New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆபிரகாமினரின் தீயொழுக்கமும் புறஜாதியினரின் நல்லொழுக்கமும்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
ஆபிரகாமினரின் தீயொழுக்கமும் புறஜாதியினரின் நல்லொழுக்கமும்
Permalink  
 


பழைய ஏற்பாட்டின் புனைக்கதைகளுள் முக்கிய கதாபாத்திரம்- ஆபிரகாம், ஈசாக்கு. இவர்கள் வாழ்நாளில் நடந்ததான கதைகள். பந்ஞம் வர பக்கத்து நாடுகள் செல்கின்றனர். அங்கே-

images?q=tbn:ANd9GcTQBUlOI8Iw6F8LsbT2M8Omq5-yBaGK31XtUexXtcL1KlS3qGI&t=1&usg=__hw1o8NtnTaljjPyG2DOuWr_VI5k=

ஆதியாகமம்: 12

10.அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்றுதேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால்ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.11.அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோதுதன் மனைவி சாராயைப் பார்த்துநீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.12.எகிப்தியர் உன்னைக் காணும்போதுஇவள் அவனுடைய மனைவி என்று சொல்லி,என்னைக் கொன்றுபோட்டுஉன்னை உயிரோடேவைப்பார்கள்.13.ஆகையால்உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும்உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும்நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.14.ஆபிராம் எகிப்திலே வந்தபோதுஎகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.15.பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டுபார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக்கொண்டுபோகப்பட்டாள்.16.அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்அவனுக்கு ஆடுமாடுகளும்கழுதைகளும்,வேலைக்காரரும்வேலைக்காரிகளும்கோளிகைக் கழுதைகளும்ஒட்டகங்களும் கிடைத்தது.17.ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும்,அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.18.அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்துநீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?19.இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன?இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனேஇதோ உன் மனைவிஇவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.20.பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்அவர்கள் அவனையும்அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

 

images?q=tbn:ANd9GcT4FlS2Z0NHtU1oIRfPrHQT4TvMSEwmozPfdXhwI0hYkKru6A8&t=1&usg=__UlgNg_eMSdFPTGvHuygj77Wk70U=ஆதியாகமம்: 20

  1. ஆபிரகாம் அவ்விடம் விட்டுதென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணிகாதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறிகேராரிலே தங்கினான்.2.அங்கே ஆபிரகாம் தன்மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலேகேராரின் ராஜாவாகியஅபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.3.தேவன் இரவிலேஅபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றிநீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீசெத்தாய்அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.4.அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்ஆண்டவரேநீதியுள்ள ஜனங்களைஅழிப்பீரோ?5.இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையாஅவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளேஉத்தம இருதயத்தோடும் சுத்தமானகைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.6.அப்பொழுது தேவன்உத்தமஇருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்நீ எனக்குவிரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்ஆகையால்நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

9.அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்துநீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய்நீ என்மேலும்என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.10.பின்னும் அபிமெலேக்குஆபிரகாமை நோக்கி,என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.11.அதற்கு ஆபிரகாம்,இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.12.அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்;அவள் என் தகப்பனுக்குக் குமாரத்திஎன் தாய்க்குக் குமாரத்தியல்லஅவள் எனக்குமனைவியானாள்.13.என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோதுநான் அவளை நோக்கிநாம் போகும் இடம் எங்கும்நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்14.அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும்வேலைக்காரரையும்,வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்துஅவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.

 

images?q=tbn:ANd9GcSDYs3UrOZlNBEnDkxaXZado8nAwSN3MLuma4NL9Tj1IiZrc5Q&t=1&usg=__iD0Q2_bC5Nit4gKG2EK2XB464F4=ஆதியாகமம்: 26

6.ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.7.அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்துவிசாரித்தபோதுஇவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்குஅழகுள்ளவளானபடியால்அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள்என்று எண்ணிஅவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.8.அவன் அங்கே நெடுநாள்தங்கியிருக்கையில்பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப்பார்க்கும்போதுஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடேவிளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.9.அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்துஅவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்குஅவள் நிமித்தம் நான் சாகாதபடிக்குஇப்படிச்சொன்னேன் என்றான்.10.அதற்கு அபிமெலேக்குஎங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும்எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.11.பின்பு அபிமெலேக்குஇந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

 

எகிப்தியரும் , கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் கடவுள் பக்தியும் தர்மமும் நிறைந்த்வர்களாக உள்ளனர்.

ஆபிரகாம் இஸ்ரேலின் சிறு தெய்வமான கர்த்தர் தந்தடான நியாயப் பிரமாண சட்டத்திற்கு விரோதமாக சொந்த தங்கையையே மணந்தாராம். ஆதியாகமம்: 20:1212.அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்அவள் என் தகப்பனுக்குக் குமாரத்திஎன் தாய்க்குக் குமாரத்தியல்லஅவள் எனக்குமனைவியானாள்

 

லேவியராகமம்: 20:7 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டுஅவன் அவளுடையநிர்வாணத்தையும்அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.1

அப்பா இருவருக்கும் ஒரே மாதிரியான கதை, அதுவும் அதே ராஜாவுடன்.

பைபிளியல் அறிஞரகள் ஆபிரகாம்-ஈசாக்கு-யாக்கோபு மூவரும் வெவ்வேறு குழுத்தலைவர்கள், வெவ்வேறு கடவுள்களை வணங்கியவர்கள், பின் நாளில் மூவரையும் இணைத்து கதை செய்யப்பட்டது.

புற ஜாதியினர் நியாயமாக் உள்ளனர். ஆபிரகாம் தங்கையை மணந்தார் எனில் ராஜா தாவீதோ பலருடைய மனைவிகளை அபகரித்து கணவர்களை கொன்றவன்




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ஆபிரகாமினரின் தீயொழுக்கமும் புறஜாதியினரின் நல்லொழுக்கமும்
Permalink  
 


யார் அந்த அந்திக்கிறிஸ்து?
அந்திக்கிறிஸ்து பிறக்கும் இனம்
Selected

"இயேசு தாம் பிறப்பதற்கு யூத குலத்தைத் தேர்ந்தெடுத்ததைப்போல, அந்திக்கிறிஸ்துவும் யூத குலத்தில்தான் பிறப்பானா?" இந்த கேள்விக்கு பதிலைப் பார்ப்பதற்கு முன்பாக யூதர்களின்மனோபாவத்தைப்பற்றிப் பார்த்து விடுவது உத்தமம்.

star2.gif  தன் இனம் அல்லது ஜாதியின்மேல் பற்றுக்கொண்ட எத்தனையோ மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். பெண் கொடுப்பதிலும், பெண் எடுப்பதிலும் மாத்திரமல்ல, தண்ணீர் குடிப்பதில்கூட ஜாதி பார்க்கிற ஆட்கள் இருக்கிறார்கள். உயிரே போகிற மாதிரியான தாகமானால்கூட தங்கள் வீட்டுக்கு வந்துதான் தண்ணீர் குடிப்பார்களேயொழிய வழியில் கண்ட இடத்தில் தண்ணீர் குடித்துவிடமாட்டார்கள். அது தீட்டு என்று நினைப்பவர்களும் உண்டு.

star2.gif  பெண் கொடுத்து எடுப்பதிலும்கூட தங்கள் ஜாதிக்குள்ளேயே கிளை, அந்த கிளைக்குள் இலை என்றெல்லாம் ஜாதி வித்தியாசங்களைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். பெண் குதிர்ந்து, பின்உதிர்ந்து போகிறவரைக்கும் வரன் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். உருவத்தை வைத்துக்கூட ஜாதி பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.

star2.gif  இந்தியாவில் ஜாதி பாகுபாடு பார்க்கிறவர்களுக்கு பஞ்சமில்லை, என்றதாலும் யூதர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் எல்லாம் மிதவாதிகள் என்பீர்கள். யூதர்களுக்கு இந்த விஷயத்தில் தீவிரம் ஜாஸ்தி. இவர்களுக்குள் ஜாதி இல்லை, ஆனால் இனவெறி உண்டு. ஜாதி வேறு, இனம் என்பது வேறு (ஜாதி -Caste, இனம் - Race) குடிப்பதற்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் வறட்டுக் கௌரவத்துக்கும், இனப்பெருமைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் யூதர்கள். யூதர்களுக்கு தாங்கள் மாத்திரமே கடவுளின் நேரடி வாரிசுகள் என்ற எண்ணமும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. இயேசுவின் மூலம் நாங்களும் கடவுளின் பிள்ளைகள்தான் என்று விவாதிப்பீர்களேயானால் வேறு வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். அதை எவ்வளவு விளக்கினாலும் நம்பமாட்டார்கள்.

star2.gif  பிற இனத்தாரை ஒருவேளை மதித்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தங்கள் யூதமதத்தைப் பின்பற்ற முன்வரும் பிற இனத்தைச் சோந்தவர்களுக்கு தேவாலயத்தில்கூட தனியிடம்கொடுத்து வைத்திருந்தார்களேயொழிய தங்களுடன் சேர்ந்து அவர்கள் தேவனை ஆராதிக்க அனுமதிக்கமாட்டார்கள். தங்களிடமிருந்து பிரிந்துபோய் புறஜாதியினருடன் சம்மந்தம் கலந்த இஸ்ரவேலின் மற்றைய இனத்தாரை சமாரியர் என்று சொல்லி ஒதுக்கி வைத்ததுடன், அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் பாவித்தார்கள். இதனால்தான் இயேசு சமாரியப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததைக்கூட ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இயேசு நல்ல சமாரியன் கதை என்றெல்லாம் சொன்னபோதும்கூட அதைக் கேட்டுக் கொண்டார்களேயொழிய அவர் அந்த கதையை சொன்ன நோக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வளவு ஏன்? ஆதி அப்போஸ்தலர்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். கர்த்தரால் அழைக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் எல்லாம் பண்ணப்பட்டு கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்த பின்பும்கூட, புறவினத்தாரின் வீடுகளில் சாப்பிடுவதைத் தீட்டாகத்தான் கருதினார்கள் (கலா 2:12-13). பின்னாட்களில் உண்மையை உணர்ந்து கிறிஸ்துவுக்குள் யூதர் என்றுமல்ல, கிரேக்கர் என்றுமல்ல என்று புரிந்துக்கொண்டாலும் துவக்கத்தில் பாரம்பரிய யூதர்களைப்போலத்தான் இவர்களும் மற்றவர்களைத் தீட்டாகக் கருதினார்கள்.

தங்களைக் கர்த்தர் அபிஷேகித்ததைப்போலவே மற்றவர்களையும் அபிஷேகம் பண்ணுகிறார் என்பதுகூட துவக்கத்தில் இவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. புறஜாதியினருக்கு பேதுரு சுவிசேஷம் அறிவித்து திரும்பினபோது யூதர்களான மற்ற அப்போஸ்தலர்கள் அதைக்குறித்து பேதுருவிடம் தர்க்கம் செய்தார்கள். பேதுருவும் அவர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுக்கவேண்டியதாயிருந்தது (அப் 11:1-3). கிறிஸ்துவை அறிந்த சீடர்களுக்கே மற்ற இனத்தவரை ஏற்றுக்கொள்வது இத்தனை கஷ்டமாக இருக்குமானால் மற்ற யூதர்களின் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

தங்கள் இனத்தைச் சேராத ஒருவரை தங்களுக்கு சகமனிதராகவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் யூதர்கள்புறஜாதியைச் சேர்ந்த ஒருவரை தங்களுக்கு ராஜாவாக எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? யூதர்களை ஆண்ட பார்வோன் முதல் ரோம ராயன்கள் வரைக்கும் பலரையும் ராஜாவாக ஏற்றுக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள்? என்பீர்கள். ஒரு ராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பது என்பது வேறு. ஒருவரை ராஜாவாக என்று ஏற்றுக்கொள்வது வேறு. நீங்கள் சொன்ன பார்வோன் முதல் ரோமர்கள் வரைக்கும் யார் ஒருவரும் யூதர்களால் தங்களுக்கு ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் தங்கள் படைபல பராக்கிரமத்தால் தங்களை ராஜாவாக்கிக்கொண்டார்கள். அவ்வளவுதான். யூதர்களை சுயாதீனமாக ஒருவரை ராஜாவாக தேர்ந்தெடுத்து முடிசூட்டும்படி சொன்னால் அவர் எத்தனைதான் வல்லவராகவும், நல்லவராகவும் இருந்தாலும் அவர் தங்கள் இனத்தவராயில்லாத பட்சத்தில் அவரை தங்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தமாட்டார்கள்.

star2.gif  இனிவரப்போகும் அந்திக்கிறிஸ்துவின் பணிகளைப்பற்றி வேதம் சொல்லும் செய்திகளில் பெரும்பான்மையானவை யூதர்களோடு சம்மந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. யூதர்களின் அரசியல், யூதர்களின் சமுதாயம், யூதர்களின் மதம் போன்ற எல்லாவற்றிலும் அந்திக்கிறிஸ்துவுக்கு தொடர்பு இருக்கிறது. இதை அந்திக்கிறிஸ்து செய்யவேண்டுமானால் அவன் யூத இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால்மட்டுமே சாத்தியம். வரப்போகும் அந்திக்கிறிஸ்து யூத இனத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்று யூதர்களின் மனோபாவத்தை மாத்திரம் வைத்துச் சொன்னால் போதாது. வேதத்தில் இதுபற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிடவேண்டும்.

வேதத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றி அநேக இடங்களில் மறைவாகவும், பல இடங்களில்வெளியரங்கமாகவும் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கட்டுரையின் துவக்கத்தில் நாம் பார்த்ததைப்போல, வேதத்தில் காட்டப்பட்டுள்ள மனிதர்களில் சிலர்கூட வரப்போகிறவனாகிய அந்திக்கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாகக் காட்டப்பட்டிருக்கிறார்கள். சில சம்பவங்கள்கூடஅந்திக்கிறிஸ்துவின் காலத்திற்கு நிழலாட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. இதை கவனமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற ஒரு பகுதியை வாசித்துப் பார்க்கலாம். எசேக்கியேலின் புத்தகத்தில் 21:25-27 வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

எசேக்கியேல் 21:25-27. இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்துக்கு முடிவுவரும் காலத்தில் உன்நாள் வந்தது. பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு, அது இனி முன்போலிராது. தாழ்ந்தவனை உயாத்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன். உரிமைக்காரனானவர் வரும்மட்டும் அது இல்லாதிருக்கும். அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற காரியங்களை பெரிதாக ஒன்றும் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்த்தாலே அர்த்தம் புரிகிறது. இல்லையா? இந்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளைக் கொஞ்சம் எளிமைப்படுத்திப் பாருங்கள். விஷயம் விளங்கும். வசனம் 25ஐ எடுத்துக்கொள்ளுங்கள். இங்கே, ஓர் அதிபதி அல்லது ஓர்ஆளுநரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அதிபதி ஆளும் தேசம் - இஸ்ரவேல். அவனுடைய குணாதிசயம் - அவபக்தி, துன்மார்க்கன். அவனுடைய முடிவு காலம் - அக்கிரமத்துக்கு முடிவு வரும் காலம்.

இந்தப் பகுதியை அவசரமாக வாசித்துப் பார்த்தால் ஏதோ நடந்துமுடிந்த சரித்திரத்தைப்பற்றி சொல்லப்பட்டதைப்போலக் காணப்பட்டாலும், அது உண்மையில் கடைசிக்காலத்தில் நடக்கப்போகிற காரியத்தையே முன்னறிவித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வசனத்தில் காட்டப்பட்டிருக்கும் காலக்குறிப்பைப் பாருங்கள். "அக்கிரமத்துக்கு முடிவு வரும் காலம்". அக்கிரமத்துக்கு முடிவு வரும் காலம் என்பது கடைசிக்காலத்தைத்தானே குறிக்கிறது? தானியேலின் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிக் குறிப்பிடும்போது, பாதகரின் பாதகம் நிறைவேறும் காலத்தில் வெளிப்படுவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தானியேலின் புத்தகத்திலும், எசேக்கியேலின் புத்தகத்திலும் சொல்லப் பட்டிருப்பவற்றை சேர்த்துப் பார்த்தால் நமக்குத் தெரியவரும் விஷயம் இதுதான். அக்கிரமக்காரர்களின் அக்கிரமங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும் கொடிய காலத்தில்அந்திக்கிறிஸ்து தோன்றுவான். அந்த அக்கிரமங்களுக்கு முடிவு வரும் காலத்தில் அவன் அழிக்கப்படுவான். எசேக்கியேலின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த அக்கிரமத்தின் காலத்தில் இஸ்ரவேலை ஆளும் அதிபதியாக அந்திக்கிறிஸ்து இருப்பான். அவன் பார்வோனைப் போலவோ, அல்லது நேபுகாத்நேச்சாரைப் போலவோ தன் பராக்கிரமத்தால் யூதர்களை அடிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு ஆளுநராக தன்னை ஏற்படுத்திக்கொள்கிறவனாக இருக்கமாட்டான், மாறாக, அவன்யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் யூதாவுக்கு அதிபதியாக ஏற்படுத்தி வைக்கப்பட்ட ஒரு ஆளுநராகவே இருப்பான்.

star2.gif  அந்திக்கிறிஸ்து வரும்போது யூதர்கள் அவனை ஏற்றுக்கொள்வார்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். வாசித்துப்பாருங்கள். யோவான் 5:43ஐ.

யோவான் 5:43: நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். இங்கே இயேசு சொல்லியிருக்கும் யூதரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறொருவன்தான் அந்திக்கிறிஸ்து என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். யூதர்களுக்கு அதிபதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபதியாக இருக்கவேண்டுமானால் அது ஒரு யூதனாகத்தான்இருக்கவேண்டும். இயேசுவை இன்றளவும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம். இயேசு முழுமையான யூதரல்ல என்று அவர்கள் நினைத்ததேயாகும். இயேசு ஒரு முழுமையான யூதன்தான் என்பதை நிரூபிக்கும் முயற்சியாகத்தான் சுவிசேஷத்தில் அவருடைய வம்சாவளிப் பட்டியலையும்சேர்த்து எழுதியிருக்கிறார்கள். யூதர்கள் தங்களுக்கு எத்தனைதான் ஒருவர் உதவி செய்தாலும் அவரை மதிப்பார்களேயொழிய, அவர் யூதராயிருந்தால் மாத்திரமே அவரை ஏற்றுக் கொள்வார்கள். வரப்போகும்அந்திக்கிறிஸ்துவை அவர்கள் மனப்பூர்வமாக தங்கள் அதிபதியாகவும், ஆளுநராகவும் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் அவன் யூதனாய்ப் பிறந்தால்தான் முடியும். இரண்டாவது ஆதாரமாக நாம் தானியேல் 11ம் அதிகாரத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் காரியத்தைப் பார்க்கலாம். இதற்காக நீங்கள் தானியேல் 11:36-38 வரைக்கும் உள்ள வசனங்களைப் படிக்கவேண்டும்.

தானியேல் 11:36-38: இராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான். கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைக்கூடிவரும், நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்தீரிகளின் சிநேகத்தையும், எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னை பெரியவனாக்கி, அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களாலும் கனம்பண்ணுவான். வேதத்தில் மிகவும் வெளியரங்கமாக அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லும் வேத பகுதி இதுதான். இதில், அந்திக்கிறிஸ்துவின் குணாதிசயங்களும் அவன் செய்யப்போகும் பணிகளும் சொல்லப்பட்டுள்ளன.

இதில் அந்திக்கிறிஸ்துவின் குணாதிசயங்களாக சொல்லப்பட்டுள்ள காரியங்கள்: தன்னிச்சையாக காரியங்களைச் செய்வது, தன்னைத்தானே உயர்த்திக்கொள்வது, தேவனுக்கு விரோதமாக பேசுவது, தேவனை மதியாமலிருப்பது, பெண்களின் சிநேகத்தை விரும்பாமலிருப்பது.

அவனுடைய பணிகளாக சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்: எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை உயர்த்துவது, ஆச்சரியமான காரியங்களைப் பேசுவது, புதிதாக ஒரு தேவனை உருவாக்குவது. இந்த வேதப்பகுதியில் அந்திக்கிறிஸ்துவின் குணங்களும், பணிகளும் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்குத் தேவையான வேறொரு விஷயமும் சொல்லப்பட்டுள்ளது.

வசனம் 37ல் தன் "பிதாக்களின் தேவன்" என்கிற பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறதை கவனிக்கவேண்டும். இந்த வார்த்தைதான் அந்திக்கிறிஸ்து யூதகுலத்தில் பிறப்பதைச் சுட்டிக்காட்டும் வார்த்தை. தமிழ் வேதாகமத்தில் இந்த வசனம், தன் பிதாக்களின் தேவர்களை என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஆங்கிலம் மற்றும் மூலமொழி வேதாகமங்களில் தன் பிதாக்களின் தேவன் என்கிற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Daniel 11:37 : தானியேல் 11:37
Neither shall he regard the God of his fathers, nor the desire of women, nor regard any god: for he shall magnify himself above all.

தன் பிதாக்களின் தேவன் என்கிற வார்த்தை அந்திக்கிறிஸ்து யூத குலத்தைச் சேர்ந்தவனாக வெளிப்படுவதையே காட்டுகிறது. காரணம், தன் பிதாக்கள் என்கிற வார்த்தை மாம்சத்தின்படி அவன் பிறக்கும் குலத்தின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களையே குறிக்கும். தன் பிதாக்களின் என்கிற பதம் பழைய ஏற்பாடு முழுவதிலும் யூத குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் பிதாக்களின் தேசம், தங்கள் பிதாக்களின் கல்லறை, தங்கள்பிதாக்களின் தேவன் என்கிற பதங்கள் எல்லாமே ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற முற்பிதாக்களைக் கொண்ட இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடைசியாக, அந்திக்கிறிஸ்துவுக்கு உபயோகப்படுத்தப்படும் அந்திக்கிறிஸ்து என்கிற பெயரே அவன் யூத குலத்திலிருந்து வருகிறவன் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அந்திக்கிறிஸ்து என்று சொல்லப்படும் வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு. ஒன்று கிறிஸ்துவுக்கு விரோதமானவன், இன்னொன்று போலியான கிறிஸ்து. இவன் தன்னை கிறிஸ்துவைப்போலக் காண்பித்துக் கொள்வதினாலேயே யூதர்கள் அவனை வரப்போகிற மேசியாவாக ஏற்றுக்கொள்வார்கள். அவனுடைய போலித்தனம் வெளிப்படும் நாட்கள் வரைக்கும் அவனை தங்கள் மேசியாவாகவேநம்புவார்கள். வெளிப்படப்போகும் அந்திக்கிறிஸ்து கிறிஸ்துவின் போலியான மாதிரி என்பதால் அவன் கிறிஸ்துவைப்போலவே தன்னையும் யூதகுலத்திலிருந்தே வெளிப்படப்பண்ணவேண்டும். வேறொரு குலத்தில் பிறந்த ஒருவரையும் யூதர்கள் கிறிஸ்து என்றோ, தங்கள் மேசியா என்றோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

star2.gif  உண்மையான மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வந்துப்போனதை அவர்கள் (யூதர்கள்) இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக்காரணம், மேசியாவைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரியங்கள் எல்லாம் இயேசுவுக்குப் பொருந்தவில்லை என்று அவர்கள் தவறாக நினைப்பதுதான். வேதத்தில் மேசியாவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் காரியங்கள் எல்லாம் ஆவிக்குரிய அர்த்தமுள்ளதாகும். ஆனால் அதை யூதர்கள் மாம்சத்துக்குரியதாக கருதுவதால்தான் இயேசுவை அவர்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. புரிந்துக்கொள்ளாததினால்தான் இயேசுவை அவர்கள் மேசியா என்று ஒத்துக்கொள்வதில்லை. ஓர் உதாரணத்துக்கு, இயேசு ஜனங்களுடைய பாவங்களை நீக்கி அவர்களை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக வந்தார். ஆனால், யூதர்கள் விடுதலை என்கிற பதத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு மேசியா என்பவர் தங்கள் தேசத்திற்கு நிரந்தரமான விடுதலையை பெற்றுத்தந்து தங்களை உயர்த்துவார். மேசியா வருவதன் நோக்கமே அதுதான் என்று கருதுகிறார்கள் இதுதான் மாமிச பிரகாரமான கருத்து ஆகும்.

இயேசுவிடம் இதுபற்றி ஜாடைமாடையாக விசாரித்தபோதுகூட அவர், என்னுடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்று சொல்லிவிட்டார். அவர் பரலோக ராஜ்ஜியத்தைக்குறித்து பேசிக்கொண்டிருக்க, யூதர்கள் மேசியா என்பவர் பூலோக ராஜ்ஜியத்தை தங்களுக்கு தருபவராக வருவார் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். அதுதான் சிக்கல்.

star2.gif  மேசியா என்பவர் ஆவிக்குரிய ராஜா என்று வேதத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட இவர்களோமேசியா தங்களுக்கு இவ்வுலகத்துக்குரிய ராஜாவாக வெளிப்படுவார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆவிக்குரிய காரியங்களை மாம்சத்துக்குரிய காரியமாக கருதிப் பார்ப்பதால்தான் மெய்யான மேசியா வந்துபோயும், இனிமேல்தான் அவர் வருவார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது விஷயத்தில் ஆபத்தே இதுதான். ஆவிக்குரிய காரியத்தை மாம்சத்துக்குரியதாக நினைத்து சிந்தித்துக்கொண்டிருந்தால் நடக்கவேண்டியது கண்ணெதிரே நடந்தாலும் அது தெரியாமல் போய்விடும். ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.

star2.gif  இரண்டாம் வருகை காரியத்தில்கூட நாம் அவர் வருகையைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும் காரியங்களை லாஜிக், அது இது என்று மாம்சத்துக்குரியதாக எண்ணி தியானித்துக்கொண்டிருந்தால் எதுவொன்றும் கண்ணெதிரே நடந்தாலும் புரிந்துக்கொள்ளமுடியாமல் போய்விடும். கவனம்!

யூதர்கள் மேசியா விஷயத்தில் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு காரியங்களையும் நுணுக்கமாக ஒப்பிட்டுப் பார்த்தேதான் மேசியா என்று ஒப்புக்கொள்வார்கள். ஒருவர் தங்களுக்கு தேசத்தை தந்துவிட்டார் என்பதற்காக மாத்திரம் அவரை மேசியா என்று ஒப்புக்கொண்டுவிடமாட்டார்கள். அப்படி ஒப்புக்கொள்வதாயிருந்தால் 1948ல் யூதா தனி நாடாக விடுதலைபெற்றபோது, அதன் விடுதலைக்கு பாடுபட்ட யாராவது ஒருவரை அவர்கள் மேசியா என்று ஒப்புக்கொண்டிருந்திருக்கலாமே! அப்படி நடக்கவில்லையே!

அவர்கள் ஒருவரை மேசியா என்று ஒப்புக்கொள்வதற்கு பல காரியங்களை அடையாளமாக வைத்திருக்கிறார்கள். அவை ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் வேதத்தின் அடிப்படையிலேயே அடையாளமாக வைத்திருக்கிறார்கள். அந்த அடையாளங்கள் எல்லாம் பொருந்தினால்தான் அவரை தங்கள் மேசியா என்று ஏற்றுக்கொள்வார்கள். அப்படி மேசியாவின் அடையாளங்களாக அவர்கள் வைத்திருப்பதில் பிரதானமானது அவர் பிறப்பு பற்றியது. வாசித்துப்பாருங்கள் மத்தேயு 2:4-6.

மத்தேயு 2:4-6.
அவன் (ஏரோது) பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

அதற்கு அவர்கள்: யூதாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார். அதேனென்றால், யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல, என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது (மீகா 5:2) என்றார்கள். கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் கிறிஸ்துவானவர் பிறந்துவிட்டார் என்று சொன்னவுடன் யூதர்கள் கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி வேதத்தைக்கொண்டு பொருத்திப்பார்க்கிறதைகவனித்தீர்களா? இதைத் தவிரவும், மேசியா தாவீதின் வம்சத்தில் பிறப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது (ஏசாயா 11:2). எரேமியா 30:21ல் மேசியாவைக்குறித்து சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனத்தில் மேசியா யூதர்கள் நடுவிலிருந்து எழும்புவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

எரேமியா 30:21: அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார். அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன். அவர் சமீபித்து வருவார். என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தை பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார். யாரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு இதுமாதிரி நூற்றுக்கணக்கான அடையாளங்களை யூதர்கள் தங்கள் மனதிலே நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொருந்துகிறதா என்று பார்த்துதான் அவர்கள் மேசியா என்று ஒருவரை ஏற்றுக்கொள்வார்களேயொழிய, மற்றபடி அவர்களுடைய எந்தப் பாராக்கிரமத்தையும், வலிமையையும் பார்த்து ஏற்றுக்கொண்டு விடமாட்டார்கள். எனவே,வரப்போகிற அந்திக்கிறிஸ்து என்கிற போலியான மேசியா யூதர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் எல்லா மாம்சத்துக்குரிய அடையாளங்களையும் உடையவனாகத்தான் வெளிப்படுவான். யாரும் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பிவிடாதபடிக்கு பார்த்து பார்த்து மேசியாவுக்குரிய எல்லா விஷயங்களும் தனக்கு பொருந்துகிற மாதிரி இருக்கும்படிக்கு கவனமாயிருப்பான். ஒரிஜினல் ஆட்களைவிட வேஷம் போடுகிறவர்கள்தானே தங்களைக்குறித்து கவனமாயிருக்கவேண்டும்!.

star2.gif  அதில் பிரதானமான அடையாளம் வரப்போகிற மேசியா யூதர்கள் நடுவிலிருந்தே எழும்புவார் என்பதே! அப்படிப் பார்த்தால் அந்திக்கிறிஸ்து யூத குலத்தில்தான் பிறப்பான் என்பது ஓரளவு யூகிக்கமுடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



images+(3).jpg
மனித வர்க்கத்தில் உலகில் மிகவும் முதன்மையானவர் என்று கருதப்படும் மாற்றுத் திறன் ஆணின் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்பெயினின் மாட்ரிட் பல்கலைக்கழகம், கார்லஸ்&3 ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்பெயினில் சிமா டி லாஸ் ஹ்யூசாஸ் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் தன்மை பரிசோதிக்கப்பட்டதில் அந்த எலும்புகள் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எல்விஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படிமம் இருந்த இடத்தில் மேலும் பல எலும்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். கிடைத்திருக்கும் எலும்புக்கூட்டுக்கு சொந்தக்காரர் மாற்றுத் திறனாளி, நடுத்தர வயதுக்காரர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்க


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மறக்கப் பட்ட மத புத்தகங்கள்:எகிப்தின் இறந்தவர்களின் புத்தகம்

 

220px-Weighing_of_the_heart3.jpg
எகிப்து மிக பழமையான கலசாரம் கொண்ட நடு.எகிப்திய நாகரிகம் சுமார் பொ.மு 4000 என்று கணிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையிலேயே பிற வரலாற்று சம்பவங்களின் வருடம் குறிப்பிடப்படுகின்றது.நாகரிகமான மனித்னின் வரலாறு 10,000 வருடத்திற்கு குறைவுதான்.அதிலும் ஆதார பூர்வமாக் நிரூபிக்கப் பட்ட வரலாறும் குறைவுதான்.சான்றுகளின் அடிப்படையில் இப்படி நடந்து இருக்க்லாம் என்ற மிகவும் பொருந்தக் கூடிய அனுமான்மே வரலாறாக படிக்கிறோம்.
வரலாற்றில் பல் விலங்கினங்கள்,மனித இனங்கள்,மொழிகள்,மதங்கள் காணாமல் போவது மிக இயல்பான ஒன்று.சூழ்நிலைக்கு ஏற்ப த்ன்னை மாற்ற முடியாத எதுவும் அழிந்து விடும்.மத புத்தகங்க்ள் ஒரு மதத்தின் பல் கொள்கைகளை வரையறுக்கும் ஒன்று.பல் மதங்கள் காணாமல் போனாலும் அவ்ற்றின் மத புத்தகங்கள் சில சமயம் தேடலில் கிடைக்கும்.அப்ப்டிப்பட்ட ஒன்றுதான் இன்ந்த எகிப்திய இறந்தவர்களின் புத்தகம். இந்த புத்தகங்களை ஒரு காலத்தில் சொல்வது எல்லாம் உன்மை என்று நம்பி இருப்பார்கள்,பிரச்சாரம் செய்தும் இருப்பார்கள் என்பதும் உண்மையே.இந்த புட்த்கம் பொ.மு.2550 ல் இருந்து பொ.மு 50 வரை சுமார் 2500 வருடம் பயன் பாட்டில் இருந்தது என்றால் இம்மதம் எவ்வளவு செல்வாக்கு பெற்று இருக்கும் என்று உண்ரலாம்.
இப்புத்தக்த்தில் பல் மந்திரங்கள் இருப்பதாகவும்,அதன் மூலம் இறந்தவரின் ஆன்மாவை வேறு உலக்த்திற்கு வழி நடத்த முடியும் என்றும் குறப்படுகிறது.இதில் உள்ள சில பகுதிகள் பொ.ஆ 3000 முன் என்று கூறப்ப்டுகின்றது.இவை ஹீரோஜில்ப் என்ற எழுத்துமுறையில் எழுதப்பட்டவை.இறந்தவ்ர்களை அடக்கம் செய்யும்போது பல பிரமிட்களில் புத்தக்த்தில் வசன‌ங்களை எழுதுவது உண்டு.
ஒரு மனிதன் கல்லறையில் வைக்கப் பட்டவுடன் அவன் ஆன்மா பறவை(பெயர் பா-ba) ஆகிவிடுகிறது என்று நம்புகின்றனர்.நமது கிராமப்புறங்களில் கூட முன்னோர்களுக்கு உணவளிக்கிறோம் என்று காகத்திற்கு உணவளிக்கும் வழக்கம் போன்றது. இப்புத்தகத்தின் முக்கியமான் விஷயம் என்னவென்றால் நியாயத் தீர்ப்பு நாள் பற்றி உலகிலேயே முதன் முதலில் குறிபிடுவதாகும்.உலகின் எல்லா மனிதர்களும் கடவுள் ஓசிரிஸ் முன் நிறுத்தப் பட்டு அவர்களின் நம்பிக்கைகேற்ப பல்ன் கிடைக்கும்.கவனிக்க்வும் ஒருவரின் செயல்களைப் பொறுத்து அல்ல.உடலும் உயிர் பெறும்என்று நம்பியதால் உடல்களை பிரமிட்களில் பேணிக் காத்து வந்த்னர் .இப்புத்தகம் பிற்கால் ஆபிரஹாமிய மத புத்தகங்களின் பல கருத்துகளை ஒத்து வருவது ஆய்வுக்குறியது.
மோசஸ் எகிப்தில் இருந்து யூதர்களுக்கு வாகளிக்கப் பட்ட இஸ்ரேல் நாட்டுக்கு வரும் வழியில் வழங்கப்பட்டதுதான் பழைய ஏற்பாட்டின் முதல் 5 ஆகமங்கள்(ஆதி ஆதி ஆகமம்,யாத்திர ஆகமம்,லேவியர் ஆகமம்,எண் ஆகமம்,உபாகமம்) யூதர்களின் தோரா(சுமர் பொ.மு 1300) ஆகும்.அங்கு வந்து கடவுள் உதவியுடன் அங்கு இருந்தவர்களை கொன்று துரத்தி விட்டு நாடு பிடித்தார்கள் என்று கதை போகிறது.இப்போது நடந்ததை சொல்லவில்லை அப்போதும் இதுதான்.
இந்த கதை உண்மையிலே நடந்ததா என்பதில் பல கருத்துகள் உண்டு.இது குறித்து சில கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்கள்,அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துவதாக் கூறுவது சந்தேகத்த்திற்கு உரியது. இதை குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
இந்த எகிப்திய புத்தகத்தின் பல பகுதிகள் தோராவிற்கும்,பைபிளுக்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு.மதங்கள் வருவதும்,மாற்றம் அடைவதும்,அழிவதும் வரலாற்றில் இயல்பான விஷயம்.மதத்தின் பெயரால் நடை பெறும் வன்முறை,போர்கள் எல்லாம் மறைந்து மனிதம் தழைக்க உதவியாக் இருந்தால் மட்டுமே மதம் நீடிக்க வாய்ப்பு உண்டு.இப்புத்தக்ம் இங்கேத்ரவிறக்கம் செய்து கொள்ளலாம்.அது குறித்த ஆவணப் படம்.
 
 
thiruchchikkaaran said...

//இப்புத்தகத்தின் முக்கியமான் விஷயம் என்னவென்றால் நியாயத் தீர்ப்பு நாள் பற்றி உலகிலேயே முதன் முதலில் குறிபிடுவதாகும்.உலகின் எல்லா மனிதர்களும் கடவுள் ஓசிரிஸ் முன் நிறுத்தப் பட்டு அவர்களின் நம்பிக்கைகேற்ப பல்ன் கிடைக்கும்.கவனிக்க்வும் ஒருவரின் செயல்களைப் பொறுத்து அல்ல.உடலும் உயிர் பெறும்என்று நம்பியதால் உடல்களை பிரமிட்களில் பேணிக் காத்து வந்த்னர் .இப்புத்தகம் பிற்கால் ஆபிரஹாமிய மத புத்தகங்களின் பல கருத்துகளை ஒத்து வருவது ஆய்வுக்குறியது.//

மிக முக்கிய கருத்து.

எகிப்தியர்களின் மதத்தில் இருந்து தான் யூத மதமும் அதன் தொடர்ச்சியான பிற அபிரகாமிய மதங்களும் உருவாகின என சொல்லுவதில் லாஜிக் இருப்பதை மறுக்க முடியாது.

கருத்தியல் , புவியியல்,வரலாறு,கால அட்டவணைப் படி இந்தக் கருத்து உண்மையாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே
ஆதாரபூர்வமான உண்மைகளை மட்டும் வைத்துப் பார்த்தால் அப்படித்தான்.பல் உண்மைகளை வெளியில் அப்ப்டியே சொன்னால் பல்ருக்கு கோபம் வரும் என்பதால் பல் ஆய்வு அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிட தடை உள்ளது.
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

 

 

thiruchchikkaaran said...

சகோதரர் சார்வாகன் அவர்களே, 

வணக்கம், நான் எகிப்துக்கு சுற்றுலா சென்ற போது இந்தப் படங்கள், மம்மி, பிரமிடு இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இறந்த பிறகு மீண்டும் அதே உடல் பெயருடன் மீண்டும் எழுப்பப் படுவோம் என்கிற கோட்பாட்டை( இது ஒரு நப்பாசை என்றே நினைக்கிறேன்- ச்சே நமக்கு கிடைஞ்ச உடம்பு, பெயரு நம்பலை விட்டுப் போயிடுமோ, இருக்காது, அது எப்போதும் நமக்குதான் சொந்தம் என்று நினைப்பிலே -எழுந்த ஒரு ஆசை-) இதை முதலில் சொன்னது எகிப்தியரே. ஏனெனில் எகிப்தில் பஞ்சம் பிழைத்து திரும்பிப் போனதாக் சொல்லப் பட்ட காலத்துக்குப் பின்னர் தான் யூத மதம் உருவாகியுள்ளது.

சார்வாகன் said...

அது மட்டுமல்ல நண்பரே
இப்போது அகழ்வாய்வுகள் மோசசும் ,யூதர்களும் கூட எகிப்தியரே என்பதும்,ஒரு கூட்ட எகிப்தியர் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து அதே நாட்டின் பிற பகுதி(இப்போதைய பால்ஸ்தீனம்) சென்றனர் என்பதை கூறுகிறது. பல தெய்வ வழிபாடு ஒரு தெய்வமக்கப் படும் போது பழைய தெய்வங்கள் மோசமானதாக் காட்டப்படும் என்ற ஏகத்துவ தத்துவத்தின்ப‌டி மாற்றி மத புத்தகங்கள் எழுதப் பட்டிருக்கலாம்.
இன்னும் கூட ஆபிரஹாமிய மதங்களில் உடலுடன் உயிர் பெறுவது ஒருஇறையியல் கொள்கையே.
வருகைக்கு நன்றி.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமெரிக்காவும் அடிமைகளின் ரத்தமும்

 

அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்று பள்ளிக்கூடப் பாடங்களில் படித்து இருப்போம். ஆனால் இதில் சில நுணுக்கமான உண்மைகள் உண்டு.  கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த ஆண்டு 1491.  இதனைத் தொடர்ந்து அமெரிக்க கடல் பகுதிகளை 1493 வரை கண்டு பிடித்து உலகத்திற்கு அறிவித்தார்..
கொலம்பஸ் அமெரிக்காவின் உள்ளே நுழைந்த போது அங்கே ஆதிவாசிகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் பெயர் சிவப்பிந்தியர்கள். இன்று வரை இவர்களுக்கு ஏன் இந்தியர்களின் பெயர்கள் வந்தது என்பதை விளக்கும் காரணங்கள் துல்லியமாக இல்லை.  ஆனால் இந்த பெயரே நிலைத்து விட்டது.
Columbus_Taking_Possession.jpg
இன்று உலக நாட்டிற்கெல்லாம் பெரியண்ணனாக இருக்கும் அமெரிக்காவும் அடிமை தேசமாகத்தான் தொடக்கத்தில் இருந்தது. அமெரிக்காவை அடிமையாக வைத்திருந்த நாடு பிரிட்டன். ஏன் இது போன்ற சின்னச் சின்ன விசயங்களை நாம் பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தோன்றும்.  கஷ்டப்பட்டு வந்தவனுக்கு மத்தவங்களோட கஷ்டம் தெரியும்ன்னு சொல்லுவாங்களே?  அது போன்ற பழமொழிகள் இன்று வரைக்கும் வெறும் பேசும் மொழியாகத்தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
16 ஆம் நூற்றாண்டு காலத்தில் இன்றைய அமெரிக்கா என்பது அமெரிக்க குடியேற்ற நாடாக இருந்தது. வட மற்றும் தென் அமெரிக்கா போல கண்ட பிரிவினைகள் போலில்லாமல் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. 1500 ஆம் ஆண்டில் கேப்ரல் என்ற போர்த்துகீசியர் பயணித்த கப்பல் வழிதடுமாறி பிரேசில் பகுதியை சென்றடைய தென் அமெரிக்காவின் பிரேசிலை போர்த்துகீசியர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கினர். 

பிரிட்டன் அமெரிக்காவின் உள்ளே நுழைவதற்கு முன்பே இரண்டு கணவான்கள் அதாவது ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் அங்கேயுள்ள கனிம வளங்கை தங்கள் பங்குங்கு ரைட் ராயலாக தங்கள் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். குறிப்பாக தென் அமெரிக்க பகுதிகளில் இருந்த தங்க சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட தங்கபாளங்களைப் பார்த்து ஒவ்வொரு ஐரோப்பிய தேசங்களும் நான் முந்தி நீ மூந்தி அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதிகளையும் ஆக்ரமிக்கத் தொடங்கியது. மொத்தத்தில் வந்தேறிகளால் சூறையாடப்படும் நாடாகத்தான் அமெரிக்கா இருந்தது.
16 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரிட்டனின் நிறுவனங்கள் உள்ளே வரத் தொடங்கியது.

black_man+deviyar+illam.jpg
1607ல் பிரிட்டனை ஆண்டு கொண்டிருந்த முதலாம் ஜேம்ஸ் மன்னர் பெயருடன் அமெரிக்காவில் முதல் முறையாக ஜேம்ஸ் டவுன் என்ற நகரம் உருவாக்கப்பட்டது.  இது தான் முதல் முறையாக இங்கிலாந்து உருவாக்கிய காலணி பகுதியாகும். 

ஆனால் 16 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டில் இங்கிலாந்தைப் போலவே அமெரிக்காவிற்கு உள்ளே வந்த ஹாலந்து, பிரான்ஸ் தேசங்களை விட முண்டியடித்துக் கொண்டு இங்கிலாந்து மட்டும் தனது குடியேற்றங்களை அமெரிக்காவில் உருவாக்கியது.
 
இவர்கள் உருவாக்கிய முதல் குடியேற்றப் பகுதி வர்ஜீனிவாகும்.   பிரிட்டன் பந்தக்கால் நட்டு உள்ளே பட்டறையைப் போட்டதும் எப்போதும் போல இங்கிலாந்து அரசாங்கம் அடுத்து கவனம் செலுத்திய விசயம் தொழில் வாய்ப்புகளை குறித்து ஆராய்ந்ததை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கே செய்ய வேண்டிய வணிகத்தின் பொருட்டு புகையிலை சாகுபடியில் கவனம் செலுத்தினர்.  காரணம் வர்ஜீனியப் பகுதியில் நிலவிய சீதோஷ்ணம் புகையிலை விளைச்சலுக்கு அற்புதமாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்து பல பிரபுக்குடும்பங்கள் வந்து சேர்ந்ததும் உழைப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆப்ரிக்க அடிமைகளையும் இறக்குமதி செய்து கொண்டனர். .
17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்த அமெரிக்கா சுதந்திரமடைவதற்கு கருப்பின மக்களின் பங்களிப்பும் மகத்தானது. தங்களை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிரிட்டனை எதிர்த்து அமெரிக்க குடியேற்ற நாடுகள் 1775 ஆம் ஆண்டு சுதந்திரம் கேட்டு ஒரே அணியில் நின்றன. 

அப்போது பிரிட்டன் அரசாங்கம் கலவரத்தினை ஒடுக்க இராணுவத்தை ஏவியது. முறையான் இராணுவ பயிற்சி இல்லாத அடிமையாய் இருந்த கருப்பின மக்கள் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு ஆதரவாக ஒன்று சேரத் தொடங்கினர்.  வெற்றி பெற்றால் உங்களுக்கு விடுதலை என்று கருப்பின மக்களளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு இருந்தது. இதனை நம்பி களம் புகுந்த கருப்பின மக்கள் நடந்த யுத்தத்தில் ஏறக்குறைய 20 000 பேர்கள் கொல்லப்பட்டனர்.
இதே போல 1776 ல் பிலடெல்பியா சுதந்திர பிரகடனத்தின் பொருட்டு மக்களை ஒரே அணியில் திரட்டிய போதும் உருவான யுத்தத்திலும் ஆயிரக்கணக்கான அடிமைகள் கொல்லப்பட்டனர். இந்த அடிமைகள் கலாச்சாரமென்பது அமெரிக்காவில் எங்கெங்கு காணிணும் அடிமையடா என்பது போல் இருந்தது. பிரிட்டன் அமெரிக்காவை விட்டு வெளியேறியதும் இந்த அடிமைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெரிதானது.  
காரணம் வளர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு உழைக்க ஏராளமான ஆட்கள் தேவைப்பட எல்லாவிதங்களிலும் இந்த கருப்பின மக்கள் தான் ஆபாந்தவர்களாக இருந்தனர்.  அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பெருவாரியான விளைச்சலில் இருந்த பருத்தி விளைச்சலுக்கு அடிமைகள் பயன்பட்டதைப் போலவே பிரிட்டன் மூலம் அமெரிக்கர்களுக்கு அறிமுகமான குதிரைப் பண்ணைகளை பராமரிப்பது வரைக்கும் உண்டான் அத்தனை வேலைகளுக்கும் இந்த கருப்பின மக்களை அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர்.  
18 ஆம் ஆண்டு முதல் 20 ஆம் ஆண்டு வரைக்கும் மொத்த நாடுகளும் ஆப்ரிக்காவை நோக்கி படையெடுக்க இரண்டு காரணங்கள் முக்கியமானதாக இருந்தது. முதலில் மஞ்சள் பிசாசு என்றழைக்கப்படும் தங்கம். மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள இயற்கை வளங்கள்.  மற்றொன்று உழைப்புக்குத் தேவைப்படும் கருப்பின மக்கள். இந்த தங்கத்தின் காரணமாகவே அமெரிக்காவின் பூர்விக மக்களான சிவப்பிந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர். 

%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
பிரிட்டன் அமெரிக்காவை தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த சிவப்பந்தியர்களின் எண்ணிக்கை இருபது லட்சம் இருந்து இருக்கலாம். ஆதி இன மனிதர்களைப் போலவே குகைக்குள் வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டுவாக்கிலேயே சற்று வெளியுலக வெளிச்சத்தை பார்த்தனர்.  காரணம் தங்களுக்குரியை வாழ்க்கை முறை மற்றும் வழிபாட்டு முறைகள் எதையும் விட்டுக் கொடுக்காமல் வெளியுலகம் குறித்து கவலைப்படாமலேயே வாழ்ந்த சிவப்பிந்தவர்களின் வாழ்க்கையை அங்கிருந்த மலைக்குகையில் இருந்த தங்கம்  தவிடுபொடியாக்கியது.
1870 ஆம் ஆண்டு. BLACK HILLS. 
இது செவ்விந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பகுதியாகும்.  இதுவொரு நீண்ட மலைத்தொடர்.  தங்களின் தொழில் வளர்ச்சி பயன்பாட்டிற்காக பிரிட்டனிலிருந்து வந்து பணிபுரிந்து கொண்டிருந்த பொறியாளர்கள் தொழிற்சாலைகள் கட்டவும், தேவைப்படுகின்ற சாலைகளை போட மலைகளைக் குடைந்து முன்றேறிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் அதிக அளவில் கருப்பின மக்கள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். 

இந்த மலைகளில் வேலை செய்து கொண்டிருந்த கருப்பின மக்கள் வேலை முடிந்து வெளியே வந்த போது அவர்களின் உடம்பின் மேற்பரப்பில் மெல்லிய தங்க துகள்கள் ஓட்டியிருக்க கவனித்த பொறியாளர்கள் அத்தனை பேர்களையும் வரிசையாக அமர வைத்து சோதிக்கத் தொடங்கினர்.
சந்தேகமில்லாமல் தங்கம் தான் என்பதை உணர்ந்து கொண்டனர்.
பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்க முதலாளிகள் மேற்கொண்டு கருப்பின மக்களை இறக்குமதி செய்து ம்லையின் மொத்த பகுதியையும் வளைத்துக் கொண்டு சிவப்பிந்தியர்களை அப்புறப்படுத்தத் தொடங்கினர். சிவப்பிந்தியர்களுக்கு தங்கமென்பதோ அதன் மதிப்பு போன்ற எதுவும் தெரியாது. 
இவர்கள் சங்கு மற்றும் சிப்பிகளைத்தான் உயர்வாக நினைத்தனர். ஆனால் தங்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் மனதில் கொண்டு எதிர்க்கத் தொடங்கினர். இதே காலகட்டத்தில் துப்பாக்கி மற்றும் பீரங்கி உபயோகத்தில் இருக்க சிவப்பிந்தியர்கள் தங்கள் ஆயுதமான வில் அம்போடு எதிர்த்து நின்றனர். சிவப்பிந்தியர்களுக்கு அவர்கள் வைத்திருந்த நாயும், எருதுகளும் துணை நின்றது. 
உருவானது போர்.
1870களில் துவங்கிய யுத்தம் 1874 வரைக்கும் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.  இதில் மற்றொரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் நவீன ஆயுதங்களைப் கொண்டு போரிட்ட அமெரிக்க பிரிட்டன் படைகளை எதிர்த்த நின்ற சிவப்பிந்தியர்கள் பயன்படுத்தியது வெறுமே வில் அம்பு மட்டுமே. அதை வைத்துக் கொண்டே போரிட்டனர்.
அமெரிக்க ராணுவ தளபதி கஸ்டர் தலைமையில் நடைபெற்றது. 
அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் முதல் முறையாக இராணுவம் தோற்றது.  ஆனால் மீண்டும் வெறியோடு மீண்டும் ஆயுதங்களை இறக்குமதி செய்து குறிப்பாக பீரங்கிகளை பயன்படுத்தி முன் அறிவிப்பு ஏதுமின்றி .பெண்களைத் தவிர பெரும்பாலோனர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டக்கோடா, மற்றும் BLACK HILLS  பகுதிகளில் சரணடைந்த சிவப்பிந்தியர்களை வரிசையாக நிற்கவைத்து ஒரேயடியாக முடித்து வைத்தனர். 
கூட்டுப்படைகளிடமிருந்து தப்பியோடிய சிவப்பிந்தியர்களை வாழ்விடங்களை கணக்கெடுத்து மீண்டும் போர் தொடுத்தது
துரத்தி துரத்தி பழி தீர்த்தனர்.
உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் முதல் தப்பியோடியவர்கள் வரைக்கும் அமெரிக்க அரசு பயன்படுத்திய (கையில் தூக்கிக் கொண்டு செல்லும்) பீரங்கித் தாக்குதலால் செத்து மடிந்தனர். தப்பி ஓடிய செவ்விந்திய ஆண்கள் ஒக்லமா காட்டுப்பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்தனர்.
இந்த முறை பிரிட்டிஷ் ராணுவமும் அமெரிக்க படைகளுக்கு உதவி புரிய செவ்விந்தியர்கள் திசை தெரியாமல் தடுமாறத் தொடங்கினர். கூட்டுப்படைகள் செவ்விந்தியர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றது.. இதனைத்தான் வரலாற்றில்LAST LAND RUSH  என்றழைக்கப்படுகின்றது. 
அமெரிக்க மண்ணின் மைந்தர்களை சூறையாடிய அமெரிக்கர்கள் தங்களுக்காக உழைக்க வந்த கருப்பின மக்களையும் நடத்திய விதம் அமெரிக்கா சரித்திரத்தில் ரத்த கவுச்சியடிக்கும் சோக நிகழ்வாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மீண்டும் ஓர் இறைத்தூதர்

அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர். அவருக்கே அது தெரியாது. ஆனால் சிறுவயதிலிருந்தே அதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவர் இறைத்தேடலுடன் வளர்ந்தார். தனிமையில் தீவிரமாக பிரார்த்தனை செய்தார். ‘என் இறைவா எனக்கு வழி காட்டு.’ அவருக்கு 20 வயது. அவரது தனிமையில் அவர் முன்னால் ஒரு பிரகாசமான உருவம் தோன்றியது. வெண் பிரகாசத்தில் வெண்மைக்கே வெண்மையான ஓர் உருவம் அவர் பெயர் சொல்லி அழைத்தது. அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர். பின்னர்தான் ஆரம்பமாகின சோதனைகளும் சாகசங்களும்.

மத்திய கிழக்குக்கு அப்பால் எந்தப் பாலைவனத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுதான் இது. ஆனால் இது நிகழ்ந்தது நியூயார்க்கில். 19ம் நூற்றாண்டில். ஜோஸப் ஸ்மித் இறை ஆர்வம்கொண்ட இளைஞர் மட்டுமல்ல, ‘புதைந்த பொக்கிஷங்களை அற்புதத்தன்மைகொண்ட கற்கள் மூலம் அடையாளம் காணமுடியும்’ எனும் நம்பிக்கையுடன் இயங்கிய பொக்கிஷ வேட்டையாளர். இப்போது அவர்முன்னால் நின்ற அந்த வெண்ணொளியில் பிரகாசித்த வெண் உருவமும் அதைத்தான் சொன்னது. பூமிக்கடியில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தின் இருப்பிடத்தை. தங்கப் பக்கங்களில் மர்மமான மொழியில் செதுக்கப்பட்ட இறைச்செய்தி. “ஆனால் நீ அதை எடுத்து உருக்கி அதை லௌகீகமாக பயன்படுத்தக் கூடாது.”

அந்த வெண்ணுருவம் சாதாரண இறைத்தூதன் அல்ல. பொதுவாக ஆபிரகாமிய இறைவாக்கினரின் ஐதீகங்களில் வரும் கபிரியேல் அல்ல. ஒரு நல்ல இனத்தின் இறுதிப் பெருமகன் அவன். இஸ்ரவேலர்களில் பன்னிரெண்டு குழுவினர் உண்டு. அதில் இருவர் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதில் ஆபிரகாமிலிருந்து தோன்றியவர்கள் நல்லவர்கள். மற்றொரு குழுவினரோ தங்கள் பாதையில் தவறிவிட்டவர்கள். வழி தவறியவர்களிடம் நல்லோர் தோற்றனர். இறுதி நல்லவன் இறைச்செய்தியை – எகிப்திய மொழியும் எபிரேயமும் கலந்த ஒரு மொழியில் – தங்க பாளங்களில் செதுக்கி வைத்தான். எங்கே? இன்று நியூ யார்க் இருக்கும் இடத்தில் எங்கோ ஓரிடத்தில். ‘இறைவனுக்கு பிரியமான ஸ்மித் உனக்கு அதை காட்டுவேன்… ஆனால் நீ அதை எடுத்து உருக்கி லௌதீகமாக பயன்படுத்தக் கூடாது.” இப்படிச் சொல்லி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி ஸ்மித்தை அழைத்து சென்று பிரார்த்திக்க வைத்த அந்த உருவம் இப்படியே நான்கு ஆண்டுகள் ஸ்மித்தை பரிசீலனைக்கு ஆளாக்கி இறுதியில் அந்த தங்கப் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஸ்மித்திடம் அளித்தது.

அரசல்புரசலாக விஷயம் வெளிவரலாயிற்று. ஆண்டவன் அருளால் கிடைத்த ஓர் உபகரணத்துடன் ஸ்மித் அதை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்துச் சீடர்கள் உடனிருக்க அந்தத் தங்கப் பக்கங்கள்மீது அவற்றின் ஒளியை சகிக்க ஒரு துணியால் போர்த்தியபடி ஸ்மித் மொழிபெயர்ப்பார். துணி மூடியிருந்தாலும் அந்த எழுத்துகள் ஸ்மித்துக்குத் தெரியும். இன்னும் சொன்னால் அதன் பிரகாசத்தை தன் தொப்பியால் மூடியபடி ஸ்மித் அதை மொழிபெயர்த்தார்.

தங்கப்பாளங்கள், அதில் மர்ம எழுத்துகள், பூமிக்கடியில் இருந்து கிடைத்தது. இதெல்லாம் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியபோது, கொடுத்த அந்த உருவமே அந்தத் தங்கப் பக்கங்கள்கொண்ட புத்தகத்தை எடுத்துக்கொண்டு மறைந்தது. 1830ல் மோர்மோன்களின் இறைநூல் வெளிவந்தது. உடனிருந்த சீடர்கள் தாங்கள் இவற்றை கண்டதாக சத்தியம் செய்தார்கள். “எத்தனை செய்திகள்! எந்த விதத்திலும் முரண்பாடில்லாத ஆற்றோட்டமான கருத்துகள். இதெல்லாம் மானுட சாத்தியமற்றவை. ‘மொழி பெயர்ப்பை’ ஆண்டவரே ஸ்மித்துக்கு காட்டினார். எனவே அவர் புத்தகத்தின் தங்கப் பக்கங்களைத் திருப்பவேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை. சில நேரங்களில் எழுதிக் கொண்டிருப்பவருக்கு ஓய்வுக்காக இடைவெளிவிட்டு, பிறகு தொடங்கும்போது ஸ்மித் விட்டஇடத்திலிருந்து தங்குத்தடையின்றி ஆரம்பிப்பார். இதையெல்லாம் பார்க்கும்போதே தெரியவில்லையா, இது ஓர் இறைநூல் என்று? இதைப் போல ஒரு நூலை நீங்கள் உருவாக்க முடியுமா?” நம்பிக்கையாளர்கள் சவால் விட்டார்கள். விசுவாசிகளில் முக்கியமான பல பிரமுகர்கள்கூட இருந்தார்கள்.

சரி இந்த இறை நூல் என்னதான் சொல்கிறது?

கிமு 2600ல் அமெரிக்காவுக்கு ஜாரெட் என்பவனும் அவனது சந்ததிகளும் வந்து ஒரு பண்பாட்டை உருவாக்கினர். இவர்கள் விவிலியத்தின் பாபேல் கோபுரம் சிதைக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதர்களுக்கு மொழிக்குழப்பம் ஏற்பட்ட காலத்தில் இவர்கள் ஆண்டவரிடம் மன்றாடி தாங்கள்மட்டும் உலகத்தின் ஆதிமொழியை பேசுபவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஏசு குறித்த முன்னறிவிப்புகளை அறிவார்கள். ஆனால் அவர்கள் எப்படியோ சிதைந்து போனார்கள். அவர்களுக்கு பிறகு கிமு 600ம் ஆண்டு ஜெருசலேமிலிருந்து லெகி என்கிற இறைவாக்கினனும் அவனுடைய மகனான நெபி என்கிற இறைவாக்கினனும் அமெரிக்கா வந்தார்கள். ஏனெனில் அமெரிக்கா இறைவனால் இவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். ஆனால் விரைவில் இம்மக்கள் பல்கிப் பெருகி இரு கிளைகளாகப் பிரிந்தனர். வெண்ணிற தோல் கொண்ட நல்லவர்களான நெபைட் தேசத்தார் மற்றும் கறுநிற தோல் கொண்ட லமனைட்கள். லமனைட்கள் விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள். மோசமாகிவிட்டவர்கள். வழி தவறிவிட்டவர்கள். இவர்கள் கொடுமைக்காரர்கள். இவர்கள் நெபைட்களை அழித்தனர். அப்படி அழிக்கும்போது, ஏசுவின் விசுவாசிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவார்கள் என்பதை கடைசி நெபைட் முன்னுணர்ந்தார். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி மூலம் உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்காகவும் லமனைட்களை மனம் மாற்றவும் அந்த கடைசி நெபைட் சத்தியங்களை தங்க நூலில் பொறித்துவிட்டு இறந்து போனார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இறைதூதனே ஸ்மித். இதை பின்னர் மேலுகத்திலிருந்து நெபைட் வானவர் வந்து ஸ்மித்துக்கு அறிவிக்க உண்மை உலகத்துக்கு தெரிந்தது.

இதுபோக அவ்வப்போது இறைவசனங்கள் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தப்படும். அதன்வழியே வரலாறு ஒழுக்க விதிகள் எல்லாம் வெளிப்படும். ஸ்மித் கவர்ச்சிகரமான இறைத்தூதர். கூட்டம் கும்மியது. விசுவாசம் ததும்பி வழிந்தது. நம்பிக்கையாளர்கள் பெருக ஆரம்பித்தனர். அரசாங்கம் எச்சரிக்கை அடைந்தது. ஸ்மித் ஓஹியோ சென்றார். ஆண்டவர் மிகவும் யதார்த்தவாத வெளிப்பாடுகளை ஸ்மித்துக்கு அளித்தார். “அத்தனைக்கும் ஆசைப்படு. செல்வத்தைச் சேர்த்துக்கொள்.” விசுவாசிகள் ஒரு அதீத ஆர்வத்தில் அவர்களே வங்கி ஆரம்பித்து காசடிக்க ஆரம்பித்தபோது உள்ளூர் மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் ஆண்டவரின் வெளிப்பாடு ஸ்மித்துக்கு பிரசன்னமானது. “மிஸோரிக்கு போ மகனே… அதுதான் என் தேர்ந்தெடுக்கப்பட்ட சீயான் பிரதேசம்.” மோர்மோன்கள் என அழைக்கப்படும் தனது கூட்டத்தாருடன் இறைவாக்கினர் ஸ்மித் மிஸோரிக்கு ஏகினார்.

இந்த மோர்மோன்கள் புதிய உலகை வாக்களித்தார்கள். இந்த உலகத்தில் சேவைசெய்ய பெண்களே மிக அதிகமாக முன்வந்தார்கள். மோர்மோன்களின் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. இப்போது ஆண்டவர் தமது இறைத்தூதருக்கு வெளிப்படுத்திய விசயம் அந்தச் சூழலுக்கு கனகச்சிதமாக இருந்தது. “விசுவாசிகளுக்கு பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது.” கணிசமான பெண்கள் இதை ஒரு நல்லாணையாக ஏற்றுக்கொண்டனர். பிறர் இதை தாம் இவ்வுலகில் சுமக்க வேண்டிய சிலுவையாக ஏற்றனர். மோர்மோனிய இறையியலில் பெண்களின் பங்கு முக்கியமானது – அவர்கள் பிள்ளைகள் பெற்று கொடுப்பது அவசியம். ஒருவன் எந்த அளவு அதிகமாக குழந்தைகள் பெறுகிறானோ அந்த அளவு சுவனத்தில் ஆண்டவர் அவனை மகிமைப்படுத்துவார். குழந்தைகள் பெறுவதும் வளர்ப்பதும் பெண்ணின் கடனே.

1838ல் ஆண்டவர் அடுத்தபடிக்கு ஸ்மித்தை அழைத்துச் சென்றார். ஸ்மித் ஒரு படையை ஏற்படுத்தினார். ‘வன்மத்தின் சம்மனசுகள்’ (avenging angels) என்கிற இப்படை மிஸோரியில் இருந்த மோர்மோன்களல்லாதவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது. பார்த்தார் மிஸோரி கவர்னர். ஏற்கனவே புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஸ்மித்திடம் பரம எரிச்சலுடன் இருந்தனர். கவர்னர் லில்பர்ன் போக்ஸ் சொன்னார், “எதிரிகளை போல நினைத்து மோர்மோன்களை துடைத்தழியுங்கள்.” ‘எதிரிகளை போல’ என்கிற வார்த்தைகள் முக்கியமானவை. அதாவது சக வெள்ளைக்காரர்கள் என நினைக்காமல் பூர்விக அமெரிக்க குடிகளை துடைத்தழிப்பது போல் அழியுங்கள்.

தாக்குதல்கள் மறு தாக்குதல்கள் தற்காலிக சமாதானங்கள் மீண்டும் இருப்பக்கங்களிலும் ஒப்பந்த மீறல் குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என சில வாரங்கள் இருந்தன. இதன் உச்சகட்டம் மோர்மோன்களின் வரலாற்றில் ‘ஹான்ஸ் மில் படுகொலை’ என அழைக்கப்படுகிறது. மிஸோரி படைக்கும்பல் ஒரு மோர்மோன் கிராமத்தில் நுழைந்து வெறியாட்டம் போட்டது. அகப்பட்டவர்களை சிறுவர் வயதானவர் என வித்தியாசம் இல்லாமல் அழித்தது. பெண்கள் வெட்டவெளியில் சாகும் வரை வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். குறிப்பாக இது மோர்மோன்களின் பழிவாங்கும் உணர்ச்சியை வெகுவாகத் தூண்டியது. இப்போது மோர்மோன்கள் மிஸோரியிலிருந்து வெளியேறினர். ஆனால் பழிவாங்கத் தயாராகிய படை அணிகள் அவர்களில் பெருகியிருந்தனர். ஸ்மித் இதை சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். இலினாய்ஸ் ஆளுநரிடம் பேரம் பேசினார். “நாங்கள் அமைதியாக வாழ எங்களுக்கு சுதந்திர பிரதேசம் ஒன்றை வழங்குங்கள். நாங்கள் வன்முறை இல்லாத வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம்.” அமெரிக்கா அப்போது மேலும் குழப்பங்களை சந்திக்கும் நிலையில் இல்லை.

நவ்வோ அரசாங்கத்துக்குள் அரசாங்கம். மோர்மோன்களுக்கு கிடைத்த மண்ணுலகில் விண்ணரசு. ஆண்டவரின் தூதரால் ஏற்படுத்தப்பட்ட அரசு. ஆனால் அங்கு அனைவரும் மோர்மோன்கள் இல்லை. என்றாலும் என்ன? ஸ்மித்தான் அரசர். ஏறக்குறைய. உலகெங்கும் இருந்து விசுவாசிகள் குவிந்தார்கள். வெள்ளை இனத்தவர்கள் வெளி உலகில் செய்த தவறுகள் மன்னிக்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதால் குற்றவாளிகள் இந்நகரில் அடைக்கலம் புகுந்தார்கள். ஆண்டவரின் ராஜ்ஜியத்துக்கான படையை ஸ்மித் இங்கும் உருவாக்கினார். 4000 முழுநேர வீரர்கள். அன்றைய அமெரிக்க அரசின் காவல்படையே 8000 முழுநேர வீரர்கள் கொண்டதாகத்தான் அமைந்திருந்தது என்பதைக் கணக்கில் கொண்டால் ஸ்மித் எத்தனை முக்கிய ராணுவ-அரசியல்-மதத் தலைமையாக விளங்கினார் என்பது தெரியும். ஆக அன்றைய அமெரிக்காவின் ஆகப்பெரிய படையின் முழுமயான பெரும் தலைவர் ஸ்மித்தான்.

இப்போது ஸ்மித்தின் செயல்பாடுகள் நம்பிக்கையாளர்களின் அதிகார உள்வட்டத்திலேயே பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பித்தது. ஜோஸப் ஸ்மித்தின் வாழ்க்கை பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பதாலும், மோர்மோன்களுக்கு எல்லாவற்றையும் ஒழுங்காகப் பதிவு செய்ய வேண்டியதை ஒரு இறைக்கடமையாக ஸ்மித் விதித்ததாலும் எல்லாம் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு விஷயத்தில் மோர்மோன்களின் வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் பல எண்ணிக்கைகளை சொல்கிறார்கள். 27 என்கிறார் ஒருவர். 48 என்கிறார் இன்னொருவர். ஸ்டான்லி இவின்ஸ் என்பவரோ 84 என்கிறார். இறைவாக்கினர் ஜோஸப் ஸ்மித் தமது இறைப்பணியில் மணந்துகொண்ட மணவாட்டிகளின் எண்ணிக்கையே இவை.

ஏற்கெனவே பணக்கஷ்டத்திலிருந்த பெண்களுக்கும் குடும்பத்தில் கஷ்டப்பட்ட பெண்களுக்கும் உதவிகள் செய்து மறுக்க முடியாத சூழல்களை உண்டாக்கி தன் மனைவிகளாக்கியிருந்தார். இப்போது தன்னுடைய அதிகார குழுவில் இருந்தவர்களின் குடும்ப பெண்களையும், தனது மனைவிகளாக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார். அப்படி ஒரு பெண்ணின் கணவர் ஸ்மித்தின் படையில் தளபதி. ஏற்கனவே ஊரில் மோர்மோன்களல்லாதவர்கள் புகைந்து கொண்டிருந்தனர். உள்வட்ட ஆசாமிகள் இவர்களுடன் இணைந்தனர். உள்ளூர் பத்திரிகை கடுமையாக தாக்கி ஸ்மித்தை விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. ஸ்மித் இப்போது ஒரு பெரிய தவறை செய்தார். அந்த பத்திரிகையை தடை செய்தார். இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மக்கள் வெகுண்டெழுந்தனர். இதுதான் சமயம் என்று அரசும் அவரை கைது செய்ய ஆயத்தமானது. ஸ்மித் ஆண்டவர் ஆணைப்படி அவரே கைதானார். ஒரு கும்பல் திரண்டு கைதாகியிருந்த இடத்தை தாக்கியது. அதன் பிறகு நடந்த துப்பாக்கி சண்டையின்போது, சிறைக்குள் கடத்திக்கொண்டு வரப்பட்டிருந்த, துப்பாக்கியால் தற்காப்புக்காக சுட்டு போரிட்ட, ஏசுவின் பின்னாளைய அப்போஸ்தல சபையின் நிறுவனரும் அமெரிக்காவின் சொந்த இறைவாக்கினருமான ஜோஸப் ஸ்மித் (1805-1844) குண்டுகள் துளைத்து மரித்துப் போனார்.

ஆண்டவருக்கான ரத்தசாட்சியாக மரித்தார் என்கிறார்கள் மோர்மோன்கள். இன்று அமெரிக்காவில் 50 இலட்சம் மோர்மோன்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும்கூட சபைகள் இருக்கின்றன. அன்பையும் அமைதியையும் போதிக்கும் இறைத்தூதர்களின் மார்க்கங்களில் மற்றொரு வளர்செடி.

- அரவிந்தன் நீலகண்டன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard