறித்தான் தீர வேண்டும். இருபுறம் இழுக்கப்படும் தொல்லையிலே கட்சி சிக்கிச் சிதைவது நிற்க வேண்டும். பட்டமும் பதவியும் பெரிதா, உரிமைத் திடமும் விடுதலையும் பெரிதா என்பதற்கு ஒரு பதில் கிடைத்துத்தான் ஆக வேண்டும்” என்றும் அண்ணாதுரை எழுதியிருந்தார். 

“இந்தத் தீர்மானத்துடன், இதையொட்டியும் வேறு பல தீர்மானங்களையும் அனுப்பியிருக்கிறேன். இவைகளுக்குப் பெரியாரின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே ஆங்காங்கு உள்ள திராவிடத் தோழர்கள் இந்த என் தீர்மானத்தைப் பற்றி கலந்து பேசி, இது மாநாட்டிலே நிறைவேற, நமது கட்சியின் போக்கு மாறி நாம் உய்ய வழி கிடைக்கும் வழி காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாதுரை நிறைவாகக் கூறி இருந்தார். 

கட்சியின் பெயர் மாற்றம் 
1944 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27– ஆம் தேதியன்று சேலம் நகரில், ஜஸ்டிஸ் கட்சி மாநாடு ஈ.வெ.ரா. தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில் அண்ணாதுரையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது. 

laxman_04_08_2011_01.jpg


“இம்மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்படும் இக்கட்சிக்குள்ள தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ (திராவிடியன் அசோசியேஷன்) என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது” என்று அறிவித்த மிக முக்கியமான ஒரு தீர்மானமும் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பும் இருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் சிலர் வெளிநடப்புச் செய்தார்கள். மாநாடு முடிந்த பிறகு, அதில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகா என்றும், ஏனென்றால் அதில் கட்சியினர் பலர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள். 

சேலம் மாநாட்டில் ஓர் அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடக் கட்சிகளின் அடிமைப்புத்தி மிக மிக ஆழமானது என்பதைக் காட்டிய, அந்தத் தீர்மானம் பற்றிய விவரம் அடுத்த இதழில். 

(தொடரும்) 

ஆதார நூல்கள்: 
தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை
எழுதியவர் - கலைச்செல்வன். 
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீதிபதிகள் பற்றி பெரியார்..

குமுதத்தில் பெரியார் அவர்கள் நீதிபதிகளை பற்றி கூறிய விமர்சனம் "படித்ததும், கிழித்ததும்" பாமரன் பக்கத்தில் வந்த ஒரு பகுதி.. 

ஆனால்....இன்று நேற்றல்ல.....47 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் காமராசரையும் அவரது அரசையும் கடுமையாகப் பழி சுமத்தி நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு எதிராக தந்தை பெரியார் போட்ட போடு இருக்கிறதே.....அது பெரும் போடு. கோர்ட்டாவது....அவமதிப்பாவது...கவலையே படவில்லை. 
யான் பெற்ற இன்பம் பெற வேண்டாமா இவ்வையகம்? இதோ பெரியார்:


“100 அய்க்கோர்ட் ஜட்ஜுகளும் சரி...ஒரு மந்திரியும் சரி..அய்க்கோர்ட் ஜட்ஜாக இருக்கட்டும்...சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாக இருக்கட்டும். அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு சிப்பந்தி. ஜட்ஜ் என்றால் அவர் கவுரவ ஆளல்ல. சம்பள ஆள்தான். மந்திரி அப்படி அல்லவே? மக்களுடைய பிரதிநிதி! லட்சக்கணக்கான மக்கள் வோட் கொடுத்து நியமித்த ஒரு ஆள். ஆட்சிக்குரியவர். அவருக்கு மேல் மக்கள்தான். யோக்கியமாக இருக்கிற ஒருவன், நாகரீகம் படைத்தவன், அரசியல் தன்மை தெரிந்தவன் மந்திரிகளை எப்படி நினைக்க வேண்டும்? நீ யார்? உனக்கு மேல் அப்பீல் உண்டு. முறைப்படி பார்த்தால் ஜட்ஜுகள் 100க்கு 90 பேர் யோக்கியப் பொறுப்பற்ற குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே? அய்க்கோர்ட் நீதிப் போக்கே இப்படி இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிற அடிப்படையே தப்பாக இருப்பதுதான்.’’


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.

யார் அவர்?

புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.

திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.

ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.

அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.

’….. கலப்பு மணம் ஒன்றே

நல்வழிக்குக் கைகாட்டி’

என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.

பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.

anna_and_bharatidasan28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.

பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.

சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?

1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.

கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?

இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.

1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18

அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-

இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.

இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.

அடுத்த அறிவிப்பு வருமாறு :-

முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?

எனது பதில் :-

எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.

அதைக் கேளுங்கள்.

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.

காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.

நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.

இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!

விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?

அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.

(தொடரும்)

2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19

விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.

என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.

அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.

அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.

சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.

சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.

டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.

விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.

பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.

விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.

அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!

அதன் தகவல் என்ன?

பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.

என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.

சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.

திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.

நான் என்ன செய்தேன்?

நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.

(தொடரும்)

3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20

தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.

அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!

kuyil_bharatidasan_1என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.

தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.

உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.

அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!

என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.

குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.

கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.

இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!

என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.

அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.

தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.

இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

அந்தக் கேள்வி என்ன?

கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.

இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.

(தொடரும்)

kuyil_bharatidasan_24. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21

அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.

5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22

என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.

பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.

ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.

என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]

***********************

[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.

அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.

அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.

டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.

திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" - தலித் தலைவர் சந்திரபான் பிரசாத்

 

இந்தியாவின் முதல் தலித் ஆங்கில எழுத்தாளர் என்று அறியப்பட்ட சமூக சிந்தனையாளர் சந்திரபான் பிரசாத் தனது சமீபத்தியகட்டுரை ஒன்றில் பெரியாரிசத்திற்கு பெரிய ஆப்பு ஒன்று அடித்திருக்கிறார் (இந்தக் கட்டுரையை அனுப்பிய வஜ்ரா-வுக்கு நன்றி).


prasad.gif


இதில் அவர் கூறுகிறார் -

"தலித்களுக்கும், மற்ற பிற்பட்ட வகுப்பினருக்கும் (OBC) இடையே வளர்ந்து வரும் மோதல்களைக் கண்டிருந்தும், 1991-ல் மண்டல் கமிஷன் மீது பல விமரிசனங்கள் இருந்தும் அதை ஆதரித்தேன். ஏனென்றால் அப்போது கங்கைச் சமவெளி முழுதும் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் ஆதிக்கம் இருந்தது. எனவே, "பிராமணர்களது ஆதிக்கத்தை ஒழிப்பது வட இந்தியாவை சமூக விடுதலை பெறச்செய்யும், தமிழ் நாட்டைப் போல" என்று நினைத்தேன். 

மண்டல்-காலங்களுக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அறிஞர்கள், செயல்வீரர்களுடன் உரையாடிய பின், பெரியாரின் திராவிட இயக்கத்தைப் பற்றிய பல சந்தேகங்கள் தோன்றத் தொடங்கின. "நம்பிக்கைத் துரோகம்" (விஷ்வாஸ்காத்) என்ற எனது முதல் புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கையில் இந்திய அளவிலான நிலச் சொத்துரிமைகள் பற்றிய விவரணங்கள் என்னைத் தட்டி எழுப்பின. சமூக விடுதலை அடைந்த தமிழ் நாட்டில், ஒவ்வொரு 100 தலித்களிலும் 15 தலித்கள் தான் சுயமாகப் பயிரிடுபவர்கள், 63 பேர் நிலமில்லாத கூலிக்காரர்கள். ஆனால் உத்தரப் பிரதேசத்தில், ஒவ்வொரு 100 தலித்களிலும் 43 பேர் சுயமாகப் பயிரிடுபவர்கள், 39 பேர் தான் நிலமில்லாத கூலிக்காரர்கள். எப்படி தமிழக தலித்கள் உத்திரப் பிரதேச தலித்களை விட இவ்வளவு தூரம் பின் தங்கியிருக்கிறார்கள்? 

பெரியாரது பிராமண எதிர்ப்பு இயக்கம் அர்த்தமில்லாதது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் சொல்வதைக் கேட்க யாரும் தயாராயில்லை - பெரும்பாலான வட இந்திய தலித்களுக்கு தமிழ் நாடு ஒரு ஆதர்ச உதாரணமாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பேராசிரியர் ஃப்ராங்கெல் அவர்களது நூல் கிடைத்தது. 

தனது நூலில் ஃப்ராங்கெல் பிராமணர்கள் மற்றும் சாதி இந்துக்களின் அதிகார வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஆனால், சூத்திரர்கள் மற்றும் இதர பிற்பட்டவர்கள் (OBC) இவர்களது உயர்ச்சியில் காண்பது உண்மையில் "சமூக நீதி" தானா என்பது பற்றிய சந்தேகத்துடனேயே பேசுகிறார். இந்த நூலில் இருந்து எனக்குப் புரிவது இது தான் - பெரியாரது திராவிட இயக்கம் வெறும் பிராமண எதிர்ப்பு மட்டுமே, அது ஒருபோதும் சாதிக்கு எதிரான போராட்டமாக இல்லை. 

இந்த அறிவுபூர்வமான தேடலின் முடிவுகளைக் கொண்டு, தலித்-பிராமணர் (கூட்டுக்) கொள்கையை நான் உருவாக்கத் தொடங்கினேன். 1997 ஆகஸ்டில் அதை வெளியிடவும் செய்தேன். அதிகாரத்தைப் பெற்ற பிறகு சூத்திரர்கள், மற்றும் மற்ற பிற்பட்டவர்கள் (OBC) தங்களுக்குக் கீழாக உள்ள சமூகத் தட்டைப் பார்ப்பார்கள், அங்கே இரையாகப் போவது தலித்கள் தான் என்று எனக்குத் தீர்மானமாகத் தோன்றியது. 

உ.பி.யில் பகுஜன் சமாஜ்க் கட்சியின் வெற்றி சூத்திரர், மற்ற பிற்படுத்தப் பட்டவர்கள் (OBC) இயக்கம் பற்றிய எனது பார்வையை நிரூபித்திருக்கிறது. Dominance and State Power in Modern India என்ற ஃப்ராஙகெல் அவர்களது நூல் சொல்வதற்கு இன்னும் இருக்கிறது என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது."

தமிழக தலித்கள் இன்னும் எவ்வளவு காலம் தான் பெரியாரிசத்தையும், கழகக் கண்மணிகளையும் கட்டிக் கொண்டு மோசம் போகப் போகிறார்கள்?

உத்திரப்பிரதேச உதாரணம் இவ்வளவு தெளிவாக இருக்கையில், அந்த வழிமுறையைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் இருப்பது தமிழக தலித்களைத் தற்க்கொலைப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

மொழியாக்கம் செய்யப் பட்ட பகுதியின் ஆங்கில மூலம்:

... Though I had my reservations regarding Mandal as I was witness a growing conflicts between Dalits and OBCs, I still went ahead and defended it as by 1991, the larger Gangetic belt was still dominated by Dwijas/Brahmins. So, as I thought, a total annihilation of the Brahmin dominance may turn north India into a socially liberated zone as it had happened in Tamil Nadu.

Post-Mandal, when I begun touring and interacting with activists and scholars from all over the country, I developed doubts over Periyar's Dravidian movement. When I was writing my first book titled as Viswasghat (betrayal), I was alerted by the census figures on the landholding pattern in India. I was shocked to find that for every 100 Dalit in socially liberated Tamil Nadu, only 15 were independent cultivators and 64 were landless labourers. In Uttar Pradesh, of every 100 Dalit, 43 were independent cultivators and only 39 were landless labourers. How could Tamil Dalits be so far behind the UP Dalits."


There was no meaning to Periyar's anti-Brahmin movement I thoughts to myself. But there was no one who was willing to listen to me. For most of the Dalits in north India Tamil Nadu was a role model. It was then that I was given a book to read by prof Frankel. 

In his book, Frankel mirrors the fall of Dwijas/Brahmins from the political power structure, the book however, remains sceptical of the social justice element in the rise of Shudras/OBCs. What I understood from the book suggests that Periyar's Dravidian movement was merely anti-Brahmin, and not anti-caste.

Equipped with a credible intellectual inquiry, I begun developing my Dalit-Brahmin thesis and made it public in August 1997. I was certain that after acquiring power and resources, Shudras/OBCs were looking for subordinate social categories and Dalits will be sure victims.

The BSP's win in Uttar Pradesh goes to confirm my reading of the Shudra/OBC movement, and revives Dominance and State Power in Modern India for further reading.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - ஆதாரங்கள் 10

 

1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார். தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை. (தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.)

2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை. 

(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.)

3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.

4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.

5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.

6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.

7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.

8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.

9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பிராமண வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.

10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை. 

உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டுமொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை. 

இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை.


"தமிழ் தேசிய விரோதி ஈ வெ ராவை இனங்காண்போம்" என்ற விழிப்புணர்வை முன்வைத்து.. சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக இப்பதிவு இடப்படுகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்!

 

சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்! இந்த தலைப்பை பார்த்ததும் பலருக்கு கடும் கோபம் பொத்துக் கொண்டு வரும். வேண்டுமென்றே திட்டமிட்டு பெரியாரையும், பெரியாரிய இயக்கத்தை தாக்கும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது என்ற ஆத்திரம் வெளிப்படும். மேற்கண்ட தலைப்பும் - கீழே உள்ள கருத்தும் என்னுடையதல்ல; 1932-இல் சாட்சாத் தந்தை பெரியாரால் ‘சுயமரியாதை-சமதர்ம’ கூட்டத்தில் வெளிப்படுத்திய கருதே இங்கே முன்வைக்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பெரியாரிய கருத்துக்களை தங்களுக்கு ஏற்ப பொருத்திக் கொள்ளும் நிலைதான் நீடிக்கிறது. அதன் உள்ளார்ந்த சாரத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் நிலை இதில் தெரியவில்லை. மேலும் பார்ப்பனர்களுக்கு எதிரான - வறட்டு கடவுள் மறுப்பு - இனவாத அடிப்படையில் மட்டுமே அணுகப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் கருத்துக்களை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.

 

 


‘சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகி விட்டது. அதை அடக்காவிட்டால் நாட்டிற்கு இன்னல்கள் நேரும் என்று காங்கிரசுகாரர்களும் ஈ.வெ.ரா. அவர்களைத் தாக்கத் தொடங்கினர்’


பெரியார் கூறினார் : பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல், சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்திற்குப் பொருளாதாரமும் - அரசியலும் அவசியமானதா? அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாகப் புராண முட்டாள்தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.”


 

 

- பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா., பக்கம் 12 -இந்த நூலில் உள்ள வேறு சில கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசினார் தி.க. தலைவர் கி. வீரமணி, கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு - சிங்காரவேலர் சிந்தனைகள் புத்தக வெளியீட்டின் போது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 
3

ஆம், ஏமாந்தது போதும்!. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!

இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!

  • "பெரியார் ஒரு தமிழ் இன விரோதி" என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், "குருவிகள்" என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன்"தேடற்சரம்" வலைப் பதிவின் மூலம்.

 

  • "தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய "ஆப்பு" ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், தன் ஆங்கிலக் கட்டுரையில். அதனை தமிழாக்கம் செய்து தன் வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!

 

  • "சந்திப்பு என்னும் வலைப் பதிவர்" இத்தகைய "தீரா-விட" சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-

     

    பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!", என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் – இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?

    அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?

  • திராவிட மாயை என்பது ஒரு "விஷச் செடி" என்று துகிலுறித்துக் காட்டுகிறார், தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்.

 

  • "திண்ணை" இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள இந்தக் கட்டுரை வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

 

  • ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய "ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை "திண்ணை" வலை இதழில் கட்டுரைகளாக வரைத்திருக்கிறார், "விஸ்வாமித்ரா" அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த சுட்டியில் காணலாம்.

 

  • ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், தன் "காலச்சுவடு" கட்டுரையில்.

தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயலாற்றும் இயக்கங்களுக்குத் துணைபோகாதீர்கள்.

வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈ வெ ராமசாமியின் உண்மைத் தோற்றம்....

"ஈவேராவின் சுய உருவமும், அவரது பார்ப்பன சாதிக்காழ்ப்பின் அடிமூலமும் வெளிப்படையாகியிருப்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். 'ராஜாஜியும் பார்ப்பனர்தானே, நல்லவர் இல்லையா' என்ற கேள்விக்கு பதில் சொல்கையில், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவர் உண்மையான தொண்டர் என்பதாகவும் "ஆனால் , என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது" என்றும் மனம் திறக்கிறார் ஈ.வே .ராமசாமி நாயக்கர் . அதாவது, ஆதிக்க சாதிகளில் ஒன்றாக இருந்த தனது சாதியின் நலனை , தன் சாதியை விட மேலானதாகக்கருதப்படும் பார்ப்பன சாதிக்காரரின் கையில் கொடுக்க மனம் வராது என்கிறார் ராமசாமி நாயக்கர். 'தன் சாதியினரை விட மேல் தட்டில் உள்ள பார்ப்பனரை கீழிறக்க வேண்டும் ' என்ற சாக்கினில் வடிகட்டிய சாதிப்பாசம்தான் பார்ப்பன வெறுப்பாக அவரால் இங்கே உமிழப்படுகிறது. உண்மையில் இதில் வெளியாகியிருப்பது ஈ.வே .ராமசாமி நாயக்கரின் பார்ப்பன வெறுப்பின் அடிமூலம்தானே தவிர , சாதியற்ற சமூகம் என்ற சமரச எண்ணமோ, ஹரிஜன மேம்பாடு என்ற சீர்திருத்தச் சிந்தனையோ அல்ல. படிநிலையாய் சாதியமைப்பைக்கண்டு அதில் மேலே உள்ளவனைக் கீழே தள்ளும் நோக்கம் மட்டுமே இதில் வெளியாகிறதேயன்றி, கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற செயல் திட்டமோ அனைவரும் சம நலன் பெற வேண்டும் என்ற சமரச எண்ணமோ வெளிப்படவில்லை. பார்ப்பனர் மேல் இருந்த துவேஷம் மட்டுமே பார்ப்பனரல்லாத அனைவர்மீதும் பரிவை உருவாக்கி விடாதுதான். இதனால்தான் ஆதிக்க சாதிகளால் ஹரிஜனங்கள் கொளுத்தப்பட்டபோது கூட அதனை எதிர்த்துப் பேசாமல் ஈ .வே.ரா .வால் இடிபோன்ற மவுனம் காக்க முடிந்தது. எது தனக்கு அதிகம் பிடித்தமானது என்பதை விட, யார் மேல் தனக்கு துவேஷம் அதிகம் என்பதை வைத்தே தனது கொள்கைகளை வகுத்துக்கொண்டவர் ராமசாமி நாயக்கர் . "இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை" * என்று சொல்கையில் தனது இந்த வெறுப்பியல் மனப்பான்மையைத்தான் ஈவேரா வெளிச்சம் போடுகிறார். யாருக்கு உதவ வேண்டும் என்பதை அடிப்படையாய்க்கொண்டு சமூக அரசியல் நடத்தியவர் காந்தியடிகள், தாழ்த்தப்பட்ட சாதியை மேம்படுத்த அவர்களினூடே அறிவியக்கம் நடத்தி செயல்பட்டவர் நாராயண குரு , ஆன்மீகத்தின் துணையுடன் சாதிக்கொடுமைகளுக்கெதிராக சண்டமாருதமாய்க் குரலெழுப்பிய்வர் துறவி விவேகானந்தர். யாரை அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாக்கி அரசியல் கூட்டம் வளர்த்த தமிழக பாசிஸ்டு ஈ. வே.ராமசாமி. "



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆதிதிராவிடன்:
'கற்பனை'யாக்கப்பட்ட இதழ்
(உண்மெய்யும் திரிபும்)
ஸ்டாலின் ராஜாங்கம்
ayothidhasar.jpgதீண்டப்படாதோரின் இதழியல் பயணம் நாமறிந்து 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. அன்று தொடங்கி இன்று வரையிலும் பல்வேறு அரசியல் கருத்துகளையும் மாற்றங்களையும் வெளிப்படுத்துபவையாக அவை வெளியாகி வருகின்றன. அவற்றிடமிருந்து பிறந்த கருத்துகள் பல இன்று சிறந்த அரசியல் ஜனநாயகக் கருத்துகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவை தலித்துகளிடமிருந்து பிறந்தவை என்னும் உண்மை மட்டும் சொல்லப்படுவதில்லை. இந்நிலையில் கடந்தகால இதழ்களின் வரலாற்றைச் சொல்லுவதை இழந்துபோன அறிவடையாளத்தை மீள்கண்டுபிடிப்புச் செய்யும் சமூகச் செயல்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டும். தீண்டப்படாதோர் வெளியிட்ட இதழ்களில் சில: சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), மற்றும் ஆதிதிராவிடமித்திரன் போன்ற இதழ்கள் தொடக்கக் காலத்தவையாகும்.

அயோத்திதாசரின் தமிழன் இதழை அவரது மறைவிற்குப் பின் அவருடைய மகன் க.அ. பட்டாபிராமன் 05.05.1914 முதல் 18.08.1915 வரை நடத்தினார். பின்னர் ஜீ. அப்பாத்துரையாரும் பி.எம். ராஜரத்தினமும் சேர்ந்து கோலார் தங்கவயலிலிருந்து 09.07.1926 முதல் 27.06.1934 வரை மீண்டும் தமிழன் இதழைக் கொணர்ந்தனர். அயோத்திதாசர் காலத் தமிழன் இதழுக்கும் பிந்தையோர் நடத்திய தமிழன் இதழுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கான சமூக அரசியல் பின்புலங்கள் தனியே ஆராயத்தக்கன. மேற்கண்ட இதழ்களில் தமிழன் தவிர வேறெந்த இதழும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது மாபெரும் இழப்பாகும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடத்தப்பட்ட இதழ்களின் கதியும் அதுதான். அத்தகைய இழப்பு இப்போது அரசியல்ரீதியான இழப்பாகவும் மாறி நிற்கிறது. இதனால் தலித் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த கடந்தகாலப் போராட்டங்கள், வெற்றிகள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் மங்கலாகவே தெரிகின்றன. எனினும் தலித்துகளின் நீண்ட கால அரசியல் தொடர்ச்சியினைக் கண்டெடுக்கக் கடந்த காலத்தின் மீதான வரலாற்றுரீதியான பயணமும் தேவைப்படுகின்றது.

நாமக்கல் பகுதியிலிருந்து வெளியான சமத்துவம் (1945), வேலூர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமியின் சமத்துவச் சங்கு, 1942இல் ஆம்பூர் ஈ.சுப்பிரமணியத்தால் மாதம் இரு முறையாகத் தொடங்கப்பட்ட தென்னாடு, 1941 முதல் வார இதழாகவும் 1946 முதல் மாதமிருமுறை இதழாகவும் வெளியான ஜே.ஜே. தாஸ், மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திய உதயசூரியன், 1930களில் க.அ. பட்டாபிராமதாஸால் நடத்தப்பட்ட ஆங்கில-தமிழ் மாத இதழான தர்மதொனி போன்ற இதழ்கள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியாயின. அதற்கும் சற்றே பின்னால் நடத்தப்பட்ட அன்பு பொன்னோவியத்தின் அறவுரை, மக்கள் அறம், டி. குப்புசாமியின் பௌர்ணமி, சென்னை நீலக்கொடி, வீராசாமியின் தொண்டு, ரத்தினம் நடத்திய எரிமலை, ரத்தினமும் எக்ஸ்ரே மாணிக்கமும் இணைந்து நடத்திய சிவில் உரிமை, டாக்டர் அ. சேப்பன், சக்திதாசன் ஆகியோர் இணைந்து நடத்திய உணர்வு, மேலும் அம்பேத்கரிஸ்டு, அறிவுவழி ஆகிய இதழ்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய நெடிய மரபில் இருபதாம் நூற்றாண்டின் கால்பகுதியிலேயே வெளியான இதழ்களிலொன்றுதான் ஆதிதிராவிடன் என்னும் இதழ்.

n n n

சமூகத்தளத்திலும் அரசியல்தளத்திலும் திராவிடம், திராவிடர் என்னும் சொல்லைக் கையாண்டு முதலில் அமைப்புகளையும் கருத்தியலையும் உருவாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே ஆவர். திராவிடம் என்பதை மொழி, இனம் என்னும் தளத்தைக் கடந்து சாதிபேதமற்ற சமூகம் என்னும் நிலையில் பொருள்படுத்தியவர்கள் இவர்களே. எனினும், எண்ணிக்கை பலங்கொண்ட பெரும்பான்மை இந்து சாதியினர் அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்ட வேளையில், சிறுபான்மை தலித் சாதி அறிவாளிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஆதிதிராவிடர்கள் என்னும் கூடுதலான அரசியல் அடையாளமுள்ள பெயரின் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். அயோத்திதாசர் காலத்திலும் அதிகம் புழக்கமில்லாத இச்சொல் அவர் மறைந்த காலத்திற்குப் பின்பே அழுத்தம் பெற்று மேலெழுந்தது. 1910களின் மத்தியில் பிராமணரல்லாதார் இயக்கம் உருபெற்றதன் பின்னணியில் இச்சொல்லிற்கான தேவை கூடுதலாகியது. 1920களில் தமிழக தலித் அரசியலில் கோலோச்சிய எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற செயற்பாட்டாளர்களின் காலத்தில் இச்சொல் நிலைபெற்றது. இப்பெயரில் அமைப்புகளையும் இதழ்களையும் அரசியல் விண்ணப்பங்களையும் இம்மக்கள் வெளிப்படுத்தினர்.

கோபால் செட்டியாரின் ஆதிதிராவிடர் வரலாறு (1920), திரிசிரபுரம் ஆ. பெருமாள்பிள்ளையின் ஆதிதிராவிடர் வரலாறு (1922) போன்ற வரலாற்று நூல்கள் வெளியானது இக்காலத்தில்தாம். ஆ. பெருமாள்பிள்ளை ஆதிதிராவிடர் வரலாறு எழுதக் காரணமாக இருந்த எம்.சி. ராஜா சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் 1922இல் ஆதிதிராவிடர் என்னும் சொல்லினை அரசுப் பதிவாக்கக் கோரிக் கொணர்ந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. ஆதிதிராவிடர் என்னும் சொல்லைத் தலித் சாதிகள் பலவற்றையும் குறிப்பதாக இத்தலைவர்கள் மாற்றவும் செய்தனர். 1938ஆம் ஆண்டு ஆலயப் பிரவேசம் என்னும் சிறுபிரசுரத்தை வெளியிட்ட இரட்டைமலை சீனிவாசன் அந்நூலில் செடூல் காஸ்ட்கள் என்னும் 86 வகுப்புகளையும் சேர்த்தே ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் குறிக்கிறார்.

ஆதிதிராவிடர் என்னும் அடையாளம் அரசியல் தளத்தில் முக்கியத்துவமடைந்த சமகாலத்தில்தான் ஆதிதிராவிடன் என்னும் மாத இதழ் இலங்கையிலிருந்து வெளியானது. 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தென் இந்திய ஐக்கியச் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எஸ்.பி. கோபால்சாமி என்பவர் இதன் ஆசிரியராவார். இச்சங்கம் 1922இல் இந்தியன் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் ஊழியன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக இவ்விதழ் வெளியானதாகத் தெரிகிறது. இரண்டாண்டு முடிவில் முதலாண்டு இதழ்கள் ஒரு தொகுதியாகவும் இரண்டாமாண்டு இதழ்கள் மற்றொரு தொகுதியாகவும் தொகுத்து வெளியிடப்பட்டன.

ஆதிதிராவிடர்களின் கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம், லௌகீக விசயம், ராஜ விசுவாசம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டாலும், ஆதிதிராவிடர்களுக்கான கல்வியையே முதன்மை நோக்கமாய்க்கொண்டு இயங்கியது. கேசவ பிள்ளை, சிதம்பரம் நந்தனார் பாடசாலை சுவாமி சகஜானந்தர் ஆகியோர் இலங்கை சென்ற காலத்திலேயே இவ்விதழ் உருப்பெற்றது. சமய அடிப்படையில் சைவ சமய உணர்வைப் போற்றிய இதழ் இது.

தெய்வமிகழேல், சக்கர நெரிநில், ஊக்கமது கைவிடேல் என்னும் வாசகங்களை முகப்பிலே தாங்கி 16 பக்கங்களில் வெளியானது. இதழின் பக்கங்களைக் கூட்டவும் வார இதழாக மாற்றவும் தொடர்ந்து விருப்பத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் விருப்பம் நிறைவேறாமலேயே நின்றுபோனது. 1000 சந்தாவினை நெருங்கியிருந்த இந்த இதழ் தமிழகம், கோலார் தங்கவயல், பர்மா ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நன்கொடை, சந்தா ஆகியவை கிடைத்துவந்தபோதிலும் இதழ் நிலைப்பதற்கு போதுமானவையாக அவை இல்லை. ஆயிரம் பிரதிகளை நெருங்கியிருந்த இவ்விதழ் ஆதிதிராவிடர்களின் அறிவுசார்ந்த வேட்கையினை அடையாளம் காட்டக்கூடியதாக இன்றைக்கு மாறி நிற்கிறது. ஆதிதிராவிடர் அல்லாதாரும் சந்தாதாரர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதழ் பற்றிய விமர்சனம் சுதேசமித்திரன் இதழிலும் வெளியானது.

stalin-kc-93-m-c-raja.jpgபின்னாளில் திராவிடன் இதழின் ஆசிரியராக விளங்கிய கனக சங்கர கண்ணப்பன் சூத்திரர் யார்? ஆதிதிராவிடர்களின் தொழில் போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். ஆதிதிராவிடர்கள் விவசாயம், நெசவு, போர், இசைத் தொழில், வள்ளுவர் எனப் பல்வேறு தொழில் புரிந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்றெழுதிய அவர் இக்கருத்தினையே எஸ். சோமசுந்தரம்பிள்ளை போன்ற சென்னை வாழ் ஆதிதிராவிடர்களும் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆதிதிராவிடர்கள் பல்வேறு தொழிலிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தனர் என்னும் வரலாற்றுரீதியான நம்பிக்கையினைப் பலரும் கொண்டிருந்தனர் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. அதேபோல இவ்விதழில் வெளியான சுவாமி சகஜானந்தரின் உரைகள் மூலம் அவருக்கிருந்த விரிவான தமிழறிவு புலப்படுகிறது. சகஜானந்தரைப் போற்றிய இவ்விதழ் நம் தலைவர் எம்.சி. ராஜா என்று எம்.சி. ராஜாவையும் போற்றத் தவறவில்லை. இத் தலைப்பிலேயே வெளியான கட்டுரையொன்றில் "இம்மஹான் நம் ஆதிதிராவிட குலசிரேஷ்டர், சென்னை, ஆதிதிராவிட மஹாஜன சபைக்கு செக்ரடேரியும் தற்காலம் வந்துலாவும் சென்னை ஆதிதிராவிடன் பத்திரிக்கைக்கு ஆசிரியருமாவார். . . ஆதிதிராவிட மக்களில் சட்ட நிருபண சபைக்கு மெம்பராகத் தெரிந்தெடுப்பது இதுவே முதல் தடவை" (1919 ஆகஸ்ட் 15) என்று புகழ்கிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து ஆதிதிராவிடன் என்னும் இதழ் எம்.சி. ராஜாவை ஆசிரியராகக்கொண்டு வெளியானது எனும் குறிப்பும் இக்கட்டுரை மூலம் கிடைக்கிறது.

பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இவ்விதழில் மறைமலையடிகள் எழுதிய நூல்கள் குறித்த விளம்பரங்கள் விரிவான அறிமுகக் குறிப்புகளுடன் பன்முறை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கல்லல் பகுதியில் ஆதிதிராவிடர்கள் படும் சாதிக் கொடுமைகள், இலங்கையில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள், தென்னிந்திய ஐக்கியச் சங்கத்தின் பணிகள் போன்ற பல செய்திகளும் இடம் பெற்றன.

ஆதிதிராவிடர்களின் கல்வி சார்ந்து இவ்விதழில் பதிவுகள் தனியாக எழுதுமளவுக்கு விரிவாக அமைந்துள்ளன. ஆதிதிராவிடர்கள் கல்வியின் மூலமே சாதிய இழிவை விலக்கிக்கொள்ள முடியும் என்று உறுதிபட எழுதியது. கிறித்தவப் பாதிரிமார்கள்கூடக் கல்வியின் பெயரால் இம்மக்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்னும் கோபத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் இம் மக்களின் தனித்துவமான நடவடிக்கைகளினாலே இவை சாத்தியமடைய முடியும் என்று சொல்லவும் செய்தது. அதாவது, "இலங்கை தென்னிந்திய ஐக்கியச் சங்கம், தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் ஐக்கியச் சங்கம் மற்றும் குலாபிமானிகள் முன்னின்று நடத்தினால் மட்டுமே" கல்வி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கைகூடுமென்று எழுதியது.

கோயம்புத்தூர் ஆர். வீரையன் போன்றோர் ஆதிதிராவிடர் கல்விக் குறித்துத் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று:

அறிக்கை

நண்பர்கள்!

வீணாக காலங்கழிக்காதீர்கள். கோயம்புத்தூரில் நடைபெற்றுவரும் நக்ஷ்த்ரவாசக சாலை இரவு பள்ளிக்கூடத்தில் இரவு 7 மணியிலிருந்து 9 1/2 மணி வரைக்கும் இலவசமாக வாசித்து முன்னேறுங்கள்.

"முன் கசக்கும் பின் இனிக்கும்"

திருமால் வீதி                                   ஆர். வீரையன்
கோயம்புத்தூர்

என்று வெளியாகியிருந்தது. 

Contd



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோயம்புத்தூர் ஆர். வீரையன் போன்றோர் ஆதிதிராவிடர் கல்விக் குறித்துத் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று:

அறிக்கை

நண்பர்கள்!

வீணாக காலங்கழிக்காதீர்கள். கோயம்புத்தூரில் நடைபெற்றுவரும் நக்ஷ்த்ரவாசக சாலை இரவு பள்ளிக்கூடத்தில் இரவு 7 மணியிலிருந்து 9 1/2 மணி வரைக்கும் இலவசமாக வாசித்து முன்னேறுங்கள்.

"முன் கசக்கும் பின் இனிக்கும்"

திருமால் வீதி                                   ஆர். வீரையன்
கோயம்புத்தூர்

என்று வெளியாகியிருந்தது. 1919ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் நந்தனார் பாடசாலையில் சுமார் 100 மாணவர்கள் படித்தார்கள் என்னும் குறிப்பையும் இதழ் தருகிறது.

பிராமணரல்லாதார் அரசியல் தலித் மக்களையும் உள்ளிழுத்துக்கொண்டு திராவிடர் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் இணைத்தபோதுதான் தனித்துவத்தின் அடையாளமாக ஆதிதிராவிடன் என்னும் சொல்லாடல் மேலுக்கு வந்தது. எனினும், இந்நடவடிக்கையில் முன்னின்ற எம்.சி. ராஜா நீதிக்கட்சியோடு இணைந்து பணியாற்றியதோடு தன் முயற்சியின் காரணமாக அச்சொல்லுக்கு அரசின் அங்கீகாரத்தையும் பெற்றார். ஆதிதிராவிடன் இதழுங்கூடப் பிராமணரல்லாத அரசியலையும் ராஜாங்கத்தின் கல்விப் பணிகளையும் ஆதரித்து எழுதிவந்தது. டாக்டர். டி.எம். நாயரின் மரணம் பற்றி விரிவான இரங்கல் அறிக்கையும் எழுதப்பட்டது.

ஆனால், 1921ஆம் ஆண்டு சென்னை பின்னி ஆலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டியெழுந்த கலவரத்தின் பின்னணியில் ஆதிதிராவிடன் இதழ் நீதிக் கட்சிக்கு எதிராக எழுதியது. இப்போராட்டத்தின் போது, எம்.சி. ராஜா தலித் மக்களை வேலைக்குத் திரும்பும்படி கோரியதால் அம்மக்களும் வேலைக்குத் திரும்பினர். அதனால் இம்மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. புளியந்தோப்பு கலவரம் என்று சொல்லப்பட்ட இக்கலவரத்தைத்தான் பறையர்களைச் சென்னையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின் அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. நீதிக்கட்சியும் திராவிடன் இதழும் தலித்துகளுக்கு எதிராக நேரடியாகப் பேசின. இவ்விடத்தில் எம்.சி. ராஜா நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றார். இன்றைக்கும் சென்னை பின்னி மில் கலவரம், நீதிக்கட்சியின் தலித் எதிர்ப்பு ஆகிய அனைத்திற்கும் கிடைக்கும் தகுதி வாய்ந்த தலித் தரப்பு ஆதாரம் இவ்விதழ்தான்.

Athidravidan---issue.jpgநீதிக்கட்சியும் திராவிடன் போன்ற பத்திரிகையும் ஆதரவாயிருப்பார்கள் என்று நம்பிய ஆதிதிராவிடன் இதழ் சாதிஇந்துக்களும் கைவிட்டுவிட்டனர் என்று வருந்தி எழுதியது. திராவிடன் போன்ற இதழின் ஆதிதிராவிடர் விரோதப் போக்கைத் தொடர்ந்துதான் 'ஆதிதிராவிடர்களுக்கு தினசரியோ வார இதழோ நடத்த வேண்டும் அல்லது ஆதிதிராவிடனையாவது வார இதழாக மாற்றிட' வேண்டுகோள் விடுத்தது இவ்விதழ். அதோடு இலங்கையில் கூடியளவு நல்ல நிலைமையிலிருக்கும் இந்தியரும் ஆதிதிராவிடர்களும் இயன்ற அளவு தொகை அனுப்பும்படியும் உதவிசெய்பவர் பெயர் ஆதிதிராவிடனில் பிரசுரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோலச் செய்யவும்பட்டது.

ஆதிதிராவிடர் நலனில் அர்ப்பணிப்புள்ள இந்த இதழை நீதிக்கட்சியை அம்பலப்படுத்தியது என்ற காரணத்தினாலேயே 'கற்பனையான பத்திரிக்கை' என்று சொல்லிவிடவும் இங்கு முயற்சிக்கப்பட்டது. எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலில் "நீதிக்கட்சி பத்திரிக்கையான திராவிடன் இழிவுக் குறிப்போடு எழுதியதாகச் சிலர் கூறுவதும் அதன் பொருட்டுக் கற்பனையான சில பத்திரிகையொன்றை ஆதாரம் காட்டுவதும் அடிப்படையில்லாதவை"(பக். 381) என்று குறிப்பிடுவது ஆதிதிராவிடன் இதழைத்தான். அதேபோல 1940களில் 'திராவிடஸ்தான் போல எங்களுக்கும் ஆதிதிராவிடஸ்தான் வேண்டும்' என்று முனுசாமிப்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, அதற்கு மறுப்பாக "திராவிடர், திராவிடம் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள், ஆதிதிராவிடன் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரமில்லை" என்று விடுதலை தலையங்கம் சொன்னது. திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை உறுதிபடக் கட்டியெழுப்பிய கால்டுவெல்லின் விளக்கமே இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டவர்களே என்பதுதான்.

தலித்துகள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக இருக்கும்வரை அவர்களை ஆதரவாளர்களாகச் சொல்லுவதும் தனித்துவமாக எழுதவோ செயற்படவோ முனையும்போது, அவர்களின் இருப்பையே காலிசெய்யும் நிலைமைக்குத் துணிந்ததையுமே இப்போக்குகள் சுட்டுகின்றன.

தொடக்ககால ஆதிதிராவிட முன்னோடிகள் பௌத்தம், வைணவம், சைவம் என்று வெவ்வேறு ஆன்மீக நோக்கங்களில் ஆர்வம் கொண்டிருந்தாலும் ஆதிதிராவிடர்களுக்கான நலன் எனும் பயணத்தில் ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிகிறது. வித்வான் க்ஷி.கி. முனிசாமி பிள்ளை எழுதிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் புராணம் என்னும் நூல் வள்ளுவர் ஆதிதிராவிடரே என்பதை நிறுவவந்த நூலாகும் என்று ஆதிதிராவிடன் (1919 ஜூன் 15) கூறுகின்றது. 26.04.1920 சுதேசமித்திரனில் ஸ்ரீமான் கோ. குப்புசாமி என்பவர் வள்ளுவர் பஞ்சமரா? என்று சகஜானந்தரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பெருமாள் நாயனார் என்பவர் வள்ளுவர் பஞ்சமரே பறையரே என்று ஆதிதிராவிடனில்தான் (1920 ஜூன் 15) எழுதினார். வள்ளுவர் தொடர்பான இத்தகு விவாதம் இருபதாம் நூற்றாண்டில் பரவலாக நடந்ததாகவும் அதில் ஆதிதிராவிட அறிவாளிகள் பலரும் வள்ளுவர் பஞ்சமரே என்று நிறுவுவதில் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் தெரிகிறது. அயோத்திதாசப் பண்டிதரும் இத்தகு விளக்கத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

n n n

பயன்பட்ட ஆதாரங்கள்:

1. ராஜதுரை, எஸ்.வி., கீதா, வ. - பெரியார்: சுயமரியாதை - சமதர்மம். மே, 1999, விடியல் பதிப்பகம், கோவை.

2. ராஜதுரை, எஸ்.வி. - பெரியார் - ஆகஸ்ட் 15. பிப்ரவரி 1998, விடியல் பதிப்பகம், கோவை.

இதழ்கள்:

1. ஆதிதிராவிடன் (இரண்டு ஆண்டு இதழ் தொகுப்பு): மதுரை தலித் ஆதார மையம்.

2. தலித் - 2004 (ஜூலை-ஆகஸ்ட்) - ஆ.இரா. வேங்கடாசலபதியின் கட்டுரை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செக் மோசடி வில்லங்கம். கைதாவாரா வீரமணி?

Wednesday  21  December  2011  02:57:34 PM 

 

செக் மோசடி வழக்கில் கி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும்’  என  டெல்லி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், சென்னை பெரியார் திடல் அதிர்ந்து நிற்கிறது! டெல் லியில் உள்ள பெரியார் மையத்தின் பிராந்திய டைரக்டராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்குதான் கி.வீரமணியின் கையைப் பிசைய வை த்திருக்கிறது. 

‘பெரியார் சுய மரியாதை கொள்கை பரப்பும் அமைப்பின்’ சார்பாக  டெல்லியில் பெரியார் மையம்  உருவாக்க, கடந்த 2001-ம் ஆண்டு 40  கோடி ரூபாய் மதிப்புள்ள  இடத்தை  ஒரு கோடி ரூபாய்க்கு  டெல்லி டெவலப்மெண்ட்  அதாரிட்டி வழங்கியது. இந்த இடத்தை ஒதுக்கீடு செய்யும்போது ‘கல்விக்காகவே உபயோகிக்க வேண்டும்.   எக்காரணத்தைக் கொண்டும் வணிக வர்த்தக வளாகங்கள் நடத்தக் கூடாது.  கல்விக்  கூடம் 2004-ம் ஆண்டுக்குள் தொடங்கப்பட வேண்டும்’ என நிபந்தனைகள்  போடப்பட்டன. 

2007-ம் ஆண்டில் முதல் மாடியுடன் கூடிய கட்டடம்  அங்கு கட்டப்பட்டது. 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கும், டாக்டர்  ராமசாமி தலைமையிலான டாக்டர் ராமஸ்வாமி ஐ.ஏ.எஸ்.  அகாடமிக்கும் இடையே ஏற்பட்ட  ஒப்பந்தத்தின் அடிப்படையில்  டெல்லியில் உள்ள பெரியார் மையத்தில்,  ரியாஸ் அகாடமி...  தொடங்கப்பட்டது.   மேலும் தஞ்சை பெரியார் மணியம்மை  பல்கலைக்கழகத்தின் சார்பாக அனைத்து கல்வித் துறையிலும் தொலைதூரக் கல்வியும்  விதிமுறைகளுக்கு மாறாகத் தொடங்கப்பட்டது.  2008-ல் டெல்லி பெரியார் மையத்தின் ரீஜினல் டைரக்டர் ஆக டாக்டர் ராமசாமி நியமிக்கப்பட்டார்.   2008முதல்  2010வரை அவர் அப்பதவியில் செயல்பட்டார். 

பின்னர் கி.வீரமணியின் மகன் அன்புராஜ்  அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,   மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட டாண் டன் குழு, நாடு தழுவிய அளவில் சுமார் 45 தனியார்  பல்கலைக்கழகங்களின்  அனுமதியை ரத்து செய்தது.  இந்தப் பட்டியலில் மணியம்மை  பல்கலைக்கழகத்தின்  பெயரும் உண்டு.  இந்நிலையில்,  2010  மே மாதத்தில் அப்போது  தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் டெல்லியில் பெரியார் மையம் தொடங்கப்பட்டது. 

 ஒரு மாநிலத்தில் தொடங்கப்படும் கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றொரு மாநிலத்தில் தனது செயல்பாட்டைத் தொடங்க வேண்டுமானால், அந்த மாநில  அரசின் அனுமதியைப் பெற்ற பிறகே தொடங்க முடியும்.  ஆனால், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டெல்லி மாநில அரசின் அனுமதியைப் பெறாமல்   தொலைதூரக் கல்வியைத் தொடங்கி நடத்தி வருகிறது. மேலும் அந்த வளாகத்தில் ரெஸ்டாரன்ட்  மற்றும் கல்வி வகுப்பு அறைகள்  கல்யாணக் கூடங்களாகவும் பார்ட்டி   ஹால்களாகவும் மாற்றப்படுகின்றன.  இதை டாக்டர் ராமசாமி கடுமையாக எதிர்த்தார். 

  2010-ம் ஆண்டு டிசம்பரில் டாக்டர் ராமசாமிக்கும்   அன்புராஜுக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  ஜனவரி 2011-ல்  ராமசாமி  சென்னைக்குச்  சென்று கி.வீரமணியை சந்தித்தார்.  ‘டெல்லி பெரியார் மையம் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படுகிறது’ என சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2011 மார்ச்  மாதம்  டாக்டர் ராமசாமி டெல்லி பெரியார் மையத்தின் ரீஜினல் டைரக்டர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  தனது  நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி டாக்டர் ராமசாமி நிறுவனத்திற்கு சேர வேண்டிய பணத்தை அளிக்கு மாறு நிர்ப்பந்தம் செய்தார். அதையடுத்து, 2011 மே 24-ம் தேதி தஞ்சை பெரியார் மணிய்யம்மை பல்கலைக்கழகத்தின் நிதிக் குழுவின் உறுப்பினரான  ராமச்சந்திரன்,   பெரியார் சுய மரியாதை கொள்கை பரப்பும் அமைப்பின் சார்பாக 66 லட்ச ரூபாய்க்கான காசோலையை டாக்டர் ராமசாமிக்குக்  கொடுத்தார். ஆனால், அந்த செக் பவு ன்ஸ் ஆகிவிட்டது. 

 உடனே நீதிமன்றத்தில் டாக்டர் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கி.வீரமணியும் இரண்டாவது குற்றவாளியாக ஜி.சுவாமிமலையும்,  மூன்றாவது குற்றவாளியாக ராமச்சந்திரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். நீதிபதி சந்தர் மோகன் சம்பந்தப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத் தரவிட்டார். இதையடுத்து, கி.வீரமணி நேரில் ஆஜராவதிலிருந்து  விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.   நீதிபதி அதை நிராகரித்துவிட்டு, 2012   பிப்ரவரி 10-ம் தேதி அவர் நிச்சயமாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். தவறும்பட்சத்தில் வீரமணி மீது கைது நடவடிக்கை பாயக்கூடும் என்கிறார்கள் சட்ட வல் லுநர்கள். 

இந்நிலையில், பெரியார் மையத்தில் நடக்கும் வணிக நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என போலீஸ் உத்தரவிட்டுள்ளது. அதோடு அங்கு முறைகேடாக  நடந்த நடவடிக்கைகளைக் கண்டித்து விளக்கம் சொல்ல வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி  டெவலப்மெண்ட் அதாரிட்டியும், ‘ஏன் நில ஒதுக்கீ ட்டை ரத்து செய்யக் கூடாது?’ என கேட்டு நோட்டீஸ் அனுப்பி  உள்ளது.

சுயமரியாதைக்காரர் என்ன சொல்லப் போகிறார்?

25.12.2011 அன்று நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் என்ற ஏட்டில், செக் மோசடி வில்லங்கம் வீரமணி கைதாவாரா? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அவதூறு பரப்பும் நோக்கில் உண்மைக்கு மாறான பல தகவல் களைக் கொண்ட கட்டுரை - செய்தியாளர் அச்செய்தியைத் தந்தவர், அச்சிட்டு வெளி யிட்ட வரும் ஆகிய மூவர்களான
1. குமுதம் ரிப்போர்ட்டரின் அச்சிடுவோர், வெளியிடுவோரான பா.வரதராஜன்,
2. குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் - கட்டுரையாளர் ஜி.வெங்கட்ராமன்,
3. பி.இராமசாமி என்ற டெல்லி நபர் ஆகியோருக்கு அக்கட்டுரை எப்படி அவதூறான தகவல்களைக் கொண்டுள்ளது என்பதை விளக்கி அதில் கண்டுள்ள பொய்ச் செய்திகளை மறுத்து,

இக்கட்டுரைக்காக மன்னிப்புக் கேட்பதோடு முக்கிய பக்கத்தில் மறுப்பு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அப்படி வெளியிடப்படா விட்டால், சிவில், கிரிமினல் சட்ட நடவடிக்கைகள் இவர்கள்மீது எடுக்கப் படும் என்றும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்கள் வக்கீல் நோட்டீசு அனுப்பி யுள்ளார்கள்!    



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் 


வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார் 

முட்டாள்தனம் 
இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?- ‘விடுதலை’(14.11.1972)யில் பெரியார்

ஹிந்தி இருக்கட்டும்
இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.- ‘விடுதலை’(07.10.1948)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு 
….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை(28.3.60)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி 
இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்

முக்கொலை 
போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும்கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? – விடுதலை (5.4.67)யில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது 
தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு 
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)
தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .
..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.
இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்? 
சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி 
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? 
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம் 
அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் 
தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை? 
தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை 
இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?

EVR ON RESERVATION:

எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது
மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் – அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.- தந்தை பெரியார்



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard